Aggregator

மே 16 2009. ஓமந்தை...

4 weeks 2 days ago
முதல்நாள் மாலை முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை பகுதியை ராணுவத்தினர் கைப்பற்ற அங்கிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள இரட்டைவாய்க்கால் ராணுவ சோதனை நிலையத்தை நடந்து வந்தடைந்தோம். அங்கு விசேடமாக விசாரிக்கப்பட்டு பின்னர் ராணுவ பஸ் வண்டியின் ஊடாக ஓமந்தை நோக்கி வந்தோம். வரும் வழி எங்கும் புதுக்குடியிருப்பு விசுவமடு தர்மபுரம் பரந்தன் கிளிநொச்சி போன்ற நகரங்கள் போரினால் சின்னாபின்னப்பட்டு கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் மிக நெரிசலாக ஏற்றப்பட்டு பயணிக்கும்போது ஒரு சிலரை தவிர அனைவரும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய தாயிற்று. பஸ் கனகராயன்குளம் பகுதியை அண்மித்த போது சிறுபிள்ளைகள் தண்ணீர் வேண்டும் என அழுதார்கள். காலை 4 மணியளவில் பஸ் வண்டி ஓமந்தை சோதனை சாவடி வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான மக்களினால் அப்பகுதி நிரம்பி காணப்பட்டது. ராணுவ அதிகாரி ஒருவரிடம் நாங்கள் வைத்தியர்கள் எனக் கூறினோம். நித்திரை இன்றி உங்கள் வரவுக்காக காத்திருக்கிறேன் என கூறினார். எங்களை ஒரு மரத்தடியில் இருக்கும்படி கூறினார். அங்கே சிதறிக்கிடந்த பிஸ்கட் பெட்டிகளை எடுத்து விரித்து படுத்து உறங்கினோம். அன்று பகல் முழுவதும் பலர் எங்களை விசாரித்தார்கள் மிரட்டினார்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டார்கள். அங்கு செய்தவற்றை கூற முயற்சித்தோம். அப்படி கூறும் போது அவர்கள் கடுமையாக கோபப்பட்டார்கள். உங்கள் கதையை முடித்து விடுவோம் என சிலர் கூறினார்கள். என்ன கூற வேண்டும் எனக்கு தெரியவில்லை. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சில பதிலைக் கூறினேன். சந்தோசப்பட்டார்கள். விசாரணை செய்பவர் ஒரு கதிரையை தூக்கிக்கொண்டு ஒரு பகுதிக்கு செல்லுவர். அவர் கதிரையில் இருக்கும் போது அவரின் முன்னால் சிறு பிள்ளை போன்று கைகளை கட்டிய வண்ணம் இருந்து பதில் அளிக்க வேண்டி இருந்தது. மாலை வரை பல தடவைகள் விசாரிக்கப்பட்டு பின்னர் போலீஸ் வாகனம் ஒன்றில் வவுனியா நோக்கி அனுப்பி வைக்கப்பட்டோம்... --> Thangamuthu Sathiyamoorthy

மே 16 2009. ஓமந்தையில் விசாரிக்கப்பட போது

4 weeks 2 days ago

large.doctors.jpg.199b15e6b0a7d5bdba499b

முதல்நாள் மாலை முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை பகுதியை ராணுவத்தினர் கைப்பற்ற அங்கிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள இரட்டைவாய்க்கால் ராணுவ சோதனை நிலையத்தை நடந்து வந்தடைந்தோம்.

அங்கு விசேடமாக விசாரிக்கப்பட்டு பின்னர் ராணுவ பஸ் வண்டியின் ஊடாக ஓமந்தை நோக்கி வந்தோம். வரும் வழி எங்கும் புதுக்குடியிருப்பு விசுவமடு தர்மபுரம் பரந்தன் கிளிநொச்சி போன்ற நகரங்கள் போரினால் சின்னாபின்னப்பட்டு கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது.

நூற்றுக்கணக்கானவர்கள் மிக நெரிசலாக ஏற்றப்பட்டு பயணிக்கும்போது ஒரு சிலரை தவிர அனைவரும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய தாயிற்று.

பஸ் கனகராயன்குளம் பகுதியை அண்மித்த போது சிறுபிள்ளைகள் தண்ணீர் வேண்டும் என அழுதார்கள்.

காலை 4 மணியளவில் பஸ் வண்டி ஓமந்தை சோதனை சாவடி வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான மக்களினால் அப்பகுதி நிரம்பி காணப்பட்டது.

ராணுவ அதிகாரி ஒருவரிடம் நாங்கள் வைத்தியர்கள் எனக் கூறினோம். நித்திரை இன்றி உங்கள் வரவுக்காக காத்திருக்கிறேன் என கூறினார். எங்களை ஒரு மரத்தடியில் இருக்கும்படி கூறினார். அங்கே சிதறிக்கிடந்த பிஸ்கட் பெட்டிகளை எடுத்து விரித்து படுத்து உறங்கினோம்.

அன்று பகல் முழுவதும் பலர் எங்களை விசாரித்தார்கள் மிரட்டினார்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டார்கள். அங்கு செய்தவற்றை கூற முயற்சித்தோம். அப்படி கூறும் போது அவர்கள் கடுமையாக கோபப்பட்டார்கள். உங்கள் கதையை முடித்து விடுவோம் என சிலர் கூறினார்கள். என்ன கூற வேண்டும் எனக்கு தெரியவில்லை. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சில பதிலைக் கூறினேன். சந்தோசப்பட்டார்கள்.

விசாரணை செய்பவர் ஒரு கதிரையை தூக்கிக்கொண்டு ஒரு பகுதிக்கு செல்லுவர். அவர் கதிரையில் இருக்கும் போது அவரின் முன்னால் சிறு பிள்ளை போன்று கைகளை கட்டிய வண்ணம் இருந்து பதில் அளிக்க வேண்டி இருந்தது.

மாலை வரை பல தடவைகள் விசாரிக்கப்பட்டு பின்னர் போலீஸ் வாகனம் ஒன்றில் வவுனியா நோக்கி அனுப்பி வைக்கப்பட்டோம்...

--> Thangamuthu Sathiyamoorthy

கற்க கசறும்

1 month ago
இக்காலத்தில் திரையில், கணணித்திரையில் விளையாட்டும் , சேர்ந்து சத்தமிட்டு , பொழுது போக்கும் காலத்திலும் ,அதற்கே அடிமையாகும் சிறார்கள் மத்தியில் இசையில் கவனம்செலுத்தி (ஏதோஒன்றைக் கற்று இருப்பார் ) மிகவும் பாராடட படத் தக்கது . அது இன்னொரு இசைக் கருவியை இயக்க சார்ந்ததாக இருக்கும்.

கற்க கசறும்

1 month ago
கற்க கசறும் ------------------ எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும். ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு. மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனம் செய்கின்றார்கள். கீழைத்தேய நாடுகளில் சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட திறமைகளே ஒரு ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். மற்றவை எல்லாமே உருப்படாத விசயங்கள். ஆகவே அங்கே யாராவது தன்னிடம் என்ன இருக்கின்றது என்று கண்டறிந்தாலும், அது அநேகமாக உருப்படாத ஒரு விசயமாகவே அங்கே கருதப்படவும் கூடும். மேற்கத்தைய நாடுகளுக்கு குடிபுகுந்த நாங்கள் எங்களின் வளரும் காலத்தில் தவறவிட்டவற்றை பிள்ளைகளின் மூலமாக இன்று இங்கே பிடித்து விடலாம் என்று நினைப்பதும் உண்டு போல. ஒரு எண்ணை ஒரு தாளில் எழுதி, அதை ஒருவரின் தலைக்கு பின்னால் பிடித்தால், அவர் கண்ணை மூடிக் கொண்டே அந்த எண்ணை சரியாக சொல்லும் ஒரு திறமை இருக்கின்றது என்கின்றார்கள். முதலில் இந்த விடயத்தை, திறமையை ஒரு கோர்வையாக புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. ஆனால் இதற்கு ஒரு ஆசிரியரும், குரு என்பதே சரியான பதம், மாணவர்களும் இருக்கின்றனர். இந்த திறமையில் அடுத்த அடுத்த படிகள் கூட இருக்கின்றன என்று ஒருவர் சொன்னார். இதனால் உருப்படியில்லாத விசயங்கள் என்று அன்று அங்கே சமூகம் பல திறமைகளை வகைப்படுத்திய விதத்தை முற்று முழுதாக தவறு என்றும் சொல்ல முடியவில்லை. இங்கு ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையையும் கண்டுபிடித்து விட முயல்கின்றார்கள். இது அன்று அங்கே இருந்த சங்கீதப் பாடம் போல அல்ல. சித்திர ஆசிரியர் அடிக்கின்றாரே என்று சங்கீத ஆசிரியையிடம் ஓடிப் போகும் நிலை அல்ல இது. ஒரு தடவை ஒரு பாடசாலையில் சித்திரத்திற்கும் போகாமல், சங்கீதத்திற்கும் போகாமல் வகுப்பில் பதுங்கியிருந்த சிலரை சித்திர ஆசிரியர் அடித்து பிக்காசோவின் கிறுக்கு சித்திரங்கள் போல ஆக்கினார். பின்னர் அதே ஆசிரியர் கலப்பையை கீறு என்று ஒரு நாள் சொல்லும் போது, எம்ஜிஆரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததில், எம்ஜிஆர் படங்களில் தூக்கிக் கொண்டு திரிந்த கலப்பையை சரியாக பார்க்கவில்லை என்ற உண்மை புரிந்தது. புல்லாங்குழல் தான் வாசிக்கப் போகின்றேன் என்றார் மகள். 'புல்லாங்குழல் கொஞ்சம் கஷ்டம் என்கின்றார்களே, புல்லாங்குழல் போல இருக்கும் வேறு ஏதாவது ஒன்றில் ஆரம்பிக்கலாமே.....................' என்று பணிவாக கேட்டுப் பார்த்தோம். ம்ஹூம்........... புல்லாங்குழல் தான் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவர் ஒற்றைக் காலில் நிற்கும் போதே அவரிடம் என்ன திறமை இருக்கின்றது எனறு நாங்கள் ஊகித்திருக்கவேண்டும். புல்லாங்குழல் விற்கும் கடைக்கு போனோம். அங்கு எல்லா கருவிகளும், வாத்தியங்களும் விற்பார்கள். 'நீங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்றில்லை. ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போங்கள்.......... சரியாக வராவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்................' என்றார் கடைக்காரர். பலத்த அனுபவசாலி என்று தெரிந்தது. எழுவாய்கள் இல்லாமலேயே, எவரையும் எதையும் குறிப்பிடாமலேயே, சில வசனங்களை மென்மையாகச் சொன்னார். ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஒன்றை வாங்குவது என்று முடிவெடுத்தோம். பலதை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார் கடைக்காரர். நீண்டு பெரிதாக, பளபளவென்று இருந்த ஒன்றை வாங்கினோம். இது தலைமுறை தாண்டியும் உழைக்கும் என்றார் கடைக்காரர். சில தீர்க்கதரிசனங்களை அவை சொல்லப்படும் போது நாங்கள், அதாவது உலகம், சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை. புல்லாங்குழல் பாடசாலை போய் வர ஆரம்பித்தது. சில இரவுகளில் அதை வீட்டில் கழட்டி, பொருத்துவதும் தெரிந்தது. எங்கள் வீட்டில் இசை அருவியோ அல்லது வெள்ளமோ இன்னும் பாய ஆரம்பித்திருக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை நேரம் பக்கத்து வீட்டில் இருந்து 'கடார்.........படார்..............' என்று தகரக் கூரையில் தடியால் விடாமல் அடிப்பது போல சத்தம் வந்தது. பக்கத்து வீட்டின் பின் வளவுப் பக்கத்தில் இருந்தே சத்தம் வந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கம் சுவருக்கு மேலால் எட்டிப் பார்க்கவும் முடியாத அதி உயர் நாகரிகம் கொண்ட நாடுகள் இவை. ஒரு தடவை அயலவர் ஒருவர் இறந்து போய் ஆறு மாதங்களின் பின்னேயே அவர் இறந்து போனார் என்ற தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் சத்தமே வராமல் அழுதிருப்பார்கள் போல. சில நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் அடிக்கும் சத்தம் வந்து கொண்டேயிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் தட்டினார். தங்களின் பிள்ளை பாடசாலையில் ட்ரம்ப் பழகுவதாகச் சொன்னார். சில நாட்கள் சமாளித்துக் கொள்ளும்படி கேட்டார். வாத்தியக் கருவியை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்தார்களா, அல்லது சொந்தமாகவே வாங்கினார்களா என்று நான் கேட்கவில்லை . ஆனால் அவர் சில நாட்கள் என்று சொன்னதால் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது. பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு கொஞ்சமும் தயங்காத நாடுகள் மேற்கு நாடுகள். இங்கு ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பாடசாலைப் பருவத்தில் நூற்றுக் கணக்கான பதக்கங்கள் கூட பெற்றுவிடுவார்கள். ஒரு போட்டி என்று சொல்லுவார்கள், ஆனால் அதில் பங்குபற்றும் எல்லோருக்கும் இங்கு பதக்கங்கள் கொடுப்பார்கள். இந்த நடைமுறைக்கு பின்னால் சில உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு முதல் ஒன்று இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் போது பெரும் பெருமைப்படும் பெற்றோர்கள், பின்னர் சில வருடங்களிலேயே ஒரு பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு மூடி, வீட்டின் கண்காணாத ஒரு இடத்தில் தள்ளி விடுவார்கள். புல்லாங்குழலுக்கும் கொடுத்தார்கள். பக்கத்து வீட்டு ட்ரம்பிற்கும் கொடுத்திருப்பார்கள். எதற்கும் தயங்கி நில்லாமல் சூரியனை சுற்றிக் கொண்டே விடாமல் சுழலுகின்றது பூமி. அதனால் அடுத்த வகுப்பும் வந்தது. ஒரு நூல் பிடித்தது போல வாழ்க்கை ஒரு கோட்டில் அசையாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வேலைக்கு போகும் பெருந்தெருவில், அங்கே காலை நேரங்களில் அசைய முடியாத வாகன நெரிசல் இருக்கும், எதேச்சையாக பக்கத்து வாகனத்தைப் பார்த்தேன். அங்கே ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே வாகனத்தை நெரிசலில் செலுத்த முயன்று கொண்டிருந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் பார்க்க ஆரம்பித்தேன். அதே பெருந்தெருவில், அதே மனிதர்கள், அதே வேலைகளையே ஒவ்வொரு காலையிலும் செய்து கொண்டிருந்தார்கள். நானும் தான். அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வருவதில்லையே என்ற எண்ணம் ஒரு நாள் வந்தது. புல்லாங்குழலையும் அந்த வருடம் காணவில்லை என்றும் தோன்றியது. அடுத்த நாள் விடிந்தது. புல்லாங்குழல் பள்ளிக்கூடம் போகவில்லை. 'ஏன்........ புல்லாங்குழல் தேவையில்லையா..........' என்றேன். 'இல்லை........... இந்த வருடம் வேறு வகுப்புகள்........ புல்லாங்குழல் இல்லை.........' என்றார். சங்கீதம் வராவிட்டால் சித்திரம் போல. அடுத்த தலைமுறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு புல்லாங்குழல்.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 month ago
ஓயாத அலைகள் இரண்டு வெற்றி நினைவுத்தூண் கிளிநொச்சி ஒட்டிசுட்டான் வீதியில் உள்ள காக்கா கடைச் சந்தி (கிளிநொச்சி குளச்சந்தி) 2004 நவம் 27 திறக்கப்பட்டது

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 month ago
லெப்.-Lt. செந்தூரன் அவர்களின் சிலை, செந்தூரன் சிலையடி, இரணப்பாலை, முல்லை 'சிங்களவன் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த போது, 2009இல்' இந்த சிலைக்குப் பின்னால் எமது மக்களின் போராட்ட பற்றின் வீரியம் இருப்பது பலரறியாதது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு பகுதிக் கட்டளையாளராய் இருந்து பின்னர் ஈழ மண்ணிற்கு வந்த இந்தியக் காவாலிகளின் சுற்றிவழைப்பின் போது குப்பி கடித்து வீரச்சாவடைந்தார். அவரின் நினைவாய் இரணைப்பாலை மக்கள் தாமாகவே அவரிற்கான திருவுருவச் சிலையினை நிறுவினர். இதுதான் மக்களின் பேராதரவு என்பது. கதை இப்படி இருக்க.. இந்தச் சிலைக்கு சிங்கள ஆக்கிரமிப்படையின் ஓட்டை ஊடகங்கள் 2009 ஆம் ஆண்டு ஒரு கதை எழுதின. ஆம், ஒரு திரிபுக் கதை. அது முதலில் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில்(Defence.lk) வெளியாக அதை தென்னிலங்கை ஊடகங்கள் சத்தியெடுத்தன. கதை யாதெனில், இந்த சிலையானது தலைவர் மாமாவின் சிலையெனவும் அவர் உயிரோடு இருக்கும்போதே தவிபுவினர் அவருக்கு சிலை வைத்துவிட்டனர் எனவும் ஒரு நாள் முழுக்க பொங்கின. அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த செய்தி அப்படியே நூந்துபோய்விட்டது.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 month ago
ஆனையிறவில் அமைக்கப்பட்டிருந்த சின்னம் பளையில் இருந்த ஆட்டிவத்த என்ற சேணேவித்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 2 தரைக்கரும்புலிகளின் நினைவாக அச்சேணேவித்தளம் இருந்தவிடத்தில் எழுப்பப்பட்ட நினைவுக்கல். இஃது அவர்களின் பெற்றோரால் 28/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டத்தினால் ஸ்தம்பிதமடைந்த தபால் பரிமாற்ற சேவைகள்

1 month ago
தபால் தொழிற்சங்க வேலை நிறுத்தத்தால் 100 மில்லியன் நஷ்டம்; பணிக்கு திரும்பாவிட்டால் சட்ட நடவடிக்கை - தபால் திணைக்களம் 21 AUG, 2025 | 04:53 PM (எம்.மனோசித்ரா) தபால் தொழிற்சங்கங்களினால் 6 நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தபால் உத்தியோகத்தர்களின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலதிக வேலை நேர கொடுப்பனவு மற்றும் கைவிரல் ரேகைப் பதிவு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இவ்வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய தேசிய தபால் சேவை சங்கம், இலங்கை சுதந்திர தபால் மற்றும் தொலை தொடர்பாடல் சேவை சங்கம், ஐக்கிய தபால் மற்றும் மின் தபால் பரிமாற்ற சேவை சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திர தபால் சேவை சங்கம், ஸ்ரீலங்கா தபால் சேவை முன்னணி உள்ளிட்ட 23 தொழிற்சங்கங்கள் இவ்வாறு தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் நேற்றைய தினமும் மத்திய தபால் பரிமாற்ற சேவை மூடப்பட்டிருந்தது. பதுளை, காலி, அநுராதபுரம், குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதான தபாலகங்களின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி தபால் மா அதிபர் சமிஷா டி சில்வா, இந்த வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். பொது மக்கள் மாத்திரமின்றி முழு தபால் சேவையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. எனவே இதுவரை பணிக்கு சமூகமளிக்காதோர் இன்றாவது பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வாறில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நாட்களில் சுமார் 100 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள், பொதிகளும் தேங்கியுள்ளன. அவை தற்போது பொறுப்பேற்கப்பட்டுள்ள போதிலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமலுள்ளது எனவே கூடிய விரைவில் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார். எவ்வாறிருப்பினும் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கைகளை மறைத்து கைவிரல் ரேகைப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலதிக வேலை நேர கொடுப்பனவுக்காகவும் மாத்திரமே நாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அரசாங்கம் மக்கள் மத்தியில் தவறான கருத்தினைப் பரப்புவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. எவ்வாறிருப்பினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தத்தைக் கைவிடப் போவதில்லை தொழிற்சங்கங்களும் ஸ்திரமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223034

மண்டைத்தீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவை - யாழ். மாவட்ட செயலர்

1 month ago
21 AUG, 2025 | 06:08 PM சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைத்தீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ். நிசாந்தன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை (20) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அதுவும் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு மெருகூட்டுவதாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. இலங்கை துடுப்பாட்டச் சங்கம் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறது. சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைத்தீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுவருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் இரண்டு தடவைகள் மண்டைத்தீவிற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளார். மைதானத்திற்கான காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய வசதிகளுக்கான மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. மேலும், இந்த சர்வதேச மைதானம் வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கும். எமது மாணவர்கள் சர்வதேசம் மற்றும் தேசிய போட்டிகளில் பங்குபற்றிவருகின்றனர். அந்த வகையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், இலங்கை 19 வயது அணியில் பரியோவான் கல்லூரி மாணவன் மாதுளன் மற்றும் ஹாட்லி கல்லூரி மாணவன் ஆகாஷ் இடம்பெற்று வருவதும் பாராட்டத்தக்க விடயம். உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளது. எமது மாணவர்கள் அதன் மூலமும் தமது திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முடியும். மாவட்டச் செயலகத்தினால் விளையாட்டு மற்றும் கல்விக்கான நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான நிதியீட்டம் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் எமது மாணவர்களுக்கான தேவைப்பாடுகளை நிதியத்தில் உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களை உள்ளடக்கிய உறுப்பினர்களின் சிபார்சின் அடிப்படையில் தேவைக்கேற்ற நிதி அனுமதிக்கப்படும். இதன் மூலம் உடனடித் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய வழி ஏற்படும் என மேலும் தெரிவித்தார். அத்துடன் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் எமது மாணவர்கள் முன்னேற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார். நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 17 பாடசாலைகளுக்கு துடுப்பாட்ட உபகரணங்களும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணிகளும் மாவட்ட செயலரால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலைகளுக்கான பொறுப்பாளர், பாடசாலை அதிபர்கள், துடுப்பாட்ட பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/223039

மண்டைத்தீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவை - யாழ். மாவட்ட செயலர்

1 month ago

21 AUG, 2025 | 06:08 PM

image

சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைத்தீவில் அமைக்கப்படவுள்ளது.  அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது.  மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். 

தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ். நிசாந்தன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை (20) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அதுவும் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு மெருகூட்டுவதாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

இலங்கை துடுப்பாட்டச் சங்கம் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறது. சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைத்தீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுவருகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் இரண்டு தடவைகள் மண்டைத்தீவிற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளார். மைதானத்திற்கான காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய வசதிகளுக்கான மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.

மேலும், இந்த சர்வதேச மைதானம் வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கும். எமது மாணவர்கள் சர்வதேசம் மற்றும் தேசிய போட்டிகளில் பங்குபற்றிவருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், இலங்கை 19 வயது அணியில் பரியோவான் கல்லூரி மாணவன் மாதுளன் மற்றும் ஹாட்லி கல்லூரி மாணவன் ஆகாஷ் இடம்பெற்று வருவதும் பாராட்டத்தக்க விடயம்.

உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

எமது மாணவர்கள் அதன் மூலமும் தமது திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முடியும். மாவட்டச் செயலகத்தினால் விளையாட்டு மற்றும் கல்விக்கான நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான நிதியீட்டம் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் எமது மாணவர்களுக்கான தேவைப்பாடுகளை நிதியத்தில் உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களை உள்ளடக்கிய உறுப்பினர்களின் சிபார்சின் அடிப்படையில் தேவைக்கேற்ற நிதி அனுமதிக்கப்படும்.

இதன் மூலம் உடனடித் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய வழி ஏற்படும் என மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் எமது மாணவர்கள் முன்னேற வாழ்த்துவதாகவும்  தெரிவித்தார்.

நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 17 பாடசாலைகளுக்கு துடுப்பாட்ட உபகரணங்களும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணிகளும் மாவட்ட செயலரால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலைகளுக்கான பொறுப்பாளர், பாடசாலை அதிபர்கள்,  துடுப்பாட்ட பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 

2__5_.jpg

2__4_.jpg

2__1_.jpg

https://www.virakesari.lk/article/223039

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன? - சட்டம் வழங்கும் தண்டனையும் அதற்கான தேவையும்

1 month ago

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) படி, 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பிறகான தரவுகள் இதுவரை வழங்கப்படவில்லை (குறியீட்டு படம்)

கட்டுரை தகவல்

  • அபினவ் கோயல்

  • பிபிசி செய்தியாளர்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பது கடுமையான பாலியல் குற்றங்களில் ஒன்று. டிஜிட்டல் என்ற வார்த்தையின் காரணமாக, பலர் இது ஆன்லைன் செயல்பாடுகளுடன் தொடர்புடைய குற்றம் என்று நினைத்துக் கொள்கின்றனர், ஆனால் உண்மையில் இதன் பொருள் முற்றிலும் மாறுபட்டது.

கடந்த சில ஆண்டுகளில், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளன. அவற்றில் சிலவற்றில் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் நாள் புதன்கிழமை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கௌதம் புத் நகர் மாவட்ட நீதிமன்றம், 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

2014ஆம் ஆண்டு இதுபோன்ற வழக்கு ஒன்றில் டியூஷன் ஆசிரியரின் உறவினரான பிரதீப் குமார் என்ற நபர், நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமை செய்பவர்களைத் தண்டிக்க நாட்டில் விரைவு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன (குறியீட்டு படம்)

2021 ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி சாகேத் நீதிமன்றம், பிரதீப் குமார் என்ற நபரே குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இந்த வழக்கின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும்போது, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது.

தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால், "இப்போது தண்டனையின் அம்சத்திற்கு வருகிறேன். மேல்முறையீடு செய்தவர் சம்பவம் நடந்த நேரத்தில் நான்கு வயதுடைய ஒரு சிறுமியை 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' செய்ததைக் கருத்தில் கொண்டு, விசாரணை நீதிமன்றம் அவருக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது" என்று கூறினார் .

டெல்லி உயர் நீதிமன்றம் பிரதீப் குமார் குற்றவாளி என்பதை உறுதி செய்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

NCRB, பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, NCRB தரவுகளின்படி, 2018-2022க்கு இடையில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 27 முதல் 28 சதவிகித வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது (குறியீட்டு படம்)

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன?

லத்தீன் வார்த்தையான 'டிஜிட்டஸ்' என்பதிலிருந்து, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பதில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் என்ற சொல் வந்தது.

'டிஜிட்டஸ்' என்றால் விரல். விரல் என்றால் அது கை விரலாகவோ அல்லது கால் விரலாகவோ இருக்கலாம்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், ஜோத்வானி அசோசியேட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவருமான திவ்யா சிங், "டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சிறுமியின் அல்லது பெண்ணின் அனுமதியின்றி அவர்களுடைய அந்தரங்கப் பகுதிகளில் விரல் அல்லது வேறு எந்தப் பொருள் மூலம் துன்பம் விளைவிப்பதை குறிக்கும் பாலியல் குற்றமாகும்" என்று கூறுகிறார்.

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை, ஆயுள் தண்டனை, தண்டனை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சட்டத்தின்படி, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படலாம் (குறியீட்டு படம்)

பாலியல் வன்கொடுமைக்கும் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமைக்கும்' உள்ள வேறுபாடு

அந்தரங்க உறுப்புகளை பயன்படுத்தப்படாமல் செய்யப்படும் பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பது கடினமாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் சட்ட நுணுக்கங்களை சாக்குப்போக்காகச் சொல்லி தப்பித்துவிடும் நிலை இருந்துவந்தது. ஆனால், 2012ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கிற்குப் பிறகு, பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டன.

"2013க்கு முன்பு, ஆண்குறியை பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் செலுத்தி செய்யப்படுவது மட்டுமே பாலியல் வன்கொடுமையாகக் கருதப்பட்டது. பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் விரல் அல்லது வேறு எந்தவொரு பொருளையும் செருகுவது, பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை தொடர்பானது) என்பதற்குப் பதிலாக, பிரிவு 354 (பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல்) அல்லது பிரிவு 377 (இயற்கைக்கு மாறான பாலியல் உறவு) ஆகியவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்பட்டது" என்று பிபிசியிடம் பேசிய திவ்யா சிங் கூறினார்.

"இந்த வழக்குகளில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்படாததால் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைவாகவே இருந்தது. ஆனால் நிர்பயா வழக்கிற்குப் பிறகு, சட்டம் மாற்றப்பட்டது. குற்றவியல் சட்ட (திருத்தம்) சட்டம், 2013 மூலம், ஐபிசியின் பிரிவு 375இல் பாலியல் வன்கொடுமைக்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.

"இப்போது டிஜிட்டஸ் (விரல்) ஊடுருவல் கூட, தெளிவாக பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது, எந்த கருணையும் காட்டப்படுவதில்லை" என்று திவ்யா கூறுகிறார்.

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) அமலுக்கு வந்ததன் மூலம், ஐபிசி சட்டப் பிரிவு 375, பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63 என மாற்றப்பட்டுவிட்டது.

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமைக்கான வரையறையை இன்னும் விரிவானதாக மாற்ற, 'ஊடுருவாத செயல்' (non-penetrative acts) என்பதும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது (குறியீட்டு படம்)

தண்டனை வழங்கல்

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63Bஇன் கீழ் கடுமையான பாலியல் குற்றமாகும்.

இதுபோன்ற வழக்குகளில் தண்டனை வழங்க பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64இன் கீழ் வகை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க பிஎன்எஸ் சட்டப்பிரிவு 65(2) வகை செய்கிறது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையும் விதிக்கப்படலாம். இதைத் தவிர, அபராதமும் விதிக்கப்படலாம்.

பாரதிய நியாய சன்ஹிதா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 2023ஆம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா என்று பெயர் மாற்றப்பட்டது

காவல்துறை நடவடிக்கை

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்குகளில், காவல்துறையினர் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். தடயவியல் மாதிரிகள் எடுத்து, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேசும் வழக்கறிஞர் திவ்யா, "பல சந்தர்பங்களில் மருத்துவ அறிக்கையில் அந்தரங்க உறுப்புகளில் காயம் இல்லை என்று எழுதப்படுவது வழக்கை பலவீனப்படுத்துகிறது. ஆனால் சட்டத்தின்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அந்தரங்க உறுப்புகளில் காயம் இருக்க வேண்டியது அவசியமில்லை."

"ஆண்குறியை பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் செலுத்தாமலேயே பாலியல் வன்கொடுமை செய்யலாம் என்பதையும், அதற்கும் பாலியல் வன்கொடுமை செய்வதற்கு வழங்கப்படும் அதே அளவிலான கடுமையான தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வை சமூகத்தில் பரப்ப வேண்டிய அவசியம் உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்கள் சந்திக்கும் பாதிப்புகள்

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்குகளில் ஏற்படும் மன மற்றும் உணர்ச்சி அதிர்ச்சி ஆகியவை பிற பாலியல் வன்கொடுமை வழக்குகளில் உள்ளதைப் போன்றது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் கூறுகிறார்.

"பல நேரங்களில் மக்கள் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதில்லை, ஆனால் சட்டத்தின்படி, அது பாலியல் வன்கொடுமை மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63இன் கீழ் வருகிறது" என்று அவர் கூறுகிறார்.

"பாலியல் கல்வி என்பது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மட்டுமல்ல, வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். சரியான தொடுகை, தவறான எண்ணத்தில் தொடுதல் என்ன போன்றவற்றை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்" என்கிறார் காமினி ஜெய்ஸ்வால்.

"இதுபோன்ற குற்றங்களை சமூகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg0r6jz7ddo

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன? - சட்டம் வழங்கும் தண்டனையும் அதற்கான தேவையும்

1 month ago
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) படி, 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பிறகான தரவுகள் இதுவரை வழங்கப்படவில்லை (குறியீட்டு படம்) கட்டுரை தகவல் அபினவ் கோயல் பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பது கடுமையான பாலியல் குற்றங்களில் ஒன்று. டிஜிட்டல் என்ற வார்த்தையின் காரணமாக, பலர் இது ஆன்லைன் செயல்பாடுகளுடன் தொடர்புடைய குற்றம் என்று நினைத்துக் கொள்கின்றனர், ஆனால் உண்மையில் இதன் பொருள் முற்றிலும் மாறுபட்டது. கடந்த சில ஆண்டுகளில், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளன. அவற்றில் சிலவற்றில் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் நாள் புதன்கிழமை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கௌதம் புத் நகர் மாவட்ட நீதிமன்றம், 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2014ஆம் ஆண்டு இதுபோன்ற வழக்கு ஒன்றில் டியூஷன் ஆசிரியரின் உறவினரான பிரதீப் குமார் என்ற நபர், நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமை செய்பவர்களைத் தண்டிக்க நாட்டில் விரைவு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன (குறியீட்டு படம்) 2021 ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி சாகேத் நீதிமன்றம், பிரதீப் குமார் என்ற நபரே குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும்போது, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது. தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால், "இப்போது தண்டனையின் அம்சத்திற்கு வருகிறேன். மேல்முறையீடு செய்தவர் சம்பவம் நடந்த நேரத்தில் நான்கு வயதுடைய ஒரு சிறுமியை 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' செய்ததைக் கருத்தில் கொண்டு, விசாரணை நீதிமன்றம் அவருக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது" என்று கூறினார் . டெல்லி உயர் நீதிமன்றம் பிரதீப் குமார் குற்றவாளி என்பதை உறுதி செய்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, NCRB தரவுகளின்படி, 2018-2022க்கு இடையில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 27 முதல் 28 சதவிகித வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது (குறியீட்டு படம்) 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன? லத்தீன் வார்த்தையான 'டிஜிட்டஸ்' என்பதிலிருந்து, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பதில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் என்ற சொல் வந்தது. 'டிஜிட்டஸ்' என்றால் விரல். விரல் என்றால் அது கை விரலாகவோ அல்லது கால் விரலாகவோ இருக்கலாம். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், ஜோத்வானி அசோசியேட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவருமான திவ்யா சிங், "டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சிறுமியின் அல்லது பெண்ணின் அனுமதியின்றி அவர்களுடைய அந்தரங்கப் பகுதிகளில் விரல் அல்லது வேறு எந்தப் பொருள் மூலம் துன்பம் விளைவிப்பதை குறிக்கும் பாலியல் குற்றமாகும்" என்று கூறுகிறார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சட்டத்தின்படி, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படலாம் (குறியீட்டு படம்) பாலியல் வன்கொடுமைக்கும் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமைக்கும்' உள்ள வேறுபாடு அந்தரங்க உறுப்புகளை பயன்படுத்தப்படாமல் செய்யப்படும் பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பது கடினமாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் சட்ட நுணுக்கங்களை சாக்குப்போக்காகச் சொல்லி தப்பித்துவிடும் நிலை இருந்துவந்தது. ஆனால், 2012ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கிற்குப் பிறகு, பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டன. "2013க்கு முன்பு, ஆண்குறியை பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் செலுத்தி செய்யப்படுவது மட்டுமே பாலியல் வன்கொடுமையாகக் கருதப்பட்டது. பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் விரல் அல்லது வேறு எந்தவொரு பொருளையும் செருகுவது, பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை தொடர்பானது) என்பதற்குப் பதிலாக, பிரிவு 354 (பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல்) அல்லது பிரிவு 377 (இயற்கைக்கு மாறான பாலியல் உறவு) ஆகியவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்பட்டது" என்று பிபிசியிடம் பேசிய திவ்யா சிங் கூறினார். "இந்த வழக்குகளில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்படாததால் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைவாகவே இருந்தது. ஆனால் நிர்பயா வழக்கிற்குப் பிறகு, சட்டம் மாற்றப்பட்டது. குற்றவியல் சட்ட (திருத்தம்) சட்டம், 2013 மூலம், ஐபிசியின் பிரிவு 375இல் பாலியல் வன்கொடுமைக்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டது" என்று அவர் கூறுகிறார். "இப்போது டிஜிட்டஸ் (விரல்) ஊடுருவல் கூட, தெளிவாக பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது, எந்த கருணையும் காட்டப்படுவதில்லை" என்று திவ்யா கூறுகிறார். பாரதிய நியாய சன்ஹிதா (BNS) அமலுக்கு வந்ததன் மூலம், ஐபிசி சட்டப் பிரிவு 375, பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63 என மாற்றப்பட்டுவிட்டது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமைக்கான வரையறையை இன்னும் விரிவானதாக மாற்ற, 'ஊடுருவாத செயல்' (non-penetrative acts) என்பதும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது (குறியீட்டு படம்) தண்டனை வழங்கல் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63Bஇன் கீழ் கடுமையான பாலியல் குற்றமாகும். இதுபோன்ற வழக்குகளில் தண்டனை வழங்க பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64இன் கீழ் வகை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படலாம். இதற்கிடையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க பிஎன்எஸ் சட்டப்பிரிவு 65(2) வகை செய்கிறது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையும் விதிக்கப்படலாம். இதைத் தவிர, அபராதமும் விதிக்கப்படலாம். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 2023ஆம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா என்று பெயர் மாற்றப்பட்டது காவல்துறை நடவடிக்கை 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்குகளில், காவல்துறையினர் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். தடயவியல் மாதிரிகள் எடுத்து, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேசும் வழக்கறிஞர் திவ்யா, "பல சந்தர்பங்களில் மருத்துவ அறிக்கையில் அந்தரங்க உறுப்புகளில் காயம் இல்லை என்று எழுதப்படுவது வழக்கை பலவீனப்படுத்துகிறது. ஆனால் சட்டத்தின்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அந்தரங்க உறுப்புகளில் காயம் இருக்க வேண்டியது அவசியமில்லை." "ஆண்குறியை பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் செலுத்தாமலேயே பாலியல் வன்கொடுமை செய்யலாம் என்பதையும், அதற்கும் பாலியல் வன்கொடுமை செய்வதற்கு வழங்கப்படும் அதே அளவிலான கடுமையான தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வை சமூகத்தில் பரப்ப வேண்டிய அவசியம் உள்ளது" என்று அவர் கூறுகிறார். பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்கள் சந்திக்கும் பாதிப்புகள் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்குகளில் ஏற்படும் மன மற்றும் உணர்ச்சி அதிர்ச்சி ஆகியவை பிற பாலியல் வன்கொடுமை வழக்குகளில் உள்ளதைப் போன்றது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் கூறுகிறார். "பல நேரங்களில் மக்கள் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதில்லை, ஆனால் சட்டத்தின்படி, அது பாலியல் வன்கொடுமை மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63இன் கீழ் வருகிறது" என்று அவர் கூறுகிறார். "பாலியல் கல்வி என்பது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மட்டுமல்ல, வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். சரியான தொடுகை, தவறான எண்ணத்தில் தொடுதல் என்ன போன்றவற்றை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்" என்கிறார் காமினி ஜெய்ஸ்வால். "இதுபோன்ற குற்றங்களை சமூகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg0r6jz7ddo

செம்மணி மனிதப் புதைகுழி : பன்னாட்டு நீதி விசாரணை தேவை; சோமரத்ன ராஜபக்ஷவும் விசாரணைகளில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் - ரவிகரன்

1 month ago
21 AUG, 2025 | 03:50 PM யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ என்னும் முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல், இராணுவத்தின் படுகொலைச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றுக்கு சாட்சியமளித்த பி2899 என்னும் வழக்கினை தற்போதைய செம்மணி மனிதப் புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்துவதுடன், பன்னாட்டு நீதி விசாரணைகளில் சோமரத்ன ராஜபக்ச இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் ரவிகரன் கேட்டுக்கொண்டார். அத்தோடு செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பது தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் வழங்கவரும் மக்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அச்சுறுத்துவதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலும் இந்த செம்மணி கோரப்படுகொலையின் விசாரணைகள் மும்முரமடையும்போது குற்றமிழைத்த படையினர் நாட்டைவிட்டுத் தப்பியோட வாய்ப்பிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்விடயத்தில் குற்றமிழைத்த தரப்பினர் நாட்டை விட்டு தப்பிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயங்களை பற்றி பேசினார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் பன்னாட்டுக் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்துவதுடன், பன்னாட்டு நிபுணத்துவம் பின்பற்றப்பட்டு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் இந்த உயரிய சபையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு செம்மணி அகழ்வாய்வுப் பணிகளுக்குரிய தொழில்நுட்பம் சார் நிபுணத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இராஜாங்க செயலாளர் டேவிட் லமி அண்மையில் தெரிவித்துள்ளார். அவரின் இக்கருத்தினை வரவேற்பதுடன், அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறாக இந்த செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தமது நிபுணத்துவங்களை வழங்குவதற்கு முன்வரும் பன்னாடுகளுக்கு இந்த அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன், அகழ்வாய்வில் அனைத்து விதமான பன்னாட்டு நிபுணத்துவங்களும் பின்பற்றப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு பன்னாட்டு தடயவியல் நிபுணர்களும், பன்னாட்டு மனித உரிமைகள் நிபுணர்களும் இந்த அகழ்வாய்வுகளில் பங்கேற்கவேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சுயாதீனமானதும் நம்பிக்கைத்தன்மை மிக்க பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொள்ளுமாறும் இவ்வுயரிய சபையினைக் கோருகின்றேன். குறிப்பாக தற்போது இந்த நாட்டில் பெரும்பேசுபொருளாக யாழ்பாணம், செம்மணி, சிந்துபாத்தி மயானப் புதைகுழி விவகாரம் மாறியிருக்கின்றது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் இதுவரை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் பரீட்சார்த்த அகழ்வுப் பணியாக 9 நாட்கள் இடம்பெற்று ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. அதனைத் தொடர்து இரண்டாங்கட்ட மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றால் 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் கடந்த ஜூலை 10ஆம் திகதி அகழ்வாய்வாளர்களின் ஓய்விற்காக இடைநிறுத்தப்பட்டு, கடந்த 21.07.2025ஆம் திகதியன்று மீள இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த 06.08.2025 அன்று 32ஆவது நாளுடன் இரண்டாம்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. அந்த வகையில் இதுவரை குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மொத்தம் 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 140 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் இந்த அகழ்வாய்வுகளில் ஈடுபடும் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ கடந்த 14.08.2025அன்று நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், அகழ்வாய்விற்கு இன்னும் குறைந்தது எட்டு வாரங்கள் தேவைப்படுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இதுவரை மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வாய்வுகளில் பெண்கள், சிறார்கள், குழந்தைகள் என பலதரப்பட்டோருடைய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் பால் அருந்தும் போத்தல், சிறார்களின் விளையாட்டுப்பொம்மை, சிறுமிகளின் ஆடைகள், காலணிகள், கண்ணாடி வளையல்கள், பாடசாலைப் புத்தகப்பை என்பன சான்றுப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன. இவ்வாறான கொடூரங்களைக் காணும்போது நெஞ்சமெல்லாம் பதைபதைக்கின்றது. கண்களில் நீர்நிறைகின்றது. மேலும் இதுவரை இனங்காணப்பட்ட 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை நிர்வாணமாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவை என கடந்த 14ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இதன் மூலம் இங்கு பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பதும், இந்தப் புதைகுழியில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளென பல்வேறு தரப்பினரும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விடயமும் தற்போது அம்பலமாகியிருக்கின்றது. வார்த்தைகளில் கூறிவிடமுடியாத கொடூரமான தமிழினப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கான மிக முக்கியமான ஆதாரமாகவே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்க்கமுடிகிறது. வாக்குமூலம் வழங்குவோரை அச்சுறுத்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் செம்மணியில் எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் பணி தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலங்களை அளிக்கவரும் மக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், கே.குருபரன், வி.மணிவண்ணன் ஆகியோரால் நீதிமன்றிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தி, சிரமத்திற்குள்ளாக்கி வாக்குமூலமளிக்கவரும் மக்களை அங்குவரவிடாமல் தடுக்கும் நோக்குடன் செயற்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறான அச்சுறுத்தல் செயற்பாடுகள் இனிமேல் இடம்பெறக்கூடாதெனக் கேட்டுக்கொள்கின்றேன். படுகொலைகளோடு தொடர்புடைய படையினர் தப்பிக்காமலிருக்க நடவடிக்கை தேவை கடந்த 1999இல் யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில், கே.எச்.கமிலஸ் பெர்னான்டோ, ஜெஸிமா ஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகிய நால்வர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த விசாரணைக் குழுவினால் 210 பக்கங்களைக் கொண்ட நீண்ட விசாரணை அறிக்கை கடந்த 2003 ஒக்டோபர் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில் காணாமல்போனவர்களில் பெருமளவானோர் இராணுவத்தினால் கொல்லப்பட்டிருக்கலாமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், படுகொலையுடன் தொடர்புடைய இராணுவமுகாம்கள், இராணுவஅதிகாரிகள், இராணவத்தினரின் பெயர்களும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே இந்த மனிதப் புதைகுழி விசாரணைகள் மும்முரமாக இடம்பெறும்போது அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய படையினர் தப்பியோட வாய்ப்புள்ளது. ஆகவே அதற்கு முன்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். சோமரத்ன ராஜபக்ஷ பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் கடந்த 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலைவழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உட்பட ஆறு இராணுவத்தினருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி மரண தண்டனை வழங்கியிருந்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ செம்மணியில் 300 தொடக்கம் 400 வரையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இவ்வாறு சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றில் சாட்சியமளித்ததற்கமைய அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அதனைத் தொடர்ந்து செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டிருந்தன. பின்னர் இந்த விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அப்போது நீதிமன்றிற்கு வழங்கிய சாட்சியத்தை ஆதாரப்படுத்தும் வகையில் தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் மிக அதிகளவில் இனங்காணப்படுகின்றன. எனவே குறித்த வழக்கு மீள எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போதைய மனிதப்புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்தப்படவேண்டும். யாழ். நீதவான் நீதிமன்ற வழக்கேட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றுக்கு அனுப்பப்பட்ட பி2899 என்னும் வழக்கு மீளவும் யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனக் கோருகின்றேன். இத்தகைய சூழலில் பன்னாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் கடந்த 1996 காலப் பகுதியில் செம்மணி தொடக்கம் துண்டி இராணுவ முகாம் வரை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல படுகொலைகள், பலசேனா தலைமையகம் முதல் இராணுவத்தால் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம் பற்றிய விபரங்கள், மணியம் தோட்டம் பகுதியிலுள்ள புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அண்மையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்போதைய அரசதலைவர் சந்திரிக்கா அம்மையார், அப்போதைய பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட தரப்பினரும் இத்தகைய வதைமுகாம்கள் தொடர்பில் அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அக்காலப்பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக 7ஆவது படைத்தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரிகளான கப்டன் லலித் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் துடுகல, லெப்டினன் உதயகுமார ஆகியோருடன் பொலிஸ் பரிசோதகர்களான அப்துல் ஹமீட் நஸார், சமரசிங்க ஆகியோரின் பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே இந்த செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு விவகாரத்திற்கு தலையீடுகளற்ற சுயாதீன பன்னாட்டு நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அந்த பன்னாட்டு நீதி விசாரணைகளில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருகின்றேன். அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற பன்னாட்டு நீதி விசாரணைக்கு இந்த அரசானது தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் எமது பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கேட்டுக்கொள்கின்றேன். பன்னாட்டு நீதி விசாரணை மாத்திரமே பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றத்தரும் ஒரே மார்க்கமாக அமையும். அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வாய்வுப் பணிகளில் பன்னாட்டுப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதல், பன்னாட்டு கண்காணிப்புகள் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதுடன், பன்னாட்டு நிபுணத்துவங்கள் பின்பற்றப்பட்டு அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திற்கும் பன்னாட்டு நீதி விசாரணை தேவையென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/223022

செம்மணி மனிதப் புதைகுழி : பன்னாட்டு நீதி விசாரணை தேவை; சோமரத்ன ராஜபக்ஷவும் விசாரணைகளில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் - ரவிகரன்

1 month ago

21 AUG, 2025 | 03:50 PM

image

யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ என்னும் முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல், இராணுவத்தின் படுகொலைச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றுக்கு சாட்சியமளித்த பி2899 என்னும் வழக்கினை தற்போதைய செம்மணி மனிதப் புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்துவதுடன், பன்னாட்டு நீதி விசாரணைகளில் சோமரத்ன ராஜபக்ச இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் ரவிகரன் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பது தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் வழங்கவரும் மக்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அச்சுறுத்துவதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மேலும் இந்த செம்மணி கோரப்படுகொலையின் விசாரணைகள் மும்முரமடையும்போது குற்றமிழைத்த படையினர் நாட்டைவிட்டுத் தப்பியோட வாய்ப்பிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்விடயத்தில் குற்றமிழைத்த தரப்பினர் நாட்டை விட்டு தப்பிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில்  இன்று (21)  உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயங்களை பற்றி பேசினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை

செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் பன்னாட்டுக் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்துவதுடன், பன்னாட்டு நிபுணத்துவம் பின்பற்றப்பட்டு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் இந்த உயரிய சபையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு செம்மணி அகழ்வாய்வுப் பணிகளுக்குரிய தொழில்நுட்பம் சார் நிபுணத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இராஜாங்க செயலாளர் டேவிட் லமி அண்மையில் தெரிவித்துள்ளார். அவரின் இக்கருத்தினை வரவேற்பதுடன், அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இவ்வாறாக இந்த செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தமது நிபுணத்துவங்களை வழங்குவதற்கு முன்வரும் பன்னாடுகளுக்கு இந்த அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன், அகழ்வாய்வில் அனைத்து விதமான பன்னாட்டு நிபுணத்துவங்களும் பின்பற்றப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு பன்னாட்டு தடயவியல் நிபுணர்களும், பன்னாட்டு மனித உரிமைகள் நிபுணர்களும் இந்த அகழ்வாய்வுகளில் பங்கேற்கவேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சுயாதீனமானதும் நம்பிக்கைத்தன்மை மிக்க பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொள்ளுமாறும் இவ்வுயரிய சபையினைக் கோருகின்றேன்.

குறிப்பாக தற்போது இந்த நாட்டில் பெரும்பேசுபொருளாக யாழ்பாணம், செம்மணி, சிந்துபாத்தி மயானப் புதைகுழி விவகாரம் மாறியிருக்கின்றது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் இதுவரை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் பரீட்சார்த்த அகழ்வுப் பணியாக 9 நாட்கள் இடம்பெற்று ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. 

அதனைத் தொடர்து இரண்டாங்கட்ட மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றால் 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் கடந்த ஜூலை 10ஆம் திகதி அகழ்வாய்வாளர்களின் ஓய்விற்காக இடைநிறுத்தப்பட்டு, கடந்த 21.07.2025ஆம் திகதியன்று மீள இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த 06.08.2025 அன்று 32ஆவது நாளுடன் இரண்டாம்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. 

அந்த வகையில் இதுவரை குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மொத்தம் 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 140 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

மேலும் இந்த அகழ்வாய்வுகளில் ஈடுபடும் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ கடந்த 14.08.2025அன்று நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், அகழ்வாய்விற்கு இன்னும் குறைந்தது எட்டு வாரங்கள் தேவைப்படுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேவேளை இதுவரை மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வாய்வுகளில் பெண்கள், சிறார்கள், குழந்தைகள் என பலதரப்பட்டோருடைய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் பால் அருந்தும் போத்தல், சிறார்களின் விளையாட்டுப்பொம்மை, சிறுமிகளின் ஆடைகள், காலணிகள், கண்ணாடி வளையல்கள், பாடசாலைப் புத்தகப்பை என்பன சான்றுப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன. இவ்வாறான கொடூரங்களைக் காணும்போது நெஞ்சமெல்லாம் பதைபதைக்கின்றது. கண்களில் நீர்நிறைகின்றது. 

மேலும் இதுவரை இனங்காணப்பட்ட 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை நிர்வாணமாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவை என கடந்த 14ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இதன் மூலம் இங்கு பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பதும், இந்தப் புதைகுழியில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளென பல்வேறு தரப்பினரும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விடயமும் தற்போது அம்பலமாகியிருக்கின்றது. வார்த்தைகளில் கூறிவிடமுடியாத கொடூரமான தமிழினப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கான மிக முக்கியமான ஆதாரமாகவே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்க்கமுடிகிறது.

வாக்குமூலம் வழங்குவோரை அச்சுறுத்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

செம்மணியில் எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் பணி தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலங்களை அளிக்கவரும் மக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், கே.குருபரன், வி.மணிவண்ணன் ஆகியோரால் நீதிமன்றிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு அச்சுறுத்தி, சிரமத்திற்குள்ளாக்கி வாக்குமூலமளிக்கவரும் மக்களை அங்குவரவிடாமல் தடுக்கும் நோக்குடன் செயற்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இவ்வாறான அச்சுறுத்தல் செயற்பாடுகள் இனிமேல் இடம்பெறக்கூடாதெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

படுகொலைகளோடு தொடர்புடைய படையினர் தப்பிக்காமலிருக்க நடவடிக்கை தேவை

கடந்த 1999இல் யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில், கே.எச்.கமிலஸ் பெர்னான்டோ, ஜெஸிமா ஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகிய நால்வர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த விசாரணைக் குழுவினால் 210 பக்கங்களைக் கொண்ட நீண்ட விசாரணை அறிக்கை கடந்த 2003 ஒக்டோபர் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அவ்வறிக்கையில் காணாமல்போனவர்களில் பெருமளவானோர் இராணுவத்தினால் கொல்லப்பட்டிருக்கலாமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், படுகொலையுடன் தொடர்புடைய இராணுவமுகாம்கள், இராணுவஅதிகாரிகள், இராணவத்தினரின் பெயர்களும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

எனவே இந்த மனிதப் புதைகுழி விசாரணைகள் மும்முரமாக இடம்பெறும்போது அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய படையினர் தப்பியோட வாய்ப்புள்ளது. ஆகவே அதற்கு  முன்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சோமரத்ன ராஜபக்ஷ பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும்

கடந்த 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி இராணுவ சோதனைச்சாவடியில்

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலைவழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உட்பட ஆறு இராணுவத்தினருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி மரண தண்டனை வழங்கியிருந்தது. 

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ செம்மணியில் 300 தொடக்கம் 400 வரையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றில் சாட்சியமளித்ததற்கமைய அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அதனைத் தொடர்ந்து செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டிருந்தன. பின்னர் இந்த விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அப்போது நீதிமன்றிற்கு வழங்கிய சாட்சியத்தை ஆதாரப்படுத்தும் வகையில் தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் மிக அதிகளவில் இனங்காணப்படுகின்றன. எனவே குறித்த வழக்கு மீள எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போதைய மனிதப்புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்தப்படவேண்டும். யாழ். நீதவான் நீதிமன்ற வழக்கேட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றுக்கு அனுப்பப்பட்ட பி2899 என்னும் வழக்கு மீளவும் யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனக் கோருகின்றேன்.

இத்தகைய சூழலில் பன்னாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் கடந்த 1996 காலப் பகுதியில் செம்மணி தொடக்கம் துண்டி இராணுவ முகாம் வரை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல படுகொலைகள், பலசேனா தலைமையகம் முதல் இராணுவத்தால் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம் பற்றிய விபரங்கள், மணியம் தோட்டம் பகுதியிலுள்ள புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அண்மையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

அப்போதைய அரசதலைவர் சந்திரிக்கா அம்மையார், அப்போதைய பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட தரப்பினரும் இத்தகைய வதைமுகாம்கள் தொடர்பில் அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அக்காலப்பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக 7ஆவது படைத்தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரிகளான கப்டன் லலித் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் துடுகல, லெப்டினன் உதயகுமார ஆகியோருடன் பொலிஸ் பரிசோதகர்களான அப்துல் ஹமீட் நஸார், சமரசிங்க ஆகியோரின் பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எனவே இந்த செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு விவகாரத்திற்கு தலையீடுகளற்ற சுயாதீன பன்னாட்டு நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அந்த பன்னாட்டு நீதி விசாரணைகளில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருகின்றேன்.

அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற பன்னாட்டு நீதி விசாரணைக்கு இந்த அரசானது தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் எமது பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கேட்டுக்கொள்கின்றேன். பன்னாட்டு நீதி விசாரணை மாத்திரமே பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றத்தரும் ஒரே மார்க்கமாக அமையும்.

அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வாய்வுப் பணிகளில் பன்னாட்டுப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதல், பன்னாட்டு கண்காணிப்புகள் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதுடன், பன்னாட்டு நிபுணத்துவங்கள் பின்பற்றப்பட்டு அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திற்கும் பன்னாட்டு நீதி விசாரணை தேவையென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/223022

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 month ago
இப்படித்தான் 6 மாததம் முன்பும் ஒரு செய்தி வந்தது.இப்ப மீன்டும் முதலில் இருந்தா.☹️