Aggregator

மண்சரிவு அனர்த்தங்கள்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் – 10 ஆசிரியர்கள் மரணம்!

1 month ago

மண்சரிவு அனர்த்தங்கள்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் – 10 ஆசிரியர்கள் மரணம்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தின் தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் அனர்த்த நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் மாத்தளை மாவட்டத்தில் 8,500 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்போது, அவர்கள் அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/மண்சரிவு-அனர்த்தங்கள்-க/

🏆 மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை!

1 month ago
🏆 மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை! adminDecember 8, 2025 மன்னார் UCMAS மாணவர்கள் ஜோர்ஜியாவில் பட்டொளி வீசிப் பறந்தனர்! ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து கலந்துகொண்ட 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்! இந்தச் சாதனைப் பட்டியலில், மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் பங்கேற்று, இலங்கைப் பெயரையும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் பெருமையையும் உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனர். 🥇 வெற்றி வாகை சூடிய நட்சத்திரங்கள் மன்னார் மாவட்டத்தின் சார்பில் வெற்றி கிண்ணங்களைப் பெற்ற மாணவர்களில், வின்சென்ட் செஷான் ஜெத்னியல் (மன். புனித சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலை) மற்றும் ராஜநாயகம் ரியானா (தோட்ட வெளி தமிழ்க் கலவன் பாடசாலை) ஆகியோர் 1st Runner Up வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றனர். வின்சென்ட் செகைனா தியோரா (மன்னார் டிலாஷால் ஆங்கிலப் பாடசாலை) 2nd Runner Up வெற்றிக் கிண்ணத்தையும், வின்சென்ட் செலமியா (மன்னார் டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) 3rd Runner Up வெற்றிக் கிண்ணத்தையும் பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். 🌟 உலகக் கோப்பைப் போட்டியில் தலைமை! அத்துடன், அங்கு நடைபெற்ற UCMAS World Cup போட்டிக்குரிய அணியின் தலைவராக மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய மாணவன் வின்சென்ட் செஷான் ஜெத்னியல் தலைமை தாங்கி, வெள்ளிப் பதக்கத்தை (Silver Medal) இலங்கைக்குப் பெற்றுத் தந்துள்ளார். இது இலங்கைக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் கிடைத்த மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரமாகும். இச்சாதனை மாணவர்களுக்கு மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி திரு. நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியை திருமதி. யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதலே அடித்தளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இவர்கள் நால்வரும் மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர் யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இப்போட்டியில் பங்கு பற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/223804/

🏆 மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை!

1 month ago

🏆 மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை!

adminDecember 8, 2025

WhatsApp-Image-2025-12-07-at-9.53.48-PM-

மன்னார் UCMAS மாணவர்கள் ஜோர்ஜியாவில் பட்டொளி வீசிப் பறந்தனர்!

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து கலந்துகொண்ட 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்!

இந்தச் சாதனைப் பட்டியலில், மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் பங்கேற்று, இலங்கைப் பெயரையும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் பெருமையையும் உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனர்.

🥇 வெற்றி வாகை சூடிய நட்சத்திரங்கள்

மன்னார் மாவட்டத்தின் சார்பில் வெற்றி கிண்ணங்களைப் பெற்ற மாணவர்களில், வின்சென்ட் செஷான் ஜெத்னியல் (மன். புனித சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலை) மற்றும் ராஜநாயகம் ரியானா (தோட்ட வெளி தமிழ்க் கலவன் பாடசாலை) ஆகியோர் 1st Runner Up வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றனர். வின்சென்ட் செகைனா தியோரா (மன்னார் டிலாஷால் ஆங்கிலப் பாடசாலை) 2nd Runner Up வெற்றிக் கிண்ணத்தையும், வின்சென்ட் செலமியா (மன்னார் டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) 3rd Runner Up வெற்றிக் கிண்ணத்தையும் பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.

🌟 உலகக் கோப்பைப் போட்டியில் தலைமை!

அத்துடன், அங்கு நடைபெற்ற UCMAS World Cup போட்டிக்குரிய அணியின் தலைவராக மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய மாணவன் வின்சென்ட் செஷான் ஜெத்னியல் தலைமை தாங்கி, வெள்ளிப் பதக்கத்தை (Silver Medal) இலங்கைக்குப் பெற்றுத் தந்துள்ளார். இது இலங்கைக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் கிடைத்த மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரமாகும்.

இச்சாதனை மாணவர்களுக்கு மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி திரு. நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியை திருமதி. யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதலே அடித்தளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இவர்கள் நால்வரும் மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர் யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இப்போட்டியில் பங்கு பற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/223804/

முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்

1 month ago
வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை – து.கௌரீஸ்வரன் adminDecember 7, 2025 வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை ==================================================================================== இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் கிழக்கிலிருந்து பிரகாசித்த ஒரு மூத்த அரசியல்வாதியான திரு செ.இராசதுரை அவர்கள் 07.12.2025 ஆந் தேதி தமிழகத்தின் சென்னையில் இயற்கையடைந்தார் என்ற செய்தி இலங்கையில் அரசியல் பிரக்ஞையுடன் வாழ்வோரின் கவனத்தைப் பெறுவதாக இருக்கிறது. நாம் பிறந்து வாழும் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் நமது மூத்த தலைமுறைகளின் ஆதரவையும், அன்பையும் பெற்ற ஓர் அரசியல் தலைவனுக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு இக்குறிப்பையும் பதிவாக்க விரும்புகிறோம். இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தையும், இலங்கையின் மிதவாதத் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றையும் கற்றறிவதில் ஆர்வங் கொண்ட மாணவர்கள் கவனஞ்செலுத்த வேண்டிய ஓர் அரசியல் ஆளுமையாக, முன்னாள் மட்டக்களப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை அவர்கள் காணப்படுகின்றார் எனலாம். இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியல் செல்நெறியில் தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு முன்னும், பின்னுமான அரசியல் நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கு திரு செ.இராசதுரை பற்றிய கற்கை மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. வடக்கு இலங்கையிலிருந்து வித்தியாசங்கள் மிகுந்த கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் பிரதிநிதித்துவ சனநாயக அரசியலுக்கேயுரிய தன்மைகளுடன் தமிழ்த் தேசியவாத அரசியலை வேரூன்றச் செய்வதில் மிகுந்த பங்களிப்பை நல்கிய முழுநேர அரசியல்வாதியாக சுமார் மூன்று தசாப்த காலமாகத் திரு செ.இராசதுரை அவர்கள் செயலாற்றியுள்ளார். இவருக்குப் பின்னர் மிதவாத அரசியலைச் செய்யவல்ல அடுத்த தலைமுறையைச் சேர்ந்த முழுநேர அரசியல்வாதிகளை இவருடைய அரசியல் நடவடிக்கைகள் மட்டக்களப்பில் உருவாக்கியிருந்ததைப் பற்றியும் அறிய முடிகின்றது. மட்டக்களப்புத் தேர்தல் தொகுதிக்குள் வாழ்ந்த பல்லின, பல்சமூகத் தன்மைகளையும், பல்பண்பாடுகளையும் நன்கு உள்ளார்ந்து ஆய்ந்தறிந்து அதற்குத் தகுந்த வகையில் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த ஒரு பிரபுத்துவ அரசியல் ஆளுமையாக அவர் இயங்கியுள்ளார். இதனால் மூன்று தசாப்த காலம் தொடர்ச்சியாக மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பிரதிநிதியாக இவர் நாடாளுமன்றம் சென்றிருக்கிறார். அப்போதைய தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பிராந்தியத் தலைவராக இவர் மேற்கிளம்பித் தெரிந்துள்ளார். இவ்வாறு, சரி பிழைகளுக்கு அப்பால் ‘தமிழ்த் தேசியம்’ எனும் குடையின் கீழ் மிதவாத அரசியல் அணுகுமுறைமையாலும், தனது தலைமைத்துவத்தாலும் மக்களை அணிதிரட்டிய திரு செ.இராசதுரை அவர்களுக்கு, இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் மாறாத நோயாக இருந்து வரும் தனிநபர்கள் சிலருடைய ஆதிக்கமும், ஏகப்பிரதிநிதித்துவக் கற்பனையும் திட்டமிட்டு வஞ்சனையைச் செய்திருக்கிருக்கின்றமை பற்றி அறியக் கிடைக்கிறது. செ.இராசதுரை எனும் அரசியல்வாதிக்குச் செய்யும் வஞ்சகம் வடக்குக் கிழக்கு ஒருங்கிணைந்த தமிழ்த்தேசியவாதத்திற்கு நீண்ட கால நோக்கில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்பதைத் தெரிந்திருந்தும் அதிகாரத்தைத் தம்பிடிக்குள் வைத்திருப்பதற்காகப் பேராசை கொண்ட சிலர் எந்தவித தூரநோக்குகளுமின்றி இந்த வஞ்சனையைச் செயயத் துணிந்திருக்கிறார்கள். செ.இராசதுரைக்குச் செய்யப்பட்ட வஞ்சகம் முன்னணியிலிருந்த சில தமிழ் மிதவாதத் தலைவர்களின் உண்மையான தமிழ்த் தேசிய அக்கறையினைக் கேள்விக்குரியதாக ஆக்கியதுடன், ‘தமிழ்த்தேசியம்’, ‘தமிழர் விடுதலை’ என்பவை நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் உபாயமாகவும், ஒரு கோசமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்ற கருதுகோளையும் வலுப்படுத்தி நிற்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் அதிகாரத்தைக் கைப்பற்றி அதைத் தக்க வைக்க முயற்சிக்கும் தரப்பினர் தமக்கு ஒத்துவராதவர்களை உள்ளிருந்து வெளியேற்றுவதற்காக உருவாக்கிய ‘துரோகியாக்கல்’ என்ற உத்தியின் துணையுடன் திரு செ.இராசதுரை அவர்களுக்கு எதிரான வஞ்சகம் திட்டமிடப்பட்டிருப்பதைப் பற்றி அறியவும் முடிகிறது. இது இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் ‘துரோகியாக்கல்’ எனும் உத்தி எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதைப் பற்றிக்; கற்றறிய உதவுவதாகவும் இருக்கிறது. 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு செ.இராசதுரை அவர்களைத் தோல்வியுறச் செய்வதற்கான வேலைத் திட்டங்கள் உள்ளிருந்தே நடைபெற்றமை பற்றி அறியக் கிடைக்கிறது. இதற்காக மட்டக்களப்பின் இரட்டை அங்கத்தவர் தன்மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் சவால்கள் மிகுந்த இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு வாக்காளர்கள் செ.இராசதுரை அவர்களைக் கைவிடவில்லை, அவரை வெற்றி பெறச் செய்தார்கள், ஆனாலும் செ.இராசதுரைக்கு எதிரான உள்ளகப் ‘பனிப்போர்’ நின்றுவிடவில்லை. தனது தரப்பினருடன் பனிப்போருக்குச் செல்லாமல் அவர்கள் எதிர்பார்த்த ‘துரோகியாக்கல்’ சூழ்ச்சிக்குள் அகப்பட்டுக் கொண்டார். இத்தோடு தமிழ்த் தேசிய அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவே அவரது வரலாறு தெரிகிறது. அவர் வெளியேறியதன் பின்னர் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக ஒரு ‘கட்சியையோ!’, ஒரு ‘அமைப்பையோ!’ உருவாக்கியதாக அறிய முடியவில்லை, இதனால் எதையும் பகுத்தறிந்து பார்க்கத்தகுந்த மட்டக்களப்பு மக்களின் மனதில் அவர் நிலையாக வாழும் தன்மையினைப் பெற்றுக் கொண்டார் எனலாம். திரு செ.இராசதுரையின் வெளியேற்றம், மிதவாதத் தமிழ்த் தேசிய அரசியலில் வெளித் தோற்றத்திற்கு நிறுவனத் தன்மை காணப்பட்டாலும் அதனுள் தனிநபர்கள் அல்லது குழுக்களின் ஆதிக்கமும், செல்வாக்குகளும், சர்வாதிகாரப் போக்குகளும் மேலோங்கிய நிலைமையின் எதார்த்தத்தை உணரச் செய்தது. இத்தோடு மிதவாதத் தமிழ்த் தேசியத் தலைமைகளிடையே பன்மைத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பின்வாங்கும் தன்மை, உள்ளார்ந்த சனநாயகத்தின் பலகீனம், கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட குறுகியகால, நீண்டகால வேலைத் திட்டங்களில் ஆர்வமின்மை ஆகியவற்றினையும் வெளிப்படுத்தி நின்றது எனலாம். தமிழ்த் தேசியவாத அரசியலில் எதிர்மறை நோக்குடன் ‘பிராந்தியவாதத்தை’ வளர்த்தெடுக்க முனைவோருக்கான வாய்ப்புகளை செ.இராசதுரைக்கு நிகழ்த்தப்பட்ட வஞ்சனையும் அதன் விளைவுகளும் நன்றாக வழங்கி வந்துள்ளன எனலாம். து.கௌரீஸ்வரன், 07.12.2025 https://globaltamilnews.net/2025/223801/

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

1 month ago
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்! பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்தை அழைத்து தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம் பருவ மனநல மருத்துவ நிபுணரான பேராசிரியர் மியுரு சந்திரதாச கூறுகையில், இதுபோன்ற பேரழிவுக்குப் பிறகு, அது நம் மனதை நேரடியாகப் பாதிக்கக்கூடும், இதன் விளைவாக, மக்களிடையே மன அழுத்தம் பொதுவானது என்றார். நீங்கள் அத்தகைய அழுத்தத்தில் இருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும், பின்னர் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை அடையாளம் காண வேண்டும். இந்த சூழ்நிலையால் யாராவது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்து தேவையான ஆலோசனைகளைப் பெற வேண்டும். இந்தப் பேரிடர் காரணமாக சிறுவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால், முடிந்தவரை அவர்களின் வாழ்க்கையை இயல்பாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக, அவர்கள் விளையாடுவதற்கான சூழலை உருவாக்குதல், நண்பர்களைச் சந்திக்க வாய்ப்புகளை வழங்குதல் போன்றவற்றைச் செய்யலாம். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், எரிச்சல், தூக்கமின்மை, பசியின்மை மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம். நமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் இயற்கை பேரழிவுகளையும், பல கடுமையான அனுபவங்களையும் எதிர்கொண்டுள்ளது. தைரியம் மற்றும் விடாமுயற்சியே இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப உதவியது என்றும் அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1455543

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

1 month ago

FLOOD-2.jpg?resize=750%2C375&ssl=1

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்தை அழைத்து தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம் பருவ மனநல மருத்துவ நிபுணரான பேராசிரியர் மியுரு சந்திரதாச கூறுகையில், இதுபோன்ற பேரழிவுக்குப் பிறகு, அது நம் மனதை நேரடியாகப் பாதிக்கக்கூடும், இதன் விளைவாக, மக்களிடையே மன அழுத்தம் பொதுவானது என்றார்.

நீங்கள் அத்தகைய அழுத்தத்தில் இருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும், பின்னர் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை அடையாளம் காண வேண்டும்.

இந்த சூழ்நிலையால் யாராவது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்து தேவையான ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

இந்தப் பேரிடர் காரணமாக சிறுவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால், முடிந்தவரை அவர்களின் வாழ்க்கையை இயல்பாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உதாரணமாக, அவர்கள் விளையாடுவதற்கான சூழலை உருவாக்குதல், நண்பர்களைச் சந்திக்க வாய்ப்புகளை வழங்குதல் போன்றவற்றைச் செய்யலாம்.

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், எரிச்சல், தூக்கமின்மை, பசியின்மை மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

நமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் இயற்கை பேரழிவுகளையும், பல கடுமையான அனுபவங்களையும் எதிர்கொண்டுள்ளது.

தைரியம் மற்றும் விடாமுயற்சியே இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப உதவியது என்றும் அவர் மேலும் கூறினார்.

https://athavannews.com/2025/1455543

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு- தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

1 month ago
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு- தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்! மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்த உறவினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு தலைமையகத்திற்கு அருகில் உள்ள வங்கியின் கிளையொன்றுக்கு முன்பாகயிருந்த துவிச்சக்கர வண்டியொன்றினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சின்னஉப்போடையினை சேர்ந்த 22வயது இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவரிடம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதுடன் இவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பிலான வாக்குமூலம் பெறுவதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் இதன்காரணமாகவே இளைஞன் நோய்தாக்கத்தி;றகுள்ளானதாகவும் தெரிவித்து உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தினார்கள். குறித்த இளைஞனின் மரண விசாரணை அறிக்கை கிடைக்கவில்லையெனவும் அது தொடர்பான அறிக்கைகிடைக்கப்பெற்றதும் விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் வீதியை மறித்து உறவினர்கள் போராட்டம் நடாத்தியதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தனது மகன் சைக்கிளை எடுத்துச்சென்றது தொடர்பில் தகவல் கிடைத்ததும் உறவினர்களினால் அதனை மீளகொண்டு ஒப்படைத்தபோதிலும் தனது மகனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கைதுசெய்துள்ளதாகவும் தனது மகனை பொலிஸார் தாக்கியுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். எனினும் குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் இருந்ததாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது குறித்த இளைஞனின் உறவினர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்தியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அங்குவந்த பொலிஸார் வீதியில் நின்றவர்களை வீதிக்கு அருகில் அழைத்துச்சென்று அவர்களுடன் நிலைமையினை தெளிவுபடுத்தினர். இதன்போது சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.லீலாரத்தன அங்குவந்து கலந்துரையாடி இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். தமது பிள்ளை வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம் வரும்போது நல்ல நிலையிலேயே இருந்ததாகவும் இது தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்தார். https://athavannews.com/2025/1455568

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு- தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

1 month ago

WhatsApp-Image-2025-12-07-at-18.18.53-1.

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு- தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்த உறவினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு தலைமையகத்திற்கு அருகில் உள்ள வங்கியின் கிளையொன்றுக்கு முன்பாகயிருந்த துவிச்சக்கர வண்டியொன்றினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சின்னஉப்போடையினை சேர்ந்த 22வயது இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவரிடம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதுடன் இவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான வாக்குமூலம் பெறுவதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் இதன்காரணமாகவே இளைஞன் நோய்தாக்கத்தி;றகுள்ளானதாகவும் தெரிவித்து உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தினார்கள்.

குறித்த இளைஞனின் மரண விசாரணை அறிக்கை கிடைக்கவில்லையெனவும் அது தொடர்பான அறிக்கைகிடைக்கப்பெற்றதும் விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் வீதியை மறித்து உறவினர்கள் போராட்டம் நடாத்தியதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தனது மகன் சைக்கிளை எடுத்துச்சென்றது தொடர்பில் தகவல் கிடைத்ததும் உறவினர்களினால் அதனை மீளகொண்டு ஒப்படைத்தபோதிலும் தனது மகனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கைதுசெய்துள்ளதாகவும் தனது மகனை பொலிஸார் தாக்கியுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும் குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் இருந்ததாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த இளைஞனின் உறவினர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்தியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அங்குவந்த பொலிஸார் வீதியில் நின்றவர்களை வீதிக்கு அருகில் அழைத்துச்சென்று அவர்களுடன் நிலைமையினை தெளிவுபடுத்தினர்.

இதன்போது சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.லீலாரத்தன அங்குவந்து கலந்துரையாடி இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

தமது பிள்ளை வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம் வரும்போது நல்ல நிலையிலேயே இருந்ததாகவும் இது தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1455568

அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு

1 month ago
ஏன் இப்ப அதிரடி அறிவிப்பு. முதலே செய்திருக்கலாமே. இலங்கைக்கு போனபொது, சிறிலங்கன் விமனத்திலை தமிழில் என்னமோ சொல்லுறா ஆனால் ஒன்றுமே விளங்க இல்லை. நல்ல காலம் ஒரு அதிரடி அறிவிப்பும் சொல்லவில்லை. இப்படி ஒரு மொழியை கொலை செய்யத்தான் வேணுமா? சிறிலங்கன் விமனத்திலை போனது என் குற்றமே. விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு செய்தா ஒரு பெண். அவ சிங்களத்திலசொன்னது எனக்கு விளங்கின அளவு தமிழிலை சொன்னது விளங்கவே இல்லை. ( எதோ ஒரு விமானம் வந்துவிட்டது எண்டுதான் சொன்னவா). உலகம் எங்கோ போக இலங்கை எங்கோ போகுது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

1 month ago
இங்கிலாந்தின் போராட்டத்துக்கு 5 விக்கெட் குவியலுடன் முடிவுகட்டினார் நேசர்; ஆஷஸ் தொடரில் 2 - 0 என ஆஸி. முன்னிலை Published By: Vishnu 07 Dec, 2025 | 08:36 PM (நெவில் அன்தனி) பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இங்கிலாந்தின் கடும் போராட்டத்துக்கு 5 விக்கெட் குவியலுடன் மைக்கல் நேசர் முடிவுகட்ட, 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்களிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா அந்த இரண்டு டெஸ்ட்களையும் மொத்தமாக ஆறு நாட்களுக்குள் நிறைவுசெய்து வெற்றியீட்டியது. முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததுடன் இந்த டெஸ்ட் போட்டி 4 நாட்களுக்குள் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்ததுடன் அவுஸ்திரேலியாவின் களத்தடுப்பு அற்புதமாக இருந்தது. அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 5 பிடிகளைத் தவறவிட்டிருந்தது. இதுவும் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் என்ற மிகவும் மோசமான நிலையில் இருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 37 ஓவர்கள் தாக்குப் பிடித்து 7ஆவது விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியைத் தாமதிக்க செய்தனர். ஆனால், அவர்கள் இருவரையும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மைக்கல் நேசர் ஆட்டம் இழக்கச் செய்ய இங்கிலாந்தின் தோல்வி நெருங்கியது. பென் ஸ்டோக்ஸ் 50 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மைக்கல் நெசர் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஸ்கோட் போலண்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். வெற்றிக்கு 65 ஓட்டங்கள் தேவைப்பட இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ட்ரவிஸ் ஹெட் 22 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 23 ஓட்டங்களுடனும், ஜேக் வெதரோல்ட் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் கஸ் அட்கின்சன் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 334 (ஜோ ரூட் 138, ஸக் குரோவ்லி 76, ஜொவ் ஆச்சர் 38, ஹெரி ப்றூக் 31, மிச்செல் ஸ்டாக் 75 - 6 விக்.) அவுஸ்திரேலியா 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 511 (மிச்செல் ஸ்டாக் 77, ஜேக் வெதரோல்ட் 72, மானுஸ் லபுஸ்ஷேன் 65, அலெக்ஸ் கேரி 63, ஸ்டீவ் ஸ்மித் 61, கெமரன் க்றீன் 45, ப்றைடன் கார்ஸ் 152 - 4 விக்., பென் ஸ்டோக்ஸ் 113 - 3 விக்.) இங்கிலாந்து 2வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 241 (பென் ஸ்டோக்ஸ் 50, ஸக் க்ரோவ்லி 44, வில் ஜெக்ஸ் 41, ஒல்லி போப் 26, மைக்கல் நேசர் 42 - 5 விக்., ஸ்கொட் போலண்ட் 47 - விக்., மிச்செல் ஸ்டாக் 64 - 2 விக்.) அவுஸ்திரேலியா - வெற்றி இலக்கு 65 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 69 - 2 விக். (ஸ்டீவன் ஸ்மித் 23 ஆ.இ., ட்ரவிஸ் ஹெட் 22, ஜேக் வெதரோல்ட் 17 ஆ.இ., கஸ் அட்கின்சன் 37 - 2 விக்.) ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக் https://www.virakesari.lk/article/232717

தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!

1 month ago
தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண பொருட்கள் Published By: Vishnu 07 Dec, 2025 | 10:16 PM டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஞாயிற்றுக்கிழமை தமிழகத்திலிருந்து நிவாரண பொருட்கள் கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்தன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் கப்பல் பணிக்குழுவினரை வரவேற்றதோடு, நிவாரணப்பொருட்களையும் பொறுப்பேற்றனர். தமிழக மாநில அரசினால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் சனிக்கிழமை (6) சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பலொன்றே இவ்வாறு நாட்டை வந்தடைந்தது. https://www.virakesari.lk/article/232721

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் - குருநாகலில் ஜனாதிபதி

1 month ago
சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் - குருநாகலில் ஜனாதிபதி Published By: Vishnu 07 Dec, 2025 | 09:04 PM மீள்குடியேற்றத்திற்காக மெத்தெகெட்டிய, கொகரெல்ல சங்கமு ராஜமஹா விஹாரை விகாராதிபதியினால் 20 ஏக்கர் காணி எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். உருவாக்கப்பட இருக்கும் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியின் கீழ் சட்டம் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக தனிப் பிரிவு நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அதன் கீழ் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகள் காண முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். குருநாகல் மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபை வீதிகளையும் அடுத்த 02 வாரங்களுக்குள் முழுமையாக மறுசீரமைத்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு திறக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்துமாறும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யக் கூடிய பாதைகள் குறித்த தகவல்களையும் தேவையான நிதியையும் அறிவிக்குமாறும், 2026 ஆம் ஆண்டுக்கு அந்த நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அனர்த்தம் காரணமாக, மாவட்டத்தில் A மற்றும் B தர 1,181 மாகாண வீதிகள் சேதமடைந்துள்ளன. அதே சமயம் 35 பாலங்கள், 162 மதகுகள் என்பன சேதமடைந்துள்ளன. அவற்றின் விரைவான மறுசீரமைப்பு குறித்து இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டது, அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் வீழ்ச்சியடைந்த மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக விசாரித்த ஜனாதிபதி, இறுதி நுகர்வோர் வரை அந்த சேவைகளை வழங்குவது சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம் தற்போதுள்ள தடைகளை நீக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். குருநாகல் மாவட்டத்தில் 12,729 ஹெக்டெயார் நெல் வயல்கள் அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் 7,215 ஹெக்டெயார் நெல் வயல்கள் மீண்டும் பயிரிடக்கூடிய மட்டத்தில் உள்ளதாகவும், 5,514 ஹெக்டெயார் பயிர்ச்செய்கை செய்ய முடியாதுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். நீர் விநியோகம் இல்லாததால் பயிற்செய்கை மேற்கொள்ள முடியாவிட்டால் தற்காலிக நீர் விநியோகத்தை வழங்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். பயிரிட முடியாத நெல் வயல்களின் அளவை முடிந்தளவு குறைத்து, அந்த வயல்களில் பயிற்செய்கை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரங்களை வழங்கும் திட்டம் குறித்தும் அவர் ஆராய்ந்தார். சோளம், காய்கறிகள் மற்றும் மேலதிக பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் முறை குறித்தும் அவர் கேட்டறிந்தார். கிணறுகளை சுத்திகரிக்கும் பிரதான பொறுப்பு பிரததேச சபைகளுக்கு வழங்கப்படுவதாகவும், முப்படைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பிரதேச சபைத் தலைவர்களிடம் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த துல்லியமான தரவுகளைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், தற்போதுள்ள சட்டங்கள் அதற்கு போதுமானதாக இல்லாவிட்டால், அந்தச் சட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், கால்நடை பண்ணைகள் முறையாகப் பதிவு செய்யப்படாததால் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிக்கல்கள் எழுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த தரவுகளை மீளாய்வு செய்து, இழப்பீட்டுத் தொகைகள் குறித்து விரைவில் கொள்கை ரீதியான முடிவெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், நன்னீர் மீன்பிடித் தொழிலை மீளமைப்பது, சுகாதார சேவை சார்ந்த தேவைகள் மற்றும் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. மக்களை மீள்குடியேற்றுவதற்கான காணிகளை அடையாளம் காண்பது மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது, மேலும் இழப்பீடு வழங்குவதிலும் மக்களை மீள்குடியேற்றுவதிலும் பிரதேச செயலாளர்கள் முழுமையாக தலையிட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார். இதேவேளை, வீடுகளை இழந்த மக்களுக்காக தமது விகாரைக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை வழங்க மெத்தெகெட்டிய சங்கமு ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், உதம்மிட வித்தியாலய ஆசிரியருமான வணக்கத்திற்குரிய அளுத்கம மங்கள தேரர், நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான ஆவணங்களும் இதன் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. வடமேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் தலையீட்டின் கீழ், வடமேல் மாகாண கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து வழங்கிய 100 இலட்சம் ரூபா நிதி நன்கொடை மற்றும் கொகரெல்ல அரிசி ஆலையின் உரிமையாளர் எஸ்.எம். வசந்த சமரக்கோன் வழங்கிய நன்கொடை ஆகியவையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் குருநாகல் மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/232720

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் - குருநாகலில் ஜனாதிபதி

1 month ago

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் - குருநாகலில் ஜனாதிபதி

Published By: Vishnu

07 Dec, 2025 | 09:04 PM

image

மீள்குடியேற்றத்திற்காக மெத்தெகெட்டிய, கொகரெல்ல சங்கமு ராஜமஹா விஹாரை விகாராதிபதியினால் 20 ஏக்கர் காணி எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

உருவாக்கப்பட இருக்கும் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியின் கீழ் சட்டம் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக தனிப் பிரிவு நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அதன் கீழ் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகள் காண முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

குருநாகல் மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபை வீதிகளையும் அடுத்த 02 வாரங்களுக்குள் முழுமையாக மறுசீரமைத்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு திறக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்துமாறும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யக் கூடிய பாதைகள் குறித்த தகவல்களையும் தேவையான நிதியையும் அறிவிக்குமாறும், 2026 ஆம் ஆண்டுக்கு அந்த நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அனர்த்தம் காரணமாக, மாவட்டத்தில் A மற்றும் B தர 1,181 மாகாண வீதிகள் சேதமடைந்துள்ளன. அதே சமயம் 35 பாலங்கள், 162 மதகுகள் என்பன சேதமடைந்துள்ளன. அவற்றின் விரைவான மறுசீரமைப்பு குறித்து இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டது,

அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் வீழ்ச்சியடைந்த மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக விசாரித்த ஜனாதிபதி, இறுதி நுகர்வோர் வரை அந்த சேவைகளை வழங்குவது சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம் தற்போதுள்ள தடைகளை நீக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

குருநாகல் மாவட்டத்தில் 12,729 ஹெக்டெயார் நெல் வயல்கள் அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் 7,215 ஹெக்டெயார் நெல் வயல்கள் மீண்டும் பயிரிடக்கூடிய மட்டத்தில் உள்ளதாகவும், 5,514 ஹெக்டெயார் பயிர்ச்செய்கை செய்ய முடியாதுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். நீர் விநியோகம் இல்லாததால் பயிற்செய்கை மேற்கொள்ள முடியாவிட்டால் தற்காலிக நீர் விநியோகத்தை வழங்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். பயிரிட முடியாத நெல் வயல்களின் அளவை முடிந்தளவு குறைத்து, அந்த வயல்களில் பயிற்செய்கை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரங்களை வழங்கும் திட்டம் குறித்தும் அவர் ஆராய்ந்தார்.

சோளம், காய்கறிகள் மற்றும் மேலதிக பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் முறை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

கிணறுகளை சுத்திகரிக்கும் பிரதான பொறுப்பு பிரததேச சபைகளுக்கு வழங்கப்படுவதாகவும், முப்படைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பிரதேச சபைத் தலைவர்களிடம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த துல்லியமான தரவுகளைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், தற்போதுள்ள சட்டங்கள் அதற்கு போதுமானதாக இல்லாவிட்டால், அந்தச் சட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், கால்நடை பண்ணைகள் முறையாகப் பதிவு செய்யப்படாததால் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிக்கல்கள் எழுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த தரவுகளை மீளாய்வு செய்து, இழப்பீட்டுத் தொகைகள் குறித்து விரைவில் கொள்கை ரீதியான முடிவெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், நன்னீர் மீன்பிடித் தொழிலை மீளமைப்பது, சுகாதார சேவை சார்ந்த தேவைகள் மற்றும் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

மக்களை மீள்குடியேற்றுவதற்கான காணிகளை அடையாளம் காண்பது மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது, மேலும் இழப்பீடு வழங்குவதிலும் மக்களை மீள்குடியேற்றுவதிலும் பிரதேச செயலாளர்கள் முழுமையாக தலையிட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இதேவேளை, வீடுகளை இழந்த மக்களுக்காக தமது விகாரைக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை வழங்க மெத்தெகெட்டிய சங்கமு ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், உதம்மிட வித்தியாலய ஆசிரியருமான வணக்கத்திற்குரிய அளுத்கம மங்கள தேரர்,  நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான ஆவணங்களும்  இதன் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

வடமேல்  மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் தலையீட்டின் கீழ், வடமேல் மாகாண கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து வழங்கிய 100 இலட்சம் ரூபா  நிதி நன்கொடை மற்றும் கொகரெல்ல அரிசி ஆலையின் உரிமையாளர்  எஸ்.எம். வசந்த சமரக்கோன் வழங்கிய நன்கொடை ஆகியவையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

பொதுமக்கள்  பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, விவசாயம் மற்றும் கால்நடை  வளங்கள்  பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி மற்றும்  எதிர்க்கட்சி  மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் குருநாகல் மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-12-07_at_20.34.39_49

WhatsApp_Image_2025-12-07_at_20.34.34_6e

WhatsApp_Image_2025-12-07_at_20.34.32_fc

WhatsApp_Image_2025-12-07_at_20.34.27_06

WhatsApp_Image_2025-12-07_at_20.34.22_f9

WhatsApp_Image_2025-12-07_at_20.35.03_b6

WhatsApp_Image_2025-12-07_at_20.35.00_e9

WhatsApp_Image_2025-12-07_at_20.34.51_9a

WhatsApp_Image_2025-12-07_at_20.34.49_12

WhatsApp_Image_2025-12-07_at_20.34.46_1e

WhatsApp_Image_2025-12-07_at_20.34.45_b2

WhatsApp_Image_2025-12-07_at_20.34.43_37

WhatsApp_Image_2025-12-07_at_20.34.40_b0

https://www.virakesari.lk/article/232720

மக்களே அவதானம் - புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : பேரா நாகமுத்து பிரதீபராஜா

1 month ago
புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : வானிலை தொடர்பான முக்கிய விடயங்களை எதிர்வுகூறுகிறார் நாகமுத்து பிரதீபராஜா Published By: Vishnu 07 Dec, 2025 | 08:41 PM தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வானிலை எதிர்வுகூறலொன்றை விடுத்து, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று காணப்படுகிறது. இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்கு தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது. எனவே அந்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை கிடைத்தால் அப்பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே மேற்குறிப்பிட்ட (09.12.2025 முதல் 13.12.2025) தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். அத்தோடு மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அன்புக்குரிய இலங்கை மக்கள் அனைவரும் எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை கனமழை மற்றும் அதனோடு இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். துறைசார் அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது. குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாண மக்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தை சற்று குறைவாகப் பேணுவது சிறந்தது. அத்தோடு எதிர்வரும் 15.12.2025 அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/232718

மக்களே அவதானம் - புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : பேரா நாகமுத்து பிரதீபராஜா

1 month ago

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : வானிலை தொடர்பான முக்கிய விடயங்களை எதிர்வுகூறுகிறார் நாகமுத்து பிரதீபராஜா

Published By: Vishnu 07 Dec, 2025 | 08:41 PM

image

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வானிலை எதிர்வுகூறலொன்றை விடுத்து, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.

இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது.

ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று காணப்படுகிறது.

இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்கு தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது.

எனவே அந்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை கிடைத்தால் அப்பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.

எனவே மேற்குறிப்பிட்ட (09.12.2025 முதல் 13.12.2025) தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

அத்தோடு மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அன்புக்குரிய இலங்கை மக்கள் அனைவரும் எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை கனமழை மற்றும் அதனோடு இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

துறைசார் அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது.

குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாண மக்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தை சற்று குறைவாகப் பேணுவது சிறந்தது.

அத்தோடு எதிர்வரும் 15.12.2025 அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/232718

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

1 month ago
அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும் Dec 8, 2025 - 08:16 AM அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் அது எமது மனதை நேரடியாகப் பாதிக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமாகக் காணக்கூடிய ஒன்று எனவும் ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். நீங்கள் அத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும் எனவும், பின்னர் அந்தப் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், யாரேனும் இந்த நிலைமை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பின், அருகிலுள்ள அரச வைத்தியசாலையின் மருத்துவரைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர் அறிவித்துள்ளார். பேராசிரியர் மியுர சந்திரதாச மேலும் தெரிவிக்கையில், இந்த அனர்த்தம் காரணமாக பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பின், அவர்களின் வாழ்க்கையை இயன்றவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றார். உதாரணமாக, அவர்களுக்கு விளையாடுவதற்கான சூழலை இயன்றவரை உருவாக்கிக் கொடுத்தல், நண்பர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களைச் செய்ய முடியும் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் கோபம் வருதல், தூக்கமின்மை, பசியின்மை, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும் எனவும் பேராசிரியர் மியுர சந்திரதாச தெரிவித்தார். மேலும், எமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல இயற்கை அனர்த்தங்களுக்கும் கசப்பான அனுபவங்களிற்கும் முகங்கொடுத்துள்ள போதிலும், மக்களின் ஒற்றுமை, தைரியம் மற்றும் விடாமுயற்சி காரணமாக இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்ப முடிந்ததாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுர சந்திரதாச இது குறித்து மேலும் கூறுகையில், "இம்முறை வெள்ள நிலைமை மற்றும் 'திட்வா' புயல் காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டது. இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் எமது மனதிற்கு முதலில் தோன்றுவது, எமக்கு பெரியதொரு துன்பம் நேர்ந்துவிட்டது என்ற ஆழ்ந்த கவலையாகும். அத்துடன் வெறுமை, நம்பமுடியாத அதிர்ச்சி மற்றும் எதையும் செய்ய விருப்பமில்லாத நிலையும் ஏற்படலாம். இந்த அனர்த்த நிலை காரணமாக நீங்கள் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகியிருப்பின், உங்களுக்காக உதவுவதற்கு இலங்கையில் உள்ள அனைவரும் தயாராக உள்ளனர். எனவே, உங்கள் முயற்சியையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையையும் கைவிட வேண்டாம். வீடு இழந்திருந்தாலும், குடும்பத்தில் ஒருவரை இழந்திருந்தாலும்.. உங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்," என்று தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmiwjvxuw02hko29n502cj504

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

1 month ago

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

Dec 8, 2025 - 08:16 AM

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். 

இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் அது எமது மனதை நேரடியாகப் பாதிக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமாகக் காணக்கூடிய ஒன்று எனவும் ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். 

நீங்கள் அத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும் எனவும், பின்னர் அந்தப் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், யாரேனும் இந்த நிலைமை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பின், அருகிலுள்ள அரச வைத்தியசாலையின் மருத்துவரைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர் அறிவித்துள்ளார். 

பேராசிரியர் மியுர சந்திரதாச மேலும் தெரிவிக்கையில், இந்த அனர்த்தம் காரணமாக பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பின், அவர்களின் வாழ்க்கையை இயன்றவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றார். 

உதாரணமாக, அவர்களுக்கு விளையாடுவதற்கான சூழலை இயன்றவரை உருவாக்கிக் கொடுத்தல், நண்பர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களைச் செய்ய முடியும் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார். 

அத்துடன், நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் கோபம் வருதல், தூக்கமின்மை, பசியின்மை, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும் எனவும் பேராசிரியர் மியுர சந்திரதாச தெரிவித்தார். 

மேலும், எமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல இயற்கை அனர்த்தங்களுக்கும் கசப்பான அனுபவங்களிற்கும் முகங்கொடுத்துள்ள போதிலும், மக்களின் ஒற்றுமை, தைரியம் மற்றும் விடாமுயற்சி காரணமாக இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்ப முடிந்ததாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். 

ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுர சந்திரதாச இது குறித்து மேலும் கூறுகையில், 

"இம்முறை வெள்ள நிலைமை மற்றும் 'திட்வா' புயல் காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டது. இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் எமது மனதிற்கு முதலில் தோன்றுவது, எமக்கு பெரியதொரு துன்பம் நேர்ந்துவிட்டது என்ற ஆழ்ந்த கவலையாகும். அத்துடன் வெறுமை, நம்பமுடியாத அதிர்ச்சி மற்றும் எதையும் செய்ய விருப்பமில்லாத நிலையும் ஏற்படலாம். இந்த அனர்த்த நிலை காரணமாக நீங்கள் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகியிருப்பின், உங்களுக்காக உதவுவதற்கு இலங்கையில் உள்ள அனைவரும் தயாராக உள்ளனர். எனவே, உங்கள் முயற்சியையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையையும் கைவிட வேண்டாம். வீடு இழந்திருந்தாலும், குடும்பத்தில் ஒருவரை இழந்திருந்தாலும்.. உங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்," என்று தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmiwjvxuw02hko29n502cj504

படுபட்சி நாவல்: விசாரணை

1 month ago
தோழர் சோபாசக்தி டிலுக்சனுக்கு குதிரை ஓடியுள்ளார் என்பதுதான் இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டு என நானும் விளங்குகின்றேன். இது பரவாயில்லை. சட் ஜீபிடி துணையில் ஆங்கிலத்தில் எழுதி அதை கூகிழ் தமிழில் பெயர்த்து எமது பாடசாலை குழுமத்து நிருவாகத்தினர் ஆங்கிலத்திலும், தமிழிலும் (தமிழ் ஆங்கிலம் விளங்காத ஆட்களுக்காம்) அறிக்கைகள் விட்டு கடுப்பேத்துகின்றனர் யுவர் ஆனர். இலங்கையில் முதன் முதலாக பிளேன் கட்டியதாக உரிமை கோரும் தமிழ் விமான கட்டுமானியின் பேட்டி இணைப்பை தாருங்கள் என்றால் தர மாட்டாங்களாம்.