Aggregator

ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி

1 month ago
"போர் முடிவது செலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது" உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வருவது ஜெலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். உக்ரைனில் அமைதியை கொண்டுவர விரும்புவதாக புதின் கூறியிருந்த நிலையில், டிரம்ப் கருத்து. Thanthi TV ஆஹா... பந்து இப்ப, செலென்ஸ்கியின் கையில். 😂

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month ago
"போர் முடிவது செலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது" உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வருவது ஜெலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். உக்ரைனில் அமைதியை கொண்டுவர விரும்புவதாக புதின் கூறியிருந்த நிலையில், டிரம்ப் கருத்து. Thanthi TV ஆஹா... பந்து இப்ப, செலென்ஸ்கியின் கையில். 😂

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month ago
🔴 “No deel but progress has been made” யுக்ரைன் மீதான யுத்தம் குறித்தான அலஸ்கா பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு பேசும்போது “ஒப்பந்தங்கள் எதுவும் செய்துக்கொள்ளப்படவில்லை ஆனால் முன்னேற்றம் ஏற்பட்டது” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். 6 வருடங்களின் பின்னர் இந்த வரலாற்று சந்திப்பு அமெரிக்க - ரஷ்ய ஜனாதிபதிகளிடையே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

‘ராஜபக்‌ஷக்களின்  அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன

1 month ago
வேண்டுமென்றே வதந்தியை பரப்பி மக்களை அதன் பக்கம் திருப்ப முனைகிறார்கள் என்றே நினைக்கிறன். அப்படியா? அப்போ எதற்காக முன்னாள் ஜனாதிபதி சொல்லிக்கொள்ளாமல் நாட்டை விட்டு ஓடினார்? எப்படி ஆட்சி ரணிலின் கைக்குள் போனது? நான் நினைக்கவில்லை நாமலுக்கு அந்த தகுதியோ அதிஷ்டமோ இருக்கென்று. அப்படி இருந்திருந்தாலும் அதை அவர் அப்பாவும் சித்தப்பாவும் கெடுத்து விட்டனர்.

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

1 month ago
இன்னும் ஐம்பது வயதைக் கூட அவர் எட்டவில்லை. பள்ளிக் காலத்திலிருந்தே அவரைப் பல வழிகளில் போட்டிகள், கழகங்கங்கள், தனியார் வகுப்புக்கள் என அவதானித்ததிலிருந்து மிகவும் பண்பான அமைதியான சுபாவம் கொண்ட மிகுந்த தன்னடக்கமுடைய மாணவன். கடின மான உழைப்பாளி. உயிரியல் துறையில்மிக இக்கட்டான வசதிகளற்ற போராட்ட காலத்தில் அதிசிறந்த புள்ளிகள் நிலைகளைப் பெற்றதால் நாடளாவிய தெரிவுப் பட்டியலில் கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குச் சென்ற விரல்விட்டு எண்ணக்கூடிய வைத்திய மாணவர்களில் அவரும் ஒருவர். நான் புலம்பெயர்ந்த தேசத்திற்கு வந்தபின்னர் யாழ்.வைத்தியசாலையிலோ அல்லது நோர்த்தேர்ண் இதர பல வைத்தியசாலைகளிலோ அவர் கையாலே மருத்துவம் சத்திரசிகிச்சை பெற்று குணமடைந்த ஏத்தனையோ பேர் அவரை வாயார வாழ்த்தி புகழ்ந்ததைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து இருக்கின்றேன். சில ஆண்டுகளிற்கு முன்னர் என் சகோதரனிற்கு ஒரு சத்திரசிகிச்சை முடிந்த போது மிகச் சாதாரணமாக பல கவனிப்புகள் பற்றி அக்கறையாக சற்று சாவகமாகவே உரையாடினார். இன்னும் எத்தனையோ பேர் இவரின் சத்திர சிகிசாசைக்காக காத்திருப்புப் பட்டியலில் இருந்து கொண்டிருப்பதாக அப்பப்போ கூறுவர். கண்ணூறு பட்டது போல காலையிலே காலன் காவு கொண்ட செய்தி காதுகளில் எட்டியும் கண்களில் பட்டும், இன்னும் நெஞ்சம் நம்ப மறுக்கின்றது. ஜனவரியில் பிறந்ததால் ஆண்டொன்று முந்தியே கற்க வாய்ப்புக்கிடைத்தது. ஆனாலும் அகவை ஐம்பதை அடைய முன்னர் அவசரப்பட்டு யமதர்மன் அகாலத்தில் அக்கரைக்கு அழைத்ததேனோ. அவர் தம் பாரியார், குழந்தைகளுக்கு ஆறுதல் கூறவே முடியாது நம்மால். ஆண்டவன் அவர்களுக்கு மிகுந்த தாங்கும் சக்தியுள்ள மனவலிமையைக் கொடுக்க வேண்டும். அன்னாரின் இழப்பு யாழ் . மருத்துவ சமூகத்திற்கு ஒரு ஈடுசெய்யப்பட முடியாத ஒரு பேரிழப்பாகும்.. அன்னாரின் ஆத்மா பரிபூரண சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவவனைப் பிரார்த்திப்போமாக. Sarulatha Ramachandran

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

1 month ago
ஒரு சிறந்த சத்திர சிகிச்சை நிபுணரை யாழ் போதனா வைத்தியசாலையும் யாழ் சமூகமும் இழந்து நிற்கின்றன, 50 வயதில் ஒரு இளம் குடும்பத்தை தவிக்க விட்டு இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றதை நினைத்து மனம் கனக்கின்றது. சுவாமி விவேகானந்தர், சுப்பிரமணிய பாரதி போன்றோர் 40 வயதில் பலதைச் சாதித்துச் சென்றது போல சுதர்சனும் 50 வயதில் நிறைய சாதித்து பலரின் அபிமானத்தை பெற்றுள்ளது சமூக வலைப்பதிவுகளில் இருந்து தெரிகின்றது. மாதம் ஓரிரு பதிவுகள் மட்டுமே போடும் வகையைச் சேர்ந்த ஒருவராக எனது முகநூல் நண்பராகவும் இருந்துள்ளார். அன்னாருக்கு எனது அஞ்சலிகளையும், அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உறவினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஓம் சாந்தி, சாந்தி சாந்தி!😢 Kumar Ganesh

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

1 month ago
யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் திடீர் மறைவு – மருத்துவ சமூகத்திற்கு பேரிழப்பு. .................................................................................. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் அவர்கள், இன்று திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஒரு ஒப்பற்ற தர்மமாகவும் இருந்த காலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காக போராடும் உறுதியும் கூடிய மருத்துவராக டாக்டர் சுதர்சன் விளங்கினார். அவசர சத்திர சிகிச்சைகள், அரிய வகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர் செய்த பங்களிப்பு, யாழ் மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும். அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரை நோக்கி வரும் எதுவும் ஒரு "மருத்துவரின் மேன்மை" என்பதற்கான சான்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர்; அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது. அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், உணர்வுபூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். "ஒரு நல்ல மருத்துவர் ஆயுள் நீட்டிக்கிறார்; ஆனால் ஒரு சிறந்த மருத்துவர் நம்பிக்கையை உயிராக்குகிறார். டாக்டர் சுதர்சன் அந்த சிறந்தவர்களில் ஒருவராகவே இருந்தார்." அவரது ஆத்மா சாந்தியடையட்டும். Thangamuthu Sathiyamoorthy ·

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month ago
ஆண்மையுள்ள வவுனியா வர்த்தக சங்கம்: சுமந்திரனுக்கு முதல் அடி! ஹர்த்தால் என்பது தேவையற்றது, ஏன் தேவையற்றது என்பது தொடர்பிலும் முன்னைய பதிவில் போட்டிருந்தேன். தவிர சுமந்திரன் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து ஹர்த்தாலுக்கு ஆதரவு கேட்டு வந்தார், ஆனால் ஆண்மையுள்ள வர்த்தக சங்கம் சுமந்திரனின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நானும் வலியுறுத்தியிருந்தேன். அந்த வகையில் வவுனியா வர்த்தக சங்கம் சரியான முடிவை துணிச்சலாக எடுத்திருக்கின்றது. இந்த முடிவு சாதாரணமானது இல்லை, தமிழர்கள் நலனை தாண்டி சுமந்திரனை முதல் முறை நேரடியாக எதிர்த்து ஒரு முடிவை வவுனியா வர்த்தக சங்கம் எடுத்திருக்கின்றது. இதில் உங்களுக்குள் ஒரு கேள்வி வரும் சுமந்திரன் அவ்வளவு பெரிய ஆளா என்று, ஆம் எல்லாத்துக்கும் ஜிங் ஜக் போட்டு எதாவது பதவிகளை பெற வேண்டும் என்று நினைக்கிற, தற்போது பெற்றிருக்கிற அனைவருக்கும் அவர் பெரிய ஆள்த்தான். ஒருவருக்கு அரசியல் ஆசை, அதிகாரம் மீது மோகம் இருக்கின்றது என்றால் அவர்கள் அதை அடைய தற்போது வரை நாடுகின்ற கட்சி தமிழரசு கட்சிதான், அப்படி இருக்கும் போது அங்கு சுமந்திரனுக்கு செம்பு தூக்கினால்தான் இந்த அற்பர்களுக்கு எதாவது பதவி எலும்பு துண்டாக கிடைக்கும். அப்படி இருக்கும் போது வவுனியா வர்த்தக சங்கத்தில் இருக்கிறவர்களுக்கும் அரசியல் ஆசை, அதிகார மோகம் இருக்கலாம், ஆனால் அதற்காக விலை போகாமல் இந்த முடிவை எடுத்ததற்கு பாராட்டுக்கள். இனி ஏனைய வர்த்தக சங்கங்கள் இந்த முடிவை முன்மாதிரியாக வைத்து சுமந்திரன் மீது விசுவாசம் இருந்தாலும், என்ன தலைவரே வவுனியா வர்த்தக சங்கம் இப்படி செய்து விட்டார்கள், இனி நாங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்தால் மக்கள் மதிக்கமாட்டார்கள், ஆகவே கடை மூட முடியாது என்று முடிவெடுக்கலாம். ஆக மொத்தத்தில் ஹர்த்தால் இல்லை, அத்தோடு நான் நினைத்தால் எதை வேண்டுமென்றாலும் எந்த வழியிலோ செய்து முடிக்கலாம் என்று நினைக்கிற சுமந்திரனுக்கு இது நேரடியாக மக்கள் கொடுக்கும் முதல் செருப்படியாக அமையும். Nadarasa Jeyakanthan

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month ago
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ ரா ரா ரீரோ ஆண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும் அன்புதான் வெல்லுமே எந்த நாளும் ஆண் : ஒளி எங்கு போகும் உன்னை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பி செல்ல நஞ்சம் இல்லையே பெண் : கண்ணோரம் கொட்டும் மின்னல் அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற வெக்கம் அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே பெண் : உன் வாசம் தாயாய் தலை கோத மனம் பூக்குதே நெற்றி முத்தம் வைக்குதே தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே பாடல் நீயே ஓஓ ஆண் : இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன் வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன் என்னவோ என்னிலே வண்ணமாய் பொங்குதே ஆண் : ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ ....... ! --- நெஞ்சமே நெஞ்சமே ---

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month ago
அலஸ்காவில் நடந்த மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பூட்டினே திரும்பி செல் go home போகும் போது டிரம்பையும் கூட்டி கொண்டு போ என்றது மிக சரியானது 👌

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

1 month ago
இன்றைய இளம் தலைமுறை தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் அசாத்திய திறமையுடன் விளங்குவது போலவே சிலர் சில குடும்பங்களைச் சிதைப்பதற்கும் தங்கள் திறமைகளைப் பாவிக்கின்றார்கள் . ........ !

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month ago
ஒரு யுத்த குற்றவாளியான விளாடிமிர் புடினுக்கு கவுரவம் கொடுப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி இந்த சந்திப்பை நடத்தினார். இவரை எல்லாம் ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்த அமெரிக்க மக்கள் 😭

கொஞ்சம் ரசிக்க

1 month ago
ஒவ்வொரு நாடும் எப்படியெல்லாம் யோசித்து மக்களின் நலனையும் தேசத்தின் நலனையும் முன்னேறுகின்றார்கள் என்பதை நினைக்க கண்ணெல்லாம் வேர்க்குது . ......... ! 😇