2 weeks 6 days ago
கடாபியின் மகன் சயிப் அல்-இஸ்லாம் சுட்டுக் கொலை; லிபியாவில் பரபரப்பு Published By: Digital Desk 3 04 Feb, 2026 | 10:32 AM லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சயிப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 53 வயதான அவரின் மரணத்தை அவரது அரசியல் குழு உறுதிப்படுத்தியுள்ளதாக லிபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லிபியாவின் தலைநகர் திரிப்போலியிலிருந்து சுமார் 136 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஜின்டான் (Zintan) நகரிலுள்ள அவரது இல்லத்தில், முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கமாண்டோ குழுவினர் தாக்குதல் நடத்தியதாக அவரது அரசியல் அணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் “கோழைத்தனமான மற்றும் துரோகமான படுகொலை” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சயிப் அல்-இஸ்லாமின் வழக்கறிஞர் கலேத் அல்-சாயிதி மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஒத்மான் ஆகியோர், செவ்வாய்க்கிழமை சமூக வலைத்தளங்களில் அவரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையில், சயிப் அல்-இஸ்லாமின் சகோதரி ஒருவர் லிபிய தொலைக்காட்சியிடம், அவர் அல்ஜீரிய எல்லைக்கு அருகிலான பகுதியில் உயிரிழந்ததாக கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 1969 முதல் 2011 வரை லிபியாவை ஆட்சி செய்த முஅம்மர் கடாபியின் மகன்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக சயிப் அல்-இஸ்லாம் கருதப்பட்டார். 1972ஆம் ஆண்டு பிறந்த அவர், 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவின் உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் முன்னணியில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. 2011ஆம் ஆண்டு கடாபி ஆட்சி வீழ்ச்சியடைந்தபோது, அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியதாக சயிப் அல்-இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து, அவர் ஜின்டான் நகரில் உள்ள ஒரு ஆயுதக் குழுவினரால் கைது செய்யப்பட்டு, சுமார் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2011 போராட்டங்களின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அவரை விசாரிக்க முயன்றது. 2015ஆம் ஆண்டு, ஐநா ஆதரவு பெற்ற திரிப்போலி நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டு பொதுமன்னிப்பு சட்டத்தின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர், சயிப் அல்-இஸ்லாம் ஜின்டான் நகரிலேயே வசித்து வந்தார். 2021ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தாலும், அந்தத் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கடாபி ஆட்சி வீழ்ச்சியடைந்ததிலிருந்து லிபியா பல்வேறு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது நாடு இரண்டு போட்டி அரசாங்கங்களுக்கு இடையே பிளவுபட்டுள்ளது. இந்த சூழலில், சயிப் அல்-இஸ்லாமின் படுகொலை லிபிய அரசியல் நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனிடையே, திரிப்போலியைத் தளமாகக் கொண்ட உயர் அரசியல் பேரவையின் முன்னாள் தலைவர் கலேத் அல்-மிஷ்ரி, இந்த படுகொலை தொடர்பில் அவசரமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். சயிப் அல்-இஸ்லாம் கடாபியின் மரணம், லிபிய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுவதுடன், நாட்டின் எதிர்கால அரசியல் சமநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. https://www.virakesari.lk/article/237781
2 weeks 6 days ago
அரச பணியாளர்கள் அரசு சொல்வதைத் தானே செய்ய வேண்டும்.
2 weeks 6 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 97 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 97 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வசபனின் மரணத்திற்குப் பிறகு, வங்கனாசிக தீசன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் மகா மங்கள என்ற பெயரில் ஒரு விகாரை [Mangla Maha Viharaya] கட்டினான். அவனது மனைவி மகா மாதா முன்பு உணவளித்த தேரரின் நினைவாக ஒரு விகாரை கட்ட பணம் சேகரித்தார். வங்கனாசிக தீசன் இறந்த பிறகு அவரது மகன் முதலாம் கஜபாகு [Gajabahu I] ஆட்சிக்கு வந்து இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். முதலாம் கஜபாகு [அல்லது Gajabahugamani] அதிகமாக தமிழ் பெற்றோரையும் மற்றும் தமிழ் தாத்தா பாட்டியையும் கொண்டு இருப்பதால், இவனும் தமிழனாக கருத வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் கட்டியபோது, அந்த இந்திர விழாவில் கலந்து கொள்ளச் சென்ற மன்னனே இவனாகும். கஜபாகுவின் மரணத்திற்குப் பிறகு, இவனது மாமனார் மகாலக நாகர் [Mahalaka Naga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவர் தீவில் ஏழு விகாரைகளைக் கட்டினான். வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் விகாரைகளைக் கட்டிய ஒரே மன்னனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் பல ஆரம்பகால ஆட்சியாளர்கள் தமிழ் அல்லது திராவிட கூறுகளைக் கொண்ட பெயர்களைக் கொண்டிருந்ததுடன் தீவின் ஆரம்பகால மக்களில் ஒருவரான நாக மக்கள், தென்னிந்திய தமிழ்ப் பகுதிகளுடன் வலுவான கலாச்சார மற்றும் மொழியியல் உறவுகளைக் கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகிறது. நாக என்ற சொல் தமிழ் மற்றும் பாலி இலக்கியங்களில் காணப்படுகிறது. இது நாகதீபம் (நயினாதீவு) போன்ற இடங்களில் வாழ்ந்த பாம்பு வழிபாட்டு மக்களைக் குறிக்கிறது. சிங்களம் ஒரு தனித்துவமான மொழியாக உருவாவதற்கு முன்பு, தீவின் மக்கள் பிராகிருதம் மற்றும் [அல்லது] ஆரம்பகால திராவிட மொழியைப் பேசினர். தொல்பொருள் ஆய்வில், ஆரம்பகால பிராமி கல்வெட்டுகளில் (கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது) கூட, பல தனிப்பட்ட பெயர்கள், குலப் பெயர்கள் மற்றும் பட்டப்பெயர்கள் தமிழ் சொற்களை ஒத்திருக்கின்றன. சிங்களம் ஒரு கட்டமைக்கப்பட்ட மொழியாக கி.பி 5-6 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் உருவாகத் தொடங்கியது. இது பாலி (பௌத்த நூல்கள் காரணமாக), சமஸ்கிருதம் மற்றும் உள்ளூர் [பிராகிருத / திராவிட அல்லது தமிழ் மொழிகளால்] பேச்சுவழக்குகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டது. அதாவது மகாவம்சம் எழுதும் பொழுது, உண்மையில் சிங்களம் என்ற மொழி உருவாகவில்லை, அது மிக மிக ஆரம்ப நிலையில் தான் இருந்துள்ளது, ஆனால், தமிழ் மிகவும் வளர்ந்த உச்ச நிலையில் இருந்துள்ளது. அதனால்த் தான் மகாவம்சத்தில் தமிழர் என்ற சொல்லே காணப்படுகிறது, ஆனால் சிங்களம் அல்லது சிங்களவர் என்ற சொல் அங்கு இல்லை. ஆக சிஹல ["Sihala" (Sīhaḷa, සිහළ, சீஹள] என்ற சொல் ஒருக்காவோ இரண்டுதரமோ மட்டுமே அங்கு கூறப்படுகிறது, ஆனால் அது மகாவம்சத்தின் (5 ஆம் நூற்றாண்டு பாலி நாளேடு) படி, சிஹல (சிஹால) என்ற பெயர் சமஸ்கிருத / பாலி வார்த்தையான "சிஹா" ("Sīha" lion/ சிங்கம்) மற்றும் "லா" ("La" நிலம்/இடம்) ஆகியவற்றிலிருந்து உருவானது, அதாவது "சிங்கத்தின் நிலம்" அல்லது "சிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்" என்ற அர்த்தத்தில் மட்டுமே காணப்படுகிறது. மற்றும் படி மொழி ஒன்றையோ அல்லது அப்படியான மொழி ஒன்றை பேசுபவர்கள் பற்றியோ குறிக்கவே இல்லை. வட இந்தியாவிலிருந்து குடியேறியவர்களால் கொண்டுவரப்பட்ட இந்தோ-ஆரிய பேச்சுவழக்கில் இருந்து சிங்களம் தோன்றியது என்றாலும், தமிழ் மற்றும் பிற தென்னிந்திய சமூகங்களுடனான தொடர்பு காரணமாக திராவிட மொழிகளால் பெரிதும் செல்வாக்குக்கு உள்ளானது என்பது வரலாறு. இலங்கை தென்னிந்தியாவுடன், குறிப்பாக தமிழ்நாட்டுடன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியான தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன், அனுராதபுர காலம் (கிமு 377 முதல்) பல தமிழ் ஆட்சியாளர்கள் அல்லது தமிழ் தொடர்புகளைக் கொண்ட ஆட்சியாளர்களைக் கொண்டு இருந்ததும் தெரியவருகிறது. அத்துடன் இலங்கையின் பல இடப்பெயர்கள் தமிழ் மற்றும் நாக பூர்வீகம் கொண்டவையாகவும் உள்ளன. உதாரணமாக, நாகதீபா (நயினாதீவு). மேலும் அனுராதபுரம் - சில கோட்பாடுகள் "அனுராத" திராவிட இணைப்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன ["Anu" and "Ratha" resemble Tamil words rather than purely Sanskrit. "Anu" could come from Tamil "Anu" (அணு) meaning small or a prefix denoting something related. "Ratha" (ரத) means chariot in Sanskrit, but in Tamil, "Rathapuram" (ரதபுரம்) is a common place-name structure. It suggests a settlement or city related to a chariot or a ruling class.]. திருகோணமலை ஒரு தமிழ் வம்சாவளி பெயர் மற்றும் கதிர்காமம் ஒரு தமிழ்-சைவ யாத்திரைத் தலம். மற்றும் ஆரம்பகால ஆட்சியாளர்கள் இன்று புரிந்து கொள்ளப்படுவது போல் பிரத்தியேகமாக "சிங்களவர்" அல்லது "தமிழர் " அல்ல, மாறாக வெவ்வேறு இனக்குழுக்களின் கலவையாக இருந்திருக்கலாம்? மற்றது அப்பொழுது தமிழ் மொழி முழுமை பெற்று இருந்தாலும் சிங்கள மொழி என்ற ஒன்று ஆரம்பிக்கவே இல்லை. சுருக்கமாக, ஆரம்பகால இலங்கையில், குறிப்பாக தனித்துவமான சிங்கள அடையாளம் தோன்றுவதற்கு முன்பு, ஆழமான தமிழ் மற்றும் திராவிட செல்வாக்குகள் இருந்தன என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. நவீன தேசியவாதம் தமிழ் மற்றும் சிங்கள வரலாறுகளைப் பிரிக்கும் முயற்சிக்கு வழிவகுத்தாலும், உண்மை என்னவென்றால், இரண்டு கலாச்சாரங்களும் பல நூற்றாண்டுகளாகப் பின்னிப் பிணைந்திருந்தன. சிங்கள மொழியே உண்மையில், காலப்போக்கில் குறிப்பிடத்தக்க தமிழ் மற்றும் திராவிட செல்வாக்குகளுடன் வளர்ந்தது என்பது வெள்ளிடைமலை. இதற்கு சிறந்த உதாரணம் தொலெமி அல்லது தாலமியின் [Ptolemy] வரைபடம் (கி.பி. 2 ஆம் நூற்றாண்டு) தமிழ் ஒலிப்பு முறையை ஒத்த பெயர்களைக் கொண்ட இலங்கை நகரங்களைக் குறிக்கிறதுடன் [Ptolemy’s map (2nd century AD) refers to Sri Lankan cities with names resembling Tamil phonetics.] அனுராதபுரத்திலேயே உள்ள ஆரம்பகால பிராமி கல்வெட்டுகள் (கிமு 3-2 ஆம் நூற்றாண்டு வரை) தமிழ்-பிராக்ருத செல்வாக்குகளைக் காட்டுகின்றதும் [Early Brahmi inscriptions in Anuradhapura (dating to the 3rd-2nd century BCE) show Tamil-Prakrit influences.] ஒரு எடுத்துக்காட்டு ஆகும். Part: 97 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 After the death of Vasabha, Vannakatissa ruled for three years. He built a Vihara with the name Mahamangala. His consort Mahamatta collected money to build a Vihara in memory of the Thera whom she fed previously. On the death of Vannakatissa his son, Gajabahugamani came to power and ruled for twenty-two years. Gajabahugamani is Tamil being born to Tamil parents and Tamil grandparents. He is the king Kajavahu who went to attend the Indravilla in Tamilnadu. This helped fix the date of the great king Cheran Sengutuvan. After the death of Gajabahugamani, his father in law, Mahalaka Naga ruled for six years. He built seven Viharas in the island He was the only one on record to have built Viharas in north, south, west and east. Mahalaka Naga was also a Tamil. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 98 தொடரும் / Will follow துளி/DROP: 2016 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 97 https://www.facebook.com/groups/978753388866632/posts/33634819606166588/?
2 weeks 6 days ago
என்.பி.பி அடியாட்களின் மிரட்டலுக்குப் பயந்து என்பதை சேர்த்துவிடவும்..
2 weeks 6 days ago
பார்க்க பார்க்க மனசுக்குள் வேதனை தான் மிஞ்சுகின்றது. ஈற்றில் இதற்குத்தானா இத்தனை ஆயிரம் போராளிகளின் தியாகங்களும், பொது மக்களின் இழப்புகளும் ??
2 weeks 6 days ago
வீரப்பையனாரே..இன்றைய அரையிறுதிஆட்டம் இந்தியா ....ஆப்கான் பார்த்தீர்களா...எப்படி இருந்தது ஆட்டம் ...இந்தியா தோற்றுவிடும் என்றூ ... மீண்டும் போர்வைக்குள் போய்விட்டென்....பின்னர் நடந்தது வேறை..
2 weeks 6 days ago
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 05 ஒருநாள் ஓய்வு பெற்ற அதிகாரி: “நான், ஒருவேளை, இளமையாக இருந்திருந்தால்… நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பீர்களா?” என்று சும்மா ஒரு கதைக்கு கேட்டார். அதற்கு கண்மணி : “இல்லை... இனிமேல் என்றும் இல்லை ... நான் பட்ட துயர் காணும் ... நான் குடும்ப வாழ்வில், ஆண் பெண் குடும்ப உறவில் மரத்துப் போனேன்" என்றாள். “உனக்கான மகிழ்ச்சியை ஏன் மறுக்க வேண்டும்?” “நான் திரும்ப ஒருமுறை மீண்டும் மாட்டிக்கொள்வதை மறுக்கிறேன் ,” என்று அவள் பதிலளித்தாள். “இனி வரும் திருமணம் வேறுபட்டதாக இருக்கலாம்.” “ஆம். “மாறலாம்” என்று சொல்வது எளிது. ஆனால் அந்த மாற்றத்தின் ஆபத்தை மீண்டும் ஏற்கச் சொல்லப்படுவது எப்போதும் பெண்களுக்கே. ஆண்களுக்கு திருமணம் ஒரு முயற்சி. பெண்களுக்கு அது ஒரு சூதாட்டம்.” [Yes. But women are expected to risk that difference. Men are not.]” அவர் அவளை தனிமையிலிருந்து காப்பாற்ற விரும்பினார். அழிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவள் விரும்பினாள். அதிகாரி: “ஏன்?” கண்மணி: “ஏனென்றால் அப்போதும் கூட, நான் அதிகமாக அனுசரித்துச் செல்ல வேண்டியவளாக இருப்பேன். இன்னும் சமரசம் செய்ய வேண்டும். இன்னும் மன்னிக்க வேண்டும்.” அவள் தன் இறுதி எண்ணத்தை கவனமாக இடைவெளி விட்டுச் சொன்னாள் கண்மணி: “சாத்தியத்தை விட, அமைதியை நான் தேர்வு செய்கிறேன். நம்பிக்கையை விட, தெளிவை நான் தேர்வு செய்கிறேன். அதற்காக நான் அன்பை நிராகரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. அழிப்பை மறுக்கிறேன் என்று அர்த்தம்.” அவர், அவளின் வார்த்தைகளை கவனமாக கேட்டார். அவளை மீண்டும் சம்மதிக்க வைக்க, அதன் பின் அவர் முயற்சிக்கவில்லை. சில உரையாடல்கள் உடன்பாட்டுடன் முடிவதில்லை. அவை புரிதலுடன் முடிவடைகின்றன. அவள் அன்பை விரும்பினாள். அவள் ஆசையை ரசித்தாள். அவள் தன்னை ரசிப்பதை விரும்பினாள். ஆனால் கவனிப்பு என்ற வேடத்தில், அதிகாரம் இருப்பதை வெறுத்தாள் திருமணம் ஒரு காலத்தில் அவளுடைய குரலை எடுத்துக் கொண்டது. அதைத் திரும்பப் பெற அவள் இனிமேல் ஒருநாளும் பேரம் பேச மாட்டாள். அதன் பின் ஒருநாள், ஓய்வு பெற்ற அதிகாரி கண்மணிக்கு காதல் மற்றும் ஏக்கம் [romantic, sensual, longing] கொண்ட, அழகிய தமிழ் கவிதைகளை அனுப்பினார். உறங்கும் போது கனவிலும் விடிந்தவுடன் நினைவிலும் குளத்தில் நீந்தும் தாமரையைப் போல் மன ஓடையில் நீந்துகின்றது உன் நினைவு வாழும் வரை உயிரிலும் எண்ணத்திலும் நீயே.. வானவில்லாய் எனக்கு அழகு பொழிந்து ஏழு நிறமாய் உன் கோலத்தைக் காட்ட காற்றைக் கண்ட மரம் போல் என் மனமும் கவலை மறந்து ஆடிப் பாடி நடனமாடுகிறதே … எனக்குள் தனிமையைத் தவிடு பொடியாக்கி எனக்குள்ளே எங்கோ இருந்து இசைக்கிறாய் உன்னைத் தேடி அலைந்திடும் தேடலில் உன் வண்ணமும் என்னைத் தீண்டி மயக்குதே ... ஒளியிழந்த விழிகளுக்கும் நீ கனவைத் தந்தாய் இருண்டுவிடும் என்னுலகம் மீண்டும் - கலைந்துவிடாதே மறக்க முடியாத பிம்பமாய் தவிர்க்க முடியாத நினைவாய் கண்ணின் கண்மணியாய் வந்தவளே - விலகிவிடாதே.. அவள் அவற்றை ஆர்வத்துடன் திரும்பத் திரும்ப படித்தாள். உடைமையைக் கோராத ஆசையை அவள் ரசித்தாள் [She enjoyed desire that did not demand possession.]. கவிதை, விளைவுகளின்றி நெருக்கத்தை அனுமதித்தது [Poetry allowed intimacy without consequence.]. கடமை இல்லாமல் ஏங்குதலுக்கு வழிவகுத்தது. [Longing without obligation.]. “என்னை அழைக்கும் ஆசை என்னை அச்சுறுத்தவில்லை. என்னைச் சொந்தம் கொள்ளும் முயற்சிதான் என்னை நடுங்கச் செய்கிறது.” [Desire does not frighten me, she realised. Ownership does.] என்றாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 06 தொடரும் துளி/DROP: 2015 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/33634639602851255/?
2 weeks 6 days ago
இப்ப வாற சின்னதிரையின் ஒரு பகுதி போல இருந்தது.
2 weeks 6 days ago
@புலவர் பெருமானுக்கு உதவி செய்யலாமே எனும் நல்நோக்குடன் தமிழ்நெட்டில் தேடுதல் வேட்டை மேற்கொண்டேன். மறைந்த சம்மந்தர் அவர்கள் 2009 ஜனவரி தொடக்கம் சம்மந்தப்பட்ட பதிவுகளை பார்வையிட்டேன். போர் நிறைவடைந்து பத்து வருடங்களின் பின்னரும் மனுசன் பாவம் தமிழர்கள் சம்மந்தப்பட்ட விடயங்களில் நன்றாகவே குரல் கொடுத்துள்ளது. ஆக ஒரே ஒரு இடத்தில்தான் சறுக்கல் தெரிகின்றது. ரணில் கையுக்குள் இலங்கை தேசியகொடியை திணித்து உயர்த்திக்காட்டிய சம்பவம்தான் அது. விடுதலை புலிகள் அமைப்பு போராளிகள் - மாவீரர்கள் தியாகங்களிற்கு ஈடு, இணை இல்லை. சாதாரண தமிழ் அரசியல்வாதிகளினால் அவர்களிற்கு இணையாக பணியாற்ற முடியாது அவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பமுடியாது என்பதுதான் யதார்த்தம். இதற்கு சம்மந்தர், சுமந்திரரை குறைசொல்லி என்ன செய்வது? முன்னைய வீச்சில் போராட்டம் நகரவேண்டும் என்றால் முன்னைய ஒழுக்கம், தியாகம், கட்டுக்கோப்பு, உயிர்க்கொடை எல்லாம் அவசியம். ஆனால், இப்போது அடிப்படை கட்டமைப்பே இதற்கு இல்லையே!
2 weeks 6 days ago
பாதுகாப்பு படையினரும் பாடசாலை மாணவ மாணவியருடன் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
2 weeks 6 days ago

கொலையான அஜித்குமார் | கோப்புப் படம்
கி.மகாராஜன்
Updated on:
04 Feb 2026, 3:55 am
மதுரை: ‘மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை. அஜித்குமாரின் மரணம் என்பது காவல் மரணமே என உறுதியாகியுள்ளது’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், 2 பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், “அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, குறிக்கிட்ட நீதிபதி, நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “அது உண்மை இல்லை என்பதால், புகார் முடிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிபதி, “ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?. அவர் தானே எல்லாவற்றிற்கும் காரணம்?. ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? முன் விரோதம் ஏதும் இருந்ததா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார்.
முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு விசாரித்துள்ளனர்.” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிரபு என்ற போலீஸ்காரரைத் தவிர மற்றவர்கள் அடித்ததாகவே கூறியிருக்கின்றனர். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, “வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனம் பதறுகிறது. ஏதுமில்லாத விசயத்துக்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம்.” என குறிப்பிட்டு விசாரணையை பிப்.17-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே - அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை
2 weeks 6 days ago
கொலையான அஜித்குமார் | கோப்புப் படம் கி.மகாராஜன் Updated on: 04 Feb 2026, 3:55 am மதுரை: ‘மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை. அஜித்குமாரின் மரணம் என்பது காவல் மரணமே என உறுதியாகியுள்ளது’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், 2 பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், “அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறிக்கிட்ட நீதிபதி, நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “அது உண்மை இல்லை என்பதால், புகார் முடிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, “ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?. அவர் தானே எல்லாவற்றிற்கும் காரணம்?. ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? முன் விரோதம் ஏதும் இருந்ததா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு விசாரித்துள்ளனர்.” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிரபு என்ற போலீஸ்காரரைத் தவிர மற்றவர்கள் அடித்ததாகவே கூறியிருக்கின்றனர். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, “வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனம் பதறுகிறது. ஏதுமில்லாத விசயத்துக்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம்.” என குறிப்பிட்டு விசாரணையை பிப்.17-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே - அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை
2 weeks 6 days ago
04 Feb, 2026 | 10:01 AM மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர். அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை,எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை,உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை | Virakesari.lk
2 weeks 6 days ago
04 Feb, 2026 | 10:01 AM

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது.
குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர்.
அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை,எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை,உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை | Virakesari.lk
2 weeks 6 days ago
04 Feb, 2026 | 10:34 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல் வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவசரமாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலம் மேலதிக சட்டவைத்திய விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, குறித்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி | Virakesari.lk
2 weeks 6 days ago
04 Feb, 2026 | 10:34 AM

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல் வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவசரமாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலம் மேலதிக சட்டவைத்திய விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக, குறித்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி | Virakesari.lk
2 weeks 6 days ago
கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! 04 Feb, 2026 | 03:28 PM இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (4) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி, பசுமைப் பூங்கா வரை ஊர்வலமாக சென்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோஷங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப் பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தியும், தமிழர் தாயகப் பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி, பதாதைகளைத் தாங்கியவாறு சென்றனர். அதேவேளை தமிழர்கள் இந்நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு "சிங்கக்கொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள்" எனக் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றபோது A9 பிரதான வீதியின் ஒருபக்க வழித்தடத்தில் வீதிப் போக்குவரத்து சிறிதுநேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! | Virakesari.lk
2 weeks 6 days ago
சாதாரண தமிழ் பொதுமக்கள் மட்டுமல்ல தேசிய தூண்களாக காட்டிக்கொண்ட பலரும் மகிழ்சசியாக வடகிழக்குகு மட்டுமல்ல தென்னிலங்கை சுற்றுலாவுக்கும் சென்று வந்ததை நானே பார்த்துள்ளேன் . ஏதோ சம்பந்தர் மட்டுமே மகிழ்சசியடைந்ததாக றீல் விடுகிறார்கள். 😂
2 weeks 6 days ago
04 Feb, 2026 | 03:44 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித தாதுக்கள் கொழும்பு கங்காராம விகாரைக்கு இன்று புதன்கிழமை (04) கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புனித தாதுக்கள் இன்று முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்தனர். இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. புனித தாதுக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன! | Virakesari.lk
2 weeks 6 days ago
04 Feb, 2026 | 03:44 PM

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித தாதுக்கள் கொழும்பு கங்காராம விகாரைக்கு இன்று புதன்கிழமை (04) கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த புனித தாதுக்கள் இன்று முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்தனர்.
இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


புனித தாதுக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன! | Virakesari.lk