Aggregator

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 5 days ago
நாளை சனி 14 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA அனைவரும் அயர்லாந்து அணி வெல்வதாகக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் முட்டைகள் பரிமாறப்படுமா? 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT எதிர் ENG ஒரே ஒருவர் மாத்திரம் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி இப்போட்டியில் @suvy ஐயாவுக்கு புள்ளிகள் கிடைக்க குருபார்வை உள்ளதா? 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 07 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 16 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நியூஸிலாந்து வசீ புலவர் வீரப் பையன்26 கிருபன் கோஷான் சே நியாயம் நந்தன் தென்னாபிரிக்கா செம்பாட்டான் ஏராளன் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் சுவி அஹஸ்தியன் கந்தப்பு எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 5 days ago
இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத 64 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், தடிவனஷே மருமனியின் 35 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் பேர்ளின் 35 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்ததால் நிலைகுலைந்தனர். மற் றென்ஷோ 65 (44 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிளென் மக்ஸ்வெல் 31 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும் நிலைகொள்ள முயன்றும் விக்கெட்டுகள் சரிந்ததால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து அதிர்ச்சியான தோல்வியைத் தழுவியது. பிளெஸிங்க் முஸர்பனி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முடிவு: ஸிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, ஹர்ஷ் தாக்கரின் 50 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், நவ்னீட் தலிவாலின் 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜுனைட் சித்திக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, அர்யன்ஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காத அதிரடியான 74 (53 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷொஹைப் கானின் புயல்வேக 51 (29 பந்துகள்) ஓட்டங்களோடும், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: ஐக்கிய அமீரகம் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். கனடா அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா அணி, சைடெஜா முக்கமல்லாவின் அதிரடியான 79 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷுபம் ரஞ்சனேயின் ஆட்டமிழக்காமல் மின்னல்வேகத்தில் எடுத்த 48 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஹர்மீட் சிங் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: ஐக்கிய அமெரிக்கா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: இன்று முதல்வர் நாற்காலியை @alvayan அலங்கரிக்கின்றார் 😆

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 5 days ago
போன தடவை வெற்றிக்கிண்ணத்தை காலின்கீழ் போட்டு காலாட்டியதற்கு கிடைத்த பரிசு வயசு ..வயசு என்று பார்க்கின்ற காப்பீருக்கு இது ஒரு செருப்படி

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 5 days ago
இவை எல்லாமும் மட்டும் அல்ல அதிபர் ஆனந்தராஜா போன்றோர் கொலைகளும் அரங்கேறின. இவை அரசியல் கொலைகள். ஆனால் களவுக்கு புலிகள் மரண தண்டனை வழங்கியதாக நான் அறியவில்லை. கப்பம் கேட்டு கொடுக்காத போது புளொட் சுட்டு கொன்றது என கேள்விபட்டுள்ளேன். புலிகள் பல கொலைகளை, குறிப்பாக 85-86 மற்றும் 87-90 இல் செய்தார்கள். எங்கள் ஊரில் புலியும் ஈப்பியும் ஏட்டிக்கு போட்டியாக கொன்றவர்கள் லிஸ்ட் மிக பெரிது. ஆனால் எல்லாமும் அரசியல், இராணுவ சம்பந்த பட்ட கொலைகளே. கோழி கள்ளன், மாட்டுக்கள்ளனை எல்லாம் சுட்டார்கள் என்பது - சோபா சக்தி போன்றோரின் மிகைபடுத்தல் மொழி என்றே நான் நினைக்கிறேன்.

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப்

3 weeks 5 days ago
'கழிப்பறை காகிதம் போல விட்டுச் சென்றார்கள்' - அமெரிக்கா பற்றி பாகிஸ்தான் அமைச்சர் பேசியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1990களில் இருந்து பாகிஸ்தான் அரசியலில் இருப்பதாக கவாஜா ஆசிஃப் தனது உரையில் குறிப்பிட்டார். 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்காவுடனான பாகிஸ்தான் உறவு குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்த கருத்துக்கள் மீதான விவாதம் தீவிரமடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஆப்கானிஸ்தான் போர்களில் பாகிஸ்தானின் பங்கு குறித்து பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கவாஜா ஆசிப் பேசினார். அப்போது, அமெரிக்கா தனது உத்தி சார்ந்த நலன்களுக்காக பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் 'டாய்லெட் பேப்பர்' (கழிப்பறை காகிதம்) போல அதைக் கைவிட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தான் மண்ணில் நடந்த இரண்டு போர்களிலும் பாகிஸ்தான் இஸ்லாம் மீதோ அல்லது மதம் மீதோ கொண்ட பற்றினால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார். இது ஜிகாத் அல்ல என்றும், இது வல்லரசுகளுக்கு இடையிலான போர் என்றும் கவாஜா ஆசிப் தெரிவித்தார். கவாஜா ஆசிஃப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக இருந்த கவாஜா ஆசிஃப், அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் டில்லர்சனுடன் (கோப்புப் படம்) ஆப்கானிஸ்தான் போர்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது மதம் அல்லது இஸ்லாமிய காரணங்களால் தூண்டப்பட்டது என்ற பொதுவான கருத்தை கவாஜா ஆசிப் மறுத்தார். மேலும், நாட்டின் இரண்டு ராணுவ ஆட்சியாளர்கள் (ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப்) அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுவதற்காகவே ஆப்கானிஸ்தான் போர்களில் பங்கேற்றதாக அவர் குற்றம் சாட்டினார். 1979-இல் தொடங்கிய சோவியத்-ஆப்கான் போர் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், "சோவியத் ஒன்றியம் காபூல் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஆப்கானிஸ்தானுக்கு வந்தது. அது ஒரு ஊடுருவல் அல்ல. அது ஒரு அமெரிக்கக் கோட்பாடு," என்றார். "அது ஜிகாத் அல்ல. அது வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு போர். அதற்காக நாம் நமது பாடத்திட்டத்தையே மாற்றினோம், 1960 அல்லது 70-களில் நாம் கற்பித்த முறைக்கு இன்னும் நம்மால் அதைத் திரும்பக் கொண்டு வர முடியவில்லை," என்று அவர் தெரிவித்தார். மேலும், "அமெரிக்கத் தயாரிப்பு ஜிகாத்தை நாம் முன்னெடுக்க வேண்டியிருந்ததால், நமது அரசியல் மற்றும் மத விழுமியங்கள், ஏன் மரபுகள் கூட மாற்றப்பட்டன. ஆனால் அந்த ஜிகாத்திலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு, அவர்கள் நம்மை நிர்க்கதியாக விட்டுச் சென்றனர்." என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,செப்டம்பர் 11, 2001 அன்று உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது, பாகிஸ்தான் அதன் மிகப்பெரிய கூட்டாளியாக உருவெடுத்தது (கோப்பு புகைப்படம்) அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து ஆசிஃப் பேசியது என்ன ? 1999-க்குப் பிறகு, குறிப்பாக செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவுடன் மீண்டும் இணைந்ததால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பேரழிவு எவ்வளவு மோசமானது என்பதைப் பற்றி ஆசிப் குறிப்பிட்டுப் பேசினார். 2001-க்குப் பிறகு, அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் போரில் பாகிஸ்தான் மீண்டும் அமெரிக்காவை ஆதரித்ததாகவும், அந்தச் செயல்பாட்டில் தாலிபன்களுக்கு எதிராகத் திரும்பியதாகவும் ஆசிப் விளக்கினார். அமெரிக்கா இப்பகுதியிலிருந்து வெளியேறியது, பாகிஸ்தானை நீண்ட காலமாக வன்முறை, தீவிரவாதம் மற்றும் பொருளாதார அழுத்தங்களால் பாதிக்கப்பட்டது என்பதும் அவரது கருத்தாக அமைந்தது. "1999 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வந்த அரசாங்கமும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற மிகவும் ஆர்வமாக இருந்தது" என்று அவர் கூறினார். "அமெரிக்கா பாகிஸ்தானை எவ்வாறு பயன்படுத்தியது என்பது பற்றி ஹிலாரி கிளிண்டன் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை அனைத்தையும் விவரிக்கிறது. அது ஒரு முக்கிய உரை. அவர் எங்களை எப்படி ஒரு டிஷ்யூ பேப்பரைப் போல... டிஷ்யூ பேப்பர் கூட பரவாயில்லை, ஒரு டாய்லெட் பேப்பரைப் போல இங்கே விட்டுச் சென்றார்... ஆனாலும் நாம் அதிலிருந்து பாடம் கற்கவில்லை. பில் கிளிண்டன் இரண்டு மணி நேரம் இங்கு வந்தபோது, அன்றைய அரசியல்வாதிகள் பில் கிளிண்டன் வந்துவிட்டார் என்று கூறி அவருக்கு மாலை அணிவிக்கத் தொடங்கினர்." 2000-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் சில மணிநேரப் பயணமாக பாகிஸ்தானுக்குச் சென்றார். "மொத்தமாகக் கணக்கிட்டால், அவர்கள் (அமெரிக்கா) 20-25 ஆண்டுகளில் சுமார் 10 கோடி முஸ்லிம்களைக் கொன்றுள்ளனர். அவர்கள் கடாபியின் மகனைக் கூட விட்டுவைக்கவில்லை"என்று கவாஜா ஆசிஃப் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இன்றுவரை 9/11 தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை, அது நிச்சயமாக ஆப்கானிஸ்தானால் செய்யப்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்களில் பஷ்டூன் இனத்தவர் யாரும் இல்லை. ஆனால் அதிலும் கூட, இரண்டரை தசாப்தங்களாக நாம் (அமெரிக்காவிற்கு) வாடகைக்குக் கிடைப்பவர்களாக மாறினோம். ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பிற்கு அமெரிக்க ஊன்றுகோல் தேவைப்பட்டது என்பதே அதன் நோக்கமாக இருந்தது"என்றார். கடந்த 22-23 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்கு, இன்று பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரிக்க வழிவகுத்துள்ளது என்று கவாஜா ஆசிப் கூறினார். "இது அதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவு " என்று அவர் குறிப்பிட்டார். ஆசிபின் கூற்றுக்கு எத்தகைய எதிர்வினை உருவானது? அமெரிக்காவிற்கு எதிரான கவாஜா ஆசிப்பின் பேச்சு பாகிஸ்தானிய ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறவில்லை. உண்மையில், டான் நியூஸ் மற்றும் தி நேஷன் ஆகியவற்றின் செய்திகள், அவரது உரையை எதிர்க்கட்சித் தலைவர் மஹ்மூத் கானின் கருத்துக்கு அளிக்கப்பட்ட பதிலடியாக விவரித்தன. மஹ்மூத் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கை பொறுப்பற்றது என்று விமர்சித்திருந்தார். "பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இரண்டு ஆப்கான் போர்களில் பாகிஸ்தானின் பங்கை ஒரு தவறு என்று குறிப்பிட்டார். இன்று நாட்டில் நிலவும் பயங்கரவாதம் கடந்த கால சர்வாதிகாரத் தலைவர்களின் தவறுகளின் விளைவாகும் என்று அவர் கூறினார்," என டான் நியூஸ் எழுதியுள்ளது. தங்கள் அரசியல் நலன்களுக்காக தலைவர்கள் இப்போது ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகளில் கூட கலந்து கொள்வதில்லை என்று கவாஜா ஆசிப் கூறிய கருத்திற்கும் டான் நியூஸ் இடமளித்துள்ளது. டான் நியூஸ் தகவலின்படி, பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்தியா மீது கவாஜா ஆசிப் குற்றம் சாட்டினார். "இந்தியா எங்களுக்கு எதிராக ஆப்கான் பயங்கரவாதிகளைப் பயன்படுத்துகிறது. இந்தியா பாகிஸ்தானில் ஒரு நிழல் யுத்தத்தை நடத்துகிறது," என்று அவர் கூறினார். பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது. இருப்பினும், ஆசிப்பின் அறிக்கை விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் சல்மே கலீல்சாத் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில், "9/11-க்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தனது நாட்டை அமெரிக்காவிற்கு வாடகைக்கு விட்டதாக கவாஜா ஆசிப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உதவியதற்குப் பதிலாக பாகிஸ்தான் ராணுவ மற்றும் நிதி உதவியைப் பெற்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல," என்று கூறியுள்ளார். மேலும், "அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிடுபவர்களை பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாத்து வந்ததும் அனைவரும் அறிந்ததே. அப்படியானால், அமெரிக்காவைப் பலவீனப்படுத்த மற்றொரு சக்தியிடமிருந்து வாடகை பெறுவதற்காக அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறதா? அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிட்டவர்களைப் பாதுகாத்ததற்குப் பதிலாக அரசாங்கம் எதைப் பெற்றது, யாரிடமிருந்து பெற்றது என்பதை அமைச்சர் ஆசிப்பால் விளக்க முடியுமா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக அரசாங்கம் இதைச் செய்ததா? இதற்கான பதில்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்," என்றும் அப்பதிவு கூறுகிறது. ஏற்ற தாழ்வுகள் நிறைந்த அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு செப்டம்பரில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க பீல்ட் மார்ஷல் அசிம் முனீருடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். கடந்த நாற்பதாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட அனைத்து ராணுவத் தலையீட்டிலும் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 1980-களின் சோவியத் எதிர்ப்புப் போராட்டம் முதல், 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய அமெரிக்க ராணுவ நடவடிக்கை மற்றும் 2021-இல் படைகள் வாபஸ் பெறப்பட்டது வரை, பாகிஸ்தான் அமெரிக்காவிற்குத் துணையாக நின்று வருகிறது. 2001 தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளியாக பாகிஸ்தான் மாறியது. இதற்குப் பதிலாக, அமெரிக்காவிடமிருந்து ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை அது தொடர்ந்து பெற்று வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. உதவிக்கு ஈடாக தனது கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் சரியான பதிலளிக்கவில்லை என்று அமெரிக்கா கருதியது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அமெரிக்கா நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். இது பாகிஸ்தானின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பல பில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கூட அவர் நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, ஜோ பைடன் காலத்திலும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படவில்லை. ஏப்ரல் 2022-இல் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, இம்ரான் கான் அமெரிக்காவை பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கினார். தான் பிரதமர் பதவியை இழந்ததற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் சீராகி வருவதாகத் தெரிகிறது. கடந்த மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகித்ததாக டிரம்ப் கூறினார். அடுத்த மாதம், பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் அசீம் முனீரை வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அவர் அழைத்தார். பாகிஸ்தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரைப் பரிந்துரைத்தது. மேலும், காஸாவில் போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க அமைதி வாரியத்தில் இப்போது பாகிஸ்தான் உறுப்பினராகவும் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpv8nzmll0wo

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 weeks 5 days ago
கடுமையாக போராடி கனடாவை வெற்றிகொண்டது ஐக்கிய அரபு இராச்சியம் Published By: Vishnu 13 Feb, 2026 | 09:04 PM (நெவில் அன்தனி) டெல்லி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற கனடாவுக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கடுமையாக போராடிய ஐக்கிய அரபு இராச்சியம் இரண்டு பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது. ஜுனைத் சித்திக் பதிவுசெய்த 5 விக்கெட் குவியலும் ஆரியன்ஸ் ஷர்மா, சொஹெய்ப் கான் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஐக்கிய அரபு இராச்சியம் வெற்றிபெற உதவின. கனடாவினால் நிர்ணயிக்கப்பட்ட 151 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்த ஐக்கிய அரபு இராச்சியம் 13ஆவது ஓவரில் 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆட்டம் இழந்த முதல் நால்வரில் ஒருவரேனும் 5 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை. இருவர் தலா 4 ஓட்டங்களையும் மற்றைய இருவர் தலா 5 ஓட்டங்களையும் பெற்றனர். மொத்த எண்ணிக்கையான 66 ஓட்டங்களில் 44 ஓட்டங்களை ஆரியன்ஸ் ஷர்மா பெற்றிருந்தார். வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 81 ஓட்டங்களில் 84 ஓட்டங்களை ஆரியன்ஷ் ஷர்மா, சொஹெய்ப் கான் ஆகிய இருவரும் பகிர்ந்த நிலையில் சொஹெய்ப் கான் 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் களம் புகுந்த மொஹம்மத் அர்பான் வெற்றிக்கு தெவையான ஒரு ஓட்டத்தைப் பெற்றுக்கொடுத்தார். ஆரியன்ஷ் ஷர்மா 53 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் சாத் பின் ஸபார் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கனடா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. கனடா 6ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நவ்னீத் தாலிவல், ஹார்ஷ் தக்கர் ஆகிய இருவரும் 58 ஓட்டங்களைப் பகிரந்து அணியை ஓரளவு சிறந்த நிலையில் இட்டனர். ஹார்ஷ் தக்கர் 50 ஓட்டங்களையும் நவ்னீத் தாலிவல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் ஷ்ரேயஸ் மொவ்வா 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜுனைத் சித்திக் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் ஸ்கொட்லாந்துக்கு எதிராக ரி20 உலகக் கிண்ண ஆரம்பத் தினத்தன்று ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்த 5 விக்கெட் குவியலைத் தொடர்ந்து 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த இரண்டாவது வீரர் ஜூனைத் சித்திக் ஆவார். https://www.virakesari.lk/article/238608

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு

3 weeks 5 days ago
தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள் ; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு 13 Feb, 2026 | 04:41 PM (செ.சுபதர்ஷனி) தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்ப நவீனமயப்படுத்தி, அதன் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் 849 மில்லியன் ரூபா செலவிலான விசேட திட்டங்கள் வியாழக்கிழமை (12) தபால் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தபால் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தும் நேக்குடன் 590 மில்லியன் ரூபா பெறுமதியான 10 லொறி வண்டிகள் மற்றும் 20 'குரு கெப்' (Crew Cab) ரக வாகனங்கள் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக, தபால்காரர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய பொதி காவிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதுடன், தபால் நிலையங்களின் பணிகளை இலகுபடுத்தும் நோக்கில் டெஸ்க்டொப் மற்றும் லெப்டொப் கணினிகள் மற்றும் 'டேப்' கருவிகள் என்பனவும் வழங்கப்பட்டன. மேலும், தபால் சேவையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு பதில் பிரிவும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடந்த ஆண்டு தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. சில நெறுக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பினும், இதனை பார்க்கிலும் தபால் துறையால் அதிக வருமானத் பெறலாம். இவருடம் எதிர்பார்க்கப்பட்டுள் வருமான இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தபால் கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். தபால் சேவையின் முன்னேற்றத்தை விரும்புவோர் இச்சேவையை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். தபால் சேவையை நிரந்தரமாக மூடிவிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. சகல நவீன வசதிகளையும் வழங்கி அதனை உலகத்தரம் வாய்ந்த சேவையாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என்றார். https://www.virakesari.lk/article/238586

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு

3 weeks 5 days ago

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள் ; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு

13 Feb, 2026 | 04:41 PM

image

(செ.சுபதர்ஷனி)

தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்ப நவீனமயப்படுத்தி, அதன் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் 849 மில்லியன் ரூபா செலவிலான விசேட திட்டங்கள் வியாழக்கிழமை (12) தபால் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தபால் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தும் நேக்குடன் 590 மில்லியன் ரூபா பெறுமதியான 10 லொறி வண்டிகள் மற்றும் 20 'குரு கெப்' (Crew Cab) ரக வாகனங்கள் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக, தபால்காரர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய பொதி காவிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதுடன், தபால் நிலையங்களின் பணிகளை இலகுபடுத்தும் நோக்கில் டெஸ்க்டொப் மற்றும் லெப்டொப் கணினிகள் மற்றும் 'டேப்' கருவிகள் என்பனவும் வழங்கப்பட்டன.

மேலும், தபால் சேவையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு பதில் பிரிவும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

கடந்த ஆண்டு தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. சில நெறுக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பினும், இதனை பார்க்கிலும் தபால் துறையால் அதிக வருமானத்  பெறலாம். இவருடம் எதிர்பார்க்கப்பட்டுள் வருமான இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. 

தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான  நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தபால் கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட  நிலையில் எதிர்க்கட்சியினர் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். தபால் சேவையின் முன்னேற்றத்தை விரும்புவோர் இச்சேவையை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

தபால் சேவையை  நிரந்தரமாக மூடிவிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.  சகல நவீன வசதிகளையும் வழங்கி அதனை உலகத்தரம் வாய்ந்த சேவையாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என்றார்.

WhatsApp_Image_2026-02-13_at_15.41.49.jp

https://www.virakesari.lk/article/238586

'கிம் ஜாங் உன்னின் மகள் அரசியல் வாரிசாக அறிவிப்பு' - தென் கொரிய உளவு நிறுவனம் கூறியது என்ன?

3 weeks 5 days ago
'கிம் ஜாங் உன்னின் மகள் அரசியல் வாரிசாக அறிவிப்பு' - தென் கொரிய உளவு நிறுவனம் கூறியது என்ன? பட மூலாதாரம்,KCNA படக்குறிப்பு,கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கட்டுரை தகவல் ப்ளோரா ட்ருரி பிபிசி 6 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 13 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த கட்டுரை சமீபத்திய தகவல்களுடன் மறுபகிர்வு செய்யப்படுகிறது) வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனது மகளை தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளதாக தென் கொரிய உளவு நிறுவனம் வியாழக்கிழமை(பிப்ரவரி 12), அந்நாட்டின் எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளது. 13 வயதுடைய கிம் ஜு ஏ கடந்த செப்டம்பரில் சீனாவுக்கு வருகை தந்தது போன்ற உயர்மட்ட நிகழ்வுகளில் தனது தந்தையின் அருகில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார், இது அவரது முதல் வெளிநாட்டுப் பயணம். இந்த மதிப்பீட்டை மேற்கொள்வதில், அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் அவரது அதிகரித்த பங்களிப்பு உட்பட பல்வேறு "சூழ்நிலைகளை" கணக்கில் எடுத்துக்கொண்டதாக தேசிய புலனாய்வு சேவை (NIS) தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் நடைபெறும் வட கொரியக் கட்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா, என்பது குறித்து நெருக்கமான கண்காணிப்பை வைத்திருப்பதாகவும் NIS தெரிவித்துள்ளது - இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதன் மிகப்பெரிய அரசியல் நிகழ்வு ஆகும். முன்னதாக கிம் ஜாங் உன்னின் சீன பயணத்தின் போது கிம் ஜு ஏ உடன் சென்றது பலரின் கவனத்தைப் பெற்றது. கிம் ஜாங் உன் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு சிறுமி தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ. ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள், அவருடைய சரியான வயது உள்பட அதிகமாக பொதுவெளியில் இல்லை. நமக்கு இதுவரை தெரிந்தது என்ன? பட மூலாதாரம்,KCNA படக்குறிப்பு,கிம் ஜூ ஏ (வலது ஓரம்) தனது தந்தையுடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். குடும்பம் குறித்த ரகசியத்தைக் காக்கும் கிம் ஜாங் உன் கிம் ஜாங் உன்னுக்கும் அவரது மனைவி ரி சோல்-ஜூவுக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் மிஸ் கிம் இரண்டாவது குழந்தை என்று நம்பப்படுகிறது. கிம்மின் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. கிம் தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். திருமணமாகி சிறிது காலம் ஆன பிறகுதான் தனது மனைவியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களின் ஒரே பிள்ளையாக கிம் ஜு ஏ-வின் இருப்பு மட்டுமே வடகொரிய நாட்டின் தலைமையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின் வேறு எந்த பிள்ளையும் பொதுவில் காணப்படவில்லை. முதன்முதலாக கிம் ஜு ஏ பற்றிய செய்தி ஒரு எதிர்பாராத இடத்தில் இருந்து தான் வந்தது. கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன், 2013ஆம் ஆண்டு தி கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வட கொரியாவுக்கான ஒரு பயணத்தின் போது 'அவர்களின் குழந்தை ஜூ ஏ-யை' தான் கையில் ஏந்தியதாகக் கூறினார். பட மூலாதாரம்,EPA அதன் பிறகு கிம் ஜு ஏ பற்றி அதிகம் அறியப்படவில்லை. நவம்பர் 2022 அவர் தன் தந்தையுடன் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல் நிகழ்வில் தோன்றினார். அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அவர் தபால் தலைகளில் தோன்றினார். கிம் ஜாங் உன்னின் 'மதிப்பிற்குரிய' (Respected) மகள் என்று விவரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கான விருந்துகளில் கலந்து கொண்டார். 'மதிப்பிற்குரியவர்' என்ற சொல், வட கொரியாவின் மிகவும் முக்கியமான நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிம் ஜு ஏ-வின் தந்தையின் விஷயத்தில், 'எதிர்காலத் தலைவர்' என்று கிம் ஜாங் உன்னின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர் 'மதிப்பிற்குரிய காம்ரேட்' என்று குறிப்பிடப்பட்டார். பட மூலாதாரம்,KCNA படக்குறிப்பு,வட கொரியாவின் வொன்சன் சுற்றுலா ரிசார்ட்டின் திறப்பு விழாவில் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தோன்றினார். 'புனிதமான ரத்தம்' - கிம் குடும்பம் கூறுவது என்ன? இதே காலகட்டத்தில் தான், தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS), அந்தச் சிறுமியைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை தென் கொரிய எம்.பி.க்களுக்கு அப்போது வழங்கியதாக ஏபி செய்தி முகமை தெரிவித்திருந்தது. கிம் ஜு ஏ-வுக்கு குதிரை சவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சல் பிடிக்கும் என்றும், தலைநகர் பியோங்யாங்கில் உள்ள வீட்டிலேயே அவர் கல்வி பயின்றதாகவும் தேசிய புலனாய்வு சேவை கூறியது. அந்த சமயத்தில் கிம் ஜு ஏ-வுக்கு சுமார் 10 வயது இருக்கும் என்றும் என்ஐஎஸ் தெரிவித்தது. ஜனவரி 2024 வாக்கில், என்ஐஎஸ் மற்றொரு முடிவுக்கு வந்தது. அந்தச் சிறுமி கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு என்றும், ஆனால் அவருடைய தந்தையின் இளம் வயது உள்பட பல காரணிகள், இந்த விஷயத்தில் இன்னும் தாக்கம் செலுத்துகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அப்போதிருந்து, பல சந்தர்ப்பங்களில் கிம் ஜு ஏ தனது தந்தையுடன் தோன்றியுள்ளார். ஐசிபிஎம் ஏவுதல்கள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில், மேடைகளின் மையத்தில் கிம் ஜாங் உன் அருகில் நின்று, மூத்த ராணுவத் தளபதிகளிடமிருந்து ராணுவ மரியாதைகளைப் பெற்றார். ஆனால் கடந்த செப்டம்பரில் அவர் வட கொரியாவிற்கு வெளியே முதல் முறையாகக் காணப்பட்டார். மேலும் இந்தப் பயணம் அவர் தனது தந்தைக்குப் பிறகு வட கொரிய தலைவராக பதவியேற்கக்கூடும் என்ற ஊகங்களை அதிகம் தூண்டின. 1948 முதல் வட கொரியாவை ஆண்டு வரும் கிம் குடும்பத்தினர், தங்கள் குடிமக்களிடம் தாங்கள் ஒரு புனிதமான ரத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும் என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், இதுவரை ஒரு பெண்ணால் கூட வழிநடத்தப்படாத ஆணாதிக்க அரசு என்று வட கொரியாவின் மீது உள்ள பிம்பத்தைச் சமாளிக்க, கிம் தனது மகளை இந்த கட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஊகங்கள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cewnlqd8qqxo

'கிம் ஜாங் உன்னின் மகள் அரசியல் வாரிசாக அறிவிப்பு' - தென் கொரிய உளவு நிறுவனம் கூறியது என்ன?

3 weeks 5 days ago

'கிம் ஜாங் உன்னின் மகள் அரசியல் வாரிசாக அறிவிப்பு' - தென் கொரிய உளவு நிறுவனம் கூறியது என்ன?

கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

பட மூலாதாரம்,KCNA

படக்குறிப்பு,கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

கட்டுரை தகவல்

  • ப்ளோரா ட்ருரி

  • பிபிசி

  • 6 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 13 பிப்ரவரி 2026

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த கட்டுரை சமீபத்திய தகவல்களுடன் மறுபகிர்வு செய்யப்படுகிறது)

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனது மகளை தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளதாக தென் கொரிய உளவு நிறுவனம் வியாழக்கிழமை(பிப்ரவரி 12), அந்நாட்டின் எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளது.

13 வயதுடைய கிம் ஜு ஏ கடந்த செப்டம்பரில் சீனாவுக்கு வருகை தந்தது போன்ற உயர்மட்ட நிகழ்வுகளில் தனது தந்தையின் அருகில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார், இது அவரது முதல் வெளிநாட்டுப் பயணம்.

இந்த மதிப்பீட்டை மேற்கொள்வதில், அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் அவரது அதிகரித்த பங்களிப்பு உட்பட பல்வேறு "சூழ்நிலைகளை" கணக்கில் எடுத்துக்கொண்டதாக தேசிய புலனாய்வு சேவை (NIS) தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதியில் நடைபெறும் வட கொரியக் கட்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா, என்பது குறித்து நெருக்கமான கண்காணிப்பை வைத்திருப்பதாகவும் NIS தெரிவித்துள்ளது - இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதன் மிகப்பெரிய அரசியல் நிகழ்வு ஆகும்.

முன்னதாக கிம் ஜாங் உன்னின் சீன பயணத்தின் போது கிம் ஜு ஏ உடன் சென்றது பலரின் கவனத்தைப் பெற்றது.

கிம் ஜாங் உன் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு சிறுமி தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ.

ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள், அவருடைய சரியான வயது உள்பட அதிகமாக பொதுவெளியில் இல்லை. நமக்கு இதுவரை தெரிந்தது என்ன?

கிம் ஜூ ஏ (வலது ஓரம்) தனது தந்தையுடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பட மூலாதாரம்,KCNA

படக்குறிப்பு,கிம் ஜூ ஏ (வலது ஓரம்) தனது தந்தையுடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

குடும்பம் குறித்த ரகசியத்தைக் காக்கும் கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்னுக்கும் அவரது மனைவி ரி சோல்-ஜூவுக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் மிஸ் கிம் இரண்டாவது குழந்தை என்று நம்பப்படுகிறது. கிம்மின் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. கிம் தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். திருமணமாகி சிறிது காலம் ஆன பிறகுதான் தனது மனைவியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர்களின் ஒரே பிள்ளையாக கிம் ஜு ஏ-வின் இருப்பு மட்டுமே வடகொரிய நாட்டின் தலைமையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின் வேறு எந்த பிள்ளையும் பொதுவில் காணப்படவில்லை.

முதன்முதலாக கிம் ஜு ஏ பற்றிய செய்தி ஒரு எதிர்பாராத இடத்தில் இருந்து தான் வந்தது. கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன், 2013ஆம் ஆண்டு தி கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வட கொரியாவுக்கான ஒரு பயணத்தின் போது 'அவர்களின் குழந்தை ஜூ ஏ-யை' தான் கையில் ஏந்தியதாகக் கூறினார்.

கிம் ஜாங் உன்

பட மூலாதாரம்,EPA

அதன் பிறகு கிம் ஜு ஏ பற்றி அதிகம் அறியப்படவில்லை. நவம்பர் 2022 அவர் தன் தந்தையுடன் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல் நிகழ்வில் தோன்றினார்.

அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அவர் தபால் தலைகளில் தோன்றினார். கிம் ஜாங் உன்னின் 'மதிப்பிற்குரிய' (Respected) மகள் என்று விவரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கான விருந்துகளில் கலந்து கொண்டார்.

'மதிப்பிற்குரியவர்' என்ற சொல், வட கொரியாவின் மிகவும் முக்கியமான நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிம் ஜு ஏ-வின் தந்தையின் விஷயத்தில், 'எதிர்காலத் தலைவர்' என்று கிம் ஜாங் உன்னின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர் 'மதிப்பிற்குரிய காம்ரேட்' என்று குறிப்பிடப்பட்டார்.

வட கொரியாவின் வொன்சன் சுற்றுலா ரிசார்ட்டின் திறப்பு விழாவில் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தோன்றினார்.

பட மூலாதாரம்,KCNA

படக்குறிப்பு,வட கொரியாவின் வொன்சன் சுற்றுலா ரிசார்ட்டின் திறப்பு விழாவில் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தோன்றினார்.

'புனிதமான ரத்தம்' - கிம் குடும்பம் கூறுவது என்ன?

இதே காலகட்டத்தில் தான், தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS), அந்தச் சிறுமியைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை தென் கொரிய எம்.பி.க்களுக்கு அப்போது வழங்கியதாக ஏபி செய்தி முகமை தெரிவித்திருந்தது.

கிம் ஜு ஏ-வுக்கு குதிரை சவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சல் பிடிக்கும் என்றும், தலைநகர் பியோங்யாங்கில் உள்ள வீட்டிலேயே அவர் கல்வி பயின்றதாகவும் தேசிய புலனாய்வு சேவை கூறியது. அந்த சமயத்தில் கிம் ஜு ஏ-வுக்கு சுமார் 10 வயது இருக்கும் என்றும் என்ஐஎஸ் தெரிவித்தது.

ஜனவரி 2024 வாக்கில், என்ஐஎஸ் மற்றொரு முடிவுக்கு வந்தது. அந்தச் சிறுமி கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு என்றும், ஆனால் அவருடைய தந்தையின் இளம் வயது உள்பட பல காரணிகள், இந்த விஷயத்தில் இன்னும் தாக்கம் செலுத்துகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அப்போதிருந்து, பல சந்தர்ப்பங்களில் கிம் ஜு ஏ தனது தந்தையுடன் தோன்றியுள்ளார். ஐசிபிஎம் ஏவுதல்கள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில், மேடைகளின் மையத்தில் கிம் ஜாங் உன் அருகில் நின்று, மூத்த ராணுவத் தளபதிகளிடமிருந்து ராணுவ மரியாதைகளைப் பெற்றார்.

ஆனால் கடந்த செப்டம்பரில் அவர் வட கொரியாவிற்கு வெளியே முதல் முறையாகக் காணப்பட்டார். மேலும் இந்தப் பயணம் அவர் தனது தந்தைக்குப் பிறகு வட கொரிய தலைவராக பதவியேற்கக்கூடும் என்ற ஊகங்களை அதிகம் தூண்டின.

1948 முதல் வட கொரியாவை ஆண்டு வரும் கிம் குடும்பத்தினர், தங்கள் குடிமக்களிடம் தாங்கள் ஒரு புனிதமான ரத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும் என்றும் கூறுகிறார்கள்.

இருப்பினும், இதுவரை ஒரு பெண்ணால் கூட வழிநடத்தப்படாத ஆணாதிக்க அரசு என்று வட கொரியாவின் மீது உள்ள பிம்பத்தைச் சமாளிக்க, கிம் தனது மகளை இந்த கட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஊகங்கள் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cewnlqd8qqxo

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்

3 weeks 5 days ago
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம் 13 Feb, 2026 | 04:47 PM இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராகவும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாகப் பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NCU) உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். குறிப்பாக, "மக்கள் முன்னுள்ள அரசு பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு", "அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்" போன்ற கோரிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வலியுறுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மக்கள் குழு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தது என்று சுட்டிக்காட்டினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்வதற்காகவும் அதே போன்றதொரு கடுமையான சட்டத்தை மீண்டும் மறைமுகமாகக் கொண்டு வர முயற்சிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் சாடினார். ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினால் உரிமைக்காகப் போராடியவர்கள் சிறையில் இருப்பதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில், மீண்டும் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்கனவே போதுமான குற்றவியல் சட்டங்கள் இருக்கும்போது, இத்தகைய விசேட சட்டங்கள் தேவையற்றவை எனத் தெரிவித்த அவர், புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பாதிக்கும் என எச்சரித்தார். குறிப்பாக, இது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மலையக மக்களின் வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மலையக மக்களின் பாரம்பரியத் தொடர்பாடல் முறையான 'பறை' அடித்து, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குத் தமது கலாசார ரீதியிலான எதிர்ப்பையும் போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர். https://www.virakesari.lk/article/238588

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்

3 weeks 5 days ago

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்

13 Feb, 2026 | 04:47 PM

image

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராகவும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாகப் பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NCU) உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

குறிப்பாக, "மக்கள் முன்னுள்ள அரசு பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு", "அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்" போன்ற கோரிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மக்கள் குழு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தது என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்வதற்காகவும் அதே போன்றதொரு கடுமையான சட்டத்தை மீண்டும் மறைமுகமாகக் கொண்டு வர முயற்சிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் சாடினார். ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினால் உரிமைக்காகப் போராடியவர்கள் சிறையில் இருப்பதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில், மீண்டும் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்கனவே போதுமான குற்றவியல் சட்டங்கள் இருக்கும்போது, இத்தகைய விசேட சட்டங்கள் தேவையற்றவை எனத் தெரிவித்த அவர், புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பாதிக்கும் என எச்சரித்தார். 

குறிப்பாக, இது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மலையக மக்களின் வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். 

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மலையக மக்களின் பாரம்பரியத் தொடர்பாடல் முறையான 'பறை' அடித்து, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குத் தமது கலாசார ரீதியிலான எதிர்ப்பையும் போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

WhatsApp_Image_2026-02-13_at_16.34.10.jp

WhatsApp_Image_2026-02-13_at_16.34.11.jp

WhatsApp_Image_2026-02-13_at_16.34.11__2

WhatsApp_Image_2026-02-13_at_16.34.11__1

WhatsApp_Image_2026-02-13_at_16.34.13.jp

https://www.virakesari.lk/article/238588

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 5 days ago
ந‌ண்பா என்ன‌ இது இதுக்கு போய் க‌ரி நாள் க‌க்கா நாள் என்று புல‌ம்ப‌ல் என‌க்கு அமெரிக்கா கை கொடுத்த‌ தால் இர‌ண்டு புள்ளி............ க‌ன்டா அணியில் ந‌ல்ல‌ ஒரு வீர‌ர் இருக்கிறார் அவ‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை க‌ன‌டா வ‌டிவாய் வெல்ல‌ வேண்டி மைச்சை க‌ட‌சி 4ஓவ‌ரில் சுத‌ப்பி போட்டின‌ம்...........................

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா தடையின்றி நடத்த வேண்டும் ; ப.சத்தியலிங்கம் கோரிக்கை

3 weeks 5 days ago
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமாக சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட இடமளிக்கப்படவேண்டும் - ரவிகரன் வலியுறுத்து 13 Feb, 2026 | 04:39 PM வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) நடைபெற்ற நிலையில், இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது ரவிகரன் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப் பகுதிக்குள் எடுத்துச்செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பலத்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். எனவே, இம்முறை சிவராத்திரி தின வழிபாடுகளுக்கு அவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது. சைவமக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான சைவமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் இம்முறை தடைகளின்றி சுதந்திரமாக மக்கள் வழிபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களால் பதில் வழங்கப்பட்டிருந்தது. மேலும், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதருகின்ற அடியவர்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு இதன்போது ரவிகரன் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238583