1 month ago
சிறு கதை - 197 / எல்லாளன் & விஹாரமஹாதேவி (இரு ஆசிரியர்களின் காதல் கதை) திருகோணமலையில் உள்ள அந்த தமிழ் பாடசாலை, வெளியில் பார்க்கும் போது சாதாரண பள்ளிக்கூடமாகத் தோன்றினாலும், உள்ளே அது ஒரு சிறிய பாராளுமன்றம் போல இயங்கியது. சட்டங்களுக்குப் பதிலாக சுற்றறிக்கைகள்; வாக்காளர்களுக்குப் பதிலாக மேற்பார்வையாளர்கள் [இன்ஸ்பெக்டர்கள்]; பாடப் புத்தகங்களை விட உண்மையான அரசியலை, வரலாற்றை நன்கு புரிந்து கொண்ட மாணவர்கள். அங்கு இளம் பட்டதாரி எல்லாளன் கணிதமும் இயற்பியலும் கற்பித்தான். அரசாங்கங்கள் மக்களுக்குக் கீழ்ப்படிந்ததை விட, எண்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தன. அதே பாடசாலையில், இளம் பட்டதாரி விஹாரமஹாதேவி தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பித்தாள். மொழி ஆயுதமல்ல — ஆனால் அரசும் அதன் கூட்டாளிகளும் அதை ஆயுதமாக்குகிறார்கள் என்று அவள் நம்பினாள். உடைந்த மின்விசிறிகளின் கீழ், குளிர்ந்த தேநீருடன், அவர்கள் முதன்முறையாக ஆசிரியர் அறையில் சந்தித்தனர். “நீங்க வவுனியாவைச் சேர்ந்தவரா?” என்று அவள் கேட்டாள். “ஆம். வடக்கின் எல்லைப் பகுதி,” என்று எல்லாளன் பதிலளித்தான். அவள் சிரித்தாள். “நானும் அப்படித்தான். மதவாச்சி. உங்கள் எல்லை முடிய, எங்கள் எல்லை தொடங்குது. ஒரே மண்—வேறு பலகைகள்.” இருவரும் தமிழும் சிங்களமும் சரளமாகப் பேசியதுடன், கடினமான போர் காலங்களில் வளர்ந்த அவர்கள், உயிர்வாழும் முக்கியமான பாடங்களையும் கற்றுக்கொண்டனர். அதில் முக்கியமாக, எப்போது தப்பிப்பது பாதுகாப்பானது, எப்போது பேசாமல் இருப்பது புத்திசாலித்தனம் மற்றும் எப்போது மௌனமாக இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் இருவரும் நன்றாக அறிந்திருந்தனர். ஏனென்றால் மௌனம் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம், தண்டிக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். சுருக்கமாகச் சொன்னால், மொழி, பேச்சு மற்றும் மௌனம் அவர்களின் வாழ்க்கையில் ஒருபோதும் நடுநிலையானவை அல்ல என்பதை அவர்கள் கற்றுக் கொண்டனர். ஒரு மதியம், பாடசாலைக்கு வந்த ஒரு கல்வி அதிகாரி அங்கு கூடியிருந்த ஆசிரியர்களிடம் கேட்டார், “இங்கே தேசிய நல்லிணக்கம் எப்படி இருக்கிறது?” எல்லாளன் பணிவுடன் பதிலளித்தான்: “ஐயா, இயற்பியலில், சமநிலை நிலைத்தன்மையை உருவாக்குகிறது. சமூகத்தில், நடுநிலையான நீதி தான் அதைச் செய்கிறது. அது எல்லா இடமும் பரவி இருந்தால்?” அதிகாரி உடனே ஏதோ ஒன்றைத், தனது குறிப்பு புத்தகத்தில் எழுதினார். ஆனால் அது யாருக்கும் என்னவென்று தெரியாது. அவர் சென்ற பிறகு, விகாரமஹாதேவி அவனின் காதில் கிசுகிசுத்தார், “நீங்கள் அதிகமாக உண்மையைப் பேசி விட்டீர்கள்.” எல்லாளன் சிரித்தான். “நான் அதை ஒரு சூத்திரமாகக் குறைத்துத் தான் கூறினேன். ஆனால் மிக வலிமையுடன்.” அவர்கள் அடிக்கடி வரலாறும் இன்றைய அரசியலும் பற்றிய உண்மைகளை, பகிடிகள் கலந்து ஒருவருக்கு ஒருவர் தங்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்தனர். ஒரு மாலை, பள்ளிக்குப் பிறகு, அவர்கள் நடந்து தங்கள் தங்கள் விடுதிக்கு போகும் போது, ஒரு தேநீர் கடையில் கொஞ்சம் ஓய்வு எடுத்தார்கள். அப்பொழுது அவள் சொன்னாள்: “மகாவம்சம் எல்லாளனையும் துட்டுகமுனுவையும் எதிரிகளாக்கியது”. “ஆனால் நிஜ வாழ்க்கையில், எல்லாளனும் விஹாரமஹாதேவியும் தேநீர் பகிர்ந்து கொள்கிறார்கள் இங்கே” என்றான் எல்லாளன். அவள் சிரித்தாள். “ஏனென்றால் நாங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம். நாளாகமங்களை அல்லது புராணங்களை அல்ல.” ஆமாம், பல இலங்கை வரலாற்று புராணப் புத்தகங்கள் பெரும்பாலும் பிளவுகளை உருவாக்கி மக்களைப் போட்டியாளர்களாக மாற்றுகின்றன, உண்மையான இலங்கை வரலாற்றை, உறுதியான சாட்சிகளுடன் அலசுவதில்லை என்று அவன் சுட்டிக்காட்டினான். ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, பாடசாலை விடுமுறை என்பதால், கடற்கரையில் அவர்கள் பொழுதுபோக்காக நடக்கும் போது, கைத்தொலைபேசியில் செய்தியும் கேட்டுக்கொண்டும் இருந்தார்கள். அப்பொழுது ஒரு அமைச்சரின் உரை வானொலியில் ஒலித்தது: “பண்டைய காலங்களில் பியங்குதீபத்தில் [பியங்குதீபம் / Piyahgudipa], இன்றைய புங்குடுதீவில், சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தனர்.” எல்லாலன் புருவத்தை உயர்த்தினான். "ஆர்வமாக இருக்கிறது," என்று அவன் அமைதியாகச் சொன்னான். "அப்போது சிங்கள மொழியே இன்னும் உருவாகவில்லை. ஏன் என்றால் இது கூறப்பட்டது கி மு இரண்டாம் நூற்றாண்டு துட்டுகெமுனு (Dutugemunu) புராணக் கதையில் " விஹாரமஹாதேவி தனது கையில் இருந்த குளிர் பணத்தை பருகியபடி, “அப்படியானால் மக்கள் இன்னும் பிறக்காத ஒரு மொழியைப் பேசினார்களா?” அவர்கள் யாரையும் கேலி செய்யாமல் மெதுவாக சிரித்தனர். அவர்களின் சிரிப்பு அனுபவத்தாலும் களைப்பாலும் வந்தது— பல வருடங்களாக ஒரே தவறான பதிலை மீண்டும் மீண்டும் திருத்த வேண்டிய ஆசிரியர்களைப் போல.” அந்த வேளை, எல்லாளன் சிறு விளக்கம் கொடுத்தான். "எல்லாளன் தமிழன் மற்றும் சிவனை வழிபாடுபவன் என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், துட்டகைமுனு பேசிய மொழியோ அல்லது அவன் ஒரு சிங்களவன் என்றோ எங்கும் கூறப்படவில்லை. ஆனால் புத்தரை வழிபடுப்பன் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழன் என்ற சொல் பலதடவை அங்கு இருந்தாலும், சிங்கள மொழி, சிங்களவன் என்ற இனம் எங்கும் அதில் கூறப்படவில்லை. இது கி.மு. 2ஆம் நூற்றாண்டு கதையாகும். கி.பி 300–700 க்கு இடையில் தான் சிங்களம் பிராகிருதத்திலிருந்து படிப்படியாக வளர்ந்தது. கி.மு 2 ஆம் நூற்றாண்டில், அது ஒரு தனித்துவமான மொழியாக உலகில் எங்கும் இருக்கவில்லை." என்றான். ஒரு முறை உணவு இடைவேளையில் எல்லாளன் சொன்னான்: “மகாசேனா கோகன்ன ஆலயம் [அநேகமாக கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்கலாம்?] போன்ற சிவாலயங்களை அழித்து, அவற்றின் இடத்தில், விகாரைகள் கட்டினான்.” விஹாரமஹாதேவி பெருமூச்சு விட்டாள். “முன்பு ஆலயக் கற்கள் உடைக்கப்பட்டன. இப்போது காணி ஆவணங்கள் உடைக்கப் படுகின்றன.” “முறை மாறியது,” என்றான் எல்லாளன், “ஆனால் பசி மாறவில்லை.” ஆனைக்கோட்டை முத்திரை, திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம், திசமகாராமை தமிழ் பிராமி நாணயம் மற்றும் இவை போன்றவற்றில் தமிழ் மொழிச் சொற்கள் காணப்படுகின்றன என்றும், கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சுமொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் பிராமிச் சாசனங்கள் அமைகின்றன எனவும் பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதை அவன் சுட்டிக்காட்டினான். உடனே அவள்: "தீபவம்சம் (கி.பி 4 ஆம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கி.பி 5 ஆம் நூற்றாண்டு) ஆகியவை அவற்றின் ஆரம்ப காலத்தில் "சிங்களம்" என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. "சிங்களம்" (தீவு அல்லது மக்களைக் குறிக்கும்) என்ற சொல் சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Chulavamsa கி.பி 13 ஆம் நூற்றாண்டு) மட்டுமே முதல் முதல் காணப்படுகிறது" என்றாள். அதாவது அதற்கு முதல் அப்படி ஒரு மொழியைப் பற்றி எங்கும் கூறப்படவில்லை, கல்வெட்டுகளும் சிங்களத்தில் இல்லை. இந்த புராணங்கள் எழுதப்பட்டது பாளி மொழியில் மட்டுமே, மற்றும் கல்வெட்டுக்கள் தமிழிலும் மற்றும் கலப்பு மொழியில் மட்டுமே, அந்த கலப்பு மொழியைத்தான் இன்று ஆரம்ப கால சிங்களம் என்கிறார்கள்!! “புத்தர் பற்றின்மையைக் கற்றுக் கொடுத்தார்,” எல்லாலன் கூறினான். “ஆம்,” அவள் பதிலளித்தாள், “ஆனால் பல இலங்கைத் துறவிகள் மற்றும் தலைமைக் குழுவில், முழுமையாகச் சிங்களவர்களைக் கொண்ட தொல்பொருள் திணைக்களம் இப்போது நில உரிமையைக் கற்பிக்கிறார்கள்.” அதைத் தொடர்ந்து அவர்களின் பேச்சில் நிலப் பிரச்சினைகள் எழுந்தன. “நிலம் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்று அவர்கள் [அரசு, அரச பிரதிநிதிகள்] கூறுகிறார்கள்,” என்று அவள் கூறினாள். “ஆம்,” எல்லாலன் பதிலளித்தான், “முதல் கட்டம் — வாக்குறுதி. இரண்டாம் கட்டம் — தாமதம். மூன்றாம் கட்டம் — மறதி,” அவள் அவனை தீவிரமாகப் பார்த்தாள். “நீ மிகவும் கூர்மையாக நகைச்சுவை செய்கிறாய்.” “கூர்மையான நகைச்சுவைகள் நீண்ட காலம் நீடிக்கும்,” என்று அவன் கூறினான். ஒரு மாலை, மின்தடை. மெழுகுவர்த்தி வெளிச்சம் ஆசிரியர் அறையை நிரப்பியது. “இந்த இருட்டு பழகியது போல இருக்கு,” என்று அவள் கூறினாள். எல்லாலன் மெதுவாக பதிலளித்தான், “இது இருள் அல்ல. மின்சாரம் ஓய்வெடுக்கிறது — இந்த நாட்டின் நீதி போல.” என்றான் எல்லாளன். பயம், அரசியல் மற்றும் பிரிவுகள் நிறைந்த உலகில் காதல் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்க முடியுமா என்ற ஐயப்பாட்டில், அவள் மெதுவாக: “அப்படின்னா காதல்?” என்று கேட்டாள் “காதல் ஓய்வெடுக்கவில்லை. ஆனால் அது மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் நகர்கிறது, ஏனென்றால் சுற்றியுள்ள உலகம் நிச்சயமற்றது என்பதால் ” என்றான் அவன். மாணவர்கள் அவர்களை கவனிக்கத் தொடங்கினர். ஒரு நாள் “ஐயா, நீங்கள் இருவரும் திருமணமானவர்களா?” என்று ஒரு மாணவன் கேட்டான். “இல்லை,” என்று எல்லாளன் கூறினான். “ஆம்,” என்று விகாரமஹாதேவி கூறி, ஆனால் நகைச்சுவையாக: நாங்கள் இருவரும் கற்பித்தல் என்ற ஒரே பாடத்திட்டத்தில் திருமணம் செய்தவர்கள் ” என்றாள். அவர்கள் ஒருபோதும் காதலிப்பதாக வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், அதை அவர்கள் கடைப்பிடித்தனர் - பொதுவான மௌனத்தில் - நகைச்சுவைகளை மொழிபெயர்ப்பதில் - ஒருவரின் உச்சரிப்பை மெதுவாகச் சரிசெய்வதில். அவர்கள் ஆழமாக ஒன்றைப் புரிந்துகொண்டார்கள்: உண்மையான மோதல் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இல்லை. உண்மையான பிரச்சனை சாதாரண மக்களுக்கு எதிராக அரச, இராணுவ மற்றும் சமய அதிகாரம் மட்டுமே. பிளவுபட்ட சமூகத்தில், அன்பைத் தேர்ந்தெடுப்பதே ஒரு துணிச்சலான செயலாக அவர்களுக்கு இருந்தது. உண்மையான காதல் — மொழி, வரலாறு மற்றும் பயத்தை கடந்து செல்லும் காதல் என்பதை அவர்கள் நாளடைவில் உணர்ந்தனர். அவர்கள் - எல்லாளனும் விஹாரமஹாதேவியும் - வரலாற்றில் இடம் பெறவில்லை. அவர்கள் பெயர்கள் எந்த நாளாகமங்களிலும் இல்லை. ஆனால் அவர்கள் கற்பித்த மாணவர்களின் நினைவுகளில் இருக்கிறார்கள். வரலாறு அதிகாரத்தைப் பதிவு செய்கிறது. நாளாகமங்கள் வெற்றியைப் பாடுகின்றன. ஆனால் மனிதநேயத்தை அவை அரிதாகவே நினைவில் வைத்துக் கொள்கின்றன. அவர்கள் — ஒரே பள்ளிக்கூடத்தில் இரு மொழிகளுக்கிடையே பாலமாக நின்றவர்கள். பயமும் அரசியலும் நிரம்பிய காலத்தில் மௌனத்திற்கும் வார்த்தைக்கும் அர்த்தம் கற்றுக் கொண்டவர்கள். ஒரே தேநீரில் இரண்டு மொழிகள், ஒரே மௌனத்தில் இரண்டு வரலாறுகள், ஒரே சிரிப்பில் ஆயிரம் கேள்விகள். அவர்கள் கையில் போர்க் கொடிகள் இல்லை, பாடப்புத்தகங்கள் மட்டுமே. அதிகாரம் பிரிக்க முயன்றதை அறிவு இணைத்தது, பயம் கட்டிய சுவர்களை நகைச்சுவை உடைத்தது. அந்த பள்ளிக்கூடத்தில் பாடத்திட்டம் மட்டும் கற்பிக்கப்படவில்லை— ஒரு நாட்டுக்கான மாற்றுப் பாடமும் அமைதியாக எழுதப்பட்டது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2025 [சிறு கதை - 197 / எல்லாளன் & விஹாரமஹாதேவி (இரு ஆசிரியர்களின் காதல் கதை) https://www.facebook.com/groups/978753388866632/posts/33724462253868989/?
1 month ago

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி.
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக, இலங்கை தனது தேயிலைக்கான சர்வதேச சந்தைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுஷாந்த டி சில்வா எச்சரித்துள்ளார்.
சூறாவளி காரணமாக சுமார் ஒரு மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய தேயிலைத் தேவையை ஈடுசெய்வதில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கையின் விநியோகம் குறையும் பட்சத்தில், சர்வதேச கொள்வனவாளர்கள் ஏனைய நாடுகளை (இந்தியா, கென்யா போன்றவை) நாடும் அபாயம் உள்ளது.
கடந்த 15-20 ஆண்டுகளில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கான பிரதான ஏற்றுமதியாளராக இலங்கை இருந்தபோதிலும், தற்போது அந்த சந்தைகளை ஓரளவு இழந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சவால்கள் நிலவினாலும், இலங்கை தொடர்ந்தும் 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தேயிலையை ஏற்றுமதி செய்து வருகின்றது.
இவற்றில் ரஷ்யா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் முன்னணியில் உள்ளன.
2024 ஆம் ஆண்டில் 245.7 மில்லியன் கிலோவாக இருந்த ஏற்றுமதிஇ 2025 இல் 257.44 மில்லியன் கிலோவாக (11.65 மில்லியன் கிலோ உயர்வு) அதிகரித்துள்ளது.
சீன சந்தை இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக உருவெடுத்து வருவதாக லுஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
சீனா ஒரு மிகப்பெரிய சந்தை. அங்குள்ள 1.4 பில்லியன் மக்களில் வெறும் 5 வீத பங்கினை நாம் பெற்றுக்கொண்டாலும், அது இலங்கைத் தேயிலைத் துறைக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என அவர் விளக்கினார்.
https://athavannews.com/2026/1463915
1 month ago
எனக்கு அவர் ஒரு முஸ்லீம் என்று தெரியாது. அண்மையில் இக்களத்தில் அவரை ஒருவர் நானா என்று விளித்தபோது அதனை உண்மையென்று நம்பியே எழுதினேன். தமிழ்த் தேசியத்திற்கெதிராக (இப்படிக் கூறுவதால் புலிகளை எதிர்க்கிறார் என்றல்ல அர்த்தம், ஏனெறால் ஒருகாலத்தில் நீங்களும் புலிகளை முற்றாக எதிர்த்தவர், ஆனால் தேசியத்தை நேசிப்பவர்) தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிமுதற்கொண்டு புலிகள் வரை கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தவர். சிறிமா பண்டாரநாயக்காவைப் புகழ்ந்து எழுதியவர். ஆகவேதான், இவரை ஒருவர் "நானா" என்று அழைத்தபோது, இவரது தமிழ்த்தேசியத்திற்கெதிரான விஷக் கருத்துக்களைப் அடிப்படையாக வைத்து, இவர் ஒரு முஸ்லீமாக இருக்கலாம் என்று முடிவிற்கு வந்தேன். உண்மையில் இவர் எவ்வினத்தவர் என்பது எனக்குத் தெரியாது. இவரிடமிருந்து நான் விலகியே இருந்தபோதிலும் பலமுறை எனது திரிகளில் மிகவும் தீவிரமாக என்னை விமர்சித்து, பொய்களையும் புரட்டுக்களையும் எழுதுவதாக கருத்தெழுதி வருபவர் (இன்றுகூட அவரது கருத்தொன்றில் என்னைப்பற்றி, பெயர் குறிப்பிடாது எழுதப்பட்டிருக்கிறது), தமிழர்கள், தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும், இலங்கையராக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்றும் எனக்கான பதிவுகளில் எழுதிவருபவர். பலமுறை இவருக்கான பதில்களை நான் தவிர்த்து வந்தபோதிலும், தவிர்க்கமுடியாமல் சிலவேளைகளில், இவரை மேற்கோள் காட்டாது எனது பதிலைக் கருத்தாக பதிந்திருக்கிறேன். என்னைத் தனிப்பட்ட ரீதியில் இந்த மனிதர் தாக்கி எழுதுவது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சிலவேளை புலிகளுக்கு ஆதரவானவன் என்று முத்திரை குத்தப்பட்ட என்மேல் வைக்கப்படும் எந்த விமர்சனமும் உங்களைப்பொறுத்தவரை கடந்துசெல்லப்படவேண்டியவையாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதருக்கும் எனக்கும் இடையில் நீண்டநாள் பகையொன்று இருக்கிறது. அதனை நீங்கள் பார்க்கத்தவறிவிட்டு, நான் ஒரு இனவாதியாக , மதவாதியாக கருத்துக்களில் விசம் கட்டி எழுதுவதாக விமர்சிக்கிறீர்கள். உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே முன்னர் இக்களத்தில் நடைபெற்ற மிகவும் காரசாரமான கருத்து மோதல்களை நாம் அவதானித்திருக்கிறேன். அவர் இப்போது இங்கு இல்லையென்றாலும்கூட உங்களின் கருத்துக்களில் இருந்த கசப்புணர்வு வெளிப்படையானது. தனிப்பட்ட ரீதியில் நீங்கள் தாக்கப்படும்போது பதிலில் கோபம் இருப்பது இயல்பானது. நான் இப்போது செய்வதும் அதுவே. நான் விலகிச் செல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு தறுவாயிலும் விசமத்தனமாகப் பிந்தொடர்ந்து, எனது கருத்துக்களை விமர்சித்து, தனிப்பட்ட ரீதியில் தாக்கும்போது தவிர்க்கமுடியாமல் நானும் கடுமையாக எழுதவேண்டியிருக்கிறது. ஒன்றில் அவர் என்னைத் தொடர்ந்து, தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை நிறுத்தவேண்டும், அல்லது நான் அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் பதிலளிக்க வேண்டி ஏற்படும். அவர் கேட்பது கேள்வியல்ல, மாறாக மற்றையவர்களின் கருத்துக்களுக்கெதிரான விசமத்தனமான விமர்சனங்களே என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தேசியத்திற்கும், புலிகளுக்கும் எதிராக எழுதுவதால், அவரது விமர்சனங்கள் உங்களுக்கு கேள்விகளாகத் தெரிகிறது. குதர்க்கத்தனமான, புலிகளையும், தேசியத்தையும் சீண்டும் விதமான கேலிகளை கைவிட்டு விட்டு, இயல்பாக தனது கேள்விகளை முன்வைக்கட்டும், நான் பதிலளிக்கிறேன். நான் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் அல்ல. முன்னர் ஒருகாலத்தில் அப்படி இருந்தவந்தான், ஆனால் தெளிவு இருக்கிறது இப்போது. தவறைத் தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது. ஆகவே சீண்டாமல் முன்வைக்கப்படும் எக்கருத்திற்கும் பதிலளிக்க காத்திருக்கிறேன். எனது உளவியலை, எனக்கும் இந்த மனிதருக்கும் இடையே இத்தளத்தில் பகிரப்பட்ட கருத்துக்களின் பின்னணியிலிருந்து பார்த்தால் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடிணமாக இருக்காது.
1 month ago
என் சிறுவயதில் நான் படித்தது. இது உண்மைச் சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சிக்கான எடுத்துக்காட்டுகள் நம்மிடமே பல உள்ளன, நம்மைச் சுற்றியும் பல உள்ளன. அவற்றை நாம் கூர்ந்து கவனித்தால் உண்மை மனதிற்கு விளங்கும். "ஒரு சிலந்திப்பூச்சியின் விடாமுயற்சி மாபெரும் படையெடுப்பை தடுத்து, விரட்டியது" என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?... ஆம் இது உண்மையில் நடந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்காட்லாந்தில், ராபர்ட் தி புரூஸ் என்ற மன்னர் வாழ்ந்து வந்தார். அச்சமயம் இங்கிலாந்து மன்னர் ஸ்காட்லாந்தை கைப்பற்ற முயற்சி செய்தார். ஸ்காட்லாந்து மீது படையெடுத்தார். மிகப் பெரிய படை பலத்துடன் இருந்தது இங்கிலாந்து, ஓரளவுக்கு படைபலத்துடன் இருந்தது ஸ்காட்லாந்து. ஆனால் மன உறுதி மிகவும் அதிகமாகவே இருந்தது. இங்கிலாந்து ஸ்காட்லாந்தை தன்னுடன் இணைத்துக்கொள்ள போரிட்டது. இங்கிலாந்திடம் ஆறுமுறை போரிட்டு ஸ்காட்லாந்து இங்கிலாந்திடம் தோற்றது. ராபர்ட் தி புரூஸ் மன்னரின் படைகள் சிதறடிக்கப்பட்டன, அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மறைந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் தன் நாட்டிற்குள்ளேயே ஒரு மலைக் குகையில் ஒளிந்து கொண்டார். அவர் மனதளவில் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். தன் எதிரியிடம் நாட்டை விட்டு விட்டோமே என்ற நிலையில் மிகவும் குற்றவுணர்ச்சி இருப்பவராய் காணப்பட்டார், மிகவும் வருந்தினார். ஒரு சமயம் அந்த குகையில் இருக்கும் பொழுது மழை பெய்து கொண்டிருந்தது. மழையை பார்த்தவாரே ஓரிடத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு சிலந்திப்பூச்சி தன் வலையை பின்னுவதற்காக காத்திருந்தது. வலையை கொஞ்சம் கொஞ்சமாக பின்னிக் கொண்டிருந்தது. இந்த குகையில் இருந்து எதிரில் இருக்கும் ஒரு குகைக்கு வலை பின்ன எண்ணியது. அது தன் வலையை வீசி, வீசி பார்த்தது, ஆனால் அந்த குகையில் வலை ஒட்டவே இல்லை. வலையை திரும்பத் திரும்ப வீசியது, அதை பார்த்து ராபர்ட் தி புரூஸ், "பாவம் அந்த சிலந்திக்கு தான் என்ன தெரியும், அந்தக் குகை அவ்வளவு தூரத்தில் உள்ளது. அதனால் எப்படி அடைய முடியும் என்று நினைக்கலாம். பாவம் அறிவில்லாத ஜீவன்" என்று எண்ணிக் கொண்டார். ஆறு முறை சிலந்தி முயற்சி செய்தது. அவ்வாறு செய்தது 6 முறையும் சிலந்திவலை அங்கே சென்று ஒட்டாமல் கீழே விழுந்து கொண்டே இருந்தது. ஆனால் ஏழாவது முறையாக மீண்டும் முயற்சி செய்தது. மிகவும் கச்சிதமாக அந்த சிலந்திவலை அடுத்த குகையில் சென்று ஒட்டிக் கொண்டது. சிலந்தி கூடு கட்ட ஆரம்பித்தது ஆரம்பித்தது. இதைப் பார்த்தவுடன் ராபர்ட் ப்ரூஸ் க்கு ஒரு எண்ணம் தோன்றியது. தன்னால் முடியாது என்று நினைத்தால் தான் எதுவும் முடியாது, தன்னால் முடியும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு சிலந்தி ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. என்னால் முடியாது என்று ஏன் எனக்கு தோன்றியது. என்னால் நிச்சயமாக முடியும். அவருக்கு புதிய உற்சாகம் பிறந்தது. ஸ்காட்லாந்தை மீண்டும் கைப்பற்ற முடியும், அது என்னுடைய நாடு என்று எண்ணிக்கொண்டார். தன்னுடைய படை வீரர்களுக்கு இந்த செய்தியை உற்சாகமாக அனுப்பினார். சில நேரத்தில் உற்சாகம் அதிகமான படைவீரர்கள் இவருடன் திரண்ட, கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. படைகள் பெருகிக்கொண்டே போனது. மீண்டும் போரிட்டார். ஏழாவது முறையில் ஸ்காட்லாந்து வென்றது. இங்கிலாந்து ஸ்காட்லாந்தை விட்டு வெளியேறுவதற்கான நிர்பந்தம் வந்து விட்டது. இங்கிலாந்து ஸ்காட்லாந்தின் வலிமை மிக்க, மிகப்பெரிய மன்னரிடம் தோற்றது. ஆம் ஸ்காட்லாந்தை ஆள்வதற்கு இவர் தான் சரியான ஆள் என்று இங்கிலாந்தும் விட்டு சென்றது. இந்த வரலாறு ஸ்காட்லாந்து மக்கள் அனைவருக்குமே தெரியும். ராபர்ட் புரூஸ் என்பவர் மன்னரான பின் ராபர்ட் I ,என்று அழைக்கப்பட்டார். இவர் ஸ்காட்லாந்தை ஆண்ட மன்னர்களில் மிகவும் பிரபலமான, மிகவும் தைரியமான மன்னராவார். விடாமுயற்சி என்பது மிகவும் முக்கியம். எதையும் நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். தோல்வியுற்றாலும் செய்து கொண்டே இருக்க வேண்டும், நிச்சயம் ஒரு நாள் வெற்றி தரும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
1 month ago
இனிமேல் முழுமையாக வாசித்து பதில் எழுதுங்கள், அது போதும். விருப்புக்குறி எதுவும் வேண்டாம். யார் தமிழர்கள்? இஸ்லாமியர்கள் தமிழர்களா? அவர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகிறோம் என்று உங்களிடம் சொன்னார்களா? வடக்குக் கிழக்கு இணைந்த பிராந்தியமே தமிழர் தாயகம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகளும் தமக்கு இருக்கும் பிரச்சினைகளும் ஒன்றாதலால், நாம் சேர்ந்தே போராடி எமக்கான உரிமைகளைப் பெறுவோம் என்று சொன்னார்களா? அவர்களே தம்மை தனியான இனக் குழுமம், தமக்கான தனியான மாகாணம், தனியான அலகு, தனியான பிரதேச சபை என்று கோரி வரும்போது, நீங்கள் மட்டும் எவ்வாறு அவர்களையும் சேர்த்தே விடுதலை சாத்தியம் என்று கூறுகிறீர்கள்? உங்களது இருப்பிற்கான பாதுகாப்பு என்பது அவர்களின் பங்களிப்பினாலேயே இன்று சாத்தியமற்றதாக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுடன் சேர்ந்தே உங்களின் விடுதலை சாத்தியம் என்று நீங்கள் கருதுவது எங்கணம்? அண்மைய காலங்களில் இஸ்லாமிய அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சமூகத் தலைவர்களோ தமிழ் மக்கள் சார்பாக, அவர்களின் உரிமைகள் தொடர்பாக, அவர்களின் தாயகம் தொடர்பாகச் சாதகமாகப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தை கூறுங்கள் பார்க்கலாம். அல்லது தமிழருடன் சேர்ந்தே தமக்கான விடுதலை சாத்தியம் என்று அவர்களின் எவராவது கூறிய ஒரு சந்தர்ப்பத்தைக் கூறுங்கள்? அவர்கள் தம்மை தனியினமாகக் கோரி, தமக்கான தாயகத்தை அடையாளப்படுத்தும்போது அதனை ஏற்கமறுக்கும் ஒரு உத்தியாகவே "அவர்களுடன் சேர்ந்தே எமக்கான விடுதலையும்" என்று நீங்கள் கூறுவதாக எனக்குத் தெரிகிறது. அதாவது தமிழர்கள் வாழும் தாயகத்தில் முஸ்லீம்களும் வாழலாம், ஆனால் அவர்கள் தமக்கான தனியான தாயகத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதே உங்களின் கருத்தில் இருந்து நான் எடுத்துக்கொள்வது. முஸ்லீம்கள் தனியான இனமா? ஆம், தனியான இனம். அவர்கள் தமிழர்களா? இல்லை, தமிழ் பேசுபவர்கள், சிங்களமும் தாராளமாகப் பேசக் கூடியவர்கள். அவர்களுக்கென்று தனியான தாயகம் வேண்டுமா? ஆம் வேண்டும். உங்களுக்கான விடுதலையினை நீங்கள் வென்றெடுங்கள். அவர்களுக்கானதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் உங்களின் பிரச்சினைகளும், அவர்களின் பிரச்சினைகளும் ஒன்றல்ல, ஒரே பேரினவாதத்தினால் பாதிக்கப்பட்ட இரு சிறுபான்மையினங்கள் என்பதைத் தவிர.