Aggregator

’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’ - ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிவராத்திரி வாழ்த்து செய்தி

3 weeks 4 days ago
’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’ மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது சிவராத்திரி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானை வழிபடுவதற்குரிய மிக உன்னதமான நாளாக கருதப்படுகிறது. இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரின் சங்கமத்தையும், சிவபெருமான் தனது தெய்வீக நடனமான தாண்டவத்தை நிகழ்த்துவதையும் நினைவுகூறும் விதமாக அமைந்துள்ளது. இது உலகம் மற்றும் வாழ்க்கையின் 'இருளை வெல்வதை' குறிக்கிறது. அனைத்து மனித உறவுகளையும் மதிக்கும், ஒழுக்கநெறியுள்ள மற்றும் கருணையுள்ள சமூகத்தை உருவாக்குவதில் இதுபோன்ற மத மற்றும் கலாசார நிகழ்வுகள் மிக முக்கியமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அகங்காரத்தை நீக்கி, உள்ளங்களில் ஆன்மீக உயிர்ப்பை ஏற்படுத்தும் மகா சிவராத்திரி சமய சடங்குகள், நேர்மை, தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு போன்ற உண்மைப் பண்புகளின்படி வாழ நம்மை நெறிப்படுத்துக்கின்றதுடன், மகா சிவராத்திரியின் ஆன்மீக செய்தி நமது சமூக உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் நான் பார்க்கிறேன். அண்மைக்கால நினைவுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்ட பின்னர், உறுதியுடனும் திட்டமிடலுடனும் மீண்டெழுந்து, அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்துடன் புதிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தை நோக்கி நாம் இப்போது பயணிக்கிறோம். மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கையில் உள்ள இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும் அர்த்தமுள்ள மகா சிவராத்திரி தினமாக அமைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்து-மக்களின்-நல்லெண்ணங்கள்-நிறைவேறும்/175-372517

’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’ - ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிவராத்திரி வாழ்த்து செய்தி

3 weeks 4 days ago

’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’

மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  தனது சிவராத்திரி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானை வழிபடுவதற்குரிய மிக உன்னதமான நாளாக கருதப்படுகிறது.

இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரின் சங்கமத்தையும், சிவபெருமான் தனது தெய்வீக நடனமான தாண்டவத்தை நிகழ்த்துவதையும் நினைவுகூறும் விதமாக அமைந்துள்ளது. இது உலகம் மற்றும் வாழ்க்கையின் 'இருளை வெல்வதை' குறிக்கிறது.

அனைத்து மனித உறவுகளையும் மதிக்கும், ஒழுக்கநெறியுள்ள மற்றும் கருணையுள்ள சமூகத்தை உருவாக்குவதில் இதுபோன்ற மத மற்றும் கலாசார நிகழ்வுகள் மிக முக்கியமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அகங்காரத்தை நீக்கி, உள்ளங்களில் ஆன்மீக உயிர்ப்பை ஏற்படுத்தும் மகா சிவராத்திரி சமய சடங்குகள், நேர்மை, தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு போன்ற உண்மைப் பண்புகளின்படி வாழ நம்மை நெறிப்படுத்துக்கின்றதுடன், மகா சிவராத்திரியின் ஆன்மீக செய்தி நமது சமூக உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் நான் பார்க்கிறேன்.

அண்மைக்கால நினைவுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்ட பின்னர், உறுதியுடனும் திட்டமிடலுடனும் மீண்டெழுந்து, அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்துடன் புதிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தை நோக்கி நாம் இப்போது பயணிக்கிறோம்.

மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கையில் உள்ள இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும் அர்த்தமுள்ள மகா சிவராத்திரி தினமாக அமைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்து-மக்களின்-நல்லெண்ணங்கள்-நிறைவேறும்/175-372517

உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு!

3 weeks 4 days ago
உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு! adminFebruary 14, 2026 உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல் எரிசக்தி உதவித் திட்டத்தை (Energy Aid Package) வழங்க சீனா முன்வந்துள்ளது. ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டின் (Munich Security Conference) ஒரு பகுதியாக, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டது. ரஷ்யாவின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ள உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் வெப்பத்தை உறுதி செய்யவும் இந்த மனிதாபிமான உதவி வழங்கப்படுகிறது. உக்ரைனின் எரிசக்தி அமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனால் அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வாங் யீ-யிடம் ஆண்ட்ரி சிபிஹா விளக்கமளித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல் போன்ற அம்சங்களும் விவாதிக்கப்பட்டன. உக்ரைனில் நிலவி வரும் கடும் குளிர்காலச் சூழலில், மின் தடையால் தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு சீனாவின் இந்த உதவி பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Global Tamil Newsஉக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவி...உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல்…

உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு!

3 weeks 4 days ago

உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு!

adminFebruary 14, 2026

cu.jpg?fit=897%2C504&ssl=1

உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல் எரிசக்தி உதவித் திட்டத்தை (Energy Aid Package) வழங்க சீனா முன்வந்துள்ளது.

ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டின் (Munich Security Conference) ஒரு பகுதியாக, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டது.

ரஷ்யாவின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ள உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் வெப்பத்தை உறுதி செய்யவும் இந்த மனிதாபிமான உதவி வழங்கப்படுகிறது. உக்ரைனின் எரிசக்தி அமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனால் அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வாங் யீ-யிடம் ஆண்ட்ரி சிபிஹா விளக்கமளித்தார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல் போன்ற அம்சங்களும் விவாதிக்கப்பட்டன.

உக்ரைனில் நிலவி வரும் கடும் குளிர்காலச் சூழலில், மின் தடையால் தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு சீனாவின் இந்த உதவி பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Global Tamil News
No image previewஉக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவி...
உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல்…

திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம்  திறந்து வைப்பு.

3 weeks 4 days ago
திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் திறந்து வைப்பு. adminFebruary 14, 2026 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த மண்டபத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதன் போது திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன்,திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள்,அப்பகுதி மக்கள், என பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இதன் போது அன்ன பூரணி மட நிர்வாக உறுப்பினர்களும்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2026/229059/

திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம்  திறந்து வைப்பு.

3 weeks 4 days ago

திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம்  திறந்து வைப்பு.

adminFebruary 14, 2026

616373712_1454497602896249_8256219287316

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த மண்டபத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர்   அபிராமி கைலாசபிள்ளை கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதன் போது திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன்,திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள்,அப்பகுதி மக்கள், என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

இதன் போது அன்ன பூரணி மட நிர்வாக உறுப்பினர்களும்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2026/229059/

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 4 days ago
எங்கு தவறு செய்தோமோ அங்கேயுள்ள நீதிமன்றுக்குத் தான் போக வேண்டும். அதனாலேயே பலர் அப்பவே ஏதோ கொடுத்துவிட்டு போவோம் என்கிறார்கள். இது வான் சாரதிகள் மூலமாக தெரிந்து கொண்டது.

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

3 weeks 4 days ago
நன்றி நான் கேட்டவரிடம் 280-300,000 இடையே வரும் எண்டுதான் கேட்டேன். இனிப்போய் 4 என சொல்லுவது அழகாக இராது. பார்ப்போம் அதையும் ஏனையதையும் போட்டு செய்யலாம்.

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

3 weeks 4 days ago
கள்ளனுக்கு ஒரு பாவம்… களவு கொடுத்தவனுக்கு (பலரை சந்தேகிப்பதால்) பல பாவம் என்பார்கள்… பல உண்மையான செயல்பாட்டாளர்கள் 2009 வரை, குறிப்பாக கீழ் அடுக்கில், உண்மையாக இருந்தார்கள் என்பதை மறுக்கவில்லை. இனத்துக்காக நேரம், வலுவை கொடுத்தவர்களுக்கு ஆதாரம் இல்லாமல் கள்ளபட்டம் கட்ட கூடாது என்பது உண்மை. ஆனால் இதை வைத்தே பல கள்ளரும் தப்புகிறாகள் என்பதும் உண்மை.

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

3 weeks 4 days ago
2009 மே 19 ற்கு முன் காவியமான அனைவரையும் மாவீரர் என அழைப்பது சாலப்பொருதமானதே என்பதே என் கருத்தும். ஆனால் நான் அறிந்த வகையில் வீரவேங்கை - 1ம் லெப்டினெண்ட்- 2ம் லெப்டினெண்ட்- கப்டன் - மேஜர், லெப்டினெண்ட் கேணல் - கேணல் - பிரிகேடியர் என்பதுதான் புலிகளின் தரநிலை அடுக்கு. அத்தோடு அதுவரை மாவீரர் ஆன பின் தரநிலை அறிவித்த இயக்கம், சமாதான காலத்தில் தளபதிகளை மட்டும், வாழும் போதே கேணல் என அறிவித்தது என நினைக்கிறேன். இங்கே தான் தளபதி சொர்ணம் போன்றோரை எப்படி அழைப்பது என்ற குழப்பம் வருகிறது. அவருக்கு வாழும்போதே இயக்கம் கொடுத்த தரம் கேணல். ஆனால் அவர் பெப்ரவரி மாதம் அளவில் மாவீரர் ஆகி இருந்தால் நிச்சயம் இயக்கம் அவரை பிரிகேடியர் ஆக்கி இருக்கும். இப்போ அவரை கேணல் என்பதா, பிரிகேடியர் என்பதா? வீரவேங்கை என்ற பதத்தை அவருக்கு பாவிக்க முடியாது என நினைக்கிறேன் (தவறு எனில் திருத்தவும்). ஆகவே மாவீரர் தளபதி சொர்ணம் என மட்டுமே நான் அவரை விளிக்கிறேன். எரிய சுணங்கினால்… நீங்கள் இருக்கிறியள்😂

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

3 weeks 4 days ago
பார்ப்போம். பகலவன் அண்ணா என்று ஒருவர் முள்ளிவாய்க்காலில் நிண்டு வந்தவர் முன்னர் யாழில் எழுதினார். அவர் கண்ணில் பட்டால் தகவல் சொல்ல கூடும்.