Aggregator

தமிழீழ பாடல்கள்

4 weeks 2 days ago
சின்னப்பூவே சின்னப்பூவே பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரை பாடியவர்: பிறின்சி ரஞ்சித்குமார் இசை: தமிழீழ இசைக்குழு இறுவட்டு: தேசத்தின் புயல்கள் - 02 பல்லவி சின்னப்பூவே சின்னப்பூவே உன்னில் ஏனோ சோகம் - எட்டுத் திசையும் வீசும் காற்றே உந்தன் கண்ணில் ஏனோ ஈரம் அனுபல்லவி தம்பி சுபேசனை நினைத்தீரோ மங்கை தனாவுடன் சென்றதற்கழுதீரோ சரணங்கள் சீனன்குடாவுக்குள் சென்று வானூர்தியைத் தீயிட்டு எரித்த கரும்புலிகள் - பின்னர் ஆனையிறவுக்குள் போன பொழுதிலும் வீரம் விளைத்த பெரும்புயல்கள் வேரைத் தறித்தெங்கள் ஊரை எரித்தவர் வீட்டைக் கொளுத்திய வீரர் இவர் - தமிழ் வீரம் பணிந்தெவர் காலும் விழாதெனப் பாடலிசைத்த குயில்கள் இவர் ஒன்றுக்குள் ஒன்றான அன்புக்குள் ஆடியே பாடி மகிழ்ந்தவர் நாங்களம்மா - பகை வென்றிடச் சென்றவர் வீடு வரவில்லை வெந்து மடிகிறோம் நாங்களம்மா

கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை"

4 weeks 2 days ago
கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 04 ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா பற்றி பல கதைகள் வாசித்த நாளில் இருந்து, எப்படியும் அவர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தது. நாட்டியத்தில் சிறந்து விளங்கும், அழகான ஊர்வசி, ஹிமாலயத்தின் மகள் மற்றும் சக்திவாய்ந்த, மயக்கும் மேனகா, இந்து தொன்மவியலில், அழகின் அடையாளமாக கருதப்படும், தெய்வீக ரம்பா மற்றும் பிரம்மனால் உருவாக்கப்பட்ட, திகைப்பூட்டும் திலோத்தமா என்ற ஒரு எண்ணம் தான் என் மனதில் இருந்தது. அது சரியா பிழையா, இன்றுதான் அதை முடிவு செய்யப் போகிறேன். நான் என் மனையாளை, நேரத்துக்கு தகுந்தவாறு ' ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா' என்று கூப்பிட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது. இந்த அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் உண்டு. அப்ஜம் என்றால் தாமரை. சரஸ் என்றால் தடாகம், குளம் என்று பொருள். அப்சரஸ் என்றால் தடாகத்தில் தோன்றிய தாமரை எவ்வளவு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்குமோ அவ்வளவு அழகு நிரம்பியவர்கள் அரம்பையர்கள் ஆவர். ரம்பை தான் இவர்களின் தலைவியாக கூறப்படுகிறாள். இவர்கள் தங்களுக்கென்று ஓர் இடம் வேண்டும் எனவும், தாங்கள் என்றும் இளமை மாறாமல் இருக்க வேண்டும் எனவும் சிவனிடம் வரம் வேண்ட, அவரும் அவ்வரங்களை அளித்து, அவர்களுக்காக "அப்சரஸ்' எனும் லோகத்தையும் உருவாக்கி கொடுத்தார் என்று யாழ் மத்திய கல்லூரியில் படித்தது ஞாபகம் வந்தது. அது போகட்டும், முதலில் எங்கே இசை எங்கே ஓடி விட்டான் என்று பார்க்க வேண்டும் என்று துடித்தேன். உடனடியாக தேடிப்பார்க்க ஒரு டாக்ஸி தேடினேன், அங்கு அப்படி ஒன்றும் நான் காணவில்லை. அப்பத்தான் எனக்கு தெரிந்தது, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானையும் இருக்கிறது என்று. நான் யானையை வரவழைத்து, என்னுடன் நாரதரையும் அழைத்துக் கொண்டு அங்கு இசையைத் தேடத் தொடங்கினோம். கொஞ்ச தூரத்தில் விநாயகர் எலிகள் புடைசூழ, வயிறை தடவி, தடவி, மோதகம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். ஒரு மூலையில் முருகன் மயிலில் இருந்து இறங்கி, வள்ளியுடன் உலாவிக் கொண்டு இருந்தார். நாம் கிட்ட போனோம். இசை ஒரு எலியை கையில் பிடித்து வைத்துக் கொண்டு ரட் [Rat] ரட் என்று துள்ளி துள்ளி சொல்லியபடி, மயிலின் ஒரு இறகை பிடுங்கிக் கொண்டு இருந்தான். எங்களை கண்டதும், கையில் இருந்த எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, எலிபான்ட் [elephant] எலிபான்ட் என்று ஓடி வந்தான். நான் பின் இசையுடன் மண்டபத்துக்குள் நுழைந்தேன். வாசலில் நின்ற காவலாளி, நாரதர் கலகம் செய்வார் என்று உள்ளே விடவில்லை. அங்கு அழகான ஊர்வசி, மயக்கும் மேனகா, தெய்வீக ரம்பா மற்றும் திகைப்பூட்டும் திலோத்தமா என நால்வரும் இந்திரன், பிரேமா விஸ்ணுவுடன் நின்றனர். சிவனும் பார்வதியும் தங்கள் முழு குடும்பத்துடன் வந்ததும் இரவு நடனம் ஆரம்பிக்கும் என்று அறிவித்தனர். அரம்பையர்கள் தேவலோகத்தில் மொத்தம் 60,000 பேர் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. என்றாலும் இது ஒரு தனிப்பட்ட ஒழுங்கு என்பதால், தேர்ந்து எடுக்கப்பட்ட சிலரை மட்டும் அங்கு உள்ளே வர அனுமதித்தனர். அவர்களில் கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை ஆகிய மூவரும் எங்களை வரவேற்று, முன் வரிசைக்கு அழைத்து சென்றனர். இசைக்கு கொஞ்சம் உயர்ந்த இருக்கை கொடுக்கப்பட்டது. நால்வரின் அசைவுகள் பண்டைய கதைகளைச் சொன்னது - அன்பு மற்றும் ஏக்கம், தைரியம் மற்றும் தியாகம். "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர", என்ற விதியின் படி அப்படியே இருந்தது. அதுமட்டும் அல்ல, 'பண்வழி நடக்கும் பாட்டின் போக்கும், பாட்டின் வழியே தாளம் பயிலும், தாள வழியே காலடி தட்டும்' பண்ணின் சிறப்பினைப் பாடலும், பாடலின் போக்கைத் தாளமும், தாளத்தின் அமைப்பில் ஆடலும் இணைந்து சிறந்து அங்கு விளங்கியது. கை, கால், உடலசைவுகளுக்கு மட்டுமின்றி மன உணர்ச்சிக்கும் அங்கு வேளை இருந்தது. "பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் " என்பது போல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினார் நால்வரும்! ‘அகம் உயிர் ஆகச் சுவை உளம் ஆக இழை உடல் ஆக இயல்வது கூத்து’, என்பதை நான் முற்றிலும் அங்கு கண்டேன் ! நீரானவா நிலமானவா விண்ணானவா காற்றானவா ஒளியானவா உயிரினவா பிரபஞ்சத்தை ஆளும் முழுமுதற்க் கடவுளே! நீயே உயிர்கெல்லாம் முதலானவன் எல்லா உலகத்துக்கும் உறவானவன் உயிர்கள் கூடி தாளம்போடும் இசையானவன் எம்மை எந்நாளும் தொடர்கின்ற நிழலானவன் நதியில் நீராகி நிலவெல்லாம் ஒளியாகி பனியில் துளியாகும் இறையானவா புவியில் திறனாகி உயிரெல்லாம் கருவாகி காற்றில் அசைந்தாடும் நிறைவானவா வரம் வேண்டியே உனைப் பாடினோம் சத்தியம் வாழவே நாம் மகிழ்ந்தாடினோம் ! சலங்கை ஒலியாக சரிந்தாடும் மயிலாக தாளத்தின் உயிராக நாம் நடமாடினோம் சபையில் இனிதாக இதம்தேடும் முகமாக இதயம் கலந்தோரை நாம் புகழ்ந்தாடினோம்! இசை தனது மகிழ்ச்சியில் தனது சிறிய கைகளைத் தட்டினார். என்னுடைய இதயமும் மீண்டும் இளமையாக மாறியது போல உணர்ந்தேன். என் கால்கள் என்னை அறியாமலே தாளங்களுக்கு ஒத்ததாக கால்களைத் தட்டியது. நடனத்திற்குப் பிறகு, நாங்கள் நான்கு அப்சரஸ்களுடன் இறுதி இரவு உணவைப் பகிர்ந்து கொண்டோம் - அமிர்தத்தில் தோய்த்த பழங்கள், மணம் கொண்ட பிரியாணி மற்றும் முத்துக்கள் போல ஒளிரும் பால். ரம்பா மிக அருகில் வந்து, சிரித்துக்கொண்டே, “கந்தையா தில்லை, நீ இனி பூமி போக வேண்டும். வரலாற்றில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேச பூமிக்கு உன்னைப் போன்ற எழுத்தாளர் தேவை” என்றாள். ஊர்வசி இசையிடம் சாய்ந்து, “மழலையே , உன் புன்னகையால் அன்பு மற்றும் உறவு பாலங்களைக் கட்டுவாய்” என்று கிசுகிசுத்தாள். திலோத்தமா அடி மேல் அடி எடுத்து வந்து இசைக்கு திகைப்பூட்டி விளையாட தொடங்கினாள். அந்த இடைவெளியில், தன் அழகு, கவர்ச்சி, இளமை மூன்றையும் கலந்து எடுத்து, மேனகா எனக்கு ஒரு மயக்கம் தந்தாள்!. நல்ல காலம், அங்கே திடீரென புத்தர் வந்தார். அவர் கொஞ்சம் சத்தமாக ' ஒரு மனிதன் பெண்களிடம் கொள்ளும் காம ஆசை இருக்கும் வரை, அவன் மனம் வாழ்க்கையை பற்றிக் கொண்டிருக்கும். அவாவின் விலங்குகளில் கட்டுண்டு மக்கள் நெடுங்காலம் துயரத்தை அனுபவிக்கிறார்கள்' என்று கூறிக் கொண்டு என்னிடம் வந்தார். நானும் மயக்கத்தில் இருந்து விழித்து என்னை அறிந்தேன். அப்சரஸ் நால்வரும் உடனடியாக மிதந்து மெதுவாக மறைந்தனர். அவர்களுடன் சேர்ந்து மேகங்களும் மறைந்தன. தங்க ஒளி மங்கியது. காலை சூரிய ஒளி படுக்கையறைக்குள் பாய்ந்தது. கதவில் யாரோ தட்டும் ஒலி காதில் கேட்டது. ஒருவேளை மேனகா திரும்பி வந்தாளா என்ற ஒரு நற்பாசையில், மெல்ல எழுந்து போய் கதவைத் திறந்தேன். "அப்பா, எழுந்திரு! வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இசையை டேகேர்ல [Daycare] விடணும்" மூத்த மகளின் குரல் கேட்டது. நான் கண்டும் காணாதது போல் மௌனமாக இருந்தேன். இசை இன்னும் மடியில் சுருண்டு, தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தார். எனக்குள் இன்னும் எதோ ஒரு குழப்பம், "அது ஒரு கனவா? அல்லது மறுபக்கத்திலிருந்து வந்த ஒரு நினைவா?" இசை விழித்தெழுந்ததும், மேலே பார்த்து மெதுவாகச் சொன்னான், "தாத்தா, அடுத்த கோடையிலும் நாம் சொர்க்கத்திற்கு போகலாமா?" நான் சிரித்து, அவனது நெற்றியில் முத்தமிட்டு, "நிச்சயமாக, என் குட்டி நட்சத்திரமே. ஆனால் இன்று நீங்கள் உங்கள் காலை உணவை மிச்சம் விடாமல் முடித்துவிட்டால் மட்டுமே" என்றேன். வானத்திற்கு அப்பால் ஒரு அசாதாரண விடுமுறைக்குப் பிறகு, ஒட்டாவாவில் மீண்டும் மற்றொரு சாதாரண நாள் தொடங்கியது! புளுகிவிட்டான் சொர்க்கம் நரகம் என்று புராண கதையும் ஏமாற்ற இயற்றிவிட்டான் புற்றுநோய் போல் அது பரவி புரியாத எம்மை வலைக்குள் வீழ்த்திவிட்டது! நீச செயல்களை என்றும் செய்யாது நீதி செய்தால் உலகம் வரவேற்கும் நீங்காமல் உன்புகழ் இங்கு நிலைக்கும் நீர்க்குமிழி வாழ்க்கைக்கும் பெருமை சேர்க்கும்! புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே முற்பிறவியில் எவனோ செய்த கர்மாவுக்கு இப்பிறவியில் உனக்கு தண்டனை வேடிக்கையே! மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது மதிக்கப் படுகிறாய் போற்றப் படுகிறாய் மகிழ்ச்சியும் இன்பமும் அங்கே பிறக்கிறது மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் முடிவுற்றது https://www.facebook.com/share/p/17BGSH5dok/?mibextid=wwXIfr

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 2 days ago
வவுனியாவில் 2003ம் ஆண்டு கட்டப்பட்ட பொங்கு தமிழ் எழுச்சி விழா நினைவுத்தூண் 23/03/2003 "கட்டுமானப் பணியின் போது" 24/03/2009 திறப்பின் போது

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 2 days ago
பொங்கு தமிழ்ச் சாற்றாணை நினைவுத்தூண் பொங்குதமிழ் கோரிக்கைகள் சாற்றாணைப் படுத்தப்பட்ட போது அதன் நினைவாக ஒரு நினைவுப்பலகை சனவரி 2001 இல் இவ்விடத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் அதை மேம்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நினைவுத்தூண் ஒன்று செப்டெம்பர் 17, 2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் அவர்கள் இதனைத் திறந்து வைத்தார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீட முன்றலில் அமைந்துள்ளது. "தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம்" ஆகிய மூலாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கியதான வட்டுக்கோட்டை தீர்மானமான புலிகளின் கொள்கைகளே பொங்கு தமிழின் கோரிக்கைகள் ஆகும். கீழுள்ளதுதான் பழைய நினைவுப்பலகை ஆகும். உந்தப் பழைய நினைவுப் பலகை தற்போதும் அங்குள்ளதாம். இது 2005ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images

4 weeks 2 days ago
கிருஷ்ணா வைகுந்தவாசன் தமிழீழம் தொடர்பில் முதன் முதலில் ஐநாவில் பேசியவர். Video: https://eelam.tv/watch/krishna-vaikunthavasan-speech-at-un-1978_yArZXB2383FPb9h.html இவரது நூல்கள்: https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%87.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

4 weeks 2 days ago
புலிகளிடத்தில் செஸ்னா ஸ்கைமாஸ்டர் வகை வானூர்திகள் இருப்பதாகவும் அவை இரணைமடு, எழிலன்புரம் வான்பரப்பில் பறந்ததை அவ்வூர் மக்கள் கண்டதாக ஆசிய ரிபியூன் என்ற புலி எதிர்ப்பு இணையம் 2006ம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. இதே வலைத்தளம் 2006இல் புலிகளிடம் இரு Zlin z 143 உள்ளதாக செய்தி வெளியிட்டு அது பின்னாளில் மெய்மையாகிய செய்தி குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 2 days ago
ரணிலின் புண்ணியத்தினால் பார் லைசன்ஸ் எடுத்து பினாமிகளை வைத்து பார் நடாத்தி செல்வந்தராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடாளுமன்றில் ரணிலின் சிறப்புரிமை மீறல் குறித்து குரல்கொடுக்க வேண்டும். மக்களின் வயிற்றில் அடித்ததுதான் போகட்டும், கடைசி செஞ்சோற்றுக்கடன் செய்த புண்ணியமாவது கிடைக்கும்! 😁

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

4 weeks 2 days ago
தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Published By: Vishnu 23 Aug, 2025 | 12:52 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காணிகள் விடுவிப்பு,காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதியாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவது உறுதி. அந்த வகையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு , இரண்டு மாதங்களுக்குள் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அரசியல் கைதிகள் விடுதலை போன்றவை தொடர்பிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் அதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கும்போதும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாகியிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று நேற்றைய பிரச்சினையல்ல. அது காலங்காலமாக புரையோடிப் போயுள்ள பிரச்சினையாகும். அதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது ஒரு சிலர் கூறுவது போல இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் கேள்விக் குறியாகி இருக்கின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பில் பாகுபாடுகள் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி யுள்ளது. 1981 ஆம் ஆண்டு நாட்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ் மாவட்டத்தில் 8 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்துள்ளார்கள். அந்த நிலை தொடர்ந்திருக்குமானால் இன்று 16, 18இலட்சம் மக்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள். தற்போது அங்கு ஆறு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதே வேதனைக்குரிய விடயம். அன்று 11 பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்போது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள். அடுத்து அதுவும் குறைவடையலாம். அந்த வகையில் அரசியல் ரீதியான இருப்பும் கேள்விக் குறியாகியுள்ளது. அந்த மக்களின் வெளியேற்றமே இந்த கேள்விக்குறிக்கான காரணம். கடந்த யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். அதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். இதன் மூலமே பல்லாயிரக்கணக்கான மக்கள் இழக்கப்பட்டுள்ளார்கள். இப்போதும் மாணவர்கள், புத்திஜீவிகள் அங்கிருந்து வெளியேறும் மனநிலை அதிகரித்திருக்கின்றது. ஒரு காலத்தில் கல்வி ரீதியில் பெரும் முன்னேற்றமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்கியது. எனினும் கடந்த 10 வருடங்களைப் பார்க்கும் போது கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையே காணப்படுகிறது. இம்முறை அது ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளது. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் ஆற்றப்படவில்லை. அதன் காரணமாகவே இவ்வாறான ஒரு பிரேரணையை ஸ்ரீதரன் எம்பி சபையில் முன் வைத்துள்ளார். இவ்வாறு மக்கள் வெளியேறுவார்களானால் இன்னும் சில காலங்களில் மக்கள் இல்லாத யாழ்ப்பாணமே இருக்கும். இந்த நிலைமையில் இருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் சிந்திக்கின்றோம். அதற்காகவே அரசாங்கம் வடக்கிற்கான துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அந்த வகையில் பல திட்டங்கள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று தொழில்பேட்டைகளை அங்கு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை, பரந்தன்,மாங்குளம் பகுதிகளில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விமான நிலையம் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கை தரும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களையே எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இழக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழவேண்டும். அதன் பின்னரே சுய நிர்ணய உரிமைக்காக போராடுவதா அல்லது தனி நாட்டுக்காக போராடுவதா என்பதை தீர்மானிக்க முடியும். அவர்கள் இலங்கையில் வாழுகின்ற மனநிலையை உருவாக்குவது அவசியமாகும் என்றார். https://www.virakesari.lk/article/223146

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

4 weeks 2 days ago

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Published By: Vishnu

23 Aug, 2025 | 12:52 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

காணிகள் விடுவிப்பு,காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதியாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும்   தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம்  தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவது உறுதி. அந்த வகையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு , இரண்டு மாதங்களுக்குள் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அரசியல் கைதிகள் விடுதலை போன்றவை தொடர்பிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் அதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கும்போதும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாகியிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று நேற்றைய பிரச்சினையல்ல. அது காலங்காலமாக புரையோடிப் போயுள்ள பிரச்சினையாகும்.

அதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது ஒரு சிலர் கூறுவது போல இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் கேள்விக் குறியாகி இருக்கின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பில் பாகுபாடுகள் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி யுள்ளது.

 1981 ஆம் ஆண்டு நாட்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ் மாவட்டத்தில் 8 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்துள்ளார்கள். அந்த நிலை தொடர்ந்திருக்குமானால் இன்று 16, 18இலட்சம்  மக்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள். 

தற்போது அங்கு ஆறு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதே வேதனைக்குரிய விடயம். அன்று 11 பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்போது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள். அடுத்து அதுவும் குறைவடையலாம். அந்த வகையில் அரசியல் ரீதியான இருப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.

அந்த  மக்களின் வெளியேற்றமே இந்த கேள்விக்குறிக்கான காரணம். கடந்த யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். அதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். இதன் மூலமே பல்லாயிரக்கணக்கான மக்கள் இழக்கப்பட்டுள்ளார்கள். 

இப்போதும் மாணவர்கள், புத்திஜீவிகள் அங்கிருந்து வெளியேறும் மனநிலை அதிகரித்திருக்கின்றது.

ஒரு காலத்தில் கல்வி ரீதியில் பெரும்  முன்னேற்றமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்கியது. எனினும் கடந்த 10 வருடங்களைப் பார்க்கும் போது கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையே காணப்படுகிறது. இம்முறை அது ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளது. 

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் ஆற்றப்படவில்லை. அதன் காரணமாகவே இவ்வாறான ஒரு பிரேரணையை ஸ்ரீதரன் எம்பி சபையில் முன் வைத்துள்ளார்.

இவ்வாறு மக்கள் வெளியேறுவார்களானால் இன்னும் சில காலங்களில் மக்கள் இல்லாத யாழ்ப்பாணமே இருக்கும். இந்த நிலைமையில் இருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் சிந்திக்கின்றோம். அதற்காகவே அரசாங்கம் வடக்கிற்கான துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது. 

அந்த வகையில் பல திட்டங்கள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று தொழில்பேட்டைகளை அங்கு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  காங்கேசன்துறை, பரந்தன்,மாங்குளம் பகுதிகளில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விமான நிலையம் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கை தரும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களையே எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. 

இழக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழவேண்டும். அதன் பின்னரே சுய நிர்ணய உரிமைக்காக  போராடுவதா அல்லது தனி நாட்டுக்காக போராடுவதா என்பதை தீர்மானிக்க முடியும். அவர்கள் இலங்கையில் வாழுகின்ற மனநிலையை உருவாக்குவது அவசியமாகும் என்றார். 

https://www.virakesari.lk/article/223146

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

4 weeks 2 days ago
சீகல் மாதிரியைச் (Seagull model) சேர்ந்த KIT விதமான வானலை கட்டுப்பாட்டு வானூர்தி பெயர்: செஸ்னா N739RF (Cessna N739RF) அதற்கான வானலை கட்டுப்படுத்தி (radio controller):- அதை ஒன்று சேர்ப்பதற்கான கையேடு:

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

4 weeks 2 days ago
வானலை கட்டுப்பாட்டு கீழிதை | RC Glider இந்த வண்டு கடந்த 11/10/2007 ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் கடற்புலிகளின் வழங்கல் அணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும். இதைக் கொண்டு வருகையில் லெப். கேணல் மணியுடன் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர் என்கிறது சிங்களம். இதனோடு மேலும் ஒரு விளையாட்டு வண்டும் சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. அதனது படம் அடுத்த மறுமொழிப்பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது. பெயர்: ASH-26 (2007 அல்லது அதற்கு முந்தைய மாதிரி) உடல் நீளம்: 5.5அடி இறக்கை நீட்டம்(wing span): 13 அடி (தோராயமாக) அதற்கான வானலை கட்டுப்படுத்தி(radio controller): பெயர்: Futaba 6EX

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

4 weeks 2 days ago
வானலை கட்டுப்பாட்டு வானூர்திகளுக்கான கிரௌப்னெர் எம்.சி.- 22எஸ் வானலை கட்டுப்படுத்தி | Graupner MC-22s radio controller for RC planes இந்த கட்டுப்படுத்தி உள்ளதெனில் புலிகளிடத்தில் ஒரு கிரௌப்னெர் வகை வானலை கட்டுப்பாட்டு வானூர்தியும் இருந்திருக்கலாம்!

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 2 days ago
லெப். கேணல் குட்டிசிறியின் சிலை திறக்கிறார்கள் 16/01/2007 பரந்தன் சந்தி, கரைச்சி வடக்கு, கிளிநொச்சி குத்துவிளக்கேற்றி திறந்துவைப்பவர் செந்தில் (மட்டுவைச் சேர்ந்த கட்டளையாளர் ஒருவர்) ஆவார். பின்னால் வரியில் நிற்பவர் CASR கட்டளையாளர் கேணல் கோபித் ஆவார். 2009 '2008' 2007

சத்துருக்கொண்டான் படுகொலை : புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம்

4 weeks 2 days ago
மட்டக்கிளப்பு ..எங்களுடையது ..எங்களுக்கே இருக்க இடம் காணாது என்று கனடிய தூதுவரிடம் கண்ணீர் விட்டவை அங்கு கிடங்கு கிண்டி ஆராச்சி செய்ய விடுவினமோ....