Aggregator

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 1 week ago
புலம்பெயர் அகதியார் தான் செற்றிலாகிய வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மேற்குலகநாடுகளின் மின்சார உற்பத்தியில் காற்றாலை மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது என்பதோடு அதிகரித்தும் வருகின்றது என்பதை அறியாதவராக இருக்கின்றாரா அல்லது மன்னார் மக்களுக்கு அது எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறாரா ?

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை

1 month 1 week ago
கொள்ளையரின் வெள்ளைக் கருத்துக்கள்

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 1 week ago
மன்னார் சொர்க்கம் இல்லை - காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து இல்லை - எரிசக்தி அமைச்சர் 12 AUG, 2025 | 05:00 PM மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கும் இயற்கை சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் குமாரஜயக்கொடி தெரிவித்துள்ளமைக்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவது ஆதாரமற்ற விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் நான் அந்த பகுதிக்கு சென்றுள்ளேன் காற்றாலைமின்திட்டத்தினால் பறவைகளிற்கு பாதிப்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை,மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் அரசகாணி என தெரிவித்துள்ளார். மன்னாரை சில தரப்பினர் ஒரு சொக்கம் எனவும் அது காற்றாலை விசையாழிகளால் அழிக்கப்படலாம் என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் காணப்படும் பகுதி ஒரு தரிசு நிலம் மக்கள் பறவைகளை பற்றி பேசுகின்றனர், ஆனால் அந்த பாதையில் பறவைகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார். அமைச்சரின் கருத்து குறித்து பதிவிட்டுள்ள சூழல் ஆர்வலர் மெலனி குணதிலக மழைக்காலத்தில் புவிவெப்பமடைதல் உண்மையா என அமைச்சரிடம் கேட்காதீர்கள் என தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சரின் கருத்து குறித்து பதிவிட்டுள்ள ரெகான்ஜயவிக்கிரம 2025 இல் அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான பதில்களில் இதுவே தலைசிறந்தது என குறிப்பிடலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/222424

ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்

1 month 1 week ago
இலங்கை பொலிஸார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும் - பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 05:33 PM இலங்கை பொலிஸார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை, இலங்கை பொலிஸார் உடனடியாக கைவிடவேண்டும், தங்கள் துன்புறுத்தல்களை நிறுத்தவேண்டும், பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்படுதல் குறித்த அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதி செய்யவேண்டும் என சிபிஜேயின் பிராந்திய இயக்குநர் பெஹ் லிஹ் யி வேண்டுகோள் விடுத்துள்ளார். நியாயபூர்வமான செய்தியறிக்கையிடலிற்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பயன்படுத்துவது பொலிஸ் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாகும், அச்சு ஊடக சுதந்திரத்தை மீறுவதாகும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222431

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 1 week ago
காற்றாலை, கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக மன்னாரில் 10-வது நாளாக தொடர் போராட்டம் Published By: DIGITAL DESK 2 12 AUG, 2025 | 04:41 PM மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்தக் கோரி, மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தி வரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை (12) 10-வது நாளாகத் தொடர்கிறது. இப்போராட்டத்தில் மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். நேற்று (11) நள்ளிரவு, காற்றாலை திட்டங்களுக்கான பாரிய உபகரணங்களை, பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் தீவுக்குள் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, உபகரணங்களை ஏற்றி வந்த பார ஊர்தி உள்ளே நுழைய முடியாமல் தடைபட்டது. இதன்போது, போராட்டக்காரர்களை அச்சுறுத்தி, புகைப்படம் எடுத்து அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் முயற்சித்தபோதும், போராட்டக்காரர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, அந்த வாகனம் மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தடை உத்தரவு பெறுவதற்காக இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். இந்த வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222410

புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்

1 month 1 week ago
பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள் அமைப்பினரால் காரைநகரில் அத்தியாவசியப் பணி நிறைவேற்றப்பட்டது கடந்த 04/07/2025 வெள்ளிக்கிழமை அல்வின் வீதி, காரைநகரைச் சேர்ந்த திரு வே.நாகராசா (3பேர் விசேட தேவை உடையவர்கள்) ஐயாவின் வீட்டிற்கு குடிநீருக்காக புதிய தண்ணீர்தாங்கி பொருத்தி, பழுதடைந்திருந்த மலசலகூடத்தினை மீளப்புனரமைப்பு செய்துள்ளோம். இப்பணிகளுக்காக 44110 ரூபா செலவு செய்துள்ளோம். இந்த அத்தியாவசியப் பணியை செய்ய நிதி உதவி அளித்த பே்மிங்காம் (2016) உதவும் கரங்கள் அமைப்பினருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விசேடமாக இவ்அமைப்பின் செயற்பாட்டாளர்களான திரு கதிர் அண்ணா, திரு இராசகுமார் அண்ணா, திரு ஜெயசசி அண்ணா ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இப்பணிகளை பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக முயன்று செய்வித்த புலர் அறக்கட்டளையின் பொருளாளர் திரு கு.பாலகிருஸ்ணாவிற்கும் கணக்காய்வாளர் திரு சி.சிறீரங்கன் அவர்களிற்கும் J/46 கிராம சேவகராக உள்ள திருமதி ப.சிவப்பிரியா அவர்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி குயிலினி ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிகிறோம். உதவிகள் செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் கீழுள்ள எமது WhatsApp இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். +94 77 777 5448 +94 77 959 1047 ஒளிப்பதிவு திரு இ.சிறிதரன்.

செம்மணி மனித புதைகுழியின் கதை சிங்களத்தில் - கொழும்பில் வியாழக்கிழமை நூல் வெளியாகின்றது

1 month 1 week ago
Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 02:43 PM செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டறிந்த பின்னர் சிங்களத்தில் அது குறித்து எழுத தீர்மானித்ததாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதைகுழி குறித்த முதற்கட்ட விசாரணைகள்இஇலங்கையில் காணாமல்போதல்இசெம்மணி படுகொலையின் தற்போதைய கதைகோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஆகிய விடயங்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் வியாழக்கிழமை செம்மணி என்ற நூல் வெளியிடப்படும்யாழ்;ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டபிறகு இந்த நூல் வெளியாகின்றது.கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதைகுழி குறித்த முதற்கட்ட விசாரணைகள்இலங்கையில் காணாமல்போதல்இசெம்மணி படுகொலையின் தற்போதைய கதைகோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஆகியன இந்த நூலில் அடங்கியிருக்கும். செம்மணிக்கு சென்ற பிறகு நாங்கள் செம்மணி மற்றும் காணாமல்போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை பெறுவதற்காக தேசிய நூலகத்திற்கு சென்றோம். ஆனால் செம்மணி பற்றி பெருமளவிற்கு தகவல்கள் வெளியாகவில்லை. இதன் காரணமாக தரிந்துஉடுவரகெதர நாங்கள் நூலொன்றை வெளியிடுவோம் என தெரிவித்தார். நாங்கள் தொடர்ந்தும் செம்மணி குறித்து பத்திரிகைகளில்முகநூலில்எழுதி பதிவிட்டு வருகின்றோம் யூடியுப்பில் பதிவிட்டுள்ளோம். முதலில் செம்மணி குறித்து ஆவணப்படத்தை வெளியிடுவோமா வீடியோ வெளியிடுவோமா என சிந்தித்து பின்னர் இறுதியாக நூலை எழுத தீர்மானித்தோம். இதனடிப்படையில் செம்மணி குறித்து பல தரப்புகளிடமிருந்து தகவல்களை பெற்றோம்பல ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்களை ஆராய்ந்தோம்வடக்கின் காணாமலாக்கப்பட்டவர்கள் குடும்பத்தவர்களுடன் பேசினோம்குற்றம்சாட்டப்பட்ட இராணுவவீரர்களின் குடும்பத்தவர்களுடன் பேசினோம். இறுதியாக நாங்கள் நூலை எழுதினோம்எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இந்த நூல் வெளியாகவுள்ளது. https://www.virakesari.lk/article/222401

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு!

1 month 1 week ago
ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டை வீசியதும் வீரர்கள் கீழே கண்ட காட்சி என்ன? விமானக் குழுவின் அனுபவம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது எனோலா கே விமானம் அணுகுண்டு வீசியதை சித்தரிக்கும் படம் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 12 ஆகஸ்ட் 2025, 01:59 GMT அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள அலமோகோர்டோ குண்டுவீச்சு தளம் முதல் அணுகுண்டு சோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விஷயம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், அப்போதைய அமெரிக்க துணை அதிபர் ஹாரி ட்ரூமனுக்கு கூட இது குறித்து தெரியாது. அமெரிக்க அதிபராக பதவி வகித்த ரூஸ்வெல்ட் இறந்த 24 மணி நேரத்துக்குப் பிறகுதான், அமெரிக்கா மிகவும் அழிவுகரமான அணுகுண்டை உருவாக்கும் திட்டத்தில் செயல்பட்டு வரும் தகவல் ஹாரி ட்ரூமனுக்குத் தெரிவிக்கப்பட்டது. 1945 ஜூலை 15ஆம் நாளன்று, அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மற்றும் மன்ஹாட்டன் திட்ட இயக்குநர் லெஸ்லி க்ரோவ்ஸ் இருவரும், பதுங்கு குழியில் அணுகுண்டு சோதனை செய்வதற்கான அனுமதிக்காகக் காத்திருந்தனர். அன்று, அலமோகோர்டோ குண்டுவீச்சு தளம் உள்ள பகுதியில் கடுமையான புயல் வீசியது. இயன் மெக்கிரேகர் தனது 'தி ஹிரோஷிமா மென்' என்ற புத்தகத்தில், "1945 ஜூலை 16 அன்று, அதிகாலை 5:30 மணிக்கு, முதல் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டது. அந்த அதிகாலை வேளையில், நியூ மெக்ஸிகோவின் பாலைவனம் நண்பகல் போல பிரகாசித்தது." "லெஸ்லி க்ரோவ்ஸ் தனது சகாக்களான வன்னேவர் புஷ் மற்றும் ஜேம்ஸ் கோனன்ட் ஆகியோருடன் கைகுலுக்கினார். 'உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' என்று ஓப்பன்ஹெய்மரை வாழ்த்திய அவர், அமெரிக்கா நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அணுகுண்டு இறுதியாக நமக்கு கிடைத்துவிட்டது." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 1945 ஜூலை 16-ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டை பரிசோதித்து பார்த்தது அதேநேரத்தில், க்ரோவ்ஸ் தனது அறிக்கையை போர் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சனுக்கு சங்கேத மொழியில் அனுப்பினார். ஸ்டிம்சன் அதை அதிபர் ட்ரூமனுக்கு வாசித்துக் காட்டினார். 24 மணி நேரத்துக்குள், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை எந்த நேரத்திலும் அணுகுண்டு பயன்படுத்தப்படலாம் என்ற செய்தி இருவருக்கும் கிடைத்தது. ஆகஸ்ட் 6ஆம் தேதி அணுகுண்டை வீசலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 1945 ஜூலை 26-ஆம் நாளன்று ஜப்பானை எச்சரித்த ஹாரி ட்ரூமன், நிபந்தனையின்றி சரணடையவில்லை என்றால், கற்பனைகூட செய்ய முடியாத அழிவுக்கு ஜப்பான் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார். இந்த எச்சரிக்கைக்கு ஜப்பான் செவிசாய்க்கவில்லை என்பதால், அந்நாட்டின் மீது அணுகுண்டு வீச முடிவு செய்யப்பட்டது. அணுகுண்டு வீசும் பணிக்கு 'மிஷன் எண்-13' என்று பெயரிடப்பட்டது. ஆகஸ்ட் 6ஆம் தேதி குண்டுவீச்சுக்கான நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான தலைவர் பால் டிபெட்ஸ் உடன் கலந்தாலோசித்த பிறகு, ஜெனரல் கர்டிஸ் லீமே, ஹிரோஷிமா, கோகுரா மற்றும் நாகசாகி ஆகிய மூன்று நகரங்களின் மீது குண்டு வீசலாம் என்று திட்டத்தை இறுதி செய்தார். அதற்கு முன்னதாக டிபெட்ஸ் குழுவினர் அணுகுண்டை வீசுவதற்கான ஒத்திகையை ஜூலை 31-ஆம் தேதி மேற்கொண்டனர். பட மூலாதாரம், GETTY IMAGES ரிச்சர்ட் ரோட்ஸ் தனது 'The Making of the Atomic Bomb' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "டினியன் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 15 பி-29 போர் விமானங்களில் மூன்று, போலி அணுகுண்டுகளுடன் புறப்பட்டன. அவை இவோ ஜிமா தீவைச் சுற்றி வந்து, போலி அணுகுண்டை கடலில் வீசிவிட்டு விமானத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதைப் பயிற்சி செய்தன. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜப்பானை வலுவான புயல் தாக்காமல் இருந்திருந்தால், அன்றைய தினமே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டிருக்கும்." ஜப்பானில் அணுகுண்டை வீசுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவின் 32 பிரதிகள் தயார் செய்யப்பட்டன. பால் டிபெட்ஸ் பின்னொரு சமயம் 'கிளாஸ்கோ ஹெரால்டு' பத்திரிகையின் வில்லியம் லாவுடர் உடனான நேர்காணலின்போது அணுகுண்டு வீசிய அனுபவத்தைப் பற்றி இவ்வாறு கூறினார். "எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின் நகலை அலுவலகப் பெட்டகத்தில் வைத்து பூட்டி விட்டு, தொழில்நுட்பப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 'எனோலா கே' குண்டுவீச்சு விமானத்தை ஆய்வு செய்வதற்காக ஜெனரல் லெமேயுடன் சென்றேன். அந்த விமானம் தார்பாலினால் மூடப்பட்டு யாரும் பார்க்க முடியாதபடி வைக்கப்பட்டிருந்தது. தளத்தில் பணியில் இருந்த ஒரு சிப்பாய், உள்ளே செல்வதற்கு முன்பு சுருட்டு மற்றும் தீப்பெட்டியை ஒப்படைக்குமாறு அந்த இடத்தின் மூத்த அதிகாரியான ஜெனரல் லெமேயை அறிவுறுத்தியதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அணுகுண்டை சுமந்து சென்ற விமானம் எனோலா கே பட மூலாதாரம், SIMON & SCHUSTER படக்குறிப்பு, அணுகுண்டை வீசுவதற்கு முன்பு இறுதி விளக்கத்தை அளித்த பால் டிபெட்ஸ் விமானப் பணிக்குழு கூட்டத்தை கூட்டிய டிபெட்ஸ் டிபெட்ஸின் கண்ணெதிரே 'எனோலா கே' குண்டுவீச்சு விமானத்தின் வெடிகுண்டு வைக்கும் இடத்தில் தொழில்நுட்ப ஊழியர்கள் மிகவும் கவனமாக அணுகுண்டை வைத்தனர். அன்று மாலை, டிபெட்ஸ் அந்த பணியுடன் தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தப் பணியுடன் தொடர்புடைய தியோடர் வான் கிர்க், பின்னொரு சமயம் நியூ ஆர்லியன்ஸில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு அளித்த பேட்டியில், "அது ஒரு முக்கியமான கூட்டம், அந்தக் கூட்டத்தில் யார் எந்தப் பணியில் ஈடுபடுவது, எந்த கட்டத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது போன்ற பல விஷயங்களை முடிவு செய்ய வேண்டியிருந்தது" என்று கூறினார். "பயன்படுத்தப் போகும் ஆயுதம் சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக டிபெட்ஸ் சொன்னார். தற்போது அந்த ஆயுதத்தை எதிரிக்கு எதிராகப் பயன்படுத்துவோம் என்று சொன்ன அவர், எங்கள் அனைவரையும் சற்று நேரம் உறங்கச் சொன்னார். இரவு 10 மணிக்குப் பிறகு இறுதியான விளக்கக் கூட்டத்துக்கு அழைப்பதாக அவர் சொன்னார். ஆனால், அணுகுண்டை வீசப் போகிறவர்களால் எப்படி தூங்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை" என்று தியோடர் வான் கிர்க் தெரிவித்தார். பால் டிபெட்ஸ் உரை இதற்கிடையில், 'எனோலா கே' விமானத்துக்கான ரகசிய குறியீடு 'விக்டர்' என்பதற்குப் பதிலாக 'டிம்பிள்ஸ்' என்று இருக்கும் என்று டிபெட்ஸ் முடிவு செய்தார். இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் விமானத்தை ஐந்தாயிரம் அடி உயரத்தில் வைத்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், 'எனோலா கே' செல்லும் வழியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஏதேனும் காரணத்தால் அணுகுண்டை சுமந்து செல்லும் 'எனோலா கே' விமானம் கடலில் விழுந்தால், அதை உடனடியாக அங்கிருந்து மீட்பதற்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. 11 மணிக்கு குழு உறுப்பினர்கள் அனைவரும் இறுதி விளக்கத்துக்காக கூடியிருந்தனர். தனது 'Mission: Hiroshima' என்ற புத்தகத்தில் பால் டிபெட்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "நான் அவர்களிடம் உரையாற்றினேன், இவ்வளவு நாளாக இந்த இரவுக்காகத் தான் நாம் காத்துக்கொண்டிருந்தோம் என்று சொன்னேன்." "கடந்த மாதங்களில் நாம் பெற்ற அனைத்து பயிற்சிகளையும் இப்போது பயன்படுத்துவோம். நமது பணியில் வெற்றி பெற்றோமா அல்லது தோல்வியடைந்தோமா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். நீங்கள் இதுவரை பார்த்த மற்றும் செய்த பணிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பணியான அணுகுண்டை வீசும் பணியை மேற்கொள்கிறோம். இந்த அணுகுண்டு 20 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான டிஎன்டி ஆற்றல் கொண்டது." பட மூலாதாரம், BETTMANN ARCHIVE/GETTY IMAGES எனோலா கே-வுக்கு முன்னர் அனுப்பப்பட்ட 3 விமானங்கள் இதன் பிறகு, அனைவருக்கும் போலராய்டு லென்ஸ்கள் கொண்ட சிறப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அவை வெல்டர்கள் அணியும் கண்ணாடிகளைப் போலவே இருந்தன. "அணுகுண்டு வீசப்பட்டதும் எழும் வெளிச்சத்தால் கண் பார்வை பறிபோகாமல் இருக்க இந்தக் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும் என்று மன்ஹாட்டன் திட்டத்தின் பேராசிரியர் ராம்சே கூறினார். கூட்டம் முடிந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உணவகத்துக்குச் சென்ற அனைவரும் காலை உணவாக முட்டை, இறைச்சி, வெண்ணெய், ரொட்டியை உண்டனர், காபியும் பருகினார்கள். குழுவினர் அனைவரும் காலை உணவு உட்கொண்டபோது, குழுவின் தலைவர் பால் டிபெட்ஸ், யாருக்கும் தெரியாமல் தனது சட்டைப் பையில் பொட்டாசியம் சயனைடு மாத்திரைகளை பத்திரமாக வைத்தார்" என்று இயன் மெக்கிரெகர் எழுதினார். சிறிது நேரத்துக்குப் பிறகு, 'Straight Flush', 'Jabbit Third', 'Full House' ஆகிய மூன்று விமானங்கள் வானிலை பற்றிய தகவல்களைச் சேகரிக்க புறப்படும் ஓசை கேட்டது. ஜப்பான் மீது அணுகுண்டு வீசும் பணி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, முக்கிய இலக்கில் தற்போதைய வானிலை நிலைமைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக இவை இலக்கை நோக்கி பறந்தன. பட மூலாதாரம், CONSTABLE படக்குறிப்பு, இயன் மெக்கிரேகர் எழுதிய 'The Hiroshima Men' புத்தகம் அதிகாலை 2:45 மணிக்கு புறப்பட்ட 'எனோலா கே' 'எனோலா கே'வில் பயணித்தவர்கள், அதிகாலை 1:45 மணிக்கு காபி குடித்த பிறகு ஜீப்பில் ஏறி ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை நோக்கிச் சென்றனர். அந்த இடம் பகல் போல வெளிச்சமாக இருந்தது. விமானத்தளத்தில் இருந்த பிற பணியாளர்கள், எனோலா கே விமானத்தில் பயணிக்கும் குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மன்ஹாட்டன் திட்டத்தின் அனைத்து மூத்த உறுப்பினர்களும் அங்கு இருந்தனர். "விமானத்தில் சமநிலையை பராமரிக்க பின்புறத்தில் பெட்ரோல் பீப்பாய்கள் ஏற்றப்பட்டன. அதிகாலை 2:45 மணிக்கு விமானம் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர் பில் லாரன்ஸ் உட்பட சுமார் 100 பேர் பார்த்துக் கொண்டிருந்த அந்த இரவு வேளையில், டிபெட்ஸ்-இன் மேற்பார்வையில் குழுவினர் விமானத்தில் ஏறினார்கள்" என்று இயன் மெக்கிரெகர் தனது 'The Hiroshima Men' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "துணை விமானி ராபர்ட் லூயிஸ் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றதும், 'உன் கைகளை கட்டுப்பாட்டு அமைப்பில் இருந்து விலக்கி வை. நான் விமானத்தை ஓட்டுகிறேன்'" என்று டிபெட்ஸ் கூறிவிட்டார். "தனக்கு முன்னால் இருந்த எட்டாயிரத்து ஐநூறு அடி நீள ஓடுபாதையைப் பார்த்த டிபெட்ஸ், அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்வதற்காக தனது குழுவினரிடம் பேசினார்" என்று இயன் மெக்கிரேகர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்ட டிபெட்ஸ் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு, "'டிம்பிள்ஸ் 82 டு நார்த் டினியன் டவர். புறப்படத் தயாராகிவிட்டோம்" என்றார். அதற்கு ஒரு வினாடிக்குள் பதில் வந்தது, டிம்பிள்ஸ் 82, டிம்பிள்ஸ் 82. புறப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது." "ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டை வீசும் பணி தொடங்கிவிட்டது. எனோலா கே வானில் பறந்தபோது, கண்காணிப்பு உபகரணங்களை ஏந்திய மேலும் மூன்று B-29 விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதனைப் பின்தொடர்ந்தன. அதில் 'Necessary Evil' என்ற விமானத்தின் கேப்டன் ஜார்ஜ் மார்குவார்ட்டுக்கு அணுகுண்டு வீசுவது மற்றும் அதன் தாக்கங்களை புகைப்படம் எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது," என்று இயன் மெக்கிரேகர் 'The Hiroshima Men' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசிய குழுவினர் ஜப்பான் மீது முதல் அணுகுண்டு வீச்சு குறித்த இலக்கை அடைய ஆறு மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும். தாங்கள் நீண்ட நேர பயணம் செய்யவேண்டும் என்பதை 'எனோலா கே' விமானத்தில் பயணித்தவர்கள் அறிந்திருந்தனர். விமானம் இவோ ஜிமாவை அடைந்ததும், விமானத்தில் வைக்கப்பட்டிருந்த 'லிட்டில் பாய்' அணுகுண்டை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக விமானத்தில் இருந்த வில்லியம் பார்சன்ஸ் மற்றும் மோரிஸ் ஜெப்சன் தெரிவித்தனர். பச்சை நிற பிளக்கை அகற்றி சிவப்பு வண்ண பிளக்கைப் போடுவதை அவர்கள் பலமுறை பயிற்சி செய்திருந்தாலும், அதைச் செய்ய வேண்டிய உண்மையான நேரம் வந்த போது, அவர்களுக்கு வியர்த்துப் போனது. கன்சோலுக்கு வந்த பார்சன்ஸ், குண்டு செயல்படுத்தப்பட்டதாக டிபெட்ஸிடம் தெரிவித்தார். "இதைக் கேட்டதும், டிபெட்ஸ் 'எனோலா கே'வை 30 ஆயிரம் அடி உயரத்துக்கு எடுத்துச் சென்றார். அங்கிருந்து 100 மைல் தொலைவில் ஜப்பானின் கடற்கரையை பார்க்க முடிந்தது. ஹிரோஷிமா நகரத்தையும் 75 மைல் தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது" என்று பின்னர் ஒரு சமயம் வான் கிர்க் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறினார். "இதற்கிடையில், விமானக் குழுவினர் பேசுவதை நிறுத்திவிட்டு, அனைவரும் அமைதியாகிவிட்டனர். அங்கு நிலவிய கனத்த மௌனத்தைக் கலைத்த டிபெட்ஸ், அனைவரும் கண்ணாடி அணிய வேண்டும் என்று கூறினார். இதற்குப் பிறகு, விமானம் 360 டிகிரி திருப்பத்தை எடுத்தது, 6 நிமிடங்கள் 15 வினாடிகளில் விமானம் திருப்பப்பட்டது, நாங்கள் நேராக ஹிரோஷிமா நோக்கிச் சென்றோம்." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அணுகுண்டை சுமந்து சென்ற விமானம் குண்டுவெடிப்பும் ரேடியோ சிக்னலும் T-வடிவ அயோய் பாலத்தைப் பார்க்க முடிவதாக தாமஸ் ஃபேர்பி கூச்சலிட்ட போது, விமானம் இலக்கிலிருந்து 10 நிமிட தொலைவில் இருந்தது. அந்த நேரத்தில் திபெட்ஸ் விமானத்தை இயக்கும் பொறுப்பை ஃபேர்பியிடம் ஒப்படைத்தார். அணுகுண்டை வீசுவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்த நிலையில், 'Necessary Evil' என்ற விமானத்தில் அமர்ந்திருந்தவர்கள், அணுகுண்டு கீழே வீசப்படுவதை எதிர்பார்த்துத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். குழு உறுப்பினர் ரஸ்ஸல் கைகன்பாக் பின்னர் அளித்த ஒரு நேர்காணலில், "நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிக்னல் கிடைத்தது. அனைத்து ரேடியோ சிக்னல்களும் செயலிழக்கும் சமயத்தில் நாங்கள் அணுகுண்டை வீசவிருந்தோம். அதுதான் எங்கள் திட்டம்" என்று ரஸ்ஸல் கேக்கன்பாக் கூறினார். மேலும், "ரேடியோ சிக்னல் செயலிழந்தவுடன், அணுகுண்டு வைக்கப்பட்டிருந்த பகுதியின் கதவு திறக்கப்பட்டது, அணுகுண்டு கீழே செல்லத் தொடங்கியது. அந்த சமயத்தில் எங்கள் விமானத்தில் இருந்த விஞ்ஞானிகள் 'ஸ்டாப் வாட்ச்' கடிகார பொத்தானை அழுத்தினார்கள். சில விநாடிகளில் எங்கள் கேமராக்கள் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கின." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பால் டிபெட்ஸ், எனோலா கே விமானத்தின் தலைமை விமானி தரையிலிருந்து 1890 அடி உயரத்தில் வெடித்த அணுகுண்டு இந்த விஷயத்தை பின்னர் ஒரு நேர்காணலில் வைன் கர்க் நினைவு கூர்ந்தார், "அணுகுண்டு விழுந்தவுடன், 'எனோலா கே' விமானம் முன்னோக்கி சாய்ந்தது. உடனடியாக விமானத்தை தானியங்கி நிலைக்குக் கொண்டு சென்ற பால், வெகுதொலைவுக்கு விமானத்தை கொண்டு செல்ல விரும்பினார். எனவே, விமானத்தை 160 டிகிரி வலப் புறமாகத் திருப்பத் தொடங்கினார். 43 வினாடிகளில் குண்டு வெடித்துவிடும், அங்கிருந்து தப்பிக்க எங்களிடம் இருந்த கால அவகாசமும் அவ்வளவுதான்." பட மூலாதாரம், GETTY IMAGES பிரகாசமான வெளிச்சம் மற்றும் விமானத்தில் தடுமாற்றம் "எங்கள் விமானத்தில் இருந்த அனைவரிடமும் கடிகாரம் இல்லை. நேரத்தை கணக்கிட, நாங்கள் 1001, 1002, 1003 என எண்ணத் தொடங்கினோம். அப்போது திடீரென பிரகாசமான ஒளி தோன்றியது, சில நொடிகளில் விமானம் குலுங்குவதை அதற்குள் இருந்த நாங்கள் உணர்ந்தோம். உலோகத் தாள் ஒன்று கிழிந்து போவது போன்ற விசித்திரமான சத்தமும் கேட்டது" என அணுகுண்டு வெடித்த சந்தர்பத்தை வைன் கர்க் நினைவு கூர்ந்தார். "என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துக்கொள்வதற்காக, நாங்கள் கீழே பார்த்தோம். நான் முதலில் கவனித்தது பெரிய வெள்ளை மேகங்கள் நாங்கள் குறி வைத்திருந்த இலக்கை நோக்கி கூடின, அவை மேல்நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தன. அந்த மேகங்களின் கீழ் பகுதியில் அடர்த்தியான புகை போர்வை நகரம் முழுவதையும் சூழ்ந்திருந்தது. அதற்கு கீழே எங்களுக்கு வேறு எதுவுமே தெரியவில்லை." "எங்கள் விமானம் நகரத்தைச் சுற்றி வரவில்லை. ஹிரோஷிமாவின் தென்கிழக்கே பறந்து, நாங்கள் புறப்பட்ட இடத்துக்கு திரும்பிச் செல்லத் தொடங்கினோம்." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'லிட்டில் பாய்' அணுகுண்டு திரும்பிய விமானம் "82 V 670 Abil, Line, Line 2, Line 6, Line 9. Clear cut. We're heading for base" என்று முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறியீட்டு செய்தி அனுப்பப்பட்டது. அணுகுண்டு வீசப்பட்ட பிறகு, 'எனோலா கே' விமானம் மிகவும் பலமாக குலுங்கியது, விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவே விமானத்தில் இருந்தவர்களுக்கு தோன்றியது. ஆனால், அப்படி ஏதும் இல்லை என்று ஜார்ஜ் கரோன் உறுதியாகக் கூறினார். ஹிரோஷிமா நகரின் மேலே பறந்த அவர்களை தாக்க எந்த ஜப்பானிய விமானமும் வரவில்லை. "நாங்கள் நிதானமாகவே கடலை நோக்கி விமானத்தைத் திருப்பினோம். திரும்பி வரும் வழியில் ஜப்பானுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றே நாங்கள் பேசிக் கொண்டுவந்தோம். ஏனெனில், அணுகுண்டு போன்ற ஆயுதத்தை எதிர்கொள்ளும் திறன் யாரிடமும் இல்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்" என்று டிபெட்ஸ் தனது சுயசரிதையில் எழுதினார். அச்சம் தந்த காட்சி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட பிறகு வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் எனோலா கே விமானத்தைத் தொடர்ந்து பறந்துவந்த விமானத்தில் இருந்த ரஸ்ஸல் கேக்கன்பாக், "வழக்கமாக குண்டுகளை வீசிய பிறகு, நாங்கள் தளத்துக்குத் திரும்பும்போது, மகிழ்ச்சியாக இருப்போம், நகைச்சுவையாக பேசிக் கொண்டிருப்போம், நல்ல மனநிலையில் இருப்போம். ஆனால் அன்று, விமானம் முழுவதும் அமைதி நிலவியது. யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்று அன்றைய நினைவுகளை நினைவு கூர்ந்தார். "அணுகுண்டை வீசிவிட்டு எனோலா கே விமானத்தை திருப்பும் போது, வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு காட்சியைக் கண்டேன்" என்று டிபெட்ஸ் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். "ஊதா நிறத்தில் மாபெரும் காளான் போல் உருவாகி, அது 45,000 அடி உயரத்தை எட்டியது. அதுவொரு பயங்கரமான காட்சி. பல மைல்கள் தொலைவில் நாங்கள் இருந்தாலும், அந்த காளான் எங்களை விழுங்கிவிடும் என்றே நாங்கள் ஒரு கணம் நினைத்துவிட்டோம். அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியவில்லை, ஹிரோஷிமா மக்களும் மறக்கவில்லை." இந்த அணுகுண்டு தாக்குதலில் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிய 3 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9ஆம் நாளன்று, ஜப்பானின் மற்றொரு நகரமான நாகசாகி மீது இதேபோன்ற அணுகுண்டு வீசப்பட்டது. அங்கே சுமார் 80 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y009lnqyxo

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை

1 month 1 week ago
தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 02:20 PM தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது உரிமைகளையும் நமது அடையாளத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களிடமிருந்து ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம் நிலவுகிறது? என பிரித்தானிய தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் மக்களின் நிலமான மணலாற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று ரீதியாக தமிழ் பிராந்தியமான மணல் ஆறு கடந்த பல தசாப்தங்களாக ஒரு சோகமான மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் துடிப்பான தமிழ் கிராமமாக இருந்த இது வளர்ச்சி என்ற போர்வையில் வலுக்கட்டாயமாக மறுபெயரிடப்பட்டு சிங்களமக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரு ஓயா நீர்ப்பாசனத் திட்டம் மூலம் 1988 ஏப்ரல் 16 அன்று இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்பில் மணல் ஆறு என்ற பெயரை வேலி ஓயா என்ற சிங்களப் பெயராக அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டது. இது வெறும் மறுபெயரிடுதல் அல்ல - இது பிராந்தியத்தின் மக்கள்தொகை மற்றும் கலாச்சார அடையாளத்தை மாற்றுவதற்கான ஒரு பரந்த மற்றும் கணக்கிடப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாகும் கட்டாய இடப்பெயர்வு மற்றும் வன்முறை 1984 டிசம்பர் 1 முதல் 15 வரை முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் அமைந்துள்ள தமிழ் கிராமங்களில் ஒருங்கிணைந்த படுகொலைகள் நடத்தப்பட்டன. இந்தக் கொடூரமான தாக்குதல்கள் தமிழ் பொதுமக்களை குறிவைத்தன, அவர்களில் பலர் பல நூற்றாண்டுகள் பழமையான நிலத்துடன் மூதாதையர் உறவுகளைக் கொண்டிருந்தனர். உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர் மேலும் இப்பகுதியில் அரசால் ஆதரிக்கப்படும் சிங்களக் குடியேற்றம் தீவிரமாகத் தொடங்கியது. அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக் குடியேறிகள் கொண்டுவரப்பட்டனர். இலங்கை இராணுவத்தால் பெரிதும் பாதுகாக்கப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் பூர்வீக மக்கள் வறுமையில் வாடினர். அவர்களின் நிலங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அணுகுவதில் அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களின் பயன்பாடு அத்தகைய செயல்களுக்கும் தண்டனையிலிருந்து விலக்குக்கும் சட்டப்பூர்வ மறைப்பை வழங்கியது. மக்கள்தொகை மாற்றம் மற்றும் முறையான காலனித்துவம் 1980 களில் இருந்து குறிப்பாக 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் அரசு ஆதரவுடன் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. சிங்களக் குடியேற்றங்கள் எண்ணிக்கையிலும் உள்கட்டமைப்பிலும் வளர்ந்துள்ளன. அதே நேரத்தில் தமிழ் சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டவை வளங்கள் குறைவாக உள்ளன மேலும் பெரும்பாலும் இராணுவத்தால் அச்சுறுத்தப்படுகின்றன அல்லது கண்காணிக்கப்படுகின்றன. மக்கள்தொகை வரைபடங்கள் (கீழே இணைக்கப்பட்டுள்ளன) 2015 இல் பெரும்பான்மையான தமிழர் பகுதியான வெலி ஓயாவின் தற்போதைய நிலைக்கு ஆபத்தான மாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன - பல தசாப்தங்களாக திட்டமிடப்பட்ட இடம்பெயர்வு மற்றும் காலனித்துவத்தின் காட்சி பிரதிநிதித்துவம். தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது உரிமைகளையும் நமது அடையாளத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களிடமிருந்து ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம் நிலவுகிறது? நமது மொழி நமது நிலம் நமது எதிர்காலம் நிலம் என்பது வெறும் மண் அல்ல - அது கலாச்சாரம் அடையாளம் நினைவகம் மற்றும் எதிர்காலம். நமது நிலத்தின் அரிப்பு நமது மொழி மதம் மற்றும் வாழ்க்கை முறையின் உயிர்வாழ்வை நேரடியாக பாதிக்கிறது. கடந்த 77 ஆண்டுகளில் நாம் அதிகமாக இழந்துவிட்டோம். இப்போது எழுந்து செயல்பட வேண்டிய நேரம் இது. நமது நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் நமது தமிழ் தாயகத்தைப் பாதுகாக்கவும் பொக்கிஷமாகக் கருதவும் நீதியைக் கோரவும் நாம் ஒன்றிணைய வேண்டும் - நாளை அல்ல அடுத்த ஆண்டு அல்ல - இப்போதே. https://www.virakesari.lk/article/222399

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை

1 month 1 week ago

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை

Published By: RAJEEBAN

12 AUG, 2025 | 02:20 PM

image

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது உரிமைகளையும் நமது அடையாளத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களிடமிருந்து ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம் நிலவுகிறது? என பிரித்தானிய தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ் மக்களின் நிலமான மணலாற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று ரீதியாக தமிழ் பிராந்தியமான மணல் ஆறு கடந்த பல தசாப்தங்களாக ஒரு சோகமான மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் துடிப்பான தமிழ் கிராமமாக இருந்த இது வளர்ச்சி என்ற போர்வையில் வலுக்கட்டாயமாக மறுபெயரிடப்பட்டு சிங்களமக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரு ஓயா நீர்ப்பாசனத் திட்டம் மூலம் 1988 ஏப்ரல் 16 அன்று இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்பில் மணல் ஆறு என்ற பெயரை வேலி ஓயா என்ற சிங்களப் பெயராக அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டது. இது வெறும் மறுபெயரிடுதல் அல்ல - இது பிராந்தியத்தின் மக்கள்தொகை மற்றும் கலாச்சார அடையாளத்தை மாற்றுவதற்கான ஒரு பரந்த மற்றும் கணக்கிடப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாகும்

கட்டாய இடப்பெயர்வு மற்றும் வன்முறை

1984 டிசம்பர் 1 முதல் 15 வரை முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் அமைந்துள்ள தமிழ் கிராமங்களில் ஒருங்கிணைந்த படுகொலைகள் நடத்தப்பட்டன. இந்தக் கொடூரமான தாக்குதல்கள் தமிழ் பொதுமக்களை குறிவைத்தன, அவர்களில் பலர் பல நூற்றாண்டுகள் பழமையான நிலத்துடன் மூதாதையர் உறவுகளைக் கொண்டிருந்தனர். உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர் மேலும் இப்பகுதியில் அரசால் ஆதரிக்கப்படும் சிங்களக் குடியேற்றம் தீவிரமாகத் தொடங்கியது.

அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக் குடியேறிகள் கொண்டுவரப்பட்டனர். இலங்கை இராணுவத்தால் பெரிதும் பாதுகாக்கப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் பூர்வீக மக்கள் வறுமையில் வாடினர். அவர்களின் நிலங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அணுகுவதில் அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்  போன்ற கொடூரமான சட்டங்களின் பயன்பாடு அத்தகைய செயல்களுக்கும் தண்டனையிலிருந்து விலக்குக்கும் சட்டப்பூர்வ மறைப்பை வழங்கியது.

மக்கள்தொகை மாற்றம் மற்றும் முறையான காலனித்துவம்

1980 களில் இருந்து குறிப்பாக 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் அரசு ஆதரவுடன் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. சிங்களக் குடியேற்றங்கள் எண்ணிக்கையிலும் உள்கட்டமைப்பிலும் வளர்ந்துள்ளன. அதே நேரத்தில் தமிழ் சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டவை வளங்கள் குறைவாக உள்ளன மேலும் பெரும்பாலும் இராணுவத்தால் அச்சுறுத்தப்படுகின்றன அல்லது கண்காணிக்கப்படுகின்றன.

மக்கள்தொகை வரைபடங்கள் (கீழே இணைக்கப்பட்டுள்ளன) 2015 இல் பெரும்பான்மையான தமிழர் பகுதியான வெலி ஓயாவின் தற்போதைய நிலைக்கு ஆபத்தான மாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன - பல தசாப்தங்களாக திட்டமிடப்பட்ட இடம்பெயர்வு மற்றும் காலனித்துவத்தின் காட்சி பிரதிநிதித்துவம்.

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது உரிமைகளையும் நமது அடையாளத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களிடமிருந்து ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம் நிலவுகிறது?

நமது மொழி நமது நிலம் நமது எதிர்காலம்

நிலம் என்பது வெறும் மண் அல்ல - அது கலாச்சாரம் அடையாளம் நினைவகம் மற்றும் எதிர்காலம். நமது நிலத்தின் அரிப்பு நமது மொழி மதம் மற்றும் வாழ்க்கை முறையின் உயிர்வாழ்வை நேரடியாக பாதிக்கிறது.

கடந்த 77 ஆண்டுகளில் நாம் அதிகமாக இழந்துவிட்டோம். இப்போது எழுந்து செயல்பட வேண்டிய நேரம் இது. நமது நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் நமது தமிழ் தாயகத்தைப் பாதுகாக்கவும் பொக்கிஷமாகக் கருதவும் நீதியைக் கோரவும் நாம் ஒன்றிணைய வேண்டும் - நாளை அல்ல அடுத்த ஆண்டு அல்ல - இப்போதே.

https://www.virakesari.lk/article/222399

சர்வதேச யானைகள் தினம் இன்று

1 month 1 week ago
12 AUG, 2025 | 10:40 AM 'சர்வதேச யானைகள் தினம்' இன்று செவ்வாய்க்கிழமை (12) கொண்டாடப்படுகிறது. உலகளவில் யானைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக 2012 ஆம் ஆண்டு சர்வதேச யானைகள் தினம் அறிவிக்கப்பட்டது. ஆப்பிரிக்க மற்றும் ஆசிய காட்டு மற்றும் வளர்ப்பு யானைகளைப் பாதுகாப்பது, யானை வேட்டையாடுதல் மற்றும் கடத்தலைத் தடுப்பது, யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது மற்றும் வளர்ப்பு யானைகள் சுதந்திரமாக வாழ முடியும் என்பதை உறுதி செய்வது இதன் நோக்கமாகும். நாட்டில் யானை - மனித மோதலைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இணைப்பாளர், சுற்றாடல் நிபுணர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222372

இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி

1 month 1 week ago
இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி 14 ஆம் திகதி ஆரம்பம் Published By: DIGITAL DESK 3 12 AUG, 2025 | 04:21 PM 2025ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையேயான 12 ஆவது வருடாந்த இருதரப்பு கூட்டு பயிற்சி (SLINEX-2025 ) எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. அன்படி, 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகம் சார் பயிற்சியும், அதனை தொடர்ந்து 17 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பில் கடல்சார் பயிற்சியும் நடைபெறும். இந்த பயிறச்சிகளில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் ஜோதி (கப்பற்படை டேங்கர்) மற்றும் ஐஎன்எஸ் ராணா (அழிப்பான்) ஆகிய கப்பல்கள் பங்கேற்க உள்ளன. இலங்கை கடற்படையில் எஸ்எல்என்எஸ் விஜயபாகு (முன்னேற்ற ஆஃப்ஷோர் ரோந்து கப்பல்) மற்றும் எஸ்எல்என்எஸ் சயுரா (OPV) ஆகிய கப்பல்கள் பங்கேற்க உள்ளன. மேலதிகமாக இலங்கை விமானப்படையின் பிஇஎல் 412 ஹெலிகொப்டர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க உள்ளது. இரு கடற்படைகளின் விசேட படைகளும் பயிற்சியை மேற்கொள்ளும். இதற்கு முன்னர் இந்த பயிற்சி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி இரு கடற்படைகளுக்கும் இடையேயான பன்முக கடல்சார் நடவடிக்கைகளில் இடை-செயல்பாட்டை மேம்படுத்துதல், பரஸ்பர புரிதலை மேம்படுத்துதல் மற்றும் விசேட நடைமுறைகள்/நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துறைமுக கட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள், யோகா அமர்வு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஆகியவை அடங்கும். இது இரு கடற்படைகளின் பணியாளர்களும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், பகிரப்பட்ட மதிப்புகளை மீண்டும் வலுப்படுத்தவும், நட்பு மற்றும் தோழமையின் பிணைப்புகளை உருவாக்கவும் வாய்ப்பளிக்கும். இலங்கை கடற்படை தலைமையகத்தின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் பி லியனகமகே, ஐஎன்எஸ் ஜோதியின் கட்டளை அதிகாரி, கேப்டன் சேதன் ஆர் உபாத்யாயா மற்றும் ஐஎன்எஸ் ராணாவின் கட்டளை அதிகாரி, கேப்டன் கேபி ஸ்ரீசன், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஆனந்த் முகுந்தன் ஆகியோர் பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/222409

"கல்லீரலில் ஒரு குழந்தை இருக்கிறது" - அதிர்ச்சியூட்டும் பெண்ணின் கர்ப்பம்

1 month 1 week ago
கல்லீரலில் 3 மாத கரு வளர்ந்ததால் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது? பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, உலகிலேயே மிகவும் அரிதான கர்ப்பம் இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம். கட்டுரை தகவல் பிரேர்னா பிபிசி செய்தியாளர் 12 ஆகஸ்ட் 2025, 09:30 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு பெண்ணின் கர்ப்பம் குறித்த செய்தி சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தகவல் மிகவும் வித்தியாசமானது, ஏனென்றால் அந்தப் பெண்ணின் கருப்பையில் இல்லாமல், கல்லீரலில் கரு வளர்ச்சியடைந்தது. புலந்த்சாஹர் மாவட்டத்திலுள்ள தஸ்துரா கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சர்வேஷ், தற்போது பல முக்கிய மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இது எப்படி நடந்தது? சர்வேஷ் இப்போது எப்படி இருக்கிறார்? சாதாரண மக்கள் மட்டுமல்ல, நிபுணர்களும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த கேள்விகளுக்குப் பதில் தேடி, நானும் தஸ்துரா கிராமத்துக்குச் சென்றேன். நாங்கள் சர்வேஷின் வீட்டை அடைந்தபோது, அவர் ஒரு கட்டிலில் படுத்திருந்தார். அவரது வயிற்றில் அகலமான பெல்ட் ஒன்று கட்டப்பட்டிருந்தது, அதனால் அவர் திரும்புவதற்கு கூட சிரமப்பட்டார் . வயிற்றின் மேல் வலது பக்கத்தில் இருபத்தி ஒரு தையல்கள் இருப்பதாக கூறிய அவர், கனமான எதையும் தூக்குவதைத் தவிர்க்கவும், மிகவும் லேசான உணவை உண்ணவும், நன்றாக ஓய்வு எடுக்கவும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். கட்டிலில் அமர்வதில் இருந்து குளியலறைக்குச் சென்று திரும்ப, உடை மாற்றுவது வரை சர்வேஷ் தனது கணவர் பரம்வீரின் உதவியை நாட வேண்டியுள்ளது. மூன்று மாதங்கள் எங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிராகவே இருந்தன என்று கூறுகிறார்கள் சர்வேஷும் அவரது கணவர் பரம்வீரும். பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, விரைவில் அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார் என்று கூறுகிறார் சர்வேஷின் கணவர் பர்வமீர். "எனக்கு நிறைய வாந்தி வந்தது. நான் எப்போதும் சோர்வாகவும் வலியுடனும் இருந்தேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது" என்று சர்வேஷ் பிபிசியிடம் கூறினார். அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கிய போது, மருத்துவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யச் சொன்னதாக அவர் கூறுகிறார். ஆனால் அல்ட்ராசவுண்ட் ரிப்போர்ட்டிலும் எதுவும் தெரியவில்லை, வயிற்று தொற்றுக்கு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டார் சர்வேஷ். ஆனால் ஒரு மாதம் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவர் மீண்டும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, மிகவும் அரிதான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. மருத்துவர்களுக்குக் கூட, நம்புவதற்கு கடினமான செய்தியாக அது இருந்தது. "உங்கள் கல்லீரலில் ஒரு குழந்தை இருக்கிறது" பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது இருபது வருட வாழ்க்கையில் இப்படி ஒன்றை பார்த்ததில்லை என்று கூறுகிறார். அல்ட்ராசவுண்ட் செய்த மருத்துவர் சானியா ஜெஹ்ரா, சர்வேஷின் கல்லீரலில் ஒரு குழந்தை இருப்பதாகக் கூறினார். இது சர்வேஷுக்கும் அவரது கணவர் பரம்வீருக்கும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்த, புலந்த்சாஹரிலிருந்து மீரட்டுக்குச் சென்று மீண்டும் அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து கொண்டார் சர்வேஷ். அங்கு கிடைத்த அறிக்கையும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. சர்வேஷின் மாதவிடாய் சுழற்சி, எப்போதும் போல சாதாரணமாக இருந்ததால், இந்தத் தகவலை நம்புவது அவருக்கு கடினமாக இருந்தது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்த கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, அவர் அந்த மருத்துவ அறிக்கையை பலமுறை படித்து, மாதவிடாய் சாதாரணமாக இருக்கிறதா இல்லையா என்பதை சர்வேஷிடம் அவர் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளார். "அந்தப் பெண்ணுக்கு கல்லீரலின் வலது புறம் 12 வார கரு இருந்தது, அதில் இதயத் துடிப்பும் தெளிவாகத் தெரிந்தது. இந்த நிலை 'இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்' என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது. இதுபோன்ற சூழ்நிலையில், பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது, இதனை அவர்கள் சாதாரண மாதவிடாய் என்று கருதுகிறார்கள். இவ்வகையான கர்ப்பத்தைக் கண்டறிய நேரம் எடுக்கும்" என்று அவர் கூறுகிறார். "அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை" பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, சர்வேஷின் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவில் மருத்துவர் பருல் தஹியாவும் இருந்தார். கரு பெரிதாக இருந்தால், கல்லீரல் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அந்த தம்பதியரிடம் மருத்துவர் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், குழந்தையோ அல்லது தாயோ உயிர் பிழைக்க மாட்டார்கள். எனவே, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. புலந்த்ஷாஹரில் உள்ள எந்த மருத்துவரும் சர்வேஷுக்கு மருத்துவம் அளிக்க தயாராக இல்லை என்று பரம்வீர் கூறுகிறார். அதன் பிறகு அவர் மீரட்டுக்குச் சென்றுள்ளார், ஆனால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இது ஒரு கடினமான நிகழ்வு என்றும், தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். அதேபோல் அனைவரும் அவரை டெல்லிக்குச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். "நாங்கள் ஏழைகள், டெல்லிக்குச் சென்று அங்குள்ள செலவுகளைச் சமாளிக்க எங்களுக்கு வசதி இல்லை. பல முறை யோசித்த பிறகு, இங்கேயே சிகிச்சை பெறுவது என்று முடிவு செய்தோம்" என்று சர்வேஷ் கூறினார். இறுதியாக, மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சர்வேஷுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டது. பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, சர்வேஷின் கணவர் பரம்வீர் பிபிசி குழுவிடம் மருத்துவ அறிக்கைகளைக் காட்டுகிறார். "நோயாளி என்னிடம் வந்தபோது, மூன்று மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் அல்ட்ராசோனோ மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனை முடிவுகளை கொண்டு வந்திருந்தார். அதில் இது 'ஹெபடிக் எக்டோபிக்' கர்ப்பம். (அதாவது கல்லீரலில் கரு வளர்ந்துள்ள நிலை) என்பது தெளிவாக தெரிந்தது. இதுகுறித்து மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுனில் கன்வாலுடன் பேசினோம். ஏனெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் தேவை. அவரும் ஒப்புக்கொண்டார், அதன் பிறகு நோயாளி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்" என மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் பருல் தஹியா கூறினார். இந்த அறுவை சிகிச்சை ஒன்றரை மணி நேரம் நீடித்தது எனக் கூறுகிறார்கள் மருத்துவர்கள். அறுவை சிகிச்சையின் காணொளியையும் கருவின் படங்களையும் மருத்துவர் கே.கே. குப்தா பிபிசிக்குக் காட்டினார். 'இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்' என்றால் என்ன? பொதுவாக ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து வெளியாகும் கருமுட்டை, விந்தணுவுடன் இணைந்தால், அப்பெண் கர்ப்பமாகிறார். இந்த கருவுற்ற முட்டை ஃபெலோபியன் குழாய் வழியாக கருப்பையை நோக்கி நகர்கிறது, பின்னர் கருப்பையிலேயே கரு வளர்கிறது. சில சந்தர்ப்பங்களில், கருவுற்ற முட்டை கருப்பையை அடைவதற்குப் பதிலாக, ஃபெலோபியன் குழாயிலேயே இருக்கும் அல்லது வேறு சில உறுப்பின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று பிஎச்யு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் மருத்துவர் மம்தா கூறுகிறார். "உதாரணமாக, சர்வேஷ் விஷயத்தில் கரு கல்லீரலில் சிக்கிக் கொண்டது. கல்லீரலுக்கு நன்றாக ரத்த ஓட்டம் இருப்பதால், ஆரம்ப நாட்களில் கரு வளர 'வளமான இடமாக' அது செயல்படுகிறது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை," என்றார் மம்தா. இந்தியாவில் இதுவரை எத்தனை பேர் இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்? படக்குறிப்பு, இதனைப் புரிந்துகொள்ள, பாட்னா எய்ம்ஸில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறைப் பேராசிரியர் மருத்துவர் மோனிகா அனந்திடம் பேசினோம். உலகம் முழுவதும், சராசரியாக 1% பேருக்கு மட்டுமே இதுபோன்ற 'உள்-கல்லீரல்' கர்ப்பம் ஏற்படுகிறது. இந்த வகை கர்ப்பத்தில், கரு கருப்பையில் இருக்காது என்கிறார் மருத்துவர் மோனிகா. "ஒரு மதிப்பீட்டின்படி, 70 முதல் 80 லட்சம் கர்ப்பங்களில் ஒன்று 'உள் கல்லீரல்' கர்ப்பமாக இருக்கலாம்" எனத் தெரியவருகிறது, என்றும் அவர் கூறினார். இதற்கு முன்பு, உலகம் முழுவதும் 45 இன்ட்ராஹெபடிக் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 3 கர்ப்பங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை மருத்துவர் மோனிகா குறிப்பிட்டார். முதல் சம்பவம் 2012 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரியில் பதிவாகியது. பின்னர் 2022 ஆம் ஆண்டில், மூன்றாவது சம்பவம் கோவா மருத்துவக் கல்லூரியிலும் , 2023 ஆம் ஆண்டில் பாட்னா எய்ம்ஸிலும் கண்டறியப்பட்டது. பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் பதிவான கல்லீரலில் கரு வளர்ந்த பெண்ணுக்கு மருத்துவர் மோனிகா ஆனந்த் மற்றும் அவரது குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவரது குழுவினர் மருந்தின் (மெத்தோட்ரெக்ஸேட்) உதவியுடன் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் ஒரு வருடம் முழுவதும் நோயாளியை தொடர்ந்து கண்காணித்தனர். பின்னர், மருத்துவர் மோனிகா அந்த அரிதான நிகழ்வை ஆவணப்படுத்தினார். இது இந்தியாவின் மூன்றாவது இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பமாக பப்மெட் (PubMed) இல் வெளியிடப்பட்டது . அமெரிக்காவின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி தரவுத்தளம் தான் பப்மெட் . மருத்துவர் பருல் தஹியா மற்றும் மருத்துவர் கே.கே. குப்தா ஆகியோர் தங்கள் குழுவும் சர்வேஷ் விஷயத்தை ஆவணப்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார்கள். விரைவில் அது முடிக்கப்பட்டு ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவ இதழில் வெளியிட அனுப்பப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c87eyxwwv7lo

"கல்லீரலில் ஒரு குழந்தை இருக்கிறது" - அதிர்ச்சியூட்டும் பெண்ணின் கர்ப்பம்

1 month 1 week ago

கல்லீரலில் 3 மாத கரு வளர்ந்ததால் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC

படக்குறிப்பு, உலகிலேயே மிகவும் அரிதான கர்ப்பம் இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்.

கட்டுரை தகவல்

  • பிரேர்னா

  • பிபிசி செய்தியாளர்

  • 12 ஆகஸ்ட் 2025, 09:30 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு பெண்ணின் கர்ப்பம் குறித்த செய்தி சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தத் தகவல் மிகவும் வித்தியாசமானது, ஏனென்றால் அந்தப் பெண்ணின் கருப்பையில் இல்லாமல், கல்லீரலில் கரு வளர்ச்சியடைந்தது.

புலந்த்சாஹர் மாவட்டத்திலுள்ள தஸ்துரா கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சர்வேஷ், தற்போது பல முக்கிய மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இது எப்படி நடந்தது? சர்வேஷ் இப்போது எப்படி இருக்கிறார்? சாதாரண மக்கள் மட்டுமல்ல, நிபுணர்களும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த கேள்விகளுக்குப் பதில் தேடி, நானும் தஸ்துரா கிராமத்துக்குச் சென்றேன்.

நாங்கள் சர்வேஷின் வீட்டை அடைந்தபோது, அவர் ஒரு கட்டிலில் படுத்திருந்தார். அவரது வயிற்றில் அகலமான பெல்ட் ஒன்று கட்டப்பட்டிருந்தது, அதனால் அவர் திரும்புவதற்கு கூட சிரமப்பட்டார் .

வயிற்றின் மேல் வலது பக்கத்தில் இருபத்தி ஒரு தையல்கள் இருப்பதாக கூறிய அவர், கனமான எதையும் தூக்குவதைத் தவிர்க்கவும், மிகவும் லேசான உணவை உண்ணவும், நன்றாக ஓய்வு எடுக்கவும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.

கட்டிலில் அமர்வதில் இருந்து குளியலறைக்குச் சென்று திரும்ப, உடை மாற்றுவது வரை சர்வேஷ் தனது கணவர் பரம்வீரின் உதவியை நாட வேண்டியுள்ளது.

மூன்று மாதங்கள் எங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிராகவே இருந்தன என்று கூறுகிறார்கள் சர்வேஷும் அவரது கணவர் பரம்வீரும்.

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC

படக்குறிப்பு, விரைவில் அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார் என்று கூறுகிறார் சர்வேஷின் கணவர் பர்வமீர்.

"எனக்கு நிறைய வாந்தி வந்தது. நான் எப்போதும் சோர்வாகவும் வலியுடனும் இருந்தேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது" என்று சர்வேஷ் பிபிசியிடம் கூறினார்.

அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கிய போது, மருத்துவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யச் சொன்னதாக அவர் கூறுகிறார். ஆனால் அல்ட்ராசவுண்ட் ரிப்போர்ட்டிலும் எதுவும் தெரியவில்லை, வயிற்று தொற்றுக்கு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டார் சர்வேஷ்.

ஆனால் ஒரு மாதம் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவர் மீண்டும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது, மிகவும் அரிதான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. மருத்துவர்களுக்குக் கூட, நம்புவதற்கு கடினமான செய்தியாக அது இருந்தது.

"உங்கள் கல்லீரலில் ஒரு குழந்தை இருக்கிறது"

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC

படக்குறிப்பு, கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது இருபது வருட வாழ்க்கையில் இப்படி ஒன்றை பார்த்ததில்லை என்று கூறுகிறார்.

அல்ட்ராசவுண்ட் செய்த மருத்துவர் சானியா ஜெஹ்ரா, சர்வேஷின் கல்லீரலில் ஒரு குழந்தை இருப்பதாகக் கூறினார். இது சர்வேஷுக்கும் அவரது கணவர் பரம்வீருக்கும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்த, புலந்த்சாஹரிலிருந்து மீரட்டுக்குச் சென்று மீண்டும் அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து கொண்டார் சர்வேஷ்.

அங்கு கிடைத்த அறிக்கையும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வேஷின் மாதவிடாய் சுழற்சி, எப்போதும் போல சாதாரணமாக இருந்ததால், இந்தத் தகவலை நம்புவது அவருக்கு கடினமாக இருந்தது.

எம்ஆர்ஐ ஸ்கேன் செய்த கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, அவர் அந்த மருத்துவ அறிக்கையை பலமுறை படித்து, மாதவிடாய் சாதாரணமாக இருக்கிறதா இல்லையா என்பதை சர்வேஷிடம் அவர் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளார்.

"அந்தப் பெண்ணுக்கு கல்லீரலின் வலது புறம் 12 வார கரு இருந்தது, அதில் இதயத் துடிப்பும் தெளிவாகத் தெரிந்தது. இந்த நிலை 'இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்' என்று அழைக்கப்படுகிறது.

இது மிகவும் அரிதானது.

இதுபோன்ற சூழ்நிலையில், பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது, இதனை அவர்கள் சாதாரண மாதவிடாய் என்று கருதுகிறார்கள். இவ்வகையான கர்ப்பத்தைக் கண்டறிய நேரம் எடுக்கும்" என்று அவர் கூறுகிறார்.

"அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை"

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC

படக்குறிப்பு, சர்வேஷின் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவில் மருத்துவர் பருல் தஹியாவும் இருந்தார்.

கரு பெரிதாக இருந்தால், கல்லீரல் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அந்த தம்பதியரிடம் மருத்துவர் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், குழந்தையோ அல்லது தாயோ உயிர் பிழைக்க மாட்டார்கள். எனவே, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை.

புலந்த்ஷாஹரில் உள்ள எந்த மருத்துவரும் சர்வேஷுக்கு மருத்துவம் அளிக்க தயாராக இல்லை என்று பரம்வீர் கூறுகிறார். அதன் பிறகு அவர் மீரட்டுக்குச் சென்றுள்ளார், ஆனால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இது ஒரு கடினமான நிகழ்வு என்றும், தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். அதேபோல் அனைவரும் அவரை டெல்லிக்குச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

"நாங்கள் ஏழைகள், டெல்லிக்குச் சென்று அங்குள்ள செலவுகளைச் சமாளிக்க எங்களுக்கு வசதி இல்லை. பல முறை யோசித்த பிறகு, இங்கேயே சிகிச்சை பெறுவது என்று முடிவு செய்தோம்" என்று சர்வேஷ் கூறினார்.

இறுதியாக, மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சர்வேஷுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டது.

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC

படக்குறிப்பு, சர்வேஷின் கணவர் பரம்வீர் பிபிசி குழுவிடம் மருத்துவ அறிக்கைகளைக் காட்டுகிறார்.

"நோயாளி என்னிடம் வந்தபோது, மூன்று மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் அல்ட்ராசோனோ மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனை முடிவுகளை கொண்டு வந்திருந்தார். அதில் இது 'ஹெபடிக் எக்டோபிக்' கர்ப்பம். (அதாவது கல்லீரலில் கரு வளர்ந்துள்ள நிலை) என்பது தெளிவாக தெரிந்தது.

இதுகுறித்து மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுனில் கன்வாலுடன் பேசினோம். ஏனெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் தேவை. அவரும் ஒப்புக்கொண்டார், அதன் பிறகு நோயாளி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்" என மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் பருல் தஹியா கூறினார்.

இந்த அறுவை சிகிச்சை ஒன்றரை மணி நேரம் நீடித்தது எனக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

அறுவை சிகிச்சையின் காணொளியையும் கருவின் படங்களையும் மருத்துவர் கே.கே. குப்தா பிபிசிக்குக் காட்டினார்.

'இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்' என்றால் என்ன?

பொதுவாக ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து வெளியாகும் கருமுட்டை, விந்தணுவுடன் இணைந்தால், அப்பெண் கர்ப்பமாகிறார்.

இந்த கருவுற்ற முட்டை ஃபெலோபியன் குழாய் வழியாக கருப்பையை நோக்கி நகர்கிறது, பின்னர் கருப்பையிலேயே கரு வளர்கிறது.

சில சந்தர்ப்பங்களில், கருவுற்ற முட்டை கருப்பையை அடைவதற்குப் பதிலாக, ஃபெலோபியன் குழாயிலேயே இருக்கும் அல்லது வேறு சில உறுப்பின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று பிஎச்யு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் மருத்துவர் மம்தா கூறுகிறார்.

"உதாரணமாக, சர்வேஷ் விஷயத்தில் கரு கல்லீரலில் சிக்கிக் கொண்டது. கல்லீரலுக்கு நன்றாக ரத்த ஓட்டம் இருப்பதால், ஆரம்ப நாட்களில் கரு வளர 'வளமான இடமாக' அது செயல்படுகிறது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை," என்றார் மம்தா.

இந்தியாவில் இதுவரை எத்தனை பேர் இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்?

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

படக்குறிப்பு, இதனைப் புரிந்துகொள்ள, பாட்னா எய்ம்ஸில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறைப் பேராசிரியர் மருத்துவர் மோனிகா அனந்திடம் பேசினோம்.

உலகம் முழுவதும், சராசரியாக 1% பேருக்கு மட்டுமே இதுபோன்ற 'உள்-கல்லீரல்' கர்ப்பம் ஏற்படுகிறது. இந்த வகை கர்ப்பத்தில், கரு கருப்பையில் இருக்காது என்கிறார் மருத்துவர் மோனிகா.

"ஒரு மதிப்பீட்டின்படி, 70 முதல் 80 லட்சம் கர்ப்பங்களில் ஒன்று 'உள் கல்லீரல்' கர்ப்பமாக இருக்கலாம்" எனத் தெரியவருகிறது, என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு, உலகம் முழுவதும் 45 இன்ட்ராஹெபடிக் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 3 கர்ப்பங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை மருத்துவர் மோனிகா குறிப்பிட்டார்.

முதல் சம்பவம் 2012 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரியில் பதிவாகியது.

பின்னர் 2022 ஆம் ஆண்டில், மூன்றாவது சம்பவம் கோவா மருத்துவக் கல்லூரியிலும் , 2023 ஆம் ஆண்டில் பாட்னா எய்ம்ஸிலும் கண்டறியப்பட்டது.

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் பதிவான கல்லீரலில் கரு வளர்ந்த பெண்ணுக்கு மருத்துவர் மோனிகா ஆனந்த் மற்றும் அவரது குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

அவரது குழுவினர் மருந்தின் (மெத்தோட்ரெக்ஸேட்) உதவியுடன் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் ஒரு வருடம் முழுவதும் நோயாளியை தொடர்ந்து கண்காணித்தனர்.

பின்னர், மருத்துவர் மோனிகா அந்த அரிதான நிகழ்வை ஆவணப்படுத்தினார்.

இது இந்தியாவின் மூன்றாவது இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பமாக பப்மெட் (PubMed) இல் வெளியிடப்பட்டது . அமெரிக்காவின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி தரவுத்தளம் தான் பப்மெட் .

மருத்துவர் பருல் தஹியா மற்றும் மருத்துவர் கே.கே. குப்தா ஆகியோர் தங்கள் குழுவும் சர்வேஷ் விஷயத்தை ஆவணப்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார்கள்.

விரைவில் அது முடிக்கப்பட்டு ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவ இதழில் வெளியிட அனுப்பப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c87eyxwwv7lo

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!

1 month 1 week ago
நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம்

இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி

1 month 1 week ago
திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கப்பல் Published By: VISHNU 12 AUG, 2025 | 02:06 AM (எம்.மனோசித்ரா) இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். ரனா' திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள இக்கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன், 300 அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது, மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ. ஸ்ரீசன் பணியாற்றுகின்றார். இக்கப்பல் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர்கள் பங்கேற்பார்கள், அத்துடன் தீவில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இலங்கை இராணுவத்தினருக்கான ஒரு யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கும், திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் வியாழக்கிழமை (14) நாடு திரும்பவுள்ளது. https://www.virakesari.lk/article/222362