Aggregator

மகளிர் விளையாட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வராத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறுமுகப்படுத்துகிறது

1 month ago
09 Oct, 2025 | 12:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல் தடவையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வாரத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் இந்த நிகழ்வு அக்டோபர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும். இந்த கொண்டாட்டம் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. இந்த புதுமையான முயற்சியானது, ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுடன் இணைத்தவாறு உலகளாவிய கிரிக்கெட் சமூகத்தை ஒன்றிணைக்கவும், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தவும் ஆதரிக்கவும்; கிரிக்கெட் சபைகள் அர்த்தமுள்ள மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான வழிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம், இந்தியாவில் இந்த வருடம் நடைபெறும் உலகக் கிண்ணத்தின்போது தொடங்கி, உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டில் பெண்களின் தெரிவு நிலை, சுயவிபரம் மற்றும் பங்கேற்பை கணிசமாக மேம்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் ஆண்டுதோறும் நடைபெறும். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா, 'இந்த வருடம் மகளிர் கிரிக்கெட் ஏற்கனவே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு அரங்குகளில் நிரம்பி வழிகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுடன் கிரிக்கெட் விளையாட்டின் மீதான உத்வேகம் அதிகரித்துள்ளது. 'ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம் அறிமுகமாவதன் மூலம் மற்றொரு பெருமைமிகு மைல்கல் பதிவாகிறது. கிரிக்கெட் அரங்கில் உள்ள வீராங்கனைகள் மட்டுமல்ல, துடுப்பை அல்லது பந்தை கையில் எடுக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சாத்தியமானதைப் பற்றி கனவு காண்பதைக் கொண்டாட வைக்கிறது. இது பூரண மற்றும் இணை உறுப்பு நாடுகளுக்கு உலகளாவிய நிகழ்வில் பங்கேற்கவும், தங்களது சொந்த சமூகங்களில் பெண்கள் விளையாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்குகிறது' என்றார். இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வரவேற்பு நாடு அல்லாத பல பூரண அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடியுள்ளன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை, நியூஸிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன ஏற்கனவே சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தன.. கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்கா கிரிக்கெட் நிறுவனம்) தமது தேசத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தவுள்ளது. இதில் குழு விவாதம், மினி-கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முன்னாள் தென் ஆபிரிக்க வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி ஆகியவை அடங்கும். அது மட்டுமல்லாமல் பெர்முடா முதல் ஹொங்கொங் வரை ஒவ்வொரு கண்டத்திலும், 45க்கும் மேற்பட்ட ஐ.சி.சி இணை உறுப்பு நாடுகள் மகளிர் கிரிக்கெட் வாரத்தில் ஈடுபட தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. https://www.virakesari.lk/article/227305

மகளிர் விளையாட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வராத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறுமுகப்படுத்துகிறது

1 month ago

09 Oct, 2025 | 12:28 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல் தடவையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வாரத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் இந்த நிகழ்வு அக்டோபர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும். இந்த கொண்டாட்டம் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.

இந்த புதுமையான முயற்சியானது, ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுடன் இணைத்தவாறு உலகளாவிய கிரிக்கெட் சமூகத்தை ஒன்றிணைக்கவும், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தவும் ஆதரிக்கவும்; கிரிக்கெட் சபைகள் அர்த்தமுள்ள மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான வழிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம், இந்தியாவில் இந்த வருடம் நடைபெறும் உலகக் கிண்ணத்தின்போது தொடங்கி, உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டில் பெண்களின் தெரிவு நிலை, சுயவிபரம் மற்றும் பங்கேற்பை கணிசமாக மேம்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் ஆண்டுதோறும் நடைபெறும்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா,

'இந்த வருடம் மகளிர் கிரிக்கெட் ஏற்கனவே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு அரங்குகளில் நிரம்பி வழிகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுடன் கிரிக்கெட் விளையாட்டின் மீதான உத்வேகம் அதிகரித்துள்ளது.

'ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம் அறிமுகமாவதன் மூலம் மற்றொரு பெருமைமிகு மைல்கல் பதிவாகிறது. கிரிக்கெட் அரங்கில் உள்ள வீராங்கனைகள் மட்டுமல்ல, துடுப்பை அல்லது பந்தை கையில் எடுக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சாத்தியமானதைப் பற்றி கனவு காண்பதைக் கொண்டாட வைக்கிறது. இது பூரண மற்றும் இணை உறுப்பு நாடுகளுக்கு உலகளாவிய நிகழ்வில் பங்கேற்கவும், தங்களது சொந்த சமூகங்களில் பெண்கள் விளையாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்குகிறது' என்றார்.

இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வரவேற்பு நாடு அல்லாத பல பூரண அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடியுள்ளன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை, நியூஸிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன ஏற்கனவே சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தன..

கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்கா கிரிக்கெட் நிறுவனம்) தமது தேசத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தவுள்ளது. இதில் குழு விவாதம், மினி-கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முன்னாள் தென் ஆபிரிக்க வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி ஆகியவை அடங்கும்.

அது மட்டுமல்லாமல் பெர்முடா முதல் ஹொங்கொங் வரை ஒவ்வொரு கண்டத்திலும், 45க்கும் மேற்பட்ட ஐ.சி.சி இணை உறுப்பு நாடுகள் மகளிர் கிரிக்கெட் வாரத்தில் ஈடுபட தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

https://www.virakesari.lk/article/227305

லாஸ் ஏஞ்சலிஸ் தீ: சந்தேக நபரை சாட்ஜிபிடி படம் சிக்க வைத்தது எப்படி?

1 month ago
பட மூலாதாரம், Justice department படக்குறிப்பு, புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. கட்டுரை தகவல் அனா ஃபேகுய் மற்றும் நார்டின் சாட் பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2025, 12:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட பசிபிக் பாலிசேட்ஸ் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த தீயை பற்ற வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் என்பவரின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களில், அவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி உருவாக்கிய எரியும் நகரத்தின் படமும் இருந்தது என நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து, ஜனவரி 7- ஆம் தேதி, கடலோர ஆடம்பர குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள நடைபாதை அருகே உருவானது. இது லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய தீ விபத்தாகக் கருதப்படுகிறது. அதே நாளில், ஈட்டன் தீ எனப்படும் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது. இதில் மீண்டும் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9,400 கட்டடங்கள் முற்றிலும் எரிந்து விழுந்தன. ஆனால், அந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பாலிசேட்ஸ் தீ 23,000 ஏக்கருக்கும் (9,308 ஹெக்டேருக்கும்) மேற்பட்ட பரப்பளவில் பரவி, சுமார் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியது. இந்த தீ மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து, முழு குடியிருப்புப் பகுதிகளை அழித்தது. டோபங்கா மற்றும் மாலிபு பகுதிகளும் தீயால் பாதிக்கப்பட்டன. புளோரிடாவில் செவ்வாயன்று ரிண்டர்க்னெக்ட் கைது செய்யப்பட்டார். அவர் மீது, தீ பற்றவைத்து சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என வழக்கறிஞர் பில் எஸ்ஸேலி லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். "இந்தக் கைது நடவடிக்கை, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஓரளவு நீதியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று எஸ்ஸேலி கூறினார். கொலை குற்றச்சாட்டுகள் உட்பட கூடுதல் வழக்குகள் பின்னர் பதிவு செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. கலிபோர்னியாவில் வசித்து வேலை செய்து வந்த ரிண்டர்க்னெக்ட், தீ விபத்துக்குப் பிறகு விரைவில் புளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம், Getty Images காற்றால் மேலும் பரவிய தீ புத்தாண்டு தினத்தில் ரிண்டர்க்னெக்ட் தொடங்கியதாகக் கூறப்படும் முதல் தீ 'லாச்மேன் தீ' என அழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக கட்டுப்படுத்தினாலும், அது அடர்த்தியான தாவரங்களின் வேர் அமைப்பில் நிலத்தடியில் புகைந்து கொண்டிருந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். பின்னர் ஒரு புயலின் போது, அந்த புகை மீண்டும் மேற்பரப்புக்கு எழுந்து தீயாக பரவியது. சந்தேகத்துக்குரிய அந்த நபர் பசிபிக் பாலிசேட்ஸில் முன்பு வசித்து வந்ததால், அந்தப் பகுதியை நன்கு அறிந்திருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஸ்கல் ராக் டிரெயில்ஹெட்டுக்கு அருகில் வசித்து வந்தார், அங்குதான் அவர் தீயை மூட்டியதாகக் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகையின்படி, புத்தாண்டு தினத்துக்கு முந்தைய இரவில், உபர் ஓட்டுநராக தனது பணியை முடித்த பின், அவர் தீயைப் பற்ற வைத்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று இரவில் ரிண்டர்க்னெக்ட் இரு பயணிகளை அழைத்துச் சென்றதாகவும், ஓட்டுநர் ரிண்டர்க்னெக்ட் மிகவும் பதற்றமாகவும் கோபமாகவும் இருந்தார் என அந்தப் பயணிகளில் ஒருவர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஜனவரி ஒன்றாம் தேதி தீ விபத்து தொடங்கிய நேரத்தில் அவர் இருந்த இடத்தை அவரது தொலைபேசி தரவுகளை பயன்படுத்தி அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆனால், விசாரணையின் போது, அவர் தவறான தகவல் அளித்து மலை அடிவாரத்தில் இருந்ததாகக் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த நேரத்தில், ரிண்டர்க்னெக்ட் உபர் செயலியை பயன்படுத்தவில்லை. ஆனால், ஜிபிஎஸ் தரவு மற்றும் பிற தகவல்களை கொண்டு, அவரது இருப்பிடத்தைத் தீர்மானிக்க, மத்திய மது, புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பணியகத்துடன் (ATF)நெருக்கமாக இணைந்து பணியாற்றினோம் என உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரிண்டர்க்னெக்ட்கும் தீ விபத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதும், உபர் தளத்தை அணுக அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை உடனடியாக நீக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Justice Department 'சாட்ஜிபிடியிடம் ஆலோசனை' தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு வீரர்களின் வீடியோக்கள் உட்பட, தொலைபேசியில் தீ விபத்துடன் தொடர்புடைய பல ஆதாரங்களை ரிண்டர்க்னெக்ட் வைத்திருந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு தின நள்ளிரவுக்குப் பிறகு, அவர் 911 என்ற அவசர எண்ணை பலமுறை அழைத்ததாகவும், ஆனால் அவரது மொபைல் இணைப்பு பலவீனமாக இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், ரிண்டர்க்னெக்ட் "உங்களது சிகரெட்டால் தீப்பிடித்தால் அது உங்கள் பொறுப்பா?" என சாட்ஜிபிடியிடம் கேட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரிண்டர்க்னெக்ட், "தீயை அணைக்க முயற்சித்ததாகத் தோன்றும் ஆதாரங்களை" உருவாக்க முயன்றார் என புலனாய்வாளர்கள் கூறினர். "தீ விபத்து தொடர்பான வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலான விளக்கத்தை உருவாக்க விரும்பினார்" எனவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது 2025 ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், ரிண்டர்க்னெக்ட் பதற்றமாக நடந்து கொண்டார். தீயை மூட்டியது யார் என்று கேட்கும் போதெல்லாம், அவரது கழுத்து நரம்பு துடித்தது என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம், Getty Images 2024 ஜூலை மாதத்தில், தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் எரியும் காடு மற்றும் தீயிலிருந்து ஓடும் மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு படத்தை உருவாக்க கேட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். "ஓவியத்தின் நடுவில், வறுமையில் வாடும் லட்சக்கணக்கான மக்கள், பெரிய டாலர் சின்னம் கொண்ட பிரமாண்டமான வாயிலைக் கடந்து செல்ல முயல்கிறார்கள். வாயிலின் மறுபக்கத்தில் பணக்காரர்கள் குழுவாக கூடியிருக்கிறார்கள். அவர்கள் உலகம் எரிவதைப் பார்த்து மகிழ்கிறார்கள்; மக்கள் போராடுவதைப் பார்த்து ரசித்து சிரித்து,மகிழ்ந்து ஆடுகிறார்கள்" என படத்தை உருவக்கும்போது சாட்ஜிபிடியிடம் அவர் பிராம்ப்ட் கொடுத்திருந்தார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் ஒரு செய்தியை உள்ளிட்டதாகக் கூறப்படுகிறது, அதில் "என்னிடம் இருந்த பைபிளை நான் உண்மையாக எரித்தேன். அது அருமையாக இருந்தது. நான் மிகவும் விடுதலை பெற்றதாக உணர்ந்தேன்"எனக் கூறப்பட்டிருந்தது. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், இந்தக் கைது நடவடிக்கை "தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலிபோர்னியர்களுக்கு ஒரு தீர்வை அளிக்கும் முக்கியமான படி" என்று கூறினார். மேலும், தீ விபத்து தொடர்பான அரசின் விசாரணைக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce80r9y5lnjo

லாஸ் ஏஞ்சலிஸ் தீ: சந்தேக நபரை சாட்ஜிபிடி படம் சிக்க வைத்தது எப்படி?

1 month ago

ரிண்டர்க்னெக்ட்

பட மூலாதாரம், Justice department

படக்குறிப்பு, புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை.

கட்டுரை தகவல்

  • அனா ஃபேகுய் மற்றும் நார்டின் சாட்

  • பிபிசி நியூஸ்

  • 9 அக்டோபர் 2025, 12:06 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட பசிபிக் பாலிசேட்ஸ் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த தீயை பற்ற வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் என்பவரின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களில், அவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி உருவாக்கிய எரியும் நகரத்தின் படமும் இருந்தது என நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து, ஜனவரி 7- ஆம் தேதி, கடலோர ஆடம்பர குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள நடைபாதை அருகே உருவானது. இது லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய தீ விபத்தாகக் கருதப்படுகிறது.

அதே நாளில், ஈட்டன் தீ எனப்படும் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது. இதில் மீண்டும் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9,400 கட்டடங்கள் முற்றிலும் எரிந்து விழுந்தன. ஆனால், அந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

பாலிசேட்ஸ் தீ 23,000 ஏக்கருக்கும் (9,308 ஹெக்டேருக்கும்) மேற்பட்ட பரப்பளவில் பரவி, சுமார் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த தீ மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து, முழு குடியிருப்புப் பகுதிகளை அழித்தது. டோபங்கா மற்றும் மாலிபு பகுதிகளும் தீயால் பாதிக்கப்பட்டன.

புளோரிடாவில் செவ்வாயன்று ரிண்டர்க்னெக்ட் கைது செய்யப்பட்டார். அவர் மீது, தீ பற்றவைத்து சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என வழக்கறிஞர் பில் எஸ்ஸேலி லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"இந்தக் கைது நடவடிக்கை, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஓரளவு நீதியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று எஸ்ஸேலி கூறினார்.

கொலை குற்றச்சாட்டுகள் உட்பட கூடுதல் வழக்குகள் பின்னர் பதிவு செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை.

கலிபோர்னியாவில் வசித்து வேலை செய்து வந்த ரிண்டர்க்னெக்ட், தீ விபத்துக்குப் பிறகு விரைவில் புளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாஸ் ஏஞ்சலிஸ் தீ: சந்தேக நபரை சாட்ஜிபிடி படம் சிக்க வைத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

காற்றால் மேலும் பரவிய தீ

புத்தாண்டு தினத்தில் ரிண்டர்க்னெக்ட் தொடங்கியதாகக் கூறப்படும் முதல் தீ 'லாச்மேன் தீ' என அழைக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக கட்டுப்படுத்தினாலும், அது அடர்த்தியான தாவரங்களின் வேர் அமைப்பில் நிலத்தடியில் புகைந்து கொண்டிருந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஒரு புயலின் போது, அந்த புகை மீண்டும் மேற்பரப்புக்கு எழுந்து தீயாக பரவியது.

சந்தேகத்துக்குரிய அந்த நபர் பசிபிக் பாலிசேட்ஸில் முன்பு வசித்து வந்ததால், அந்தப் பகுதியை நன்கு அறிந்திருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஸ்கல் ராக் டிரெயில்ஹெட்டுக்கு அருகில் வசித்து வந்தார், அங்குதான் அவர் தீயை மூட்டியதாகக் கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகையின்படி, புத்தாண்டு தினத்துக்கு முந்தைய இரவில், உபர் ஓட்டுநராக தனது பணியை முடித்த பின், அவர் தீயைப் பற்ற வைத்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று இரவில் ரிண்டர்க்னெக்ட் இரு பயணிகளை அழைத்துச் சென்றதாகவும், ஓட்டுநர் ரிண்டர்க்னெக்ட் மிகவும் பதற்றமாகவும் கோபமாகவும் இருந்தார் என அந்தப் பயணிகளில் ஒருவர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி ஒன்றாம் தேதி தீ விபத்து தொடங்கிய நேரத்தில் அவர் இருந்த இடத்தை அவரது தொலைபேசி தரவுகளை பயன்படுத்தி அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆனால், விசாரணையின் போது, அவர் தவறான தகவல் அளித்து மலை அடிவாரத்தில் இருந்ததாகக் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தீ விபத்து நடந்த நேரத்தில், ரிண்டர்க்னெக்ட் உபர் செயலியை பயன்படுத்தவில்லை. ஆனால், ஜிபிஎஸ் தரவு மற்றும் பிற தகவல்களை கொண்டு, அவரது இருப்பிடத்தைத் தீர்மானிக்க, மத்திய மது, புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பணியகத்துடன் (ATF)நெருக்கமாக இணைந்து பணியாற்றினோம் என உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ரிண்டர்க்னெக்ட்கும் தீ விபத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதும், உபர் தளத்தை அணுக அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை உடனடியாக நீக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புயலால் மேலும் பரவிய தீ

பட மூலாதாரம், Justice Department

'சாட்ஜிபிடியிடம் ஆலோசனை'

தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு வீரர்களின் வீடியோக்கள் உட்பட, தொலைபேசியில் தீ விபத்துடன் தொடர்புடைய பல ஆதாரங்களை ரிண்டர்க்னெக்ட் வைத்திருந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தாண்டு தின நள்ளிரவுக்குப் பிறகு, அவர் 911 என்ற அவசர எண்ணை பலமுறை அழைத்ததாகவும், ஆனால் அவரது மொபைல் இணைப்பு பலவீனமாக இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், ரிண்டர்க்னெக்ட் "உங்களது சிகரெட்டால் தீப்பிடித்தால் அது உங்கள் பொறுப்பா?" என சாட்ஜிபிடியிடம் கேட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரிண்டர்க்னெக்ட், "தீயை அணைக்க முயற்சித்ததாகத் தோன்றும் ஆதாரங்களை" உருவாக்க முயன்றார் என புலனாய்வாளர்கள் கூறினர்.

"தீ விபத்து தொடர்பான வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலான விளக்கத்தை உருவாக்க விரும்பினார்" எனவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது

2025 ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், ரிண்டர்க்னெக்ட் பதற்றமாக நடந்து கொண்டார். தீயை மூட்டியது யார் என்று கேட்கும் போதெல்லாம், அவரது கழுத்து நரம்பு துடித்தது என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

'சாட்ஜிபிடியிடம் ஆலோசனை'

பட மூலாதாரம், Getty Images

2024 ஜூலை மாதத்தில், தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் எரியும் காடு மற்றும் தீயிலிருந்து ஓடும் மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு படத்தை உருவாக்க கேட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

"ஓவியத்தின் நடுவில், வறுமையில் வாடும் லட்சக்கணக்கான மக்கள், பெரிய டாலர் சின்னம் கொண்ட பிரமாண்டமான வாயிலைக் கடந்து செல்ல முயல்கிறார்கள்.

வாயிலின் மறுபக்கத்தில் பணக்காரர்கள் குழுவாக கூடியிருக்கிறார்கள்.

அவர்கள் உலகம் எரிவதைப் பார்த்து மகிழ்கிறார்கள்; மக்கள் போராடுவதைப் பார்த்து ரசித்து சிரித்து,மகிழ்ந்து ஆடுகிறார்கள்" என படத்தை உருவக்கும்போது சாட்ஜிபிடியிடம் அவர் பிராம்ப்ட் கொடுத்திருந்தார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் ஒரு செய்தியை உள்ளிட்டதாகக் கூறப்படுகிறது, அதில் "என்னிடம் இருந்த பைபிளை நான் உண்மையாக எரித்தேன். அது அருமையாக இருந்தது. நான் மிகவும் விடுதலை பெற்றதாக உணர்ந்தேன்"எனக் கூறப்பட்டிருந்தது.

கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், இந்தக் கைது நடவடிக்கை "தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலிபோர்னியர்களுக்கு ஒரு தீர்வை அளிக்கும் முக்கியமான படி" என்று கூறினார்.

மேலும், தீ விபத்து தொடர்பான அரசின் விசாரணைக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce80r9y5lnjo

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

1 month ago
பாகிஸ்தானை பந்தாடியது நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா 08 Oct, 2025 | 10:15 PM (நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானிடம் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா இறுதியில் 107 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. இந்தப் போட்டி முடிவுடன் பாகிஸ்தான் தனது 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 36.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து 13ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனினும் கடைசி 4 விக்கெட்களில் 65 ஓட்டங்கள் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது. முன்வரிசையில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய சித்ரா ஆமின் 35 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் ரமீன் ஷமின் 15 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 11 ஓட்டங்களையும் பின்வரிசையில் நஷ்ரா சாந்து 11 ஓட்டங்களையும் பெற்றனர். உதிரிகளாக 19 ஓட்டங்கள் கிடைத்தது. பந்துவீச்சில் கிம் கார்த் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அனாபெல் ஷூட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெகான் ஷூட் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட போதிலும் பெத் மூனி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. நஷ்ரா சாந்து, ரமீன் ஷமிம், பாத்திமா சானா, சாடியா இக்பால், டயனா பெய்க் ஆகியோரின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 34ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், அனுபசாலியான 31 வயதுடைய பெத் மூனி அபார சதம் குவித்து அவுஸ்திரேலியாவை மீட்டெடுத்தார். 10ஆம் இலக்க வீராங்கனை அலனா கிங் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கன்னி அரைச் சதம் குவித்து அசத்தினார். அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 9ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும். நோர்த் சிட்னியில் கடந்த வருடம் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி கார்ட்னர், கிம் கார்த் ஆகியோர் பகிர்ந்த 77 ஓட்டங்களே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்பதாவது விக்கெட்டுக்கான முந்தைய சாதனையாக இருந்தது. பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலனா கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்வரிசையில் அணித் தலைவி அலிசா ஹீலி 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: பெத் மூனி https://www.virakesari.lk/article/227266

6 குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த இருமல் மருந்து!

1 month ago
கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிக்கப்பட்ட இடம் எப்படி இருக்கிறது? பிபிசி கண்டது என்ன? படக்குறிப்பு, கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் இயங்கிய ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்தைக் குடித்த மேலும் ஐந்து குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டதையடுத்து இவர்களுக்கு ஸ்ரேசன் நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' என்ற இருமல் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இந்த மருந்தைக் குடித்த பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு வாந்தியும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னையும் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைய ஆரம்பித்தனர். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, 'கோல்ட்ரிஃப்' மருந்தை மாநில அரசு தடை செய்தது. மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் மரணமடைய ஆரம்பித்ததையடுத்து, இது தொடர்பாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு நடவடிக்கையில் இறங்கிய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அக்டோபர் 1-ஆம் தேதி மாலையில் அந்த மருந்து நிறுவனத்தைச் சோதனையிட்டது. சோதனையின்போது மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட பேட்சைச் சேர்ந்த மருந்துகள் (Batch No. SR-13 2025 மே மாதம் தயாரிக்கப்பட்டவை) கைப்பற்றப்பட்டன. இதற்குப் பிறகு அங்கிருந்த கோல்ட்ரிஃப் மருந்து, ரெஸ்போலைட் (Respolite) மருந்துகளின் மூன்று வகைகள், ஹெப்சான்டின் மருந்து ஆகியவை ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள மருந்துகள் முடக்கிவைக்கப்பட்டன. இந்த மருந்துகளை விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, இந்த மருந்துகள் ஒடிசா, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது. படக்குறிப்பு, தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை 41 பக்க அறிக்கையை வெளியிட்டது. 'மருந்து உற்பத்தியே சுகாதாரமாக நடக்கவில்லை' இந்தச் சோதனைகளின்போது ஸ்ரேசன் நிறுவனம் மருந்து உற்பத்திக்கான நூற்றுக்கணக்கான விதிகளை மீறியது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை 41 பக்க அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் சோதனையின்போது கண்டறியப்பட்ட 364 விதி மீறல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அதில் 39 விதி மீறல்கள் மிகத் தீவிரமானவை. 325 விதிமீறல்கள் பெரிய அளவிலானவை. முதலாவதாக, ''இருமல் மருந்தைத் தயாரிப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த ப்ரோப்பலீன் க்ளைக்கால், மருந்து உற்பத்திக்கான தரத்தில் இல்லை'' அடுத்ததாக, ''அந்த வேதிப் பொருள் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு வந்த பிறகு அது மருந்துத் தரத்தில் இருக்கிறதா என்பது சோதனை செய்யப்படவும் இல்லை''. மேலும் "இந்த மருந்து நிறுவனத்தில் சரியான தரத்திலான பணியாளர்கள் இல்லை. பயன்படுத்தப்படும் தண்ணீர், உற்பத்திக் கருவிகள் போன்றவை அங்கீகரிக்கத்தக்கத் தரத்தில் இல்லை. தயாரிக்கப்பட்ட பொருள்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன." என அதில் குறிப்பிடப்படுள்ளது. மேலும், "மருந்து உற்பத்தியே சுகாதாரமாக நடக்கவில்லை. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகளும் இல்லை. மருந்துகளைக் கண்காணிக்கும் நடைமுறைகள் இல்லை. தரவுகள் சேகரித்து வைக்கப்படவில்லை. தரத்தை உறுதி செய்யும் பிரிவே இல்லை. வெளியில் இருந்துதான் தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. அவை சுத்திகரிக்கப்படுவதும் இல்லை. கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியில் விடப்பட்டது. மருந்து உற்பத்திக்கான தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது" என விதிமீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கைதான உரிமையாளர் இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட மருந்துகள் வேதியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. அதன்படி, இருமல் மருந்துகளில் பயன்படுத்தப்பட்ட ப்ரோப்பலீன் க்ளைகால் (Propylene Glycol) என்ற வேதிப் பொருள் மருந்துப் பொருட்களுக்கான தரத்தில் இல்லை என்பதும் அதில் சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடிய நச்சுப் பொருளான டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டதாக மருந்துக் கட்டுப்பாட்டு துறை தெரிவிக்கிறது. 'மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட மருந்துத் தொகுப்பில், டைஎத்திலீன் க்ளைக்கால் 48.6 சதவீதம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருந்துத் தயாரிப்பை நிறுத்த உத்தரவிடப்பட்டது. அந்த மருந்து நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது. அக்டோபர் 12- ஆம் தேதிக்குள் இந்த நோட்டீஸிற்கு பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகளும் துவங்கப்பட்டுள்ளதாக மருந்துக்கட்டுப்பாட்டுத் துறை தெரிவிக்கிறது. இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தனிப்படைக் காவல்துறையினர் 11 பேர் சென்னையில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் சென்னை நகரக் காவல்துறையினரின் உதவியுடன் ஸ்ரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை வியாழக்கிழமையன்று காலையில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 73 வயதாகும் ரங்கநாதன் மருந்து உற்பத்தித் துறை வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டவர். நீண்ட காலமாக நீர்ம மருந்துகளை தயாரித்துவந்தவர். படக்குறிப்பு, ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. பிபிசி கண்டது என்ன? கோல்ட்ரிஃப் மருந்தைத் தயாரித்துவந்த ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை சுங்குவார்சத்திரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த இடத்தை நேரில் சென்று பார்க்கும் யாருக்கும் பெரும் அதிர்ச்சியே ஏற்படும். நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒரு இடத்தில், தரைத்தளத்தையும் அதற்கு மேலே ஒரு தளத்தையும் கொண்ட மிகச் சாதாரணமான ஒரு கட்டடத்தில் இயங்கிவருகிறது இந்தத் தொழிற்சாலை. இந்த நிறுவனம் மூடி சீல் வைக்கப்படுவதற்கு முன்புவரை, மொத்தம் 12 பேர் பணியாற்றி வந்தனர். இதன் உரிமையாளர் ரங்கநாதன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் படிப்பை முடித்தவர். குழந்தைகளுக்கான மருந்துகளைத் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலை உட்பகுதிகளில் துருப்பிடித்த பொருட்கள், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களைக் கொண்டிருக்கும் கேன்கள் என சுகாதாரமற்ற முறையிலேயே காணப்படுகின்றன. சார்பிடால் என்ற மருந்தின் மூலப்பொருட்களைக் கொண்டிருக்கும் கேன்கள் எவ்விதப் பாதுகாப்புமின்றி வெளியில் வைக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு மீது குற்றச்சாட்டு இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 20 குழந்தைகள் இறந்திருப்பதற்கு தமிழ்நாடு அரசின் மிகமோசமான கவனக் குறைவே காரணம் என மத்தியப் பிரேதசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் குற்றம்சாட்டியுள்ளார். "தயாரிக்கப்படும் ஒவ்வொரு பேட்சிற்கும் Certificate of Analysis சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பேட்சிற்கு அப்படிச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? எந்த அதிகாரி தவறு செய்தார் என்பது விசாரிக்கப்பட வேண்டும்" என அவர் கூறியிருப்பதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ஸ்ரேசன் நிறுவனத்திற்கு 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி உரிமங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள், மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையத்தின் துணை இயக்குநர் எஸ். குருபாரதியால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், அவரிடம் பேச மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. "அவர் இது தொடர்பான விசாரணையில் தீவிரமாக இருப்பதால், இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் செய்திக் குறிப்பாக மட்டுமே வழங்கப்படும்" என்கிறது அவரது அலுவலகம். இதற்கிடையில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் பிரிவில் பணியாற்றிவந்த கார்த்திகேயன், தீபா ஜோசப் ஆகிய இரு ஆய்வாளர்கள் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் கூறுவது என்ன? இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்துடன் பேச மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. வியாழக்கிழமையன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களை சந்தித்தபோது, ''கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சரியாகச் செயல்படவில்லை என கூறப்படுகிறதே'' என கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், '' இது தொடர்பாக ஆய்வு நடத்தி, மருந்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் மையம் இந்த மருந்தை வாங்குவதில்லை. தனியார் வாங்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டது" என்று தெரிவித்தார். மேலும், ''எந்த மருந்தாக இருந்தாலும் அந்தந்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் ஆய்வு செய்து கலப்படம் இருப்பதாகச் சொன்னோம். அரசியல் நெருக்கடி அதிகரித்தவுடன் இப்படி அறிக்கை விடுகிறார்கள். அதைப் பற்றி அதிகமாக நாங்கள் பேசப்போவதில்லை. நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கிற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சீனியர் மருந்து ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக 2, 3 நாட்களில் முடிவெடுக்கப்படும்" என்றார் படக்குறிப்பு, 20 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களுக்கு இரு அரசுகளிடமும் உரிமம் பெற வேண்டும் என்கிறார் கே. சிவபாலன். அதிர்ச்சியளித்த அறிக்கை ஆனால், தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இது தொடர்பாக அளித்த முதலாவது அறிக்கையில் இருந்த சில வாசகங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அதாவது, ''அக்டோபர் ஒன்றாம் தேதியும் இரண்டாம் தேதியும் விடுமுறை நாளாக இருந்தாலும் பொதுநலனை மனதில் வைத்து மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கையில் இறங்கியது'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 20 குழந்தைகள் இறந்த ஒரு விவகாரத்தில் பதிலளித்த மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை விடுமுறை நாளிலும் வேலை பார்த்ததாகக் குறிப்பிட்டது தொடர்பாக ஊடகங்கள் விமர்சித்தன. மேலும், இப்போது சோதனை நடத்தி 300க்கும் மேற்பட்ட விதிமீறல்களைக் கண்டுபிடித்திருக்கும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இத்தனை நாட்களாக என்ன செய்தது என்ற கேள்வியும் எழுந்தது. இதில் பல்வேறு அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்கிறார் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் கே. சிவபாலன். "மருந்து உற்பத்தித் துறையைக் கட்டுப்படுத்த மாநில அரசின் சட்டமும் இருக்கிறது, மத்திய அரசின் சட்டமும் இருக்கிறது. மருந்து உற்பத்திக்கான உரிமங்களைப் பொறுத்தவரை 60 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களை மாநில அரசே தருகிறது. 20 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களுக்கு இரு அரசுகளிடமும் உரிமம் பெற வேண்டும்." என்கிறார் அவர். "20 சதவீத மருந்துகள் அதாவது, தடுப்பூசிகள், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் போன்றவற்றுக்கு மத்திய அரசு மட்டுமே உரிமங்களை வழங்கும். ஒரு மருந்து நிறுவனம் செயல்பட ஆரம்பித்த பிறகு மாநில அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் சேர்ந்தோ தனித்தோ சோதனைகளை வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ மேற்கொள்வார்கள்" என்கிறார் கே. சிவபாலன். இந்தச் சோதனைகளின்போது தொழிற்சாலையின் தரம், அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் - தண்ணீர், சர்க்கரையில் துவங்கி அனைத்தும் சோதனையிடப்படும். அதேபோல, தயாராகும் மருந்துகளின் மாதிரிகளும் எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்யப்படும் என்கிறார் அவர். "ஆனால், தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான மருந்துகளைத் தயாரிக்கின்றன. ஒரு ஆய்வாளர் சோதனைக்குச் செல்லும்போது பத்து மாதிரிகளைத்தான் சேகரித்து, சோதனைக்கு அனுப்புவார். ஆகவே, எல்லா நிறுவனங்களிலும் எல்லா மருந்துகளையும் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, மருந்துகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அந்தந்த மருந்து நிறுவனங்களின் கடமை" என்கிறார் கே. சிவபாலன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மருந்து உற்பத்தித் துறையில் ப்ரோப்பலீன் க்ளைகால் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ஜெயசீலன். டைஎத்திலீன் க்ளைக்கால் ஆபத்தா? இந்த மருந்தின் தயாரிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் தவறு நேர்ந்திருக்கலாம் என்கிறார் இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கத்தின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலப் பிரிவின் தலைவரான ஜே. ஜெயசீலன். "மருந்து உற்பத்தித் துறையில் ப்ரோப்பலீன் க்ளைகால் என்பது பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒரு வகை மருந்துகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படுவது. இரண்டாவது வகை பெயிண்ட் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது." என்றார் ஜெயசீலன். மேலும் "இருமல் மருந்துகளில் Paracetamol, Phenylephrine Hydrochloride, Chlorpheniramine Maleate ஆகிய மருந்துப் பொருட்கள் இருக்கும். இதில் பாராசிட்டமாலைக் கரைப்பதற்கான கரைப்பானாக இந்த ப்ரோப்பலீன் க்ளைக்கால் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மருந்து நிறுவனங்கள் தங்களுக்கான மூலப் பொருட்களை ஒரே இடத்தில் இருந்துதான் கொள்முதல் செய்வார்கள். ஒவ்வொரு மூலப்பொருளும் வரும்போதும் அவற்றை பரிசோதனை செய்துதான் தயாரிப்பில் பயன்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மருந்துத் தயாரிப்பு நிறுவனம் பரிசோதிக்காமல் பயன்படுத்தியிருக்கலாம்." எனக் கூறினார் அவர். "பொதுவாக, மருந்தைத் தயாரித்து முடிந்த பிறகு, விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பாக பரிசோதனை செய்திருக்க வேண்டும். அடுத்ததாக, தமிழ்நாடு அரசு இதுபோன்ற மருந்துகளை வாங்கும்போது அவற்றைப் பரிசோதித்துத்தான் வாங்குவார்கள். ஆனால், மத்தியப் பிரதேச அரசு இதனை பரிசோதித்ததா என்பது தெரியவில்லை. இந்த விநியோகச் சங்கிலியில் ஏதாவது ஒரு இடத்தில் சோதனை நடந்திருந்தால், இதனைத் தடுத்திருக்கலாம்" என்கிறார் ஜெயசீலன். படக்குறிப்பு, கோல்ட்ரீஃப் மருந்தில் 48.6 சதவீதம் அளவுக்கு டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. தீர்வு என்ன? இதில் நிறுவனத்தின் உரிமையாளர் தவிர, அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், ப்ரோப்பலீன் க்ளைக்காலை சப்ளை செய்த நிறுவனம் ஆகியவையும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் ஜே. ஜெயசீலன். ப்ரோபலீன் க்ளைக்கால் என்பது பெட்ரோலியத்தைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் ஒரு வேதிப்பொருள். இதில், 0.1 சதவீதத்திற்கு மேல் டைஎத்திலீன் க்ளைக்கால் இருக்கக்கூடாது. கோல்ட்ரீஃப் மருந்தில் 48.6 சதவீதம் அளவுக்கு டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க ஒரு யோசனையைச் சொல்கிறார் ஜே. ஜெயசீலன். "ஒரு முறை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்தினால் வேறொரு நாட்டில் மரணங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து மத்திய அரசு ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது. அதாவது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய அரசின் சோதனைச் சாலையில் பரிசோதிக்கப்பட்ட பிறகே ஏற்றுமதிக்கு அனுப்பப்படும். அதேபோல, தமிழ்நாடு அரசும் ஒரு விதியை உருவாக்கலாம்" என்கிறார். ஆனால், குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மருந்தை இதுபோன்ற ஒரு தொழிற்சாலையில் தயாரிக்க முடியுமா? "மிகப் பெரிய மருந்து நிறுவனங்களின் தொழிற்சாலைகள்தான் பிரமாண்டமானதாக இருக்கும். மற்றவை இதுபோல சிறிய இடங்களில்தான் இயங்கிவரும். குறிப்பாக Syrup போன்றவை இதுபோன்ற சிறிய தொழிற்சாலைகளில்தான் தயாராகும். ஆனால், அந்தத் தொழிற்சாலைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும்" என்கிறார் ஜெயசீலன். இதற்கிடையில் மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலை அளிக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறது. இந்த நிறுவனங்களில் இணைந்து சோதனைகளை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது. கோல்ட்ரிஃப் மருந்து விவகாரத்திற்குப் பிறகு நடந்த சோதனைகளில் ரெஸ்பிஃப்ரஷ், ரீலைப் ஆகிய மருந்துகளிலும் டைஎத்திலீன் க்ளைக்கால் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czx09v15z4qo

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

1 month ago
பாகிஸ்தானிடம் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை பெத் மூனியின் அபார சதம் மீட்டெடுத்தது; அலானாவும் சிறந்த பங்களிப்பு 08 Oct, 2025 | 09:55 PM (நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பந்துவீச்சில் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, பெத் மூனியின் அபார சதத்தின் உதவியுடன் மீண்டெழுந்தது. தனது முதலிரண்டு போட்டிகளில் பங்களாதேஷிடமும் இந்தியாவிடமும் தோல்விகளைத் தழுவிய பாகிஸ்தான், இன்றைய போட்டியில் தனது பந்துவீச்சின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வித்தை காட்டியது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 34ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் நஷ்ரா சாந்து 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 2 விக்கெட்களையும் பாத்திமா சானா, சாடியா இக்பால், டயனா பெய்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர். இதன் காரணமாக குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டு வீழ்ந்துவிடுமோ என அஞ்சப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தான் தனது பிடியைத் தளரவிட, அனுபசாலியான 31 வயதுடைய பெத் மூனி அபார சதம் குவித்து அவுஸ்திரேலியாவை மீண்டெழச் செய்தார். 10ஆம் இலக்க வீராங்கனை அலான கிங் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கன்னி அரைச் சதம் குவித்து அசத்தினார். அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதன் மூலம் அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலான கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்வரிசையில் அணித் தலைவி அலிசா ஹீலி 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது. https://www.virakesari.lk/article/227265

மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா….

1 month ago
உத்திர பிரதேசத்தில் இலங்கையின் வடகிழக்கு இளையோர்களுக்கு ராணுவ பயிற்சி அவசர அவசரமாய் பொல்லு கொட்டனுடன் கொடுத்தது பாகிஸ்த்தான் ராணுவம் என்றால் தான் நாங்க நம்புவம் .😀 எஜமானர்களுக்கு ஒரு கீறல் விழுமாக இருந்தால் சாக்கை பிய்த்து தலையில் போட்டு கொண்டு உடுப்பு அவிழ்ந்து விழுவது கூட தெரியாமல் ஆடவும் செய்வம்😁 .. புதிதாய் எழுதப்பட்ட மாகாவம்சத்தில் கொக்குவில் ராணுவம் தாக்கபட்ட போது கனோன் பீரங்கி உடன் ஒரு சிங்கள ராணுவ வீரர் ஒலிபரப்பு கோபுரத்தில் ஏறி நின்று தாக்குதல் நடத்தி யதை சிங்களவர்களே நம்ப தயராக இல்லை அதை மாற்றி எழுத சொல்லி திருத்துகிறார்கள் இங்கு என்னடா என்றால் இன்னமும் முழு யானையை சோத்துக்குள் புதைக்க வெளிக்கிடுனம் .

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்

1 month ago
இந்திய நீதித்துறையின் புண்ணியத்தால் இரண்டு பாலியல் சைக்கோக்கள் தப்பிவிட்டார்கள்!

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறீர்கள். காத்திருப்போம். பாஜக தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. பாஜகவுக்கு 20 சீட்டுக்கு கீழே ஒதுக்கல். திமுக ஆட்சியை இழத்தல் இவைதான் எனது முன்னுரிமைகள் (priorities). இதே வரிசையில்.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

1 month ago
தமக்கு விளங்காவிடிலும் கூட, Chat GPT யிடம் கேட்டு அதை அப்படியே யாழில் கொண்டு வந்து கொப்பி பேஸ்ட் போடும் பசைவாளி காவடியை மறந்து போனீர்களோ அல்லது அவையடக்கமோ🤣.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

1 month ago
:) சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்... இப்படியாவது இந்த தளம் இங்கே தெம்பாக இயங்குவது சந்தோசம்.

மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா….

1 month ago
🤣சரியாப் போச்சு! யாரோ ஒருத்தர் முகட்டைப் பார்த்து யோசித்து விட்டு எழுதிய கட்டுரையில் "தமிழீழ விடுதலைப் போராட்டமே இந்தியாவால் நடத்தப் பட்டது" என்கிறார். அப்ப தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் போராட ஒரு தேவை இருக்கவில்லை என்பது மாதிரிப் போகிறது கதை! இதுக்கும் பாராட்டு வழங்கியிருக்கிறார்கள்😂!

தலைமன்னாரிலிருந்து இராமர் பாலம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவை விரைவில்!

1 month ago
ஹலோவீன் நேரம் போய்த் தங்குவதற்கு நல்ல இடமாக இருக்கும், இப்படி மூடி விட்டார்கள்😂!

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
தென் ஆபிரிக்காவின் முன்ன‌னி விக்கேட்டுக்க‌ள் போய் விட்ட‌ன‌ இன்னும் இர‌ண்டு விக்கேட் எடுத்தால் பெரிய‌ ர‌ன்ஸ் ரேட்டில் இந்தியா வென்று விடும்.........................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
இந்திய‌ அணி ம‌ற்ற‌ ம‌க‌ளிர்க‌ள் ந‌ன்றாக‌ விளையாடுகின‌ம் இந்தியா ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் க‌ரு இவான்ட‌ விளையாட்டு ச‌ரி இல்லை................இது உல‌க‌ கோப்பை இப்ப‌ விழிக்கா விட்டால் அவுஸ்ரேலியா கோப்பைய‌ தூக்கி கொண்டு போய் விடுவின‌ம்..................இந்தியா ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் க‌ட‌ந்த‌ மூன்று விளையாட்டில் விட்ட‌ பிழைக‌ளை ச‌ரி செய்து அடுத்த‌ விளையாட்டில் சாதிப்பான‌ என‌ ந‌ன்புகிறேன்🙏👍...................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
தோனி இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம் தென் ஆபிரிக்கா சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் த‌கிர் அவ‌ருக்கு 45க‌ட‌ந்து விட்ட‌து இப்ப‌வும் க‌ர்விய‌ன் தீவில் ந‌ட‌க்கும் சிபிஎல்ல‌ விளையாடுகிறார்....................... தோனி இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம் தென் ஆபிரிக்கா சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் த‌கிர் அவ‌ருக்கு 45க‌ட‌ந்து விட்ட‌து இப்ப‌வும் க‌ர்விய‌ன் தீவில் ந‌ட‌க்கும் சிபிஎல்ல‌ விளையாடுகிறார்............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
இன்றும் அதே போல்தான். யார் அடிப்பார். யார் உருட்டுவார் என்றே தெரியாமல் போய்க்கொண்டிருக்கு. ஆனால் என்ன கடைசியில் ஒருவர் போட்டு பிளந்துவிடுகிறார். இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம்.