1 month ago
என்னதான் வறுத்தாலும் நாம தலீவர் படத்தை அகன்ற வெண்திரையில் பார்ப்போம்! ஞாயிறு ஷோ புக்கிங் ரெடி😍 ஆன்ரிகளின் விசில் காதில் விண் கூவும்😁 ஆயிரம் கோடியை அள்ள ‘கூலி’ என்ற பெயரையே கெடுப்பதா? -பிரகாஷ் தேவேந்திரன் 75 வயதிலும் துடிப்பான ரஜினிகாந்த்! ஈர்ப்பைத் தரும் ஸ்டைல் நடிப்பு, அதிரடி சண்டைகள், ரத்தம் சொட்டும் வன்முறை, கணக்கு வழக்கில்லாமல் நடக்கும் கொலைகள்.. என அதகளம் காட்டும் படத்தில் கதை இருக்கிறதா? நல்ல மெசேஜ் இருக்கிறதா? குழந்தைகள், பெண்கள் என குடும்பத்தோடு பார்க்க முடியுமா? ஒரு அலசல்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம், அவரது திரையுலக பயணத்தில் 50-ம் ஆண்டை நிறைவு செய்யும் திரைப்படமாக வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகிறது என்றாலே, அது வொரு திருவிழா போல அமைந்துவிடுகிறது அவரது ரசிகர்களுக்கு.. சன் பிக்சர்கஸ் தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படம் இயக்குகிறார் என்ற அறிவுப்பு வெளியாகிய உடனேயே, மக்கள் மத்தியில் பற்றிக் கொண்டு விட்டது ஒரு எதிர்பார்ப்பு. ஆடியோ ரிலீஸ்சில் ரஜினிகாந்த் பேசிய அந்த வார்த்தைகள், தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் இன்னமும் நெகிழ்வாக நின்றுகொண்டிருக்கிறது. அதாவது, “என்னை வாழ வைக்கும் தமிழ்நாட்டு மக்களின் பாதங்களில் என் தலையை வைத்து எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்பது தான் அது. சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் டைரக்டராக உயர்ந்திருக்கிறார், லோகேஷ் கனகராஜ் என்று புகழாரங்கள் சூட்டப்படுகின்றன. கூலி திரைப்படத்திலும் அதே ஃபார்முலா தான். கத்தி, கோடாரி, வெட்டு குத்து ரத்தம், கொடூரமான கொலைகள்.. அப்பப்பா.. ஜீரணிப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. இந்தப் படத்தின் கதையை வித்தியாசமாக அமைக்கலாம் என்ற முடிவில், திரைக்கதைக்குள் பல ட்விஸ்ட்டுகளை வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ். அவை பெரிதாக எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். க்ரிமேட்டர் மெஷின், அதாவது இறந்த உடலை மின்சாரம் பாய்ச்சி சில நொடிகளில் அதனை சாம்பலாக்கும் நவீன இயந்திரம். அந்த க்ரிமேட்டர் மிஷினை உருவாக்கும் சத்யராஜை கொண்டு, தங்களால் கொலை செய்யப்பட்ட ஒரு இருபது பேரின் உடல்களை அழிக்கச் சொல்கிறார் வில்லன் நாகார்ஜுனா. சத்தியராஜ் அதை செய்யவில்லை என்றால், அவரது மூன்று இளம் மகள்களை அழித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததால், அவர் அதை ஒப்புக் கொண்டு செய்து வருகிறார். இங்கு தொடங்கும் கதை, நாகார்ஜுனாவின் கையாள் சோபின் ஷாஹிரால் சத்தியராஜ் கொல்லப்பட, தனது உற்ற நண்பனும் மைத்துனனும் ஆன சத்தியராஜின் கொலைக்கு பழி வாங்குவதற்காக உள்ளே வருகிறார் ரஜினிகாந்த். திரைப்படத்தின் கதையை முமையாக சொல்வது சரியல்ல. ஆனால், இந்த படத்தின் கதையில் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. அதே கமர்ஷியல் கதை தான். கதைக் களம் துறைமுகத்தில் நிற்கும் கண்டைனர் கப்பல்கள் மற்றும் கடல் அலைகள் பின்னணியோடு நகர்கிறது. திரைப்படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் ஹீரோ அறிமுகம், அதைத்தொடர்ந்து ஹீரோ அறிமுகப் பாடல். முக்கால் மணிநேரம் முடிவதற்குள், மூன்று ஃபைட், மூன்று பாடல்கள் முடிந்து விடுகிறது. ஒருமணிநேரத்துக்குள் ஐந்து பாடல்கள், ரத்தம் சொட்டச் சொட்ட ரணகளமான கொலைகள். ஒரு இருபது பேர் உடல்களை, காவல்துறை கண்களுக்கு தெரியாமல் மறைப்பதற்கு சத்யராஜின் க்ரிமேட்டர் தொழில் நுட்பத்தை அணுகும் வில்லன் நாகார்ஜுனா, அதற்கு பிறகு நிகழும் கேட்பாரற்ற, சுமார் நூறு கொலைகளை எப்படி மறைத்தார் என்று தெரியவில்லை. பழைய பாடல்களை ஒலிக்க விட்டு, நிகழும் சண்டை காட்சிகள், தலைமறைவாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்னாள் வீரர்கள் (கேங்க்ஸ்டர்ஸ்), அப்பா மகள் செண்டிமெண்ட் என்று எல்லாமே லோகேஷின் ட்ரெண்டில் கூலி திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேமரா பதிவுகளும், எடிட்டரின் ஒட்டு-வெட்டுகளும் நன்றாக இருக்கிறது. சாண்டி மாஸ்டரால் இதில் இவ்வளவு தான் செய்ய முடியும். அனிருத்தின் பாடல்கள் ஓகே ரகம். பிண்ணனி இசையில் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும். ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சோபின், சார்லி, லொள்ளு சபா மாறன் என்று எல்லோரும் திறமையான நடிகர்களே. உபேந்திராவுக்கு நடிக்க ஒன்றும் இடமில்லை. இதில், ஸ்ருதிஹாசனின் பெர்ஃமார்மன்ஸ் அபாரமாக இருக்கிறது. வாழ்த்துகள் ஸ்ருதி.. அமீர்கான் எப்போது வருவார் என்று ஆடியன்ஸ் மத்தியில் பெரிய எதிர்பார்பையே ஏற்படுத்திவிட்டார்கள். கடைசியில், படம் முடிவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாக வருகிறார் அவர். வந்தவுடன் என்ன..? டமால் டுமீல் தான்.. ஒரு முப்பது பேர் காலி. அவருடைய கெட்-அப் நன்றாக இருந்தாலும், அவரைப் போய் இப்படியா பயன்படுத்துவது என்று சலிப்பு மேலோங்குகிறது. நல்ல திறமையான நடிகரை முற்றிலும் வீணடித்துவிட்டார்கள். படம் முழுக்க லாஜிக் அவுட்டுகள் நிறைய இருக்கின்றன. சுத்தியலால் ஓங்கி மண்டையில் அடித்தும் சாகாமல் நின்று பேசுவது, சவக்குழியில் அதுவும் ஈர மண்ணில் புதைக்கப்பட்டவர் உயிரோடு எழுந்து வருவது, சோபினின் காதலி சொல்வதை உண்மை என்று நம்பும் கண்ணா ரவி கதாபாத்திரம் என்று, சொல்லிக் கொண்டே போகலாம். ரஜினியும், சத்யராஜும் உயிருக்கு உயிரான நண்பர்களாக சொல்லப்பட்டாலும், ஒரேயொரு முறை தான் இருவரும் இணைந்திருக்கும் காட்சி அமைக்கப்பட்டிருப்பது ஏனென்று கேள்விகள் எழுகின்றன. இன்னொன்றை வெகுவாக பாராட்டியாக வேண்டுமென்றால், நமது AI தொழில்நுட்பம் தான்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நாற்பது வருடத்திற்கு முந்தைய இளமைத் தோற்றத்தையும், பேச்சையும் அப்படியே படக்குழு கொண்டுவந்து விட்டது. சூப்பர்ப்..! தொலைக் காட்சிகளில் ஓடும் முப்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில், எதில் பார்த்தாலும் எல்லா கதாபாத்திரங்களும் பெரும்பாலும் நின்று கொண்டே பேசிக் கொண்டிருக்கும். படப்பிடிப்புக்கு வசதியாக டிவி தொடர் இயக்குபவர்கள் அதை செய்கிறார்கள். ஆனால், லோகேஷ் கனகராஜுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.. அவரும் அந்த பாணியை கையாண்டிருப்பது போல தோன்றுகிறது. இதில் இன்னொன்றையும் சொல்லவேண்டுமென்றால், கலாநிதி மாறனுக்கு தனது சொந்த நிறுவனமான சன் பிக்சர்ஸில் படம் எடுத்தால் மட்டுமே அதனை தனது தொலைக்காட்சியில் வெளியிட முடியும் என்ற நிலைமை இருப்பதையும் மறுக்க முடியாது. ஏனென்றால் இன்றைய படங்கள் எல்லாமே ‘ ரெட் ஜெயண்ட்டு’க்கு தானே சொந்தமாகிறது..! படுபயங்கர வன்முறைக் காட்சி காரணமாக படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதை 18 வயதுக்குள்ளானவர்கள் பார்க்க முடியாது. ரஜினி படத்திற்கான நகைச்சுவை, பன்ச் டயலாக், குழந்தைகள், பெண்களை கவரும் காட்சி அமைப்பு இல்லை என்பது பல ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. இந்தப் படம் LCU இல்லை என்று சொல்லிவிட்டாலும், ICU இருக்கிறது. படத்திற்கு இல்லை.. படத்தில் அடியாட்களாக வரும் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களுக்குத் தான்.. FDFS – First Day First Show பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் ஒருபக்கம் காசை கத்தைகத்தையாக செலவழிக்க துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், முன்னூறு நானூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி. மொத்தத்தில், கூலி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான திருவிழாவாக அமைந்திருக்கிறது. ரசிகர்களின் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்..! திரை விமர்சனம்; பிரகாஷ் தேவேந்திரன் https://aramonline.in/22486/coolie-rajinikandh/
1 month ago
“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி August 15, 2025 11:20 am “இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். இந்தியா முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். 1947-ம் ஆண்டு, எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடனும், எண்ணற்ற ஆயுதங்களின் வலிமையுடனும், நமது நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால் சவால்கள் இன்னும் அதிகமாக இருந்தன. இந்த சுதந்திர தினத்துக்காக செங்கோட்டையில் கூடியிருக்கும் ‘மினி இந்தியா’வை நான் காண்கிறேன். நமது துணிச்சலான வீரர்களின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் மூலம், நமது வீரர்கள், எதிரிகளை கற்பனைக்கு அப்பாற்பட்ட பலத்துடன் பதிலளித்தனர். ஏப்ரல் 22-ம் திகதி. எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதத்தை கேட்ட பிறகு கொன்றனர். இதனால் முழு தேசமும் கோபமடைந்தது. அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால், அது இனி பொறுத்துக் கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப் படைகள் தங்கள் விருப்பப்படி, அவர்கள் விரும்பும் நேரத்தில், அவர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதன் மூலம் பதிலடி கொடுக்கும். பொருத்தமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்.” – என பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார். https://oruvan.com/we-will-no-longer-tolerate-the-threat-of-nuclear-weapons-prime-minister-modi-vows-in-independence-day-speech/
1 month ago
தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு August 15, 2025 இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி அத்தியாவசிய செய்திகளை அறிக்கையிடுவதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது. முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை இலங்கை பாதுகாப்பு தரப்பு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு கோரியுள்ளது. அதனூடாகவே, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்ற முடியும் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பெஹ் லிஹ் யி (Beh Lih Yi) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதானது, ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என்றும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, மனித உரிமை குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊடகச் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு தனித்துவமான வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது. https://www.ilakku.org/protest-against-threats-against-tamil-journalists/
1 month ago
தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு
August 15, 2025
இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி அத்தியாவசிய செய்திகளை அறிக்கையிடுவதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை இலங்கை பாதுகாப்பு தரப்பு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு கோரியுள்ளது.
அதனூடாகவே, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்ற முடியும் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பெஹ் லிஹ் யி (Beh Lih Yi) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதானது, ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என்றும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மனித உரிமை குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகச் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு தனித்துவமான வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.
https://www.ilakku.org/protest-against-threats-against-tamil-journalists/
1 month ago
பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் - இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு
Published By: Rajeeban
15 Aug, 2025 | 11:28 AM

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஜெரூசலேம் மற்றும் மாலே அடுமின் பகுதிகளிற்கு இடையிலான குடியேற்ற திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் வீடுகளை அமைப்பது மேற்கு கரையை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலேத்திலிருந்து முற்றாக துண்டிக்கும்.
இது பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக இல்லாமல் செய்யும் என தெரிவித்துள்ள இஸ்ரேலின் நிதியமைச்சர் அங்கீகரிப்பதற்கும் எதுவும் எவருமில்லை என தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களின் கீழ் குடியேற்றம் என்பது சட்டவிரோதமானதாக காணப்படுகின்றது. மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான விவகாரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இது காணப்படுகின்றது.
மேற்குகரையிலும் கிழக்குஜெரூசலேத்திலும் உள்ள 160 குடியேற்றங்களில் ஏழு இலட்ச்சம் யூதர்கள் வசிக்கின்றனர்.
இது பாலஸ்தீனியர்கள் எதிர்கால சுதந்திர தேசத்திற்கான கோருகின்ற நிலம்.
பலவருடகால சர்வதேச அழுத்தம் மற்றும் முடக்கங்களிற்கு பின்னர் நாங்கள் மரபுகளை மீறி மாலே அடுமிமை ஜெரூசலேத்துடன் இணைக்கின்றோம் என இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது சியோனிசத்தின் சிறந்த வடிவம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222596
1 month ago
கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்துக்கு 2026 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி உறுதி Published By: Vishnu 15 Aug, 2025 | 02:25 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கு எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவு திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (13.08.2025) இடம்பெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுயளித்துள்ளார். மேலும் இப்பாலம் அமைக்கப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறையும் மேம்படும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஜனாதிபதிக்கு இந்தப் பாலத்தை அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியதையடுத்து, இப்பாலத்தை அமைப்பதற்கு அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222581
1 month ago
கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்துக்கு 2026 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி உறுதி
Published By: Vishnu
15 Aug, 2025 | 02:25 AM

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கு எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவு திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (13.08.2025) இடம்பெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுயளித்துள்ளார்.
மேலும் இப்பாலம் அமைக்கப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறையும் மேம்படும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஜனாதிபதிக்கு இந்தப் பாலத்தை அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியதையடுத்து, இப்பாலத்தை அமைப்பதற்கு அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/222581
1 month ago
மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சி.வி.கே. சிவஞானம் Published By: VISHNU 15 AUG, 2025 | 03:19 AM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை (14) காலை 12 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்களின் எழுச்சி போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் தீவில் இயற்கைச் சூழலில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வு ஆகியவை தொடருமானால் மன்னார் பிரதேசத்தினுடைய வாழ்வியல் சூழல் மிகவும் பாதிக்கப்படும் என்பதை வெளிப்படுத்தி இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது இடம்பெற்று வருகின்ற போராட்டம் அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இப்போராட்டம் வெற்றியளிக்க வேண்டும். இப்போராட்டம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீளாய்வின் அடிப்படையில் மக்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயற்கையுடன் கூடிய மன்னார் அழிவிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் உரிய சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அந்த வகையிலே மக்களினுடைய போராட்டம் வெற்றி அளிக்க வேண்டும் என்பதை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்கின்ற வகையில் எனது ஆதரவையும்,இலங்கை தமிழரசுக்கட்சியின் முழுமையான ஆதரவையும் இப்போராட்டத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் புதன்கிழமை (13) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட இறுதி முடிவுகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்படாத நிலையில் குறித்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த 12 வது நாள் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/222583
1 month ago
மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சி.வி.கே. சிவஞானம்
Published By: VISHNU
15 AUG, 2025 | 03:19 AM

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை (14) காலை 12 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்களின் எழுச்சி போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் தீவில் இயற்கைச் சூழலில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வு ஆகியவை தொடருமானால் மன்னார் பிரதேசத்தினுடைய வாழ்வியல் சூழல் மிகவும் பாதிக்கப்படும் என்பதை வெளிப்படுத்தி இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது இடம்பெற்று வருகின்ற போராட்டம் அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இப்போராட்டம் வெற்றியளிக்க வேண்டும்.
இப்போராட்டம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மீளாய்வின் அடிப்படையில் மக்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயற்கையுடன் கூடிய மன்னார் அழிவிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் உரிய சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அந்த வகையிலே மக்களினுடைய போராட்டம் வெற்றி அளிக்க வேண்டும் என்பதை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்கின்ற வகையில் எனது ஆதரவையும்,இலங்கை தமிழரசுக்கட்சியின் முழுமையான ஆதரவையும் இப்போராட்டத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் புதன்கிழமை (13) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட இறுதி முடிவுகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்படாத நிலையில் குறித்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த 12 வது நாள் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார்.
https://www.virakesari.lk/article/222583
1 month ago
முத்தையன்கட்டு சம்பவம் - ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Published By: Rajeeban 15 Aug, 2025 | 10:37 AM முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,ஆனால் அதற்கான தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்,ஹர்த்தால் என்றாலும் சரி இல்லாவிட்டாலும் எங்களால் வேறு எதனையும் செய்ய முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம், ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அதற்காக அங்கே எவரும் ஹர்த்தாலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாங்கள் இந்த சம்பவத்தினை இன மத அடிப்படையில் பார்க்ககூடாது,குற்றங்கள் இடம்பெற்றால் பொலிஸார் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக அவர்களின் பின்னணியை கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பார்கள்,கடந்த சில மாதங்களாக நாங்கள் இதனையே செய்கின்றோம் என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222594
1 month ago
முத்தையன்கட்டு சம்பவம் - ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
Published By: Rajeeban
15 Aug, 2025 | 10:37 AM

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.
முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,ஆனால் அதற்கான தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்,ஹர்த்தால் என்றாலும் சரி இல்லாவிட்டாலும் எங்களால் வேறு எதனையும் செய்ய முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம், ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அதற்காக அங்கே எவரும் ஹர்த்தாலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாங்கள் இந்த சம்பவத்தினை இன மத அடிப்படையில் பார்க்ககூடாது,குற்றங்கள் இடம்பெற்றால் பொலிஸார் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக அவர்களின் பின்னணியை கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பார்கள்,கடந்த சில மாதங்களாக நாங்கள் இதனையே செய்கின்றோம் என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
https://www.virakesari.lk/article/222594
1 month ago
ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு - கர்தினால் கவலை தெரிவிப்பு

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கத்தால் 'அக்கமஹா பண்டிதர்' கௌரவப் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கர்தினால் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்புத் திருத்தத்தில் மனித உரிமைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
https://adaderanatamil.lk/news/cmec8v7pv02kfqp4k3icdgqxs