Aggregator

சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" [மூன்று பகுதிகள்]

3 weeks 5 days ago
சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 3 ஒரு முறை, அவன் அவள் முகத்தைப் பார்த்து சொன்னான்: “இன்றைக்கு எல்லாருக்கும் காதல் வேணும். ஆனா அதை நிரந்தரமாக்க யாருக்கும் பொறுமை இல்லை.” “சங்கக்காலத்துல காதலர்கள் ‘உறுதி’யை வாக்கியமாக எதிர்பார்க்கல. நடத்தையில்தான் பார்த்தாங்க.” அவன் நினைவில் ஒரு வரி எழுந்தது: “அறம் இனிது ஆயினும் காதல் இனிது.” அதாவது— அறம் உயர்ந்தது. ஆனால் மனம் இணையும் காதல் அதையும் தாண்டி இனிமை தரும். “அறம் காக்கணும்னு சொல்லி காதலை கொல்லல. காதல் காக்கணும்னு சொல்லி அறத்தை மறக்கல.” அவள் மெதுவாகச் சொன்னாள்: “நீ சொல்றதெல்லாம் அழகா இருக்கு. ஆனா இன்றைக்கு—” அவள் வாக்கியத்தை முடிக்கவில்லை. அந்த சொல்லப்படாத வார்த்தை யாழினியனின் நெஞ்சில் கேள்வியாக நின்றது. அவன் அவள் தோளருகே சற்றே நகர்ந்து அமர்ந்தான். “எனக்குத் தெரியல நாளை என்ன ஆகும்னு,” என்றான். “ஆனா இன்னைக்கு நீ இங்கே இருக்கிறதுல நான் உண்மை.” அவன் அவளை நீண்ட நேரம் பார்த்தான். அவள் எதோ சிந்தனையில் மூழ்கியிருந்தாள். 2025 ஆம் ஆண்டு இறுதி நாளில், மத்திய லண்டன் ஒரு மென்மையான மழையில் நனைந்து கொண்டிருந்தது. குளிர் கடுமையாக இல்லை; ஆனால் காற்றில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. புத்தாண்டு—2026—பிறக்க இன்னும் சில மணித்துளிகள் மட்டுமே. இரவு பன்னிரண்டு மணிக்கு, தேம்ஸ் நதிக்கரையிலும் லண்டன் ஐயின் [Thames River & London Eye] அருகிலும் வானவேடிக்கை வெடிக்கப் போகிறது என்று நகரமே அறிந்திருந்தது. வழக்கமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரளும் அந்த இடத்திற்கு அவர்கள் போகாமல், சனநெரிசல் இல்லாமல், சத்தமில்லாமல், நீரின் ஓசையோடு புத்தாண்டை வரவேற்க விரும்பி, வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள்— தேம்ஸ் நதியில் ஒரு படகுச் சவாரி. படகு மெதுவாக நகர்ந்தது. விளக்குகளின் பிரதிபலிப்பு நீரில் குலுங்கியது. மழைத் துளிகள் தேம்ஸுடன் கலந்தன; அவள் மூச்சு அவன் அருகில் கலந்தது. அவள் மெதுவாகக் கேட்டாள்: “நாம் இப்படியே இருக்கலாமா?” சிறிது இடைவெளியின் பின் மீண்டும் கேட்டாள்: “ஒருவரை ஒருவர் மாற்ற முயலாமல்…” அவன் பதில் சொல்லவில்லை. தலையசைத்தான். அந்த மௌனம் தான் அவன் சம்மதம். அவன் அவள் நெற்றியில் மென்மையாகத் தொட்டு நின்றான். அது உரிமை அல்ல. அது உறுதி. பன்னிரண்டு மணி அடித்தது. வானம் ஒளியால் பிளந்தது. லண்டன் ஐ [London Eye] சுற்றிக்கொண்டே இருந்தது— ஆனால் அவனுக்கு உலகமே நின்றுவிட்டது போல இருந்தது. 2026 தொடங்கியது. புத்தாண்டு விடியலில், அவள் அவன் தோளில் சாய்ந்தபடி சொன்னாள்: “அடுத்த காதலர் தினத்தில்…” சிறிது தயக்கம்.“எமது நட்பின் முதல் ஆண்டு நினைவில் … நம் நண்பர்கள் முன்னாடி … நமது காதலை அதிகாரப்பூர்வமாக்கலாமா?” அவனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. கண்கள் மட்டும் பதில் சொன்னது. அவன் தலையசைத்தான். எதற்காக இதுவரை காத்திருந்தானோ — அது தேனாக அவள் வாயிலிருந்து வந்தது. “நீ எனக்கு இப்பவும், எப்பவும் ஒருத்திதான்.” , அவளை அவன் முதல் முறையாக ஆரத்தழுவினான். அந்த அணைப்பு ஆசை அல்ல. அது அவன் மனம் நிரந்தரமாக விரும்பிய உணர்வு. அவள் சொன்னாள்: “நானும்.” ஆனால்… 14.02.2026க்கு ஒரு வாரம் முன்பு, அவள் வழக்கத்தைவிட அமைதியாக இருந்தாள். அவள் சிரிப்பு குறைந்தது. அவள் வரவு எப்போதாவது ஒருக்க என ஆகியது. பேசும் வார்த்தைகள் கூட குறுகின. “நீ மாறிட்ட மாதிரி இருக்கு,” என்றான் அவன். “இல்ல,” என்றாள். ஆனால் அவள் குரல் நடுங்கியது. அன்று அவள் அவன் கையை வழக்கத்தைவிட நீண்ட நேரம் பிடித்திருந்தாள். அந்தப் பிடிப்பு பாதுகாப்புக்கானது அல்ல விடை சொல்லும் பிடிப்பு என்று அப்போது அவனுக்குத் தெரியவில்லை. சங்கக் கவிதை எச்சரித்தது: “பிரியும்நாள் அணைதல் அதிகம்.” அவன் அந்த வரியை மனதிலிருந்து தள்ள முயன்றான். ஏனெனில் அவன் காதலை நம்பினான். வாக்குறுதிகளைவிட, நடத்தை மீது. 14.02.2026. காதலர் தினம். அவன் நேரத்துடன் வந்தான். தேர்ந்தெடுத்த உடை—அவள் ஒருநாள் “உனக்கு இது நல்லா இருக்கு” என்று சொன்ன அதே நிறம். முகத்தில் மகிழ்ச்சி. கண்களில் எதிர்பார்ப்பு. நேரம் ஓடியது. நிமிடங்கள் மணிநேரங்களாக மாறின. அவள் வரவில்லை. போன் பண்ணினான் — பதில் வரவில்லை என்றாலும் மனம்—இன்னும் நம்பிக்கையுடன் காத்திருந்தான் .“Girls are always late,” [“பெண்கள் எப்போதும் தாமதமாகத்தான் வருவார்கள்,”] என்று நண்பன் நகைச்சுவையாகச் சொன்னான். அவன் சிரிக்கவில்லை. காதல் நகைச்சுவை அல்ல. அப்போது அவள் வந்தாள். அவனின் முகம் மலர்ந்தது. அடுத்த நொடியில் — அந்த மலர் உதிர்ந்தது. அவள் அவன் கையைப் பிடிக்கவில்லை. வேறு ஒருவனின் கையைப் பிடித்தபடி வந்தாள். பணம் தெரிந்த உடை. அதிகாரம் பழகிய நடை. கண்களில் —திட்டமிட்ட வாழ்க்கையின் அமைதி. “யாழினியன்…” அவ்வளவுதான். “இவன்?” அவன் கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. அந்த மௌனத்தில் ஒரு சங்க வரி அவன் உள்ளத்தை கிழித்தது: “அறத்தொடு நிற்றல் காதல்.” “நான் உனக்கு என்ன குறை செய்தேன்?” அவன் கேட்டான். அவள் அவனை நேருக்கு நேர் பார்க்கவில்லை. கண்கள் தரையில் இருந்தன. உண்மை மேலே வர தயங்கும் போது கண்கள் எப்போதும் கீழே தான் பார்க்கும். அது அவனுக்கு நன்றாகப் புரியும் “இது… practical,[நடைமுறை] ” அவள் மெதுவாகச் சொன்னாள். அந்தச் சொல்லே— காதலின் மரணம். சங்கத் தலைவி இப்படி சொல்லியிருப்பாளா? இல்லை. அவள் சொல்லியிருப்பாள்: “உயிரினும் சிறந்தது காதல்.” அவள் தொடர்ந்தாள்: “Feelings are fine. But life needs stability.” [உன்னுடன் என் காதல் உணர்வுகள் பரவாயில்லை. ஆனால் வாழ்க்கைக்கு நிலைத்தன்மை தேவை.] அவன் சிரித்தான். அது மகிழ்ச்சி அல்ல. புரிதலின் கசப்பு. “Stability-யை [ஸ்திரம்] வாங்கலாம்,” “ஆனா காதலை வாங்க முடியாது.” என்றான். அவளுடன் வந்த அவளின் இன்றைய காதலன் சொன்னான்: “Love is good. But marriage needs sense.” [காதல் நல்லதுதான். ஆனால் திருமணத்திற்குப் புத்தி தேவை.] அதில் இன்றைய உலகத்தின் குரல் இருந்தது. அவன் காதலை அவமதிக்கவில்லை. ஆனால் காதலை வாழ்க்கையின் மையத்திலிருந்து மெல்ல நகர்த்தினான். எனினும் யாழினியின் அதற்குப் பதில் சொல்லவில்லை. அதற்கு அவனுக்கு அவசியமும் இல்லை. ஏனெனில் சில உண்மைகள் வாதத்தில் வாழ்வதில்லை. அந்த இரவு அவன் தனியாக நடந்தான். காதல் தோற்றதா? இல்லை. காதல் அவனை விட்டு போகவில்லை. அதைப் பயன்படுத்தியவர்கள் விலகினார்கள். அவ்வளவுதான்! அப்போது அவனுக்குப் புரிந்தது — சங்கக் காலத்தில் காதல் ஒரு வாழ்க்கை. இன்றைய காலத்தில் அது ஒரு நிகழ்ச்சி. அப்போது காதல் உயிரோடு இணைந்தது. இன்று வசதியோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. காதலர் தினம் ரோஜா வாங்கும் நாள் அல்ல. அது — நீ உன் நெஞ்சத்தோடு உண்மையாக நிற்கிறாயா என்று நீயே உன்னை கேட்கும் நாள். சிலர் கொண்டாடுவார்கள். சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் — கைவிடப்பட்டாலும் காதலை கைவிடமாட்டார்கள். அவர்கள்தான் சங்கக் காலமும் இன்றைய காலமும் ஒரே சொல்லில் சொல்லும் உண்மையான காதலர்கள். போகும் வழி எனக்கு நீண்டது போனவள் நினைவு நெஞ்சை நெருங்குது விலகிய கைதான் இன்று காலியானது விலகாத காதல் இதயத்தில் நின்றது! வாங்கிய வசதி அவளோடு சென்றது வாழும் உண்மை என்னோடு இருந்தது உலகம் பகட்டில் பணத்தில் வாழுது உயிர் மட்டும் அன்பால் துடிக்குது! இலாபநஷ்டம் எழுதப்பட்ட புத்தகங்கள் போல இவளில் மறந்திருந்த உண்மை தெரியுது மனித வாழ்வை உயிரோடு வைக்கும் மங்காத உறவின் சுடர் காதலாகட்டும்! மாற்றம்தேடி மாறும் காதல் உலகில் தோற்றம்தேடி அலையும் காதல் தினத்தில் கண்ணுக்குத் தெரியாத கருணை எங்கே பெண்மையில் வாழும் அமைதி எங்கே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 2035 [சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/33809788578669689/?

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

3 weeks 5 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 103 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 103 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் 'பருமக' "Parumaka" (පරුමක) என்ற எழுத்தைக் குறிக்கும் இந்தக் கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தாலும், பண்டைய இலங்கையில் பேசப்படும் ஒரு தனித்துவமான பிராகிருத பேச்சு வழக்கைக் குறிக்கின்றன என்று பரணவிதான கூறினார். [He stated that these inscriptions were written in Brahmi script but represented a distinct Prakrit dialect spoken in ancient Sri Lanka.] இந்த எழுத்துமுறை சிங்கள மொழிக்கு மட்டும் தனித்துவமானது அல்ல - அது அப்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட அதே பிராமி எழுத்துமுறையாகும். பின்னர், இந்த எழுத்துமுறை சிங்கள எழுத்துமுறையாக பரிணமித்தது, ஆனால் அது மிகவும் பின்னர் (கி.பி. 6-8 ஆம் நூற்றாண்டு வாக்கில்) நடந்தது. எனவே, இவை இலங்கையில் உள்ள ஆரம்பகால கல்வெட்டுகள் என்றாலும், மேலே கூறிய காரணங்களால், அவை இன்னும் சிங்கள எழுத்துக்களில் எழுதப்படவில்லை - பிராமியில் மட்டுமே என்பதே வரலாற்று உண்மை ஆகும்!. அதாவது அவையை சிங்கள கல்வெட்டுக்கள் என்று எந்த அடிப்படையிலும் கூற முடியாது? இன்னும் ஒன்றையும் நான் கட்டாயம் சொல்லவேண்டும். அதாவது தீபவம்சம் (கி.பி 4 ஆம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கி.பி 5 ஆம் நூற்றாண்டு) ஆகியவை அவற்றின் ஆரம்ப காலத்தில் "சிங்களம்" என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. "சிங்களம்" (தீவு அல்லது மக்களைக் குறிக்கும்) என்ற சொல் சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Chulavamsa கி.பி 13 ஆம் நூற்றாண்டு) மட்டுமே முதல் முதல் காணப்படுகிறது. கி.பி முதல் மில்லினியத்தில் சிங்கள இன அடையாளம் இன்னும் உருவாகிக் கொண்டு இருக்கிறது என்பதை இது குறிக்கிறது. [These all suggests that the Sinhala ethnic identity was still forming during the first millennium CE.] எனவே, ஒற்றை "சிங்கள" அடையாளத்திற்குப் பதிலாக, ஆரம்பகால இலங்கையில் பல்வேறு இந்தோ-ஆரிய மற்றும் திராவிடக் குழுக்கள் இணைந்து வாழ்ந்திருக்கலாம்? [Instead of a single "Sinhala" identity, there may have been various Indo-Aryan and Dravidian groups coexisting in early Sri Lanka.] இராசவலியவில் முதல் பதின்மூன்று பக்கங்கள் இலங்கையின் மனித வரலாற்றுக்கு நேரடி தொடர்பு இல்லாததால், அவையை நாம் புறக்கணிக்கலாம். இது பக்கம் 14 இல் இருந்து இலங்கையைப் பற்றியது ஆகும். சுத்தோதனா (Suddhodana) (சமசுகிருதம்: (Śuddhodana) கௌதம புத்தரின் தந்தையும், சாக்கிய குல கபிலவஸ்துவின் மன்னரான இவருக்கு அமிதோதனா [Amitodana] மற்றும் புஷ்போதனா [Pushpodana ] என்ற இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர் என இராசவலிய கூறும் அதே சமயத்தில், சுத்தோதனா மன்னருக்கு நான்கு இளைய சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் இருந்தனர் என மகாவம்சம் கூறுகிறது. 2-20 இன் படி, சகோதரர்களின் பெயர்கள்: தோதோதனா, சக்கோதனா, சுக்கோதனா, அமிதோதனா மற்றும் இரு சகோரிகள், அ மி தா, பமிதா ஆகும். [Dhotodana, Sakkodana, Sukkodana and Amitodana. sisters - Amita and Pamita.]. தீபவம்சம் கூட, , 3 - 44 முதல் 46 வரை, அதே பெயர்களைக் கொடுக்கின்றன. அத்துடன் இராசவலியத்தில் உள்ள புஷ்போதனா மகாவம்சம் மற்றும் தீபவம்சம் இரண்டிலும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் இராசவலியத்தில் தோதோதனா, சக்கோதனா மற்றும் சுக்கோதனா இல்லாதது மற்ற இரண்டு நாளாகமங்களுடன் முரண்படுகிறது. பிற்கால புத்தரான சித்தார்த்தரின் மாமாக்கள் பற்றிய இந்த முரண்பாடுகளைக் இது கொண்டு இருப்பதால், கதையின் முழு அல்லது பகுதியும் ஒரு புனையப்பட்ட கதையாக இருக்க வேண்டும்? இந்திய வரலாற்று ஆதாரங்கள் (அசோகரின் ஆணைகள், ஆரம்பகால பௌத்த சூத்திரங்கள் அல்லது ஜாதகக் கதைகள் போன்றவை / such as Ashokan edicts, early Buddhist sutras, or Jataka tales) சுத்தோதனரின் உடன்பிறப்புகள் பற்றியோ அல்லது அவர்களின் சந்ததியினர் ஒரு சிலர் இலங்கைக்கு குடிபெயர்ந்தது பற்றியோ அதாவது, புத்தரின் தம்பி, அமிதோதனாவின் [Amitodana] பேத்தி, கச்சனா [Kaccana] அல்லது பத்தகச்சனா [Bhaddakaccana] என்ற இளவரசி, இலங்கைக்கு வந்து அரசன் பண்டுவாசுதேவாவை திருமணம் செய்ததைப் பற்றியோ, அல்லது அமிதோதனாவின் பேரன்களும், சகோதரியைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்து குடியேறியது பற்றியோ குறிப்பிடவில்லை. மேலும், ஆரம்பகால பௌத்த நூல்கள் புத்தரின் உடனடி குடும்பத்தை (பெற்றோர், மனைவி, மகன் மற்றும் உறவினர் ஆனந்தா) மையமாகக் கொண்டு உள்ளத்துடன், அவரின் தந்தையின் சகோதரங்கள் பற்றியோ அல்லது அவர்களின் குடும்பங்கள் பற்றியோ ஒன்றுமே விவாதிக்கவில்லை. உதாரணமாக, இந்த விவரங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால், கட்டாயம் ஆரம்பகால இந்திய பௌத்த நூல்களில் இந்த விபரங்களை எதிர்பார்க்கலாம், ஏனென்றால் அவர்கள் பிறந்து வாழ்ந்தது இந்தியாவே, இலங்கை அல்ல. ஆனால் அவை ஒன்றுமே அங்கு இல்லை. எனவே, இலங்கை நூல்களில் மட்டுமே காணப்படும் விரிவான குடும்ப தொடர்புகள் ஆரம்பகால பௌத்த மரபின் ஒரு பகுதியாக இல்லாமல், பிற்கால சேர்த்தல்களாகத் தோன்றுகின்றன. Part: 103 / APPENDIX – "Summary of Rajavaliya" The first thirteen pages may be ignored as having no direct relevance to the human history of Lanka. It is about Lanka from the page 14 only. King Suddhodana had two younger brothers called Amitodana and Pushpodana (P14) whereas King Suddhodana had four younger brothers and two sisters as per the Mahavamsa, 2-20:- Dhotodana, Sakkodana, Sukkodana and Amitodana are the younger brothers. The Dipavamsa, 3 – 44 to 46, also give the same names. Pushpodana in the Rajavaliya is not mentioned in both the Mahavamsa and the Dipavamsa. Similarly the absence of Dhotodana, Sakkodana and Sukkodana in the Rajavaliya is also in conflict with other two chronicles. The whole or part of the story must be an invented story to have these discrepancies about the uncles of Siddhartha, the later Buddha. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 104 தொடரும் / Will follow துளி/DROP: 2034 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 103 https://www.facebook.com/groups/978753388866632/posts/33792470820401465/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 104 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 104 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் இலங்கையின் அரச பரம்பரையை மகிமைப்படுத்தவும், அதை பௌத்தத்துடன் இணைக்கவும் மகாவம்சம் (கி.பி. 5 ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே! அது மட்டும் அல்ல, அதுவே மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'இது புத்த மதத்தின் பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிக்காக' என்று கூறி முடிப்பது [“ that this chapter is compiled for the serene joy and emotion of the pious”], அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமிதோதனாவின் மருமகன் தான் புத்தர். எனவே, நாளாகமங்களை எழுதிய துறவிகள், புத்தரின் சக்கிய குலத்துடன் இலங்கைக்கு உயிரியல் தொடர்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனால் இலங்கைக்கு அமிதோதனாவின் பேரக்குழந்தைகள் வந்து இலங்கை அரச வசம்சாவளியுடன் கலந்தனர் என்று எழுதியிருக்க வேண்டும். இதன் மூலம், மகாவம்சம் இலங்கை மன்னர்களை புத்தரின் இரத்த உறவினர்களாக சட்டப்பூர்வமாக்கியது. எனவே, புத்தரின் சொந்த உறவினர்கள் அங்கு வாழ்ந்ததாகக் கூறப்படுவதால், இலங்கை புத்த மதத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் என்ற கூற்றையும் இது வலுப்படுத்தியது. எனவே, புத்தரின் குடும்பத்தைப் பற்றிய மகாவம்சத்தின் பதிப்பு அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது, புத்த மதத்தின் சரியான பாதுகாவலர் என்ற இலங்கையின் அந்தஸ்தை உயர்த்துவதற்காக, கற்பனையாக எழுதப்பட்டது என்பது வெள்ளிடைமலை ஆகிறது! . என்றாலும் இதனால், புத்தரின் நேரடி குடும்பம் இலங்கையில் வலுவான இருப்பைக் கொண்டிருந்தது என்ற கருத்து வலுப்படுத்தப்படுகிறது. அது மட்டும் அல்ல, பின்னர், மற்றொரு, புத்தரின் தந்தையின் இளைய சகோதரரின் பேரன், திகவுவின் [Dīghāvu] மகன் காமனி [தீககாமினி], இலங்கை இளவரசி சித்ராவை [அல்லது உன்மாதசித்திராவை] மணந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் புத்தருக்கும் இலங்கையின் அரச குடும்பத்திற்கும் இடையிலான வம்ச தொடர்பை மேலும் வலுப்படுத்தியது. இன்னும் ஒன்றையும் மறக்கவேண்டாம், புத்தரின் மூன்று முறை இலங்கை விஜயம்? கற்பனைகளுக்கு எல்லை உண்டோ ? என்ற கேள்விக்கு இவை சரியான பதில்கள் ஆகின்றன! எனவே, இந்த முழு கதைக்களமும் புத்தருக்கும் இலங்கை மன்னர்களுக்கும் இடையே ஒரு இரத்த வம்ச தொடர்பை நிறுவுவதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இலங்கை முடியாட்சியின் சட்டபூர்வமான தன்மையையும், புத்த மதத்தின் பாதுகாவலர் என்ற அதன் உரிமையையும் மேம்படுத்துவதே குறிக்கோளாக இங்கு இருக்கிறது எனலாம்? வங்க நாட்டு அரசனுக்கும், அவனது மனைவியான கலிங்க நாட்டு அரசிக்கும் பிறந்த பெண், லாலா நாட்டில் சிங்கத்தோடு உடலுறவு கொண்டு சீகபாகு என்ற ஆணையும் சீகவலி என்ற பெண்ணையும் இரட்டைக்குழந்தைகளாகப் பெற்றெடுத்தாள். சீகபாகு வளர்ந்தபின் தனது தந்தையான சிங்கத்தைக் கொன்று, அதன் தலையை வங்க நாட்டு அரசனுக்கு கொடுத்தான். அதன் பின், வட இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு புதிய இராச்சியத்தை உருவாக்கி, அந்த லாலா நாட்டுக்கு [Lala Desa / Lata region, Gujarat / Maharashtra area of India] அரசனாகி, தனது உடன்பிறந்த சீகவலியை மணந்து பதினாறு இரட்டையர்களைப் [32 மகன்களைப்] பெற்றெடுத்தான். விஜயன் எல்லாவற்றிலும் மூத்தவன். அவர் ஒரு வியாழக்கிழமை பிறந்தார். [ஏழு நாள் வாரம் பண்டைய கலாச்சாரங்களில் வேர்களைக் கொண்டுள்ளது, பாபிலோனிய வானியல் மற்றும் சந்திர சுழற்சிகளைக் கவனிப்பதன் மூலம் இதற்கு சாத்தியமான தொடர்பு இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன] ஆனால் இந்த வியாழக்கிழமை என்ற தகவல் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் இல்லை. அங்கே அதே நாட்டில், அதே நாளில் எழுநூறு ஆண்கள் பிறந்தனர் [Be it known that, on the day of Vijaya’s birth, 700 males were born in the same city]. விஜயனின் மோசமான நடத்தை காரணமாக, அவனின் தந்தையுமான மன்னர், இளவரசர் மீது கோபமடைந்தார்; மேலும், மூன்று உலகங்களுக்கும் ஆசிரியரான, நமது புத்தர் இறந்த ஏழாவது நாளில், இளவரசர் விஜயனும், அவனது பிறந்தநாளில் பிறந்த, விஜயனின் உதவியாளர்களான, எழுநூறு போர்வீரர்களும், ஒரு கப்பலில் ஏற்றப்பட்டு, கடலில் அலைய விட்டனர். அவர்கள் தம்மன்னா-தோட்டாவில் [Tammanna-tota or Tammannava, Tambapanni-tota, தம்மன்னா-தோட்டா என்பது "தம்மன்னா / தம்பபன்னி துறைமுகம்" என்று பொருள்படும், இது விஜயன் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த கடலோரப் பகுதியைக் குறிக்கிறது] தரையிறங்கினர். இந்த இடம் இலங்கையின் வடமேற்குப் பகுதியில், இன்றைய மன்னார் அல்லது புத்தளத்தைச் சுற்றி இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், விஜயனும் அவனது தோழர்களும் புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த அதே நாளில், அதாவது புத்தர் மரணித்த அதே நாளில், இலங்கையில் தரையிறங்கியதாக தீபவம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன. என்றாலும் புத்தர் இறந்த பல நாட்களுக்குப் பிறகு இராசவலியவின் படி அவர்கள் இலங்கையில் தரையிறங்கியிருக்க வேண்டும். எனவே இது மற்ற இரண்டு நாளாகமங்களுடனும் முரண்படுகிறது. விஜயன் மோசமான நடத்தைகளைக் கொண்டு இருந்தாலும், அவன், மறுபிறப்பு இல்லாத ஒரு மரணம் அடைந்து, நேராக சொர்க்கம் சென்றான்? நம்பினால் நம்புங்கள்? சொர்க்கம் எங்கே நானும் தேடுகிறேன்? மகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகிய இரண்டு வரலாற்று நூல்களுக்கு மாறாக, இராசவலியவில் விஜயன் மற்றும் அவரது தோழர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இராசவலியவின் படி விஜயனும் அவரது தோழர்களும் தம்மண்ண-தோட்டாவிற்கு நேரடியாக வந்தனர். இருப்பினும், தீபவம்சத்தின்படி, அவர்கள் முதலில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள இன்றைய சூரத் என்று நம்பப்படும் சுபாராவை [Suppara, believed to be the present day Surat in Gujarat, India] அடைந்து, அங்கேயும் தவறாக நடந்து கொண்டு, தப்பி ஓடி, பின்னர் அவர்கள் மகாராஷ்டிராவில் உள்ள இன்றைய பருச் என்று நம்பப்படும் பாருகாச்சாவை [Bharukaccha, believed to be the present day Bharuch in Maharashtra] அடைந்து, தங்கள் தீய நடத்தையை மீண்டும் செய்தனர். இருப்பினும், மகாவம்சத்தின்படி, அவர்கள் பருகாச்சாவில் தரையிறங்காமல் சுப்பராகாவிலிருந்து தம்பபன்னியை அடைந்தனர். பாருகாச்சா மற்றும் சுபாரா இரண்டும் இந்தியாவின் மேற்கு கடல் கரையில் உள்ள பண்டைய வர்த்தக கடல் துறைமுகங்கள் என்பதை இங்கே கவனிக்கலாம். இராசவலிய இராவணனின் போரைப் பற்றி குறிப்பிடுகிறது, ஆனால் மற்ற இரண்டு வரலாற்று நூல்களும் இராமன் - இராவணன் போரைப் [Rama-Ravana war] பற்றி குறிப்பிடவில்லை. தீபவம்சத்தில் கிரிதீபா [Giridipa] இராசவலியத்தில் யக்-கிரி [Yak-giri] என்று விவரிக்கப்பட்டுள்ளது. இராசவலியத்தின்படி புத்தர் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்தார். முதல் வருகை அவர் நிர்வாணம் [Nirvana] அடைந்த ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பிறகு. இரண்டாவது வருகை அவர் நிர்வாணம் அடைந்த ஆறாவது ஆண்டில். ஆனால், நிர்வாணம் அடைந்த ஐந்தாவது ஆண்டில் இது நடந்ததாக மகாவம்சம் கூறுகிறது. மூன்றாவது வருகை நிர்வாணம் அடைந்த ஒன்பதாம் ஆண்டு நிறைவில் நடந்துள்ளது. ஆனால், தீபவம்சம், 2 - 52, இந்த வருகை எட்டாம் ஆண்டில் நடந்ததாக கூறுகிறது. ஆகவே இங்கும் நாளாகமம்களுக்கு [chronicles] இடையில் வேறுபாடு காண்கிறோம்? Part: 104 / APPENDIX – "Summary of Rajavaliya" The king of Wangu married the daughter of Kalingu king, and a daughter was born to them. The daughter when grown up united with a lion and gave birth to a twin, a son, Sinhaba, and a daughter, Sinhawalli. Sinhaba killed the father lion and presented the head of the killed lion to the king of Wangu country. Sinhaba created a new kingdom and married his sister, and she gave birth to sixteen twins. Vijaya was the eldest of all. He was born on a Thursday, and this information is not in the other two chronicles. There were born seven hundred males at the same time in the same country. Vijaya and his seven hundred warriors were forced to drift, on the seventh day after the death of the Buddha, in the sea because of their bad behavior, and they landed in Tammanna-tota. The Dipavamsa and the Mahavamsa say Vijaya and his companions landed in Lanka on the very same day the Buddha attained Mahaparinirvana, the death of the Buddha. They must have therefore landed in Lanka as per the Rajavaliya many days after the death of the Buddha. This is in conflict with the other two chronicles. Vijaya died with no possibility of rebirth; went to heaven. There is no mention of the wives and the children of Vijaya and his companions in the Rajavaliya, contrary to the other two chronicles, the Mahavamsa and the Dipavamsa. Vijaya and the companions came direct to Tammanna-tota as per the Rajavaliya. However, as per the Dipavamsa, they first reached Suppara, believed to be the present day Surat in Gujarat, India, misbehaved there too, and made to flee. Then they reached Bharukaccha, believed to be the present day Bharuch in Maharashtra, and repeated their evil behavior. However, as per Mahavamsa, they reached Tambapanni from Supparaka without landing at Bharukaccha. It may be noted here that both Bharukaccha and Supparaka are ancient trading seaports on the western seaboard of India. The Rajavaliya mentions of the war of Ravenna, but the other two chronicles do not mention about Rama-Ravenna war. Giridipa in the Dipavamsa is described in the Rajavaliya as Yak-giri. The Buddha visited Lanka, as per the Rajavaliya too, three times. First visit is on the completion of the nine months of his attaining Nirvana. The second visit is in the sixth year after he attained Nirvana. The Mahavamsa says it took place on the fifth year of Buddhahood. The third visit is on the completion of the ninth year after attaining Nirvana. The Dipavamsa, 2 – 52, says this visit took place in the eight year. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 105 தொடரும் / Will follow துளி/DROP: 2036 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 104 https://www.facebook.com/groups/978753388866632/posts/33810221221959758/?

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!

3 weeks 5 days ago
பார் சிறியோடு கிளிநொச்சியில் இருந்து ஒரு உள்ளாட்சி அரசியல்வாதி கூட போகவில்லையா? அல்லது கூட்டி போலவில்லையா? சுமந்திரன் பச்சை கள்ளன். பார் சிறி நழுவல் கள்ளன். முள்ளை முள்ளால் எடுத்தால் உங்கள் கைதான் கிழியும்😂.

குட்டிக் கதைகள்.

3 weeks 5 days ago
Leela Ramesh ·orneSstdpo4f0:vfguu 4t3u1é3hfaec029hrg187u63mi2ar2fi 0h1i,a8 · 🦟ஆண் கொசு : டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன்.. #பெண் கொசு : ஓகே ஓகே போய் தூங்கு.. ஆண் கொசு : கண்ணே.. உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன்.. பெண் கொசு : சரி.. சரி.. மொதல்ல தூங்கப்போ டார்லிங்... ஆண் கொசு : உன்ன நான் மெர்சிடஸ் கார்ல உட்கார வச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன்.. பெண் கொசு : என் மேல உனக்கு எவ்வளவு லவ்னு புரியுது டியர்.. காலையில பேசலாம் போய் தூங்கு.. ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா..? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின் போடுவேன் பாரு.. பெண் கொசு : நான் நம்புறேன் டியர்.. நீ இப்போ தூங்கப்போ.. ஆண் கொசு : உலகமே திரும்பி பாக்கற மாதிரி உனக்கு வைரத்துல நகை போடுவேன் பாரு.. ஆண் கொசுவை ஓங்கி அறைந்தது பெண் கொசு..🙄 "குடிகாரனை கடிச்சுட்டு இங்க வந்து ஒளறாதேன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்".......!

சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..?

3 weeks 5 days ago
செல்வா காலத்திலேயே… வடக்கில் தமிழ் “அரசு” கட்சி எனவும்… தெற்கில் பெடரல் “கூட்டாட்சி” பார்ட்டி எனவும்… பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டு கள்ளர் என சீனியர் பொன்னர் ஏசுவாராம்.

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

3 weeks 5 days ago
மேலே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளேன். எழுதுவதுதான் அப்பிடி, இப்படி எண்டுபார்த்தால், வாசிப்பும் அப்படித்தானா? பலபெயர் எண்டால் many names. Many others எண்டால் அதை பலர் என எழுதுங்கள். அல்லது வேறு பலரும் என எழுதுங்கள். படிக்கிற நேரத்தில் தமிழை ஒழுங்கா படிக்காமல் இங்க வந்து கழுத்தையறுக்காமல் 😂. அட கடவுளே. இப்படியும் நடந்ததா😂

அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

3 weeks 5 days ago
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2026 அன்று யாழ் இணையம் 27 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 28 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். குறிப்பு: ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 28 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 28 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் இணையம் 28 அகவைக்கு எனத் தனித்துவமாக/பிரத்தியேகமாக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். எனினும் பலரது படைப்புத் திறன்களை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்பதால் பத்துக்கு மேலாகவோ, தினம் ஒன்றாகவோ பதியாமல் தவிர்ப்பது விரும்பப்படுகின்றது. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். வேறு தளங்களில், சமூகவலைத் தளங்கள் உள்ளடங்கலாக, பிரசுரிக்க விரும்பினால் குறைந்தது இரு நாட்கள் தாமதித்துப் பிரசுரிக்கலாம். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்

சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..?

3 weeks 5 days ago
சிங்கள குடியேற்றத்தை செய்யப் போகிறார்கள் என ஆர்ப்பாட்டம் செய்த தமிழரசுக் கட்சி இதற்காக ஒதுக்கிய பல மில்லியன் ரூபா பாதீட்டின் போது அதை எதிர்க்காமல் நடுநிலமை வகித்தார்கள். தெற்கில் ஆதரவு. வடக்கில் தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கை.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 5 days ago
அவர்கள் கள்ளமாடு பிடிக்கும் கும்பல்தான்.இரவு 1.30 மணிக்கு அவர்களுக்கு அங்கே என்ன வேலை?ஆனால் பொலிஸ் அவர்களைத் துரத்திப் பிடித்திருக்க வேண்டும்.வாகனத்தில் இருந்து எதிர்த்தாக்குதல் வந்திருந்தால் அவர்கள் சுட்டது நியாயமாகி இருக்கலாம்.ஆனால் அவர்களைத்துரத்திப்புடிக்காமல் நெற்றிப் பொட்டில் சுட்டிருக்கிறார்கள்.இது சட்டப்படி குற்றம்.மாட்டைப் பறிகொடுத்த மாட்டு உரிமையாளர்கள் இது சரி என்றே சொல்கிறார்கள்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 5 days ago
இப்ப‌ விளையாடும் இர‌ண்டு அணிக‌ளும் சூப்ப‌ர் 8க்கு போவ‌தை உறுதி செய்து விட்டின‌ம்.................நியுசிலாந்தும் ப‌ல‌மான‌ அணி தென் ஆபிரிக்காவும் ப‌ல‌மான‌ அணி.................

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!

3 weeks 5 days ago
சிறிதரனுடன் கூடப் போனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இப்படிக்கு உண்மையுள்ள பதில் தலைவர்,பதில் செயலாளர்.

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

3 weeks 5 days ago
புளொட்டுக்கும், புலிக்கும் ஒரே ஆளே காசு சேர்த்ததும் ஒரு காலத்தில் இருந்தது கோசான். பகடிக்கு சொல்லவில்லை உண்மையில் நடந்தது.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 5 days ago
ஏன் விலகவில்லை? வடக்கு கிழக்கில் பல இடங்களில் இருந்த முகாம்கள் ஆமி தானாக விலக்கி கொண்டுள்ளது அவர்கள் தேவைக்கு ஏற்ப. பல வருடமாக நடப்பது இது. தெற்கில் பாவாடை நாடா காணாமல் போனாலும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என இனவாதிகள் கதறுவதும் வழமையானதே. அனுர இதுவரை இராணுவ பிரசன்னத்தை தலையீட்டை குறைக்கவே இல்லை. மாகாண சபை தேர்தலை நடத்தாமல் தனது கைப்பொமை ஆளுனர் மூலம் ஆட்சி செய்கிறார். ஜேவிபி எம்பிகள் இருந்த இடமும் தெரியாமல் இருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.