Aggregator

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!

1 month ago
நீங்கள் பங்காளியாகும் அளவுக்கு உங்கள் மண்டை இன்னும் கழுவுப்படவில்லை போல் உள்ளது. அழியப்போவது முல்லாக்கள்தானே என நினையுங்கள். வாழ்த்துக்கள் கூறுவீர்கள்.

ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!

1 month ago
சுமந்திரனின்… ஹர்த்தால் எனும் கபட நாடகத்தை, தோல் உரித்துக் காட்டிய அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான கட்டுரை. சுமந்திரனின் ஹர்த்தால் தோல்வியின் மூலம்… தமிழ் மக்களிடம் தனக்கு ஆதரவு அறவே இல்லை என்பதும், வட மாகாண முதலமைச்சர் கனவும் தவிடு பொடியாகி… கவிண்டு கொட்டுண்டது. 😂 🤣

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month ago
ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய சிந்தனை அடிப்படையில் சிறப்பான ஒன்று, நாடுகளுக்கிடையே தங்குதடையற்ற வர்த்தகம், ஒரே பரிமாற்று நாணயம் என பொருளாதார ரீதியிலமைந்த அதன் பங்கு மெல்ல மெல்ல ஆட்சி அதிகாரம் நோக்கி மெல்ல்ல நகரத்தொடங்கியிள்ளது. அத்துடன் ஒரு நாட்டினை போல பாதுகாப்பு விடயங்களிலும் தமது ஆதிக்கத்தினை செலுத்துகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாத தலைவர்களாக இருக்கிறார்கள், அதனால் அவர்கள் மக்களின் விருப்பிலிருந்து விலகி செல்கிறார்களோ என கருதுகிறேன். ருமேனியா, போலன்ட், செக் குடியரது, கங்கேரி என உள்நாட்டு தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் அந்த நாட்டு சட்டத்துறையால் மறுக்கப்பட்ட நிகழ்வின் பின்னணியில் இந்த ஐரோப்பிய ஒன்றியம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரத்தினை பேணுவதற்கான முயற்சியில் சில பல தவறான முடிவுகளை இந்த அமைப்பு எடுக்கிறதாக கருதுகிறேன், ஐரோப்பிய ஒன்றியம் அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகி ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் நாடுகளுக்கே சவாலாக மாறிவருகிறதாக கருதுகிறேன். ஆரம்பத்தில் புட்டின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொதுவான பாதுகாப்பு உத்தரவாதம் (தற்போது கூறப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொதுவான பாதுகாப்பு உத்தரவாதத்தினை முன்னரே புட்டின் கூறியுள்ளார்) மற்றும் இரஸ்சியா நேட்டோவில் இணைவதற்கும் விருப்பம் தெரிவித்திருந்தார், அப்படி இரஸ்சியா அப்போதே நேட்டோவில் இணைந்தால் தற்போதய பிரச்சினை வந்திருக்காது என கருதுகிறேன். இரஸ்சிய இரும்பு அதிகாரத்தின் மூலம் இரஸ்சியாவின் வளங்கல் தேசியமயப்பட்டமையால் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் என கருதுகிறேன். இது தற்போது ஐரோப்பா இரண்டுபட்டுள்ள நிலமைக்கு இட்டு சென்றுள்ளது, இரஸ்சியாவில் நிலவும் இத்தகைய ஆட்சி பொறிமுறைமை ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறைக்கு நேர் எதிராக இருப்பதனால் ஒரு உறையில் இரண்டு வால் இருக்கமுடியாது எனும் நிலையில் தற்போதய உக்கிரேன் திட்டம் தோல்வியில் முடிந்தாலும் வேறு ஒரு வகையில் இரஸ்சியாவிற்கிடையே வேறு வகையான வடிவத்தில் மறைமுக போர் இடம்பெறலாம் என கருதுகிறேன். தற்போது இரஸ்சியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உக்கிரேனிற்கும் தம்மால் ஆபத்து ஏற்படாது எனும் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க உள்ளதாக கூறுகிறார்கள், அதற்கு தற்போதுள்ள அடிப்படை பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டும் என கூறப்படுவதாக கூறப்படுகிறது, அடிப்படையில் இரஸ்சியா ஒன்றும் பெரிய பலமான சக்தி இல்லை என கருதுகிறேன், ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய நாட்டு தலைவர்களும் மக்களை இரஸ்சியா பற்றிய பயத்தினை உருவாக்கி தமது தேவைகளை நிறைவேற்றுகிறார்களோ என கருதுகிறேன். ருமேனியா, கிறீஸ் போல ஒரு பொருளாதார வங்குரோத்து நோக்கி நகர்வதாக கூறுகிறார்கள், பல்நாட்டு நிறுவனங்கள் சாமானிய மக்களின் வாழ்க்கைதரத்தினை பொருளாதார ரீதியாக மோசமாக்குவதாக கருதுகிறேன், அதற்கு ஏற்ப ஐரோப்பிய ஒன்றிய சட்டதிட்டங்கள் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் சாமானியர்களுக்கு எதிராகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐரோப்பாவிற்கு ஆபத்து இரஸ்சியாவினால் வரும் என கருதவில்லை ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வரலாம் என கருதுகிறேன் எனது கருத்து தவறாக இருக்கலாம். 90 பில்லியனுக்கு ஆயுதங்களை செலன்ஸ்கி எதிர்பார்க்கிறார், அதற்கான பணத்தினை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்கவேண்டும், அமெரிக்க கருவூல செயலாளர் உக்கிரேனுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினூடாக வழங்கப்படும் ஆயுதங்கள் 10% விலை அதிகரிப்பு காணப்படலாம் என கூறியுள்ளாராம்.

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!

1 month ago
பேரழிவு ஒன்று எம் கண்முன்னே நடக்கப்போகிறது ☹️ உலகமே நாம் உட்பட பார்வையாளர்களாக மட்டும்....

நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்களுடன் பயணித்த பேருந்து விபத்து; 71 பேர் உயிரிழப்பு!

1 month ago
நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்களுடன் பயணித்த பேருந்து விபத்து; 71 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆப்கானிஸ்தானில் ஈரானில் இருந்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. ஹெராத் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (19) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 71 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 17 சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர் என்று மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா முத்தகி (Ahmadullah Muttaqi) உறுதிபடுத்தியுள்ளார். குசாரா மாவட்டத்தில் உள்ள ஹெராத் நகருக்கு வெளியே உள்ள வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்தின் அதிக வேகம் மற்றும் சாரதியின் அலட்சியமே விபத்துக்கான காரணம் என ஹெராத் மாகாண பொலிஸார் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து ஈரானில் இருந்து திரும்பி தலைநகர் காபூல் நோக்கி ஆப்கானியர்களுடன் சென்று கொண்டிருந்ததா மாகாண ஆளுநர் செய்தித் தொடர்பாளர் முகமது யூசுப் சயீதி AFP செய்திச் சேவையிடம் கூறியுள்ளார். மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற கட்டாயப்படுத்தும் பிரச்சாரத்தை தெஹ்ரான் தொடங்கியுள்ளது. கடந்த மாதங்களில் ஈரானில் இருந்து ஒரு பெரிய அளவிலான ஆப்கானியர்கள் நாடு திரும்பியுள்ளனர். பல தசாப்த கால போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளில் இருந்து தப்பி ஓடிய மில்லியன் கணக்கான ஆப்கானியர்களுக்கு நீண்ட கால புகலிடமாகவுள்ள ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1443823

ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!

1 month ago
மக்களிடம் இழந்துபோன தன் செல்வாக்கை கட்டியெழுப்ப இவர் என்னவெல்லாமோ செய்யப்பார்க்கிறார், அது காலம் கடந்துவிட்டது. இனி தனது தொழிலுக்கு திரும்புவதே நல்லது. ஆனால் அரசியலில் இறங்கி செய்த குழறுபடிகளால் இருந்ததையும் இழந்துவிட்டார் பாவம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாயிற்று. அவரை களத்தில் இறங்கியவர்கள் ஒதுக்கப்பட்ட பின் இவருக்கு அங்கு என்ன வேலை? மாறி மாறி பதவி சுகம் அனுபவித்தவர், எல்லோரும் தன்னை உபசரிப்பார்கள் என்கிற கனவு கலைந்தது. "பிறர்க்கு இடு பள்ளம், தான் விழும் குழி."

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!

1 month ago
காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு! காசா நகரைக் கைப்பற்றுவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார். அதைச் செயல்படுத்த சுமார் 60,000 ரிசர்வ் வீரர்களை அழைக்கவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது அமைச்சு புதன்கிழமை (20) உறுதிப்படுத்தியது. இந்த உத்தரவுகள் உடனடியாக வழங்கப்படவில்லை, மாறாக பல கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டன. அவற்றுள் சுமார் 40,000-50,000 வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மற்றொரு கட்டத்தின் கீழும், 2026 பிப்ரவரி-மார்ச் இல் மூன்றாவது கட்டத்தின் கீழும் வீரர்கள் பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள். தற்போது பணியில் இருக்கும் பல வீரர்களுக்கான ரிசர்வ் கடமையை 30-40 நாட்கள் நீட்டிப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்த ரிசர்வ் வீரர்களின் எண்ணிக்கையை சுமார் 130,000 ஆகக் கொண்டுவரும். https://athavannews.com/2025/1443887

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!

1 month ago

New-Project-175.jpg?resize=750%2C375&ssl

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!

காசா நகரைக் கைப்பற்றுவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதைச் செயல்படுத்த சுமார் 60,000 ரிசர்வ் வீரர்களை அழைக்கவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது அமைச்சு புதன்கிழமை (20) உறுதிப்படுத்தியது.

இந்த உத்தரவுகள் உடனடியாக வழங்கப்படவில்லை, மாறாக பல கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டன.

அவற்றுள் சுமார் 40,000-50,000 வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள்.

நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மற்றொரு கட்டத்தின் கீழும், 2026 பிப்ரவரி-மார்ச் இல் மூன்றாவது கட்டத்தின் கீழும் வீரர்கள் பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள்.

தற்போது பணியில் இருக்கும் பல வீரர்களுக்கான ரிசர்வ் கடமையை 30-40 நாட்கள் நீட்டிப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்த ரிசர்வ் வீரர்களின் எண்ணிக்கையை சுமார் 130,000 ஆகக் கொண்டுவரும்.

https://athavannews.com/2025/1443887

புடின் - செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு சாத்தியமானதாக இல்லை - கிரெம்ளின்

1 month ago
டொனால்டு டிரம்புக்கு தான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுவிடலாம் என்ற ஆசையில் சொன்னது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் போர் குற்றவாளி புடினுக்கும் சந்திப்பு தனது நாட்டில் நடக்குமானால் அவருக்கு கைது செய்வதில் விதிவிலக்கு அளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்ததுள்ளது

குட்டிக் கதைகள்.

1 month ago
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 Dharma Lingam ·rpootSesdna32fl490 6c987515tfig3317h279916hgg9lmaht8tm711fmf · ஜட்ஜ் : எதற்காக விவாகரத்து கேட்கிறாய் ? விண்ணப்பதாரர் : ஐயா.. என் மனைவி என்னை தினமும், பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.. வெங்காயம் வெட்டச் சொல்கிறாள். கடைக்குப் போகச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது அதனால் தான் கேட்கிறேன், விவாகரத்து தாருங்கள். ஜட்ஜ் : இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ளவே முடியாது.. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால், தோல் தன்னால் வரப் போகிறது. அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிட்ஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம், அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. பத்து பாத்திரத்தையெல்லாம், பத்து நிமிஷம் தண்ணீரில் ஊற வைத்து, விம் பாரால தேய்ச்சா சரியாப் போயிடுது. அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா, எப்படி பட்ட தீச்சல் கடாயா இருந்தாலும் பளிச்சுண்ணு ஆயிடும். அது மட்டுமில்ல துணியை சர்ப்புல ஊற வைக்கறதுக்கு முன்னாடி நல்ல தண்ணியில ஒரு தடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்புல ஊற வைச்சி மிஷின்ல போட்டா, துணி தும்பப்பூ மாதிரி இருக்கும். நீ சொன்ன காரணங்களுக்கு எல்லாம் டைவர்ஸ் தர முடியாது புரிஞ்சுதா.. விண்ணப்பதாரர் : ஐயா நல்லா புரிஞ்சதுங்க... ஜட்ஜ் : என்ன புரிஞ்சது ? விண்ணப்பதாரர் : எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயத்தோட விட்டுட்டா, ஆனா, அங்க பாத்திரமும் தேய்ச்சி, துணியும் தொவைக்கிறீங்கன்னு ......... !

இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.

1 month ago
இந்திய சாலைகள் அனைத்தும் ஒரெ தரத்தில் இல்லை.நகரங்களில் கூடநெரிசல், கிராமப்புறங்களில் மோசமான சாலை, திடீர் தடைகள், நடுவேநடக்கும் பாதசாரிகள், விலங்குகள் போன்றவை விபத்துக்கு வழிவகுக்கின்றன. சிறிய கார்கள் எடை குறைவாகவும், உட்புறம் சுருங்கியதாகவும் இருக்கும், பெரிய வாகனங்களுடன் மோதும்போது சிறிய கார்கள் அதிக சேதத்தை சந்திக்கின்றன.

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர்

1 month ago
தங்க விலை இந்தியா மக்களை நம்பியே இருக்கின்றது, அவர்கள் இருக்கும் வரை உலகில் பல தங்க சுரங்கங்களை திறந்து கொண்டே இருப்பார்கள்