Aggregator

கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை ; சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி!

3 weeks 5 days ago
கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை ; சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி! 13 Feb, 2026 | 12:17 PM கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவி வருகின்றன. குறித்த உணவகத்தில் வியாழக்கிழமை (12) காலை சாப்பிட்ட நபர் ஒருவர், தனது சாப்பாட்டில் சிறிய பாம்பின் தலை போன்ற பகுதி இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளியை குறித்த உணவகத்தின் நிர்வாகம் கடுமையாக மறுப்பு தெரிவித்து, தமது உணவகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. காணொளி வெளியான சிறிது நேரத்திலேயே பொது சுகாதார பரிசோதகர்கள் எமது உணவகத்திற்கு வந்து சோதனையிட்டனர். காணொளியை வெளியிட்ட நபர் அனைவரதும் கவனத்தை பெறுவதற்காக இவ்வாறான காணொளியை வெளியிட்டுள்ளார் என கூறியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி கே. ஸ்ரீபிரதாபன் இது குறித்து தெரிவிக்கையில், பம்பலப்பிட்டி உணவக சர்ச்சை குறித்து இதுவரை முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உணவு மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்ய உள்ளோம். அந்த உணவகத்தில் சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/238551

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 weeks 5 days ago
ஆஸ்திரேலியாவை சாய்த்த ஜிம்பாப்வே - 4 விக்கெட் எடுத்து 'ஷாக்' கொடுத்த இவர் யார்? பட மூலாதாரம்,Ishara S. KODIKARA / AFP via Getty Images படக்குறிப்பு,பிளெசிங் முசரபானி 13 பிப்ரவரி 2026, 11:04 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வேயின் இந்த வெற்றியின் நாயகன் பிளெசிங் முசரபானி ஆவார். 29 வயதான பிளெசிங் முசரபானி ஜிம்பாப்வேவுக்கு போட்டியை வென்றெடுக்கும் ஒரு பந்துவீச்சை நிகழ்த்தினார். நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். பிளெசிங் முசரபானி சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ளார், 2018 இல் டி20 போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை விளையாடிய 84 டி20 சர்வதேச போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிளெசிங் முசரபானி அதிக ரன்களை கொடுக்காத பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர், இதுவரை இந்த 84 போட்டிகளில் 7.14 என்ற எகானமி விகிதத்தில் ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். பட மூலாதாரம்,Robert Cianflone/Getty Images உயரம் 6 அடி 8 அங்குலம் முசரபானி 21 வயதில் அறிமுகமானபோது, அவரது உயரம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. அவரது உயரம் 6 அடி 8 அங்குலம். முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை விட உயரமானவர். டி20 கிரிக்கெட்டைத் தவிர, கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முசரபானி அற்புதமாக செயல்பட்டார். 2025 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளராக முசரபானி இருந்தார். கடந்த ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தக் காலகட்டத்தில், ஒரு இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த செயல் திறனாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடிய அவர், ஆறு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 2022 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு இன்னும் ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx28pqxgj37o

தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்' கொள்கை குறித்து பால் கபூர் விளக்கம்!

3 weeks 5 days ago
தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்' கொள்கை குறித்து பால் கபூர் விளக்கம்! 13 Feb, 2026 | 02:26 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெற்காசியாவிற்கான நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து விவாதிக்க எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) பால் கபூர் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு கொள்கையானது, நாம் 'அமெரிக்காவிற்கே முதலிடம்' வழங்க வேண்டும் என்பது ஆகும். இது தெற்காசியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தியுள்ளதுடன் எமது பங்காளிகளுக்கும் உதவியுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் எனது பணியகத்தின் பணிகளில் இதன் பலன்களை நான் ஒவ்வொரு நாளும் காண்கிறேன். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பிராந்தியம் மிகவும் முக்கியமானது. அமெரிக்காவிற்கே முதலிடம்' என்பது 'அமெரிக்கா மட்டும்' என்று பொருள்படாது. எமது இலக்குகளை அடைய, சுமையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். கடந்த வாரம், ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகக் கட்டமைப்பில் உடன்பாட்டை எட்டினர். இரண்டு நாட்களுக்கு முன்பு, ட்ரம்ப் நிர்வாகம் பங்களாதேஷுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது 175 மில்லியன் மக்களைக் கொண்ட பங்களாதேஷின் சந்தையை அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்குத் திறந்துவிட்டுள்ளது. வர்த்தகத்திற்கு அப்பாற்பட்டு, ட்ரம்ப் நிர்வாகம் மூலோபாய திறன் மேம்பாட்டிற்காக மூன்று பரந்த அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றது.அவை பாதுகாப்பு ஒத்துழைப்பு, இலக்கு வைக்கப்பட்ட முதலீடு மற்றும் இராஜதந்திரம் ஆகும். அமெரிக்காவிற்கும் தெற்காசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பற்றி நான் இதுவரை விவாதித்தேன். ஆனால் மற்றொரு முக்கியமான ஒத்துழைப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது இந்தப் பிரச்சினைகளில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு. தெற்காசியாவின் முக்கியத்துவத்தை நாம் இருவருமே அங்கீகரிக்கிறோம். பிராந்தியத்தில் மூலோபாயத் திறனை வளர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். எமது பங்காளிகள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள உதவுவதன் மூலம் அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், வலிமையாகவும், வளமாகவும் மாற்றுவோம் என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) பால் கபூர் தெரிவித்துள்ளார். https://docs.house.gov/meetings/FA/FA19/20260211/118958/HHRG-119-FA19-Wstate-KapurS-20260211.pdf https://www.virakesari.lk/article/238562

தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்' கொள்கை குறித்து பால் கபூர் விளக்கம்!

3 weeks 5 days ago

தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்' கொள்கை குறித்து பால் கபூர் விளக்கம்!

13 Feb, 2026 | 02:26 PM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெற்காசியாவிற்கான நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து விவாதிக்க எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) பால் கபூர் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு கொள்கையானது, நாம் 'அமெரிக்காவிற்கே முதலிடம்' வழங்க வேண்டும் என்பது ஆகும்.

இது தெற்காசியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தியுள்ளதுடன் எமது பங்காளிகளுக்கும் உதவியுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் எனது பணியகத்தின் பணிகளில் இதன் பலன்களை நான் ஒவ்வொரு நாளும் காண்கிறேன்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பிராந்தியம் மிகவும் முக்கியமானது.

அமெரிக்காவிற்கே முதலிடம்' என்பது 'அமெரிக்கா மட்டும்' என்று பொருள்படாது. எமது இலக்குகளை அடைய, சுமையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த வாரம், ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகக் கட்டமைப்பில் உடன்பாட்டை எட்டினர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, ட்ரம்ப் நிர்வாகம் பங்களாதேஷுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது 175 மில்லியன் மக்களைக் கொண்ட பங்களாதேஷின் சந்தையை அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்குத் திறந்துவிட்டுள்ளது.

வர்த்தகத்திற்கு அப்பாற்பட்டு, ட்ரம்ப் நிர்வாகம் மூலோபாய திறன் மேம்பாட்டிற்காக மூன்று பரந்த அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றது.அவை பாதுகாப்பு ஒத்துழைப்பு, இலக்கு வைக்கப்பட்ட முதலீடு மற்றும் இராஜதந்திரம் ஆகும்.

அமெரிக்காவிற்கும் தெற்காசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பற்றி நான் இதுவரை விவாதித்தேன்.

ஆனால் மற்றொரு முக்கியமான ஒத்துழைப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது இந்தப் பிரச்சினைகளில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு.

தெற்காசியாவின் முக்கியத்துவத்தை நாம் இருவருமே அங்கீகரிக்கிறோம். பிராந்தியத்தில் மூலோபாயத் திறனை வளர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். எமது பங்காளிகள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள உதவுவதன் மூலம் அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், வலிமையாகவும், வளமாகவும் மாற்றுவோம் என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) பால் கபூர் தெரிவித்துள்ளார்.

https://docs.house.gov/meetings/FA/FA19/20260211/118958/HHRG-119-FA19-Wstate-KapurS-20260211.pdf

https://www.virakesari.lk/article/238562

'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா?

3 weeks 5 days ago

'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா?

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

பட மூலாதாரம்,MKSTALIN/X

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 13 பிப்ரவரி 2026, 10:16 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று காலையில், ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தேர்தலை காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகக் கூறியுள்ள அவர், அதைத் தவிர்க்கவே இவ்வாறு வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், இது தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் வாக்குகளைப் பெறுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மறுபுறம், பிகார் சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு ரூ.10,000 கொடுத்தது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு துருப்புச் சீட்டாக அமைந்தது போல, தமிழக தேர்தலில் இந்த 5,000 ரூபாய் திமுகவுக்கு அமையுமா என்ற கேள்வி எழுகிறது.

இது தொடர்பாக அரசியல் தலைவர்களின் கருத்துகள் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?

உரிமைத் தொகை ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோடிக்கும் மேலான மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 இன்று காலையில் வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்திற்கான உரிமைத் தொகை, முன்பணமாக வழங்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை ஆகியவை சேர்த்து ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 என ஒட்டுமொத்தமாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதோடு, "தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது," என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் இந்தத் திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவே இவ்வாறு முன்கூட்டியே வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் தோல்வி பயம் முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பார்த்தீர்களா? ஸ்டாலின் அவர்களே 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜய், "புதிதாகக் கோடைக்கால சிறப்புத் தொகை என திடீரென அறிவித்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் இதை அறிவிக்கிறார்கள் என்பதை தமிழக மக்களும் மகளிரும் புரிந்துகொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "ஒரே நேரத்தில் ரூ.5000 மகளிருக்கு கிடைத்திருக்கிறது. இது அவர்களின் மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பு," என்று கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சி கையைவிட்டுப் போவது உறுதியானதை உணர்ந்துகொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் அனைத்தும் கலைந்துவிட்ட நிலையில், தமது நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில்தான் முதலமைச்சர் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது," என்று விமர்சித்துள்ளார்.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

ரூ.5000 கொடுத்தது தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

பிகார் சட்டமன்றத் தேர்தலில், குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான பங்கை ஆற்றியது. தமிழ்நாட்டிலும் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் ரூ.5,000 என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இதுகுறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் சூழ்ச்சிகளைச் செய்ய வாய்ப்புள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிகார் அரசியல் களத்தையும் தேர்தல் முடிவுகளையும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாகச் செயல்பட்டதையும் பார்க்கும்போது, இங்கு அவர் கூறுவது போன்ற சூழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது," என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், "அத்தகைய முயற்சிகளை முறியடிக்கும் உத்தியாக மகளிர் உரிமைத்தொகையை முன்பணமாக வழங்கியிருப்பது தேர்தலில் திமுகவுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது கூற்றுப்படி, இதுபோன்ற ஒரு தேர்தல் உத்தியைக் கையில் எடுக்கும் சூழலுக்கு திமுக தள்ளப்பட்டது.

ஆனால், "இது வாக்குக்காக நடக்கும் அரசியல்தான்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "மத்திய அரசு முடக்க நினைக்கிறது என்ற வாதத்தை முன்வைப்பதன் மூலம் திமுக வாக்குகளைப் பெறுவதற்கான இந்த அரசியல் உத்தியைப் பயன்படுத்தியது."

அதோடு, "இந்தத் தொகையைப் பெற்ற அனைவருமே திமுகவுக்கு வாக்களிப்பார்கள் எனக் கூறிவிட முடியாது என்றாலும், அவர்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இதன் மூலம் உண்மையாகவே பலனடையும் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தப் பயனாளிகளில் 60% பேர் வாக்களித்தாலே அது திமுகவுக்கு வெற்றிதான்" என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், "இதுபோன்ற திட்டங்களையும் தாண்டி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதே ஓர் அரசாக திமுக எப்படிச் செயல்பட்டது என்பதைத் தீர்மானிக்கிறது. அதுவும் தேர்தலில் தாக்கம் செலுத்தும்," என்று என்கிறார் குபேந்திரன்.

"திமுக அரசு அறிவித்துள்ள ரூ.5000 என்பது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயமாகவே இருக்கும். ஏனெனில், பெண்களின் வாக்குகளைக் கவர வேண்டுமென்பதில் அனைவருமே தனிக் கவனம் செலுத்துவர். அந்த வகையில், இந்தத் திட்டம் பெண்களின் வாக்குகளைப் பெறுவதில் கணிசமாக உதவக்கூடும்," என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

அதிமுக, பாஜக கூறுவது என்ன?

மகளிருக்குப் பணம் கொடுத்ததில் தவறில்லை எனக் கூறும் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் பிரச்னையாக இருக்கிறது," என்கிறார்.

"யாரோ தடுக்கப் பார்ப்பதாக, ஒடுக்கப் பார்ப்பதாகக் கூறுகிறார். யார் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமல்லவா! முதலில் இதை யாரால் தடுக்க முடியும்? இது முதலமைச்சர் அரண்டு போயிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. மோசமான, தோல்வியுற்ற ஆட்சி என்பதால்தான் இதுபோன்ற அறிவிப்பை திடீரென்று வெளியிட்டுள்ளார். இது அவரது அச்சத்தையே காட்டுகிறது," என்கிறார் நாராயணன் திருப்பதி.

மேலும், "5000 ரூபாய் இல்லை ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதற்காகவே அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசின் ஆட்சியில், சீரழிந்த சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள், டாஸ்மாக் காரணமாக ஏற்படும் சீர்கேடுகள், போதைப்பொருளின் நடமாட்டம் ஆகியவற்றையெல்லாம் மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே, திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே கிடையாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிகார் தேர்தலில், ஆளும் கட்சி பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்ததை ஆதரித்தது குறித்து கேட்டபோது, "இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அதுவொரு கடன் திட்டம். ஆனால், இது இலவச திட்டம். மக்களை கவர்வதற்காக இது செயல்படுத்தப்படுகிறது. இதை அதோடு ஒப்பிட முடியாது," என்றார்.

பிகாரில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட10 ஆயிரம் ரூபாயை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

இதை ஆமோதிக்கும் வகையில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், "மு.க.ஸ்டாலின் தனது மற்றும் தம் மகனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது என்பதை அறிந்து, அந்த அச்சத்தில்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்" என்றார்.

மேலும் பேசிய அவர், "இந்த அறிவிப்பு, ஸ்டாலினின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. இந்தத் திட்டத்தை வழக்கு போட்டு முடக்கிவிடுவார்கள் என்பது மிகப்பெரிய பொய். ஏற்கெனவே இரண்டேகால் கோடி பேருக்கு கொடுப்பதாகக் கூறி ஒரு கோடி பேருக்கே கொடுத்தார்கள். ஆட்சி முடியப்போகும் நேரத்தில் மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுக்கத் தொடங்கினார்கள். இவையனைத்துமே மகனை அரியணை ஏற்றுவதற்கான வேலைகள்.இது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பாதிக்காது.

கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கப்படும் என கூறும்போது 'கொடுக்க முடியாது' எனக் கூறினார்கள். இப்போது அதே 2000 ரூபாயை கொடுப்பதாக இவரே ஒப்புக்கொண்டுள்ளார். இது எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதற்கான ஒப்புதல்தானே! அவர்களின் மீதிருந்த நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிட்டார்கள். அது தேர்தலில் எதிரொலிக்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக கூறுவது என்ன?

"பிகாரில் தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு 10,000 ரூபாய் திட்டத்தை அறிவித்தார்கள், அதைக் கடுமையாக விமர்சித்தோம். இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆனால், இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அதற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது," என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

"பிகாரில் நடந்தது அரசியல் சூழ்ச்சி. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஆளும் கட்சி கபட நாடகமாடி வாக்குகளைப் பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் இருக்கும், பல கோடி மகளிர் பயனடையும் திட்டம் இது," என்றார்.

மேலும், "திமுகவுக்கு கிடைத்த தகவலின்படி, தேர்தல் காலகட்டத்தில் நிதி சார்ந்த எவ்வித உதவித் திட்டங்களையும் தடை செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று கூறிய ரவீந்திரன், "அந்த முயற்சிகளின் விளைவாக மகளிர் உரிமைத் தொகை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டால், அதன் மூலம் பயனடையும் பல கோடிப் பெண்களின் வாழ்க்கையை அது பாதிக்கும் என்பதாலேயே, முதலமைச்சர் இவ்வாறு அறிவித்தார்," எனவும் விளக்கினார்.

மேலும் பேசிய அவர், "ஒருவேளை மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டால், அரசியல் ரீதியாக, தேர்தல் களத்தில் பிற கட்சிகள், அந்தத் திட்டத்தையே நிறுத்திவிட்டதாகப் பரப்புரை செய்து வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கக்கூடும். அதையும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முன்கூட்டியே மூன்று மாதங்களுக்கான தொகை வழங்கப்பட்டது," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c74755nz3elo

'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா?

3 weeks 5 days ago
'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா? பட மூலாதாரம்,MKSTALIN/X கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 13 பிப்ரவரி 2026, 10:16 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று காலையில், ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகக் கூறியுள்ள அவர், அதைத் தவிர்க்கவே இவ்வாறு வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இது தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் வாக்குகளைப் பெறுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மறுபுறம், பிகார் சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு ரூ.10,000 கொடுத்தது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு துருப்புச் சீட்டாக அமைந்தது போல, தமிழக தேர்தலில் இந்த 5,000 ரூபாய் திமுகவுக்கு அமையுமா என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக அரசியல் தலைவர்களின் கருத்துகள் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன? உரிமைத் தொகை ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோடிக்கும் மேலான மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 இன்று காலையில் வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்திற்கான உரிமைத் தொகை, முன்பணமாக வழங்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை ஆகியவை சேர்த்து ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 என ஒட்டுமொத்தமாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு, "தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது," என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் இந்தத் திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவே இவ்வாறு முன்கூட்டியே வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் தோல்வி பயம் முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பார்த்தீர்களா? ஸ்டாலின் அவர்களே 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். தவெக தலைவர் விஜய், "புதிதாகக் கோடைக்கால சிறப்புத் தொகை என திடீரென அறிவித்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் இதை அறிவிக்கிறார்கள் என்பதை தமிழக மக்களும் மகளிரும் புரிந்துகொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "ஒரே நேரத்தில் ரூ.5000 மகளிருக்கு கிடைத்திருக்கிறது. இது அவர்களின் மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பு," என்று கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சி கையைவிட்டுப் போவது உறுதியானதை உணர்ந்துகொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் அனைத்தும் கலைந்துவிட்ட நிலையில், தமது நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில்தான் முதலமைச்சர் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது," என்று விமர்சித்துள்ளார். ரூ.5000 கொடுத்தது தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா? பிகார் சட்டமன்றத் தேர்தலில், குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான பங்கை ஆற்றியது. தமிழ்நாட்டிலும் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் ரூ.5,000 என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இதுகுறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் சூழ்ச்சிகளைச் செய்ய வாய்ப்புள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிகார் அரசியல் களத்தையும் தேர்தல் முடிவுகளையும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாகச் செயல்பட்டதையும் பார்க்கும்போது, இங்கு அவர் கூறுவது போன்ற சூழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது," என்று தெரிவித்தார். இந்த நிலையில், "அத்தகைய முயற்சிகளை முறியடிக்கும் உத்தியாக மகளிர் உரிமைத்தொகையை முன்பணமாக வழங்கியிருப்பது தேர்தலில் திமுகவுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, இதுபோன்ற ஒரு தேர்தல் உத்தியைக் கையில் எடுக்கும் சூழலுக்கு திமுக தள்ளப்பட்டது. ஆனால், "இது வாக்குக்காக நடக்கும் அரசியல்தான்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "மத்திய அரசு முடக்க நினைக்கிறது என்ற வாதத்தை முன்வைப்பதன் மூலம் திமுக வாக்குகளைப் பெறுவதற்கான இந்த அரசியல் உத்தியைப் பயன்படுத்தியது." அதோடு, "இந்தத் தொகையைப் பெற்ற அனைவருமே திமுகவுக்கு வாக்களிப்பார்கள் எனக் கூறிவிட முடியாது என்றாலும், அவர்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இதன் மூலம் உண்மையாகவே பலனடையும் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தப் பயனாளிகளில் 60% பேர் வாக்களித்தாலே அது திமுகவுக்கு வெற்றிதான்" என்றும் அவர் கூறினார். இருப்பினும், "இதுபோன்ற திட்டங்களையும் தாண்டி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதே ஓர் அரசாக திமுக எப்படிச் செயல்பட்டது என்பதைத் தீர்மானிக்கிறது. அதுவும் தேர்தலில் தாக்கம் செலுத்தும்," என்று என்கிறார் குபேந்திரன். "திமுக அரசு அறிவித்துள்ள ரூ.5000 என்பது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயமாகவே இருக்கும். ஏனெனில், பெண்களின் வாக்குகளைக் கவர வேண்டுமென்பதில் அனைவருமே தனிக் கவனம் செலுத்துவர். அந்த வகையில், இந்தத் திட்டம் பெண்களின் வாக்குகளைப் பெறுவதில் கணிசமாக உதவக்கூடும்," என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். அதிமுக, பாஜக கூறுவது என்ன? மகளிருக்குப் பணம் கொடுத்ததில் தவறில்லை எனக் கூறும் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் பிரச்னையாக இருக்கிறது," என்கிறார். "யாரோ தடுக்கப் பார்ப்பதாக, ஒடுக்கப் பார்ப்பதாகக் கூறுகிறார். யார் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமல்லவா! முதலில் இதை யாரால் தடுக்க முடியும்? இது முதலமைச்சர் அரண்டு போயிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. மோசமான, தோல்வியுற்ற ஆட்சி என்பதால்தான் இதுபோன்ற அறிவிப்பை திடீரென்று வெளியிட்டுள்ளார். இது அவரது அச்சத்தையே காட்டுகிறது," என்கிறார் நாராயணன் திருப்பதி. மேலும், "5000 ரூபாய் இல்லை ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதற்காகவே அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசின் ஆட்சியில், சீரழிந்த சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள், டாஸ்மாக் காரணமாக ஏற்படும் சீர்கேடுகள், போதைப்பொருளின் நடமாட்டம் ஆகியவற்றையெல்லாம் மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே, திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே கிடையாது," என்றும் அவர் குறிப்பிட்டார். பிகார் தேர்தலில், ஆளும் கட்சி பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்ததை ஆதரித்தது குறித்து கேட்டபோது, "இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அதுவொரு கடன் திட்டம். ஆனால், இது இலவச திட்டம். மக்களை கவர்வதற்காக இது செயல்படுத்தப்படுகிறது. இதை அதோடு ஒப்பிட முடியாது," என்றார். பிகாரில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட10 ஆயிரம் ரூபாயை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆமோதிக்கும் வகையில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், "மு.க.ஸ்டாலின் தனது மற்றும் தம் மகனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது என்பதை அறிந்து, அந்த அச்சத்தில்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்" என்றார். மேலும் பேசிய அவர், "இந்த அறிவிப்பு, ஸ்டாலினின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. இந்தத் திட்டத்தை வழக்கு போட்டு முடக்கிவிடுவார்கள் என்பது மிகப்பெரிய பொய். ஏற்கெனவே இரண்டேகால் கோடி பேருக்கு கொடுப்பதாகக் கூறி ஒரு கோடி பேருக்கே கொடுத்தார்கள். ஆட்சி முடியப்போகும் நேரத்தில் மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுக்கத் தொடங்கினார்கள். இவையனைத்துமே மகனை அரியணை ஏற்றுவதற்கான வேலைகள்.இது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பாதிக்காது. கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கப்படும் என கூறும்போது 'கொடுக்க முடியாது' எனக் கூறினார்கள். இப்போது அதே 2000 ரூபாயை கொடுப்பதாக இவரே ஒப்புக்கொண்டுள்ளார். இது எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதற்கான ஒப்புதல்தானே! அவர்களின் மீதிருந்த நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிட்டார்கள். அது தேர்தலில் எதிரொலிக்கும்," என்றும் அவர் தெரிவித்தார். திமுக கூறுவது என்ன? "பிகாரில் தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு 10,000 ரூபாய் திட்டத்தை அறிவித்தார்கள், அதைக் கடுமையாக விமர்சித்தோம். இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆனால், இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அதற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது," என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். "பிகாரில் நடந்தது அரசியல் சூழ்ச்சி. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஆளும் கட்சி கபட நாடகமாடி வாக்குகளைப் பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் இருக்கும், பல கோடி மகளிர் பயனடையும் திட்டம் இது," என்றார். மேலும், "திமுகவுக்கு கிடைத்த தகவலின்படி, தேர்தல் காலகட்டத்தில் நிதி சார்ந்த எவ்வித உதவித் திட்டங்களையும் தடை செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று கூறிய ரவீந்திரன், "அந்த முயற்சிகளின் விளைவாக மகளிர் உரிமைத் தொகை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டால், அதன் மூலம் பயனடையும் பல கோடிப் பெண்களின் வாழ்க்கையை அது பாதிக்கும் என்பதாலேயே, முதலமைச்சர் இவ்வாறு அறிவித்தார்," எனவும் விளக்கினார். மேலும் பேசிய அவர், "ஒருவேளை மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டால், அரசியல் ரீதியாக, தேர்தல் களத்தில் பிற கட்சிகள், அந்தத் திட்டத்தையே நிறுத்திவிட்டதாகப் பரப்புரை செய்து வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கக்கூடும். அதையும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முன்கூட்டியே மூன்று மாதங்களுக்கான தொகை வழங்கப்பட்டது," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74755nz3elo

2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி

3 weeks 5 days ago
2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி Feb 13, 2026 - 05:26 PM 2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார். மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்வி மனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmlktzgl70003356nky16oudz

2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி

3 weeks 5 days ago

2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி

Feb 13, 2026 - 05:26 PM

2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். 

இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். 

இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். 

இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார். 

மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்வி மனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. 

அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmlktzgl70003356nky16oudz

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 5 days ago
1984 - 1987 காலப்பகுதியில் இயக்கங்களால் கொடுக்கப்பட்ட தண்டனைகள் பொதுவாக இராணுவத்ததோடு தொடர்புவைத்துக்கொண்டு இயக்க நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்தல் (ஒத்தோடிகள்) தொடர் கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் இப்படியானவர்கள் மீது உடனடியாக இருந்தது. அதிலும் பல, தடவைகள் எச்சரிக்கை விடப்பட்டு, தொடர்ச்சியின் காரணமாக மரண தண்டனை வழங்கப்பட்டது. மரணதண்டனை கொடுத்ததை இன்று நான் ஆதரிக்கவில்லை. அன்று 16,17 வயதில் ஆழமாக சீர்தூக்கி பார்க்கும் பக்குவமும் இருக்கவில்லை. அன்றைய சூழ்நிலையில் கெரில்லா போராட்ட முறைகள் உலகம் முழுவதும் அப்படித்தான் இருந்தன என்று நினைக்கிறன். வெறும் கோழி திருடியவன், ஆடு திருடியவன் எல்லாம் மின்கம்பத்தில் கட்டப்படவில்லை. எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, பச்சைமட்டை பிரயோகப் படுத்தப்பட்டு தண்டனைகள் கொடுக்கப்பட்டது. எங்கள் ஊரில் ஒரு இளம்பெண் (எனது வகுப்பு தோழி, பெயர் சொல்வதை தவிர்க்கிறேன்) இந்திய இராணுவ சிப்பாய் ஒருவரோடு காதல் போன்ற ஒரு உறவில் இருந்தார். இந்திய ராணுவம் தோழியின் வீட்டு வாசலில் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி, களைப்பாறி, இளைப்பாறி போவார்கள். ஊர் மக்களுக்கும் கூட இதில் அதிருப்தி இருந்தது. அன்றைய நாவட்குழி இயக்க பொறுப்பாளர் அருள் ஓரிரு தடவைகள் தோழியின் வீட்டுக்கு சென்று தாய் தகப்பன் சகோதரர்களோடு உறவாடி எச்சரிக்கை விடுத்து இருந்தார். இருந்தும் இந்திய ராணுவம் வீட்டுக்கு வருவதை நிறுத்தவில்லை. தோழியும் இதை சீரியஸாக எடுக்கவில்லை. கடைசியில் பொறுப்பாளர் தோழியின் வீட்டு வாசலில் வைத்தே அவருக்கு தண்டனை வழங்கினார். அதிசயமாக அந்த பிள்ளையும் முகத்தில் பாரிய முகம் சிதைந்த காயத்துடன் உயிர் தப்பியது. இதேபோல வெள்ளையன் என்று அழைக்கப்பட்ட (பின்னாளில் EPRLF / EPDP அட்டகாச குழு உறுப்பினர் ) பல சிறிய திருட்டு செயல்களுக்காக, பெண்கள் சேஷ்ட்டை காரணங்களுக்காக இயக்க முகாமுக்கு அழைக்கப்பட்டு பச்சை மட்டை தண்டனை வழங்கப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்தார். இந்திய ராணுவம் வந்தவுடன் EPDP, EPRLF குழுக்களோடு சேர்ந்தது ஊரில் பெரும் அட்டகாசங்கள் செய்தார். இரண்டு, மூன்று அப்பாவி இயக்க ஆதரவாளர்கள் கொலைகளோடு கூட அவனின் பெயர் பேசப்பட்டது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

3 weeks 5 days ago

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

Feb 13, 2026 - 12:41 PM

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது. 

இதன்படி, அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அதேநேரம் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

முதலாம் தவணையின் முன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளன. 

பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. 

நாடளாவிய ரீதியில் 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சையை நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmlkjtjlt0002356nmgy024rp

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 5 days ago
நீங்கள் கூறியவை பிற்காலங்களில் நடந்தவை. ஆரம்பத்தில் பல குற்றவாளிகள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இவற்றுக்கு எனது ஞாபகத்தை தவிர ஆவணங்கள் இல்லை. கோபு என்ற நபர் பல குற்றச்செயல்களுக்காக புலிகளால் கொல்லப்பட்டார். போயா என்ற நபரும் இதே காரணத்துக்காக ரெலோ அல்லது ரெலியால் முதல் முறை சுடப்பட்டு யாழ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அன று இரவு ஆஸபத்திரிக்குள் நுளைந்து மீண்டும் சுட்டு கொல்லப்படார். இவர்கள் இருவருக்கும் அரசியல் தொடர்பு இருக்கவில்லை. நீங்கள் கேட்டதால் இதை பதிந்தேன். மற்றப்படி நான் கூற வந்த முக்கிய விடயம் இன்று மனித உரிமை, நீதிமன்றம், உலகில் துப்பாக்கி பாவிக்கும் புரொட்டோகோல் எப்படி என்றெல்லாம் முகநூல்களில் வகுப்பு எடுபவர்கள் எல்லோருமே இந்த கொலைகளையும் கடந்த வருடம் நடைபெற்ற மனைவியின் தலையை வெட்டிய குற்றத்தையும் ஒப்பிட்டு பாராட்டி எழுதியவர்கள் தான். அதுவே நான் கூற வந்த கருத்து. அதில் ஒரு முக நூல்க்கருத்து பின்வருமாறு இருந்தது. உது தமிழ் ஈழத்தின் தண்டனை தமிழன் கெத்து 🎉🎉🎉🎉🎉 இனி இப்படித்தான் 💪🏽🎉பயப்பட வேண்டும் தமிழ்ப்பெண்கள் 👌🏼👌🏼👌🏼 ----- தன்மான தமிழ் ஈழத்தமிழன் நம் தலைவரின் சட்டப்படி அவர் செய்திருக்கின்ரார் 🎉🎉🎉

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 5 days ago
அமெரிக்காவின் சாய்தேஜா, 18 வயதில் அணிக்குள் வந்தார். இள வயதில், ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த துடுப்பாட்டக்காரன். இன்று சிறப்பான ஆட்டம். 79 ஓட்டங்கள்.