1 month ago
நீங்கள் குறிப்பிடும் "பின் கதவால் வெளியேறிய" சம்பவம் முகநூல் ஊடகங்களிலும், தமிழ் வின் எனும் ரொய்லெற் ஊடகத்திலும் வந்த விபரிப்புகள். உண்மையில் நூலகத்தின் உள்ளே விக்கியர், சுமந்திரன் உட்பட்டவர்களுடன் கமெரூனுடன் சந்திப்பு நடந்தது. அனந்திக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிருக்கவில்லை. எனவே வெளியே நின்று ("ஒரு பெண்ணாக இருந்த போதும்"😂- உங்கள் வரிகளில்) ஓடிப் போய் மகஜர் கொடுத்தார். நான் இணைத்த படத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் கடந்து போய் விட்டு முகனூல் அலட்டல்களை உண்மைச் செய்திகள் போல இன்னும் தூக்கித் திரிகிறீர்கள்! உங்களுடைய இந்த உண்மை காண விரும்பாத கண்மூடித் தனத்தைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன். உங்களுக்குப் பச்சை போட்டவருக்கும் இதே "கண் மூடிப் பாசம்" சுமந்திரன், சாணக்கியன் மேல் இருக்கிறது. இதை உங்கள் பாரதக் கருத்துகளை வாசிப்போர் அறிய வைப்பதே என் நோக்கம்! உங்களுக்கெல்லாம் ஆதாரம் தேடி நிரூபித்து கண் திறக்க வைக்கும் "நாய் வால் நிமிர்த்தும்" வேலைக்கு என்னிடம் நேரமில்லை😎!
1 month ago
https://ta.wikipedia.org/s/etz7
1 month ago
https://www.youtube.com/watch?list=PL7giNTqcylTGO9xwLvnGiKOhNrdFVO0Xy&v=yOANmw4Kb6k [138 Hits by Eelam Artist]
1 month ago
உலகளாவிய ரீதியில் முதல் முறையாக டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகம்! 11 Dec, 2025 | 04:19 PM ( செ.சுபதர்ஷனி) நாட்டில் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 மாவட்டங்களை பிரதான கேந்திர நிலையமாகக் கொண்டு சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவால், டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செம்பிறை சங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டத்தை வியாழக்கிழமை (11) கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. இந்தத் திட்டமானது, டெங்கு ஒழிப்பை மையமாகக் கொண்ட உலகளாவிய முதலாவது ஆரம்ப செயல்திட்டமாகும். அனர்த்தங்களுக்கு எதிர்வினையாற்றும் நிலையிலிருந்து உயிர்களைக் காக்கும் முன்கூட்டிய பொதுச் சுகாதார நடவடிக்கைக்கு சமூகத்தை பழக்கப்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார சவாலாக உள்ளது. நாட்டில் பருவகால மழை மற்றும் அண்மையில் பதிவான `தித்வா' சூறாவளி போன்ற வானிலை மாற்றங்களின் போது அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாவதை காணமுடிகிறது. அவ்வாறன மழைக்காலங்களின் பின்னர் நுளம்புகள் பெருகி, பாரிய நோய் தொற்றாக பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன்னரே உரிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உயிர்களைப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் பாதிப்பைக் குறைத்து அதிக ஆபத்துள்ள பகுதிகளில் நோயைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வருட புதிய திட்டம் 2025 ஜூலை முதல் 2027 ஜுன் மாதம் வரை செயற்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய ஐந்து மாவட்டங்களை பிரதானக் கேந்திர நிலையங்களாகக் கொண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகள் நிறுவனங்கள், பாடசாலைகள் என தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயற்பாட்டு ரீதியான தெளிவூட்டல் நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட உள்ளன. https://www.virakesari.lk/article/233091
1 month ago
உலகளாவிய ரீதியில் முதல் முறையாக டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகம்!
11 Dec, 2025 | 04:19 PM

( செ.சுபதர்ஷனி)
நாட்டில் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 மாவட்டங்களை பிரதான கேந்திர நிலையமாகக் கொண்டு சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவால், டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செம்பிறை சங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டத்தை வியாழக்கிழமை (11) கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது.
இந்தத் திட்டமானது, டெங்கு ஒழிப்பை மையமாகக் கொண்ட உலகளாவிய முதலாவது ஆரம்ப செயல்திட்டமாகும்.
அனர்த்தங்களுக்கு எதிர்வினையாற்றும் நிலையிலிருந்து உயிர்களைக் காக்கும் முன்கூட்டிய பொதுச் சுகாதார நடவடிக்கைக்கு சமூகத்தை பழக்கப்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார சவாலாக உள்ளது.
நாட்டில் பருவகால மழை மற்றும் அண்மையில் பதிவான `தித்வா' சூறாவளி போன்ற வானிலை மாற்றங்களின் போது அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாவதை காணமுடிகிறது.
அவ்வாறன மழைக்காலங்களின் பின்னர் நுளம்புகள் பெருகி, பாரிய நோய் தொற்றாக பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன்னரே உரிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உயிர்களைப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் பாதிப்பைக் குறைத்து அதிக ஆபத்துள்ள பகுதிகளில் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
தற்போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வருட புதிய திட்டம் 2025 ஜூலை முதல் 2027 ஜுன் மாதம் வரை செயற்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய ஐந்து மாவட்டங்களை பிரதானக் கேந்திர நிலையங்களாகக் கொண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடுகள் நிறுவனங்கள், பாடசாலைகள் என தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயற்பாட்டு ரீதியான தெளிவூட்டல் நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட உள்ளன.
https://www.virakesari.lk/article/233091
1 month ago
யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்! 11 Dec, 2025 | 04:18 PM வீட்டு வேலைகளுக்கு என 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 13 வயது சிறுமியை தனது வீட்டு வேலைக்கு என சிறுமியின் பெற்றோரிடமிருந்து சிறுமியை நீண்ட காலமாக அழைத்து சென்று வந்துள்ளார். வீட்டுக்கு அழைத்து செல்லும் நபர் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியை , வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233090
1 month ago
யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்!
11 Dec, 2025 | 04:18 PM

வீட்டு வேலைகளுக்கு என 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 13 வயது சிறுமியை தனது வீட்டு வேலைக்கு என சிறுமியின் பெற்றோரிடமிருந்து சிறுமியை நீண்ட காலமாக அழைத்து சென்று வந்துள்ளார்.
வீட்டுக்கு அழைத்து செல்லும் நபர் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியை , வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/233090
1 month ago
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி Dec 11, 2025 - 02:17 PM ஐக்கிய நாடுகள் சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிர்களுடன் இணைந்து, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயன்று வருவதாக இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே தெரிவித்துள்ளார். இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 'டித்வா' புயலால் நாடு முழுவதும் பெரும் அழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐ.நா. பேரிடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஏழு துறைகளை உள்ளடக்கிய ஒரு முன்னுரிமைப் பட்டியலைத் தயாரித்துள்ளதாகக் கூறினார். அரசாங்கம் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்குகின்றது என்றும், ஐ.நா. மற்றும் பிற உள்ளூர், சர்வதேச பங்காளிகள் பல துறைகளில் தமது ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சிக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவுடன் ஐ.நா. ஏற்கனவே 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது என்று இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே குறிப்பிட்டார். ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் வரும் மாதங்களில் மேலும் 26 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmj173foj02mso29nyu991pvt
1 month ago
புற்றுநோய் உண்டாக்கும் மரபணு கொண்ட நபர் மூலம் பிறந்த சுமார் 200 குழந்தைகள் - என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,Shutterstock படக்குறிப்பு,கோப்புப்படம் கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர், சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், நடாலி ட்ரஸ்வெல், புலனாய்வுத் தயாரிப்பாளர் 26 நிமிடங்களுக்கு முன்னர் உடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு குறைபாடு தனக்கு இருப்பது பற்றி தெரியாமல், உயிரணு தானம் மூலம் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள நபர் குறித்து விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது இந்த தானதாரரிடமிருந்து பிறந்த சில குழந்தைகள் ஏற்கனவே மரணம் அடைந்துள்ளனர். இந்த மரபணு குறைபாட்டை பெற்ற குழந்தைகளில் வெகு சிலரே வாழ்க்கையில் புற்றுநோய் வராமல் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இந்த உயிரணு பிரிட்டன் மருத்துவமனைகளுக்கு விற்கப்படவில்லை. ஆனால், சில பிரிட்டிஷ் குடும்பங்கள் (அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது) டென்மார்க்கில் கருத்தரிப்பு சிகிச்சை எடுத்தபோது அந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட தானத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. இதனை விற்ற டென்மார்க்கின் ஐரோப்பிய உயிரணு வங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்கள் "ஆழ்ந்த அனுதாபங்களைத்" தெரிவித்ததுடன், சில நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற இந்த தானம் பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டது. பட மூலாதாரம்,Getty Images 17 ஆண்டுகளாக தானம் இந்த ஆய்வு, பிபிசி உட்பட 14 பொதுச் சேவை ஒளிபரப்பாளர்களால், ஐரோப்பிய ஒளிபரப்பு ஒன்றியத்தின் புலனாய்வு இதழியல் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுள்ளது. இந்த தானம் ஒரு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து பெறப்பட்டது. அவர், மாணவராக இருந்ததில் இருந்து 2005 ஆம் ஆண்டு முதல் தானம் செய்யப் பணம் பெற்று வந்தார். சுமார் 17 ஆண்டுகளாகப் பல பெண்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நபர் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார், மேலும் தானமளிப்பவருக்கான அனைத்துப் பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும், அவர் பிறப்பதற்கு முன்பே அவரது சில செல்களில் உள்ள டிஎன்ஏ உருமாற்றம் அடைந்தது. இது, உடலின் செல்கள் புற்றுநோய் செல்களாக மாறுவதைத் தடுக்கும் மிக முக்கியமான பணியைச் செய்யும் டிபி53 மரபணுவை சேதப்படுத்தியது. தானமளித்தவரின் உடலின் பெரும்பகுதி இந்த ஆபத்தான டிபி53 மரபணுவைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் தானம் அளித்த உயிரணுவில் 20% வரை அந்த மரபணு உள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட உயிரணுவிலிருந்து உருவாகும் எந்தக் குழந்தைக்கும் இந்த மரபணுக் குறைபாடு அவர்களின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். லி ஃபிராமெனி சிண்ட்ரோம் (Li Fraumeni syndrome) என்று அழைக்கப்படும் இது, 90% வரை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாகப் குழந்தைப் பருவத்திலும், வாழ்க்கையின் பிற்பகுதியில் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இதில் அடங்கும். "இது ஒரு பயங்கரமான நோயறிதல்," என்று லண்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த புற்றுநோய் மரபியல் நிபுணர் பேராசிரியர் கிளார் டர்ன்புல் பிபிசியிடம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இது ஒரு குடும்பத்தின் மீது திணிக்கப்படும் மிகச் சவாலான நோயறிதல் . இந்த அபாயத்துடன் வாழ்வது வாழ்நாள் முழுவதும் ஒரு சுமை. இது வெளிப்படையாகவே ஆபத்தை ஏற்படுத்தும்"என்றும் குறிப்பிட்டார். கட்டிகளைக் கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் உடல் மற்றும் மூளையின் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் வயிற்றுப் பகுதியின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் தேவைப்படுகின்றன. பெண்கள் பெரும்பாலும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கத் தங்கள் மார்பகங்களை அகற்றும் முறையைத் தேர்வு செய்கிறார்கள். "தானமளித்தவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நோய்வாய்ப்படவில்லை" என்றும், இத்தகைய மாற்றம் "முன்கூட்டியே மரபணு பரிசோதனைகளில் கண்டறியப்படுவதில்லை" என்றும் ஐரோப்பிய உயிரணு வங்கி தெரிவித்துள்ளது. பிரச்னை கண்டறியப்பட்டவுடன், தானமளித்தவரை "உடனடியாகத் தடுத்துவிட்டதாக" அது கூறுகிறது. ஏற்கனவே இறந்துவிட்ட சில குழந்தைகள் இந்த தானத்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கவனித்து வந்த மருத்துவர்கள், இந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய மனித மரபியல் சங்கத்தின் கூட்டத்தில் தங்கள் கவலைகளை எழுப்பினர். அப்போது அறியப்பட்ட 67 குழந்தைகளில் 23 பேருக்கு அந்தக் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பத்து பேருக்கு ஏற்கனவே புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. தகவல் அறியும் உரிமை கோரிக்கைகள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுடனான நேர்காணல்கள் மூலம், தானம் செய்த நபருக்கு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்துள்ளனர் என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இந்த எண்ணிக்கை குறைந்தது 197 குழந்தைகள் ஆக இருக்கலாம் எனத் தெரிய வந்தது. ஆனால் அனைத்து நாடுகளிலிருந்தும் தரவுகள் பெறப்படாததால், இது இறுதி எண்ணிக்கையாக இருக்காது. மேலும், இந்தக் குழந்தைகளில் எத்தனை பேர் அந்த ஆபத்தான மரபணுக் குறைபாட்டைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு மருத்துவர் காஸ்பர் உதவி செய்து வருகிறார். 14 நாடுகளில் பிரான்சில் உள்ள ரூவன் பல்கலைக்கழக மருத்துவமனையின் புற்றுநோய் மரபியல் நிபுணரான மருத்துவர் எட்விஜ் காஸ்பர், இதுகுறித்த ஆரம்ப தரவுகளை வழங்கியிருந்தார். இந்த புலனாய்வுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஏற்கனவே புற்றுநோய் பாதித்த பல குழந்தைகளை எங்களுக்கு தெரியும்"என்றார். மேலும் "சில குழந்தைகளுக்கு இரண்டு விதமான புற்றுநோய்கள் கூட ஏற்பட்டுள்ளன. அவர்களில் சிலர் மிக இளவயதிலேயே உயிரிழந்துவிட்டார்கள்" என்றும் அவர் கூறினார். பிரான்சில் உள்ள செலின் (அவரது உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது), 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் தானத்தை பயன்படுத்தி ஒரு குழந்தையைப் பெற்றார். அவரது குழந்தைக்கும் இந்தக் குறைபாடு உள்ளது. அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை மேற்கொண்ட கருவுறுதல் கிளினிக்கில் இருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், அவரது மகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தும்படி அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். தானமளித்தவர் மீது தனக்கு "எந்தவிதக் கோபமும் இல்லை" என்று செலின் கூறுகிறார். ஆனால் "சுத்தமாக இல்லாத, பாதுகாப்பற்ற, ஆபத்தை ஏற்படுத்திய" உயிரணு தனக்கு வழங்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தங்கள் வாழ்நாள் முழுவதும் புற்றுநோயின் ஆபத்து அவர்களைச் சூழ்ந்திருக்கும் என்பதையும் அவர் அறிவார். "அது எப்போது வரும், எந்தப் புற்றுநோய் வரும், மற்றும் எத்தனை முறை வரும் என்று எங்களுக்குத் தெரியாது," என்று கூறும் செலின், "அது நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அது நடக்கும்போது, நாங்கள் போராடுவோம், அது பல முறை வந்தால், நாங்கள் பல முறை போராடுவோம்"என்கிறார். அந்த தானம், 14 நாடுகளில் உள்ள 67 கருவுறுதல் கிளினிக்குகளால் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்த நபரின் தானம் பிரிட்டன் கிளினிக்குகளுக்கு விற்கப்படவில்லை. ஆனால், பிரிட்டிஷ் பெண்கள் டென்மார்க்கிற்குப் பயணம் செய்து, அந்த நபரின் தானத்தை பயன்படுத்தி கருவுறுதல் சிகிச்சையைப் பெற்றுள்ளனர் என திங்கட்கிழமை அன்று டென்மார்க் அதிகாரிகள் பிரிட்டனின் மனித கருவுறுதல் மற்றும் கருவியல் ஆணையத்திற்கு (ஹெச்எப்ஃஈஏ) அறிவித்தனர். அந்தப் பெண்களுக்குத் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "மிகக் குறைந்த எண்ணிக்கையிலான" பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், "அவர்கள் சிகிச்சை பெற்ற டென்மார்க் கிளினிக்கால் அந்த நபரைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் ஹெச்எப்ஃஈஏ-வின் தலைமை நிர்வாகியான பீட்டர் தாம்சன் கூறினார். தானம் விநியோகிக்கப்பட்ட மற்ற நாடுகளில், ஏதேனும் பிரிட்டிஷ் பெண்கள் சிகிச்சை பெற்றார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்துக் கவலை கொண்ட தம்பதிகள், தாங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட கிளினிக் மற்றும் அந்த நாட்டில் உள்ள கருவுறுதல் ஆணையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தானமளித்தவர் நல்ல எண்ணத்துடன் தானம் செய்தார் என்பதாலும், பிரிட்டனில் அந்த தானத்தை பயன்படுத்தியதாகத் தெரிந்த குடும்பங்களுக்கு ஏற்கனவே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்பதாலும், அந்த நபரின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று பிபிசி முடிவு செய்துள்ளது. உலகளவில் தானம் செய்யும் ஒரு நபரின் உயிரணு, எத்தனை முறை பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து எந்தச் சட்டமும் இல்லை. இருப்பினும், சில நாடுகள் தங்களது சொந்த வரம்புகளை நிர்ணயிக்கின்றன. இந்த வரம்புகள் சில நாடுகளில் "துரதிர்ஷ்டவசமாக" மீறப்பட்டுவிட்டதை ஐரோப்பிய உயிரணு வங்கி ஏற்றுக்கொண்டதுடன், அது "டென்மார்க் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்" கூறியது. பெல்ஜியத்தில், ஒரு நபரின் தானம் ஆறு குடும்பங்களால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக வெவ்வேறு 38 பெண்கள் இந்த நபரின் தானத்தின் மூலம் 53 குழந்தைகளைப் பெற்றுள்ளனர். அதுபோல், ஒரு நபரின் தானம் பத்து குடும்பங்களால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என பிரிட்டனின் வரம்பு உள்ளது. பட மூலாதாரம்,Getty Images 'எல்லாவற்றையும் ஸ்கிரீன் செய்ய முடியாது' ஷெஃபீல்ட் உயிரணு வங்கியை நடத்தி வந்தவரும், தற்போது மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவம் மற்றும் சுகாதார துறையின் துணைத் தலைவராக இருப்பவருமான பேராசிரியர் ஆலன் பேசி, நாடுகள் பெரிய சர்வதேச உயிரணு வங்கிகளைச் சார்ந்துவிட்டதாகவும், பிரிட்டனின் உயிரணுவில் பாதி இப்போது இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் கூறினார். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், "நாங்கள் பெரிய சர்வதேச உயிரணு வங்கிகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அவை மற்ற நாடுகளுக்கும் விற்கின்றன, ஏனென்றால் அவர்கள் பணம் சம்பாதிக்கும் விதம் அப்படித்தான் உள்ளது. எத்தனை முறை பயன்படுத்தலாம் என்று சர்வதேச சட்டம் இல்லாததால், அங்கேதான் பிரச்னை தொடங்குகிறது"என்றார். இந்தச் சம்பவம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் "மோசமானது"என்று கூறிய அவர், ஆனால் உயிரணுவை முற்றிலும் பாதுகாப்பாக ஆக்குவது சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டார். "உங்களால் எல்லாவற்றையும் ஸ்கிரீன் செய்ய முடியாது. தற்போதைய ஸ்கிரீனிங் முறையில் தானம் செய்ய விண்ணப்பிக்கும் ஆண்களில் 1% அல்லது 2% பேரை மட்டுமே நாங்கள் ஏற்கிறோம். எனவே, அதை இன்னும் கட்டுப்படுத்தினால், தானமளிப்பவர்களே இருக்க மாட்டார்கள்."என்று அவர் விளக்கினார். தானத்தின் மூலம் 550 குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு நபர் தானம் செய்வதை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்ட சம்பவத்துடன், தற்போதைய இந்தச் சம்பவமும் சேர்ந்து, தானம் குறித்து கடுமையான வரம்புகள் வகுக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. ஐரோப்பிய மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியல் சங்கம் சமீபத்தில் ஒரு தானமளிப்பவருக்கு 50 குடும்பங்கள் என்று வரம்பை பரிந்துரைத்துள்ளது. எனினும், இது அரிய மரபணு நோய்களைப் பெறும் அபாயத்தைக் குறைக்காது என்றும் அது கூறியது. "உலகளவில் ஒரே நன்கொடையாளர்களிடமிருந்து பிறக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று கருவுறாமை மற்றும் மரபணு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் ஒரு சுயாதீன தொண்டு நிறுவனமான முன்னேற்றக் கல்வி அறக்கட்டளையின் இயக்குனர் சாரா நோர்கிராஸ் கூறினார். "ஒரே தந்தையைப் பகிர்ந்து கொள்ளும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் இருப்பதன் சமூக மற்றும் உளவியல் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. அது அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். "குறிப்பாக இந்த விஷயத்தில், ஆயிரக்கணக்கான பெண்களும் தம்பதிகளும் தானம் உதவியின்றி குழந்தை பெற வாய்ப்பில்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம்" என்று ஐரோப்பிய உயிரணு வங்கி கூறியது. ''தானமளிப்பவர்கள் மருத்துவ வழிகாட்டுதல்களின்படி ஸ்கிரீன் செய்யப்பட்டால், தானத்தின் உதவியுடன் குழந்தையைப் பெறுவது பொதுவாகப் பாதுகாப்பானது" என்றும் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images என்ன செய்வது? தானம் செய்பவருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தச் சம்பவங்கள் "மிக மிக அரிதானவை" என்று சாரா நோர்கிராஸ் கூறினார். நாங்கள் பேசிய அனைத்து நிபுணர்களும், அங்கீகாரம் பெற்ற மருத்துவ மையத்தில் பெறப்படும் தானம், நன்கு பரிசோதிக்கப்பட்டு இருக்கு என தெரிவித்தனர். வழக்கமான ஒரு தந்தை குழந்தை பெறுவதற்கு முன்பு செய்யும் நோய் கண்டறியல் பரிசோதனையை விட இங்கு அதிக பரிசோதனைகள் செய்யப்படும் என அவர்கள் கூறினர். "இவர் பிரிட்டனில் இருந்து தானமளித்தவரா அல்லது வேறு பகுதியைச் சேர்ந்தவரா?" எனக் கேட்பேன் என்று பேராசிரியர் பேசி கூறினார். மேலும், "தானம் செய்த அந்த நபர், வேறு பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால், 'இது இதற்கு முன் பயன்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது இதற்கு மேல் எத்தனை முறை பயன்படுத்தப்படும்?' என்று கேள்விகளைக் கேட்பது நியாயமானது "என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g4w31yw8ro
1 month ago
இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி Dec 11, 2025 - 12:22 PM அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் இன்று (11) இலங்கை வந்துள்ளார். பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தல், பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக துணைச் செயலாளர் ஹூக்கர் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் எமது மக்களின் செழிப்பு ஆகியவற்றிற்கான பரஸ்பர உறுதிப்பாட்டில் வேரூன்றிய ஒரு வலுவான மற்றும் நீடித்த பங்காண்மையினை அமெரிக்காவும் இலங்கையும் பகிர்ந்துகொள்கின்றன. இராணுவ, வர்த்தக மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பின் ஊடாக, சுதந்திரமான, திறந்த மற்றும் மீண்டெழும் தன்மை கொண்ட ஒரு இந்தோ-பசுபிக் பிராந்தியத்தினை மேம்படுத்துவதற்காக இலங்கையும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுகிறது. எமது மூலோபாய பங்காண்மையினை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது, டித்வா புயலின் பேரழிவுகரமான தாக்கங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை இலங்கை மக்கள் மேற்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்கா அவர்களுடன் துணை நிற்கிறது. எமது இரு நாடுகளுக்கும் இருக்கின்ற உடனடி சவால்கள் மற்றும் நீண்டகால வாய்ப்புகள் ஆகிய இரண்டு விடயங்களையும் எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அமெரிக்க-இலங்கை பங்காண்மைக்கான எமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை இது பிரதிபலிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmj12z9bu02mko29n8zljzo4i
1 month ago
இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி
Dec 11, 2025 - 12:22 PM

அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் இன்று (11) இலங்கை வந்துள்ளார்.
பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தல், பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக துணைச் செயலாளர் ஹூக்கர் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் எமது மக்களின் செழிப்பு ஆகியவற்றிற்கான பரஸ்பர உறுதிப்பாட்டில் வேரூன்றிய ஒரு வலுவான மற்றும் நீடித்த பங்காண்மையினை அமெரிக்காவும் இலங்கையும் பகிர்ந்துகொள்கின்றன.
இராணுவ, வர்த்தக மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பின் ஊடாக, சுதந்திரமான, திறந்த மற்றும் மீண்டெழும் தன்மை கொண்ட ஒரு இந்தோ-பசுபிக் பிராந்தியத்தினை மேம்படுத்துவதற்காக இலங்கையும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுகிறது.
எமது மூலோபாய பங்காண்மையினை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது, டித்வா புயலின் பேரழிவுகரமான தாக்கங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை இலங்கை மக்கள் மேற்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்கா அவர்களுடன் துணை நிற்கிறது.
எமது இரு நாடுகளுக்கும் இருக்கின்ற உடனடி சவால்கள் மற்றும் நீண்டகால வாய்ப்புகள் ஆகிய இரண்டு விடயங்களையும் எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
அமெரிக்க-இலங்கை பங்காண்மைக்கான எமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை இது பிரதிபலிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
https://adaderanatamil.lk/news/cmj12z9bu02mko29n8zljzo4i
1 month ago
வெனிசுவேலா கடற்கரையில் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா பட மூலாதாரம்,US Government கட்டுரை தகவல் கெய்லா எப்ஸ்டீன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா கடற்கரையோரத்தில் இருந்த ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோ அரசுக்கு எதிராக அமெரிக்கா செலுத்தும் அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. "நாங்கள் இப்போதுதான் வெனிசுவேலா கடற்கரையில் ஒரு டேங்கர் கப்பலைக் கைப்பற்றியுள்ளோம். இது ஒரு பெரிய டேங்கர், மிகப் மிகப் பெரியது, உண்மையில் இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப் பெரியது," என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட கப்பலின் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க அட்டர்னி ஜெனரல், இந்தக் கப்பல், "வெனிசுவேலா மற்றும் இரானிலிருந்து தடைசெய்யப்பட்ட எண்ணெயை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு கச்சா எண்ணெய் டேங்கர்." என்று விவரித்தார். இந்த நடவடிக்கையை உடனடியாக கண்டித்த வெனிசுவேலா, இதை "சர்வதேச கடற்கொள்ளை" என்று கூறியது. முன்னதாக, அதிபர் மதுரோ, வெனிசுவேலா ஒருபோதும் "எண்ணெய் காலனியாக" மாறாது என்று அறிவித்திருந்தார். வெனிசுவேலா அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கடத்துவதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது. கூடவே, அதிபர் மதுரோவை தனிமைப்படுத்தும் முயற்சிகளைச் சமீப மாதங்களாகத் தீவிரப்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகப்பெரியதான எண்ணெய் இருப்புகளில் சிலவற்றைக் கொண்டுள்ள வெனிசுவேலா, அமெரிக்கா தனது வளங்களைத் திருட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கப்பல் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, குறுகிய கால விநியோகக் கவலைகளால் பிரெண்ட் க்ரூட் எண்ணெய் விலை புதன்கிழமையன்று சிறிது உயர்ந்தது. இந்த நடவடிக்கை கப்பல் நிறுவனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதியை மேலும் பாதிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க சட்டம் ஒழுங்கு அமலாக்கத்துறைக்குத் தலைமைத் தாங்கும் அட்டர்னி ஜெனரல் பாம் போன்டீ, இந்த பறிமுதல் நடவடிக்கையை மத்திய புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்புத்துறை, உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை ஒருங்கிணைத்ததாக தெரிவித்தார். "பல ஆண்டுகளாக, வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சட்டவிரோத எண்ணெய் கப்பல் போக்குவரத்து வலையமைப்பில் ஈடுபட்டதற்காக, இந்த எண்ணெய் கப்பல் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டுள்ளது," என்று நாட்டின் தலைமை வழக்கறிஞர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். போன்டீ வெளியிட்ட காட்சிகளில், ஒரு ராணுவ ஹெலிகாப்டர் ஒரு பெரிய கப்பலின் மேல் வட்டமிடுவதையும், கயிறுகள் மூலம் வீரர்கள் கப்பலின் தளத்தில் இறங்குவதும் காட்டப்பட்டது. துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய சீருடை அணிந்த வீரர்கள் கப்பலில் அசையும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன. உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டில் இருந்து, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் ஏவப்பட்டதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார். அந்த விமானம் தாங்கிக் கப்பல் கடந்த மாதம் கரீபியன் பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையில் இரண்டு ஹெலிகாப்டர்கள், 10 கடலோர பாதுகாப்பு வீரர்கள், 10 கடற்படையினர் மற்றும் சிறப்பு படையினரும் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த நடவடிக்கையைக் குறித்து அறிந்திருந்தார், மேலும் டிரம்ப் நிர்வாகம் இது போன்ற கூடுதல் நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருவதாக ஒரு நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் சிபிஎஸ்ஸுக்குத் தெரிய வந்தது. டேங்கரில் உள்ள எண்ணெயை அமெரிக்கா என்ன செய்யும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, டிரம்ப், "அதை நாங்களே வைத்துக்கொள்வோம் என நினைக்கிறேன். எண்ணெயை நாங்கள் தான் வைத்துக்கொள்ளப் போகிறோம் எனக் கருதுகிறேன்," என்று கூறினார். கடல்சார் ஆபத்துகளை கண்காணிக்கும் வான்கார்ட் டெக் நிறுவனம், அந்தக் கப்பலை ஸ்கிப்பர் என்று அடையாளம் கண்டு, அது நீண்ட காலமாக தனது இருப்பிடத்தை "ஸ்பூஃபிங்" அதாவது, போலியான இருப்பிடத்தை ஒளிபரப்பி வந்திருக்கலாம் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது. ஹெஸ்புலா மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை-குட்ஸ் படைக்கு வருவாய் ஈட்டித் தரும் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அமெரிக்க கருவூலத் துறை 2022-ஆம் ஆண்டில் ஸ்கிப்பர் கப்பலுக்கு தடைவிதித்ததாக சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி வெரிஃபை, இந்த டேங்கர் கப்பலை மரைன் டிராஃபிக்கில் கண்டுபிடித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு அதன் நிலை கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டபோது அது கயானா நாட்டுக் கொடியின் கீழ் பயணித்துக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது. இருப்பினும், புதன்கிழமையன்று மாலை கயானாவின் கடல்சார் நிர்வாகத் துறை வெளியிட்ட அறிக்கை, ஸ்கிப்பர் "தவறாகக் கயானா கொடியைப் பறக்கவிட்டது, ஏனெனில் அது கயானாவில் பதிவு செய்யப்படவில்லை." என்று கூறியது. முன்னதாக புதன்கிழமையன்று ஒரு பேரணியில் பேசிய அதிபர் மதுரோ, வெனிசுவேலாவுடனான போரை எதிர்த்த அமெரிக்கர்களுக்கு ஒரு செய்தியை 1988-ஆம் ஆண்டு பிரபல பாடலின் வடிவில் வழங்கினார். மதுரோ ஸ்பானிஷ் மொழியில், "போருக்கு எதிரான அமெரிக்க குடிமக்களுக்கு, நான் ஒரு பிரபலமான பாடலின் மூலம் பதிலளிக்கிறேன், கவலைப்படாதீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள்." என்று கூறிவிட்டு, 1988ம் ஆண்டு பிரபல பாடலின் வரிகளைப் பாடினார். அப்போது, "போர் வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள். வேண்டாம், வேண்டாம் மோசமான போர் வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள்" எனும் வரிகளைக் குறிப்பிட்டார். இந்தப் பேரணிக்கு முன்பு டேங்கர் கைப்பற்றப்பட்டதைப் பற்றி மதுரோ அறிந்திருந்தாரா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. சமீப நாட்களாக, அமெரிக்கா வெனிசுவேலாவின் வடக்கு எல்லையாக இருக்கும் கரீபியன் கடலில் தனது ராணுவ இருப்பை அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான படையினரும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு (USS Gerald Ford) விமானந்தாங்கி கப்பலும் வெனிசுவேலாவுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று பிபிசி வெரிஃபை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஏதேனும் ஒரு வகையான ராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. செப்டம்பர் மாதம் முதல், அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் குறைந்தது 22 தாக்குதல்களை நடத்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் இந்த படகுகள் போதைப்பொருள் கடத்துவதாகக் கூறுகிறது. இந்தக் தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் இறந்துள்ளனர். (இந்த செய்திக்காக, பிரேசிலின் சா பாலோவில் இருந்து ஐயோன் வெல்ஸ் பங்களித்துள்ளார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz68n2yln64o
1 month ago
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கள வைத்திய சேவை! 11 Dec, 2025 | 03:55 PM வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கண்டி - மஹியங்கனை பகுதியில் கள வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய இராணுவத்தின் கள வைத்திய சேவைகளை சுகாதார பிரதி அமைச்சர் முதிதா ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் கண்டிக்கு நெரில் சென்று பார்வையிட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணும் வழங்கும் சேவைகளுக்கு சுகாதார பிரதி அமைச்சரும் செயலாளரும் பாராட்டை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/233087
1 month ago
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கள வைத்திய சேவை!
11 Dec, 2025 | 03:55 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கண்டி - மஹியங்கனை பகுதியில் கள வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய இராணுவத்தின் கள வைத்திய சேவைகளை சுகாதார பிரதி அமைச்சர் முதிதா ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் கண்டிக்கு நெரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணும் வழங்கும் சேவைகளுக்கு சுகாதார பிரதி அமைச்சரும் செயலாளரும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.



https://www.virakesari.lk/article/233087
1 month ago
நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அங்கீகாரம் Dec 11, 2025 - 04:12 PM சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாககட்டியெழுப்புவதற்காக அவ்வாறான உட்கட்டமைப்பு வசதிகள் விடயப்பரப்பு தொடர்பான வெளிநாட்டுநிதியின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் அவசர பதில்வினையாற்றல் கூறுகளை இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmj1b7iq702n1o29ny4ps7xtm
1 month ago
நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அங்கீகாரம்
Dec 11, 2025 - 04:12 PM

சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாககட்டியெழுப்புவதற்காக அவ்வாறான உட்கட்டமைப்பு வசதிகள் விடயப்பரப்பு தொடர்பான வெளிநாட்டுநிதியின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் அவசர பதில்வினையாற்றல் கூறுகளை இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
https://adaderanatamil.lk/news/cmj1b7iq702n1o29ny4ps7xtm
1 month ago
சுகர் மருந்து எடுக்காவிட்டால் அல்லது இரத்தச் சக்கரை அளவுகள் கட்டுப்பாடில்லாது இருந்தால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதோடு கண்ணும் பாதிக்கப்படும். மாற்று மருத்துவம் செய்பவர்கள் குறைந்தபட்சம் இரத்தச் சக்கரை அளவுகளை கிழமைக்கு ஒரு தடவை அல்லது மாதம் இருமுறை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்.
1 month ago
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 03 பகுதி: 03 - யாழ்ப்பாண நூலகத்தின் வழியாக ஒரு நடைப்பயணம்: மாலை கதிரவன் யாழ்ப்பாணத்தின் சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட தெருக்களில் மெதுவாக அமர்ந்திருந்தது. ஆரன் தங்கி இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல், யாழ் நகர மையத்துக்குள் இருந்த காரணத்தால், அனலி தன் ஸ்கூட்டரில் அங்கு தனியாக வந்து, ஆரனும் அனலியும் யாழ்ப்பாண பொது நூலகத்தை நோக்கி நடந்தார்கள். அவள் இன்று யாழ் நகருக்குள் மட்டுமே நிற்பதாலும், வீட்டில் இருந்தே வருவதாலும், அக்காவின் மகளை கூட்டிவரவில்லை. நூலகத்தின் வெள்ளை குவிமாடங்கள் அறிவுக் கோயில் போல வானத்தில், பனைமரங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து நின்றது. ஆரன், அங்கு அருகில் வந்ததும், தன் நடையை கொஞ்சம் இடைநிறுத்தி விட்டு, அதன் பிரமாண்ட புது கட்டிடத்தையும் அழகையும் பார்த்தான். ஆரன்: “இந்த நூலகம் அனைத்து தமிழர்களின் பெருமை என்று என் இரண்டு பாட்டாவும் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள். அங்கு அரச சிங்கள காடையர்களாலும் அரச காவலர்களாலும் தொண்ணூறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், பனை ஓலைகள் ... முற்றாக எரிக்கப்பட்டது, எங்கள் மக்களின் ஆன்மா எரிக்கப்பட்டது போல இல்லையா” என்று கேட்டதும் அனலியின் கண்கள் நினைவுகளால் மங்கின. அனலி: “ஆம். 1981 இல் அது எரிந்தபோது என் தாத்தாவும் அழுதார் என்றும், எங்கள் கடந்த காலம் சாம்பலாக மாறுவதைப் பார்ப்பது போல் இருந்தது என்றும், அவர் என்னிடம் கூறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஆம், இத்தனை வருடங்களுக்குப் பிறகும், நாங்கள் இன்னும் அந்த காயத்தை சுமக்கிறோம்.” என்றாள். மேலும் யாழ் நூலகம் எரிந்தபொழுது அதன் தலைமை நூலகராக கடமையாற்றிய, திருமதி ரூபவதி நடராஜா எழுதிய 'யாழ்ப்பாணம் பொது நூலகம், அன்றும் இன்றும்' என்ற தமிழ் புத்தகம் மற்றும் சந்தரெசி சுதுதுங்க, இன்றைய சிங்கள இலக்கிய கவிஞர், எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், சிங்களத்தில் எழுதிய “தீப்பற்றிய சிறகுகள்" என்ற கவிதை தொகுப்பு கட்டாயம் வாசிக்க வேண்டியவை என்றாள். யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார் நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல் தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம் ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம் இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில் ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது அவர்கள் இருவரும் புதுப்பிக்கப்பட்ட புனித மண்டபங்களுக்குள், தங்கள் காலணிகளை வெளியே கழட்டிவிட்டு, உள்ளே நுழைந்தனர். வெள்ளைச் சுவர்கள் மின்னின, அலமாரிகள் மீண்டும் புத்தகங்களால் நிரம்பியிருந்தன. ஆனாலும் ஆரன் ஒரு பேயைப் போல ஒரு அமைதி நீடித்ததை உணர்ந்தான். அவன் கிசுகிசுத்தான்: “இது மீண்டும் அழகாக இருக்கிறது, ஆனால் நீ உணர்கிறாயா ... இந்த அழகு எரிந்த அரிய புத்தகங்கள், ஏடுகள் இல்லாமல் முழுமையடையும் என்று?” அனலி: “ஏனென்றால் நினைவை முழுமையாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. எரிந்த பக்கங்கள் - சங்க இலக்கியப் பிரதிகள், ஓலை கையெழுத்துப் பிரதிகள் - அவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. இருப்பினும், அதை மீண்டும் கட்டியெழுப்புவது நமது எதிர்ப்பு. நாம் அழிக்கப்பட மாட்டோம் என்பதைக் எடுத்துக் காட்ட.” ஆரன், அங்கே அலமாரியில் இருந்த புத்தகங்களில் ஒன்றைத் தொட்டான். அது கனமாக இருப்பதாக உணர்ந்தான், அதன் எடையால் அல்ல, அது சுமந்து சென்ற வரலாற்றால். அவர்கள் நூலகத்தின் உள்ளே இன்னும் ஆழமாக நடந்து செல்லும் போது, ஆரன் மெதுவாக அனலியை நோக்கினான். “அனலி, நான் ஏன் உன்னுடன் இங்கு வர விரும்பினேன் தெரியுமா?” என்று கேட்டான். அனலி (மெல்லச் சிரித்தபடி): “நூலகத்தைப் பார்க்கத்தானே?” என்றாள். ஆரன்: “இல்லை. புத்தகங்களை மட்டுமல்ல, ஒரு மக்களின் ஆன்மாவையும் பார்க்கத்தான். அதை தன் இரத்தத்தில் உணரும் ஒருவருடன் நினைவுபடுத்திக் கொள்ளத்தான். இந்த நூலகம் மீண்டும் கட்டப்பட்டது, ஆனால் இன்னும் வடுக்களை சுமந்து கொண்டு இருந்தாலும் அது பலத்துடன் எழுந்து நிற்கிறது. இப்போது உன்னைப் பார்க்கும் போது, நீயே இந்த நூலகம் போல தோன்றுகிறாய், அதே பலத்தை உன்னிலும் நான் காண்கிறேன்” என்றான். அனலியின் கன்னங்கள் சிவந்து, அவள் தன் பார்வையைத் மறுபக்கம் திரும்பினாள். என்றாலும் அவள் கை அருணின் கையை இன்னும் இறுக்கமாக பிடித்தது. அந்த நொடியில், நூலகத்தின் சுவர்கள் சாம்பலின் நினைவைக் கூறின, ஆனால் அந்த சாம்பலின் நடுவே ஒரு விதை முளைத்தது போல, ஆரனின் உள்ளத்தில் அனலி மலர்ந்தாள். “நீயே என் வேர்,” என்ற அவன் சொற்கள் பழைய ஓலைச் சுவடிகளின் சப்தத்தைப் போல அனலியின் உள்ளத்தில் ஒலித்தன. அந்த நொடியில்— மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன, மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின, நூலகத்தின் அமைதி இரு இதயங்களுக்கான தெய்வீகத் தாலாட்டானது. அவர்கள் ஒரு ஜன்னல் அருகே அமர்ந்தனர், சூரிய ஒளி உள்ளே ஊடுருவியது. பழைய காகிதத்தின் வாசனை அவர்களைச் சுற்றி மிதந்தது. அனலி: “ஆரன், புலம்பெயர்ந்தோர் (Diaspora) ஏன் திரும்பி வர வேண்டும் என்று உனக்குப் புரிகிறதா? எரிந்துபோன நூலில் சில பக்கங்கள், சில சொற்கள் அழிந்துபோயிருக்கும். அவற்றை நாம் மீண்டும் எழுதிக்கொள்ள முடியாது. ஆனாலும் மீதமுள்ள பக்கங்களின் வழியே அந்த நூல் இன்னும் வாழ்கிறது. அதுபோலவே, அழிந்தாலும், சிதைந்தாலும், ஒரு இனத்தின் வரலாறு, கலாசாரம், நினைவுகள் இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு தலைமுறையினரும் (diaspora உட்பட) திரும்பி வருவதும், பேசுவதும், எழுதுவதும்—அந்தக் கதையைத் தொடரும் ஒரு முயற்சியே ஆகும். அதனால்த்தான் அவர்களின் ஒவ்வொரு வருகையும் மற்றும் நினைவுகளும் அழிந்த பக்கத்தின் பின் தொடரும் எழுத்தாகிறது" என்றாள். ஆரன்: “ஆம். அது உண்மையே, நாம் திரும்பி வராவிட்டால், கடைசிப் பக்கம் காலியாகவே இருக்கும். ஒருவேளை நம் காதல் கதை கூட, மீண்டும் எதையாவது எழுதுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம்?” என்றான். அவர்களின் இந்த புரிந்துணர்வுகளாலும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மரியாதையாலும், நினைவுகளின் அலமாரிகளில், ஆரன் மற்றும் அனலியின் பிணைப்பு ஆழமடைந்தது. அது இரண்டு இதயங்களின் அன்பு மட்டுமல்ல, ஒரு மக்களின் அமைதியான சபதம்! நெருப்பிலும் கூட அறிவு நிலைத்திருக்கும். புலம்பெயர்ந்தாலும் கூட காதல் தன் தாய் மண்ணில் மலரும். 'சொற்கள் எரிந்தாலும், நூலின் சுவாசம் எரியாது பக்கங்கள் சிதைந்தாலும், கதை மறைவதில்லை நினைவின் சாம்பலில் இருந்து, புதிய வரிகள் பறவையாய் பறக்கும் ஒவ்வொரு தலைமுறையும், அழிந்த பக்கத்தின் பின் தொடரும் எழுத்தாக மாறும்' மறுநாள் காலை, ஆரன் மற்றும் அனலி யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை புத்த ஸ்தூபி தளத்தின் இடிபாடுகளுக்கு முன் நின்றனர். அங்கே பனை மரங்களால் சூழப்பட்ட சூரியனுக்குக் கீழே அவை வெள்ளை குவிமாடங்களாக மின்னின. இது கிட்டத்தட்ட கி.மு. 3ம் நூற்றாண்டு – கி.பி. 2ம் நூற்றாண்டு காலத்தில் பயன்பட்ட ஒரு பழமையான கல்லறை / மெகாலிதிக் தளம் [ancient burial site / megalithic site] ஆகும். அங்கு கண்டு எடுக்கப்பட பொருள் கலாச்சாரம் [material culture] - பானைகள், மணிகள் மற்றும் கல்வெட்டுகள்- pots, beads, and inscriptions - வலுவான தமிழ் தென்னிந்திய தொடர்புகளைக் காட்டுகிறது, இது 2000 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் மக்கள் இருந்ததை உறுதிப்படுத்துவதுடன், ஆரம்பகால தமிழர்களில் சிலர் பௌத்த மதத்தைப் பின்பற்றியதையும் கூறுகிறது என்று அனலி பெருமையுடன் விளக்கினார். “பாருங்கள், ஆரன் ... தமிழர்கள் ஒரு காலத்தில் எப்படி பௌத்த மதத்தில், கி.மு. 3ம் நூற்றாண்டு – கி.பி. 2ம் நூற்றாண்டு காலத்தில் இணக்கமாக வாழ்ந்தார்கள் என்பதைக் இது வெளிப்படையாக காட்டுகிறது. நமது நிலம் போர்களை மட்டுமல்ல, ஞானத்தையும் சுமந்தது. ஆனால் இன்று அது சிங்கள பௌத்தமாக, ஐந்தாம் ஆறாம் ஆண்டில், பாளியில் எழுதிய மகாவம்ச பௌத்தமாக, தமிழரை பிரிப்பதே, இன்றைய முக்கிய பிரச்சனை, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இந்த கால கட்டங்களில், கி.பி 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8 ஆம் நூற்றாண்டு வரை சிங்களம், ப்ரோட்டோ-சிங்களமாக [Proto-Sinhala] மட்டுமே இருந்தது ” என்றாள். மேலும் எண்ணற்ற தொன்மையான தமிழர் வாழ்வியலை தன்னுள் அடக்கிக் கொண்டு இனவாத அடக்குமுறையில் வெளிப்படாமல் இராணுவ பிரசன்னத்தோடு இன்னும் இருக்கிறது. இது இன்று சிங்களத்திடம் மாட்டி அதன் பெயர் கதுருகொட என மாற்றியமைக்கப்பட்டது என்று அழுத்தமாக கூறியவள், தமிழர்வாழ்வியல் ஆய்வில் கீழடி ஆதிச்ச நல்லூர் போல ஆய்வு செய்யப்பட வேண்டிய பெரு நிலப்பகுதி ஆகும் என்றாள். ஆரன் அவள் சொல்லுவதை உன்னிப்பாக கேட்டான், ஆனால் அவன் கண்கள் கந்தரோடை இடிபாடுகளை விட அவள் மீது அதிகமாக பதிந்தன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கற்கள் இன்னும் உயிர்வாழ முடியும் எனறால், ஒருவேளை காதல் கூட, அது உண்மையாக இருந்தால், பல நூற்றாண்டுகளாக, தாஜ்மகால் போல் வாழலாம் என்று அவன் சிந்தனை விசித்திரமாக விரிவடைந்தது. அனலி அவனது மௌனத்தை, எதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்தாள். உடனே, "நீ என்ன யோசிக்கிறாய்?" என்று ஆச்சரியமாக கேட்டாள். அவன் தயங்கினான், பின்னர் சிரித்தான். “ஒருவேளை ஒரு நாள், மக்கள் இந்தக் கற்களைப் பற்றி மட்டுமல்ல... நம்மைப் பற்றியும் பேசுவார்கள்.” என்றான். அங்கு காணப்பட்ட கல்லுக் கோபுரத்தை [ஸ்தூபங்களைப்] பார்ப்பது போல் நடித்து, அவள் மறு பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவள் வரலாற்றை கற்றுத்தருபவள் என்ற நிலையிலிருந்து, இப்போது வரலாறாக வாழ்கிறவள் என்ற உணர்வில், அவளின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது. “காலம் கடந்தும் நிற்கும் கோபுரம் போல, நம் காதலும் ஒருநாள் வரலாறாகிப் போகலாம்” என்று அவளின் இதயம் எழுதிக்கொண்டு இருந்தது. பின் அனலி மெதுவாக அவன் காதில், "ஆரன், அப்பா உன்னை நம்பி, என்னை அனுப்பினார் உனக்கு வரலாறு காட்டிட , கற்பிக்க ... ஆனால் நான் இப்ப என் இதயத்தையே கையளிக்கிறேன்.” என்றாள். " நானும் கூட என்னவாம், … நான் நிலத்தின் வேர் தேட வந்தேன், ஆனால் கண்ட வேர் ... ” அவன் அதற்கு மேல் சொல்லவில்லை. மௌனமாக அனலியை பார்த்துக்கொண்டு நின்றான். ஒருவேளை அனலியின் அப்பாக்கு கொடுத்த வாக்குறுதி தடுத்திருக்கலாம்? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் துளி/DROP: 1936 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 03] https://www.facebook.com/groups/978753388866632/posts/32777130171935540/?
1 month ago
இதே போன்ற சம்பவம் லங்காவில் நடந்து இருந்தால் இப்ப என்ன நடந்து இருக்கும் ?
1 month ago
எந்தப் பால்.😁