Aggregator

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 1 day ago
ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கைதாகாலாம்? written by admin August 23, 2025 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்ததற்காக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை மற்றும் அதன் விசாரணைகள் தொடர்பில் இன்று (23) நடைபெற்ற விசேட காவற்துறை ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அப்போது, குறித்த சம்பவம் தொடர்பாக சமன் ஏக்கநாயக்கவும் கைது செய்யப்பட உள்ளாரா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். விசாரணைகள் நடைபெற்று வருவதால், இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று இதன்போது கலிங்க ஜயசிங்க கூறினார். வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். https://globaltamilnews.net/2025/219556/

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 1 day ago
ஆமா .... தமிழ் இளைஞரை பயங்கரவாத சட்டத்தின் மூலம் கைது செய்து இதைவிட பயங்கர மனித உரிமை மீறலில் ஈடுபட்டபோது இவர் வாயே திறக்கவில்லையே, அது ஏன்? தான் தமிழரின் பிரதிநிதி என்று எப்படி உரிமை எடுத்துக்கொள்ளலாம்? எல்லோரும் வைத்திய சாலையில் படுக்கும் போது, தலைமறைவாகும்போது ரணிலார் மட்டும் ஏன் தலையைக் கொடுத்தார்? "யானைக்கும்அடி சறுக்கும்." தமிழரை தந்திரமாக கூறு போட்டு அழித்தவர், இன்று தன்னை தான் காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? அனுதாபம் பெறவா? இவனுகள் நித்திரையிலும் தமக்கு எழும் எதிர்ப்பை எதிர்ப்பாளரை வைத்தே தமக்கு சாதகமாக எப்படி திருப்பலாமென யோசிப்பார்கள். இராணுவ வெற்றி மறைந்து போக, இப்போ வீடற்றவர் எனக்காட்டி எப்படி ஏழை மக்களை திசை திருப்பினார்கள். உடனடியாக இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியான ஏமாற்று வேலைகளுக்கு இடமில்லாமல் போயிருக்கும். ஆனால் சரியான சட்ட விசாரணை செய்து குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் கைது செய்தால் அரசியல் பழிவாங்கல் என்பது ஏற்றுக்கொள்ளப்படும். அதனாலேயே அதற்கு முன், அனுராவுக்கு எதிராக நீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்ட முடிகிறது. இப்போ, மக்களை இவர்களின் ஊழலுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை அனுரா செய்ய வேண்டியது முதல் வேலை. இல்லையேல் எதிரி முந்திக்கொண்டு அனுராவை சிறையில் அடைக்கக்கூடும்.

கடற்புலிகளின் தொலையியக்கி கட்டுப்படுத்தி கடற்கலம்

4 weeks 1 day ago
இது 2022ம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள் வெளியீடு: இது ஒரு உண்மைச் சம்பவம்... சிங்களப் படைகளிடத்தில் உயிருடன் பிடிபட்டு சித்திரவதையால் எம்மை விட்டுப் பிரிந்துவிட்ட எனது கடற்புலி உறவினர் ஒருவர் இறுதிப் போர்க்காலத்தில் தெரிவித்த பற்றியம் இதுவாகும். எனது உறவினர் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவுகள் ஒன்றினது கட்டளையாளர் ஆவார். சமாதான காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு எல்லாம் சென்று அந்தப் பிரிவிற்கான சிறப்புப் பயிற்சிகள் எல்லாம் எடுத்து நாடு திரும்பியவர் ஆவர். (எனது பாதுகாப்பிற்காக அவருடைய பெயரை எழுதவில்லை. அவருடைய நிழற்படம் கூட என்னிடம் இல்லை😢) இவர் இதை கரையா முள்ளிவாய்க்காலிலிருந்த எங்கள் உறவினரின் வீடொன்றில் கடற்புலிகள் தம் படைக்கலன்களை கொண்டுவந்து வைத்த போது தெரிவித்தார். அப்போது அங்கு என்னைத் தவிர எங்கள் பிற உறவினர்களும் அங்கிருந்தனர். அன்றொரு நாள் நண்பகல் போல் அவ்வீட்டின் பதுங்ககழிக்குள் நாங்கள் எல்லோருமிருந்து கதைத்துக்கொண்டிருக்கும் போது அவர் தெரிவித்தார், புலிகளின் புலனாய்வுத்துறையினர் சில நாட்களுக்கு முன்னர் நீர் மட்டத்திற்கு கொஞ்சம் மேலால் பயணிக்கிற தொலையியக்கியால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஆளில்லாத படகு ஒன்றின் மூலம் படைக்கலன்களை வெளியில் இருந்து தருவித்தனர் என்று. அதில் சில ஏகே துமுக்கிகள் மற்றும் அவற்றிகான சன்னங்கள் போன்ற மிகக் குறைந்த அளவிலான வலுவற்ற ஆயுதங்களே தருவிக்கப்பட்டது என்றும் ஆனால் அவை அப்போதைய நிலைமைக்கு போதாது என்றும் கூறி அலுத்துக்கொண்டார். இதைப் அப்போது பகிரக் காரணம், புலிகளிடம் ஏதோ ஒரு புதுவித தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்திருந்தது என்பதை வெளிக்காட்டிடவே. ஆயினும் அது தொடர்பில் அவர் கூறிய ஏனைய விடையங்கள் என்னினைவில் இப்போது இல்லை. இதே போன்று வெளியிலிருந்து தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைக்கக்கூடிய கலமொன்று 9/03/2000 அன்று திருமலைத் துறைமுகத்தினுள் வைத்து சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்

கடற்புலிகளின் தொலையியக்கி கட்டுப்படுத்தி கடற்கலம்

4 weeks 1 day ago

இது 2022ம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள் வெளியீடு:



இது ஒரு உண்மைச் சம்பவம்... சிங்களப் படைகளிடத்தில் உயிருடன் பிடிபட்டு சித்திரவதையால் எம்மை விட்டுப் பிரிந்துவிட்ட எனது கடற்புலி உறவினர் ஒருவர் இறுதிப் போர்க்காலத்தில் தெரிவித்த பற்றியம் இதுவாகும். 

எனது உறவினர் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவுகள் ஒன்றினது கட்டளையாளர் ஆவார். சமாதான காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு எல்லாம் சென்று அந்தப் பிரிவிற்கான சிறப்புப் பயிற்சிகள் எல்லாம் எடுத்து நாடு திரும்பியவர் ஆவர். (எனது பாதுகாப்பிற்காக அவருடைய பெயரை எழுதவில்லை. அவருடைய நிழற்படம் கூட என்னிடம் இல்லை😢)

இவர் இதை கரையா முள்ளிவாய்க்காலிலிருந்த எங்கள் உறவினரின் வீடொன்றில் கடற்புலிகள் தம் படைக்கலன்களை கொண்டுவந்து வைத்த போது தெரிவித்தார். அப்போது அங்கு என்னைத் தவிர எங்கள் பிற உறவினர்களும் அங்கிருந்தனர்.

அன்றொரு நாள் நண்பகல் போல் அவ்வீட்டின் பதுங்ககழிக்குள் நாங்கள் எல்லோருமிருந்து கதைத்துக்கொண்டிருக்கும் போது அவர் தெரிவித்தார், புலிகளின் புலனாய்வுத்துறையினர் சில நாட்களுக்கு முன்னர் நீர் மட்டத்திற்கு கொஞ்சம் மேலால் பயணிக்கிற தொலையியக்கியால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஆளில்லாத படகு ஒன்றின் மூலம் படைக்கலன்களை வெளியில் இருந்து தருவித்தனர் என்று. அதில் சில ஏகே துமுக்கிகள் மற்றும் அவற்றிகான சன்னங்கள் போன்ற மிகக் குறைந்த அளவிலான வலுவற்ற ஆயுதங்களே தருவிக்கப்பட்டது என்றும் ஆனால் அவை அப்போதைய நிலைமைக்கு போதாது என்றும் கூறி அலுத்துக்கொண்டார்.

இதைப் அப்போது பகிரக் காரணம், புலிகளிடம் ஏதோ ஒரு புதுவித தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்திருந்தது என்பதை வெளிக்காட்டிடவே.

ஆயினும் அது தொடர்பில் அவர் கூறிய ஏனைய விடையங்கள் என்னினைவில் இப்போது இல்லை.

இதே போன்று வெளியிலிருந்து தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைக்கக்கூடிய கலமொன்று 9/03/2000 அன்று திருமலைத் துறைமுகத்தினுள் வைத்து சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

4 weeks 1 day ago
குறைய நேரம் வேலை செய்ய நினைப்பவர்கள் குறைய சம்பளம் எடுக்க நினைத்தால் நல்ல விடயம்.

சுவர் முகம் - ஷோபாசக்தி

4 weeks 1 day ago
@பிரபா , எல்லாம் விளங்கியது என்று சொல்லமுடியாது. டேவிட் கள்ளப் பேரில் அசைலம் கேட்ட இராணுவ வீரன் என்று இறுதியில் தெரிந்தது. ஆனால் அவர் சிறுமிகளைச் சீரழித்தாரா என்று தெரியாது! ஷோபாசக்தி சொற்களைக் கொண்டு கதைகளைச் செதுக்குபவர் என்பதால் கவனமாகப் படிக்கவேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 1 day ago
அவர் பற்றி இன்னமும் அறியாத தகவல்கள்... கொழும்பு CRFC மைதானத்துக்கு அவ்வப்போது வரும் அவர் , அந்த மைதானத்தின் Pavilion மாடியில் அமைந்திருக்கும் மதுபானச்சாலையில் அமர்ந்து மது அருந்தியபடி அங்கே ரக்பி விளையாடிக்கொண்டிருக்கும் பதின்ம வயது மற்றும் இருபதின் ஆரம்ப இளைஞர்களை கவனித்துக்கொண்டிருப்பார். அதில் பிருஷ்டம் பெரிதான சிறார்களை/இளையோரை குறிவைத்து கீழே இறங்கி, " வீட்டுக்கு வருகிறாயா? இலங்கை அணியில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் " என்பார். இவ்வாறாக அவர் இலங்கையை " தூக்கி நிறுத்தினார் " ithuvum facebook prathithaan மிஸ்டர் கிளீன் பற்றி எப்படியெல்லாம் எழுதுறாங்க..

எனது மரணச்சடங்கு.🖤

4 weeks 1 day ago
இவைகள் தான் என் குடும்பத்தினர்க்கு சொல்லி வைத்திருப்பது.அதாவது எனது இறுதி சடங்கு நிகழ்வில்..... யாருமே கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது.உடைகள் பஞ்சவர்ண கலர்களாக இருக்க வேண்டும்.யாரும் கறுப்பு கண்ணாடி அணியக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு சடங்கு ஆரம்பமாகியதும் இந்த பாடல் ஒலிக்க வேண்டும். https://youtu.be/ggNq4bbYb_Y?si=W79txuZdk2fwPudF நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுதல். அண்மைக் காலங்களில் நான் இணைக்கும் காணொளிகள் நேரடியாக வேலை செய்வதில்லை. அப்படி இந்த திரியிலும் நான் இணைக்கும் காணொளிகள் நேரடியாக இயங்கவில்லை என்றால்.... இந்த திரியில் மட்டும் நேரடியாக இயங்குமாறு ஆவன செய்ய வேண்டுகின்றேன். நன்றி 🙏

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 1 day ago
இலங்கை போலிசார் பிணை வழங்க மறுப்பது வழமையாக நடைபெறும் விடயம்தான். சாதாரண குடிமக்களுக்கும் இதுதான் இலங்கையில் வழமையான நடைமுறை. இலங்கையின் முன்னாள் அதிபர் என்பதற்காக இங்கு விலக்கு அளிக்கப்படவேண்டும் என்றால் இலங்கையில் சாதாரண பொதுமக்கள் முறைகேடாக தண்டிக்கப்படுவதை ஏற்கலாமா? சாதாரண பொதுமக்களுக்கும் இவ்விடயத்தில் விலக்கு அளிக்கலாமே!

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

4 weeks 1 day ago
சினிமா அரசியல் தலைவிரித்தாடும் தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட வாழ்க்கை வாழ விரும்பும் தமிழ்நாட்டு மக்களை வைத்து எந்த அரசியல் கணிப்பும் செய்யமுடியாது. அதை விட பணவாக்கு இன்னும் கொடுமையானது...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 1 day ago
உப்பிடி எல்லா அரசியல்வாதிகளையும் தூக்கி உள்ளுக்கு போட அவைக்குள்ள வருத்தங்கள் எல்லாம் ஓட்டமெற்றிக்காய் வெளியிலை வரும் போல கிடக்கு....😂

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

4 weeks 1 day ago
இந்த அமைச்சர் கதைக்கும்போது ஏதாவது விளங்கித்தான் கதைக்கிறாரா.....புரியல்

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 1 day ago
கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பில் அமைந்திருந்த கல்வெட்டு நடுவில் உள்ள வட்டத்தினுள் புலிச்சின்னம் இருந்தது. நடுவில் உள்ள கல்வெட்டின் அண்மைப்பட்ட படிமம்:

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 1 day ago
12 வேங்கைகளின் நினைவாக தவிபுவினரால் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம் தீருவில், யாழ்ப்பாணம் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் எழுப்பப்பட்டது இந்நினைவுச்சின்னத்தின் பெயர் எனக்குத் தெரியவில்லை!

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 1 day ago
தீருவில் நினைவுத்தூண் ~90களின் முற்பகுதி இந்திய சிறிலங்காக் கூட்டுப் படைகளின் நயவஞ்சகத்திற்கு இலக்காகி தீருவிலிலே காவியமான 12 வேங்கைகளின் நினைவாக தவிபுவினரால் எழுப்பப்பட்ட சின்னம்.... ''கீழே நிற்கும் மனிதரின் உயரத்தை வைத்து இதன் உயரத்தை கணக்கிடுக''