Aggregator

“கெப்பெட்டிபொல பூதயா”வுடன் 18 பேர் கைது!

3 weeks 3 days ago

16 Oct, 2025 | 04:28 PM

image

பதுளை - கெப்பெட்டிபொல  பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட “கெப்பெட்டிபொல பூதயா” என்பவருடன் மேலும் 18 பேர் கெப்பெட்டிபொல  பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய கெப்பெட்டிபொல  பொலிஸாரால் நீண்ட நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளழனட அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஊவபரனகம மெதவெல பிரதேசத்தில் வசிக்கும் “கெப்பெட்டிபொல பூதயா” என்பவர் இரத்தினபுரியில் இருந்து ஹேரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டு வந்து ஈசி கேஸ் மூலம் பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“கெப்பெட்டிபொல பூதயா” என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய ஏனைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் கெப்பெட்டிபொல, ஹக்கல, பொரகஸ், நுவரெலியா, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 

சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்  இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியானது என  பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கெப்பெட்டிபொல பூதயா”வுடன் 18 பேர் கைது! | Virakesari.lk

யாழ். பருத்தித்துறை வாள் வெட்டுத் தாக்குதல் ; பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை கோரல்

3 weeks 3 days ago

16 Oct, 2025 | 04:55 PM

image

போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவின‌ரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரௌடிகள் தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ் நிலை காணப்படுகிறது. பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே கடத்தப்படுகிறது என்ற விடயம் தொடர்பாக விளக்கம் கோரினேன்.

பருத்தித்துறையில் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரினேன். இந்த விடயங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து விடயங்களை தெரிவிக்க உள்ளேன்.

பல விடயங்களில் பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் என மக்கள் எனக்கு தந்த முறைப்பாடுகளையும் தெரிவித்தேன் என தெரிவித்தார்.

யாழ். பருத்தித்துறை வாள் வெட்டுத் தாக்குதல் ; பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை கோரல் | Virakesari.lk

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது

3 weeks 3 days ago

16 Oct, 2025 | 05:05 PM

image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவதினமான இன்றையதினம் அதிகாலை சிறுமி வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். சிறுமியை தேடிய பெற்றோர் வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது | Virakesari.lk

'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

3 weeks 3 days ago

கார் விபத்து, சீட் பெல்ட், ஏர் பேக், கார் பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 16 அக்டோபர் 2025, 10:13 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கார் மோதி விபத்து ஏற்பட்டு ஏர் பேக் வெடித்ததில், முன் இருக்கையில் தந்தையின் மடியில் அமர்ந்திருந்த 7 வயது சிறுவன் காயங்களால் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வீராமுத்து. இவர் தனது 7 வயது மகன் கெவின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவருடன் வாடகை காரில் பழைய மகாபலிபுரம் சாலை வழியாக சென்னையை நோக்கி பயணித்துள்ளார்.

''திருப்போரூரைக் கடந்து சென்றபோது முன்னே சென்ற வாகனம் வலதுபுறம் திரும்ப உடனடியாக நின்றதால் பின்னே வந்த இவர்களின் கார் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் உள்ள ஏர் பேக் உடனடியாக வேலை செய்யவே முன்னே தந்தையின் மடியில் அமர்ந்திருந்த கெவினுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.'' என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

காவல்துறையினர் அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கெவின் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். முன்னே சென்ற வாகனத்தின் ஓட்டுநரான சுரேஷ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏர் பேக் பயன்பாடு, வாகனத்தில் சிறுவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்ல பாதுக்காப்பான முறைகள் பற்றி ஆட்டோமொபைல் துறை வல்லுநரான த முரளியிடம் பிபிசி பேசியது.

தற்போது இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான கார்களில் முன்புறம் இரண்டு, முன் இருக்கைக்கு பின் புறம் இரண்டு பக்கவாட்டில் இரண்டு என மொத்தம் 6 ஏர் பேக்குகள் இருக்கும் எனத் தெரிவிக்கிறார் முரளி.

ஏர் பேக் மற்றும் சீட் பெல்ட் சென்சார்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

சீட் பெல்டின் அவசியம்

கார் விபத்து, சீட் பெல்ட், ஏர் பேக், கார் பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஆட்டோமொபைல் துறையில், சீட் பெல்ட் மிகவும் முக்கியமான அம்சமாக இடம்பெறுகிறது. சீட் பெல்டின் அவசியம் கருதியதால்தான் அதற்கு காப்புரிமை பெறப்படவில்லை என்கிறார் முரளி

அமெரிக்காவில் 1987 முதல் 2017 வரையிலான 30 ஆண்டு காலத்தில் 50,457 உயிர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் பாதுகாக்கப்பட்டதாக அமெரிக்க போக்குவரத்துறை தெரிவிக்கிறது.

கார் என்று வருகையில் சீட் பெல்டும் ஏர் பேக்கும் இரு அவசியமான, இன்றியமையாத அம்சங்கள் எனக் கூறும் முரளி, "சீட் பெல்ட் அணிந்தால்தான் ஏர் பேக் சரியாக வேலை செய்யும்." என்றார்.

ஏர் பேக்கிற்கு முந்தைய முதல் கட்ட பாதுகாப்பு சீட் பெல்ட்தான் என்கிறார் முரளி

"கார் திடீரென இடது அல்லது வலது புறம் திரும்பினாலோ அல்லது மெதுவாக எங்காவது மோதினாலோ ஏர் பேக் வேலை செய்யாது. தீவிர விபத்துகளின்போது ஏர் பேக் உடனடியாக வெளிவரும். அத்தகைய சூழல்களில் சீட் பெல்ட்தான் முதல் கட்ட பாதுகாப்பு." என்றார்.

ஏர் பேக் எப்போது வேலை செய்யும்?

வாகனம் நேராக மோதினால் முன் பக்கம் உள்ள நான்கு ஏர் பேக் மட்டுமே திறக்கும். பக்கவாட்டில் மோதினாலோ அல்லது வாகனம் தடம் புரண்டாலோ தான் பக்கவாட்டில் உள்ள ஏர் பேக் திறக்கும்.

"வாகனம் விபத்துக்கு உள்ளாகிறபோது உடல் முன்னே தள்ளப்படும். அப்போது சீட் பெல்ட் தான் உடனடியாக உடலை பின்னுக்கு இழுக்கும். ஏர் பேக்கும் மைக்ரோ நொடிகளில் திறந்துவிடும். அப்போது உடல் பின்னே இருக்க வேண்டும், இல்லையென்றால் ஏர் பேக்கால் பலன் இருக்காது." எனத் தெரிவித்தார்.

இருக்கையில் உள்ள ஹெட் ரெஸ்டை நீக்கக்கூடாது எனக் கூறும் அவர் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

"தற்போது பலரும் ஹெட் ரெஸ்டை நீக்கிவிட்டு பயணிக்கின்றனர். முன் இருக்கையில் தான் தாக்கம் அதிகமாக இருக்கும். உடல் முன்னே சென்று பின்னுக்கு வருவது, ஏர் பேக் திறப்பது என அனைத்துமே சில மைக்ரோ விநாடி இடைவெளியில் நடக்கக்கூடியவை. உடல் இருக்கையில் பின் வந்துமோதுகிறபோது ஹெட் ரெஸ்ட் இல்லையென்றால் முதுகெலும்பு உடைந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது." எனத் தெரிவித்தார்.

கார் விபத்து, சீட் பெல்ட், ஏர் பேக், கார் பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

குழந்தைகளுக்கு உள்ள கட்டுப்பாடு என்ன?

குழந்தைகள், அவர்களுக்கு என்ன வயது என்றாலும் நாம் செய்யக்கூடாத முதல் விஷயம் மடியில் அமர வைத்து பயணிப்பதுதான் என்கிறார் முரளி.

மேலும் "குழந்தைகளை பின் இருக்கையில்தான் அமர வைக்க வேண்டும்." என்றார்.

"உயிரைப் பாதுகாக்கும் ஏர் பேக்காலும் காயங்கள் ஏற்படும். உரிய இடைவெளியில் அமர்ந்திருந்தால்தான் ஏர் பேக் பயனுள்ளதாக இருக்கும்." என்றும் தெரிவித்தார் முரளி.

சிறுவயதுள்ள குழந்தைகளுக்கு என ஐசோபிக்ஸ் என்கிற பிரத்யேக இருக்கை இருக்கிறது. இதனை பின் இருக்கையில் பொருத்திக் கொள்ள முடியும். அதை நிறுவி, குழந்தைகளை அதில் அமர்த்தி முறையாக சீட் பெல்ட் அணிந்தால் தான் ஏர் பேக் வேலை செய்யும் என்கிறார் முரளி.

கார் விபத்து, சீட் பெல்ட், ஏர் பேக், கார் பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

பின் இருக்கையிலும் குழந்தைகளை மடியில் அமர வைக்கக்கூடாது எனக் கூறும் முரளி அந்தச் சூழலில் ஏர் பேக் குழந்தைகளுக்கு கிடைக்காது. வாகனம் மோதுகிற வேகத்தில் அவர்கள் தூக்கி வீசப்படுவார்கள். குழந்தைகளாக இருந்தாலும் சீட் பெல்ட் அணிந்து இருக்கையில் அமர்த்தி பயணிப்பது தான் பாதுகாப்பானது எனத் தெரிவித்தார்.

"முன்னர் கார்களில் 4 சீட் பெல்ட் மட்டுமே இருக்கும். தற்போது விதிகள் கடுமையாக்கப்பட்டு அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் இடம்பெறுகிறது. அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

வாகனங்களில் பம்பர்களை தவிர்க்க வேண்டும் எனக் கூறும் முரளி, "வாகனம் அதிர்வை உணர்ந்தால் தான் ஏர் பேக் திறக்கும். பம்பர் மாற்றினால் ஏர் பேக் திறக்காது. அது மிகவும் ஆபத்தானது." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq83xw8g72no

தாமும் பாதிக்கப்பட்டதாகக் கூறும் ஜனாதிபதி நாம் நிராகரித்த பொறிமுறையையே பலப்படுத்துகிறார்; வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா அதிகாரிகளிடம் கடும் அதிருப்தி

3 weeks 3 days ago

15 Oct, 2025 | 03:07 PM

image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்படல்களால் தாமும் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் எம்மை சந்தித்து எமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை. மாறாக நாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரி மற்றும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக ஐ.நாவின் கிளை அமைப்புக்களில் ஒன்றான வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செப்டெம்பர் 26 - 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி மற்றும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் சர்வதேச மன்னிப்புச்சபையினாலும், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிங்களப்பெண்கள் இருவர் மற்றும் தமிழ் பெண்கள் இருவர் என மொத்தமாக நால்வர் சுவிஸ்லாந்து தூதரகத்தினாலும் ஜெனிவாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அதன்படி மேற்கூறப்பட்டவாறு இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு முன்னைய தினம் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையில் இருந்து சென்ற பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது மறுநாள் இலங்கை அரசாங்கத்திடம் கேட்கப்படவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருதும் கேள்விகள் தொடர்பில் ஐ.நா அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டனர்.

அவ்வதிகாரிகளிடம் தம்மால் முன்வைக்கப்பட்ட பல கேள்விகள் மறுநாள் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான குழுவினரிடம் வினவப்பட்டதாக சுட்டிக்காட்டிய லீலாதேவி, இருப்பினும் இறுதிக்கட்டப்போரின்போது படையினரிடம் சரணடைந்தோரின் பெயர்ப்பட்டியல் மற்றும் குறிப்பாக பலர் சரணடைந்த 4 இடங்களுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தல் என்பன தொடர்பில் தாம் முன்மொழிந்த கேள்வி அரசாங்கத்திடம் கேட்கப்படாமை தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளை மேற்குறிப்பிட்ட கூட்டத்துக்கு அப்பால், பாதிக்கப்பட்ட தரப்பினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலக அதிகாரியையும், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் என்ற ரீதியில் தமது கோரிக்கைகள், உள்ளகப்பொறிமுறை மீதான நம்பிக்கை இழப்பு மற்றும் தற்போதைய அரசாங்கம் இவ்விவகாரத்தைக் கையாளும் விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.

அதுமாத்திரமன்றி தாமும் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் தம்மை சந்தித்து தமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை எனவும், மாறாக தாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் எனவும் அவ்வதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

https://www.virakesari.lk/article/227800

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

3 weeks 3 days ago
🔴 தெற்கு கடலில் போதைப்பொருளுக்கான வேட்டை - பல கிலோ கண்டுபிடிப்பு! தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கி.கி போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 670 கி.கி ஐஸ் (Ice), 156 கி.கி ஹெரோயின் (Heroin), 12 கி.கி ஹஷீஷ் (Hashish) என்பன அடங்குகின்றன. தெற்கு கடலில் மிதந்து வந்த நிலையில் நேற்று (14) சுமார் 51 பொதிகள் மீட்கப்பட்டன. இந்தப் பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன. 3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்தனர். இவை உனாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த செப்டெம்பர் மாத தொடக்கத்தில், 3 படகுகள் மூலம் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் VMS (Vessel Monitoring System) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்ட போதிலும், இந்த 3 படகுகள் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இந்தப் பொதிகள் சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்குப் பேசிய பாதுகாப்பு பிரதியமைச்சர், பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டின் எதிர்கால சந்ததியினரை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் ஒன்றாக இணைந்து செயல்படும் தேசிய நடவடிக்கை’ மற்றும் இந்த போதைப்பொருளை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும், கடல் வழிகள் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுக்க, பரந்த கடல் எல்லையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை கடற்படை ஆற்றிய முக்கிய பங்கைப் பாராட்டிய பாதுகாப்பு பிரதியமைச்சர், நாட்டில் போதைப்பொருள் பரவுவதை ஒரு தேசிய அச்சுறுத்தலாக அரசாங்கம் கருதுவதாகவும், போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு பொதுமக்களின் பெரும் ஆதரவு இருப்பதாகவும், பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் நடவடிக்கைகளின் வெற்றிக்கு பெரும் பலம் என்றும், அதற்காக பொதுமக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தேசிய பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் உள்ளிட்ட எந்தவொரு சட்டவிரோத பொருட்களையும் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு வர வாய்ப்பில்லை என்றும், மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, அதை ஆதரிப்பது அல்லது அதை உருவாக்குவது போன்ற எந்தவொரு முயற்சியும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது என்றும், அத்தகைய கடத்தலை அடக்குவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்துடன் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மேலும் வலியுறுத்தினார். Vaanam.lk

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 3 days ago
வ‌ங்கிளாதேஸ் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிராக‌ சிற‌ப்பாக‌ விளையாடின‌வை , அவுஸ்ரேலியாவுக்கு எதிரா ந‌ல்ல‌ ஸ்கோர் அடிக்க‌ மாட்டின‌ம் போல் தெரியுது...........................

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'

3 weeks 3 days ago
உங்கள் எழுத்துக்கு நன்றிகள்.நேரம் கிடைக்கும் போது வாசிக்கலாம் என்று உள்ளேன்

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 weeks 3 days ago
அதில் ராஜபக்ச குடுப்பதில் எத்தனை பேருக்கு தொடர்பு? யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! சுமந்திரனின் விசிறிகள் கட்டியம் சொல்கின்றனர்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 weeks 3 days ago
🛑கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட பின்னர் 3 மாதங்களாக பல இடங்களில் பதுங்கியிருந்தேன் 🛑மத்துகமவில் மாத்திரம் ஒன்றரை மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்தேன் 🛑மாத்தறையிலும் தங்கியிருந்த பின்பு, படகில் இந்தியாவிற்கு சென்றேன் 🛑கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, கெஹெல்பத்தர பத்மேவின் கூற்றுப்படி எடுத்துச் சென்றேன். (இஷாரா செவ்வந்தியின் வாக்கு மூலம்) ################ ############## கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட முன், நிதி வசதியில்லாத பெண் ஒருவருக்கு பண உதவி செய்ததாகவும், சஞ்சீவ கொலையின் போது நீதிமன்றத்திற்கு சென்ற தன்னை, உண்மையான வழக்கறிஞர் என எண்ணிய பெண் தன்னை வழக்கு ஒன்றை வாதாட அழைத்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். “கணேமுல்ல சஞ்சீவவை சுட கமாண்டோ சலிந்துவுடன் நீதிமன்றத்திற்கு வந்தபோது, வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் இருந்தேன். அங்கு வந்த மிகவும் உதவியற்ற தோற்றமுடைய ஒரு பெண் என்னிடம் பேசினார். நான் ஒரு வழக்கறிஞர் என்று அவர் நினைத்தார். அந்தப் பெண்ணின் கணவர் அவரை மோசமாக அடிப்பதாகவும் வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். தன்னிடம் ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது. அந்தத் தொகைக்கு வழக்கில் வாதாட முடியுமா எனவும் குறித்த பெண் தன்னிடம் கேட்டதாக செவ்வந்தி தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் வேறொரு வழக்கிறக்காக வாதாடவுள்ளதாக கூறினேன். அதனால் நான் அந்த பெண்ணின் வழக்கை அங்கிருந்த மற்றுமொரு பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, என் பார்வையில் இருந்த மற்றொரு பெண் வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றேன். அந்தப் பெண் வழக்கறிஞரிடம் சென்று தனது கதையைச் சொன்னார். வழக்கில் முன்னிலையாக 2000 ரூபாய் கேட்டார். அந்த பெண் மிகவும் உதவியற்றவராக என்னைப் பார்த்தார். நான் அவரை அறையிலிருந்து வெளியே அழைத்து, என்னிடம் இருந்த 5000 ரூபாயை கொடுத்து, அந்தப் பெண் சட்டத்தரணியை வழக்கில் வாதாட அழைக்குமாறு கோரினேன். அந்த பெண் என் கைகளைப் பிடித்து, வணங்கி பணத்தை பெற்றுக் கொண்டார்” என இஷாரா செவ்வந்தி குறிப்பிட்டுள்ளார். Jaffna Muslim ·

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 weeks 3 days ago
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுவினரின் கைதும் பின்னணியும்! காத்மாண்டுவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களை நேபாளம் நாடு கடத்தியுள்ளதாக The Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது. நேபாள காவல்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காத்மாண்டு மற்றும் பக்தபூர் முழுவதும் வாடகை வீடுகளில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (15) நாடு கடத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. அந்த செய்திச் சேவையின் தகவலின்படி, இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே ( வயது 26), ஜீவதாசன் கனகராசா ( வயது 33), தக்ஷி நந்தகுமார் (23), தினேஷ் ஷியமந்த டி சில்வா (49), கெனடி பஸ்தியம்பிள்ளை ( வயது 35), மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே ( வயது 43) ஆகியோரே நாடு கடத்தப்பட்டவர்கள் என சிரேஷ்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2025 பிப்ரவரி 19 அன்று கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இந்த அறிவிப்பு நேபாளம் உள்ளிட்ட இன்டர்போல் உறுப்பு நாடுகளை அவரது நடமாட்டங்களைக் கண்காணிக்கத் தூண்டியது. காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த வழக்கு குறித்து குறிப்பாக கவலை தெரிவித்ததாக நேபாள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, நக்சலில் உள்ள நேபாள காவல்துறை தலைமையகத்தில் உள்ள இன்டர்போல் தேசிய மத்திய பணியகம், சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது என்று அந்த அதிகாரி கூறினார். காவல்துறை விசாரணையில், ஆறு பேரும் மலேசியா மற்றும் துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ள இலங்கை குற்றவியல் அமைப்பான கெஹல்பத்தர பத்மே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. ஆகஸ்ட் 25 அன்று இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பத்மேவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பையும் பிறப்பித்திருந்தது. சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் பத்மே தான் மூளையாக செயல்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேக நபர்கள் பல வாரங்களாக நேபாளத்தில் இரகசியமாக வசித்து வந்ததும், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி, இந்திய குடிமக்கள் என்று அவர்கள் கூறிக் கொண்டதும் கண்டறியப்பட்டது. அவர்களில் இருவர் விமானம் மூலம் நேபாளத்திற்குள் நுழைந்ததாகவும், மற்றவர்கள் இந்தியாவிலிருந்து தரை வழியாக எல்லையைத் தாண்டியதாகவும் நம்பப்படுகிறது. சந்தேக நபர்கள் யாரும் நேபாளத்தில் குற்றங்களைச் செய்யவில்லை என்பதால், நேபாள சட்டத்தின்படி அவர்களை நாடு கடத்துவதற்கு வசதியாக அதிகாரிகள் குடிவரவுத் துறையுடன் ஒருங்கிணைந்தனர். சிரேஷ்ட குடிவரவு அதிகாரி ஒருவர், சட்டத் தேவைகளின்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மேற்பார்வையின் கீழ் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். இலங்கை பாதாள உலக நபர்கள் நேபாளத்தில் தஞ்சம் புகுந்தது போன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை என்று இன்டர்போல் அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும் அவர்கள் விரைவாக நாடுகடத்தப்படுவதை உறுதி செய்வதில் நேபாள காவல்துறைக்கும் இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமாக அமைந்ததாகவும் – தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1450514

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 weeks 3 days ago
போதை மாஃபியாக்கள் தினமும் கைதாக... நாமல் ராஜபக்சவுக்கு கெடி கலக்கமாக உள்ளது. போதைக் கும்பலில் 40 பேர் குறி வைக்கப் பட்டிருந்தவர்கள். அதில் 18 பேர் வரையே இதுவரை கைது செய்யப் பட்டுள்ளார்கள். இன்னும் 22 பேர் தலைமறைவாகி உள்ளார்களாம்.

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

3 weeks 3 days ago
இதற்க்கு மேல என்ன விளக்கம் வேணும் இல்லை இவங்களோட மிக அவதானமாக இருக்க வேணும். உவையிண்டை வரலாற்றை தெரியும் தாணே.