1 month ago
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பு : பேசப்பட்ட முக்கிய விடயங்கள் என்ன ? 16 Aug, 2025 | 10:29 AM ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்காவின் அலஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். சிறப்பு விமானத்தில் அலஸ்கா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செங்கம்பள வரவேற்பளித்தார். ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் பயணித்தனர். இருவரும் தனியே சந்திப்பார்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். குறித்த கூட்டம் சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் புட்டின் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர். அவர்கள் நின்று கருத்துதத் தெரிவித்த இடத்தின் பின்னணியில் சமாதானத்தை தொடர்தல் என்று எழுதப்பட்டு இருந்தது. முதலில் புட்டினை பேசுமாறு டிரம்ப் சைகை காட்டினார். அதன் படி, தனது பேச்சை ஆரம்பித்த புட்டின், டிரம்ப் உடனான சந்திப்பு தாமதமாக நடந்த ஒன்று என்று குறிப்பிட்டார். போர் மூண்டதற்கான முதன்மை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று புட்டின் தெரிவித்தார். அதாவது நேட்டோவில் உக்ரைன் இணைவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு தேவை என்று புட்டின் வலியுறுத்தினார். எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது. டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் கூறியதில் நான் உடன்படுகிறேன். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மொஸ்கோவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/222661
1 month ago
அரசுக்குள் குழப்பம் என்று கூறி ஆட்சியைப் பிடிக்க முடியாது - பிரதமர் தெரிவிப்பு!

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது.
நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பிரதமரை மாற்ற வேண்டுமா, இல்லையா என்பதை ஜனாதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன அவசரம்?
பிரதமர் பதவியை நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. ஜனாதிபதி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் கேள்விக்குட்படுத்தவில்லை.
ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தி அரசும் என் மீது அழுத்தங்கள் எதனையும் இதுவரை பிரயோகிக்கவில்லை.
ஆனால், எதிர்க்கட்சிகள் வதந்திகளை வெளியிட்டு வருகின்றன. சில ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
அனைத்து ஊடகங்களும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். உண்மை நிலைமைகளை ஊடகங்கள்தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு.
இந்த அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது.
நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது என்றார்.
https://newuthayan.com/article/அரசுக்குள்_குழப்பம்_என்று_கூறி_ஆட்சியைப்_பிடிக்க__முடியாது_-_பிரதமர்_தெரிவிப்பு!#google_vignette
1 month ago
மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது
- சச்சிதானந்தம் வலியுறுத்து!

தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதியன்று வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும் தமிழ்மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய சச்சிதானந்தம் மேலும் கூறுகையில்:- தற்போது அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு. இதை சைவர்கள் குதிப்பாக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். கடையடைப்புக்கான தேவை இன்றைய சூழலுக்கு தேவையற்ற ஒன்று. அத்துடன் கடையடைப்புக்கு என்பது காலத்துக்கும் ஒவ்வாத போராட்டம்.
முல்லைத்தீவில் இளைஞன் இதந்த சம்பவத்துக்கு அது தொடர்பில் குற்றம் சாட்டபட்டவர்கள உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு நடந்த சம்பவத்துக்கு காரணம் கஞ்சா குடித்து போதையில் நீரில் வீழ்ந்து இறந்ததே என மதுத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நேரம் இராணுவ பிரசன்னம் என்பது தோல்வி அடைந்த இனம் சந்திக்கும் ஒரு இயல்பனது தாக்கம் அல்லது அடக்கு முறைதான்.
மடு மாதாவின் நலன் கருதி போராட்டத்தை பின்நகர்த்திய குறித்த தரப்னர் நல்லூர் திருவிழாவை குறிவைத்து கடையடைப்பு என கூறி சுயநல அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் மக்களின் வழ்வே பாதிக்கும். அந்தவகையில் ஏழை மக்களை பகடைக்காயாக்க முயற்சிக்கும் நரித்தன அரசியலுக்கு இடம்கொடுக்கக்கூடாது. இந்த கடை அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர்களோ, போக்குவரத்து சார் சங்கங்களோ, பொது அமைப்புகளோ எதுவானாலும் ஒத்துழைப்பு வழங்ககூடாது. தோல்வியில் முடிந்த போராட்டத்திலிருந்தி மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் காலத்தில் இந்த போராட்டங்கள் அவசியமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
https://newuthayan.com/article/மீண்டுவரும்_பொருளாதார_நகர்வுகளை_மீட்டெடுக்கும்_இன்றைய_காலகட்டத்தில்_ஹர்த்தால்_உள்ளிட்ட_போராட்டங்கள்_அவசியமற்றது#google_vignette
1 month ago
அலாஸ்காவினை இரஸ்சியா பெற முயற்சிக்கவில்லை என கருதுகிறேன், அது முடிந்த ஒரு தீர்வு. அது பிரச்சினைக்கு தீர்வாகவும் இருக்க போவதில்லை என கருதுகிறேன், இரஸ்சியா நிலப்பரப்புக்களை பெறுவதற்காக முயற்சிக்கவில்லை மாறாக தமது பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறார்கள். பலஸ்தீன மேற்கு கரை போன்ற ஒரு தீர்வினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இரஸ்சியர்கள் வாழும் இந்த பகுதிகளின் பொருளாதார இராணுவ அதிகாரங்கள் மட்டும் இரஸ்சியாவிடம் இருக்கும் ஆனால் குறித்த பகுதிகள் உக்கிரேன் பகுதிகள்தான். இது கொங்க் கொங்கினை போன்ற தீர்வினை விட உக்கிரேனுக்கு அதிக ஆழுமை இருக்கும் எனகருதுகிறேன். இது ஒன்றும் பாதகமான தீர்வல்ல, பெரும்பான்மையான இரஸ்சியர்கள் வாழும் பகுதியில் அவர்கள் கடந்த காலங்களில் உக்கிரேனியர்களின் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்ட நிலையில் இது ஒரு சிறந்த முடிவுதான். ஆனால் தனிய இரஸ்சியர்கள் வாழும் பகுதி மட்டும் இரஸ்சியாவினால் பாதுகாகப்படுவதுடன் நிற்காமல் மற்ற இன மக்களும் உக்கிரேனியர்களினால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் அவர்களது உரிமைகளையும் கவனத்தில் கொள்ளப்பட்டு அவர்களிற்கான அலகுகள் உருவாக்கப்பட வேண்டும், உதாரணமாக பொலிஸ், கங்கேரியன், ருமேனியன் மக்கள் உக்கிரேனால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் அவர்களது உரிமைகளை பேண் அந்த மக்களுக்கும் ஏற்ற ஒரு பொதுவான தீர்விற்கு இந்த பேச்சுவார்த்தையில் முயற்சித்தால் சிறப்பாக இருக்கும்.
1 month ago
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு Published By: Vishnu 16 Aug, 2025 | 03:24 AM ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலாஸ்கா வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அன்புடன் வரவேற்றார். மேலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பேச்சுவார்த்தை நடைபெறும் எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் அமெரிக்க ராணுவ தளத்திற்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராணுவ தளம் அமெரிக்காவிற்கு சொந்தமானது, மேலும் அமெரிக்க ரகசிய சேவை மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கூட்டாக டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்கியுள்ளன. வான்வெளி தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நகரம் முழுவதும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் சிறப்புத் தேடல் நடவடிக்கைகளும் செயல்பாட்டில் உள்ளன. அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையே ஒரு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை 16ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:15 மணியளவில் நடைபெற்றது. மேலும் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. Virakesari.lkரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின...US President Joe Biden and Russian President Vladimir Putin held a meeting at the Elmhurst-Richardson military base in Alaska to discuss ways to end the Russia-Ukraine war.
1 month ago
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
Published By: Vishnu
16 Aug, 2025 | 03:24 AM

ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலாஸ்கா வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அன்புடன் வரவேற்றார்.
மேலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பேச்சுவார்த்தை நடைபெறும் எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் அமெரிக்க ராணுவ தளத்திற்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராணுவ தளம் அமெரிக்காவிற்கு சொந்தமானது, மேலும் அமெரிக்க ரகசிய சேவை மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கூட்டாக டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்கியுள்ளன.
வான்வெளி தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நகரம் முழுவதும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் சிறப்புத் தேடல் நடவடிக்கைகளும் செயல்பாட்டில் உள்ளன.
அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையே ஒரு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை 16ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:15 மணியளவில் நடைபெற்றது.
மேலும் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Virakesari.lk

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின...
US President Joe Biden and Russian President Vladimir Putin held a meeting at the Elmhurst-Richardson military base in Alaska to discuss ways to end the Russia-Ukraine war.
1 month ago
கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 03 திடீரென்று, இசை ஆர்வமாக சிரித்தபடி புத்தர் இடம் கேட்டான். “சுவாமி, புத்தரே, நாடு கடத்தப்பட்டு, இலங்கையில் வந்தேறு குடியாக தஞ்சம் அடைந்த, சிங்க மிருகத்தின் வாரிசு, கெட்ட விஜயனும், தந்தைக்கு பிறக்காத, இறந்த புத்த குருவின் மறுபிறப்பான துட்டகாமினியும், எப்படி நேரடியாகச் சொர்க்கம் போனார்கள்?, ஆனால் அதற்கு முதல் புத்தர் மீண்டும் போதி மரத்தின் கீழ் மௌனமாகி விட்டார். இசை கொஞ்சம் முணுமுணுத்தபடி, என்னை பார்த்து கேட்டான், 'தாத்தா, நரகம் மிகவும் பயங்கரமானதா, அங்கு போகாமல் தப்பிக்க, கொலைகள் கொள்ளைகள் செய்பவனும், தன் ஒரு பங்காக ஆலையங்கள் கட்டி அன்னதானம் செய்தால் போதுமா ?” அன்பால் ஆள்வோம் அனைவரையும் இணைப்போம் பண்பால் கூடி மனிதம் வளர்ப்போம்! இன்பம் துன்பம் சமமாக மதித்து கண்ணியம் கட்டுப்பாடு காத்து வாழ்வோம்! உரிமை உள்ள மனிதனாக பெருமை கொள்ளும் இனமாக வறுமை அற்ற குடியாக சிறுமை போக்கி நகருவோம்! ஆராய்ந்து எடுக்கும் நீதிவானும் ஆக்கம் கொண்ட சமூகமும் ஈவிரக்கம் காட்டும் அரசும் தரமான உலகைத் தரும்! பாசம் உலாவும் கண்களாய் மோசம் செய்யா இதயமாய் எங்களை நாங்கள் ஆக்கினால் தேசம் ஓங்கிச் சிறக்கும்! பக்கத்தில் இன்னும் நின்ற சிவன் சிரித்தார். அவர் கண்கள் மறுமொழி கொடுத்துக்கொண்டு இருந்தன. பின் “நீங்களே ஏன் போய் நேராக பார்க்கக்கூடாது?” என்று கேட்டார். இசையும் நானும் சம்மதம் தெரிவிக்க, சிவனின் ஏற்பாட்டில், ஒரு கண் சிமிட்டலில், நாம் பாதாள உலகத்திற்குள் இறங்கினோம். ஆனால் இது பண்டைய நூல்களில் இருந்தது போல் அல்லது கற்பனை செய்த பயங்கரமான இடம் அல்ல. இது உண்மையில் தண்டனை அல்ல, கற்றலின் ஒரு பகுதி போல் இருந்தது. அதன் இதயத்தில், மத்தியில் சத்ய சாய் பாபா அமர்ந்திருந்தார், அவரைச் சுற்றி மரியாதைக்குரிய ஓஷோ (பகவான் ரஜ்னீஷ் சந்திர மோகன்), ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி [நிர்மலா ஸ்ரீவஸ்தவா] அமர்ந்திருந்தனர் மற்றும் சில இடங்கள் நித்யானந்தா, ஆசாரம் பாபு, குர்மீட் ராம் ரஹிம் சிங், ராதே மா போன்றோருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. - சிலர் மனிதர்களால் கடவுள்களாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர், சிலர் தாங்களே தங்களை தவறாக கடவுளாக காட்டியவர்கள், ஆனால் அனைவரும் பணிவுடன் இங்கு பிரகாசித்தனர். சாய்பாபா எங்களை வரவேற்றார். "கந்தையா தில்லை, இதோ, இங்கே மீண்டும் நரகலோகம் வந்த மக்களுக்கு அவர்களின் தவறுகளைக் சுட்டிக் காட்டி மீண்டும் எழுச்சி பெற வழிவகுக்கிறோம்." என்றார். இசை 'இவரின் படத்தை தானே, அம்மம்மா சாகும் பொழுது கையில் வைத்திருந்தார்? பாவம் அம்மம்மா, தப்பிவிட்டார்!' என எனக்கு காதில் முணுமுணுத்தான். இங்கே மதிய உணவு அடக்கமாக இருந்தது - சப்பாத்தி, எலுமிச்சை சாதம், மசாலா பருப்பு, ஆனாலும் அது வெறும் சாப்பாடாக இல்லாமல், அந்த உணவில் அவர்களின் மன்னிப்பும் ஞானமும் கலந்து இருந்தது. அது மட்டும் அல்ல, இந்த உணவு ஆடம்பரமானதாகவோ அல்லது பிரமாண்டமாகவோ இல்லை என்றாலும், ஊட்டமளிக்கக் கூடியதாகவும் ஆறுதலளிக்கக் கூடியதாகவும் இருந்தது. பணிவு, சிக்கனம் மற்றும் விருந்தோம்பல் அங்கு தெரிந்தது. இந்த கடவுள்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் பூமிக்குரிய காலங்கள், பாராட்டுகள் மற்றும் தவறுகள், அவர்கள் பெற்ற அன்பு மற்றும் அவர்களை சிக்க வைத்த சம்பவங்கள் பற்றி எங்களுடன் பேசினர். ஆனால், தாம் மீண்டும் அதே பாணியில் இங்கு வாழ்வதால், பிரச்சனை இல்லை என்று மகிழ்வாகக் கூறினர். இலங்கை பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்டபோது, அரசியலால் திரிக்கப்பட்ட நம்பிக்கை எவ்வாறு அற்புதங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியது என்பதையும் மற்றும் அவர்களின் உரையாடலையும் இசை, விளங்குதோ விளங்கவில்லையா கண்களை விரித்து ஆச்சரியமாகக் கேட்டான், சாய்பாபா, எதோ கையை மேலே உயர்த்தினார். ஒரு தங்கச் சங்கிலி எடுத்து, 'இசை'யின் கழுத்தில் போட முயன்றார். ஆனால் இசை அதை தட்டி விட்டான். அவன் பார்த்த பார்வை, இன்னும் உங்க புத்தி மாறவில்லையா' என்று கேட்காமல் கேட்டது? சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன், நானும் இசையும் சொர்க்கத்திற்குத் மீண்டும் திரும்பினோம். உண்மையில் இங்கு இரவோ பகலோ கிடையாது. நான் என் ஆப்பிள் மணிக்கூடு சொல்லுவதை வைத்து கூறுகிறேன். இங்கே வானம் அந்தி நீல நிறங்கள் மற்றும் தங்கக் கோடுகளின் திரைச்சீலை போல் மாறியது. சந்தன மரத்தின் நறுமணம் காற்றில் எங்கும் பரவியது. அன்று முழுவதும் நான் காபி குடிக்கவில்லை, நா வறண்டது. மாலை காபியாவது குடிப்போம் என்று தேடினேன். அப்போது தேவலோகத்தில் ஒரு தேவர்களும் தேவதைகளும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. அப்பொழுது காமதேனுவை அங்கு கண்டேன். அது வந்து "ஐயனே, என்ன வேண்டும்?" என்று கேட்டது. ஒரு நல்லா ஸ்ட்ராங்கா காபி கொண்டுவா என்றேன். ஆனால் அதுவும் தன்னால் அது இயலாது என்று சொல்லிவிட்டது. எதோ சப்தம் கேட்டு, திரும்பி பார்த்தேன். அங்கே தேவர்கள் ஆண்-பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை, கால் இடுப்பு, தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். தங்க மோகம் இங்கு அதிகம் போல் எனக்குத் தெரிந்தது. அப்பத்தான் நல்லூர் ஞாபகம் வந்தது , அங்கே வாசலில் அலங்கார நல்லூரானின் பொருள் இப்ப விளங்கியது! எங்கள் இருவரையும் ஒரு தெய்வீக மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு தெய்வீக நடனக் கலை பார்க்க அன்று இரவு ஏற்பாடு செய்தனர். இந்த மண்டபம் உலகின் மாபெரும் கட்டிடக் கலைஞன் மயன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது என்று ஒரு விளக்கமும் தந்தனர். இசை அவர்கள் சொல்லி முடிப்பதுக்குள் மண்டபத்துக்குள் ஓடிவிட்டான். எமக்கு துணையாக நாரதரும் வந்தார். ஒரு மூலையில் யமன் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பதைக்கண்டேன். நல்லவேளை இசை அந்த பக்கம் போகவில்லை! சொர்க்கம் போக ஆசைப் பட்டேன் சொர்ண சுந்தரியை அன்று மறந்தேன் பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன் வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் ! சொர்க்கத்தில் இன்று இசையுடன் நான் தூர்ந்த கனவை தூசு தட்டுகிறேன் பார்த்து ரசித்து பூசை செய்கிறேன் நேர்த்திக் கடனாய் காவடி ஆடுகிறேன் !" "மர்ம சாமியார்கள் புடை சூழ ஊர் வலம் சென்றேன் நரகத்தில் நேர்மை பற்றி பிரசங்கம் செய்து சர்ச்சை இல்லாமல் திரும்பி வந்தேன் !" "ஊர்வசி திலோத்தமை ஆட்டம் காண பார்வதி துணைவனுடன் சொந்தம் கொள்ள சொர்க்க லோகத்தில் குடி கொள்ள அர்த்த ராத்திரியிலும் பஜனை செய்கிறேன் ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பாகம் 04 தொடரும் https://www.facebook.com/share/p/1CepkKK4Zb/?mibextid=wwXIfr
1 month ago
This album contains images of the Undercover Black Tigers of the Tamil Eelam Intelligence Department of the de facto Tamil Eelam quasi-state. Images were collected from unknown sources, not by myself. Note: Except for Undercover Black Tiger Captain Nivethan alias Thamizhinpan, none of the other UBTs' names are in the Tigers' official Maaveerar name list. Maaveerar heads were inserted into the final version of the Tiger's black Tiger-Stripe camouflage, which is what the Maaveerars images show. Not in accordance with the KIA time of the Maaveerars. When you use these pictures for historical study, please keep this in mind. E.g.: The Black Tigers did not wear a Tiger-stripe uniform before the beginning of the year 2001. They wore a full black uniform. Similarly, for the fighting formation insignia on the cap too (for further explanation of this, plz refer to my documents. Plz do not distort the history.)