Aggregator

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

4 weeks ago
பல தினங்களுக்கு முன்னர் பல இணைய ஊடகங்களில் காறித்துப்பப்பட்ட செய்தி.😂 புது நெல்லு புது நாத்து என்பதற்கமைய.... திருமணம் என்பதை விட மனப்பொருத்தம் முக்கியம் என்பதை பலர் ஏன் ஏற்க மறுக்கின்றார்கள் என தெரியவில்லை? என்னிடமும் இன விசுவாசம் உண்டு.மாற்று கருத்துக்களும் உண்டு. அதை எப்படி கையாள வேண்டும் என்ற சிந்தனையும் உண்டு. நிற்க... கீழ் வரும் காணொளிகளில் வருபவர்களுடன் சிறு தொடர்புகள் உண்டு. அவர்களது காணொளிகளில் என் கருத்துக்களும் உண்டு. அவர்களது காணொளிகளில் எங்கும் தமிழ்மானத்தை விட்டுக்கொடுக்கவேயில்லை. மாறாக தமிழை முன்னெடுத்து செல்கின்றார்கள்.

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

4 weeks ago
இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்.பறவா இல்லை .தனக்கு பிடித்ததை செய்திருக்கிறா இதில் வெள்ளை, கறுப்பு என்று பேசிக் கொள்வதில் அர்த்தமே இல்லை.

மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்

4 weeks ago
ஆழ்ந்த அனுதாபங்கள்; ஜயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் . குடும்பதினருடன் எங்கள் துயரையும் பகிர்ந்து கொள்ளுகிறோம். 🙏

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

4 weeks ago
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் October 12, 2025 2:19 pm விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். தொடந்தும்பேசிய அவர், 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆகும் போது சீனாவில் இருந்து துப்பாக்கி ரவைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அப்போது கோட்டபாய ராஜபக்ச நேரில் என்னை அழைத்துப் பேசினார். “பொன்சேகா நாம் கடனுக்கு அல்லவா சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டு வருகின்றோம். சீனாவில் இருந்து அனுப்பப்படாவிட்டால் எனக்கு எதனையும் செய்ய முடியாது என்றார். நான் அப்படியே பசில் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றேன். இதன்போது பசில் ராஜபக்ச தொலைபேசியூடாக பி.பி.ஜயசுந்தரவிடம் கூறினார். 100 மில்லியன் டொலர்களை வழங்குமாறு கூறினார். அந்த சந்தரப்பத்தில் பசிலுடன் ஒரு மணி நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன். 2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த கதையை அவர் என்னிடம் கூறினார். “நாம் இவ்வாறானதொரு வேலையை செய்தோம். தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் வாக்குறுதி அளித்தனர். கடற்புலிகளின் பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்த டோரா படகுகள் மலோசியாவில் உள்ளன. அதற்கு பணம் வழங்க வேண்டும். அதற்காக இரண்டு மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது என்றனர். அதில் எந்நதப் பிரச்சினையும் இல்லையென நாம் அதனை ஏற்றுக்கொண்டோம். அயல் நாடுகளில் இருந்து தேர்தல் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு மில்லியன் டொலர் எமக்கு கிடைத்தது. கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளிநொச்சியில் பிரபாகரனிடம் வழங்கியதாக” பசில் ராஜபக்ச என்னிடம் கூறினார். அவ்வாறு பணம் வழங்கும் போது மலையக அரசியல்வாதிகள் இருந்ததாகவும் பசில் கூறினார். அந்த டோரா படகுகளை பயன்படுத்தியே விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் கடற்படையின் 10 டோரா படகுகளை மூழ்கடித்தனர். அதில் 150 கடற்படையினர் உயிரிழந்தனர். மகிந்த ராஜபக்ச தன் மகனை கடற்படையில் இணைத்தார். ஆனால் மகன் கடலுக்கு செல்லவில்லை, கொழும்பில் இருந்துகொண்டு ரக்பி விளையாடினார். கார் பந்தயத்தில் கார் ஓட்டினார். 2009ஆம் ஆண்டு நாங்கள் யுத்த களத்தில் இருந்தோம். ஜனவரி 27ஆம் திகதி கோட்டபாய என்னிடம் அன்பாக கதைத்தார். “சரத் நீங்கள் இரண்டரை வரும் நன்றாக யுத்தம் செய்தீர்கள் அல்லவா. நீங்கள் களைப்படைந்திருப்பீர்கள் அல்லவா. அதனால் ஜகத் ஜயசூரிய என்ற ஒருவர் உள்ளார் அல்லவா. அவரிடம் பொறுப்பை வழங்கிவிட்டு நீங்கள் சற்று ஓய்வு எடுங்கள்” என கூறினார். நான் அவரிடம் பொறுப்பை வழங்க மாட்டேன் என கூறினேன். மறுநாள் ஜனவரி 28ஆம் திகதி மகிந்த என்னை தொடர்புகொண்டார். ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி தற்காலிக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டார். நான் இல்லையென்றேன். ஆனாலும் எங்களுக்கு அந்த உத்தரவை மீற முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் எதிரிகள் ஜனவரி 31ஆம் திகதி நந்திக்கடல் ஊடக வந்து பாரிய தாக்குதலை நடத்தினர். மார்ச் நடுப்பகுதியில் முடியவேண்டிய யுத்தம் மே மாதம் நடுப்பகுதி வரை கொண்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான ஆயுதங்களை நாம் இழந்தோம். இதன் போது ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் மகிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும். நான் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். மேற்கூறிய சம்பவங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன். யுத்தம் நிறைவடையவிருந்த சந்தரப்பத்தில் யுத்தத்தை நிறுத்த கோட்டபாய தரப்பினர் முயற்சி செய்தனர். முக்கிய தளபதிகளை யுத்த களத்தில் இருந்து மீள அழைத்தனர். போர் முடிய வேண்டும் என இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆசைப்பட்ட நேரத்தில் யாராவது இப்படியொரு வேலைகளில் ஈடுபடுவார்களா? “2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஆருகில் வருகின்றது அல்லவா, அந்த தேர்தலில் வெற்றிபெற பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டும். பிரபாகரனை உயிருடன் காப்பாற்றி தமிழ் மக்கள் கோபமடையாதவாறு யுத்தத்தினை நிறுத்தி தமிழ் மக்களை கவர்வதற்கே மகிந்த ராஜபக்ச இவ்வாறு செய்தார் என பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்று உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன் எனவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார். https://oruvan.com/mahindas-faction-gave-money-to-the-ltte-information-released-by-sarath-fonseka/

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

4 weeks ago

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

October 12, 2025 2:19 pm

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தொடந்தும்பேசிய அவர்,

2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆகும் போது சீனாவில் இருந்து துப்பாக்கி ரவைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அப்போது கோட்டபாய ராஜபக்ச நேரில் என்னை அழைத்துப் பேசினார்.

“பொன்சேகா நாம் கடனுக்கு அல்லவா சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டு வருகின்றோம். சீனாவில் இருந்து அனுப்பப்படாவிட்டால் எனக்கு எதனையும் செய்ய முடியாது என்றார்.

நான் அப்படியே பசில் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றேன். இதன்போது பசில் ராஜபக்ச தொலைபேசியூடாக பி.பி.ஜயசுந்தரவிடம் கூறினார். 100 மில்லியன் டொலர்களை வழங்குமாறு கூறினார்.

அந்த சந்தரப்பத்தில் பசிலுடன் ஒரு மணி நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன். 2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த கதையை அவர் என்னிடம் கூறினார்.

“நாம் இவ்வாறானதொரு வேலையை செய்தோம். தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் வாக்குறுதி அளித்தனர்.

கடற்புலிகளின் பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்த டோரா படகுகள் மலோசியாவில் உள்ளன. அதற்கு பணம் வழங்க வேண்டும். அதற்காக இரண்டு மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது என்றனர்.

அதில் எந்நதப் பிரச்சினையும் இல்லையென நாம் அதனை ஏற்றுக்கொண்டோம். அயல் நாடுகளில் இருந்து தேர்தல் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு மில்லியன் டொலர் எமக்கு கிடைத்தது.

கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளிநொச்சியில் பிரபாகரனிடம் வழங்கியதாக” பசில் ராஜபக்ச என்னிடம் கூறினார். அவ்வாறு பணம் வழங்கும் போது மலையக அரசியல்வாதிகள் இருந்ததாகவும் பசில் கூறினார்.

அந்த டோரா படகுகளை பயன்படுத்தியே விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் கடற்படையின் 10 டோரா படகுகளை மூழ்கடித்தனர். அதில் 150 கடற்படையினர் உயிரிழந்தனர்.

மகிந்த ராஜபக்ச தன் மகனை கடற்படையில் இணைத்தார். ஆனால் மகன் கடலுக்கு செல்லவில்லை, கொழும்பில் இருந்துகொண்டு ரக்பி விளையாடினார். கார் பந்தயத்தில் கார் ஓட்டினார்.

2009ஆம் ஆண்டு நாங்கள் யுத்த களத்தில் இருந்தோம். ஜனவரி 27ஆம் திகதி கோட்டபாய என்னிடம் அன்பாக கதைத்தார்.

“சரத் நீங்கள் இரண்டரை வரும் நன்றாக யுத்தம் செய்தீர்கள் அல்லவா. நீங்கள் களைப்படைந்திருப்பீர்கள் அல்லவா. அதனால் ஜகத் ஜயசூரிய என்ற ஒருவர் உள்ளார் அல்லவா. அவரிடம் பொறுப்பை வழங்கிவிட்டு நீங்கள் சற்று ஓய்வு எடுங்கள்” என கூறினார்.

நான் அவரிடம் பொறுப்பை வழங்க மாட்டேன் என கூறினேன். மறுநாள் ஜனவரி 28ஆம் திகதி மகிந்த என்னை தொடர்புகொண்டார். ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி தற்காலிக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

நான் இல்லையென்றேன். ஆனாலும் எங்களுக்கு அந்த உத்தரவை மீற முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் எதிரிகள் ஜனவரி 31ஆம் திகதி நந்திக்கடல் ஊடக வந்து பாரிய தாக்குதலை நடத்தினர்.

மார்ச் நடுப்பகுதியில் முடியவேண்டிய யுத்தம் மே மாதம் நடுப்பகுதி வரை கொண்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான ஆயுதங்களை நாம் இழந்தோம்.

இதன் போது ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் மகிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும். நான் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.

மேற்கூறிய சம்பவங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

யுத்தம் நிறைவடையவிருந்த சந்தரப்பத்தில் யுத்தத்தை நிறுத்த கோட்டபாய தரப்பினர் முயற்சி செய்தனர். முக்கிய தளபதிகளை யுத்த களத்தில் இருந்து மீள அழைத்தனர்.

போர் முடிய வேண்டும் என இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆசைப்பட்ட நேரத்தில் யாராவது இப்படியொரு வேலைகளில் ஈடுபடுவார்களா?

“2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஆருகில் வருகின்றது அல்லவா, அந்த தேர்தலில் வெற்றிபெற பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டும்.

பிரபாகரனை உயிருடன் காப்பாற்றி தமிழ் மக்கள் கோபமடையாதவாறு யுத்தத்தினை நிறுத்தி தமிழ் மக்களை கவர்வதற்கே மகிந்த ராஜபக்ச இவ்வாறு செய்தார் என பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்று உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன் எனவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

https://oruvan.com/mahindas-faction-gave-money-to-the-ltte-information-released-by-sarath-fonseka/

ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன - நிலாந்தன்

4 weeks ago
ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன - நிலாந்தன் மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை. திருக்கோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம் ஆண்டு ஐனவரி இரண்டாந்திகதி இந்த ஐந்து மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட தனது மகனுக்காக இறக்கும்வரை மனோகரன் போராடினார். அவர் அணுகாத மனித உரிமை அமைப்பு இல்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைவரை அவர் போனார். ஆனால் அவருக்கு இறக்கும்வரை நீதி கிடைக்கவில்லை. இடையில் 2015இல் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில், அதாவது நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தின் காலத்தில், அதைவிட குறிப்பாக ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால், நிலைமாறு கால நீதிக்குரிய-பொறுப்புக் கூறலுக்குரிய – தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய அரசாங்கத்தின் காலத்தில், குற்றஞ் சாட்டப்பட்ட அதிரடிப் படையினர் சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். அதற்குப்பின் யாரும் தண்டிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. மருத்துவர் மனோகரன் உயிர் பிரியும்வரை போராடினார். அவருடைய ஏனைய பிள்ளைகளுக்கும் அவருக்கும் ஆபத்து வந்தபோது நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் அவரை நினைவு கூரும் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு செம்மணி வளைவில் “அணையா விளக்கு” போராட்டத்தை ஒருங்கமைத்த “மக்கள் செயல்” என்ற அமைப்பு அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியது. அது ஒரு நினைவு கூரலாகவும் அதேசமயம் நீதிக்கான மக்களின் போராட்டம் தொடர்பான ஆய்வு அரங்காகவும் அமைந்தது. அதில் அரசியல் விமர்சகர்களும் அரசியல்வாதிகளும் உரையாற்றினார்கள். குறிப்பாக அதில் உரையாற்றிய கஜேந்திரகுமார், மருத்துவர் மனோகரன் தொடர்பான தனது நினைவைப் பகிர்ந்து கொண்டார். லண்டனில் இருந்து மனோகரன் கஜேந்திரகுமாருடன் கதைப்பதற்கு தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் கதைக்கத் தொடங்கியதும் அழத் தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர் அழுதிருக்கிறார். அதன் பின்னர் சுதாகரித்துக் கொண்டு சிறிது உரையாடியிருக்கிறார். அவரை மீண்டும் ஐரோப்பிய நாடு ஒன்றில் சந்தித்ததாக கஜேந்திரகுமார் தனது உரையில் கூறினார். அச்சந்திப்பின் போதும் கிட்டத்தட்ட அரை மணித்தியாளத்துக்கு மேலாக மருத்துவர் மனோகரன் அழுதிருக்கிறார். அன்றைய நிகழ்வில் அவருடைய மார்பளவு உருவப்படம் பெருப்பிக்கப்பட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்தது. துக்கமும் விரக்தியும் நிறைந்த மனோகரனின் கண்கள் அதைப் பார்ப்பவர்களிடம் எதையோ எதிர்பார்ப்பது போலிருந்தது. அந்த நிகழ்வு நடந்த அடுத்த நாள் திங்கட்கிழமை ஜெனிவாவில் அறுபதாவது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பு இன்றி அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எந்த நாடும் அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை. அந்தத் தீர்மானம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல நீர்த்துப்போன ஒரு தீர்மானமாகக் காணப்படுகிறது. வழமைபோல அதில் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும், 13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் போன்ற திரும்பத் திரும்ப வரும் விடையங்கள் உண்டு. அதுபோலவே போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பும், அரச படைகளும் விடுதலைப் புலிகள் இயக்கமும் பொறுப்புக்கூற வேண்டும், விசாரிக்கப்பட வேண்டும் என்ற விடயமும் அதில் உண்டு. கடந்த 16 ஆண்டுகளாக மனித உரிமைகள் பேரவையில் இதுதான் நடந்து வருகிறது. இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும்,13ஐ முழுமையாக அமல்படுத்தி மாகாண சபைகளை இயங்க வைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம் புதிய ஆட்சிகள் வரும் பொழுது குறிப்பாக ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சிகள் வரும்போது அவற்றை அரவணைத்துப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐ நா முயற்சித்து வருகிறது. இம்முறை தீர்மானமும் அந்த நோக்கத்திலானதுதான். ஆனால் அரசாங்கம் தெளிவாகக் கூறுகிறது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைதான் உண்டு. வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று. அதேசமயம் ஏற்கனவே 2021ஆம் ஆண்டிலிருந்து ஒரு பன்னாட்டுப் பொறிமுறை மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்காவை பொறுப்புக்கூற வைப்பதற்கான அலுவலகம் என்று அழைக்கப்படும் அந்தக் கட்டமைப்பானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரித்து வருகிறது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வந்து விசாரணைகளை செய்து சான்றுகளையும் சாட்சிகளையும் உறுதிப்படுத்துவதற்கு இதுவரையிலும் இருந்த எந்தவொரு அரசாங்கமும் விசா வழங்கவில்லை. கடந்த ஓராண்டு காலமாக அநுர அரசாங்கமும் விசா வழங்கவில்லை. அதேசமயம் உள்நாட்டுப் பொறி முறையைப் பொறுத்தவரையிலும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ரிங்கோ5 என்று அழைக்கப்படுகின்ற ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் உட்பட இன்றுவரையிலும் நடந்த எத்தனை படுகொலைகளுக்கு நீதி கிடைத்திருக்கிறது? கடந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண்டு காலப் பகுதிக்குள் மாணவி கிருசாந்தியின் கொலை வழக்கில்தான் குற்றவாளிகள் ஓரளவுக்காவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு குற்றவாளி இன்றுவரை தலைமறைவாக இருக்கிறார். மற்றொரு குற்றவாளியாகிய லான்ஸ் கோப்ரல் சோமரட்ன ராஜபக்ஷ அக்குற்றங்களில் தனக்குச் சம்பந்தமில்லை என்றும், தனக்கு மேலதிகாரிகள் இட்ட கட்டளைகளையே தான் நிறைவேற்றியதாகவும் பகிரங்கமாகக் கூறி வருகிறார். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, கடந்த 20 ஆண்டுகளாக அவர் அவ்வாறு கூறி வருகிறார். அவர் தனது வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிட்டிருக்கும் அதிகாரிகள் யாரும் இதுவரையிலும் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அனுர அரசாங்கம் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் 80க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறது. இவர்களில் தரைப்படை, கடற்படை பிரதானிகள், போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள், பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பல வகையினரும் அடங்குவர். ஆனால் கைது செய்யப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த யாருமே இன முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர்களில் சிலர் மீது இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்டு. உதாரணமாக ஒரு கடற்படைப் பிரதானி மீது அவ்வாறான குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இன்றுவரை அரசாங்கம் கைது செய்திருக்கும் எந்த ஒரு படைத் தரப்பைச் சேர்ந்தவர் மீதும் இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. அரசாங்கம் அந்த விடயத்தில் மிகத்தெளிவாக இருக்கிறது. ஆனால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மூலம் உண்மையைக் கண்டடையலாம், அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐநா நம்புகின்றதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் அதைத்தான் பிரதிபலிக்கின்றது. திங்கட்கிழமை மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த மனோகரன் நினைவு நிகழ்வில் பேசியவர்களில் ஒருவர் திருக்கோணமலையைச் சேர்ந்த ரஜீவ் காந்த். அவர் ஓர் அரசியல் செயற்பாட்டாளர். தென்னிலங்கையில் நடந்த “அரகலய” தன்னெழுச்சிப் போராட்டங்களில் காணப்பட்ட தமிழர்களில் முக்கியமானவர். இவர் மருத்துவர் மனோகரனின் மகனின் பாடசாலையில் சமகாலத்தில் படித்தவர். அந்த ஐந்து மாணவர்களும் கொல்லப்பட்ட சம்பவத்தில் அரும்பொட்டில் உயிர் தப்பியவர். அந்த மாணவர்கள் வழமையாக ஒரு சிமெண்ட் கட்டில் உட்கார்ந்திருந்து கதைப்பதுண்டாம். அவர்களோடு சேர்ந்து இருந்திருக்க வேண்டிய ரஜீவ் அன்றைக்கு வேறொரு அலுவல் காரணமாக அங்கே வரப் பிந்திவிட்டது. அதற்குள் எமன் அவரை முந்திக் கொண்டு விட்டான். அந்த நினைவு நிகழ்வில் பேசும் பொழுது அவர் சொன்ன பல விடயங்களில் ஒன்று அந்த ஐந்து மாணவர்களில் ஒருவராகிய யோகராஜா ஹேமச்சந்திராவின் மூத்த சகோதரனைப் பற்றியது. கொல்லப்பட்ட தனது தம்பியின் பூத உடலை அழுதழுது தூக்கி கொண்டு வரும் அவருடைய அண்ணனை இப்பொழுதும் அதில் சம்பந்தப்பட்ட ஒளிப்படங்களில் காணலாம் என்று ரஜீவ் சொன்னார். ஆனால் அந்த அண்ணனும் இப்பொழுது இல்லை. ஹேமச்சந்திரனின் மூத்த சகோதரன் திருக்கோணமலையில் இயங்கிய “அக்சன் பெய்ம்” (Action Against Hunger) என்று அழைக்கப்படுகின்ற பிரான்ஸை மையமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனத்தில் வேலை செய்தவர். நாலாம் கட்ட ஈழப் போரின் தொடக்க நாட்களில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பதினேழு உள்ளூர் ஊழியர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹேமச்சந்திரா கொல்லப்பட்ட ஐந்தே மாதங்களில் அவருடைய அண்ணனும் மூதூரில் தனது சக ஊழியர்களோடு கொல்லப்பட்டு விட்டார். அந்த குடும்பத்துக்கு ஐந்து மாதங்களில் இரண்டு இழப்பு. அந்தக் குடும்பத்தில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரண்டு இழப்புக்களுக்கும் இன்றுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் ஐநாவும் பெரும்பாலான உலக நாடுகளும் நம்புகின்றனவா, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக இலங்கையில் நிலைமாறு கால நீதியை நிலைநாட்டலாம் என்று? ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் கூடிய கருத்தரங்கில் பேசிய யாருமே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை நம்பவும் இல்லை. அவர்கள் பேசிக் கொண்டிருந்த மேடையில் பின்னணியில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவர் மனோகரனின் விழிகள், அழுதழுது களைத்துப் போன அந்த விழிகள், அங்கிருந்து எல்லாரையும் எதிர்பார்ப்போடு உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தன. https://www.nillanthan.com/7832/

ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன - நிலாந்தன்

4 weeks ago

ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன - நிலாந்தன்

G1Y021ZXoAAE33w.jpg

மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை. திருக்கோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம் ஆண்டு ஐனவரி இரண்டாந்திகதி இந்த ஐந்து மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட தனது மகனுக்காக இறக்கும்வரை மனோகரன் போராடினார். அவர் அணுகாத மனித உரிமை அமைப்பு இல்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைவரை அவர் போனார். ஆனால் அவருக்கு இறக்கும்வரை நீதி கிடைக்கவில்லை.

இடையில் 2015இல் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில், அதாவது நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தின் காலத்தில், அதைவிட குறிப்பாக ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால், நிலைமாறு கால நீதிக்குரிய-பொறுப்புக் கூறலுக்குரிய – தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய அரசாங்கத்தின் காலத்தில், குற்றஞ் சாட்டப்பட்ட அதிரடிப் படையினர் சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். அதற்குப்பின் யாரும் தண்டிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

மருத்துவர் மனோகரன் உயிர் பிரியும்வரை போராடினார். அவருடைய ஏனைய பிள்ளைகளுக்கும் அவருக்கும் ஆபத்து வந்தபோது நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் அவரை நினைவு கூரும் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு செம்மணி வளைவில் “அணையா விளக்கு” போராட்டத்தை ஒருங்கமைத்த “மக்கள் செயல்” என்ற அமைப்பு அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியது.

அது ஒரு நினைவு கூரலாகவும் அதேசமயம் நீதிக்கான மக்களின் போராட்டம் தொடர்பான ஆய்வு அரங்காகவும் அமைந்தது. அதில் அரசியல் விமர்சகர்களும் அரசியல்வாதிகளும் உரையாற்றினார்கள். குறிப்பாக அதில் உரையாற்றிய கஜேந்திரகுமார், மருத்துவர் மனோகரன் தொடர்பான தனது நினைவைப் பகிர்ந்து கொண்டார்.

லண்டனில் இருந்து மனோகரன் கஜேந்திரகுமாருடன் கதைப்பதற்கு தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் கதைக்கத் தொடங்கியதும் அழத் தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர் அழுதிருக்கிறார். அதன் பின்னர் சுதாகரித்துக் கொண்டு சிறிது உரையாடியிருக்கிறார். அவரை மீண்டும் ஐரோப்பிய நாடு ஒன்றில் சந்தித்ததாக கஜேந்திரகுமார் தனது உரையில் கூறினார். அச்சந்திப்பின் போதும் கிட்டத்தட்ட அரை மணித்தியாளத்துக்கு மேலாக மருத்துவர் மனோகரன் அழுதிருக்கிறார்.

அன்றைய நிகழ்வில் அவருடைய மார்பளவு உருவப்படம் பெருப்பிக்கப்பட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்தது. துக்கமும் விரக்தியும் நிறைந்த மனோகரனின் கண்கள் அதைப் பார்ப்பவர்களிடம் எதையோ எதிர்பார்ப்பது போலிருந்தது.

558804078_122157287384637056_45169079237

அந்த நிகழ்வு நடந்த அடுத்த நாள் திங்கட்கிழமை ஜெனிவாவில் அறுபதாவது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பு இன்றி அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எந்த நாடும் அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை.

அந்தத் தீர்மானம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல நீர்த்துப்போன ஒரு தீர்மானமாகக் காணப்படுகிறது. வழமைபோல அதில் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும், 13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் போன்ற திரும்பத் திரும்ப வரும் விடையங்கள் உண்டு. அதுபோலவே போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பும், அரச படைகளும் விடுதலைப் புலிகள் இயக்கமும் பொறுப்புக்கூற வேண்டும், விசாரிக்கப்பட வேண்டும் என்ற விடயமும் அதில் உண்டு.

கடந்த 16 ஆண்டுகளாக மனித உரிமைகள் பேரவையில் இதுதான் நடந்து வருகிறது. இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும்,13ஐ முழுமையாக அமல்படுத்தி மாகாண சபைகளை இயங்க வைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம் புதிய ஆட்சிகள் வரும் பொழுது குறிப்பாக ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சிகள் வரும்போது அவற்றை அரவணைத்துப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐ நா முயற்சித்து வருகிறது. இம்முறை தீர்மானமும் அந்த நோக்கத்திலானதுதான்.

ஆனால் அரசாங்கம் தெளிவாகக் கூறுகிறது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைதான் உண்டு. வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று. அதேசமயம் ஏற்கனவே 2021ஆம் ஆண்டிலிருந்து ஒரு பன்னாட்டுப் பொறிமுறை மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்காவை பொறுப்புக்கூற வைப்பதற்கான அலுவலகம் என்று அழைக்கப்படும் அந்தக் கட்டமைப்பானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரித்து வருகிறது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வந்து விசாரணைகளை செய்து சான்றுகளையும் சாட்சிகளையும் உறுதிப்படுத்துவதற்கு இதுவரையிலும் இருந்த எந்தவொரு அரசாங்கமும் விசா வழங்கவில்லை. கடந்த ஓராண்டு காலமாக அநுர அரசாங்கமும் விசா வழங்கவில்லை.

அதேசமயம் உள்நாட்டுப் பொறி முறையைப் பொறுத்தவரையிலும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ரிங்கோ5 என்று அழைக்கப்படுகின்ற ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் உட்பட இன்றுவரையிலும் நடந்த எத்தனை படுகொலைகளுக்கு நீதி கிடைத்திருக்கிறது? கடந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண்டு காலப் பகுதிக்குள் மாணவி கிருசாந்தியின் கொலை வழக்கில்தான் குற்றவாளிகள் ஓரளவுக்காவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு குற்றவாளி இன்றுவரை தலைமறைவாக இருக்கிறார். மற்றொரு குற்றவாளியாகிய லான்ஸ் கோப்ரல் சோமரட்ன ராஜபக்ஷ அக்குற்றங்களில் தனக்குச் சம்பந்தமில்லை என்றும், தனக்கு மேலதிகாரிகள் இட்ட கட்டளைகளையே தான் நிறைவேற்றியதாகவும் பகிரங்கமாகக் கூறி வருகிறார். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, கடந்த 20 ஆண்டுகளாக அவர் அவ்வாறு கூறி வருகிறார். அவர் தனது வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிட்டிருக்கும் அதிகாரிகள் யாரும் இதுவரையிலும் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அனுர அரசாங்கம் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் 80க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறது. இவர்களில் தரைப்படை, கடற்படை பிரதானிகள், போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள், பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பல வகையினரும் அடங்குவர். ஆனால் கைது செய்யப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த யாருமே இன முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர்களில் சிலர் மீது இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்டு.

உதாரணமாக ஒரு கடற்படைப் பிரதானி மீது அவ்வாறான குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இன்றுவரை அரசாங்கம் கைது செய்திருக்கும் எந்த ஒரு படைத் தரப்பைச் சேர்ந்தவர் மீதும் இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. அரசாங்கம் அந்த விடயத்தில் மிகத்தெளிவாக இருக்கிறது.

ஆனால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மூலம் உண்மையைக் கண்டடையலாம், அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐநா நம்புகின்றதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் அதைத்தான் பிரதிபலிக்கின்றது.

facebook_1759035290243_73779287540090932

திங்கட்கிழமை மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த மனோகரன் நினைவு நிகழ்வில் பேசியவர்களில் ஒருவர் திருக்கோணமலையைச் சேர்ந்த ரஜீவ் காந்த். அவர் ஓர் அரசியல் செயற்பாட்டாளர். தென்னிலங்கையில் நடந்த “அரகலய” தன்னெழுச்சிப் போராட்டங்களில் காணப்பட்ட தமிழர்களில் முக்கியமானவர்.

இவர் மருத்துவர் மனோகரனின் மகனின் பாடசாலையில் சமகாலத்தில் படித்தவர். அந்த ஐந்து மாணவர்களும் கொல்லப்பட்ட சம்பவத்தில் அரும்பொட்டில் உயிர் தப்பியவர். அந்த மாணவர்கள் வழமையாக ஒரு சிமெண்ட் கட்டில் உட்கார்ந்திருந்து கதைப்பதுண்டாம். அவர்களோடு சேர்ந்து இருந்திருக்க வேண்டிய ரஜீவ் அன்றைக்கு வேறொரு அலுவல் காரணமாக அங்கே வரப் பிந்திவிட்டது. அதற்குள் எமன் அவரை முந்திக் கொண்டு விட்டான்.

அந்த நினைவு நிகழ்வில் பேசும் பொழுது அவர் சொன்ன பல விடயங்களில் ஒன்று அந்த ஐந்து மாணவர்களில் ஒருவராகிய யோகராஜா ஹேமச்சந்திராவின் மூத்த சகோதரனைப் பற்றியது. கொல்லப்பட்ட தனது தம்பியின் பூத உடலை அழுதழுது தூக்கி கொண்டு வரும் அவருடைய அண்ணனை இப்பொழுதும் அதில் சம்பந்தப்பட்ட ஒளிப்படங்களில் காணலாம் என்று ரஜீவ் சொன்னார். ஆனால் அந்த அண்ணனும் இப்பொழுது இல்லை.

ஹேமச்சந்திரனின் மூத்த சகோதரன் திருக்கோணமலையில் இயங்கிய “அக்சன் பெய்ம்” (Action Against Hunger) என்று அழைக்கப்படுகின்ற பிரான்ஸை மையமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனத்தில் வேலை செய்தவர். நாலாம் கட்ட ஈழப் போரின் தொடக்க நாட்களில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பதினேழு உள்ளூர் ஊழியர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹேமச்சந்திரா கொல்லப்பட்ட ஐந்தே மாதங்களில் அவருடைய அண்ணனும் மூதூரில் தனது சக ஊழியர்களோடு கொல்லப்பட்டு விட்டார். அந்த குடும்பத்துக்கு ஐந்து மாதங்களில் இரண்டு இழப்பு.

அந்தக் குடும்பத்தில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரண்டு இழப்புக்களுக்கும் இன்றுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் ஐநாவும் பெரும்பாலான உலக நாடுகளும் நம்புகின்றனவா, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக இலங்கையில் நிலைமாறு கால நீதியை நிலைநாட்டலாம் என்று?

ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் கூடிய கருத்தரங்கில் பேசிய யாருமே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை நம்பவும் இல்லை. அவர்கள் பேசிக் கொண்டிருந்த மேடையில் பின்னணியில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவர் மனோகரனின் விழிகள், அழுதழுது களைத்துப் போன அந்த விழிகள், அங்கிருந்து எல்லாரையும் எதிர்பார்ப்போடு உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தன.

https://www.nillanthan.com/7832/

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

4 weeks ago
🤣 அவர் அப்படி ஒரு கூட்டணி (பாஜக வோடு சேர்ந்து) சேர்ந்தால் - எனது மானசீக வாக்கு திமுகவுக்கு. பிகு நான் எழுதுவதை வாசிக்கிறீர்கள்தானே அண்ணை? எனது நிலைப்பாடு என்ன என்பதையிட்டும் நீங்கள் கனவில் இருப்பது போல உள்ளது.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

4 weeks ago
இதில் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார் என்பது தொட்டு பல சீமானின் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். இவை ஏலவே பல திரிகளில் அடித்து நொருக்கப்பட்ட வாதங்கள் என்பதை வாசகர் அறிவர். யாழில் கட்சி பிரச்சாரம் செய்யத்தடை என்பதால் - என்னை கேள்வி கேட்டு… ஒரு நூதன பிரச்சாரம் செய்ய முனைகிறீர்கள் என்பது தெரிகிறது🤣. ஆனால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விடை தேவை எனில் யாழில் “சீமான்” என தேடி, அதில் நான் எழுதிய கருத்துக்களை வாசித்தால் பதில்கள் கொட்டி, கொட்டி கிடக்கும்🤣.