1 month ago
கடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம். எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கடையடைப்புக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் ஆதரவை திரட்டுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள கடிதத்தில் கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அன்புடையீர், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி கடையடைப்பு தொடர்பானது எமது கட்சியினால் மேற்சொன்ன நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே. முழுமையான பங்களிப்பு இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூராட்சி தவிசாளர்களும் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சகலரது ஆதரவை கோருவது அவசியமாகும். அத்தோடு அனைத்து வணிகர் சங்கங்களையும் சந்தித்து ஆதரவை கோருவதோடு உறுப்பினர்கள் நேரடியாக சந்தைக்கும் கடைக்கும் சென்று இதை செய்வது நல்லது. கட்சியின் நிர்மானத்தை வலுவாக நிறைவேற்ற உங்கள் முழுமையான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் - என குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilwinகடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம் - தமிழ...எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கடையடைப்புக்குஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் ஆதர...சுமந்திரனின் ஹர்த்தாலுக்கு வலுக்கும் எதிர்ப்பும் பின்னணியும்.
1 month ago
திங்கள்கிழமை ட்ரம்ப் செலன்ஸ்கி சந்திப்பில் புதிய திருப்பமாக ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உக்கிரேன் இராணுவநிலை உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்ந்லையினை அடிப்படையாக கொண்டு ஒரு போர் நிறுத்தம் மட்டும் எட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முயலக்கூடும், அதன் மூலம் உக்கிரேன் படையினை வலுப்படுத்த தேவையான ஒரு கால அவகாசத்தினை பெறுவதனை நோக்கமாகக்கொண்டு பேச்சுவார்த்தையின் போக்கினை நிரந்தர தீர்வு நோக்கி நகர்வில்லாமல் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தினை ஏற்படுத்தல். இந்த விட்யத்திற்கு இரஸ்சியா உடன்படாது ஆனால் அமெரிக்க அரசிற்கு இரஸ்சியாவினை உடன்பட வைப்பதற்காக பொருளாதார அழுத்தம் ஏற்படுத்தலாம் எனும் விடயத்தினை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விற்க முனையலாம். ஆனால் ட்ரம்பின் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான அண்மைய ஒப்பந்தத்தில் தனது மேலாண்மையினை காட்டியுள்ளார், இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க எந்தளவிற்கு நலனை பெறும் என்பதனடிப்படையிலேயே பேச்சுவார்த்தையின் போக்கு அமைந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை பெருமளவில் அரிய மூலப்பொருளில் தங்கியுள்ள நிலையில், சீனாவுடனான வர்த்தக வரிப்போரில் பின்வாங்குவது போல இரஸ்சியாவிற்கு சாதகமான முடிவையே அமெரிக்கா எடுக்கும் என கருதுகிறேன். F-35 ஏறத்தாழ 900 பவுண்ட் அரிய கனிமங்களையும், வெர்ஜினியா தர நீர்மூழ்கிகள் ஏறத்தாழ 10000 பவுண்ட் அரிய கனிமங்களின் பங்களிப்பில் தங்கியுள்ள நிலையில் அமெரிக்கா இரஸ்சிய சார்பு நிலை எடுக்க வாய்ப்புக்கள் இருக்கலாம், ஆனால் இரஸ்சியாவிடம் சீனாவினை போல அரிய கனிமங்கள் இல்லை. போர் முடிவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உக்கிரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும், செலன்ஸ்கியிற்கும் தனிப்பட்ட உத்தரவாதத்தினை மேற்கு நாடுகள் வழங்கவேண்டும். இறுதியாக பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை பலிகொண்ட போர் முடிவிற்கு வரவுள்ளது.
1 month ago
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 19 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 19 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'இரண்டு வெளிநாட்டு குதிரை வியாபாரிகள் மற்றொரு நாட்டின் பெரிய அரசை கைப்பற்ற முடியுமா?' இராசவலியமானது மூத்தசிவனின் ஆட்சியை இரண்டாகப் பிரித்து விரிவு படுத்தி உள்ளது: கணதிஸ்ஸ (Ganatissa) 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் மற்றும் மூத்ததிஸ்ஸ (Mutatissa) 60 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும், ஆட்சி காலத்தை, முன்னையதை விட கூட்டி உள்ளது. மற்ற இரண்டு வரலாற்றுக்களிலும் உள்ள 'மூத்தசிவா' என்ற தமிழ், சைவம் ஒலிக்கும் பெயர் இராசவலியில் 'மூத்ததிஸ்ஸ'வாக மாறியுள்ளது. வரலாற்று நூல்களில் கொடுக்கப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட ஆட்சி கால [இறையாண்மைகளின்] பட்டியலைப் பயன்படுத்தி, இலங்கை "காலவரிசை வரலாறு அல்லது நாளாகமம்" களுக்கு இடையிலான உறுதிப்படுத்தல்கள் மற்றும் முரண்பாடுகளை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தேவநம்பியதிஸ்ஸவின் மறைவுக்குப் பிறகு உத்திய [Uttiya] பத்து வருடங்கள் ஆட்சி செய்தார். மகிந்த தேரர் அவரது ஆட்சிக் காலத்தில் தான் காலமானார். சிவன் (மகாவம்சத்தில் உள்ள மகாசிவன்) உத்தியாவுக்குப் பிறகு பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார், மேலும் மகாசிவனுக்குப் பிறகு சுரதிசா மேலும் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். இரண்டு தமிழர் இளவரசர்களான சேனா மற்றும் குட்டா [Sena and Gutta] ஆகியோர் பன்னிரண்டு ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்தனர் (மகாவம்சம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் நீதியாக ஆட்சி செய்தார்கள் என்கிறது). தீபவம்சம் 'தமிழ்' மக்கள் என்று பேசுவது இதுவே முதல் முறை என்றாலும் இளவரசர்களின் ஆட்சிகள் நீதியானவை தான் என்றும் ஒத்துக்கொள்கிறது. தேவநம்பியதிஸ்ஸவின் ஒன்பதாவது சகோதரனான அசேல சேனாவையும் குட்டாவையும் கொன்று பத்து வருடங்கள் ஆட்சி செய்தார். தீபவம்சம் சேனா மற்றும் குட்டா இருவரும் இளவரசர்கள் என்று கூறுகிறது, ஆனால் மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமா இருவரும் ஒரு குதிரை வியாபாரியின் மகன்கள் என்று கூறுகிறார். இப்படித்தான் தமிழர்களின் நன்மதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக களங்கப்படுத்துகிறார் மகாநாமா. அவர் வேண்டுமென்றே சேனாவையும் குட்டாவையும் அரச வம்சத்தில் பிறக்கவில்லை என்றும் அவர்களை வெளிநாட்டினராக சித்தரிக்கிறார். என்றாலும் இந்த இருவரும் சோழநாட்டிலோ அல்லது தமிழ் நாட்டிலோ இருந்து வந்ததாக, முதல் எழுதப்பட்ட தீபவம்சம் கூறவில்லை. மகாவம்சம் இவர்கள் "தமிழ் குதிரை வியாபாரிகள்" என்று மட்டுமே குறிப்பிடுவது நம்பக்கூடியதாக இல்லை. எனவே, சேனன் மற்றும் குத்திகன் [சேனா மற்றும் குட்டா] வெறும் குதிரை வியாபாரிகளாக இருக்கமுடியாது? என்று எண்ணுகிறேன். ஒருவேளை வியாபாரிகள் மாதிரியான ஒரு வேடத்தில் தந்திரமாக இலங்கை அரசுக்குள் ஊடுருவி இருக்கலாம்? இவர்கள் அனுராதபுரத்தை கைப்பற்றி 22 வருடங்கள் நேர்மையான ஆட்சி செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் போர்திறன், ஆயுதங்கள் மற்றும் ஒழுங்கமைந்த சேனை இருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை. அதாவது, இவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல; போர்வீரர் வியாபாரிகள் (merchant-warriors) அல்லது துணை இராணுவத் தலைவர்கள் ஆக இருக்கலாம்? உதாரணமாக, தமிழ்நாட்டில் பழங்காலம் முதல் வேளிர், கரையார், செட்டியார் [Velir, Karaiyar, and Chettiars] போன்ற சமூகங்கள், வாணிபம் மற்றும் போர் ஆகியவற்றை ஒருங்கிணைத்தும் செயல்பட்டிருக்கின்றனர் என்பது வரலாறாகும். மேலும் டயோக்ளீஷியன் (Diocletian – ரோமன் பேரரசு), நெப்போலியன் (Napoleon Bonaparte – பிரான்ஸ்), சந்திரகுப்த மௌரியர் (Chandragupta Maurya – இந்தியா) ஆகியோர் அரச பரம்பரையில் இல்லாமல், அரசை கைப்பற்றிய உண்மை வரலாற்று சம்பவங்கள் இருந்தாலும், இவர்கள் அனைவரும் இராணுவத்தில் பதவிவகுத்தவர்கள் அல்லது தனது சொந்த பழங்குடியினருக்கு வலுவான விசுவாச உணர்வு கொண்டவர்களாக இருந்தவர்களாகும். உதாரணமாக டயோக்ளீஷியன் மற்றும் நெப்போலியன் ஆகிய இருவரும் இராணுவத்தில் உயர்ந்து, அதன் பின் பேரரசை கைப்பறியவர்கள் ஆகும். சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரிலும் மற்றும் கல்வி, அரசியல், போர்த்தந்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் அவரிடம் இருந்து கற்று தேர்ந்த பின்பே, சந்திரகுப்த மௌரியர், நந்தர் அரசை வீழ்த்தி, மௌரிய பேரரசை நிறுவியவர் ஆகும். Part: 19 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Can two foreign horse traders conquer the Great Kingdom of another country?' The Rajavaliya amplified the reign of Mutasiva into two: Ganatissa (40 years) and Mutatissa (60 years). The Tamil sounding name Mutasiva in the other two chronicles has become Mutatissa in the Rajavaliya. One can compare and contrast the corroborations and conflicts between the Ceylon chronicles using the list of sovereigns as Appendix to this chapter. Uttiya ruled for ten years after the demise of Devanampiyatissa. Mahinda Thera died during his reign. Siva (Mahasiva in the Mahavamsa) ruled for ten years after Uttiya, and Suratissa ruled for another ten years after Mahasiva. Two Damila princes Sena and Gutta righteously ruled for twelve years (The Mahavamsa says ruled justly for twenty-two years). This is the first time the Dipavamsa speaks of ‘Damila’ people and the reigns of the princes are righteous. The younger, ninth brother of Devanampiyatissa, Asela, killed Sena and Gutta and ruled for ten years. The Dipavamsa says Sena and Gutta are princes, but Mahanama, the author of the Mahavamsa says both are sons of a horse trader. This is how Mahanama tarnishing the image of Tamils, little by little. He was deliberate to denigrate Sena and Gutta as of no royal birth and wanted to portray them as foreigners. The Dipavamsa does not say that both came from Chola or Tamil country. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 20 தொடரும் / Will Follow https://www.facebook.com/share/p/1BF4uw3Vf8/?mibextid=wwXIfr
1 month ago
முன்பு கூறியது போல பலஸ்தீன மேற்கு கரை போன்ற இராணுவ மற்றும் பொருளாதார அதிகாரம் மட்டும் இரஸ்சியா கொண்ட ஆனால் கிரிமியா உள்ளடங்கலாக இரஸ்சியா ஆக்கிரமித்த பகுதிகள் உக்கிரேன் நிலப்பரப்பு போன்ற தீர்வு திட்டம் போல ஒரு அமைதி தீர்வு எட்டப்படுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை என கருதுகிறேன். சில இடங்களை தற்போது ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்கு பதிலாக வழங்கப்படலாம் என கருதுகிறேன், சுமி உள்ளடங்கலாக வட போர் முனையில் கைப்ப்பற்றப்பட்ட பகுதிகள் அதற்காக பயன்படுத்தப்படாலாம் என கூறுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடர்ந்தும் அதிகளவில் உக்கிரேனிற்கு இராணுவ உதவி வழங்கவுள்ளதாக கூறியுள்ளன அத்துடன் இரஸ்சியாவின் மீது அதிக பொருளாதார தடையினை இடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, செலன்ஸ்கி அதிக பொருளாதார தடையினை வலியுறுத்தியுள்ளார். ட்ரம்ப் புட்டினுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம், சில ஐரோப்பிய நாடுகளுடனும் பின்னர் செலன்ஸ்கியுடனும் தொலைபேசியில் உரையாடியதாக கூறியுள்ளார், திங்கள் கிழமை செலன்ஸ்கியுடன் சந்திப்பு நிகழ்த்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். ட்ரம்ப் அதிகார படிநிலையினை சுட்டிக்காட்டுகிறார் என மேற்குறித்த தொலை தொடர்பு உரையாடல் பற்றி பேசப்படுகிறது, இதனிடையே செலன்ஸ்கியின் உடல் நிலை தொடர்பில் இணையத்தில் தேவையற்ற வதந்திகள் வெளிவந்த வண்ணமுள்ள நிலையில் திங்கள் கிழமை சந்திப்பு நிகழவுள்ளது. இங்கிலாந்து தனது படையினை உக்கிரேனுக்கு அனுப்புவதாக தொடர்ச்சியாக கூறப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறான எந்த நிகழ்வும் நிகழவில்லை, போர் நிறுத்தத்தினை உடைத்து தொடர் போரை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான உயிரிழப்பிற்கு காரணமான இங்கிலாந்து தனது படையினை அனுப்புவதாக தொடர்ந்து பேச்சளவிலேயே கூறிவருகிறது.