3 weeks 4 days ago
ஓம்… 1992 உலக கிண்ணத்தில் சிம்பாப்வே 314 அடிக்க அதை இலங்கை திரத்தி, அர்ஜுன ரணதுங்க, சம்பக்க இராமநாயக்க கடைசியாக நிண்டு 315 அடித்ததெல்லாம் வேறலெவல் கிரிகெட். அப்போ டேவிட் ஹொட்டன் அவர்களின் கேப்டன். அப்போதும் எவன்ஸ் எண்டு ஒரு வேக பந்து வீச்சாளர் இருந்தார். கோழி பண்ணை வைத்திருந்தார். ஹென்றி ஒலங்கோ. வினோதமான சிகை கொண்ட கறுப்பின வீரர். அவர்களின் முதல் முழு கறுப்பின வீரரும் என நினைக்கிறேன். 1999 உலக கோப்பை நேரம், முகாபேயின் அடாவடியை எதிர்த்து இவரும் அண்டி பிளவரும் குரல் கொடுத்தனர். அத்தோடு கேரியர் ஓவர். அண்டி பிளவர் பின்னாளில் இங்கிலாந்து கோச் ஆகினார். அப்போ இங்கிலாந்துக்கு விளையாடிய க்ரேம் ஹிக், ரொபின் குக் கூட சிம்பாப்வே அடி உள்ளோரே. அதேபோல்தான் இப்போ சாம் கரன் மற்றும் சகோதரர்களும்.
3 weeks 4 days ago
போலீசார் சிறிய குறுக்கு வீதிகளிலேயே மறைந்திருந்து கெல்மெட் போடாத உந்துருளி ஓட்டுநர்களிடம் கைலஞ்சம் வாங்குவது வழமை, கொடுத்து செல்வது நம்மவர் வழமை. ஒன்று, நேரமினக்கேடு மற்றது, கொடுக்காவிட்டால் கள்ள கேஸ் போடுவது, போதைப்பொருள் வைத்து கைது செய்வது. இது கள்ளன் போலீஸ் விளையாட்டு. ஒருவராவது நான் தவறு செய்தால் நீதிமன்றுக்கு அனுப்பு நான் அங்கே சரி செய்கிறேன் என்று சொல்வதில்லை, சொன்னாலும் அது நடக்கபோவதுமில்லை. தவறுகளில் இருந்து லஞ்சம் கொடுத்து மீளுவது. நடுராத்திரி லஞ்சம் வாங்குவது சுலபம், இவர்கள் கொடுத்து வேறு பழக்கியிருக்கிறார்கள், நண்பர்களாக பழகி இருக்கிறார்கள். தீயவர் நட்பு இப்படித்தான் முடியும். அவர்கள் தவறு செய்திருந்தால் வாகனத்தை நிறுத்த பல வழிகள் உண்டு. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதில் என்ன பிரச்சனை பொலிஸாருக்கு? எதையோ மறைப்பதற்காக அவரை சுட்டு, மற்றவர்களை அச்சுறுத்தி, ஆதாரங்களை சோடித்து, என்ன வேலை அது? இருபக்கமும் லஞ்சம் பெற்ற கை ஒருநாள் இப்படித்தான் முடியும். எல்லா ஆவணங்களும் கைவசம் வைத்திருப்பவர்களையே மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இந்த வழிப்பறித்திருடர். சில மாதங்களுக்கு முன் தெற்கில் சில இளைஞர் வாகனத்தில் எங்கோ சென்று விட்டு நடுராத்திரி திரும்பிக்கொண்டிருந்த போது போலீசார் அவர்களை இடைமறித்து லஞ்சம் கேட்டிருக்கிறார்கள், அவர்கள் மறுக்கவே போலீசார் வாகனத்தை சோதனையிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள், அவர்களும் சம்மதித்து வாகனத்தில் இருந்து இறங்கி வழி விட்டிருக்கிறார்கள். ஒரு போலீசார் தனது காற்சட்டை பையிலிருந்த போதைப்பொருளை வாகனத்தில் வைத்துவிட்டு கண்டெடுப்பதுபோல் அவர்களை மிரட்டியுள்ளார், அவர்கள் இளைஞர், விடவில்லை, கடைசியில் போலீசார் கைது செய்யப்பட்டு வேலையிழந்தார். நம் ஊரில் மக்களை பயமுறுத்தி இப்படி பல சேட்டைகள் நடந்துள்ளன. போலீசாரை சோதனைக்கு அமர்த்தும்போது போதைப்பொருள், மது பரிசோதனை, உடமையேதும் அவர்கள் வசம் உண்டா என்பதை பரிசோதித்து கடமைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், அவர்கள் உடலில் கமெரா பொருத்தப்படவேண்டும் இல்லையேல் கடமைக்கு அனுமதிக்க கூடாது.
3 weeks 4 days ago
அது போராளிகளுக்கு தான் ஐயனே தெரியும். எனக்கு (பொதுமகன்) உந்த காகம் பொறுக்கின மாதிரி எங்கேனும் கிடைக்கும் கொசுறு தகவல்தான் தெரியும். ஆனால் ஒன்று. வட்டுவாகல் பாலம் விழுந்த பின்னர் அதை மீளக் கைப்பற்ற 13 கடற்கரும்புலிகள் மே 12 ம் திகதி முயன்றனர்; முடிவில் தோற்றுப் போயினர். அவர்களில் ஒருவன் கடற்கரும்புலி கப்டன் ஈகன் (அன்னாரின் உறவினர் முன்னொரு காலத்தில் ஊடகத்திற்கு வழங்கிய தகவல்). இதிலிருந்து அறிவது இவருக்கு தரநிலை வழங்கப்பட்டுள்ளது - என்றாலும் ஒருவரின் தரநிலையை வைத்து ஒக்கத்திற்குமே முடிவெடுக்கேலாது. முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர்களால் தான் முற்றாக நிறுத்தப்பட்ட திகதி தொடர்பான இத்தகவல் வழங்க முடியும். மற்றொன்று, மே மாதம் இரண்டாம் கிழமையோடு - ஏறத்தாழ 10 ம் திகதியோடு - தலைமைச்செயலகத்தின் சிறப்பு ஆளணி அறிக்கை பகுதி செயலற்றுவிட்டது/ நிறுத்தப்பட்டது. எனினும் மற்ற தனியான ஆளணி அறிக்கை பகுதிகள் தொடர்ந்து செயலுறுவாய் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. -- ஓம் அது உண்மை. என்றாலும் எல்லோருக்கும் வழங்கும் பொதுவான தரநிலையே அவர்களுக்கும் வழங்கலாம் என்பது எனது எண்ணம். மாவீரர்களில் புலிகள் வேறுபாடு காட்டியதில்லை. ஒவ்வொரு து. கல்லறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் (லெப். சங்கர் எ சுரேஸ் தவிர்த்து)
3 weeks 4 days ago
1983 உலகக் கிண்ணத்தில் சிம்பாப்வே அவுஸ்ரேலியாவை வென்று தங்கள் வருகையை உலகுக்கு அறிவித்தார்கள். அதன் பின் எழுந்து வந்த சிம்பாப்வே அணியை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். பிளவர் சகோதர்களின் வருகை அணியை எங்கேயோ கொண்டு போனது. 90களில் அந்த அணி, நெருப்பு அணி. டெஸ்டில் பாகிஸ்தானை வென்றவர்கள். அரசியலால் சின்னாபின்னமான அணி. இப்போதுதான் மெல்ல எழுந்து வருகிறார்கள். இந்த வெற்றி, அவர்களுக்கு மீண்டும் ஒரு உத்வேகம் குடுக்குமா. அந்த 90கள் திரும்பவும் நடக்குமா.