3 weeks 6 days ago
இதோ இன்னுமொரு இணைப்பு…. உங்களிடம் விகடன் சந்தா இருக்கிறது என நினைக்கிறேன். வாசித்து பயனடையுங்கள். உண்மையை மீண்டும் ஒரு தரம் பறைசாற்ற நீங்கள் கொடுத்த வாய்ப்புக்கு நன்றி. பிகு இனி என்ன? விகடன், பிபிசி திராவிட ஊடகம் - அதுதானே🤣. Fact Check: நிஜமாகவே தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றாரா பெரியார்? | Long Read https://www.vikatan.com/literature/tamil/did-periyar-actually-say-tamil-is-a-barbaric-language மேலே உள்ள விகடன் Fact-check தரவு சரிபார்க்கும் கட்டுரை சொல்லும் தரவுகளில் சில பெரியாரைப் பொறுத்தவரையில் கன்னடியன், தெலுங்கன், மலையாளி, தமிழன் என்ற வேற்றுமையே ஆரியத்தின் சூழ்ச்சி என்ற கருத்துடையவர். இவர்கள் நால்வர் பேசும் மொழியும் தமிழே! அதில் வடசொற்கள் கலந்தே பிரிவினை உண்டானது என்கிறார். நான்கு மொழி பண்டிதர்களை அழைத்து அந்தந்த மொழிகளில் இருக்கும் வடசொற்களை எடுத்துவிட்டால் தமிழே மிஞ்சும் என்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒன்றிலிருந்து நான்கு மொழி உருவாகவில்லை. நான்கு மொழியுமே தமிழ்தான் என்கிறார். இதனை 1948-ம் ஆண்டு எழுதிய மொழியாராய்ச்சி நூலில் விளக்கியிருக்கிறார். இதற்கு உதாரணமாக, ‘சாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் வேறு இல்லை என்கிறார்! இதனால் வடமொழியினைக் கடுமையாகச் சாடியவர், இன்று பேசப்படும் வந்தேறி அரசியலுக்கு எந்த இடத்திலும் இடம் கொடுக்கவில்லை. மேலும் பகுத்தறிவு, விடுதலை, குடியரசு, உண்மை என்று தமிழ் மொழியிலே தனது இதழ்களைத் தொடங்கினார். இந்தி திணிப்பு போராட்டத்துக்காகச் சிறை சென்றார். தமிழ் இசையைக் கேட்கவேண்டும் என்ற இயக்கத்தைக் கொண்டு வந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கி, தமிழ் ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கிய நேரத்தில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். தமிழர் தன் குழந்தைக்குத் தமிழில் பெயரிட வேண்டும், நமது ஊர், நகர், தெருவுக்குத் தமிழில் பெயர்கள் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘தமிழ் மொழி வளர்ச்சி’, ’தமிழ் பொழில்’, ‘தமிழுக்குத் துரோகமும் இந்திய மொழியின் ரகசியமும்’, ‘தமிழ்நாட்டின் நாகரீகமும் பழக்க வழக்கங்களும்’, ‘தமிழ் மொழியில் பிற மொழிகள் செய்யும் ஆதிக்கம்’ என மொழிகுறித்து பல கட்டுரைகள் எழுதினார். குறிப்பாக 1932-ல் மதராஸ் மாகாண அரசு, ஆங்கில சொற்களுக்குக் கலைச்சொல் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் வடமொழி அதிகமாகக் காணப்பட, பெரியார், "சமஸ்கிருத தொடர்பினாலும் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்தினாலும், நல்ல நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போகின்றன. வடமொழிச் சொற்களும், ஆங்கில சொற்களும் தமிழில் கலக்கக்கூடாது என்ற முரட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் எளிய தமிழில் ‘தண்ணீர்' இருக்கும் போது ‘ஜலம்' வேண்டியதில்லை என்கிறோம். ‘தூக்கம்' இருக்கும் போது 'நித்திரை' வேண்டாம் என்கிறேன். எனவே கூடுமானவரையில் நல்ல எளிய சுத்தமான தமிழிலேயே கலைச் சொற்களையும் பிற சொற்களையும் கொண்ட நூல்கள் இனி இயற்றப்படுதல் வேண்டும்" என்றார்.
3 weeks 6 days ago
இதைத்தான் ஒரு விடயத்தை சூழமைவை (context) கருதாமல் நுனிப்புல் மேய்வது என்பது. உண்மையில் நீங்கள் யாழில் சீமான் பிரச்சாரம் தவிர எழுதப்படும் விடயங்கள் எதையும் வாசிப்பதில்லையா? இதை பற்றி நானே திருமாவேலன் எழுதிய நீண்ட விகடன் கட்டுரையை யாழில் பதிந்துள்ளேன். இன்னொரு பிபிசி இணைப்பு கீழே இதை விட பல திரிகளில் இந்த பொய் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. BBC News தமிழ்நிர்மலா சீதாராமன் சொல்வது போல் பெரியார் தமிழை 'காட்டுமிரா...தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை திமுகவினர் ஒவ்வோர் அறையிலும் வைத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் மக்களவையில் விமர்சித்தார். உண்மையில் பெரியார் கூறியது என்ன? தமிழை அவர் ஏன் காட்டுமிராண்டி
3 weeks 6 days ago
இதுதான் என் கருத்தும். இருந்தாலும் இப்படியான வரலாற்று நன்றி நவிலல்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் மனம் கொதித்துக்கொண்டே இருக்கும். தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை தொடாத அரசியல்வாதிகளும் இல்லை.அரசியல் கட்சிகளும் இல்லை. இதில் சீமானும் விதி விலக்கு அல்ல.ஏன்.........சினிமாக்களில் கூட ஈழத்தமிழர் பிரச்சனையின் ஆதிக்கம் உள்ளது. அப்படியிருக்கும் போது.... எனக்கு பிடிக்கவில்லை என்றால் உனக்கும் பிடிக்கக்கூடாது என்ற தத்துவம் குண்டுச்சட்டிகளுடன் நிற்கக்கடவது.
3 weeks 6 days ago
பொய்யை நான் சொல்லவில்லை சீமானும்சொல்லவில்லை.
3 weeks 6 days ago
முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
3 weeks 6 days ago
ஓ…அப்போ சிறு தூள், மன்னிக்கவும் துகள் பெரு வெள்ளம் ஆகியது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்🤣.
3 weeks 6 days ago
கஸ்ரப்பட்டு ஓவர்ரைம் அடித்து உழைத்த காசே நிலைக்குதில்லை.மோசடி செய்த காசு எப்படி நிலைக்கும். கொஞ்சகாலம் .ஆடாத ஆட்டம் ஆடுவார்கள். ஒருநாள் அடங்கிவிடுவார்கள்.பெரிய பெரியகார் எடுத்து பகட்டாக ஓடித்திரிவார்கள். ஆனால் வங்கியில் மாதம் மாதம் பெரிய தொகை சம்பளத்தில் இருந்து போகும். புதுக்கார் கொஞ்சம் உரஞ்சுப்பட்டாலே அவ்வளவுதான் அதன் மதிப்பு குறைந்து விடும். அதை விட சில வேளைகளில் விபத்து நடந்து காரைக்கைவிடும்நிலை வந்தால் கொம்பனிக்கு முழுக்காசும்கட்டத்தான் வேண்டும்.காப்புறுதி செய்தாலும் அதுக்குக்கட்டும்காசும் அதிகம் அதைவி ஓரளவு பழைய காரை குறைந்த விலையில் முழுப்பணத்தையும் செலுத்தி வாங்கினால் சின்ன உராய்வுகள் வந்தாலும் வைச்சு ஓடலாம் கவலையும்படத்தேவையில்லை.போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
3 weeks 6 days ago
தென்னாபிரிக்கா பற்றி மட்டும் என்றில்லாமல், எல்லா மகளிர் அணிகளையும் சேர்த்தே சொல்ல வந்தேன், அண்ணா.............. எல்லா மகளிர்களுமே பின்னுக்கு வருவதை முன்னுக்கே யோசித்து வைக்கும் 'பின் புத்தி' உள்ளவர்கள் தானே...................🤣. தென் ஆபிரிக்கா அணி நல்லாவே விளையாடுகின்றார்கள்.............. போகிற போக்கில் நாலில் ஒன்றாக வந்து விடுவார்கள் போலத் தெரியுதே................
3 weeks 6 days ago
இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில் இருந்தது. காரணம் என்ன? உங்களைப் போல "எல்லோரும் செய்தால் அது நோர்மல், நான் ஏன் செய்யக் கூடாது?" என்ற "புத்திசாலித்தனமான பேர்வழிகள்" இருந்தது தான் காரணம். இது போன்ற கள்ள வேலைகள், முடிச்சவிக்கி வேலைகளைச் செய்யாமல் இருப்போர் வக்கில்லாமல், வாய்ப்பில்லாமல் செய்யாமல் விடுவதில்லை. அவர்களுக்குள் இருக்கும் அறத்திசை காட்டி செய்யாமல் தடுத்து விடுகிறது. இப்படியாக உள்ளக அறம் உடைய மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் ஊழல் குறைந்த நாடுகளாக இருக்கின்றன. அப்படியில்லாமல் உங்களைப் போல "அறமாவது மண்ணாங்கட்டியாவது" என்போர் அதிகமாக வாழும் நாடுகள் ஊழலில் தேங்கிப் போய் முன்னேற இயலாமல் தவிக்கின்றன.
3 weeks 6 days ago
நான் lyca, Lebara என்பதை குறிப்பிட்டதற்கு காரணம் அவர்கள் எனக்கு பக்கத்தில் இருந்து வீங்கியவர்கள் என்பதால் மட்டுமே.
3 weeks 6 days ago
வினா 15) 3 விக்கேற்றுக்களினால் தென்னாபிரிக்கா அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 29 புள்ளிகள் 2) ஏராளன் - 27 புள்ளிகள் 3) ரசோதரன் - 27 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 25 புள்ளிகள் 5) கிருபன் - 25 புள்ளிகள் 6) வீரப்பையன் - 25 புள்ளிகள் 7) புலவர் - 23 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 23 புள்ளிகள் 9) சுவி - 22 புள்ளிகள் 10) வசி - 19 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 19 புள்ளிகள் 12) வாதவூரான் - 19 புள்ளிகள் 13) கறுப்பி - 19 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 19 புள்ளிகள் 15) வாத்தியார் - 17 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 15, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
3 weeks 6 days ago
தென்னாபிரிகா பற்றி கணிப்பு இன்னுமா மாறவில்லை?
3 weeks 6 days ago
சிலருக்கு சுட்டு விட்டது. அஞ்ஞாதவாசம் கலைக்கும் அளவுக்கு சுட்டு விட்டது. “அண்டங்காக்காயை சொன்னா, சாதா காக்காயுக்கு கோவத்தை பாரேன்” -அமரர் விவேக்- பிகு இதே ஆட்கள்தான். சிறுவர் துஸ்பிரயோகத்தை, ஜெப்ரி இஸ்டீன் செய்யவில்லையா? இளவரசர் அண்டுரூ செய்யவில்லையா ஒரு அப்பாவி தமிழ் பையன் செய்தால் தப்பா என எழுத கூடிய பிரகிருதிகள். தாம் கறுப்பாடுகளாய் இருந்து வயிறு வளர்ப்பது மட்டும் இன்றி, அதில் தப்பில்லை என சமூகத்தையே கறுப்பாடுகளாகும் படி வேதம் ஓதும் சாத்தான்கள். நல்வழி சொல்பவர்களுக்கு இவர்கள் வைக்கும் பெயர் வக்கில்லாதவர்கள். மொள்ளமாரித்தனம் பண்ணி வயிறு வளர்ப்பதற்கு, திண்ணை பேச்சு வீரராய் வாழ்ந்து விட்டு போகலாம்.
3 weeks 6 days ago
சிறுவர் துஸ்பிரயோகிகளையே நியாபப்டுத்திய ஆட்கள், இதுக்கு கண்கலங்காட்டித்தான் பிழை 🤣
3 weeks 6 days ago
உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத்துவருக்கு கொமிசன் கொடுத்து அதை பெறும் மருத்துவருக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. அடிப்படியில் தொழில் ஒன்றுதான் கவர்ச்சிகரமான ஆடைகளால் அது மறைக்க படுகிறது. BP ( British Petrolium) செய்யாத ஊழலையா மேலே இருக்கும் இருவரும் செய்து விடடார்கள்? இப்போதும் இல்லை எப்போதும் BP கொடி கட்டி பறக்கும் காரணம் சடடத்தை எழுதுபவர்களே அவர்க்ளின் அடியாட்கள்தான். இங்கு சடடபடி என்று எதுவுமே இல்லை ....... இன்னொரு மனிதனை பிடித்து அடிமையாக வைத்திருக்கலாம் என்பது நான் வாழும் அமெரிக்க நாட்டில் சட்டமாக இருந்த்தது. மற்ற நாடுகளுக்கு சென்று அங்கு வசிப்பவர்களை கொன்று பொருட்டுகளை கொள்ளையடித்து வருவது நீங்கள் வாழும் நாட்டில் அரச கடமையாக இருந்தது. உங்கள் வளர்ச்சி கொஞ்சம் கண்ணை குத்தும்படியாக இருந்தால் .... நீங்கள் குற்றவாளி. மற்ற எல்லோரும் சுத்தவாளி இங்கு நாளும் நாளும் பல நூறு கம்பெனிகள் திவால் ஆகிறது .... அவை அனைத்திலும் பண மோசடி இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் திவால் ஆக்குவதற்கு என்றே நாளும் நாளும் 1௦௦ கம்பெனிகள் வியாபார நிறுவனங்கள் நிறுவ படுகிறது. சட்ட்தில் உள்ள ஓடடைகளும் திமிங்கலங்கள் தமக்காக எழுதிய சட்ட்ங்களும் அதற்கு துணை போகிறது. எதுக்கும் வக்கில்லாதவர்கள் திண்ணையில் அமர்ந்து நீதிமான் போல பஞ்சாயத்து செய்யவேண்டியதுதான்.
3 weeks 6 days ago
அஞ்சலிகள்.
3 weeks 6 days ago
உண்மையில், இவர்கள் நடத்தியது நல்ல வியாபாரம். UK அரசு ஒப்புதல் இல்லாமல், அந்த சுத்திகரிப்பு ஆலையை (Lindsey oil refinery) இயக்கும் உரிமையை பெற்று இருக்க முடியாது. (அனால், ஏதோ ஒரு இடத்தில பேராசை தொற்றிவிட்டது.) ஆனி 2025 இல் இந்த கம்பனி நிர்வாக நிலையை அறிவித்த போது, ஆலையை தற்கலிகமாக மூடினாலும், UK இன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகம் ஆக குறைந்தது 1/5 ஆல் குறைவடைந்து, எரிபொருள் விலை எகிறும் நிலை காணப்பட்டது. ஆயினும், auditors ம் ஒத்துழையாமல் , இப்படியான தேசிய நலன் / பாதுகாப்புக்கு கேந்திர முக்கியத்துவம், மற்றும் இன்றியமையாத கட்டுமானம் ஒன்றை இப்படி நட்டத்தில் இருந்தால் போல் கொண்டுபோய் நிறுத்துவது மிகக்கடினம். தேசிய கேந்திர நலன் இருப்பதாலேயே UK அரசு அந்த சுத்திகரிப்பு ஆலையை தத்ற்காலிகமாக பொறுப்பு எடுத்து, இயக்கும் உரிமையை பெரும் நிறுவனத்தின் indemnity க்கு பொறுப்பு எடுப்பதாகவும் அறிவித்து இருந்தது. (ஆகவே இந்த வணிகம் ஒன்றும் களவு இல்லை) நான் றிந்த வரையில், uk வங்கிகள் மட்டும் அல்ல, eu, swiss வங்கிகளும் எண்ணெய் கொள்வனவுக்கு, விற்பனைக்கு ஒவொரு தடவையும் மில்லியன் கணக்கில் நிதி அளித்து உள்ளன. ஏனெனில், பாரிய கொள்தாங்கி கப்பல்களிலேயே மத்திய கிழக்கு மட்டும் அல்ல. மத்திய ஆசியால் இருந்தும் மசகு எண்ணெய், இடை மசகு எண்ணெய் கொள்வனவு செய்துள்ளது நிறுவனம். நான் நினைக்கிறன், சிலவேளைகளில், கடன்வாங்கும் போது வட்டி வீதம் மிக குறைவாக இருந்துது இருக்கும். இப்போது வட்டிவீதம் கூடிவிட்டது. அதனால் மீள்நிதியமைப்பு (refinancing) இயலாமல் போய் இருக்கலாம். இப்படி பல நிறுவனங்கள் (பகிரங்கமாக தெரியாமல்) வங்குரோத்தாகி விட்டன. ஆயினும் இவர்கள் தலைமறைவாகியதே, எதாவது தனிப்பட்ட அடிப்படையில் தரு இளைத்து இருப்பார்கள் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. ( இவர்களின் கம்பனிக்கு தகவல் தொழில்நுட்ப முகாமையாளராக இருந்தவர் , மொறட்டுவை பல்கலைக்கழக பட்டதாரி (பாலா என்ற அழைப்பு பெயர்) ஒப்பீட்டளவில் இளவயதில் (40 ஆரம்பங்களில்) காலமாகிவிட்ட்டார் .)
3 weeks 6 days ago
இவ்வளவு நேத்தி வச்சு உடல்முழுதும் முள்ளு குத்தி திரி திரியா தொங்கியும் ..... உச்ச நீதிமன்றம் இப்படி பொசுக்கென்று அடிச்சு மூடி விட்டதே நினைச்சா எனக்கே கண் கலங்குது...... பாவங்கள்
3 weeks 6 days ago
முட்டையில் இருந்து தப்பியாச்சு நீண்ட நாளுக்கு பிறக்கு யாழில் காணுகிறேன் உங்களை நண்பா ஏன் போட்டியில் கலந்து கொள்ள வில்லை.....................
3 weeks 6 days ago
அந்தக் கடைசி வரிதான்… ஹைலைட். 😂 🤣