Aggregator

மத்திய வங்கியின் அனுமதியில்லாத நுண்கடன் நிறுவனங்கள் மக்களை சுரண்டுகின்றன – சாணக்கியன் இராசமாணிக்கம்

4 weeks 2 days ago
10 Oct, 2025 | 02:41 PM (எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியின் அனுமதியில்லாத நுண்கடன் நிதி நிறுவனங்கள் மக்களை சுரண்டி பிழைக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில நிதி நிறுவனங்கள் 300,200 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி அறவிடுகின்றன இதனால் அப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சம்மாந்துறை,கல்முனை, பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களில் Privelth Global PVT LTD என்னும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்று 2014.02.05 காலப்பகுதியில் நடத்தப்பட்டது. மேற்படி நிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களாக பணியாற்றிய அஹமட் ஷெரின், முகமது ஷிஹாப் (ஷிஹாப் ஷெரீப்) மற்றும் பாத்திமா பர்ஸ மார்கார் ஆகியோரால் 1400 பேரிடம் சுமார் 170 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அறிவாரா? கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள இவர்கள் இன்றளவிலும் காணாமல் போய் உள்ளனர் என்பதனை அமைச்சர் அறிவாரா?இதில் குறிப்பிட்டவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாது ? இவர்கள் மோசடி செய்துள்ள தொகையை மீள அதன் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அது தொடர்பில் பின்பற்றப்படும் நடவடிக்கை யாவை ? மற்றும் இவ்வாறான நிதி நிறுவனங்கள் தொடர்பான முறையான கண்காணிப்பு மேற்கொண்டு நம்பகத்தன்மை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? நிதி மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியாக நான் பல பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு வந்துள்ளேன் அதில் த பினான்ஸ் நிறுவன பிரச்சினை சம்பந்தமாகவும் பலமுறை கதைத்துள்ளேன் அதில் முதலிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் அவர்களுக்கான நீதியானது வழங்கப்படவில்லை. ஒரு வரவேற்கத்தக்க விடயம் குறிப்பாக மன்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மே. வினோராஜ் ஒரு முடிவு எடுத்துள்ளார். அப்பிரதேசத்தில் இயங்கி வரும் நுண்கடன் நிறுவனங்கள் மக்களிடம் 200 மற்றும் 300 வீதத்துக்கு அதிகமான வட்டியினை வசூலிப்பதாகவும் அவர்கள் மத்திய வங்கியின் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் தனியே வியாபார பதிவை கொண்டு மாத்திரம் செயற்பட்டு வருவதாகவும் அதனால் தரப்படட மக்கள் பாதிக்கப்பட்டு வருவதனால் அவர் இதற்கு எதிராக ஒரு நடவடிக்கை ஒன்றினை எடுத்துள்ளார். இவரது இவ் நடவடிக்கையினை மென்மேலும் துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான நிதி நிறுவனங்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி செயல்பட முடியுமா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்துவதற்குரிய ஏதேனும் ஏற்பாடுகள் செய்யுமா என்பது பற்றியும் மற்றும் ஏற்கனவே இவ்வாறான நுண் கடன் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தீர்வு குறுகிய காலத்துக்குள் கிடைக்குமா என்பதையும் அறிவிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/227411

மத்திய வங்கியின் அனுமதியில்லாத நுண்கடன் நிறுவனங்கள் மக்களை சுரண்டுகின்றன – சாணக்கியன் இராசமாணிக்கம்

4 weeks 2 days ago

10 Oct, 2025 | 02:41 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் அனுமதியில்லாத நுண்கடன் நிதி நிறுவனங்கள் மக்களை சுரண்டி பிழைக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில நிதி நிறுவனங்கள் 300,200 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி அறவிடுகின்றன இதனால் அப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சம்மாந்துறை,கல்முனை, பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களில் Privelth Global PVT LTD என்னும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்று 2014.02.05 காலப்பகுதியில் நடத்தப்பட்டது. மேற்படி நிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களாக பணியாற்றிய அஹமட் ஷெரின், முகமது ஷிஹாப் (ஷிஹாப் ஷெரீப்) மற்றும் பாத்திமா பர்ஸ மார்கார் ஆகியோரால் 1400 பேரிடம் சுமார் 170 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அறிவாரா?

கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள இவர்கள் இன்றளவிலும் காணாமல் போய் உள்ளனர் என்பதனை அமைச்சர் அறிவாரா?இதில் குறிப்பிட்டவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாது ? இவர்கள் மோசடி செய்துள்ள தொகையை மீள அதன் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அது தொடர்பில் பின்பற்றப்படும் நடவடிக்கை யாவை ? மற்றும் இவ்வாறான நிதி நிறுவனங்கள் தொடர்பான முறையான கண்காணிப்பு மேற்கொண்டு நம்பகத்தன்மை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?

நிதி மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியாக நான் பல பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு வந்துள்ளேன் அதில் த பினான்ஸ் நிறுவன பிரச்சினை சம்பந்தமாகவும் பலமுறை கதைத்துள்ளேன் அதில் முதலிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் அவர்களுக்கான நீதியானது வழங்கப்படவில்லை.

ஒரு வரவேற்கத்தக்க விடயம் குறிப்பாக மன்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மே. வினோராஜ் ஒரு முடிவு எடுத்துள்ளார். அப்பிரதேசத்தில் இயங்கி வரும் நுண்கடன் நிறுவனங்கள் மக்களிடம் 200 மற்றும் 300 வீதத்துக்கு அதிகமான வட்டியினை வசூலிப்பதாகவும் அவர்கள் மத்திய வங்கியின் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் தனியே வியாபார பதிவை கொண்டு மாத்திரம் செயற்பட்டு வருவதாகவும் அதனால் தரப்படட மக்கள் பாதிக்கப்பட்டு வருவதனால் அவர் இதற்கு எதிராக ஒரு நடவடிக்கை ஒன்றினை எடுத்துள்ளார்.

இவரது இவ் நடவடிக்கையினை மென்மேலும் துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான நிதி நிறுவனங்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி செயல்பட முடியுமா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்துவதற்குரிய ஏதேனும் ஏற்பாடுகள் செய்யுமா என்பது பற்றியும் மற்றும் ஏற்கனவே இவ்வாறான நுண் கடன் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தீர்வு குறுகிய காலத்துக்குள் கிடைக்குமா என்பதையும் அறிவிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/227411

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்

4 weeks 2 days ago
தஷ்வந்த் விடுதலை குறித்து கொலையுண்ட சிறுமியின் தந்தை கூறியது என்ன? பட மூலாதாரம், Facebook படக்குறிப்பு, தஷ்வந்த் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 10 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்த வழக்குக்காக, என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டி, நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராடினேன். இதற்காக எங்களின் மீத வாழ்க்கையையும் இழந்துவிட்டோம். இத்தனைக்குப் பிறகும் தஷ்வந்தை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் போராடுவது?" என்கிறார் சென்னையில் 2017-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் தந்தை. இந்த வழக்கில் பொறியியல் பட்டதாரி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. 'தஷ்வந்தை விடுவிப்பது சமூகத்தில் துயரத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஊகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க முடியாது' எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் சிறுமியின் தந்தையிடம் பிபிசி தமிழ் பேசியது. சிறுமியின் இறப்புக்குப் பிறகு தானும் தன் மனைவியும் பிரிந்துவிட்டதாக அவர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சிறுமியின் தந்தை சொன்னது என்ன? "பணத்தை செலவழித்தது பொருட்டல்ல, ஆனால் நாங்கள் எங்கள் வாழ்க்கையையே இதனால் இழந்தோம்." என்றார் சிறுமியின் தந்தை "கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என இரண்டு நீதிமன்றங்களிலும் சட்ட ரீதியாக போராடினோம். இப்போது உச்ச நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்துள்ளது. இனி நான் போராடினாலும் நீதி கிடைக்காது. இனி என்ன செய்ய முடியும்?" என தெரிவித்தார். யாருடைய அனுதாபமும் தனக்கு தேவையில்லை எனக்கூறிய அவர், "இந்த வழக்கில் நீதி கிடைக்க செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இருந்தது. இன்று (அக்.,10) என் மகளின் பிறந்தநாள், ஆனால் அவளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது" என்றார். தன்னுடைய 14 வயது மகனும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் பள்ளிக்கு செல்வதில்லை என்றும் சிறுமியின் தந்தை கூறினார். "இங்கு பாதுகாப்பு இல்லை, அதனால் தமிழ்நாட்டை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர உள்ளேன். என் மகன் மனைவியுடன் இருப்பதால், அவனிடமும் என்னால் பேச முடியவில்லை." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 'உடனடியாக நீதியை பெற முடிவதில்லை' கடந்த 2018-ஆம் ஆண்டில் என்னிடம் பேசியிருந்த சிறுமியின் தந்தை, "இங்கே, நீதியைப் பெற தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. என் மகளின் வழக்கில் விசாரணை வேகமாக நடந்தும், காவல் துறையினர் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கியும் நீதியை உடனடியாக பெற முடிவதில்லை. பல வழக்குகளை காவல் நிலையத்தில் பதியவே முடிவதில்லையே. அத்தகைய வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவதற்கே மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது." என கூறியிருந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, இனி தன்னால் வழக்கில் எத்தகைய சட்ட ரீதியான போராட்டத்தைத் தொடர முடியும் என தெரியவில்லை என்றும் வழக்கறிஞர்களிடம் பேச வேண்டும் என்றும் அவர் கூறினார். இது குறித்து தமிழக அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக்,'' தமிழ்நாடு அரசுக்கு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றார் வழக்கின் பின்னணி 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று, தங்களின் 7 வயது மகளைக் காணவில்லை என காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். 'வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக ஆறு மணியளவில் சிறுமியின் தாய் வெளியில் சென்றுள்ளார். சுமார் 7.15 மணியளவில் வீடு திரும்பியபோது மகளைக் காணவில்லை' என, சிறுமியின் தந்தை அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. தங்கள் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் சிறுமியை தேடும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டனர். ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தநிலையில், சிறுமியின் நிலையைப் பற்றி அறியும் வகையில் சிசிடிவி காட்சி ஒன்று அவரின் தந்தைக்கு கிடைத்தது. அது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் பொருத்தப்பட்டிருந்தது. சிறுமியின் பெற்றோர் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற 23 வயது இளைஞர் மீது சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. பட மூலாதாரம், Getty Images 2017, பிப்ரவரி 8-ஆம் தேதியன்று காலையில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். காவல்துறையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எரிந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது. சிறுமி கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் தஷ்வந்த் வைக்கப்பட்டார். தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணையில் அரசுத் தரப்பில் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. ஆனால், இதனை மறுத்து, 'குற்றம் செய்யவில்லை' என தஷ்வந்த் தெரிவித்துள்ளார். வழக்கின் ஆவணங்களை ஆராய்ந்து, 'தஷ்வந்த்தை ''குற்றவாளி'' என கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார். மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'இந்த வழக்கு அரிதிலும் அரிதானது' எனக் கூறி கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து தஷ்வந்த் செய்த மேல்முறையீடு வழக்கில்தான் அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ''சம்பவ இடத்தில் பொருட்களை கைப்பற்றியவுடன் சாட்சிகள் முன்னிலையில் அவை சீல் வைக்கப்பட்டதாக சாட்சிகள் கூறவில்லை. மேலும் கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் யார் பாதுகாப்பில் இருந்தது, யார் அந்த பொருட்களை தடய அறிவியல் அலுவலகத்திற்கு ஒப்படைத்தார்கள் என்று அவரை ஒரு சாட்சியாக இந்த வழக்கில் விசாரிக்கவில்லை. எனவே கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் தடய பொருட்கள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது'' எனத் தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியை கடைசியாக நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த முருகன் குறித்துக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், 'சிறுமியை தேடிய நபர்களில் ஒருவராக முருகன் இருந்த போதிலும் இந்த உண்மையை அவர் பெற்றோரிடம் கூறவில்லை. காவல்துறையிலும் தெரிவிக்கவில்லை' எனக் கூறியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89d4qnd7j1o

முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்

4 weeks 2 days ago
முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் adminOctober 10, 2025 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், அருட்தந்தை,முன்னாள் போராளிகள், உறவினர்கள் ,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர். இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2025/221354/

முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்

4 weeks 2 days ago

முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்

adminOctober 10, 2025

WhatsApp-Image-2025-10-10-at-7.00.48-PM.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று  (10)  வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், அருட்தந்தை,முன்னாள் போராளிகள், உறவினர்கள் ,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.  இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

WhatsApp-Image-2025-10-10-at-7.00.46-PM-

WhatsApp-Image-2025-10-10-at-7.00.47-PM-

WhatsApp-Image-2025-10-10-at-7.00.47-PM.

WhatsApp-Image-2025-10-10-at-7.00.46-PM.

https://globaltamilnews.net/2025/221354/

மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!

4 weeks 2 days ago
தேசிக்காய் விலை உச்சம்! 11 Oct, 2025 | 11:18 AM பதுளை மாவட்டத்தில் சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும் தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமை நீண்ட நாட்களாக தொடர்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/227466

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

4 weeks 2 days ago
வெள்ளிக்கிழமை, நவம்பர் 1 முதல் சீனா மீது "அவர்கள் தற்போது செலுத்தும் எந்தவொரு வரிக்கும் மேலாக" 100% வரியை விதிக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார் - இது அரிய மண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த சூடான சர்ச்சைக்கு மத்தியில் தனது வர்த்தகப் போரை பெருமளவில் தீவிரப்படுத்துகிறது. ட்ரூத் சோஷியல் பதிவில், சீனா "உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது, நவம்பர் 1, 2025 முதல், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும், சிலவற்றால் கூட தயாரிக்கப்படாத பொருட்களின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாகக் கூறுகிறது" என்று டிரம்ப் எழுதினார். "இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது, மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களால் வகுக்கப்பட்ட ஒரு திட்டமாகும்" என்று அவர் எழுதினார். "இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, மற்ற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம்." "சீனா எடுக்கும் எந்த கூடுதல் நடவடிக்கைகள் அல்லது மாற்றங்களைப் பொறுத்து, நவம்பர் 1 அல்லது அதற்கு முன்னதாகவே" புதிய வரியை விதிப்பதாக டிரம்ப் கூறினார். முந்தைய நாள், முக்கியமான அரிய மண் தாதுக்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க சீனாவின் தீவிர முயற்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் கடுமையாக சாடினார், பொருளாதார பழிவாங்கலை அச்சுறுத்தினார், மேலும் இந்த மாத இறுதியில் பிராந்தியத்திற்கு திட்டமிடப்பட்ட விஜயத்தின் போது ஜியை சந்திக்க எந்த காரணத்தையும் அவர் இனி காணவில்லை என்றும் கூறினார். அந்த நேரத்தில், டிரம்ப் சீனாவிற்கு எதிராக பொருளாதார அபராதங்களை அச்சுறுத்தினார், "அவர்கள் இப்போது பிறப்பித்துள்ள விரோதமான 'உத்தரவு' குறித்து சீனா என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து, அமெரிக்க ஜனாதிபதியாக, அவர்களின் நடவடிக்கையை நிதி ரீதியாக எதிர்கொள்ள நான் கட்டாயப்படுத்தப்படுவேன்" என்று எச்சரித்தார். "அவர்கள் ஏகபோகமாக வைத்திருக்க முடிந்த ஒவ்வொரு உறுப்புக்கும், எங்களிடம் இரண்டு உள்ளன," என்று அவர் மேலும் கூறினார். வியாழக்கிழமை, அரிய மண் ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடுகளை பெய்ஜிங் தீவிரப்படுத்தியது, கட்டுப்பாட்டில் உள்ள கனிமங்களின் பட்டியலை விரிவுபடுத்தியது மற்றும் அவற்றின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் இராணுவ மற்றும் குறைக்கடத்தி பயன்பாடுகள் உட்பட அவற்றின் வெளிநாட்டு பயன்பாட்டை இலக்காகக் கொண்ட கட்டுப்பாடுகளை நீட்டித்தது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு கடுமையான பாதிப்பை இலக்காகக் கொண்டன - இது சமீபத்திய மாதங்களில் சுரங்கம் மற்றும் உற்பத்தி திறனை அடையாளம் காணவும் விரைவாக அதிகரிக்கவும் டிரம்ப் நிர்வாகத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியைத் தூண்டியுள்ளது. மேலும் இது உடனடியாக டிரம்ப் நிர்வாகத்திற்குள் எச்சரிக்கை மணிகளை எழுப்பியதாக பல நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாத இறுதியில் தென் கொரியாவில் நடைபெறும் APEC உச்சிமாநாட்டின் போது ஜி மற்றும் டிரம்ப் இடையே எதிர்பார்க்கப்படும் சந்திப்புக்கு முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் பெய்ஜிங் தனது செல்வாக்கை அதிகரிக்க முயன்றதால் இந்த நடவடிக்கை வந்தது. சில நிர்வாக அதிகாரிகள் இதை டிரம்ப் உடனான திட்டமிடப்பட்ட நேரடி சந்திப்பிற்கு முன்னதாக ஜியின் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கான தெளிவான முயற்சியாகக் கருதினர், மற்றவர்கள் சீனாவின் பதிலைத் தூண்டியிருக்கக்கூடிய அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினர். டிரம்ப் ஆரம்பத்தில் Truth social இல் சந்திப்பு இப்போது ஆபத்தில் இருப்பதாகக் கூறினார். "நான் ஜனாதிபதி Xi உடன் பேசவில்லை, ஏனெனில் அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை," என்று அவர் எழுதினார். "இது எனக்கு மட்டுமல்ல, சுதந்திர உலகின் அனைத்து தலைவர்களுக்கும் ஒரு உண்மையான ஆச்சரியமாக இருந்தது. இரண்டு வாரங்களில் தென் கொரியாவில் உள்ள APEC இல் ஜனாதிபதி Xi ஐ நான் சந்திக்கவிருந்தேன், ஆனால் இப்போது அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை என்று தெரிகிறது." ஆனால் அது உண்மையில் ரத்து செய்யப்பட்டதா என்று பின்னர் கேட்டபோது, டிரம்ப் பதிலளித்தார்: "நான் ரத்து செய்யவில்லை, ஆனால் நாங்கள் அதைச் செய்யப் போகிறோமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அதைப் பொருட்படுத்தாமல் அங்கு இருக்கப் போகிறேன், எனவே நாங்கள் அதைச் செய்யக்கூடும் என்று கருதுகிறேன்." டிரம்ப் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக அச்சுறுத்தலை விடுப்பதற்கு முன்பே, இந்த வாரம் சீனாவின் நடவடிக்கையை ஒரு வியத்தகு விரிவாக்கமாகக் கருதியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஒரு மூத்த நிர்வாக அதிகாரி மற்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த மாத இறுதியில் அமெரிக்க வர்த்தகத் துறை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பின்தங்கிய பட்டியலில் சீன நிறுவனங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்திய பின்னர் வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட விரக்திகளும் உள்ளன, இது சீனாவை விரக்தியடையச் செய்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. https://www.cnn.com/2025/10/10/politics/rare-earths-china-trump-threats

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

4 weeks 2 days ago

வெள்ளிக்கிழமை, நவம்பர் 1 முதல் சீனா மீது "அவர்கள் தற்போது செலுத்தும் எந்தவொரு வரிக்கும் மேலாக" 100% வரியை விதிக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார் - இது அரிய மண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த சூடான சர்ச்சைக்கு மத்தியில் தனது வர்த்தகப் போரை பெருமளவில் தீவிரப்படுத்துகிறது.

ட்ரூத் சோஷியல் பதிவில், சீனா "உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது, நவம்பர் 1, 2025 முதல், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும், சிலவற்றால் கூட தயாரிக்கப்படாத பொருட்களின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாகக் கூறுகிறது" என்று டிரம்ப் எழுதினார்.

"இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது, மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களால் வகுக்கப்பட்ட ஒரு திட்டமாகும்" என்று அவர் எழுதினார். "இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, மற்ற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம்."

"சீனா எடுக்கும் எந்த கூடுதல் நடவடிக்கைகள் அல்லது மாற்றங்களைப் பொறுத்து, நவம்பர் 1 அல்லது அதற்கு முன்னதாகவே" புதிய வரியை விதிப்பதாக டிரம்ப் கூறினார்.

முந்தைய நாள், முக்கியமான அரிய மண் தாதுக்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க சீனாவின் தீவிர முயற்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் கடுமையாக சாடினார், பொருளாதார பழிவாங்கலை அச்சுறுத்தினார், மேலும் இந்த மாத இறுதியில் பிராந்தியத்திற்கு திட்டமிடப்பட்ட விஜயத்தின் போது ஜியை சந்திக்க எந்த காரணத்தையும் அவர் இனி காணவில்லை என்றும் கூறினார். அந்த நேரத்தில், டிரம்ப் சீனாவிற்கு எதிராக பொருளாதார அபராதங்களை அச்சுறுத்தினார், "அவர்கள் இப்போது பிறப்பித்துள்ள விரோதமான 'உத்தரவு' குறித்து சீனா என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து, அமெரிக்க ஜனாதிபதியாக, அவர்களின் நடவடிக்கையை நிதி ரீதியாக எதிர்கொள்ள நான் கட்டாயப்படுத்தப்படுவேன்" என்று எச்சரித்தார்.

"அவர்கள் ஏகபோகமாக வைத்திருக்க முடிந்த ஒவ்வொரு உறுப்புக்கும், எங்களிடம் இரண்டு உள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.

வியாழக்கிழமை, அரிய மண் ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடுகளை பெய்ஜிங் தீவிரப்படுத்தியது, கட்டுப்பாட்டில் உள்ள கனிமங்களின் பட்டியலை விரிவுபடுத்தியது மற்றும் அவற்றின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் இராணுவ மற்றும் குறைக்கடத்தி பயன்பாடுகள் உட்பட அவற்றின் வெளிநாட்டு பயன்பாட்டை இலக்காகக் கொண்ட கட்டுப்பாடுகளை நீட்டித்தது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு கடுமையான பாதிப்பை இலக்காகக் கொண்டன - இது சமீபத்திய மாதங்களில் சுரங்கம் மற்றும் உற்பத்தி திறனை அடையாளம் காணவும் விரைவாக அதிகரிக்கவும் டிரம்ப் நிர்வாகத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியைத் தூண்டியுள்ளது. மேலும் இது உடனடியாக டிரம்ப் நிர்வாகத்திற்குள் எச்சரிக்கை மணிகளை எழுப்பியதாக பல நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மாத இறுதியில் தென் கொரியாவில் நடைபெறும் APEC உச்சிமாநாட்டின் போது ஜி மற்றும் டிரம்ப் இடையே எதிர்பார்க்கப்படும் சந்திப்புக்கு முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் பெய்ஜிங் தனது செல்வாக்கை அதிகரிக்க முயன்றதால் இந்த நடவடிக்கை வந்தது. சில நிர்வாக அதிகாரிகள் இதை டிரம்ப் உடனான திட்டமிடப்பட்ட நேரடி சந்திப்பிற்கு முன்னதாக ஜியின் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கான தெளிவான முயற்சியாகக் கருதினர், மற்றவர்கள் சீனாவின் பதிலைத் தூண்டியிருக்கக்கூடிய அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினர்.

டிரம்ப் ஆரம்பத்தில் Truth social இல் சந்திப்பு இப்போது ஆபத்தில் இருப்பதாகக் கூறினார். "நான் ஜனாதிபதி Xi உடன் பேசவில்லை, ஏனெனில் அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை," என்று அவர் எழுதினார். "இது எனக்கு மட்டுமல்ல, சுதந்திர உலகின் அனைத்து தலைவர்களுக்கும் ஒரு உண்மையான ஆச்சரியமாக இருந்தது. இரண்டு வாரங்களில் தென் கொரியாவில் உள்ள APEC இல் ஜனாதிபதி Xi ஐ நான் சந்திக்கவிருந்தேன், ஆனால் இப்போது அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை என்று தெரிகிறது."

ஆனால் அது உண்மையில் ரத்து செய்யப்பட்டதா என்று பின்னர் கேட்டபோது, டிரம்ப் பதிலளித்தார்: "நான் ரத்து செய்யவில்லை, ஆனால் நாங்கள் அதைச் செய்யப் போகிறோமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அதைப் பொருட்படுத்தாமல் அங்கு இருக்கப் போகிறேன், எனவே நாங்கள் அதைச் செய்யக்கூடும் என்று கருதுகிறேன்."

டிரம்ப் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக அச்சுறுத்தலை விடுப்பதற்கு முன்பே, இந்த வாரம் சீனாவின் நடவடிக்கையை ஒரு வியத்தகு விரிவாக்கமாகக் கருதியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஒரு மூத்த நிர்வாக அதிகாரி மற்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த மாத இறுதியில் அமெரிக்க வர்த்தகத் துறை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பின்தங்கிய பட்டியலில் சீன நிறுவனங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்திய பின்னர் வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட விரக்திகளும் உள்ளன, இது சீனாவை விரக்தியடையச் செய்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

https://www.cnn.com/2025/10/10/politics/rare-earths-china-trump-threats

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 2 days ago
ஜெயசூரியா அடிக்காத அடியா. சார்ஜாவில நடந்த இறுதிப்போட்டியில 189 அடிச்சார். ரசல் ஆர்னல்டும் அவரும் சேர்ந்து வெளுத்த வெளு இப்பவும் கண்ணுக்க நிக்குது. அதுவும் வெங்கடேஸ் பிரசாத் என்டா, சனத்துக்கு அல்வா சாப்பிடுறமாதிரி. இந்தியா அடிச்சது வெறும் 54. இதுதான் அந்தப் போட்டி https://www.espncricinfo.com/series/coca-cola-champions-trophy-2000-01-61074/india-vs-sri-lanka-final-65900/full-scorecard

இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

4 weeks 2 days ago
ரஷ்யா, சீனா, மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் தமக்கென புதிய பாதையை அமைக்க தொடங்கி விட்டார்கள். இதனால் அமெரிக்காவிற்கு பெரிய வேலை இருக்காது என நினைக்கின்றேன்.இதில் தென் அமெரிக்காவும் கூட்டு சேர இன்னும் சிறப்பு.😃 சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைக்கும் அமெரிக்கா.😎

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

4 weeks 2 days ago
அவர் மீது உங்களுக்கு அப்படி என்ன தனிப்பட்ட கோபம்? மக்களால் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பப்பட்ட ஒரு அரசியல்வாதியின் காலம் மூன்றோ நான்கு வருடங்கள் மட்டுமே.அதன் பின் அவரை நிகாரிப்பதோ அல்லது மீண்டும் பாராளுமன்றம் அனுப்புவதோ வாக்காளர்களின் கடமை. இதுவரை காலமும் தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவாவில் சாதித்தது என்னவென்று உங்களால் சொல்ல முடியுமா? அதேபோல் இவர் முதல் தடவையாக வந்திருக்கின்றார். என்ன செய்யப்போகின்றார் என பார்க்கலாம். அதன் கருத்து மழை பொழியலாம்.😎 ஒரு பழமொழி ஒன்று இருக்கின்றது.அதை உங்கள் மேல் இருக்கும் மரியாதையால் இங்கு எழுதவில்லை.

ரஷ்யாவின் கலப்பினப் போரை (Hybrid war) எதிர்கொள்வதற்கான இராணுவ விருப்பங்களை நேட்டோ விவாதிக்கிறது - FT

4 weeks 2 days ago
வெளிப்படையாக இன்னுமொரு உலக யுத்தம் வருமாயின்...... புல் பூண்டு முளைக்காத ஹிரோஷிமா-நாகஷாகி போல் ஜேர்மனியும் வரும்.இரண்டாம் உலக யுத்த அழிவுகளின் பின் மூன்று இலை முளைத்து தளிர் விட முதல் உக்ரேன் சம்பந்தமாக போர்க்குண அரசியல் செய்கின்றார்கள்.😂

இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

4 weeks 2 days ago
50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை, ஈரானிய எரிசக்தி ஏற்றுமதியை ஊக்குவித்த 50-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு தடைகளை விதித்துள்ளது. இதில் இந்தியரான வருண் புலா, சோனியா ஷ்ரேஸ்தா மற்றும் ஐயப்பன் ராஜா ஆகியோர் அடங்குவர். இவர்கள் ஈரானிய எண்ணெய் மற்றும் LPG ஏற்றுமதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வருண் புலா, மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட Bertha Shipping Inc. நிறுவனத்தை நடத்துகிறார். இந்த நிறுவனம் PAMIR என்ற கப்பலை இயக்குகிறது,இது 2024 ஜூலை முதல் சீனாவுக்கு 4 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது. ஐயப்பன் ராஜா Evie Lines Inc. என்ற நிறுவனத்தை நடத்துகிறார். SAPPHIRE GAS எனும் கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஏப்ரல் முதல் சீனாவிற்கு 1 மில்லியன் பீப்பாய்கள் LPG ஏற்றுமதி செய்துள்ளது. சோனியா ஷ்ரேஸ்தா இந்தியாவிலுள்ள Vega Star Ship Management Pvt Ltd. நிறுவனத்தை நடத்துகிறார். NEPTA என்ற கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஜனவரி முதல் பாகிஸ்தானுக்கு ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது. இந்த தடைகள் அமெரிக்காவில் உள்ள அல்லது அமெரிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நபர்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமைகளை முடக்குகின்றன. மேலும், 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பங்குகளை கொண்ட நிறுவனங்களும் தடைக்குள்ளாகின்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. Lankasri Newsஇந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதி...50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.அமெரிக்க நிதி...

இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

4 weeks 2 days ago

50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

அமெரிக்க நிதித்துறை, ஈரானிய எரிசக்தி ஏற்றுமதியை ஊக்குவித்த 50-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு தடைகளை விதித்துள்ளது.

இதில் இந்தியரான வருண் புலா, சோனியா ஷ்ரேஸ்தா மற்றும் ஐயப்பன் ராஜா ஆகியோர் அடங்குவர்.

இவர்கள் ஈரானிய எண்ணெய் மற்றும் LPG ஏற்றுமதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

US sanctions India, Indian nationals Iran oil trade, Iran energy exports, US sanctions, Iranian LPG shipments

வருண் புலா, மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட Bertha Shipping Inc. நிறுவனத்தை நடத்துகிறார்.

இந்த நிறுவனம் PAMIR என்ற கப்பலை இயக்குகிறது,இது 2024 ஜூலை முதல் சீனாவுக்கு 4 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது.

ஐயப்பன் ராஜா Evie Lines Inc. என்ற நிறுவனத்தை நடத்துகிறார். SAPPHIRE GAS எனும் கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஏப்ரல் முதல் சீனாவிற்கு 1 மில்லியன் பீப்பாய்கள் LPG ஏற்றுமதி செய்துள்ளது.

சோனியா ஷ்ரேஸ்தா இந்தியாவிலுள்ள Vega Star Ship Management Pvt Ltd. நிறுவனத்தை நடத்துகிறார். NEPTA என்ற கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஜனவரி முதல் பாகிஸ்தானுக்கு ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த தடைகள் அமெரிக்காவில் உள்ள அல்லது அமெரிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நபர்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமைகளை முடக்குகின்றன.

மேலும், 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பங்குகளை கொண்ட நிறுவனங்களும் தடைக்குள்ளாகின்றன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.  

Lankasri News
No image previewஇந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதி...
50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.அமெரிக்க நிதி...

17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு இராணுவ பாதுகாப்பு- ஏன்?

4 weeks 2 days ago
வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹில்சா வங்காளதேசதத்தின் தேசிய மீன் என்பதால், இம்முறை 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பயணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 22 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம், அக்டோபர் 4 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது. வங்காள விரிகுடா மற்றும் பத்மா, மேக்னா மற்றும் ஜமுனா போன்ற முக்கிய நதி அமைப்புகள் உட்பட நியமிக்கப்பட்ட இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை ஹில்சா மேலாண்மை பிரிவின் துணை இயக்குநர் ஃபிரோஸ் அஹமது, "ஹில்சா மீனின் பாதுகாப்புக்காக நாங்கள் விரிவான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இது அதன் இனப்பெருக்கத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை" என கூறியுள்ளார். வங்காளதேசதத்தின் தெற்கு பகுதியில் உள்ள பரிசால் மற்றும் சட்டோகிராம் மாவட்டங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், கடற்படை, கடலோர காவல் படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட 4 சிறப்பு படைகள் ஈடுபட்டுள்ளன. கடந்த சில நாட்களில், தடை காலத்தில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்காளதேசம் உலகின் மிகப்பெரிய ஹில்சா உற்பத்தி நாடக இருந்தாலும், உள்ளூர் தேவை அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், துராக் பூஜை காலத்தில் இந்தியாவுக்கு சிறப்பு அனுமதியுடன் ஹில்சா மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் 1,200 டன் ஹில்சா மீனை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ஏற்றுமதி குறைவாகவே இருந்தது. Lankasri News17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு...வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஹில்சா வங்காளதேசத...

17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு இராணுவ பாதுகாப்பு- ஏன்?

4 weeks 2 days ago

வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஹில்சா வங்காளதேசதத்தின் தேசிய மீன் என்பதால், இம்முறை 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பயணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

22 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம், அக்டோபர் 4 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது.

வங்காள விரிகுடா மற்றும் பத்மா, மேக்னா மற்றும் ஜமுனா போன்ற முக்கிய நதி அமைப்புகள் உட்பட நியமிக்கப்பட்ட இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Bangladesh Hilsa fish protection, Hilsa breeding season, Bangladesh Navy warships Hilsa, Hilsa fish conservation, Hilsa fishing ban, Hilsa surveillance drones, Mother Hilsa campaign Bangladesh

மீன்வளத்துறை ஹில்சா மேலாண்மை பிரிவின் துணை இயக்குநர் ஃபிரோஸ் அஹமது, "ஹில்சா மீனின் பாதுகாப்புக்காக நாங்கள் விரிவான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இது அதன் இனப்பெருக்கத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை" என கூறியுள்ளார்.

வங்காளதேசதத்தின் தெற்கு பகுதியில் உள்ள பரிசால் மற்றும் சட்டோகிராம் மாவட்டங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில், கடற்படை, கடலோர காவல் படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட 4 சிறப்பு படைகள் ஈடுபட்டுள்ளன.

கடந்த சில நாட்களில், தடை காலத்தில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வங்காளதேசம் உலகின் மிகப்பெரிய ஹில்சா உற்பத்தி நாடக இருந்தாலும், உள்ளூர் தேவை அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆனால், துராக் பூஜை காலத்தில் இந்தியாவுக்கு சிறப்பு அனுமதியுடன் ஹில்சா மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2025-ஆம் ஆண்டில் 1,200 டன் ஹில்சா மீனை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ஏற்றுமதி குறைவாகவே இருந்தது.

Lankasri News
No image preview17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு...
வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஹில்சா வங்காளதேசத...

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

4 weeks 2 days ago
சேகுவாராவின் கொடியையும் தூக்கி அவர் கொள்கையையையும் கடைப்பிடித்து இனக்கொலை செய்தவர்களையும் இனத்திற்கு எதிராக நிற்பவர்களையும் கண்டு கொள்ளாமல் கடல் கடந்து உங்களுக்கு பிடிக்காதவர்களிடம் புனித்தை தேடுகின்றீர்கள்?! அதே போல் கம்யூனிசத்தை கடைப்பிடிப்பவர்கள் கூட இன வெறியை வாந்தி வாந்தியாக எடுக்கின்றார்கள். அங்கே உங்கள் புனிதம் தேடும் மூளை வேலை செய்யவில்லை.சிங்கள பாதிரியார்கள் உட்பட..... சீமான் செய்த தவறை(என் பார்வையில் தவறு அல்ல) விட பலம் வாய்ந்த கட்சிகாரர்களும் பணபலம் மிக்கவர்களும் இன்றும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அங்கே எல்லாம் புனிதர்களை தேடவும் மாட்டார்கள்.சித்திரங்களும் வரைய மாட்டார்கள். காரணம் பணபலம் மக்கள் பலம் அதிகார பலம் வாய்ந்தவர்கள். போட்டு தள்ளிவிடுவார்கள் என்ற பயம். கொள்கை பலம் அறவே இல்லாத அரசியல் கூட்டங்கள்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks 2 days ago
பெண்கள் அணிகளைப் பற்றி பெரிதாக இங்கு ஒருவருக்கும் தெரிவதில்லை தானே. அதனால் நமக்குத் தெரிந்ததை, சிலவற்றை அங்கு இங்கு பொறுக்கி, சொல்லுவோம் என்று ஒரு முனைப்பு தான். இலங்கை ஆண்கள் அணி உண்மைதான், கடந்த ஒரு பத்து வருடமாக இலங்கை அணி அவ்வளவு வலிதானதாக இல்லை. அத்தோடு இந்திய அணி இன்னும் வலுப் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. 90களிலும் 2000 ஆண்டுகளிலும், இலங்கை அணி ஒரு நெருப்பு. ஒரு நாள் போட்டிகளில் வெளுத்து வாங்குவார்கள். பல ஒரு நாள் தொடர்கள், முக்கோணத் தொடர்கள், மற்றும் பலவாறான தொடர்கள் எல்லாவற்றிலும் இலங்கை அணி ஜொலித்திருக்கிறது. முக்கியமாக பல இறுதி போட்டிகளில் இலங்கை அணி இந்தியாவை ஓட விட்டிருக்கிறது. சரியாக ஞாபகமில்லை, நான் நினைக்கிறேன், ஒரு 15-16 இறுதிப் போட்டிகளில், இலங்கை அணி இந்தியாவை அடித்துத் துவைத்திருக்கிறது. இப்போ எல்லாம் மாறி நடக்கின்றது. இந்திய அணி எப்படி இவ்வளவு வலிவானதாக இருக்கிறதோ, அதேபோல் இலங்கை அணியும் அப்போ இருந்தது. அது ஒரு பொற்காலம்.