Aggregator

'இது மிகவும் மோசமாக இருக்கும்': சிலிக்கான் பள்ளத்தாக்கில் AI குமிழி வெடிப்பது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.

3 weeks 5 days ago
Nvidia வின் இன்றைய பங்குச்சந்தை மதிப்பு 4.45 டிரில்லியன் டொலர்கள் ! இது பிரான்சின் மொத்த உற்பத்தியை விட சுமார் ஒன்றரை மடங்கு. அப்பிள் மைக்ரோசொஃப்ட் ஆகிய பெரிய நிறுவனங்களைவிட அதிகம். மிகக் குறுகிய காலத்தில் எவ்வாறு இவ்வளவு மதிப்பைப் பெற்றுக் கொண்டது என்பதை நினைத்தால் தலை சுற்றும். தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த நிறுவனம் மீது நம்பிக்கை இல்லை.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 weeks 5 days ago
இப்படி சொந்த நாடுகளை நாசமறுத்துப்போட்டு, அடைக்கலம் தந்த நாடுகளுக்கும் வந்து இங்கேயும் ஊத்த வேலை செய்வது - ஒட்டுமொத்தமாக இப்போ உள்ளூர்வாசிகள் கலக குரல் எழுப்ப காரணங்களில் ஒன்றாகிறது. கேட்டால் வெள்ளைகாரன் மட்டும் சுத்தமா என ஒரு கேள்வி.

விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது?

3 weeks 5 days ago
விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது? 12 Oct 2025, 7:00 AM பாஸ்கர் செல்வராஜ் கரூரில் நடைபெற்ற விஜய் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது எதிர்பாராத விபத்தா? அந்தக் கூட்டத்தைக் கூட்டியவர்களின் பொறுப்பற்ற அரசியல் நோக்கம் செய்த கொலையா? என்றுதான் அந்த விவாதம் சென்று இருக்க வேண்டும். அப்படியான விவாதம் கூட்டத்தை நடத்திய விஜய்யைக் குற்றவாளி ஆக்கி அவரது அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து இருக்கும். அதனைத் தவிர்க்க அரசியல் சமூக ஊடக வலிமையைக் கொண்டு அரசின் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கை குறைபாடுகளால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பதாக விவாதத்தைத் திசைதிருப்பி திமுக அரசைப் பொறுப்பாக்கி முதன்மைக் குற்றவாளி ஆக்கி விஜய்யை இதிலிருந்து விடுவித்தார்கள். விஜய் அரசியலின் குழப்பம் பாதிக்கப்பட்ட மக்களுடன் பொறுப்புடன் நின்று அரசு வேகமாக செயலாற்றியதற்கு உள்நோக்கம் கற்பித்து பொய்யான கூட்ட நெருக்கடி சதிக் கோட்பாட்டைக் கட்டமைத்து அங்கே நடந்தது சதியா? இல்லையா? என்பதாக சொல்லாடலைக் கட்டமைத்தார்கள். இது மரணம் நடந்தவுடன் தொடங்கி விட்டது. இவ்வளவு வேகமாக இதனைக் கட்டமைக்கும் அளவுக்கு அரசியல் அறிவும் ஊடக பலமும் விஜய்யிடம் இல்லை. இம்மாதிரியான குயுக்தியும் அரசியல் ஊடக பலமும் பாஜகவிடம்தான் இருக்கிறது. ஆனால் இதுவரையிலும் பாஜகவை எதிர்ப்பதாக விஜய் பேசிவந்த நிலையில் அவர்கள் ஏன் இந்த அளவுக்கு தனது மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. அது விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையிலான உண்மையான உறவைப் பற்றிய ஐயத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் நுழைவு அதிமுக வாக்கு வங்கியில் உடைப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கருதும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி விஜய்யின் பக்கம் ஒற்றுமையாக நின்று திமுகவைக் குறிவைத்துத் தாக்கினார்கள். திமுக கூட்டணியில் இடதுசாரிகள் திமுகவுடன் நின்றார்கள். சற்று காலதாமதத்துடன் விசிக தலைவர் விஜய்யைப் பாஜகவின் ஆள் என்று தாக்கியதோடு அரசையும் விமர்சனம் செய்தார். காங்கிரசின் ராகுல்காந்தி விஜய்க்கு தொலைபேசியில் மறைமுக ஆதரவு காட்டினார். இந்த அரசியல் நகர்வுகள் விஜய்யின் அரசியல், அதிமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கு எதிராக இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளின் முரண்பட்ட செயல்பாடுகள் காண்பவர்களைக் குழப்புவதாக இருக்கிறது. வெற்றி எண்ணிக்கையும் செயற்கை நுண்ணறிவும் இந்தக் குழப்பத்தைத் தேர்தல் அரசியலின் நோக்கத்தில் இருந்து பார்ப்பதன் மூலம்தான் தீர்க்க முடியும். தேர்தலின் நோக்கம் வெற்றிக்கான வாக்கு எண்ணிக்கையை அடைந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து “உரிய பலனைப்” பெற்றுக் கொள்வது. தேர்தலில் வெற்றிபெற தேவையான வாக்கு எண்ணிக்கையை அடைய ஒவ்வொரு ஊரிலும் உள்ள வாக்காளர், அவரது சாதி, பொருளாதார அரசியல் பின்புலம் அனைத்தும் கட்சிகளிடம் தரவுகளாகத் திரட்டப்பட்டு விட்டது. தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு அந்தத் தரவுகளைப் பகுத்துப் பார்த்து எவ்வளவு வாக்குகள் தன்னிடம் இருக்கிறது; வெற்றியடைய எவ்வளவு வாக்குகள் வேண்டும் என்பதைக் களஆய்வு, மக்களின் மனநிலை குறித்த கருத்துக் கணிப்புகள் கொண்டு துல்லியமாகக் கணக்கிடும் சூழல் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் தேர்தல் அரசியலின் பரிமாணத்தையே மாற்றி இருக்கிறது எனலாம். அரசியல், பண, ஊடக பலமும் இந்த நுட்பத்தையும் கைக்கொண்டவர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையை தேர்தல் சனநாயகம் அடைந்து இருக்கிறது. திமுக-அதிமுக ஆகிய இருகட்சிகளும் முப்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று சமபலத்தில் இருந்து வருகின்றன. பகுதிவாரியாக இதில் வேறுபாடு நிலவினாலும் சமீபத்திய தேர்தல் வரை இதில் பெரிய மாற்றம் இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வலுவாக இருக்கும் மற்ற கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு வெற்றிக்கான எண்ணிக்கையை அடைய இருதரப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தார்கள். ஜெயலிலிதா இறப்புக்குப்பின் பாஜக அதிமுகவைத் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. அடிமைப்பட்டு அதிமுகவால் ஒன்றியத்திடம் அடகு வைக்கப்பட்ட தமிழ்நாட்டில் அப்போது பார்ப்பனியம் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது. கொள்கை அரசியலாக மாறிய தேர்தல் அரசியல் பாஜகவின் அந்த நுழைவு தமிழ்நாட்டு அரசியலில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு தரப்பாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர் தரப்பாகவும் மாற்றியது. அது பிற்போக்கு பார்ப்பனிய ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அதற்கு எதிரான சமூகநீதி முற்போக்கு திராவிட இடதுசாரிகள் இன்னொரு பக்கம் என்பதாகத் தெளிவாகக் கோடிட்டு பிரித்தது. வெறும் எண்ணிக்கை சார்ந்த வாக்கு அரசியல் என்பதைத் தாண்டி பார்ப்பனிய எதிர்ப்பு- மாநில தன்னாட்சி கொள்கை சார்ந்த அரசியலாக தமிழ்நாட்டு அரசியலை மாற்றி அமைத்தது. அப்படிக் கொள்கை சார்ந்து பிரிந்தும் அதன்பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் திமுக அணி வெற்றி பெற்று இருப்பதை வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது வாக்காளர்களிடமும் தமிழக முதலாளிகளிடமும் நிலவும் இருவேறு பண்புகளின் வெளிப்பாடுகள். வாக்காளர்கள் பெரும்பாலும் பிற்போக்கு குழுவாத சாதிய எண்ணம் கொண்டவர்கள் என்றாலும் அந்தச் சாதியவாத குழுக்களுக்குள் ஏற்றத் தாழ்வு வளர்ந்து சாதியக் குழுக்கள் உடைப்பைக் கண்டிருக்கின்றன. அதனால் முன்பு வாக்காளர்களிடம் மேலோங்கி இருந்த சாதியக் குழுவாத எண்ணத்தைப் பின்தள்ளி சொந்த நலன் சார்ந்த வர்க்க எண்ணம் தற்போது ஆக்கிரமித்து வருவதை இது உணர்த்துகிறது. இது தற்காலிகமான அளவு மாற்றம்தான். முழுமையான வர்க்க பண்பு மாற்றமல்ல என்றாலும் இது கணக்கில் கொள்ளப்பட வேண்டிய மாற்றம். இது சமூகத்தில் நிலவும் பழைய சாதிய பார்ப்பனிய அரசியல் பண்பாடு மற்றும் புதிய வளர்ந்து வரும் சாதியச் சமத்துவ சமூகநீதி அரசியல் பண்பாடு ஆகிய இருவேறு கூறுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படி மேலே இருவேறு அரசியல் பண்பாட்டுக் கூறுகள் நிலவுகிறது என்றால் அதனைத் தாங்கி நிற்கும் பொருளாதார அடித்தளத்தில் பார்ப்பனிய ஆதரவு முதலாளிகள், சமூகநீதி ஆதரவு முதலாளிகள் என்ற இருபிரிவுகள் இருக்கிறது என்றுதானே பொருள். ஆனால் எல்லோரும் முதலாளிகள்தான்; திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் திராவிடக் கட்சிகள்தான் என்பதாக நமது கண்கள் இரண்டையும் ஒன்றாக இதுவரை கண்டு வந்திருக்கிறது. ஆனால் அதனுள் முரண்பட்ட இருகூறுகள் இயங்கி வந்திருக்கிறது. (உலகில் ஏகாதிபத்தியத்தோடு சோசலிசமும் வளர்ந்த காலத்தில் பொதுவுடைக் கூறுகள் நம்மிடம் தோன்றி சோசலிச வீழ்ச்சியுடன் அந்தக் கூறும் வீழ்ச்சி கண்டிருக்கிறது) இந்த வேறுபாடு பாஜகவின் நுழைவிற்குப் பிறகு கூர்மையடைந்து அது தேர்தல் அரசியலில் இருந்து கொள்கை அரசியல் மாற்றமாக வெளிப்பட்டு இருக்கிறது. வாக்காளர்களையும் முதலாளிகளையும் அவரவர் பண்புக்கு ஏற்ப இருபக்கமாகப் பிரித்து இருக்கிறது. அப்படிப் பிரிந்த பிறகு விஜய் ஏன் இருதரப்பையும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பது தெரியாததால் அரசியலாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அது தேர்தல் வெற்றிக்கான எண்ணை அடைய செய்யப்பட்ட ஏற்பாடு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்கும். பாஜகவின் உத்தியால் குழம்பும் அரசியலாளர்கள் நமது சமூகத்தில் நிலைப்பெற்று இருக்கும் சாதியக் குழுவாத வேரினைப் பற்றி தேர்தலில் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி எண்ணை எட்ட பல உத்திகளை வகுத்து வருகிறது. 1. எதிர்த்தரப்பின் ஒற்றுமையை உடைத்து தன்பக்கம் ஈர்ப்பது 2. எந்தப்பக்கமும் சாராத வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்ப்பது 3. சார்புநிலையற்ற வாக்காளர்களை எதிர்ப்பக்கம் சாராமல் பிரித்து எடுப்பது ஆகிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. வாக்காளரிடம் பிற்போக்கான பழைய சாதிய மதிப்பீட்டை இந்துத்துவ அரசியலின் மூலம் தூண்டி தன்பக்கம் ஈர்த்து தனது எண்ணிக்கை பலத்தைக் கூட்ட பாஜக-அதிமுக பாமக தரப்பு செய்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காரணம், நடுத்தர வயது வாக்காளர்கள் இருதரப்பில் ஒருவராகத் தம்மை வலுவாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியில் இருப்பவர்கள் மத்தியில் இந்துத்துவ அரசியல் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அந்த வாக்குகள் இவர்களுக்கு கிடைக்காது என்றால் எதிரணிக்கு போகாமல் தடுப்பதுதான் சரியான உத்தி. சீமான் மூலமாக ஈழ திமுக எதிர்ப்பு அரசியல் மூலம் இளைஞர்களைத் திரட்டி தனியாக நிற்கவைத்து வாக்குகளைப் பிரிக்கும் முயற்சி முதலில் கொஞ்சம் பலன் கொடுத்தது. ஆனால் காலப்போக்கில் அவரின் பிழைப்புவாதம் அம்பலப்பட்டு அங்கே கூட்டம் குறைந்து ஆடு, மாடு, மலை, காடுகளுடன் பேசும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். நடிகர் கமல் தனது திரைப்படக் கவர்ச்சியை மூலதனமாக்கி இந்துத்துவ-திமுக மையவாத நிலை எடுத்து மிதமான சாதிய எண்ணம் கொண்ட வாக்காளர்களைப் பிரிக்கும் உத்தியும் தோல்வி. அடுத்து ஆதவ் அர்ஜுனா மூலமாக விசிகவைப் பிரித்து அதிமுகவுடன் சேர்த்து வெற்றி எண்ணிக்கையை அடையும் முயற்சியும் தோல்வி அடைந்தது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்தபோது விஜய்யை விசிகவுடன் இணைக்கும் முயற்சிக்கு திருமா ஒத்துழைக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ஒத்துழைத்து இருந்தால் அது திமுகவின் கொள்கை அரசியலைக் குப்பையில் வீசி எம்ஜிஆர் என்ற நடிகரின் கவர்ச்சியில் கரைந்ததைப் போலவே அவரது கொள்கை அரசியலும் கரைந்து இருக்கும். அங்கிருந்து விரட்டப்பட்ட ஆதவ் நேராக விஜய்யுடன் இணைந்தார். இம்முறை கமலின் மையமான அரசியலுக்கு பதிலாகத் தீவிர திமுக எதிர்ப்பு கொஞ்சம் பாஜக எதிர்ப்பு உத்தி. உறங்கிக் கிடந்த விஜய்யின் கட்சி வெளியில் வந்து அரசியல்மயப்படாத இளம் வாக்களர்களைக் குறிவைத்து இயங்கியது. இதனால் தனது இடத்தைப் பறிகொடுக்கும் சீமான், விஜய் எதிர்ப்பு நிலையெடுத்து அவரின் மீது பாய்ந்தது இங்கே புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் விஜய் பிரித்தெடுக்கும் இளம் வாக்காளர்கள் யாருடைய வாக்குவங்கியை உடைக்கும் என்பதில் அரசியல் ஆய்வாளர்களுக்கு குழப்பம். விஜய் அரசியலின் சாதியக் கோணம் காரணம் இந்த நகரவாசிகளுக்குப் பெரும்பாலான கிராமத்து ஆதிக்கசாதி இளவட்டங்கள் அஜித் ரசிகராகவும் ஒடுக்கப்பட்ட சாதி இளவட்டங்கள் விஜய் ரசிகராகவும் இருக்கும் சாதியக் கோணம் தெரியாது. எனது தலைமுறையிடம் இந்த எண்ணம் வலுவாக இருந்ததை நேரில் கண்டதுண்டு. இந்தத் தலைமுறையிடம் சற்று அது குறைந்திருக்கலாம். மாறியிருக்க முடியாது. இந்தக் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடத்தக்க அளவு கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் ஒடுக்கப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருப்பதும் அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. மேலும் விசிக கட்சியினர், விஜய் ரசிகர்கள் ஆகிய இருவரின் தரவுகளையும் பார்த்த ஆதவ் அர்ஜுனாவிற்கு இந்த இரண்டும் ஒன்றுபடும் இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அது தெரிந்தேகூட இருவரின் இணைவுக்கு முயன்று இருக்கலாம். கரூர் மரணத்தின் நேர்காணலில் மென்மை காட்டிய திருமா, பாஜக-வின் விஜய் அரசியலைக் காக்க கம்பு சுற்றியதைப் பார்த்து விஜய், ஆதவ் ஆகியோர் மீது கடுமை காட்டுவது அவருக்கே இப்போதுதான் இது தெரிகிறது போலிருக்கிறது. எனவே விஜய் தனித்துப் போட்டியிட முடிவுசெய்து திமுகவை முழுமூச்சாகத் தாக்கி அவ்வப்போது பாஜகவை ஊறுகாய்போல தொட்டுக் கொண்டு அரசியல்மயப்படாத மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள இளவட்டங்களின் வாக்குகளைப் பிரிக்கும் அரசியல் திமுக அணியின் வாக்கு எண்ணிக்கையை மாற்றும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. முந்தைய மக்கள்நல கூட்டணி அனுபவமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் பிரிவது திமுக வெற்றியையே பாதிக்கும் என்றுதான் சொல்கிறது. இந்த உடைப்போடு பீகாரில் கர்நாடகாவில் செய்த “சிறப்பு வாக்காளர் திருத்தமும்” தமிழ்நாட்டுக்கு வந்தால் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி இலக்கைத் தொடும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அம்பலப்பட்ட கவர்ச்சி அரசியல் இந்தக் கணக்கு எல்லாம் வேலை செய்வதற்கு முன்பாகவே கரூர் மரணம் நடந்து எல்லாவற்றையும் கலைத்து இருக்கிறது. அந்த இக்கட்டான சூழலில் பாஜக, விஜய்யைக் காப்பாற்ற வந்தால் இருவருக்கும் இடையிலான உறவு பற்றிய ஐயத்தை எழுப்பும். கைவிட்டால் அவரை அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றி வெற்றி இலக்கை எட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற நிலையில் களத்தில் இறங்கி கைகொடுத்து தூக்கி இருக்கிறார்கள். அம்பலப்பட்ட பின்பு தனித்து விடுவார்களா? இணைத்துக் கொள்வார்களா? என்று தெரியவில்லை. எல்லாம் சரி! ராகுல்காந்தி இதற்குள் ஏன் நுழையவேண்டும்? என்ற கேள்வி இங்கே தொக்கி நிற்கிறது. திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசின் வாக்குகள் கைகொடுத்து தூக்கிவிடும் அளவு குறைவு. பாதி இந்துத்துவம் பேசிய காங்கிரசின் வாக்குகளைத் தீவிர இந்துத்துவம் பேசிய பாஜகவிடம் இழந்துவிட்டது. எனவே திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசு தேவையில்லாத சுமை. ஆனால் ஒன்றிய பார்ப்பனியத்துடன் முட்டிமோத அவசியமான துணை. இந்தக் கூட்டைத் தக்கவைத்துக் கொண்டு வரப்போகும் தேர்தலில் குறைவான தொகுதிகளைக் கொடுத்து சுமையைக் குறைத்துக் கொள்ள நினைக்கிறது திமுக. தமிழ்நாட்டில் தமது பேரவலிமையைக் கூட்ட காங்கிரசிடம் எந்த அரசியல் பொருளாதார அடித்தளமும் இல்லை. அதனைப் பாஜக வளர்த்துவிடும் கவர்ச்சி நடிகர்களுடன் கைகோர்த்து சரிசெய்ய நினைக்கிறது. பாஜகவின் அழுத்தத்தைக் குறைத்து தனது அரசியல் தற்சார்பையும் பேரவலிமையையும் கூட்டிக் கொள்ள அரசியல் நடிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நகர்வுகள் திமுக கூட்டணியின் வலுவைக் குறைப்பது என்ற நோக்கத்திற்கு மேலும் வலுசேர்ப்பதால் பாஜக தாராளமாக அனுமதிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் அது முரணாகவும் குழப்பமாகவும் இருப்பதால் அவரவர் போக்கில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த நகர்வுகள் திமுக தரப்பு வாக்குகளை உடைப்பது என்ற ஒற்றை நோக்கத்தில் இணைவதைக் காணத்தவறுகிறார்கள். முற்போக்கு அரசியல் ஒற்றுமையை உடைக்கும் உத்தி இப்போதைக்கு இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில் இரண்டு அணிகளில் ஒன்றின் வெற்றிக்காகப் பயன்படும் வாய்ப்பு மட்டுமே உள்ளதையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இவர்களின் கவர்ச்சி அரசியல் பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, மாநில தன்னாட்சி கொள்கை அரசியல் எதிர்ப்பை நீர்க்கச் செய்து முற்போக்கு பெரியாரிய அம்பேத்கரிய இடசாரிகளின் ஒற்றுமையை உடைத்து தோற்கடிக்க முன்னெடுக்கப்படும் அரசியல் உத்தி என்றுதான் முடிவுக்கு வரவேண்டி உள்ளது. இது புதிதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது ஏன் அப்படியான தேவை மீண்டும் எழுந்திருக்கிறது என்றுதான் தெரியவேண்டும். உள்ளத்தில் பார்ப்பனியத்தை வைத்துக்கொண்டு வெளியில் சோசலிச சனநாயகம் பேசிய காங்கிரசு படிப்படியாக மாறி பாதி இந்துத்துவம் பேசி இப்போது சமூகநீதி அரசியல் பேசும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனை வெறும் அரசியல் மாற்றமாகப் பார்ப்பவர்கள் துணைக்கண்ட, தமிழக வரலாறு அறியாதவர்கள். முரணான இந்த இருகூறுகளும் திடீரென தோன்றி வளர்ந்ததல்ல; அப்படி வளரவும் முடியாது. இவை பார்ப்பனிய மற்றும் தேசியஇன முதலாளித்துவ தேவையில் இருந்து வரலாற்றின் வளர்ச்சிநிலை போக்கில் உருவாகி வளர்ந்தது. ஒன்றிய பார்ப்பனியம் மட்டும் இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்களின் அரசியலைப் பின்னிருந்து நடத்துவதில்லை. தமிழ்நாட்டுக்குள் இருக்கும் ஒரு முதலாளித்துவ பிரிவும் இதில் இணைந்து இயங்குகிறது. எனவே இது பார்ப்பனிய-தேசியஇன முதலாளித்துவ முரண் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்குள் இருக்கும் இருவேறு முதலாளித்துவ முரணின் வெளிப்பாடும்கூட. இந்தத் தமிழக இருவேறு முதலாளித்துவ முரணின் வாரலாற்று வளர்ச்சியை அறிந்து சரியான முறையைக் கைக்கொண்டு தீர்ப்பது எப்படி என்று அடுத்த கட்டுரையில் காணலாம். https://minnambalam.com/who-is-vijays-politics-for-and-whose-votes-is-targeting/

விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது?

3 weeks 5 days ago

விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது?

12 Oct 2025, 7:00 AM

Who is Vijays politics for ?

பாஸ்கர் செல்வராஜ்

கரூரில் நடைபெற்ற விஜய் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி  மக்கள் உயிரிழந்தது எதிர்பாராத விபத்தா?  அந்தக் கூட்டத்தைக் கூட்டியவர்களின் பொறுப்பற்ற அரசியல் நோக்கம் செய்த கொலையா? என்றுதான் அந்த விவாதம் சென்று இருக்க வேண்டும். அப்படியான விவாதம் கூட்டத்தை நடத்திய விஜய்யைக் குற்றவாளி ஆக்கி அவரது அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து இருக்கும்.

அதனைத் தவிர்க்க அரசியல் சமூக ஊடக வலிமையைக் கொண்டு  அரசின் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கை குறைபாடுகளால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பதாக விவாதத்தைத் திசைதிருப்பி திமுக அரசைப் பொறுப்பாக்கி முதன்மைக் குற்றவாளி ஆக்கி விஜய்யை இதிலிருந்து விடுவித்தார்கள். 

விஜய் அரசியலின் குழப்பம்

பாதிக்கப்பட்ட மக்களுடன் பொறுப்புடன் நின்று அரசு வேகமாக செயலாற்றியதற்கு உள்நோக்கம் கற்பித்து பொய்யான கூட்ட நெருக்கடி சதிக் கோட்பாட்டைக் கட்டமைத்து அங்கே நடந்தது சதியா? இல்லையா? என்பதாக சொல்லாடலைக் கட்டமைத்தார்கள். இது மரணம் நடந்தவுடன் தொடங்கி விட்டது. இவ்வளவு வேகமாக இதனைக் கட்டமைக்கும் அளவுக்கு அரசியல் அறிவும் ஊடக பலமும் விஜய்யிடம் இல்லை. 

இம்மாதிரியான குயுக்தியும் அரசியல் ஊடக பலமும் பாஜகவிடம்தான் இருக்கிறது. ஆனால் இதுவரையிலும் பாஜகவை எதிர்ப்பதாக விஜய் பேசிவந்த நிலையில் அவர்கள் ஏன் இந்த அளவுக்கு தனது மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. அது விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையிலான உண்மையான உறவைப் பற்றிய ஐயத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் நுழைவு அதிமுக வாக்கு வங்கியில் உடைப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கருதும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி விஜய்யின் பக்கம் ஒற்றுமையாக நின்று திமுகவைக் குறிவைத்துத் தாக்கினார்கள்.

திமுக கூட்டணியில் இடதுசாரிகள் திமுகவுடன் நின்றார்கள். சற்று காலதாமதத்துடன் விசிக தலைவர் விஜய்யைப் பாஜகவின் ஆள் என்று தாக்கியதோடு அரசையும் விமர்சனம் செய்தார். காங்கிரசின் ராகுல்காந்தி விஜய்க்கு தொலைபேசியில் மறைமுக ஆதரவு காட்டினார். இந்த அரசியல் நகர்வுகள் விஜய்யின் அரசியல், அதிமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கு எதிராக இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளின் முரண்பட்ட செயல்பாடுகள் காண்பவர்களைக் குழப்புவதாக இருக்கிறது. 

வெற்றி எண்ணிக்கையும் செயற்கை நுண்ணறிவும்  

Who is Vijays politics for ?

இந்தக் குழப்பத்தைத் தேர்தல் அரசியலின் நோக்கத்தில் இருந்து பார்ப்பதன் மூலம்தான் தீர்க்க முடியும். தேர்தலின் நோக்கம் வெற்றிக்கான வாக்கு எண்ணிக்கையை அடைந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து “உரிய பலனைப்” பெற்றுக் கொள்வது. தேர்தலில் வெற்றிபெற தேவையான வாக்கு எண்ணிக்கையை அடைய ஒவ்வொரு ஊரிலும் உள்ள வாக்காளர், அவரது சாதி, பொருளாதார அரசியல் பின்புலம் அனைத்தும் கட்சிகளிடம் தரவுகளாகத் திரட்டப்பட்டு விட்டது.

தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு அந்தத் தரவுகளைப் பகுத்துப் பார்த்து எவ்வளவு வாக்குகள் தன்னிடம் இருக்கிறது; வெற்றியடைய எவ்வளவு வாக்குகள் வேண்டும் என்பதைக் களஆய்வு, மக்களின் மனநிலை குறித்த கருத்துக் கணிப்புகள் கொண்டு துல்லியமாகக் கணக்கிடும் சூழல் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் தேர்தல் அரசியலின் பரிமாணத்தையே மாற்றி இருக்கிறது எனலாம். அரசியல், பண, ஊடக பலமும் இந்த நுட்பத்தையும் கைக்கொண்டவர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையை தேர்தல் சனநாயகம் அடைந்து இருக்கிறது. 

திமுக-அதிமுக ஆகிய இருகட்சிகளும் முப்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று சமபலத்தில் இருந்து வருகின்றன. பகுதிவாரியாக இதில் வேறுபாடு நிலவினாலும் சமீபத்திய தேர்தல் வரை இதில் பெரிய மாற்றம் இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வலுவாக இருக்கும் மற்ற கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு வெற்றிக்கான எண்ணிக்கையை அடைய இருதரப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தார்கள். ஜெயலிலிதா இறப்புக்குப்பின்  பாஜக அதிமுகவைத் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. அடிமைப்பட்டு அதிமுகவால் ஒன்றியத்திடம் அடகு வைக்கப்பட்ட தமிழ்நாட்டில் அப்போது பார்ப்பனியம் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது. 

கொள்கை அரசியலாக மாறிய தேர்தல் அரசியல்

பாஜகவின் அந்த நுழைவு தமிழ்நாட்டு அரசியலில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு தரப்பாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர் தரப்பாகவும் மாற்றியது. அது பிற்போக்கு பார்ப்பனிய ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அதற்கு எதிரான சமூகநீதி முற்போக்கு திராவிட இடதுசாரிகள் இன்னொரு பக்கம் என்பதாகத் தெளிவாகக் கோடிட்டு பிரித்தது. வெறும் எண்ணிக்கை சார்ந்த வாக்கு அரசியல் என்பதைத் தாண்டி பார்ப்பனிய எதிர்ப்பு- மாநில தன்னாட்சி கொள்கை சார்ந்த அரசியலாக தமிழ்நாட்டு அரசியலை மாற்றி அமைத்தது. 

Who is Vijays politics for ?

அப்படிக் கொள்கை சார்ந்து பிரிந்தும் அதன்பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் திமுக அணி வெற்றி பெற்று இருப்பதை வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது வாக்காளர்களிடமும் தமிழக முதலாளிகளிடமும் நிலவும் இருவேறு பண்புகளின் வெளிப்பாடுகள். வாக்காளர்கள்  பெரும்பாலும் பிற்போக்கு  குழுவாத சாதிய எண்ணம் கொண்டவர்கள் என்றாலும் அந்தச் சாதியவாத குழுக்களுக்குள் ஏற்றத் தாழ்வு வளர்ந்து சாதியக் குழுக்கள் உடைப்பைக் கண்டிருக்கின்றன. அதனால் முன்பு வாக்காளர்களிடம் மேலோங்கி இருந்த சாதியக் குழுவாத எண்ணத்தைப் பின்தள்ளி சொந்த நலன் சார்ந்த வர்க்க எண்ணம் தற்போது ஆக்கிரமித்து வருவதை இது உணர்த்துகிறது. இது தற்காலிகமான அளவு மாற்றம்தான். முழுமையான வர்க்க பண்பு மாற்றமல்ல என்றாலும் இது கணக்கில் கொள்ளப்பட வேண்டிய மாற்றம். 

இது சமூகத்தில் நிலவும் பழைய சாதிய பார்ப்பனிய அரசியல் பண்பாடு மற்றும் புதிய வளர்ந்து வரும் சாதியச் சமத்துவ சமூகநீதி அரசியல் பண்பாடு ஆகிய இருவேறு கூறுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படி மேலே இருவேறு அரசியல் பண்பாட்டுக் கூறுகள் நிலவுகிறது என்றால் அதனைத் தாங்கி நிற்கும் பொருளாதார அடித்தளத்தில் பார்ப்பனிய ஆதரவு முதலாளிகள், சமூகநீதி ஆதரவு முதலாளிகள் என்ற இருபிரிவுகள் இருக்கிறது என்றுதானே பொருள். ஆனால் எல்லோரும் முதலாளிகள்தான்; திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் திராவிடக் கட்சிகள்தான் என்பதாக நமது கண்கள் இரண்டையும் ஒன்றாக இதுவரை கண்டு வந்திருக்கிறது. ஆனால் அதனுள் முரண்பட்ட இருகூறுகள் இயங்கி வந்திருக்கிறது. (உலகில் ஏகாதிபத்தியத்தோடு சோசலிசமும் வளர்ந்த காலத்தில் பொதுவுடைக் கூறுகள் நம்மிடம் தோன்றி சோசலிச வீழ்ச்சியுடன் அந்தக் கூறும் வீழ்ச்சி கண்டிருக்கிறது)

இந்த வேறுபாடு பாஜகவின் நுழைவிற்குப் பிறகு கூர்மையடைந்து அது தேர்தல் அரசியலில் இருந்து கொள்கை அரசியல் மாற்றமாக வெளிப்பட்டு இருக்கிறது. வாக்காளர்களையும் முதலாளிகளையும் அவரவர் பண்புக்கு ஏற்ப இருபக்கமாகப் பிரித்து இருக்கிறது. அப்படிப் பிரிந்த பிறகு விஜய் ஏன் இருதரப்பையும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பது தெரியாததால் அரசியலாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அது தேர்தல் வெற்றிக்கான எண்ணை அடைய செய்யப்பட்ட ஏற்பாடு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்கும்.  

பாஜகவின் உத்தியால் குழம்பும் அரசியலாளர்கள்

நமது சமூகத்தில் நிலைப்பெற்று இருக்கும் சாதியக் குழுவாத வேரினைப் பற்றி தேர்தலில் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி எண்ணை எட்ட பல உத்திகளை வகுத்து வருகிறது. 

1. எதிர்த்தரப்பின் ஒற்றுமையை உடைத்து தன்பக்கம் ஈர்ப்பது 

2. எந்தப்பக்கமும் சாராத வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்ப்பது 

3. சார்புநிலையற்ற வாக்காளர்களை எதிர்ப்பக்கம் சாராமல் பிரித்து எடுப்பது 

ஆகிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. 

வாக்காளரிடம் பிற்போக்கான பழைய சாதிய மதிப்பீட்டை இந்துத்துவ அரசியலின் மூலம் தூண்டி தன்பக்கம் ஈர்த்து தனது எண்ணிக்கை பலத்தைக் கூட்ட பாஜக-அதிமுக பாமக தரப்பு செய்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காரணம், நடுத்தர வயது வாக்காளர்கள் இருதரப்பில் ஒருவராகத் தம்மை வலுவாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியில் இருப்பவர்கள் மத்தியில் இந்துத்துவ அரசியல் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அந்த வாக்குகள் இவர்களுக்கு கிடைக்காது என்றால் எதிரணிக்கு போகாமல் தடுப்பதுதான் சரியான உத்தி. 

Who is Vijays politics for ?

சீமான் மூலமாக ஈழ திமுக எதிர்ப்பு அரசியல் மூலம் இளைஞர்களைத் திரட்டி தனியாக நிற்கவைத்து வாக்குகளைப் பிரிக்கும் முயற்சி முதலில் கொஞ்சம் பலன் கொடுத்தது. ஆனால் காலப்போக்கில் அவரின் பிழைப்புவாதம் அம்பலப்பட்டு அங்கே கூட்டம் குறைந்து ஆடு, மாடு, மலை, காடுகளுடன் பேசும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். நடிகர் கமல் தனது திரைப்படக் கவர்ச்சியை மூலதனமாக்கி இந்துத்துவ-திமுக மையவாத நிலை எடுத்து மிதமான சாதிய எண்ணம் கொண்ட வாக்காளர்களைப் பிரிக்கும் உத்தியும் தோல்வி. 

அடுத்து ஆதவ் அர்ஜுனா மூலமாக விசிகவைப் பிரித்து அதிமுகவுடன் சேர்த்து வெற்றி எண்ணிக்கையை அடையும் முயற்சியும் தோல்வி அடைந்தது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்தபோது விஜய்யை விசிகவுடன் இணைக்கும் முயற்சிக்கு திருமா ஒத்துழைக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ஒத்துழைத்து இருந்தால் அது திமுகவின் கொள்கை அரசியலைக் குப்பையில் வீசி எம்ஜிஆர் என்ற நடிகரின் கவர்ச்சியில் கரைந்ததைப் போலவே அவரது கொள்கை அரசியலும் கரைந்து இருக்கும். அங்கிருந்து விரட்டப்பட்ட ஆதவ் நேராக விஜய்யுடன் இணைந்தார். 

Who is Vijays politics for ?

இம்முறை கமலின் மையமான அரசியலுக்கு பதிலாகத் தீவிர திமுக எதிர்ப்பு கொஞ்சம் பாஜக எதிர்ப்பு உத்தி. உறங்கிக் கிடந்த விஜய்யின் கட்சி வெளியில் வந்து அரசியல்மயப்படாத இளம் வாக்களர்களைக் குறிவைத்து இயங்கியது. இதனால் தனது இடத்தைப் பறிகொடுக்கும் சீமான், விஜய் எதிர்ப்பு நிலையெடுத்து அவரின் மீது பாய்ந்தது இங்கே புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் விஜய் பிரித்தெடுக்கும் இளம் வாக்காளர்கள் யாருடைய வாக்குவங்கியை உடைக்கும் என்பதில் அரசியல் ஆய்வாளர்களுக்கு குழப்பம்.

விஜய் அரசியலின் சாதியக் கோணம் 

காரணம் இந்த நகரவாசிகளுக்குப் பெரும்பாலான கிராமத்து ஆதிக்கசாதி இளவட்டங்கள் அஜித் ரசிகராகவும் ஒடுக்கப்பட்ட சாதி இளவட்டங்கள் விஜய் ரசிகராகவும் இருக்கும் சாதியக் கோணம் தெரியாது. எனது தலைமுறையிடம் இந்த எண்ணம் வலுவாக இருந்ததை நேரில் கண்டதுண்டு. இந்தத் தலைமுறையிடம் சற்று அது குறைந்திருக்கலாம். மாறியிருக்க முடியாது. இந்தக் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடத்தக்க அளவு கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் ஒடுக்கப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருப்பதும் அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. 

Who is Vijays politics for ?

மேலும் விசிக கட்சியினர், விஜய் ரசிகர்கள் ஆகிய இருவரின் தரவுகளையும் பார்த்த ஆதவ் அர்ஜுனாவிற்கு இந்த இரண்டும் ஒன்றுபடும் இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அது தெரிந்தேகூட இருவரின் இணைவுக்கு முயன்று இருக்கலாம். கரூர் மரணத்தின் நேர்காணலில் மென்மை காட்டிய திருமா, பாஜக-வின் விஜய் அரசியலைக் காக்க கம்பு சுற்றியதைப் பார்த்து விஜய், ஆதவ் ஆகியோர் மீது கடுமை காட்டுவது அவருக்கே இப்போதுதான் இது தெரிகிறது போலிருக்கிறது.

எனவே விஜய் தனித்துப் போட்டியிட முடிவுசெய்து திமுகவை முழுமூச்சாகத் தாக்கி அவ்வப்போது பாஜகவை ஊறுகாய்போல தொட்டுக் கொண்டு அரசியல்மயப்படாத மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள இளவட்டங்களின் வாக்குகளைப் பிரிக்கும் அரசியல் திமுக அணியின் வாக்கு எண்ணிக்கையை மாற்றும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. முந்தைய மக்கள்நல கூட்டணி அனுபவமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் பிரிவது திமுக வெற்றியையே பாதிக்கும் என்றுதான் சொல்கிறது. இந்த உடைப்போடு பீகாரில் கர்நாடகாவில் செய்த “சிறப்பு வாக்காளர் திருத்தமும்” தமிழ்நாட்டுக்கு வந்தால் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி இலக்கைத் தொடும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. 

அம்பலப்பட்ட கவர்ச்சி அரசியல்

இந்தக் கணக்கு எல்லாம் வேலை செய்வதற்கு முன்பாகவே கரூர் மரணம் நடந்து எல்லாவற்றையும் கலைத்து இருக்கிறது. அந்த இக்கட்டான சூழலில் பாஜக, விஜய்யைக் காப்பாற்ற வந்தால் இருவருக்கும் இடையிலான உறவு பற்றிய ஐயத்தை எழுப்பும். கைவிட்டால் அவரை அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றி வெற்றி இலக்கை எட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற நிலையில் களத்தில் இறங்கி கைகொடுத்து தூக்கி இருக்கிறார்கள். அம்பலப்பட்ட பின்பு தனித்து விடுவார்களா? இணைத்துக் கொள்வார்களா? என்று தெரியவில்லை. எல்லாம் சரி! ராகுல்காந்தி இதற்குள் ஏன் நுழையவேண்டும்? என்ற கேள்வி இங்கே தொக்கி நிற்கிறது. 

Who is Vijays politics for ?

திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசின் வாக்குகள் கைகொடுத்து தூக்கிவிடும் அளவு குறைவு. பாதி இந்துத்துவம் பேசிய காங்கிரசின் வாக்குகளைத் தீவிர இந்துத்துவம் பேசிய பாஜகவிடம் இழந்துவிட்டது. எனவே திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசு தேவையில்லாத சுமை. ஆனால் ஒன்றிய பார்ப்பனியத்துடன் முட்டிமோத அவசியமான துணை. இந்தக் கூட்டைத் தக்கவைத்துக் கொண்டு வரப்போகும் தேர்தலில் குறைவான தொகுதிகளைக் கொடுத்து சுமையைக் குறைத்துக் கொள்ள நினைக்கிறது திமுக. தமிழ்நாட்டில் தமது பேரவலிமையைக் கூட்ட காங்கிரசிடம் எந்த அரசியல் பொருளாதார அடித்தளமும் இல்லை. அதனைப் பாஜக வளர்த்துவிடும் கவர்ச்சி நடிகர்களுடன் கைகோர்த்து சரிசெய்ய நினைக்கிறது. 

பாஜகவின் அழுத்தத்தைக் குறைத்து தனது அரசியல் தற்சார்பையும் பேரவலிமையையும் கூட்டிக் கொள்ள அரசியல் நடிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நகர்வுகள் திமுக கூட்டணியின் வலுவைக் குறைப்பது என்ற நோக்கத்திற்கு மேலும் வலுசேர்ப்பதால் பாஜக தாராளமாக அனுமதிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் அது  முரணாகவும் குழப்பமாகவும் இருப்பதால் அவரவர் போக்கில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த நகர்வுகள் திமுக தரப்பு வாக்குகளை உடைப்பது என்ற ஒற்றை நோக்கத்தில் இணைவதைக் காணத்தவறுகிறார்கள்.

முற்போக்கு அரசியல் ஒற்றுமையை உடைக்கும் உத்தி 

இப்போதைக்கு இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில் இரண்டு அணிகளில் ஒன்றின் வெற்றிக்காகப் பயன்படும் வாய்ப்பு மட்டுமே உள்ளதையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இவர்களின் கவர்ச்சி அரசியல் பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, மாநில தன்னாட்சி கொள்கை அரசியல் எதிர்ப்பை நீர்க்கச் செய்து முற்போக்கு பெரியாரிய அம்பேத்கரிய இடசாரிகளின் ஒற்றுமையை உடைத்து தோற்கடிக்க முன்னெடுக்கப்படும் அரசியல் உத்தி என்றுதான் முடிவுக்கு வரவேண்டி உள்ளது. 

Who is Vijays politics for ?

இது புதிதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது ஏன் அப்படியான தேவை மீண்டும் எழுந்திருக்கிறது என்றுதான் தெரியவேண்டும். உள்ளத்தில் பார்ப்பனியத்தை வைத்துக்கொண்டு வெளியில் சோசலிச சனநாயகம் பேசிய காங்கிரசு படிப்படியாக மாறி பாதி இந்துத்துவம் பேசி இப்போது சமூகநீதி அரசியல் பேசும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனை வெறும் அரசியல் மாற்றமாகப் பார்ப்பவர்கள் துணைக்கண்ட, தமிழக வரலாறு அறியாதவர்கள். முரணான இந்த இருகூறுகளும் திடீரென தோன்றி வளர்ந்ததல்ல; அப்படி வளரவும் முடியாது. இவை பார்ப்பனிய மற்றும் தேசியஇன முதலாளித்துவ தேவையில் இருந்து வரலாற்றின் வளர்ச்சிநிலை போக்கில் உருவாகி வளர்ந்தது. 

ஒன்றிய பார்ப்பனியம் மட்டும் இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்களின் அரசியலைப் பின்னிருந்து நடத்துவதில்லை. தமிழ்நாட்டுக்குள் இருக்கும் ஒரு முதலாளித்துவ பிரிவும் இதில் இணைந்து இயங்குகிறது. எனவே இது பார்ப்பனிய-தேசியஇன முதலாளித்துவ முரண் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்குள் இருக்கும் இருவேறு முதலாளித்துவ முரணின் வெளிப்பாடும்கூட. இந்தத் தமிழக இருவேறு முதலாளித்துவ முரணின் வாரலாற்று வளர்ச்சியை அறிந்து சரியான முறையைக் கைக்கொண்டு தீர்ப்பது எப்படி என்று அடுத்த கட்டுரையில் காணலாம்.

https://minnambalam.com/who-is-vijays-politics-for-and-whose-votes-is-targeting/

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 weeks 5 days ago
அரிய பூமி காந்தத் தட்டுப்பாடு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில் நெருக்கடிகளை ஏற்படுத்தும். சீனா அதிக காலம் கட்டுப்பாடுகளை நீடித்தால் இக் காந்தங்களுக்கான மாற்றீடு அதிகரித்து அதன் சந்தையைப் பாதிக்கும். காந்தங்களின் மீதான சீனாவின் ஆதிக்கம் உணரப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கான மாற்றீடுகள் ஆராயப்பட்டுள்ளன. அரிய பூமி தனிமங்கள் இல்லாமலே சூழலை மாசுபடுத்தாத வகையில் காந்த உற்பத்தி செய்யும் Niron நிறுவனம் 2024 இல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம் 5 தொன் காந்தங்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. 2026 இல் இந் நிறுவனம் விரிவாக்கப்பட்டு வருடத்துக்கு 1500 தொன் காந்தங்களை உற்பத்தி செய்யும் திறனை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Niron MagneticsNiron Magnetics is reshaping tomorrow’s technologies with the world’s only high performance, rare-earth-free permanent magnets.

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

3 weeks 5 days ago
Thava Arumugam · இது கென்யா நாட்டிலே விவசாயிகளால் அமைக்கப்படும் தொங்கும் தேன்கூடுகளைக் கொண்ட யானைத் தடுப்பு வேலிகள் இவை. பொதுவாகவே யானைகள் தேனீக்கள் இருக்கும் பக்கம் தலைவைத்துப் பார்ப்பதில்லையாம். இந்த வேலிகளால் யானைகள் தங்கள் பயிர்களை சேதம் செய்வதை பெரும்பாலும் தடுப்பதோடு தேன் மூலமும் விவசாயிகள் மேலதிக வருமானத்தைப் பெறுகின்றனர். இலங்கையிலும் இந்த முறையைப் பயன்படுத்தலாமே.🙏" தேனீக்கள் பற்றிய இன்னொரு தகவல் வியட்நாம் போரின் போது அமெரிக்க சிப்பாய்கள் சப்பித் துப்பிய சுவிங்களை சேகரித்த வியட்நாம் போராளிகள் அவற்றை குச்சிகளில் குத்தி தேன் கூடுகளை இடைஞ்சல் செய்வார்களாம் இதனால் கோபமடைந்த தேனீக்கள் சுவிங்கம் சப்பியபடி வரும் அமெரிக்க சிப்பாய்கள் முகத்தை பதம்பார்க்க வியட்நாம் போராளிகள் அமெரிக்க வீர்ர்களை பதம்பார்த்தார்களாம். 🌺"

அதிசயக்குதிரை

3 weeks 5 days ago
காவலூர் அகிலன் · ஒருவர் மண்ணுலகை விட்டு விண் உலகிற்கு பிரிந்து சென்றதை...அதுவும் வலுக்கட்டாயமாக உயிருடன் அனுப்பப்பட்டதை மறக்க முடியாமல் சிலர் 67 வருடங்களாக தவித்து வருகின்றனர். லைக்கா, அன்பான, அமைதியான ஜீவன். எல்லா உணர்வுகளையும் கண்ணிலும், உடல் மொழியிலும் சொல்லி விடக் கூடிய உயிர். வாழ்நாள் முழுவதும் வலிகளை மட்டுமே சுமந்த நிலையில், திடீர் என ஒரு நாள், விண்வெளி ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது லைக்கா. அதற்குரிய பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றது. நம்மை என்ன செய்கிறார்கள். ஏன் அந்தரத்தில் கட்டி விட்டு மிதக்க சொல்கிறார்கள். ஏன் கறி சோறு தராமல் என்னவோ மருந்து பவுடர்கள் கொடுக்கிறார்கள்? ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்? எதுவுமே தெரியாது லைக்காவுக்கு. ஆனால், ஒரு நாள் திடீர் என தரதரவென்று இழுத்து போய் ஏதோ வண்டியில் ஏற்றி விட்டார்கள். ஆனால், கூட யாருமே வர வில்லை. தன் எஜமானர் அழுவதை பார்த்து தானும் அழுதாள் லைக்கா. அவ்வளவுதான். அந்த வாகனம் முழுக்க மூடப்பட்டது. வண்டி எங்கோ போவது புரிந்தது. கொஞ்ச நேரத்தில் வயிறு தொண்டைக்கு வந்தது. என்னவோ சரி இல்லை என்று தோன்றியது. யாரிடமாவது சொல்லலாம் என்றால் அருகே யாரும் இல்லை. சின்ன சின்ன கேப்சூல் மாத்திரைகளில் உணவு இருந்தது. கொஞ்சம் நீர் இருந்தது. சுத்திமுத்தி வாகன சுவர்கள் இருந்தது. 1957 நவம்பர் 3 ஆம் தேதி ஸ்புட்னிக் 2 என்னும் விண்வெளி கலத்தில், ஆராய்ச் சிகளுக்காக அனுப்பப்பட்டதுதான் லைக்கா. உயிருடன் பூமிக்கு திரும்பி வர வாய்ப்பே இல்லை என்று தெரிந்தே அனுப்பப்பட்டது . மிஞ்சி மிஞ்சி ஒரு வாரம் அல்லது 10 நாள் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று தெரிந்தே அனுப்பப்பட்டது. அதன்படியே தன்னந்தனியாக, அமைதியாக விண்வெளியில் உயிரை விட்டது லைக்கா. உணவு தீரும் முன் 2,570 முறை பூமியை சுற்றி வந்தது லைக்கா. இதில் எதுவுமே லைக்காவின் முடிவு அல்ல. மனிதர்களின் முடிவு. அறிவியல் வளர்ச்சி, விண்வெளியில் என்ன எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் மனிதர்களின் வேட்கைக்கு பலியான உயிர் லைக்கா. லைக்கா - ஒரு நாய். பூமியில் இருந்து கிளம்பும் முன் அது பார்த்த பார்வையை பாருங்கள். அதன் கண்களை பாருங்கள்.... அந்த பார்வையை பார்த்த சில மனிதர்கள், 67 வருடங்கள் ஆக, இன்று வரை ஒவ்வொரு நவம்பர் 3 ஆம் தேதி அன்று மெழுகுவர்த்தி ஏற்றி, பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்!!! படித்தேன் பகிர்கிறேன்.😌" Voir la traductio

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 weeks 5 days ago
கோகிலா விடயம்தான் லிபாராவின் ஆரம்பமுமா என்பது உண்மையில் எனக்கு தெரியாது. லைக்காவில் வேலை பார்த்த ஆட்கள், சம்பளத்துக்கு வேலை செய்யாமல், தாமே தொடங்கிய வியாபாரம் என ஒரு நம்பகூடிய கதையையாவது backstory யையாவது செட் பண்ணி வைத்துள்ளார்கள். ஆனால் லைக்காவின் கதை படையப்பாவில் ரஜனி மலையை பிக்கானால் உடைத்து வித்து பணக்காரன் ஆனது போல் இருக்கும்🤣. பரிசில் போய் கேட்டால் வேற மாதிரி சொல்வார்கள். யூகேயில் இப்படி ஒரு ஐந்து வருடத்தில் சிங்கிள் டீக்கு சிங்கி- அடித்து விட்டு, தீடீரென ஜாவா சுந்தரேசன் ஆகி லம்போவில் வருவோர், தமிழர்கள் மத்தியில் அதிகம். கேட்டால் அவர்கள் சொல்லும் கதை விட்டலாச்சார்யா படம் போல இருக்கும்🤣. ஏன்?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 5 days ago
நான் அனைத்து போட்டிகளிலும் கடைசியாகத்தான் வருவதுண்டு, அதனை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? அதனாலேயே எந்த டென்சனும் இருக்காது, அத்துடன் எந்த அணியினை தெரிவு செய்தோம் என்பதே நீங்கள் கூறும்போதுதான் தெரியும். நான் கடைசியாக வருவதால் ஏற்கனவே கடைசி இடம் எனக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் எனும் நம்பிக்கையினால் பலருக்கு நான் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு உத்வேகமாக உள்ளேன். 🤣 மேலே போறது என்பது இயற்கைக்கு விரோதம் அனைவரும் கீழே இலகுவாக வரலாம் (புவியீர்ப்பு).🤣 இல்லை ஆரம்பத்தில் நம்பிக்கை கொடுத்து பின்னர் நம்பிக்கை துரோகம் செய்துவிடும்🤣.

குட்டிக் கதைகள்.

3 weeks 5 days ago
Bjp Eswaramoorthy Kannan · குப்பை வண்டி விதி’ தெரியுமா? (The Law of the Garbage Truck) ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார். அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார். அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார், பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்” அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார். வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள். நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது. Voir la traduction......!

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 weeks 5 days ago
அமெரிக்க இராணுவ தளபாடங்கள் 70 சதவிகித அரிய மூலப்பொருள் மற்றும் காந்தங்களில் சீனாவில் தங்கியுள்ள நிலையில் இவ்வாறான தேசிய வளங்களை தேசிய மயப்படுத்தியமையின் பின்விளைவாக பல நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் அமெரிக்க மற்றும் பிரித்தானியாவால் ஏற்படுத்தப்படுகின்ற நிலையில் அதன் நீட்சியாக இரஸ்ஸிய உக்கிரேன் போர் நிகழும் நிலையில் சீனாவின் இந்த முயற்சி கிழக்காசியாவில் இன்னொரு போர் அரங்கு ஒன்றினை திறக்கப்படுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றதா?

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 weeks 5 days ago
அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 14, 2025 மாலை 6:50 GMT+11 25 நிமிடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 31, 2010 அன்று சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய பூமி கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர். REUTERS/Stringer கொள்முதல் உரிம உரிமைகள்., புதிய தாவலைத் திறக்கிறது சுருக்கம் காந்த தயாரிப்பாளர்கள் நீண்ட உரிம மதிப்பாய்வுகளை எதிர்கொள்கிறார்கள் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் உச்சத்தில், ஏப்ரல் மாதத்தைப் போலவே ஆய்வும் உள்ளது. சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 31% சரிந்தது. பெய்ஜிங், அக்டோபர் 14 (ராய்ட்டர்ஸ்) - காந்தங்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த கடந்த வாரம் பெய்ஜிங் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே, சீன அரிய பூமி காந்த நிறுவனங்கள் செப்டம்பர் முதல் ஏற்றுமதி உரிம விண்ணப்பங்களில் கடுமையான ஆய்வுகளை எதிர்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேக்னட் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நீண்ட மதிப்புரைகள், உலகின் முன்னணி சப்ளையரான சீனா, மே மாதம் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் நிறுத்தத்தில் ஏற்றுமதியை விரைவுபடுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு மாறாக, இராணுவ மற்றும் வணிக தொழில்நுட்பத்தில் அவசியமான தயாரிப்புகளின் மீதான அதன் பிடியை மேலும் இறுக்க காந்த ஏற்றுமதியை குறைக்க முயல்கிறதா என்ற கேள்விகளை எழுப்புகின்றன. உங்கள் நாளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து செய்திகளையும் ராய்ட்டர்ஸ் தினசரி சுருக்கச் செய்திமடல் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் . செப்டம்பர் மாதம் தொடங்கி ஏற்றுமதி உரிமம் பெறுவது கடினமாகிவிட்டது என்று இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன. கூடுதல் தகவல்களுக்கான கோரிக்கைகளுடன் விண்ணப்பங்கள் இப்போது அடிக்கடி திருப்பி அனுப்பப்படுகின்றன என்று வட்டாரங்களில் ஒன்று தெரிவித்தது. ஒப்புதல்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன, இருப்பினும் பொதுவாக வர்த்தக அமைச்சகத்தின் 45 வேலை நாள் காலக்கெடுவிற்குள் இருக்கும் என்று மற்றொருவர் கூறினார், ஆனால் இப்போது ஆய்வு வர்த்தகப் போரின் உச்சத்தில் ஏப்ரல் மாதத்தைப் போலவே உள்ளது, அப்போது உரிமங்களுக்கான நீண்ட காத்திருப்பு காந்தப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது, இது வாகனத் தொழிற்சாலைகளில் பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்தது. உரிமங்களைப் பெறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பது குறித்து சரியாகக் கருத்து தெரிவிக்கவோ அல்லது கேட்கப்படும் கேள்விகளை விரிவாகக் கூறவோ அந்த வட்டாரங்கள் மறுத்துவிட்டன. சீனாவில் இந்தப் பிரச்சினையின் உணர்திறன் காரணமாக, பெயர் வெளியிட விரும்பாத நிலையில் இருவரும் பேசினர். உரிம ஒப்புதல்கள் குறித்து கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் தொலைநகல் கோரிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சகம் பதிலளிக்கவில்லை. திங்களன்று வெளியிடப்பட்ட தரவு, சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பரில் 31% குறைந்துள்ளதாகக் காட்டுகிறது . அந்த சரிவில் எவ்வளவு காந்தங்களால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் தரவு தயாரிப்புகளுக்கு இடையில் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. "செப்டம்பரில் ஏற்றுமதிகள் குறைந்திருப்பது ஆச்சரியமல்ல, ஏனெனில் கடந்த மாதம் புதிய உரிமம் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரிய பூமி காந்தங்களின் ஏற்றுமதி கடுமையாக சரிந்தது, ஆனால் ஜூன் , ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகரித்தது. செப்டம்பர் மாதத்திற்கான தரவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். மின்சார வாகனங்கள் மற்றும் காற்றாலை விசையாழிகள் முதல் இராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளில் முக்கியமான 17 கூறுகளைக் கொண்ட ஒரு குழுவான அரிய மண் தாதுக்களை உலகின் முன்னணி சப்ளையராக சீனா உள்ளது, மேலும் அதன் உரிம அமைப்பு மூலம் பல வகையான ஏற்றுமதியை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது. கடந்த வாரம் பெய்ஜிங் அந்தக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியது , அமெரிக்காவில் கோபத்தைத் தூண்டியது, அங்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிக வரிகள் மற்றும் பழிவாங்கும் ஏற்றுமதி தடைகளை உறுதியளித்தார், இருப்பினும் பின்னர் அவர் மிகவும் சமரசமான தொனியில் பேசினார். நவம்பர் 8 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு ஆர்டர்களை அனுப்ப முயற்சிக்கும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து அறிவிப்பு வந்ததிலிருந்து, விசாரணைகள் அவசரமாக நடந்துள்ளதாக இரு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. சீனாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் ஆடம் டன்னட், உறுப்பினர்களுக்கான முதன்மையான கவலை, ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் அரிய மண் தயாரிப்பு விண்ணப்பங்களின் இடையூறுதான் என்றார். கடந்த பல வாரங்களாக சபை அதன் உறுப்பினர்களுக்கு ஒப்புதல்களையும் தாமதங்களையும் கண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். "பதட்டம் அல்லது கவலையின் அளவு குறைந்துள்ளதாக நாங்கள் கூற முடியாது," என்று அவர் கூறினார். "சில நிறுவனங்கள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதற்கான எந்த பதிலும் இல்லாமல் தங்கள் காத்திருப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது." ராய்ட்டர்ஸ் ஊழியர்களின் அறிக்கை; சோனாலி பால் எடிட்டிங். https://www.reuters.com/world/china/china-is-making-it-harder-get-rare-earth-magnet-export-licenses-sources-say-2025-10-14/

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 weeks 5 days ago

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராய்ட்டர்ஸ்
மூலம்

அக்டோபர் 14, 2025 மாலை 6:50 GMT+11 25 நிமிடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது

லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய மண் கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர்.

அக்டோபர் 31, 2010 அன்று சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய பூமி கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர். REUTERS/Stringer கொள்முதல் உரிம உரிமைகள்., புதிய தாவலைத் திறக்கிறது

  • சுருக்கம்

  • காந்த தயாரிப்பாளர்கள் நீண்ட உரிம மதிப்பாய்வுகளை எதிர்கொள்கிறார்கள் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

  • அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் உச்சத்தில், ஏப்ரல் மாதத்தைப் போலவே ஆய்வும் உள்ளது.

  • சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 31% சரிந்தது.

பெய்ஜிங், அக்டோபர் 14 (ராய்ட்டர்ஸ்) - காந்தங்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த கடந்த வாரம் பெய்ஜிங் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே, சீன அரிய பூமி காந்த நிறுவனங்கள் செப்டம்பர் முதல் ஏற்றுமதி உரிம விண்ணப்பங்களில் கடுமையான ஆய்வுகளை எதிர்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேக்னட் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நீண்ட மதிப்புரைகள், உலகின் முன்னணி சப்ளையரான சீனா, மே மாதம் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் நிறுத்தத்தில் ஏற்றுமதியை விரைவுபடுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு மாறாக, இராணுவ மற்றும் வணிக தொழில்நுட்பத்தில் அவசியமான தயாரிப்புகளின் மீதான அதன் பிடியை மேலும் இறுக்க காந்த ஏற்றுமதியை குறைக்க முயல்கிறதா என்ற கேள்விகளை எழுப்புகின்றன.

உங்கள் நாளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து செய்திகளையும் ராய்ட்டர்ஸ் தினசரி சுருக்கச் செய்திமடல் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் .

செப்டம்பர் மாதம் தொடங்கி ஏற்றுமதி உரிமம் பெறுவது கடினமாகிவிட்டது என்று இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன. கூடுதல் தகவல்களுக்கான கோரிக்கைகளுடன் விண்ணப்பங்கள் இப்போது அடிக்கடி திருப்பி அனுப்பப்படுகின்றன என்று வட்டாரங்களில் ஒன்று தெரிவித்தது.

ஒப்புதல்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன, இருப்பினும் பொதுவாக வர்த்தக அமைச்சகத்தின் 45 வேலை நாள் காலக்கெடுவிற்குள் இருக்கும் என்று மற்றொருவர் கூறினார், ஆனால் இப்போது ஆய்வு வர்த்தகப் போரின் உச்சத்தில் ஏப்ரல் மாதத்தைப் போலவே உள்ளது, அப்போது உரிமங்களுக்கான நீண்ட காத்திருப்பு காந்தப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது, இது வாகனத் தொழிற்சாலைகளில் பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்தது.

உரிமங்களைப் பெறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பது குறித்து சரியாகக் கருத்து தெரிவிக்கவோ அல்லது கேட்கப்படும் கேள்விகளை விரிவாகக் கூறவோ அந்த வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

சீனாவில் இந்தப் பிரச்சினையின் உணர்திறன் காரணமாக, பெயர் வெளியிட விரும்பாத நிலையில் இருவரும் பேசினர்.

உரிம ஒப்புதல்கள் குறித்து கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் தொலைநகல் கோரிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

திங்களன்று வெளியிடப்பட்ட தரவு, சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பரில் 31% குறைந்துள்ளதாகக் காட்டுகிறது . அந்த சரிவில் எவ்வளவு காந்தங்களால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் தரவு தயாரிப்புகளுக்கு இடையில் வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

"செப்டம்பரில் ஏற்றுமதிகள் குறைந்திருப்பது ஆச்சரியமல்ல, ஏனெனில் கடந்த மாதம் புதிய உரிமம் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரிய பூமி காந்தங்களின் ஏற்றுமதி கடுமையாக சரிந்தது, ஆனால் ஜூன் , ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகரித்தது. செப்டம்பர் மாதத்திற்கான தரவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்.

மின்சார வாகனங்கள் மற்றும் காற்றாலை விசையாழிகள் முதல் இராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளில் முக்கியமான 17 கூறுகளைக் கொண்ட ஒரு குழுவான அரிய மண் தாதுக்களை உலகின் முன்னணி சப்ளையராக சீனா உள்ளது, மேலும் அதன் உரிம அமைப்பு மூலம் பல வகையான ஏற்றுமதியை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது.

கடந்த வாரம் பெய்ஜிங் அந்தக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியது , அமெரிக்காவில் கோபத்தைத் தூண்டியது, அங்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிக வரிகள் மற்றும் பழிவாங்கும் ஏற்றுமதி தடைகளை உறுதியளித்தார், இருப்பினும் பின்னர் அவர் மிகவும் சமரசமான தொனியில் பேசினார்.

நவம்பர் 8 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு ஆர்டர்களை அனுப்ப முயற்சிக்கும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து அறிவிப்பு வந்ததிலிருந்து, விசாரணைகள் அவசரமாக நடந்துள்ளதாக இரு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

சீனாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் ஆடம் டன்னட், உறுப்பினர்களுக்கான முதன்மையான கவலை, ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் அரிய மண் தயாரிப்பு விண்ணப்பங்களின் இடையூறுதான் என்றார்.

கடந்த பல வாரங்களாக சபை அதன் உறுப்பினர்களுக்கு ஒப்புதல்களையும் தாமதங்களையும் கண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

"பதட்டம் அல்லது கவலையின் அளவு குறைந்துள்ளதாக நாங்கள் கூற முடியாது," என்று அவர் கூறினார். "சில நிறுவனங்கள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதற்கான எந்த பதிலும் இல்லாமல் தங்கள் காத்திருப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது."

ராய்ட்டர்ஸ் ஊழியர்களின் அறிக்கை; சோனாலி பால் எடிட்டிங்.

https://www.reuters.com/world/china/china-is-making-it-harder-get-rare-earth-magnet-export-licenses-sources-say-2025-10-14/