Aggregator

மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

1 month 1 week ago

மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

13 August 2025

1755052597_5061117_hirunews.jpg

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். 

காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். 

அதற்கமைய, இந்த விவகாரத்திற்கு இன்று காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். 

அதேநேரம், காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

https://hirunews.lk/tm/414322/mannar-wind-farm-issue-special-discussion-with-the-president-today

டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!

1 month 1 week ago
டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி! போர் நிறுத்தத்திற்கு ஈடாக டான்பாஸ் (Donbas) பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ரஷ்ய திட்டத்தையும் உக்ரேன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார். மேலும், இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு ஊக்கமாக பயன்படுத்தப்படலாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் இடையேயான திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது விளாடிமிர் புட்டின் என்ன கோரிக்கைகளை வைக்க முடியும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதிகளைக் கொண்ட டான்பாஸ், 2014 முதல் ரஷ்யாவால் ஓரளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ இப்போது கிட்டத்தட்ட லுஹான்ஸ்க் முழுவதையும், டொனெட்ஸ்கின் சுமார் 70% பகுதியையும் கொண்டுள்ளது. ஆனால் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, டான்பாஸை விட்டு வெளியேறும் எந்தவொரு திட்டத்தையும் உக்ரேன் நிராகரிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், ரஷ்ய படைகள் தங்கள் கோடைகால தாக்குதலைத் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன. கிழக்கு நகரமான டோப்ரோபிலியா அருகே திடீரென முன்னேறி, குறுகிய நேரத்தில் 10 கி.மீ (ஆறு மைல்கள்) தூரம் அவை முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442823

டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!

1 month 1 week ago

New-Project-115.jpg?resize=750%2C375&ssl

டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!

போர் நிறுத்தத்திற்கு ஈடாக டான்பாஸ் (Donbas) பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ரஷ்ய திட்டத்தையும் உக்ரேன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.

மேலும், இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு ஊக்கமாக பயன்படுத்தப்படலாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் இடையேயான திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது விளாடிமிர் புட்டின் என்ன கோரிக்கைகளை வைக்க முடியும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதிகளைக் கொண்ட டான்பாஸ், 2014 முதல் ரஷ்யாவால் ஓரளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மொஸ்கோ இப்போது கிட்டத்தட்ட லுஹான்ஸ்க் முழுவதையும், டொனெட்ஸ்கின் சுமார் 70% பகுதியையும் கொண்டுள்ளது.

ஆனால் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, டான்பாஸை விட்டு வெளியேறும் எந்தவொரு திட்டத்தையும் உக்ரேன் நிராகரிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், ரஷ்ய படைகள் தங்கள் கோடைகால தாக்குதலைத் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன.

கிழக்கு நகரமான டோப்ரோபிலியா அருகே திடீரென முன்னேறி, குறுகிய நேரத்தில் 10 கி.மீ (ஆறு மைல்கள்) தூரம் அவை முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1442823

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 1 week ago
சுமந்திரன்... மைத்திரியின் கூட்டரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கும் போது மட்டும்... இராணுவத்துடன் தோழில் கை போட்டுக் கொண்டு, "லாவணி" பாடி திரிவாராம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்று, செருப்படி வாங்கி... வீட்டில் குந்தி இருக்கும் போது மட்டும், இராணுவம் கசக்குதாம். இந்தப் புத்தி முன்பு ஏன் வரவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 1 week ago
ஹர்த்தால் ஒத்திவைப்பு: 18ஆம் திகதியே நடக்கும்! ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால், ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுமந்திரன் அறிவித்துள்ளார். தமிழர்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் நிலைகொண்டுள்ள அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்றும், முத்துஐயன் கட்டுப் பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலில் உயிரிழந்ததாக் கூறப்படும் இளைஞரின் இறப்புக்கு நீதிகோரியும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஹர்த்தாலை நடத்துவதற்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்று மன்னார் மடுத்திருத்தலப் பெருவிழா நடைபெறவுள்ளது. இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் திருவிழா நாளில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு பல தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குறிப்பாக, ஹர்த்தாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மன்னார் மறைமாவட்டம் வெளிப்படையாக அறிவித்தது. அத்துடன், நல்லூர் உற்சவத்தைக் காரணமாகக் குறிப்பிட்டும், ஹர்த்தாலை பிறிதொரு தினத்துக்கு மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே, ஹர்த்தால் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/ஹர்த்தால்_ஒத்திவைப்பு:_18ஆம்_திகதியே_நடக்கும்!#google_vignette

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

1 month 1 week ago
புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய adminAugust 12, 2025 புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளாா். காவல்துறை மா அதிபா் பிரியந்த வீரசூரியவை நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நவம்பர் 2023 ம் ஆண்டு முதல் பதில் பொறுப்பில் பணியாற்றி வருகின்ற வீரசூரிய இலங்கையின் 37வது காவல்துறை மா அதிபா் என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/219167/

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

1 month 1 week ago

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

adminAugust 12, 2025

veera-sooroya.jpg

புதிய  காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளாா்.  காவல்துறை மா  அதிபா் பிரியந்த வீரசூரியவை  நியமிக்குமாறு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு  அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த நவம்பர் 2023 ம் ஆண்டு முதல் பதில் பொறுப்பில்   பணியாற்றி வருகின்ற வீரசூரிய இலங்கையின் 37வது காவல்துறை மா அதிபா் என்பது குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2025/219167/

மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்!

1 month 1 week ago
மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் இயங்கும் - அமைச்சர் நம்பிக்கை adminAugust 12, 2025 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் ஆர்.எச் .உபாலி சமரசிங்க , நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் உபுல் டி சில்வா, பிரதம ஆலோசகர் சாந்தா ஜெய ரட்ண ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள். இக்கலந்தரையாடலில் முன்னதாக வரவேற்பு உரையாற்றிய மாவட்ட செயலர், மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையமானது ரூபா 198.80 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்பட்டும் தற்போது இயங்காத நிலையில் உள்ளது. யாழ்ப்பாண பொருளாதார வளர்ச்சியில் இந் நிலையம் ஓர் மைல்கல்லாக அமைய வேண்டும். இதனை மீள ஆரம்பிப்பதன் ஊடாக விவசாயம் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். அதற்கு அமைச்சர் முன் வந்து நடவடிக்கை எடுப்பது வரவேற்க்கத்தக்கது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிப்பது மற்றும் அதனை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடவே யாழ்ப்பாணம் வந்துள்ளேன் . இலங்கையை பொறுத்தவரை 18 பொருளாதார மத்திய நிலையங்கள் காணப்படுகிறது. அதில் 14 இயங்கி வருகிறது. வடக்கில் அண்ணளவாக ரூபா. 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயங்கவில்லை. இந் நிலையம் மக்களுக்கு பொருத்தமான பாதையாக காணப்படவில்லை. பிரதேச செயலகத்தின் கீழ் செயற்பாடுகள் நடைபெறுகிறது. அமைச்சின் கீழ் எந்தவொரு செயற்பாடும் காணப்படவில்லை. இந் நிலையத்ததை மீள அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இக் கலந்துரையாடலில் பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.இக் கலந்துரையாடலுக்கு முன்னராக அமைச்சர் தலைமையிலான குழுவினர் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219192/

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 1 week ago
சுமந்திரன் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டு, தனது மூக்கை அறுத்துக் கொள்வதுதான் வழமை. அதில்... செல்வநாயகம் காலத்து அரதப் பழசான கடையடைப்பை தூசிதட்டி எடுத்து, இப்போ செய்ய முற்படுகின்றார். அதற்கு மக்களின் ஆதரவு இல்லை என்று இப்போதே தெரிந்து விட்டது. சுத்துமாத்து சுமந்திரன் புதிதாக சிந்தித்து, கீழ் வரும் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும். 1) தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தல். 2) சாகும் வரை உண்ணா விரதம். 3) பெற்றோல் ஊத்தி தீக்குளித்தல். போன்றவற்றை செய்தால்... மக்களின் அமோக ஆதரவு அவருக்கு நிச்சயம் உண்டு. 😂 🤣

கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை"

1 month 1 week ago
கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 02 "ஆ, கந்தையா தில்லை! நீங்கள் உங்கள் குட்டிப் பேரன் இசையுடன் வந்திருக்கிறீர்கள்," என்று சிவன் கூறினார். "வா, வா - காலை உணவு தயாராக உள்ளது", என அன்பாக வரவேற்றார். பின் சிவா, 'இசை'யை பார்த்து என்னை ஒருவன் பதினாறு அகவையில், 'பித்தா பிறைசூடி பெருமானே' என்று பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே என்று திட்டினான், நியோ அவனின் வர்க்கமூல அகவையில் தாளம் காட்டும் நடையுடன் புகழ்ந்து வருகிறாய்' என்று மெச்சினார். நாம் இருவரும் ஒரு தெய்வீக கொற்றக் குடையின் கீழ் அமர்ந்தோம். தட்டுகள் தங்க நிறத்தில் இருந்தன, உணவு வானளாவியதாக இருந்தது - மேகங்களைப் போல மென்மையான இட்லிகள், நெய் சொட்டும் பொங்கல், பூமியில் உள்ளதை விட இனிமையான தெய்வீக மாம்பழங்கள் அங்கு எமக்கு இருந்தன. தியானத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்த புத்தர் எமக்கு மல்லிகை தேநீர் வழங்கினார். பார்வதி இசைக்கு ஒரு பிரகாசமான இனிப்பு லட்டுவை வழங்கினார். அது 'இசை'யை மகிழ்ச்சியுடன் சிரிக்க வைத்தது. காலை உணவுக்குப் பிறகு, நான் , "சுவாமி, நாங்கள் சில முக்கிய கேள்விகளுடன் வந்துள்ளோம். எங்கள் அன்பான நிலமான இலங்கையில் என்ன நடக்கிறது?" என்று ஆரம்பித்தேன். சிவன் பெருமூச்சு விட்டார், அவரது மூன்றாவது கண் மெதுவாக மினுமினுத்தது. "கந்தையா தில்லை, மண் நினைவால் அழுகிறது. போரின் வலி, அதிகார பேராசை, உண்மையின் மௌனம் - அது இன்னும் எதிரொலிக்கிறது." சுருக்கமாக கூறினார்! ஆனால் எனக்கு, அந்த விளக்கம் சற்றும் திருப்தி அளிக்கவில்லை, என் வாய் 'வாடா வாடா, சுடலை மாடா, அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்காம எங்கிட்டும் நிற்காம, என் கவலை தீர்க்க உடனே நீ ஓடி வாடா' என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. சிவனுக்கு அது கேட்டிருக்க வேண்டும். சிவன் தொடர்ந்தார் 'செம்மணியில் செய்யப்பட்டது வெறும் கொலை அல்ல - அது வாழ்க்கையை, தர்மத்தையே அவமதிப்பதாகும். பெண்கள், குழந்தைகள், மண்ணின் மைந்தர்கள் பாதுகாப்பதாக சத்தியம் செய்தவர்களால் சாம்பலாக மாற்றப்பட்டனர். ஆனாலும் நிலம் நினைவில் கொள்கிறது - சாட்சியமளிக்க மண் இன்று செம்மணியில் எழுகிறது.' என்றார்! 'யாழ்ப்பாண நூலகத்தைப் பற்றியும் நான் கூறவேண்டும். சரஸ்வதி வீணையுடன் முன்னுக்கு இருந்தாள், ஆனால் கண்மூடி இருந்துவிட்டாளே?' ஒரு பெருமூச்சு விட்டார். 'அறிவுக் கோயில் எரிமலையாக மாறியது - காலத்தால் அல்ல, வெறுப்பால். அந்த நெருப்பு புத்தகங்களை மட்டுமல்ல, ஒரு மக்களின் ஆன்மாவையும் எரித்தது. புத்தகங்களை எரிப்பவர்கள் நாகரிகங்களை எரிக்கிறார்கள்.' என்று கோபத்துடன் கூறினார். வானரத்தின் வழிவந்த வன்முறையாளர் வளந்தரு நூலகத்தை தீமூட்டி எரித்தார்! கானகத்தின் அமைதியில் தியானித்தவன் கருத்தபுகையில் சத்தியம் இழந்தான்! போதிமரமும் கொதித்து எழ, புத்தனும் போதனையைக் கைவிட்டு சிலையானான்! என்னை ஏறிட்டு பார்த்தார். பின் இசையை கட்டித் தழுவியபடி, 'தமிழ் கண்ணீரில் நனைந்த நிலத்தில் என் சகோதரன் புத்தரின் சிலையை வலுக்கட்டாயமாக எழுப்புவது வழிபாடு அல்ல - அது அவமானம். சிவன் என்ற நான், மதம் என்ற போர்வையில் வெற்றியை ஆசீர்வதிப்பதில்லை. கீழே புதைக்கப்பட்ட எலும்புகளிலிருந்து நீதி முளைக்கும் வரை, இரத்தம் தோய்ந்த மண்ணில் தர்மம் மலர முடியாது. அதுவரை, இந்த நிலம் தூங்காது.' என்று அமைதியாக கூறினார். பின் 'லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை உண்மை கூற விரைவில் அனுப்புவார் என் நண்பர் புத்தர்' என்றார். பார்வதி கருணையுடன் கூறினார், "ஆனால் நம்பிக்கை சிறிய இதயங்களில் வாழ்கிறது. இசை போன்ற குழந்தைகள் இரக்கத்தின் ஜோதியை சுமப்பார்கள்." என்றார். பக்கத்தில் இந்திரன் [Sakka, king of gods], விஸ்ணு [Upulvan / උපුල්වන් ‍දෙවියෝ] சூழ நின்ற புத்தர் புன்னகைத்தார், "துன்பம் இருக்கிறது, ஆனால் அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பாதையும் இருக்கிறது. இப்போதும் கூட, சாம்பலுக்கு மத்தியில், கருணையின் விதைகள் வளர்ந்து வருகின்றன." புத்தர் தொடர்ந்தார், "நான் அஹிம்சையைக் கற்றுக் கொடுத்தேன் - வெறும் செயலில் அல்ல, சிந்தனையிலும். செம்மணியில், இறந்தவர்களின் மௌனம், பேச்சை விட சத்தமாக அழுகிறது. அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்படும்போது, தேசம் பூமியை மட்டுமல்ல, அதன் சொந்த மனசாட்சியையும் தோண்டி எடுக்கிறது." என்று ஒரு பெருமூச்சு விட்டார். "என்னை சிலையாகி எங்கும் திணிக்கிறார்களே தவிர, வேறு ஒன்றையும் நான் காணவில்லை?" ஏக்கத்துடன் என்னைப் பார்த்தார். 'இசை'யை வாரி எடுத்து கொஞ்சினார். 'யாழ்ப்பாண நூலகத்தின் அழிவு வெறும் புத்தகங்களின் இழப்பு அல்ல - அது ஞானம், கலாச்சாரம், நினைவாற்றல் ஆகியவற்றின் மீதான தாக்குதல். தீயை மூட்டியது மாறன் ( Mara / இவன் ஒரு அசுரன், தனது அழகிய பெண்களை அனுப்பி முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மனிதர்களின் கடுமையான தவத்தை கலைக்கும் ஆற்றல் படைத்தவன் ஆவான். ) அல்ல, மாறாக வெறுப்பால் மேகமூட்டப்பட்ட கொடிய மனிதர்கள்!'. 'அன்பு அல்லது சம்மதம் இல்லாமல் தமிழ் நிலங்களில் எனது உருவத்தை வலுக்கட்டாயமாக வைப்பது தம்மம் அல்ல - அது ஒரு துறவியின் உடையில் அரசியல் நாடகம். அடக்குமுறையின் மூலம் பிறந்த ஒரு கோயில், அமைதிக்கான இடம் அல்ல, மாறாக பாசாங்குத்தனத்தின் நினைவுச்சின்னம். நான் உண்மையிலேயே அந்த சிலைகளில் இருந்தால், நான் கட்டாயம் அழுவேன்.' என்றார் "ஒன்றை நினைவில் வையுங்கள் 'என்னைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு: ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். எலும்புகள் மற்றும் முள்வேலி மீது நான் எப்போதாவது அமைதியைக் கட்டினேனா??" புத்தர் துக்கம் தாளாமல் அழுதார். செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பாகம் 03 தொடரும் https://www.facebook.com/share/p/16puxtSJ2X/?mibextid=wwXIfr

புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்

1 month 1 week ago
உங்கள் & நண்பர்களின் தன்னலமற்ற சேவைகள் தொடர வாழ்த்துகள் தம்பியை சந்தித்தேன் உங்களை சந்திக்க முடியவில்லை, அடுத்த முறை சந்திப்போம்

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

1 month 1 week ago
முன்னாள் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் மின்ஸ்க் உடன்படிக்கை ஒரு உக்கிரேனை போரிற்கு தயார்படுத்துவதற்கான கால அவகாசத்தினை பெறும் உடன்பாட்டு நாடகம் என கூறியிருந்தார். தற்போது உக்கிரென் இராணுவத்திற்கு உடனடியாக ஒரு போர் நிறுத்தம் தேவை இல்லாவிட்டால், உக்கிரேன் இராணுவம் முற்று முழுதாக செயலிழக்கும் நிலை உருவாகிறது அதனை தடுத்து நிறுத்த உடனடி போர் நிறுத்தம் அவசியம். நிரந்தர போர் நிறுத்தமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளது என கருதுகிறேன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 1 week ago
#ஹர்த்தால்_திகதியில்_மாற்றம் இந்த வெள்ளிக்கிழமை (15.08.2025) நடத்த திட்டமிட்ட ஹர்த்தால் தவிர்க்கமுடியாத காரணங்களால் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு 18.08.2025) ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சுமந்திரன் ஐயா அறிவிப்பு… தகவல் #காலைமுரசு_மாலைப்பதிப்பு 👇👇👇கூலி திரைப்படத்தை முன்னிட்டு கர்த்தால் பின்போடப்பட்டுள்ளதாம்.ரஜனி நன்றி தெரிவிப்பாம். இந்திய சுதந்திர தினம் வேறையாம்.

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

1 month 1 week ago
உக்கிரேன் போரில் உளவு தகவலினடிப்படையில், பிரதான திட்டமிடல்கள் நேட்டோ அதிகாரிகளினாலேயே நடாத்தப்படுவதாக கூறப்படுகிறது, இதில் ஐரோப்பிய யூனியனும் பங்குதாரர்கள். அடிப்படையில் நேட்டோவின் திட்டத்தில் மாற்றமில்லை எனவே கருதுகிறேன். 2013 இல் மேடான் கலவரத்திற்கு முன்னதாக அமெரிக்க செனட்டரின் ஜோன் மக்கேயினினது உக்கிரேன் விஜயத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி. 2016 இல் லின்ட்சே கிரகமும், ஜோன் மக்கேயினினது உக்கிரேன் விஜயத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி.