Aggregator

பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி

3 weeks 6 days ago
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி Published By: Digital Desk 3 13 Feb, 2026 | 09:39 AM பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (13) அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கியமான தேர்தலாகக் கருதப்பட்ட இந்த வாக்கெடுப்பில், அந்தக் கட்சி பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு வெடித்த மக்கள் போராட்டங்களின் பின்னர், நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவின் அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல் இதுவாகும். சுமார் 175 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட, முஸ்லிம் பெரும்பான்மை நாட்டான பங்களாதேஷில், பல மாதங்களாக ஹசீனா ஆட்சிக்கு எதிரான கடும் அமைதியின்மை நிலவி வந்தது. இதனால் அன்றாட வாழ்க்கை மட்டுமன்றி, உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளரான ஆடைத் துறை உள்ளிட்ட முக்கிய தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் தீர்மானம் மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. மேலும், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தலைமையிலான அண்மைய போராட்டங்களுக்கு பின்னர் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தலும் இதுவாகும். தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பங்களாதேஷ் தேசியக் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அந்தக் கணிப்புகளை நனவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகத் தகவல்களின்படி, அந்தக் கூட்டணி 300 உறுப்பினர்களைக் கொண்ட ஜாதியா சங்சத் (தேசிய சபை)யில் 209 இடங்களை வென்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மை உறுதியாகியதும், கட்சி தலைமையகம் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், நாட்டின் நலன் மற்றும் அமைதிக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/238534

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

3 weeks 6 days ago
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார் Feb 13, 2026 - 08:56 AM இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmlkbs1k30006356n0rxx4bvb

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

3 weeks 6 days ago

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

Feb 13, 2026 - 08:56 AM

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://adaderanatamil.lk/news/cmlkbs1k30006356n0rxx4bvb

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 6 days ago
அமெரிக்காவில் ICE செய்வதை டிரம்ப் கோஷ்டி நியாயயப்படுத்துவதுபோல் இங்கும் பாடம் எடுக்கிறார்! போலீஸ் நிறுத்தும்படி சொல்ல, நிறுத்தாமல் செல்வது மரண தண்டனைக்குரிய குற்றமல்ல! வாகனத்தை நிறுத்த டயரை சுட்டாலே போதுமானது! ICE செய்வதுபோல் நெற்றியில் சுட வேண்டியதில்லை.

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி ; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு

3 weeks 6 days ago

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு

13 Feb, 2026 | 09:33 AM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை இந்திய மாநில நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகிய துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்திய மயமாக்கலுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் மேற்பரப்பு மற்றும் கடல் தளத்திலுள்ள அரிய கனிம வளங்களை வரைபடமாக்குதல், அடையாளம் காணுதல் மற்றும் வெட்டியெடுப்பதை இந்திய நிறுவனங்களுக்கு ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இரு அரசாங்கங்களின் ஒப்பந்தத்துடன் இந்திய நிறுவனங்களுக்கு கனிமமயமாக்கப்பட்ட பகுதிகளை ஒதுக்கவும், இந்திய பொது மற்றும் தனியார் துறைகளின் முதலீடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது.

சிலோன் கிராஃபைட், நீல சபையர், புல்முடே கனிம மணல் (இல்மனைட்,ரூட்டைல், சிர்கான், மோனாசைட்), உயர் தர சிலிக்கா, ராக் பாஸ்பேட், டோலமைட் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கோபால்ட் படிவுகள் போன்ற வளங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா கையகப்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த வளங்கள் தொழில்நுட்பத் தொழில்களுக்கு அவசியமானவை. இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.

இந்தத் திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவின் இந்திய விஜயம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையில் இந்திய மயமாக்கலுக்கு எதிராகப் போராடிய ஒரு கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் காணப்பட்டது. இந்த நடவடிக்கை துரோகமானது, மக்கள் ஒன்றுபட்டு அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியமயமாக்கும் முடிவுகள் மற்றும் மருந்து சந்தையை இந்திய மருந்துகளால் நிரப்ப ஏழு இரகசிய ஒப்பந்தங்கள் போன்ற இந்தியா தொடர்பான பிற திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/238529

உங்கள் கைப்பேசி தொலைந்தால் கட்டாயம் பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள்

3 weeks 6 days ago

உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா? இதை கட்டாயம் கவனியுங்கள்

Feb 12, 2026 - 10:12 PM

உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா? இதை கட்டாயம் கவனியுங்கள்

கையடக்க தொலைபேசிகள் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கையடக்க தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் தொடர்ச்சியாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு காணாமல் போன அல்லது திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளின் ஊடாக சிலர் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க கூடிய வாய்ப்புள்ளதால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அது தொடர்பான முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது,

PRM1.jpg

PRM2.jpg

PRM3.jpg

PRM4.jpg

https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmljoqb6t000g356nmnsslyak/documents/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+2026.02.12.pdf

https://adaderanatamil.lk/news/cmljoqb6t000g356nmnsslyak

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை - பிரதமர்

3 weeks 6 days ago

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை - பிரதமர்

13 Feb, 2026 | 09:25 AM

image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க போவதில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெலியத்த றுஹூணு விஜயபா தேசிய பாடசாலைக்கு வியாழக்கிழமை (13) விஜயம் செய்த பிரதமர், முதலாம் தரத்துக்கான புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொண்டுள்ளோம்.தரம் ஒன்றுக்கான கல்வி மறுசீரமைப்பு தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்நடவடிக்கைகள் தொடர்பில் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

இலவச கல்வி தற்போதைய தொழிற்றுறைக்கு பொறுத்தமான வகையில் மறுசீரமைக்கப்படும். தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்ட குறைகள் தற்போது திருத்தப்படுகிறது.

எதிர்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க போவதில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் எதிர்க்கட்சியினரின் தக்க பதிலாக அமையும். விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள் அதனையாவது சிறந்த முறையில் செய்யட்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/238528

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்.

3 weeks 6 days ago
யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன். Posted on February 12, 2026 by சமர்வீரன் 60 0 வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் வடமத்திய மாநில அரங்காற்றுகை 07.02.2026 சனிக்கிழமை கற்றிங்கன் நகரில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்கள் பொதுச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், த.ஒ.குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு முத்துவேல் ஜெயவலதாஸ், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான திருமதி வசுந்தரா சிவசோதி, நடன ஆசிரியரான திருமதி சஞ்சியா ராமராஜன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளரர்களான தமிழ் வாரிதி திருமதி வளர்மதி யோகஜெகதீஸ்வரன், தமிழ் மாணி திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை, திருமதி மகிழ்தினி சரவணமுத்து, வடமத்திய மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி சாரதா ராஜ்குமார், மாநிலத் துணைச் செயற்பாட்டாளர் தமிழ் மாணி திரு. தாமோதரம்பிள்ளை நற்குணராசா, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிருவாகப் பொறுப்பாளர் தமிழ் மாணி திருமதி கலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றினர். அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. இவ்வாண்டுக்கான கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, பரதநாட்டியம், விடுதலை நடனம், கூத்து மற்றும் விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு போன்றன போட்டிகளாக இடம்பெற்றன. தமிழர் கலைகளுள் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகள் தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மிகவும் உற்சாகத்தோடு நடைபெற்றது. புத்தாக்கமாக உருப்படிகளின் உருவாக்கத்தில் அரங்கை அணிசெய்த வாள்நடனம் மற்றொரு சிறப்பாக்கமாகப் பார்வையாளர்களின் மனதைத் தொட்டது. குழுநிலை மற்றும் தனிநிலை என இரு அரங்குகளில் அணியமான போட்டிகளில் பங்குபற்றியவர்களை மேன்மையுடன் மதிப்பளித்தனர். போட்டியரங்கிலே சிறப்பு நிகழ்வாக நடனத்துறையிலே முனைவருக்கான பட்ட மேற்படிப்பை நிறைவுசெய்த முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்களை அரங்கிற்கு அழைத்து, தமிழ்க் கல்விக் கழகத்தினர் மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றதோடு, புள்ளிகளின் அடிப்படையில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயம் வாறன்டோர்வ், தமிழாலயம் டோட்முன்ட் மற்றும் தமிழாலயம் முல்கைம் ஆகிய தமிழாலயங்கள் மதிப்பளிப்பைப் பெற்றன. பல்வேறு நகரங்களில் இருந்து இணைந்த பதினாறுக்கு மேற்பட்ட நடுவர் குழாமோடு 08:30 மணிக்குத் தொடங்கிய கலைத்திறன் போட்டி மதிப்பளிப்புகளோடு, 20:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கை முரசறைய நிறைவுற்றது. தொடர்ந்து 14.02.2026 மத்திய மாநிலத்தில் முன்சன்கிளாட்பாக் நகரிலும் 21.02.2026 வடமாநிலத்தில் கனோவர் நகரிலும் 28.02.2026 தென்மாநிலத்தில் ஸ்ருற்காட் நகரிலும் 21.03.2026 தென்மேற்கு மாநிலத்தில்; வைற்றர்ஸ்ரட் நகரிலும் நடைபெறவுள்ளது. யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன். – குறியீடு

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்.

3 weeks 6 days ago

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்.

9d0229d1fabcc616d20cd99669b16a9e?s=32&d=Posted on February 12, 2026 by சமர்வீரன்

60 0

K800_KTP-MN-151-300x200.jpg

வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் வடமத்திய மாநில அரங்காற்றுகை 07.02.2026 சனிக்கிழமை கற்றிங்கன் நகரில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்கள் பொதுச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், த.ஒ.குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு முத்துவேல் ஜெயவலதாஸ், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான திருமதி வசுந்தரா சிவசோதி, நடன ஆசிரியரான திருமதி சஞ்சியா ராமராஜன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளரர்களான தமிழ் வாரிதி திருமதி வளர்மதி யோகஜெகதீஸ்வரன், தமிழ் மாணி திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை, திருமதி மகிழ்தினி சரவணமுத்து, வடமத்திய மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி சாரதா ராஜ்குமார், மாநிலத் துணைச் செயற்பாட்டாளர் தமிழ் மாணி திரு. தாமோதரம்பிள்ளை நற்குணராசா, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிருவாகப் பொறுப்பாளர் தமிழ் மாணி திருமதி கலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றினர்.

அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. இவ்வாண்டுக்கான கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, பரதநாட்டியம், விடுதலை நடனம், கூத்து மற்றும் விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு போன்றன போட்டிகளாக இடம்பெற்றன.

தமிழர் கலைகளுள் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகள் தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மிகவும் உற்சாகத்தோடு நடைபெற்றது. புத்தாக்கமாக உருப்படிகளின் உருவாக்கத்தில் அரங்கை அணிசெய்த வாள்நடனம் மற்றொரு சிறப்பாக்கமாகப் பார்வையாளர்களின் மனதைத் தொட்டது. குழுநிலை மற்றும் தனிநிலை என இரு அரங்குகளில் அணியமான போட்டிகளில் பங்குபற்றியவர்களை மேன்மையுடன் மதிப்பளித்தனர். போட்டியரங்கிலே சிறப்பு நிகழ்வாக நடனத்துறையிலே முனைவருக்கான பட்ட மேற்படிப்பை நிறைவுசெய்த முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்களை அரங்கிற்கு அழைத்து, தமிழ்க் கல்விக் கழகத்தினர் மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றதோடு, புள்ளிகளின் அடிப்படையில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயம் வாறன்டோர்வ், தமிழாலயம் டோட்முன்ட் மற்றும் தமிழாலயம் முல்கைம் ஆகிய தமிழாலயங்கள் மதிப்பளிப்பைப் பெற்றன. பல்வேறு நகரங்களில் இருந்து இணைந்த பதினாறுக்கு மேற்பட்ட நடுவர் குழாமோடு 08:30 மணிக்குத் தொடங்கிய கலைத்திறன் போட்டி மதிப்பளிப்புகளோடு, 20:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கை முரசறைய நிறைவுற்றது. தொடர்ந்து 14.02.2026 மத்திய மாநிலத்தில் முன்சன்கிளாட்பாக் நகரிலும் 21.02.2026 வடமாநிலத்தில் கனோவர் நகரிலும் 28.02.2026 தென்மாநிலத்தில் ஸ்ருற்காட் நகரிலும் 21.03.2026 தென்மேற்கு மாநிலத்தில்; வைற்றர்ஸ்ரட் நகரிலும் நடைபெறவுள்ளது.

K800_KTP-MN-3.jpg

K800_KTP-MN-84.jpg

K800_KTP-MN-125.jpg

K800_KTP-MN-126.jpg

K800_KTP-MN-119.jpg

K800_KTP-MN-120.jpg

K800_KTP-MN-121.jpg

K800_KTP-MN-122.jpg

K800_KTP-MN-123.jpg

K800_KTP-MN-124.jpg

K800_KTP-MN-113.jpg

K800_KTP-MN-114.jpg

K800_KTP-MN-115.jpg

K800_KTP-MN-116.jpg

K800_KTP-MN-117.jpg

K800_KTP-MN-118.jpg

K800_KTP-MN-107.jpg

K800_KTP-MN-108.jpg

K800_KTP-MN-109.jpg

K800_KTP-MN-110.jpg

K800_KTP-MN-111.jpg

K800_KTP-MN-112.jpg

K800_KTP-MN-102.jpg

K800_KTP-MN-103.jpg

K800_KTP-MN-104.jpg

K800_KTP-MN-105.jpg

K800_KTP-MN-106.jpg

K800_KTP-MN-96.jpg

K800_KTP-MN-97.jpg

K800_KTP-MN-98.jpg

K800_KTP-MN-99.jpg

K800_KTP-MN-100.jpg

K800_KTP-MN-101.jpg

K800_KTP-MN-90.jpg

K800_KTP-MN-91.jpg

K800_KTP-MN-92.jpg

K800_KTP-MN-93.jpg

K800_KTP-MN-94.jpg

K800_KTP-MN-95.jpg

K800_KTP-MN-85.jpg

K800_KTP-MN-86.jpg

K800_KTP-MN-87.jpg

K800_KTP-MN-88.jpg

K800_KTP-MN-89.jpg

K800_KTP-MN-78.jpg

K800_KTP-MN-79.jpg

K800_KTP-MN-80.jpg

K800_KTP-MN-81.jpg

K800_KTP-MN-82.jpg

K800_KTP-MN-83.jpg

K800_KTP-MN-71.jpg

K800_KTP-MN-72.jpg

K800_KTP-MN-73.jpg

K800_KTP-MN-74.jpg

K800_KTP-MN-75.jpg

K800_KTP-MN-76.jpg

K800_KTP-MN-77.jpg

K800_KTP-MN-66.jpg

K800_KTP-MN-67.jpg

K800_KTP-MN-68.jpg

K800_KTP-MN-69.jpg

K800_KTP-MN-70.jpg

K800_KTP-MN-59.jpg

K800_KTP-MN-60.jpg

K800_KTP-MN-61.jpg

K800_KTP-MN-62.jpg

K800_KTP-MN-63.jpg

K800_KTP-MN-64.jpg

K800_KTP-MN-65.jpg

K800_KTP-MN-54.jpg

K800_KTP-MN-55.jpg

K800_KTP-MN-56.jpg

K800_KTP-MN-57.jpg

K800_KTP-MN-58.jpg

K800_KTP-MN-48.jpg

K800_KTP-MN-49.jpg

K800_KTP-MN-50.jpg

K800_KTP-MN-51.jpg

K800_KTP-MN-52.jpg

K800_KTP-MN-53.jpg

K800_KTP-MN-41.jpg

K800_KTP-MN-42.jpg

K800_KTP-MN-43.jpg

K800_KTP-MN-44.jpg

K800_KTP-MN-45.jpg

K800_KTP-MN-46.jpg

K800_KTP-MN-47.jpg

K800_KTP-MN-33.jpg

K800_KTP-MN-34.jpg

K800_KTP-MN-35.jpg

K800_KTP-MN-36.jpg

K800_KTP-MN-37.jpg

K800_KTP-MN-38.jpg

K800_KTP-MN-39.jpg

K800_KTP-MN-40.jpg

K800_KTP-MN-26.jpg

K800_KTP-MN-27.jpg

K800_KTP-MN-28.jpg

K800_KTP-MN-29.jpg

K800_KTP-MN-30.jpg

K800_KTP-MN-31.jpg

K800_KTP-MN-32.jpg

K800_KTP-MN-19.jpg

K800_KTP-MN-20.jpg

K800_KTP-MN-21.jpg

K800_KTP-MN-22.jpg

K800_KTP-MN-23.jpg

K800_KTP-MN-24.jpg

K800_KTP-MN-25.jpg

K800_KTP-MN-11.jpg

K800_KTP-MN-12.jpg

K800_KTP-MN-13.jpg

K800_KTP-MN-14.jpg

K800_KTP-MN-15.jpg

K800_KTP-MN-16.jpg

K800_KTP-MN-17.jpg

K800_KTP-MN-18.jpg

K800_KTP-MN-4.jpg

K800_KTP-MN-5.jpg

K800_KTP-MN-6.jpg

K800_KTP-MN-7.jpg

K800_KTP-MN-8.jpg

K800_KTP-MN-9.jpg

K800_KTP-MN-10.jpg

K800_KTP-MN-1.jpg

K800_KTP-MN-2.jpg

K800_KTP-MN-154.jpg

K800_KTP-MN-155.jpg

K800_KTP-MN-156.jpg

K800_KTP-MN-157.jpg

K800_KTP-MN-148.jpg

K800_KTP-MN-149.jpg

K800_KTP-MN-150.jpg

K800_KTP-MN-151.jpg

K800_KTP-MN-152.jpg

K800_KTP-MN-153.jpg

K800_KTP-MN-144.jpg

K800_KTP-MN-145.jpg

K800_KTP-MN-146.jpg

K800_KTP-MN-147.jpg

K800_KTP-MN-137.jpg

K800_KTP-MN-138.jpg

K800_KTP-MN-139.jpg

K800_KTP-MN-140.jpg

K800_KTP-MN-141.jpg

K800_KTP-MN-142.jpg

K800_KTP-MN-143.jpg

K800_KTP-MN-130.jpg

K800_KTP-MN-131.jpg

K800_KTP-MN-132.jpg

K800_KTP-MN-133.jpg

K800_KTP-MN-134.jpg

K800_KTP-MN-135.jpg

K800_KTP-MN-136.jpg

K800_KTP-MN-127.jpg

K800_KTP-MN-128.jpg

K800_KTP-MN-129.jpg

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன். – குறியீடு

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 6 days ago
வருணது கூக்ளி வழமையாக வீசப்படுவது போல மணிக்கட்டினை முழுமையாக திருப்பி போடப்படுவது போலல்லாமல், மோதிர விரலால் சுண்டி விடுதல் (பிலிக்), வருணது பந்து பிடி சேன் வோர்னது பிடி போன்றது சேன் வோனும் மணிக்கட்டினால் வீசினாலும் மோதிர விரலாலும் பந்தினை சுழற்றுவார். அத்துடன் வருணது பந்து விச்சு வேகமானது (முஜீப், ரஸீட் கான் ஆகியோரது போல) அதனால் கணிப்பது கடினம் அத்துடன் மணிக்கட்டுகூட அவர்களது ஆடை மறைக்கின்ற போது துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமாக இருக்கும்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 6 days ago
இதுகளை பார்ப்பதில்லை. சும்மா போட்டு வெளுக்கிறது. 😁 IPLல் பணம்தான் பிரதானம். மற்றவை எல்லாம் பின்னாடி என்று புரிந்தால், பிறகு கனக்க யோசிக்கத் தேவையில்லை. IPLக்கும், நாடுகளுக்கு இடையிலான போட்டிகளுக்கும் நிறைய வித்தியாசம். IPLல வைத்து இந்தப் போட்டிகளை எடைபோட முடியாது. கூடாது.

வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்

3 weeks 6 days ago
18 hours ago, கிருபன் said: வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம். அனுர தொடக்கம் அமைச்சர்மார்வரை வடக்கில்தான் அசைலம் அடிக்க வேண்டிவரும் ...அப்படியான எதிரணிஅலை தெற்கில் வளர்கின்ற்து வடக்கு கிழக்குப் பிரிப்பு வழக்கு நடக்கும்போது நாங்கள் பேபி பாருங்கோ

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 6 days ago
சற்று முன் Star sports Tamil commentaryயில் இப்படி வர்ணனை செய்ததாக என்னுடைய வாசகர் பிரசாந்த் கிருஷ்ணன் எனக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருந்தார். .......................... "வருண் பெளலிங் போட வந்தா அந்த காலத்து ராஜேஷ்குமார் மர்ம நாவல் மாதிரி, பந்து உள்ள வருதா வெளிய போகுதான்னே தெரியாது" .................... வர்ணனையாளர் சடகோபன் ரமேஷ் செய்தி அனுப்பிய வாசகர் பிரசாந்த் கிருஷ்ணன் இருவருக்கும் நன்றி. நம்ம தமிழ் பையன் பற்றி முகநூலில் படித்தது ...

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 6 days ago
இன்றைய மச்சை ஜெய்சா நேரில் பார்த்தவரெல்லோ ....கொழும்பு பிச் நிச்சயமாக வேகப்பந்துக்கு சாதகமாகவே இருக்கும் நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . இவர்தானே கார்டிக் பாண்டியாவிற்கு போட்டவர் ..அவருடைய பந்து எறிவு எவ்வளவு தூரத்தில் இருந்து என்பதை கவனித்தீர்களா..

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 6 days ago
டம்பர் எனக்கு கோல் பண்ணிட்டார் ..இன்று தன்னுடன் இருந்து மச் பார்க்காட்டாம்....முப்பது வருசம் அமெரிக்காவில் இருந்து என்னாத்தைக் கிழிச்சியள் ... சும்மாயாழில் தேவையில்லாத...அலட்டல்தானே ...

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 6 days ago
நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . நபீபியா சர்வதேச t20 போட்டிகளில் விளையாடுவது குறைவு. இவர் துபாய் நாட்டில் நடக்கும் ILT20 போட்டிகளில் சென்ற டிசம்பர் மாதம் 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். ஒரு போட்டியிலும் பந்து வீசவில்லை. துடுப்பாட்ட வீரராவே விளையாடினார். ஏன் இந்த T20 உலகத்தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இவர் அணித்தலைவரராக இருந்தும் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இவர் பல போட்டிகளில் பந்து வீசியதில்லை. டெல்லி அணி முன்பு ஏலத்தில் நேபாள அணியை சேர்ந்த Sandeep Lamichhane தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியில் குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் போன்றவர்கள் இருப்பதினால் இவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை . முன்பு நெதர்லாந்து வீரர் ஒருவர் KKR அணிக்கு சிலவருடங்கள் விளையாடி இருக்கிறார். வங்காளதேசத்தில் வீரர்கள் Mortaza,Litton Das ஐபிஎல்லில் பெரிதாக சாதிக்கவில்லை. Mohammad Ashraful சூதாட்டத்தில் ஈடுபட்டது காரணமாக சர்வதேச போட்டிகளில் தடை ஏற்பட்டது. Shakib Al Hasan KKR க்கு சிலகாலம் விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி போட்டி நாயகன் விருது பெற்றவர்களில் ஒருவர் Mustafizur Rahman இம்முறை KKR ஏலத்தில் எடுத்தும் இந்திய அரசு சொன்னதினால் அவர் நீக்கப்பட்டுவிட்டார். ஆப்கானிஸ்தான் வீரர்கள் போல வங்கதேச வீரர்கள் சாதனை படைக்காததும் ஐபிஎல்இல் வங்கதேச வீரர்கள் குறைவாகவே விளையாடி இருக்கிறார்கள்

வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்

3 weeks 6 days ago
வடக்கு கிழ்க்கு பிரிவினைக்கு வழக்கு போடுவோம் ,சட்ட நடவடிக்கை எடுப்போம்...☹️