Aggregator

இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி

1 month 1 week ago

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கப்பல்

Published By: VISHNU

12 AUG, 2025 | 02:06 AM

image

(எம்.மனோசித்ரா)

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். ரனா' திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள இக்கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன், 300 அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது, மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ. ஸ்ரீசன் பணியாற்றுகின்றார்.

WhatsApp_Image_2025-08-11_at_16.51.12.jp

இக்கப்பல் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர்கள் பங்கேற்பார்கள், அத்துடன் தீவில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இலங்கை இராணுவத்தினருக்கான ஒரு யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கும், திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

இக்கப்பல் வியாழக்கிழமை (14) நாடு திரும்பவுள்ளது.

https://www.virakesari.lk/article/222362

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து

1 month 1 week ago
முத்தையன்கட்டு குளத்தில் இளைஞர் சடலம் – பொருட்களை திருட வந்தவர்களை விரட்டியதில் ஏற்பட்டது என பொலிஸ் விளக்கம் Published By: VISHNU 12 AUG, 2025 | 01:59 AM (எம்.வை.எம்.சியாம்) முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இருந்து உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பொறுப்பின் கீழ் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடுவதற்கு முற்பட்டவர்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே குறித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் எந்தவித தலையீடும் இன்றி விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன் கட்டு இடதுகரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் எனும் இளைஞர் காணாமல் போயிருந்தார். தொடர்ச்சியாக அப்பிரதேச மக்களால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த 9ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த இளைஞர் உள்ளிட்ட 5 பேர் முத்தையன்கட்டு குளத்துக்கு அண்மித்து அமைந்துள்ள 63 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாமுக்கு சென்றிருந்த தருணத்தில் இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். இந்த பின்னணியில் இந்த சம்பவத்துக்கு நீதி வேண்டும் எனவும் இராணுவத்தினரே குறித்த இளைஞரின் மரணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சம்பவத்தை தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு; முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் ஒட்டுச் சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப்படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்கு அண்மைய நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி இரவு குறித்த முகாமையில் அகற்றப்பட்ட இரும்பு மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதற்காக முகாமின் வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஐந்து பேரை வெளியேற்றுவதற்காக முகாமில் இருந்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்போது தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் முத்தையன்கட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பொறுப்பின் கீழ' விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் குறித்த 5 பேரும் முகாம் வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களை விரட்டியடிக்க முற்பட்ட போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து குறித்த முகாமில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த பொருட்களை திருடுவதற்கு சந்தேக நபர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் மேலும் இரு இராணுவ சிப்பாய்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய சந்தேகநபர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எந்தவித தலையீடும் இருக்காது. விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் தராதரம் பாராமல் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/222361

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

1 month 1 week ago
மைத்திரி - ரணில் அரசாங்க உறவும் ஹர்த்தாலும் ******** ****** **** *இராணுவ எண்ணிக்கையை குறைக்க ரணில் முன்வைத்த யோசனை. *இராணுவ எண்ணிக்கை குறைப்பு - IMF பரிந்துரை! *முல்லைத்தீவு சம்பவத்துக்கு பின்னணி இதுதான்! *** *** *** 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில், வடக்கு கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், 2009 இற்கு முன்னரான முப்பது வருட ஆயுதப் போராட்டம் ஒட்டுமொத்த இன விடுதலை என்ற அடிப்படையில் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரான முப்பது வருடங்கள் அதாவது, 1950 களில் இருந்து அஹிம்சை வழியில் நடந்தன. அது சட்ட மறுப்பு போராட்டமாகவே இருந்தது. இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் யாப்புச் சட்டங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதை மையப்படுத்தியே "தமிழ்த் தேசியம்" என்ற கோட்பாடு எழுந்தது. ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தால் தான், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பேச முடியும் என்ற புதிய கற்பிதம் ஒன்றை சில தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் முன்வைத்தனர்... இக் கற்பிதம் வேடிக்கையானது என்ற பின்னணியில், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்தை எப்படி நோக்குவது? தேர்தலில் தத்தமது கட்சிகளின் ஆசனங்களை அதிகரிப்பது என்ற ஒரேயொரு இலக்கைத் தவிர, வேறு அரசியல் உத்திகள் - இராஜதந்திரம் எந்த ஒரு அரசியல் கட்சியிடமாவது இருந்ததா? ஆகக் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு நிதி வழங்கும் நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே பரிந்துரைத்திருந்தன. ஆனால், இப் பரிந்துரைகள் கூட உரியமுறையில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்த விரும்பவில்லை என்று ஏதாவது ஒரு தமிழ்க் கட்சி பிடிவாதமாக நின்று அழுத்தம் கொடுத்ததா? இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்துக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்ததாக எகனாமி நெக்ஸ்ட் (EconomyNext) என்ற சஞ்சிகை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசுரித்திருந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தது. இக் கட்டுரையை மேற்கோள் காண்பித்து "த டிப்ளோமற்“ (thediplomat) என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த ரதீந்திர குருவிற்ற (Rathindra Kuruwitaa) என்ற சிங்களப் பத்திரிகையாளர், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund - IMF) மகிழ்விக்க, ரணில் இராணுவ எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக விமர்சித்திருந்தார். ஆனாலும் ஐஎம்எப் வழங்கிய பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச செலவினங்களை குறைக்க, இராணுச் செலவினங்களை குறைப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை ரணில் அப்போது செய்திருக்கிறார். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பற்றி ஐஎம்எப் ஒருபோதும் வெளிப்படையாக பரிந்துரைக்கவில்லை. அவ்வாறிருந்தும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜேபிவியும் ரணிலின் இராணுவ எண்ணிக்கை குறைப்பு முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. ஐஎம்எப்பின் பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமே தவிர, இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க முடியாது என தேர்தல் பிரச்சாரங்களிலும் ஜேவிபி சொல்லியிருந்தது. எவ்வாறாயினும் வடக்குக் கிழக்கில் இதுவரை இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் பற்றிய விடயங்களைத் தவிர வேறு பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க முடியும் என்ற தொனியில் கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்திடம் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருந்தது. ஆகவே, இப் பின்னணியில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்துள்ள ஜேவிபியிடம் இராணுவத்தை குறைக்கும் திட்டத்தை எதிர்பாரக்க முடியாது. ஆனாலும், மீள் நல்லிணக்கம் (Reconciliation) என ஐஎம்எப் அடிக்கடி ஞாபகப்படுத்தி வரும் மொழியின் உள்ளடக்கத்தின் (Content) பிரகாரம், வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இராணுவ முகாம்கள் பலவற்றையும் மூடித்தான் ஆக வேண்டும்... ஆனால், இதற்கு அநுர அரசாங்கம் மாத்திரமல்ல வேறு எந்தவொரு சிங்கள அரசியல் தலைவர்களும் உட்படுவார்கள் என்று கூறுவதற்கு இல்லை. எவ்வாறாயினும் உள்ளகத் தகவல்களின் பிரகாரம், இராணுவ எண்ணிக்கைகள் குறைக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் அநுர அரசாங்கத்திடம் மறைமுகமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது. இல்லையேல் நிதி கிடைக்காது போலும். ஆகவே இதனை அறிந்துதான் ஹர்த்தால் ஏற்பாட்டை சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செய்திருக்கக் கூடும்....என்ற சந்தேகங்கள் இல்லாமில்லை.... அவ்வாறு இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டால், தமது போராட்டமே காரணம் என காணிப்பித்து தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கமாகவும் அது இருக்கலாம். ஆனால், இராணுவ எண்ணிக்கை குறைப்பிற்கு அநுர அரசாங்கம் தயாராக இல்லை என்பதை சமீபகால அணுகுமுறைகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இப் பின்புலத்தோடு---- 2015 ஆம் ஆண்டு ரணில் - மைத்திரி அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கையை பிணை எடுத்தது சம்பந்தன் தலைமையிலான அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். இந்த ஞாபகப்படுத்தலின் பிரகாரம் ---- முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் தாக்கப்பட்டு ஒருவர் மரணித்தமைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியதற்கு யார் பொறுப்பு என சிந்திக்க வேண்டும்! ஏனெனில் 2015 இல்தான் இராணுவ முகாம் விஸ்தரிப்பு - காணி அபகிரிப்பு- புத்த கோவில் கட்டும் நகர்வுகள் போன்ற ஆக்கிரமிப்புகள் சட்ட ரீதியாக மாற்றப்பட்டன. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட அரச திணைக்களங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் இன்றுவரை முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே ----- 2015 இல் இழைத்த இக் குற்றத்துக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலும், வரலாறு மன்னிக்காது. இயற்கை நீதி பதில் சொல்லும். ஹர்த்தால் நடத்தி சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல், இராணுவ எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக கொழும்பில் உள்ள ஐஎம்எப் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பது பற்றிச் சிந்திப்பதே சிறந்த பரிகாரம். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பரிந்துரை தமிழர்களுக்கானது அல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீட்சிக்கானது. இருந்தாலும், அழுத்தம் கொடுத்து குறைந்த பட்சம் இராணுவ எண்ணிக்கை குறைக்கும் பணியையாவது உருப்படியாக செய்ய வேண்டும். அத்துடன், ஜெனீவா மனித உரிமை சபைக்கு எழுத்து மூலம் உடனடியாகவும் கூட்டாகவும் அறிவிக்கவும் வேண்டும். மாறாக... இது இன அழிப்பு என்று தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் போலியாகக் கருத்துச் சொல்லி, கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வியூகங்களை வகுக்க வேண்டாம். இப் பிழையான அரசியல் உத்திகள் ஊடே சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் தன்மைகளை அறிந்து அதன் ஊடாக காய் நகர்த்தும் இராஜதந்திர முறைமை, 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தரப்பிடம் அற்றுப் போயுள்ளது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம் என்பதன் ஊடாக தமிழ் மரபு அடையாள அழிப்பு நடவடிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் 2009 இற்குப் பின்னரும் அரங்கேறுவதற்கு இதுவே காரண - காரியம் என்பதும் பட்டவர்த்தனம். ஆனால் இயற்கை நீதியும் மக்களின் சமகால பட்டறிவு - உணர்வுடன் கூடிய புரிதல்களும் பலருடைய வாக்கு வங்கிச் சரிவை ஏற்படுத்தும் என்பது கண்கூடு... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid033Brh5tG5HfTNqrkELWcoZy3LPn39sDRg411GtATRu2PzgKsDEEy7EivmTZLyB53il/?

ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தும் தமிழர்: யார் இந்த செனுரன் முத்துசாமி?

1 month 1 week ago
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2025 இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு வெளிநாட்டு அணிகளுக்காக கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர், தற்போதும் சிலர் விளையாடி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தை வேராகக் கொண்டு வெளிநாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடியது மிகச் சிலர்தான். கடந்த காலங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஆல்வின் ஐசக் காளிச்சரண், மகிந்திரா நாகமுத்து, சிவ்நரேன் சந்தர்பால் உள்ளிட்ட சில வீரர்கள் விளையாடியுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியில் தமிழர் தென் ஆப்ரிக்க அணியில் இதற்கு முன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஹசிம் ஆம்லா, கேசவ் மகராஜ் உள்ளிட்டோர் விளையாடி இருந்தாலும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வீரர் ஒருவர்கூட விளையாடியதில்லை. அந்த குறையைப் போக்கும் விதத்தில் முதல்முறையாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட செனுரன் முத்துசாமி இடம் பெற்று விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். செனுரன் முத்துசாமியின் டெஸ்ட் போட்டி அறிமுகமே அமர்க்களமாக இருந்தது. 2019ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய முத்துசாமி விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்து, வாழ்வில் மறக்க முடியாத வகையில் முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது தென் ஆப்ரிக்க டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டி வருகிறார். ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களை அதன் சொந்த மண்ணில் திணறவிட்டு, நிலைகுலைய வைப்பது எளிமையானது அல்ல. அதிலும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் சுழற்பந்துவீச்சு மூலம் பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஒரு பந்துவீச்சாளர் இருந்துவிட்டால் உலக கிரிக்கெட்டின் பார்வையை ஈர்த்துவிடுவார். அந்த வகையில் தென் ஆப்ரிக்காவின் பேட்டிங் ஆல்ரவுண்டரான செனுரன் முத்துசாமி இப்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளார். இடதுகை சுழற்பந்து(ஆர்த்தடாக்ஸ்) வீச்சாளரான முத்துசாமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2 நாட்களுக்கு முன் முடிந்த முதல் டி20 போட்டியில் பிரமாதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய முத்துசாமி 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 4 ஓவர்கள் வீசி, 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். யார் இந்த செனுரன் முத்துசாமி? செனுரன் முத்துசாமி தென் ஆப்ரிக்காவில் முதல்தரப் போட்டிகளிலும், ஏ லிஸ்ட் போட்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியுள்ளார். முதல் தரப்போட்டிகளில் 9 சதங்கள், 20 அரைசதங்கள் உள்ளிட்ட 5,111 ரன்களையும், 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஏ லிஸ்ட் போட்டிகளில் 2,364 ரன்களையும், 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முத்துசாமி அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின்தான் மீண்டும் தேசிய அணியில் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை 5 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முத்துசாமி 173 ரன்கள் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் தென் ஆப்ரிக்க ஒருநாள், டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்புப் பெற்று முத்துசாமி விளையாடி வருகிறார். 4 டி20 போட்டிகளில் ஆடிய முத்துசாமி 4 விக்கெட்டுகளை எடுத்து, 15 ரன்கள் சேர்த்துள்ளார். கீழ்வரிசை பேட்டராக, முத்துசாமி தென் ஆப்ரிக்க அணியில் களமிறங்குவதால், பேட்டிங் செய்வதற்கு பெருமளவு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஜனநாயகமும்- முத்துசாமியின் பிறப்பும் தென் ஆப்ரிக்காவில் நாடல் மாகாணத்தில், டர்பன் நகரில் 1994ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதி செனுரன் முத்துசாமி பிறந்தார். தென் ஆப்பிரிக்கா தேசம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு, 1994ம் ஆண்டுதான் ஜனநாயகத்துக்கு திரும்பியது. அந்த நேரத்தில் அந்நாட்டில் பிறந்தவர்தான் செனுரன் முத்துசாமி. அதனால்தான் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தில் நாகப்பட்டினம் பூர்வீகம் செனுரன் முத்துசாமியின் பூர்வீகம் சென்னைதான் என்றாலும், உறவினர்கள் பலரும் இன்னும் நாகை மாவட்டம், நாகப்பட்டினத்தில் வாழ்ந்து வருகிறார்கள். முத்துசாமியின் தந்தைவழி தாத்தா காலத்திலேயே தென் ஆப்ரிக்காவுக்கு புலம்பெயர்ந்துவிட்டனர். இருப்பினும், தமிழக்கத்தில் உள்ள உறவினர்களோடு முத்துசாமி குடும்பத்தினருக்கு உறவுநிலை இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த தகவலை ஒரு பேட்டியில் செனுரன் முத்துசாமியே தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்து பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த செனுரன் முத்துசாமி, தென் ஆப்ரிக்காவில் அடிக்கடி கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருப்பதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டுக்கு கடந்த 2019ம் ஆண்டு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், "தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்றபோதிலும், தமிழகத்துக்கு இருமுறை வந்து நாகையில் உள்ள உறவினர்களை சந்தித்துச் சென்றிருக்கிறேன். என் குடும்பத்தினர் சிலர், உறவினர்கள் இன்னும் நன்றாக தமிழ் பேசினாலும், எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன். இந்தியாவுடன் எங்களுக்கு இருக்கும் பிணைப்பு அற்புதமானது, எங்கள் கலாசாரம் எப்போதும் இந்தியராகவே வைத்திருக்கிறது" என முத்துசாமி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, "எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன்" என்றார் முத்துசாமி சிறுவயதிலேயே கிரிக்கெட் பயிற்சி டர்பனில் உள்ள கிளஃப்டன் கல்லூரியில் படிப்பை முடித்த முத்துசாமி, க்வா ஜூலு நாடல் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். டர்பனில் முத்துசாமி வசித்தபோது சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத ஆசையோடு இருந்ததால், முதல் வகுப்பு படிக்கும்போதே முறையான பயிற்சியில் பெற்றோரால் சேர்க்கப்பட்டார். க்வா ஜூலு நாடல் மாகாணத்தில் 11 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் செனுரன் முத்துசாமி சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றார், பள்ளிப் போட்டிகளிலும், உள்ளூர் போட்டிகளிலும் முத்துசாமியின் ஆட்டம் பிரமாதப்படுத்தியது. முத்துசாமியின் திறமையான ஆட்டம் அவரை தென் ஆப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்குள் தேர்வு செய்ய வைத்தது. இவரின் ஆட்டத்தைப் பார்த்த டால்பின் அணி, 2015-16ம் ஆண்டு அணியில் ஒப்பந்தம் செய்தது. அதன்பின் க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமி இடம் பெற்று விளையாடினார், 2017ம் ஆண்டு டி20 குளோபல் லீக் தொடரில் கேப்டவுன் நைட் ரைடர்ஸ் அணிக்காக முத்துசாமி ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2018ம் ஆண்டு நடந்த ஆப்ரிக்க டி20 கோப்பைத் தொடருக்காக க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2021, ஏப்ரல் மாதத்தில் நார்த்வெஸ்ட் அணியிலும் முத்துசாமி இடம் பெற்றார். 2021-22ம் ஆண்டு நடந்த சிஎஸ்ஏ எனப்படும் கிரிக்கெட் சவுத் ஆப்ரிக்கா ஒருநாள் தொடரில் முத்துசாமி தனது முதல் சதத்தை மேற்கு மாகாணத்துக்கு எதிராகப் பதிவு செய்தார். இதுதான் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் முத்துசாமியின் முதல் சதமாக அமைந்தது. சங்கக்கராவால் ஈர்க்கப்பட்டவர் 2016-17ம் ஆண்டில் டால்பின் அணியில் நிரந்தரமாக முத்துசாமிக்கு இடம் கிடைத்தது. பேட்டிங்கைப் பொருத்தவரை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்ககராவை பின்பற்றி அவரைப் போல் பேட்டிங் செய்ய முத்துசாமி ஆர்வமாகினார், அவரின் பேட்டிங் ஸ்டைலைப் போலவே பல ஷாட்களையும் முத்துசாமி தனது ஆட்டத்தில் கொண்டு வந்தார். முத்துசாமிக்கு திருப்புமுனையாக அமைந்தது 2017-18ம் ஆண்டு சீசன்தான். இதில் நைட்ஸ் அணிக்கு எதிராக தொடக்க வீரராக ஆடிய முத்துசாமி 181 ரன்கள் குவித்தார். அதன்பின் தனது பேட்டிங் வரிசையை கீழ்வரிசைக்கு மாற்றிய முத்துசாமி, சுழற்பந்துவீச்சில் கவனத்தைச் செலுத்தினார். அந்த ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி, 4 விருதுகளையும், அந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றார். 2018ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்ட முத்துசாமிக்கு சுழற்பந்துவீச்சில் பயிற்சி அளிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு இந்தியப் பயணத்துக்கு தயார் செய்யப்பட்டார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 2017-18ஆம் ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி மறக்க முடியாத முதல் விக்கெட் இதற்கிடையே க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமியின் ஆட்டத்தைப் பார்த்த தென் ஆப்ரிக்க அணியின் தேர்வாளர்கள், 2019ம் ஆண்டு இந்திய பயணத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் முத்துசாமியை தேர்வு செய்தனர். இதையடுத்து, 2019ம் ஆண்டு இந்திய பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துசாமி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2ம் தேதி நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார். முத்துசாமிக்கு டெஸ்ட் அறிமுகம் வாழ்வில் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. டெஸ்ட் வாழ்க்கையில் தனது முதல் விக்கெட்டாக அப்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை 20 ரன்னில் காட்அன்ட் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து முத்துசாமி மறக்க முடியாத நினைவுகளைப் பெற்றார். அதன்பின் தென் ஆப்ரிக்க அணியில் மீண்டும் இடம் பெற முத்துசாமிக்கு நீண்ட இடைவெளி காத்திருக்க நேர்ந்தது. கேசவ் மகராஜ், ஷம்சி உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்களின் கடும் போட்டியால் 6 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆண்டிலிருந்து மீண்டும் அணிக்குள் முத்துசாமி வாய்ப்புப் பெற்றார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்க அணியில் முத்துசமி இடம் பெற்றாலும், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. "இதற்காகத்தான் காத்திருந்தேன்" தென் ஆப்பிரிக்க அணிக்குள் மீண்டும் வந்தது குறித்து முத்துசாமி கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் "மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தது அற்புதமான தருணம். இந்த வாய்ப்புக்காகத்தான் நான் இதுவரை காத்திருந்தேன், கடந்த சில மாதங்களாக சீரான வாய்ப்புக் கிடைப்பது சிறப்பானது. அணிக்குள் இருந்தாலும், வீரர்களுக்கு குளிர்பானங்கள் அளிக்கும் வேலையே செய்தபோதிலும் என்னால் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது, அதனால்தான் என்னால் அணிக்குள் வர முடிந்தது. வித்தியாசமான தளங்களில் விளையாடும் பக்குவத்தை பெற முடிந்தது" எனத் தெரிவித்தார். பயிற்சியாளர் கான்ராட்டின் முயற்சி தென் ஆப்ரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறையாக வென்றபின் அணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக புதிய பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் புதிய வீரர்களை அடையாளம் கண்டு தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளித்து வருகிறார். அதில் முக்கியமானவர் முத்துசாமி. முத்துசாமிக்கு திறமை இருந்தபோதிலும் போதுமான வாய்ப்புக் கிடைக்காமல் சர்வதேச அளவில் 8 ஆட்டங்களில் மட்டுமே ஆடி இருந்தார். அவருக்கு தொடர்ச்சியாக கடந்த பாகிஸ்தான், ஜிம்பாப்பே தொடரிலிருந்து வாய்ப்புகளை வழங்கி பயிற்சியாளர் கான்ராட் ஊக்கப்படுத்தி வருகிறார். இந்தியாவை ஒப்பிடும்போது தென் ஆப்ரிக்காவில் திறமையான இளம் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், இங்கிலாந்தை விட தொழில்முறை நிலை (professionalism) குறைவாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது பொதுமக்களின் கவன ஈர்ப்பு மிகக் குறைவாக வைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுகிறது. சமவாய்ப்பு வழங்குவது, நிதி சிக்கல் மற்றும் பிற வளங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட யதார்த்தங்களை மீறி தென் ஆப்ரிக்கா முத்துசாமி போன்ற வீரர்களை வளர்த்தெடுத்து வெற்றி பெறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62wwjqjvd8o

ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தும் தமிழர்: யார் இந்த செனுரன் முத்துசாமி?

1 month 1 week ago

தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 11 ஆகஸ்ட் 2025

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு வெளிநாட்டு அணிகளுக்காக கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர், தற்போதும் சிலர் விளையாடி வருகிறார்கள்.

ஆனால், தமிழகத்தை வேராகக் கொண்டு வெளிநாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடியது மிகச் சிலர்தான். கடந்த காலங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஆல்வின் ஐசக் காளிச்சரண், மகிந்திரா நாகமுத்து, சிவ்நரேன் சந்தர்பால் உள்ளிட்ட சில வீரர்கள் விளையாடியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் தமிழர்

தென் ஆப்ரிக்க அணியில் இதற்கு முன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஹசிம் ஆம்லா, கேசவ் மகராஜ் உள்ளிட்டோர் விளையாடி இருந்தாலும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வீரர் ஒருவர்கூட விளையாடியதில்லை. அந்த குறையைப் போக்கும் விதத்தில் முதல்முறையாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட செனுரன் முத்துசாமி இடம் பெற்று விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

செனுரன் முத்துசாமியின் டெஸ்ட் போட்டி அறிமுகமே அமர்க்களமாக இருந்தது. 2019ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய முத்துசாமி விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்து, வாழ்வில் மறக்க முடியாத வகையில் முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது தென் ஆப்ரிக்க டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களை அதன் சொந்த மண்ணில் திணறவிட்டு, நிலைகுலைய வைப்பது எளிமையானது அல்ல. அதிலும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் சுழற்பந்துவீச்சு மூலம் பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஒரு பந்துவீச்சாளர் இருந்துவிட்டால் உலக கிரிக்கெட்டின் பார்வையை ஈர்த்துவிடுவார்.

அந்த வகையில் தென் ஆப்ரிக்காவின் பேட்டிங் ஆல்ரவுண்டரான செனுரன் முத்துசாமி இப்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளார். இடதுகை சுழற்பந்து(ஆர்த்தடாக்ஸ்) வீச்சாளரான முத்துசாமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2 நாட்களுக்கு முன் முடிந்த முதல் டி20 போட்டியில் பிரமாதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய முத்துசாமி 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

4 ஓவர்கள் வீசி, 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 4 ஓவர்கள் வீசி, 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

யார் இந்த செனுரன் முத்துசாமி?

செனுரன் முத்துசாமி தென் ஆப்ரிக்காவில் முதல்தரப் போட்டிகளிலும், ஏ லிஸ்ட் போட்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியுள்ளார். முதல் தரப்போட்டிகளில் 9 சதங்கள், 20 அரைசதங்கள் உள்ளிட்ட 5,111 ரன்களையும், 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஏ லிஸ்ட் போட்டிகளில் 2,364 ரன்களையும், 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முத்துசாமி அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின்தான் மீண்டும் தேசிய அணியில் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை 5 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முத்துசாமி 173 ரன்கள் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் தென் ஆப்ரிக்க ஒருநாள், டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்புப் பெற்று முத்துசாமி விளையாடி வருகிறார். 4 டி20 போட்டிகளில் ஆடிய முத்துசாமி 4 விக்கெட்டுகளை எடுத்து, 15 ரன்கள் சேர்த்துள்ளார். கீழ்வரிசை பேட்டராக, முத்துசாமி தென் ஆப்ரிக்க அணியில் களமிறங்குவதால், பேட்டிங் செய்வதற்கு பெருமளவு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஜனநாயகமும்- முத்துசாமியின் பிறப்பும்

தென் ஆப்ரிக்காவில் நாடல் மாகாணத்தில், டர்பன் நகரில் 1994ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதி செனுரன் முத்துசாமி பிறந்தார். தென் ஆப்பிரிக்கா தேசம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு, 1994ம் ஆண்டுதான் ஜனநாயகத்துக்கு திரும்பியது. அந்த நேரத்தில் அந்நாட்டில் பிறந்தவர்தான் செனுரன் முத்துசாமி.

அதனால்தான் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது.

முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது.

தமிழகத்தில் நாகப்பட்டினம் பூர்வீகம்

செனுரன் முத்துசாமியின் பூர்வீகம் சென்னைதான் என்றாலும், உறவினர்கள் பலரும் இன்னும் நாகை மாவட்டம், நாகப்பட்டினத்தில் வாழ்ந்து வருகிறார்கள். முத்துசாமியின் தந்தைவழி தாத்தா காலத்திலேயே தென் ஆப்ரிக்காவுக்கு புலம்பெயர்ந்துவிட்டனர். இருப்பினும், தமிழக்கத்தில் உள்ள உறவினர்களோடு முத்துசாமி குடும்பத்தினருக்கு உறவுநிலை இன்னும் தொடர்ந்து வருகிறது.

இந்த தகவலை ஒரு பேட்டியில் செனுரன் முத்துசாமியே தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்து பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த செனுரன் முத்துசாமி, தென் ஆப்ரிக்காவில் அடிக்கடி கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருப்பதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டுக்கு கடந்த 2019ம் ஆண்டு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், "தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்றபோதிலும், தமிழகத்துக்கு இருமுறை வந்து நாகையில் உள்ள உறவினர்களை சந்தித்துச் சென்றிருக்கிறேன். என் குடும்பத்தினர் சிலர், உறவினர்கள் இன்னும் நன்றாக தமிழ் பேசினாலும், எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன். இந்தியாவுடன் எங்களுக்கு இருக்கும் பிணைப்பு அற்புதமானது, எங்கள் கலாசாரம் எப்போதும் இந்தியராகவே வைத்திருக்கிறது" என முத்துசாமி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன்" என்றார் முத்துசாமி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, "எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன்" என்றார் முத்துசாமி

சிறுவயதிலேயே கிரிக்கெட் பயிற்சி

டர்பனில் உள்ள கிளஃப்டன் கல்லூரியில் படிப்பை முடித்த முத்துசாமி, க்வா ஜூலு நாடல் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். டர்பனில் முத்துசாமி வசித்தபோது சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத ஆசையோடு இருந்ததால், முதல் வகுப்பு படிக்கும்போதே முறையான பயிற்சியில் பெற்றோரால் சேர்க்கப்பட்டார்.

க்வா ஜூலு நாடல் மாகாணத்தில் 11 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் செனுரன் முத்துசாமி சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றார், பள்ளிப் போட்டிகளிலும், உள்ளூர் போட்டிகளிலும் முத்துசாமியின் ஆட்டம் பிரமாதப்படுத்தியது.

முத்துசாமியின் திறமையான ஆட்டம் அவரை தென் ஆப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்குள் தேர்வு செய்ய வைத்தது. இவரின் ஆட்டத்தைப் பார்த்த டால்பின் அணி, 2015-16ம் ஆண்டு அணியில் ஒப்பந்தம் செய்தது.

அதன்பின் க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமி இடம் பெற்று விளையாடினார், 2017ம் ஆண்டு டி20 குளோபல் லீக் தொடரில் கேப்டவுன் நைட் ரைடர்ஸ் அணிக்காக முத்துசாமி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

2018ம் ஆண்டு நடந்த ஆப்ரிக்க டி20 கோப்பைத் தொடருக்காக க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2021, ஏப்ரல் மாதத்தில் நார்த்வெஸ்ட் அணியிலும் முத்துசாமி இடம் பெற்றார்.

2021-22ம் ஆண்டு நடந்த சிஎஸ்ஏ எனப்படும் கிரிக்கெட் சவுத் ஆப்ரிக்கா ஒருநாள் தொடரில் முத்துசாமி தனது முதல் சதத்தை மேற்கு மாகாணத்துக்கு எதிராகப் பதிவு செய்தார். இதுதான் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் முத்துசாமியின் முதல் சதமாக அமைந்தது.

சங்கக்கராவால் ஈர்க்கப்பட்டவர்

2016-17ம் ஆண்டில் டால்பின் அணியில் நிரந்தரமாக முத்துசாமிக்கு இடம் கிடைத்தது. பேட்டிங்கைப் பொருத்தவரை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்ககராவை பின்பற்றி அவரைப் போல் பேட்டிங் செய்ய முத்துசாமி ஆர்வமாகினார், அவரின் பேட்டிங் ஸ்டைலைப் போலவே பல ஷாட்களையும் முத்துசாமி தனது ஆட்டத்தில் கொண்டு வந்தார்.

முத்துசாமிக்கு திருப்புமுனையாக அமைந்தது 2017-18ம் ஆண்டு சீசன்தான். இதில் நைட்ஸ் அணிக்கு எதிராக தொடக்க வீரராக ஆடிய முத்துசாமி 181 ரன்கள் குவித்தார். அதன்பின் தனது பேட்டிங் வரிசையை கீழ்வரிசைக்கு மாற்றிய முத்துசாமி, சுழற்பந்துவீச்சில் கவனத்தைச் செலுத்தினார். அந்த ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி, 4 விருதுகளையும், அந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றார்.

2018ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்ட முத்துசாமிக்கு சுழற்பந்துவீச்சில் பயிற்சி அளிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு இந்தியப் பயணத்துக்கு தயார் செய்யப்பட்டார்.

2017-18ஆம் ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 2017-18ஆம் ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி

மறக்க முடியாத முதல் விக்கெட்

இதற்கிடையே க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமியின் ஆட்டத்தைப் பார்த்த தென் ஆப்ரிக்க அணியின் தேர்வாளர்கள், 2019ம் ஆண்டு இந்திய பயணத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் முத்துசாமியை தேர்வு செய்தனர்.

இதையடுத்து, 2019ம் ஆண்டு இந்திய பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துசாமி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2ம் தேதி நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார்.

முத்துசாமிக்கு டெஸ்ட் அறிமுகம் வாழ்வில் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. டெஸ்ட் வாழ்க்கையில் தனது முதல் விக்கெட்டாக அப்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை 20 ரன்னில் காட்அன்ட் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து முத்துசாமி மறக்க முடியாத நினைவுகளைப் பெற்றார்.

அதன்பின் தென் ஆப்ரிக்க அணியில் மீண்டும் இடம் பெற முத்துசாமிக்கு நீண்ட இடைவெளி காத்திருக்க நேர்ந்தது. கேசவ் மகராஜ், ஷம்சி உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்களின் கடும் போட்டியால் 6 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆண்டிலிருந்து மீண்டும் அணிக்குள் முத்துசாமி வாய்ப்புப் பெற்றார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்க அணியில் முத்துசமி இடம் பெற்றாலும், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

"இதற்காகத்தான் காத்திருந்தேன்"

தென் ஆப்பிரிக்க அணிக்குள் மீண்டும் வந்தது குறித்து முத்துசாமி கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் "மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தது அற்புதமான தருணம். இந்த வாய்ப்புக்காகத்தான் நான் இதுவரை காத்திருந்தேன், கடந்த சில மாதங்களாக சீரான வாய்ப்புக் கிடைப்பது சிறப்பானது.

அணிக்குள் இருந்தாலும், வீரர்களுக்கு குளிர்பானங்கள் அளிக்கும் வேலையே செய்தபோதிலும் என்னால் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது, அதனால்தான் என்னால் அணிக்குள் வர முடிந்தது. வித்தியாசமான தளங்களில் விளையாடும் பக்குவத்தை பெற முடிந்தது" எனத் தெரிவித்தார்.

பயிற்சியாளர் கான்ராட்டின் முயற்சி

தென் ஆப்ரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறையாக வென்றபின் அணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக புதிய பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் புதிய வீரர்களை அடையாளம் கண்டு தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளித்து வருகிறார். அதில் முக்கியமானவர் முத்துசாமி.

முத்துசாமிக்கு திறமை இருந்தபோதிலும் போதுமான வாய்ப்புக் கிடைக்காமல் சர்வதேச அளவில் 8 ஆட்டங்களில் மட்டுமே ஆடி இருந்தார். அவருக்கு தொடர்ச்சியாக கடந்த பாகிஸ்தான், ஜிம்பாப்பே தொடரிலிருந்து வாய்ப்புகளை வழங்கி பயிற்சியாளர் கான்ராட் ஊக்கப்படுத்தி வருகிறார்.

இந்தியாவை ஒப்பிடும்போது தென் ஆப்ரிக்காவில் திறமையான இளம் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், இங்கிலாந்தை விட தொழில்முறை நிலை (professionalism) குறைவாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது பொதுமக்களின் கவன ஈர்ப்பு மிகக் குறைவாக வைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுகிறது. சமவாய்ப்பு வழங்குவது, நிதி சிக்கல் மற்றும் பிற வளங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட யதார்த்தங்களை மீறி தென் ஆப்ரிக்கா முத்துசாமி போன்ற வீரர்களை வளர்த்தெடுத்து வெற்றி பெறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62wwjqjvd8o

மேலதிகாரிகளால் பழிவாங்கப்படும் மனைவியான கிராம அலுவலர் - நீதியை பெற்று தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

1 month 1 week ago
துணுக்காய் பிரதேச செயலகம் முன் நபர் ஒருவரின் போராட்டம் Published By: VISHNU 12 AUG, 2025 | 01:46 AM துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால் நபரொருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். துணுக்காய் பிரதேச செயலகம் தனியார் முதலாளிகளிடம் இருந்து இதுவரை இலஞ்சமாக பெற்ற அனைத்தையும் மீள கையளிக்க வேண்டும். பிரதேச செயலக ஆளுகைக்குள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும். 2017ம் ஆண்டு வரட்சி நிவாரணம் வழங்கியமை தொடர்பில் அதன் தெரிவு பட்டியல் தொடர்பிலும் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் நீதியானதும் நியாயமானதுமான விசாரணை மேற்கொள்ளவேண்டும். காணிப்பிணக்குகளை பாரபட்சமற்ற முறையில் தீர்க்கவேண்டும் மற்றும் காணிகள் வழங்கப்படவேண்டும். கிராம அலுவலர் திருமதி கிருஸ்ணரூபன் கலைச்செல்வியின் தண்டனை பணியிட மாற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரியும் தீர்வும் வேண்டும் என்று கூறியே அவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவரை பேச அழைத்த போது அவர் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இதேவேளை இது தொடர்பில் கருத்துரைத்த பிரதேச செயலாளர் ராமதாஸ் ரமேஸ் திருவாளர் கிருஸ்ணரூபன் இன்றையதினம் துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக சில விடயங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார், அவர் குறிப்பிடுகின்ற விடயங்கள் அனைத்தும் எனது நிர்வாக காலப்பகுதியில் இடம்பெறவில்லை, இது தொடர்பில் அவர் ஏற்கனவே ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஆளுநர் அலுவலகம், மாவட்ட செயலகம் உள்ளிட்ட திணைக்களங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளார், இது தொடர்பிலான விசாரணைகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட செயலாளருடைய புலனாய்வு பிரிவினரால் அது தொடர்பிலான ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவர் தனது கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் செய்வது அவரின் ஜனநாயக உரிமையாக இருந்தாலும் அது தொடர்பில் விசாரணை முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை நான் கூற முடியாது. அவர் போராட்டம் நடாத்துகின்ற இடத்துக்கு எமது உதவி பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரை அனுப்பி வைத்து அழைப்பு விடுத்திருந்தேன், ஆனால் அவர் கதைப்பதற்கு உடன்பாடில்லை நான் கதைக்க விருப்பமில்லை என தெரிவித்திருந்தார். அவரின் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலாளரை அணுகி அவரின் வேண்டுகோளை விரைவுபடுத்த முடியும், மேலும் இது தொடர்பிலான அறிக்கைகளை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222358

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!

1 month 1 week ago
பிரதமர் பதவியில் மாற்றமில்லை! ஜனாதிபதியே பிரதமரைப் பாதுகாத்ததாக உதயகம்மன்பில விளக்கம். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது குறித்து உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாவது ” பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் ஏதேனும் விடயத்தில் தவறு இருந்தால் அதனை ஜனாதிபதி சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும். அல்லது பிரதமர் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்விருவரையும் தவிர்த்து பிறிதொருவர் பிரதமரின் கருத்தை விமர்சிக்க முடியாது. அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமரை மக்கள் மத்தியில் மலினப்படுத்தியுள்ளார். பிரதமரின் கருத்தை தெளிவுப்படுத்தும் அளவுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க சிரேஷ்டத்துவமிக்கவரல்ல, தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளது. இதனை நாம் கடந்த மே மாதம் வெளிப்படுத்தியிருந்தோம். அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கி விட்டு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் கலந்துக் கொண்டுள்ளார். ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெரும்பாலானவை தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமானது. தேசிய மக்கள் சக்தியின் தலைவராக பிரதமர் உள்ளார். மேற்குலக நாடுகளின் தூதரக பிரதிநிதியாகவும், அரசாங்கத்தின் பிரபுக்கள் வகுப்பின் பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியாகவும், பாலின சமத்துவத்தின் பிரதிநிதியாகவும், கல்வி மற்றும் தொழில்துறை பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். ஆகவே அவரை பதவி நீக்க முடியாது என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் அதிருப்தியடைந்துள்ளனர். பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அவர் சுயமாகவே பதவி விலகும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார். https://athavannews.com/2025/1442747

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 1 week ago
வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா புது சோலைக்கு வசந்த விழா பக்கத்தில் பருவ நிலா இளமை தரும் இனிய பலா பார்க்கட்டும் இன்ப உலா பெண் : மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே ஆண் : ஆ…..ஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே பெண் : ஆ…..ஆ…..ஆ….மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே பெண் : {தூங்காமல் நின்றேங்கும் மலர் விழிகள் ஆண் : இன்பம் தாங்காமல் தள்ளாடும் இளங்கிளிகள்} (2) பெண் : உயிரோடு உயிராய் ஆண் : ஒன்றாகி நிற்கும் பெண் : உள்ளங்கள் பேசட்டும் புது மொழிகள் ஆண் : பூவை திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது பெண் : ஆஅ……ஆ…..தேனில் நனைந்தும் குளிர்ந்தும் மலர் காற்றில் ஆடியது ஆண் : இளவேனிர் காலத்தில் திருமணமோ பெண் : இனி எப்போதும் வாராத நறுமணமோ ஆண் : பூவென்ன பூவோ பெண் : வண்டென்ன வண்டோ ஆண் : சொல்லாமல் சொல்கின்ற கதை எதுவோ பெண் : கதை இதுவோ ....... ! --- இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா ---

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

1 month 1 week ago
ஓம், இவையளின்ர நிலைப்பாட்டினாற்தான் வடக்கில் தமிழர் முதலமைச்சர் ஆகிறார் இல்லையெனில் அதெல்லாம் முடியாது. இதையும் தமிழரசுக்கட்சி நம்பும்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 1 week ago
https://www.facebook.com/share/p/1Asnnfg7yV/?mibextid=wwXIfr

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 1 week ago
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 18 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 18 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'உண்மையில் தேவநம்பியதிஸ்ஸ இருந்தாரா?' இன்னும் ஒரு ஒப்பீட்டையும் நான் சொல்லவேண்டும். தேவநம்பிய தீசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன். அதேபோல அசோகனும் பிந்துசாரரின் (Bindusara) இரண்டாவது மகனாவார். தேவநம்பிய தீசன் 40 ஆண்டுகள் ஆண்டார் என இலங்கை நாளாகமம் [Ceylon chronicles] கூறுகிறது. இலங்கை நாளாகமத்தின் படி, அரியானை எறியபின் அசோகன் 37 ஆண்டுகள் ஆண்டதாக கூறினாலும், இந்தியா செய்திகளின் படி இது 36 ஆண்டுகளாக காணப்படுகிறது. அசோகன் முறையான முடிசூட்டு விழாவிற்கு நாலு ஆண்டுகள் முன்பே ஆள தொடங்கிவிட்டான். எனவே அவனும் 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகிறது. மேலும் இவ்விருவருக்கும் தேவநம்பிய என்றே அதே அடைமொழி [same epithet ‘Devanampiya’] காணப்படுகிறது. அப்படி என்றால் அசோகனுக்கு ஒத்ததாக இலங்கையில் ஒரு தேவநம்பிய தீசன் உண்டாக்கப் பட்டானா என்ற கேள்வியும் எழுகிறது [Is the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet?]? இதனால் போலும் தொல்பொருள் அல்லது கல்வெட்டு சான்று ஒன்றும் தேவநம்பிய தீசனுக்கு இலங்கையில் இல்லை. ஆனால் அசோகனுக்கு அவை தாராளமாக உண்டு. புத்தரின் சமகால மன்னர் பிம்பிசாரன் மற்றும் அசோகனின் தந்தை பிந்துசாரர், இருவரும் வெவ்வேறு ஆட்களாகும். [Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka] மேலே குறிப்பிட்டுள்ளபடி, விஜயன் முதல் தேவநம்பியதிஸ்ஸ வரை எந்த வரலாற்று அல்லது தொல்பொருள் ஆதாரங்களும் இல்லாமல் இந்த மன்னர்கள் காணப்படு கிறார்கள். அப்படி என்றால், அன்றைய காலத்தில் இலங்கையில் அரசர்கள் இல்லை என்பதல்ல. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் இருந்திருக்க வேண்டும், அவர்களின் பெயர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, இந்த கண்டு பிடிக்கப்பட்ட மன்னர்கள் 'புத்த மதத்தின் பக்தியுள்ளவர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகளுக்கு / 'serene joy and emotions of the pious.' பதிலாக இங்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மகாவம்சம் அத்தியாயத்தின் முடிவிலும் இது கூறப்பட்டுள்ளது. தேரவாத பௌத்தத்தில், பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் உருவாக்கவென, மகாவம்சம் அதன் வாசகர்களிடையே இப்படி, ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கூறுகிறது. இது பார்வையாளர்களுக்குள் ஒரு உணர்வுகளை தூண்டவும் மற்றும் கண்மூடித்தனமான ஒரு பக்தியை வளர்க்கவும் என்று நாம் கருதலாம். இது வரலாற்று நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றுபவர்களிடையே ஆழமான உணர்ச்சி மற்றும் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு உரையாக இருக்கலாம். / In Theravada Buddhism, serene joy and emotion of the pious relates to the emotional impact the Mahavamsa aims to create in its readers. It represents both the desired emotional response to its teachings and the ultimate goal of its compilation: to foster spiritual feelings and devotion within the audience. This highlights the Mahavamsa as a text designed not only for historical recounting but also for evoking a deep emotional and spiritual connection among its followers. முன்பே கூறியது போல், சில அனுமானங்களின்படி, மூத்தசிவா குறைந்தது 137 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது, அதன்படி, மூத்தசிவா அரியணை ஏறும் போது அவனுக்கு 77 அகவையாகும். முத்தசிவனுக்கு முப்பது வயது இருக்கும் போது இரண்டாவது மகன் தேவநம்பிய தீசன் பிறந்திருந்தால், அரியணை ஏறும் போது தேவநம்பியதிசனுக்கு 107 வயது இருந்திருக்கும், மேலும் அவர் 147 வயது வரை மிகவும் பழுத்த வயது வரை தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் [(107-30-30)+60+40, அல்லது 137 - 30 + 40 வரை]. இப்போது அசேல மன்னனின் ஆட்சியைப் பார்ப்போம். அசேல முத்தசிவாவின் ஒன்பதாவது மகன். முத்தசிவனுக்கு ஐம்பது வயது இருக்கும் போது அவர் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். தேவநம்பிய திசாவுக்கு பிறகு இவனின் தம்பி உத்திய 10 ஆண்டுகள், அடுத்த தம்பி மகாசிவ 10 ஆண்டுகள், அடுத்த தம்பி சூரதிச்ச 10 ஆண்டுகள், அதைத் தொடர்ந்து சேனா மற்றும் குட்டாகனும் 22 ஆண்டுகள், அதன் பின் கடைசிக்கு முதல் தம்பி அசேல முடி சூடுகிறான். எங்கள் முன்னைய ஊகத்தின் படி அசேலக்கும் திஸ்ஸவுக்கும் இருபது ஆண்டு வித்தியாசம் இருந்ததால் அல்லது முத்தசிவனுக்கு ஐம்பது வயது இருக்கும் போது அசேல பிறந்தார் என்றால், குறைந்தது 179 அகவையில் [147 - 20 + 10 + 10 + 10 + 22 = 179] அல்லது 137- 50 + 40 + 10+ 10 + 10 + 22 = 179] அசேல [Asela] முடி சூடுகிறான். அதன் பின் 10 ஆண்டுகள் ஆள்கிறான். எனவே குறைந்தது 189 ஆண்டுகள் வாழ்ந்து உள்ளான். இது ஒரு பரிதாபகரமான பொய்யாக இருக்க வேண்டும். பண்டுக முதல் அசேல வரையிலான ஆட்சியாளர்களின் வயது வழக்கத்தை விட மிக அதிகம். புத்தர் மறைந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது. இருப்பினும், இந்திய பாரம்பரியத்தின்படி புத்தர் மறைந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது. இரண்டு மரபுகளுக்கும் இடையே நூற்று பதினெட்டு ஆண்டுகால மாறுபாடு உள்ளது. இப்போது அறிஞர்கள் புத்தர் இறந்த ஆண்டை கி பி 400 க்கும் கி பி 369 க்கும் இடையில் கணிக்கிறார்கள். பண்டுவாசுதேவரில் இருந்து அசேல வரையிலான ஆட்சியின் நீளம், தமிழ் மன்னர்களான சேனனும் குத்திகனும் [22 ஆண்டுகள்] தவிர, 30, 20, 70, 60, 40, 10, 10, 10 மற்றும் 10 ஆகியவை ஆகும். இவர்கள் எல்லோரும் எல்லோரும் நேர்த்தியான வட்ட இரட்டை எண்களாக இருப்பதும் ஆச்சரியமே! இனி வரும் பாடங்களில் பண்டுவாசுதேவருக்கும் துட்டகாமினிக்கும் இடையிலான சகாப்தம் விரிவாக பகுப்பாய்வு செய்யப்படும். Part: 18 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did Devanampiyatissa really exist?' Let us now look at Devanampiyatissa again. He was the second son of Mutasiva. Asoka was also the second son of Bindusara. Devanampiyatissa ruled for forty years as per the Ceylon chronicles. Asoka ruled for thirty-seven years after his consecration as per the Ceylon chronicles. However, Asoka assumed the power about four years prior to his formal coronation. Asoka therefore ruled forty-one years in total as per the Ceylon chronicles. The Indian tradition says that Asoka ruled thirty-six years after the coronation. Adding four years prior to the coronation, Asoka ruled forty years, as did Devanampiyatissa. Both are with the same epithet ‘Devanampiya’. Therefore, the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet. He could not have been a real person. That is why there are no archaeological or inscriptional evidence in Lanka about Devanampiyatissa while evidences for Asoka are available in length and breadth of India except in Tamil country. Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka. As noted above, Vijaya to Devanampiyatissa are invented kings without any historical or archaeological evidences. This does not mean that there were no kings in Ceylon during that time. There must have been chieftains in various parts of Lanka, and all their names were obliterated and these invented kings were substituted for the serene joy and emotions of the pious. As stated above, Mutasiva must have lived to a very old age of one hundred and thirty seven. If the second son Tissa was born when Mutasiva was thirty years of age, then Devanampiyatissa would have been 107 years of age when he ascended the throne, and he should have continued to live for the very ripe age of 147 years, [(107-30-30)+60+40, or 137 - 30 + 40] Now let us look at the king Asela’s rule. Asela was the ninth son of Mutasiva. Suppose he was born when Mutasiva was fifty years of age. Considering the rules of Uttiya (10 years), Mahasiva (10 years), Suratissa (10 years), Sena and Guttika (22 years), Asela must have ascended the throne when he was, (107-30-50)+60+40+ 10+ 10 + 10 + 22, 179 years of age and he must have been killed by Elara when Asela was 189 of age, after the reign of ten years. This must be a pathetic lie. The ages of rulers from Panduka to Asela are very much longer than usual. Asoka’s coronation took place two hundred and eighteen years after the demise of the Buddha as per the Ceylonese chronicles. However, Asoka’s coronation took place only one hundred years after the demise of the Buddha as per the Indian tradition. There is a variation of one hundred and eighteen years between the two traditions. Now scholars prefer 400 B. C. to 369 B. C. as the preferred range in which the Buddha died. The lengths of reigns from Panduvasudeva to Asela, except the Damila kings Sena and Guttika [22 years] - 30, 20, 70, 60, 40, 10, 10, 10 and 10 are neat round even numbers indicating cooked up numbers. The era between Panduvasudeva to Dutthagamani is analysed in detail further down in this chapter. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 19 தொடரும் / Will Follow

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!

1 month 1 week ago

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!

12 Aug 2025, 10:19 AM

CM MK Stalin Tour

இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழா ஆகியவற்றில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ந் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இதன் பின்னர் சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சியுடன் இணைந்தது. நீதிக் கட்சியே பின்னர் திராவிடர் கழகமாக மாறியது; திராவிடர் கழகத்தில் இருந்து திமுக உருவானது. பெரியார் அன்று உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், திராவிடர் இயக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ள ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவருக்கான Fellowship வழங்குவதற்கான நிதி மூலதனம் (endowment) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நல்கை கலைஞர் பெயரால் வழங்கப்படும். இதற்கான நிதியை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலினும், அவரது கணவரும் தொழில்முனைவோருமான சபரீசனும் வழங்கியுள்ளனர்.

இந்த இரு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லண்டன் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இங்கிலாந்து நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

பின்னர் ஜெர்மன் சென்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். செப்டமப்ர் 15-ந் தேதிக்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு திரும்புவார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

https://minnambalam.com/cm-mk-stalin-to-take-part-in-dravidian-movement-events-at-oxford-and-cambridge-universities-in-uk/

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!

1 month 1 week ago
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்! 12 Aug 2025, 10:19 AM இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழா ஆகியவற்றில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ந் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இதன் பின்னர் சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சியுடன் இணைந்தது. நீதிக் கட்சியே பின்னர் திராவிடர் கழகமாக மாறியது; திராவிடர் கழகத்தில் இருந்து திமுக உருவானது. பெரியார் அன்று உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், திராவிடர் இயக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ள ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவருக்கான Fellowship வழங்குவதற்கான நிதி மூலதனம் (endowment) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நல்கை கலைஞர் பெயரால் வழங்கப்படும். இதற்கான நிதியை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலினும், அவரது கணவரும் தொழில்முனைவோருமான சபரீசனும் வழங்கியுள்ளனர். இந்த இரு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லண்டன் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இங்கிலாந்து நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். பின்னர் ஜெர்மன் சென்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். செப்டமப்ர் 15-ந் தேதிக்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு திரும்புவார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். https://minnambalam.com/cm-mk-stalin-to-take-part-in-dravidian-movement-events-at-oxford-and-cambridge-universities-in-uk/

கற்பனையில் தமிழ்ச்சமூகம்! — கருணாகரன் —

1 month 1 week ago
கற்பனையில் தமிழ்ச்சமூகம்! August 11, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியல் இன்று இரு கூறாக உள்ளது. (இன்று மட்டுமல்ல, முன்பும் அப்படித்தான். ஆனால் இப்பொழுது அது மிகத் துல்லியமாக முன்வைக்கப்படுகிறது) 1. “மாகாணசபை முறையைத் தீர்வுக்கு ஆரம்பமாக எடுத்துக் கொள்வது. அதுதான் சாத்தியமானது. அதற்கே இந்தியாவின் அனுசரணை அல்லது ஆதரவு இருக்கும். இந்தியாவின் ஆதரவைப் பெற்று, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுத்து, மாகாணசபையின் அதிகாரத்தை முழுமைப்படுத்துவது. குறிப்பாக 13 திருத்தத்தை முழுமையான அமுல்படுத்துவது. அதிலிருந்து படிப்படியாக மேலதிக அதிகாரத்தை – தீர்வை நோக்கிப் பயணிப்பது. இதொரு அரசியற்தொடர் செயற்பாடாகும்..“ என்று வாதிடுவது. 2. “மாகாணசபை என்பதே சூதான ஒரு பொறி. அதனால்தான் விடுதலைப்புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அது தமிழ் மக்களின் நலனுக்காகச் செய்யப்படவே இல்லை. இந்திய நலனை முதன்மைப்படுத்திச் செய்யப்பட்ட ஒன்று. இதை அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட 29.07.1987 இலிருந்து சரியாக ஐந்தாவது நாளான 04/08/1987 அன்று, யாழ்ப்பாணம் – சுதுமலையில் வைத்துப் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் பிரபாகரன் சொல்லியிருக்கிறார். தம்முடன் கலந்தாலோசிக்கப்படாமலே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று. அதனால்தான் அந்த ஒப்பந்தத்தையும் மாகாணசபையையும் புலிகள் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்ட வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையோ, அன்று மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களோ இன்று இல்லை. அவற்றில் ஒரு பகுதியை 1990 இல் பிரேமதாச பிடுங்கி விட்டார். புலிகள் இல்லாமலாக்கப்பட்ட 2009 க்குப் பிறகு, மிஞ்சிய அதிகாரத்தைக் கொண்டு, கடந்த 16 ஆண்டுகளில் ஏன் மாகாணசபை முறைமை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை? 2009 க்குப் பிறகு தமிழர்களின் பிரநிதிகளாகச் செயற்பட்ட – மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை முறைமையையோ இந்தியாவின் அனுசரணையையோ மறுக்கவில்லையே. அதை நடைமுறைப்படுத்துமாறுதானே கேட்டது. மட்டுமல்ல, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, அதிகாரத்தைப் பெற்று அதை நடைமுறைப்படுத்தியும் பார்த்ததே! இப்போது கூட மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள். அதிகாரங்களைப் பகிருங்கள் என்று கேட்கப்படுகிறது. ஆனால், அதற்கு அரசாங்கம் தயாரில்லையே. இந்த நிலையில் எப்படி மாகாணசபை முறைமையை நாம் ஏற்றுக் கொள்வது? இந்தப் பலவீனமான – வஞ்சகத்தனமான மாகாணசபை முறையை ஏற்றுக் கொண்டால், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கான பெறுமதியை இழந்ததாக ஆகிவிடும். அது மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் எமது மக்களின் அரசியல் உரிமையைப் பற்றியோ எமக்கான தீர்வைப் பற்றியோ கவனிக்காது. ஆகவே நாம் மாகாணசபை முறையை ஏற்றுக்கொள்ளாமல், தமிழ் மக்களுடைய அபிலாஷையை நிறைவு செய்யக் கூடிய தீர்வைப் பற்றியே பேச முடியும். அதற்காகவே போராட வேண்டும்” என விவாதிப்பது. இந்த இரண்டு வாதங்களையும் கேட்கும்போது சரிபோலவே தோன்றும். அல்லது ஒவ்வொன்றும் சரிபோலிருக்கும். என்றபடியால்தான் இரண்டு நிலைப்பாட்டுக்கும் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால், இந்த இரண்டு வாதங்களையும் அல்லது இந்த இரண்டு விடயங்களையும் குறித்து விளக்கமளியுங்கள் என்றால், பலரும் தெளிவற்றுக் குழப்பமடைகிறார்கள். அல்லது திருதிருவென விழிக்கிறார்கள். இந்தத் தெளிவற்ற நிலையும் விளக்க முடியாத தடுமாற்றமும் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த நிலைப்பாடுகளுக்குத் தலைமையேற்றிருக்கும் அரசியல் தலைவர்களுக்குமில்லை. அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளோருக்கும் இல்லை. அப்படி இருந்திருக்குமானால் அவர்கள் இதுவரையில் அதைத் தெளிவாக முன்வைத்திருப்பர். அப்படி எங்கும் காணவில்லை. மாகாணசபை முறைமையை ஓரளவுக்கு வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிவந்தோராகும். சுரேஸ் பிரேமச்சந்திரனின் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், சுகு ஸ்ரீதரன் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கலாநிதி விக்னேஸ்வரன் – கோபாலகிருஸ்ணன் தரப்பின் கிழக்குத் தமிழர் ஒன்றியம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) போன்றவை வெளிப்படையாகவே மாகாணசபை முறைமையை ஆதரிக்கின்றன. ஏற்கின்றன. இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றுக்குமிடையிலும் வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், இவை மாகாணசபை முறைமையை ஏற்கின்றன. அதிலிருந்து முழுமையான தீர்வுக்குப் பயணிக்க வேண்டும். அதுவே சாத்தியம் என வலியுறுத்துகின்றவை. இவற்றோடு செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், உதயராசாவின் தலைமையிலான சிறி ரெலோ போன்றவையும் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் தரப்புகளே. தமிழரசுக் கட்சியும் ஏறக்குறைய மாகாணசபை முறைமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக – உறுதியாகச் சொல்வதற்கு அதனால் முடியவில்லை. அப்படிச் சொன்னால், அது வலியுறுத்தி வரும் சமஸ்டி கோரிக்கைக்கு என்ன நடந்தது என்று எதிரணிகள் (குறிப்பாக ஏனைய தமிழ்க்கட்சிகள்) தலையில் குட்டத் தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் இந்த விடயத்தில் பட்டும்படாமல் உள்ளது. மாகாணசபை முறைமையை முன்தொடக்கமாக ஏற்றுக் கொள்ளலாம். அதுவே சாத்தியமான தொடக்கம் என்று வலியுறுத்தும் தரப்புகள் புலம்பெயர் சூழலிலும் உண்டு. ஆனால், அவை அங்கே வலுவானவையாக இல்லை. அல்லது அந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தக் கூடிய அளவுக்கு அவை வேலைகள் எதையும் செய்வதில்லை. அந்த நிலைப்பாட்டுடன் தாயகத்தில் உள்ள தரப்புகளைப் பலப்படுத்துவமில்லை. தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரையிலும் ஒன்றிரண்டு ஊடங்களில் மட்டும்தான் மாகாணசபை முறைமை அல்லது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து எழுதப்படுகிறது; பேசப்படுகிறது. இதேவேளை மாகாணசபை முறைமையை வெளிப்படையாக ஆதரிக்கும் தரப்புகளை இந்தியாவின் ஆட்கள் (உளவாளிகள், சார்பு நிலைப்பட்டவர்கள், இந்தியாவின் ஏஜென்டுகள்..) என்று குற்றம்சாட்டப்படுகிறார்கள்; பழித்துரைக்கப்படுகிறார்கள்; சந்தேகிக்கப்படுகிறார்கள். ஆனால் யதார்த்தமான அரசியல் என்பது மாகாணசபையிலிருந்தே தொடங்க முடியும் என்பதுதான். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கான அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். இந்தியா அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்வோர், மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்வதற்கு அதனுடைய சக பங்காளித்தரப்பான முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை; பேசுவதுமில்லை. முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்ளாத அல்லது அவர்களும் இணைந்து கோராத மாகாணசபை முறைமை வெற்றியளிக்கப்போவதில்லை. மாகாணசபை முறைமையை வெற்றிகரமாக்குவதற்கு இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள சக்திகளுடைய ஆதரவையும் திரட்ட வேண்டும். குறிப்பாக மலையக அரசியற் சக்திகளையும் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் – அதை வேண்டும் என்று கருதும் சிங்களத் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இது இலகுவானது மட்டுமல்ல, சாத்தியமானதும் கூட. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொடக்கம் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வரையில் பலர் மாகாணசபையின் வழியாகவே அரசியலில் நுழைந்தவர்கள். இன்றைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர் கூட மாகாணசபையின் வழியாகப் பயன்களைப் பெற்றவர்களே. ஆகவே, இதையெல்லாம் புரிந்து கொண்டு, அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்ப்பது – மறுதலிப்பது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தரப்பு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் இயங்கும் இந்தத் தரப்பு, ஒரு நாடு இரு தேசம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. ஏறக்குறைய இது அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டது. விடுதலைப்புலிகளின் அரசியல் தொடர்ச்சியாக தம்மை அடையாளப்படுத்துவது. இதை ஒத்ததாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கம் தேசமாகத் திரள்வோம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட சில அணிகளும் உள்ளன. புலம்பெயர் மக்களில் பெரும்பாலானோர் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாகவும் பிரபாகரனை நேசிப்பவர்களாகவும் இருப்பதால் இந்த நிலைப்பாட்டை வெற்றியடைய வைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கின்றார்கள், பாடுபடுகிறார்கள். பொருளாதார ரீதியாகவும் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள். அதாவது தாம் எதை நம்புகிறோமோ அதற்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், அதைச்செய்கிறார்கள். கோட்பாட்டளவில், இந்த நிலைப்பாடு பலருக்கும் ருசிகரமாகவே இருக்கும். அதற்குக் காரணமும் உண்டு. சிங்கள ஆதிக்கத்தரப்பின் நடைமுறை மற்றும் சிந்தனைகள் தரும் வரலாற்றுப்படிப்பினை அவர்களை இப்படித்தான் சிந்திக்க வைக்கும். இந்தியாவும் மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்யவில்லை. இலங்கை அரசும் அதைத் தட்டிக் கழிக்கும் மனோநிலையில் உள்ளது என்பதால், அவர்கள் அதற்கு மாறான பிரிந்து செல்லும் – தனியாக நிற்கக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்திக்கின்றனர். ஆனால், அதை அடைவதற்கான சாத்தியங்களைக் குறித்து இவர்களிடம் தெளிவில்லை. இருக்கின்ற நம்பிக்கை எப்படியானதென்றால், இலங்கை அரசாங்கம் செய்த இன ஒடுக்குமுறைக் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்காத போக்கும் என்றோ ஒருநாள் சர்வதேச சமூகத்தை ஈழத்தமிழ்ச்சமூகத்தின்பால் திருப்பும் என்பது மட்டுமேயாகும். அதற்காக தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிங்களத் தரப்பைத் தொடர்ச்சியாக எதிர்க்க வேண்டும் என்று சிந்திக்கின்றன; நம்புகின்றன. சர்வதேச சமூகம் என்பதை இவை மேற்குலக நாடுகள் என்றே வரையறையும் செய்துள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினையில் தமிழ் மக்களின் நிலை குறித்து கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் கிடைக்கின்ற வரையறுக்கப்பட்ட அளவிலான ஆதரவை தமக்கான முழுமையான நம்பிக்கையாகக் கொள்கின்றன. இந்த ஆதரவு காலப்போக்கில் ஏனைய மேற்கு நாடுகளின் ஆதரவாக மாறும் என்று நம்புவோர் இதில் அதிகமுண்டு. என்பதால் முடிந்த முடிவாக பிரிவினை என்ற மனநிலையில்தான் இவர்கள் உள்ளனர். யதார்த்தத்தைப் பற்றி இவர்கள் சிந்திப்பதாகவே இல்லை. யதார்த்த நிலையே பிராந்திய ஆதிக்கத்தைக் கடந்து சிந்திக்கக் கூடிய நிலை இன்னும் உருவாகவில்லை. பிராந்தியம் என்பது இந்தியாவும் சீனாவும் இணைந்த நிலையே. இரண்டு நாடுகளையும் தமிழர்கள் தமது அரசியற் தொடர்பு வலயத்திலோ வலையமைப்பிலோ கொண்டு, அதற்கான பொறிமுறைகளை வகுத்துச் செயற்படவில்லை. ஏன் மேற்குலகைக் கையாளக் கூடிய பொறிமுறைகள் (இராஜதந்திர நடவடிக்கைகள்) எதையும் இவை மட்டுமல்ல எந்தத் தரப்பும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பலவீனமான நிலையில்தான் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் உள்ளது. ஜனநாயக அரசியலில் பல்வேறு நிலைப்பாடுகளும் போக்குகளும் இருக்கும். அதற்கு இடமும் உண்டு. ஆனால், தமக்கென ஒரு நிலைப்பாட்டை அல்லது கோட்பாட்டை முன்னெடுக்கும் தரப்புகள் அவற்றின் நடைமுறைச் சாத்தியம் என்ன? அதற்கான கால வரையறை (உத்தேசமாக) என்ன? அதற்கான உத்தரவாதம் என்ன? அதை முன்னெடுக்கும் வழிமுறை – சாத்தியப்படுத்தும் பொறிமுறை – என்ன? என்றெல்லாம் மக்களுக்குக் கூற வேண்டும். அது முக்கியமான கடப்பாடு. இங்கே தமிழ் அரசியல் தரப்பில் அந்தக் கடப்பாடு என்று எதுவுமே கிடையாது. ஏனெனில் இங்கே நடந்து கொண்டிருப்பது, தேர்தலை மையப்படுத்திய அரசியலாகும். தேர்தல் வெற்றிக்காக எதை முன்னே வைக்க வேண்டும். எதை முதலீடாக்க வேண்டுமோ அதையே அவர்கள் செய்கிறார்கள். இதற்கு அப்பால், தாம் முன்னிறுத்தும் அல்லது தாம் நம்பும் கோட்பாட்டை அல்லது நிலைப்பாட்டை மெய்யாகவே வெற்றியடைய வைக்க வேண்டும் என்றால், அதற்காக அவை பாடுபட வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேணடும். அதாவது அதைச் செயற்படுத்த வேண்டும். இங்கே கற்பனைக் குதிரைகளே அதிகம். அவை நிஜமாக ஓடுவதுமில்லை. நிஜமாகக் கனைப்பதுமில்லை. நிஜமாக வெற்றியடைவதுமில்லை. பாவம் தமிழ் மக்கள். இல்லை இல்லை. மன்னிக்க வேண்டும். இன்னும் தண்டனை பெற வேண்டும் தமிழ் மக்கள். ஏனென்றால், இவ்வளவு பட்ட பிறகும் இன்னும் புத்தி தெளியாமல் இருந்தால், அதற்கான தண்டனையைப் பெறத்தானே வேண்டும்!. ஆகவே தொடர்ந்தும் சிங்கள மேலாதிக்கத் தரப்புக்கு வெற்றிகளைக் குவிக்கிறார்கள் தமிழ் மக்கள். https://arangamnews.com/?p=12248

கற்பனையில் தமிழ்ச்சமூகம்! — கருணாகரன் —

1 month 1 week ago

கற்பனையில் தமிழ்ச்சமூகம்!

August 11, 2025

கற்பனையில் தமிழ்ச்சமூகம்!

— கருணாகரன் —

தமிழ்த்தேசியவாத அரசியல் இன்று இரு கூறாக உள்ளது. 

(இன்று மட்டுமல்ல, முன்பும் அப்படித்தான். ஆனால் இப்பொழுது அது மிகத் துல்லியமாக முன்வைக்கப்படுகிறது) 

1.   “மாகாணசபை முறையைத் தீர்வுக்கு ஆரம்பமாக எடுத்துக் கொள்வது. அதுதான் சாத்தியமானது. அதற்கே இந்தியாவின் அனுசரணை அல்லது ஆதரவு இருக்கும். இந்தியாவின் ஆதரவைப் பெற்று, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுத்து, மாகாணசபையின் அதிகாரத்தை முழுமைப்படுத்துவது. குறிப்பாக 13 திருத்தத்தை முழுமையான அமுல்படுத்துவது. அதிலிருந்து படிப்படியாக மேலதிக அதிகாரத்தை – தீர்வை நோக்கிப் பயணிப்பது. இதொரு அரசியற்தொடர் செயற்பாடாகும்..“ என்று வாதிடுவது.

2.   “மாகாணசபை என்பதே சூதான ஒரு பொறி. அதனால்தான் விடுதலைப்புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அது தமிழ் மக்களின் நலனுக்காகச் செய்யப்படவே இல்லை. இந்திய நலனை முதன்மைப்படுத்திச் செய்யப்பட்ட ஒன்று. இதை அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட 29.07.1987 இலிருந்து சரியாக ஐந்தாவது நாளான 04/08/1987 அன்று, யாழ்ப்பாணம் – சுதுமலையில் வைத்துப் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் பிரபாகரன் சொல்லியிருக்கிறார். தம்முடன் கலந்தாலோசிக்கப்படாமலே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று. அதனால்தான் அந்த ஒப்பந்தத்தையும் மாகாணசபையையும் புலிகள் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்ட வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையோ, அன்று மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களோ இன்று இல்லை. அவற்றில் ஒரு பகுதியை 1990 இல் பிரேமதாச பிடுங்கி விட்டார்.  

புலிகள் இல்லாமலாக்கப்பட்ட 2009 க்குப் பிறகு, மிஞ்சிய அதிகாரத்தைக் கொண்டு, கடந்த 16 ஆண்டுகளில் ஏன் மாகாணசபை முறைமை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை? 2009 க்குப் பிறகு தமிழர்களின் பிரநிதிகளாகச் செயற்பட்ட – மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை முறைமையையோ இந்தியாவின் அனுசரணையையோ மறுக்கவில்லையே. அதை நடைமுறைப்படுத்துமாறுதானே கேட்டது. மட்டுமல்ல, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, அதிகாரத்தைப் பெற்று அதை நடைமுறைப்படுத்தியும் பார்த்ததே! இப்போது கூட மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள். அதிகாரங்களைப் பகிருங்கள் என்று கேட்கப்படுகிறது. ஆனால், அதற்கு அரசாங்கம் தயாரில்லையே. இந்த நிலையில் எப்படி மாகாணசபை முறைமையை நாம் ஏற்றுக் கொள்வது? 

இந்தப் பலவீனமான – வஞ்சகத்தனமான மாகாணசபை முறையை ஏற்றுக் கொண்டால், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கான பெறுமதியை இழந்ததாக ஆகிவிடும். அது மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் எமது மக்களின் அரசியல் உரிமையைப் பற்றியோ எமக்கான தீர்வைப் பற்றியோ கவனிக்காது. ஆகவே நாம் மாகாணசபை முறையை ஏற்றுக்கொள்ளாமல், தமிழ் மக்களுடைய அபிலாஷையை நிறைவு செய்யக் கூடிய தீர்வைப் பற்றியே பேச முடியும். அதற்காகவே போராட வேண்டும்” என விவாதிப்பது. 

இந்த இரண்டு வாதங்களையும் கேட்கும்போது சரிபோலவே தோன்றும். அல்லது ஒவ்வொன்றும் சரிபோலிருக்கும். என்றபடியால்தான் இரண்டு நிலைப்பாட்டுக்கும் ஆதரவாளர்கள் உள்ளனர். 

ஆனால், இந்த இரண்டு வாதங்களையும் அல்லது இந்த இரண்டு விடயங்களையும் குறித்து விளக்கமளியுங்கள் என்றால், பலரும் தெளிவற்றுக் குழப்பமடைகிறார்கள். அல்லது திருதிருவென விழிக்கிறார்கள். 

இந்தத் தெளிவற்ற நிலையும் விளக்க முடியாத தடுமாற்றமும் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த நிலைப்பாடுகளுக்குத் தலைமையேற்றிருக்கும் அரசியல் தலைவர்களுக்குமில்லை. அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளோருக்கும் இல்லை. 

அப்படி இருந்திருக்குமானால் அவர்கள் இதுவரையில் அதைத் தெளிவாக முன்வைத்திருப்பர். அப்படி எங்கும் காணவில்லை. 

மாகாணசபை முறைமையை ஓரளவுக்கு வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிவந்தோராகும். சுரேஸ் பிரேமச்சந்திரனின் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், சுகு ஸ்ரீதரன் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கலாநிதி விக்னேஸ்வரன் – கோபாலகிருஸ்ணன் தரப்பின் கிழக்குத் தமிழர் ஒன்றியம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) போன்றவை வெளிப்படையாகவே மாகாணசபை முறைமையை ஆதரிக்கின்றன. ஏற்கின்றன. இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றுக்குமிடையிலும் வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், இவை மாகாணசபை முறைமையை ஏற்கின்றன. அதிலிருந்து முழுமையான தீர்வுக்குப் பயணிக்க வேண்டும். அதுவே சாத்தியம் என வலியுறுத்துகின்றவை.

இவற்றோடு செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ, தர்மலிங்கம் சித்தார்த்தன்  தலைமையிலான புளொட், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், உதயராசாவின் தலைமையிலான சிறி ரெலோ போன்றவையும் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் தரப்புகளே. 

தமிழரசுக் கட்சியும் ஏறக்குறைய மாகாணசபை முறைமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக – உறுதியாகச் சொல்வதற்கு அதனால் முடியவில்லை. அப்படிச் சொன்னால், அது வலியுறுத்தி வரும் சமஸ்டி கோரிக்கைக்கு என்ன நடந்தது என்று எதிரணிகள் (குறிப்பாக ஏனைய தமிழ்க்கட்சிகள்) தலையில் குட்டத் தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் இந்த விடயத்தில்  பட்டும்படாமல் உள்ளது. 

மாகாணசபை முறைமையை முன்தொடக்கமாக ஏற்றுக் கொள்ளலாம். அதுவே சாத்தியமான தொடக்கம் என்று வலியுறுத்தும் தரப்புகள் புலம்பெயர் சூழலிலும் உண்டு. ஆனால், அவை அங்கே வலுவானவையாக இல்லை. அல்லது அந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தக் கூடிய அளவுக்கு அவை வேலைகள் எதையும் செய்வதில்லை. அந்த நிலைப்பாட்டுடன் தாயகத்தில் உள்ள தரப்புகளைப் பலப்படுத்துவமில்லை. 

தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரையிலும் ஒன்றிரண்டு ஊடங்களில் மட்டும்தான் மாகாணசபை முறைமை அல்லது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து எழுதப்படுகிறது; பேசப்படுகிறது. 

இதேவேளை மாகாணசபை முறைமையை வெளிப்படையாக ஆதரிக்கும் தரப்புகளை இந்தியாவின் ஆட்கள் (உளவாளிகள், சார்பு நிலைப்பட்டவர்கள், இந்தியாவின் ஏஜென்டுகள்..) என்று குற்றம்சாட்டப்படுகிறார்கள்; பழித்துரைக்கப்படுகிறார்கள்; சந்தேகிக்கப்படுகிறார்கள்.

ஆனால் யதார்த்தமான அரசியல் என்பது மாகாணசபையிலிருந்தே தொடங்க முடியும் என்பதுதான். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கான அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். இந்தியா அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்வோர், மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்வதற்கு அதனுடைய சக பங்காளித்தரப்பான முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை; பேசுவதுமில்லை. முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்ளாத அல்லது அவர்களும் இணைந்து கோராத மாகாணசபை முறைமை வெற்றியளிக்கப்போவதில்லை. 

மாகாணசபை முறைமையை வெற்றிகரமாக்குவதற்கு இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள சக்திகளுடைய ஆதரவையும் திரட்ட வேண்டும். குறிப்பாக மலையக அரசியற் சக்திகளையும் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் – அதை வேண்டும் என்று கருதும் சிங்களத் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். 

இது இலகுவானது மட்டுமல்ல, சாத்தியமானதும் கூட. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொடக்கம் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வரையில் பலர் மாகாணசபையின் வழியாகவே அரசியலில் நுழைந்தவர்கள். இன்றைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர் கூட மாகாணசபையின் வழியாகப் பயன்களைப் பெற்றவர்களே. 

ஆகவே, இதையெல்லாம் புரிந்து கொண்டு, அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். 

மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்ப்பது – மறுதலிப்பது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தரப்பு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் இயங்கும் இந்தத் தரப்பு, ஒரு நாடு இரு தேசம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. ஏறக்குறைய இது அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டது. விடுதலைப்புலிகளின் அரசியல் தொடர்ச்சியாக தம்மை அடையாளப்படுத்துவது. 

இதை ஒத்ததாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கம் தேசமாகத் திரள்வோம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட சில அணிகளும் உள்ளன. புலம்பெயர் மக்களில் பெரும்பாலானோர் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாகவும் பிரபாகரனை நேசிப்பவர்களாகவும் இருப்பதால் இந்த நிலைப்பாட்டை வெற்றியடைய வைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கின்றார்கள், பாடுபடுகிறார்கள். பொருளாதார ரீதியாகவும் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள்.

அதாவது தாம் எதை நம்புகிறோமோ அதற்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், அதைச்செய்கிறார்கள். 

கோட்பாட்டளவில், இந்த நிலைப்பாடு பலருக்கும் ருசிகரமாகவே இருக்கும். அதற்குக் காரணமும் உண்டு. சிங்கள ஆதிக்கத்தரப்பின் நடைமுறை மற்றும் சிந்தனைகள் தரும் வரலாற்றுப்படிப்பினை அவர்களை இப்படித்தான் சிந்திக்க வைக்கும். இந்தியாவும் மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்யவில்லை. இலங்கை அரசும் அதைத் தட்டிக் கழிக்கும் மனோநிலையில் உள்ளது என்பதால், அவர்கள் அதற்கு மாறான பிரிந்து செல்லும் – தனியாக நிற்கக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்திக்கின்றனர்.  

ஆனால், அதை அடைவதற்கான சாத்தியங்களைக் குறித்து இவர்களிடம் தெளிவில்லை. இருக்கின்ற நம்பிக்கை எப்படியானதென்றால், இலங்கை அரசாங்கம் செய்த இன ஒடுக்குமுறைக் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்காத போக்கும் என்றோ ஒருநாள் சர்வதேச சமூகத்தை ஈழத்தமிழ்ச்சமூகத்தின்பால் திருப்பும் என்பது மட்டுமேயாகும். அதற்காக தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிங்களத் தரப்பைத் தொடர்ச்சியாக எதிர்க்க வேண்டும் என்று சிந்திக்கின்றன; நம்புகின்றன. 

சர்வதேச சமூகம் என்பதை இவை மேற்குலக நாடுகள் என்றே வரையறையும் செய்துள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினையில் தமிழ் மக்களின் நிலை குறித்து கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் கிடைக்கின்ற வரையறுக்கப்பட்ட அளவிலான ஆதரவை தமக்கான முழுமையான நம்பிக்கையாகக் கொள்கின்றன. இந்த ஆதரவு காலப்போக்கில் ஏனைய மேற்கு நாடுகளின் ஆதரவாக மாறும் என்று நம்புவோர் இதில் அதிகமுண்டு. 

என்பதால் முடிந்த முடிவாக பிரிவினை என்ற மனநிலையில்தான் இவர்கள் உள்ளனர். யதார்த்தத்தைப் பற்றி இவர்கள் சிந்திப்பதாகவே இல்லை. யதார்த்த நிலையே பிராந்திய ஆதிக்கத்தைக் கடந்து சிந்திக்கக் கூடிய நிலை இன்னும் உருவாகவில்லை. பிராந்தியம் என்பது இந்தியாவும் சீனாவும் இணைந்த நிலையே. இரண்டு நாடுகளையும் தமிழர்கள் தமது அரசியற் தொடர்பு வலயத்திலோ வலையமைப்பிலோ கொண்டு, அதற்கான பொறிமுறைகளை வகுத்துச் செயற்படவில்லை. ஏன் மேற்குலகைக் கையாளக் கூடிய பொறிமுறைகள் (இராஜதந்திர நடவடிக்கைகள்) எதையும் இவை மட்டுமல்ல எந்தத் தரப்பும் மேற்கொள்ளவில்லை. 

இந்தப் பலவீனமான நிலையில்தான் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் உள்ளது. 

ஜனநாயக அரசியலில் பல்வேறு நிலைப்பாடுகளும் போக்குகளும் இருக்கும். அதற்கு இடமும் உண்டு. ஆனால், தமக்கென ஒரு நிலைப்பாட்டை அல்லது கோட்பாட்டை முன்னெடுக்கும் தரப்புகள் அவற்றின் நடைமுறைச் சாத்தியம் என்ன? அதற்கான கால வரையறை (உத்தேசமாக) என்ன? அதற்கான உத்தரவாதம் என்ன? அதை முன்னெடுக்கும் வழிமுறை – சாத்தியப்படுத்தும் பொறிமுறை – என்ன? என்றெல்லாம் மக்களுக்குக் கூற வேண்டும். அது முக்கியமான கடப்பாடு. 

இங்கே தமிழ் அரசியல் தரப்பில் அந்தக் கடப்பாடு என்று எதுவுமே கிடையாது. ஏனெனில் இங்கே நடந்து கொண்டிருப்பது, தேர்தலை மையப்படுத்திய அரசியலாகும். தேர்தல் வெற்றிக்காக எதை முன்னே வைக்க வேண்டும். எதை முதலீடாக்க வேண்டுமோ அதையே அவர்கள் செய்கிறார்கள். 

இதற்கு அப்பால், தாம் முன்னிறுத்தும் அல்லது தாம் நம்பும் கோட்பாட்டை அல்லது நிலைப்பாட்டை மெய்யாகவே வெற்றியடைய வைக்க வேண்டும் என்றால், அதற்காக அவை பாடுபட வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேணடும். அதாவது அதைச் செயற்படுத்த வேண்டும். 

இங்கே கற்பனைக் குதிரைகளே அதிகம். அவை நிஜமாக ஓடுவதுமில்லை. நிஜமாகக் கனைப்பதுமில்லை. நிஜமாக வெற்றியடைவதுமில்லை. 

பாவம் தமிழ் மக்கள். இல்லை இல்லை. மன்னிக்க வேண்டும். இன்னும் தண்டனை பெற வேண்டும் தமிழ் மக்கள். ஏனென்றால், இவ்வளவு பட்ட பிறகும் இன்னும் புத்தி தெளியாமல் இருந்தால், அதற்கான தண்டனையைப் பெறத்தானே வேண்டும்!. 

ஆகவே தொடர்ந்தும் சிங்கள மேலாதிக்கத் தரப்புக்கு வெற்றிகளைக் குவிக்கிறார்கள் தமிழ் மக்கள்.  

https://arangamnews.com/?p=12248