Aggregator

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்

4 weeks 2 days ago
உக்கிரமான தாக்குதல்; ஒரே இரவில் 574 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பிய ரஷ்யா! 22 AUG, 2025 | 01:06 PM உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேற்று (21) உக்கிர நிலையை அடைந்தது. நேற்றிரவு ரஷ்யா 574 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை அனுப்பி உக்ரைனில் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 15க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அண்ட்ரி சிபிஹா (Andrii Sybiha) குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் லிவிவ், முகாசெவோ, டிரான்ஸ்கார்பதியா ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு கட்டடங்கள், தொழிற்சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை நடத்தப்பட்ட உக்ரைன் - ரஷ்யா தாக்குதல்களில் இதுவே பாரிய தாக்குதல் என உக்ரைன் தெரிவித்துள்ளது. உலகில் இயங்கிவரும் இராணுவக் கூட்டமைப்புகளில், மிகவும் பலம் பொருந்தியதும் பழைமையானதுமான இராணுவக் கூட்டமைப்பான “நேட்டோ”வில் இணைவதற்காக உக்ரைன் முயற்சித்து வருகிறது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் விளைவாக, 2022இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் இந்த யுத்தம் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையே நிலவி வரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடனும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எனினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தினம், ஒரே இரவில் 574 டிரோன்கள், 40 ஏவுகணைகளை உக்ரைனுக்கு ரஷ்யா அனுப்பி, மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கும், அதனால் விளைந்த அழிவுகளுக்கும் உக்ரைன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/223085

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்பு!

4 weeks 2 days ago
யாழ். கொட்டடி தனியார் காணியில் ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டுபிடிப்பு! 22 AUG, 2025 | 03:50 PM யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தனியார் காணியில் வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இது தொடர்பாக பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர். அதன் பின்னர், இன்றைய தினம் (22) வெடிபொருட்களை கண்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் செயற்படுத்தப்படும் இந்த ஆயுத மீட்புப் பணியில் யாழ்ப்பாண பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/223116

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 2 days ago
அடிப்படையில் ரணில் ஊழல்வாதியல்ல என்பதை எவரும் அறிந்திருந்தபோதும் பழக்கப்பட்ட ஒரு துஷ்பிரயோகத்துக்கு அவரும் பங்காளியாகியிருக்கிறார். ரணிலை விட பல மடங்கு துஷ்பிரயோகம் செய்திருக்கும் ஒருவரை கைது செய்வதற்கான ஒரு ஆரம்ப எச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. நாளைக்கு பிக்குமார்களையும், முன்னாள் இராணுவத்தினரையும், இனவாத சக்திகளையும் திரட்டிக்கொண்டு அக்கைதுக்கு எதிராக ராஜபக்சவினர் கிளர்வதாயின் அதற்கான மனப்பக்குவத்துக்கு தயார்படுத்த ரணிலின் இந்த கைது கணிசமான அளவு உதவும். 1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க 2025ல் ரணில் விக்கிரமசிங்க இலங்கையை ஆட்சி செய்த அதியுயர் பதவியில் இருந்தவர்களில் 1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆங்கிலேயரால் சிறைப்பிடிக்கப்பட்ட பின், 2025ல் சுமார் 210 ஆண்டுகளுக்கு பின்னராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதாகியுள்ளார். இடைப்பட்ட காலத்தில் பிரித்தானிய தேசாதிபதிகளும், 1948 சுதந்திரத்தின்பின் பிரதமர்களும், 1978 அரசியலமைப்பின்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளும் இலங்கை ஆட்சிக்கு தலைமைவகித்தபோதிலும் எவரும் எக்காரணத்துக்காகவும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை. ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையின் மன்னராட்சி காலத்துக்கு பின்னரான - மக்களாட்சி காலத்தின் முதலாவது அரச தலைவர் கைது என்பது ஓர் வரலாறு. இனித்தான் சட்டப்புத்தகங்களும், அரசியலமைப்பின் பக்கங்களும் தீவிரமாக ஆராயப்படப் போகின்றன. குறிப்பாக அரசியலமைப்பின் 35வது சரத்து. பிரதி வட்சப்பில் வந்தது.

சத்துருக்கொண்டான் படுகொலை : புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம்

4 weeks 2 days ago
சத்துருக்கொண்டான் படுகொலை : மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மௌன அஞ்சலி ; புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம் 22 AUG, 2025 | 03:37 PM மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் 3வது மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (21) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி, சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி கோரி, புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரேரணை ஒன்றை கொண்டுவந்து முன்வைத்தார். அந்த பிரேரணையின்படி, 1990.9.9 அன்று இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை என்பது இந்த மாவட்டத்தில் பாரிய தமிழினப் படுகொலை நடந்தேறியது. குறிப்பாக யுத்த காலப்பகுதிகளிலே எங்களுடைய மாவட்டத்தில் அப்போது இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் பனிச்சையடி, திராய்மடு, பிள்ளையாரடி, கொக்குவில் சத்துருக்கொண்டான் கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து நகரில் தஞ்சமடைந்து முகாம்களில் தங்கியிருந்தனர். இவர்கள் பகலில் தமது கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று வந்த நிலையில், 1990-9-9 அன்று மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கிருந்த சிறியோர் தொடக்கம் முதியோர் வரை 186 பேரை ஒன்றுகூடல் என தெரிவித்து சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று, அங்கே, இராணுவத்தினருடன் ஊர்காவல் படையினர் இணைந்து இராணுவ முகாமின் தளபதி வர்ணகுலசூரிய என்பவரின் தலைமையில் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர். இந்த படுகொலையின் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை குழுவிற்கு தப்பி வந்தவர் உட்பட உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் சாட்சியங்கள் அளித்து, இந்த படுகொலை நிரூபிக்கப்பட்ட படுகொலையாக காணப்பட்டது. இந்த படுகொலை இடம்பெற்று, எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி 35 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த படுகொலைக்கான நீதி இதுவரை மறுக்கப்பட்டது. இருந்தபோதும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தலை அனுஷ்டிக்க அமைக்கப்பட்ட நினைவேந்தல் தூபிக்கு வரும்போது பொலிஸார், இராணுவத்தினர் சுற்றிவளைத்து அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இருந்தபோதும் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி தற்போது செம்மணி புதைகுழி மற்றும் ஊழல் மோசடிகளை அழிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் அதேபோல் ஜ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வந்து செம்மணிக்குச் சென்று இந்த படுகொலைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிக்கை விடுத்தார். ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விடயங்களை செய்வதாக தெரிவித்தார். இருந்தபோதும் இந்த படுகொலையில் நானும் இறந்திருக்க வேண்டியவள். அப்போது எனக்கு 4 வயது. அன்றைய தினம் எனது பெற்றோர் சுற்றிவளைப்பில் முதல் ஒருசில மணித்தியாலத்துக்கு முன்னர் நாங்கள் அங்கிருந்து வெளியேறி நகரிலுள்ள நலன்புரி முகாமிற்கு சென்றுவிட்டதால் தப்பிக்கொண்டேன். எனவே, உண்மை ஒருநாளும் உறங்காது. செம்மணி புதைகுழி இன்று தோண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இராணுவ முகாம் இருந்த இடம் தோண்டப்பட வேண்டும் என்ற இந்த தீர்மானம் எமது உறுப்பினர்களின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு இந்த தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், ஜ.நா மனித உரிமை ஆணையம், அனுப்பப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் என பிரேரணையை முன்வைத்தார். இந்த பிரேரணைக்கு சபையில் இருந்த முழு உறுப்பினரது ஆதரவு வழங்கப்பட்டு, சத்துருக்கொண்டான் படுகொலை 35ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/223114

சத்துருக்கொண்டான் படுகொலை : புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம்

4 weeks 2 days ago

சத்துருக்கொண்டான் படுகொலை : மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மௌன அஞ்சலி ; புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம் 

22 AUG, 2025 | 03:37 PM

image

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG_6276.JPG

மட்டக்களப்பு மாநகர சபையின் 3வது மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (21) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி, சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி கோரி, புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரேரணை ஒன்றை கொண்டுவந்து முன்வைத்தார்.

அந்த பிரேரணையின்படி, 

1990.9.9 அன்று இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை என்பது இந்த மாவட்டத்தில் பாரிய தமிழினப் படுகொலை நடந்தேறியது. குறிப்பாக யுத்த காலப்பகுதிகளிலே எங்களுடைய மாவட்டத்தில் அப்போது இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் பனிச்சையடி, திராய்மடு, பிள்ளையாரடி, கொக்குவில் சத்துருக்கொண்டான் கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து நகரில் தஞ்சமடைந்து முகாம்களில் தங்கியிருந்தனர்.

இவர்கள் பகலில் தமது கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று வந்த நிலையில், 1990-9-9 அன்று மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கிருந்த சிறியோர் தொடக்கம் முதியோர் வரை 186 பேரை ஒன்றுகூடல் என தெரிவித்து சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று, அங்கே, இராணுவத்தினருடன் ஊர்காவல் படையினர் இணைந்து இராணுவ முகாமின் தளபதி வர்ணகுலசூரிய என்பவரின் தலைமையில் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.

இந்த படுகொலையின் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை குழுவிற்கு தப்பி வந்தவர் உட்பட உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் சாட்சியங்கள் அளித்து, இந்த படுகொலை நிரூபிக்கப்பட்ட படுகொலையாக காணப்பட்டது.

இந்த படுகொலை இடம்பெற்று, எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி 35 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த படுகொலைக்கான நீதி இதுவரை மறுக்கப்பட்டது. இருந்தபோதும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தலை அனுஷ்டிக்க அமைக்கப்பட்ட நினைவேந்தல் தூபிக்கு வரும்போது பொலிஸார், இராணுவத்தினர் சுற்றிவளைத்து அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. 

இருந்தபோதும் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி தற்போது செம்மணி புதைகுழி மற்றும்  ஊழல் மோசடிகளை அழிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் அதேபோல் ஜ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வந்து செம்மணிக்குச் சென்று இந்த படுகொலைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிக்கை விடுத்தார்.

IMG_6278.JPG

ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விடயங்களை செய்வதாக தெரிவித்தார். இருந்தபோதும் இந்த படுகொலையில் நானும் இறந்திருக்க வேண்டியவள். அப்போது எனக்கு 4 வயது. அன்றைய தினம் எனது பெற்றோர்  சுற்றிவளைப்பில் முதல் ஒருசில மணித்தியாலத்துக்கு முன்னர் நாங்கள் அங்கிருந்து வெளியேறி நகரிலுள்ள நலன்புரி முகாமிற்கு சென்றுவிட்டதால் தப்பிக்கொண்டேன்.

எனவே, உண்மை ஒருநாளும் உறங்காது. செம்மணி புதைகுழி இன்று தோண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இராணுவ முகாம் இருந்த இடம் தோண்டப்பட வேண்டும் என்ற இந்த தீர்மானம் எமது உறுப்பினர்களின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு இந்த தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், ஜ.நா மனித உரிமை ஆணையம், அனுப்பப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் என பிரேரணையை முன்வைத்தார்.

இந்த பிரேரணைக்கு சபையில் இருந்த முழு உறுப்பினரது ஆதரவு வழங்கப்பட்டு, சத்துருக்கொண்டான் படுகொலை 35ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

WhatsApp_Image_2025-08-22_at_10.04.35.jp

https://www.virakesari.lk/article/223114

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 2 days ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது - இலங்கை வரலாற்றில் முதன்முறை; என்ன காரணம்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க (கோப்புப்படம்) 22 ஆகஸ்ட் 2025, 09:00 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இது, சமீபத்திய செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். எனினும், முன்னாள் ஜனாதிபதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பில் உள்ளகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்திருந்தது. இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 09 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முதல் சந்தர்ப்பம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முன்னான் ஜனாதிபதி ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் 1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமே தற்போது நாட்டில் அமலில் உள்ளது. இந்த அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு அதிவுயர் அதிகாரமான நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டதன் பின்னர், ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர். ரணில் விக்ரமசிங்கவிற்கு பின்னர் தற்போது அநுர குமார திஸாநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். பட மூலாதாரம், PRADEEPA MAHANAMAHEWA படக்குறிப்பு, சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய முடியுமா? முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்யும் அதிகாரம், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் பிபிசி தமிழ், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவாவிடம் வினவியது. ''ஜனாதிபதி ஒருவருக்கு விசேட சிறப்புரிமை உள்ளது என 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 7வது சரத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புரிமையின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அவரது பதவி காலத்தில் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை பதிவு செய்ய முடியாது என 35/1 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார். எனினும், அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய, அவரது பதவிக் காலத்திற்குள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்ய முடியாத பட்சத்திலும் அவருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியும் என அவர் விளக்குகிறார். ''ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்திற்குள் மாத்திரமே சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியாது. அவரது பதவியிலிருந்து அவர் விலகியதன் பின்னர் அல்லது ராஜினாமா செய்த பின்னர் அவர் பதவிக் காலத்தில் விடுத்த சிவில் அல்லது குற்றவியல் தவறுகளுக்கு வேறொரு தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதில் எந்தவித தடங்கல்களும் இல்லை. நீதிமன்றத்தில் பீ (B) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதியின் பிரத்யேக செயலாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கோட்டை நீதவானின் அனுமதியுடனேயே முன்னாள் ஜனாதிபதியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது." என அவர் தெரிவித்தார். அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெரியவரும் பட்சத்தில், போலீஸாரினால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் பிணை அவருக்கு வழங்க போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறுகிறார். "அதனாலேயே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார். 1999ம் பிணை சட்டத்திற்கு அமைய அவருக்கு பிணை கோரிக்கை முன்வைக்கப்படும்.'' எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqle7lp593lo

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 2 days ago
கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார். அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 2 days ago
இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣 Anusha Nadarajah

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 2 days ago
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்! குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முன்நிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444292

பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

4 weeks 2 days ago
பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள் பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள, மனிதப்புதைகுழிகள் தொடர்பாக, நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கவேண்டுமென சர்வதேச நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை மீறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னரான, கடந்த ஒரு வருடகாலத்தில் முறையற்ற விதத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் நீதிக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது, கடந்த சில தசாப்தகாலங்களில் இலங்கையில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் இந்த அச்சுறுத்தல்கள், குறையவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2025/1444285

பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

4 weeks 2 days ago

Human-Rights-Watch.GettyImages.jpg?resiz

பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள்  பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள, மனிதப்புதைகுழிகள் தொடர்பாக, நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கவேண்டுமென சர்வதேச நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை மீறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னரான, கடந்த ஒரு வருடகாலத்தில் முறையற்ற விதத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் நீதிக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது, கடந்த சில தசாப்தகாலங்களில் இலங்கையில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும்
இந்த அச்சுறுத்தல்கள், குறையவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

https://athavannews.com/2025/1444285

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு!

4 weeks 2 days ago
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு! நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”” குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல. குற்றம் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444246

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு!

4 weeks 2 days ago

images-5.jpg?resize=300%2C168&ssl=1

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு!

நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும்  முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று  கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”” குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல. குற்றம் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

அதுதான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1444246

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

4 weeks 2 days ago
பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இரத்து செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார். இது குறித்து மேலும் உரையாற்றிய அவர், அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திற்குள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நாங்கள் நியமித்தோம். இந்தக் குழு பலமுறை கூடி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களைச் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தொடர்புடைய திருத்தங்கள் தொடர்பான பணிகள் நிறைவடையும். அதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பது குறித்த வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டம் அடுத்த மாதம் இரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். https://athavannews.com/2025/1444219