இங்கிலாந்து எதிர் இத்தாலி இது அடிக்கடி உதை பநதாட்டத்தில் பார்க்கும் போட்டி. இப்போது துடுப்பந்தாட்டத்திலும். இத்தாலிக்கு ஏழு கிரகமும் ஒரு சேர அமைஞ்சா, இங்கிலாந்த ஓட விடலாம். ஏனென்றால், இங்கிலாந்து அணி அப்பிடி.
நாளை திங்கள் 16 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG எதிர் UAE 22 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஐக்கிய அமீரகம் நிலாமதி இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்குமா? 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG எதிர் ITA 21 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் இருவர் மாத்திரம் இத்தாலி அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். இத்தாலி சுவி நிலாமதி இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS எதிர் SL 18 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும் ஐந்து பேர் மாத்திரம் சிறிலங்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். சிறிலங்கா கறுப்பி வாதவூரான் கிருபன் கோஷான் சே ரசோதரன் இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
நாளைக்கு அப்கானிஸ்தான் வெல்லுது முதல் வெற்றி நாளைக்கே................தோக்க வாய்ப்பு மிக மிக குறைவு................அப்கானிஸ்தான் இனி வரும் விளையாட்டுக்களை வென்றாலும் சூப்பர்8க்கு போக முடியாது..................தென் ஆபிரிக்கா கூட நடந்த விளையாட்டை யாரும் எளிதில் மறக்க மாட்டினம்.................................
இன்று 250 கிலோமீற்றர் மழைக்குள் பயணம் செய்யவேண்டியிருந்ததால் ஒரு மட்ச்சும் பார்க்கவில்லை! திரும்பவும் 250 கிலோமீற்றர் ஓடி, வந்த கையுடன் முதல்வேலையாகப் புள்ளிகளைத்தான் கணக்கிட்டேன்.☺️ ஆவலுடன் காத்திருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் 🤩 அதுதானே!😜
இன்று நடந்த விளையாட்டில் சிறு விறுவிறுப்பு கூட இல்லை................பாக்கிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு சிறு பயத்தை காட்டவும் இல்லை..............வும்ரான்ட முதல் பந்துக்கு சிக்ஸ் அடிச்ச பாக்கிஸ்தான் இளம் வீரர் வும்ரா அடுத்த பந்தை யோக்கரா போடுவார் என்று எதிர் பார்க்க வில்லை பாக்கிஸ்தான் தொடக்க இளம் வீரர் இனி வரும் விளையாட்டில் சாதிப்பார் பெடியன் வேர 4ஓவர் போட்டு மூன்று விக்கேட் எடுத்தது பாராட்ட தக்கது....................மட்டையடியில் தான் சுதப்பி விட்டார்..............................
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி, டிபேந்திர சிங் ஐரீயின் வேகமான 58 (47 பந்துகளில்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆடாததால் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் ஆட்டமிழக்காத அதிரடியான 61 (44 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிம்ரோன் ஹெட்மயரின் ஆட்டமிழக்காத வேகமான 46 (32) ஓட்டங்களுடனும் 15.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் 134 ஓட்டங்கள் எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாகவும் தகுதி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த @வாத்தியார் க்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி சஞ்சய் கிருஷ்ணமூர்த்தியின் ஆட்டமிழக்காத மின்னல்வேக 68 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், மொனாக் பட்டேலின் புயல்வேக 52 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோரன் ஸ்டீன்கம்ப்பின் வேகமான 58 (39 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆடிப் பங்களிக்காததால் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ஐக்கிய அமெரிக்கா அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை. எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டஇந்திய அணி இஷன் கிஷானின் மின்னல்வேக 77 (40 பந்துகள்) ஓட்டங்களுடனும், சூரியகுமார் யாதவின் நிதானமான 32 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பற்கொடுத்து வெளியேறியதால் 34 ஓட்டங்களிலேயே 4 முக்கிய நட்சத்திர விக்கெட்டுகளை இழந்திருந்தது. விக்கெட் காப்பாளர் உஸ்மான் கான் அதிரடியாக 44 ஓட்டங்களை எடுத்த போதிலும் அவரின் விக்கெட் வீழ்ந்த பின்னர் எவரும் நிலைத்து ஆடாததால் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: முதல்வர் நாற்காலியிலும் இறுதி சுமைதாங்கியிலும் மாற்றம் இல்லை!
எனது தெரிவு அவுஸ்ரேலியா................அவுஸ்ரேலியா இலங்கையை வென்று விடும்..............இலங்கை சிம்பாவேய வென்றால் அவுஸ்ரேலியா வெளிய...................
போட்டிகள் முடிஞ்சு எவ்வளவு நேரம் ஆயிற்று. கிருபன் ஐயா கொஞ்சம் ஒருக்கால் வந்து இன்றைக்கு கதிரையில் குந்துவது யார் சுத்த வர நின்று கதிரையை பிடித்து ஆட்டுவது யார் யார் என்ற ஒழுங்கை சட்டு புட்டு என்று அறிவிச்சுவிட்டு போனால் நாங்கள் எங்கள் வேலைகளை பார்க்க போயிடலாம்.
வார இறுதி முழுவதும் வேலை அத்துடன் ஒரு சின்ன அணியினை பெரிய அணி துவைத்து எடுப்பதனை பார்க்க ஏனோ மனம் வருவதில்லை, ஆனால் இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் வேலை இடைவேளையில் பார்த்திருப்பேன். சிம்பாவே ஓமானுடன் விளையாடும் போட்டி வேலையிடையே சிறிது பார்த்தேன், ஒமானுக்கு புள் செய்யமுடியாமலும் கட் செய்ய முடியாமலும் ஒரு லெந்தில் மிக துல்லியமாக பந்து வீசினார்கள், இவர்கல் சுப்பர் 8 போவார்கள் போல இருக்கிறது.