Aggregator

🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன்   போராட்டம்

3 weeks 6 days ago
🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன் போராட்டம் adminFebruary 13, 2026 யாழ்ப்பாண நகரப்பகுதியில் அப்பிள் வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் இன்று (பெப்ரவரி 13, 2026, வெள்ளிக்கிழமை) யாழ். மாநகர சபை முன்பாகக் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாநகர சபையினால் தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம் ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால், நகரில் உள்ள அப்பிள் கடைகளின் ஒழுங்கமைப்பு அல்லது கட்டுப்பாடு தொடர்பாக முன்மொழியப்பட்ட ஒரு பிரேரணையே இந்தப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. உறுப்பினர் தர்சானந்தின் பிரேரணை தமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், மாநகர சபை உறுப்பினர்களைச் சந்தித்துத் தமது நியாயமான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர். நகரின் அழகையும் போக்குவரத்தையும் பாதிக்காத வகையில் வியாபாரம் செய்யத் தாங்கள் தயார் என்றும், ஆனால் தங்களை முற்றாகப் பாதிக்கும் வகையிலான தீர்மானங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். யாழ்ப்பாண நகரின் முக்கிய வீதியோரங்களில் அமைந்துள்ள அப்பிள் கடைகள், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகச் சில காலங்களாகப் புகார்கள் எழுந்து வந்தன. இது தொடர்பாகவே மாநகர சபை உறுப்பினர் தர்சானந் விசேட பிரேரணை ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார். எனினும், முறையான மாற்று இட வசதி இன்றி எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தங்களைப் பாதிக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். https://globaltamilnews.net/2026/228984/

🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன்   போராட்டம்

3 weeks 6 days ago

🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன்   போராட்டம்

adminFebruary 13, 2026

01211-4.jpeg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாண நகரப்பகுதியில் அப்பிள் வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் இன்று (பெப்ரவரி 13, 2026, வெள்ளிக்கிழமை) யாழ். மாநகர சபை முன்பாகக் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.  மாநகர சபையினால் தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம் ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால், நகரில் உள்ள அப்பிள் கடைகளின் ஒழுங்கமைப்பு அல்லது கட்டுப்பாடு தொடர்பாக முன்மொழியப்பட்ட ஒரு பிரேரணையே இந்தப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது.

உறுப்பினர் தர்சானந்தின் பிரேரணை தமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், மாநகர சபை உறுப்பினர்களைச் சந்தித்துத் தமது நியாயமான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.  நகரின் அழகையும் போக்குவரத்தையும் பாதிக்காத வகையில் வியாபாரம் செய்யத் தாங்கள் தயார் என்றும், ஆனால் தங்களை முற்றாகப் பாதிக்கும் வகையிலான தீர்மானங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

யாழ்ப்பாண நகரின் முக்கிய வீதியோரங்களில் அமைந்துள்ள அப்பிள் கடைகள், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகச் சில காலங்களாகப் புகார்கள் எழுந்து வந்தன. இது தொடர்பாகவே மாநகர சபை உறுப்பினர் தர்சானந் விசேட பிரேரணை ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார். எனினும், முறையான மாற்று இட வசதி இன்றி எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தங்களைப் பாதிக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

01211-1.jpeg?resize=800%2C450&ssl=101211-2.jpeg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2026/228984/

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 weeks 6 days ago
ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட சாதனை; நேபாளத்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை சுவைத்தது இத்தாலி Published By: Vishnu 12 Feb, 2026 | 10:29 PM (நெவில் அன்தனி) நேபாளத்துக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் மொஸ்கா சகோதரர்களின் சாதனைமிக்க பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட உதவியுடன் இத்தாலி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. அறிமுக அணியாக இந்த வருடம் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் இத்தாலி தனது இரண்டாவது போட்டியில் முதலாவது வெற்றியை சுவைத்தது. அப் போட்டியில் அன்தனி, ஜஸ்டின் சகோதரர்களின் அபார துடுப்பாட்டங்களும் இலங்கை வம்சாவளி வீரர் கிரிஷான் ஜோர்ஜ் ப்ரியன்த பெர்னான்டோ கலுகமகேயின் துல்லியமான பந்துவீச்சும் இத்தாலியின் வெற்றியில் பிரதான பங்காற்றின. இன்றைய போட்டியில் நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றீயீட்டியது. மொஸ்கா சகோதரர்களான ஜஸ்டின் - அன்தனி ஆகிய இருவரும் பகிர்ந்த இந்த இணைப்பாட்டமானது ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சகோதர்கள் இருவர் பகிர்ந்த முதலாவது சத இணைப்பாட்டமாகும். அத்துடன் சகோதரர்கள் பகிர்ந்த அதிகூடிய இணைப்பாட்டமாகும். பாகிஸ்தானின் அக்மால் சகோதரர்களான உமர் - கம்ரன் ஆகியோர் 2014இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 93 ஓட்டங்களே இதற்கு முன்னர் சகோதரர்கள் இருவர் பகிர்ந்த அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரிப் ஷெய்க் (27), அணித் தலைவர் ரோஹித் பௌடெல் (23), ஆசிப் ஷெய்க் (20), கரன் கேசி (18), திப்பேந்த்ரா சிய் அய்ரி (17) ஆகிய ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் கிரிஷான் கலுகமகே 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் மனென்டி 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238520

மனதைக் கவர்ந்த கவிதைகள்

3 weeks 6 days ago
கலாமோகன் கவிதைகள் விண் * எனக்கும் நிலா போகும் ஆசை வந்தது எலானிற்கு ஓர் மடல் எழுதினேன் பதில் விரைவாக வந்தது. “வா.’ நான் அமெரிக்கா சென்றேன். அவர் வெள்ளை. நான் கறுப்பு. “உங்களிற்கு மண் தெரியுமா?” “விண்தான் தெரியும்.” நானும் அவரும் பயணம் செய்தோம் நிலாவில் சில ஆடுகள் இருந்தன எனக்கு ஆச்சரியம் வந்தது “இவை விஞ்ஞான ஆடுகள்.” அவர் ஓர் ஆட்டை தொட்டார் அது அவரது தலையைத் தின்றுவிட்டது நான் வானிலிருந்து குதித்தேன் ௦ இறைவன் * இன்று இரவு எனது கதவு தட்டப்பட்டது திறந்தேன் “யார் நீங்கள்?” “இறைவன்.” என்றார் அவரது உடல் களைப்பில் “நீங்கள்தான் கடவுளா?” “ஆம், இப்போது எனக்கு வேலை இல்லை பசிக்கின்றது…” “கடவுள் வேலை செய்வாரா?” “யார் வேலை செய்யவில்லை?” உள்ளே நுழைந்தார். அனைத்து உணவுகளையும் எனது பூனைகள் உண்டு விட்டன பழைய பாண்தான் இருந்தது கொடுத்தேன் கடிக்க முடியாத பாண் என்னை அதனால் அடித்துவிட்டு இறைவன் தப்பித்தார் ௦ பூ * “இது பூவின் தினம்” எனது துணைவி சொன்னார் சரி பூக்களை வாங்குவோம் எனக் கிளம்பினேன் எனது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பூக்கடை பூட்டப்பட்டே இருந்தது வேறு கடையைத் தேடினேன் நடை… நடை காணவே முடியவில்லை கோப்பிக்கடை ஒன்றிற்குச் சென்று வைன் அருந்தினேன் ஓர் அழகிய பெண் பூக்களோடு இருந்தார் “அழகிய பூக்கள்” என்றேன் “நான் அழகி இல்லையா?” “தேவதை” என்றேன் அவளது வீட்டில் நாம் கட்டிலில் தனது பூக்களால் அடித்து என்னைக் கொலை செய்தாள் ௦ கொலைகள் * இன்றும் எமது உலகு மனிதக் கொலைகளின் உலகில்லையா? போர்களது கொடூரப் பற்களால் கடிக்கப்படவில்லையா? முதலாளித்துவம் எமது மனிதர்களைக் கடிக்கின்றது எப்போதும் இரத்த வெள்ளங்கள் வெள்ளிகள் வானில் இருந்து அழுகின்றன எமது பள்ளிகளும் சாகின்றன எமது நிலத்தில் அதிக சடலங்கள் எமது நிலம் எது? அது ஓர் சுடலை ௦ க. கலாமோகன் https://akazhonline.com/?p=9974

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!

3 weeks 6 days ago
குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு Feb 13, 2026 - 10:06 AM குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களில் உள்ள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் அடிப்படையிலான கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் விசா விநியோக சேவைகள் என்பன வழமைப் போல் இடம்பெறுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் நேற்று (13) காலை முதல் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தன. குறித்த சேவைகளை பெறச் சென்றவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlkeaq990007356nwkdhkb7f

பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி

3 weeks 6 days ago
பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி Published By: Digital Desk 3 13 Feb, 2026 | 09:39 AM பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (13) அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கியமான தேர்தலாகக் கருதப்பட்ட இந்த வாக்கெடுப்பில், அந்தக் கட்சி பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு வெடித்த மக்கள் போராட்டங்களின் பின்னர், நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவின் அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல் இதுவாகும். சுமார் 175 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட, முஸ்லிம் பெரும்பான்மை நாட்டான பங்களாதேஷில், பல மாதங்களாக ஹசீனா ஆட்சிக்கு எதிரான கடும் அமைதியின்மை நிலவி வந்தது. இதனால் அன்றாட வாழ்க்கை மட்டுமன்றி, உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளரான ஆடைத் துறை உள்ளிட்ட முக்கிய தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் தீர்மானம் மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. மேலும், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தலைமையிலான அண்மைய போராட்டங்களுக்கு பின்னர் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தலும் இதுவாகும். தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பங்களாதேஷ் தேசியக் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அந்தக் கணிப்புகளை நனவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகத் தகவல்களின்படி, அந்தக் கூட்டணி 300 உறுப்பினர்களைக் கொண்ட ஜாதியா சங்சத் (தேசிய சபை)யில் 209 இடங்களை வென்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மை உறுதியாகியதும், கட்சி தலைமையகம் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், நாட்டின் நலன் மற்றும் அமைதிக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/238534

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

3 weeks 6 days ago
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார் Feb 13, 2026 - 08:56 AM இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmlkbs1k30006356n0rxx4bvb

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

3 weeks 6 days ago

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

Feb 13, 2026 - 08:56 AM

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://adaderanatamil.lk/news/cmlkbs1k30006356n0rxx4bvb

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 6 days ago
அமெரிக்காவில் ICE செய்வதை டிரம்ப் கோஷ்டி நியாயயப்படுத்துவதுபோல் இங்கும் பாடம் எடுக்கிறார்! போலீஸ் நிறுத்தும்படி சொல்ல, நிறுத்தாமல் செல்வது மரண தண்டனைக்குரிய குற்றமல்ல! வாகனத்தை நிறுத்த டயரை சுட்டாலே போதுமானது! ICE செய்வதுபோல் நெற்றியில் சுட வேண்டியதில்லை.

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி ; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு

3 weeks 6 days ago

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு

13 Feb, 2026 | 09:33 AM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை இந்திய மாநில நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகிய துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்திய மயமாக்கலுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் மேற்பரப்பு மற்றும் கடல் தளத்திலுள்ள அரிய கனிம வளங்களை வரைபடமாக்குதல், அடையாளம் காணுதல் மற்றும் வெட்டியெடுப்பதை இந்திய நிறுவனங்களுக்கு ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இரு அரசாங்கங்களின் ஒப்பந்தத்துடன் இந்திய நிறுவனங்களுக்கு கனிமமயமாக்கப்பட்ட பகுதிகளை ஒதுக்கவும், இந்திய பொது மற்றும் தனியார் துறைகளின் முதலீடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது.

சிலோன் கிராஃபைட், நீல சபையர், புல்முடே கனிம மணல் (இல்மனைட்,ரூட்டைல், சிர்கான், மோனாசைட்), உயர் தர சிலிக்கா, ராக் பாஸ்பேட், டோலமைட் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கோபால்ட் படிவுகள் போன்ற வளங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா கையகப்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த வளங்கள் தொழில்நுட்பத் தொழில்களுக்கு அவசியமானவை. இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.

இந்தத் திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவின் இந்திய விஜயம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையில் இந்திய மயமாக்கலுக்கு எதிராகப் போராடிய ஒரு கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் காணப்பட்டது. இந்த நடவடிக்கை துரோகமானது, மக்கள் ஒன்றுபட்டு அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியமயமாக்கும் முடிவுகள் மற்றும் மருந்து சந்தையை இந்திய மருந்துகளால் நிரப்ப ஏழு இரகசிய ஒப்பந்தங்கள் போன்ற இந்தியா தொடர்பான பிற திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/238529

உங்கள் கைப்பேசி தொலைந்தால் கட்டாயம் பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள்

3 weeks 6 days ago

உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா? இதை கட்டாயம் கவனியுங்கள்

Feb 12, 2026 - 10:12 PM

உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா? இதை கட்டாயம் கவனியுங்கள்

கையடக்க தொலைபேசிகள் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கையடக்க தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் தொடர்ச்சியாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு காணாமல் போன அல்லது திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளின் ஊடாக சிலர் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க கூடிய வாய்ப்புள்ளதால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அது தொடர்பான முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது,

PRM1.jpg

PRM2.jpg

PRM3.jpg

PRM4.jpg

https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmljoqb6t000g356nmnsslyak/documents/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+2026.02.12.pdf

https://adaderanatamil.lk/news/cmljoqb6t000g356nmnsslyak

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை - பிரதமர்

3 weeks 6 days ago

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை - பிரதமர்

13 Feb, 2026 | 09:25 AM

image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க போவதில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெலியத்த றுஹூணு விஜயபா தேசிய பாடசாலைக்கு வியாழக்கிழமை (13) விஜயம் செய்த பிரதமர், முதலாம் தரத்துக்கான புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொண்டுள்ளோம்.தரம் ஒன்றுக்கான கல்வி மறுசீரமைப்பு தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்நடவடிக்கைகள் தொடர்பில் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

இலவச கல்வி தற்போதைய தொழிற்றுறைக்கு பொறுத்தமான வகையில் மறுசீரமைக்கப்படும். தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்ட குறைகள் தற்போது திருத்தப்படுகிறது.

எதிர்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க போவதில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் எதிர்க்கட்சியினரின் தக்க பதிலாக அமையும். விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள் அதனையாவது சிறந்த முறையில் செய்யட்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/238528

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்.

3 weeks 6 days ago
யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன். Posted on February 12, 2026 by சமர்வீரன் 60 0 வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் வடமத்திய மாநில அரங்காற்றுகை 07.02.2026 சனிக்கிழமை கற்றிங்கன் நகரில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்கள் பொதுச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், த.ஒ.குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு முத்துவேல் ஜெயவலதாஸ், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான திருமதி வசுந்தரா சிவசோதி, நடன ஆசிரியரான திருமதி சஞ்சியா ராமராஜன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளரர்களான தமிழ் வாரிதி திருமதி வளர்மதி யோகஜெகதீஸ்வரன், தமிழ் மாணி திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை, திருமதி மகிழ்தினி சரவணமுத்து, வடமத்திய மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி சாரதா ராஜ்குமார், மாநிலத் துணைச் செயற்பாட்டாளர் தமிழ் மாணி திரு. தாமோதரம்பிள்ளை நற்குணராசா, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிருவாகப் பொறுப்பாளர் தமிழ் மாணி திருமதி கலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றினர். அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. இவ்வாண்டுக்கான கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, பரதநாட்டியம், விடுதலை நடனம், கூத்து மற்றும் விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு போன்றன போட்டிகளாக இடம்பெற்றன. தமிழர் கலைகளுள் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகள் தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மிகவும் உற்சாகத்தோடு நடைபெற்றது. புத்தாக்கமாக உருப்படிகளின் உருவாக்கத்தில் அரங்கை அணிசெய்த வாள்நடனம் மற்றொரு சிறப்பாக்கமாகப் பார்வையாளர்களின் மனதைத் தொட்டது. குழுநிலை மற்றும் தனிநிலை என இரு அரங்குகளில் அணியமான போட்டிகளில் பங்குபற்றியவர்களை மேன்மையுடன் மதிப்பளித்தனர். போட்டியரங்கிலே சிறப்பு நிகழ்வாக நடனத்துறையிலே முனைவருக்கான பட்ட மேற்படிப்பை நிறைவுசெய்த முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்களை அரங்கிற்கு அழைத்து, தமிழ்க் கல்விக் கழகத்தினர் மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றதோடு, புள்ளிகளின் அடிப்படையில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயம் வாறன்டோர்வ், தமிழாலயம் டோட்முன்ட் மற்றும் தமிழாலயம் முல்கைம் ஆகிய தமிழாலயங்கள் மதிப்பளிப்பைப் பெற்றன. பல்வேறு நகரங்களில் இருந்து இணைந்த பதினாறுக்கு மேற்பட்ட நடுவர் குழாமோடு 08:30 மணிக்குத் தொடங்கிய கலைத்திறன் போட்டி மதிப்பளிப்புகளோடு, 20:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கை முரசறைய நிறைவுற்றது. தொடர்ந்து 14.02.2026 மத்திய மாநிலத்தில் முன்சன்கிளாட்பாக் நகரிலும் 21.02.2026 வடமாநிலத்தில் கனோவர் நகரிலும் 28.02.2026 தென்மாநிலத்தில் ஸ்ருற்காட் நகரிலும் 21.03.2026 தென்மேற்கு மாநிலத்தில்; வைற்றர்ஸ்ரட் நகரிலும் நடைபெறவுள்ளது. யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன். – குறியீடு

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்.

3 weeks 6 days ago

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்.

9d0229d1fabcc616d20cd99669b16a9e?s=32&d=Posted on February 12, 2026 by சமர்வீரன்

60 0

K800_KTP-MN-151-300x200.jpg

வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் வடமத்திய மாநில அரங்காற்றுகை 07.02.2026 சனிக்கிழமை கற்றிங்கன் நகரில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்கள் பொதுச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், த.ஒ.குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு முத்துவேல் ஜெயவலதாஸ், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான திருமதி வசுந்தரா சிவசோதி, நடன ஆசிரியரான திருமதி சஞ்சியா ராமராஜன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளரர்களான தமிழ் வாரிதி திருமதி வளர்மதி யோகஜெகதீஸ்வரன், தமிழ் மாணி திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை, திருமதி மகிழ்தினி சரவணமுத்து, வடமத்திய மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி சாரதா ராஜ்குமார், மாநிலத் துணைச் செயற்பாட்டாளர் தமிழ் மாணி திரு. தாமோதரம்பிள்ளை நற்குணராசா, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிருவாகப் பொறுப்பாளர் தமிழ் மாணி திருமதி கலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றினர்.

அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. இவ்வாண்டுக்கான கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, பரதநாட்டியம், விடுதலை நடனம், கூத்து மற்றும் விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு போன்றன போட்டிகளாக இடம்பெற்றன.

தமிழர் கலைகளுள் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகள் தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மிகவும் உற்சாகத்தோடு நடைபெற்றது. புத்தாக்கமாக உருப்படிகளின் உருவாக்கத்தில் அரங்கை அணிசெய்த வாள்நடனம் மற்றொரு சிறப்பாக்கமாகப் பார்வையாளர்களின் மனதைத் தொட்டது. குழுநிலை மற்றும் தனிநிலை என இரு அரங்குகளில் அணியமான போட்டிகளில் பங்குபற்றியவர்களை மேன்மையுடன் மதிப்பளித்தனர். போட்டியரங்கிலே சிறப்பு நிகழ்வாக நடனத்துறையிலே முனைவருக்கான பட்ட மேற்படிப்பை நிறைவுசெய்த முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்களை அரங்கிற்கு அழைத்து, தமிழ்க் கல்விக் கழகத்தினர் மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றதோடு, புள்ளிகளின் அடிப்படையில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயம் வாறன்டோர்வ், தமிழாலயம் டோட்முன்ட் மற்றும் தமிழாலயம் முல்கைம் ஆகிய தமிழாலயங்கள் மதிப்பளிப்பைப் பெற்றன. பல்வேறு நகரங்களில் இருந்து இணைந்த பதினாறுக்கு மேற்பட்ட நடுவர் குழாமோடு 08:30 மணிக்குத் தொடங்கிய கலைத்திறன் போட்டி மதிப்பளிப்புகளோடு, 20:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கை முரசறைய நிறைவுற்றது. தொடர்ந்து 14.02.2026 மத்திய மாநிலத்தில் முன்சன்கிளாட்பாக் நகரிலும் 21.02.2026 வடமாநிலத்தில் கனோவர் நகரிலும் 28.02.2026 தென்மாநிலத்தில் ஸ்ருற்காட் நகரிலும் 21.03.2026 தென்மேற்கு மாநிலத்தில்; வைற்றர்ஸ்ரட் நகரிலும் நடைபெறவுள்ளது.

K800_KTP-MN-3.jpg

K800_KTP-MN-84.jpg

K800_KTP-MN-125.jpg

K800_KTP-MN-126.jpg

K800_KTP-MN-119.jpg

K800_KTP-MN-120.jpg

K800_KTP-MN-121.jpg

K800_KTP-MN-122.jpg

K800_KTP-MN-123.jpg

K800_KTP-MN-124.jpg

K800_KTP-MN-113.jpg

K800_KTP-MN-114.jpg

K800_KTP-MN-115.jpg

K800_KTP-MN-116.jpg

K800_KTP-MN-117.jpg

K800_KTP-MN-118.jpg

K800_KTP-MN-107.jpg

K800_KTP-MN-108.jpg

K800_KTP-MN-109.jpg

K800_KTP-MN-110.jpg

K800_KTP-MN-111.jpg

K800_KTP-MN-112.jpg

K800_KTP-MN-102.jpg

K800_KTP-MN-103.jpg

K800_KTP-MN-104.jpg

K800_KTP-MN-105.jpg

K800_KTP-MN-106.jpg

K800_KTP-MN-96.jpg

K800_KTP-MN-97.jpg

K800_KTP-MN-98.jpg

K800_KTP-MN-99.jpg

K800_KTP-MN-100.jpg

K800_KTP-MN-101.jpg

K800_KTP-MN-90.jpg

K800_KTP-MN-91.jpg

K800_KTP-MN-92.jpg

K800_KTP-MN-93.jpg

K800_KTP-MN-94.jpg

K800_KTP-MN-95.jpg

K800_KTP-MN-85.jpg

K800_KTP-MN-86.jpg

K800_KTP-MN-87.jpg

K800_KTP-MN-88.jpg

K800_KTP-MN-89.jpg

K800_KTP-MN-78.jpg

K800_KTP-MN-79.jpg

K800_KTP-MN-80.jpg

K800_KTP-MN-81.jpg

K800_KTP-MN-82.jpg

K800_KTP-MN-83.jpg

K800_KTP-MN-71.jpg

K800_KTP-MN-72.jpg

K800_KTP-MN-73.jpg

K800_KTP-MN-74.jpg

K800_KTP-MN-75.jpg

K800_KTP-MN-76.jpg

K800_KTP-MN-77.jpg

K800_KTP-MN-66.jpg

K800_KTP-MN-67.jpg

K800_KTP-MN-68.jpg

K800_KTP-MN-69.jpg

K800_KTP-MN-70.jpg

K800_KTP-MN-59.jpg

K800_KTP-MN-60.jpg

K800_KTP-MN-61.jpg

K800_KTP-MN-62.jpg

K800_KTP-MN-63.jpg

K800_KTP-MN-64.jpg

K800_KTP-MN-65.jpg

K800_KTP-MN-54.jpg

K800_KTP-MN-55.jpg

K800_KTP-MN-56.jpg

K800_KTP-MN-57.jpg

K800_KTP-MN-58.jpg

K800_KTP-MN-48.jpg

K800_KTP-MN-49.jpg

K800_KTP-MN-50.jpg

K800_KTP-MN-51.jpg

K800_KTP-MN-52.jpg

K800_KTP-MN-53.jpg

K800_KTP-MN-41.jpg

K800_KTP-MN-42.jpg

K800_KTP-MN-43.jpg

K800_KTP-MN-44.jpg

K800_KTP-MN-45.jpg

K800_KTP-MN-46.jpg

K800_KTP-MN-47.jpg

K800_KTP-MN-33.jpg

K800_KTP-MN-34.jpg

K800_KTP-MN-35.jpg

K800_KTP-MN-36.jpg

K800_KTP-MN-37.jpg

K800_KTP-MN-38.jpg

K800_KTP-MN-39.jpg

K800_KTP-MN-40.jpg

K800_KTP-MN-26.jpg

K800_KTP-MN-27.jpg

K800_KTP-MN-28.jpg

K800_KTP-MN-29.jpg

K800_KTP-MN-30.jpg

K800_KTP-MN-31.jpg

K800_KTP-MN-32.jpg

K800_KTP-MN-19.jpg

K800_KTP-MN-20.jpg

K800_KTP-MN-21.jpg

K800_KTP-MN-22.jpg

K800_KTP-MN-23.jpg

K800_KTP-MN-24.jpg

K800_KTP-MN-25.jpg

K800_KTP-MN-11.jpg

K800_KTP-MN-12.jpg

K800_KTP-MN-13.jpg

K800_KTP-MN-14.jpg

K800_KTP-MN-15.jpg

K800_KTP-MN-16.jpg

K800_KTP-MN-17.jpg

K800_KTP-MN-18.jpg

K800_KTP-MN-4.jpg

K800_KTP-MN-5.jpg

K800_KTP-MN-6.jpg

K800_KTP-MN-7.jpg

K800_KTP-MN-8.jpg

K800_KTP-MN-9.jpg

K800_KTP-MN-10.jpg

K800_KTP-MN-1.jpg

K800_KTP-MN-2.jpg

K800_KTP-MN-154.jpg

K800_KTP-MN-155.jpg

K800_KTP-MN-156.jpg

K800_KTP-MN-157.jpg

K800_KTP-MN-148.jpg

K800_KTP-MN-149.jpg

K800_KTP-MN-150.jpg

K800_KTP-MN-151.jpg

K800_KTP-MN-152.jpg

K800_KTP-MN-153.jpg

K800_KTP-MN-144.jpg

K800_KTP-MN-145.jpg

K800_KTP-MN-146.jpg

K800_KTP-MN-147.jpg

K800_KTP-MN-137.jpg

K800_KTP-MN-138.jpg

K800_KTP-MN-139.jpg

K800_KTP-MN-140.jpg

K800_KTP-MN-141.jpg

K800_KTP-MN-142.jpg

K800_KTP-MN-143.jpg

K800_KTP-MN-130.jpg

K800_KTP-MN-131.jpg

K800_KTP-MN-132.jpg

K800_KTP-MN-133.jpg

K800_KTP-MN-134.jpg

K800_KTP-MN-135.jpg

K800_KTP-MN-136.jpg

K800_KTP-MN-127.jpg

K800_KTP-MN-128.jpg

K800_KTP-MN-129.jpg

யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன். – குறியீடு

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 6 days ago
வருணது கூக்ளி வழமையாக வீசப்படுவது போல மணிக்கட்டினை முழுமையாக திருப்பி போடப்படுவது போலல்லாமல், மோதிர விரலால் சுண்டி விடுதல் (பிலிக்), வருணது பந்து பிடி சேன் வோர்னது பிடி போன்றது சேன் வோனும் மணிக்கட்டினால் வீசினாலும் மோதிர விரலாலும் பந்தினை சுழற்றுவார். அத்துடன் வருணது பந்து விச்சு வேகமானது (முஜீப், ரஸீட் கான் ஆகியோரது போல) அதனால் கணிப்பது கடினம் அத்துடன் மணிக்கட்டுகூட அவர்களது ஆடை மறைக்கின்ற போது துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமாக இருக்கும்.