Aggregator

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 1 day ago
கப்டன் அப்பன் நிழலுருவப்படமும் மணி மண்டபமும் கைதடிச்சந்தி, யாழ் 1993 'கைதடி வட்டவைப் பொறுப்பாளர் கப்டன் அப்பன்'

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 1 day ago
சிறிய குற்றம் என்கிறார் மகி, பெரிய குற்றம் என்கிறார் சுமி. இருவரும்கதைத்து ஒரு முடிவுக்கு வாங்க. வெள்ளிக்கிழமை விசாரிக்க கூப்பிடிறானுகள் , உள்ளுக்குள்ள அள்ளிப்போட்டாலும் இரெண்டு நாளைக்கு மல்லாக்கக் கிடக்கனும் , திங்கள் கிழமை வாறன் என்று சொல்ல குள்ள நரியின் கள்ளப் புத்திக்கு தெரியலயே. குள்ள நரிக்கும் மெல்ல அடி சறுக்கும் போல.

எனக்கு பிடித்த சில  வரிகள்.

4 weeks 1 day ago
எனக்கு பிடித்த சில வரிகள். 1. சில சூழ்நிலைகள் கடந்துசெல்ல உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது . இந்த சோகங்கள் துக்கங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்.ஆனால் உடனே மாறிவிடாது. 2.ஒரு பெண் தன்னை ஒருவரிடம் ஒப்படைக்கும் வரை தான் அவள் வாழ்க்கை அவள் கையில் . அதன் பிறகு அவள் ராணியாக வாழ்வதும் நடைப்பிணமாக வாழ்வதும் ஆணின் கையில் தான் உள்ளது . 3. குடும்ப நலன் கருதி யாரோ ஒருவர் மௌனமாகி போவதால் தான் ...பல பிரச்சினைகள் பெரிதாகாமல் இருக்கின்றன. 4 வாழவேண்டிய வயதில் வசதி இருக்காது ...வசதி வரும்போது வயது இருக்காது ...இதுதான் வாழ்க்கை 5. எல்லா உறவுகளுக்கும் மனம் ஏங்காது எல்லார் தீண்டல்க்கும் பெண்மை வளையாது. விரும்பிய ஒருவருடன் தான் உணர்வுகளும் காதலும் 6. குடும்பத்துடன் நேரம் செலவிடாத மனிதன் ஒருபோதும் உண்மையான மனிதனாக இருக்க முடியாது . 7.பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமல், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தாலும் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் 8.சில மனிதர்கள் கற்றுத்தரும் பாடங்கள் எந்த புத்தகத்திலும் இருப்பதில்லை பெண்ணின் பேச்சில் நியாயம் இருக்கும் வரை அவளின் சத்தம் கொஞ்சம் அதிகம் தான் இருக்கும்./

எனக்கு பிடித்த சில  வரிகள்.

4 weeks 1 day ago

எனக்கு பிடித்த சில  வரிகள்.

1. சில சூழ்நிலைகள் கடந்துசெல்ல உடல் வலிமையை  விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது .
இந்த  சோகங்கள்  துக்கங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்.ஆனால் உடனே  மாறிவிடாது. 

2.ஒரு பெண் தன்னை ஒருவரிடம் ஒப்படைக்கும் வரை தான் அவள் வாழ்க்கை  அவள் கையில் . அதன் பிறகு அவள்  ராணியாக வாழ்வதும் நடைப்பிணமாக வாழ்வதும் ஆணின் கையில் தான் உள்ளது .  

3. குடும்ப நலன் கருதி யாரோ  ஒருவர் மௌனமாகி போவதால் தான் ...பல பிரச்சினைகள் பெரிதாகாமல் இருக்கின்றன.  

4  வாழவேண்டிய வயதில் வசதி இருக்காது ...வசதி வரும்போது வயது இருக்காது ...இதுதான் வாழ்க்கை

5. எல்லா உறவுகளுக்கும் மனம் ஏங்காது  எல்லார்   தீண்டல்க்கும் பெண்மை வளையாது. விரும்பிய ஒருவருடன் தான் உணர்வுகளும்  காதலும்

6. குடும்பத்துடன் நேரம் செலவிடாத மனிதன் ஒருபோதும் உண்மையான மனிதனாக இருக்க முடியாது  .

7.பிடிக்காத   விஷயத்தை கண்டு கொள்ளாமல், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல்  இருந்தாலும் உடலும் மனமும் ஆரோக்கியமாக  இருக்கும்

8.சில மனிதர்கள் கற்றுத்தரும்  பாடங்கள்   எந்த புத்தகத்திலும் இருப்பதில்லை

பெண்ணின் பேச்சில் நியாயம் இருக்கும் வரை  அவளின் சத்தம்  கொஞ்சம் அதிகம் தான் இருக்கும்./ 

வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

4 weeks 1 day ago
செய்யும் தொழிலே தெய்வம் கடின உழைப்பு போன்றவற்றை பொதுவாக போதிக்க முடியாத அளவுக்கு சொத்து முதலாளித்துவத்தின் பிடி கூடி விட்டது. முதலாளித்துவதில், எவ்வளவு குறைவான சம்பளம் கொடுத்து எவ்ளவு கூடிய வேலை வாங்க முடியுமோ - அந்த தன்மை கூடிவிட்டது. எனவே சம்பளத்துக்கு தொழில் செய்பவர்கள் செய்யவேண்டியது - எவ்வளவு உழைப்பு குறைவ்வா செய்து, கூடிய சம்பளம் எடுக்க முடியுமோ , அதையே செய்ய வேண்டிய நிலையில் இருப்பது. கடின உழைப்பு போன்றவை, சொந்தமாக உழைப்பு, எந்த துறையிலும் வியாபாரம் (இங்கு எந்த துறையும், துறைசார் நிபுணத்துவமும் அடங்கும்) போன்றவற்றை செய்பவர்களுக்கே பொருந்தும். ஊழியத்துக்கு தொழில் செய்வவர்களுக்கு இப்போதைய பொருளாதார நிலையில் செய்பவரின் கடின உழைப்பு சொத்துகளுக்கே சேர்க்கிறது, அந்த சொத்துக்கள் எல்லோருக்கும் பகிரப்படுவதில்லை. இதை சாதாரந வாழ்வில் காணலாம் - சம்பளம் அவ்வளவு பெரிதாக கூடவில்லை, ஆனால் சொத்துக்களும், அது கொடுக்கும், அல்லது அறவிடும் வாடையும் மிக கூடி விட்டது. சொத்துக்களால் வரும் வருமானத்தை, செல்வதை சொல்வது unearned income or wealth. முன்பு உழைப்ப்பால் வரும் வருமானம் / செல்வம் மிக கூட சொத்துக்களால் வரும் வருமானத்தை, செல்வதை விட அனல், இப்போது நிலை தலை கீழ் உழைப்பால் எவரும் இருந்த நிலையிலும் கூடிய அளவு செல்வதை பெற முடியாது.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

4 weeks 1 day ago
“அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 21 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 21 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'சேர் பொன்னம்பலம் இராமநாதன்' சேர் பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். சர்.பொன்னம்பலம் ராமநாதன், ஓய்வு பெற்ற பிறகு, மிகுந்த மதப்பற்றுள்ளவராக இருந்த அவர், தனது வாழ்நாள் முழுவதையும் பிரார்த்தனையிலும் தவத்திலும் கழிப்பதற்காக தமிழ்நாடு - இந்தியா சென்றார். மெக்கலம் சீர்திருத்தங்கள் [The Crewe-McCallum reform] 1910 ஆம் ஆண்டு இலங்கையில் நடைமுறைக்கு வந்தது, இது ஒரு இலங்கைக் கல்விமான், சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வழிவகுத்தது. அப்பொழுது கரவா (மீனவர்) சாதியைச் சேர்ந்த, கலாநிதி மார்கஸ் பெர்னாண்டோ தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அது உயர்சாதி சிங்களவர்களுக்கு பொறுக்க முடியவில்லை. ஆனால் படித்த உயர்சாதி சிங்களவர்களை விட, படித்த கரவா சிங்களவர்கள் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் கல்வியின் அடிப்படையில் வாக்களிக்கத் தகுதியான தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் அன்று இருந்தனர். அப்போது உயர்சாதி சிங்களவர்கள், படித்த இலங்கைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, பொன்னம்பலம் இராமநாதனை வற்புறுத்த தமிழ்நாட்டிற்குச் சென்றார்கள், அவர் அப்போது சார் பட்டம் பெறவில்லை. இதனால், 1911 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சட்ட சபை உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1915 ஆம் ஆண்டில், முஸ்லிம் மக்களுக்கு எதிராக, டி.பி. ஜயதிலக, டி.எஸ். சேனநாயக்க மற்றும் பல செல்வந்த சிங்களவர்கள் வன்முறை, கொள்ளை மற்றும் தூண்டுதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டது, மேலும் மேற்கூறிய இருவர் உட்பட பல பௌத்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் தூக்கிலிடப்பட்டனர். அப்பொழுது, ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலின் ஊடாக இராமநாதன் இங்கிலாந்துக்குச் சென்று தடுத்து வைக்கப்பட்டிருந்த பௌத்த சிங்களவர்களை விடுதலை செய்யுமாறு வாதிட்டு வெற்றியும் அடைந்தார். பின்னர் அதே தொகுதிக்கு 1916 இல் இரண்டாவது தேர்தல் நடந்தது. இராமநாதனும் போட்டியிட்டார், இத்தேர்தலில் அவரை எதிர்த்து நின்றவர் உயர்சாதி சிங்களவராக இருந்தாலும், நன்றியுள்ள பல சிங்களவர்கள், கடந்த தேர்தலை விட அதிக பெரும்பான்மையுடன் இராமநாதனை தெரிவு செய்தனர். பின்னர், சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1927 இன் பிற்பகுதியில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான கருத்துக்களைக் கேட்க டொனமோர் ஆணைக்குழு வந்தது. சிங்களவர்கள், எண்ணிக்கையில் மேன்மையில் இருந்ததால், எண் பலத்தின் அடிப்படையிலான சீர்திருத்தத்தை விரும்பினர். சார் பொன்னம்பலம் இராமநாதன், அவரது புகழ்பெற்ற மேற்கோளான ‘டோனமோர் என்றால் இனி தமிழர்கள் இல்லை’ [‘Donoughmore means Tamils no more’] மூலம் எண் வலிமைக்கு எதிராக இருந்தார். அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இருந்தன; அதன் பிறகு தமிழர்கள், மனிதர்களைத் தவிர வேறு எதையோ போலத், தரக்குறைவாக நடத்தப்பட்டனர். உயர்சாதி பௌத்த சிங்களவர்களும் கரவ சாதி சிங்களவர்களும் சேர்ந்து சேர் பொன்னம்பலம் இராமநாதனை 1920களின் பிற்பகுதியில் சர் பொன்னம்பலம் ராமநாதனை ஒரு இனவெறி பிடித்தவராகக் கண்டித்தனர். இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர் என்பதும் குறிப்பிடத் தக்கது. Part: 21 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Sir Ponnampalam Ramanathan' On his retirement, being a very religious person, he went to Tamil Nadu – India to spend rest of his life in prayer and penance. The Crewe-McCallum reform came into effect in the year 1910 in Ceylon to have one elected member for the Educated Ceylonese. Dr. Marcus Fernando filed his nomination and he belonged to the Karawa (fisher) caste. The so-called high caste Sinhalese could not stomach it, but they did not have a chance as the educated Karawa Sinhalese outnumbered the educated high caste Sinhalese. There was considerable number of Tamils eligible to vote based on education. Then the high caste Sinhalese went to Tamil Nadu to persuade Ponnampalam Ramanathan, he was not knighted then, to contest the election for the educated Ceylonese seat. In the process, Ramanathan was elected to the Legislative Council as the first elected Ceylonese Member to the Legislative Council in 1911. Then in the year 1915, D. B. Jayatileke, D. S. Senanayake and many other wealthy Sinhalese were accused of inciting and causing violence, robbery and other crimes against the Muslim population. Marshall Law was enforced, and many Buddhists, including the above two, were interned. Some were summarily executed. This was during the First World War and the reaction from the British Colonial Government was harsh and swift. Ramanathan went to England, through the German Submarine infested sea, to argue for the release of the interned Buddhist Sinhalese. He was successful. Then there was the second election in 1916 for the same seat. Ramanathan also contested and his opponent was a high caste Singhalese in this election. The grateful Sinhalese elected Ramanathan with larger majority than the previous election. Then, about fifteen years later, the Donoughmore commission came in the latter part of 1927 to hear views for the constitutional reform. The Sinhalese, being in an unassailable numerical superiority, wanted the reform based on the numerical strength. Sir Ponnampalam Ramanathan, he was knighted by that time, was against the numerical strength alone, with his famous quotation; ‘Donoughmore means Tamils no more’. His words were prophetic; Tamils were treated like anything but humans after that. The high caste Buddhist Sinhalese along with the Karawa caste Sinhalese then castigated Sir Ponnampalam Ramanathan as a racist from the latter part of the 1920s, the way Elara was treated in the Dipavamsa, the Mahavamsa and ultimately in the Rajavaliya நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 22 தொடரும் / Will Follow https://www.facebook.com/share/p/1E7NPrkNhJ/?mibextid=wwXIfr

உங்கள் ஸ்மார்ட் போன் கால் செட்டிங் திடீரென மாறிவிட்டதா? இதுதான் காரணம்

4 weeks 1 day ago
பட மூலாதாரம், X கட்டுரை தகவல் ஓமர் சலிமி பிபிசி உருது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம். எந்த அமைப்புகளையும் மாற்றாமல், இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என பலரும் குழப்பமடைந்துள்ளனர். சிலர் தங்களது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர். ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இது குறித்த தகவல்களை பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிப்பவர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த மாற்றங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. ஆப்பிள் போன்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதால், அந்த போன்களைப் பயன்படுத்துபவர்கள் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால், ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்பட்டதற்கு என்ன காரணம்?, இந்த அமைப்புகள் எவ்வாறு மாற்றப்பட்டன, அவற்றை பழைய படி மாற்ற முடியுமா என்பதற்கான பதில்களைத் தேட முயற்சித்தோம். 'ஹேக்கிங்' செய்யப்பட்டதா? உண்மையான காரணம் என்ன? ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இந்த பிரச்னைக்கு பதில்களைத் தேடியுள்ளனர். சிலர் இதை 'ஹேக்கிங்' என்று கூறியுள்ளனர், மற்றவர்கள் இந்த மாற்றம் அரசு நிறுவனங்களின் கண்காணிப்பு முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். "வாழ்த்துக்கள், உங்கள் தொலைபேசி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு மென்பொருளும் தானாகவே நிறுவப்பட்டுள்ளது" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் "உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனின் அமைப்புகள் திடீரென்று மாறிவிட்டன. நீங்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்வியை ஒருவர் எழுப்பியுள்ளார். பட மூலாதாரம், GOOGLE படக்குறிப்பு, பலர் தங்கள் தொலைபேசிகளில் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். ஆனால், போனின் காட்சி அமைப்புகள் மாறியுள்ளதால், அதற்கு 'ஹேக்கிங்' என்றோ, அல்லது அந்த நிறுவனம் உங்கள் புகைப்படங்கள் அல்லது செய்திகளைத் திருடுகிறது என்றோ அர்த்தமல்ல என மற்றொருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மொபைல் போன் நிறுவனங்கள் அவ்வப்போது தொலைபேசிகளைப் புதுப்பிக்கின்றன. இதனால் அவை முன்பை விட சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மாறுகின்றன என்பது தான் அவரது கருத்து. இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி ? அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது, அதே நிறுவனத்தால் புதுப்பிக்கவும் படுகிறது (அப்டேட் செய்யப்பட்டுள்ளது ). 'மே 2025' இல், 'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரசிவ்' என்ற புதிய அமைப்பை வெளியிடுவதாக கூகுள் அறிவித்தது. இது கடந்த சில ஆண்டுகளில் வந்த மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது, தொலைபேசியின் மென்பொருளையும், அமைப்பையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில் மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது முன்னதாக, எங்கள் ஆண்ட்ராய்டு போன்கள் 'மெட்டீரியல் 3D' என்ற வடிவமைப்பில் இயங்கியது. 'இதன் வழக்கமான பயன்பாட்டின் காரணமாக பில்லியன் கணக்கான நபர்கள் அதற்குப் பழக்கமாகிவிட்டனர்' என கூகுள் கூறியது. புதிய அப்டேட்டில் அறிவிப்புகள், வண்ண தீம்கள், புகைப்படங்கள், ஜிமெயில் மற்றும் வாட்ச் போன்ற பல விஷயங்கள் மாற்றப்பட்டு வருவதாக கூகிள் தெரிவித்துள்ளது. புதிதாக செய்யப்பட்ட மாற்றங்களும் அதில் ஒரு பகுதியாகும். பயனாளர் அனுமதியின்றி எவ்வாறு மாற்றப்பட்டன? 'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரஸிவ்' என்ற அப்டேட்டின் கீழ், ஆண்ட்ராய்டு போனின் அழைப்பு செயலியுடைய வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் முதலில் ஜூன் மாதத்தில் சிலருக்கு மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர் அது படிப்படியாக பரவலாக வெளியிடப்பட்டது. அழைப்பு மேற்கொள்ளும் செயலியை மேலும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவது தான் இதன் நோக்கம் என கூகுள் கூறியது. 'சமீபத்திய' (சமீபத்திய அழைப்புகள்) மற்றும் 'முக்கிய எண்கள்' போன்றவற்றை நீக்கிய கூகுள், அவற்றை 'முகப்பு' என்ற பகுதியில் ஒன்றிணைத்துள்ளது. எனவே இப்போது நீங்கள் அழைப்பு செயலியைத் திறக்கும் போது, 'முகப்பு' மற்றும் 'கீபேட்' என்ற இரண்டு பகுதிகளை மட்டுமே காண்பீர்கள். ஒரே எண்ணிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளும் இனி ஒன்றாகவோ அல்லது ஒரே இடத்திலோ காட்டப்படாது. யாரை எந்த நேரத்துக்கு அழைத்தீர்களோ அந்த வரிசைப்படி தனித்தனியாகக் காட்டப்படும். இதனால் நீங்கள் அந்த தொடர்பை மீண்டும் மீண்டும் தேட வேண்டிய அவசியம் இருக்காது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பல மொபைல் போன்களில் அழைப்பு மற்றும் டயல் அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தால் பயனர்கள் குழப்பமடைந்தனர், பலர் சமூக ஊடகங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது. எத்தனை தவறவிட்ட அழைப்புகள் உள்ளன அல்லது எத்தனை அழைப்புகள் பெறப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஒவ்வொரு எண்ணையும் தனித்தனியாகத் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று கூகுள் விளக்கியுள்ளது. இதற்குப் பிறகு, மொபைல் போன் உபயோகிப்பவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் 'அழைப்பு' மற்றும் 'இன்-கால்' வடிவமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய வடிவமைப்பின்படி, அழைப்பின் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போனை உபயோகிப்பவர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து தொலைபேசியை எடுக்கும்போது தற்செயலாக அழைப்புகளைப் பெறவோ அல்லது துண்டிக்கவோ மாட்டார்கள். கூகுளின் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வரும் எதிர்வினைகளைப் பார்க்கும்போது, பலருடைய தொலைபேசி செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் பலருடைய தொலைபேசியில் இந்த அப்டேட்கள் இடம்பெறவில்லை. பட மூலாதாரம், GOOGLE படக்குறிப்பு, கூகுள், போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. சிலர் தங்கள் தொலைபேசிகளில் கூகிள் பிளே ஸ்டோரில் ஆட்டோமேட்டிக் அப்டேட்கள் (தானியங்கி புதுப்பிப்புகளை) ஆன் செய்திருப்பதால், சில செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றன என கூகுள் வலைப்பதிவில் ஒருவர் கூறியுள்ளார். மொபைல் போனை உபயோகிப்பவர்கள், இந்த ஆட்டோமேட்டிக் அப்டேட்டகளுக்கான அனுமதியை ஆப் செய்துவிட்டு, தொலைபேசி செட்டிங்ஸ்க்கு சென்று 'Uninstall Updates' என்பதை கிளிக் செய்து, தொலைபேசி அழைப்பின் காட்சி அமைப்புகளை பழைய நிலைக்கு மாற்றி அமைக்கலாம் என்று அவர் கூறினார். பிரபல மொபைல் நிறுவனமான ஒன்பிளஸும் இதே விளக்கத்தைத் தான் வழங்கியுள்ளது. "ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, "இது ஒன்பிளஸ்ஸிலிருந்து அல்ல, கூகுள் போன் செயலியின் அப்டேட்டில் இருந்து வந்தது. உங்கள் தொலைபேசியில் இருந்த பழைய முறையே பிடித்திருந்தால், அப்டேட்களை நீக்கவும்"என நிறுவனம் பதில் அளித்தது. எனவே, நீங்களும் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்திருந்தால் குழப்பமடைய வேண்டாம். பழைய முறையிலேயே உங்களது போன் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த புதிய அப்டேட்களை விரும்பவில்லை என்றால், 'Uninstall Updates'-இன் மூலம் பழைய முறையையே நீங்கள் தேர்வு செய்யலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev2p79depno

உங்கள் ஸ்மார்ட் போன் கால் செட்டிங் திடீரென மாறிவிட்டதா? இதுதான் காரணம்

4 weeks 1 day ago

ஒருவரை அழைக்கும்போதோ அல்லது ஆண்ட்ராய்டு போனில் இருந்து அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

பட மூலாதாரம், X

கட்டுரை தகவல்

  • ஓமர் சலிமி

  • பிபிசி உருது

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம்.

ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

எந்த அமைப்புகளையும் மாற்றாமல், இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என பலரும் குழப்பமடைந்துள்ளனர். சிலர் தங்களது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இது குறித்த தகவல்களை பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

உலகம் முழுவதிலுமிருந்து ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிப்பவர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த மாற்றங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. ஆப்பிள் போன்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதால், அந்த போன்களைப் பயன்படுத்துபவர்கள் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.

ஆனால், ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்பட்டதற்கு என்ன காரணம்?, இந்த அமைப்புகள் எவ்வாறு மாற்றப்பட்டன, அவற்றை பழைய படி மாற்ற முடியுமா என்பதற்கான பதில்களைத் தேட முயற்சித்தோம்.

'ஹேக்கிங்' செய்யப்பட்டதா? உண்மையான காரணம் என்ன?

ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இந்த பிரச்னைக்கு பதில்களைத் தேடியுள்ளனர்.

சிலர் இதை 'ஹேக்கிங்' என்று கூறியுள்ளனர், மற்றவர்கள் இந்த மாற்றம் அரசு நிறுவனங்களின் கண்காணிப்பு முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

"வாழ்த்துக்கள், உங்கள் தொலைபேசி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு மென்பொருளும் தானாகவே நிறுவப்பட்டுள்ளது" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் "உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனின் அமைப்புகள் திடீரென்று மாறிவிட்டன. நீங்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்வியை ஒருவர் எழுப்பியுள்ளார்.

டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், GOOGLE

படக்குறிப்பு, பலர் தங்கள் தொலைபேசிகளில் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், போனின் காட்சி அமைப்புகள் மாறியுள்ளதால், அதற்கு 'ஹேக்கிங்' என்றோ, அல்லது அந்த நிறுவனம் உங்கள் புகைப்படங்கள் அல்லது செய்திகளைத் திருடுகிறது என்றோ அர்த்தமல்ல என மற்றொருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மொபைல் போன் நிறுவனங்கள் அவ்வப்போது தொலைபேசிகளைப் புதுப்பிக்கின்றன. இதனால் அவை முன்பை விட சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மாறுகின்றன என்பது தான் அவரது கருத்து.

இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி ?

அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது, அதே நிறுவனத்தால் புதுப்பிக்கவும் படுகிறது (அப்டேட் செய்யப்பட்டுள்ளது ).

'மே 2025' இல், 'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரசிவ்' என்ற புதிய அமைப்பை வெளியிடுவதாக கூகுள் அறிவித்தது. இது கடந்த சில ஆண்டுகளில் வந்த மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது, தொலைபேசியின் மென்பொருளையும், அமைப்பையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில் மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

தொலைபேசியின் மென்பொருளையும் காட்சியையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில்  மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது

முன்னதாக, எங்கள் ஆண்ட்ராய்டு போன்கள் 'மெட்டீரியல் 3D' என்ற வடிவமைப்பில் இயங்கியது. 'இதன் வழக்கமான பயன்பாட்டின் காரணமாக பில்லியன் கணக்கான நபர்கள் அதற்குப் பழக்கமாகிவிட்டனர்' என கூகுள் கூறியது.

புதிய அப்டேட்டில் அறிவிப்புகள், வண்ண தீம்கள், புகைப்படங்கள், ஜிமெயில் மற்றும் வாட்ச் போன்ற பல விஷயங்கள் மாற்றப்பட்டு வருவதாக கூகிள் தெரிவித்துள்ளது. புதிதாக செய்யப்பட்ட மாற்றங்களும் அதில் ஒரு பகுதியாகும்.

பயனாளர் அனுமதியின்றி எவ்வாறு மாற்றப்பட்டன?

'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரஸிவ்' என்ற அப்டேட்டின் கீழ், ஆண்ட்ராய்டு போனின் அழைப்பு செயலியுடைய வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த அப்டேட் முதலில் ஜூன் மாதத்தில் சிலருக்கு மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர் அது படிப்படியாக பரவலாக வெளியிடப்பட்டது.

அழைப்பு மேற்கொள்ளும் செயலியை மேலும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவது தான் இதன் நோக்கம் என கூகுள் கூறியது.

'சமீபத்திய' (சமீபத்திய அழைப்புகள்) மற்றும் 'முக்கிய எண்கள்' போன்றவற்றை நீக்கிய கூகுள், அவற்றை 'முகப்பு' என்ற பகுதியில் ஒன்றிணைத்துள்ளது. எனவே இப்போது நீங்கள் அழைப்பு செயலியைத் திறக்கும் போது, 'முகப்பு' மற்றும் 'கீபேட்' என்ற இரண்டு பகுதிகளை மட்டுமே காண்பீர்கள்.

ஒரே எண்ணிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளும் இனி ஒன்றாகவோ அல்லது ஒரே இடத்திலோ காட்டப்படாது.

யாரை எந்த நேரத்துக்கு அழைத்தீர்களோ அந்த வரிசைப்படி தனித்தனியாகக் காட்டப்படும். இதனால் நீங்கள் அந்த தொடர்பை மீண்டும் மீண்டும் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பல மொபைல் போன்களில் அழைப்பு மற்றும் டயல் அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தால் பயனர்கள் குழப்பமடைந்தனர், பலர் சமூக ஊடகங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.

தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது.

எத்தனை தவறவிட்ட அழைப்புகள் உள்ளன அல்லது எத்தனை அழைப்புகள் பெறப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஒவ்வொரு எண்ணையும் தனித்தனியாகத் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று கூகுள் விளக்கியுள்ளது.

இதற்குப் பிறகு, மொபைல் போன் உபயோகிப்பவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் 'அழைப்பு' மற்றும் 'இன்-கால்' வடிவமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன.

புதிய வடிவமைப்பின்படி, அழைப்பின் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போனை உபயோகிப்பவர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து தொலைபேசியை எடுக்கும்போது தற்செயலாக அழைப்புகளைப் பெறவோ அல்லது துண்டிக்கவோ மாட்டார்கள்.

கூகுளின் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வரும் எதிர்வினைகளைப் பார்க்கும்போது, பலருடைய தொலைபேசி செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் பலருடைய தொலைபேசியில் இந்த அப்டேட்கள் இடம்பெறவில்லை.

போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பட மூலாதாரம், GOOGLE

படக்குறிப்பு, கூகுள், போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

சிலர் தங்கள் தொலைபேசிகளில் கூகிள் பிளே ஸ்டோரில் ஆட்டோமேட்டிக் அப்டேட்கள் (தானியங்கி புதுப்பிப்புகளை) ஆன் செய்திருப்பதால், சில செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றன என கூகுள் வலைப்பதிவில் ஒருவர் கூறியுள்ளார்.

மொபைல் போனை உபயோகிப்பவர்கள், இந்த ஆட்டோமேட்டிக் அப்டேட்டகளுக்கான அனுமதியை ஆப் செய்துவிட்டு, தொலைபேசி செட்டிங்ஸ்க்கு சென்று 'Uninstall Updates' என்பதை கிளிக் செய்து, தொலைபேசி அழைப்பின் காட்சி அமைப்புகளை பழைய நிலைக்கு மாற்றி அமைக்கலாம் என்று அவர் கூறினார்.

பிரபல மொபைல் நிறுவனமான ஒன்பிளஸும் இதே விளக்கத்தைத் தான் வழங்கியுள்ளது.

"ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, "இது ஒன்பிளஸ்ஸிலிருந்து அல்ல, கூகுள் போன் செயலியின் அப்டேட்டில் இருந்து வந்தது. உங்கள் தொலைபேசியில் இருந்த பழைய முறையே பிடித்திருந்தால், அப்டேட்களை நீக்கவும்"என நிறுவனம் பதில் அளித்தது.

எனவே, நீங்களும் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்திருந்தால் குழப்பமடைய வேண்டாம்.

பழைய முறையிலேயே உங்களது போன் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த புதிய அப்டேட்களை விரும்பவில்லை என்றால், 'Uninstall Updates'-இன் மூலம் பழைய முறையையே நீங்கள் தேர்வு செய்யலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cev2p79depno

"நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!

4 weeks 1 day ago
23 AUG, 2025 | 02:16 PM (எம்.நியூட்டன்) ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் சனிக்கிழமை (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி "நீதியின் ஓலம்" எனும், கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டம் காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது. மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் நிகழ்வின் வடக்கின் ஏற்பாடுக்குழு இணைபாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரமிக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும். இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223185

"நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!

4 weeks 1 day ago

23 AUG, 2025 | 02:16 PM

image

(எம்.நியூட்டன்)

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்"  கையொப்பப் போராட்டம்  சனிக்கிழமை (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.

தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி "நீதியின் ஓலம்" எனும்,  கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம்  காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி  பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர்  ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் நிகழ்வின் வடக்கின்  ஏற்பாடுக்குழு இணைபாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரமிக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும்.  

இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250823-WA0027.jpg

IMG-20250823-WA0014.jpg

IMG-20250823-WA0024.jpg

IMG-20250823-WA0016.jpg

IMG-20250823-WA0015.jpg

IMG-20250823-WA0018.jpg

https://www.virakesari.lk/article/223185

சிறுவர் பாதுகாப்பு வாரம் - சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு நடைபவனி

4 weeks 1 day ago
நுவரெலியாவில் குழந்தை துஷ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி 23 AUG, 2025 | 01:25 PM நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பாடசாலை குழந்தைகளும் பெற்றோர்களும் இணைந்து சனிக்கிழமை (23) நுவரெலியா நகரில் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நுவரெலியா நகர வீதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. குழந்தை துஷ்பிரயோகத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், குழந்தை துஷ்பிரயோகத்தை எதிர்க்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் விளம்பரப் பலகைகள், பதாகைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தி பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பேரணியை சுற்றுச்சூழல் மற்றும் எல்லா இடங்களிலும் வாழும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளின் பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223179

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

4 weeks 1 day ago
நிகழ்படங்கள் சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் வாக்குமூலங்கள் இலங்கை சோனகர்கள் எவ்வாறு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் சிங்களவருக்கு ஆதரவாக புலனாய்வு சேவை உட்பட்ட பணிகள் செய்தனர் என்று சிறிலங்காக் கடற்படையின் கலக்கூட்டக் சேர்ப்பர் (Admiral of the Fleet) வசந்த குமார் ஜயதேவ கரண்ணகொட விளக்குகிறார் நெறியற்ற முறையில் தமிழருக்கு எதிராக நீதியரசரை மாற்றிய ஹிஸ்புல்லா: https://eelam.tv/watch/_wZrFz5e44nxn1BY.html

சுவர் முகம் - ஷோபாசக்தி

4 weeks 1 day ago
நான் கடைசி மூன்று பந்துகளையும் மேலும் இருமுறை படித்தேன், விளங்கிக் கொண்டதை சரி பார்ப்பதற்காக . .......! 😀 கதை நிஜமோ அன்றி நிஜம் போலுமோ ஆனால் நன்றாக இருக்கின்றது . ......!

கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் - எழும் கேள்விகள் என்ன?

4 weeks 1 day ago
தர்மஸ்தலா: 100க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை, கொலை என புகார் அளித்தவர் கைது - காரணம் என்ன? பட மூலாதாரம், ANUSH KOTTARY/BBC படக்குறிப்பு, வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, புகார்தாரரை அவர் உடலை அடக்கம் செய்ததாகக் கூறும் 17 இடங்களுக்கு அழைத்துச் சென்றது. கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கர்நாடகாவில் தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, கோவில் நகரமான தர்மஸ்தலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்களை சட்டவிரோதமாக அடக்கம் செய்ததாகக் கூறிய முன்னாள் துப்புரவுத் தொழிலாளியை கைது செய்துள்ளது. பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நபர் கைது செய்யப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழு வட்டாரங்கள் பிபிசி இந்தியிடம் தெரிவித்தன. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர், அங்கிருந்து பத்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த முன்னாள் துப்புரவுப் பணியாளர் காவல்துறை முன் புகார்தாரராகவும் சாட்சியாகவும் ஆஜரானார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் சாட்சியம் அளித்த பிறகு, சாட்சி பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த, இந்த முன்னாள் துப்புரவு பணியாளர் ஒரு மண்டை ஓடு மற்றும் எலும்புகளின் எச்சங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். இதன் மூலம், துப்புரவு பணியாளர் தனது கூற்றுகளை உண்மை என்று நிரூபிக்க முயன்றார். காவல்துறையில் அளித்த புகாரை நியாயப்படுத்த, 1995 முதல் 2014 வரை இறந்த உடல்களை அடக்கம் செய்த இடத்திற்கு தான் சென்றதாக அந்த நபர் கூறியிருந்தார். மேலும் தனது மனசாட்சியைத் திருப்திப்படுத்த இதைச் செய்ததாகவும் அவர் கூறினார். பொய் சாட்சியம் அளிப்பதற்கு என்ன தண்டனை? பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, புகார்தாரர் தலை முதல் கால் வரை கருப்பு நிற உடையணிந்து சாட்சியமளிக்க நீதிபதி முன் ஆஜரானார். கடந்த சில நாட்களாக நடந்த தீவிர விசாரணைக்குப் பிறகு, சிறப்பு விசாரணைக் குழு அந்த நபரைக் கைது செய்துள்ளது. "அவர் கொண்டு வந்த மண்டை ஓடு மற்றும் எலும்பின் எச்சங்கள், அவர் உடல்களை புதைத்ததாகக் கூறிய இடங்களிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல"என்று ஒரு அதிகாரி கூறினார். அந்த நபர் பெண்ணுடையது எனக் கூறிய மண்டை ஓடு, உண்மையில் ஒரு ஆணுடையது. துப்புரவுப் பணியாளர்கள் ஆதாரமாக கொண்டு வந்த அந்த மண்டை ஓட்டின் தடயவியல் பரிசோதனையில், அது ஆணுடையது என்பது உறுதியாகியுள்ளது என மற்றொரு அதிகாரி குறிப்பிட்டார். "நீதித்துறை நடவடிக்கையில் தெரிந்தே பொய்யான சாட்சியத்தை அளிப்பவர் அல்லது விசாரணையின் போது பயன்படுத்தக்கூடிய வகையில் பொய்யான சாட்சியங்களைத் தயாரிப்பவர், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் பெறலாம்" என இந்திய நீதிச் சட்டத்தின் பிரிவு 229 இன் கீழ் உள்ள விதி கூறுகிறது. "துணைப்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்ட வழக்குகளைத் தவிர, வேறு எந்த வழக்கிலும் யாராவது தெரிந்தே பொய்யான சாட்சியத்தை அளித்தாலோ அல்லது உருவாக்கினாலோ, அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்" இந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஜூலை 3ஆம் தேதி தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது தலை முதல் கால் வரை மூடப்பட்ட வகையில் அவர் உடை அணிந்திருந்தார். பின்னர், அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். புகார்தாரராகவும், சாட்சியாகவும் இருந்த அவரை , அவர் உடல்களை புதைத்ததாகக் கூறிய 17 இடங்களுக்கு எஸ்ஐடி (SIT) குழு அழைத்துச் சென்றது. அந்த இடங்களில் ஆறாவது மற்றும் பதினொன்றாவது இடங்களுக்கு அருகில் 'சில எலும்புக்கூடு எச்சங்கள்' கண்டுபிடிக்கப்பட்டன. 13வது இடத்தில் நிலத்துக்கு அடியில் ஆய்வு செய்ய நிலத்தில் ஊடுருவும் ரேடார் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. பாஜக என்ன சொல்கிறது? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவில் கடந்த வாரத்தில், எதிர்க்கட்சியான பாஜக பெங்களூருவிலிருந்து தர்மஸ்தலா வரை பேரணி நடத்தி, "இந்து மதத் தலத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம்" எனக் கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, பிற தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து, ஸ்ரீ க்ஷேத்ர மஞ்சுநாதசுவாமி கோவிலின் அதிகாரியையும், ராஜ்யசபா எம்பி வீரேந்திர ஹெக்டேயையும் சந்தித்து, தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். பிபிசியிடமும் ஒரு செய்தி நிறுவனத்திடமும் பேசிய வீரேந்திர ஹெக்டே, புகார்தாரரும் சாட்சியுமான அந்த நபரின் குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாதவை என்றும், மக்களின் நலனுக்காக பல துறைகளில் சிறப்பான சேவையை வழங்கிய அமைப்பின் நற்பெயரை களங்கப்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் கூறினார். அரசாங்கம், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது என இந்த வாரம் சட்டமன்றத்தில் பேசியபோது தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, "விசாரணைக்குப் பிறகு, புகார்தாரரும் சாட்சியுமான அந்த நபர் குறிப்பிட்ட இடங்களில் எப்போது தோண்டத் தொடங்குவது என்பதை சிறப்பு புலனாய்வு குழு தான் முடிவு செய்யும்" என்றும் கூறினார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஜி. பரமேஸ்வரா, சிறப்பு விசாரணை குழுவின் பணி விசாரணை முடியும் வரை தொடரும் என்றார். மேலும், "இது ஒரு சதித்திட்டமாக இருந்தாலும், விசாரணை முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார். வழக்கின் பின்னணி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கர்நாடகாவின் தர்மஸ்தலத்தில் சட்டவிரோதமாக உடல்கள் புதைக்கப்படுவதாகக் கூறி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஜூலை 3-ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஒருவர், 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா என்ற புனிதத் தலத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்தபோது, ஒரு செல்வாக்கு மிக்க குடும்பம் மற்றும் அவர்களது ஊழியர்களின் உத்தரவின்படி நூற்றுக்கணக்கான உடல்களை புதைத்ததாகக் கூறினார். பல பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்களது உடல்களைப் புதைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். அப்போது, தனது மேலதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்ததால் தான் இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்ததாக புகார் அளித்தவர் கூறினார். ஜூலை 19-ஆம் தேதி, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது. புகார்தாரரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட 13 இடங்களில் தோண்டும் பணியை அந்த குழு மேற்கொண்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg3z032jx4o