Aggregator

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

1 month ago
சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு! சூடானில் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ்(ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் நிலவுகிறது. இந்நிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவான ஆர்எஸ்எப், நேற்றுமுன்தினம் இரவு ட்ரோன் ஏவியது. இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். ஆயுத குழுவினர்,முதலில் பாடசாலையை தாக்கியதுடன் பின்னர் பொதுமக்கள் உணவுக்காக உதவி வாங்க கூடியிருந்த இடத்தில் இரண்டாவது தாக்குதலை நடத்தியதாகவும் 50 பேர் இதில் கொல்லப்பட்டனர் எனவும் குழந்தைகள் 33 பேர் உள்ளடங்குவதாகவும் இந்த தாக்குதலுக்கு குறித்த அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை எனவும் சூடான் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1455473

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

1 month ago

download-5-1.jpg?resize=750%2C375&ssl=1

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

சூடானில் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ்(ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் நிலவுகிறது.

இந்நிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவான ஆர்எஸ்எப், நேற்றுமுன்தினம் இரவு ட்ரோன் ஏவியது. இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

ஆயுத குழுவினர்,முதலில் பாடசாலையை தாக்கியதுடன் பின்னர் பொதுமக்கள் உணவுக்காக உதவி வாங்க கூடியிருந்த இடத்தில் இரண்டாவது தாக்குதலை நடத்தியதாகவும் 50 பேர் இதில் கொல்லப்பட்டனர் எனவும் குழந்தைகள் 33 பேர் உள்ளடங்குவதாகவும் இந்த தாக்குதலுக்கு குறித்த அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை எனவும் சூடான் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1455473

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்

1 month ago
இவர்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருமுறை வடக்குக்கு ஒதுக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படாமல் திரும்பி சென்றது இதுகளை எல்லாம் எலெக்சனில் வென்று மாற்றி காட்டோணும் எண்டு பேசியதாக நினைவு இப்போ இவரே வடக்குக்கு பணம் வேண்டாம் எங்கிறார். கடந்த தேர்தலில் வடக்கில் அதிக ஆசனங்களை வென்றது தேசிய மக்கள் சக்தி அவர்களிடம் பணத்தை கொடுக்காமல் யாரிடம் கொடுப்பார்கள்? ஓரிருவாரங்கள் முன்னர்தான் தேசிய தலைவருக்கும் மாவீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்று பாராளு மன்றத்தில் குதியோ குதியெண்டு குதிச்சார் இப்போ அதே வாயால தலைவரையும் போராளீகளையும் மக்களையும் கொன்று குவித்தவர்களை ராணுவவீரர்கள் என்று அவர்களை மரியாதையாக அழைக்கோணும் எண்டுறார். ஒரு தொகுதியில் மாத்திரம் வென்ற இவர் முழு வடக்குக்கும் பணம் தேவையில்லை என்று சொல்ல யாரிடமிருந்து அதிகாரத்தை பெற்றார்? அத்துடன் அநுர ஒருதடவை யாழ்வந்து நகரசபை கூட்டத்தில் கலந்து கொண்டபோது தையிட்டியில் விகாரை அமைத்தது சரி அதை வரவேற்கிறோம் அகற்ற தேவையில்லைஎன்று அர்ச்சுனா கூறியது காணொலி பதிவாக வந்தது. இந்த மூன்று விஷயங்களுமே கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய நினைத்த ஒன்று, அர்ச்ச்சுனாவை உள்ளே போட்டபோது நாமல் ஓடி வந்தார் இப்போலாம் அரசல் புரசலாக அர்ச்சுனா நாமலின் பினாமி என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலாவருகிறது , அறிஞ்சு தெரிஞ்சவனுகதான் அப்படி உலவவிடுறாங்களோ யார் அறிவாரோ? இப்போலாம் வடக்கின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றத்தில் குதிப்பவர்கள் வடக்கு மக்களுக்காக பேசுகிறார்கள் என்றா நினைக்கிறோம்? உண்மையில் அங்கே நடப்பது இளங்குமரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட வன்மம். ஒரு இயற்கைகோரத்தின் பின்னர் தமது பாகுதிகளை சீரமைக்க வேறுபாடுகளை மறந்து சிங்களவர்கள் முஸ்லீம்கள் எதிர்கட்சிகள் என அனைவருமே ஒன்றிணைந்து நிக்கிறார்கள், நமது வெண்ணெய்வெட்டி வீரர்கள் மூண்டுநாலுபேர் இருந்துகொண்டு இந்த நேரத்திலும் தங்கட பிரச்சனைகளை பேசுறதுக்கு பாராளுமன்றத்தை பாவிக்கும் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார்கள். காலங்களும் காட்சிகளும் ஆட்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கு ஆனால் அந்தகாலத்திலிருந்து இந்தக்காலம்வரை தமிழர் பிரதிநிதிகள் என்று தெரிவு செய்யப்பட்டு சிங்கள சபைக்கு செல்லும் தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை அதே குணங்களுடன் தான் அலைகிறார்கள். நாட்கள்தான் மாறிவிட்டது ஆட்கள் மாறவில்லை. இந்த லட்சணத்தில் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையென்று அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம் மாவை சம்பந்தனை திட்டி என்ன பிரயோசனம், அவர்களை திட்டிய அதே இளம் தலைமுறையும் அவர்களைவிட கேவலமாகதானே நடக்கிறது. இந்த கோமாளி கூட்டத்தின் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் யாழ்மண்ணில் சிங்களவனே நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பீபா(FIFA) உலகக் கிண்ணம் 2026 - செய்திகள்

1 month ago
வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக் கிண்ணத்துக்கான அணிகளுக்குரிய பகிரங்க குலுக்கல் இன்று 05 Dec, 2025 | 08:17 PM (நெவில் அன்தனி) கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 48 நாடுகள் பங்குபற்றும் மிகப் பெரிய FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அமெரிக்க கண்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் பகிரங்க குலுக்கல் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளன. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்று நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்துவது இதுவே முதல் தடவையாகும். 2002 உலகக் கிண்ணப் போட்டியை ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகள் கூட்டாக நடத்தியிருந்தன. அதுவே கூட்டாக நடத்தப்பட்ட முதலாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியாகும். நான்கு ஜாடிகளில் தலா 12 நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இதுவரை 42 நாடுகள் தகுதிபெற்றுள்ளதுடன் இன்னும் 6 நாடுகள் தகுதிபெறவுள்ளன. இந்த 48 நாடுகளும் நான்கு ஜாடிகளில் நிரல்படுத்தல் பிரகாரம் இடம்பெறுகின்றன. ஜாடி 1: கனடா, மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா (இந்த மூன்றும் கூட்டு வரவேற்பு நாடுகள்), ஸ்பெய்ன், நடப்பு உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிறேஸில், போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி. ஜாடி 2: குரோஷியா, மொரோக்கோ, கொலம்பியா, உருகுவே, சுவிட்சர்லாந்து, ஜப்பான், செனகல், ஈரான், தென் கொரியா, ஈக்வடோர், ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா. ஜாடி 3: நோர்வே, பனாமா, எகிப்து, அல்ஜீரியா, ஸ்கொட்லாந்து, பரகுவே, டியூனிசியா, கோட் டி'ஐவொயர் (ஐவரி கோஸ்ட்), உஸ்பெகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா. ஜாடி 4: ஜோர்தான், கபோ வேர்டே, கானா, கியூராகாவோ, ஹெய்ட்டி, நியூஸிலாந்து, ஐரோப்பிய ப்ளே ஓவ் ஏ, பி, சி, டி, FIFA ப்ளே ஓவ் சுற்றுப் போட்டி 1, 2. ஜாடி 1இல் இடம்பெறும் 12 அணிகளும் A இலிருந்து L வரை 12 குழுக்களில் முதல் அணிகளாக குலுக்கல் மூலம் நிரல்படுத்தப்படும். 2026 உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகள் என்ற வகையில் ஜாடி 1இல் (Pot 1) இடம்பெறும் மெக்சிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன வெவ்வேறு நிறங்களிலான பந்துகளைக் கொண்டு முதல் அணிகளாக நிரல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அணிகளும் ஏ 1 - மெக்சிகோ (பச்சை பந்து), பி 1 - கனடா (சிவப்பு பந்து), டி 1 - ஐக்கிய அமெரிக்கா (நீல பந்து) என நிரல்படுத்தப்படும். ஜாடி 2இல் இடம்பெறும் அணிகள் 12 குழுக்களில் 2ஆவது அணிகளாகவும் ஜாடி 3இல் இடம்பெறும் அணிகள் 3ஆவது அணிகளாகவும் ஜாடி 4இல் இடம்பெறும் அணிகள் 4ஆவது அணிகளாகவும் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும். சம அளவிலான போட்டித் தன்மை சம அளவிலான போட்டித் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரை இறுதிகளுக்கு நான்கு வெவ்வேறு குழுக்களிலிருந்து அணிகள் தெரிவாகும். அதாவது பீபா தரவரசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஸ்பெய்ன், ஆர்ஜன்டீனா ஆகியன ஒரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக (Top half and Bottom half) விளையாடும். அதேபோன்று தரவரிசையில் 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன மற்றொரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக விளையாடும். இந்த அணிகள் தத்தம் குழுக்களில் முதலிடத்தைப் பெற்றால் அரை இறதிவரை ஒன்றை ஒன்று எதிர்கொள்ள மாட்டாது. 12 குழுக்களில் நடத்தப்படும் உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைத் தவிர்ந்த ஏனைய கூட்டு சம்மேளனங்களை சேர்ந்த இரண்டு அணிகள் ஒரு குழுவில் இடம்பெறாது என கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இது பொருந்தாது. ஏனெனில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைப் பிரதிநிதித்தவப்படுத்தும் 16 அணிகள் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளன. அதேவேளை, ஒரே குழுவில் இரண்டு ஐரோப்பிய அணிகளுக்கு மேல் இடம்பெறாது. பீபா உலகக் கிண்ண குலுக்கலில் பங்குபற்றும் உலகத் தலைவர்கள் வொஷிங்டன் டி சி கென்னடி நிலையத்தில் இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 42 அணிகளுக்கான பகிரங்க குலுக்கலின் போது வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட இன்னும் பல நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஆகிய மூவரும் இறுதி குலுக்கலின்போது அரங்கில் பிரசன்னமாகி இருப்பர். உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள 16 நகரங்களில் உள்ள இலட்சக்கணக்கான இரசிகர்களிடம் போட்டிகளைக் கண்டு களிக்க வருகை தருமாறு மூன்று தலைவர்களும் அழைப்பு விடுக்கவுள்ளனர். அத்துடன் கால்பந்தாட்ட கூட்டு சம்மேளனங்களின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளும் கலந்து இன்றைய வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர். ஈரான் கால்பந்தாட்ட சங்கத் தலைவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சங்கத்தைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது. பீபா உலகக் கிண்ணம் 2026 பீகா உலகக் கிண்ணப் போட்டிகள் 2026 ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதிவரை நடைபெறும். 72 குழுநிலைப் போட்டிகள், இறுதிப் போட்டி மற்றும் 3ஆம் இடத்துக்கான போட்டிகள் உட்பட 32 நொக் அவுட் போட்டிகளுளுடன் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும். உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை மூன்றாவது தடவையாக அரங்கேற்றவுள்ள மெக்சிக்கோ முதலாவது போட்டியை ஜூன் 11ஆம் திகதி தனது அணியின் பங்கேற்புடன் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் அரங்கேற்றும். மெக்சிகோவில் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகின்றது. அந்த நாட்டிலும் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா தனது ஆரம்பப் போட்டியை டொரொன்டோ விளையாட்டரங்கில் ஜூன் 12ஆம் திகதி நடத்தும். ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 78 போட்டிகள் நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவின் ஆரம்பப் போட்டி லொஸ் ஏஞ்சலிஸில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும். உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி நியூ யோர்க் நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஜூலை 19ஆம் திகதி அரங்கேற்றப்படும். இப் போட்டிகளை முன்னிட்டு 60 இலட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் அவற்றில் 2 இலட்சம் டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. https://www.virakesari.lk/article/232570

பீபா(FIFA) உலகக் கிண்ணம் 2026 - செய்திகள்

1 month ago

வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக் கிண்ணத்துக்கான அணிகளுக்குரிய பகிரங்க குலுக்கல் இன்று

05 Dec, 2025 | 08:17 PM

image

(நெவில் அன்தனி)

கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 48 நாடுகள் பங்குபற்றும் மிகப் பெரிய FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அமெரிக்க கண்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் பகிரங்க குலுக்கல் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ளது.

1_flags_of_canada_mexico_and_usa.png

ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக  உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளன.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்று நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்துவது இதுவே முதல் தடவையாகும்.

2002 உலகக் கிண்ணப்  போட்டியை ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகள் கூட்டாக நடத்தியிருந்தன. அதுவே கூட்டாக நடத்தப்பட்ட முதலாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியாகும்.

நான்கு ஜாடிகளில் தலா 12 நாடுகள்

உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இதுவரை 42 நாடுகள் தகுதிபெற்றுள்ளதுடன் இன்னும் 6 நாடுகள் தகுதிபெறவுள்ளன.

இந்த 48 நாடுகளும் நான்கு ஜாடிகளில் நிரல்படுத்தல் பிரகாரம் இடம்பெறுகின்றன.

3_fifa_draw_procedere..jpg

ஜாடி 1: கனடா, மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா (இந்த மூன்றும் கூட்டு வரவேற்பு நாடுகள்), ஸ்பெய்ன், நடப்பு உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிறேஸில், போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி.

ஜாடி 2: குரோஷியா, மொரோக்கோ, கொலம்பியா, உருகுவே, சுவிட்சர்லாந்து, ஜப்பான், செனகல், ஈரான், தென் கொரியா, ஈக்வடோர், ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா.


ஜாடி 3: நோர்வே, பனாமா, எகிப்து, அல்ஜீரியா, ஸ்கொட்லாந்து, பரகுவே, டியூனிசியா, கோட் டி'ஐவொயர் (ஐவரி கோஸ்ட்), உஸ்பெகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா.

ஜாடி 4: ஜோர்தான், கபோ வேர்டே, கானா, கியூராகாவோ, ஹெய்ட்டி, நியூஸிலாந்து, ஐரோப்பிய ப்ளே ஓவ் ஏ, பி, சி, டி, FIFA ப்ளே ஓவ் சுற்றுப் போட்டி 1, 2.

ஜாடி 1இல் இடம்பெறும் 12 அணிகளும் A இலிருந்து L வரை 12 குழுக்களில் முதல் அணிகளாக குலுக்கல் மூலம் நிரல்படுத்தப்படும்.

4_fifa_word_cup_qualified_teams.png

2026 உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகள் என்ற வகையில் ஜாடி 1இல் (Pot 1) இடம்பெறும் மெக்சிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன வெவ்வேறு நிறங்களிலான பந்துகளைக் கொண்டு முதல் அணிகளாக நிரல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று அணிகளும் ஏ 1 - மெக்சிகோ (பச்சை பந்து), பி 1 - கனடா (சிவப்பு பந்து), டி 1 - ஐக்கிய அமெரிக்கா (நீல பந்து) என நிரல்படுத்தப்படும்.

ஜாடி 2இல் இடம்பெறும் அணிகள் 12 குழுக்களில் 2ஆவது அணிகளாகவும் ஜாடி 3இல் இடம்பெறும் அணிகள் 3ஆவது அணிகளாகவும் ஜாடி 4இல் இடம்பெறும் அணிகள் 4ஆவது அணிகளாகவும் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும்.

சம அளவிலான போட்டித் தன்மை  

சம அளவிலான போட்டித் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரை இறுதிகளுக்கு நான்கு வெவ்வேறு குழுக்களிலிருந்து அணிகள் தெரிவாகும்.

அதாவது பீபா தரவரசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஸ்பெய்ன், ஆர்ஜன்டீனா ஆகியன ஒரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக  (Top half and Bottom half) விளையாடும்.  அதேபோன்று தரவரிசையில் 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன மற்றொரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக விளையாடும். 

5_pathway_for_fifa_groupings.png

இந்த அணிகள் தத்தம் குழுக்களில் முதலிடத்தைப் பெற்றால் அரை இறதிவரை ஒன்றை ஒன்று எதிர்கொள்ள மாட்டாது.

12 குழுக்களில் நடத்தப்படும் உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைத் தவிர்ந்த ஏனைய கூட்டு சம்மேளனங்களை சேர்ந்த இரண்டு அணிகள் ஒரு குழுவில் இடம்பெறாது என கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இது பொருந்தாது.


ஏனெனில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைப் பிரதிநிதித்தவப்படுத்தும் 16 அணிகள் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளன. அதேவேளை, ஒரே குழுவில் இரண்டு ஐரோப்பிய அணிகளுக்கு மேல் இடம்பெறாது.

பீபா உலகக் கிண்ண குலுக்கலில் பங்குபற்றும் உலகத் தலைவர்கள்

வொஷிங்டன் டி சி கென்னடி நிலையத்தில் இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 42 அணிகளுக்கான பகிரங்க குலுக்கலின் போது வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட இன்னும் பல நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

6_pm_of_canada_march_carney.jpg

7_mexico_president_claudia.png

8_us_president_donald_trump...JPG

கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஆகிய மூவரும் இறுதி குலுக்கலின்போது அரங்கில் பிரசன்னமாகி இருப்பர்.

உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள 16 நகரங்களில் உள்ள இலட்சக்கணக்கான இரசிகர்களிடம் போட்டிகளைக் கண்டு களிக்க வருகை தருமாறு மூன்று தலைவர்களும் அழைப்பு விடுக்கவுள்ளனர்.

அத்துடன் கால்பந்தாட்ட கூட்டு சம்மேளனங்களின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளும் கலந்து இன்றைய வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர்.

ஈரான் கால்பந்தாட்ட சங்கத் தலைவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சங்கத்தைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

பீபா உலகக் கிண்ணம் 2026

பீகா உலகக் கிண்ணப் போட்டிகள் 2026 ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதிவரை நடைபெறும்.

72 குழுநிலைப் போட்டிகள், இறுதிப் போட்டி மற்றும் 3ஆம் இடத்துக்கான போட்டிகள் உட்பட 32 நொக் அவுட் போட்டிகளுளுடன் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை மூன்றாவது தடவையாக அரங்கேற்றவுள்ள மெக்சிக்கோ முதலாவது போட்டியை ஜூன் 11ஆம் திகதி தனது அணியின் பங்கேற்புடன் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் அரங்கேற்றும்.

மெக்சிகோவில் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்படும்.

கனடா முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகின்றது. அந்த நாட்டிலும் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா தனது ஆரம்பப் போட்டியை டொரொன்டோ விளையாட்டரங்கில் ஜூன் 12ஆம் திகதி நடத்தும்.

ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 78 போட்டிகள் நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவின் ஆரம்பப் போட்டி லொஸ் ஏஞ்சலிஸில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும்.

9_new_york_new_jersey.jpg

உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி நியூ யோர்க் நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஜூலை 19ஆம் திகதி அரங்கேற்றப்படும்.

இப் போட்டிகளை முன்னிட்டு 60 இலட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் அவற்றில் 2 இலட்சம் டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.

2_fifa_world_cup_2026.png

10_fifa_world_cup_2026_players.png

https://www.virakesari.lk/article/232570

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

1 month ago
இந்த தொடரில் எனது அபிமான வீரர்களான டி காக் மற்றும் யெஸ்வால் சதம் அடித்தது கண்னுக்கு குளிர்சியாக இருந்தது.பவுமா இரன்டு இனிங்சிசும் முறையே 4-2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அரைச் சதத்தை தவற விட்டது அதிர்ஸ்ட்டம் இன்மை.

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

1 month ago
“சாகர் பந்து” நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு உதவி : 9வது இந்திய நிவாரண விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 12:10 PM இந்தியாவால் பெயரிடப்பட்ட "சாகர் பந்து" நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிச் செல்லும் 9வது இந்திய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 110 அடி நீளம், 65 மெட்ரிக் தொன் எடையும் கொண்ட பெய்லி பாலம், ஒரு ஜேசிபி பேக்ஹோ வாகனத்துடன் இந்திய இராணுவ பொறியியலாளர் படையின் 13 பொறியாளர்கள் நாட்டை வந்தடைந்தனர். இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான சி-17, நேற்று (6) பிற்பகல் 3.15 மணிக்கு இந்தியாவின் ஆக்ராவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இலங்கை இராணுவ பொறியியலாளர் படையின் அதிகாரிகள் குழுவும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழுவும் இதனை வரவேற்றனர். https://www.virakesari.lk/article/232659

இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

1 month ago
இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை 900ஐ கடந்தது ; நூற்றுக்கணக்கானோர் மாயம்! Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 12:02 PM இந்தோனேசியாவில் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் மலாக்கா ஜலசந்தியில் உருவான சூறாவளியால் 100,000க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளன. இது தென்கிழக்காசிய நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் அண்மைய வாரங்களில் ஆசியாவைத் தாக்கிய பல தீவிர வானிலை நிகழ்வுகளில் ஒன்றாகும். மேலும், இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆச்சே தமியாங்கில், வெள்ளத்தால் பல கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி, வாழ்விடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். லிண்டாங் பவா கிராமத்தில் உயிர் பிழைத்த ஒருவர் மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளின் மீது அமர்ந்து தங்களது உயிரை காப்பாற்றிக்கொண்டதாக சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். "மூன்று நாட்கள் சாப்பிடாமலும் குடிக்காமலும் தங்கள் நான்கு வயது குழந்தைகளுடன் தங்கள் வீடுகளின் கூரைகளின் மீது அமர்ந்து உயிரை காப்பாற்றிக்கொண்டவர்களும் இருந்தனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது கிராமத்தில் சுமார் 90 சதவீத வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 300 குடும்பங்கள் செல்ல இடமில்லாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார். அங்கு ஏற்பட்ட வெள்ளம் ஒரு சிறைச்சாலையையே மூழ்கடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோது, கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களை அனுப்புவதற்கு வேறிடம் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியதாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிபோல்கா நகரம் மற்றும் மத்திய தபனுலி ஆகிய இரண்டு பகுதிகளுக்கான நில அணுகல் ஞாயிற்றுக்கிழமை வரை துண்டிக்கப்பட்டிருந்தது. உதவிகள் விமானம் மற்றும் கடல் வழியாக மட்டுமே அவர்களை அடைய முடிந்தது. சில பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் கொள்ளை நடந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/232654

பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம்

1 month ago
பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம் 06 Dec, 2025 | 11:20 AM பாகிஸ்தானில் இதுவரை இல்லாத புதிய உயர்பதவியாக “ முப்படைகளின் பிரதானி” (Chief of Defence Forces – CDF) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை உருவாக்க, பாகிஸ்தான் அரசியலமைப்பின் 243 ஆவது பிரிவில் 27வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் எதிர்கொண்ட கடும் பின்னடைவை அடுத்து, பாதுகாப்பு அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முதல் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீரை நியமிக்கும் பிரதமரின் பரிந்துரையை அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்து உள்ளார். இந்த நியமனம் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பதவியை ஏற்றுக்கொள்ளும் அசிம் முனீர், இதுவரை வகித்து வந்த இராணுவத் தளபதி (Army Chief) பொறுப்பையும் தொடர்வார். முப்படைகளின் பிரதானி பதவிக்கு உட்பட்ட அதிகாரம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்று முப்படைகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வழிவகுக்கும். இதுவரை முப்படைகளின் அதிகாரமும் கட்டுப்பாடும் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் கீழ் இருந்தது. இனி அந்த அதிகாரம் ஒரே உயரதிகாரியிடம் ஒருங்கிணைக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த புதிய பதவி, பாகிஸ்தானின் பாதுகாப்பு கொள்கையில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232591

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்

1 month 1 week ago
எந்ந நோயால் பாதிக்கப்பட்டவனுக்கும் தெரியும் தனக்கு நோய் உள்ளது என்று.ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கு மட்டும் அது தெரியாது.இது ஒரு பெரிய கொடுமை.

'டடா காப்பாத்துங்க' : மண் சரிவால் சேறும் சகதியும் புகுந்த வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல்

1 month 1 week ago
'டாடா காப்பாத்துங்க' : மண் சரிவால் சேறும் சகதியும் புகுந்த வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 டிசம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சலான சிலரது முயற்சியால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது? இலங்கையின் உவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பண்டாரவிளை நகரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது கவரக்கெல பகுதி. தேயிலைத் தோட்டங்கள் சூழ அமைந்திருக்கும் இந்த மலைப் பிரதேசத்தில்தான் நிலச்சரிவில் சிக்கிய பலர் உயிரோடு மீட்கப்பட்டார்கள். கவரக்கெலவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். தித்வா புயலின் தாக்கம் இலங்கையை நெருங்கியதும் இங்கும் தொடர்ச்சியாக மழை பெய்ய ஆரம்பித்தது. நவம்பர் 27ஆம் தேதிவரை எல்லாம் வழக்கம் போலவே இருந்தது. நவம்பர் 27ஆம் தேதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது. இந்த நிலையில், கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டியுள்ள மலைப் பகுதிகள் சிறிய அளவில் சரிய ஆரம்பித்தன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்த ஆட்களை ஒரு வாகனத்தை வைத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்கள். ஆனால், வாகனத்தில் ஆட்கள் ஏறி, வாகனம் நகர்வதற்குள் மழை நீர் அதிகரிக்கவே அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "அந்த நேரத்தில் இரு பக்கங்களில் இருந்தும் மண் சரிந்து, தண்ணீரோடு கலந்து வர ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கோவிலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் அங்கிருந்த பலகைகளையும் கயிறையும் வைத்து ஆட்களை மீட்டு, மற்றொரு பக்கம் அனுப்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் மலைப் பகுதியிலிருந்து பெரிய அளவில் மண் சரிய ஆரம்பித்தது" என்றார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவரான ஆர். கஜேந்திரன். கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டி, கீழே இருந்த பகுதியில் சில வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. மழை பெய்துகொண்டிருந்த அந்த நேரத்தில் பல வீடுகளில் இருந்த ஆட்கள் வெளியேறிவிட, மூன்று வீடுகளில் வசித்தவர்கள் உள்ளேயே இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளும் இருந்தன. அதில் ஒரு வீட்டில்தான் செல்வராஜ் - ரேணுகா தேவி தம்பதி வசித்துவந்தனர். அந்த மழை நாளில், அவர்களது வீட்டில் மூன்று பேரக் குழந்தைகளும் வந்திருந்தார்கள். இவர்களை சாப்பிட வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, வீட்டிற்குள் சகதியும் தண்ணீரும் புகுந்ததாக செல்வராஜ் கூறினார். "எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஐயோ, நாம் போனாலும் பரவாயில்லை, நம் பேரப் பிள்ளைகளும் இதில் சிக்கிக் கொண்டுவிட்டார்களே என்று இருந்தது. குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தப்பிக்க முயன்றேன். வெளியில் வரும்போது என் மனைவியின் சேலை எதிலோ சிக்கிக்கொண்டுவிட்டது. நானும் சகதியில் சிக்கினேன்" என்கிறார் செல்வராஜ். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரும் வேறு சிலருமாகச் சேர்ந்து குழந்தைகளையும் செல்வராஜ் தம்பதியையும் மீட்டுள்ளனர். தற்போது கவரக்கெலையில் ஒரு முகாமில் தங்கியிருக்கிறார்கள் செல்வராஜ் குடும்பத்தினர். "அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் புத்தி ஏதோ ஆகிவிடுகிறது" என்று சொல்லும்போதே அவரது கைகள் நடுங்குகின்றன. செல்வராஜின் வீட்டிலிருந்த பேரக் குழந்தைகளில் அவருடைய மகள் தங்கேஸ்வரியின் குழந்தையும் ஒன்று. மழையும் வெள்ளமும் வரவும் தந்தையின் வீட்டை நோக்கி ஓடிவந்தார் தங்கேஸ்வரி. ஆனால், தந்தையின் வீடு நிலச்சரிவில் சிக்கியிருந்ததைப் பார்த்த அவர், அதில் சிக்கி தன் குழந்தையும் போய்விட்டது என்றுதான் முதலில் நினைத்துள்ளார். "நான் பாதி வழி வரும்போதே என் அப்பாவின் வீட்டில் மண் சரிந்துவிட்டதைப் பார்த்தேன். அவ்வளவுதான், என் குழந்தையை மீட்க முடியாது என நினைத்தேன். 'அப்பா வீட்டிற்கு குழந்தை அனுப்பினேன். அவர்கள் மண்ணுக்குள் போய்விட்டார்கள்' என கத்தினேன். சிறிது நேரத்திலேயே அப்பாவின் பக்கத்து வீட்டில் இருந்த பையன், பாப்பாவை மண்ணில் இருந்து எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னான்" என்கிறார் தங்கேஸ்வரி. குழந்தை மீட்கப்பட்டுவிட்டாலும், இந்த நிகழ்வை இப்போது விவரிக்கும்போதும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. படக்குறிப்பு,மண் சரிவில் சிக்கியவர்களை மீட்ட இளைஞர்கள் செல்வராஜ் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த யோகத்தின் வீட்டில் அவரும் அவருடைய இரு குழந்தைகளும் மாமியாரும் இருந்தனர். கணவர், மழை நீரைத் திருப்பிவிடுவதாகச் சொல்லி வெளியில் போயிருந்தார். அந்த நேரத்தில் நிலச்சரிவு வந்துவிட, தன் குழந்தைகளை அருகில் இருந்த பாதை மீது தூக்கிப்போட்டுவிட்டு, அவரும் வெளியேறினார். ஆனால், மாமியார் உள்ளேயே சிக்கிக்கொண்டார். "என்ன செய்றதுன்னே எனக்குத் தெரியவில்லை. கத்திக்கொண்டே ஓடினேன். அப்போது மேலே இருந்து சில இளைஞர்கள் ஓடி வந்தார்கள். என் மாமியாரை யாராலும் காப்பாற்ற முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால், எல்லோரும் சேர்ந்து அவரைக் காப்பாற்றிவிட்டார்கள்" என்கிறார் அவர். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் வீட்டிற்குள்ளும் நிலச்சரிவால் சேறும் சகதியும் புகுந்தபோது வீட்டிற்குள் குழந்தை இருந்தது. அவர் தனது வீட்டிலிருப்பவர்களைக் காப்பாற்ற வந்தபோது மார்பளவுக்கு சேறும் சகதியும் நிறைந்திருந்தது. "சகதியால் சூழப்பட்டிருந்த வீட்டிற்குள் செல்லும்போது 'டாடா காப்பாத்துங்கன்னு' குழந்தையின் சத்தம் கேட்டது. பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தால், யாரும் இருக்கும் இடமே தெரியவில்லை. குழந்தை எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. நான் தடவித் தடவி உள்ளே சென்றபோது 'டாடா வந்துட்டீங்களா' என்று குழந்தையின் குரல் கேட்டது. அவ்வளவுதான். வீட்டிற்குள்ளிருந்த ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து வெளியில் வந்து சேர்த்தேன்" என்கிறார் கமல்ராஜ். "ஆனால், வீட்டை நெருங்கும்போது 'டாடா, என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க டாடா' என்ற குழந்தையின் குரல்தான் எனக்குத் தெம்பைக் கொடுத்தது. இல்லாவிட்டால் இது நடந்திருக்காது" என்கிறார் கமல்ராஜ். இங்கிருந்தவர்களின் துணிச்சலான முயற்சிகளால், இந்த நிலச்சரிவில் கவரக்கெலயில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் இப்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டையும் பொருட்களையும் இழந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czj0mejxkk9o

'டடா காப்பாத்துங்க' : மண் சரிவால் சேறும் சகதியும் புகுந்த வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல்

1 month 1 week ago

'டாடா காப்பாத்துங்க' : மண் சரிவால் சேறும் சகதியும் புகுந்த வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல்

இலங்கை நிலச்சரிவு

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 7 டிசம்பர் 2025, 06:41 GMT

    புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையில் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சலான சிலரது முயற்சியால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?

இலங்கையின் உவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பண்டாரவிளை நகரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது கவரக்கெல பகுதி. தேயிலைத் தோட்டங்கள் சூழ அமைந்திருக்கும் இந்த மலைப் பிரதேசத்தில்தான் நிலச்சரிவில் சிக்கிய பலர் உயிரோடு மீட்கப்பட்டார்கள்.

கவரக்கெலவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். தித்வா புயலின் தாக்கம் இலங்கையை நெருங்கியதும் இங்கும் தொடர்ச்சியாக மழை பெய்ய ஆரம்பித்தது. நவம்பர் 27ஆம் தேதிவரை எல்லாம் வழக்கம் போலவே இருந்தது.

நவம்பர் 27ஆம் தேதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது. இந்த நிலையில், கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டியுள்ள மலைப் பகுதிகள் சிறிய அளவில் சரிய ஆரம்பித்தன.

இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்த ஆட்களை ஒரு வாகனத்தை வைத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்கள். ஆனால், வாகனத்தில் ஆட்கள் ஏறி, வாகனம் நகர்வதற்குள் மழை நீர் அதிகரிக்கவே அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"அந்த நேரத்தில் இரு பக்கங்களில் இருந்தும் மண் சரிந்து, தண்ணீரோடு கலந்து வர ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கோவிலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் அங்கிருந்த பலகைகளையும் கயிறையும் வைத்து ஆட்களை மீட்டு, மற்றொரு பக்கம் அனுப்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் மலைப் பகுதியிலிருந்து பெரிய அளவில் மண் சரிய ஆரம்பித்தது" என்றார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவரான ஆர். கஜேந்திரன்.

கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டி, கீழே இருந்த பகுதியில் சில வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. மழை பெய்துகொண்டிருந்த அந்த நேரத்தில் பல வீடுகளில் இருந்த ஆட்கள் வெளியேறிவிட, மூன்று வீடுகளில் வசித்தவர்கள் உள்ளேயே இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளும் இருந்தன. அதில் ஒரு வீட்டில்தான் செல்வராஜ் - ரேணுகா தேவி தம்பதி வசித்துவந்தனர்.

இலங்கை நிலச்சரிவு

அந்த மழை நாளில், அவர்களது வீட்டில் மூன்று பேரக் குழந்தைகளும் வந்திருந்தார்கள். இவர்களை சாப்பிட வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, வீட்டிற்குள் சகதியும் தண்ணீரும் புகுந்ததாக செல்வராஜ் கூறினார்.

"எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஐயோ, நாம் போனாலும் பரவாயில்லை, நம் பேரப் பிள்ளைகளும் இதில் சிக்கிக் கொண்டுவிட்டார்களே என்று இருந்தது. குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தப்பிக்க முயன்றேன். வெளியில் வரும்போது என் மனைவியின் சேலை எதிலோ சிக்கிக்கொண்டுவிட்டது. நானும் சகதியில் சிக்கினேன்" என்கிறார் செல்வராஜ்.

அந்த நேரத்தில் பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரும் வேறு சிலருமாகச் சேர்ந்து குழந்தைகளையும் செல்வராஜ் தம்பதியையும் மீட்டுள்ளனர். தற்போது கவரக்கெலையில் ஒரு முகாமில் தங்கியிருக்கிறார்கள் செல்வராஜ் குடும்பத்தினர்.

"அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் புத்தி ஏதோ ஆகிவிடுகிறது" என்று சொல்லும்போதே அவரது கைகள் நடுங்குகின்றன.

செல்வராஜின் வீட்டிலிருந்த பேரக் குழந்தைகளில் அவருடைய மகள் தங்கேஸ்வரியின் குழந்தையும் ஒன்று. மழையும் வெள்ளமும் வரவும் தந்தையின் வீட்டை நோக்கி ஓடிவந்தார் தங்கேஸ்வரி. ஆனால், தந்தையின் வீடு நிலச்சரிவில் சிக்கியிருந்ததைப் பார்த்த அவர், அதில் சிக்கி தன் குழந்தையும் போய்விட்டது என்றுதான் முதலில் நினைத்துள்ளார்.

"நான் பாதி வழி வரும்போதே என் அப்பாவின் வீட்டில் மண் சரிந்துவிட்டதைப் பார்த்தேன். அவ்வளவுதான், என் குழந்தையை மீட்க முடியாது என நினைத்தேன். 'அப்பா வீட்டிற்கு குழந்தை அனுப்பினேன். அவர்கள் மண்ணுக்குள் போய்விட்டார்கள்' என கத்தினேன். சிறிது நேரத்திலேயே அப்பாவின் பக்கத்து வீட்டில் இருந்த பையன், பாப்பாவை மண்ணில் இருந்து எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னான்" என்கிறார் தங்கேஸ்வரி.

குழந்தை மீட்கப்பட்டுவிட்டாலும், இந்த நிகழ்வை இப்போது விவரிக்கும்போதும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

இலங்கை நிலச்சரிவு

படக்குறிப்பு,மண் சரிவில் சிக்கியவர்களை மீட்ட இளைஞர்கள்

செல்வராஜ் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த யோகத்தின் வீட்டில் அவரும் அவருடைய இரு குழந்தைகளும் மாமியாரும் இருந்தனர். கணவர், மழை நீரைத் திருப்பிவிடுவதாகச் சொல்லி வெளியில் போயிருந்தார். அந்த நேரத்தில் நிலச்சரிவு வந்துவிட, தன் குழந்தைகளை அருகில் இருந்த பாதை மீது தூக்கிப்போட்டுவிட்டு, அவரும் வெளியேறினார். ஆனால், மாமியார் உள்ளேயே சிக்கிக்கொண்டார்.

"என்ன செய்றதுன்னே எனக்குத் தெரியவில்லை. கத்திக்கொண்டே ஓடினேன். அப்போது மேலே இருந்து சில இளைஞர்கள் ஓடி வந்தார்கள். என் மாமியாரை யாராலும் காப்பாற்ற முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால், எல்லோரும் சேர்ந்து அவரைக் காப்பாற்றிவிட்டார்கள்" என்கிறார் அவர்.

இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் வீட்டிற்குள்ளும் நிலச்சரிவால் சேறும் சகதியும் புகுந்தபோது வீட்டிற்குள் குழந்தை இருந்தது. அவர் தனது வீட்டிலிருப்பவர்களைக் காப்பாற்ற வந்தபோது மார்பளவுக்கு சேறும் சகதியும் நிறைந்திருந்தது.

"சகதியால் சூழப்பட்டிருந்த வீட்டிற்குள் செல்லும்போது 'டாடா காப்பாத்துங்கன்னு' குழந்தையின் சத்தம் கேட்டது. பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தால், யாரும் இருக்கும் இடமே தெரியவில்லை. குழந்தை எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. நான் தடவித் தடவி உள்ளே சென்றபோது 'டாடா வந்துட்டீங்களா' என்று குழந்தையின் குரல் கேட்டது. அவ்வளவுதான். வீட்டிற்குள்ளிருந்த ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து வெளியில் வந்து சேர்த்தேன்" என்கிறார் கமல்ராஜ்.

"ஆனால், வீட்டை நெருங்கும்போது 'டாடா, என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க டாடா' என்ற குழந்தையின் குரல்தான் எனக்குத் தெம்பைக் கொடுத்தது. இல்லாவிட்டால் இது நடந்திருக்காது" என்கிறார் கமல்ராஜ்.

இங்கிருந்தவர்களின் துணிச்சலான முயற்சிகளால், இந்த நிலச்சரிவில் கவரக்கெலயில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் இப்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டையும் பொருட்களையும் இழந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czj0mejxkk9o

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை வந்தது சுவிஸ் நாட்டு விமானம்!

1 month 1 week ago
போற போக்கைப் பார்த்தால் நாட்டை முழுமையாக கட்டி எழுப்புவது மட்டும்மல்லாமல் அபிவிருத்தியும் செய்யலாம் போல.இந்த விடையத்தில் நம்பிக்கை உள்ளது.

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது !

1 month 1 week ago
950 மெட்ரிக் தொன் அவசர உதவி பொருட்களுடன் இன்று இலங்கை வரும் தமிழக நிவாரணக் கப்பல் Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 08:31 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 'டித்வா' புயல் மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் ஏற்றிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழகத்திற்கான இலங்கை துணைத் தூதுவர் வைத்தியர். கணேசநாதன் கேதீஸ்வரன் உட்பட தமிழக அரசின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து தமிழகத்திற்கான இலங்கை துணைத் தூதுவர் வைத்தியர். கணேசநாதன் கேதீஸ்வரன் வீரகேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மொத்தமாக 950 மெட்ரிக் தொன் பொருட்கள் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த 950 மெட்ரிக் டொன் நிவாரணப் பொதிகளில் பருப்பு, சீனி மற்றும் பால் மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெருமளவில் உள்ளடங்குகின்றன. அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 10,000 துவாய்கள் (TOWELS) 5,000 சேலைகள், 5,000 வேட்டிகள், 10,000 படுக்கை விரிப்புகள் மற்றும் 1,000 தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பொருட்கள் (TARPAULIN) போன்ற அத்தியாவசியப் பொருட்களும் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன. 'இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனைகளின் பிரகாரம், பேரிடர் இடம்பெற்ற மறுநாளே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசின் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள் ஊடாகவே மிக விரைவில் நிவாரணப் பொருட்களை அனுப்ப முடிந்தது. விரைவில் மேலும் சில நிவாரணப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சமீபத்தில் 'தித்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் பெரும் உயிரிழப்புகளும், உடைமைகள் சேதங்களும் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக நிற்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார். இதேவேளை, மத்திய அரசின் 'சாகர் பந்து நடவடிக்கை' மூலம் இந்தியா ஏற்கனவே கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப் படைகள் வழியாக தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அனுப்பி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன், பல டொன் நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அவுஸ்திரேலியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா, மாலைதீவுகள், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி இலங்கையின் மீட்சிக்குத் தோள் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். https://www.virakesari.lk/article/232641

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

1 month 1 week ago
தொடரை வென்ற இந்தியா - குல்தீப், ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் போக்கை மாற்றியது எப்படி? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். 6 டிசம்பர் 2025 இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39.5 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். இதன் மூலம், மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 75 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். விராட் கோலி தொடரின் நாயகன் விருதை வென்றார். மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்ததால், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அதே நேரத்தில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,டி காக் 106 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரயன் ரிக்கில்டன் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ஆனால், தென் ஆப்பிரிக்காவிற்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து, ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ரிக்கில்டன். அடுத்ததாக கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினார். இந்த ஜோடி பத்து ஓவர்கள் வரை பொறுமையாகவே ஆடி வந்தது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் 21 ரன்களும், டெம்பா பவுமா 19 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பிறகு, டி காக் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுபுறம் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த டெம்பா பவுமா 48 ரன்களில், ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதற்கு முந்தைய ஒருநாள் போட்டியில் பவுமா 46 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல, இந்தத் தொடரில் ஜடேஜா வீழ்த்திய முதல் விக்கெட்டும் இதுதான். இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த டி காக்- டெம்பா பவுமா பார்ட்னர்ஷிப் உடைந்தது இந்தியாவுக்கு உற்சாகத்தை அளித்தது. அதன் பின்னர் மேத்யூ ப்ரீட்ஸ்கே களமிறங்கினார். டி காக் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது (93 ரன்கள்), 28வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் மேத்யூ ப்ரீட்ஸ்கே. அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் அதே ஓவரில், கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டி காக் சதம் ஹர்ஷித் ராணா வீசிய 29வது ஓவரில், ஒரு சிக்ஸர் மூலமாக சதத்தை எட்டினார் டி காக். பின்னர் அவர் 32வது ஓவரில் பிரசித் பந்தில் ஆட்டமிழந்தார். 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன், 89 பந்துகளில் 106 ரன்களை எடுத்திருந்தார் டி காக். அப்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு, டெவால்ட் பிரெவிஸ் மற்றும் மார்கோ ஜான்சன் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் 38வது ஓவரில், குல்தீப் இருவரையும் ஒரே ஓவரில் அவுட்டாக்கி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 234/5 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா, 270 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப் 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பிரசித் கிருஷ்ணாவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்தியா வெற்றிபெறுவதற்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா கூட்டணியின் அதிரடி பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ரோஹித் சர்மா 54 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி இந்திய அணிக்கு ஒரு உறுதியான தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து 155 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 271 ரன்கள் என்ற இலக்கை எளிதான ஒன்றாக மாற்றினர். ரோஹித் சர்மா 54 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அரை சதமடித்தார். இருப்பினும், 26வது ஓவரின் கடைசி பந்தில், 75 ரன்கள் எடுத்திருந்தபோது, கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. அவர் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன், 73 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு, ஜெய்ஸ்வாலுடன் இணைந்த விராட் கோலி, அதிரடியாக அணியின் ரன்களை உயர்த்தினார். ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 100 ரன்களை எட்டினார். மறுமுனையில், கோலியும் அரை சதத்தைக் கடந்தார். இறுதியில், 39.5 ஓவர்களில் 271 ரன்களை எடுத்த இந்திய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில், இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேசமயம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. அடுத்ததாக, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். முதல் போட்டி கட்டாக்கில் நடைபெறும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre3vd3pyzdo

முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்

1 month 1 week ago
முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார் 07 Dec, 2025 | 12:07 PM இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக பாராளுமன்றம் சென்றார். தொடர்ந்து 1960 மார்ச், 1960 ஜூலை, 1965 மற்றும் 1970 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். 1979 பெப்ரவரி 10ஆம் திகதி, அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1979 மார்ச் 7ஆம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் இணைந்தார். இதனையடுத்து, அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், சென்னையில் புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டு வந்த நிலையிலேயே அவர் காலமானார். அவரது மறைவுக்கு கொழும்பு சாயி மத்திய நிலையம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன. அவரது இறுதிக்கிரியைகள் சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232661

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை வந்தது சுவிஸ் நாட்டு விமானம்!

1 month 1 week ago
எங்கடை மக்களின் பிரதிநிதிகளுக்கு தெரியாத மனிதாபிமானத்தை, வெளிநாட்டுக்காரர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இனி அரசாங்கத்தின் மேல் விமர்சனம் குறைந்து, மறைந்து, நாங்களும் வாறோம் என்று கைகோர்க்க முண்டியடிப்பினம். சஜித்தின் கட்சியில் இருந்து ஒருவர் விலகிவிட்டார், அவர் அனுராவோடு சேர வாய்ப்புள்ளது. அனுரா அமைதியாக இருந்து செயலற்ற விமர்சனங்களுக்கு காது கொடுத்து நேரத்தை செலவழிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், அரசியல்வாதிகளின் பொறுப்பான செயலை. அனர்த்தநிவாரணங்களை கொள்ளையடித்தவர்களுக்கு இப்போ வாயூறும். அனர்த்த, அழிவு காலங்களில் மக்களோடு வாழ்ந்து இழப்புகளை அனுபவித்தவர்களுக்கு தெரியும் அந்த நேரத்தில் எது முக்கியமென்பது. அழிவுகளின் பின் பதவிகளுக்கு வந்து அனுபவிப்பவர்கள் விமர்சனம் செய்யத்தான் முடியும். அந்த மக்களின் வலியோ, தேவையோ புரியாது அவர்களுக்கு. அனர்த்தத்தில் பதவி தேடும், அரசியல் செய்யும் வியாதிகள். சரி, அரசு முக்கிய கவனம் செலுத்தவில்லை, இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அதன் தீவிரம் இவர்களுக்கு தெரிந்திருந்தால் இவர்கள் அரசுக்கு நினைவூட்டி எச்சரிக்கை செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இவர்களுக்கு பொறுப்பில்லையா? அல்லது இவர்களும் இப்படியான வரலாறு காணாத இயற்கையின் சீற்றத்தை அறிந்திருக்கவில்லையா? இவர்களுக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நேரத்தில், பொறுப்பற்ற விமர்சனம் செய்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் இவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே! அனர்த்தம் வருமுன் செய்யவேண்டியதை வந்தபின் செய்து, அரசியல் செய்யும் முட்டாள்கள்! இவர்கள் கையில் அரசு இருந்திருந்தால்; இவர்களும் இதைத்தான் அல்லது இதைவிட மோசமாக நடந்து கொண்டிருப்பார்கள் என்பதற்கு இவர்களது பொருத்தமற்ற விமர்சனம் சாட்சி.

அம்மனும் அமிர்தமும் (நாடகம்)

1 month 1 week ago
மிக்க நன்றி அல்வாயன்...................👍. இந்தக் காலத்தில் மேடை நாடகங்களை ஒரு 25 அல்லது 30 நிமிடங்களுக்கு மேல் இழுத்தால் சனம் எழும்பிப் போக ஆரம்பித்து விடும் அல்லது கொட்டாவி விடுவார்கள்.............. ஐந்து அல்லது ஆறு காட்சிகளில் முடிக்க வேண்டியிருக்கின்றது. தொலைக்காட்சிகளில் என்றால் மெகா சீரியல் என்று இழு இழுவென்று இழுத்து வருசக்கணக்காக போடலாம்..............