Aggregator

ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி

1 month ago
ரம் எப்படியாவது போர்நிறுத்தத்தைக் கொண்டுவந்து சரித்திரத்தில் இடம்பெற எண்ணுகிறார்.(நோபல் பரிசு) பூட்டினைப் பொறுத்தவரை உக்ரேன் நேட்டோவில் சேர முடியாது. பிடித்த இடத்தை விட முடியாது. இரண்டுக்கும் ரம் தலையசைப்பார் என்றே எண்ணுகிறேன்.

கஞ்சா பயிர்ச்செய்கையை அனுமதிப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துமா?

1 month ago
கஞ்சாச் செடியைப் பயிர்செய்து அதனை கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்வதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். கனடாவின் லிபரல் பிரதமர் கார்பன் டக்ஸ் கார்ணி இறக்குமதி செய்யத் தயாராக உள்ளார்.

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!

1 month ago
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி Published By: VISHNU 14 AUG, 2025 | 09:27 PM செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு வியாழக்கிழமை (14) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் வியாழக்கிழமை (14) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் வியாழக்கிழமை (14.08.2024) இந் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களான சி.குகனேசன், க.தர்மலவன், இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, தாயக நினைவேந்தல் அமைப்பின் தலைவர் முல்லை ஈசன், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். https://www.virakesari.lk/article/222575

கஞ்சா பயிர்ச்செய்கையை அனுமதிப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துமா?

1 month ago
13 AUG, 2025 | 06:21 PM முதலீட்டு வாரியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கடந்த 12.08.2025 அன்று தெரிவித்தார். இதன் நோக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பயிர்ச்செய்கையின் அனைத்து பகுதிகளையும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்துவதும், நாட்டிற்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதும் என்பதை அவர் மேலும் தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில், இந்த முடிவை இலங்கையில் செயற்படுத்த எத்தணித்திருந்தனர். எனினும், இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மனநல மருத்துவர்கள் சங்கம், சமூக மருத்துவர்கள் சங்கம் மற்றும் ADIC நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களின் செல்வாக்கு காரணமாக முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. முந்தைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். இந்த திட்டத்தை ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கம் இத்திட்டத்தை அமுல்படுத்த முயன்றபோது தற்போதைய தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர், அதனை கேலி செய்து எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை அவரது சமூக ஊடக கணக்குகளில் காணப்பட்டது. அதுபோன்ற சிறந்த நிலையில் இருந்த ஒருவர், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரான பின்னர், இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதானது வருந்தத்தக்கது. கஞ்சாவை சட்டப்பூர்வ பொருளாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் காணப்பட்டாலும், உலகளாவிய ரீதியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சியானது, பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அறிஞர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கான ஒரு நுணுக்கமாக, கஞ்சா தொழிலை 'ஜார்ஜ் சோரோஸ்' போன்ற தொழிலதிபர்களுடன் இணைந்து ஒரு பொருளாதாரப் பொருளாக, ஏற்றுமதி வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு பொருளாக, புதிய வடிவத்தில் முன்வைப்பதன் மூலம் கஞ்சாவை சட்டரீதியாக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இது கஞ்சா வியாபாரத்தின் இறுதி இலக்கை அடையப் பயன்படுத்தப்படும் ஒரு மூலோபாயத் திட்டமாகும். புதிய அரசாங்கம் அந்த திட்டத்தின் ஒரு தரப்பாக மாறியுள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். சர்வதேச சந்தையில் கஞ்சா அதிகமாக காணப்படுகிறது. எனினும் சர்வதேச ரீதியாக தேவை அதிகரிக்கவில்லை. சந்தையின் இடைவெளி நிரப்பப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச ரீதியாக கஞ்சா சந்தை தற்போது வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியாது. பொருளாதார நன்மைகள் என்று கூறும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதன் மூலம் எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிகரித்து பல பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூற வேண்டும். தற்போதைய அரசாங்கம் அத்தகைய முடிவை எட்டியுள்ளமை ஆச்சரியமாகவும் சந்தேகமாகவும் உள்ளது. குறிப்பாக, முந்தைய அரசாங்கங்கள் எடுத்த பல நடவடிக்கைகளை விமர்சித்து தடுத்து நிறுத்தும் தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் கொண்டுவந்த திட்டத்தை இவ்வளவு விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் வலுவான சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த முடிவை செயல்படுத்தும் அதிகாரிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். 01. இலங்கையில் தற்போதும் தடைசெய்யப்பட்டுள்ள பல்வேறு போதைப்பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. இத்தகைய சூழலில், பாதுகாப்பான பயிர்ச்செய்கை எனும் பெயரில் ஆரம்பிக்க முயற்சிக்கும் கஞ்சா பயிர்ச்செய்கையானது பாதுகாப்பான வலயத்தை மீறாது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்க முடியும்? 02. உலக சந்தையில் கஞ்சா பயிர்ச்செய்கை மூலம் நாடும் அரசாங்கமும் ஈட்டிய சந்தைப்படுத்தலின் அளவு, விலைகள், இலாபம் மற்றும் உண்மையான அந்நிய செலாவணியை மதிப்பிடுவதற்கு ஒரு சுயாதீனமான மற்றும் நம்பகமான சர்வதேச சந்தை ஆய்வுகள் ஏதேனும் நடாத்தப்பட்டுள்ளதா? 03. சீனா மற்றும் நெதர்லாந்து போன்ற தற்போதைய 'சட்டப்பூர்வ' கஞ்சா பயிர்செய்கையாளர்களுடன் சர்வதேச சந்தையில் போட்டியிடுவதற்கு போதுமான திறன் நம்மிடம் உள்ளனவா அவை ஆராய்ந்து பார்க்கப்பட்டுள்ளதா? 04. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிலிருந்து 'சட்டப்பூர்வ' ஏற்றுமதியுடன் எளிதாக போட்டியிடுவதற்கு, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டொன் கஞ்சாவை உற்பத்தி செய்யும் தற்போதைய சர்வதேச சட்டவிரோத கஞ்சா சந்தையை நீஙக்ள் கருத்தில் கொண்டீர்களா? 05. எந்தவொரு பன்னாட்டு கஞ்சா நிறுவனமும் இலங்கையில் தனியாகவோ அல்லது உள்ளாட்டு பங்குதாரர்கள், அல்லது அரசாங்கத்துடனோ கஞ்சாவை பயிரிடுவதற்கான அனுமதி வழங்கப்படுமா? 06. அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய மிகவும் பொருத்தமான பணப்பயிர்கள் (உதாரணம். ஆமணக்கு, போஞ்சி - மருத்துவ ஆமணக்கு, சிட்ரஸ் போன்றவை) தொடர்பாக பரிசீலிக்கப்பட்டுள்ளதா? 07. கஞ்சா பயிர்ச்செய்கையால் ஏற்படுகின்ற அந்நிய செலாவணி நெருக்கடிகளை எந்த நாடுகள் வெற்றிகரமாகச் சமாளித்துள்ளன? 08. கஞ்சா நிறுவனங்களில் புகையிலைத் தொழில்துறை மேற்கொண்டுள்ள பாரிய முதலீடுகள் தொடர்பாக குழு கருத்தில் கொண்டதா? கஞ்சா பயிர்ச்செய்கை சட்டரீதியாக்கப்படின், இந்த முடிவு எதிர்காலத்தில் நமது நாட்டின் சுகாதாரம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நாட்டை பின்னோக்கி கொண்டுசெல்லும் ஒரு திட்டமாகும் என்பதை இறுதியாக நாம் வலியுறுத்துகின்றோம். மக்களின் நட்பு அரசாங்கமாக, இந்த முடிவை உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வலியுறுத்துகிறது. - மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) https://www.virakesari.lk/article/222523

கஞ்சா பயிர்ச்செய்கையை அனுமதிப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துமா?

1 month ago

13 AUG, 2025 | 06:21 PM

image

முதலீட்டு வாரியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கடந்த 12.08.2025 அன்று தெரிவித்தார். 

இதன் நோக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பயிர்ச்செய்கையின் அனைத்து பகுதிகளையும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்துவதும், நாட்டிற்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதும் என்பதை அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில், இந்த முடிவை இலங்கையில் செயற்படுத்த எத்தணித்திருந்தனர். எனினும், இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மனநல மருத்துவர்கள் சங்கம், சமூக மருத்துவர்கள் சங்கம் மற்றும் ADIC நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களின் செல்வாக்கு காரணமாக முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. 

முந்தைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். இந்த திட்டத்தை ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கம் இத்திட்டத்தை அமுல்படுத்த முயன்றபோது தற்போதைய தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர், அதனை கேலி செய்து எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை அவரது சமூக ஊடக கணக்குகளில் காணப்பட்டது. அதுபோன்ற சிறந்த நிலையில் இருந்த ஒருவர், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரான பின்னர், இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதானது வருந்தத்தக்கது. 

கஞ்சாவை சட்டப்பூர்வ பொருளாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் காணப்பட்டாலும், உலகளாவிய ரீதியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சியானது, பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அறிஞர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கான ஒரு நுணுக்கமாக, கஞ்சா தொழிலை 'ஜார்ஜ் சோரோஸ்' போன்ற தொழிலதிபர்களுடன் இணைந்து ஒரு பொருளாதாரப் பொருளாக, ஏற்றுமதி வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு பொருளாக, புதிய வடிவத்தில் முன்வைப்பதன் மூலம் கஞ்சாவை சட்டரீதியாக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

எனவே, இது கஞ்சா வியாபாரத்தின் இறுதி இலக்கை அடையப் பயன்படுத்தப்படும் ஒரு மூலோபாயத் திட்டமாகும். புதிய அரசாங்கம் அந்த திட்டத்தின் ஒரு தரப்பாக மாறியுள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். 

சர்வதேச சந்தையில் கஞ்சா அதிகமாக காணப்படுகிறது. எனினும் சர்வதேச ரீதியாக தேவை அதிகரிக்கவில்லை. சந்தையின் இடைவெளி நிரப்பப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச ரீதியாக கஞ்சா சந்தை தற்போது வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியாது. 

பொருளாதார நன்மைகள் என்று கூறும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதன் மூலம் எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிகரித்து பல பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூற வேண்டும். 

தற்போதைய அரசாங்கம் அத்தகைய முடிவை எட்டியுள்ளமை ஆச்சரியமாகவும் சந்தேகமாகவும் உள்ளது. குறிப்பாக, முந்தைய அரசாங்கங்கள் எடுத்த பல நடவடிக்கைகளை விமர்சித்து தடுத்து நிறுத்தும் தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் கொண்டுவந்த திட்டத்தை இவ்வளவு விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் வலுவான சந்தேகங்களை எழுப்புகிறது.  

இந்த முடிவை செயல்படுத்தும் அதிகாரிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.

01. இலங்கையில் தற்போதும் தடைசெய்யப்பட்டுள்ள பல்வேறு போதைப்பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. இத்தகைய சூழலில், பாதுகாப்பான பயிர்ச்செய்கை எனும் பெயரில் ஆரம்பிக்க முயற்சிக்கும் கஞ்சா பயிர்ச்செய்கையானது பாதுகாப்பான வலயத்தை மீறாது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்க முடியும்?  

02. உலக சந்தையில் கஞ்சா பயிர்ச்செய்கை மூலம் நாடும் அரசாங்கமும் ஈட்டிய சந்தைப்படுத்தலின் அளவு, விலைகள், இலாபம் மற்றும் உண்மையான அந்நிய செலாவணியை மதிப்பிடுவதற்கு ஒரு சுயாதீனமான மற்றும் நம்பகமான சர்வதேச சந்தை ஆய்வுகள் ஏதேனும் நடாத்தப்பட்டுள்ளதா?  

03. சீனா மற்றும் நெதர்லாந்து போன்ற தற்போதைய 'சட்டப்பூர்வ' கஞ்சா பயிர்செய்கையாளர்களுடன் சர்வதேச சந்தையில் போட்டியிடுவதற்கு போதுமான திறன் நம்மிடம் உள்ளனவா அவை ஆராய்ந்து பார்க்கப்பட்டுள்ளதா?  

04. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிலிருந்து 'சட்டப்பூர்வ' ஏற்றுமதியுடன் எளிதாக போட்டியிடுவதற்கு, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டொன் கஞ்சாவை உற்பத்தி செய்யும் தற்போதைய சர்வதேச சட்டவிரோத கஞ்சா சந்தையை நீஙக்ள் கருத்தில் கொண்டீர்களா?   

05. எந்தவொரு பன்னாட்டு கஞ்சா நிறுவனமும் இலங்கையில் தனியாகவோ அல்லது உள்ளாட்டு பங்குதாரர்கள், அல்லது அரசாங்கத்துடனோ கஞ்சாவை பயிரிடுவதற்கான அனுமதி வழங்கப்படுமா?   

06. அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய மிகவும் பொருத்தமான பணப்பயிர்கள் (உதாரணம். ஆமணக்கு, போஞ்சி - மருத்துவ ஆமணக்கு, சிட்ரஸ் போன்றவை) தொடர்பாக பரிசீலிக்கப்பட்டுள்ளதா?  

07. கஞ்சா பயிர்ச்செய்கையால் ஏற்படுகின்ற அந்நிய செலாவணி நெருக்கடிகளை எந்த நாடுகள் வெற்றிகரமாகச் சமாளித்துள்ளன?  

08. கஞ்சா நிறுவனங்களில் புகையிலைத் தொழில்துறை மேற்கொண்டுள்ள பாரிய முதலீடுகள் தொடர்பாக குழு கருத்தில் கொண்டதா?  

கஞ்சா பயிர்ச்செய்கை சட்டரீதியாக்கப்படின், இந்த முடிவு எதிர்காலத்தில் நமது நாட்டின் சுகாதாரம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நாட்டை பின்னோக்கி கொண்டுசெல்லும் ஒரு திட்டமாகும் என்பதை இறுதியாக நாம் வலியுறுத்துகின்றோம். 

மக்களின் நட்பு அரசாங்கமாக, இந்த முடிவை உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வலியுறுத்துகிறது.   

- மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC)

https://www.virakesari.lk/article/222523

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month ago
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : விசாரணையில் வௌியான தகவல் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு கூறினார்: செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியரும் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். பேராசிரியரின் அறிக்கையில், ஸ்கேனர் பயன்படுத்தப்பட்ட பின்னர் குறைந்தது எட்டு வாரங்களுக்கு மேலதிக அகழ்வுப் பணிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இதனடிப்படையில், நான் இரு தடவைகள் அகழ்வு இடத்திற்குச் சென்று மேற்பார்வை செய்தேன். இதனைத் தொடர்ந்து, இன்றைய விசாரணையில் சில முக்கிய விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இந்த அகழ்வு ஒரு மரண விசாரணையின் கீழ் நடைபெறுகிறது. குற்றவியல் நடவடிக்கைகளில் இதற்கென தனியான சட்ட ஏற்பாடுகள் இல்லை. உடல் கண்டெடுக்கப்பட்டால், அது உடனடியாக மரண விசாரணையாக மாற்றப்படுகிறது. மரண விசாரணையின் முதன்மை நோக்கம், கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளப்படுத்துவதாகும். எனவே, அகழ்வுப் பணிகளுடன், உடல்களை அடையாளப்படுத்துவது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. சட்ட வைத்திய அதிகாரி, இப்பணிகளில் நிபுணத்துவம் இல்லை என்று ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதாக முறைப்பாடு செய்தார். இது தொடர்பாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. இலங்கையில் அகழ்வுப் பணிகளுக்கு நிபுணத்துவம் இருந்தாலும், உடல்களை அடையாளப்படுத்துவதற்கு உரிய நிபுணத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. உதாரணமாக, 1999இல் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூடுகள் முதலில் இந்தியாவின் ஐதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், அங்கு நிபுணத்துவம் இல்லாததால், அவை திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் லாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. தற்போது அவை இலங்கை பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிகிறோம். 1999இல் மரண தண்டனைக் கைதியான சோமரட்ன ராஜபக்ச, மேல் நீதிமன்றத்தில் அளித்த கூற்றின் அடிப்படையில் செம்மணியில் அகழ்வு நடத்தப்பட்டது. அவர் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போது 15 எலும்புக்கூடுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. தற்போது, 150 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ராஜபக்ச குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ளதால், அவரது கூற்று உண்மையாக இருக்கலாம் என்பது தற்போது நிரூபணமாகிறது. செம்மணி விவகாரம் தொடர்பாக B2899 என்ற வழக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பல இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சிலர் விடுவிக்கப்பட்டு, ஐவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவ்வழக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கை மீண்டும் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு நான் கோரியுள்ளேன். இதனைப் பரிசீலித்து, இரு வழக்குகளும் தொடர்புடையதாக இருப்பின், மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 1999இல் செம்மணி பகுதியில் பலர் காணாமல் ஆக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து, கலாநிதி தெவநேசன் நேசையா தலைமையில் மூவர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, 2003 ஒக்டோபர் 28இல் 210 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில், அரியாலை, சாவகச்சேரி, நாவற்குழி, யாழ்ப்பாண நகரம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு படைத்தரப்பினர் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள், முகாம்களின் பொறுப்பாளர்களின் பெயர்கள் உள்ளிட்டவை அறிக்கையில் உள்ளன. இவ்வறிக்கையின் பிரதியை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இவ்விடயத்தில் பொறுப்பு வகித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதால், உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளேன். இதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வழமையாக, மரண விசாரணை முடிந்த பின்னரே குற்றப் புலனாய்வு ஆரம்பிக்கப்படும். ஆனால், பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையின் பேரில், இதற்கு இணையாக புலனாய்வு நடத்தப்படுகிறது. இன்று, சட்டத்தரணிகளான மணிவண்ணன், குருபரன் மற்றும் நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் அளிக்க வந்தவர்களை பயமுறுத்தியதாக முறைப்பாடு செய்தோம். இதனையடுத்து, வாக்குமூலங்கள் பகிரங்கமாக, அனைவரும் காணக்கூடிய இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை இவ்விசாரணையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்தேன். மேலும், சான்றுப் பொருட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும்போது, அவை உரிய மேற்பார்வையுடன் கையாளப்பட வேண்டும் எனவும், இதற்கு அனுபவமிக்க ஆய்வகங்கள் தேவை எனவும் வலியுறுத்தினேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் DNA பரிசோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாகவும், தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். ஆனால், இவ்வாறு புதிதாக அமைக்கப்படும் ஆய்வகத்தில் இப்பரிசோதனைகளை மேற்கொள்வது உகந்ததல்ல என நான் குறிப்பிட்டேன். அனுபவமும் நிபுணத்துவமும் உள்ள ஆய்வகங்களே இதற்கு பொருத்தமானவை என வாதிட்டேன். எட்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகளைத் தொடர நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 20ஆம் திகதி அகழ்வு இடம் சுத்தப்படுத்தப்பட்டு, 22ஆம் திகதி மீண்டும் பணிகள் தொடங்கும் எனவும் அவர் கூறினார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmebja1p202k7qp4k6eihllkv

அறிமுகம்

1 month ago
வணக்கம் என்பி, உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது. இங்கு… நிறைய ஜேர்மனி ஆட்கள் இருக்கிறார்கள். பயப்பிடாமல் வாங்கோ. 😂

மாகாண சபைத் தேர்தல் : அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

1 month ago
14 AUG, 2025 | 05:15 PM (இராஜதுரை ஹஷான்) மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தேர்தல் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவோம். கடந்த 09 மாதகாலத்துக்குள் மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தினோம். மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்டசிக்கலால் ஆணைக்குழுவினால் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியாத தடை காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு பாராளுமன்றம் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்ட சிக்கல் மற்றும் அவற்றுக்கான தீர்வு குறித்து உயர்நீதிமன்றம் பலமுறை வியாக்கியானமளித்துள்ளது. நடைமுறை தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது. மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்நிறுவனங்கள் மக்கள் பிரதிநிதிகளால் செயலாற்றப்பட வேண்டும். இலங்கையின் தேர்தல் கட்டமைப்பில் மாகாண சபைத் தேர்தல் ஒரு பிரதான அங்கமாக காணப்படுகிறது. ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/222565

மாகாண சபைத் தேர்தல் : அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

1 month ago

14 AUG, 2025 | 05:15 PM

image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது என  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தேர்தல் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.

நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவோம். கடந்த 09 மாதகாலத்துக்குள் மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தினோம்.

மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்டசிக்கலால் ஆணைக்குழுவினால் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியாத தடை காணப்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு பாராளுமன்றம் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்ட சிக்கல் மற்றும் அவற்றுக்கான தீர்வு குறித்து உயர்நீதிமன்றம் பலமுறை வியாக்கியானமளித்துள்ளது.

நடைமுறை தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது.

மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்நிறுவனங்கள் மக்கள் பிரதிநிதிகளால் செயலாற்றப்பட வேண்டும்.

இலங்கையின் தேர்தல் கட்டமைப்பில் மாகாண சபைத் தேர்தல் ஒரு பிரதான அங்கமாக காணப்படுகிறது. ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/222565

ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி

1 month ago
டிரம்ப் - புதின் சந்திப்பு அலாஸ்காவில் நடப்பது ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்த அலாஸ்காவில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பு கட்டுரை தகவல் மேட்லைன் ஹால்பர்ட் பிபிசி செய்திகள் கிறிஸ்டல் ஹேய்ஸ் பிபிசி செய்திகள் 14 ஆகஸ்ட் 2025, 05:28 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதைப் பற்றி விவாதிக்க, ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திக்கவிருக்கின்றனர். இந்த சந்திப்பு அலாஸ்காவில் நடைபெறவிருக்கிறது. யுக்ரேனில் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால், மேலும் பல கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா விதித்திருந்த காலக்கெடு முடிவடையவிருந்த நாளன்று டிரம்ப் இந்த சந்திப்பு பற்றிய செய்தியை அறிவித்தார். டிரம்பின் உத்தரவின் பேரில் ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே இந்த கோடையில் நடைபெற்ற மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினரும் எந்தவொரு முடிவுக்கும் வரவில்லை. ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்த அலாஸ்காவில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பைப் பற்றி இதுவரை வெளியான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம். பட மூலாதாரம், GETTY IMAGES சந்திப்பு அலாஸ்காவில் நடப்பது ஏன்? ரஷ்யாவுக்கு சொந்தமான அலாஸ்காவை 1867ஆம் ஆண்டில் அமெரிக்கா வாங்கியது. 1959இல் அமெரிக்க மாகாணங்களில் ஒன்றாக மாறிய ரஷ்யாவின் பழைய நகரம் ஒன்றில் நடைபெறும் சந்திப்பு என்பது, இந்த சந்திப்பை சரித்திர முக்கியத்துவம் பெறச் செய்கிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அண்டை நாடுகள், பெரிங் ஜலசந்தி மட்டுமே அவற்றைப் பிரிக்கிறது என்பதை ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் சுட்டிக்காட்டுகிறார். "எங்கள் தூதுக்குழுவினர் பெரிங் ஜலசந்தியின் மீது பறப்பதும், அலாஸ்காவில் நடைபெறவிருக்கும் இரு நாடுகளின் தலைவர்களின் முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உச்சிமாநாடும் மிகவும் தர்க்கரீதியானதாகவே தெரிகிறது" என்று உஷாகோவ் கூறினார். 2021 மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜோ பைடனால் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜதந்திர மற்றும் தேசிய பாதுகாப்புக் குழு, ஆங்கரேஜில், சீனாவின் பாதுகாப்புக் குழுவை சந்தித்தபோது, அலாஸ்கா கடைசியாக ஒரு அமெரிக்க ராஜதந்திர நிகழ்வின் மையமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்கவில்லை. சந்திப்பின் விளைவால் கடும் கோபமடைந்த சீனா, அமெரிக்கர்கள் "உயர்வு மனப்பான்மை மற்றும் பாசாங்குத்தனம்" கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டியது. அலாஸ்காவில் டிரம்பும் புதினும் எங்கு சந்திப்பார்கள்? இரு நாட்டு அதிபர்களும் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை செவ்வாயன்று (2025, ஆகஸ்ட் 11) உறுதிப்படுத்தியது. இருதரப்பு ஒப்பந்தத்தை அறிவிக்கும் போது, அந்த இடம் "பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமானதாக" இருக்கும் என்று டிரம்ப் கூறினார், அது மாகாணத்தின் மிகப்பெரிய நகரத்தில் இருக்கும் என்பதை அவர் வெளியிடவில்லை. அலாஸ்காவின் மிகப்பெரிய ராணுவ நிறுவலான எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சன் கூட்டுத் தளத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்கள் தங்க வைக்கப்படுவார்கள். 64,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தளம் ஆர்க்டிக் ராணுவத் தயார்நிலைக்கு அமெரிக்காவின் முக்கிய தளமாகும். டிரம்ப்-புதின் சந்திப்பு பின்னணி யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார், இருந்தபோதிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க வெற்றி ஏற்படவில்லை. முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தலில் தான் வெற்றிபெற்று பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார். மேலும், 2022இல் ரஷ்யா யுக்ரேனின் மீது படையெடுத்த சமயத்தில் தான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போர் "ஒருபோதும் நடந்திருக்காது" என்றும் அவர் பலமுறை வலுவாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம்,பிபிசியிடம் பேசிய டிரம்ப், புதினால் தான் "ஏமாற்றமடைந்ததாக" தெரிவித்தார். இதுபோன்ற சூழலில், உடனடியாக ரஷ்யா போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது இன்னும் பல கடுமையான அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆகஸ்ட் 8ஆம் தேதி புதினுக்கு காலக்கெடு நிர்ணயித்தார் டிரம்ப். காலக்கெடு நெருங்கிய நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தான் நேரில் சந்திப்பதாக டிரம்ப் அறிவித்தார். புதன்கிழமையன்று அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் புதினை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகள், "மிகவும் பயனுள்ளதாக" இருந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தான் ரஷ்ய அதிபரை சந்திக்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இந்த சந்திப்பிற்கு முன்னதாக, இருதரப்பும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஊகங்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது. திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவர புதினை வலியுறுத்துவதே அவரை சந்திப்பதன் முக்கிய நோக்கம் என்றும் இது "உணர்ச்சிபூர்வமான சந்திப்பாக" இருக்கும் என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, யுக்ரேனின் ஐரோப்பியக் கூட்டாளிகளான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் (இடது) மற்றும் பிரிட்டனின் பிரதமர் கியர் ஸ்டாமர் (வலது) — அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர் அலாஸ்கா கூட்டத்தில் யுக்ரேனும் கலந்துகொள்கிறதா? யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது சந்தேகம் என்றே தெரிகிறது. திங்களன்று இந்தக் கூட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது, "அவர் கலந்துக்கொள்ளலாம் என்றே நான் கூறுவேன், ஆனால் அவர் இதுவரை பல கூட்டங்களில் கலந்துகொண்டார்" என்று தெரிவித்தார். இருப்பினும், அலாஸ்கா சந்திப்பிற்குப் பிறகு, தான் அழைக்கும் முதல் நபர் ஜெலென்ஸ்கியாகவே இருப்பார் என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் புதினுடனான நேரடி சந்திப்புக்கு முன்னதாக, புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 13) டிரம்பும் ஜெலன்ஸ்கியும் மெய்நிகர் முறையில் சந்தித்துப் பேசுவார்கள் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பின்னர் தெரிவித்தார். ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில் பல ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொள்வார்கள். டிரம்ப், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி என மூன்று தலைவர்களும் கலந்துகொள்ளும் முத்தரப்பு சந்திப்பை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை முன்பு கூறியிருந்தது. ஆனால், ஜெலன்ஸ்கியை விலக்க வேண்டும் என்று புதின் கோரியிருந்தார். யுக்ரேனின் ஈடுபாடு இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் "உயிரற்ற முடிவுகளுக்கு" சமமானதாக இருக்கும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். சந்திப்பும் இரு தரப்பினரின் எதிர்பார்ப்பும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ரஷ்யாவும் யுக்ரேனும் நீண்ட காலமாக கூறி வந்தாலும், ஒரு நாடு கடுமையாக எதிர்க்கும் விஷயத்தையே மற்றொரு நாடு விரும்புகிறது என்பது முக்கியமான சிக்கலாக இருந்துவருகிறது. " சில பகுதிகளை [ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட] யுக்ரேனுக்குத் திரும்பப் பெற்றுத் தர முயற்சிக்கப் போகிறேன்" என்று திங்களன்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் "சில பரிமாற்றங்களும், நில மாற்றங்களும்" இருக்கலாம் என்றும் அவர் முன்னெச்சரிக்கையும் செய்துள்ளார். இருப்பினும், க்ரைமியா உட்பட மாஸ்கோ கைப்பற்றிய பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை ஏற்கப்போவதில்லை என்பதில் யுக்ரேன் உறுதியாக உள்ளது. பிரதேசங்களை "மாற்றிக்கொள்ளும்" எந்தவொரு யோசனையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இந்த வாரம் கூறிய ஜெலென்ஸ்கி, "ரஷ்யா செய்த செயலுக்கு நாங்கள் பரிசு வழங்க முடியாது" என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டார். ரஷ்ய அதிபர் புதினும், தனது பிராந்திய கோரிக்கைகள், யுக்ரேன் நடுநிலைமையாக இருப்பது மற்றும் ராணுவத்தின் எதிர்கால அளவு போன்ற பிரச்னைக்குரிய பல விசயங்களில் இருந்து பின்வாங்கவில்லை. தனது படைகளை ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் கொண்டு வருவதற்காக யுக்ரேனை மேற்கத்திய தற்காப்பு கூட்டணியான நேட்டோ பயன்படுத்திக் கொள்கிறது என்று நம்பிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார். யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய தலைவர்களை சமாதானப்படுத்த, டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ரஷ்யாவை க்ரைமிய தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை வைத்திருக்க அனுமதிக்கும், மேலும் கிழக்கு யுக்ரேனின் டான்பாஸ் பகுதியை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கும், இது டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா, 2014இல் க்ரைமியாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது மற்றும் ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்போது தனது ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் மற்றும் சபோரிஷியாவை ரஷ்யா விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், எந்தவொரு எதிர்கால ஒப்பந்தமும் "யாரையும் முழுமையாக திருப்திப்படுத்தவோ, மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யவோ போவதில்லை" என்று கூறினார். மேலும், "இங்கே சமாதானம் செய்ய வேண்டும்... யாரையும் விரல் நீட்டி பேசமுடியாது," என்று அவர் கூறினார். "அமைதிக்கான ஒரே வழி, மக்களை ஒன்று சேரும்படி கட்டாயப்படுத்தி, வழிநடத்திச் செல்லக்கூடிய தீர்க்கமான தலைவர் ஒருவரைக் கொண்டிருப்பதாகும்" என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c80dg4lj77lo

புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்

1 month ago
6) இன்றைய தினம் 14/08/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக நவரத்தினம் சிவரஞ்சன் குடும்பம் (சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்) 20000 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். 14/08/2025 இன்றுவரை மொத்தமாக 220070 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. பேசமுடியாத தந்தையும் மூத்த மகனும் உள்ள இந்த குடும்பத்திற்கு பலதடவைகள் அரசின் நிதி உதவியுடனான வீட்டுத்திட்டம் தவறிப்போனது. இம்முறை இதனை பூரணப்படுத்தி அவ்வீட்டில் குடியேற நல்லுள்ளங்களே உங்களால் இயன்ற பங்களிப்பை செய்து உதவுமாறு தாழ்மையோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகொள்ள +94 77 777 5448 +94 77 959 1047

'கருநிலம்’ (கருப்பு மண்) மன்னார் மக்கள் மாற்றத்தின் ‘காற்றை’ தொடர்ந்து எதிர்க்கின்றனர்

1 month ago
கருநிலம்’ (கருப்பு மண்) மன்னார் மக்கள் மாற்றத்தின் ‘காற்றை’ தொடர்ந்து எதிர்க்கின்றனர். Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 01:55 PM Kamanthi Wickramasinghe தமிழில் - ரஜீவன் மன்னாரில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமாகி தொடரும் போராட்டத்திற்கான பெயர் கருநிலம். சட்டவிரோத கனியவள - இல்மனைட் அகழ்வு - காற்றாலை மின் திட்டம் - இறால் பண்ணைகள் போன்ற மன்னார் தீவின் இயற்கை சமநிலையை அழித்துக்கொண்டிருக்கின்ற விடயங்களிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. மன்னார் இலங்கையில் அதிகளவு மணல் பரப்பை கொண்ட தீவாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு அருகில் உள்ளது. முன்னைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற தீர்மானங்கள் காரணமாக மன்னார் மக்கள் நிலம், நீரை பெறுவதற்கான வழிமுறைகள் உட்பட ஏனைய அடிப்படை உரிமைகளை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். சமீபத்தில் எப்படி காற்றாலையை அமைப்பதற்கான பொருட்கள் மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டன என்பதை பொதுமக்கள் பார்வையிட்டனர். கடும் பாதுகாப்புடன் ஆறு ஏழு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட இந்த இறக்கைகளை - பொதுமக்கள் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பொதுமக்கள் மறித்தனர் என தெரியவந்துள்ளது. மன்னாரில் ஏற்கனவே உள்ள 30 காற்றுவிசையாழிகளிற்கு அப்பால் இந்த காற்றாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். மிகவும் பலவீனமான சுற்றுசூழல் அமைப்பை கொண்ட மன்னார் தீவிற்கு 30 விசையாழிகள் போதும் என மக்கள் நம்புகின்றனர். மன்னாரின் சுற்றுசூழல் மதிப்பும் முக்கியத்துவமும் பல்லுயிர் பெருக்கமும் பல்லாயிரக்கணக்கான வலசப்பறவைகளை ஈர்க்கின்றது. ஆனால் மன்னார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை விசையாழிகள் பல பறவைகளை கொல்லக்கூடியவை என சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதானி குழுமத்தின் முன்மொழியப்பட்ட காற்றாலை மின்திட்டத்தினை நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ள போதிலும் பல நிறுவனங்கள் காற்றாலைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இது பசுமை ஆற்றலை உருவாக்கும் போர்வையில் ஒரு அழகிய சுற்றுசூழல் அமைப்பை அழிப்பதற்கு சமமானது. மன்னார் மக்கள் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்களின் நீதியைக் கோருவதற்கான ஒரே வழி அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை கேட்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவதுதான். "ஏற்கனவே மழைக்காலத்தில் மன்னார் தீவு 3-4 மாதங்களாக நீரில் மூழ்கி அனைத்து குடியிருப்பாளர்களின் வாழ்க்கையையும் துயரத்தில் ஆழ்த்துகிறது" என்று மன்னாரில் ஏற்படும் அழிவுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வந்த ஒரு குடியிருப்பாளர் கூறினார். "கழிவுநீர் கசிவுகள் மற்றும் மோசமான சுகாதார நிலைமைகள் காரணமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இது எங்கள் வீடு நாங்கள் எங்கும் செல்ல முடியாது" என்று குடியிருப்பாளர் மேலும் கூறினார். வரவிருக்கும் பேரழிவு கடந்த சில நாட்களாக கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் வரவிருக்கும் பேரழிவைத் தவிர்க்க அரசாங்கத்தை நம்ப வைக்கும் நம்பிக்கையுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர திட்டமிட்டுள்ளனர். ஜூன் 18 அன்று வெளியிடப்பட்ட "பேரழிவு தரும் திட்டங்களை நிறுத்துங்கள்!": மன்னார் மக்களிடமிருந்து ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் முந்தைய கட்டுரையில் டெய்லி மிரர் மன்னார் தீவுக்கு ஏற்பட்ட அழிவின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டியது. சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் பொதுமக்கள் அடிப்படை உயிர்வாழ்தலிற்கே சவாலை ஏற்படுத்தியுள்ள போதிலும் அடிப்படை உரிமைகளை பாதித்துள்ள போதிலும் இந்த திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றார்களா என்பது குறித்து அரசாங்கத்திடமிருந்து உறுதியான பதில் எதுவுமில்லை. மன்னாரில் நடந்து வரும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 'கருநிலம்' என்ற தலைப்பில் ஒரு அதிகாரப்பூர்வ போராட்டப் பாடலை வெளியிட்டனர். இது நிலைமையின் தீவிரத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்காட்டுகிறது. இல்மனைட் அகழ்வினால் ஏற்படும் நீரில் அதிக அளவுகள் மற்றும் இந்த முன்னேற்றங்களால் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விளைவுகள் குறித்து இந்தப் பாடல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மௌனப் போராட்டம் நடத்தி வந்த போதிலும் அரசாங்கம் மௌனமாக இருப்பதை அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். டெய்லி மிரருக்கு பேட்டி அளித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மெலனி குணதிலகா மன்னார் தீவில் முன்மொழியப்பட்ட இல்மனைட் அகழ்வு மற்றும் பிற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்தார். "மன்னார் ஒரு உள்ளூர் பிரச்சினை மட்டுமல்ல, இது உலகளாவிய சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தது. அழிந்து வரும் பல்லுயிர் பெருக்கம் வளமான கடல் வாழ்விடங்கள் மற்றும் மத்திய ஆசிய விமானப் பாதையில் ஒரு முக்கியமான முனை 150 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இடம்பெயர்வு பாதை. இந்தப் பகுதியில் பெரிய அளவிலான தொழில்துறை சீர்குலைவு வனவிலங்குகளுக்கு மட்டுமல்ல இந்த உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பைச் சார்ந்திருக்கும் பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கும் மீளமுடியாத விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார். சர்வதேச சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க மாநிலங்கள் சட்டப்பூர்வ கடமைகளைக் கொண்டுள்ளன இதில் சுத்தமான ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலுக்கான உரிமையும் அடங்கும் என்று சர்வதேச நீதிமன்றம் ) சமீபத்தில் உறுதிப்படுத்தியதாக குணதிலகா மேலும் கூறினார். "இது தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களை தனியார் ஒழுங்குபடுத்துவதற்கும் மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுப்பதற்கும் உள்ள கடமையை உள்ளடக்கியது. இதற்கு மேலதிகமாக நவ்ரு எள. ஆஸ்திரேலியா வழக்கில் அமைக்கப்பட்ட முன்னுதாரணமானது பாதிக்கப்படக்கூடிய தீவு சூழல்களில் வளங்களை பிரித்தெடுப்பதால் ஏற்படும் அழிவுக்கு மாநிலங்கள் பொறுப்பேற்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார் பல சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள் மற்றும் மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ள இலங்கை மக்களின் மட்டுமல்ல இயற்கையின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது. திட்டங்களை ஒவ்வொன்றாக அங்கீகரிப்பது மன்னாரின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் ஒட்டுமொத்த தாக்கத்தை புறக்கணிக்கிறது. ஒரு விரிவான முழு தீவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியம். குறைவான எதுவும் சர்வதேச விதிமுறைகளை மீறுகிறது மற்றும் சுற்றுச்சூழல் பாகுபாட்டின் செயலாக மாறும் அபாயம் உள்ளது. அங்கு சிறுபான்மை சமூகங்கள் மாசுபாடு இடப்பெயர்ச்சி மற்றும் வாழ்வாதார இழப்பு ஆகியவற்றால் விகிதாசாரமாக சுமையாக உள்ளன. மன்னார் தீவு செலவிடத்தக்கது அல்ல. இது அதன் மக்களுக்கு பறவைகளுக்கு பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு சரணாலயமாகும் மேலும் தேசிய மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அவ்வாறு நடத்தப்பட வேண்டும்” என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அழிவுகரமான திட்டங்களையும் அனுமதிக்காது' என்று ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளித்தார். ஒவ்வொரு திட்டமும் மக்களின் ஒப்புதலுடனும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்துடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு கட்சி உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். ஆயினும்கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆன பிறகும் மன்னார் தீவின் தொடர்ச்சியான அழிவுக்கு முடிவே இல்லாததால் மன்னார் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். https://www.virakesari.lk/article/222383

'கருநிலம்’ (கருப்பு மண்) மன்னார் மக்கள் மாற்றத்தின் ‘காற்றை’ தொடர்ந்து எதிர்க்கின்றனர்

1 month ago

கருநிலம்’ (கருப்பு மண்) மன்னார் மக்கள் மாற்றத்தின் ‘காற்றை’ தொடர்ந்து எதிர்க்கின்றனர்.

Published By: RAJEEBAN

13 AUG, 2025 | 01:55 PM

image

Kamanthi Wickramasinghe 

தமிழில் - ரஜீவன்

மன்னாரில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமாகி தொடரும் போராட்டத்திற்கான பெயர் கருநிலம். சட்டவிரோத கனியவள - இல்மனைட் அகழ்வு - காற்றாலை மின் திட்டம் - இறால் பண்ணைகள் போன்ற மன்னார் தீவின் இயற்கை சமநிலையை அழித்துக்கொண்டிருக்கின்ற விடயங்களிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

மன்னார் இலங்கையில் அதிகளவு மணல் பரப்பை கொண்ட தீவாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு அருகில் உள்ளது. முன்னைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற  தீர்மானங்கள் காரணமாக மன்னார் மக்கள் நிலம், நீரை பெறுவதற்கான வழிமுறைகள் உட்பட ஏனைய அடிப்படை உரிமைகளை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

Gx-Y5aXWUAEv5iG.jpg

சமீபத்தில் எப்படி காற்றாலையை அமைப்பதற்கான பொருட்கள் மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டன என்பதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கடும் பாதுகாப்புடன் ஆறு ஏழு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட இந்த இறக்கைகளை  - பொதுமக்கள் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பொதுமக்கள் மறித்தனர் என தெரியவந்துள்ளது. மன்னாரில் ஏற்கனவே உள்ள 30 காற்றுவிசையாழிகளிற்கு அப்பால் இந்த காற்றாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

மிகவும் பலவீனமான சுற்றுசூழல் அமைப்பை கொண்ட மன்னார் தீவிற்கு 30  விசையாழிகள் போதும் என மக்கள் நம்புகின்றனர்.

மன்னாரின் சுற்றுசூழல் மதிப்பும் முக்கியத்துவமும் பல்லுயிர் பெருக்கமும் பல்லாயிரக்கணக்கான வலசப்பறவைகளை ஈர்க்கின்றது.

ஆனால் மன்னார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை விசையாழிகள் பல பறவைகளை கொல்லக்கூடியவை என சூழல் ஆர்வலர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதானி குழுமத்தின் முன்மொழியப்பட்ட காற்றாலை மின்திட்டத்தினை நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ள போதிலும் பல நிறுவனங்கள் காற்றாலைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இது பசுமை ஆற்றலை உருவாக்கும் போர்வையில் ஒரு அழகிய சுற்றுசூழல் அமைப்பை அழிப்பதற்கு சமமானது.

karunilam.jpg

மன்னார் மக்கள் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்களின் நீதியைக் கோருவதற்கான ஒரே வழி அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை கேட்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவதுதான். "ஏற்கனவே மழைக்காலத்தில் மன்னார் தீவு 3-4 மாதங்களாக நீரில் மூழ்கி அனைத்து குடியிருப்பாளர்களின் வாழ்க்கையையும் துயரத்தில் ஆழ்த்துகிறது" என்று மன்னாரில் ஏற்படும் அழிவுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வந்த ஒரு குடியிருப்பாளர் கூறினார். "கழிவுநீர் கசிவுகள் மற்றும் மோசமான சுகாதார நிலைமைகள் காரணமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இது எங்கள் வீடு நாங்கள் எங்கும் செல்ல முடியாது" என்று குடியிருப்பாளர் மேலும் கூறினார்.

வரவிருக்கும் பேரழிவு

images.jpg

கடந்த சில நாட்களாக கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் வரவிருக்கும் பேரழிவைத் தவிர்க்க அரசாங்கத்தை நம்ப வைக்கும் நம்பிக்கையுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர திட்டமிட்டுள்ளனர். 

ஜூன் 18 அன்று வெளியிடப்பட்ட "பேரழிவு தரும் திட்டங்களை நிறுத்துங்கள்!": மன்னார் மக்களிடமிருந்து ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் முந்தைய கட்டுரையில் டெய்லி மிரர் மன்னார் தீவுக்கு ஏற்பட்ட அழிவின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் பொதுமக்கள் அடிப்படை உயிர்வாழ்தலிற்கே சவாலை ஏற்படுத்தியுள்ள போதிலும் அடிப்படை உரிமைகளை பாதித்துள்ள போதிலும் இந்த திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றார்களா என்பது குறித்து அரசாங்கத்திடமிருந்து உறுதியான பதில் எதுவுமில்லை.

மன்னாரில் நடந்து வரும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 'கருநிலம்' என்ற தலைப்பில் ஒரு அதிகாரப்பூர்வ போராட்டப் பாடலை வெளியிட்டனர். இது நிலைமையின் தீவிரத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்காட்டுகிறது. 

இல்மனைட் அகழ்வினால் ஏற்படும் நீரில் அதிக  அளவுகள் மற்றும் இந்த முன்னேற்றங்களால் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விளைவுகள் குறித்து இந்தப் பாடல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மௌனப் போராட்டம் நடத்தி வந்த போதிலும் அரசாங்கம் மௌனமாக இருப்பதை அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டெய்லி மிரருக்கு பேட்டி அளித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மெலனி குணதிலகா மன்னார் தீவில் முன்மொழியப்பட்ட இல்மனைட் அகழ்வு  மற்றும் பிற  நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்தார்.

"மன்னார் ஒரு உள்ளூர் பிரச்சினை மட்டுமல்ல, இது உலகளாவிய சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தது. அழிந்து வரும் பல்லுயிர் பெருக்கம் வளமான கடல் வாழ்விடங்கள் மற்றும் மத்திய ஆசிய விமானப் பாதையில் ஒரு முக்கியமான முனை 150 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இடம்பெயர்வு பாதை. இந்தப் பகுதியில் பெரிய அளவிலான தொழில்துறை சீர்குலைவு வனவிலங்குகளுக்கு மட்டுமல்ல இந்த உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பைச் சார்ந்திருக்கும் பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கும் மீளமுடியாத விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.

சர்வதேச சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க மாநிலங்கள் சட்டப்பூர்வ கடமைகளைக் கொண்டுள்ளன இதில் சுத்தமான ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலுக்கான உரிமையும் அடங்கும் என்று சர்வதேச நீதிமன்றம் ) சமீபத்தில் உறுதிப்படுத்தியதாக குணதிலகா மேலும் கூறினார். "இது தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களை தனியார் ஒழுங்குபடுத்துவதற்கும் மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுப்பதற்கும் உள்ள கடமையை உள்ளடக்கியது. இதற்கு மேலதிகமாக நவ்ரு எள. ஆஸ்திரேலியா வழக்கில் அமைக்கப்பட்ட முன்னுதாரணமானது பாதிக்கப்படக்கூடிய தீவு சூழல்களில் வளங்களை பிரித்தெடுப்பதால் ஏற்படும் அழிவுக்கு மாநிலங்கள் பொறுப்பேற்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்

பல சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள் மற்றும் மனித உரிமைகள்  உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ள இலங்கை மக்களின் மட்டுமல்ல இயற்கையின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது. திட்டங்களை ஒவ்வொன்றாக அங்கீகரிப்பது மன்னாரின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் ஒட்டுமொத்த தாக்கத்தை புறக்கணிக்கிறது. ஒரு விரிவான முழு தீவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு  அவசியம். குறைவான எதுவும் சர்வதேச விதிமுறைகளை மீறுகிறது மற்றும் சுற்றுச்சூழல் பாகுபாட்டின் செயலாக மாறும் அபாயம் உள்ளது. அங்கு சிறுபான்மை சமூகங்கள் மாசுபாடு இடப்பெயர்ச்சி மற்றும் வாழ்வாதார இழப்பு ஆகியவற்றால் விகிதாசாரமாக சுமையாக உள்ளன. மன்னார் தீவு செலவிடத்தக்கது அல்ல. இது அதன் மக்களுக்கு பறவைகளுக்கு பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு சரணாலயமாகும் மேலும் தேசிய மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அவ்வாறு நடத்தப்பட வேண்டும்” என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அழிவுகரமான திட்டங்களையும் அனுமதிக்காது' என்று ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளித்தார். ஒவ்வொரு திட்டமும் மக்களின் ஒப்புதலுடனும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்துடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு கட்சி உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். ஆயினும்கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆன பிறகும் மன்னார் தீவின் தொடர்ச்சியான அழிவுக்கு முடிவே இல்லாததால் மன்னார் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/222383