Aggregator

'போலீஸ் விசாரணையில் கொன்றுவிட்டனர்' - மதுரை பட்டியல் சாதி இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது?

4 weeks 2 days ago

தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார்.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார்.

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தான். குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தோம். விசாரணை என்ற பெயரில் என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது. என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும்" எனக் கூறியபடி கதறியழுகிறார், முத்துலட்சுமி.

தனது மகன் தினேஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் கொன்றுவிட்டதாக கூறுகிறார் முத்துலட்சுமி.

ஆனால், 'காவல்துறை கைது செய்துவிடுமோ?' என்ற அச்சத்தில் கால்வாயில் விழுந்து தினேஷ்குமார் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை கூறுகிறது.

இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக, காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தினேஷ்குமார் மரணத்தில் என்ன நடந்தது? காவல்துறை மீது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

மதுரை அண்ணா நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்டு யாகப்பா நகர் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் - முத்துலட்சுமி தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இவர்களின் மகன் தினேஷ்குமார், தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

"தினேஷ்குமார் மீது சில கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், எந்த வழக்கிலும் அவர் தண்டிக்கப்படவில்லை" எனக் கூறுகிறார், 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.

தினேஷ்குமாரின் தாய் முத்துலட்சுமி.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, தினேஷ்குமாரின் தாய் முத்துலட்சுமி.

காவல்நிலையத்தில் என்ன நடந்தது?

"வியாழக்கிழமையன்று (அக்டோபர் 9) அதிகாலை சுமார் 4.30 மணிக்கு அண்ணா நகர் காவல்நிலைய ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா மற்றும் அடையாளம் தெரிந்த காவலர்கள் இரண்டு பேர் என்னுடைய வீட்டுக்கு வந்தனர்" எனக் கூறுகிறார், தினேஷ்குமாரின் தாய் முத்துலட்சுமி.

"காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துவிட்டு ஒன்பது மணியளவில் அனுப்பிவிடுவதாகக் கூறி என் மகனைக் கூட்டிச் சென்றனர். என் கணவரும் உடன் சென்றபோது, 'நீங்கள் வர வேண்டாம்' என போலீஸார் கூறினர்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

காலை சுமார் ஒன்பது மணியளவில் அண்ணா நகர் காவல்நிலையத்துக்கு தினேஷ்குமாரின் தந்தை வேல்முருகன் சென்றுள்ளார். "அங்கு என் மகனைக் காணவில்லை" எனக் கூறுகிறார், முத்துலட்சுமி.

வழக்கறிஞர் ஒருவர் மூலமாக காவலர்களிடம் பேசியபோது, 'ஸ்டேஷனுக்கு கூட்டி வருவார்கள். அங்கேயே காத்திருங்கள்' எனக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்பிறகு தினேஷ்குமாரிடம் இருந்து வேல்முருகனுக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதைப் பற்றிக் கூறும் முத்துலட்சுமி, " வண்டியூர் சுங்கச்சாவடி அருகில் வழக்கறிஞர் ஒருவரோடு வருமாறு என் மகன் கூறினார். ஆனால், அங்கே அவரது அப்பா சென்றபோது யாரும் இல்லை" என்கிறார்.

மதியம் சுமார் 1 மணியளவில் தினேஷ்குமாரின் நிலை குறித்து அவரின் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, தினேஷ்குமார் விழுந்து இறந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படும் இடம்

வியாழக் கிழமையன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா தலைமையிலான போலீஸார், தினேஷ்குமாரின் வீட்டுக்கு வந்துள்ளனர். காவல் வாகனத்தில் காவல்நிலையம் வருமாறு அவரின் தாய் முத்துலட்சுமியிடம் கூறியுள்ளனர்.

"வாகனத்தில் ஏற்றும்போது, என் மகன் தப்பித்து ஓடிப் போய்விட்டதாக காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா கூறினார். 'அவன் அப்படி ஓடக் கூடிய ஆள் இல்லை' எனத் தெரிவித்தேன். அவரோ, பீடி குடிப்பதற்கு அனுமதி கொடுத்தபோது ஓடிப் போய்விட்டதாகக் கூறினார்" என்கிறார், முத்துலட்சுமி.

தினேஷ்குமாரின் நிலை தொடர்பாக, அவரது வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோதும் இதே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மதியம் சுமார் 1 மணியளவில் தினேஷ்குமாரின் நிலை குறித்து அவரின் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

"காவல்நிலைய வாசலில் நின்றிருந்த என்னை உதவி ஆணையர் சிவசக்தி உள்ளே அழைத்தார். தப்பியோடும்போது கால்வாயில் விழுந்து தினேஷ்குமார் இறந்துவிட்டதாக அவர் கூறினார்" என்கிறார் முத்துலட்சுமி.

"அவரிடம், 'ஆறடி உயரத்தில் உள்ள ஒருவர் எப்படி சாவார்?' எனக் கேட்டேன். 'எல்லோரும் சேர்ந்து கொன்றுவிட்டீர்களா?' எனவும் சத்தம் போட்டேன். அங்கிருந்த காவலர்கள், என்னை வெளியில் தள்ளிவிட்டனர்" எனக் கூறி கதறியழுதார், முத்துலட்சுமி.

காவல் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஹென்றி திபேன் கூறினார்.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, காவல் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஹென்றி திபேன் கூறினார்.

போலீஸ் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

"வீட்டில் வைத்து தினேஷ்குமாரை அடித்து, உதைத்துதான் போலீஸார் கூட்டிச் சென்றனர். அதிகாலை நேரத்தில் எதற்காக அவரை அழைத்துச் சென்றார்கள் எனத் தெரியவில்லை" எனக் கூறுகிறார், 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " தினேஷ்குமாருக்கு நீச்சல் தெரியுமா என அவரது அப்பாவிடம் போலீஸார் கேட்டுள்ளனர். சுமார் 1.30 மணியளவில் வண்டியூர் பகுதியில் பீடி குடிக்க அனுமதி கேட்டு, தப்பியோடிவிட்டதாக ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா கூறியுள்ளார். அதன்பிறகு கால்வாயில் விழுந்து இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்" என்கிறார்.

"தினேஷ்குமார் விழுந்து இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படும் வண்டியூர் கால்வாயில் அவரது அப்பா ஒரு குச்சியை வைத்துப் பார்த்துள்ளார். அங்கு முழங்கால் அளவுக்கு மட்டுமே நீர் இருந்துள்ளது. ஆனால், அங்கிருந்த குழியில் உள்ள சகதியில் சிக்கி அவர் இறந்துவிட்டதாக காவல்துறை கூறுகிறது" எனவும் ஹென்றி திபேன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், " வண்டியூர் பகுதியில் ஒரு கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் அகற்றியுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. காவல் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளோம்" எனவும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் தினேஷ்குமாரின் தாய் தொடர்ந்துள்ள வழக்கின் மனுவில், 'பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ தரப்பட வேண்டும்; சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட வேண்டும்; காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளதாக ஹென்றி திபேன் குறிப்பிட்டார்.

மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

சிபிசிஐடி விசாரணை கோரி மனு

இந்தநிலையில், போலீஸ் காவலில் தினேஷ்குமார் இறந்த தகவலைக் கேள்விப்பட்டு அவரின் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட பலரும் அண்ணா நகர் காவல் நிலையம் எதிரில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, தினேஷ்குமாரின் தாயார் முத்துலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்தும் வகையில், 196 பிஎன்எஸ்எஸ் (inquiry by magistrate into the cause of death) பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"என் கணவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு என் மகனுக்கு வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தான். ஆனால், விசாரணை என்ற பெயரில் கொன்றுவிட்டார்கள்" எனக் கூறி அழுதார், முத்துலட்சுமி.

"அதிகாலை 4.30 மணிக்கு போலீஸார் வரவேண்டிய அவசியம் என்ன" எனக் கேள்வி எழுப்பும் ஹென்றி திபேன், "தினேஷ்குமார் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்" எனவும் தெரிவித்தார்.

சிசிடிவி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக உதவி ஆணையர் சிவசக்தி கூறினார். (கோப்புக்காட்சி)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிசிடிவி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக உதவி ஆணையர் சிவசக்தி கூறினார். (கோப்புக்காட்சி)

காவல் உதவி ஆணையர் கூறுவது என்ன?

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அண்ணா நகர் காவல் உதவி ஆணையர் சிவசக்தி மறுக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " காவல்நிலையத்துக்கு தினேஷ்குமார் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, பீடி குடிப்பதற்கு அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி கொடுத்தபோது அங்கிருந்து ஓடிவிட்டார். அதற்குரிய சிசிடிவி காட்சிகள் உள்ளன" எனக் கூறுகிறார்.

சிசிடிவி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் சிவசக்தி, "தினேஷ்குமார் தப்பி ஓடுவதை பொதுமக்களில் சிலர் பார்த்துள்ளனர். அவர்களும் தினேஷ்குமாரை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தனர்" என்கிறார்.

"நெடுஞ்சாலையில் அவர் ஓடியதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன. இதை அவரது பெற்றோரிடம் கூறினோம். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை" எனக் கூறுகிறார், உதவி ஆணையர் சிவசக்தி.

தினேஷ்குமார் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அப்படி எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இதுதொடர்பான விவரங்கள் தெரியவரும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

'அவர் குற்றவாளி அல்ல.. காரணம் இதுதான்'

தொடர்ந்து பேசிய உதவி ஆணையர் சிவசக்தி, " தீபாவளி, தேவர் ஜெயந்தி வருவதால் குற்றப் பின்னணி உள்ளவர்களை அழைத்து, நன்னடத்தையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இதற்காகவே மூன்று பேரையும் அழைத்து வந்தோம்" என்கிறார்.

"தினேஷ்குமார் தப்பியோடும்போது நடந்த சம்பவங்களை நீதித்துறை நடுவரிடம் உடன் வந்த மற்ற இருவரும் கூறியுள்ளனர். தினேஷ்குமாருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. 'போலீஸ் கைது செய்தால் சிக்கல் வரலாம் என்பதால் அவர் ஓடியிருக்கலாம். மற்றபடி அவர் குற்றவாளி அல்ல" எனவும் உதவி ஆணையர் சிவசக்தி தெரிவித்தார்.

"கால்வாயில் குறைவான நீர் உள்ளதால் அதில் விழுந்து இறப்பதற்கு வாய்ப்பில்லை எனக் கூறுகிறார்களே?" என அவரிடம் கேட்டபோது, "தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq5jv9179wvo

'போலீஸ் விசாரணையில் கொன்றுவிட்டனர்' - மதுரை பட்டியல் சாதி இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது?

4 weeks 2 days ago
பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார். கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தான். குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தோம். விசாரணை என்ற பெயரில் என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது. என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும்" எனக் கூறியபடி கதறியழுகிறார், முத்துலட்சுமி. தனது மகன் தினேஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் கொன்றுவிட்டதாக கூறுகிறார் முத்துலட்சுமி. ஆனால், 'காவல்துறை கைது செய்துவிடுமோ?' என்ற அச்சத்தில் கால்வாயில் விழுந்து தினேஷ்குமார் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை கூறுகிறது. இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக, காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார். தினேஷ்குமார் மரணத்தில் என்ன நடந்தது? காவல்துறை மீது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன? மதுரை அண்ணா நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்டு யாகப்பா நகர் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் - முத்துலட்சுமி தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர்களின் மகன் தினேஷ்குமார், தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். "தினேஷ்குமார் மீது சில கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், எந்த வழக்கிலும் அவர் தண்டிக்கப்படவில்லை" எனக் கூறுகிறார், 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன். பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, தினேஷ்குமாரின் தாய் முத்துலட்சுமி. காவல்நிலையத்தில் என்ன நடந்தது? "வியாழக்கிழமையன்று (அக்டோபர் 9) அதிகாலை சுமார் 4.30 மணிக்கு அண்ணா நகர் காவல்நிலைய ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா மற்றும் அடையாளம் தெரிந்த காவலர்கள் இரண்டு பேர் என்னுடைய வீட்டுக்கு வந்தனர்" எனக் கூறுகிறார், தினேஷ்குமாரின் தாய் முத்துலட்சுமி. "காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துவிட்டு ஒன்பது மணியளவில் அனுப்பிவிடுவதாகக் கூறி என் மகனைக் கூட்டிச் சென்றனர். என் கணவரும் உடன் சென்றபோது, 'நீங்கள் வர வேண்டாம்' என போலீஸார் கூறினர்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். காலை சுமார் ஒன்பது மணியளவில் அண்ணா நகர் காவல்நிலையத்துக்கு தினேஷ்குமாரின் தந்தை வேல்முருகன் சென்றுள்ளார். "அங்கு என் மகனைக் காணவில்லை" எனக் கூறுகிறார், முத்துலட்சுமி. வழக்கறிஞர் ஒருவர் மூலமாக காவலர்களிடம் பேசியபோது, 'ஸ்டேஷனுக்கு கூட்டி வருவார்கள். அங்கேயே காத்திருங்கள்' எனக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதன்பிறகு தினேஷ்குமாரிடம் இருந்து வேல்முருகனுக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதைப் பற்றிக் கூறும் முத்துலட்சுமி, " வண்டியூர் சுங்கச்சாவடி அருகில் வழக்கறிஞர் ஒருவரோடு வருமாறு என் மகன் கூறினார். ஆனால், அங்கே அவரது அப்பா சென்றபோது யாரும் இல்லை" என்கிறார். பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, தினேஷ்குமார் விழுந்து இறந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படும் இடம் வியாழக் கிழமையன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா தலைமையிலான போலீஸார், தினேஷ்குமாரின் வீட்டுக்கு வந்துள்ளனர். காவல் வாகனத்தில் காவல்நிலையம் வருமாறு அவரின் தாய் முத்துலட்சுமியிடம் கூறியுள்ளனர். "வாகனத்தில் ஏற்றும்போது, என் மகன் தப்பித்து ஓடிப் போய்விட்டதாக காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா கூறினார். 'அவன் அப்படி ஓடக் கூடிய ஆள் இல்லை' எனத் தெரிவித்தேன். அவரோ, பீடி குடிப்பதற்கு அனுமதி கொடுத்தபோது ஓடிப் போய்விட்டதாகக் கூறினார்" என்கிறார், முத்துலட்சுமி. தினேஷ்குமாரின் நிலை தொடர்பாக, அவரது வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோதும் இதே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மதியம் சுமார் 1 மணியளவில் தினேஷ்குமாரின் நிலை குறித்து அவரின் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. "காவல்நிலைய வாசலில் நின்றிருந்த என்னை உதவி ஆணையர் சிவசக்தி உள்ளே அழைத்தார். தப்பியோடும்போது கால்வாயில் விழுந்து தினேஷ்குமார் இறந்துவிட்டதாக அவர் கூறினார்" என்கிறார் முத்துலட்சுமி. "அவரிடம், 'ஆறடி உயரத்தில் உள்ள ஒருவர் எப்படி சாவார்?' எனக் கேட்டேன். 'எல்லோரும் சேர்ந்து கொன்றுவிட்டீர்களா?' எனவும் சத்தம் போட்டேன். அங்கிருந்த காவலர்கள், என்னை வெளியில் தள்ளிவிட்டனர்" எனக் கூறி கதறியழுதார், முத்துலட்சுமி. பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, காவல் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஹென்றி திபேன் கூறினார். போலீஸ் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? "வீட்டில் வைத்து தினேஷ்குமாரை அடித்து, உதைத்துதான் போலீஸார் கூட்டிச் சென்றனர். அதிகாலை நேரத்தில் எதற்காக அவரை அழைத்துச் சென்றார்கள் எனத் தெரியவில்லை" எனக் கூறுகிறார், 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " தினேஷ்குமாருக்கு நீச்சல் தெரியுமா என அவரது அப்பாவிடம் போலீஸார் கேட்டுள்ளனர். சுமார் 1.30 மணியளவில் வண்டியூர் பகுதியில் பீடி குடிக்க அனுமதி கேட்டு, தப்பியோடிவிட்டதாக ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா கூறியுள்ளார். அதன்பிறகு கால்வாயில் விழுந்து இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்" என்கிறார். "தினேஷ்குமார் விழுந்து இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படும் வண்டியூர் கால்வாயில் அவரது அப்பா ஒரு குச்சியை வைத்துப் பார்த்துள்ளார். அங்கு முழங்கால் அளவுக்கு மட்டுமே நீர் இருந்துள்ளது. ஆனால், அங்கிருந்த குழியில் உள்ள சகதியில் சிக்கி அவர் இறந்துவிட்டதாக காவல்துறை கூறுகிறது" எனவும் ஹென்றி திபேன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், " வண்டியூர் பகுதியில் ஒரு கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் அகற்றியுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. காவல் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளோம்" எனவும் தெரிவித்தார். நீதிமன்றத்தில் தினேஷ்குமாரின் தாய் தொடர்ந்துள்ள வழக்கின் மனுவில், 'பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ தரப்பட வேண்டும்; சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட வேண்டும்; காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளதாக ஹென்றி திபேன் குறிப்பிட்டார். பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். சிபிசிஐடி விசாரணை கோரி மனு இந்தநிலையில், போலீஸ் காவலில் தினேஷ்குமார் இறந்த தகவலைக் கேள்விப்பட்டு அவரின் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட பலரும் அண்ணா நகர் காவல் நிலையம் எதிரில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தினேஷ்குமாரின் தாயார் முத்துலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்தும் வகையில், 196 பிஎன்எஸ்எஸ் (inquiry by magistrate into the cause of death) பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். "என் கணவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு என் மகனுக்கு வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தான். ஆனால், விசாரணை என்ற பெயரில் கொன்றுவிட்டார்கள்" எனக் கூறி அழுதார், முத்துலட்சுமி. "அதிகாலை 4.30 மணிக்கு போலீஸார் வரவேண்டிய அவசியம் என்ன" எனக் கேள்வி எழுப்பும் ஹென்றி திபேன், "தினேஷ்குமார் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்" எனவும் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிசிடிவி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக உதவி ஆணையர் சிவசக்தி கூறினார். (கோப்புக்காட்சி) காவல் உதவி ஆணையர் கூறுவது என்ன? ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அண்ணா நகர் காவல் உதவி ஆணையர் சிவசக்தி மறுக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " காவல்நிலையத்துக்கு தினேஷ்குமார் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, பீடி குடிப்பதற்கு அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி கொடுத்தபோது அங்கிருந்து ஓடிவிட்டார். அதற்குரிய சிசிடிவி காட்சிகள் உள்ளன" எனக் கூறுகிறார். சிசிடிவி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் சிவசக்தி, "தினேஷ்குமார் தப்பி ஓடுவதை பொதுமக்களில் சிலர் பார்த்துள்ளனர். அவர்களும் தினேஷ்குமாரை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தனர்" என்கிறார். "நெடுஞ்சாலையில் அவர் ஓடியதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன. இதை அவரது பெற்றோரிடம் கூறினோம். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை" எனக் கூறுகிறார், உதவி ஆணையர் சிவசக்தி. தினேஷ்குமார் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அப்படி எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இதுதொடர்பான விவரங்கள் தெரியவரும்" எனவும் அவர் குறிப்பிட்டார். 'அவர் குற்றவாளி அல்ல.. காரணம் இதுதான்' தொடர்ந்து பேசிய உதவி ஆணையர் சிவசக்தி, " தீபாவளி, தேவர் ஜெயந்தி வருவதால் குற்றப் பின்னணி உள்ளவர்களை அழைத்து, நன்னடத்தையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இதற்காகவே மூன்று பேரையும் அழைத்து வந்தோம்" என்கிறார். "தினேஷ்குமார் தப்பியோடும்போது நடந்த சம்பவங்களை நீதித்துறை நடுவரிடம் உடன் வந்த மற்ற இருவரும் கூறியுள்ளனர். தினேஷ்குமாருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. 'போலீஸ் கைது செய்தால் சிக்கல் வரலாம் என்பதால் அவர் ஓடியிருக்கலாம். மற்றபடி அவர் குற்றவாளி அல்ல" எனவும் உதவி ஆணையர் சிவசக்தி தெரிவித்தார். "கால்வாயில் குறைவான நீர் உள்ளதால் அதில் விழுந்து இறப்பதற்கு வாய்ப்பில்லை எனக் கூறுகிறார்களே?" என அவரிடம் கேட்டபோது, "தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5jv9179wvo

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 2 days ago
என்னே ஒரு கரிசனை என்று பார்த்தேன். முன்னாடி வருபவர்கள், களநிலைமையைக் கணித்து, பின்னாடி வருபவர்களுக்குச் சொல்லுவினம் போல. அதைச் சொல்லுவதற்காகவே, சீக்கிரமாக ஆட்டமிழந்து வேறு செல்கினம் போல.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைதித் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு கையெழுத்து: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

4 weeks 2 days ago
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம்: காஸாவில் அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம், Anadolu via Getty Images கட்டுரை தகவல் காத்தரின் ஹீத்வுட் பிபிசி உலக சேவை 10 அக்டோபர் 2025, 03:46 GMT புதுப்பிக்கப்பட்டது 10 அக்டோபர் 2025, 05:24 GMT காஸா போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வியாழனன்று அறிவிக்கப்பட்ட முதல் கட்ட உடன்பாடு, மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பாலத்தீனிய கைதிகளை விடுவிப்பதற்கும், இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுவதற்கும், காஸாவிற்குள் உதவிகள் நுழைவதற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கான விவரங்கள் மற்றும் கால அவகாசம் இந்த திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. கடந்த செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2023 ஹமாஸ் தாக்குதல் நடத்தி இரண்டு ஆண்டுகள் ஆகின. அந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தம் ஒரு ஆரம்ப கட்டம் மட்டுமே, காஸாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய பல விவரங்கள் இன்னும் தெளிவாக்கப்பட வேண்டும். டிரம்பின் திட்டத்தின் கீழ் காஸாவை யார் நடத்துவார்கள்? டொனால்ட் டிரம்ப் தலைமையிலான மற்றும் முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் உள்ளடக்கிய ஒரு "அமைதி வாரியத்தால்" மேற்பார்வையிடப்படும் பாலத்தீனிய தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒரு தற்காலிக இடைக்கால குழுவால் காஸா நிர்வகிக்கப்படும் என்று டிரம்பின் திட்டம் முன்மொழிகிறது. டிரம்பின் குழு வெளியிட்ட திட்டத்தின் படி, பாலத்தீன அதிகார சபை "அதன் சீர்திருத்த திட்டத்தை முடித்தவுடன்" காஸாவின் நிர்வாகம் இறுதியில் அதனிடம் ஒப்படைக்கப்படும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காஸாவின் நிர்வாகத்தில் ஹமாஸுக்கு எதிர்காலத்தில் பங்கு இருக்காது. ஹமாஸ் உறுப்பினர்கள் அமைதியான சகவாழ்வுக்கு உறுதியளித்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் அல்லது வேறு நாட்டிற்கு பாதுகாப்பாக செல்ல வழி வழங்கப்படும் என்று திட்டம் கூறுகிறது. பட மூலாதாரம், Anadolu via Getty Images படக்குறிப்பு, ஹமாஸின் தாக்குதலுக்கான இஸ்ரேலின் ராணுவ பதிலடி நடவடிக்கையில் காஸாவில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. காஸாவில் உள்ள மக்களுக்கு இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்? இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார். லண்டனில் உள்ள ஐரோப்பிய வெளியுறவு கவுன்சில் (ECFR) எனும் சிந்தனைக் குழுவின் மூத்த கொள்கை வகுப்பாளர் ஹக் லோவாட், , போர்நிறுத்த ஒப்பந்தம் என்பது காஸா மக்கள் "இனி தங்கள் உயிருக்கு பயப்படக்கூடாது" என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார். "மூன்று விஷயங்கள் - கொல்லப்படாமலும், இடம்பெயராமலும், பட்டினி கிடக்காமல் இருப்பதும் - காஸா மக்களுக்கு இந்த நேரத்தில் மூன்று மிக முக்கியமான அளவுகோல்கள்" என்று அவர் பிபிசிக்கு தெரிவித்தார். "தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் பிறகு, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியவுடன், அவர்கள் நிச்சயமாக, தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்," என்று லோவாட் கூறுகிறார். உண்மையில், காஸா மக்கள் இந்த செய்தியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். காஸாவில் வசிக்கும் ஜுமா ரமலான் அபு அம்மோ பிபிசி நியூஸ் அரபு சேவைக்கு அளித்த பேட்டியில், "எங்கள் வீட்டின் இடிபாடுகளை முதலில் அகற்ற வேண்டும், அவற்றை அகற்றி எனது தாத்தா மற்றும் பாட்டியின் உடல்களை மீட்கப் போகிறேன்" என்றார். "அதன் பிறகு, நாங்கள் வீட்டை மீண்டும் கட்டத் தொடங்குவோம். கடவுள் விரும்பினால், நாங்கள் காஸா முழுவதையும் மீண்டும் கட்டியெழுப்புவோம், அது முன்பை விட சிறப்பாக திரும்பும்" என்றார். அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் ராணுவ பதிலடி நடவடிக்கையில் காஸாவின் பெரும்பாலான கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அழிந்துவிட்டன. காஸாவின் ஹமாஸ் நடத்தும் அரசாங்க சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, போரில் 67,000 க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் - 18,000 க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர். . அதன் புள்ளிவிவரங்கள் பொதுவாக ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் நம்பகமானவை என்று கருதப்படுகின்றன. பட மூலாதாரம், Anadolu via Getty Images படக்குறிப்பு, உதவிகள் பெறுவது காஸா மக்களுக்கு மிகவும் கடினமாகியுள்ளது. காஸாவுக்கான உதவிகள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது? டிரம்பின் 20 அம்ச திட்டத்தில், ஆகஸ்ட் மாதம் ஐ.நா ஆதரவிலான நிபுணர்களால் பஞ்சம் உறுதிப்படுத்தப்பட்ட காஸா பகுதிக்கு உடனடியாக "முழு உதவி" அனுப்ப அனுமதிப்பதும் அடங்கும். இந்த (உதவிகளின்) அளவு "மனிதாபிமான உதவி தொடர்பான 19 ஜனவரி 2025 ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டவற்றுடன் ஒத்துப்போக வேண்டும்" என்று திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு நாளும் 600 (உதவிப் பொருட்களை கொண்டு செல்லும்) லாரிகள் வழங்கப்படும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் தினசரி குறைந்தபட்சம் 400 லாரிகள் வரும் என்றும், அதன் பிறகு இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் பாலத்தீனிய தரப்பை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், காஸாவில் உள்ள மக்களை சென்றடைய புகழ்பெற்ற சர்வதேச உதவி நிறுவனங்கள் பாதுகாப்பாக உணரும் ஒரு சூழல் இருக்க வேண்டும் என்று லோவாட் வலியுறுத்துகிறார். முந்தைய ஐ.நா தலைமையிலான உணவு விநியோக முறையை மாற்றிய சர்ச்சைக்குரிய காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) என்னவாகும் என்பதை டிரம்பின் திட்டம் குறிப்பிடவில்லை. லோவாட் பிபிசியிடம் கூறுகையில், "கடந்த போர் நிறுத்தம் முறிந்ததில் இருந்து உதவித் தளங்களைச் சுற்றி பாதுகாப்பு சூழல் கணிசமாக மோசமடைந்துள்ளது என்பதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." என்றார். ஒப்பந்தம் நிலைக்குமா? இந்த உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிலிருந்தும் காணப்பட்ட மிக உயர்ந்த முன்னேற்றமாகும். ஆனால் டொனால்ட் டிரம்பின் 20 அம்ச திட்டம் உண்மையில் ஒரு சில பக்கங்கள் மட்டுமே உடையது என்று ஜெருசலேமில் உள்ள பிபிசி நிருபர் டாம் பென்னட் சுட்டிக்காட்டுகிறார். இரு தரப்பினரும் தீர்க்க இன்னும் முக்கிய விசயங்கள் உள்ளன என்று அவர் கூறுகிறார். ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்ற முக்கிய இஸ்ரேலிய கோரிக்கை, அத்துடன் இஸ்ரேலிய (படைகளின்) திரும்பப் பெறுதலின் அளவு மற்றும் காஸாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதற்கான திட்டம் ஆகியவை இதில் அடங்கும். டிரம்ப் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த முடியும் என்று தான் நினைக்கிறேன் என்று லோவாட் பிபிசியிடம் கூறினார், ஆனால் அதன் பிறகு என்ன நடக்கும் என்பது உறுதியாக இல்லை, ஏனெனில் இஸ்ரேலிய "சிவப்புக் கோடுகளை" கடக்க முடியாது. "வெள்ளை மாளிகையுடனான தனது பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு நெதன்யாகு காஸாவில் இருந்து முழு இஸ்ரேலிய வெளியேற்றம் இருக்காது என்றும், பாலத்தீன அரசு இருக்காது என்றும் கூறினார்," என்கிறார். "திட்டத்தை செயல்படுத்துவதில் இவை வெளிப்படையாக இரண்டு பெரிய தடைகள், ஏனென்றால் இஸ்ரேல் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேறாவிட்டால் திட்டத்திற்கான பாலத்தீனிய உறுதிப்பாட்டை பராமரிப்பது கடினம்," என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம், Bloomberg via Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செப்டம்பர் மாத இறுதியில் சந்தித்துக் கொண்டனர். டிரம்ப் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறார்? இந்த சமாதான முயற்சிகளில் உள்ள முக்கிய வேறுபாடு அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட ஈடுபாடு ஆகும். அவர் ஹமாஸ் மீது மட்டுமல்ல, இஸ்ரேல் மீதும் ஒரு ஒப்பந்தத்திற்காக அழுத்தம் கொடுத்துள்ளார் என்று ஜெருசலேமில் உள்ள பிபிசியின் ஹியூகோ பச்சேகா கூறுகிறார். இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வது டிரம்பின் இன்றுவரையிலான மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை சாதனையாக இருக்கும். அக்டோபர் 10 வழங்கப்படவுள்ள உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசை அவர் விரும்புகிறார் என்ற உண்மையை அவர் ரகசியமாக வைத்திருக்கவில்லை. லோவாட் கூறுகையில், "இஸ்ரேலிய அல்லது மத்திய கிழக்கு ராஜதந்திரத்தில், குறிப்பாக இஸ்ரேல்-பாலத்தீனிய ராஜதந்திரத்தில் அமெரிக்கா எப்போதும் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. மேலும், குறைந்தபட்சம் கோட்பாட்டளவில், நிகரற்ற கட்டுப்பாடு கொண்டுள்ளது, அதை இஸ்ரேல் மீது பயன்படுத்த முடியும். டிரம்ப், உள்நாட்டு அரசியல் மற்றும் நிலைப்பாட்டின் காரணமாக, அந்த விஷயத்தில் குறிப்பாக நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளார் என்று நான் நினைக்கிறேன்." டிரம்ப் வரும் நாட்களில் எகிப்துக்கு பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு அவரது பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு ஒப்பந்தத்தில் பணியாற்றி வருகின்றனர். வெள்ளிக்கிழமை அவர் அங்கு செல்வது குறித்து பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78n2mzj1l9o

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

4 weeks 2 days ago
வரவேற்பு நாடான இந்தியாவை அதிரவைத்து 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது தென் ஆபிரிக்கா Published By: Vishnu 10 Oct, 2025 | 03:37 AM (நெவில் அன்தனி) விசாகபட்டினம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் பத்தாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 7 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. இப் போட்டியில் தோல்வி அடைந்ததால் வரவேற்பு நாடான இந்தியா பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது. இந்தியா சார்பாக ரிச்சா கோஷ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் லோரா வுல்வார்ட், நாடியா டி கிளார்க் ஆகியோரின் துடுப்பாட்டங்கள் அதனை விஞ்சியதுடன் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கும் வழிவகுத்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமைந்த போதிலும் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்கள் வீழ்ந்ததால் (102 - 6 விக்.) அவ்வணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால். ரிச்சா கோஷ், ஸ்நேஹ் ராணா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்தியாவை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர். ஆனால், அவர்களது முயற்சி இறுதியில் வீண் போயிற்று. ப்ராத்திக்கா ராவல், ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. ஸ்ம்ரித்தி மந்தனா 23 ஓட்டங்களையும் ஹார்லீன் டியோல் 13 ஓட்டங்டங்களையும் பெற்றனர். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ப்ராத்திகா ராவல் 37 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 3ஆவதாக ஆட்டம் இழந்தார். அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (9), ஜெமிமா ரொட்றிகஸ் (0), தீப்தி ஷர்மா (4), அமன்ஜோத் கோர் (13) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறினர். (153 - 7 விக்.) இந் நிலையில் ரிச்சா கோஷ், ஸ்நேஹ் ராணா ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 88 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். அவர்கள் இருவரும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (251 - 9 விக்.) ஸ்நேஹ் ராணா 33 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 94 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்ளோ ட்ரையொன் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நொன்குலுலேக்கோ மிலபா 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 48.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. தஸ்மின் ப்றிட்ஸ் (0), சுனே லுஸ் (5) ஆகிய இருவரும் முதல் 6 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (18 - 2 விக்.) தொடர்ந்து மாரிஸ்ஆன் கெப் (20), ஆன்எக் பொஷ் (1), சினாலோ ஜஃப்டா (14) ஆகிய மூவரும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (81 - 5 விக்.) எனினும் ஒரு புறத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீராங்கனை லோரா வுல்வார்டும் மத்திய வரிசை வீராங்கனை க்ளோ ட்ரையொனும் 6ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர். லோரா வுல்வார்ட் 111 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டம் இழந்த பின்னர் க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மேலும் உரமூட்டினர். க்ளோ ட்ரையொன் 49 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து நாடின் டி க்ளார்க், அயாபொங்கா காக்கா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் வெற்றியை உறுதிசெய்தனர். இந்த இணைப்பாட்டத்தில் அயாபொங்கா காக்காவின் பங்களிப்பு வெறும் ஒரு ஓட்டமாகும். மறுமுனையில் மிகத் திறமையாக அதிரடியைப் பிரயோகித்த நாடின் டி க்ளார்க் 54 பந்துகளில் 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரான்தி கௌத் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: நாடின் டி க்ளார்க் https://www.virakesari.lk/article/227364

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

4 weeks 2 days ago
அடடா.. அது மனோரஞ்சனா? காற்றுள்ள பக்கம் சாயும், நேரத்துக்கு ஒரு நிறம் மாறும் மனிதர். அப்படி சாய்ந்து சாய்ந்து தமிழர்களின் நலனை அடகுவைக்கும் அரசியல் புரோக்கர். நான் சரிநிகரில் எழுதிக்கொண்டு இருந்த காலத்தில் சில தடவைகள் இவரை சந்தித்து இருக்கின்றேன். சந்திரிக்காவுக்கு வால் பிடித்துக் கொண்டு, புலிகளை தூற்றிக் கொண்டு திரிந்தார்.

நடிகர் வரிந்தர் சிங் குமன் 42 வயதில் மரணமடைந்த பாடிபில்டர்

4 weeks 2 days ago
42 வயதில் மரணமடைந்த பாடிபில்டர்; சைவ உணவுகளை மட்டுமே எடுத்து உடற்கட்டமைப்பில் சாதித்தவர் பட மூலாதாரம், Varinder Ghuman/FB படக்குறிப்பு, வரிந்தர் குமன் அறுவைசிகிச்சைக்காக சென்றிருந்தார் 7 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் கான் நடித்த 'டைகர் 3' திரைப்படத்தில் தோன்றிய பஞ்சாபின் பிரபல உடற்கட்டழகர் (Bodybuilder) மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமன் காலமானார். அவர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். பிபிசி பஞ்சாபி செய்தியாளர் பிரதீப் சர்மாவின் கூற்றுப்படி, சுமார் 42 வயதான வரிந்தர் குமன், குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூரில் உள்ள தல்வண்டி ஜுக்லா கிராமத்தில் பிறந்த அவர், 1988 இல் ஜலந்தரில் உள்ள கை நகருக்கு (மாடல் ஹவுஸ்) குடிபெயர்ந்தார். அவர் லியால்பூர் கல்சா கல்லூரியில் (Lyallpur Khalsa College) எம்பிஏ படித்தவர். அவரது தந்தையின் பெயர் உப்பிதிந்தர் சிங். அவரது தாய் உயிருடன் இல்லை. பட மூலாதாரம், Varinder Ghuman/FB படக்குறிப்பு, வரிந்தர் குமன் டைகர் 3 திரைப்படத்தில் நடித்தார் வரிந்தரின் சகோதரர் பக்வந்த் சிங் ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார். வரிந்தர் குமனுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் (இரண்டு மகன்கள், ஒரு மகள்) உள்ளனர். தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக அவர் வியாழக்கிழமை அமிர்தசரஸில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மாலை 6 மணியளவில் அவர் காலமானார் என்ற செய்தி கிடைத்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். வரிந்தர் சிங் குமன் விவசாயம் மற்றும் பால் பண்ணைத் தொழிலும் செய்து வந்தார். உடற்கட்டமைப்பின் மீதான ஆர்வம் வரிந்தர் குமன் சிறுவயதிலிருந்தே உடற்கட்டமைப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தனது வீட்டிற்கு அருகில் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தையும் (Gym) தொடங்கினார். 2024 இல் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் ஒரு முழுமையான சைவ உணவுப் பிரியர் என்றும், தான் ஒரு நாம்தாரி குடும்பத்தைச் (Namdhari family) சேர்ந்தவர் என்பதால் முட்டை கூடச் சாப்பிடுவதில்லை என்றும் வரிந்தர் கூறியிருந்தார். அவர் சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். வரிந்தர் 2009 ஆம் ஆண்டில் 'மிஸ்டர் இந்தியா' பட்டத்தை வென்றார். மேலும், உடற்கட்டமைப்பில் ஆசிய அளவிலும் அவர் புகழ் பெற்றார். அதன் பிறகு, 2012 ஆம் ஆண்டு 'கபடி ஒன்ஸ் அகைன்' (Kabaddi Once Again) என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம் அவர் நடிப்பு உலகில் நுழைந்தார். அதன் பிறகு, அவர் பல பஞ்சாபி மற்றும் இந்தி திரைப்படங்கள் மற்றும் தென்னிந்தியப் படங்களிலும் நடித்தார். பட மூலாதாரம், Varinder Ghuman/FB படக்குறிப்பு, வரிந்தர் இந்தி, மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால், திரைப்படங்களைப் பற்றிப் பேசுகையில், அவர் தன்னைத் திரைக்கு ஏற்றவராகக் கருதவில்லை என்று கூறியிருந்தார். இதற்குக் காரணம் கூறுகையில், பல இயக்குநர்கள் தன்னை எடையை குறைக்கும்படி கூறியதாகவும், ஆனால் தனக்குள்ளே இருக்கும் விளையாட்டு வீரனை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். "நான் என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன், 2-4 படங்கள் குறைவாக நடித்தாலும் அது எனக்கு முக்கியமில்லை. திரைப்படங்களில் கிடைக்கும் அதே புகழ் இந்த விளையாட்டிலும் எனக்குக் கிடைக்கிறது. நான் உயிரோடு இருக்கும் வரை, இந்த அடையாளத்தில்தான் இருப்பேன். நான் இறந்த பிறகும் மக்கள் என்னை ஒரு விளையாட்டு வீரராகவும், உடற்கட்டழகராகவும் (Bodybuilder) தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம், Varinder Ghuman/FB 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசியல் செய்ய விரும்புவதாகக் கூறி, அரசியலில் நுழைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். உடைகளைப் பற்றிப் பேசிய அவர், தனது உடலமைப்புக்கு ஏற்றவாறு ஆடை வடிவமைப்பாளர்கள் மும்பை மற்றும் ஜலந்தரில் இருப்பதாகவும் கூறியிருந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று ஜலந்தரில் நடைபெறும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg6mlmnmrzo

நடிகர் வரிந்தர் சிங் குமன் 42 வயதில் மரணமடைந்த பாடிபில்டர்

4 weeks 2 days ago

42 வயதில் மரணமடைந்த பாடிபில்டர்; சைவ உணவுகளை மட்டுமே எடுத்து உடற்கட்டமைப்பில் சாதித்தவர்

உடற்ப்யிற்சி கூடத்தில் அரிந்தர் குமன்

பட மூலாதாரம், Varinder Ghuman/FB

படக்குறிப்பு, வரிந்தர் குமன் அறுவைசிகிச்சைக்காக சென்றிருந்தார்

7 மணி நேரங்களுக்கு முன்னர்

சல்மான் கான் நடித்த 'டைகர் 3' திரைப்படத்தில் தோன்றிய பஞ்சாபின் பிரபல உடற்கட்டழகர் (Bodybuilder) மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமன் காலமானார்.

அவர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

பிபிசி பஞ்சாபி செய்தியாளர் பிரதீப் சர்மாவின் கூற்றுப்படி, சுமார் 42 வயதான வரிந்தர் குமன், குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூரில் உள்ள தல்வண்டி ஜுக்லா கிராமத்தில் பிறந்த அவர், 1988 இல் ஜலந்தரில் உள்ள கை நகருக்கு (மாடல் ஹவுஸ்) குடிபெயர்ந்தார்.

அவர் லியால்பூர் கல்சா கல்லூரியில் (Lyallpur Khalsa College) எம்பிஏ படித்தவர். அவரது தந்தையின் பெயர் உப்பிதிந்தர் சிங். அவரது தாய் உயிருடன் இல்லை.

சல்மான்கானுடன் வரிந்தர் குமன்

பட மூலாதாரம், Varinder Ghuman/FB

படக்குறிப்பு, வரிந்தர் குமன் டைகர் 3 திரைப்படத்தில் நடித்தார்

வரிந்தரின் சகோதரர் பக்வந்த் சிங் ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார்.

வரிந்தர் குமனுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் (இரண்டு மகன்கள், ஒரு மகள்) உள்ளனர்.

தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக அவர் வியாழக்கிழமை அமிர்தசரஸில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மாலை 6 மணியளவில் அவர் காலமானார் என்ற செய்தி கிடைத்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

வரிந்தர் சிங் குமன் விவசாயம் மற்றும் பால் பண்ணைத் தொழிலும் செய்து வந்தார்.

உடற்கட்டமைப்பின் மீதான ஆர்வம்

வரிந்தர் குமன் சிறுவயதிலிருந்தே உடற்கட்டமைப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தனது வீட்டிற்கு அருகில் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தையும் (Gym) தொடங்கினார்.

2024 இல் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் ஒரு முழுமையான சைவ உணவுப் பிரியர் என்றும், தான் ஒரு நாம்தாரி குடும்பத்தைச் (Namdhari family) சேர்ந்தவர் என்பதால் முட்டை கூடச் சாப்பிடுவதில்லை என்றும் வரிந்தர் கூறியிருந்தார்.

அவர் சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

வரிந்தர் 2009 ஆம் ஆண்டில் 'மிஸ்டர் இந்தியா' பட்டத்தை வென்றார். மேலும், உடற்கட்டமைப்பில் ஆசிய அளவிலும் அவர் புகழ் பெற்றார். அதன் பிறகு, 2012 ஆம் ஆண்டு 'கபடி ஒன்ஸ் அகைன்' (Kabaddi Once Again) என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம் அவர் நடிப்பு உலகில் நுழைந்தார்.

அதன் பிறகு, அவர் பல பஞ்சாபி மற்றும் இந்தி திரைப்படங்கள் மற்றும் தென்னிந்தியப் படங்களிலும் நடித்தார்.

வரிந்தர் இந்தி, மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார்

பட மூலாதாரம், Varinder Ghuman/FB

படக்குறிப்பு, வரிந்தர் இந்தி, மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார்

ஆனால், திரைப்படங்களைப் பற்றிப் பேசுகையில், அவர் தன்னைத் திரைக்கு ஏற்றவராகக் கருதவில்லை என்று கூறியிருந்தார். இதற்குக் காரணம் கூறுகையில், பல இயக்குநர்கள் தன்னை எடையை குறைக்கும்படி கூறியதாகவும், ஆனால் தனக்குள்ளே இருக்கும் விளையாட்டு வீரனை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

"நான் என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன், 2-4 படங்கள் குறைவாக நடித்தாலும் அது எனக்கு முக்கியமில்லை. திரைப்படங்களில் கிடைக்கும் அதே புகழ் இந்த விளையாட்டிலும் எனக்குக் கிடைக்கிறது. நான் உயிரோடு இருக்கும் வரை, இந்த அடையாளத்தில்தான் இருப்பேன். நான் இறந்த பிறகும் மக்கள் என்னை ஒரு விளையாட்டு வீரராகவும், உடற்கட்டழகராகவும் (Bodybuilder) தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

வரிந்தர் குமன்

பட மூலாதாரம், Varinder Ghuman/FB

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசியல் செய்ய விரும்புவதாகக் கூறி, அரசியலில் நுழைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

உடைகளைப் பற்றிப் பேசிய அவர், தனது உடலமைப்புக்கு ஏற்றவாறு ஆடை வடிவமைப்பாளர்கள் மும்பை மற்றும் ஜலந்தரில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று ஜலந்தரில் நடைபெறும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg6mlmnmrzo

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

4 weeks 2 days ago
நானும் பார்த்திருக்கிறேன். மனோ ரஞ்சன் (NLFT) இயக்க ஸ்தாபகர் / உறுப்பினர். சந்திரிக்கா ஆதரவு, இப்போது NPP ஆதரவு. சிங்கள மொழியில் நல்ல ஆளுமை.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 2 days ago
அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா வரிசையில் வங்காளதேசத்திலும் தற்போது ஆடிக்கொண்டு இருக்கும் Rabeya Khan , Fatima ஆகியோர் சிறப்பாக விளையாடிகொண்டு இருக்கினம்

புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

4 weeks 2 days ago
வரலாற்றை முறியடித்து புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை Published By: Vishnu 10 Oct, 2025 | 06:54 PM கொழும்பு பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை (10) அதன் அதிகபட்ச சாதனையைப் புதுப்பித்தது, அனைத்து பங்கு விலைக் குறியீடும் 22,318.72 யூனிட்டுகளாக உயர்ந்தது. அனைத்து பங்கு விலைக் குறியீடும் பகலில் 143.98 யூனிட்கள் அதிகரிப்பை அடைய முடிந்தது, இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 0.65% அதிகரிப்பாகும். இதற்கிடையில், S&P SL20 குறியீடும் வெள்ளிக்கிழமை இதுவரை வரலாற்றில் அதன் அதிகபட்ச மதிப்பைப் பதிவு செய்ய முடிந்தது, இது நாள் வர்த்தகத்தின் முடிவில் 63.65 யூனிட்கள் அதிகரித்து 6,226.03 யூனிட்டுகளாக இருந்தது. 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரூ. 8.45 பில்லியன் பரிவர்த்தனை வருவாய் பதிவாகியுள்ளது. உள்ளூர் கொள்முதல்கள் ரூ. 8.30 பில்லியனாகவும், உள்ளூர் விற்பனை ரூ. 8.21 பில்லியனாகவும், வெளிநாட்டு கொள்முதல்கள் ரூ. 150 மில்லியனாகவும், வெளிநாட்டு விற்பனை ரூ. 248 மில்லியன். https://www.virakesari.lk/article/227439

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

4 weeks 2 days ago
இந்த சொல் எதனை மறைமுகமாக குறிக்கின்றது என்பது புலவர் உங்களுக்கு நூறு வீதம் தெரியும். ஆனாலும் இந்த தரக்குறைவான வார்த்தையை மீண்டும் மீண்டும் யாழில் வந்து எழுதுகின்றீர்கள். தரம் தாழ்ந்த தமிழக அரசியல்வாதிகளும், அவர்களின் காவாலிக் கூட்டங்களும் பயன்படுத்தும் இத்தகைய தரங்கெட்ட வார்த்தைகளை யாழில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

4 weeks 2 days ago
அதே நேரம், பல நூற்றுகணக்கான தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து இனவழிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்த நல்ல மனசுள்ள சிங்கள மக்களும் இருந்தனர் அந்த காலப்பகுதியில். இவ்வாறு அடைக்கலம் கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட தமிழ் குடும்பங்களில் என் குடும்பமும் உண்டு. அண்மையில் ஒரு காணொளி வெளியாகி இருந்தது. கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் தான் சிறுவயதில் இருக்கும் போது தன்னையும் தன் குடும்பத்தையும் இனவழிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து, தம் சிறு வீட்டில் அடைக்கலம் கொடுத்த குடும்பத்தை பார்க்க சென்ற காணொளி. அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண் இன்று மிக வயதாகி இருந்தார். கனடாவில் சென்றவர் தன்னை அறிமுகம் செய்த போது அப் பெண்ணின் முகம் மலர்ந்த காட்சி ஒரு கவிதை. நானும் அந்த காலப்பகுதியில் குருணாகலில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் ரோகணவை நேரில் கண்டு உள்ளேன். அப்பாவும் அம்மாவும் அவர்களுக்கே வாக்களித்தும் இருந்தனர்,

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 2 days ago
இந்த மகளிர் கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வரிசை தலைகீழாக இருக்க வேண்டும் என்று ஒரு எழுதாத சட்டம் இருக்கின்றதா............. முதலில் வருபவர்கள் தத்தித் தத்தி அவுட் ஆகின்றார்கள்............ பின்னால் வருபவர்கள் நிதானமாக நின்று அடித்து விளையாடுகின்றார்கள்.......... வங்கதேசம் 69 க்குள் அவுட் ஆகவில்லயே என்ற ஒரு ஆதங்கம் தான் இப்படிக் கண்டபடி யோசிக்க வைக்குது..................😜.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

4 weeks 2 days ago
இந்த காலப்பகுதியில் கண்டி / கம்பளை பகுதியில் வசித்த எங்களுக்கு தெரிந்தவகையில் இது ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (UNP)அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், கட்சிக்கென்றே வளர்க்கப்பட்ட ரௌடி கூட்டங்களால் தான் இது நடாத்தப்பட்டது. சிங்கள பொதுமக்கள் அடித்து நொறுக்கப்பட்ட தமிழர் உடைமைகளை உரிமையோடு அள்ளிச் சென்றார்கள். 😉 இந்த காலப்பகுதியில் JVP வெளியில் இயங்கியதாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர்கள் 1983 July / Aug மாதங்கள் அளவில் தடைசெய்யப்பட்டார்கள். கொசுறுத் தகவல் - 1977 , JVP பொது தேர்தலில் Bell சின்னத்தில் போட்டியிட்டது. ரோஹன விஜேவீர எங்கள் வீட்டுக்கு முன்னால் இருக்கும் விக்ரமபாஹு பள்ளி திடலில் உரையாற்றினார். நான் அவரை நேரில் பார்த்து இருக்கிறேன்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

4 weeks 2 days ago
ஜேவிபியில் கடை நிலை உறுப்பினர்களாக இருந்தவர்கள், தமிழர்களைத் தாக்கி, அதை வன்முறையால் பாதிக்கப் பட்டவர்கள் அவதானித்திருக்கலாம், இந்த அனுபவங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், ஜே.ஆர் "ஜேவிபியின் சதி தான் கறுப்பு ஜூலை" என்று ஒரு முழுப் பொய்யைக் கூறி ஜேவிபியையும், ஏனைய இடதுசாரி அமைப்புகளையும் தடை செய்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. கீழே ஒரு மாதிரி லயனல் போபகேயின் 2024 கட்டுரையில் இருந்து காணலாம். Groundviews - Journalism for CitizensMisconceptions About the 1983 Riots - GroundviewsPhoto courtesy of The Island A recent statement attributed to Prasanna Ranatunga, the Urban Development and Housing Minister of Sri Lanka, blaming the JVP for the July 1983 riots and posted on the A5ஆனால், ஜேவிபி தலைமையோ, உள்ளூர் அமைப்பாளர்களோ கறுப்பு ஜூலையைத் திட்டமிட்டார்கள், அல்லது ஆரம்பித்த பின்னர் நடத்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் நான் இது வரை காணவில்லை.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

4 weeks 2 days ago
பராக் ஒபாமா... ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது. பராக் ஒபாமாவை விமர்சித்த ட்ரம்ப். Tamilwin ############### ################# நீயும், ஒண்ணுமே செய்யாம இரு! உனக்கும்... தருவாங்க, நோபல் பரிசு. 🤣😂🤣 Muralimanoj Muralimanoj ############### ################# நீ... குழப்படி கூட, அதுதான் உனக்கு கிடைக்கல. 😂 🤣 Mafahim Junaid ############### ################# யாரப்பா... அங்க, அந்த நோபலை... கொடுத்து தொலைங்கப்பா முடியல. 😂 🤣 Jenatheeban Theeban ############### ################# குடுங்களேன்டா.... அந்தாளுக்கு, அத... 😂 🤣 Mhm Asmir