Aggregator

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

1 month ago
தமிழர்களுடன் ஒட்டி உறவாட சுமத்திரன்(எந்த வித பிரயோசனமும் கிடைக்காது தமிழர்களுக்கு) சிங்களவர்களுடன் ஒட்டி உறவாட மோடி ஜீ ..இதனால் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்கும் அதே நேரம் சிங்கள அதிகார வர்க்கம் தமிழர் இருப்பை இல்லாமல் பண்ண உதவிகள் இந்தியாவிடமிருந்து கிடைக்கும்...

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

1 month ago
வாழை மரம் அவ்வளவுக்கு தற்பொழுது யாழில் கிடைக்குமா என்பது கேள்விக்குறி....வாழை இலையில் சைவர்கள் சாப்பிடுவார்கள். யாழ் வாழ் இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் எப்படி சாப்பிட முடியும்?

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

1 month ago
நாங்கள் அந்த கால யாழ்தேவி,மெயில் ரயில் வண்டிகளில் கொழும்புக்கோ,மட்டகளப்புக்கோ பயணம் செய்யும் பொழுது உந்த வாழையிலையில் ஆட்டிறைச்சி கறியும் இடியப்பமும் கட்டி கொண்டு போய் சாப்பிட்ட ஆட்கள் தானே...அதில் ஒர் சுவையிருக்கு ..ரயில் ஆட இடியப்பத்தையும் இறைச்சியை குழைத்து அடிக்க ,,உறைப்பு அதிகமாக இருந்தால் கண்ணாடி தண்ணீர் போத்தலில் ஊர் தண்ணீரை மதவாச்சி தாண்டினவுடன் குடிச்ச ஆட்கள்

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
எனக்கு போஸ்டுக்கு 200 ரூபாய் நட்டம். இப்போ சீமான்+திமுக ராசி ஆகிவிட்டதால் சீமானை திட்டி போடும் பதிவுகளுக்கு வெறும் 20 ரூபாய்தான் தருகிறார்கள். இப்படியே போனால் நானும் திரள்நிதியில் குடும்பம் நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்படலாம். பிகு தமிழ் நாட்டில் எது நடப்பினும் என் தனிவாழ்வில் ஒரு உரோமம் வீழ்ந்த பாதிப்பும் கூட இல்லை. இலங்கை அரசியல் கூட, வெளிநாட்டில் வாழுவோரின் நில உரிமையில் கைவைக்காதவர்ரை பாதிப்பு குச் நஹி. ஆனால்…தமிழ் நாட்டில் சாதி அடிப்படையிலான சங்கிகள் வளர விடக்கூடாது என்பது, தமிழ் நாட்டின் நண்பனாக எனது நிலைப்பாடு. பெரியார் அல்ல…அதற்கு முன் வள்ளார்….அதற்கும் முன் 9ம் நூற்றாண்டில் சிவவாக்கியர், இராமானுஜர் காலம் தொட்டு - சங்கிதுவத்தை எதிர்த்த, எதிர்கின்ற மண் தமிழ் நாடு. அதன் மீதும் காவி கறை வீழ்வது அதன் சகஜ வாழ்வுக்கு நல்லதல்ல. தமிழ் நாடு தவிர் இதர இந்தியா சங்கி மயமாகி, இந்து-முஸ்லீம் என வெட்டுப்பட்டால் எனக்கு அது பற்றி எந்த அக்கறையும் இல்லை. சொல்லப்போனால் வட இந்தியாவில் இப்படி ஒரு இரெண்டாம் பாகிஸ்தான் உருவாகி இந்தியா சிதறி - அதன் மூலம் தென்னிந்தியா, அதிலும் தமிழ்நாடு தனியாக வந்து விடாதா என்ற ஒரு நப்பாசையும் எனக்கு உண்டு.

பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்

1 month ago
தீவில் இப்ப எல்லாம் சட்டப்படி தான் நடக்குதாம்... பொலிசார் வீடு புகுந்தால்(உத்தர்வின்றி உள்ளே புகுந்தால்) சட்டத்தரனிகளே பகிரங்கமாக போராட்டம் நடத்த கூடியதாக இருப்பதற்கு காரணம் எங்கள் செந்தோழர் களின் ஆட்சி யாழில் நடப்பதால் தான்... இது தான் செய்தி ....இது தான் ஐ,நா சபைக்கு அரசு சொல்லும் செய்தியும் .....செம்மணி புதைகுழி அல்ல முக்கியம்🤔

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்

1 month ago
வைத்தியர் மனோகரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

1 month ago
இல்லை. சாப்பட்டு கோப்பைக்கு மேல் பொடும் மிக மெல்லிய பொலித்தீன் தாள். தடை நல்ல விடயம். சூழலுக்கு ஆபத்தனது. பூனை நாய் சப்பிட்டுட்டு சரியாய் கஷ்டபடும். சின்னனைலை 50 சதத்துக்கு 10 லஞ்ச் சீற்றை கொத்துரொட்டி கடையில வாங்கி பரசூட் விடுவம்.

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திடம் வீடியோ காலில் விஜய் பேசியது என்ன?

1 month ago
விஜய் 41 குடும்பங்களையும் பனையூருக்கு வரச் சொல்லவில்லையே என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.....................🫣. 'ரசிகர்களா, நடிகர்களா.............. தமிழ்நாட்டில் இதில் எவருக்கு அதிக உளவியல் ஆலோசனைகள் தேவை..........' என்று ஒரு வழக்காடு மன்றமே வைக்கலாம் போல............... முழுச்சட்டையையும் கிழிக்காமல் விடமாட்டார்கள்............

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

1 month ago
விகடனில் இருந்து சீமான் கொடுத்த மன்னிப்பு கடித வாசகம்….. "எனது சொல், செயல்களால் நடிகைக்கு வலி, காயம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன். இனி நடிகை குறித்து அவதூறாகப் பேசமாட்டேன்" என்றும் சீமான் தெரிவித்திருக்கிறார். பிகு இங்கே எங்கள் அண்ணன் அவதூறு பேச்சுக்கு மட்டுமே மன்னிப்பு கேட்டார் என உருட்டியவர்களுக்கு….. மாண்பு மிகு சீமான் விஜயலட்சுமி மீதான தன்…. செயல்களுக்கும்…. மன்னிப்பு கேட்டுள்ளார்….. செயல்களில் பாலியல் வன்கொடுமை, திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி உடலுறவு வைத்ததும் அடங்கும் என்பது என் வாதம். Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான் https://www.vikatan.com/Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்...

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

1 month ago
சாப்பிடுகின்ற பிளேட்டுக்கள் பல தடவைகள் கழுவி உடைகின்ற வரை மறுபடியும் பாவிக்க கூடியவை என்பதால்சுற்று புற சூழல் பாதுகாப்புக்கும் சுத்தத்திற்கும் உகந்தவை.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
ஐயா, கடந்த இரு நாட்களாக நீங்கள் சொன்னதை மனதில் அசை போட்டேன். வரும் செய்திகள், அதிமுக+பாஜக+தவெக+பாமக+தேமுதிக+கொசுறுகள் கூட்டணி அமையும் என்றே சொல்வதாகபடுகிறது. இப்படி அமையின் திமுக ஒரே முதல்வரை அடுத்தடுத்து கதிரையில் அமர்த்தியது இல்லை என்ற வாக்கு பலிக்கும். திமுகவை அகற்றல் எனும் நன்மையோடு பார்க்கும் போது…பாஜகவுக்கு 20 சீட்டு என மட்டுப்படுத்த முடிந்தால் - இந்த கூட்டணி வெல்வதும் ஆபத்தில்லையோ என எண்ண தோன்றுகிறது. ஆனால் தேர்தலின் பின் ஆட்சியில் பங்கு என்பதுதான் உதைக்கிறது. தேர்தலுக்கு பின் பாஜக ஆட்சியை, கட்சியை கபளீகரம் செய்வதை தடுக்கும் இயலுமை எடப்பாடிக்கு இல்லை என்பதே என் கணிப்பு.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

1 month ago
இலங்கையில் எத்தனையோ தமிழ்கட்சிகள் இருக்க இந்த ஊத்தைவாளிகளை தேடி வெளிநாட்டு பிரதிநிதிகள் தேடிவந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மர்மம் என்ன? இந்த கேள்வி 40 வருட கால அனுபவத்தில் வந்தது.

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திடம் வீடியோ காலில் விஜய் பேசியது என்ன?

1 month ago
சும்மா போவியா…🤣 சீமான் டு அண்ணாமலை வரை காமெடி பீசுங்க கூட இதை வச்சு அரசியல் பண்றானுக…. நியாயமா முதல் ஆளா நின்றிருக்க வேண்டிய விஜை… வீடியோ கால், டிரங் கால் எண்டு காமெடி பண்றார்🤣.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
இத்தனை வருடங்கள் தோற்றாகி விட்டது, அப்படியே இந்த வருடமும் இந்தியா தோற்று, அகஸ்தியனை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்..........🤣. இன்றைக்கு Mooney அடித்தார்........... அடுத்த போட்டியில் Sunny என்று ஒருவர் வந்து அடிப்பார்............ இப்படித்தானே போட்டிகள் தாறுமாறாக போய்க் கொண்டிருக்கின்றன..........ஆனால் ஃபைனலில் எதுவுமே மாறாது............🤣.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

1 month ago

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

Vignesh SelvarajPublished: Wednesday, October 8, 2025, 23:32 [IST]

EPS Hints at Possible TVK AIADMK Alliance During Kumarapalayam Campaign

நாமக்கல்: அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

2026 சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "திமுக வெற்று கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி திமுக அரசு சாதனை படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது.

கரூரில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பிற்கு நீதிமன்றம் சொல்வதற்கு முன்னதாக திமுக அரசு விசாரணை குழுவை ஏன் அமைத்தது. ஒரு துறையின் செயலாளர் திமுகவின் கைக்கூலியாக கரூர் சம்பவத்திற்கு பேட்டியளிக்கிறார். ஏடிஜிபி சொல்வது ஏற்புடையது அல்ல. 41 உயிரிழப்பிற்கு சிபிஐ விசாரணை வேண்டும். தவறு செய்த காவல்துறையை வைத்தே விசாரணை நடத்தினால் எப்படி நியாயம் கிடைக்கும். இந்த சதி த்திட்டத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியுடன் விஜய் ரசிகர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, "பாருங்க.. கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க.. ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்க செவியைத் துளைக்கும்" எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "சிறந்த ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மை என்னவென்றால், வறுமை காரணமாக மக்கள் உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடப்பதாக திமுக அரசு அமைத்த குழுவே அறிக்கை கொடுத்தது. அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்துள்ளனர், ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடுமையாக சாடியிருக்கிறது. இதற்கு என தனி அதிகாரிகள் அமைக்கப்பட்டு, ஒரு மாதம் மேலாகிறது, ஆனால் இன்னமும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் திமுக எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

அண்மையில் கரூரில் 41 பேர் பலியானார்கள், அதற்கு இரவோடு இரவாக போகிறார், குழு அமைக்கிறார், வேகமாக விசாரிக்கிறார். இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா? கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? இதில் தான் உள்நோக்கம் இருக்கிறது. இதெல்லாம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஆழமாகப் பேசமுடியவில்லை. ஒருநபர் கமிஷன் அமைத்த பிறகு யாரும் வெளியில் தகவல் சொல்லக் கூடாது என்பது நியதி. ஆனால் திமுக அரசு கமிஷன் அமைத்து, அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க வைக்கிறார்கள்.

கரூரில் ஒரு துயர சம்பவம் நடந்தது. மக்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று துணை முதல்வர் நினைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போனார், துயரத்தைக் கேள்விப்பட்டு திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார், மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நேராக திருச்சி சென்று மீண்டும் துபாய் போய்விட்டார், இவரெல்லாம் துணை முதல்வராக இருப்பதற்கு தகுதி இருக்கிறதா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை. இங்கிருந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவிகள் செய்தால் நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆள வேண்டுமா?

41 உயிரிழப்புக்கு நியாயமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது காவல்துறை தொடர்பான குற்றச்சாட்டு. இதனை காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்குமா? கிடைக்காது." எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

https://tamil.oneindia.com/news/chennai/eps-hints-at-possible-tvk-aiadmk-alliance-during-kumarapalayam-campaign-741671.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

யோவ் விஜை….

வாய்யா வெளில 🤣…

எடப்பாடி சி பி ஐ விசாரணை கோருகிறார்….

அதை கோர வேண்டிய விஜையோ அமைதி காக்கிறார்🤣.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

1 month ago
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி! Vignesh SelvarajPublished: Wednesday, October 8, 2025, 23:32 [IST] நாமக்கல்: அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திமுக வெற்று கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி திமுக அரசு சாதனை படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. கரூரில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பிற்கு நீதிமன்றம் சொல்வதற்கு முன்னதாக திமுக அரசு விசாரணை குழுவை ஏன் அமைத்தது. ஒரு துறையின் செயலாளர் திமுகவின் கைக்கூலியாக கரூர் சம்பவத்திற்கு பேட்டியளிக்கிறார். ஏடிஜிபி சொல்வது ஏற்புடையது அல்ல. 41 உயிரிழப்பிற்கு சிபிஐ விசாரணை வேண்டும். தவறு செய்த காவல்துறையை வைத்தே விசாரணை நடத்தினால் எப்படி நியாயம் கிடைக்கும். இந்த சதி த்திட்டத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியுடன் விஜய் ரசிகர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, "பாருங்க.. கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க.. ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்க செவியைத் துளைக்கும்" எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. மேலும் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "சிறந்த ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மை என்னவென்றால், வறுமை காரணமாக மக்கள் உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடப்பதாக திமுக அரசு அமைத்த குழுவே அறிக்கை கொடுத்தது. அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்துள்ளனர், ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடுமையாக சாடியிருக்கிறது. இதற்கு என தனி அதிகாரிகள் அமைக்கப்பட்டு, ஒரு மாதம் மேலாகிறது, ஆனால் இன்னமும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் திமுக எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்மையில் கரூரில் 41 பேர் பலியானார்கள், அதற்கு இரவோடு இரவாக போகிறார், குழு அமைக்கிறார், வேகமாக விசாரிக்கிறார். இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா? கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? இதில் தான் உள்நோக்கம் இருக்கிறது. இதெல்லாம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஆழமாகப் பேசமுடியவில்லை. ஒருநபர் கமிஷன் அமைத்த பிறகு யாரும் வெளியில் தகவல் சொல்லக் கூடாது என்பது நியதி. ஆனால் திமுக அரசு கமிஷன் அமைத்து, அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க வைக்கிறார்கள். கரூரில் ஒரு துயர சம்பவம் நடந்தது. மக்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று துணை முதல்வர் நினைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போனார், துயரத்தைக் கேள்விப்பட்டு திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார், மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நேராக திருச்சி சென்று மீண்டும் துபாய் போய்விட்டார், இவரெல்லாம் துணை முதல்வராக இருப்பதற்கு தகுதி இருக்கிறதா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை. இங்கிருந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவிகள் செய்தால் நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆள வேண்டுமா? 41 உயிரிழப்புக்கு நியாயமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது காவல்துறை தொடர்பான குற்றச்சாட்டு. இதனை காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்குமா? கிடைக்காது." எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. https://tamil.oneindia.com/news/chennai/eps-hints-at-possible-tvk-aiadmk-alliance-during-kumarapalayam-campaign-741671.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி யோவ் விஜை…. வாய்யா வெளில 🤣… எடப்பாடி சி பி ஐ விசாரணை கோருகிறார்…. அதை கோர வேண்டிய விஜையோ அமைதி காக்கிறார்🤣.