Aggregator

அதிகளவு மக்கள் செல்வாக்கு - மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா?

3 weeks 2 days ago

அதிகளவு மக்கள் செல்வாக்கு - மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா?

Feb 17, 2026 - 04:15 PM

அதிகளவு மக்கள் செல்வாக்கு - மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா?

கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

அதிகளவான மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம் என அரசாங்கம் கருதுமானால், மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

குழுக்கள், தெரிவுக் குழுக்கள் என்று பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் முறையை மாற்றுவதாக கூறி, மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறேன்.

அரசாங்கத்திற்கு 65% மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், கூட்டுறவு வாக்குகளை கருத்திற் கொள்வதில்லை என்றால் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் காணப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கிறேன். அதை நேரடியாகவே தெரிவிக்கின்றேன்.

உலகின் ஜனநாயக நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது ஊழல் மற்றும் இலஞ்சத்தை குறைத்து அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அடிப்படையிலாகும்.

இவர்களினது பதவிக்காலம் முடிந்த பின்பு இவர்களுக்கு ஒருவகையில் சமூக பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதும் இதில் ஒரு அம்சமாக அமைந்து காணப்படுகின்றன.

இந்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுதியாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து அக்கறை காட்டும் அரசாங்கம், 7 இலட்சத்து 50 ஆயிரம் ஓய்வு பெற்றவர்களின் ஊதியங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவற்றதாக காணப்படுகின்றன.

பி.சி. பெரேரா குழுவின் பரிந்துரைப்படி அரச ஊழியர்களுக்கு 60% சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதில் ஆசிரியர், அதிபர், ஆலோசகர் சேவைகளுக்கு அது வழங்கப்படாமல் பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது.

சுபோதனி குழுவின் 20% அதிகரிப்பு 2022 ஜனவரி 1-ஆம் திகதியிலிருந்து பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதால், ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

ஜனாதிபதி ஓய்வூதியர்கள் தேசிய மாநாட்டில் இந்த பிரச்சினைகளை தீர்த்துத் தருவேன் என்று கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2025-2027 சம்பள அதிகரிப்பு செய்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்ற 1 இலட்சத்து 54 ஆயிரம் பேருக்கு எந்த நிவாரணமும் இல்லை.

2025 ஏப்ரல் 1-க்கு முன் அதாவது, ஜனவரி-மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு சலுகைகள் கிடைத்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு சரிசெய்யப்படாமல் போனதால் அவர்கள் கஷ்டத்தில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

10,000 சம்பள அதிகரிப்பை ஓய்வூதியத்தில் இணைக்கும் செயல்முறையை கோட்டாபய அரசாங்கம் இரத்துச் செய்த பிறகு, இந்த அநீதியை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லாமல் பல ஓய்வூதியர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmlqh5pnp001t356nzlrr1txl

'இஸ்லாமிய நேட்டோ': அரபு - முஸ்லிம் நாடுகள் ராணுவ கூட்டணி குறித்து மீண்டும் விவாதம் ஏன்?

3 weeks 2 days ago

'இஸ்லாமிய நேட்டோ': அரபு - முஸ்லிம் நாடுகள் ராணுவ கூட்டணி குறித்து மீண்டும் விவாதம் ஏன்?

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,துருக்கி அதிபர் எர்துவானின் சௌதி அரேபியா வருகையைத் தொடர்ந்து, இஸ்லாமிய நேட்டோவை உருவாக்குவது குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

கட்டுரை தகவல்

  • பிபிசி மானிடரிங்

  • 17 பிப்ரவரி 2026, 09:49 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீதான ஒரு சாத்தியமான தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரிப்பதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், அரபு - இஸ்லாமிய அரசியல் மற்றும் ராணுவக் கூட்டணியை உருவாக்கும் விவகாரம் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.

முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு என்ற கருத்து முதன்முதலில் துருக்கி அதிபர் துருக்கி அதிபர் எர்துவானால் செப்டம்பர் 2024-இல் முன்மொழியப்பட்டது. அந்த நேரத்தில், இஸ்ரேலால் ஏற்படும் 'வளர்ந்து வரும் விரிவாக்க அச்சுறுத்தலுக்கு' எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

செப்டம்பர் 2025-இல், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரும் 'இஸ்லாமிய நேட்டோ' அமைப்பை நிறுவுவது பற்றிப் பேசினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, 'இஸ்லாமிய நேட்டோ' அமைப்பை உருவாக்கும் யோசனை வேகம் பெற்றுள்ளது.

எர்துவானின் சமீபத்திய சௌதி அரேபியா மற்றும் எகிப்து பயணங்களைத் தொடர்ந்து, அரபு ஊடகங்களில் 'இஸ்லாமிய நேட்டோ' முன்மொழிவு மீண்டும் விவாதிக்கப்படுகிறது. முக்கிய அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய கூட்டணி உருவாகக்கூடும் என்று ஊகங்கள் உள்ளன.

இருப்பினும், துருக்கி மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய சௌதி தலைமையிலான 'இஸ்லாமிய நேட்டோ'வை உருவாக்கும் திட்டம் தற்போது இல்லை என்று ஒரு சௌதி அதிகாரியின் கூற்றை மேற்கோள் காட்டி ஒரு செய்தி கூறுகிறது.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி எகிப்துக்கு வருகை தந்த எர்துவானை வரவேற்க கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்தார்.

எந்த நாடுகள் சேர்க்கப்படலாம்?

அரபு ஊடக செய்திகள், இந்த சாத்தியமான கூட்டணியில் துருக்கி, எகிப்து, சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனீசியா ஆகியவை இடம்பெறலாம் என்று தெரிவித்துள்ளன.

லண்டனைத் தளமாகக் கொண்ட ராய் அல்-யூம் செய்தி இணையதளம் பிப்ரவரி 5 அன்று வெளியிட்ட செய்தியின்படி, "எர்துவானின் ரியாத் மற்றும் கெய்ரோ பயணங்கள் 'மூன்று நாடுகளை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் மற்றும் ராணுவ இஸ்லாமியக் கூட்டணியை' உருவாக்கும் திட்டத்தின் பின்னணியில் வந்தவை. இது பின்னர் அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தான் மற்றும் அதிக முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனீசியாவையும் உள்ளடக்கி விரிவடையக்கூடும்".

துருக்கிய செய்தி வலைத்தளம் ஒன்றும், "முன்னெப்போதும் இல்லாத அரசியல் நெருக்கம் மற்றும் கருத்துகளின் ஒருங்கிணைப்புக்கு மத்தியில், எகிப்து, சௌதி அரேபியா மற்றும் துருக்கியை உள்ளடக்கிய ஒரு பிராந்திய கூட்டணிக்கான வரையறைகள் தென்படுகின்றன," என்று கூறியது.

இருப்பினும், எர்துவானின் பயணங்கள் எந்தவொரு கூட்டணியையும் குறிக்கவில்லை, மாறாக அந்தப் பிராந்தியம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் உள்ளது என்ற அதிகரித்து வரும் புரிதலைப் பிரதிபலிக்கிறது என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"எகிப்து, சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே அதிகரித்து வரும் நெருக்கம், கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது மற்றும் பொதுவான நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் இணக்கத்தை குறிக்கிறது. ஆனால் அது இன்னும் ஒரு விரிவான உத்தி கூட்டணியின் நிலையை எட்டவில்லை," என்று அரபிக் டிஃபென்ஸ் கூறியது.

"எகிப்து-துருக்கி கூட்டணி பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த அரபு-இஸ்லாமிய கூட்டணிக்கு அடிப்படையாக அமையக்கூடும்," என்று சர்வதேச சட்டப் பேராசிரியர் முகமது மஹ்ரான், யூம் 7 என்ற எகிப்திய இணையதளத்திடம் தெரிவித்தார்.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,US Department of Defense via Reuters

படக்குறிப்பு,அமெரிக்க கடற்படை, அரபிக் கடலில் தனது ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.

இந்தக் கூட்டணியின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?

காஸாவில் இஸ்ரேலின் போர் மற்றும் இரானுடனான 12 நாள் மோதலுக்குப் பிறகு, அரபு - இஸ்லாமியக் கூட்டணி விவாதம் அரபு ஊடகங்களில் மீண்டும் உருவெடுத்துள்ளது.

எகிப்திய தனியார் வலைத்தளமான அல்-ஒரூபா அல்-யூம், "அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள் மற்றும் சூழ்ச்சிகள் காரணமாக, பிராந்தியத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் சௌதி அரேபியா, எகிப்து, பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தாரை உள்ளடக்கிய ஓர் உத்தி கூட்டணியை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது." என்று தெரிவித்துள்ளது.

முன்னாள் எகிப்திய தூதர் அலி அல்-அஷ்மாவி கத்தார் தொலைக்காட்சி சேனலான அல் ஜசீரா முபாஷரிடம், "சாத்தியமான இந்த கூட்டணி பிராந்தியத்தை துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட 'மேலாதிக்கத் திட்டங்களை' முறியடித்து, பிராந்தியத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்" என்றார்.

துருக்கிய ஆய்வாளர் அலி பகாரும் அந்த ஊடகத்திடம் பேசுகையில், "இஸ்ரேல் பெற்றுள்ள மிகப்பெரிய ராணுவ சக்தியை எதிர்கொள்ள இத்தகைய இஸ்லாமியக் கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க முயற்சிகள் தேவைப்படும்." என்றார்.

லண்டனைச் சேர்ந்த அல்-குட்ஸ் அல்-அரபி தளத்தில்,'' இந்த சாத்தியமான இஸ்லாமிய நேட்டோ அமைப்பு என்பது இந்த நாடுகளின் மீது தாக்குதலை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டணி'' என்று லூத்ஃபி அல்-உபைதி விவரித்தார்.

இன்னும் பல ஊடக செய்திகள் இதே கருத்தை எதிரொலிக்கின்றன. "மெதுவாக உருவாகி வரும் ஒரு கூட்டணி, நேட்டோ என்று அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் ஒரு தடுப்பு சக்தியாக செயல்படும்." என்று அவை தெரிவிக்கின்றன.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

துருக்கியின் நிலைப்பாடு என்ன?

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் எர்துவானின் சௌதி அரேபியா மற்றும் எகிப்து பயணத்திற்கு முன்னதாக, துருக்கிய ஊடகங்களில் ஒரு சாத்தியமான 'இஸ்லாமிய நேட்டோ' பற்றிய பேச்சுகள் நிறைந்திருந்தன.

இருப்பினும், கவனம் படிப்படியாக பரந்த பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை நோக்கி நகர்ந்தது.

துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் ஜனவரி இறுதியில் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிகரிக்க 'பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான தளத்தை' உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

"ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றுமில்லாத நிலையில் இருந்து உருவாகி இன்று இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது எப்படி என்று பாருங்கள். பின் ஏன் நம்மால் அதைச் செய்ய முடியாது?" என்றும் ஃபிடன் கூறினார்.

அரசுக்கு ஆதரவான ஊடகங்கள், இப்படியான கூட்டணியை பிராந்தியத்துக்கான ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கூறுகின்றன. சிலர் இது இஸ்ரேலின் பிராந்திய குறிக்கோள்களை எதிர்கொள்ள உதவும் என்று வாதிடுகின்றனர்.

ஆய்வாளர் கெவ்ஹர் சலூல் பிப்ரவரி 9 அன்று, "இரான், சிரியா, காஸா மற்றும் பாலத்தீனம் போன்ற விவகாரங்களில் துருக்கி, சௌதி அரேபியா மற்றும் எகிப்து இடையே தெளிவான ஒருமித்த தன்மை வெளிப்பட்டுள்ளது'' என எழுதினார்.

இந்தக் கூட்டணி தற்போது பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தாலும், துருக்கி, எகிப்து மற்றும் சௌதி அரேபியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.

எகிப்திற்கு 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும், அங்கு ஒரு வெடிமருந்து உற்பத்தி கட்டமைப்பை உருவாக்கவும் துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியின் 'கான்' போர் விமானத் திட்டத்தில் முதலீட்டாளராகவும் அதை வாங்கக்கூடிய நாடாகவும் பங்கேற்க சௌதி அரேபியா ஆர்வமாக உள்ளதாக துருக்கிய ஊடகங்களும் கூறுகின்றன.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

கூட்டணியை உருவாக்குவதில் உள்ள சவால்கள் என்ன?

அரபு-இஸ்லாமியக் கூட்டணியை உருவாக்குவதும் பல சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களால் சூழப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

லண்டனைச் சேர்ந்த ராய் அல்-யூம் தளத்தின்படி, ''ஒரு முக்கிய சவால் என்னவென்றால், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஒருபோதும் களத்தில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை மற்றும் அவை பெரும்பாலும் 'ஆவணங்களில்' மட்டுமே இருந்துள்ளன. இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களில் சிலர் ஒருவருக்கொருவர் ராணுவ மோதல்களில் கூட ஈடுபட்டுள்ளனர்.''

துருக்கி, எகிப்து மற்றும் சௌதி அரேபியா இடையிலான தற்போதைய ஒத்துழைப்பு ஒரு பாரம்பரிய அல்லது உத்தி கூட்டணியின் நிலையை எட்டவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர், ஏனெனில் "பல விவகாரங்களில், குறிப்பாக பிராந்தியத்தின் அரசியல் மாற்றங்கள் தொடர்பானவற்றில் மூன்று நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன."

முன்னாள் எகிப்திய தூதர் அலி அல்-அஷ்மாவி அல் ஜசீராவிடம் பேசுகையில், "இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் சவால்களை எதிர்கொண்டு இந்தக் கூட்டணி எளிதாக முன்னேற முடியாது." என்றார்.

துருக்கிய ஆய்வாளர் அலி பகாரும், "இஸ்ரேல் இந்தக் கூட்டணி நடைமுறையில் உருவாக அனுமதிக்காது, ஏனெனில் அமெரிக்காவில் உள்ள அதன் இணைந்த லாபிகள் ஏற்கனவே அதைத் தடுக்கச் செயல்படத் தொடங்கிவிட்டன." என்றார்.

அரபு-யூரேசிய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர் காதி கனில், இத்தகைய கூட்டணிக்கான சாத்தியமான எதிர்கால காட்சிகளை விளக்கினார். "மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படவே அதிக வாய்ப்புள்ளது." என்றார்.

இந்த முகாம் ஒரு பெரிய நிறுவன ரீதியான கூட்டணியாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyzd0v97y2o

க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குக் தயார் - கல்வி அமைச்சர்

3 weeks 2 days ago
க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்; விசேட தேவையுடைய மாணவர்கள், கைதிகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் Published By: Vishnu 17 Feb, 2026 | 06:16 AM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 3545 பரீட்சை நிலையங்களும், 531 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 451 463 பேர் பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். மேலும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்கு பிரத்தியே பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்காக 3545 பரீட்சை நிலையங்களும், 531 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும், 33 பிரதேச ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைகளுக்காக பாடசாலை ஊடாக 382 249 பரீட்சாத்திகளும், தனிப்பட்ட ரீதியில் 69 214 பரீட்சாத்திகளும் விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்தமாக 451 463 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர். முப்படை மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடி பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளும் தயார்நிலையிலுள்ளன. சகல விண்ணப்பதாரர்களுக்கும் பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கான நேர அட்டவணை அனுமதி அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சாத்திகளை கேட்டுக் கொள்கின்றோம். கடந்த ஆண்டுகளை விட இம்முறை நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 5, 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் நேர அட்டவணை கடந்த ஆண்டுகளை விட வித்தியாசமான முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. காலையில் 8.30 மணிக்கும், பகல் 1 மணிக்கும் பரீட்சைகள் ஆரம்பமாகும். எனவே பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு 1 மணித்தியாலத்துக்கு முன்னரே பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கையடக்க தொலைபேசி, நவீன கைக்கடிகாரம் உள்ளிட்ட எவ்வித இலத்திரனியல் உபகரணங்களும் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியும். இவை இல்லாதவர்கள் தமது இரு புகைப்படங்களை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் உறுதிப்படுத்தி அதனை தற்காலிய அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும். விசேட தேவையுடைய பரீட்சாத்திகளுக்காக இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், மஹரகம புற்று நோய் வைத்தியசாலை, கைதடி நவீல் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை என்பவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளிலுள்ள பரீட்சாத்திகளுக்காக வட்டரொக்க சுனீத வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/238843

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

3 weeks 2 days ago
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் அன்று எழுத்து மூலம் அங்கீகரித்தது. அதை அன்று ஏற்றுக் கொண்டு, அதை பலப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் எமது பங்களிப்பை வழங்கி, தொடர்ந்து அதில் இருந்த போதாமைகளுக்காக அரசியல் ரீதியில் போராடியிருந்தால், வட கிழக்கு தமிழரின் தாயகம் என்பது நடைமுறையில் உருவாகியிருக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. அதை அடியோடு நிராகரித்த நாம் அதில் இருந்த நல்ல விடயங்களைக்கூட இழந்து இன்று அதை விட பலமடங்கு பின்னோக்கி சென்றிருக்கிறோம். சொற்களிலும் வசனங்களிலும் தொங்கிக் கொண்டு பிடிவாதம் பிடித்து ஈகோ பிரச்சனைகளை உருவாக்காமல் நடைமுறையில் தமிழர் பிரதேசங்களை தக்க வைக்க தந்திரோபாய நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு உடனடித்தேவை. அரசியல்வாதிகளுக்கு தேவைகள் வேறு இருக்கலாம்.

ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி

3 weeks 2 days ago
ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி Feb 17, 2026 - 05:18 PM சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும் , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இன்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்புக்கு பின்னர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார், இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருகிறது. அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை தாம் வலியுறுத்தியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmlqjhp53001x356nmt847zdf

ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி

3 weeks 2 days ago

ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி

Feb 17, 2026 - 05:18 PM

ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும் , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இன்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்புக்கு பின்னர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருகிறது.

அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை தாம் வலியுறுத்தியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmlqjhp53001x356nmt847zdf

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
சூப்பர் 8 க்கு சிம்பாவே தெரிவாகி உள்ளதால் 2028 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெறவுள்ள t20 உலகக் கிண்ண போட்டியில் நேரடியாக தெரிவு செய்யப்படும் 12 நாடுகளில் ஒன்றாக சிம்பாவே தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
போட்டி கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவும் அயர்லாந்தும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்கள். சிம்பாவே சூப்பர் 8 க்கு தெரிவாகியுள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
ம‌ழை தொட‌ர்ந்து பெய்வ‌தால் இன்று விளையாட்டு ந‌ட‌க்க‌ வாய்ப்பு மிக‌ குறைவு..............இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பின‌ம்....................... ம‌ழை தொட‌ர்ந்து பெய்வ‌தால் இன்று விளையாட்டு ந‌ட‌க்க‌ வாய்ப்பு மிக‌ குறைவு..............இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பின‌ம்.......................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
அவுஸ்ரேலியா வெளிய‌ என்று நேற்றே தெரிந்து விட்ட‌து ந‌ண்பா ஹா ஹா................. உவ‌ங்க‌ள் சூப்ப‌ர்8க்கு போவாங்க‌ள் என்று தெரிவு செய்தேன் பெரிய‌ ஆப்பு அவுஸ்ச‌ தெரிவு செய்த‌வைக்கு ஹா ஹா ஹா😄😛...............

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
அந்த‌க் குண்ட‌ன் முந்தி ந‌ல்லா அடிச்சு ப‌ட்டைய‌ கில‌ப்புவார் இப்ப‌ அவ‌ரின் விளையாட்டு முந்தின‌ மாதிரி இல்லை ந‌ண்பா அவ‌ர் விளையாடாம‌ல் தான் அய‌ர்லாந் ஓமானுக்கு எதிரா 235ர‌ன்ஸ் அடிச்ச‌வை.................சிம்ப‌வே அணியின் ப‌ந்து வீச்சு அருமையோ அருமை.............................................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
இன்று அயர்லாந்து வெல்ல கூடிய வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அணித்தலைவர் ஸ்டெர்லிங் காயம் காரணமாக விளையாடமாட்டார் போலுள்ளது!!

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
தென் ஆபிரிக்கா ம‌ற்றும் நியுசிலாந் கோப்பை வெல்ல‌ வில்லை இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று வெல்ல‌னும் ம‌ழை விட்டாப் பிற‌க்கும் போட்டி ந‌ட‌ந்தால் சிம்பாவே அய‌ர்லாந்தை தோக்க‌டிக்கும் அதோட‌ அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் த‌ங்க‌ட‌ நாட்டுக்கு திரும்ப‌ ச‌ரி.......................