Aggregator

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து செல்கிறது ; பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது - வடக்காமாகாண மாவட்ட செயலர்கள் குற்றச்சாட்டு

4 weeks 1 day ago

11 Oct, 2025 | 03:45 PM

image

(எம்.நியூட்டன்)

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்  வெள்ளிக்கிழமை (10)  நடைபெற்றபோதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி, கால்நடை கடத்தல், கோஷ்டி போதல் போன்றவை அதிகரித்துள்ளன. இவை தொடர்பாக முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்கள் பொலி சாருக்கு வழங்கப்பட்டாலும் சில வேளைகளில் அசமந்த போக்குடன் பொலிசார் நடந்துகொள்கின்றமையால்  இவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுட்டி காட்டியுள்ளார்கள். 

யாழ்ப்பாண மாவட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவிக்கும்போது, 

போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி என்பன இடம்பெறுவதாகவும்  கால்நடைகள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு மண்டைத்தீவு சந்தி மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி ஆகிய இடங்களில் பொலிஸ் காவலரணங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒலிபெருக்கி பாவனைக்கான கட்டணம் பொலிஸார் அறவிடுகின்றமையால் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும்போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பும் பொலிஸாருக்கு உள்ளது என தெரிவித்தார். 

மன்னார் மாவட்டத்தில், பெண் பொலிஸாரின் பற்றாக்குறை, சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி தொடர்பான பிணக்குகளில் பிரதேச செயலர்களுடன் இணைந்து செயற்பட பொலிஸார் தவறுகின்றமை ஆகிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு விற்பனை மிகப் பிரதான பிரச்சினையாக உள்ளதாகவும் அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபடும் குடும்பங்கள் தொடர்பான விவரங்களை திரட்டியுள்ளபோதிலும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவுதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் மற்றும் கால்நடைகள் கடத்தல் என்பனவும் நடைபெறுவதாகச் தெரிவித்தார். 

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும் கல்லாறை அண்மித்து காட்டை அழித்து மணல் அகழ்வு நடைபெறுகின்றது எனத் தெரிவித்தார்.

அங்கு அகழப்படும் மண்ணை விற்பனைக்காக சேகரித்து வைக்கும் இடத்துக்கு கொண்டு வரப்படும் பாதையில் பொலிஸ் காவலரண் அமைப்பதன் ஊடாக இதனைத் தடுக்கலாம்  கௌதாரிமுனை கடற்கரைக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு இளையோர் வருவதாகவும் அங்கு மதுபானம் அருந்தி விட்டு முரண்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டதுடன்  பொலிஸ் காவலரண் அங்கு அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதேநேரம், பாடசாலை மாணவர்களுக்கு பச்சைகுத்தும் நிலையங்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார். இவ்வாறாக மாடவட்ட ரிதியாக குற்ரச்சாட்டுகள் முன்வைத்தனர். 

IMG-20251011-WA0004.jpg

IMG-20251011-WA0017__1_.jpg

https://www.virakesari.lk/article/227481

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 1 day ago
இல‌ங்கை சொந்த‌ ம‌ண்ணில் ப‌டு தோல்வி😋.................... இங்லாந்தில் ந‌ட‌ந்த‌ ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இங்லாந்தை இல‌ங்கை ம‌களிர் அணி இரண்டு முறை தோக்க‌டிச்ச‌வை ஆனால் சொந்த‌ மண்ணில் இல‌ங்கை ம‌க‌ளிரீன் விளையாட்டு ச‌ரி இல்லை நான‌ய‌த்தில் வென்ற‌ கையோட‌ ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்க‌னும்................................. நீங்க‌ள் சொன்ன‌ மாதிரியே ந‌ட‌ந்து விட்ட‌து நான‌ய‌த்தில் வென்றால் உந்த‌ மைதான‌த்தில் ம‌ட்டைய‌ தான் தெரிவு செய்து இருக்க‌னும் பந்து வீச்சை தெரிவு செய்த‌து த‌வ‌று என‌ நான் நினைக்கிறேன்....................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 1 day ago
🤣............... வளவுக்குள்ள வாழைக்குலை ஒன்றை பழுத்திட்டுதே என்று இப்ப கிட்டடியில் வெட்டினோம்........... இந்தப் பிள்ளைகளை பார்க்க அந்த பழுத்த வாழைக்குலை தான் ஞாபகத்தில் வருகின்றது............ வர வர என்னுடைய போக்கே சரியில்ல............ காய்களை பார்க்க வேண்டிய இடத்திலும் பழங்கள் தான் கண்ணுக்குத் தெரியுது.............. ஒரு துறவியாக, ஞானியாக மாறிக் கொண்டிருக்கின்றேன் போல..............😜.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 1 day ago
வ‌சி அண்ணா செம்பாட்ட‌ன் அண்ண‌ வாதாவூர‌ன் ச‌கோ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா............. இல‌ங்கை வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள் 11 உற‌வுக‌ள் இங்லாந்தை தெரிவு செய்து இருக்கின‌ம்.....................................

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

4 weeks 1 day ago
இதை பகிர்ந்த அதே ஆள்தான் மேலே பாரதியாரை எல்லாம் இழுத்து சாம்பு மவன் வேம்பு, சங்கி இல்லை என எழுதினார் என்பதை சபையோர் கருத்தில் எடுக்க வேண்டும்🤣. NTK = RSSS என்பது இதைத்தான்.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

4 weeks 1 day ago
உங்களை போல் நான் எங்கும் பாஜக இருக்கும் கூட்டணி வெல்வதை வரவேற்று எழுதவில்லை. அப்படி ஒரு உடன்பாட்டுக்கு விஜை போனால் அவரும் போலியே.

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

4 weeks 1 day ago
ஏற்கனவே கூட்டிய வரியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 10 பில்லியன் டாலர் செலவு செய்யப் போவதாக சென்றகிழமை தான் அறிக்கை விட்டார்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 1 day ago
இல‌ங்கை ம‌க‌ளிர் உட‌ம்பில் ஏற்ப‌ட்ட‌ காய‌ம் கார‌ண‌மாக‌ வெளியில் , அவா இனி இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ மாட்டா போல் இருக்கு😞............... இல‌ங்கை ம‌க‌ளிர் உட‌ம்பில் ஏற்ப‌ட்ட‌ காய‌ம் கார‌ண‌மாக‌ வெளியில் , அவா இனி இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ மாட்டா போல் இருக்கு😞.................

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

4 weeks 1 day ago
அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் கொள்கை எதிரியை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்படும்.காரித்துப்பினால் துடைச்சுக் கிட்டு அரசியலில் இதெல்லாம் சாதரணம்ப்பா என்று அள்ளி விட்டுப் போகவேண்டியதுதான்எல்லோரும் போலி தவெகதான் அசல்.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

4 weeks 1 day ago
https://www.facebook.com/share/p/1ZR8ABCqth/?mibextid=wwXIfrமிஸ்டர் வேம்பு, சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனம் உங்களிடம் இருக்கிறது. உலகம் முழுவதும் 180 நாடுகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருக்கு நீங்கள் நேரடியாக வேலை வாய்ப்பு கொடுத்து வருகிறீர்கள். இவ்வளவு வலிமையும் வெற்றியும் படைத்த நீங்கள் சிலிக்கான் வேலியின் உயரமான கண்ணாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் அமர்ந்து உலகத்தை ஆட்சி செய்திருக்கலாம், அல்லது சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் பல் அடுக்கு கட்டிடங்களின் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து உங்களது நிறுவனங்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால், இதையெல்லாம் விட்டு, ஏன் தென்காசி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமான மத்தளம்பாறையில் ஏ.சி கூட இல்லாத அறையில் அமர்ந்திருக்கிறீர்கள்? அதற்கு மிஸ்டர் வேம்பு சிரித்தபடி சொன்னார்: “இந்தியாவின் கிராமங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான படித்த, திறமை வாய்ந்த இளைஞர்கள் பசியோடு, வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தான் நாட்டின் உண்மையான அறிவாற்றல். அந்தச் சிந்தனை சக்தியை, அந்த பயன்படுத்தப்படாத பிரஸ் மூளையை, அந்த நுண்ணறிவை, நகரங்களின் குரல் சத்தத்துக்குள் புதைத்து விடாமல், மண்ணின் வாசனையோடு வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அந்த வயல்களின் நடுவே, அந்த மலைகளின் நிழலில் அமர்ந்திருக்கிறேன், அங்கிருந்துதான் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்னும் நம்பிக்கையில்.” I believe that Sanatana Dharma and Brahminical culture are the main reasons for his humble nature.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 1 day ago
இந்த மைதான‌த்தில் முத‌ல் ம‌ட்டைய‌ தெரிவு செய்யும் அணி தான் ப‌ல‌ முறை வென்று இருக்கு இல‌ங்கை ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் ஏன் ப‌ந்து வீச்சை தெரிவு செய்தா என்றால் தெரியாது............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 1 day ago
இப்ப‌வே க‌ண்ண‌ க‌ட்டுது என்ன‌ அழ‌கு எத்த‌னை அழ‌கு @ரசோதரன் ர‌சோத‌ர‌ன் அண்ணா இந்த‌ காணொளிய‌ பார்த்தால் உட‌ன‌ ம‌ன‌சை ப‌றி கொடுக்க‌ போகிறார்🥰😁👍.........................

முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்

4 weeks 1 day ago
ஈழப் போராட்டத்தில் முதல் தனது உயிரை அர்பணித்தவர் ஷோபா என்ற ஈபிஆர்எல்எவ் போராளியே. இவர் இறந்தது மே 03 1985 மாலதி முதல் பெண் போராளி என்பது தவறான தகவல். மாலதி விடுதலைபுலிகளின் முதல் பெண் போராளி என்பதே சரியான தகவல்.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

4 weeks 1 day ago
விஜை சில சமயம் அதிமுக+பிஜேபி உடன் கூட்டணி போகாமல் - தனியே தொகுதி உடன்பாடு மட்டும் செய்துகொள்ள கூடும் என நினைக்கிறேன். 40-60 தொகுதிகளை விஜைக்கு ஒதுக்கி விட்டு, ஏனையவற்றில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடலாம். விஜை இந்த தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்தலாம். இரு பகுதியிம் ஆளை ஆள் திட்டாமல் அதே நேரம் ஒரே மேடை ஏறாமல் வாக்கு கேட்க லாம். பிகு தமிழ்நாட்டில் எல்லாமுமே போலிதான். திமுக/அதிமுக/தேமுதிக போலித் திராவிடம். நாதக போலித் தமிழ் தேசியம். கொள்கைவாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே🤣.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 2 days ago
என்னுடன் வேலை செய்யும் வெள்ளைக்காரர்களுக்கு, வேறு இனத்தவர்களுக்கு நான் இலங்கையில் பிறந்த தமிழராகவே அடையாளப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் என்பதினால் பிறந்த மண்ணில் தமிழர்கள் அடைந்த அவலங்களை ஓரளவு சொல்லி இருக்கிறேன். பலருக்கு நான், இலங்கையில் கிடைக்காத சுதந்திரத்தை எனக்கு தந்த அவுஸ்திரேலியாவுக்கு ஆதரவு என்பதும் தெரியும்.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

4 weeks 2 days ago
என்னக்கு Trump இன் அனேகமனா கொள்கைகள் மீது உடன்பாடு இல்லை ( சிலவற்றில் உடன்பாடு). ஆனால் அவரது 5 வருட ஆட்ச்சியில் எதுவித யுத்தத்தையும் தொடங்காதற்க்காக அவருக்கு Nobel பரிசு கொடுக்கலாம். ஒபமவுக்கு கொடுத்தது ஒரு நகைப்புக்கு உரியது எனநினைக்கிறேன். (நான் தவறாக இருக்கலாம்)