Aggregator
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
கல்வி பயிலும் மொழி பாகுபாடு : ஆங்கில மீடியம் vs தமிழ் மீடியம்
யாழ்ப்பாணத்தில, கல்வி முறையில ஒரு விசித்திரமான மனப்பாங்கு வேரூன்றி பெருமரமாக வளர்ந்து வாறதை நான் அவதானிக்கிறன். என்னை போல நீங்களும் அவதானிச்சிருக்கலாம். அது என்னெண்டா, ஆங்கில ஊடகத்தில படிக்கிறது மேதாவிலாசத்தின்ர அடையாளம் எண்டும் தாய்மொழியில படிக்கிறது ஒருவித பின்தங்கிய நிலை என்றும் ஒரு மாயையான நினைப்பு. இந்த நினைப்பு மாணவர்கள் மத்தியில மட்டுமில்லாமல், சமூகத்தின்ர வழிகாட்டிகளாக இருக்கிற ஆசிரியர்கள் மத்தியிலும் ஆழ ஊடுருவியிருப்பது கவலையாக இருக்கு.
சிந்திக்கிற மொழியில படிக்கிறது தான் அறிவை வினைத்திறனோட உள்வாங்க உதவும் எண்டதால என்ர இரண்டு பிள்ளைகளையும் தாய்மொழி மூலமாக தான் கல்வி கற்க தெரிவு செய்தன். பிள்ளைகளும் அதை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். மொழிமூலத் தெரிவு எண்டது எங்கட தனிப்பட்ட விருப்பே தவிர அது பிறப்புடன் வந்த அறிவு வெளிப்பாடு இல்லை. அது மாணவர்களை மேல் கீழ் இடங்களில் வைப்பதற்கான அனுமதிச் சீட்டும் இல்லை.
ஆசிரியர்களின் இந்த பாகுபாடான அணுகுமுறையால, பாவம் ஆங்கிலமொழி மூலமாக கல்வி கற்கும் மாணவர்களும் தங்களுக்கு பின்னால ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒளிவட்டம் இருக்குதெண்டு நம்பினம். அந்த நம்பிக்கையை தங்கட நடத்தையிலும் காட்டினம். தமிழ் மீடிய மாணவர்களோடு ஒட்டி உறவாடும் தன்மையை வலிந்து நிறுத்துகின்றார்கள் ( விதிவிலக்கான பிள்ளைகளும் இருக்கினம்) இது ஒருவிதமான சாதீய மனநிலையை பள்ளிக்கூடங்களில, ரியூசனுகளில உருவாக்குது. "நீங்கள் எவடம்?" எண்ட கேள்விக்கும் "நீங்கள் எந்த மீடியம்?" எண்டிற கேள்விக்கும் பின்னால இருக்கிற மனநிலை ஒண்டு தான்.
மகள் தன்ர பத்தாம் வகுப்பில ஆங்கில இலக்கியத்தை ஒரு விருப்புக்குரிய தொகுதிப்பாடமாக தெரிவு செய்தாள். அதற்கான தனியார் வகுப்புக்கு ஆசிரியை ஒருவரிடம் அனுமதி எடுக்க செல்லும் போது, அவர் நடத்திய "நேர்முகத்தேர்வில்" என்னிடம் கேட்ட கேள்வி "இவ எந்த மீடியம்?". தமிழ் எண்டதும், ஆசிரியையின் முகம் மாறி, "தமிழ்மீடிய பிள்ளைகள் இந்த பாடத்துக்கு கஷ்டப்படுவினம்" எண்டு ஒரே போடாக போட்டார். "இல்லை... இவ A எடுப்பா " எண்டு சிரித்தபடியே தான் சொன்னேன்.
அதை விட இன்னொரு படி மேல போய் ஒரு ஆசிரியப்பெருந்தகை சொல்லி இருக்கிறார், "இது சரியான கஷ்டமான பேப்பர் தான். இங்கிலீஷ் மீடிய பிள்ளைகளே இந்த கேள்விக்கு சரியா ஆன்ஸர் எழுதேல்ல" இதில பகிடி என்னெண்டா அவர் சொன்னது வரலாற்று சோதினை பேப்பரை. அவரும் படிப்பிக்கிறது வரலாறு தான். பாவம் வரலாறு அவருக்கு வழிகாட்டேல்ல 😜
இந்த மாயையான மனநிலை எங்க வரை கொண்டு வந்து விடுகின்றது என்றால், கற்பித்தலுக்கான ஆசிரிய வளங்களை வகுப்புகளிடையே பிரித்தளிக்கும் போது, ஆங்கில மொழிமூலமான வகுப்புகளுக்கு திறன் கூடிய ஆசிரியர்கள் வழங்கப்படுவது வரை.
இரண்டாம் தர பிரஜைகளாக தமிழ் மொழிமூலமான வகுப்புகளும் பிள்ளைகளும் அணுகப்படுகின்றமை அனேகமான பாடசாலைகளில் தூலமாக அவதானிக்க முடிகின்றதை பலர் கூற கேட்டிருக்கிறேன்.
இதுக்கு என்ன வழி என்று கல்விசார் உளவியலாளர்கள் ஒரு ஆய்வை நடத்தி அதற்கான பரிந்துரையை மிக நிச்சயமாக கொடுக்க வேண்டும்.
அவை ஆய்வு செய்ய முதல், A/L க்கு வந்து பௌதீகவியலுக்கு ரியூசனுக்கு போகும் போது குமரன் சேர் செய்தது தான் thug life. 😜
"நீ இங்கிலீஷ் மீடியமோ தமிழ் மீடியமோ என்னவாவெண்டாலும் இரு. இப்ப தலையங்கம் போடு,
திருகாணி நுண்மானியில் பூச்சியவழு"
சமரசம் உலாவும் இடம் இப்ப அவற்ர ரியூசன் தான் 😜
கல்வி பயிலும் மொழி பாகுபாடு : ஆங்கில மீடியம் vs தமிழ் மீடியம்
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' - 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு!
கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு
கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு

பட மூலாதாரம்,ESA
படக்குறிப்பு,LHS 1903 நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள அசாதாரண கோள்களின் அமைப்பைப் பற்றிய சித்தரிப்புப் படம் (நட்சத்திரத்தில் இருந்து அவை இருக்கும் தொலைவுகளும் அவற்றின் அளவுகளும் புரிதலுக்காக மட்டுமே)
கட்டுரை தகவல்
டெய்ஸி ஸ்டீஃபன்ஸ்
பிபிசி உலக சேவை
4 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கோள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது நம் பிரபஞ்சத்தைப் பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று.
நமது சூரிய குடும்பத்திலும், பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் பிற பகுதிகளிலும் நாம் காணக்கூடிய விஷயங்களுடன் ஒத்துப்போகும் ஒரு கோட்பாடு விஞ்ஞானிகளிடம் இருக்கிறது.
ஆனால் இப்போது, தொலைதூரத்தில் உள்ள ஒரு கோள்களின் அமைப்பு அந்தக் கோட்பாட்டிற்கு முரணாக இருப்பதாகத் தெரிகிறது என்று சமீபத்தில் சயின்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
புதிய நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி வட்டுகளில் இருந்து கோள்கள் உருவாகின்றன என்று தற்போதைய கோட்பாடு கூறுகிறது.
"இந்தத் தூசுகளை ஒன்றிணைப்பதன் மூலம் கோள்கள் உருவெடுப்பதாக நாங்கள் நினைக்கிறோம்," என்று பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகத்தில் வானியல் உதவிப் பேராசிரியராக இருப்பவரும், இந்தப் புதிய ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான முனைவர் தாமஸ் வில்சன் கூறினார்.
"அவையனைத்தும் கூழாங்கற்களைப் போல ஒன்றாகச் சேகரிக்கப்படத் தொடங்குகின்றன. பின்னர் அவை ஒன்றோடொன்று மோதி கோள்கள் எனப்படும் ஒற்றைப் பெரிய வான்பொருளை உருவாக்குகின்றன."
இது பூமியின் பாறை போன்ற அமைப்புகள், வியாழன் கோளைப் போன்ற ராட்சத வாயுக்களால் ஆன கோளின் அமைப்புகள் உருவாக வழிவகுக்கிறது.
ஒரு கோள் அதன் நட்சத்திரத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைப் பொறுத்து வெப்பநிலை மற்றும் கிடைக்கும் பொருட்கள் மாறுபடும். மேலும், இந்தத் தொலைவுதான், அந்தக் கோள், முக்கியமாக அதன் வெளிப்புறம் எதனால் ஆனது என்பதைத் தீர்மானிக்கிறது.
"சூரிய குடும்பத்தின் தொலைதூரப் பகுதிகளில், குளிர் அதீதமாக இருக்கும். அந்தப் பகுதி பனிக்கட்டிக் கோடு என்று அழைக்கப்படுகிறது. அதைத் தாண்டி, அதிகமான குளிர் நிலவுவதால், வாயுக்கள், பனிக்கட்டிகள் தோன்றி, உறைந்திருக்க முடியும்," என்று வில்சன் விளக்கினார்.

பட மூலாதாரம்,Kevin M. Gill/NASA/JPL-Caltech/SwRI/MSSS
படக்குறிப்பு,வியாழன் ஒரு ராட்சத வாயு கோளாக இருந்தாலும், அதன் மையப் பகுதி பாறைகளால் ஆனது.
இந்தக் குளிரான பகுதிகளில், கோள்களால் அதிக வாயுவை சேகரித்து அடர்த்தியான வளிமண்டலங்களை உருவாக்க முடியும். நட்சத்திரத்தின் வலுவான வெப்பம், கதிர்வீச்சு ஆகியவற்றால் இந்த அடர்த்தியான வாயுவை எளிதில் அகற்ற முடியாது. வியாழன் போன்ற பெரிய வாயு கோள்கள், இந்தத் தொலைதூர, குளிரான பகுதிகளில் இப்படித்தான் உருவாகின்றன.
இதற்கு மாறாக, நட்சத்திரத்திற்கு அருகில் வெப்பமாக, வாயுவைவிட அதிகமாக தூசி நிறைந்து காணப்படும். இதன் விளைவாக, நமது சூரிய மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்ற பாறை அமைப்புகளைக் கொண்ட கோள்கள் உருவாகின்றன.
ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெவ்வேறு தூரங்களில் நிலவும் வெப்பநிலையும் வான்பொருட்களும் மாறுவதால், ஒரு நட்சத்திர குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஒரே நேரத்தில் உருவாவதாக விஞ்ஞானிகள் நம்புவதால், இதில் ஒரு சீரான வடிவம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொதுவாக, சிறிய பாறைக் கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகில் காணப்படுகின்றன. பெரிய வாயு கோள்கள் வெகு தொலைவில் காணப்படுகின்றன.
ஆனால், புதிய ஆய்விலுள்ள கோள்களின் அமைப்பு இந்த வழக்கமான வடிவத்தைப் பின்பற்றுவதில்லை.

பட மூலாதாரம்,NASA-JPL
படக்குறிப்பு,புதிய நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி வட்டுகளில் இருந்து கோள்கள் உருவாவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அசாதாரணமான கோள் வரிசை
எல்.எச்.எஸ் 1903 என்பது நமது சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 117 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சிறிய சிவப்பு எம்-ட்வார்ஃப் நட்சத்திரம். இது நமது சூரியனைவிட குளிரானது, குறைவான பிரகாசம் கொண்டது. மேலும் அதை நான்கு கோள்கள் சுற்றி வருகின்றன.
புதிய ஆய்வில், கிட்டத்தட்ட ஒவ்வொரு கண்டத்தையும் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச குழுவுடன் சேர்ந்து, வில்சன், அந்த நட்சத்திர குடும்பத்தை உன்னிப்பாகக் கவனித்து, அதைச் சுற்றி வரும் முதல் மூன்று கோள்கள் விஞ்ஞானிகள் எதிர்பார்த்த வடிவத்தைப் பின்பற்றி உருவாகியிருப்பதைக் கண்டறிந்தார். அவற்றில், நட்சத்திரத்திற்கு மிக அருகிலுள்ள கோள் பாறை அமைப்புடனும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கோள்கள் வாயு அமைப்புடனும் இருந்தன.
ஆனால், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சியாப்ஸ் செயற்கைக்கோளின் அவதானிப்புகளைப் பயன்படுத்தி, நான்காவது கோள் நட்சத்திரத்தில் இருந்து தொலைதூரத்தில் அமைந்திருந்த போதிலும் பாறை அமைப்பைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
"நாங்கள் அது வாயு நிறைந்த கோளாக இருக்குமென்று எதிர்பார்த்தோம். ஆனால் அது ஏன் பாறை அமைப்பைக் கொண்டிருக்கிறது? இதுதான் பெரிய கேள்வி" என்று வில்சன் கூறினார்.
இப்படிப்பட்ட கோள்களின் வரிசை அமைப்புக்கான சாத்தியமான விளக்கங்களை ஆய்வுக்குழு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
அந்தச் சாத்தியமான விளக்கங்களில், நட்சத்திரத்தின் கதிர்வீச்சு வாயுவை அகற்றியிருக்கலாம் அல்லது வெளிப்புறக் கோள் வேறொரு வான்பொருளால் தாக்கப்பட்டு, அதன் வளிமண்டத்தில் இருந்த வாயுவை நீக்கியிருக்கலாம் என்ற கருதுகோள்களும் அடக்கம்.
ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது கோள்களில் அதைச் செய்யாமல் நட்சத்திரத்தால் நான்காவது கோளில் இருந்து மட்டும் வாயுக்களை அகற்ற முடியாது. மேலும் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களை நீக்கும் அளவுக்குப் பெரிய வான்பொருள் தாக்கம் நடந்திருந்தால் அது கோளையே அழித்திருக்கும் என்று ஆய்வு மாதிரிகள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.

பட மூலாதாரம்,ESA/Silicon Worlds
கோளின் உருவாக்கம்
இந்தக் கருதுகோள்களை நிராகரித்த பிறகு, விஞ்ஞானிகள் இந்த "விசித்திரமான" அமைப்புக்கான காரணம், கோள்கள் ஒரே நேரத்தில் உருவாகாமல், ஒன்றன் பின் ஒன்றாக உருவானதாக இருக்கலாமா என்று பரிசீலித்தனர்.
"இந்த வெளிப்புற கோளை நாம் ஒரு குறைபாடுள்ள சூழலில் உருவாக்கினால், அதாவது வளங்கள் குறைவாக இருக்கும் நிலையில் உருவாக்கினால், இந்தக் கோளின் பண்புகளை எளிதாக உருவாக்க முடியும்" என்று வில்சன் கூறினார்.
வெளிப்புற கோள் உருவாகும் நேரத்தில் நட்சத்திர அமைப்பில் ஏற்கெனவே வாயுக்கள் தீர்ந்து போயிருக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
"எனவே கோள்கள் வேறுவிதமாக உருவாகக்கூடும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். நட்சத்திரத்திற்கு மிக அருகிலுள்ள கோள் முதலில் உருவாகலாம். அதன் பிறகு அடுத்த கோள் உருவாகிறது. பின்னர் இன்னொன்று உருவாகிறது. படிப்படியாக, கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகிலிருந்து தொலைவு வரை உருவாகின்றன."
கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகில் இருந்து தொடங்கி, வெகு தொலைவு வரை, வளங்கள் குறைந்துகொண்டே வரக்கூடிய சூழலில், படிப்படியாக உருவாகின்றன என்ற கருத்து, 'உள்ளிருந்து வெளியே நடக்கும் கோள் உருவாக்கம்' என்று அழைக்கப்படுகிறது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோட்பாடாக முன்மொழியப்பட்டது.
ஆனால், இந்தக் கோட்பாடு உண்மையில் நடப்பதற்கான மிகவும் உறுதியான ஆதாரமாக இது விளங்குவதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறுகிறது.
'அனைத்து வடிவங்களும் அளவுகளும்'
ஒரு நட்சத்திர குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களும் ஒரே நேரத்தில் உருவாகத் தொடங்குகின்றன என்ற அனுமானத்தை, குறிப்பாக, பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் நாம் காணும் அமைப்புகளில், நாம் திருத்திக்கொள்ள வேண்டியிருக்கலாம் எனக் கருதுகிறார் வில்சன்.
மேலும், இதுபோன்ற திருத்தம் நமது சொந்த சூரிய குடும்பத்தைப் புரிந்துகொள்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
"முதலில் புதன் உருவானதா, பின்னர் வெள்ளி, பின்னர் பூமி, அடுத்து செவ்வாய் என வரிசையாக உருவானதா? இது நமது சொந்த சூரிய குடும்பத்தின் காலம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது."
சூரிய குடும்பத்தில் என்ன நடந்தாலும் அதுவே பொதுவான விதிமுறை என்று நாம் கருதக்கூடாது என்பதையும் இது எடுத்துக் காட்டுவதாக அவர் கூறினார்.
"சூப்பர்-எர்த்ஸ், துணை-நெப்டியூன்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகையான கோள்கள் உள்ளன. மேலும் சூரிய குடும்பத்தில் நம்மிடம் இல்லாத அயலக வகைகளும் விண்வெளியில் உள்ளன" என்று அவர் விளக்கினார்.
"இந்தப் புறக்கோள்கள் அனைத்தும் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வரலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்."
"நாம் இன்னும் சிந்திக்காத, உயிர்கள் வாழ ஏதுவான அமைப்பைக் கொண்ட வான்பொருட்கள் இருக்கலாம். நாம் சூரிய குடும்பத்தின் மீதே அதீதமாக கவனம் செலுத்துகிறோம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க
Published By: Vishnu
13 Feb, 2026 | 11:01 PM
![]()
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வவுனியா மாவட்டத்தில் 3349 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவில் 3457 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 2554 வீடுகளும் வழங்கப்பட்டிருந்தன. வவுனியா மாவட்டத்தில் பல வீடுகள் இறுதி கட்டத்தில் உள்ளது. பூர்த்தி செய்யும் நிலையில் உள்ள வீடுகளுக்கான வேலைகளை முடித்து விட்டால் வவுனியாவில் 900 வீடுகள் பூர்த்தியாகும். அவை சின்ன வேலைகளில் தங்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போதே கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது சில குடும்பங்களுக்கு இரண்டு, மூன்று வீடுகள் வழங்கப்கப்பட்டு அதில் அவர் குடியிருக்காமல் பூட்டப்பட்டுள்ளது. அவ்வாறு 600 வீடுகள் உள்ளது. மடுகந்த, குடாகச்சகொடி, ஈரப்பெரியகுளம், கலாபோகஸ்வேவ போன்ற இடங்களில் அவ்வாறு வீடுகள் உள்ளன.
சஜித் பிரேமதாசாவால் வீடுகள் வழங்கப்பட்டர்களில் வேறு வீடுகள் இல்லாதவர்களின் வீடுகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். அரசியலுக்காக இவ்வாறு பல இடங்களில் வழங்கப்பட்டுளளது. மன்னாரில் 1500 வீடுகள் உள்ளது. அவ்வாறான வீடுகளை மீள எடுத்து வீடு இல்லாத மக்களுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுததியுள்ளோம். பாதிக்கப்பட்ட வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
14 Feb, 2026 | 10:22 AM
![]()
அமெரிக்கா - கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (13) ஹவானா வளைகுடாவில் உள்ள 'நிக்கோ லோபஸ்' (Nico Lopez) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்டு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சுத்திகரிப்பு நிலையத்தின் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட இந்தத் தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கியூபாவின் எரிசக்தி மற்றும் சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, தீ அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கியூபா தனது எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள தேவைக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது.
குறிப்பாக வெனிசுலாவிலிருந்து வந்த எண்ணெய் இறக்குமதி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்
13 Feb, 2026 | 07:12 PM
![]()
(நா.தனுஜா)
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஆகியோரின் இணைத்தலைமையில் வியாழக்கிழமை (12) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பை அடுத்து, அதில் கலந்துரையாடப்பட்ட மற்றும் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நட்பு ரீதியாகவும், திறந்த மனப்பாங்கின் அடிப்படையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தின்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன் ஆட்சியியல் நிர்வாகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி, மீன்பிடி, கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இக்கூட்டமானது இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு இரு தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்களில் இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கொள்கைசார் மறுசீரமைப்புக்கள், நடைமுறை முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய சட்ட ரீதியான முயற்சிகளின் தற்போதைய நிலைவரம் குறித்துப் பரிமாறுவதற்கும் வாய்ப்பளித்தது.
அதேபோன்று கடந்த ஆண்டு மேமாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற ஆட்சியியல், மனித உரிமைகள் மற்றும் சட்டவாட்சி என்பன தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கூட்டம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி மெய்நிகர் முறைமையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த கூட்டம் மற்றும் கடந்த 11 ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெற்ற அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் என்பன பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.
அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல், சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன உள்ளடங்கலாக ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் இலங்கையின் அண்மையகால முன்னேற்றங்கள் தொடர்பிலும் இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதன் நீட்சியாக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய சுயாதீன கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பன பற்றி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கையின் பிரதிநிதிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்தோடு சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதிலும், அதனை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதிலும், மீன்பிடித்துறை சார்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளுக்கு மதிப்பளிப்பதிலும் தொடர் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
அதுமாத்திரமன்றி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைசார் ஒத்துழைப்பு, புலம்பெயர்வு மற்றும் மீள் அனுமதி சார்ந்த கொள்கைகள் என்பன பற்றியும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின் புதிய விதிமுறைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தினர்.
இவ்வேளையில் நாட்டின் நிலையான வளர்ச்சியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் முக்கிய வகிபாகம் குறித்துப் பிரஸ்தாபித்து, அதனைப் பாராட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கல் சுழற்சி முடிவடைந்ததும், மீண்டும் அதனைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான தமது நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
அதனை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், தற்போதைய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவ்வதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருத்தமான அமை;புக்களுடன் இணைந்து செயலாற்றுமாறு ஊக்குவித்தது.
அதற்குப் பதிலளித்த இலங்கையின் பிரதிநிதிகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின்கீழ் 27 முக்கிய சமவாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் தயார்நிலையை மீளுறுதிப்படுத்தினர்.
மேலும் பாதுகாப்புத்துறையில், குறிப்பாக இந்து - பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இங்கு இருதரப்பினரும் ஆராய்ந்தனர்.
நிறைவாக ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ப்ரூஸேல்ஸில் நடாத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.