Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 2 days ago
ஆடுகள அறிக்கை பார்க்கவில்லை, ஆனாஅல் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதான ஆடுகள நிலவரத்தினடிப்படையில் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் இது ஒரு கறுப்பு நிற ஆடுகளம், அதனால் இலங்கை அணி சுழற்பந்து வீச்சிற்கு முன்னுரிமை அளித்தாலும், முதலில் பந்து வீச்சினை தெரிவு செஉதிருப்பட்கு ஆச்சரியமாக உள்ளது. ஆடுகளம் ஆரம்பத்தில் ஈரமாக இருகக்கும் அத்துடன் மேக மூட்டமான நிலையில் வேக பன்ட்கு வீச்சிற்கும் சாதகமாக இருக்கும், பந்து முதலில் துடுபாடுபவர்களுக்கு இலகுவாக வரும் பின்னர் ஆடுகளம் மெதுவாக தொடங்கும் போது இரண்டாவது இனிங்ஸ் கடினமாக இருக்கும், புதிய பந்தில் இலகுவாக ஓட்டங்களை எடுத்தாலும் பந்து மெட்குவாக தொடங்கும் போது ஓட்டம் எடுப்பட்கு கடினம், இந்த ஆடுகளம் 250 ஆடுகளம் போல இருக்கின்றது ஆனால் இங்கிலாந்து அதனை விட அதிகமாக எடுக்கும் போல உள்ளட்கு இலங்கை அணி இரண்டாவதாக ஆடுவதால் மிக கடினமான சூழ்நிலையினை எதிகொள்ள வேண்டி ஏற்படலாம், பந்தை நேர்கோட்டில் விளையாட வேண்டும் ரிவர்ஸ் சுவீப், சுவீப் போன்ற சுழல் பன்ட்கு வீச்சு அடிகளை இந்த ஆடுகளத்தில் பந்து மெட்குவான பின்னர் விளையாடுவது கடினமாக இருக்கும், அத்துட இரண்டாவட்கு இனிங்ஸிலும் நிலமை பந்தினை குறுக்காக ஆடுவது கடினமாகிவிடும் என க்ருதுகிறேன்.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

4 weeks 2 days ago
யார் என்ன வேணும் எண்டாலும் எழுதுங்கோ பிரச்சைனயே இல்லை.மற்றவைர்களை எவ்வளவுக்கு தரக்குறைவாக பேச முடியுமோ அந்தளவுக்கு தரக்குறைவாகத் தான் நினைப்பது, பேசுவது..சொல்லப் போனால் வைத்தியர் அடுத்த டிரம்ப்.இப்படி நிறைய எழுதலாம்..🖐

குட்டிக் கதைகள்.

4 weeks 2 days ago
ஒரு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தபோது, தான் உட்கார வேண்டிய நாற்காலி கூரையில் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் மாணவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கரும்பலகையில் சென்று இப்படி எழுதினார்: இன்றைய தேர்வு - 15 நிமிடங்கள், 30 மதிப்பெண்கள். கேள்வி 1. நாற்காலிக்கும் தரைக்கும் இடையிலான தூரத்தை சென்டிமீட்டரில் கணக்கிடுங்கள் -1 மதிப்பெண் √. கேள்வி 2. நாற்காலியின் உச்சவரம்பு சாய்வின் கோணத்தைக் கணக்கிட்டு, உங்கள் செயல்பாடுகளைக் காட்டுங்கள் -1 மதிப்பெண் √. கேள்வி 3. நாற்காலியை கூரையில் தொங்கவிட்ட மாணவரின் பெயரையும்,அவருக்கு உதவிய நண்பர்களின் பெயரையும் எழுதுங்கள்~28 மதிப்பெண்கள் √.😜 100% பொழுது போக்கு ·

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

4 weeks 2 days ago
பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்துக்கு அவசியமான வெற்றி Published By: Vishnu 11 Oct, 2025 | 03:36 AM (நெவில் அன்தனி) குவாட்டி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்து மிக இலகுவாக 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. பங்களாதேஷுக்கு கடினமான 228 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நியூஸிலாந்தின் பந்துவீச்சு இலக்கை நோக்கியதாக இருக்கவில்லை. நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் 16 வைட்கள் மூலம் 21 ஓட்டங்களை இனாமாகக் கொடுத்தனர். எனினும், அணித் தலைவி சொஃபி டிவைன், ப்றூக் ஹாலிடே ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஜெஸ் கேர், லீ தஹுஹு ஆகியோர் பதிவு செய்த தலா 3 விக்கெட் குவியல்களும் நியூஸிலாந்தை வெற்றி அடையச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ப்றூக் ஹாலிடே 69 ஓட்டங்களையும் சொஃபி டிவைன் 63 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 112 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களைவிட சுசி பேட்ஸ் 29 ஓட்டங்களையும் மெடி க்றீன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரபியா கான் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. 15 ஓவர்கள் நிறைவடைவதற்கு முன்னர் பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. ஆனால் மத்திய வரிசை விராங்கனைகள் பாஹிமா காத்துன் (34), நஹிடா அக்தர் (17), ரபியா கான் (25) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி பங்களாதேஷுக்கு 125 ஓட்டங்களைக் கடக்க உதவினர். உதிரிகளாக 30 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு கிடைத்தது. பந்துவீச்சில் ஜெஸ் கேர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லி தஹுஹு 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/227445

காஸாவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதி – மக்களின் கொண்டாட்டத்தை காட்டும் 10 படங்கள்

4 weeks 2 days ago
காசா போர் நிறுத்தம்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிறுமி Published By: Digital Desk 3 10 Oct, 2025 | 04:15 PM காசா முனையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, அங்கு வசிக்கும் பனியாஸ் என்ற சிறுமி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை (10) காசா பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டது. இதன் மூலம், இரண்டு ஆண்டுகளாக நீடித்துவரும் காசா மோதல் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளது. போர் முடிவடைந்ததை அறிந்த பனியாஸ், காணொளி ஒன்றில் தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். “அனைவருக்கும் வணக்கம். இன்று காலை மிகவும் வித்தியாசமானதும் சிறப்பானதும் ஆகிறது. போர் முடிவடைந்தது! நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நாங்கள் காசாவுக்கு திரும்பிச் செல்லவிருக்கிறோம். இன்று வீட்டில் அமர்ந்து இருந்தபோது, அம்மா வந்து ‘ஒரு நல்ல செய்தி உண்டு’ என்றார். அது போர் முடிவடைந்துவிட்டது என்பதுதான்! அந்த நிமிஷத்தில் நான் குதித்து மகிழ்ந்தேன். இது எனது வாழ்வில் மறக்க முடியாத காலை. சந்தோசத்தில் அழுதேன்.” அதேபோல், பனியாஸ் மேலும், “எனது முதல் நம்பிக்கை — போர் முடிவடையும் என்பதுதான். இரண்டாவது நம்பிக்கை — எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். மூன்றாவது நம்பிக்கை — காசா விரைவில் மீண்டு எழ வேண்டும். இப்படி ஒரு போரை மீண்டும் நாம் சந்திக்க வேண்டாம்.” இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், காசா மக்களுக்கு இது ஒரு நம்பிக்கை தருணமாக மாறியுள்ளது. பனியாஸ் தனது காணொளி செய்தியின் இறுதியில், “காசா மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/227416

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

4 weeks 2 days ago
வணக்கம் வாத்தியார் . ........! பாடகி : சுனிதா சாரதி இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா பாதி சொன்னதும் அது ஓடி விடுமா குழு : டியூரா பெண் : முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா குழு : டியூரா பெண் : பெண்ணோடு கொஞ்சி பேசவே வெட்கமா குழு : டியூரா பெண் : இதழோடு சோமபானம் தான் சுரந்து விட்டதா குழு : டியூரா பெண் : இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா பெண் : நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே பார்த்தேனே வீட்டின் உள்ளே பெண் : சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே பெண் : பல பல தடை தாண்டி வந்தாய் வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய் கொடிய சாத்தானே என்னை தூக்கி செல்லவா ஆ ஹோ குழு : தூது இல்லே தூது இல்லே தூது இல்லே தூது இல்லே பெண் : கருப்பிலே உடைகள் அணிந்தேன் இருட்டிலே காத்து கிடந்தேன் யட்சனை போல நீயும் வந்தாய் பெண் : சரசங்கள் செய்த படியே சவுக்கடி கொடுக்கும் யுவனே வலித்தாலும் சுகம் தந்து சென்றாய் பெண் : மறுபடி வருவாய் என்று துடித்தேன் நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன் பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா நீ சொல்ல வந்ததை குழு : சொல்ல வந்ததை பெண் : சொல்லி விடுமா குழு : சொல்ல வந்ததை சொல்லி விடுமா பாதி சொன்னதும் அது ஓடி விடுமா ........! --- தூது வருமா தூது வருமா ---

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 2 days ago
இலங்கை அணி பந்து வீச்சினை தெரிவு செய்துள்ளது, இலங்கை அணீன்று மோசமாக தோற்க போகிறது, வேலையில் இருப்பதால் பின்னர் விபரமாக எழுதுகிறேன்.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

4 weeks 2 days ago
இந்தக் கூட்டணி அமைந்தால் திமுகவை வீட்டுக்கு அனுப்பலாம். இந்தக் கூட்டணியை நான் வரவேற்கிறேன்.திமுகவினதும் குடும்ப ஆட்சி துடைத்தழிக்கப்பட வேண்டும்.விஜைக்கும் இப்போது இருக்கும் நெருக்கடியில் இதுதான் சரியான தேர்வாக இருக்கும்.(அப்போதும் நாம் தமிழர்கட்சிதான் எனது தெரிவாக இருக்கும். தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப் போகாமல் வைத்திருப்பதற்கு அந்தக்கட்சி ஒன்று மட்டும்தான் தமிழ்நாட்டில் செயற்பாட்டில் இருக்கிறது.)

சமையல் செய்முறைகள் சில

4 weeks 2 days ago
இவற்றுள் உங்களுக்குத் பிடித்தமான இனிப்பை தேர்ந்தெடுங்கள் ...... பின்பு அந்தப் பெயரை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் ..... பின்பு யூடியூப் பக்கத்தைத் திறந்து அதற்குரிய இடத்தில் அந்தப் பெயரை எழுதுங்கள் . .... பின்பு அதில் தேடும் இடத்தில் சுட்டியை அழுத்துங்கள் ....... உடனே அதை எப்படி செய்வதென்று காட்டித்தர பலர் உதவிக்கு ஓடி வருவார்கள் . .......! 😂

நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது!

4 weeks 2 days ago
நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது! நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, பிரபல வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிலையில்.. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை , சட்டவிரோதமாக ஏனைய நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் , அனில் அம்பானி இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ருபாய் நிதி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் இன்று(11) அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1450096

குட்டிக் கதைகள்.

4 weeks 2 days ago
தினமும் ஒரு வரி தத்துவம் · காலம் மாறும் போது.. சிறுகதை. அரசன் ஒருவன் அமைச்சனோடு தனது நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான். அங்கே ஓரிடத்தில் உழவன் ஒருவன் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்தான். அவன் அருகே பாம்பு ஒன்று படம் எடுத்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அரசன் “உழவனே! உன் அருகே பாம்பு. ஒடு, ஓடு” என்று குரல் கொடுத்தான். எதுவுமே நடவாதது போல இயல்பாகத் திரும்பிப் பார்த்த உழவன் எந்தப் பரபரப்பும் காட்டாமல் அந்தப் பாம்பைக் கையால் பிடித்துத் தூக்கி எறிந்தான். அதிர்ச்சி அடைந்த அரசன், “கொடிய பாம்பு அது. நீ பிடித்தபோது கொத்தி இருந்தால் உன் உயிர் போய் இருக்குமே” என்றான். “அரசே! இந்த நிலத்தில் வேலை செய்யும்போது இப்படி எத்தனையோ ஆபத்துகளைச் சந்திக்கிறேன். அவற்றிற்கு அஞ்சினால் நானும் என் குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டியதுதான்” என்றான் அவன். அந்த விவசாயிக்கு உதவி செய்ய நினைத்த அரசன் வளமான நிலங்களையும் பொற்காசுகளையும் அவனுக்கு வழங்கினான். செல்வந்தனாக ஆனான் அவன். ஆண்டுகள் பல கழிந்தன. அரசனும் அமைச்சனும் மீண்டும் அந்த வழியாக வந்தார்கள். அந்த உழவன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தான். அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்று வணங்கிணான். அவன் கையில் பெரிய கட்டுப் போட்டிருநத்து: “கையில் என்ன கட்டு?” என்று கேட்டான் அரசன். “அரசே! ஒரு முள் கீறி அது பெரிய புண்ணாகி விட்டது. அதற்குக் கட்டுப் போட்ட மருத்துவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்கச் சொன்னார். இங்கே அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் உழவன். ‘ இதைக் கேட்டு வியப்படைந்த அரசன், “அப்படியா உன் உடம்பைப் பார்த்துக்கொள்” என்று அவனிடம் சொல்லிவிட்டு அகன்றான். வழியில், “அமைச்சரே! அன்று இவன் கொடிய பாம்பைத் தூக்கி எறிந்தான். இன்றோ முள் குத்தியதற்குக் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு ஓய்வு எடுக்கிறான். தலை கீழ் மாற்ற மாக உள்ளதே” என்று கேட்டான். “அரசே! அன்று அவன் ஏழை. உழைத்துப் பிழைத்ததால் எதற்கும் அஞ்சவில்லை. இன்றோ செல்வந்தனாகி உழைப்பே இல்லாமல் இன்பத்தை அனுபவிக்கிறான். “காலமும் சூழ்நிலையும் மாறும் போது எல்லாம் மாறத்தானே செய்யும்” என்றார் அமைச்சர்........! 😃 Voir la traduction

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

4 weeks 2 days ago
சீனா மீது கூடுதல் 100 சதவீத வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமது நாட்டின் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என அறிவித்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலாக சீனா அமெரிக்கா பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்டதையடுத்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த மே மாதம் அமெரிக்கா அறிவித்தது. அதன்படி, சீனா மீதான வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்ததோடு, அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. மேலும் 90 நாட்கள் வரிவிதிப்பு நிறுத்தமானது, ஒகஸ்ட் 10ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, கால அவகாசம் கூடுதலாக 90 நாட்களுக்கு (நவம்பர் 10) வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (11) அறிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் எனவும் ஏற்கனவே சீன பொருட்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 130 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 30ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், தற்போது சீன ஜனாதிபதியை சந்திக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். https://athavannews.com/2025/1450099

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

4 weeks 2 days ago
சுட்டிபெண் நிலா · ஆண்களுக்கும் அழுகை வரும்... தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்... தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்... அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும் போது வெளியில் சொல்ல முடியாமல் அழுவான்... காதல் கொண்ட மனைவி தன்னை ஏமாற்றுவதை அறிந்தால் அந்த ஆண் அழுவான்... தங்கள் குழந்தைகளுக்கான உணவு போன்றவற்றை அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க முடியாமல் போனால் ஆண் அழுவான்... பிழைப்பை தேடி கடன் சுமைக்காக தாயகத்தைப் பிரிந்து செல்லும் போது, தான் நேசிக்கும் அன்பானவர்கள் தன் அருகே இல்லையென ஒவ்வொரு இரவிலும் ஆண் அழுவான்... ஆண்கள் அழுகிறார்கள்... ஆனால் எப்படி? இருட்டில்... பிறர் அறியாவண்ணம்... தலையணைகளில் முகத்தைப் புதைத்து... கழிவறையில் தண்ணீரை திறந்து அவன் அழுகையின் கண்ணீரை யாரும் பார்த்து விடக்கூடாது என நினைப்பான்... அவன் அழுது கொண்டு இருக்கிறான் என்பதை அவன் சங்கடத்தில் விடும் பெருமூச்சு , அதற்கு சாட்சியாகும்... கண்களில் வெளிப்படும் ஏக்கம், நடுங்கும் கைகள், வார்த்தையில் தடுமாற்றம்... பெரும்பாலான ஆண்கள் குடும்ப சூழல், போதிய வருமானம் இல்லாதது, ஏமாற்றும் மற்றும் தேவைக்கு தேடிவரும் உறவுகள், உறவுகளின் துரோகம், போன்ற மனசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில்தான் நிறைய ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல் அழுகிறார்கள்... இவன் குழப்பத்தில் இருக்கிறான், பைத்தியக்காரன், என மற்றவர் நினைக்க அது அவனுக்கு மட்டும்தான் தெரியும் உள்ளுக்குள் அவன் அழுதுகொண்டு இருக்கிறான் என... ஒரு விஷயத்தில் இந்த ஆண் வர்க்கம் மிகவும் கெட்டிக்காரர்கள் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு வெளியில் சிரிப்பது இந்த வித்தையில் ஆண் சமூகம் எப்போதுமே தேர்ச்சிப்பெற்றவையே... ஆண்கள் இப்படித்தான் அழுகிறார்கள். (படித்ததில் பிடித்தது)

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

4 weeks 2 days ago
Ammu Dilaxshi · தீபிகா படுகோன், ஆலியா பட் உள்ளிட்ட நடிகைகள் பாலிவுட்டை கலக்கி வரும் நிலையில், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றை ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா ஆகியோர் அதிக சம்பளம் பெறும் நடிகைகளாக உள்ளனர். ஆனால், இவர்களைவிட பல ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி வரும் நடிகை ஒருவர் அதிக சம்பளம் வாங்குகிறார். மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சினிமா. அத்தகைய சினிமா ரசிகர்களால் நாள்தோறும் கொண்டாடப்படுகிறது. நடிகர்களுக்கு சமமாக நடிகைகளும் தங்களின் அபார நடிப்பு திறனால் அசத்தி வருகின்றனர். இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் எனத் தெரியுமா?. தீபிகா படுகோனே, ஆலியா பட் என நீங்கள் நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு. ஒரு திரைப்படத்திற்கு ரூ.40 கோடி சம்பளம் வாங்கும் இந்த நடிகையே முதன் முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கியவர். பிகார் மாநிலத்தில் பிறந்து, உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்தவர் தான் அந்த நடிகை. அவர் வேறு யாருமல்ல, உலக அழகியான பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் ஹீரோயின்களின் சம்பளத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த பிரியங்கா சோப்ரா, பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ. 40 கோடி சம்பளம் வாங்குகிறார். அதாவது 5 மில்லியன் டாலர்கள். ஆனால் இந்த தொகை ஹாலிவுட்டுக்கானது மட்டுமே. இருப்பினும், அவர் இந்திய படங்களில் நடிக்கும்போது ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ.14-ரூ.20 கோடிகள் வாங்குகிறார். என்னதான் பாலிவுட், ஹாலிவுட் என பிரியங்கா சோப்ரா நடித்தாலும், அவரின் சினிமா கேரியருக்கு விதைபோட்டது தமிழ் சினிமாதான். 2002 ஆம் ஆண்டில் தமிழில் 'தமிழன்' திரைப்படம் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதுவே பிரியங்காவின் முதல் திரைப்படம். அதன்பிறகு வரிசையாக இந்தி படங்களில் நடித்தார். 'பர்ஃபி', 'மேரி கோம்', 'பாஜிராவ் மஸ்தானி', 'தில் தடக்னே தோ' போன்ற படங்களில் ஒவ்வொன்றாக ஹிட் அடித்தார். ஹாலிவுட்டுக்கு சென்ற அவர், இந்தி படங்களை குறைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார். பிரியங்கா நடித்த முதல் ஹாலிவுட் படமான 'பேவாட்ச்' மாபெரும் வெற்றி பெற்றது. அது 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு அவர் 'எ கிட் லைக் ஜேக்', 'இஸ்னாண்ட் இட் ரொமான்டிக்', 'வீ ஆர் ஹீரோஸ்', 'தி மேட்ரிக்ஸ் ரிசர்ரக்ஷன்', 'லவ் அகெய்ன்' போன்ற படங்களில் நடித்தார். இவர் தன்னைவிட வயதில் இளையவரான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் முடித்தார். இவர்களது திருமணம் உமைத் பவன் என்ற அரண்மனையில் நடைபெற்றது. தற்போது சுமார் 650 கோடிக்கு சொத்துக்கு அதிபதியாக, பிரைவேட் ஜெட், அமெரிக்காவில் இரண்டு பங்களா, விதவிதமான சொகுசு கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்நிலையில் இவரது சிறிய வயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. Voir la traduction பிரியங்கா சோப்ரா .......! 🙂