Aggregator

பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!

4 weeks 1 day ago

Screenshot-2025-10-12-130002.jpg?resize=

பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது.

இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படுகிறது.

நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

https://athavannews.com/2025/1450145

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

4 weeks 1 day ago
ஒக்டோபர் மாதத்தில் 9 நாட்களில் 46,000 ஐ கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை! இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 46ஆயிரத்து 868 ஐ கடந்துள்ளது. ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மொத்தம் 14 ஆயிரத்து 221 இந்தியர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன் இது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 30.3% ஆகும். மேலும் இங்கிலாந்திலிருந்து 3 ஆயிரத்து 171 பேரும் ஜெர்மனியிலிருந்து 2ஆயிரத்து 652 பேரும் சீனாவிலிருந்து 4ஆயிரத்து 416 பேர் மற்றும் பங்களாதேஷிலிருந்து 2ஆயிரத்து 158 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். https://athavannews.com/2025/1450143

சூடான்: துணை இராணுவ தாக்குதலில் 57 போ் உயிரிழப்பு!

4 weeks 1 day ago
சூடான்: துணை இராணுவ தாக்குதலில் 57 போ் உயிரிழப்பு! வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 17 குழந்தைகள் உட்பட 57 போ் உயிரிழந்துள்ளனர். இதனை அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆா்.எஸ்.எஃப் படையால் முற்றுகையிடப்பட்டுள்ள வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உயிரிழந்தவா்களில் 17 சிறுவா்கள், 22 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தாக்குதலில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 21 பேர் காயமடைந்ததாக சூடான் உள்நாட்டுப் போரைக் கண்காணிக்கும் மருத்துவ நிபுணர்களின் குழுவான சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு தெரிவித்துள்ளது. சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் திகதி முதல் போர் நடந்து வருகிறது. இதில் இலட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகவும் சுமாா் 1.4 கோடி போ் இருப்பிடங்களை விட்டு புலம் பெயா்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450137

சூடான்: துணை இராணுவ தாக்குதலில் 57 போ் உயிரிழப்பு!

4 weeks 1 day ago

AFP__20250316__372G4Q4__v1__HighRes__Sud

சூடான்: துணை இராணுவ தாக்குதலில் 57 போ் உயிரிழப்பு!

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 17 குழந்தைகள் உட்பட 57 போ் உயிரிழந்துள்ளனர்.

இதனை அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆா்.எஸ்.எஃப் படையால் முற்றுகையிடப்பட்டுள்ள வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உயிரிழந்தவா்களில் 17 சிறுவா்கள், 22 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தாக்குதலில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 21 பேர் காயமடைந்ததாக சூடான் உள்நாட்டுப் போரைக் கண்காணிக்கும் மருத்துவ நிபுணர்களின் குழுவான சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு தெரிவித்துள்ளது.

சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் திகதி முதல் போர் நடந்து வருகிறது.

இதில் இலட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகவும் சுமாா் 1.4 கோடி போ் இருப்பிடங்களை விட்டு புலம் பெயா்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1450137

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 1 day ago
வாத்தியார் உங்களின் காதால புகை போறது தெரிகிறது .....எதற்கும் அந்த (8) நம்பர் ஆளையும் ஒருக்கால் பாருங்கோ ....அவர் இன்றுவரை ஒரு மகளிர் ஆட்டத்தைக் கூட பார்த்ததில்லை . ...... யாருடைய பெயரும் தெரியாது .......! 😂

முட்டை விலை குறைக்கும் தீர்மானம் - அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

4 weeks 1 day ago
Published By: Vishnu 12 Oct, 2025 | 12:24 AM அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாட்டில் முட்டை விலை குறைப்பதற்கான முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. சங்கத் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார் போல, உற்பத்தி செலவுகள் குறைந்ததையும் சந்தை நிலைமை சீராகி வருவதையும் கருத்தில் கொண்டு, முட்டையின் விலை ரூ.10 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி வெள்ளை முட்டை ஒன்றின் விலை ரூ.18 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்படும். மேலும், அரசு வரி கொள்கைகள் மற்றும் தீவன விலை சீரமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால், எதிர்காலத்தில் விலையை மேலும் குறைக்கும் வாய்ப்பும் உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதற்கமைய விற்பனை நடைபெறும் எனவும் அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/227500

முட்டை விலை குறைக்கும் தீர்மானம் - அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

4 weeks 1 day ago

Published By: Vishnu

12 Oct, 2025 | 12:24 AM

image

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாட்டில் முட்டை விலை குறைப்பதற்கான முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

சங்கத் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார் போல, உற்பத்தி செலவுகள் குறைந்ததையும் சந்தை நிலைமை சீராகி வருவதையும் கருத்தில் கொண்டு, முட்டையின் விலை ரூ.10 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இனி வெள்ளை முட்டை ஒன்றின் விலை ரூ.18 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

மேலும், அரசு வரி கொள்கைகள் மற்றும் தீவன விலை சீரமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால், எதிர்காலத்தில் விலையை மேலும் குறைக்கும் வாய்ப்பும் உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதற்கமைய விற்பனை நடைபெறும் எனவும் அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/227500

கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!

4 weeks 1 day ago
கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை! அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் நேற்றையதினம் (11) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கடந்த 9 ஆம் திகதி 30 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களை விடுவிக்கக்கோரி நேற்றையதினம் இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் இடம்பெற்றது. இதேவேளை, போராட்டத்தின் போது கருத்து வௌியிட்ட தமிழக விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா கருத்து தெரிவித்திருந்தார். நடுக்கடலில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகமாக நடைபெற்று வருகிறது எனவும் இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீன்பிடிக்க நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து மீனவ குடும்பத்தினர், படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் நடத்த உள்ளோம் எனவும் விரைவில் அதற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் பிரதமர் நினைத்தால் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1450122

கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!

4 weeks 1 day ago

MediaFile-5.jpeg?resize=750%2C375&ssl=1

கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் நேற்றையதினம்  (11) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கடந்த 9 ஆம் திகதி 30 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களை விடுவிக்கக்கோரி நேற்றையதினம் இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

இதேவேளை, போராட்டத்தின் போது கருத்து வௌியிட்ட தமிழக விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா கருத்து தெரிவித்திருந்தார்.

நடுக்கடலில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகமாக நடைபெற்று வருகிறது எனவும் இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீன்பிடிக்க நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து மீனவ குடும்பத்தினர், படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் நடத்த உள்ளோம் எனவும் விரைவில் அதற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் பிரதமர் நினைத்தால் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1450122

நாளொன்றிற்கு சுமார் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்!

4 weeks 1 day ago
நாளொன்றிற்கு சுமார் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்! நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால் 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. மார்பகங்களில் கட்டிகள், மார்பகத்தின் தோல் மங்கலாகுதல், மார்பக வீக்கம், அசாதாரண வெளியேற்றம் அல்லது முலைக்காம்பிலிருந்து இரத்தப்போக்கு, முலைக்காம்பில் பள்ளம் (சமீபத்தில்), மார்பகங்களில் வலி அல்லது தோலில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் அல்லது ஆபத்து காரணிகளை அனுபவித்தால் பெண்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2025/1450102

நாளொன்றிற்கு சுமார் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்!

4 weeks 1 day ago

Breast_cancer_pink_ribbon_03881df229-sca

நாளொன்றிற்கு சுமார் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால் 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.

மார்பகங்களில் கட்டிகள், மார்பகத்தின் தோல் மங்கலாகுதல், மார்பக வீக்கம், அசாதாரண வெளியேற்றம் அல்லது முலைக்காம்பிலிருந்து இரத்தப்போக்கு, முலைக்காம்பில் பள்ளம் (சமீபத்தில்), மார்பகங்களில் வலி அல்லது தோலில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் அல்லது ஆபத்து காரணிகளை அனுபவித்தால் பெண்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2025/1450102

சீனாவில் நடைபெறும் பெண்கள் உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர்

4 weeks 1 day ago
Published By: Vishnu 12 Oct, 2025 | 02:00 AM சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு புறப்படவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பீஜிங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டம், "ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் – பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை சீன அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு (UN Women) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றுவதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் உள்ளிட்ட உயர்மட்ட சீன தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார். பிரதமர் சனிக்கிழமை (11) இரவு சீனாவுக்கு புறப்படவுள்ளதாகவும், இவ்விழா இலங்கை மற்றும் சீனாவுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தளமாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/227503

சீனாவில் நடைபெறும் பெண்கள் உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர்

4 weeks 1 day ago

Published By: Vishnu

12 Oct, 2025 | 02:00 AM

image

சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு புறப்படவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பீஜிங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டம், "ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் – பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை சீன அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு (UN Women) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றுவதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் உள்ளிட்ட உயர்மட்ட சீன தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார்.

பிரதமர் சனிக்கிழமை (11) இரவு சீனாவுக்கு புறப்படவுள்ளதாகவும், இவ்விழா இலங்கை மற்றும் சீனாவுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தளமாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/227503

பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்!

4 weeks 1 day ago
பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்! ஹமாஸ், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் “வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் பாராட்டியுள்ளார். இதேவேளை, காசாவில், இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 5 இலட்சம் பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு நாளைய தினம்(13) ஒரு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதாக எகிப்து உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450125

பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்!

4 weeks 1 day ago

6f2322e3-080d-445f-ae0d-e314772d7d2e.jpg

பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்!

ஹமாஸ், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் “வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் பாராட்டியுள்ளார்.

இதேவேளை, காசாவில், இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 5 இலட்சம் பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு நாளைய தினம்(13) ஒரு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதாக எகிப்து உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1450125

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

4 weeks 1 day ago
Published By: Vishnu 12 Oct, 2025 | 12:32 AM ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திட்ட பகுதியில் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதமடைந்து வருவதாகவும், வீதியால் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்கள் பயணிப்பதாகவும், வேப்பங்குளம் புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லையென தெரிவித்தும் அப்பகுதி மக்கள் சனிக்கிழமை (11.10.2025) கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடாத்தினர். அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன் அப்பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உள்ளக மைதான கட்டடத்தொகுதி என்பன உள்ளதால் பெருமளவான மாணவர்கள் வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது. இதனையடுத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அவர்களும் விஜயம் செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினர். இதன்போது தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கையளித்தனர். இதன்போது குறித்த விடயம் தொடர்பில், குறிப்பாக பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை தொடர்பில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் உரிய துறைசார் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும், ஏனைய விடயங்களை அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்த்துவைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். இதனையடுத்து மக்களால் குறிப்பிடப்பட்ட கனரக வாகனங்கள் கல் ஏற்றிச்செல்லும் வேப்பங்குளம் பகுதியிலுள்ள கல்குவாரிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் குவாரியினை ஆய்வுசெய்ததுடன் அதன் உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். இதன்பிற்பாடு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர், குவாரி உரிமையாளர், பொதுமக்கள் ஆகியோரை இணைத்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். தொடர்ந்து குறித்த பாதையை சீரமைத்துதர கல்குவாரி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததுடன் மேலதிக பங்களிப்பினை வழங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளரும் உறுதியளித்தார் அத்துடன் புகையிரத திணைக்கள அனுமதியுடன் பொதுமக்களின் பங்களிப்புடன் புகையிரத கடவையை பாதுகாப்பான பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் இணக்கம் காணப்பட்டது. இதனையடுத்து சேதமடைந்துவரும் வீதியினை அனைவரும் இணைந்து பார்வையிட்டதுடன், மாற்றுப்பாதைகளுக்கான சாத்தியம் பற்றியும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227501

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

4 weeks 1 day ago

Published By: Vishnu

12 Oct, 2025 | 12:32 AM

image

ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திட்ட பகுதியில் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதமடைந்து வருவதாகவும், வீதியால் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்கள் பயணிப்பதாகவும், வேப்பங்குளம் புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லையென தெரிவித்தும் அப்பகுதி மக்கள் சனிக்கிழமை (11.10.2025) கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடாத்தினர்.

அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன் அப்பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உள்ளக மைதான கட்டடத்தொகுதி என்பன உள்ளதால் பெருமளவான மாணவர்கள் வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது.

இதனையடுத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அவர்களும் விஜயம் செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினர். இதன்போது தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கையளித்தனர்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில், குறிப்பாக பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை தொடர்பில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் உரிய துறைசார் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும், ஏனைய விடயங்களை அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்த்துவைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து மக்களால் குறிப்பிடப்பட்ட கனரக வாகனங்கள் கல் ஏற்றிச்செல்லும் வேப்பங்குளம் பகுதியிலுள்ள கல்குவாரிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் குவாரியினை ஆய்வுசெய்ததுடன் அதன் உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.

இதன்பிற்பாடு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர், குவாரி உரிமையாளர், பொதுமக்கள் ஆகியோரை இணைத்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

தொடர்ந்து குறித்த பாதையை சீரமைத்துதர கல்குவாரி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததுடன் மேலதிக பங்களிப்பினை வழங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளரும் உறுதியளித்தார் அத்துடன் புகையிரத திணைக்கள அனுமதியுடன் பொதுமக்களின் பங்களிப்புடன் புகையிரத கடவையை பாதுகாப்பான பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.

இதனையடுத்து சேதமடைந்துவரும் வீதியினை அனைவரும் இணைந்து பார்வையிட்டதுடன், மாற்றுப்பாதைகளுக்கான சாத்தியம் பற்றியும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227501

மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு! மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு!

4 weeks 1 day ago
மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு! வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மெக்சிகோவிலுள்ள 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோ நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. கனமழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக மெக்சிகோவில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதுடன் 5,400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மீட்பு பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதுடன் ரேமண்ட் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவ தாம் பணியாற்றுவதாகவும் துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரச் சேவைகள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பவும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1450115

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 1 day ago
நீங்க‌ள் சொல்லுவ‌தின் ப‌டி கூட‌ இருக்க‌லாம் இல‌ங்கை ம‌க‌ளிர் ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌து வெத‌றின் அடிப்ப‌டையில் கூட‌ இருக்க‌லாம் என நீங்க‌ள் எழுதினா பிற‌க்கு யோசிக்க‌ தோனுது இல‌ங்கை ஆண்க‌ள் உந்த‌ மைதான‌த்தில் நான‌ய‌த்தில் வென்றால் ம‌ட்டைய‌ தான் தெரிவு செய்வின‌ம்.................நான் பார்த்த‌ ம‌ட்டி உந்த‌ மைதான‌த்தின் ஆண்க‌ள் அணி மிக‌ சிற‌ப்பாக‌ விளையாடுவின‌ம்..............உந்த‌ப் பெரிய‌ இந்தியாவையே போன‌ வ‌ருட‌ம் தோக்க‌டிச்சு தொட‌ரை வென்ற‌வை............................