Aggregator
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!
ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!
கொஞ்சம் ரசிக்க
வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை
வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை
வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரம் அடைந்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் ஒருங்கிணைப்புடன் இயக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காரணத்தால் அங்கு ஒரு பாதாள உலகத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டாலும், அவை மிகவும் தீவிரமாக இருக்கவில்லை. இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு God father இருந்தமையே இதற்குக் காரணம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், பாதாள உலகத்திற்குப் பொறுப்பான அந்தந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறினார்.
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் போது, தொடர்புடைய அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தப்பிறகு அவ்வாறு எந்தவொரு பாதாள குழுக்கழுடனும் டீல் அரசியல் செய்யவில்லை இதனால் அவர்களால் எதுவும் செய்யமுடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும் தற்போது பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே தொகுதிகள் பகிரப்பட்டதால் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
அதிசயக்குதிரை
சிறுநீரகத்துக்கு எட்டு லட்சம், கல்லீரலுக்கு நான்கரை லட்சம் ! : நாமக்கல் பெண்ணுக்கு சென்னையில் நேர்ந்த துயரம்
பட மூலாதாரம், GETTY IMAGES
கட்டுரை தகவல்
சேவியர் செல்வகுமார்
பிபிசி தமிழ்
8 மணி நேரங்களுக்கு முன்னர்
சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய நேரிட்டதாக பெண் ஒருவர் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார்.
இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரிக்க நாமக்கல் மாவட்ட சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வறுமையினால் கடனைத் தீர்ப்பதற்காக சிறுநீரகத்தை விற்பனை செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பகுதியில் 5 பேரிடம் முறைகேடாக சிறுநீரகம் எடுக்கப்பட்டதாக சமீபத்தில் எழுந்த புகாரின்பேரில், அரசு சார்பில் சிறப்புக்குழு ஆய்வு செய்து, திருச்சி மற்றும் பெரம்பலுார் நகரங்களில் உள்ள 2 மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சில பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது இதே பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர், தன்னிடம் விலை பேசி கல்லீரல் தானத்திற்காக கல்லீரலின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் புகார் தரப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
சிறுநீரகம் 8 லட்ச ரூபாய்; கல்லீரலுக்கு நாலரை லட்ச ரூபாய்!
இதில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பிபிசி தமிழ் பேசியது. அந்த பெண்ணின் தனியுரிமை கருதி அவரது அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிபாளையம் பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளார்.
தனது கணவர் தன்னை விட்டுப் பிரிந்து வேறு ஒரு பெண்ணை மணந்து விட்ட காரணத்தால் தன் மகன் மற்றும் மகளுடன் அவர் இங்கு வந்து குடியேறியதாகத் தெரிவித்தார். அதற்குப் பின் ஏற்பட்ட கடன் பிரச்னையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் வேறு வழியின்றி ஒரு பெண் முகவரிடம் சிக்கி கல்லீரலைக் கொடுத்ததாகவும் அவர் விளக்கினார்.
''வீட்டு வாடகை, பிள்ளைகளை வளர்ப்பதற்கு வெவ்வேறு இடங்களில் கடன் வாங்கினேன். வட்டி அதிகமாகி மூன்றரை லட்சம் கடனாகிவிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டில் எனக்குக் கடன் கொடுத்த ஒருவர் பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்தில் வைத்து என்னை கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கலா என்ற ஒரு பெண் என்னிடம் அறிமுகமானார். உன் கடனைத் தீர்க்க ஒரு ோசனை யோசனை தருகிறேன் என்று அவர்தான் சிறுநீரகத்தைக் கொடுத்தால் 8 லட்ச ரூபாய் வாங்கித்தருவதாகக் கூறினார்.'' என்றார் அப்பெண்.
அதைப்பற்றி மேலும் விளக்கிய அவர், ''ஈரோடு, சேலம் என சில இடங்களில் எனக்கு மருத்துவப்பரிசோதனை செய்தார்கள். அதன்பின் சென்னைக்கு என்னை அந்தப் பெண் அழைத்துச் சென்றார். அங்கே எனது சிறுநீரகத்தை எடுப்பதாகத்தான் சொல்லியிருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் என் சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாகக் கூறியவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அதனால் சிறுநீரகத்தை எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர். அதனால் நான் நிம்மதியடைந்தேன்.'' என்றார்.
அதன்பின்பு, வீட்டிற்குச் செல்லலாம் என்று இவர் புறப்பட நினைத்துள்ளார். அப்போது இதுவரை மருத்துவ பரிசோதனைக்கு செலவிட்ட 50 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டுப் போகச்சொன்னதாக தன்னை அங்கிருந்தவர்கள் மிரட்டியதாகக் கூறும் அந்த பெண், அதனால் சிறுநீரகத்துக்குப் பதிலாக கல்லீரலில் ஒரு பகுதியை மட்டும் எடுப்பதாகவும் அது மீண்டும் வளர்ந்து விடும் என்றும் கூறினர் என்கிறார்.
''அங்கே என் பெயரை மாற்றி சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார்கள். அந்த மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்தேன். நான்காம் நாள் எனக்கு ஆபரேஷன் நடந்தது. ஆனால் அப்போதே அந்தப் பெண்ணைக் காணவில்லை. அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்க்கவே இல்லை. போனிலும் பேசமுடியவில்லை. அங்கே என்னிடம் எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. எனக்குப் பேசியதைப் போல 8 லட்ச ரூபாய் கொடுக்காமல் நாலரை லட்சம்தான் கொடுத்தார்கள்.'' என்று மேலும் விளக்கினார் அந்தப் பெண்.
பட மூலாதாரம், GETTY IMAGES
நாமக்கல்லில் லட்சங்களில் விற்கப்படும் சிறுநீரகம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், ஏழை மக்களின் வறுமை சூழ்நிலையைப் பயன்படுத்தி, அவர்கள் சிறுநீரகத்தை முறைகேடாக எடுப்பதாக நீண்ட காலமாக புகார்கள் உள்ளன.
சமீபத்தில் இப்பகுதியில் சிறுநீரகத்தை விற்பனை செய்த ஒருவர், தனக்கு 10 லட்ச ரூபாய் கொடுப்பதாகக் கூறி, 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகப் பேசிய ஆடியோ வெளியானது.
அதைத்தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் பலரிடம் சிறுநீரகம் முறைகேடாக எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதால், அதுபற்றி விசாரிப்பதற்காக தமிழக அரசால் சிறப்புக்குழு உருவாக்கப்பட்டது.
இரண்டு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு கள விசாரணை நடத்தி, இரண்டு கட்டமாக அறிக்கை அளித்தது. அப்பகுதியில் 5 பேரிடம் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், அவர்கள் ஒப்புதலின்பேரில் தரப்பட்டதால் இது சிறுநீரக திருட்டு அல்ல, சிறுநீரக முறைகேடு என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
குழுவின் இறுதி அறிக்கையின்படி, திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தரகர் இருவர் மீது போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது மட்டுமின்றி, அந்தக் குழு வேறு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளதாக அரசு தெரிவித்தது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் ''மனித உறுப்பு மாற்றுச்சட்டம் 1994ன் படி. உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேடு கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் உள்ள 4 அங்கீகாரக்குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்துடன் புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும் ஆணை வெளியிடப்படும்.'' என்றும் கூறப்பட்டிருந்தது.
படக்குறிப்பு, கல்லீரல் முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கருமுட்டையும் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு
இந்த பகுதிகளில் சிறுநீரக விற்பனை முறைகேடு மட்டுமின்றி, கல்லீரல், கருமுட்டை போன்றவையும் முறைகேடாக எடுக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இந்த கட்சியின் சார்பில் பள்ளிபாளையத்தில் சமீபத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
பிபிசி தமிழிடம் பேசிய சிஐடியு மாவட்டச்செயலாளர் அசோகன், ''நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட காலமாக சிறுநீரக விற்பனை முறைகேடு நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கல்லீரல், கருமுட்டை விற்பனையும் அதிகளவில் நடக்கிறது. இதைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' என்று வலியுறுத்தினார்.
கல்லீரல் முறைகேட்டில் சிக்கிய பெண்ணுக்கு என்ன ஆனது?
கல்லீரல் முறைகேட்டில் சிக்கிய பெண்ணுக்கு கல்லீரல் தானம் வழங்கப்பட்ட ஒரு வாரத்தில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2022 நவம்பர் 16 ஆம் தேதியன்று சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருடைய கல்லீரல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான மருத்துவக் குறிப்பையும் அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.
ஆனால், கல்லீரல் கொடுத்த மருத்துவமனையின் ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறினார். அந்த ஒரே ஒரு முறை மட்டுமே சென்னை சென்றிருப்பதாலும், ஆட்டோவில் தன்னை பல குறுகலான வீதிகள் வழியாக அழைத்துச் சென்றதாலும் அந்த மருத்துவமனை எங்கு இருந்தது என்பதும் நினைவில் இல்லை என்றும் கூறிய அவர், அந்த மருத்துவமனையின் பெயர் 3 ஆங்கில எழுத்துகளில் இருந்தது என்கிறார்.
''அந்தத் தொகையை வாங்கிக் கடனைக் கட்டிவிட்டேன். ஆனால் இப்போது என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. சாப்பிடவே முடியவில்லை. சாப்பிட்டாலும் ஜீரணம் ஆவதேயில்லை. கடுமையான வேதனையை அனுபவிக்கிறேன். அதனால் என் மகன் ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறான். என் மகள் எட்டாம் வகுப்புப் படித்து விட்டு, என்னைப் பார்த்துக் கொள்வதற்காக என்னுடன் வீட்டில் இருக்கிறாள்.'' என்று அந்தப்பெண் கண்ணீருடன் வேதனையைப் பகிர்ந்தார்.
சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணைக் குழு
இந்த பெண் தெரிவித்த தகவல், ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் ராஜ்மோகனிடம் கேட்டபோது, ''எங்களுக்கு இதுபற்றி எந்தப் புகாரும் வரவில்லை. ஊடகத்தில் பார்த்து விஷயம் தெரிந்ததும், துறை இயக்குநருக்கு முறைப்படி தகவல் தெரிவித்து விட்டோம்.'' என்றார்.
சம்பந்தப்பட்ட பெண் பிபிசி தமிழிடம், ''செல்போனில் சிலர் என்னை தொடர்பு கொண்டு அதிகாரிகள் என்று கூறி சிலர் பேசினர். சில விபரங்களை என்னிடம் கேட்டனர். நான் இப்போது படுகின்ற வேதனையை வேறு எந்தப் பெண்ணும் அனுபவிக்கக்கூடாது என்றுதான் இப்போது இதை வெளிப்படையாகக் கூறுகிறேன். அரசு எடுக்கும் நடவடிக்கை எனக்கு ஏதாவது ஒரு நிவாரணத்தையும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வையும் ஏற்படுத்தினால் நல்லது.'' என்றார்.
அந்தப் பெண் கூறியுள்ள தகவல் பற்றியும், அமைச்சர் கூறியுள்ள விசாரணை பற்றியும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா தேவியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இந்த கல்லீரல் முறைகேடு புகார் பற்றி சார்பு ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவை நியமித்து விசாரணை நடத்துகிறோம். விசாரணையின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
சிறுநீரகத்துக்கு எட்டு லட்சம், கல்லீரலுக்கு நான்கரை லட்சம் ! : நாமக்கல் பெண்ணுக்கு சென்னையில் நேர்ந்த துயரம்
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு : வெள்ளை மாளிகை
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு : வெள்ளை மாளிகை
Published By: DIGITAL DESK 3
20 AUG, 2025 | 04:59 PM
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மீது மறைமுக அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை நிறுத்த மிகப் பெரிய அழுத்தத்தை டிரம்ப் அளித்துள்ளார். இதில் இந்தியா மீதான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்து உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடன் இராணுவ வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க தீர்மானித்தோம்.
ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான இந்தியாவின் முடிவு, இந்தப் போருக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இந்தியாவுக்கு எதிராக இந்த கூடுதல் வரி விதிப்பு, ரஷ்யாவுடனான அதன் இராணுவ வர்த்தகத்தை நிறுத்துமாறு வலியுறுத்துவதற்கே.
ரஷ்யாவும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவை மீண்டும் மதிக்கின்றன. இது ரஷ்யா- உக்ரைனுடன் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 7 மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்தினோம். இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் வர்த்தகத்தை மிகவும் சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்தியுள்ளார் என வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர் கரோலின் லீவிட் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 வீத பரஸ்பர வரி விதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார்.
இதனிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளை அடுத்தடுத்து டிரம்ப் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்த டிரம்ப், போர் நிறுத்தத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதேவேளை, ரஷ்யா - உக்ரைன் போரில் நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயால் அழைக்கப்பட்டுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயால் அழைக்கப்பட்டுள்ளார்
Published By: VISHNU
20 AUG, 2025 | 03:17 AM
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இது அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும்.
இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பத்து பேர் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் துறை முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
ஆசிய கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் இடம்பெறாதது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுவதென்ன?
பட மூலாதாரம், GETTY IMAGES
கட்டுரை தகவல்
க.போத்திராஜ்
பிபிசி தமிழுக்காக
20 ஆகஸ்ட் 2025, 01:57 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று ( ஆகஸ்ட்19) அறிவிக்கப்பட்டது. இதில் டி20 அணிக்குள் சுப்மன் கில் மீண்டும் துணைக் கேப்டன் அந்தஸ்துடன் வந்துள்ளார்.
இதற்கு முன் துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேலிடமிருந்து பதவி பறிக்கப்பட்டு, கில்லிடம் தரப்பட்டுள்ளது. அதிரடி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், நடுவரிசைக்கு பலம் சேர்க்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இதில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் இடம் பெற்ற நிலையில் திறமையான வீரரான ஸ்ரேயாஸுக்கு அதில்கூட இடமில்லை.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பெற்றுக் கொடுத்து சிறந்த கேப்டனாக வலம்வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும்?
தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் ஆசியக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இளம் வீரர்கள், அனுபவம் மிகுந்த வீரர்கள், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் இருக்கும் அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு, துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் நீக்கப்பட்டு, சுப்மன் கில்லிடம் அந்தப் பதவி தரப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கான தேர்வாக, அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்ஸன் ஆகியோர் இருக்கிறார்கள். சுப்மன் கில் வருகையால் டாப் ஆர்டரில் அபிஷேக் அல்லது சாம்ஸன் இருவரில் யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் எனத் தெரியவில்லை.
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு,சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரேயாஸ் பற்றிய கேள்விக்கு பதில் என்ன?
இந்திய அணியின் தலைமைத் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன் என்று கேட்டபோது, அதற்கு அகர்கர் " ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது வருத்தம்தான், ஆனால், அவரை சேர்த்தால் யாரை அணியில் இருந்து நீக்குவீர்கள்?
அவர் மீதும் தவறு இல்லை, எங்கள் மீதும் தவறு இல்லை. இந்த நேரத்தில் நாங்கள் 15 வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம், ஆதலால் வாய்ப்புக்காக ஸ்ரேயாஸ் காத்திருக்கவேண்டியதுதான்" எனத் தெரிவித்தார்.
அபிஷேக், ஜெய்ஸ்வால் குறித்து அகர்கர் பேசுகையில் " ஜெய்ஸ்வால் இடம் பெறாதது துரதிர்ஷ்டம்தான். ஆனால், அபிஷேக் கடந்த ஓர் ஆண்டாக சிறப்பாக விளையாடி வருகிறார், சிறிது பந்துவீசும் திறமையுடையவர். அந்த வாய்ப்பு இருப்பதால், 6வது பந்துவீச்சாளராகவும் பயன்படுத்தலாம் என்பதால் அவர் இடம் பெற்றார்" எனத் தெரிவித்தார்.
கில் இடம் பெற்றது குறித்து கேப்டன் சூர்யகுமார் கூறுகையில் " டி20 உலகக் கோப்பைக்குப்பின் கில்லுக்கு டி20 அணியில் பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. இலங்கைக்கு எதிரான தொடரில்தான் கடைசியாக கில் துணைக் கேப்டன் பொறுப்பில் என்னுடன் ஆடினார்.
அதன்பின் கில் டெஸ்ட் தொடரிலும், சாம்பியன்ஸ் டிராஃபியிலும் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார். இதனால் அந்நாட்களில் அவரின் பெயரை பரிசீலிக்க முடியவில்லை. இப்போது அணிக்குள் கில் மீண்டும் வந்தது மகிழ்ச்சிதான்" எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுபவர்களின் பட்டியலை மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.
ஸ்ரேயாஸ் குறித்து அஸ்வினின் கணிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் தளத்தில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து ஊகப் பட்டியலை வெளியிட்டிருந்தார்.
அதில் ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான வீரராக இருந்தபோதும், ஷிவம் துபே இடம் பெற்றால் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்புக் கிடைப்பது கடினம் என்று பேசியிருந்தார்.
அவரின் கணிப்பிலிருந்து சற்றும் மாறாமல் ஃபார்மில் இல்லாத துபே இடம்பெற்றார், வெற்றிக் கேப்டனாக ரசிகர்களால் புகழப்படும் ஸ்ரேயாஸ் கண்டு கொள்ளப்படவில்லை.
ஸ்ரேயாஸ் புறக்கணிக்கப்படக்கூடியவரா?
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் இடம் பெறவில்லை.
ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான பேட்டர், பீல்டர், கேப்டனாக ஐபிஎல் தொடர்களிலும், இந்திய அணியிலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்திருக்கிறார். கடந்த இரு ஐபிஎல் சீசன்களிலும் இரு அணிகளுக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ், இருமுறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற வெற்றிகரமான கேப்டன்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பல ஆட்டங்களில் நடுவரிசையில் சிறப்பான ஆட்டத்தை ஸ்ரேயாஸ் வழங்கியபோதிலும் "அன்சங் ஹீரோவாகவே" வலம்வந்தார். ஸ்ரேயாஸ் இன்னும் எதையெல்லாம் நிரூபித்தால் இந்திய அணிக்குள் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரியவில்லை.
2025 ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் 17போட்டிகளில் 604 ரன்கள் குவித்து 50 ரன்கள் சராசரியும், 175 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்திருந்தார், இதில் 6 அரை சதங்களும் அடங்கும். கடந்த 2024 சீசனில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து 350க்கும் மேல் ரன்களைக் குவித்தார் ஸ்ரேயாஸ்.
இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபின் ஸ்ரேயாஸ் 26 டி20 போட்டிகளில் விளையாடி 949 ரன்கள் குவித்து 179 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதில் ஒரு சதம், 7 அரைசதங்களும் அடங்கும். ஸ்ரேயாஸ் தலைமையில் மும்பை அணி சயத் முஸ்தாக் அலி கோப்பையையும் வென்றது. டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் தனது பேட்டிங் திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இந்திய அணியில் கடைசியாக 2023, டிசம்பர் 3ம் தேதி பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஆடினார், 37 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த ஸ்ரேயாஸ் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அதன்பின் ஏறக்குறைய 2 ஆண்டுகளாகியும் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
சமூக வலைத்தளத்தில் கொந்தளிப்பு
பட மூலாதாரம், GETTY IMAGES
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது எக்ஸ் தளத்தில் "கடந்த ஆண்டில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அளவுக்கு எந்த வீரரும் சிறப்பாக பேட் செய்யவில்லை. ஆனாலும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கான இடம் இன்னும் இல்லை. ஸ்ரேயாஸை யாருக்கோ பிடிக்கவில்லை என்பது மட்டும தெரிகிறது" எனத் தெரிவித்திருந்தார்.
முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் " ஸ்ரேயாஸ் டி20 அணியில் இருக்க வேண்டும் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை, அது மட்டுமல்லாமல் கேப்டனுக்குரிய தகுதிப்பட்டியலிலும் ஸ்ரேயாஸ் இருப்பவர். இந்த நேரத்தில் ஸ்ரேயாஸுக்கு பொறுமைதான் முக்கியமான கருவியாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
வழக்கமான வீரர்கள்
நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டிங்கிற்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் உள்ளனர். இதில் கடந்த ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங் ஃபார்மிலேயே இல்லை, ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் சாம்ஸன், ஜிதேஷ் சர்மா என இரு விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கீழ்வரிசையிலும், நடுவரிசையிலும் ஜிதேஷ் சர்மா சிறப்பாக ஆடக் கூடியவர், நல்ல ஃபினிஷிங் தரக்கூடியவர், சாம்ஸன் தொடக்க வீரராகவும், ஒன்டவுனிலும் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர்.
இதில் டாப் ஆர்டரில் அபிஷேக், கில் களமிறங்கினால், சாம்ஸன், ஜிதேஷ் இருவரில் யாரேனும் ஒருவர் வெளியே அமரவைக்கப்படுவார்கள். இதில் யாருக்கு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை அபிஷேக் சர்மா அமரவைக்கப்பட்டால் சாம்ஸன், கில் கூட்டணி டாப்ஆர்டராக களமிறங்கலாம். ஜிதேஷ் அமரவைக்கப்பட்டு கூடுதலாக பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் வரலாம்.
இரு தமிழக வீரர்கள்
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர், சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகிய 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இதில் ஆல்ரவுண்டர்களாகவும், நடுவரிசை பேட்டிங்கை ஸ்திரப்படுத்த ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேலுக்கு வாய்ப்புக் கிடைத்தால், வேகப்பந்துவீச்சில் ராணா அமரவைக்கப்பட்டு அர்ஷ்தீப், பும்ரா மட்டுமே இடம் பெறக்கூடும். சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் வருண், அக்ஸர், குல்தீப் இடம் பெறலாம்.
ரிசர்வ் வீரர்களாக 5 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை, ஆனால், ரிசர்வ் வீரர்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர் தவிர பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சுப்மன் கில் வருகை ஏன்?
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.
சுப்மன் கில் கடைசியாக 2024 ஜூலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார் அதன்பின் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மட்டும் கில்லுக்கு இந்திய அணி நிர்வாகம் முக்கியத்துவம் அளித்தது.
இதனால், இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டி20 தொடரில்கூட துணைக் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், சாம்பியன்ஸ் டிராஃபி, இங்கிலாந்துக்கு எதிரான சச்சின்-ஆன்டர்சன் டெஸ்ட் தொடரை சமன் செய்தது போன்றவற்றில் கில்லின் அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டதையடுத்து, அவருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்புக் கிடைத்தது.
கடந்த ஐபிஎல் சீசனில்கூட கில் 650 ரன்கள் குவித்து 155 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விவரம்
சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன் கில்(துணைக் கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, ரிங்கு சிங், சஞ்சு சாம்ஸன்
ரிசர்வ் வீரர்கள்( பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்)
17-வது ஆசியக் கோப்பை
17-வது ஆசியக் கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி நகரங்களில் செப்டம்பர் 9 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் முழு உறுப்பு நாடுகளான நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை தேர்வு பெற்றநிலையில், இந்த முறை 2024 ஆசிய ப்ரீமியர் கோப்பையில் முதல் 3 இடங்களைப் பிடித்த ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், ஓமன் அணிகளும் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த 8 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்,ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களின் குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இந்த சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்.
இந்தியா-பாக். போட்டி
இந்திய அணி செப்டம்பர் 10ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியையும், 14ம் தேதி துபாயில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்கிறது. 19ம் தேதி நடக்கும் கடைசி லீக்கில் ஓமன் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு