1 month ago
"மூன்று கவிதைகள் / 04"
'யாரடி வந்தார் என்னடி சொன்னார் ?'
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
அரசடி நிழலில் பேசியது என்னவோ?
பாரடி என்னை தனிமரமாய் தவிக்கிறேனே
கூறடி பதிலை கூச்சத்தைவிட்டு எனக்கு?
ஆறடி நிலமே சொந்தமாகும் உலகிலே
ஏனடி உனக்கு இத்தனை ஆசைகள்?
தேரடி வீதியில் யாருக்கு காத்திருக்கிறாய்
சேரடி சொத்தை காதலை விற்றா?
பூங்கொடி என்று பெயர்வைத்தது எனோ
அங்காடி நாய்போல் அலைவது எனோ?
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
................................................................
'விதியின் விளையாட்டு'
விதியின் விளையாட்டு உறவைப் பிரிக்குது
மதியை இழந்து ஏதேதோ பேசுது !
நதியின் ஓட்டத்தில் அகப்பட்ட துரும்பாய்
மோதிமோதி நானும் களைத்து விட்டேன் !
ஊடல் இதுவென முதலில் நினைத்து
கூடல் கொண்டு இணைய நினைத்தேன்!
ஆடல் பாடல் இரண்டையும் தொலைத்து
உடல் மெலிந்து வாடிவதங்கியதே மிச்சம்!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
..........................................
'திரும்பிப் பார்க்கிறேன்'
திரும்பிப் பார்க்கிறேன் அத்தியடியில் நின்று
திண்ணையில் அப்பா அம்மாவைக் காணவில்லை
திலகமிட்ட படம் மட்டுமே தொங்குது!
குண்டுகள் சத்தம் இன்று ஓய்ந்துவிட்டது
குழிகளும் மறைந்து கட்டிடங்கள் உயர்ந்துவிட்டது
குரூரம் எனோ இன்னும் எதிரொலிக்குது!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
1 month ago
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 20 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 20 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'உண்மையில் எல்லாளன் மற்றும் துட்டகாமணி யார்?' இளவரசன் எல்லாளன் அசேலனைக் கொன்று நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சம் அவரை ஒரு ஒப்பற்ற மன்னர் என்று வர்ணித்தது. தீபவம்சம் அவர் ஒரு தமிழர் என்றோ ஒரு இளவரசர் என்றோ சோழ நாட்டிலிருந்து வந்தவர் என்றோ கூறவில்லை. தீபவம்சம், மகாவம்சம் போல், தமிழர் விரோத வெறுப்பைக் கக்கவில்லை. அதன் நலன் பௌத்தம் மட்டுமே, தமிழர்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பின்னர் இளவரசர் அபயா (தீபவம்சம் இறக்கும் போது ஒரே ஒரு முறை 'துட்டகாமணி' என்ற அடைமொழியைப் பயன்படுத்தினார்) முப்பத்திரண்டு மன்னர்களைக் கொன்று இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இளவரசன் அபயா எல்லாளனைக் கொன்றதாகக் கூறவில்லை. ஆகவே, எல்லாளன் முதுமையால் இறந்திருக்கலாம்? அவருக்குப் பிறகு முப்பத்திரண்டு துணை மன்னர்கள் அல்லது தலைவர்கள் ஆட்சி செய்து இருக்கலாம்?. இளவரசர் அபயா அவர்கள் மீது போர்தொடுத்து, அரசைக் கைப்பற்றி இருக்கலாம்?. அங்கு, பல துணை அரசுகளுடன், பல தமிழ் இளவரசர்களும் இருந்ததே உண்மையான கதையாக இருக்க வேண்டும். மூத்தசிவ, சிவா, மகாசிவ, சேனா, குட்டா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள். அப்படியே, திஸ்ஸ, சுரதிஸ்ஸ கூட தமிழர்களாக இருக்க வேண்டும். இளவரசர் அபயாவின் தந்தை காக்கவன்னா [The father of prince Abhaya is Kakkavanna]. ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட தமிழ் வன்னிப் பகுதியின் கடைசி மன்னன் பாண்டரவன்னியனை காட்டிக் கொடுத்தவனின் பெயர் கூட காக்கவன்னியன் [Kakkavanniyan] தான். இது இன்றைய முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்துள்ளது. அதே முல்லைத்தீவு மாவடடத்தில் தான், மீண்டும் ஒரு மிகப்பெரிய இன அழிப்பு மே மாதம் 2009 இல் நடைபெரும் உள்ளது. காக்கவன்னா என்ற பெயர் ஒலிப்பு ரீதியாக காக்கவன்னியன் பெயரை ஒத்திருக்கிறது. காக்கவன்னாவுக்கு மூத்தசிவனுடனோ அல்லது தேவநம்பியதீசனுடனோ இருந்த தொடர்பை தீபவம்சம் கொடுக்கவில்லை. எனவே, மகாநாமா இதைப் பயன்படுத்தி மகாவம்சத்தில் ஒரு கதையை புகுத்தினார் என்பதே உண்மையாக இருக்கலாம்? . மகாவம்சத்தில் பத்து போர்வீரர்களைப் பற்றிய அற்புதமான கதைகள் உள்ளன, ஒவ்வொருவரும் பத்து யானைகளை விட வலிமையானவர்களாம்? எனவே இவை எந்த தீவிரமான விமர்சனத்திற்கும் தகுதியற்றது. இது புத்த மத பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சிக்காக மட்டுமே என்று நாம் இலகுவாக எடுத்துக் கொள்ளலாம். மகாவம்சத்தின்படி துட்ட காமினி (துட்ட கைமுனு) தன் தந்தையின் உயிரியல் மகன் அல்ல. அவர் இறக்கும் நிலையில் இருந்த ஒரு துறவியின் மறுபிறவியாக இருந்தார். அதாவது, அந்த துறவி தான் இறந்ததும், உடனடியாக துட்டகாமணியின் தாயான விகாரா தேவியின் கருப்பையில், தானாகவே கருவாக மாறினார். அதாவது ஒரு ஆணின் அல்லது கணவனின் துணை இல்லாமல், தானாகவே விகாரா தேவியின் வயிற்றில் கருத்தரித்தார்? இந்தக் கருத்தை நான் இங்கு அலசவில்லை, அது அவர் அவர்களின் நம்பிக்கை. எனவே, துட்டகாமணி அரசனின் இரத்த வாரிசு அல்ல. அவர் ஒரு துறவியின் மறு அவதாரம் ஆகும். ஆகவே இவர் சட்டவிரோதமாக முக்கியத்துவம் வாய்ந்த பதவியை, அரச வரிசை இல்லாமல் எடுத்த ஒரு நபர் என்று கொள்ளலாம் [அபகரிப்பவர் ஆகிறார் / usurper]. ஆகவே அவர் அரச வம்சாவளியைத் சட்ட்டபூர்வமாகத் தொடர்ந்திருக்க முடியாது. எனினும் இராசவலியத்தில் மற்றொரு கதையும் காணப்படுகிறது. மகாவம்சத்தில் எல்லாளனைப் பற்றிய விவரிப்பு தாராளமாக உள்ளது. மேலும் அத்தியாயம் 21 இல் கொடுக்கப்பட்டுள்ள கதைகள் 'நாங்கள் பள்ளியில் ஆறாம் அல்லது ஏழாம் வகுப்பின் போது படித்த கதைகளுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளன. இலங்கை வரலாற்றாசிரியர்கள் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கதைகளை தாராளமாகப் இங்கு பயன்படுத்தினர் என்பதே உண்மை. எல்லாளன் என்பவர் மனுநீதி கண்ட சோழன் மற்றும் சிபி சக்கரவர்த்தியின் நகல் போல உள்ளது. எல்லாளன் என்ற பாத்திரம், ஒருவன் குணத்திலும் நீதியிலும் ஒப்பிட முடியாதவனாக இருக்கலாம், ஆனால் அவன் பௌத்தனாக இல்லாவிட்டால் அவன் கொல்லப்பட்டு ஒழிக்கப்படுவான் என்ற தர்க்கத்தை வலியுறுத்த இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. இதுதான் நாளாகமங்களில் ஓடும் கொடூரமான தர்க்கம் ஆகும்! என்றாலும் சாதாரண சிங்கள மக்களுக்கு இந்த தர்க்கத்தில் உண்மையான பங்கு இல்லை, அதனால்த்தான் அவர்கள் இப்போதும் எல்லாளனை ஒரு நியாயமான ஆட்சியாளராக மதிக்கிறார்கள். முதலாவது கண்டியின் அதிகாரி, பிலிமத்தலாவ [The First Adikar of Kandy, Pilimatalava,], பிரிட்டிஷ் காலனி அரசின் பிடியில் இருந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்குக்கு, தனது விசுவாசமான குடிமக்களுடன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பல்லக்கில் அனுராதபுரத்தின் ஊடாக வன்னிக்கு காவிச் சென்றனர். அவர் மிகவும் சோர்வுற்று களைத்துப்போய் இருந்தார். என்றாலும் எல்லாளனின் நினைவு தூபி வந்ததும், பல்லக்கில் இருந்து இறங்கி, நீண்ட தூரம் நடந்து போனார் [He was exhausted and tired, but he got down where he thought that the Elara’s memorial was and started walking for a long distance.] அவரின் விசுவாசமான குடிமக்கள், நினைவு தூபியை கடந்து நீண்ட தூரம் வந்துவிட்டோம் என்று சொல்லியும், இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தே, பல்லக்கில் ஏறினார் என்பது வரலாறு. அந்த பெருமைமிக்க தமிழ் அரசன் தான் எல்லாளன்! நான் இந்த நேரத்தில், இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும். தீபவம்சம், விகாரமகாதேவியின் எந்த கோரமான ஆசைகளையும் [the gory desires of Vihara Mahadevi] சொல்லவில்லை, ஆக மகாவம்சமும் அதன் பின் எழுதப்பட்ட காப்பியங்களும் தான் சொல்லுகின்றன. அதுமட்டும் அல்ல, தீபவம்சத்தில் எல்லாளனுக்கும் துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி (சிங்களம், දුටුගැමුණු duṭugämuṇu) க்கும் இடையிலான போர் ஆகியவையும் அங்கு இடம்பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. முதலியார் செ இராசநாயகம் 'எலு' என்று இக்காலத்தில் பிழையாக வழங்கப் படும் 'ஈழு' என்னும் நிறைவற்ற மொழியை அங்கு வசித்த நாகரும் இயக்கரும் பேசியதால், இலங்கைக்கு ஈழம், ஈழமண்டலம் போன்ற பெயர்கள் உண்டாயிற்று என்கிறார். உதாரணமாக, பட்டினப் பாலை "ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் " என்ற வரியையும், பூநகரியில் கண்டு பிடிக்கப்படட இரண்டு மட்பாண்ட பிராமி சாசனத்தின் முதலாவதின் முதல் இரண்டு எழுத்தும் 'ஈழ' என்றும் இரண்டாவது சாசனம் 'ஈலா' என்றும் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார். மேலும் இயக்கர், நாகர் இனத்தவர்கள் திராவிடர்கள் என்பது, அதிகமாக, 1] ஈமச் சின்னங்கள், 2] ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள், 3] ஆதி மக்களது சமய வழிபாடு போன்றவை எடுத்துக் காட்டுகின்றன என கலாநிதி க குணராசா அவர்கள் தனது 'ஈழத்தவர் வரலாறு' என்ற நூலில் கூறுகிறார். தீபவம்சத்தின்படி துட்டைகைமுனு ஒரு சிறந்த கட்டிடக்கலைஞர். உதாரணமாக, துட்டகைமுனு மன்னனின் சமயப்பணி பற்றி நோக்கின் 89 விகாரைகளை அமைத்ததாகவும் அதில் ரூவன்வெலிசாய பிரபல்யமான விகாரையாக கருதப்படுகின்றது. மிருசவெட்டிய விகாரை மற்றும் லோகமகாபாய எனும் கட்டடமும் இவரால் அமைக்கப்பட்டுள்ளது. 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994.' என்ற நூலின் பக்கம் 233 முதல் 234 வரையிலான சில வரிகளை மேற்கோள் காட்டுவது பொருத்தமானது என்று நம்புகிறேன். "1818 ஆம் ஆண்டில், பழமையான கண்டியக் குடும்பத்தின் தலைவரான பிலிமத்தலாவ, அவர் ஈடுபட்டிருந்த கிளர்ச்சி தோல்வியுற்ற பின்னர், அவர் சோர்வுற்று மனமும் உடலும் வலு விழந்து இருந்தாலும், மறைவில் இருந்து வெளியேறி தப்பிக்க முயன்ற பொழுது, எல்லாளனின் பழங்கால நினைவுச்சின்னத்திற்கு அப்பால் அவர் வெகுதூரம் கடந்துவிட்டார் என்று உறுதியளிக்கும் வரை, மரியாதையின் பொருட்டு நடந்து சென்றார். என்றாலும் இந்த மாவட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டு, பிரான்ஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார் (பிரான்ஸ் தீவு மொரிஷியஸ் தீவு); என்றாலும் அவர் எங்கிருந்து 1830 இல் திரும்பி வர அனுமதிக்கப்பட்டார், ஆனால், இயலாமை காரணமாக விரைவில் இறந்தார். [“In 1818, Pilame Talawe, the head of the oldest Kandyan family, when attempting to escape, after the suppression of the rebellion in which he had been engaged, alighted from his litter, although weary and almost incapable of exertion; and, not knowing the precise spot, walked on, until assured that he had passed far beyond this ancient memorial. Pilame Talawe was apprehended in this district, and transported to the Isle France (Isle of France is the Mauritius Island); from whence he was allowed to return in 1830, and soon after died from the effects of intemperance”.] இருப்பினும், அநுராதபுர நகரத்தில், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட ஏராளமான புத்த தூபிகளை [குவிந்த மேற்பரப்புடைய நினைவுச்சின்னம்] இடித்து, 44 ஆண்டுகள் கொடூரமாக எல்லாளன் ஆட்சி செய்ததாக இராசவலிய[ம்] கூறுகிறது. இந்தக் கூற்று தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாளன் பற்றிய கருத்துக்கு முற்றிலும் முரண்படுகிறது. அந்த இரண்டு வரலாற்று நூலிலும் எல்லாளனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் அல்லது தவறுகளையும் பேசியதாக ஒரு வார்த்தை கூட அங்கு இல்லை. காலப்போக்கில், புத்த துறவி ஆசிரியர்கள், எல்லாளன் துன்மார்க்கமாக ஆட்சி செய்ததாக, பாமர பௌத்தர்களை நம்பவைப்பதற்கு படிப்படியாக தயார்படுத்தினர் என்பதே உண்மை. என்றாலும் இந்த முயற்சி வெற்றியடையவில்லை, ஏனெனில் இராசவலிய மிக சமீபத்தில் தோற்றம் [பதினேழாம் நூற்றாண்டு] பெற்றாலும் பிரபலமாகவில்லை. இராசவலியை மொழிபெயர்த்த முதலியோர் பி.குணசேகர, தனக்கு நல்ல தரமான கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை என்கிறார். அவரது சொந்த வார்த்தைகளில் [தனக்கு கிடைத்த], 'பல ஓலை கையெழுத்துப் பிரதிகளில், இரண்டு மட்டுமே பொதுவாக புரிந்துகொள்ளக் கூடியதாகவும் பொருள் பிழைகள் இல்லாததாகவும் கருத முடியும்' [‘Of several Ola manuscripts, two only can be credited with being generally intelligible and free from material errors’]. என்கிறார். சிங்கள பௌத்தர்கள் இராசவலிய வரலாற்றுக்கு இவ்வாறான தகுதியைத் தான் வழங்கினர் என்பது அதன் செல்வாக்கற்ற நிலையை குறிக்கிறது எனலாம். அவ்வாரே சர் பொன்னம்பலம் ராமநாதனும் பிற்காலத்தில் சிங்களவர் மத்தியில் செல்வாக்கு இழந்தார் என்பது வரலாறு ஆகும். Part: 20 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Who is really Elara & Dutthagamani?' A prince Elara killed Asela and ruled for forty-four years. The Dipavamsa described him as an incomparable monarch reigned righteously. The Dipavamsa does not say he was a Damila prince and did not say that he came from Chola country. The Dipavamsa, unlike the Mahavamsa, never spewed anti-Tamil hatred. Its interest is only Buddhism, and Tamils have no issue with it. Then prince Abhaya (Dipavamsa uses the epithet ‘Duttagamani’ only once, at the time of his death) put thirty-two kings to death and reigned for twenty-four years as per the Dipavamsa. It does not say that prince Abhaya killed Elara. It could be that Elara died of old age, and thirty-two sub-kings or chieftains ruled after him. The prince Abhaya pounced on them, one by one, to capture the kingdom? The real story must have been that there were many sub-kingdoms with many princes, including Tamils. The names like Mutasiva, Siva, Mahasiva, Sena, and Gutta are Tamil names, even Tissa and Suratissa could be Tamils. The father of prince Abhaya is Kakkavanna. The name of the last king, the king of the Tamil Vanni region, killed by the British was Pandaravanniyan, and Kakkavanniyan betrayed Pandaravanniyan. This happened in the present day Mullaitivu District. The name Kakkavanna is phonetically similar to the name Kakkavanniyan. The Dipavamsa does not give the connection Kakkavanna had with Mutasiva or with Devanampiyatissa. Mahanama took advantage of this to spin a story around it in the Mahavamsa. There are fabulous stories about ten warriors, each stronger than ten elephants in the Mahavamsa and it does not merit any serious criticism. This is just for the serene joy of the pious. Dutthagamani was not the biological son of his father as per the Mahavamsa. He was sort of reincarnation of a dying monk, and, instead of dying, he became a foetus inside the womb of Vihara Devi, the mother of Dutthagamani. No one stresses this point. Therefore, he could not have continued the royal line, as he is a reincarnation of a monk, a usurper. There is another story line in the Rajavaliya. The description of Elara in the Mahavamsa is also very generous, and the stories given on the chapter 21 has close resemblance of ‘the stories we studied about ‘Manuneethy Kannda Cholan during our sixth or seventh standard in the school. The Ceylon chroniclers liberally used the folklores of Tamil Nadu. The Rajavaliya, however, says that Elara ‘demolished the numerous dagabas built by Devenipetissa in the city of Anuradhapura, and reigned wickedly for the space of 44 years’. This statement is in conflict with the account of Elara given in the Dipavamsa and the Mahavamsa. There were no ill-spoken words against Elara in those two chronicles. In the course of time, the monkish authors gradually prepared the lay Buddhists to believe that Elara ruled wickedly. This endeavour was not successful as Rajavaliya was not very popular even though of very recent origin. The translator of the Rajavaliya, Mudalior B. Gunasekara, did not have the luxury of much good quality of manuscripts. In his own words ‘Of several Ola manuscripts, two only can be credited with being generally intelligible and free from material errors’. Sinhala Buddhists gave this kind of scant merit to the chronicle Rajavaliya. This is similar to what happened to Sir Ponnampalam Ramanathan. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 21 தொடரும் / Will Follow
1 month ago




அண்மைக் காலமாக சிறிய ரக கார்கள் அதிகமாக விபத்துக்குள்ளாகுவதையும் பட்டா ரக கூடாரம் அடித்த சிறிய ரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகுவதையும் உயிர்ச்சேதம் உருவாகுவதையும் அவதானித்திருப்பீர்கள்.
இந்த விடயத்தினை கொஞ்சம் ஆழமாக அவதானித்தால் இன்னொரு விடயத்தினையும் புரிந்து கொள்வீர்கள்.
இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள் பல வீதியைவிட்டு விலத்தி கடலுக்குள் பாய்தல் , வீதியோரம் அடித்து விபத்துக்குள்ளாகுதல் , சிறிய பட்டா ரக மற்றும் சின்ன கண்டர் ரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகுதல் அதிகம் பதிவு செய்யப்படுகின்றது.
இந்திய தயாரிப்பிலான இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் இந்த "சோப்பு டப்பா" என்று பலர் அழைக்கின்ற வலுக்குறைந்த சின்ன கார்கள் பல பாரம்/ எடை குறைந்தவை. ஒரு கார் அல்லது வாகனம் அதிக வேகத்தில் தெருவில் பிரயாணிக்கும் போது அது தெருவோடு ஒட்டி பற்றிபிடித்தவாறு செல்லகூடியவாறே பல பிரபல கார் நிறுவன கார் தயாரிப்புக்கள் இருக்கும். அதன் எடை அதிகமாக இருக்கும் எனவே அதன் நிறை புவியை நோக்கி அதன் புவியீர்ப்பு மையத்தினூடாக ஈர்க்கப்பட்டு அதிக வேகத்திலும் பாதையினை விட்டு விலகி செல்லாது தெருவில் பற்றி பிடித்தவாறு பயணிக்கும்.
ஆனால் இந்திய சோப்பு டப்பா போன்ற சின்ன கார்கள்( எந்த ரகம்-brand என்று உங்களுக்கே தெரியும்) அதிக எடை இல்லாதவை . அவற்றினால் மத்திய அளவான வேகத்திலேயே ( medium Speed) தெருவை பற்றிப்பிடித்தபடி பயணிக்க முடியும். அவை மணிக்கு 70-80 கிலோமீற்றர்(70km/hr - 80km/h) வேகத்தினை விட அதிக வேகத்தினை பெறும் போது அவற்றின் எடை குறைவு காரணமாக வளியோட்டடத்தில் அவை நிதானமிழந்து பறப்பது போன்ற உணர்வை பல சார்திகள் உணர்ந்திருக்கலாம்.
அதாவது எடைபோதாமை காரணமாக அதிக வேகத்தில் ஆடி அசைவது போல உணர்வீர்கள். உதாரணமாக எடை குறைந்த காட்போட் மிதமான காற்றில் சும்மா இருந்துவிட்டு காற்றோட்டம் அதிகரிக்க அவை காற்றின் திசைக்கேற்றது போல இழுத்து பறந்து செல்லப்படுதல் போன்ற நிகழ்வுகளை நினைத்து பாருங்கள்.
அதுபோல தான் இந்த இந்திய சிறிய வாகனங்கள் தம்மால் ஈடுகொடுக்கமுடியா வேகத்தினை அடையும் போது அவற்றின் எடை தெருவோடு சேர்ந்தியங்க முடியாமல் போக வளியோட்டத்தில் காற்றின் பக்கம் ஓர் பக்கம் இழுத்து செல்லப்படும். இதன்போது பாதையோரம் சென்று மோதலாம், அல்லது பாதையின் அருகே /எதிரே செல்லும் வாகனங்களுடன் மோதி விபத்தடையலாம். இதனால் பாரிய விபத்துக்களும் உயிர் சேதங்களும் ஏற்படும்.
அதுபோலவே இந்த பட்டாரக வாகனங்களும் .
அவை சின்ன சின்ன பொருள் எற்றி இறக்க பயன்படுத்த சிறிய ரக கன்ரர் வாகனம் போல தயாரிக்கப்பட்டவை . அவற்றினை வாங்கி ஓடும் இளசுகளை தெருவில் பார்த்தால் ரொக்கற்று வேகத்தில் தான் ஓடுவார்கள். அந்த வாகனத்தின் எடை அதிக வேகத்தினை தாங்காத நிலை வரும் போது பாதையில் இருந்து விலகும்/ மோதும்/ தூக்கி வீசப்படும்.
இப்படி அதிக எடையற்ற வாகனங்கள் அதிக வேகத்தினை பெறும்போது மிதத்தல் நிலையினை அடைவதனால் அருகே / எதிரே இன்னொரு பெரிய டிப்பரோ / லொறியோ/ பேருந்தோ அதிக வேகத்தில் போகும் போது இந்த ரக வாகனக்கள் ஆட்டம் காணும், இழுத்து கொண்டு செல்வது போல் இருக்கும் அதை அனுபவித்தவர்கள் உணர்வீர்கள்.
அதோடு விஞ்ஞான ரீதியாக இன்னொன்று!
இந்த பட்டா ரக சின்ன வாகனங்களை பயன்படுத்துவோரை பார்த்திருப்பீர்கள். அந்த வாகனம் தயாரித்து இறக்குமதி செய்து சந்தையில் விற்கும் தோற்றத்தில் யாரும் ஓடுவதில்லை(Original Appearance) பலர் வாங்கிய பின் பின்னுக்கு பெட்டி போல கூடாரங்களினை உலோகம் கொண்டு மேலதிக இணைப்புக்களினை பொருத்துவார்கள். இவை வாகனம் தயாரிக்கப்பட்டபோது வாகனத்தில் இருந்த "புவியீர்ப்பு மையத்தினை" (Gravitational point )வெகுவாக மாற்றியமைக்கும். உருவத்தினை மாற்றி அமைத்தபின் அவர்கள் அந்த வாகனத்தின் கொள்ளளவு தாங்குதிறனுக்கும் (carrier Capacity) அதிக எடையில் பொருட்களை ஏற்றிசெல்லும் போதும் வாகனத்தின் புவியீர்ப்பு மையம் வேறொறு இடத்துக்கு இடம்மாறுகிறது.
இவற்றையெல்லாம் கணிக்காத அனுபவமில்லாத சாரதிகள் அதிக வேககத்தில் பிரயாணிக்கும் போது வாகனம் இழுத்து செல்லப்படும்/ மோதும்/ குடைசாயும் இவற்றால் பாரிய விபத்துக்கள் உண்டாகும்.
அதைவிட இன்னொன்று இந்த சிறிய கார்கள், பட்டா ரக வாகனங்கள் வளைவான பதைகளில் பயணிக்கும் போது சாரதி அதற்கேற்ற வகையில் வேகத்தினை கட்டுபடுத்தி சீராக வளைவில் திருப்ப வேண்டும். இல்லையேல் "மைய நீக்க விசையினால்" அது பாதையினை விட்டு விலத்தி மோதும், தூக்கி வீசப்படும், விபத்துக்குள்ளாகும்.
இன்றைய பல விபத்துக்களுக்கு பல அனுபவமில்லா இளைய வாகனவோட்டிகளும், பந்தா காட்டி முறுக்கி ஓடும் சாரதிகளும் , வாகனத்தின் விஞ்ஞான தன்மை அறியாத சாரதிகளும் கூடியதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதைவிட முன்னனுபவம் இல்லா தெருக்களில் அதிக வேகத்தில் ஓடும் போது திடீரென வளைவு வரும் போது அவர்களினால் வேகத்தினை கட்டுபடுத்த முடியாமல் விபத்தடைகின்றன.
முன்னையகாலங்களில் வடக்குமக்கள் பலரும் யப்பான் ரக வாகனங்களினை விரும்பி வாங்கி தலைமுறை தலைமுறையாக பாவித்தமைக்குரிய காரணங்களில் ஒன்று நீண்டகாலம் பாவிக்கும் என்பதற்கப்பால் அவற்றின் எடை , அவற்றின் புவியீர்ப்பு மையம் எந்த வேகத்திற்கும் இடம்மாறமல் இருத்தல் போன்ற பல காரணங்கள் உண்டு. இதனால் அன்றிருந்த சீரில்லாத தெருக்களிலேயே லாவகமாக ஓட்டி சென்றார்கள்.
ஆக எல்லா விபத்துக்களிற்கும் பெரிய ரக வாகனங்களினை குறைகூறி அவர்களை பிடித்து அடிக்காமல் சிறிய ரக வாகனங்களின் விஞ்ஞான கோட்பாடுகள் மற்றும் சாரதிகளின் மிதவாத அனுபவமில்லா சாரத்தியம் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இது ஒரு வீதியில் பெண்பிள்ளை விபத்தடைந்தால் அது வாகனத்தினை செலுத்திய பெண்ணில் தான் பிழையாக இருந்தாலும் இடித்த மற்றைய ஆணின் மேல் தான் அனைவரும் வசைபாடிபேசுவார்கள் அதுபோல தான் இந்த சிறியரக பெரியரக வாகன மோதல் நிலைகளும் அமைகின்றன.
ஆக எந்த வாகனமாக இருந்தாலும் அது துவிச்சக்கரவண்டியாக இருந்தாலும் ஏன் நடந்து பயணிப்பவராக இருந்தாலும் அனைவருமே அவதானத்துடனும் விழிப்புணர்வோடும் பொறுப்புணர்வோடும் பயணிப்பதனாலேயே எல்லா விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் கட்டுப்படுத்தலாம்.
மதுசுதன்.
18.08.2025
நம்ம யாழ்ப்பாணம்