Aggregator

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

1 month 1 week ago
ஆரம்பத்தில் உக்கிரேஎன் நேட்டோவில் அங்கம் பெறவேண்டும் எனும் முனைப்புடன் போரில் ஈடுபட்டது ஆனால் நேட்டோ கனவு கலைந்து போனாலும் தொடர்ந்தும் போரிடுகிறது. உக்கிரேனின் அடுத்த குறி ஐரோப்பிய ஒன்றிய இணைவு, அது ஓரளவிற்கு சாத்தியப்படலாம் எனும் நிலையில் அண்மையில் தன்னிச்சையாக செயல்படும் ஊழல் ஒழிப்பு பிரிவினை செலன்ஸ்கி தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் சட்டம் இயற்றியவுடன் அதற்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள், இந்த ஆர்பாட்டம் 2014 மேடான் ஆர்ப்பாட்டம் போன்றது என கூறினார்கள். எவ்வாறு குறுகிய காலப்பகுதியில் இவ்வார்ப்பாட்டம் உருவானது என்பது தொடர்பில் ஆச்சரியம் தெரிவிக்கப்பட்டது, இதனிடையே உடனடியாக செலன்ஸ்கி அவசர அவசரமாக அந்த சட்டத்தினை நீக்கிவிட்டார். இதன் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் செலன்ஸ்கியிற்கு மாற்றீடாக சலூஸ்னியினை ஆட்சி பீட ஏற்ற முனைகிறதாக கூறப்படுகிறது, இவர் முற்று முழுதான இராணுவ பின்னணி கொண்டவர், தொடர்ந்து போரினை சிறப்பாக நடத்த இராணுவ பின்னணி கொண்ட ஒரு தலைமைபீடம் அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் கருதலாம். மேற்கின் அறிவுரையின்படி இஸ்தான்புல் உடன்படிக்கையினை ஏற்க மறுத்து தொடர்ந்து போரிட முடிவு செய்த செலன்ஸ்கி அதே ஆண்டு ஒக்ரோபர் மாதம் செலன்ஸ்கி புதிய ஒரு சட்டத்தினை இயற்றினார், அதன் மூலம் எந்த ஒரு உக்கிரேன் அரச அதிகாரிகளும் உக்கிரேன் சார்பாக இரஸ்சியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அது சட்டவிரோதம் எனும் சட்டம். போரிற்கான தேவைகள் வலிந்து உருவாக்கப்படுகின்றன, புதிதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களை இராணுவத்தில் இணைப்பதற்கான புதிய சட்டத்தினையும் உருவாக்கியுள்ளார் செலன்ஸ்கி. ஆனால் எதற்காக யுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் (செலன்ஸ்கி ஐரோப்பாவிற்காகவும் போராடுகிறோம் என கூறினார்) எனும் தெளிவு உக்கிரேனியர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இல்லை, நேட்டோவில் இணையமாட்டோம் என கூறினால் போர் முடிந்துவிடும், அதே நேரம் உக்கிரேனை நேட்டோவில் இணைக்க நேட்டோ நாடுகளும் விரும்பவில்லை ஆனாலும் போர் தொடர்கிறது. எந்த போராட்டத்திற்கும் ஒரு கொள்கை வேண்டும் அது தவறானதாக இருந்தாலும் அதனை விரும்புபவர்கள் அதனை பின்பற்றுவார்கள், ஆனால் வெறும் அதிகாரம், பணம் என்பவற்றிற்காக மற்றவர்களின் கருத்தினடிப்படையில் செயல்படமுடியாது.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!

1 month 1 week ago
இந்த மலேரியாவின் (cerebral malaria) (வெளியே தெரியாத ) ஒரு பக்கம் இராணுவ போட்டி / பகைமை, சீன - அமெரிக்கா பாதுகாப்பு துறைகளுக்கு இடையில் ஏற்படுத்தியது. காரணம், சீனர் ( யுயு என்றும் பெயர்) என்றே நினைவு இதுக்கு குறிப்பிட்ட மூலிகையில் இருந்து மருந்தை கண்டறிந்தது. அமெரிக்கா இராணுவத்துக்கு அது மிகப் பெரியசாவால் அந்த நேரத்தில் (2015 மட்டில் , ஆனால் அதுக்கு முதலே பல ஆண்டுகள் ஆய்வு இரு இராணுவத்திலும்) இரு இராணுவம், பாதுகாப்பு துறையும் நீண்ட மலேரியா ஆய்வு வரலாறு உடையவை. அனால், பின்பு us இராணுவம் இதில் மும்மரமாக ஆராய்ந்து, சாதாரண புல்லில் (பெயர் நினைவு இல்லை) இருந்தும் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்து இருந்தது .

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 1 week ago
நாம் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை கதவடைப்பு நடைபெறுகின்றது. கதவடைப்பை பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பும் வைக்கின்றது. மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதித்தது நீங்கலாக கதவடைப்புக்கள் அவை வைக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றி உள்ளனவா?

மழையால் யாழில் 32 பேர் பாதிப்பு!

1 month 1 week ago
Published By: DIGITAL DESK 2 11 AUG, 2025 | 08:26 PM யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) காலை பெய்த கனமழையால், ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/351, ஜே/363, ஜே/364 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222348

மழையால் யாழில் 32 பேர் பாதிப்பு!

1 month 1 week ago

Published By: DIGITAL DESK 2

11 AUG, 2025 | 08:26 PM

image

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) காலை பெய்த கனமழையால், ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/351, ஜே/363, ஜே/364 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/222348

உயர்தர, சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

1 month 1 week ago
11 AUG, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான தினத்தை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரையும் நடைபெறும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிபர்கள் ஊடாக விண்ணிப்பிக்க முடியும் என்றும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது தேசிய அடையாள அட்டை ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றில் வழிகாட்டுதல்களை அவதானித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை வேறு தேவைகளுக்காக வைத்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் ஏற்கனவே அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222329

உயர்தர, சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

1 month 1 week ago

11 AUG, 2025 | 05:23 PM

image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான தினத்தை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரையும் நடைபெறும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிபர்கள் ஊடாக விண்ணிப்பிக்க முடியும் என்றும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது தேசிய அடையாள அட்டை ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றில் வழிகாட்டுதல்களை அவதானித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை வேறு தேவைகளுக்காக வைத்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் ஏற்கனவே அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/222329

இந்தியாவின் அபாச்சிக்கு போட்டியாக பாகிஸ்தான் களமிறக்கும் சீன ஹெலிகாப்டர் - காத்திருக்கும் சவால் என்ன?

1 month 1 week ago
பட மூலாதாரம், PAFFALCONS படக்குறிப்பு, இசட்-10 எம்இ, பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன தாக்குதல் ஹெலிகாப்டர் கட்டுரை தகவல் முன்ஜா அன்வர் பிபிசி உருது, இஸ்லாமாபாத் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்படும் இசட்-10 எம்இ (Z-10 ME) ஹெலிகாப்டர் பாகிஸ்தானில் ஒரு துப்பாக்கிசுடுதல் பயிற்சி மைதானத்தில் நிற்பது போன்ற புகைப்படம் கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருந்தது. பலரும் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படம் என தெரிவித்தனர்., வேறு சிலர் இது பாகிஸ்தானில் பரிசோதனைக்காக வந்த இசட்-10 ஹெலிகாப்டரின் முந்தைய பதிப்பு என நம்பினர். இந்த ஊகங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு துறை (ISPR) சீனாவில் தயாரிக்கப்பட்ட இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர்களை இந்தியா முதல்முறையாக அதிக அளவில் கொள்முதல் செய்த முதல் சில நாட்களில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், அமெரிக்காவிலிர்ந்து மூன்று அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் டெல்லி அருகில் உள்ள ஹிண்டன் விமானபடைதளத்திற்கு வந்து சேர்ந்தன. அதிநவீன வசதிகளுடனான இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்கள் எல்லா காலநிலைகளிலும், பகலிலோ, இரவிலோ துல்லியமான தாக்குதலை நடத்தும் ஆற்றல் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். நவீனா ரேடர் மற்றும் மின்னணு போர் கருவிகள் பொருத்தப்பட்ட இசட்-10 எம்இ தரைவழியாகவும், வான் மார்க்கவாகவும் வரக்கூடிய அபாயங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை அதிகரிக்கிறது. இந்த கட்டுரை சீனாவின் இசட்-10 எம்இ மற்றும் அமெரிக்காவின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குகிறது. பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW படக்குறிப்பு, இசட்-10 எம்இயில் பல வகையான ஆயுதங்களை பொருத்த முடியும் இசட்-10 எம்இ தாக்குதல் ஹெலிகாப்டரின் சிறப்பு அம்சங்கள் என்ன? பட மூலாதாரம், ISPR படக்குறிப்பு, இசட்-10 எம்இயின் நவீன மாடலில் புதிய, சக்திவாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது திறனையும் வரம்பையும் அதிகரிக்கிறது ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் தற்போது முல்தானின் ஏர் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்துகிறார். அவரது கூற்றுப்படி இசட்-10 எம்இ ஹெலிகாப்டர், டபிள்யு 10 என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கான தயாரிப்பு 1994ஆம் ஆண்டு நவீன தாக்குதல் ஹெலிகாப்டருக்கான தேவையை சீனா உணர்ந்தபோது தொடங்கப்பட்டது. இதுதான் சீனாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தாக்குதல் ஹெலிகாப்டராகும். ஏசியன் மிலிட்டரி ரெவ்யூவின் கூற்றுப்படி, இந்த ஹெலிகாப்டர் குறுகிய தூர வான்வழி ஆதரவு, டாங்கிகளுக்கு எதிரான நடவடிக்கை, குறைவான அளவு வான்வழி தாக்குதல் ஆகியவற்றை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த அம்சங்கள் காரணமாக அது இந்தியாவின் ஏஹெச்-64இ(AH-64E) அபாச்சி கார்டியன் ஹெலிகாப்டருடன் ஒப்பிடப்படுகிறது. முஸாமில் ஜிப்ரான் கூற்றுப்படி கடந்த காலத்தில் இந்த ஹெலிகாப்டரின் பல்வேறு பதிப்புகள் இருந்திருக்கின்றன. அவரது கூற்றுப்படி பனிமூட்டமான சூழலில் பெரும்பாலான ரேடர்கள் சரியாக செயல்படுவதில்லை, ஆனால் இசட்-10 எம்இயில் பொருத்தப்பட்டுள்ள ரேடர் மூடுபனியிலும் வெகு சிறப்பாக செயல்படும். "இந்த ஹெலிகாப்டரின் துப்பாக்கிகள் ஹெல்மெட் மவுண்டட் சைட்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, இது ஒரு நகரும் ஆயுத அமைப்பாகும், பைலட் எந்த திசையைப் பார்த்தாலும், துப்பாக்கி தானாக அந்த திசையில் சுடும்," என்கிறார் முஸாமில் ஜிப்ரான். அதன் புதிய பதிப்பில் கூடுதல் ஆற்றல் கொண்ட ஒரு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது அதன பறக்கும் ஆற்றலையும், தூரத்தையும் அதிகரிக்கிறது. டிபென்ஸ் செக்யூரிட்டி ஆசியாவின் கூற்றுப்படி, "செயல்திறன் அடிப்படையில், இசட்-10 எம்இ-யின் அதிகபட்ச வேகம் மணிக்கு 300 கிலோமீட்டராக உள்ளது. எடை மற்றும் கூடுதல் எரிபொருளைப் பொறுத்து அதன் பயண வரம்பு 800 முதல் 1,120 கிலோமீட்டர் வரை இருக்கும்." இந்த ஹெலிகாப்டரின் வெற்று எடை சுமார் 5,100 கிலோகிராம், அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 7,200 கிலோகிராம் வரை செல்லலாம். இது எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Control) ஒட்டி நீண்ட தூரம் ஊடுருவி தாக்குதல் நடத்தும் ஆற்றலை அதற்கு வழங்குகிறது. பாதுகாப்பு ஆய்வாளர் சவுத்ரி ஃபாரூக்-கின் கூற்றுப்படி இந்த ஹெலிகாப்டரில் பலவகையான ஆயுதங்களை பொருத்த முடியும். இசட்-10 எம்இ-யில் தரையில் உள்ள இலக்குகளை தாக்கவும், வான்வழி அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள பயன்படும் வழிநடத்தக்கூடிய 16 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், 32- ட்யூப் ராக்கெட் பாட்கள் மற்றும் டி ஒய்-90 வானிலிருந்து வானில் ஏவக்கூடிய ஏவுகணைகளை பொருத்தலாம். இசட்-10எம்இ மற்றும் அபாச்சி இடையிலான வேறுபாடுகள் பட மூலாதாரம், INDIAN MEDIA படக்குறிப்பு, அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர் சர்வதேச போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இசட்-10 எம்இ இதுவரை அதுபோல் பயன்படுத்தப்படவில்லை அபாச்சியுடன் ஒப்பிடுகையில் இசட்-10எம்இ யில் சீனா பல்வேறு மேம்பாடுகளை செய்திருப்பதாக ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் சொல்கிறார். அவரது கூற்றுப்படி, ஏவுகணைகளில் இன்ஃப்ராரெட் (ஹீட்-சீக்கிங்) ஏவுகணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது."இந்த சூழலில், இந்த சீன ஹெலிகாப்டர் ஒரு முக்கிய சாதக அம்சத்தை கொண்டுள்ளது, இதன் இன்ஜினின் புகை வெளியேற்றும் அமைப்பு கிடைமட்டமாக இல்லாமல் 45 டிகிரி கோணத்தில் பின்புறமாக சாய்ந்துள்ளது. இதனால், இதன் வெப்ப அடர்வு (heat signature) கணிசமாகக் குறைகிறது." இந்த வடிவமைப்பு காரணமாக, எதிரிகளின் ரேடர் அல்லது வெப்பத்தை உணரும் கருவி இந்த ஹெலிகாப்டரை கண்டுபிடிப்பதில் சிரமத்தை சந்திக்கின்றன என அவர் கூறுகிறார். அமெரிக்காவின் அபாச்சி ஹெலிகாப்டர்கள் பல போர்களிலும் சர்ச்சைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இசட்-10 எம்இ பாகிஸ்தானுக்காகவே தயாரிக்கப்பட்டது என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இந்த ஹெலிகாப்டர்கள் இதுவரை எந்த போரிலும் பயன்படுத்தப்படவில்லை. அட்லாண்டிக் கவுன்சிலின் மூத்த உறுப்பினரும், முன்னாள் பென்டகன் அதிகாரியுமான அலெக்ஸ் பிளெட்சாஸ், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் உயர்-தொழில்நுட்பத் துறைகளில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் நிபுணராவார். "இசட்-10 எம்இ குறைவான எடை கொண்டது, அளவில் சற்று சிறியது மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டது, இது அதை மிகவும் இலகுவாக இயக்கும் தன்மையுடையதாக்குகிறது. ஆனால், ஏஹெச்-64 அபாச்சியின் வேகம் அதிகம்," என அலெக்ஸ் பிளெட்சாஸ் விளக்குகிறார். மேலும், "இது பலவகையான ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடியது மற்றும் நவீன ரேடார் மற்றும் இலக்குகளை குறிவைக்கும் அமைப்புகளைக் கொண்டுள்ளது. இசட்-10 எம்இயின் விலை குறைவு, ஆனால் இரு ஹெலிகாப்டர்களும் டாங்கிகளை தாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டவை," என்று அவர் விளக்குகிறார். சீன மற்றும் மேற்கத்திய தொழில்நுட்பங்களின் ஒப்பீடு பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW படக்குறிப்பு, இசட்-10 எம்இ, பாகிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் எனக் கூறப்படுகிறது 1965ஆம் ஆண்டு பாகிஸ்தான்-இந்தியப் போருக்குப் பிறகு, அமெரிக்க ஆயுதங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகே பாகிஸ்தான்- சீனா பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடங்கியது. பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள், டேங்குகள் மற்றும் பீரங்கிகளை வழங்கி நீண்டகால ராணுவ மற்றும் ராஜதந்திர உறவுகளுக்கு சீனா அடித்தளம் அமைத்தது. பனிப்போருக்கு பிறகு, ஆயுதங்கள் வாங்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு பதிலாக சீனாவை சார்ந்திருக்க தொடங்கிய பிறகு இந்த கூட்டணி மேலும் ஆழமடைந்தது. சீனாவும், பாகிஸ்தானும் 1963-ல் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தம் எல்லை சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்து, 1966-ல் பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ உதவி அளிக்கத் தொடங்கியது. கடந்த சில சதாப்தங்களில், சீனா தான் தயாரித்த பல ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது. ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) தரவுகளின்படி, 2020 முதல் 2024 வரை பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 81% சீனாவிலிருந்து வந்தவை. SIPRIயின் கூற்றுப்படி, 2015-2019 மற்றும் 2020-2024 ஆண்டுகளுக்கு இடையில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 61% அதிகரித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, சீனாவிலிருந்து பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்களில் நவீன போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் அடங்கும். பாகிஸ்தானில் உள்ளூரில் தயாரிக்கப்படும் சில ஆயுதங்களில் சீனாவின் பங்களிப்பு உள்ளது. இவை சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை அல்லது சீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவை. இசட்-10 எம்இ தேர்வு செய்யப்பட்டது எப்படி? பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW படக்குறிப்பு, இசட்-10 எம்இ, சிங்கப்பூர் ஏர் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது பாகிஸ்தான் ராணுவம் முதலில் ஏஹெச் -1இசட் வைப்பர் ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டது. 2015இல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது, ஆனால் இந்தியாவுடனான வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகள் காரணமாக இதிலிருந்து பின்வாங்கியது. பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த பைலட் ஒருவர், "தாக்குதல் ஹெலிகாப்டர்களில் மிக முக்கியமானது பராமரிப்பு," என பிபிசியிடம் தெரிவித்தார். " அமெரிக்க அபாச்சி முற்றிலும் புதிய கட்டமைப்பு தேவைப்படும் ஒரு முற்றிலும் வேறுபட்ட ஒரு இயந்திரம். முன்னதாக பாகிஸ்தான், 'சூப்பர் கோப்ரா' அல்லது 'வைப்பர்' எனப்படும் ஏ ஹெச்-1இசட் ஹெலிகாப்டரில் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பொருத்த தயாராகி வந்தது, ஆனால் அந்த ஹெலிகாப்டர் இதுவரை கிடைக்கவில்லை," என அவர் கூறினார். பின்னர், துருக்கியின் டி129 ஹெலிகாப்டர்களைப் பெற பாகிஸ்தான் முயற்சித்தது, ஆனால் இயந்திர சிக்கல்கள் காரணமாக அந்த வாய்ப்பும் முடிவுக்கு வந்ததையடுத்து, சீனாவை நாடியது. 2015இல் வந்த சீன ஹெலிகாப்டர்களை தொழில்நுட்பக் காரணங்களால் பாகிஸ்தான் நிராகரித்ததாக அவர் சொல்கிறார். அதன் பின்னர் 2019இல் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் நிபுணர்கள் இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்களில் பாகிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப அபாச்சி போன்ற ரேடர், வானிலிருந்து வானில் தாக்கும் மற்றும் வானிலிருந்து தரையில் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளை பொருத்தினர். பட மூலாதாரம், SOCIAL MEDIA படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட இசட்-10 எம்இ படத்தை பலர் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று கூறினர் இசட்-10 பாகிஸ்தானின் முதல் தேர்வாக இருக்கவில்லை என அலெக்ஸ் பிளெட்சாஸ் சொல்கிறார். "பாகிஸ்தான் துருக்கியில் தயாரான ஹெலிகாப்டர்களை வாங்க விரும்பியது, ஆனால் அமெரிக்கா இன்ஜின் பகுதிகள் இறக்குமதியை தடை செய்தது. இதன் பின்னர், சீனாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவை வலுப்படுத்த பாகிஸ்தானுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது," என்று அவர் சொல்கிறார். இந்த கட்டுரையை எழுதும் நேரம்வரை பாகிஸ்தான் ராணுவம் (ஐஎஸ்பிஆர்) இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்களை பிபிசியிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவின் மூத்த பைலட் ஒருவரின் கூற்றுப்படி பாகிஸ்தான் சீனாவிலிருந்து 30 ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது, இவை பல தொகுதிகளாக பாகிஸ்தானுக்கு வந்து சேரும். ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் இத்துடன் உடன்படுவதாகத் தெரிகிறது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyvvmn2604o

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

1 month 1 week ago
ஏற்பட்ட இணக்கப்பாடுகளை செயற்படுத்துவதில் தாமதம் வைத்தியர்களின் இடமாற்றச் செயல்பாட்டில் ஏற்பட்ட முறைகேடுகளைத் திருத்துவது தொடர்பாக, சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக, சுகாதார அமைச்சுக்குள் வைத்தியர் இடமாற்றப் பட்டியல்களைத் தயாரித்தல், இடமாற்ற உத்தரவுகளை செயல்படுத்துதல் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் ஆகிய செயற்பாடுகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை என அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக எழுந்துள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் அளித்த வாய்மொழி வாக்குறுதிகளை செயல்படுத்தத் தவறுகின்றமை, தங்கள் சங்கத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் அதன் நிறைவேற்றுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார அமைச்சின் இடமாற்ற சபைகள் தலையிட்டு, இடமாற்ற உத்தரவுகளை வெளிப்படையாக செயல்படுத்தப்படாவிட்டால் அல்லது சுகாதார கட்டமைப்பை முடக்க முயற்சித்தால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க தயங்காது. சுகாதார அமைச்சரின் உரிய ஆலோசனைகளை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது, பொது சேவை ஆணைக்குழு உட்பட அனைத்து தரப்பினரிடமும் முறைப்பாடு செய்ய, தமது சங்கம் பின்நிற்காது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cme710xs602egqp4kt74j8op7

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து

1 month 1 week ago
முத்தையன்கட்டில் இராணுவ முகாமிற்கு சென்ற இளம் குடும்பஸ்தரின் இறுதி ஊர்வலம்; பொலிஸார் விஷேட அதிரடி படையினர் விஷேட பாதுகாப்பு 11 AUG, 2025 | 04:51 PM முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியபோது தப்பியோடி சடலமாக மீட்கப்பட்டவரின் சடலம் இன்றையதினம் திங்கட்கிழமை (11) அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முத்தையன்கட்டு குளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து கடந்த 07 திகதி இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டட்டு ஐவர் முகாமிற்கு சென்றநிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இறந்தவவரின் சடலம் இன்றையதினம் 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இது சம்பவம் குறித்து கலகம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222322

வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதைத் தடுக்க 5 எளிய வழிகள்

1 month 1 week ago
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்பு நீரிழிவு மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும். கட்டுரை தகவல் சுமீரன் ப்ரீத் கவுர் பிபிசி செய்தியாளர் 11 ஆகஸ்ட் 2025, 01:35 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பலரும் தங்கள் வயிற்றுப் பகுதியை குறைக்க உடற்பயிற்சிக் கூடங்களை நாடுகின்றனர். ஆனால், சிலரோ அதற்கு பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு பெல்லி ஃபேட் டம்மி ஃபேட், பீர் ஃபேட் என்றும் அழைக்கப்படுகிறது. தங்களின் உருவம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் கொள்ளும் இளைஞர்கள் இதுகுறித்து கவலை கொள்கின்றனர். வயிற்றுப்பகுதியில் அதிகரிக்கும் கொழுப்பின் காரணமாக, தங்களுக்கு விருப்பத்துக்கேற்ற, சௌகரியமான உடைகளை அவர்களால் அணிய முடிவதில்லை. உங்கள் விருப்பத்துக்கேற்ப ஆடைகளை அணிவதுடன் மட்டும் இந்த பிரச்னை முடிவதில்லை. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் உங்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பது நிரூபணமாகியுள்ளது. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பது மற்றும் கொலஸ்ட்ரால் சம்பந்தமான பிரச்னைகள் உட்பட பல தீவிரமான உடல்நல பிரச்னைகள் ஏற்படும். இந்த நோய்கள் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பால் ஏற்படுகின்றன. மேலும் இதனால் டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. பட மூலாதாரம், GETTY IMAGES ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளியான ஆய்வு ஒன்று, சைடோகைன் (cytokine) எனப்படும் ஒருவகை புரதம் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பால் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் உடலில் வீக்கம் (inflammation) உருவாகும். வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் ஆஞ்சியோடென்சின் (angiotensin) எனப்படும் புரதமும் உற்பத்தியாகிறது. இதனால், ரத்த நாளங்கள் சுருங்குதல், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றன. இதனால், டிமென்ஷியா (மறதி நோய்), ஆஸ்துமா மற்றும் சிலவகை புற்றுநோய்களுக்கான ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. டெல்லியில் உள்ள ஃபோர்ட்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் மூத்த இதயவியல் மருத்துவர் ஷிவ் குமார் சௌத்ரி கூறுகையில், உடலின் மற்ற பாகங்களில் சேரும் கொழுப்பை விட, வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது என்கிறார். மேலும் அவர், "வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பில் இருந்து செல்கள் உடையும் போதோ அல்லது சிதையும்போது, அதிலிருந்து பலவிதமான நச்சுக்கூறுகள் வெளியாகின்றன. இந்த கூறுகள், இதய ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. உடலில் இன்சுலின் எதிர்ப்பையும் (insulin resistance) அதிகரிக்கிறது. இதன்காரணமாக, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது" என்று விளக்குகிறார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதற்கு மரபியல் ரீதியான விஷயங்கள், ஹார்மோன் மாற்றங்கள், வயது, அதிக உடல் எடை மற்றும் மெனோபாஸ் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சமநிலையற்ற வாழ்வியல் முறை, சரிவிகித உணவு முறையை கடைபிடிக்காதது போன்றவையும் இதற்கான காரணங்களாக உள்ளன. சரிவிகித உணவு முறையை கடைபிடித்தல், தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க முடியும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேருவதைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசியம். 1. இரவு உணவுக்கும் தூங்கும் நேரத்துக்குமான வித்தியாசம் தூங்குவதற்கு இரண்டு - மூன்று மணிநேரத்துக்கு முன்பாக எதையும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரிகளை, அன்றைய நாளில் நீங்கள் செய்யும் வேலைகளுக்கான ஆற்றலாக பயன்படுத்துகிறது. ஆனால், இரவில் நீங்கள் உண்ணும் உணவு அவ்வாறு பயன்படுத்த முடியாது. எனவே, அது கொழுப்பாக சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும். 2. சரிவிகித உணவை உண்ணுங்கள் உணவில் நீங்கள் அதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுக்கும் போது, நீண்ட நேரத்துக்கு நீங்கள் பசியாக உணர மாட்டீர்கள். உணவில் நார்ச்சத்து இருந்தால், உணவு வயிற்றுப்பகுதியிலிருந்து குடலுக்கு நகரும் வேகம் குறையும். இதனால் நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வுடனேயே நீங்கள் இருப்பீர்கள். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, குறைவாகவும் சாப்பிடுவீர்கள். இது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கிறது. உணவில் புரதச்சத்தை சேருங்கள். புரதமும் வயிற்றை நீண்ட நேரத்துக்கு நிரப்பும், இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை குறையும். பசியை தூண்டும் கரெலின் (ghrelin) ஹார்மோன்அளவை இது குறைத்து, மீண்டும் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தைக் குறைக்கும். புரதம் உடலின் தசைகளுக்கு வலுவூட்டுகிறது. வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, கலோரிகளை எரிக்கும் திறனையும் அதிகரிக்கிறது. புரதம் நிறைந்த முட்டை, பருப்பு, பால், சீஸ், தயிர், மீன், கோழி இறைச்சி மற்றும் சோயா போன்றவற்றை தினசரி உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். 3. மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிருங்கள் கொஞ்சம் கூட நார்ச்சத்து இல்லாத மைதா பிரெட், சிப்ஸ் மற்றும் கிராக்கர்ஸ் போன்றவை எளிதிலேயே செரிமானமாகிவிடும், இதனால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும். இவ்வளவு வேகமாக ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது, பசி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை, டைப் 2 நீரிழிவு நோய் போன்றவற்றுக்கான ஆபத்தும் அதிகமாகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கேக்குகள், குக்கீகள் (பிஸ்கெட்) மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற மிகவும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை தவிர்க்குமாறு நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேருவதை மிக விரைவாக அதிகரிக்கும். எனவே, இவற்றுக்கு பதிலாக முழுமையான தானிய பிரெட், வறுத்த தின்பண்டங்கள், பழங்கள் மற்றும் நட்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம். சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தலை குறைக்க வேண்டும். 4. போதுமான உறக்கம் போதுமான தூக்கம் இல்லாதபோது, பசி ஹார்மோனில் விளைவுகளை ஏற்படுத்தி அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும். லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் படி, வயிற்றுப்பகுதியில் உற்பத்தியாகும், பசி உணர்வை அதிகரிக்கும் க்ரெலின் என்கிற ஹார்மோன், போதிய தூக்கமின்மையால் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அதை சரிசெய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் ஏற்படும்போது ரத்தத்தில் மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசால் (cortisol) எனும் ஹார்மோன் உற்பத்தியாகும். இதுதவிர, நாம் மன அழுத்தத்தில் இருக்கும் போது உணவில் அதிக கவனம் செலுத்தாமல், நம்மை அதிலிருந்து மடைமாற்றும் எல்லாவித உணவுகளையும் சாப்பிடும் அளவுக்கு சென்றுவிடுவோம். 5. உடற்பயிற்சியின் அவசியம் உடற்பயிற்சிகள் மற்றும் ஏதாவது பயிற்சிகளின் மூலம் ஆக்டிவாக இருப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது, குறிப்பாக வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க உதவுகிறது. தினமும் வேகமான நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது யோகா போன்றவற்றை மேற்கொள்ளும்போது அவை கொழுப்பை குறைப்பதோடு மட்டும் அல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் வேகப்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்வது தசைகளுக்கு வலுவூட்டுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்பை குறைப்பது நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்துகளை குறைக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx277kp52rdo