Aggregator

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

1 month ago
அந்த. உறுப்பு. தான். மனிதர்களை. உற பத்தி. செய்கிறது. அது. கழுவிய தண்ணீர். நல்ல. சத்துகள். விற்றமின்கள். நிறைந்தது. கண்ணை. எப்படி. பழுது ஆக்கும் பார்வை. மிகவும். தெளிவாக வந்திருக்க. வேண்டும். உங்கள். செய்தியை. நம்ப. முடியவில்லை.

வாழைப்பூ வடை

1 month ago
இப்படி ஆங்கில மருத்துவம் வேலை செய்யவில்லை என்று உயிரை நீட்டிக்க நாட்டு வைத்தியத்திற்குப் போகின்றவர்கள் உயிரை விரைவில் இழப்பது துரதிஸ்டம்.

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

1 month ago
இவர்கள் செய்யும் சுகாதார கேடான, நரக வேலையால்... ஒருவரின் கண் பார்வை பறி போய் விட்டது. 😪

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

1 month ago
பிரச்சனைகளை இனங்கண்டு அதை உரிய முறையில் தீர்ப்பதை விடுத்து செய்தி மிகைப்படுத்துதல் வெற்று உசுப்பேற்றுதல், வெற்று கோசங்கள், கற்பனைகள் மூலம் கட்டி எழுப்பப்பட்டதே தமிழ் தேசிய கோமாளிக் கருத்தியல். கடந்த 15 வருடங்களில் சமூக ஊடக வருகையால் பொய் செய்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதே யொழிய அத்தனையும் காலாகாலமாக அந்த காலத்திற்கேற்ற முறையில் தமிழ் தேசியம் பேசியவர்களிடம் இருந்தவையே. அதனாலேயே அதனால் ஒரு அங்குலம் கூட முன்னே நகர முடியமல் நின்ற இடத்தில் அப்படியே நின்று குறளி வித்தை காட்டுகின்றனர். வெட்டி வீரம் பேசுவதும் பின்னர் புலம்புவதும் தமிழ் தேசிய அரசியலில் மாறாத சுற்றுவட்டம். இந்த வட்டத்தை சுற்றிச் சுற்றியே தமிழ் தேசியம் பேசும் தாயக/ புலம் பெயர் கோமாளிகள் பொழுது போக்குகின்றனர்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 month ago
மலையக மக்களை வடகிழக்கில் குடியேற்றுவது — தீர்வா? அல்லது புதிய வறுமையின் தொடக்கமா? அறிவியல் + பொருளாதாரம் + மனித உரிமை அடிப்படையில் ஒரு உண்மையான ஆய்வு ❗“மலையகத்தில் நிலம் குறைவு… அப்படியானால் மக்களை வடகிழக்குக்கு மாற்றலாம்” — கேட்க சுலபமாகத் தோன்றும் இந்த யோசனை, Development Economics சொல்லும் மொழியில்— 👉 ஆபத்தான பாதை. ⸻ ⚠️ Rule #1: எளிய தீர்வு = பெரிய பிரச்சனை மலையக மக்களுக்கு வீடு, நிலம் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களை தாய்மண்ணிலிருந்து பிடுங்கி வேறொரு தேசப் பகுதிய மாற்றுவது… 🔥 ஏழ்மையை குறைக்கும் தீர்வு அல்ல 🔥 “புதிய வறுமையை” உருவாக்கும் தீர்வு. ⸻ 1️⃣ Poor Economics என்னும் பொருளாதார நூல் சொல்லும் முக்கிய பாடம்: “சூழலை மட்டும் மாற்றினாலும் வாழ்க்கை மாறாது.” அதன் ஆசிரியர்கள் Abhijit Banerjee & Esther Duflo வின் கருத்து: “ஒரு சமூகத்தின் உள்ளூர் எதார்த்தங்களை புறக்கணித்து எடுத்த கொள்கைகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன.” மலையக மக்களின் 5 முக்கிய வாழ்க்கைத் தளங்கள்: • சமூக மூலதனம் (support networks) • கலாச்சாரம் • வேலை அமைப்பு • ஊதிய சூழல் • பள்ளி & சுகாதார சேவைகள் 👉 இவை அனைத்தும் “வேரோடு இணைந்த வாழ்க்கை அமைப்பு”. இதனை துண்டித்து வடகிழக்கில் மாற்றுவது = ⚠️ சமூகச் சிதைவு + வறுமை வலுப்படுத்தல். ⸻ 2️⃣ அமர்த்தியா சென் — “வளர்ச்சி = திறன் விரிவடைதல்; இடமாற்றம் அல்ல.” நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் Amartya Sen தனது Capability Approach மூலம் சொல்லுவது: “ஒருவரின் வாழ்க்கைத் தேர்வுகள் அதிகரிக்க வேண்டும்; குறையக் கூடாது.” வடகிழக்கில் குடியேற்றினால்: • பழைய திறன்கள் அங்கு வேலை செய்யாது • மொழி–கலாச்சார தடைகள் உருவாகும் • சமூக ஆதரவு வலயம் முற்றிலும் உடையும் • பள்ளியில், குழந்தைகளுக்கு புதிய சிரமங்கள் • புதிய பொருளாதார அமைப்பில் தள்ளாடும் நிலை 👉 இவை அனைத்தும் Capability Loss = வளர்ச்சியல்ல = அதிகாரப்பறிப்பு. ⸻ 3️⃣ உலக வங்கி + IOM ஆய்வுகள்: இடமாற்றம் = “Manufactured Poverty” நகர்மயமாதல் & மறுவாழ்வு (Resettlement) ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 6 பெரிய அபாயங்கள்: 1. வேலையிழப்பு 2. குடும்ப வருமான அதிர்ச்சி 3. அடையாள இழப்பு 4. மன உளைச்சல் 5. சமூக மோதல்கள் 6. பெண்கள் & குழந்தைகளுக்கு கூடும் பாதுகாப்பு அபாயங்கள் 🔥 இடமாற்றம் = “புதிய வறுமை” உருவாக்கும் மிக வேகமான பாதை. ⸻ 4️⃣ மலையகத்தின் பிரச்சனை “நிலம் இல்லை” அல்ல — “நில உரிமை அமைப்பு தவறானது.” உண்மையான பிரச்சனைகள்: • தோட்டக் கம்பனிகளின் நில ஏகபோகம் • வீட்டு உரிமை மறுப்பு • திட்டமிடல் தோல்வி • நகரமயமாதல் இல்லாமை • சுற்றுச்சூழல் சட்டங்கள் காகிதத்தில் மட்டுமே 👉 இடமாற்றம் என்பது, தங்கள் சமூகத்திற்குரிய உரிமையை வழங்கத் தவறிய அரசியல்வாதிகள் பூசி மெழுக முயலும் ‘ஏமாற்றுத் தீர்வு’. தலைவலிக்கு பாம் பூசும் தற்காலிக தீர்வு மாதிரி. ஆனால் உண்மை நோய் வேறு — அந்த தலைவலி, உள்ளே இருக்கும் புற்றுநோயின் அறிகுறி! ⸻ 5️⃣ 10 பெரிய அபாயங்கள் (Relocation = Risk Multiplier) 1. வாழ்வாதாரச் சிதைவு 2. வேலையின்மை 3. சமூக ஆதரவு முறிவு 4. மொழி–கலாச்சார மோதல் 5. பள்ளி இடைநிறுத்தம் 6. மனநல சீர்கேடு 7. பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு 8. குழந்தைகளுக்கு அடையாள நெருக்கடி 9. விவசாய/வேலை திறன் மோதல் 10. சமூகங்களுக்கு இடையிலான தீவிர பதற்றம் 👉 இவை அனைத்தும் சேர்ந்து “வறுமையை பல மடங்காக்கும் இயந்திரம்” போல செயல்படும். ⸻ 6️⃣ அப்படியானால் தீர்வு என்ன? (Sen + Poor Economics + Development Models) ✔ A. In-Situ Development (மக்கள் வாழும் இடத்திலேயே மேம்பாடு) • நில உரிமை வழங்கல் • அடுக்குமாடி குடியிருப்புகள் • சமூக வீட்டு திட்டங்கள் ✔ B. Capability Enhancement • நல்ல பள்ளி & சுகாதாரம் • பெண்கள் தொழில்முனைவு ஆதரவு • டிஜிட்டல் திறன் பயிற்சிகள் • மலைநாட்டு நகரமயமாதல் ✔ C. Climate-safe Housing + Urban Planning • மண்சரிவிலிருந்து பாதுகாப்பான “Safe Zones” • அறிவியல் அடிப்படையிலான நகர திட்டமிடல் ⸻ 🔥 இறுதி தீர்ப்பு ❌ மலையக மக்களை வடகிழக்கில் மாற்றுவது வளர்ச்சி அல்ல. ❌ அது வறுமையை குறைக்காது; பெருக்கும். ✔ உண்மையான வளர்ச்சி = மக்கள் வாழும் இடத்திலேயே அவர்களின் திறன்கள் மற்றும் தேர்வுகளை அதிகரிப்பது. 🌟 “வளர்ச்சி என்பது குடியேற்றம் அல்ல; திறன்களை விரிவாக்கும் சுதந்திரம்.” — Amartya Sen ⸻ 📚 மலையக மக்களை “இடமாற்றம் செய்வதே தீர்வு” என்று கூறும் அறிவாளிகள் குறைந்தபட்சம் கீழ்க்கண்ட நூல்களைப் படிக்க வேண்டும்: 1️⃣ Abhijit V. Banerjee & Esther Duflo – Poor Economics Banerjee, A. V., & Duflo, E. (2011). Poor Economics: A Radical Rethinking of the Way to Fight Global Poverty. PublicAffairs. 2️⃣ Amartya Sen – Development as Freedom Sen, A. (1999). Development as Freedom. Oxford University Press. 3️⃣ World Bank – Resettlement & Poverty Risks World Bank. (2001). Involuntary Resettlement Sourcebook: Planning and Implementation in Development Projects. World Bank Publications. 4️⃣ Michael M. Cernea – Impoverishment Risks & Reconstruction (IRR) Model Cernea, M. M. (1997). “The Risks and Reconstruction Model for Resettling Displaced Populations”. World Development, 25(10), 1569–1587. 5️⃣ CEPA Sri Lanka – Estate Sector Socioeconomic Study Gunetilleke, N., Kuruppu, G., & Goonasekera, S. (2010). The Estate Sector in Sri Lanka: A Socio-Economic Diagnostic. Centre for Poverty Analysis (CEPA). Sri Shakthi Sumanan https://tinyurl.com/mr4vrdy2

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

1 month ago
யாழ்தேவி தொடர்உந்தில் உள்ள கழிப்பறையில் உள்ள நீர்த்தொட்டியில் யாரோ ஒருவர் தனது அந்த உறுப்பையும் கழுவிவிட்டு சென்றுவிட அத்தொட்டியில் நீர் நிரப்பி தன்முகம் கழுவிய இன்னொருவரின் கண்கள் பழுதடைந்ததான செய்தியை பத்திரிகை ஒன்றில் அன்று படித்த ஞாபகம் உள்ளது.🫣

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 month ago
மலையகத்தில் காணி வேண்டும்! இல்லையேல் வடக்கு கிழக்கில் குடியேறுவோம் : மனோ கணேஷன்.. 09/12/2025 மலையக பெருந்தோட்ட தமிழ் மக்களுக்கு, காணி உரிமை அவசியமானது. இந்த நிலையில்,மலைசரிவு இல்லாத பாதுகாப்பான சாலையோர இடங்களில் அவர்களுக்கு காணி தர வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் கோரியுள்ளார். மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி தொலஸ்பாகே தோட்டத்துக்கு இன்று சென்ற போதே அவர் இதனை கோரியுள்ளார். காணி உரிமை எனினும் அரசாங்கம் அதனை தர தவறுமானால், வடகிழக்கில் குடியேற விருப்பமா? என்று கூடியிருந்த மக்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட மக்களும் தாம் தயார் என்றும் தமக்கு சொந்த காணியே வேண்டும் என்று கூறினர். இந்த நிலையில், அரசியல்வாதிகள் அல்லாத புலம்பெயர் தமிழ் நண்பர்கள், காணிகளை தருவதாக தனக்கு சொல்கிறர்கள். அவர்கள் அவற்றை தந்தால், மலையக மக்களிடம் அவற்றை ஒப்படைக்கப்போவதாக மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். https://lanka-times.lk/need-land-hills-otherwise-will-settle-north-east-1765271765

நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி

1 month ago
நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி Dec 11, 2025 - 09:18 AM சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தாங்கிய அமெரிக்க விமானப் படையின் C-130J சூப்பர் ஹேர்குலிஸ் விமானம் மூலம் 'அத தெரண' குழுவினர் வடக்கு நோக்கிப் புறப்பட்டனர். குறித்த விமான யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இன்னும் சற்று நேரத்தில் சென்றடையவுள்ளது. மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட மனுசத் தெரண - டயலொக் நிவாரண நடவடிக்கை இன்றும் (11) 14வது நாளாகத் தொடர்கிறது. இந்நேரம் வரை நாட்டின் பல பகுதிகளை உள்ளடக்கி உதவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வட மாகாணத்தில் இதுவரை செல்வதற்கு கடினமாக இருந்த இடங்களுக்கு மனுசத் தெரண நிவாரணப் பொருட்களை எடுத்துக்கொண்டு இந்தச் சிறப்பு அமெரிக்க விமானம் புறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், தூதரகங்கள் மற்றும் காருண்யம் மிக்க மக்களால் மனுசத் தெரணவிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் இன்று வடக்கின் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. https://adaderanatamil.lk/news/cmj0werr402mdo29nmz9rm555

நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி

1 month ago

நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி

Dec 11, 2025 - 09:18 AM

நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தாங்கிய அமெரிக்க விமானப் படையின் C-130J சூப்பர் ஹேர்குலிஸ் விமானம் மூலம் 'அத தெரண' குழுவினர் வடக்கு நோக்கிப் புறப்பட்டனர். 

குறித்த விமான யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இன்னும் சற்று நேரத்தில் சென்றடையவுள்ளது. 

மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட மனுசத் தெரண - டயலொக் நிவாரண நடவடிக்கை இன்றும் (11) 14வது நாளாகத் தொடர்கிறது. 

இந்நேரம் வரை நாட்டின் பல பகுதிகளை உள்ளடக்கி உதவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, வட மாகாணத்தில் இதுவரை செல்வதற்கு கடினமாக இருந்த இடங்களுக்கு மனுசத் தெரண நிவாரணப் பொருட்களை எடுத்துக்கொண்டு இந்தச் சிறப்பு அமெரிக்க விமானம் புறப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், தூதரகங்கள் மற்றும் காருண்யம் மிக்க மக்களால் மனுசத் தெரணவிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் இன்று வடக்கின் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

https://adaderanatamil.lk/news/cmj0werr402mdo29nmz9rm555

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !

1 month ago
யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில ! வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தில் வழங்கப்படுகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், டித்வா சூறாவளி அனர்த்ததினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட செயலாளரினால் விடுக்கப்பட்ட அறிக்கையின் படி நெடுந்தீவில் 1216 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதனை புனரமைப்பதற்காக 304 லட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 2025 மக்கள் கணக்கெடுப்பு தரவிகளின் பிரகாரம் நெடுந்தீவில் 893 வீடுகள் மாத்திரமே உள்ளன. எனவே அந்த எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 1216 ஆக அதிகரித்தது எவ்வாறு? என்ற பாரிய சந்தேக எழுகிறது. அதேபோல் வேலனை பிரதேச செயலக பகுதியில் 4379 வீடுகள் உள்ளதாக மக்கள் தொகை கண புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் அங்கு அனர்த்தத்தில் 544 வீடுகளே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறையில் 3527 வீடுகளில் 668 வீடுக்ள மாத்திரமே சேதமடைந்துள்ளன. நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 18ஆயிரத்து 617 வீடுகளில் 791 மாத்திரமே சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேச செயலக பகுதிகளிலும் பகுதியளவில் அல்லது சிறியளவிலேயே வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆனால் மக்கள் தொகை குறைவாக காணப்படும் நெடுந்தீவில் இவ்வாறு அதிகரித்தமைக்கு காரணம் என்ன? இந்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மக்கள் நிதியை கொள்ளையிடும் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகம் எழுகிறது. உண்மையிலேயே இந்ததரவு பிரதேச செயலாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தால். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அது தொடர்பாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது. எனவே இது ஒரு மோசடி செயல் என தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழுலை கண்டுபிடித்துள்ளோம். ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாம் இதனை ஒப்படைக்கின்றோம். பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்க தயாராகும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் இது தொடர்பாக கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1455912

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !

1 month ago

Udaya-Gammanpila-1.jpg?resize=750%2C375&

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தில் வழங்கப்படுகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

டித்வா சூறாவளி அனர்த்ததினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட செயலாளரினால் விடுக்கப்பட்ட அறிக்கையின் படி நெடுந்தீவில் 1216 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதனை புனரமைப்பதற்காக 304 லட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் 2025 மக்கள் கணக்கெடுப்பு தரவிகளின் பிரகாரம் நெடுந்தீவில் 893 வீடுகள் மாத்திரமே உள்ளன.

எனவே அந்த எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 1216 ஆக அதிகரித்தது எவ்வாறு? என்ற பாரிய சந்தேக எழுகிறது.

அதேபோல் வேலனை பிரதேச செயலக பகுதியில் 4379 வீடுகள் உள்ளதாக மக்கள் தொகை கண புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் அங்கு அனர்த்தத்தில் 544 வீடுகளே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறையில் 3527 வீடுகளில் 668 வீடுக்ள மாத்திரமே சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 18ஆயிரத்து 617 வீடுகளில் 791 மாத்திரமே சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேச செயலக பகுதிகளிலும் பகுதியளவில் அல்லது சிறியளவிலேயே வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஆனால் மக்கள் தொகை குறைவாக காணப்படும் நெடுந்தீவில் இவ்வாறு அதிகரித்தமைக்கு காரணம் என்ன?

இந்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

மக்கள் நிதியை கொள்ளையிடும் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகம் எழுகிறது.

உண்மையிலேயே இந்ததரவு பிரதேச செயலாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தால். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அது தொடர்பாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது.

எனவே இது ஒரு மோசடி செயல் என தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த ஊழுலை கண்டுபிடித்துள்ளோம்.

ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாம் இதனை ஒப்படைக்கின்றோம்.

பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்க தயாராகும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் இது தொடர்பாக கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1455912

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 month ago
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு Mano ShangarDecember 11, 2025 10:54 am 0 “வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம். ஆனால் நீங்களும் அவர்களும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம். இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள். அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம்.” எனவும் சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/we-cordially-invite-the-hill-country-people-to-settle-in-the-north-and-east-sumanthirans-announcement/

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 month ago

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

Mano ShangarDecember 11, 2025 10:54 am 0

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம்.

ஆனால் நீங்களும் அவர்களும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம்.

இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள்.

அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம்.” எனவும் சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/we-cordially-invite-the-hill-country-people-to-settle-in-the-north-and-east-sumanthirans-announcement/

விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”

1 month ago
விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உலகில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும், பணமாக்கவும் அமெரிக்கா எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரையறுக்கப்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவில் வசிக்க விரைவான அனுமதியைப் பெறுவதற்கான பாதையை வழங்குவதற்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் புதன்கிழமை தனது “ட்ரம்ப் தங்க அட்டை” (Trump Gold Card) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் குறைந்தபட்சம் 1 மில்லியன் டொலர் (£750,000) செலுத்தக்கூடிய செல்வந்த வெளிநாட்டினருக்கு விரைவான அமெரிக்க விசாக்களை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இது வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது. ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை, விரைவான நாடுகடத்தல்கள் முதல் சட்டப்பூர்வ பாதைகளை கட்டுப்படுத்துவது வரை, தீவிரப்படுத்தி வரும் தருணத்தில் இந்த வெளியீடு வந்துள்ளது. தி கார்டியன் செய்தித்தாளின் கூற்றுப்படி, ட்ரம்ப் இந்த திட்டத்தை ஒரு பெரிய பொருளாதார வெற்றியாகக் பார்க்கிறார், இது “பல பில்லியன் டொலர்களை ” திரட்டக்கூடும் என்றும் கூறியுள்ளார். ட்ரம்பின் நிர்வாகம் குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பரந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்துள்ளது. சட்டவிரோதமாக நாட்டில் இருந்த லட்சக்கணக்கான மக்களை நாடு கடத்தியுள்ளது மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1455937

விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”

1 month ago

trump-1.jpg?resize=750%2C375&ssl=1

விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”.

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உலகில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும், பணமாக்கவும் அமெரிக்கா எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரையறுக்கப்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.

அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவில் வசிக்க விரைவான அனுமதியைப் பெறுவதற்கான பாதையை வழங்குவதற்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் புதன்கிழமை தனது “ட்ரம்ப் தங்க அட்டை” (Trump Gold Card) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

Image

இந்த திட்டம் குறைந்தபட்சம் 1 மில்லியன் டொலர் (£750,000) செலுத்தக்கூடிய செல்வந்த வெளிநாட்டினருக்கு விரைவான அமெரிக்க விசாக்களை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இது வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.

ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை, விரைவான நாடுகடத்தல்கள் முதல் சட்டப்பூர்வ பாதைகளை கட்டுப்படுத்துவது வரை, தீவிரப்படுத்தி வரும் தருணத்தில் இந்த வெளியீடு வந்துள்ளது.

தி கார்டியன் செய்தித்தாளின் கூற்றுப்படி, ட்ரம்ப் இந்த திட்டத்தை ஒரு பெரிய பொருளாதார வெற்றியாகக் பார்க்கிறார், இது “பல பில்லியன் டொலர்களை ” திரட்டக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

ட்ரம்பின் நிர்வாகம் குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பரந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்துள்ளது.

சட்டவிரோதமாக நாட்டில் இருந்த லட்சக்கணக்கான மக்களை நாடு கடத்தியுள்ளது மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1455937

கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

1 month ago
கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை. கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார். போஸ்டாக் கடந்த மாதம் பல குற்றச்சாட்டுகளுக்கு, குறிப்பாக மனித உடலின் மரியாதையை இழிவாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். 2021ஆம் ஆண்டு ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரண சம்பவத்துக்குச் சென்று, பகுதியளவில் ஆடையுடன் இருந்த இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து, அதை இன்னொரு அதிகாரிக்கு அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் இச்சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கேட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். போஸ்டாக் இன்னும் தண்டனைக்காக காத்திருக்கிறார்; மேலும் சில குற்றச்சாட்டுகளும் அவர்மீது நிலுவையில் உள்ளன. https://athavannews.com/2025/1455899