Aggregator

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 weeks 5 days ago
இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர். “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையானது பல மாத காலமாக திட்டமிடப்பட்டதாகும். இந்த கைது நடவடிக்கைக்கு நேபாள அரசாங்கமும் சர்வதேச பொலிஸாரும் ஒத்தழைப்பு வழங்கியிருந்தனர். வெளிநாடுகளில் உள்ள பாதாள உலக கும்பலை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் தொடர்ந்தும் எமக்கு உதவி செய்து வருகின்றனர். இஷாரா செவ்வந்தியுடன் மேலும் ஒரு பெண்ணும் 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைதுசெய்யப்பட்டவர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார். இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk

கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது – மன்னார் நகரசபை முதல்வர்

3 weeks 5 days ago
14 Oct, 2025 | 05:28 PM மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை. இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக்கி தரப்படவில்லை. குறித்த பிரச்சினைக்கு எவ்வித தீர்வு கிடைக்கவில்லை.சின்னக்கடை வட்டாரத்தில் ஒரு இடத்திலேயே அகழப்படுகின்ற குப்பைகளை கொட்டி வந்தோம். அவ்விடத்தில் பாரிய தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவ்விடத்தில் குப்பை கொட்டுவது உடனடியாக நிறுத்தப் பட்டுள்ளது. மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற குப்பைகளை கொட்ட ஒரு இடம் ஒதுக்கி தருமாறு, மாவட்ட செயலாளர், வன ஜீவராசிகள் திணைக்களம் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். மக்களின் தேவைகளுக்காக இடம் ஒதுக்கி தர முடியாத நிலையில் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் இடத்தை ஒதுக்குகிறார்கள். ஆனால் மன்னார் மக்களின் தேவைக்காக இடம் ஒதுக்க மறுக்கின்றார்கள்.குப்பை அகழ்வு செய்தாலும், கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலை காணப்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை (13) அகழ்வு செய்யப்பட்ட குப்பைகள் வாகனத்துடன் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (14) குப்பை அகழ்வு செய்யப்படவில்லை. நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மன்னாரில் கழிவு அகற்றல் இடம் பெறாது. இது வரை இடம் ஒதுக்கி தரவில்லை. மன்னார் மக்களின் தேவைகளுக்காக 2 ஏக்கர் நிலப் பரப்பை வழங்க முடியாத வன பாதுகாப்பு திணைக்களம் மன்னார் மக்களுக்கு இனியும் தேவைதானா? என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் 30 வருட யுத்தம் இடம்பெற்று முடிவடைந்து ஒரு அமைதியான சூழல் இந்த மன்னாரில் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு இவன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் போன்றவை காரணமாக அமையப் போகிறது. கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எக் காரணம் கொண்டும் அவ்விடத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என்றார். குறித்த பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,. மன்னார் நகர சபை பிரிவில் கழிவகற்றல் பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகின்றது.ஏற்கனவே பாப்பாமோட்டை பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மன்னார் நகர சபையினர் தமது பிரிவில் அகழ்வு செய்யப்பட்ட குப்பைகளை கொட்டி வந்தனர். குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக கொழும்பை தளமாக கொண்ட சூழலியல் அமைப்பு மேன்முறை நீதிமன்றத்தில் வளக்கு தொடுத்ததன் காரணமாக குறித்த இடத்தில் தற்போது கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மன்னார் நகர சபையினர் அண்மைக்காலமாக மன்னார் மையப்பகுதியில் ஒரு இடத்தில் கழிவுகளை கொட்டி வந்தார்கள். ஆனால் குறித்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதோடு,சூழல் மாசடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை (13) பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் குறித்த கழிவுகள் கொட்டும் இடத்தையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பை போட இடம் இல்லாத காரணத்தால் மன்னார் நகர சபையினர் கழிவுகளை சேகரித்த வாகனங்களை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்தியுள்ளனர். தற்போது சேகரிக்கும் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சனை எழுந்துள்ளது.கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் கூடுதலான நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களம் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழ் இருப்பதன் காரணத்தினால் அவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து அடையாளம் கண்டு அவ்விடத்தில் கழிவுகளை கொட்ட தீர்மானிக்கப்பட்ட போதும் கலப் பரிசோதனையின் போது இணக்கமான நிலை ஏற்படவில்லை. வன பாதுகாப்பு திணைக்களத் தினால் முன் மொழியப்பட்ட இடத்தை நாங்கள் அடையாளம் காண முற்பட்ட போது குறித்த இடம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இடமாகவும், குறித்த இடம் மக்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட இடமாகவும் காணப்படுகின்ற மையினால் குறித்த இடம் பொறுத்தமற்ற இடமாக காணப்படுகின்றது. இதனால் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சினை தற்போது காணப்படுகிறது.குறித்த பிரச்சினை குறித்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக சகல தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுவரை தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.தற்போது மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு பகுதி அதில் ஏற்கனவே கழிவுகள் கொட்டப்படும் இடமாக காணப்படுகின்றது. குறித்த பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அடையாளப்படுத்தப்பட்ட இடமாக உள்ளது. அதை விட பாப்பாமோட்டை க்கு அருகில் உள்ள இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தற்போது உரிய தரப்பினர் ஊடாக அந்த இடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த இடங்களை பார்வையிட்டு இனக்கமான முறையில் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நிரந்தரமான குப்பைகளை கொட்ட முடியும். தற்போது மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளமையினால் மாவட்ட செயலக வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார். கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது – மன்னார் நகரசபை முதல்வர் | Virakesari.lk

கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது – மன்னார் நகரசபை முதல்வர்

3 weeks 5 days ago

14 Oct, 2025 | 05:28 PM

image

மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையில்  செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை. 

இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக்கி தரப்படவில்லை. குறித்த பிரச்சினைக்கு எவ்வித தீர்வு கிடைக்கவில்லை.சின்னக்கடை வட்டாரத்தில் ஒரு இடத்திலேயே அகழப்படுகின்ற குப்பைகளை கொட்டி வந்தோம்.

அவ்விடத்தில் பாரிய தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவ்விடத்தில் குப்பை கொட்டுவது உடனடியாக நிறுத்தப் பட்டுள்ளது.

மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற குப்பைகளை கொட்ட ஒரு இடம் ஒதுக்கி தருமாறு, மாவட்ட செயலாளர், வன ஜீவராசிகள் திணைக்களம்  வன பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

மக்களின் தேவைகளுக்காக இடம் ஒதுக்கி தர முடியாத நிலையில் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் இடத்தை ஒதுக்குகிறார்கள். 

ஆனால் மன்னார் மக்களின் தேவைக்காக இடம் ஒதுக்க மறுக்கின்றார்கள்.குப்பை அகழ்வு செய்தாலும், கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலை காணப்பட்டுள்ளது.

இதனால்  திங்கட்கிழமை (13) அகழ்வு செய்யப்பட்ட குப்பைகள் வாகனத்துடன் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (14) குப்பை அகழ்வு செய்யப்படவில்லை. நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மன்னாரில் கழிவு அகற்றல் இடம் பெறாது. 

இது வரை இடம் ஒதுக்கி தரவில்லை. மன்னார் மக்களின் தேவைகளுக்காக 2 ஏக்கர் நிலப் பரப்பை வழங்க முடியாத வன பாதுகாப்பு திணைக்களம் மன்னார் மக்களுக்கு இனியும் தேவைதானா? என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் 30 வருட யுத்தம் இடம்பெற்று முடிவடைந்து ஒரு அமைதியான சூழல் இந்த மன்னாரில் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு இவன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் போன்றவை காரணமாக அமையப் போகிறது.

கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எக் காரணம் கொண்டும் அவ்விடத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என்றார். 

குறித்த பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,.

மன்னார் நகர சபை பிரிவில் கழிவகற்றல் பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகின்றது.ஏற்கனவே பாப்பாமோட்டை பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மன்னார் நகர சபையினர் தமது பிரிவில் அகழ்வு செய்யப்பட்ட குப்பைகளை கொட்டி வந்தனர்.

குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக கொழும்பை தளமாக கொண்ட சூழலியல் அமைப்பு மேன்முறை நீதிமன்றத்தில் வளக்கு தொடுத்ததன் காரணமாக குறித்த இடத்தில் தற்போது கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது மன்னார் நகர சபையினர் அண்மைக்காலமாக மன்னார் மையப்பகுதியில் ஒரு இடத்தில் கழிவுகளை கொட்டி வந்தார்கள். 

ஆனால் குறித்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதோடு,சூழல் மாசடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால்  திங்கட்கிழமை (13) பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் குறித்த கழிவுகள் கொட்டும் இடத்தையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் குப்பை போட இடம் இல்லாத காரணத்தால் மன்னார் நகர சபையினர் கழிவுகளை சேகரித்த வாகனங்களை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்தியுள்ளனர்.

தற்போது சேகரிக்கும் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சனை எழுந்துள்ளது.கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் கூடுதலான நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களம்  வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழ் இருப்பதன் காரணத்தினால் அவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து அடையாளம் கண்டு அவ்விடத்தில் கழிவுகளை கொட்ட தீர்மானிக்கப்பட்ட போதும் கலப் பரிசோதனையின் போது இணக்கமான நிலை ஏற்படவில்லை.

வன பாதுகாப்பு திணைக்களத் தினால் முன் மொழியப்பட்ட இடத்தை நாங்கள் அடையாளம் காண முற்பட்ட போது குறித்த இடம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இடமாகவும், குறித்த இடம் மக்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட இடமாகவும் காணப்படுகின்ற மையினால் குறித்த இடம் பொறுத்தமற்ற இடமாக காணப்படுகின்றது.

இதனால் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சினை தற்போது காணப்படுகிறது.குறித்த பிரச்சினை குறித்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக சகல தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுவரை தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.தற்போது மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு பகுதி அதில் ஏற்கனவே கழிவுகள் கொட்டப்படும் இடமாக காணப்படுகின்றது. குறித்த பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அடையாளப்படுத்தப்பட்ட இடமாக உள்ளது.

அதை விட பாப்பாமோட்டை க்கு அருகில் உள்ள இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தற்போது உரிய தரப்பினர் ஊடாக அந்த இடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

குறித்த இடங்களை பார்வையிட்டு இனக்கமான முறையில் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நிரந்தரமான குப்பைகளை கொட்ட முடியும்.

தற்போது மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளமையினால் மாவட்ட செயலக வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார். 

கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது – மன்னார் நகரசபை முதல்வர்  | Virakesari.lk

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 5 days ago
கொழும்பு மைதான‌த்தில் ம‌ழை பெய்யுது இல‌ங்கை ம‌க‌ளிர் ந‌ல்ல‌ ஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம் 258.....................இதை நியுசிலாந் ம‌க‌ளிரால் உந்த‌ மைதான‌த்தில் அடிக்க‌ முடியாது................பாப்போம் போட்டி முழுதா ந‌ட‌க்குதான்னு..............................

'இது மிகவும் மோசமாக இருக்கும்': சிலிக்கான் பள்ளத்தாக்கில் AI குமிழி வெடிப்பது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.

3 weeks 5 days ago
கொஞ்சம் காசு வேறு எந்த தேவைக்கும் அல்லாமல் இருந்தால் இந்த பங்குகளை 5x leverage இல்க் short பண்ணி பார்க்கலாம். வந்தால் மலை, போனால் எச் ராஜா.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 weeks 5 days ago
வியாபாரம் என்று வந்து விட்டால் எதையும் செய்யலாம் என்று சிலர் முயல்கிறார்கள். அதிஷ்டவசமாக அவர்கள் தான் வெல்கிறார்கள். அநியாயமாக அவர்கள் தான் இவ்வுலகை ஆள்கிறார்கள். இதில் தமிழர்களும் இருந்து விட்டு போகட்டுமே. அவர்களையும் நம் பாதைக்கு கல் போட பயன்படுத்தலாம் என்பது தான் சரியாக இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் வீக்கம் வெடித்து சிதறலாம்.

எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!

3 weeks 5 days ago
இந்தப்பக்கத்தில் சில நல்ல உபயோகமான வீடியோக்களை இணைக்கின்றேன் . ..... பார்த்துப் பயன் பெறவும் . ...... இவற்றை சிறிது ஊண்றிக் கவனித்து வந்தால் பிரான்சின் பொது இடங்களில் உங்களுக்கு உபயோகமாய் இருக்கும் .......! 👍 உச்சரிப்புகளை அதே சத்தத்துடன் கவனமாய் கவனிக்கவும் . ....... எனக்கு இப்பவும் அது கொஞ்சம் ததிங்கிணத்தோம் தான் .......!

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 weeks 5 days ago
இஷாரா செவ்வந்தி நேபாளத்திற்கு எப்படி சென்றார்; பொலிஸாரின் மேலதிக தகவல்! திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லா சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இராஜதந்திர அனுசரணையில் விசேட குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ. வுட்லர் இதனைக் கூறினார். இதற்கிடையில், நாட்டை விட்டு தப்பிச் சென்ற 40 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டு அவர்களில் 18 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறினார். குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் விடே பொலிஸ் குழு, பொலிஸ்மா அதிபரின் நேரடித் தலையீட்டின் கீழ் நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து, இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டார். அவரைத் தவிர, மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பரும் அவர்களில் ஒருவர். இந்தக் குழுவில், இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் அடுத்த சில நாட்களில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை கெஹல்பத்தர பத்மேவின் குழுவினர் செய்ததாக நம்பப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமாங்க, அதே நாளில் புத்தளம், பகுதியில் விசேட படையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி கமராக்களை சோதனை‍ே செய்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவி செய்ய ஒரு பெண்ணும் வந்திருப்பதைக் கண்டறிந்தனர். குறித்த பெண், சட்டத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புத்தகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கொண்டு வந்திருப்பது தெரியவந்தது, அதன்படி, பொலிஸார் நடத்திய விசாரணைகளில், அவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் என்பது தெரியவந்தது. குற்றத்தைச் செய்த பின்னர், இஷாரா செவ்வந்தி மித்தேனியாவிலிருந்து ஜே.கே. பாய் என்ற நபரின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல அவர் சுமார் 6.5 மில்லியன் ரூபாய் செலவிட்டதாகவும், அங்கு அவர் சுமார் மூன்று வாரங்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்து அவர் நோபாளத்துக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் அவர் நேபாளத்தின் மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் தங்கியிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று (13) கைது செய்யப்பட்டார். https://athavannews.com/2025/1450367

இலங்கை, பூட்டான், நேபாளத்துக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதி ! - இந்திய ரிசர்வ் வங்கி

3 weeks 5 days ago
இலங்கையர்களுக்கு கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி! இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் வங்கிக்கும் கடன் வழங்குவதற்கு இந்திய வங்கிகளுக்கும் அவற்றின் கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India) வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி முகாமை (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகளில் திருத்தம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் தற்போது இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் இருக்கும் ஒரு வங்கிக்கோ அல்லது தனிநபருக்கோ இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதியளிக்கின்றது. அதன்படி, வெளிநாடுகளில் இருக்கக்கூடிய இந்திய வங்கியின் கிளைகள் தற்போது பூட்டான், நேபாளம் அல்லது இலங்கையில் வசிக்கும் ஒரு வங்கிக்கோ அல்லது ஒரு நபருக்கோ இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம். இந்த வளர்ச்சி இலங்கையில் உள்ள வணிகங்களுக்கு கடன் அணுகலை எளிதாக்குவதுடன் அத்தகைய கடன்களை இந்திய ரூபாயில் குறிப்பிட அனுமதிக்கும் ஏற்பாடு இலங்கை வணிகங்களுக்கு குறிப்பாக நன்மை பயக்கும். மேலும், மாற்று விகித அபாயங்களைக் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதி இணைப்புகளை வலுப்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450333

இந்தியாவில் பெருமளவு நிதி முதலீட்டில் மெகா தரவு மையம் அமைப்பதாக கூகுள் அறிவிப்பு

3 weeks 5 days ago
14 Oct, 2025 | 02:06 PM அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை (Data Center) நிறுவவிருப்பதாகவும், அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளது. 15 பில்லியன் டொலர் முதலீட்டில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இந்த தரவு மையத்தை நிறுவவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் அமைக்கவிருக்கும் மிகப் பெரிய, ஒரு ஜிகாவோட் (Gigawatt) திறன்கொண்ட முதல் தரவு மையம் இதுவாகும். இந்தியாவில் பெருகிவரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், செயற்கை அறிவு (AI) உள்கட்டமைப்பு அதாவது ஏஐ பயன்பாடுகளை ஆதரிப்பதற்கான அதிநவீன கட்டமைப்புகள் மற்றும் பெரியளவிலான எரிசக்தி ஆதாரங்கள் அதாவது தரவு மையத்தை இயக்குவதற்குத் தேவையான பிரம்மாண்டமான எரிசக்தி ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தத் தரவு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவுப் பயன்பாடு (Artificial Intelligence - AI) அதிகரித்து வரும் சூழலில், கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் இந்த பாரிய முதலீடு, தொழில்நுட்ப ஆராய்ச்சியில் தனது கவனத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த முதலீடு இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227703

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 5 days ago
இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ உல‌க‌ கிண்ண‌ போட்டியில் இந்தியாவுக்கு எதிராக‌ சிற‌ப்பாக‌ விளையாடி இருந்தா............மற்ற‌ விளையாட்டுக்க‌ளில் சீக்கிர‌ம் அவுட் ஆகி இருந்தா.....................................

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 weeks 5 days ago
என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂

'இது மிகவும் மோசமாக இருக்கும்': சிலிக்கான் பள்ளத்தாக்கில் AI குமிழி வெடிப்பது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.

3 weeks 5 days ago
Nvidia வின் இன்றைய பங்குச்சந்தை மதிப்பு 4.45 டிரில்லியன் டொலர்கள் ! இது பிரான்சின் மொத்த உற்பத்தியை விட சுமார் ஒன்றரை மடங்கு. அப்பிள் மைக்ரோசொஃப்ட் ஆகிய பெரிய நிறுவனங்களைவிட அதிகம். மிகக் குறுகிய காலத்தில் எவ்வாறு இவ்வளவு மதிப்பைப் பெற்றுக் கொண்டது என்பதை நினைத்தால் தலை சுற்றும். தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த நிறுவனம் மீது நம்பிக்கை இல்லை.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 weeks 5 days ago
இப்படி சொந்த நாடுகளை நாசமறுத்துப்போட்டு, அடைக்கலம் தந்த நாடுகளுக்கும் வந்து இங்கேயும் ஊத்த வேலை செய்வது - ஒட்டுமொத்தமாக இப்போ உள்ளூர்வாசிகள் கலக குரல் எழுப்ப காரணங்களில் ஒன்றாகிறது. கேட்டால் வெள்ளைகாரன் மட்டும் சுத்தமா என ஒரு கேள்வி.