Aggregator

வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

1 month ago
வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இளைஞன் கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகேநபர் குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு , இளைஞனை கைது செய்தனர். அதன் போது வீட்டில் இருந்து கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் , ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையடக்க தொலைபேசி என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1449816

வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

1 month ago

1002474702.jpg?resize=750%2C375&ssl=1

வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இளைஞன் கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகேநபர் குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு , இளைஞனை கைது செய்தனர்.

அதன் போது வீட்டில் இருந்து கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் , ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையடக்க தொலைபேசி என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1449816

தங்கத்தின் விலையில் புதிய எழுச்சி; ஒரு பவுண் 320,000 ரூபா!

1 month ago
தங்கத்தின் விலையில் புதிய எழுச்சி; ஒரு பவுண் 320,000 ரூபா! புதன்கிழமை (08) 4,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டி சாதனை அளவை எட்டியது. அதிகரித்து வரும் பொருளாதார, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் மேலும் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளே இதற்கு காரணம். GMT 0300 நிலவரப்படி ஸ்பாட் தங்கம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,011.18 ஆக இருந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,033.40 ஆக இருந்தது. பாரம்பரியமாக, நிலையற்ற காலங்களில் தங்கம் ஒரு மதிப்புக் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் 27 சதவீதம் விலை உயர்ந்த பின்னர், ஸ்பாட் தங்கம் இன்று வரை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வர்த்தகத்தில் இப்போது மிகுந்த நம்பிக்கை இருப்பதால், தங்கத்தின் விலையானது எதிர்காலத்தில் 5,000 டொலர்களை எட்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகள், தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, உறுதியான மத்திய வங்கி கொள்முதல், தங்க பரிமாற்ற-வர்த்தக நிதிகளில் முதலீடு மற்றும் பலவீனமான அமெரிக்க டொலர் உள்ளிட்ட பல காரணிகளால் மஞ்சள் உலோகத்தின் ஏற்றம் உந்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஏனைய விலைமதிப்பற்ற உலோகச் சந்தைகளில், ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 1.3 சதவீதம் உயர்ந்து 48.42 அமெரிக்க டொர்களாகவும், பிளாட்டினம் 2.5 சதவீதம் உயர்ந்து 1,658.40 அமெரிக்க டொலர்களாகவும், பல்லேடியம் 1.8 சதவீதம் உயர்ந்து 1,361.89 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது. இதனிடையே, அமெரிக்க அரசாங்க முடக்கம் செவ்வாயன்று (07) ஏழாவது நாளை எட்டியது. கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (08) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 320,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 296,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1449812

எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.

1 month ago
அவுசில் கூரையில் இருந்து வரும் தண்ணீரை சேகரிக்க பொறிமுறை இல்லாவிட்டால் நகரம் அனுமதி கொடுக்காதாம். பழைய வீடுகளுக்கு இல்லை. இருந்தும் அண்ணன் வீட்டில் சேமிக்கிறார்கள். காலநிலை நன்றாக உள்ளதால் தோட்டமும் செய்கிறார்கள். ஏதோ கல்லுகள் போட்டு வடிகட்டி எடுக்கிறதாக சொன்னாரே.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 month ago
ஆழியிலே பிறவாத அலை மகளோ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஏழிசையை பயிலாத கலை மகளோ... மூழி நடம் புரியாத மலை மகளோ... உலகத் தாய் பெற்றெடுத்த தலை மகளோ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல அடியெடுத்து கொடுத்ததோ காலத்தால் அழியாத பாட்டு. இதிலே எனக்கு சரணத்தைவிட பல்லவியே எனக்கு மிகவும் பிடித்தது.

எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.

1 month ago
சமூகம் சார்ந்த நல்லதொரு இணைப்பு. விவசாயியாக வாழ்ந்தாலும் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்ததுண்டு.அதாவது யாரையும் கையேந்தி வாழாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பது.❤️ மற்றும் படி..... நானறிந்த வரையில் ஐரோப்பிய நாடுகளில் நிலத்தடி நீரை அதிகம் உபயோகப்படுத்துவதில்லை.சில நாடுகளில் தடையும் உண்டு. கூடுதலாக மழைநீரை நீர்த்தேக்கங்களில் சேகரித்தே நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்வார்கள்.சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு கூரையிலிருந்து வழிந்து வரும் மழை நீரை சேகரித்து வீட்டுத்தோட்டம் மற்றும் பூ மரங்களுக்கு பாவிப்பார்கள். அது சரி.... சேகரித்த மழை நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடிக்க முடியுமா?

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்

1 month ago
சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர ராஜீவ் வின் உரை. இவர் இப்போது பெரிய அரசியல் செயற்பாட்டராளாக உள்ளார்.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
12 மணிக்கு வருவதாக அறிவித்து கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதபடுத்தி வெய்யில் வெப்பம் தாகம் பசியில் மக்களை காக்க வைத்து வந்த விஜய் நோகபட வேண்டியவர் இல்லையா சீமான் கேட்கின்றார் இப்போ நான் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன். நான் வரவில்லை என்றால் இந்த நிகழ்ச்சி நடக்குமா? நான் வரவில்லை என்றால் அந்த நெரிசல் ஏற்படுமா? நான் வரவில்லை என்றால் அந்த மரணங்கள் நிகழுமா ? என்னுடைய வருகையால் நிகழ்ந்த மரணம் தான் அது .அப்படியானால் மரணங்களுக்கு முதல் காரணம் யார்?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
அடுத்த மூன்று போட்டிகளிலும் பெரும்பாலும் போட்டியாளர்களின் புள்ளிகளின் தரவரிசை மாறமாட்டாது. அதன் பிறகு வரும் இங்கிலாந்து- இலங்கை, அவுஸ்திரேலியா- இந்தியாவுக்கு இடையிலான போட்டிகளில் தரவரிசை மாற்றங்கள் வரலாம்.

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது

1 month ago
அடிப்படை எழுத்தே தெரியாதவனை கட்டுரை எழுதச்சொல்வது போல் உள்ளது ஐ. நா. வின் அறிக்கை. இலங்கையர்களுக்கு சமாதானம், ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாமல் ஆரம்பத்திலிருந்தே, எதிரான விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் வருகிறார்கள். ஐ. நா. வால் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. காலத்தை இழுத்தடிப்பதை விடுத்து, சமாதானம், ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமை என்றால் என்ன, அதற்கு முக்கியமானது என்ன, அதை எப்படி இனங்களிடையே கட்டியெழுப்புவது என்கிற பாடத்தை இவர்களுக்கு எடுத்து விளக்குவது பிரயோசனமானது என்பது எனது கருத்து. இல்லையெனில், ஒவ்வொரு கூட்டத்திற்கும் இதே பல்லவியை எழுதிக்கொண்டு வந்து வாசிப்பார்கள். அவர்களது கலாச்சாரமே; அடித்து, கொலை செய்து, பறித்து வாழ்வாதாரம் நடத்துவது. அது தான் சரியானது என்பது அவர்களது தரப்பு வாதம்.