Aggregator

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

3 weeks 2 days ago
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும் - சாமர சம்பத் 17 Feb, 2026 | 07:55 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சகல தோட்ட கம்பனிகளும் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக நான் திருத்மொன்றை முன்வைப்பேன். 1994ஆம் ஆண்டில் ஜே.வி.பி கட்சி ஊடாக பாராளுமன்றம் வந்த கலப்பதி உள்ளிட்ட இதுவரையில் 72 பேர் ஓய்வூதியம் பெற்றுள்ளனர். ஆளும் தரப்பில் முன்வரிசையில் இருப்பவர்களில் பலர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டவர்களே. அப்படியென்றால் அவர்கள் பெற்றுக்கொண்ட ஓய்வூதிய கொடுப்பனவுக்கான பணத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். இதேவேளை எங்களை திருடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியில் தலங்கம வட்டாரத்தில் போட்டியிட்ட ஒருவரின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி நிறுவனமொன்றை நடத்தி அப்பாவி மக்களிடம் பணம் பெற்றுள்ளனர். இவர்களின் திருமணத்தில் ஜனாதிபதி அனுரகுமாரவே கையெழுத்திட்டுள்ளார். இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகளை அடகு வைத்து அவர்களிடம் பணம் கொடுத்தவர்களும் உள்ளன. இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்வதில்லை. இது தொடர்பில் பொலிஸ் அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும். பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சகல தோட்ட கம்பனிகளும் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் ஓய்வூதியம் பெறுகிறார்கள். நீதியமைச்சரின் உறவினரான வாசுதேவ நாணயக்கார இன்றும் ஓய்வூதிய கொடுப்பனவை பெறுகிறார். ஆகவே மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/238907

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
10 ல வியாழந்தான் பதிய விட்டு கிளப்புமாம்… நான் 10ம் பக்கத்தில்….செவ்வாய் கிழமை பதிலை பதிந்தாதால் - 9 தில குரு எண்டு எல்லே தப்பா நினைச்சேன்😂

அதிசயக்குதிரை

3 weeks 2 days ago
noesprtdoSe2c0tgà4f701hh: imHrl2l69ft l3i1c2gafg10c07tf21,40 · தர்மம் தலையை மட்டுமல்ல...ஒரு நாட்டையே காப்பாற்றும். 1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ "சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள். பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள். நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராத விதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாக வில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக் கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார். ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, இது தான் மொத்தம் வசூலான தொகை மீதியுள்ள தொகைக்கு பின் தேதியிட்டு செக் கொடுத்து விடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்தி விடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்" என்கிறார். அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார். பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது. ஆனால் பேட்ரெவ்ஸ்கி, நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்து போகப்போவதில்லை… என்று கருதியே அந்த உதவியை செய்தார். ஆண்டுகள் உருண்டன... பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு... எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.) பேட்ரெவ்ஸ்கி கேட்டுக் கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர். ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி. ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பணிக்க நன்றி தெரிவிக்கிறார். "நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா? அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான் என்கிறார்" ஹெர்பெர்ட் ஹூவர். பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக் கொள்கிறார். காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது. தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா? இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள். ஏனெனில்… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.. பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே… காலம் குறித்து வைத்துக் கொண்டது.... (உண்மை சம்பவம்) தர்ம சிந்தனையை பற்றி அறம் வழியில் வாழ குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள் . குழந்தைகள் சொல்வதை கேட்பதில்லை ஆனால் செய்வதை பார்ப்பார்கள்......!

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

3 weeks 2 days ago
பனாகொட மகேஸ்வரன் (தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்??) என்பவர் தான் TEA இனை ஆரம்பித்தவர். 2024 இல் காலமானார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

3 weeks 2 days ago
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை கொல்ல இந்த 'விஷ தவளை' பயன்படுத்தப்பட்டதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, விஷ டார்ட் தவளை தோலின் மீது சுரக்கக்கூடிய எபிபடிடின் விஷம்தான் அலெக்ஸி நவால்னியின் மரணத்திற்கு காரணம் என ஐந்து ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் தென் அமெரிக்காவில் உள்ள 'விஷ டார்ட் தவளைகளில்' காணப்படும் ஒரு கொடிய நச்சைப் பயன்படுத்தி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டார் என்று பிரிட்டனும் அதன் சில ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன. "நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எபிபடிடின் (epibatidine) தடயங்கள் கண்டறியப்பட்டன. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சைபீரிய சிறைச்சாலையில் அவரது மரணத்திற்கு காரணமாக அமைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது" என்று பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சை பிரயோகிப்பதற்கான "வழிமுறைகள், நோக்கம் மற்றும் வாய்ப்பு" ஆகியவை ரஷ்ய அரசிடம் மட்டுமே இருந்ததாக பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷ்யா இந்த ஆய்வு முடிவை "ஒரு தகவல் பிரசாரம்" என்று நிராகரித்ததாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அந்த நச்சு எது? எபிபடிடின் என்பது விஷ டார்ட் தவளையின் தோலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு இயற்கை நியூரோடாக்ஸின் (neurotoxin) நச்சு என்று நச்சுயியல் நிபுணர் ஜில் ஜான்சன் கூறுகிறார். இது மார்ஃபினை விட "200 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது" என்று அவர் பிபிசி ரஷ்ய மொழி சேவையிடம் தெரிவித்தார். எபிபடிடின் இயற்கையாக தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் விஷ டார்ட் தவளைகளில் காணப்படுகிறது. இதனை, ஒரு ஆய்வகத்திலும் தயாரிக்கலாம். 'பிடிக்கப்பட்ட விஷ டார்ட் தவளைகள் இந்த நச்சுத்தன்மையை உற்பத்தி செய்வதில்லை, இது ரஷ்யாவில் இயற்கையாகக் காணப்படுவதில்லை' என்று ஐரோப்பிய நாடுகள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளன. அந்தோணியின் விஷ டார்ட் தவளை மற்றும் பேண்டஸ்மல் விஷத் தவளை என அறியப்படும் இனங்கள் தங்களது தோலில் இந்த நச்சைச் சுரக்கும். வலி நிவாரணி மற்றும் நுரையீரல் அழற்சி நிலைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு எபிபடிடின் ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும், அதன் நச்சுத்தன்மை காரணமாக அது மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அலெக்ஸி நவால்னி தவளை விஷம் எப்படி வேலை செய்கிறது? ஜான்சனின் கூற்றுப்படி, இந்த சக்தி வாய்ந்த ரசாயன கலவை நரம்பு மண்டலத்தில் உள்ள நிகோடினிக் ஏற்பிகளின் மீது செயல்படுகிறது. ஏனெனில் இது இந்த நரம்பு ஏற்பிகளை அதிகப்படியாகத் தூண்டுகிறது, இது சரியான அளவில் செலுத்தப்பட்டால், தசை துடிப்பு, முடக்கம், வலிப்பு, குறைந்த இதயத் துடிப்பு, சுவாச செயலிழப்பு மற்றும் இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார். பிஏ செய்தி முகமையிடம் லீட்ஸ் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் நச்சுயியல் பேராசிரியர் அலஸ்டெர் ஹே, ''இதன் விளைவுகள் சுவாசம் தடைபட வழிவகுக்கும். இந்த நஞ்சால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத் திணறலால் இறக்க நேரிடும்" என்று கூறினார். ஒருவரின் ரத்தத்தில் இந்த நச்சு காணப்படுவது "திட்டமிட்ட முறையில் அது செலுத்தப்பட்டதையே உணர்த்துகிறது" என்று அவர் மேலும் கூறினார். "சில பிற மருந்துகளுடன் சேர்த்துச் செலுத்துவதன் மூலம் எபிபடிடின் நச்சுத்தன்மை அதிகரிக்கப்படலாம், இந்த சேர்க்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன," என்று ஹே கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அலெக்ஸி நவால்னி சிறையில் இருந்தபோது இந்த நச்சு எவ்வளவு அரிதானது? எபிபடிடின் மிகவும் அரிதானது மற்றும் ஒரே ஒரு புவியியல் பிராந்தியத்தில் மட்டுமே மிகக் குறைந்த அளவில் காணப்படுகிறது என்று ஜான்சன் கூறினார். பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிறரால் குறிப்பிடப்பட்ட விஷத் தவளை, ஈக்வடார் மற்றும் பெருவைச் சேர்ந்த 'அந்தோணியின் விஷ டார்ட் தவளை' என்று புரிந்து கொள்ளப்படுகிறது. எபிபடிடினை உருவாக்கும் ஆல்கலாய்டுகளை (ஒரு வகை கரிம கலவை) உற்பத்தி செய்யத் தேவையான சரியான உணவுகளை உண்பதன் மூலம் தவளைகள் இந்த ரசாயனத்தை (எபிபடிடின்) உற்பத்தி செய்து அதைத் தங்கள் தோலில் சேமிக்கின்றன. தவளையின் உணவு மாறினால், அதன் எபிபடிடின் இருப்பு தீர்ந்துவிடும். ''தேவையான ஆல்கலாய்டுகளை உருவாக்க சரியான உணவைத் துல்லியமாக உண்டு கொண்டிருக்கும் ஒரு காட்டு தவளையை சரியான இடத்தில் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட முடியாத விஷயம்'' என்று ஜான்சன் கூறினார். "இது மனிதர்களுக்கு விஷம் கொடுக்கும் ஒரு நம்பமுடியாத அரிதான முறையாகும். எனக்குத் தெரிந்த மற்ற எபிபடிடின் விஷ பாதிப்புகள் ஆய்வகத்தில் ஏற்பட்டவை என்பதுடன் அவை உயிரிழப்பை ஏற்படுத்தாதவை." ரஷ்யா என்ன கூறியுள்ளது? நவால்னி இந்த மர்மமான நச்சால் இறந்ததை ஐரோப்பிய ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் சனிக்கிழமை தெரிவித்தன. நவால்னி இயற்கையான காரணங்களால் இறந்ததாக மாஸ்கோ முன்பு கூறியிருந்தது, இருப்பினும் நவால்னியின் மனைவி யூலியா நவால்னாயா தனது கணவர் விஷம் கொடுத்து "கொலை செய்யப்பட்டதாக" தொடர்ந்து வாதிட்டு வருகிறார். லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம், நவால்னியின் மரணத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை மறுத்தது மற்றும் இந்த ஆய்வு முடிவுகளை "மேற்கத்திய கற்பனையாளர்களின் உயிரற்ற பிரசாரம்" என்று விவரித்தது. ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ்ஸிடம்,"அனைத்துப் பேச்சுக்களும் அறிக்கைகளும் மேற்கின் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில் செய்யப்படும் ஒரு தகவல் பிரசாரமாகும்," என்று கூறினார். முன்னாள் பிரிட்டன் மற்றும் நேட்டோ மூத்த அதிகாரியும், ரசாயன ஆயுத நிபுணருமான ஹமிஷ் டி பிரெட்டன்-கோர்டன், நவால்னியின் மரணம் உட்பட ரஷ்யா எதைச் சொன்னாலும் அதை "சந்தேகத்துடன்தான்" மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அவர் பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் பேசுகையில், நேட்டோ நாடுகள் "நவால்னி அரசால் கொல்லப்பட்டதற்கான சான்றுகள் தங்களிடம் இருப்பதை நிரூபித்துள்ளன" என்று கூறினார். அவர் இறக்கும் போது, நவால்னி மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருந்திருந்தார். ரஷ்யாவின் கூற்றுப்படி, 47 வயதான அவர் ஒரு சிறிய நடைப்பயணம் மேற்கொண்டார், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார், பின்னர் சரிந்து விழுந்தவர் மீண்டும் சுயநினைவை பெறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq6qyr3p596o

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா இன்னும் இறுதி ஒப்புதலளிக்கவில்லை - அமைச்சர் விஜித ஹேரத்

3 weeks 2 days ago
இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா (JICA)' இன்னும் இறுதி ஒப்புதலளிக்கவில்லை - அமைச்சர் விஜித ஹேரத் Published By: Vishnu 17 Feb, 2026 | 06:31 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜைகா) இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஏனைய திட்டங்களின் வெற்றிகரமான அமுலாக்கம் மற்றும் மதிப்பீட்டிற்குப் பின்னரே எதிர்கால முடிவுகள் எடுக்கப்படும் என்று ஜைகா அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைக்கும் மையங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எல்.ஆர்.டி. திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ள போதிலும், ஜைகாவிடமிருந்து இன்னும் இறுதி ஒப்புதல் கிடைக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவு அமையும் என்று ஜைகா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. நாம் ஜப்பானில் ஜைகா அதிகாரிகளைச் சந்தித்தபோது அனைத்து முன்மொழிவுகளையும் முன்வைத்தோம். எவ்வாறிருப்பினும் ஆரம்ப கட்டமாக தற்போதுள்ள திட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்றார். இதேவேளை ஜைக்காவின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இதய சிகிச்சை அலகுகளை நிர்மாணித்தல் மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் ஆகிய பணிகளை மீண்டும் தொடங்குதல் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கையின் கண்டி, அனுராதபுரம், குருநாகல், பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய 5 பிரதான வைத்தியசாலைகளில் இதய சிகிச்சை அலகுகளை அமைப்பதற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் ஜைக்கா 2018ஆம் ஆண்டில் 7,903 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியது. இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் இத்திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்து வருவதாலும், ஜப்பானிய அரசாங்கத்துடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாலும், இத்திட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஜைக்கா உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய இத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள பணிகளை பூர்த்தி செய்வதற்காக திட்ட காலப்பகுதியை 2029 டிசம்பர் 31 வரை நீடிப்பதற்கும், நிறுத்தப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் மற்றும் உபகரணக் கொள்வனவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/238901

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா இன்னும் இறுதி ஒப்புதலளிக்கவில்லை - அமைச்சர் விஜித ஹேரத்

3 weeks 2 days ago

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா (JICA)' இன்னும் இறுதி ஒப்புதலளிக்கவில்லை - அமைச்சர் விஜித ஹேரத்

Published By: Vishnu

17 Feb, 2026 | 06:31 PM

image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜைகா) இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஏனைய திட்டங்களின் வெற்றிகரமான அமுலாக்கம் மற்றும் மதிப்பீட்டிற்குப் பின்னரே எதிர்கால முடிவுகள் எடுக்கப்படும் என்று ஜைகா அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைக்கும் மையங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எல்.ஆர்.டி. திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ள போதிலும், ஜைகாவிடமிருந்து இன்னும் இறுதி ஒப்புதல் கிடைக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவு அமையும் என்று ஜைகா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.

நாம் ஜப்பானில் ஜைகா அதிகாரிகளைச் சந்தித்தபோது அனைத்து முன்மொழிவுகளையும் முன்வைத்தோம். எவ்வாறிருப்பினும் ஆரம்ப கட்டமாக தற்போதுள்ள திட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்றார்.

இதேவேளை ஜைக்காவின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இதய சிகிச்சை அலகுகளை நிர்மாணித்தல் மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் ஆகிய பணிகளை மீண்டும் தொடங்குதல் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கையின் கண்டி, அனுராதபுரம், குருநாகல், பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய 5 பிரதான வைத்தியசாலைகளில் இதய சிகிச்சை அலகுகளை அமைப்பதற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் ஜைக்கா 2018ஆம் ஆண்டில் 7,903 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியது.

இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் இத்திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்து வருவதாலும், ஜப்பானிய அரசாங்கத்துடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாலும், இத்திட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஜைக்கா உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள பணிகளை பூர்த்தி செய்வதற்காக திட்ட காலப்பகுதியை 2029 டிசம்பர் 31 வரை நீடிப்பதற்கும், நிறுத்தப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் மற்றும் உபகரணக் கொள்வனவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/238901

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

3 weeks 2 days ago
சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வலு உள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் யாராவது இவரைச் சந்தித்துப் பேச முயற்சிக்கலாம். குறைந்தபட்சம் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் மூலம் சிறுபான்மையினரின் சுதந்திரம் பறிக்கப்படுவதையாவது சுட்டிக் காட்டலாம்.

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

3 weeks 2 days ago
இதன் வரலாறு அதிகம் தெரியாது. குறுகிய காலமே தொழிற்பட்டது. செயற்பாட்டளவில் சிறியது. 83 இற்கு பின்னர் தோன்றியது. 87 இற்கு முன்னரே கலைக்கப்பட்டது. ஆகவே தீர்மானிப்பது கடினம்; ஏனெனில் இதே போன்று மேலும் பல குறு இயக்கங்கள் தொழிற்பட்டிருந்தன. அதிஸ்ட லாப சீட்டு வித்ததும் இவர்கள் தான்

டிரம்பின் புதிய உலக ஒழுங்கில் இணையுமாறு ஐரோப்பாவிற்கு ரூபியோ அழைப்பு விடுக்கிறார்.

3 weeks 2 days ago
இதில் ஆச்சரியம் இல்லை. இப்போது பெயரில் இருக்கும் விதிமுறை ஒழுங்கு (rule based order எப்படி செயற்படுத்தப்படுகிறது, அமுலாக்கப்படுகிறது என்பதை உத்தியோக பூர்வ ஒழுங்காக வரித்து கொள்வதையே டிரம்ப் நிர்வாகம் சொல்லுவது. ஆனால், இதில் ள்ள முங்கிய பிரச்சனை, அமெரிக்கா, மேற்றுகின் பாதுகாப்பு, ஏனையோர் பாதுகாப்புக்கு அற்று அல்லது குஉறைந்து அச்சுறுத்தலுக்கு, தாக்குதலலுக்கு, அழிவுக்கு உள்ளாகலாம் என்ற பிபிம்பத்தை கட்டி எழுப்புவதன் மூலம. அனால், ஐரோப்பிய வாலுகள் ஏற்கனவே அமசடக்கியாக இதில் இப்பொது பங்கு பற்றுகின்றனர். ஐரோப்பாவை , uk ஐ பொருளாதாரத்தை தவிர வேறு எந்த பெரிய, பிராந்திய அதிகார பீடங்களும் கணக்கில் எடுப்பது இல்லை. இரனே, இதை வெளிப்டையாக சொல்லி பரிவு கலந்த ஏளனம் செய்கிறது. பயிற்றுவிக்கபட்ட மந்திகள் என்று இரான் சொல்லாத குறை https://www.middleeasteye.net/news/irans-foreign-minister-calls-munich-security-conference-circus-amid-nuclear-tensions

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

3 weeks 2 days ago
அண்ணை, வள்ளுவர் தந்த குறளை நன்றாக படித்திருக்கிறார்களோ! இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். "இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருக்குறள் (621) ஆகும். இதன் பொருள்: துன்பம் வரும்போது கலங்காமல், அதை கண்டு சிரித்து மகிழ்ந்து எதிர் கொள்ள வேண்டும். அத்தகைய மன தைரியத்தை விட, துன்பத்தை வெல்லக்கூடிய சிறந்த வழி வேறு எதுவுமில்லை. இது இடுக்கண் அழியாமை அதிகாரத்தைச் சேர்ந்தது.

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

3 weeks 2 days ago
வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696.32 கோடி, கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடி - தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தகவல் சென்னை: “2026-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து இடைக்கால பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின் விவரம் வருமாறு: 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரி வசூலை மேம்படுத்துதல், வரி வசூல் நிர்வாகத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2027-28 ஆம் ஆண்டில் 42964.61 கோடி ரூபாயாக குறையும் எனவும், அதன் தொடர்ச்சியாக 2028-29 ஆம் ஆண்டில் 35,115.33 கோடி ரூபாயாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் மூலதனச் செலவினத்திற்கு வழிவகை செய்யும். 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம் 200 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, பொருளாதாரம் மற்றும் நிதிநிலையில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையிலும், நிதிநிலையை மேம்படுத்துவதில் அரசிற்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது. 2027-28 மற்றும் 2028-29 ஆம் ஆண்டுகளில், இது முறையே, 288 சதவீதம் மற்றும் 230 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம், 2003 இல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கிற்குள் உள்ளது. ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2020-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 20:35 சதவீதம் ஆகும். எனினும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஒன்றிய அரசின் திட்டமாக ஒப்பளிக்கப்பட்ட பின்னர் ஒன்றிய அரசின் கணக்குகளில் இடம்பெறவேண்டிய 9,522.65 கோடி ரூபாயும் மொத்த நிலுவைக் கடன்களில் உள்ளடங்கும். இக்கடன் தொகையை தவிர்த்து மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்த கடன் விகிதம் 20:12 ஆகவும், மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான கடன் தவிர்த்து மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்த கடன், 2027-28 ஆம் ஆண்டில் 25.30 சதவீதமாகவும், 2028-29 ஆம் ஆண்டில் 25.43 சதவீதமாகவும் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, சீரிய நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனை தக்கவைக்க அரசு திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. https://www.hindutamil.in/news/tamilnadu/revenue-deficit-in-the-interim-budget-is-rs-48696-crore

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

3 weeks 2 days ago
IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா டித்வா சூறாவளியால் மண்சரிவுக்குள்ளான பகுதிகளில் கண்காணிப்பு விஜயம் 17 Feb, 2026 | 06:17 PM இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, டித்வா சூறாவளி காரணமாக மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு இன்று (17) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜிவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார். அனர்த்தத்தின்போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளையும், மக்கள் வெளிப்படுத்திய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வையும் அவர் மேலும் பாராட்டினார். இப்போது இங்கு வாழும் சிறு குழந்தைகள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாளை பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் இளைய தலைமுறையினரை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தாம் நம்புவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளிடம் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா குறிப்பிட்டார். தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜீ.எச்.எம். பிரேமசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/238898

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

3 weeks 2 days ago
பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம் Feb 17, 2026 - 05:45 PM பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmlqkfwof001z356ncoy1gyia

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

3 weeks 2 days ago

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

Feb 17, 2026 - 05:45 PM

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmlqkfwof001z356ncoy1gyia