Aggregator

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது

3 weeks 6 days ago
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது February 12, 2026 11:53 am பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாம் திகதி சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் பாலிகான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்தக் குற்றம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ஹாம்ப்ஷயர் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் வியான் சுரேந்திரநாதன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வகுப்பு ‘ஏ’ போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாலியல் செயல்பாடுகளுக்காக ஒருவரை முடக்கவோ அல்லது மயக்கமடையச் செய்யவோ இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது பொலிஸ் பாதுகாப்பு மற்றும் உதவியின் கீழ் இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த இளம் சந்தேக நபர் சவுத்தாம்ப்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹாம்ப்ஷயர் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். https://oruvan.com/sri-lankan-tamil-youth-arrested-in-britain-on-sexual-abuse-charges/

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது

3 weeks 6 days ago

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது

February 12, 2026 11:53 am

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது

பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் பாலிகான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்தக் குற்றம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ஹாம்ப்ஷயர் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் வியான் சுரேந்திரநாதன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வகுப்பு ‘ஏ’ போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாலியல் செயல்பாடுகளுக்காக ஒருவரை முடக்கவோ அல்லது மயக்கமடையச் செய்யவோ இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது பொலிஸ் பாதுகாப்பு மற்றும் உதவியின் கீழ் இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த இளம் சந்தேக நபர் சவுத்தாம்ப்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹாம்ப்ஷயர் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

https://oruvan.com/sri-lankan-tamil-youth-arrested-in-britain-on-sexual-abuse-charges/

வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்

3 weeks 6 days ago
வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம் வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம்.யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஆவரங்கால் தொண்டைமானாறு வீதியை புனரமைக்கும் வேலைத் திட்டத்தை நேற்று புதன்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திக்காக 425 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையினுடைய கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தில் ஆவரங்கால் தொண்டைமானாறு வீதிக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் மக்கள் பிரச்சனைகளை விளங்கி கொள்ளும் எப்படியான அரசாங்கம் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினோம்.ஊழல்களை அழித்தொழிப்போம் எனத் தெரிவித்தோம். ஊழல் தர சுட்டெண்ணில் நாடு முன்னேறியுள்ளது.ஜனாதிபதி முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை ஒரு ரூபா பணத்தையும் ஊழல் செய்வதில்லை. வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது இரண்டு பேரை விலக்கியிருந்தார். அதற்கு காரணம் உங்களுக்குத் தெரியும் தானே? ஊழலை நாம் ஒழிப்போம். வாகனம், பாதுகாப்பு என்பதை எடுப்பதில்லை எனத் தீர்மானித்தோம். இங்கு எமக்கு போக்குவரத்து பொலிஸார் மட்டும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சஜித் பிரேமதாஸவுக்கு இதை விட பாதுகாப்பு வழங்கப்படும். சுமந்திரனுக்கும் பாதுகாப்பு உள்ளது. ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது தேவையானளவு மக்களை சந்தித்தார். அரசாங்கத்தினால் அளிக்கப்படும் வரப்பிரசாதத்தை முடிந்தவரை எடுப்பதில்லை. முப்பது வருட யுத்தம் மாத்திரம் பிரச்சினை இல்லை நூறு வருட வீதியும் பிரச்சினை தான். பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பாதுகாப்பு படையினரை திரும்ப பெற்றோம். மக்களின் காணிகளை மீள கையளித்து கொண்டு வருகிறோம். சில காணிகளை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது. சில காணி உரிமையாளர்களை அடையாளம் காண முடியாதுள்ளது. இடத்தை கையளிக்க தயார் என்றாலும் வேலி அடைக்க பணம் இல்லை என்கிறார்கள். பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம்.வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம். நல்ல விடயம் மக்களை சென்றடையாத விதத்தில் அதனை விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் கல்வி மறுசீரமைப்பு திருத்தம். தேசிய மக்கள் சக்தி அனைவரும் படித்தவர்கள். ஆனால் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்ட சிறு பிழையை காரணம் காட்டி பெரிய போராட்டத்திற்கு தயாரானார். வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கல்வி மறுசீரமைப்பு கோஷங்களுடன் இணைந்து கொண்டனர் – என்றார். https://akkinikkunchu.com/359632/

வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்

3 weeks 6 days ago

வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்

bimal.jpg

வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம்.யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆவரங்கால் தொண்டைமானாறு வீதியை புனரமைக்கும் வேலைத் திட்டத்தை நேற்று புதன்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திக்காக 425 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையினுடைய கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தில் ஆவரங்கால் தொண்டைமானாறு வீதிக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாம் மக்கள் பிரச்சனைகளை விளங்கி கொள்ளும் எப்படியான அரசாங்கம் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினோம்.ஊழல்களை அழித்தொழிப்போம் எனத் தெரிவித்தோம். ஊழல் தர சுட்டெண்ணில் நாடு முன்னேறியுள்ளது.ஜனாதிபதி முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை ஒரு ரூபா பணத்தையும் ஊழல் செய்வதில்லை.

வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது இரண்டு பேரை விலக்கியிருந்தார். அதற்கு காரணம் உங்களுக்குத் தெரியும் தானே? ஊழலை நாம் ஒழிப்போம்.

வாகனம், பாதுகாப்பு என்பதை எடுப்பதில்லை எனத் தீர்மானித்தோம். இங்கு எமக்கு போக்குவரத்து பொலிஸார் மட்டும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சஜித் பிரேமதாஸவுக்கு இதை விட பாதுகாப்பு வழங்கப்படும். சுமந்திரனுக்கும் பாதுகாப்பு உள்ளது.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது தேவையானளவு மக்களை சந்தித்தார். அரசாங்கத்தினால் அளிக்கப்படும் வரப்பிரசாதத்தை முடிந்தவரை எடுப்பதில்லை.

முப்பது வருட யுத்தம் மாத்திரம் பிரச்சினை இல்லை நூறு வருட வீதியும் பிரச்சினை தான்.

பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பாதுகாப்பு படையினரை திரும்ப பெற்றோம். மக்களின் காணிகளை மீள கையளித்து கொண்டு வருகிறோம். சில காணிகளை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது. சில காணி உரிமையாளர்களை அடையாளம் காண முடியாதுள்ளது.

இடத்தை கையளிக்க தயார் என்றாலும் வேலி அடைக்க பணம் இல்லை என்கிறார்கள்.

பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம்.வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம்.

நல்ல விடயம் மக்களை சென்றடையாத விதத்தில் அதனை விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் கல்வி மறுசீரமைப்பு திருத்தம். தேசிய மக்கள் சக்தி அனைவரும் படித்தவர்கள். ஆனால் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்ட சிறு பிழையை காரணம் காட்டி பெரிய போராட்டத்திற்கு தயாரானார்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கல்வி மறுசீரமைப்பு கோஷங்களுடன் இணைந்து கொண்டனர் – என்றார்.


https://akkinikkunchu.com/359632/

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - ட்ரம்ப் ; தானே போரை நிறுத்தியதாகவும் ஆர்ப்பரிப்பு

3 weeks 6 days ago
இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - ட்ரம்ப் ; தானே போரை நிறுத்தியதாகவும் ஆர்ப்பரிப்பு 12 Feb, 2026 | 01:55 PM கடந்த ஆண்டு நிலவிய இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் தான் சமாதான தூதுவர் போல செயற்பட்டு போரை தடுத்து நிறுத்தியதாகவும் ஊடகப் பேட்டியொன்றின்போது குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் போரை தடுப்பதில் தான் தீர்க்கமாக பங்களித்ததாக ட்ரம்ப் உறுதிபட பேட்டியில் தெரிவித்திருந்தார். இது ஒரு அணு ஆயுதப் போராக இருந்திருக்கலாம் என்றும் கூறிய ட்ரம்ப், இதுவரை நான் 8 போர்களை நிறுத்தியதாகவும் அவற்றில் 6 போர்களை வரி விதித்தே தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். “நீங்கள் இந்த போரை நிறுத்தவில்லை என்றால், நான் உங்களுக்கு அதிகளவு வரிகளை விதிப்பேன் என்று கூறினேன். அவர்கள் அதற்கு உடன்பட்டு போரை நிறுத்தியுள்ளனர். ‘ட்ரம்ப் எங்களது போரை நிறுத்தி, குறைந்தது 10 மில்லியன் மக்களின் உயிர்களை காப்பாற்றிவிட்டார்’ என பாகிஸ்தான் பிரதமரே என்னிடம் கூறியிருக்கிறார்” என ட்ரம்ப் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியமைக்கு தானே காரணம் என ட்ரம்ப் பல முறை தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு மே 10ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரண்டு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்து வரும் ட்ரம்ப், தற்போது அதையே 80வது முறையாக பெருமைபடக் கூறுவதாக பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். இந்நிலையில், மூன்றாம் தரப்பின் தலையீட்டை விரும்பாத இந்தியா ட்ரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. https://www.virakesari.lk/article/238479

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 6 days ago
வ‌ண்டு ஹச‌ர‌ங்காவுக்கு ப‌தில் விளையாட‌ வ‌ந்த‌ இன்னொரு வீர‌ர் ர‌ன்ஸ்ச‌ ந‌ல்லா விட்டு கொடுக்கிறார் சின்ன‌ அணியே இவ‌ரின் ப‌ந்துக்கு இந்த‌ அடி என்றால் பெரிய‌ அணிக‌ள் எப்ப‌டி அடிப்பின‌ம் என‌ க‌ற்ப‌மை ப‌ண்ணி பார்த்தேன் லொள்.........................

ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!

1 month ago
ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது! போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் பிலியந்தலை நகரின் ஊடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் அருந்தியுள்ளனரா என பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட பேருந்து ஒன்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 170 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு அண்மித்த காலம் இந்த பரிசோதனையை முன்னெடுத்துள்ளனர். வழி இலக்கம் 120 (கெஸ்பேவ – புறக்கோட்டை), வழி இலக்கம் 255 (கல்கிஸ்ஸ – கொட்டாவை), வழி இலக்கம் 162 (பிலியந்தலை – பண்டாரகம), வழி இலக்கம் 341 (பிலியந்தலை – மஹரகம), வழி இலக்கம் 341/2 (கரதியன ஊடாக – மஹரகம), வழி இலக்கம் 342 (பிலியந்தலை – கொட்டாவை), வழி இலக்கம் 157 (கஹபொல – பிலியந்தலை) மற்றும் வழி இலக்கம் 157/1 (பிலியந்தலை – மாகந்தன) ஆகிய மார்க்கங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1464464

ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!

1 month ago

arrested.jpg?resize=724%2C375&ssl=1

ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் பிலியந்தலை நகரின் ஊடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் அருந்தியுள்ளனரா என பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைகள் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட பேருந்து ஒன்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 170 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு அண்மித்த காலம் இந்த பரிசோதனையை முன்னெடுத்துள்ளனர்.

வழி இலக்கம் 120 (கெஸ்பேவ – புறக்கோட்டை), வழி இலக்கம் 255 (கல்கிஸ்ஸ – கொட்டாவை), வழி இலக்கம் 162 (பிலியந்தலை – பண்டாரகம), வழி இலக்கம் 341 (பிலியந்தலை – மஹரகம), வழி இலக்கம் 341/2 (கரதியன ஊடாக – மஹரகம), வழி இலக்கம் 342 (பிலியந்தலை – கொட்டாவை), வழி இலக்கம் 157 (கஹபொல – பிலியந்தலை) மற்றும் வழி இலக்கம் 157/1 (பிலியந்தலை – மாகந்தன) ஆகிய மார்க்கங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2026/1464464

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு

1 month ago
சுமந்திரனின்... ராஜதந்திரம் எல்லாம் வீணாகி விட்டதே. 😂 சுத்துமாத்துக்கு, "அல்வா" கொடுத்து விட்டார்கள். 🤣

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா

1 month ago
தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா 11 Feb, 2026 | 07:01 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் தொழில்முறை அரச சேவை சீரழிந்து வருகின்றமை கவலையளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை ஆகியவை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : இணையதளமொன்றில் வெளியிடப்பட்டுள்ள 'நீதி எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாறுகிறது' என்ற சிறந்த கட்டுரையின் பகுதிகளைப் பகிர நான் முடிவு செய்தேன். ஏனெனில், இது இலங்கை அரசின் அடித்தளத்தையே ஆழமாகப் பாதிக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது. மிகவும் சிந்தனைமிக்க மற்றும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களுடன் நான் எவ்வித தயக்கமும் இன்றி உடன்படுகிறேன். நான் சமன் ஏக்கநாயக்கவை அறிவேன், அவருடன் பணியாற்றியும் உள்ளேன். அவர் மிகவும் நேர்மையான, உயர்மட்டத் தொழில்முறைத் தகுதியுள்ள ஓர் அரச அதிகாரி ஆவார். தொழில்முறை, திறமையான மற்றும் நேர்மையான அரச சேவை இல்லாமல் ஒரு அரசாங்கம் இயங்க முடியாது. அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால அனுபவமும் தொழில்முறைத் தகுதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களிடம் அசைக்க முடியாத நேர்மை இருக்க வேண்டும். ஒரு இயங்கும் ஜனநாயகத்தில், நாட்டை ஆட்சி செய்வதற்கு அரசியல் தலைவர்கள் ஒரு தொழில்முறை அரச சேவையையே சார்ந்திருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் எஞ்சியிருக்கும் நமது அரச சேவையைச் சிதைத்துவிட்டு, அதற்குப் பதிலாகக் குறைந்த தகுதியும் அனுபவமும் கொண்ட கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நியமிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. நிர்வாகம் எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை இலங்கை மக்கள் உணர்ந்ததால்தான் 'அரகலய' போராட்டமே உருவானது. நமது மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. இரண்டு தசாப்தகால மோசமான ஆட்சியினால் ஏற்பட்ட அழிவுகளால் நமது நாடு நிலைகுலைந்து போயுள்ளது. தற்போதைய ஆட்சி முறை மாற்றப்படாவிட்டால், அது நாட்டை முழுமையான குழப்பத்திற்குள்ளேயே தள்ளும். இதற்கான தீர்வு மக்களிடமே உள்ளது என்ற கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும், அதன் பாரதூரமான விளைவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் நமது உன்னதமான தேசத்தை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பதை ஜனநாயக ரீதியாகத் தீர்மானிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/238423

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா

1 month ago

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா

11 Feb, 2026 | 07:01 PM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் தொழில்முறை அரச சேவை சீரழிந்து வருகின்றமை கவலையளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை ஆகியவை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

இணையதளமொன்றில் வெளியிடப்பட்டுள்ள 'நீதி எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாறுகிறது' என்ற சிறந்த கட்டுரையின் பகுதிகளைப் பகிர நான் முடிவு செய்தேன். ஏனெனில், இது இலங்கை அரசின் அடித்தளத்தையே ஆழமாகப் பாதிக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது.

மிகவும் சிந்தனைமிக்க மற்றும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களுடன் நான் எவ்வித தயக்கமும் இன்றி உடன்படுகிறேன். நான் சமன் ஏக்கநாயக்கவை அறிவேன், அவருடன் பணியாற்றியும் உள்ளேன். அவர் மிகவும் நேர்மையான, உயர்மட்டத் தொழில்முறைத் தகுதியுள்ள ஓர் அரச அதிகாரி ஆவார்.

தொழில்முறை, திறமையான மற்றும் நேர்மையான அரச சேவை இல்லாமல் ஒரு அரசாங்கம் இயங்க முடியாது. அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால அனுபவமும் தொழில்முறைத் தகுதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களிடம் அசைக்க முடியாத நேர்மை இருக்க வேண்டும். ஒரு இயங்கும் ஜனநாயகத்தில், நாட்டை ஆட்சி செய்வதற்கு அரசியல் தலைவர்கள் ஒரு தொழில்முறை அரச சேவையையே சார்ந்திருக்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கம் எஞ்சியிருக்கும் நமது அரச சேவையைச் சிதைத்துவிட்டு, அதற்குப் பதிலாகக் குறைந்த தகுதியும் அனுபவமும் கொண்ட கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நியமிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. நிர்வாகம் எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை இலங்கை மக்கள் உணர்ந்ததால்தான் 'அரகலய' போராட்டமே உருவானது. நமது மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.

இரண்டு தசாப்தகால மோசமான ஆட்சியினால் ஏற்பட்ட அழிவுகளால் நமது நாடு நிலைகுலைந்து போயுள்ளது. தற்போதைய ஆட்சி முறை மாற்றப்படாவிட்டால், அது நாட்டை முழுமையான குழப்பத்திற்குள்ளேயே தள்ளும். இதற்கான தீர்வு மக்களிடமே உள்ளது என்ற கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும், அதன் பாரதூரமான விளைவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் நமது உன்னதமான தேசத்தை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பதை ஜனநாயக ரீதியாகத் தீர்மானிக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/238423

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

1 month ago
சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு போராடிய உறவுகள்! அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து ‘பொலிஸாரை கைது செய்து எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது’ என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது. https://athavannews.com/2026/1464472

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு

1 month ago
இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு 11 Feb, 2026 | 03:22 PM (எம்.மனோசித்ரா) மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் காரணமாக, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன. இது தொடர்பில் வினவிய போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தற்போது தடைகள் காணப்படுகின்றன. மாகாணசபை தொடர்பான சட்டம் இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. அத்தோடு பழைய தேர்தல் முறைமை தற்போது நீக்கப்பட்டுள்ளது. புதிதாக தொகுதிவாரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் எல்லை நிர்ணயம் இல்லை. தொகுதிகள் பிரிக்கப்படவில்லை. அவ்வாறெனில் புதிதாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு சட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை என்றால் இதனை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்கி, பழைய சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இதனை எமக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எமது தேவைக்கேற்ப செய்ய முடியாது. இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. மக்களின் நிலைப்பாடுகளைக் கோர வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் குறுகிய காலத்துக்குள் நிறைவு செய்ய முடியாது. அந்த வகையில் இவ்வாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நான் நம்பவில்லை என்றார். https://www.virakesari.lk/article/238391

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு

1 month ago

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு

11 Feb, 2026 | 03:22 PM

image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் காரணமாக, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

இது தொடர்பில் வினவிய போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தற்போது தடைகள் காணப்படுகின்றன. மாகாணசபை தொடர்பான சட்டம் இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. அத்தோடு பழைய தேர்தல் முறைமை தற்போது நீக்கப்பட்டுள்ளது. புதிதாக தொகுதிவாரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் எல்லை நிர்ணயம் இல்லை.

தொகுதிகள் பிரிக்கப்படவில்லை. அவ்வாறெனில் புதிதாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு சட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை என்றால் இதனை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்கி, பழைய சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இதனை எமக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எமது தேவைக்கேற்ப செய்ய முடியாது.

இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. மக்களின் நிலைப்பாடுகளைக் கோர வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் குறுகிய காலத்துக்குள் நிறைவு செய்ய முடியாது. அந்த வகையில் இவ்வாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நான் நம்பவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/238391

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : நீதி அமைச்சர் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக அறிக்கை

1 month ago
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : நீதி அமைச்சர் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக அறிக்கை 11 Feb, 2026 | 06:43 PM (எம்.ஆர்.எம்.வசீம்) புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துறைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த சட்டமூலத்துக்காக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை எதிர்வரும் 28ஆம் திகதிவரை தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்க முடியும் என்பதுடன் அவ்வாறு அனுப்பப்படும் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் தொடர்பில் சாதகமான முறையில் ஆராய்ந்து பார்த்த பின்னர், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐராேப்பிய சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலுக்கும் ஐராேப்பிய வெளிக்கள செயற்பாட்டு சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்துக்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பாவோலா பம்பலாேனி, இலங்கைக்கான ஐராேப்பிய ஒன்றியத்தின் தூதுவர் காமென் மொரேனோ, ஐராேப்பிய ஆணைக்குழுவின் அபிவிருத்தி மேம்பாட்டு ஒத்துழைப்பு தொடர்பான செயற்பாட்டு குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, தென்னாசியா போன்ற துறைகளில் பதில் பிரதானி ஜேன் ஹொஸ்கின்ஸ், கொழும்பு ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ குழுவின் அரசியல் துறை தலைவர் பிரதிநிதிகளின் பிரதித் தலைவர் கலிஜா அகிசேவா ஆகியோரும் ஐரோப்பிய வெளிக்கள நடவடிக்கை சேவையின் ASIAPAC.6 பிரிவின் இலங்கைக்கான அதிகாரி ஏன் வென்ஹவுட், ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் கொழும்பு மேம்பாட்டு தலைவர் ஜொஹான் ஹெசே, ஐராேப்பிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயக அதிகாரி பீடர்ஸ் தியடோர் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/238422