Aggregator

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!

1 month ago
அந்தளவுக்கு மண்டை தேவையற்றது. மனிதாபிமானம் என்பது உயிர் சார்ந்த சிந்தனை. ஒருவனை எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவனது குடும்பத்தையே அழிக்க முடியாது.

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month ago
மேதகு பிரபாகரன் அவர்களின் ஆட்சியின்போது தமிழீழத்தில் அவர் காற்றாலையை நிறுவியதான செய்திஒன்று வந்து வாசித்ததான நினைவு வருகிறது.😇 அது இன்று இல்லை. அரசபடை அதனை அழித்துவிட்டதா??

முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?

1 month ago
ஏராளன்… ஏற்கெனவே, சருமத்திற்கு பூசுகின்ற கிறீம் வகைகள் சிலவற்றை தலைமுடியில் இருந்துதான் தயாரிக்கின்றார்களாம். திருப்பதி, பழனி போன்ற கோவில்களில்… பக்தர்கள் மொட்டை அடிக்கும் முடிகள் எல்லாம் தொன் கணக்கில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. சில சொக்லேட்டுக்களில் கூட முடி கலந்துதான் தயாரிப்பு வேலை நடக்கின்றதாம்.

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 month ago
20 AUG, 2025 | 12:54 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் 27 / 2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நாளாந்தம் இரண்டு விமான சேவைகள் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து இடம்பெறுவதுடன், அந்த விமான சேவைகளில் பயணிகள் ஆசன எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஜுலை வரையில் யாழப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 140 விமானங்கள், 2021 ம் ஆண்டில் 32 விமானங்கள், 2022ம் ஆண்டில் 383 விமானங்கள், 2023 ம் ஆண்டில் 864 விமானங்கள், 2024 ம் ஆண்டில் 1156 விமானங்கள் வந்து சென்றுள்ளதுடன், 2025 ஜுலை 31ஆம் ஆண்டு வரையில் 752 விமானங்கள் வருகை தந்துள்ளன. அத்துடன் இந்த விமானங்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 3491 பயணிகளும் 2021ஆம் ஆண்டில் 110 பயணிகளும், 2022ஆம் ஆண்டில் 881 பயணிகளும், 2023ஆம் ஆண்டில் 29,717 பயணிகளும் 2024ஆம் ஆண்டில் 40,680 பயணிகளும், 2025ஆம் ஆண்டில் ஜுலை வரையில் 31,917 பயணிகளும் இந்த விமானங்களில் பயணித்துள்ளனர். இந்த சிறியளவிலான விமானங்களில் குறிப்பிட்டளவிலான பயணிகள் ஆசனங்கள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க வசதிகள் வழங்கப்படுகின்றன. இதேவேளை 2021ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தினால் லாபம் இருக்கவில்லை. 41 மில்லியன் ரூபா நஷ்டம் இருந்தது. 2022இல் 5 மில்லியன் வருமானம் கிடைத்தாலும் 82 மில்லியன் ரூபா செயற்பாட்டு நஷ்டமாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் 152 மில்லியன் ரூபா இலாபம் இருந்தது. 2024இல் 286 மில்லியன் ரூபா வருமானமும், செயற்பாட்டு லாபமாக 76 மில்லியன் ரூபாவும் இருந்தது. அத்துடன் 2025 ஜுலை வரையில் 197 மில்லியன் ரூபா வருமானமும் செயற்பாட்டு லாபமாக 67 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இலங்கை விமான சேவைகள், விமான நிலையங்கள் நிறுவனத்தை சேர்ந்த 76 பேரும், சுங்கம், வெளிநாட்டு சேவைகள், சுற்றுலாத்துறை, பொலிஸ் உள்ளிட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த 182 பேரும் பணியாற்றுகின்றனர். இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் பெரியளவிலான விமானங்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமாயின் பெரியளவிலான விமான ஓடுபாதை, விமான நுழைவு பகுதி, விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி மற்றும் பயணிகள் பகுதி உள்ளிட்ட நிர்மாணங்களுக்காக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலதிக காணிகளையும் கையகப்படுத்த வேண்டிவரும். இங்கு ஆய்வுகளை நடத்தி அது தொடர்பான அறிக்கைகளை பெற்றே அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அங்கே தற்போது பயணிகளை வரவேற்க, வழியனுப்ப செல்லும் உறவினர்களுக்காக அங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு தற்காலிக டென்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும் நிரந்த நிர்மானமொன்றை வரும் மாதங்களில் அதனை செய்வோம். நிச்சயமாக சர்வதேச விமான நிலையமாக யாழ். விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. அதனை வணிக திட்டங்களுடனேயே செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும். கட்டம் கட்டமாக பெரிய விமான நிலையமாக மாற்ற வேண்டும். மத்தள விமான நிலையம் பெரிய விமானங்களை தரையிறக்ககூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அதனை போன்று யாழ். விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும். ஆனால் முறையான வணிக திட்டமிடல்கள் இன்றி அதனை செய்தால் அது தோல்வியடையும். இதனால் கட்டம் கட்டமாக நாங்கள் அதனை அபிவிருத்தி செய்வோம். நல்ல நிலைக்கு தற்போது விமான நிலையம் செல்கின்றது. இந்நிலையில் யாழ். விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. ஆனால் தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும், இதனை மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/222928

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 month ago

20 AUG, 2025 | 12:54 PM

image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என  துறைமுகம்  மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.சிறிதரன் 27 / 2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது,

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நாளாந்தம்  இரண்டு விமான சேவைகள் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து இடம்பெறுவதுடன், அந்த விமான சேவைகளில் பயணிகள் ஆசன எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஜுலை வரையில் யாழப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 140 விமானங்கள், 2021 ம் ஆண்டில்  32 விமானங்கள், 2022ம் ஆண்டில்   383 விமானங்கள்,  2023 ம் ஆண்டில்   864 விமானங்கள், 2024 ம் ஆண்டில்   1156 விமானங்கள் வந்து சென்றுள்ளதுடன், 2025 ஜுலை 31ஆம் ஆண்டு வரையில் 752 விமானங்கள் வருகை தந்துள்ளன.

அத்துடன் இந்த விமானங்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 3491 பயணிகளும் 2021ஆம் ஆண்டில் 110 பயணிகளும்,  2022ஆம் ஆண்டில் 881 பயணிகளும்,  2023ஆம் ஆண்டில் 29,717 பயணிகளும் 2024ஆம் ஆண்டில் 40,680 பயணிகளும், 2025ஆம் ஆண்டில் ஜுலை வரையில் 31,917 பயணிகளும் இந்த விமானங்களில் பயணித்துள்ளனர்.

இந்த  சிறியளவிலான விமானங்களில் குறிப்பிட்டளவிலான பயணிகள் ஆசனங்கள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதேவேளை 2021ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தினால் லாபம் இருக்கவில்லை. 41 மில்லியன் ரூபா நஷ்டம் இருந்தது. 2022இல் 5 மில்லியன் வருமானம் கிடைத்தாலும் 82 மில்லியன் ரூபா செயற்பாட்டு நஷ்டமாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் 152 மில்லியன் ரூபா இலாபம் இருந்தது.   

2024இல் 286 மில்லியன் ரூபா வருமானமும், செயற்பாட்டு லாபமாக 76 மில்லியன் ரூபாவும் இருந்தது. அத்துடன் 2025 ஜுலை வரையில் 197 மில்லியன் ரூபா வருமானமும் செயற்பாட்டு லாபமாக 67 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் இலங்கை விமான சேவைகள், விமான நிலையங்கள் நிறுவனத்தை சேர்ந்த 76 பேரும், சுங்கம், வெளிநாட்டு சேவைகள், சுற்றுலாத்துறை, பொலிஸ் உள்ளிட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த 182 பேரும் பணியாற்றுகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் பெரியளவிலான விமானங்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமாயின் பெரியளவிலான விமான ஓடுபாதை, விமான நுழைவு பகுதி, விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி மற்றும் பயணிகள் பகுதி உள்ளிட்ட நிர்மாணங்களுக்காக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலதிக காணிகளையும் கையகப்படுத்த வேண்டிவரும். இங்கு ஆய்வுகளை நடத்தி அது தொடர்பான அறிக்கைகளை பெற்றே அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அங்கே தற்போது பயணிகளை வரவேற்க, வழியனுப்ப செல்லும் உறவினர்களுக்காக அங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அங்கு தற்காலிக டென்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும் நிரந்த நிர்மானமொன்றை வரும் மாதங்களில் அதனை செய்வோம். நிச்சயமாக சர்வதேச விமான நிலையமாக யாழ். விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்  என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. அதனை வணிக திட்டங்களுடனேயே செய்ய வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும். கட்டம் கட்டமாக பெரிய விமான நிலையமாக மாற்ற வேண்டும். மத்தள விமான நிலையம் பெரிய விமானங்களை தரையிறக்ககூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. 

அதனை போன்று யாழ். விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும். ஆனால் முறையான வணிக திட்டமிடல்கள் இன்றி அதனை செய்தால் அது தோல்வியடையும். இதனால் கட்டம் கட்டமாக நாங்கள் அதனை அபிவிருத்தி செய்வோம். நல்ல நிலைக்கு தற்போது விமான நிலையம் செல்கின்றது. 

இந்நிலையில் யாழ். விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. ஆனால் தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும், இதனை மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/222928

முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?

1 month ago
மயிர்.... சாப்பாட்டில் விழுந்து இருந்தாலே, முழுச் சாப்பாட்டையும் தூக்கி, குப்பைத் தொட்டியில் போடுகின்ற நாம்... அதே மயிரில் செய்த பற்பசையில்... காலையும், மாலையும் நன்றாக பல் தேய்த்து விளக்குகின்றோம். 😂 மயிருக்கு வந்த வாழ்வு.... காலம் செய்த கோலம். 🤣

செம்மணிக்கான நீதியை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் - பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு புலம்பெயர் தமிழர்கள் மகஜர்

1 month ago
20 AUG, 2025 | 01:58 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றும் அதேவேளை அம்மனிதப்புதைகுழி மற்றும் அதற்கு சமாந்தரமான குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர். செம்மணி விவகாரம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் பிரிட்டனின் ஆதரவைக்கோரி பிரதமரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் மகஜரில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இம்மகஜரில் கையெழுத்திட்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களும், தப்பிப்பிழைத்தவர்களும், தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் பிரதிநிதிகளுமாகிய நாம், அண்மையில் தமிழர் தாயகத்தில் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உங்களுக்கு இந்த மகஜரை எழுதுகிறோம். அரச அனுசரணையுடனான ஒடுக்குமுறைகளால் தமிழ் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாம் ஏற்கனவே அறிந்திருந்த உண்மை, தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியின் ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. செம்மணிப்படுகொலை என்பது தனியொரு குற்றச்செயல் அல்ல. மாறாக அது நீண்டகாலமாகத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புத் திட்டத்தின் ஓரங்கமேயாகும். நாம் பல தசாப்தகாலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகள் என்பவற்றிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களாவோம். இன்று நாம் எமக்காக மாத்திரமன்றி, நீதியோ, நினைவுகூரலோ, அங்கீகாரமோ இன்றிப் புதைக்கப்பட்ட மற்றும் அமைதிப்படுத்தப்பட்ட சகலருக்காகவும் குரல் எழுப்புகிறோம். எமது அமைப்பானது தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதையும், தமிழீழத்தில் தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதையும் இலக்காகக்கொண்டு தொடர்ச்சியாகப் பணியாற்றிவருகிறோம். அதன் நீட்சியாக இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். அதேவேளை இவ்விடயத்தில் இலங்கை அதிகாரிகள் சிலருக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். இருப்பினும் அந்நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானவையன்று என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அப்பாவித் தமிழ் மக்களின் எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி, தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு தொடர்கிறது என்பதற்கான சான்றாகும். இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றல், செம்மணி விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவரல், செம்மணி உள்ளடங்கலாகத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுடன் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவிடம் வலியுறுத்தல், செம்மணிப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறலைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தல், தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவ ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தல், செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்கல், தமிழர்களை இலக்குவைத்துத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் நில அபகரிப்புக்களைக் கண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/222932

செம்மணிக்கான நீதியை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் - பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு புலம்பெயர் தமிழர்கள் மகஜர்

1 month ago

20 AUG, 2025 | 01:58 PM

image

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றும் அதேவேளை அம்மனிதப்புதைகுழி மற்றும் அதற்கு சமாந்தரமான குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.

செம்மணி விவகாரம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் பிரிட்டனின் ஆதரவைக்கோரி பிரதமரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் மகஜரில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இம்மகஜரில் கையெழுத்திட்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களும், தப்பிப்பிழைத்தவர்களும், தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் பிரதிநிதிகளுமாகிய நாம், அண்மையில் தமிழர் தாயகத்தில் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உங்களுக்கு இந்த மகஜரை எழுதுகிறோம்.

அரச அனுசரணையுடனான ஒடுக்குமுறைகளால் தமிழ் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாம் ஏற்கனவே அறிந்திருந்த உண்மை, தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியின் ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

செம்மணிப்படுகொலை என்பது தனியொரு குற்றச்செயல் அல்ல. மாறாக அது நீண்டகாலமாகத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புத் திட்டத்தின் ஓரங்கமேயாகும்.

நாம் பல தசாப்தகாலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகள் என்பவற்றிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களாவோம். 

இன்று நாம் எமக்காக மாத்திரமன்றி, நீதியோ, நினைவுகூரலோ, அங்கீகாரமோ இன்றிப் புதைக்கப்பட்ட மற்றும் அமைதிப்படுத்தப்பட்ட சகலருக்காகவும் குரல் எழுப்புகிறோம்.

எமது அமைப்பானது தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதையும், தமிழீழத்தில் தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதையும் இலக்காகக்கொண்டு தொடர்ச்சியாகப் பணியாற்றிவருகிறோம். 

அதன் நீட்சியாக இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதேவேளை இவ்விடயத்தில் இலங்கை அதிகாரிகள் சிலருக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். இருப்பினும் அந்நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானவையன்று என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

அப்பாவித் தமிழ் மக்களின் எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி, தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு தொடர்கிறது என்பதற்கான சான்றாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றல், செம்மணி விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவரல், செம்மணி உள்ளடங்கலாகத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுடன் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவிடம் வலியுறுத்தல், செம்மணிப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறலைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தல், தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவ ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தல், செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்கல், தமிழர்களை இலக்குவைத்துத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் நில அபகரிப்புக்களைக் கண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும். 

https://www.virakesari.lk/article/222932

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month ago
மன்னார் மக்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கண்டியில் ஊர்வலம் 20 AUG, 2025 | 05:25 PM மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (20) 18 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் ஆதரவு வழங்கும் வகையில் கொக்குபுடையான் கிராம மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் முகமாக மக்கள் போராட்ட முன்னனியினரும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். அதே நேரம் மன்னார் மக்களின் உரிமைக்காக சிங்கள,மற்றும் தமிழ் மக்களை ஒன்று திரட்டி இம்மாதம் 23,24 ஆம் திகதிகளில் கண்டி மாவட்டத்தில் இருந்து கிரிபத்கொட வரை ஒரு நடைபவணி ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற உள்ளதாகவும் மக்கள் போராட்ட முன்னனியினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222967

மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு - வேலணை பிரதேச சபையில் முன்வைப்பு!

1 month ago
20 AUG, 2025 | 04:55 PM 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் சபையின் உறுப்பினர் பிரகலாதன் கூறியதுடன் இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்று புதன்கிழமை (20) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு வலியுறுத்தினார். மேலும் செம்மணி புதைகுழி விவகாரம் பூதாகரமாக இருக்கும் இன்றைய சூழலில் வேலணை பிரதேசத்தில் 90 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் இந்த புதைகுழியையும் அகழ்வதற்கு அப்பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச சபையாக இருப்பதால் அதை வலுயுறுத்தவே இந்த விவகாரம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது என்றும் கூறினார். இது குறித்து சபையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த மனிதப் புதைகுழி விவகாரம் காலத்துக்கு காலம் தேர்தல் அரசியல் பேசும் பொருளாக இருப்பதால் இது தொடர்பிலான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். குற்றவாழிகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வும் பரிகாரமும் வழங்குவது அவசியம் என்றும் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த்,பார்த்தீபன், மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர். இன்னிலையில் குறித்த ஆதாரங்களுடன் துறைசார் தரபுக்கு அறிக்கை அனுப்பப்ப சபையில் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/222963

மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு - வேலணை பிரதேச சபையில் முன்வைப்பு!

1 month ago

20 AUG, 2025 | 04:55 PM

image

1990 களில் இடம்பெற்ற  இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் சபையின் உறுப்பினர் பிரகலாதன் கூறியதுடன் இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்று புதன்கிழமை (20) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார்  தலைமையில்  காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே இவ்வாறு வலியுறுத்தினார்.

மேலும் செம்மணி புதைகுழி விவகாரம் பூதாகரமாக இருக்கும் இன்றைய சூழலில் வேலணை பிரதேசத்தில் 90 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் இந்த புதைகுழியையும் அகழ்வதற்கு அப்பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச சபையாக இருப்பதால் அதை வலுயுறுத்தவே இந்த விவகாரம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது என்றும் கூறினார்.

இது குறித்து சபையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த மனிதப் புதைகுழி விவகாரம் காலத்துக்கு காலம் தேர்தல் அரசியல் பேசும் பொருளாக  இருப்பதால் இது தொடர்பிலான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

குற்றவாழிகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வும் பரிகாரமும் வழங்குவது அவசியம் என்றும் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த்,பார்த்தீபன், மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர்.

இன்னிலையில் குறித்த ஆதாரங்களுடன் துறைசார் தரபுக்கு அறிக்கை அனுப்பப்ப சபையில் தீர்மானிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/222963

முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?

1 month ago
பட மூலாதாரம், KING’S COLLEGE LONDON படக்குறிப்பு, இந்த தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என மருத்துவர் ஷெரிஃப் எல்ஷர்காவி நம்புகிறார். கட்டுரை தகவல் ஹேரி லோவ் பிபிசி நியூஸ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் முடியிலிருந்து தயாரிக்கப்படும் டூத்பேஸ்ட் (பற்பசை) பாதிக்கப்பட்ட உங்களின் பற்களை சரிசெய்து பாதுகாக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முடி, தோல் மற்றும் கம்பளியில் காணப்படும் புரதமான கெரடினால் பல் எனாமலை சரி செய்து பல் சொத்தையாவதை முன்கூட்டியே தடுக்க முடியும் என லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கெரடின் என்பது எச்சிலில் உள்ள தாதுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது இயற்கையான எனாமல் அமைப்பு மட்டும் செயல்பாட்டை ஒத்த பாதுகாப்பு பூச்சு ஒன்றை தயாரிக்கிறது என இவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. "கெரட்டின் என்பது தற்போதைய பல் சிகிச்சைகளுக்கு ஒரு நல்ல மாற்றை வழங்குகிறது" என்கிறார் கிங்ஸ் கல்லூரியின் முனைவர் ஆய்வாளரும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான சாரா காமியா. பட மூலாதாரம், KING’S COLLEGE LONDON படக்குறிப்பு, அமிலத்தன்மை கொண்ட உணவு மற்றும் பானங்களால் பற்கள் சொத்தை ஆகலாம். "இந்த தொழில்நுட்பம் உயிரியல் மற்றும் பல் மருத்துவத்துக்கு இடையேயான இடைவெளியை சுருக்கி இயற்கையான நடைமுறையை பிரதிபலிக்கும் சுழலுக்கு உகந்த மாற்றை வழங்குகிறது" என்று தெரிவித்தார். மேலும் அவர், "இது உயிரியல் கழிவு பொருட்களான முடி மற்றும் தோலிலிருந்து சூழலுக்கு உகந்த முறையில் நிலையாக பெறப்படுகிறது. அதோடு இவை பல் மறுசீரமைப்பில் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட பாரம்பரிய பிளாஸ்டிக் ரெசின்களுக்கான தேவையை தவிர்க்கிறது." என்றார். அட்வான்ஸ்ட் ஹெல்த்கேட் மெட்டீரியல்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் விஞ்ஞானிகள் கம்பளியிலிருந்து கெரடினை எடுத்துள்ளனர். படக்குறிப்பு, முடியிலிருந்து பெறப்படும் கெரடின் மூலம் பல் எனாமலை சரி செய்யும் டூத் பேஸ்டை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் கெரடினை பற்களில் தேய்கின்றபோது எச்சிலில் உள்ள தாதுக்களில் தொடர்பு ஏற்படுவதன் மூலம் இயற்கை எனாமலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை பிரதிபலிக்கிற மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, படிகம் வடிவிலான சாரம் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, காலப்போக்கில் இதன் மீது கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஐயன்கள் தொடர்ந்து படிந்து பற்களைச் சுற்றி எனாமல் பூச்சு போன்ற பாதுகாப்பு அமைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது. அமிலத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள், மோசமான வாய் சுகாதாரம் மற்றும் வயதாவது என அனைத்துமே எனாமல் அரித்து பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் பல் வலி ஏற்பட்டு ஒருவர் பல்லை இழக்க நேரிடுகிறது. பட மூலாதாரம், KING'S COLLEGE LONDON படக்குறிப்பு, இந்த ஆய்வு முனைவர் மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது "எலும்பு மற்றும் முடி போல எனாமல் மறு உற்பத்தி செய்துகொள்ளாது. ஒருமுறை இழந்தால் அதன் பிறகு மீண்டும் பெற முடியாது" என்கிறார் மூத்த ஆசிரியரும் கிங்ஸ் கல்லூரியில் ப்ராஸ்தோடாண்டிக்ஸ் துறையின் ஆலோசகருமான ஷெரிஃப் எல்ஷர்காவி "நாம் ஒரு சுவாரஸ்யமான யுகத்தில் நுழைகிறோம். இங்கு உயிரி தொழில்நுட்பம் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாது உடலின் சொந்த பொருட்களை பயன்படுத்தி உயிரியல் செயல்பாடுகளை மீட்டெடுக்கிறது" "மேலும் வளர்ச்சி மற்றும் சரியான துறைசார் கூட்டணி மூலம் கூடிய விரையில் நாம் முடிவெட்டுவது போன்ற எளிய விஷயத்திலிருந்து வலுவான, ஆரோக்கியமான புன்னகைகளைப் பார்க்க முடியும்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mlg893y18o

முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?

1 month ago

பல் சிகிச்சை, டூத் பேஸ்ட், முடி, மனித முடி, தலைமுடி

பட மூலாதாரம், KING’S COLLEGE LONDON

படக்குறிப்பு, இந்த தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என மருத்துவர் ஷெரிஃப் எல்ஷர்காவி நம்புகிறார்.

கட்டுரை தகவல்

  • ஹேரி லோவ்

  • பிபிசி நியூஸ்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

உங்கள் முடியிலிருந்து தயாரிக்கப்படும் டூத்பேஸ்ட் (பற்பசை) பாதிக்கப்பட்ட உங்களின் பற்களை சரிசெய்து பாதுகாக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முடி, தோல் மற்றும் கம்பளியில் காணப்படும் புரதமான கெரடினால் பல் எனாமலை சரி செய்து பல் சொத்தையாவதை முன்கூட்டியே தடுக்க முடியும் என லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கெரடின் என்பது எச்சிலில் உள்ள தாதுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது இயற்கையான எனாமல் அமைப்பு மட்டும் செயல்பாட்டை ஒத்த பாதுகாப்பு பூச்சு ஒன்றை தயாரிக்கிறது என இவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

"கெரட்டின் என்பது தற்போதைய பல் சிகிச்சைகளுக்கு ஒரு நல்ல மாற்றை வழங்குகிறது" என்கிறார் கிங்ஸ் கல்லூரியின் முனைவர் ஆய்வாளரும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான சாரா காமியா.

பல் சிகிச்சை, டூத் பேஸ்ட், முடி, மனித முடி, தலைமுடி

பட மூலாதாரம், KING’S COLLEGE LONDON

படக்குறிப்பு, அமிலத்தன்மை கொண்ட உணவு மற்றும் பானங்களால் பற்கள் சொத்தை ஆகலாம்.

"இந்த தொழில்நுட்பம் உயிரியல் மற்றும் பல் மருத்துவத்துக்கு இடையேயான இடைவெளியை சுருக்கி இயற்கையான நடைமுறையை பிரதிபலிக்கும் சுழலுக்கு உகந்த மாற்றை வழங்குகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இது உயிரியல் கழிவு பொருட்களான முடி மற்றும் தோலிலிருந்து சூழலுக்கு உகந்த முறையில் நிலையாக பெறப்படுகிறது. அதோடு இவை பல் மறுசீரமைப்பில் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட பாரம்பரிய பிளாஸ்டிக் ரெசின்களுக்கான தேவையை தவிர்க்கிறது." என்றார்.

அட்வான்ஸ்ட் ஹெல்த்கேட் மெட்டீரியல்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் விஞ்ஞானிகள் கம்பளியிலிருந்து கெரடினை எடுத்துள்ளனர்.

பல் சிகிச்சை, டூத் பேஸ்ட், முடி, மனித முடி, தலைமுடி

படக்குறிப்பு, முடியிலிருந்து பெறப்படும் கெரடின் மூலம் பல் எனாமலை சரி செய்யும் டூத் பேஸ்டை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

கெரடினை பற்களில் தேய்கின்றபோது எச்சிலில் உள்ள தாதுக்களில் தொடர்பு ஏற்படுவதன் மூலம் இயற்கை எனாமலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை பிரதிபலிக்கிற மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, படிகம் வடிவிலான சாரம் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, காலப்போக்கில் இதன் மீது கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஐயன்கள் தொடர்ந்து படிந்து பற்களைச் சுற்றி எனாமல் பூச்சு போன்ற பாதுகாப்பு அமைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது.

அமிலத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள், மோசமான வாய் சுகாதாரம் மற்றும் வயதாவது என அனைத்துமே எனாமல் அரித்து பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் பல் வலி ஏற்பட்டு ஒருவர் பல்லை இழக்க நேரிடுகிறது.

பல் சிகிச்சை, டூத் பேஸ்ட், முடி, மனித முடி, தலைமுடி

பட மூலாதாரம், KING'S COLLEGE LONDON

படக்குறிப்பு, இந்த ஆய்வு முனைவர் மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

"எலும்பு மற்றும் முடி போல எனாமல் மறு உற்பத்தி செய்துகொள்ளாது. ஒருமுறை இழந்தால் அதன் பிறகு மீண்டும் பெற முடியாது" என்கிறார் மூத்த ஆசிரியரும் கிங்ஸ் கல்லூரியில் ப்ராஸ்தோடாண்டிக்ஸ் துறையின் ஆலோசகருமான ஷெரிஃப் எல்ஷர்காவி

"நாம் ஒரு சுவாரஸ்யமான யுகத்தில் நுழைகிறோம். இங்கு உயிரி தொழில்நுட்பம் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாது உடலின் சொந்த பொருட்களை பயன்படுத்தி உயிரியல் செயல்பாடுகளை மீட்டெடுக்கிறது"

"மேலும் வளர்ச்சி மற்றும் சரியான துறைசார் கூட்டணி மூலம் கூடிய விரையில் நாம் முடிவெட்டுவது போன்ற எளிய விஷயத்திலிருந்து வலுவான, ஆரோக்கியமான புன்னகைகளைப் பார்க்க முடியும்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0mlg893y18o

உப்பு விலை குறைந்தது

1 month ago
Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 04:18 PM லங்கா உப்பு நிறுவனம் தனது அயோடின் கலந்த உப்புப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நிறுவனத்தின் தலைவர் நந்தன திலக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 400 கிராம் அயோடின் கலந்த உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 1 கிலோ கிராம் பக்கற் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 100 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கும், கிரிஸ்டல் உப்பு பக்கற் ஒன்றின் விலை 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை சதோசா விற்பனை நிலையங்களில் 90 ரூபாவுக்கு கிடைக்கும் என நந்தன திலக்க குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விலைக் குறைப்பு செயல்படுத்தப்பட்டதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். https://www.virakesari.lk/article/222948

உப்பு விலை குறைந்தது

1 month ago

Published By: DIGITAL DESK 3

20 AUG, 2025 | 04:18 PM

image

லங்கா உப்பு நிறுவனம் தனது அயோடின் கலந்த உப்புப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நிறுவனத்தின் தலைவர் நந்தன திலக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

400 கிராம் அயோடின் கலந்த உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை,  1 கிலோ கிராம் பக்கற் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 100 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கும், கிரிஸ்டல் உப்பு பக்கற் ஒன்றின் விலை 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக,  நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை சதோசா விற்பனை நிலையங்களில் 90 ரூபாவுக்கு கிடைக்கும் என நந்தன திலக்க குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விலைக் குறைப்பு செயல்படுத்தப்பட்டதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/222948

நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

1 month ago
நல்லூர் தேர்த்திருவிழாவினையொட்டி நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 01:52 PM வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை (20) மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதன்பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222936

நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

1 month ago

நல்லூர் தேர்த்திருவிழாவினையொட்டி நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை 

Published By: DIGITAL DESK 3

20 AUG, 2025 | 01:52 PM

image

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை (20) மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை  நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதன்பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222936

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து

1 month ago
முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு : கைதான 4 இராணுவ வீரர்களுக்கும் விளக்கமறியல் 20 AUG, 2025 | 02:04 PM முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்படட இளைஞனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி முன்னிலையில் குறித்த 4 இராணுவ வீரர்களும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்பட்ட போது, அவர்களில் இருவரை சாட்சிகள் அடையாளம் காட்டியுள்ளனர். முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் இராணுவத்தினர் சிலர் இளைஞர்களை அழைத்துள்ளதாகவும் பின்னர் அங்கு சில இராணுவத்தினர் அந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனையடுத்து அங்கிருந்து இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காணாமல்போன நிலையில், பின்னர் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் 32 வயதுடைய எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்பவர் உயிரிழந்திருந்தார். குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், சார்ஜன்ட் உள்ளிட்ட 4 இராணுவத்தினரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222935