Aggregator

பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி 16 வயதில் வாசிக்க கற்று, பின் மருத்துவராகி மலையேற்றமும் சென்று சாதித்த கதை

3 weeks 4 days ago
இது ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான நல்ல உபயோகமான கட்டுரை ........ மருத்துவர் திரு லீ சுவாங்கியே க்குப் பாராட்டுக்கள் . ......! 👍 நன்றி ஏராளன் ........!

"நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்": இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு - இணையத்தில் விமர்சனம்

3 weeks 4 days ago
இதென்ன கோதரியாய் கிடக்கு, "நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள்" என்று திரைமறைவில் சொல்லாமல் நேருக்கு நேராய் சொல்லியிருக்கிறார் . ..... இதை சொல்லக்கூட முதல்தரமான அமெரிக்காவின் ஜனாதிபதியான அவருக்கு உரிமை இல்லையா . ...... ஜோர்ஜியாவே ஜாலியா எடுத்துக் கொண்டு இருக்கிறார்....அல்லது இதற்காக அவர் விடுமுறை எடுத்துக் கொண்டு இத்தாலி போயா சொல்ல முடியும் . ......! 😇

ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்

3 weeks 4 days ago
இடும்பன் பூசை தி. செல்வமனோகரன் அறிமுகம் இயற்கையின் மீதான ஆர்வம், அதிசயம், அச்சம் போன்றனவே அதனை வழிபடத் தூண்டின; இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்கள்மீது மனிதரைக் கவனம் செலுத்தச் செய்தன. சடத்துவமான இயற்கை தானாகவே இயல்பிறந்த ஆற்றல்களை நிகழ்த்த முடியாது. இப்பிரமாண்டமான இயற்கையை இயக்க அதனிலும் ஆற்றல்வாய்ந்த சக்தி அல்லது சக்திகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட வலுப்பட இறைவன் பற்றிய பிரக்ஞை வலுப்பட்டது. இயற்கை வழிபாடு தெய்வ வழிபாடாயிற்று. இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்களிலும் இறைவனது ஆற்றல்கள் மேலும் மேம்பட்டவை, கற்பனையாலும் எட்டமுடியாதவை, அதிலும் தன் தன் தெய்வத்தின் ஆற்றலே யாவற்றிலும் மேலானது என்ற கருத்துகள் மனிதகுல நாகரிக வளர்ச்சியோடு இணைந்து வலுவுற்று வளர்ந்தன. இதனால் அவ்வவ்விறைவனைப் பற்றி பல்வேறு ஐதிகக் கதைகள் தோன்றின. அவை கால, தேச, வர்த்தமானத்திற்கேற்ப மேலும் மேலும் வளர்ச்சியுற்றன. இயற்கைப் பொருள்வழி இருந்த தெய்வம் விலங்கு, பறவை, மனிதவுருப் பெற்றது. வடிவம் அல்லது உருவம் முதன்னிலை பெறத் தொடங்கியது. விலங்கு – மனிதன், பறவை – மனிதன் என இணையுருவங்களுடன் மனித, ஆஜானுபாகுவான உருவங்களும்; அவற்றுக்கு நான்கு, தொடக்கம் பன்னிரெண்டு கைகள், ஒன்று தொடக்கம் ஆறு தலைகள் எனப் பல்வேறு ‘அதீத’ நிலைகளும் உருநிலைப்படுத்தப்பட்டன. அந்தத் தெய்வத்தை கேள்வியற்ற விசுவாசத்தோடு வழிபடும் அடியவர் பெறும் பேறுகள் என்பன முதன்மைப்படுத்தப்பட்டன. இவற்றை மேலும் மேலும் வலுப்படுத்தப் பல்வேறு கதைகள் சொல்லப்பட்டன. அவை இதிகாசங்கள், புராணங்கள் எனச் செவ்விலக்கியங்களின் வழி மக்களின் மனதில் நிலைநிறுத்தப்பட்டன; சமயப்பிரசாரங்களின் பிரதான கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. அதிலும் இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள், சங்காரங்கள் என்பன விதந்துரைக்கப்பட்டன: கலை வடிவங்களாக்கப்பட்டு மக்கள் மத்தியில் மீள மீள நிகழ்த்தப்பட்டன. பொழுதுபோக்கு அம்சமாகவும், பிரசாரமாகவும், நம்பிக்கையாவும் இவை மக்கள் மனதில் நிலைத்துநிற்கச் செய்யப்பட்டு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டன. இந்தக் கதைகளானவை, கூத்தாக, கதையாக, பாடலாக பல்வேறு ரூபங்களில் பரவின. குறித்த ஒரு தெய்வத்தின் அல்லது நபரின் கதை பரவலாக்கமுறும் போது காலம், தேசம், பண்பாடு, தேவை அதன் அரசியல் என்பவற்றுக்கு ஏற்ப மாற்றமுறச் செய்யப்பட்டே வளர்க்கப்பட்டன. இதனால் காலவோட்டத்தில் அவை வேறுபட்ட தனிக்கதைகளுமாயின. அதேவேளை குறித்த பெயரில் வெவ்வேறு காலங்களில், இடங்களில் வெவ்வேறு கதைகள் தோன்றி உருப்பெற்று வளர்ந்தன என்பதும் மனங்கொள்ளத்தக்கது. இந்தியப் பாரம்பரியத்தில் தோன்றி, புராணக்கதைகளின் வழி தமிழகத்தில் நிலைபெற்ற கதைகளில் ஒன்றாகவே இடும்பனின் கதை காணப்படுகிறது. இந்த இடும்பன் பூசை பற்றிய ஆய்வில் திரு கோ. விஜிகரன், திரு. சி. துக்ஷாந் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வி ரஜீவா ஆகியோர் துணைநின்றனர். இடும்பன் இடும்பர் எனும் சொல்லுக்கு ஒருவகை இராட்சதர், ஒருவகைச் சாதியார், செருக்கர், துயர் செய்வோர் (இடும்பை – துன்பம், தீமை, நோய், வறுமை, அச்சம்; இடும்பு – அகந்தை, கொடுஞ்செயல், தீங்கு) எனப் பொருள் சுட்டப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பெரிய உருவம் (ஆஜானுபாகுவான தோற்றம்), நீண்ட கை – கால்கள் உடையவர்கள், பயங்கரமான தோற்றம் உடையவர்கள், கை அகட்டி நடப்பவர்கள், நன்றாக உண்பவர்கள் போன்றோரை இடும்பனுக்கு ஒப்பிடுவர். ‘ஆளப் பார் இடும்பன் மாதிரி’, ‘இடும்பன் எண்டு நினைப்பு’ போன்ற சொற்றொடர்களை இதற்கு உதாரணங்களாகச் சுட்டலாம். இடும்பன் பற்றிய கதைகள் இடும்பன் பற்றி பல்வேறு கதைகள் நின்று நிலவுகின்றன. ஆரம்பத்தில் சிறந்த சிவபக்தனாக இருந்த இராட்சசனான இடும்பன் பின்பு முருகபக்தனாகத் திகழ்ந்ததாகப் பொதுவில் கூறப்பட்டாலும் இதன்னின்றும் வேறுபட்ட கதைகளும் உண்டு. இராமாயணம்: இராவணனால் கவரப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும் இராமன் சுக்கிரீவனின் உதவி பெற்று இலங்கையில் சீதை இருப்பதை அனுமன் மூலம் அறிகிறான். இராமன் சீதையை மீட்க சுக்கிரீவனின் படையோடு கரையை அடைகின்றான். கடல் குறுக்கிடுகிறது. பாலம் அமைக்க வேண்டியநிலை ஏற்படுகிறது. அந்நிலையில் சுக்கிரீவனின் சேனை வீரர்களில் ஒரு அணியின் தலைவனாக இருந்து சேதுபந்தனத்தின்போது மலைகளைப் பிரித்துவந்த மாவீரர்களில் ஒருவனாக இடும்பன் காணப்படுகின்றான். மகாபாரதம் – இடும்பவனத்தில் இடும்பன் தன் தங்கையான இடும்பியுடன் வாழ்ந்து வந்தான். அவ்வனத்துக்கு வந்த பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி காதல் கொள்கின்றாள். அவ்விடம் வந்த இடும்பன் “மானுடர்களை உண்ணும்படி உன்னை அனுப்பினால் நீ இவன்மீது காதல் கொள்கிறாயா?” என இடும்பியை ஏசியபோது பீமன் அவனை இடைமறிக்கின்றான். “அற்ப மானுடனே நீயும் இவள்மீது காதல் கொண்டுள்ளாயோ? அவ்வாறெனில் என்னோடு போர் புரிந்து வென்றபின் அவளைத் திருமணம் செய்” எனக் கூறினான். யுத்தம் நிகழ்ந்தது. இடும்பன் இறந்தான். பீமன் இடும்பியுடன் வாழ்ந்து கடோத்கஜன் எனும் மகனைப் பெற்றான். பழனி தல புராணம்: அகத்திய முனிவர் கந்தமலையின் சிகரங்களிற் சக்தி கிரி, சிவ கிரி என்னும் இரண்டையும் சக்தி – சிவமாகப் பாவித்துப் பூசித்துக் கந்தவேளின் உத்தரவின்படி அவற்றைப் பொதியமலைக்குக் கொண்டு வந்து பூசிக்கக்கருதி பெயர்த்து வந்தார். பூர்ச்சவனம் என்னும் தலத்திலே முருகனின் திருவருளினாலே அச்சிகரங்களை வைத்துவிட்டுப் பொதிகை நோக்கி வந்து கொண்டிருந்தார். சூரபன்மன் குலத்தோர்க்கு வில்வித்தை முதலிய வித்தைகளைப் பயிற்றுவித்த இடும்பாசுரன், முருகனால் சூரன் முதலானவர்கள் அழிக்கப்பட்டபோது, தன் மனைவி இடும்பியுடன் மகேந்திரபுரியைவிட்டு வன சஞ்சாரம் சென்றான். திருக்குற்றாலத்திற்கு அருகே அகத்திய முனிவரைக் கண்டு வணங்கினான். அகத்தியர் “திருக்கேதாரத்திற்குப் பக்கத்திலுள்ள பூர்ச்சவனத்திலே இருக்கும் இரு சிகரங்களையும் எடுத்துப் பொதிகை மலைக்குக் கொண்டு வருவாயானால் பெறற்கரிய பெரும்பேறடைவாய்” எனக்கூறி அவற்றை அடையும் வழிகளை உணர்த்தினார். அவன் அகத்தியர் கூறிய வழியே சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூலமந்திரத்தை விதிப்படி உச்சரித்துத் தவம் செய்தான். அப்பொழுது பிரமதண்டம் புய தண்டாகவும் அட்ட திக்கு நாகங்கள் கயிறாகவும் தன் பக்கத்தில் வந்ததைக் கண்டு, பாம்புகளை உறிக்கயிறாக பிரமதண்டுடன் பிணைத்து இரு சிகரங்களையும் இருபக்கத்திலும் பிணைத்து, தோளிற் சுமந்து காவடி எடுப்பதுபோல் நடந்துசென்று பழனியை அடைந்தபோது, முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி அதிபாரமாகத் தோன்ற, அந்த இடத்தில் இறக்கி வைத்து இளைப்பாறினான். காவடியைப் பின்பு தூக்க முயன்றபோது முடியாது போகவே சுற்றிப் பார்த்தான். சிவகிரியின் ஒரு சாரலிலுள்ள குரா மரநிழலிலே தண்டாயுதபாணியைக் கண்டு, அவன் யாரென அறியாது வழியை விடும்படி வற்புறுத்தினான். முருகன் தன் திருவிளையாடலைத் தொடக்கி “உன்னிடம் வலிமை இருந்தால் கொண்டு செல்” எனக் கூறினார். ஆத்திரமடைந்த இடும்பன் குரா மரத்தடியில் நின்ற தண்டாயுதபாணி மேல் பாய்ந்தபோது அவர் விலக, அவ்விடத்திலேயே வீழ்ந்திறந்தான். பிரமதண்டும் நாகங்களும் அஞ்சி அகன்று அகத்தியரிடம் செய்திசொல்லின. இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகன் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார். இடும்பன் எழுந்து முருகனை வணங்கி அம்மலையடியில் இருந்து குற்றேவல் புரிய வரம்கேட்க, முருகனும் அவ்வாறே அருளினார். இடும்பன் கதையுடன் தொடர்புடைய காவடி இன்று பல வடிவங்களில் எடுக்கப்படுகிறது. இடும்பன், தான் இரு மலைகளையும் எடுத்து வந்ததுபோல், தமது பாபச் சுமையை நீக்கக் காவடி எடுத்துவரும் அடியார்களுக்கு அருளும்படியும் வேண்டியதாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முருகன் கோயில்களில் இடும்பனைப் பரிவார மூர்த்தியாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. இவ்வாலயங்களில் முருக மஹோற்சவம் முடிந்தபின் இடும்ப பூசை நடைபெறுவது வழக்கில் காணப்படுகிறது. தமிழகத்து சற்குருநாதர் கோயிலில், தான் இழந்த சக்திகளைப் பெற்ற பிரம்மா மகிழ்ந்து பிரம்ம தீர்த்தத்தை நிறுவியதாகவும் அங்கு சென்ற சிவபக்தனான இடும்பன், தன் பாவங்கள் யாவற்றையும் போக்க இக்குளத்தில் நீராடி வழிபட்டதாகவும் சிவன் மகிழ்ந்து அவருக்குத் திருவருள் புரிந்ததாகவும் கூறப்படுகிறது. பழனி தல புராணம், அதனோடு ஒட்டிய ஐதிகக் கதைகள் மாத்திரமே முருகன் அடியாராக இடும்பனைக் குறிப்பிடுவது கவனத்திற்குரியதாகும். பொதுவில் இடும்பன் இராட்சதனாகவும், அதேவேளை ஞான நாட்டமுடைய சிறந்த பக்திமானாகவும், காவல்தெய்வமாகவும், அச்சத்தோடு மக்கள் வழிபடும் தெய்வமாகவும் அமைந்துள்ளது. இடும்பன் கோயில்கள் தமிழகத்தில் தஞ்சாவூர் காடுவெட்டி விடுதி, கீழ் மேட்டுப்பட்டி, இடும்பாவனம் என்பவற்றிலும் திருக்கன்றாப்பூர், குன்றக்குடி, திருப்பூரருகே இடுவம்பாளையம், பழனி போன்ற பல இடங்களில் இடும்பனுக்குத் தனிக்கோயில்களுண்டு. பிற கோயில்களில் பரிவார மூர்த்தியாகவும் முதன்மை கொடுக்கப்படுகின்றது. ஈழத்துப்புலத்தில் கொழும்பு வாழ் நகரத்தாரின் (செட்டிமாரின்) மூன்று கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்களிலும், யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு, உரும்பிராய் போன்ற இடங்களிலும் இரத்தினபுரி, நாவலப்பிட்டி, கொஸ்லந்தை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களிலும் பரிவார தெய்வமாக இடும்பன் தனிக்கோயில் பெற்றுக் காணப்படுகின்றான். திருகோணமலையில் இடும்பன்மலை என்று ஓர் இடம் உண்டு. பண்டத்தரிப்பில் காலையடி எனும் இடம் உண்டு. ஆகம முறையிலமைந்த கோபுரத்துடன் கூடிய முருகனாலயமே காணப்படினும், இன்றும் அது இடும்பன் ஆலயம் என்றே அழைக்கப்படுகின்றது. மூலஸ்தானத்தில் மூலமூர்த்திக்கு அருகில் முன்பு இடும்பனாக வழிபடப்பட்ட வேல், இன்றும் வைத்துப் பூஜிக்கப்படுகிறது (தகவல்: ஆலய முன்னைய தலைவர், திருநாவுக்கரசு, வயது. 83). கொழும்பு வாழ் நகரத்தார் சமூகம் கதிர்காமக்கந்தன் மீது அளவற்ற பக்தி உள்ளவர்கள் என்றும், நேர்த்திக்கடன் செலுத்தக் காவடி முதலானவற்றைக் கொண்டு கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்குக் கால்நடையாகவே (கரப்பாதை) செல்வதாகவும், அப்போது வழித்துணையாக இடும்பனை அழைத்துச் செல்வதாகவும், அதன் நன்றிக்கடனாகவே தமது கொழும்பு முருகன் கோயில்களில் இடும்பனைப் பிரதிஷ்டை செய்ததாகவும் அறிய முடிகின்றது. மேற்படி நகரத்தார் கோயில்களில் மட்டுமே உருவவழிபாடு காணப்படுகிறது. ஏனைய கோயில்களில் பெரும்பாலும் வேல், சூலம், கல் என்பன வைத்தே வழிபடப்படுகின்றன. உரும்பிராய் அம்மன் கோயிலில் பரிவாரமாக உள்ள இடும்பன் முச்சூலம் மூன்றின் இணைந்த வடிவத்தினராகக் காணப்படுகின்றார். மையத்தில் இருக்கும் திரிசூலத்தில் இருந்து எதிர்த்திசைகளை நோக்கியதாக ஏனைய இரு திரிசூலங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இடும்பன் தெய்வமாகக் கருதப்படுதாது முருகன் அடியாராகக் கருதப்பட்டுவரும் வழக்கம் மேனிலையாக்கக் கோயில்களில் காணப்படுகின்றது. உதாரணமாக யாழ்ப்பாணத்து மடாலயங்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மஹோற்சவ கால பதினேழாந் திருவிழா இடும்பவாகனத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இடும்பன் பூசை நடைபெறும் சந்தர்ப்பங்கள் ஈழத்துப்புலத்தில் பொதுவாக தனிக்கோயில்களிலும் இடும்பனைப் பரிவாரமாகக் கொண்ட கோயில்களிலும், கிராமிய முறை, ஆகம முறை எனும் இருதளங்களிலும் பூசைகள் நடைபெறுகின்றன. தனிக்கோயில்கள் பெரும்பாலும் பிராமணரல்லாதாரின் நாட்டார் வழக்கிலான பூசைமுறையே நடைபெறும். மேனிலையாக்கம் செய்யப்பட்ட முருகன் கோயிலாக மாற்றம்பெற்ற மற்றும் பரிவாரமாக இடும்பன் இருக்கும் ஆகம முறை சார்ந்த கோயில்களில் ஆகம முறைப்படியான பூசைகளே நடைபெற்று வருகின்றன. ஆடிவேல் உற்சவங்கள் நடைபெற்று முடிந்ததன்பின் இடும்பனுக்கு சைவ, அசைவப் படையல் வைத்து வழிபடும்முறை ஆகம முறைப்படி அமைந்த கொழும்பு கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்கள் மூன்றிலும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. இதேபோல கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம் (வடமராட்சி) போன்ற இடங்களில் கதிர்காம யாத்திரை செய்து தமது நேர்த்திக்கடனை முடித்து வந்தவர்கள் மட்ச – மாமிசம் காய்ச்சக்கூடிய நாளொன்றில் வீட்டில் இடும்பன் பூசை செய்வர். இவ்வாறு கோயில் சார்ந்து நடைபெறும் இடும்பன் பூசைகளைத் தவிர வாழ்வியல் சார்ந்தும் இடும்பன் பூசைகள் நடைபெறுகின்றன. அவை மகிழ்வுசார் சந்தர்ப்பத்திலும், துக்கம்சார் சந்தர்ப்பத்திலும் நடைபெறுகின்றன. குடிபுகுதல் (வீடு குடி பூரல்), கிணறு வெட்டி ஊற்றுக்காணல், குறித்த நேர்த்தியை நிறைவு செய்ததன் பின்னர், எடுத்த காரியம் சிறப்புற நடைபெற்றதன் பின்னர் என மகிழ்வுசார் பூசை நடைபெறும். இறப்பின் பின்னான அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய (31) நிகழ்வு நிறைவுற்ற பின்னர் நிகழ்வதாக துக்கம்சார் பூசை நடைபெறும். இடும்பன் பூசை மேலே குறிப்பிட்டதுபோல இடும்பன் பூசை என்பது இருவிதமாக நடைபெறுகின்றது. கோயில் சார்ந்தது. கோயில் சாராது, வாழ்வியலுடன் இணைந்தது. இடும்பன் தனிக்கோயிற் கொண்டு இருக்கும் இடங்களில் தினம் விளக்கு வைத்தல், வாராந்தப் பூசை, வெள்ளியில் விளக்கு வைத்தல் மற்றும் விஷேட தின பூசை என்பன இடம்பெறுகின்றன. இங்கு நடைபெறும் விசேட தினப் பூசைகளில் சோறு, மட்சம், மாமிசம், மரக்கறி என்பன அவித்துப் படைக்கப்படும். பூசாரி தெய்வமாடி குறி சொல்லுதலும், பில்லி – சூனியம் – வசியம் முதலியன நீங்குதலும், கயிறு கட்டி திருநீறு இடுதலும் வழக்கமாக உள்ளது. அதேவேளை நேர்த்தி வைத்த மக்கள் தாமாகவே படையலை வைத்து வழிபடலும், அவற்றை மக்களுக்கு அள்ளி வழங்குதலும் உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள அல்வாய்ப் பிரதேசத்தில் இடும்பன் கோயில் காணப்பட்டதாகவும், அங்கு சோறு, மட்சம், மாமிசம் படையலிட்டபின் அவற்றை ஒன்றாக்கிக் குழைத்து திரணைகளாக்கி (பந்து போல உருண்டையாக்கி) யாவர்க்கும் வழங்கும் வழக்கம் காணப்பட்டதாகவும் தகவல் உண்டு (தகவல் – இ. இராஜேஷ்கண்ணன், முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இக்கோயில் யுத்த காலப்பகுதியில் ஏதோ சில காரணங்களால் அகற்றப்பட்டுவிட்டதாக அறிய முடிகிறது. கொழும்பு கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்கள் மூன்றிலும் ஆடிவேலின் பின் இடும்பனுக்குப் படையலிட்டு அடியவர்க்கு வழங்கும் வழக்கம் காணப்படுகிறது. இங்கு ஆகமம்சார்ந்த பூசைமுறையே காணப்படினும் இத்தினத்தில் மட்டும் அசைவம் என்று சொல்லப்படும் மட்ச, மாமிசப் படையல் இடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். வாழ்வியல்சார் சடங்காக இடும்பன் பூசை மகிழ்வு சார் சடங்கு/ பூசை 1. கிணற்றில் ஊற்றுக் காணல் வீட்டுவளவில் அல்லது தோட்டங்களில் கிணறு வெட்டுவர். கிணற்றை வெட்டும்போது அத்தொழிலைச் செய்பவர் காவல் தெய்வமான இடும்பனிடம் “எந்தச் சிக்கலுமின்றி கிணறு வெட்டி முடித்து நன்னீர் ஊற்று சிறப்பாகச் சுரக்க வேண்டும்” என வேண்டிக் காரியத்தைத் தொடங்குவார். கிணறு வெட்டும்போது ஊற்றுநீரைக் கண்டவுடன் அந்த நீரை காவோலையால் (காய்ந்த பனையோலையால்) மூடிவிடுவர். அடுத்த நன்னாள் பார்த்து, உரிய நேரத்தில் இடும்பன் பூசை செய்வர். கோழி ஒன்றின் கழுத்தறுத்து எறிவதோடு இரத்தத்தைக் கிணற்றில் தெளிப்பர். காவோலை எடுக்கப்பட்டுவிடும். பலியிடப்பட்ட கோழியை உண்ணும் வழக்கம் இல்லை. வேறு இறைச்சி, மட்சம் உள்ளிட்டவை சமைத்து கிணறு வெட்டிய தொழிலாளிகளுக்கும் தமது உறவுகளுக்கும் கொடுத்துண்பர். 2. வீடு குடிபுகுதல் (வீடு குடி பூரல்) புதிதாகக் கட்டப்பட்ட வீடு குடிபுகும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு வீட்டின் மரவேலைகளைச் செய்த தச்சுத் தொழிலாளர்களால் வீட்டின் முகடு பிரித்து தச்சன் காளி விரட்டல் சடங்கு நிகழ்த்தப்படும். அதுபோல குடி புகுதல் நிகழ்வு நடைபெற்று நான்காம் நாள் அளவில் (அசைவம் புழங்கக்கூடிய நாளில்) அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு அவ்வீட்டைக் கட்டிய தொழிலாளர்களுக்கும் வேண்டிய உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விருந்து வைக்கப்படுதலே இடும்பன் பூசையாகச் சொல்லப்படுகிறது. யாழ்ப்பாணம், மூளாய், பொன்னாலைப் பிரதேசங்களில் அத்தினத்தில் கோழி கழுத்தறுத்துப் பலியிடப்படுதலும் தலையை வீட்டுக் கூரையின் மேலால் எறிதலுமாகிய வழக்கம் காணப்படுகிறது (தகவல் – மயூரரூபன், எழுத்தாளர், வடமராட்சி). இதேவேளை யாழ்ப்பாணம், நுணாவில், மட்டுவில் கிராமங்களின் சில பகுதிகளில் இடும்பன் பூசை நடைபெறும் நாளில் சமைக்கப்படும் சைவ, அசைவ உணவுகள் யாவற்றிலும் சிறிது அள்ளி, வடலிப் பனையோலையால் பின்னப்பட்ட தட்டுவத்தில் இட்டு, குசினி அடுப்படியில் வைத்த பின்பே உணவு பரிமாறப்படுகிறது. அன்றிரவு ஆளரவம் அடங்கியபின் அத்தட்டுவத்தை சந்தி முடக்குகளில் அல்லது சுடலைக்கண்மையில் வைத்துவிட்டு வரும் வழக்கம் காணப்படுகிறது (தகவல் – செல்வி. ரஜீவா, நுணாவில், உதவி விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்). பண்டத்தரிப்புப் போன்ற பிரதேசங்களில் பந்தமும் கொண்டு சென்று இவற்றைச் சந்தியில், ஆட்கள் புழங்காத இடத்தில் வைத்துவிட்டு தமது வீட்டடியில் எச்சிலைக் காறி உமிழ்ந்து, பின்பு கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் செல்லும் வழக்கமுள்ளதாகக் கொத்தனார் வேலை செய்யும் தர்மலிங்கம் குகன் (வயது, 37) பேபிச்சந்திரன் விஜயகுமார் (வயது, 48) போன்றோர் தெரிவித்தனர். கோயில் திருவிழா, கந்தசஷ்டி போன்ற காலங்களில் விரதம் முடிவுற்றதன் பின்பும் கோயில்களுக்கான பாதயாத்திரைகள், நேர்த்திக்கடன்கள் முடிவுற்றதன் பின்பும் அசைவ உணவு சமைக்கப்பட்டு உறவினருக்கும் நண்பர்களுக்கும் வழங்கப்படும். துக்கம்சார் சடங்கு/ பூசை இறப்பின் பின்னான அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் நிகழ்வதாக துக்கம்சார் பூசை நடைபெறும். அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் நடைபெற்று நான்காம் நாள் அளவில் (அசைவம் புழங்கக்கூடிய நாளில்) அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு, அவ்விறப்பு நிகழ்வு நடைபெற்றபோதும், பின்னான நாட்களிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் துணைநின்ற அனைவருக்கும், இரத்த உரித்துடைய உறவுகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு விருந்து வைக்கப்படுதலே இடும்பன் பூசையாகச் சொல்லப்படுகிறது. செட்டிமாரிடமும், பாண்டியன் தாழ்வு போன்ற பிரதேசங்களிலும் இந்த வழக்காறு இருப்பதாக திரு. ச. முருகேசபிள்ளை (வயது, 60) குறிப்பிடுகின்றார். இங்கு இடும்பன் பூசை என்பது இடுப்பன் சாமிக்கான பூசையல்ல; அசைவ உணவு சமைத்து குறித்த காரியத்தில் கை கொடுத்த, துணைநின்ற, வழித்துணையாய் அமைந்த மனிதருக்கு அன்புடன் பரிமாறும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. இடும்பன் பூசைக்கான படையல் இடும்பன் பூசை கோயில்களில் நடைபெற்றாலும் சரி, வீட்டில் நடைபெற்றாலும் சரி இடும்பனுக்கான படையல் தனித்துவமானது. கோயில்களில் பெரிய கிடாரங்களில் சோறு சமைக்கப்படும். ஆடு, கோழி, இறைச்சிகளும் கடலுணவுகளான நண்டு, இறால், கணவாய், மீன் என்பவற்றோடு பலவகையான, கிடைக்கக்கூடிய மரக்கறிகளும் சமைக்கப்பட்டு பனையோலைப்பாயில் படையல் வைக்கப்படும். சோறு மலைபோல் குவிக்கப்பட்டு கறிவகைகள் இடப்பட்டு, படையல் படைக்கப்படும். சில கோயில்களில் கள், சாராயம் போன்றவற்றைப் படைக்கும் வழக்கமுண்டு. வீடுகளில் நடைபெறும் இவ்வாறான பூசைகளில் சோறு, மரக்கறி, இறைச்சி வகைகளோடு புட்டு, கணவாய், இறால், மீன், பொரியல் – கறி உள்ளிட்ட பலவகையான உணவாக்கங்கள் அவரவர் வசதிக்கேற்ப ஆக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது. அதேபோல இப்பூசையில் பங்குபற்றுபவர்களுக்கு வேண்டிய மதுபான வகைகளும் வழங்கப்படும். இவை இன்று அநாகரிகச் செயற்பாடுகளாகக் கருதப்பட்டு தவிர்க்கப்பட்டு வருகின்றன. சில அவதானிப்புகள் இடும்பன் பற்றிய கதைகள் பலவிதமாக உள்ளன. பாரத, இராமாயண இடும்பன் இராட்சதன், காவற்காரன்; முருகனடியாராகச் சித்தரிக்கப்படும் இடும்பன் சிறந்த பக்தனாக, மலைகளைத் தூக்கவல்ல பேராற்றலானாக, வீரனாகக் காட்டப்படுகின்றார். காலந்தோறும் வந்த பல்வேறு கதைகளின் கூட்டு வெளிப்பாடாகவே இடும்பன் கதை அமைகிறது. இராட்சதன், வீரன், காவல் தெய்வம் என்பதனால்தான் என்னவோ அசைவ உணவும் மலைபோன்ற உணவுக்குவியலுமான படையல் வழங்கப்படுகிறது போலும். நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களின் முருக வழிபாட்டோடு இடும்பன் வழிபாடு பின்னிப்பிணைந்திருக்கிறது. நல்லூரில் கந்தசஷ்டி காலத்தில் நவவீரர் பவனி இடம்பெறுதல்போல, கொழும்பு ஆடிவேல் விழாவில் முருகனின் திருத்தேர் முன்பு பிரம்புடன் இடும்பன் ஆடிப்பாடி வருகின்ற நிகழ்வு இடம்பெறும். பிரம்புடன் வருதல் என்பது இடும்பனுக்கு கொடுக்கப்படும் முதன்மை அதிகாரத்தின் குறியீடு எனலாம். அதேவேளை நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இடும்பன், வழிபடு தெய்வமாகவன்றி சுவாமியைக் காவும் வாகனமாகவே உள்ளான். கால்களை மடக்கி கனத்தினைத் தாங்கும் இராட்சதனாக – ஒரு வீரனாக – பக்தனாக – விசுவாசியாக – தொழிலாளர் வர்க்கத்தினனாகவே சித்திரிக்கப்படுகின்றான். கலையியல் மரபில் இடும்பனுக்குத் தனிப்பங்குண்டு. மட்டக்களப்பில் ஆடப்படும் வடமோடிக் கூத்துகளில் ஒன்றாக ‘இடும்பன் போர்’ விளங்குகின்றது. அதுபோல நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகோற்சவத்தில் பதினேழாம் நாள் நடைபெறும் இடும்பன் வாகனத் திருவிழாவில் பூதநிருத்தம் எனும் நடனம் ஆடப்படுவது குறிப்பிடத்தக்கது. மத்தளத்தை தோளில் தூக்கியவாறு ஒற்றை காலில் ஆடி ஆடி வாசிப்பதை பூதநிருத்தம் என்பர். இவ்வாறாக பூத கண வாத்தியங்கள் முழங்க, பூத நடன சமர்ப்பணத்தோடு இடும்பன் மீது கந்தசுவாமி பவனி இடம்பெறும். ஈழத்துப்புலத்தில் கதிர்காம யாத்திரை என்பது நீண்டகாலமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. முதன்முதல் யாத்திரை போய் சிறப்பாக அதனை முடித்து வீடு திரும்பியவர் வீட்டில் இடும்பன் பூசை செய்தபிறகே அவர் மீள வீட்டுக்கு வெளியில் செல்லலாம் எனும் நடைமுறை வல்வெட்டியில் இருப்பதாக திருமதி கேசலிங்கம் தவமலர் (வயது, 78) குறிப்பிடுகின்றார். பல பிராந்தியங்களில் யாத்திரை செய்யும் தோறும் இப்பூசை இடம்பெற்று வந்துள்ளது. ஆயினும் இன்று யாத்திரை மரபும் இடும்பன் பூசையும் வழக்கிழந்து வருகின்றது. வெட்டுக்கிணறு வெட்டும் வழக்கம் இன்று அருகி குழாய்க்கிணறு முறையே பெருகிக் காணப்படுகின்றது. அதுபோல கோழி பலியிடல் அருகி அதன்வழி இடும்பன் பூசையும் வழக்கிழந்து பொங்கல் படையலே எஞ்சி நிற்கின்றது. வீடு குடி புகுதல் நிகழ்வின் பின்னான மட்சம், மாமிசம் காய்ச்சுதல் நிகழ்வாக இடும்பன் பூசை நடைபெறுவது அருகி வருகின்றது. படையலுக்குப் பயன்படும் பனையோலையாலான தட்டுவம், பாய் என்பனவும் வழக்கிழந்து விட்டன. தற்காலத்தில் வாழையிலையும் உலோக, பிளாஸ்ரிக் தட்டுகளுமே பயன்படுத்தப்படுகின்றன. எல்லா மக்களாலும் பின்பற்றப்பட்டு வந்த இடும்பன் பூசை இன்று கைவிடப்பட்டு செட்டிமார், சிறுகுடி வேளாளர் போன்றோராலேயே சிறிதளவேனும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இடும்பனுக்கான படையல் என்பது, குறித்த பிராந்திய மக்களின் பண்பாட்டோடு இணைந்து உணவு முறை, குடிவகைசார்ந்த வெளிப்பாடாகவும் கொடுத்துண்கின்ற பண்பாட்டின் வெளிப்பாடாகவும் அமைகிறது. இன்று இடும்பன் பூசை எனும் சொல்லாட்சி அசைவ உணவை உண்ணுதல் என்பதனைக் குறிக்கும் சொல்லாக, கிண்டலாக மாறியுள்ளமை கவனத்திற்குரியது. காளியோடு இணைந்திருக்கும் இடும்பன் வழிபடு தலங்கள் புதிய தளக்கோலங்களுக்கு உரியனவாக அமைந்துள்ளன. காளி, பிள்ளைகளைப் பிடித்துண்ணுபவளாகவும், அவளைக் கட்டுப்படுத்தும் தெய்வமாக நகரத்தார் இடும்பனை வழிபட்டதாகவும், பயன்பெற்றதாகவும், தமிழகத்தில் ஓர் ஐதிகக்கதை உண்டு. மகாபாரதத்தில் இடும்பன் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களை உண்பவனாகவே சித்திரிக்கப்படல் முரண் நகையாகும். ஈழத்தில் காளியோடு இணைந்த இடும்பன் வழிபடுதலங்களில் (மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்) பில்லி சூனியம், செய்வினை, வசியம் என்பன நிகழ்த்துகைகளாக உள்ளன. இது இடும்பன் வழிபாடு, நாகரிகமற்ற ஒன்று எனக் கருத வாய்ப்பளிக்கின்றது. இடும்பன் பூசை என்பது ஒரு வழிபாடு என்பதைவிட, குறித்த காரியத்தில் துணை நின்ற யாவர்க்கும் அவர் விரும்பும் உணவை, குடி வகையை விருந்தாக அளித்து நன்றி செலுத்தும் நிகழ்வு என்றே கருத வேண்டியுள்ளது. இன்னும் நுணுகியுரைக்கின் மகிழ்விலும் துக்கத்திலும் கூட இருந்தவர்களுக்கு அன்பை வெளிப்படுத்துவதாகவும் வீடு, கிணறு உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்த உழைப்பாளிகளுக்கு நன்றி சொல்லும் வகையில் நிகழும் நிகழ்வாகவுமே இடும்பன் பூசை அமைந்துள்ளது. நிறைவுரை ஈழத்தில் நின்று நிலவுகின்ற நாட்டார், ஆகமமரபு வழி தனித்தனியேயும், இரு மரபும் இணைந்தநிலையிலும் வழிபடு தெய்வமாக இடும்பன் காணப்படுகின்றான். இடும்பன் பற்றிய கதைகள் பல இடும்பன்கள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை அவனை இராட்சதனாக, மாமிச உண்ணியாக சித்திரிப்பதில் ஒன்றுபடுகின்றன. இடும்பன் தனிக்கோயில் கொண்டவனாக, பரிவாரத் தெய்வமாக காணப்படுகின்ற அதேவேளை, இன்று அவனது கோயில்கள் பல காணாமல் போயின அல்லது மேனிலையாக்கம் பெற்றன. ஆஜானுபாகுவான உருவமுடைய சிலை – விக்கிரக வழிபாடு காணப்படும் அதேவேளை வேல், கல், சூல வழிபாடும் உள்ளன. உரும்பிராயில் மட்டும், மூன்று திரிசூலங்கள் இணைந்து, இருபக்கமும் மேலும் நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டு, வழிபடப்படுவதைக் காண முடிகிறது. சனங்களின் உணவியல் பண்பாட்டோடு கலை மரபோடும் இணைந்த இத்தெய்வம் அரூபநிலையிலும் வழிபடப்படுகிறது. இடும்பன் பூசை ஒரு தெய்வ வழிபாடாக மட்டுமன்றி உழைப்பாளர்களை – குறித்த தொழில்களைச் செய்யும் மக்களை, அவர்களின் பணியைக் கௌரவித்து, மரியாதை செய்வதாகவும், நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது. ஆயினும் நாகரிகம் என்ற போர்வையில் இன்று இப்பண்பாடும் பூசையும் மிகவிரைவாக வழக்கிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ezhunaonline.com/idumban-pooja/

"நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்": இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு - இணையத்தில் விமர்சனம்

3 weeks 4 days ago
Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 02:41 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியைப் பார்த்து பேசிய வார்த்தைகள், எகிப்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் சலசலப்பையும், இணையத்தில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதையொட்டி, எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய ட்ரம்ப், "நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்," என்று தெரிவித்தார். மேலும், இதைத் தொடர்ந்து டிரம்ப் கிண்டலாக, "இதே வார்த்தையை நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும்" என்றும் கூறினார். ட்ரம்பின் இந்தப் பேச்சு, அரசியல் அரங்கில் ஒரு தலைவரை அவரது பணியின் அடிப்படையில் அல்லாமல், தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடுவதாகக் கூறி, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த மாநாட்டில் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227706

பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி 16 வயதில் வாசிக்க கற்று, பின் மருத்துவராகி மலையேற்றமும் சென்று சாதித்த கதை

3 weeks 4 days ago

மருத்துவர் லீ சுவாங்யே

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே

கட்டுரை தகவல்

  • பென்னி லு

  • பிபிசி சைனீஸ்

  • விபெக் வெனிமா

  • பிபிசி உலக சேவை

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

37 வயதான மருத்துவர் லீ சுவாங்யேவின் துயரங்களை வென்றெடுத்த கதை மற்றும் மலை ஏறுதல் மீதான அவரது காதல் ஆகியவை சீனாவில் வைரலானது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிறுவயதில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 16 வயதில்தான் இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.

1988 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லீ சுவாங்யேவுக்கு ஏழு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியது. இது அவரை குதி கால்களில் குந்தி அமர்ந்தால் அன்றி, நடக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றது.

சிறுவயதில், மற்ற குழந்தைகளைப் போலப் பள்ளிச் சீருடையுடன் செல்வதே லீயின் கனவாக இருந்தது. ஆனால், அவர் நிறைய ஏளனத்தைச் சந்தித்தார். சில குழந்தைகள் அவரை "வீணானவர்" என்றும், அவரால் "சாப்பிட மட்டுமே முடியும், வேறு எந்தப் பயனும் இல்லை" என்றும் கூறினர்.

"இது என்னை மிகவும் காயப்படுத்தியது," என்று லீ கூறுகிறார்.

லீக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, கால்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால் அவரால் நடக்க முடியும் என்று அவரது பெற்றோர் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மேலும் கடன் வாங்கி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அந்த அறுவை சிகிச்சை மீது லீ மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். "நான் வார்டில் குணமடைந்து வந்தபோது, மற்ற குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் நான் சிரித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் என்னால் விரைவில் ஒரு சாதாரண மனிதரைப் போல நடக்க முடியும் என்று நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது. லீயின் நடக்கும் நம்பிக்கை சிதைந்ததுடன், அவர் ஆழமான மன அழுத்தத்திற்கு ஆளானார். தன் வாழ்க்கை அர்த்தமற்றது என்பதைப் போல உணர்ந்த அவர், தன் தாயிடம் தான் இறந்துவிட விரும்புவதாகக் கூறினார்.

மருத்துவர் லீ சுவாங்யே

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, மருதுவர் லீ சீனாவின் ஐந்து புனித மலைகள் மற்றும் ஹுவாங்ஷன் மலை, அத்துடன் சீனப் பெருஞ்சுவர் அனைத்திலும் ஏறியுள்ளார்.

ஆனால், அவருடைய தாயார் அவரிடம் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறினார். "நாங்கள் வயதான காலத்தில் பேசுவதற்கு ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக உன்னை வளர்க்கிறோம். ஒரு பூனையோ நாயோ பேச முடியாது, ஆனால் உன்னால் பேச முடியும்," என்று அவர் கூறினார்.

அவரது வார்த்தைகள் ஆழமாகப் பதிந்தன. "எனக்காக என் பெற்றோரும் குடும்பத்தினரும் எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்று நான் நினைத்தேன். கண்ணீர் விட்டு அழுதேன். நான் எனக்காக மட்டுமல்ல, அவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்று உணர்ந்தேன்," என்கிறார் லீ.

அதன்பிறகு சிறிது காலத்திலேயே, வெளியூர் நபர் ஒருவர் கிராமத்திற்கு வந்து, கோவில்களில் ஊதுபத்தி விற்க மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தேடினார். அந்த நபர், லீ அந்த நேரத்தில் அவரது தந்தையின் மாதச் சம்பளத்திற்குச் சமமான தொகையை வீட்டிற்கு அனுப்புவார் என்று உறுதியளித்தார்.

"என் பெற்றோர் அதை உறுதியாக எதிர்த்தனர். ஆனால், பணம் சம்பாதிக்கவும், என் குடும்பத்தின் சுமையைக் குறைக்கவும் எனக்கு இது ஒரு வாய்ப்பாகத் தெரிந்தது," என்று லீ கூறுகிறார். அவர் அந்த நபருடன் செல்ல ஒப்புக்கொண்டார்.

மருத்துவர் லீ சுவாங்யே

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே

தெருவில் பிச்சை எடுக்க நேரிட்ட துயரம்

ஆனால், வேலை குறித்த வாக்குறுதி ஒரு ஏமாற்றுவேலை என்று லீ விரைவில் அறிந்தார்.

அந்த வெளியூர் நபர் ஒரு பிச்சை எடுக்கும் கும்பலை நடத்தி வந்ததாக மருத்துவர் லீ கூறுகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, அவர் மற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தனது புதிய "முதலாளியுடன்" கழித்த முதல் நாள் இரவில், மற்ற குழந்தைகளில் ஒருவர், கடினமாக உழைக்கவில்லை என்றால் அடிக்கப்படுவீர்கள் என்று லீயை எச்சரித்தார். இது உண்மையாகவும் ஆனது.

அடுத்த நாள் காலையில், லீ சட்டை இல்லாமல், நாணயங்களுக்கான ஒரு கிண்ணத்துடன், அதிக அனுதாபத்தைத் தூண்டும் வகையில் அவரது கால்கள் முதுகுப்புறமாக முறுக்கப்பட்ட நிலையில் நடைபாதையில் விடப்பட்டார்.

மக்கள் தன் கிண்ணத்தில் பணம் போடுவது ஏன் என்று லீக்கு முதலில் புரியவில்லை. அப்போது, பாதசாரிகள் அவரிடம், பள்ளியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது.

"என் சொந்த ஊரில், பிச்சை எடுப்பது அவமானகரமானது. நான் அதையே செய்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்திருக்கவில்லை. உண்மை தெரிந்தபோது நொறுங்கிப் போனேன்," என்று லீ கூறுகிறார்.

லீ ஒரு நாளைக்குச் சில நூறு யுவான்களைச் சம்பாதிக்க முடிந்தது – இது 1990களில் ஒரு பெரிய தொகையாகும் – ஆனால் அது அனைத்தும் அவரது முதலாளியிடம் சென்றது.

"நான் மற்ற குழந்தைகளை விடக் குறைவாகச் சம்பாதித்தால், அவர் நான் சோம்பேறித்தனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி, சில சமயங்களில் என்னைத் தாக்குவார். அதனால் அந்த ஆண்டுகள் மிகவும் வேதனையாக இருந்தன." என்று அவர் கூறுகிறார்.

அடுத்து வந்த ஆண்டுகளில் மற்ற குழந்தைகள் ஓடிவிட்டனர் அல்லது காவல்துறையால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தன் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற உறுதியுடன் லீ அங்கேயே தங்கினார். காவல்துறை உதவி வழங்கிய போது, அவர் மறுத்துவிட்டார்.

ஏழு ஆண்டுகளாக கோடை மற்றும் குளிர்காலத்தில், லீ நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்தார்.

"அது நரகத்தில் வாழ்வது போல் இருந்தது. நான் வெட்கப்பட்டேன், கண் தொடர்பைத் தவிர்த்தேன். பரிதாபத்தைத் தூண்டுவதற்காக என் காலை வலி நிறைந்த நிலையில் பின்புறமாக முறுக்கிக் கொள்வேன். பிச்சை எடுப்பதைத் தவிர்க்க மழை அல்லது இருளுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்," என்று அவர் பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் கூறினார்.

ஒவ்வொரு புத்தாண்டுக்கு முந்தைய தினம் அவர் வீட்டிற்கு அழைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் தன் பெற்றோரை ஆசுவாசப்படுத்துவார்.

"ஆனால், அழைப்புக்குப் பிறகு, நான் என் அறையில் அழுது கொண்டிருப்பேன். நான் தெருவில் பிச்சை எடுக்கிறேன் என்பதை அவர்களிடம் சொல்ல முடியவில்லை." என்று அவர் கூறுகிறார்.

இப்போதும், 20 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வேதனை நீங்கவில்லை எனக் கூறும் அவர், "பிச்சை எடுத்தது ஆழமான உளவியல் காயங்களை விட்டுச் சென்றது - நான் இன்னும் அதைப் பற்றி கொடிய கனவு காண்கிறேன். அது ஒரு கனவு மட்டுமே என்று அறிந்து நிம்மதியுடன் எழுந்திருக்கிறேன்." என்கிறார்.

ஹுவா மலையில் 2154 மீட்டர் உயரத்தில்  ஒரு அறிவிப்பு பலகை அருகே  இருக்கும் மருத்துவர் லீ.

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, மலையேறுவது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக மருத்துவர் லீ கூறுகிறார்.

கல்வி மூலம் ஒரு புதிய பாதை

லீ தெருவில் ஒரு செய்தித்தாளைக் கண்டெடுத்து, அதில் தனது பெயரில் உள்ள எழுத்துகளை மட்டுமே வாசிக்க முடிந்ததை உணர்ந்தபோது எல்லாம் மாறியது. அப்போது 16 வயதான அவர், வீட்டிற்குத் திரும்பி இறுதியாகப் பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தார்.

"என்னால் படிக்கவோ எழுதவோ முடியாது, கல்வி மூலம் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும்," என்று அவர் நினைத்தார்.

அந்த நேரத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது குற்றமாக ஆக்கும் புதிய கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் லீ கேள்விப்பட்டார். அவர் தனது முதலாளியிடம் தான் தனது குடும்பத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்த போது, அவர் உண்மையில் எப்படி வாழ்ந்து வந்தார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவரைச் சுரண்டியவர் உறுதியளித்ததை விட மிகக் குறைவான பணத்தை அவர்களுக்கு அனுப்பியிருந்ததைக் கண்டு லீ கோபமடைந்தார்.

தனது பெற்றோரின் ஆதரவுடன், லீ ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் வகுப்பில் சேர்ந்தார். அங்குப் படிக்கும் மாணவர்கள் அவரை விட 10 வயது இளையவர்கள். அவர் முதல் நாள் பள்ளிக்குச் சென்றபோது, குழந்தைகள் அவரது மேசையைச் சுற்றி மொய்த்தனர் – ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

"நான் வருத்தப்படவில்லை - அதற்கு முன்பு நான் நிறைய ஏளனங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருந்தேன். இப்போது, ஒரு மாணவனாக, நான் கற்றலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார்.

லீ மிகவும் அர்ப்பணிப்புள்ள மாணவராக ஆனார், இருப்பினும் அவரது உடல்நிலை கழிப்பறைக்குச் செல்வது போன்ற வேலைகளைக் கூடச் சிரமமாக்கியது. "கழிப்பறைக்குச் செல்ல நிறைய முயற்சி தேவைப்படும். அதனால் நான் பெரும்பாலும் பள்ளியில் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்," என்று அவர் கூறுகிறார்.

தளர்வில்லாத உறுதியுடன், லீ ஒன்பது ஆண்டுகளில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். அவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளை விளையாட அழைத்து, பின்னர் வீட்டுப் பாடத்தில் உதவி கேட்பார்.

கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவரது உடல்நிலை அவருக்கு இருந்த வாய்ப்புகளை குறைத்தது. ஆனால், அவர் மருத்துவத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். "தான் ஒரு மருத்துவரானால், என் சொந்த நிலையைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம், என் குடும்பத்திற்கு உதவலாம், உயிர்களைக் காப்பாற்றலாம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கலாம்," என்று அவர் நினைத்தார்.

மருத்துவர் லீ சுவாங்யே

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, கல்லூரிக்குச் செல்ல, லீ தனது மொபிலிட்டி ஸ்கூட்டரில் பல மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது.

25 வயதில் லீ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குள்ள வசதிகள் அவருக்கு மிகவும் அணுகக்கூடியதாக இருந்தன. ஆனால், செய்முறை வகுப்புகள் மிகவும் கடினமானதாக இருந்ததை அவர் கண்டார்.

"சக மாணவர்கள் ஆசிரியரைப் பின்தொடர்ந்து நோயாளிகளைப் பார்க்கச் செல்ல அல்லது இன்டர்ன்ஷிப்பின் போது வார்டுகளுக்கு இடையில் ஓட முடிந்தாலும், எனது நடமாடும் பிரச்னைகள் அதைக் கடினமாக்கின. மற்றவர்கள் ஒரு நாளில் கற்றுக்கொண்டதை நான் கற்றுக்கொள்ள அதிக நேரம் ஆகும்." என் றார்.

லீ தான் பலமடைய வேண்டும் என்று உணர்ந்தார். மலை ஏறுதலைத் தொடங்க முடிவு செய்தார். தனது முதல் மலையேற்றத்தில், தைய் மலையின் உச்சியை அடைய அவருக்கு ஐந்து பகலும் இரவும் ஆனது. அவரது கைகளும் கால்களும் வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டபோதும், அவர் கைவிடவில்லை. ஒவ்வொரு கல் படியையும் தனது பிட்டத்தைப் பயன்படுத்தி நகர்ந்து ஏறினார்.

மருத்துவர் லீ தனது மலை ஏறும் காணொளிகளைப் பகிர்ந்தபோது, அது இந்த கோடையில் வைரலாக மாறியது. மலை ஏறுவது அவருக்கு இப்போதும் ஒரு விருப்பமான விஷயமாக உள்ளது.

இப்போது மருத்துவர் லீ, ஜின்ஜியாங்கில் ஒரு சிறிய கிராமப்புற கிளினிக்கை நடத்தி வருகிறார். அவர் இரவு பகலாகப் பணி செய்ய தயாராக உள்ளார். அவரது நோயாளிகள் அவரைத் தங்களின் "அற்புத மருத்துவர்" என்று அழைக்கிறார்கள்.

"என் சொந்தக் கைகளால் நோயாளிகளைக் கவனிப்பது, என் அண்டை வீட்டாரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது – இது எனக்கு எல்லாவற்றையும் விட அதிக திருப்தியை அளிக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

உலகம் முழுவதும் சீன சமூகத்திடம் முழுவதும் அவரது கதை சென்றடைந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர், இது மக்களின் மனப்பான்மையை மாற்ற உதவும் என்று நம்புகிறார்.

"சிலர் மாற்றுத்திறனாளிகளைப் பயனற்றவர்களாகப் பார்க்கிறார்கள். உணவகங்களில் நான் அமர்ந்திருக்கும்போது பிச்சைக்காரன் என்று தவறாகப் புரிந்துகொண்டு, உணவு இல்லை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். நான் சிரித்துவிட்டு வெளியேறுவேன் - பெரும்பாலான மக்கள் கனிவானவர்கள்," என்று அவர் கூறுகிறார்.

மருத்துவர் லீ சுவாங்யே

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, ஒரு கிராமப்புற கிளினிக்கை நடத்துவதை மருத்துவர் லீ விரும்புகிறார்.

நம்பிக்கை மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கை

லீயைச் சுரண்டியவர் குறித்து ஏன் புகார் அளிக்கவில்லை என்று பலர் அவரிடம் கேட்டுள்ளனர். "நான் கடந்த காலத்தைக் கடந்த காலத்திலேயே விட்டுவிட முடிவு செய்தேன்," என்று அவர் கூறுகிறார். "அந்த ஏழு ஆண்டுகள் ஒரு வேதனையான அனுபவம், ஆனால் அவை என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன."

லீயின் பயணம் அவரது கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது. "பள்ளிக்குச் செல்ல முடிந்த பிறகு, மற்றவர்களின் கருத்துகள் அல்லது மதிப்பீடுகள் பற்றி நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். அந்த விஷயங்கள் அர்த்தமற்றவை என்று நான் உணர்ந்தேன். எனது நேரத்தையும் ஆற்றலையும் படிப்பதிலும், என் வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதிலும் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார்.

பல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்கள் தங்களை மதிப்பிடுவார்கள் அல்லது கேலி செய்வார்கள் என்று பயப்படுவதால் "முன்னோக்கிச் செல்ல அஞ்சுகிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.

"ஆனால், என்னைப் பொறுத்தவரை, அது முக்கியமில்லை. நான் வளாகத்திலும் நகரங்களிலும் வகுப்புகளுக்காகவோ, பட்டறைகளுக்காகவோ, அல்லது எனது வேலை மூலம் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு உதவுவதற்காகவோ குந்திக் கொண்டும், தவழ்ந்தும் செல்கிறேன். அதைச் செய்யும்போது நான் நம்பிக்கையுடன் இருப்பதாக நினைக்கிறேன். நான் மற்றவர்களின் பார்வையைப் பற்றி இப்போது கவலைப்படுவதில்லை." என்கிறார்.

பொதுமக்களுக்கு அவர் இந்த அறிவுரையையும் கூறுகிறார்: "நம் வாழ்க்கை மலைகளைப் போன்றது - நாம் ஒன்றில் ஏறுகிறோம், அதற்கு முன்னால் இன்னொன்று உள்ளது. நாம் தொடர்ந்து பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்."

"ஒருவர் எப்போதும் நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும், தங்கள் கனவுகளை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்."

மருத்துவர் லீ சுவாங்யே பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crexdg0lnx0o

பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி 16 வயதில் வாசிக்க கற்று, பின் மருத்துவராகி மலையேற்றமும் சென்று சாதித்த கதை

3 weeks 4 days ago
பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே கட்டுரை தகவல் பென்னி லு பிபிசி சைனீஸ் விபெக் வெனிமா பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் 37 வயதான மருத்துவர் லீ சுவாங்யேவின் துயரங்களை வென்றெடுத்த கதை மற்றும் மலை ஏறுதல் மீதான அவரது காதல் ஆகியவை சீனாவில் வைரலானது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிறுவயதில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 16 வயதில்தான் இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டார். 1988 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லீ சுவாங்யேவுக்கு ஏழு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியது. இது அவரை குதி கால்களில் குந்தி அமர்ந்தால் அன்றி, நடக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றது. சிறுவயதில், மற்ற குழந்தைகளைப் போலப் பள்ளிச் சீருடையுடன் செல்வதே லீயின் கனவாக இருந்தது. ஆனால், அவர் நிறைய ஏளனத்தைச் சந்தித்தார். சில குழந்தைகள் அவரை "வீணானவர்" என்றும், அவரால் "சாப்பிட மட்டுமே முடியும், வேறு எந்தப் பயனும் இல்லை" என்றும் கூறினர். "இது என்னை மிகவும் காயப்படுத்தியது," என்று லீ கூறுகிறார். லீக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, கால்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால் அவரால் நடக்க முடியும் என்று அவரது பெற்றோர் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மேலும் கடன் வாங்கி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அந்த அறுவை சிகிச்சை மீது லீ மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். "நான் வார்டில் குணமடைந்து வந்தபோது, மற்ற குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் நான் சிரித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் என்னால் விரைவில் ஒரு சாதாரண மனிதரைப் போல நடக்க முடியும் என்று நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார். ஆனால், அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது. லீயின் நடக்கும் நம்பிக்கை சிதைந்ததுடன், அவர் ஆழமான மன அழுத்தத்திற்கு ஆளானார். தன் வாழ்க்கை அர்த்தமற்றது என்பதைப் போல உணர்ந்த அவர், தன் தாயிடம் தான் இறந்துவிட விரும்புவதாகக் கூறினார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருதுவர் லீ சீனாவின் ஐந்து புனித மலைகள் மற்றும் ஹுவாங்ஷன் மலை, அத்துடன் சீனப் பெருஞ்சுவர் அனைத்திலும் ஏறியுள்ளார். ஆனால், அவருடைய தாயார் அவரிடம் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறினார். "நாங்கள் வயதான காலத்தில் பேசுவதற்கு ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக உன்னை வளர்க்கிறோம். ஒரு பூனையோ நாயோ பேச முடியாது, ஆனால் உன்னால் பேச முடியும்," என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் ஆழமாகப் பதிந்தன. "எனக்காக என் பெற்றோரும் குடும்பத்தினரும் எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்று நான் நினைத்தேன். கண்ணீர் விட்டு அழுதேன். நான் எனக்காக மட்டுமல்ல, அவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்று உணர்ந்தேன்," என்கிறார் லீ. அதன்பிறகு சிறிது காலத்திலேயே, வெளியூர் நபர் ஒருவர் கிராமத்திற்கு வந்து, கோவில்களில் ஊதுபத்தி விற்க மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தேடினார். அந்த நபர், லீ அந்த நேரத்தில் அவரது தந்தையின் மாதச் சம்பளத்திற்குச் சமமான தொகையை வீட்டிற்கு அனுப்புவார் என்று உறுதியளித்தார். "என் பெற்றோர் அதை உறுதியாக எதிர்த்தனர். ஆனால், பணம் சம்பாதிக்கவும், என் குடும்பத்தின் சுமையைக் குறைக்கவும் எனக்கு இது ஒரு வாய்ப்பாகத் தெரிந்தது," என்று லீ கூறுகிறார். அவர் அந்த நபருடன் செல்ல ஒப்புக்கொண்டார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே தெருவில் பிச்சை எடுக்க நேரிட்ட துயரம் ஆனால், வேலை குறித்த வாக்குறுதி ஒரு ஏமாற்றுவேலை என்று லீ விரைவில் அறிந்தார். அந்த வெளியூர் நபர் ஒரு பிச்சை எடுக்கும் கும்பலை நடத்தி வந்ததாக மருத்துவர் லீ கூறுகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, அவர் மற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனது புதிய "முதலாளியுடன்" கழித்த முதல் நாள் இரவில், மற்ற குழந்தைகளில் ஒருவர், கடினமாக உழைக்கவில்லை என்றால் அடிக்கப்படுவீர்கள் என்று லீயை எச்சரித்தார். இது உண்மையாகவும் ஆனது. அடுத்த நாள் காலையில், லீ சட்டை இல்லாமல், நாணயங்களுக்கான ஒரு கிண்ணத்துடன், அதிக அனுதாபத்தைத் தூண்டும் வகையில் அவரது கால்கள் முதுகுப்புறமாக முறுக்கப்பட்ட நிலையில் நடைபாதையில் விடப்பட்டார். மக்கள் தன் கிண்ணத்தில் பணம் போடுவது ஏன் என்று லீக்கு முதலில் புரியவில்லை. அப்போது, பாதசாரிகள் அவரிடம், பள்ளியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. "என் சொந்த ஊரில், பிச்சை எடுப்பது அவமானகரமானது. நான் அதையே செய்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்திருக்கவில்லை. உண்மை தெரிந்தபோது நொறுங்கிப் போனேன்," என்று லீ கூறுகிறார். லீ ஒரு நாளைக்குச் சில நூறு யுவான்களைச் சம்பாதிக்க முடிந்தது – இது 1990களில் ஒரு பெரிய தொகையாகும் – ஆனால் அது அனைத்தும் அவரது முதலாளியிடம் சென்றது. "நான் மற்ற குழந்தைகளை விடக் குறைவாகச் சம்பாதித்தால், அவர் நான் சோம்பேறித்தனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி, சில சமயங்களில் என்னைத் தாக்குவார். அதனால் அந்த ஆண்டுகள் மிகவும் வேதனையாக இருந்தன." என்று அவர் கூறுகிறார். அடுத்து வந்த ஆண்டுகளில் மற்ற குழந்தைகள் ஓடிவிட்டனர் அல்லது காவல்துறையால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தன் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற உறுதியுடன் லீ அங்கேயே தங்கினார். காவல்துறை உதவி வழங்கிய போது, அவர் மறுத்துவிட்டார். ஏழு ஆண்டுகளாக கோடை மற்றும் குளிர்காலத்தில், லீ நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்தார். "அது நரகத்தில் வாழ்வது போல் இருந்தது. நான் வெட்கப்பட்டேன், கண் தொடர்பைத் தவிர்த்தேன். பரிதாபத்தைத் தூண்டுவதற்காக என் காலை வலி நிறைந்த நிலையில் பின்புறமாக முறுக்கிக் கொள்வேன். பிச்சை எடுப்பதைத் தவிர்க்க மழை அல்லது இருளுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்," என்று அவர் பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் கூறினார். ஒவ்வொரு புத்தாண்டுக்கு முந்தைய தினம் அவர் வீட்டிற்கு அழைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் தன் பெற்றோரை ஆசுவாசப்படுத்துவார். "ஆனால், அழைப்புக்குப் பிறகு, நான் என் அறையில் அழுது கொண்டிருப்பேன். நான் தெருவில் பிச்சை எடுக்கிறேன் என்பதை அவர்களிடம் சொல்ல முடியவில்லை." என்று அவர் கூறுகிறார். இப்போதும், 20 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வேதனை நீங்கவில்லை எனக் கூறும் அவர், "பிச்சை எடுத்தது ஆழமான உளவியல் காயங்களை விட்டுச் சென்றது - நான் இன்னும் அதைப் பற்றி கொடிய கனவு காண்கிறேன். அது ஒரு கனவு மட்டுமே என்று அறிந்து நிம்மதியுடன் எழுந்திருக்கிறேன்." என்கிறார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மலையேறுவது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக மருத்துவர் லீ கூறுகிறார். கல்வி மூலம் ஒரு புதிய பாதை லீ தெருவில் ஒரு செய்தித்தாளைக் கண்டெடுத்து, அதில் தனது பெயரில் உள்ள எழுத்துகளை மட்டுமே வாசிக்க முடிந்ததை உணர்ந்தபோது எல்லாம் மாறியது. அப்போது 16 வயதான அவர், வீட்டிற்குத் திரும்பி இறுதியாகப் பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தார். "என்னால் படிக்கவோ எழுதவோ முடியாது, கல்வி மூலம் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும்," என்று அவர் நினைத்தார். அந்த நேரத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது குற்றமாக ஆக்கும் புதிய கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் லீ கேள்விப்பட்டார். அவர் தனது முதலாளியிடம் தான் தனது குடும்பத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார். தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்த போது, அவர் உண்மையில் எப்படி வாழ்ந்து வந்தார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவரைச் சுரண்டியவர் உறுதியளித்ததை விட மிகக் குறைவான பணத்தை அவர்களுக்கு அனுப்பியிருந்ததைக் கண்டு லீ கோபமடைந்தார். தனது பெற்றோரின் ஆதரவுடன், லீ ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் வகுப்பில் சேர்ந்தார். அங்குப் படிக்கும் மாணவர்கள் அவரை விட 10 வயது இளையவர்கள். அவர் முதல் நாள் பள்ளிக்குச் சென்றபோது, குழந்தைகள் அவரது மேசையைச் சுற்றி மொய்த்தனர் – ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. "நான் வருத்தப்படவில்லை - அதற்கு முன்பு நான் நிறைய ஏளனங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருந்தேன். இப்போது, ஒரு மாணவனாக, நான் கற்றலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார். லீ மிகவும் அர்ப்பணிப்புள்ள மாணவராக ஆனார், இருப்பினும் அவரது உடல்நிலை கழிப்பறைக்குச் செல்வது போன்ற வேலைகளைக் கூடச் சிரமமாக்கியது. "கழிப்பறைக்குச் செல்ல நிறைய முயற்சி தேவைப்படும். அதனால் நான் பெரும்பாலும் பள்ளியில் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்," என்று அவர் கூறுகிறார். தளர்வில்லாத உறுதியுடன், லீ ஒன்பது ஆண்டுகளில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். அவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளை விளையாட அழைத்து, பின்னர் வீட்டுப் பாடத்தில் உதவி கேட்பார். கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவரது உடல்நிலை அவருக்கு இருந்த வாய்ப்புகளை குறைத்தது. ஆனால், அவர் மருத்துவத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். "தான் ஒரு மருத்துவரானால், என் சொந்த நிலையைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம், என் குடும்பத்திற்கு உதவலாம், உயிர்களைக் காப்பாற்றலாம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கலாம்," என்று அவர் நினைத்தார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, கல்லூரிக்குச் செல்ல, லீ தனது மொபிலிட்டி ஸ்கூட்டரில் பல மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. 25 வயதில் லீ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குள்ள வசதிகள் அவருக்கு மிகவும் அணுகக்கூடியதாக இருந்தன. ஆனால், செய்முறை வகுப்புகள் மிகவும் கடினமானதாக இருந்ததை அவர் கண்டார். "சக மாணவர்கள் ஆசிரியரைப் பின்தொடர்ந்து நோயாளிகளைப் பார்க்கச் செல்ல அல்லது இன்டர்ன்ஷிப்பின் போது வார்டுகளுக்கு இடையில் ஓட முடிந்தாலும், எனது நடமாடும் பிரச்னைகள் அதைக் கடினமாக்கின. மற்றவர்கள் ஒரு நாளில் கற்றுக்கொண்டதை நான் கற்றுக்கொள்ள அதிக நேரம் ஆகும்." என் றார். லீ தான் பலமடைய வேண்டும் என்று உணர்ந்தார். மலை ஏறுதலைத் தொடங்க முடிவு செய்தார். தனது முதல் மலையேற்றத்தில், தைய் மலையின் உச்சியை அடைய அவருக்கு ஐந்து பகலும் இரவும் ஆனது. அவரது கைகளும் கால்களும் வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டபோதும், அவர் கைவிடவில்லை. ஒவ்வொரு கல் படியையும் தனது பிட்டத்தைப் பயன்படுத்தி நகர்ந்து ஏறினார். மருத்துவர் லீ தனது மலை ஏறும் காணொளிகளைப் பகிர்ந்தபோது, அது இந்த கோடையில் வைரலாக மாறியது. மலை ஏறுவது அவருக்கு இப்போதும் ஒரு விருப்பமான விஷயமாக உள்ளது. இப்போது மருத்துவர் லீ, ஜின்ஜியாங்கில் ஒரு சிறிய கிராமப்புற கிளினிக்கை நடத்தி வருகிறார். அவர் இரவு பகலாகப் பணி செய்ய தயாராக உள்ளார். அவரது நோயாளிகள் அவரைத் தங்களின் "அற்புத மருத்துவர்" என்று அழைக்கிறார்கள். "என் சொந்தக் கைகளால் நோயாளிகளைக் கவனிப்பது, என் அண்டை வீட்டாரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது – இது எனக்கு எல்லாவற்றையும் விட அதிக திருப்தியை அளிக்கிறது," என்று அவர் கூறுகிறார். உலகம் முழுவதும் சீன சமூகத்திடம் முழுவதும் அவரது கதை சென்றடைந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர், இது மக்களின் மனப்பான்மையை மாற்ற உதவும் என்று நம்புகிறார். "சிலர் மாற்றுத்திறனாளிகளைப் பயனற்றவர்களாகப் பார்க்கிறார்கள். உணவகங்களில் நான் அமர்ந்திருக்கும்போது பிச்சைக்காரன் என்று தவறாகப் புரிந்துகொண்டு, உணவு இல்லை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். நான் சிரித்துவிட்டு வெளியேறுவேன் - பெரும்பாலான மக்கள் கனிவானவர்கள்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, ஒரு கிராமப்புற கிளினிக்கை நடத்துவதை மருத்துவர் லீ விரும்புகிறார். நம்பிக்கை மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கை லீயைச் சுரண்டியவர் குறித்து ஏன் புகார் அளிக்கவில்லை என்று பலர் அவரிடம் கேட்டுள்ளனர். "நான் கடந்த காலத்தைக் கடந்த காலத்திலேயே விட்டுவிட முடிவு செய்தேன்," என்று அவர் கூறுகிறார். "அந்த ஏழு ஆண்டுகள் ஒரு வேதனையான அனுபவம், ஆனால் அவை என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன." லீயின் பயணம் அவரது கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது. "பள்ளிக்குச் செல்ல முடிந்த பிறகு, மற்றவர்களின் கருத்துகள் அல்லது மதிப்பீடுகள் பற்றி நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். அந்த விஷயங்கள் அர்த்தமற்றவை என்று நான் உணர்ந்தேன். எனது நேரத்தையும் ஆற்றலையும் படிப்பதிலும், என் வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதிலும் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார். பல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்கள் தங்களை மதிப்பிடுவார்கள் அல்லது கேலி செய்வார்கள் என்று பயப்படுவதால் "முன்னோக்கிச் செல்ல அஞ்சுகிறார்கள்" என்று அவர் கூறுகிறார். "ஆனால், என்னைப் பொறுத்தவரை, அது முக்கியமில்லை. நான் வளாகத்திலும் நகரங்களிலும் வகுப்புகளுக்காகவோ, பட்டறைகளுக்காகவோ, அல்லது எனது வேலை மூலம் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு உதவுவதற்காகவோ குந்திக் கொண்டும், தவழ்ந்தும் செல்கிறேன். அதைச் செய்யும்போது நான் நம்பிக்கையுடன் இருப்பதாக நினைக்கிறேன். நான் மற்றவர்களின் பார்வையைப் பற்றி இப்போது கவலைப்படுவதில்லை." என்கிறார். பொதுமக்களுக்கு அவர் இந்த அறிவுரையையும் கூறுகிறார்: "நம் வாழ்க்கை மலைகளைப் போன்றது - நாம் ஒன்றில் ஏறுகிறோம், அதற்கு முன்னால் இன்னொன்று உள்ளது. நாம் தொடர்ந்து பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்." "ஒருவர் எப்போதும் நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும், தங்கள் கனவுகளை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்." மருத்துவர் லீ சுவாங்யே பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் பேசினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crexdg0lnx0o

புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

3 weeks 4 days ago
கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது Published By: Vishnu 14 Oct, 2025 | 09:54 PM கொழும்பு: இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன மதிப்பு 8 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியது. அந்த நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்து, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் உயர்ந்தது. S&P SL20 குறியீட்டும் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து, இந்த ஆண்டின் மிக உயர்ந்த அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது. செவ்வாய்க்கிழமை 5.74 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொத்த புரவல் (Turnover) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227743

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

3 weeks 4 days ago

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

15 Oct 2025, 11:35 AM

Karur CM MK Stalin Assembly

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15) அளித்த விளக்கம்:

  • கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் கட்டுக்கோப்பாக நடைபெற்றது; சுமார் 17,000 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்

  • கரூர் விஜய் பிரசார கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் பகல் 12 மணிக்கே விஜய் வருவார் என தவெக பொதுச்செயலாளர் அறிவித்தார்.

  • கரூர் பிரசார கூட்டத்துக்கு விஜய் 7 மணிநேரம் தாமாக வந்தார்

  • கரூர் வேலுசாமிபுரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியும் போலீசார் அறிவுறுத்தலை மீறி 35 மீட்டர் தூரம் கூட்டத்துக்குள் விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது

  • கரூர் கூட்டத்துக்கு வருபவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் தவெகவினர் செய்யவில்லை; உணவு வழங்க ஏற்பாடு செய்யவில்லை; பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியே செல்லவும் முடியவில்லை.

  • விஜய் கூட்டத்துக்கு 10,000 பேர் வருவர் என தவெகவினர் தெரிவித்தனர்; ஆனால் அதிகம் பேர் கூடுவர் என்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கும் பாதுகாப்பை விட கூடுதலாகவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது; காவலர்கள், அதிகாரிகள் என மொத்தம் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் கூட்டத்துக்குள் செல்லவில்லை.

  • மீட்பு பணி நடைபெற்ற போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தவெகவினர் தாக்கினர்

  • கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து தவெகவினர் சேதப்படுத்தினர்; இதனால் ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்தார்.

  • கரூர் துயர சம்பவம் அறிந்த என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்று இரவே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்; அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன; அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினர்.

  • கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.

  • 200 காவல்துறையினர் மருத்துவமனைக்கு பாதுகாப்பும் வழங்கினர்.

  • அனைத்து உடல்களையும் வைக்க போதுமான குளிர்சாதன வசதி இல்லை என்பதால் இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்யப்பட்டது; இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்யும் பணி அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கியது.

  • நான் எனது 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன்; இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான்; மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் நெறிமுறைகளுக்கும் பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்படுகின்றன; இத்தகைய கட்டுப்பாடுகளை மீறும் போது பாதிக்கப்படுவது அந்த கட்சியின் தொண்டர்கள்தான்; இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

https://minnambalam.com/karur-vijay-stampede-tragedy-how-did-41-people-die-why-did-the-ambulance-arrive-cm-stalin-explains-in-the-assembly/#google_vignette

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

3 weeks 4 days ago
கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் 15 Oct 2025, 11:35 AM தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15) அளித்த விளக்கம்: கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் கட்டுக்கோப்பாக நடைபெற்றது; சுமார் 17,000 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர் கரூர் விஜய் பிரசார கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் பகல் 12 மணிக்கே விஜய் வருவார் என தவெக பொதுச்செயலாளர் அறிவித்தார். கரூர் பிரசார கூட்டத்துக்கு விஜய் 7 மணிநேரம் தாமாக வந்தார் கரூர் வேலுசாமிபுரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியும் போலீசார் அறிவுறுத்தலை மீறி 35 மீட்டர் தூரம் கூட்டத்துக்குள் விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது கரூர் கூட்டத்துக்கு வருபவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் தவெகவினர் செய்யவில்லை; உணவு வழங்க ஏற்பாடு செய்யவில்லை; பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியே செல்லவும் முடியவில்லை. விஜய் கூட்டத்துக்கு 10,000 பேர் வருவர் என தவெகவினர் தெரிவித்தனர்; ஆனால் அதிகம் பேர் கூடுவர் என்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கும் பாதுகாப்பை விட கூடுதலாகவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது; காவலர்கள், அதிகாரிகள் என மொத்தம் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் கூட்டத்துக்குள் செல்லவில்லை. மீட்பு பணி நடைபெற்ற போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தவெகவினர் தாக்கினர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து தவெகவினர் சேதப்படுத்தினர்; இதனால் ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்தார். கரூர் துயர சம்பவம் அறிந்த என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்று இரவே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்; அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன; அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. 200 காவல்துறையினர் மருத்துவமனைக்கு பாதுகாப்பும் வழங்கினர். அனைத்து உடல்களையும் வைக்க போதுமான குளிர்சாதன வசதி இல்லை என்பதால் இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்யப்பட்டது; இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்யும் பணி அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கியது. நான் எனது 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன்; இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான்; மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் நெறிமுறைகளுக்கும் பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்படுகின்றன; இத்தகைய கட்டுப்பாடுகளை மீறும் போது பாதிக்கப்படுவது அந்த கட்சியின் தொண்டர்கள்தான்; இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும். https://minnambalam.com/karur-vijay-stampede-tragedy-how-did-41-people-die-why-did-the-ambulance-arrive-cm-stalin-explains-in-the-assembly/#google_vignette

குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என அறிவிப்பு

3 weeks 4 days ago
குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என அறிவிப்பு October 15, 2025 கடந்த மே மாதம் தமது பூர்வீக விவசாய நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்ய முற்பட்ட தமிழ் விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் எனும் பெளத்த பிக்கு காவல்துறையில் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைந்திருந்தார் அதன் தொடர்ச்சியாக இன்று பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை அழித்துத் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது. ரணில் விக்ரமசிங்ஹ அதிகாரத்திலிருந்த போது இரவோடு இரவாக தண்ணிமுறிப்பு கிராமம் உட்பட அப்பகுதியிலுள்ள சுமார் 341 ஏக்கர் நிலத்தைத் தொல்லியல் நிலம் என எல்லைக்கற்களை நாட்டியிருந்தார்கள். இருப்பினும் ரணில் விக்கிரமசிங்ஹ தலையீடு செய்த காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை இம் முரண்பாடுகளின் விளைவாக அப்போதைய தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மானதுங்க தனது பதவியைக் கூட இராஜினாமா செய்திருந்தார் ஏன்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின் அமைதியாகவிருந்த கல்கமுவ சாந்தபோதி எனும் தேரரும் தொல்லியல் திணைக்களமும் அநுர அரசு அதிகாரத்திற்கு வந்த பின்னர் குருந்தூர்மலை மலை மற்றும் அதனைச் சூழவுள்ள அந்த 341 ஏக்கர் விவசாய நிலப்பரப்புக்கும் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைத்து முழுமையாக ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றார்கள். அதன் முதற்கட்டமாக இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட புறம்தள்ளி விவசாய நிலங்களை அழித்து அறிவித்தல் பலகைகளை இன்று தொல்லியல் திணைக்களம் வைத்திருக்கின்றது உள்ளூரில் அரிசி உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டிய மிக வளமான விவசாய நிலங்களை அழித்து ஆக்கிரமிக்கும் நிலையைத் தொடரவிட்டு சம நேரத்தில் மறுபுறம் மக்களின் தேவைக்கு அரிசியை இறக்குமதி செய்கின்றார்கள். 2028 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் 5.5 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் கடன்களை மீள செலுத்த வேண்டிய சீரழிந்த பொருளாதார சூழலுக்கு மத்தியில் இவ்வாறு இனவாதம் தொடர்ந்தால் என்ன செய்யப் போகிறது அநுர அரசு. ஆனால் பொதுப்பரப்பில் இனவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜேவிபி ஆட்கள் வெறும் வாயில் நிறுவ முயற்சிக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் இனவாதம் இவ்வாறு தலைதூக்குகிறது. https://www.ilakku.org/kurundurmalai-issue-tamil-farmers-lands-destroyed-and-declared-as-archaeological-site/

குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என அறிவிப்பு

3 weeks 4 days ago

குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என அறிவிப்பு

October 15, 2025

Unknown 8 குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து "தொல்லியல் தளம்" என அறிவிப்பு

கடந்த மே மாதம் தமது பூர்வீக விவசாய நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்ய முற்பட்ட தமிழ் விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் எனும் பெளத்த பிக்கு  காவல்துறையில் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைந்திருந்தார்

அதன் தொடர்ச்சியாக இன்று பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை அழித்துத் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது.

ரணில் விக்ரமசிங்ஹ அதிகாரத்திலிருந்த போது இரவோடு இரவாக தண்ணிமுறிப்பு கிராமம் உட்பட அப்பகுதியிலுள்ள சுமார் 341 ஏக்கர் நிலத்தைத் தொல்லியல் நிலம் என எல்லைக்கற்களை நாட்டியிருந்தார்கள்.

இருப்பினும் ரணில் விக்கிரமசிங்ஹ தலையீடு செய்த காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை

இம் முரண்பாடுகளின் விளைவாக அப்போதைய தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மானதுங்க தனது பதவியைக் கூட இராஜினாமா செய்திருந்தார் ஏன்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின் அமைதியாகவிருந்த கல்கமுவ சாந்தபோதி எனும் தேரரும் தொல்லியல் திணைக்களமும் அநுர அரசு அதிகாரத்திற்கு வந்த பின்னர் குருந்தூர்மலை மலை மற்றும் அதனைச் சூழவுள்ள அந்த 341 ஏக்கர் விவசாய நிலப்பரப்புக்கும் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைத்து முழுமையாக ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றார்கள்.

அதன் முதற்கட்டமாக இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட புறம்தள்ளி விவசாய நிலங்களை அழித்து அறிவித்தல் பலகைகளை இன்று தொல்லியல் திணைக்களம் வைத்திருக்கின்றது

உள்ளூரில் அரிசி உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டிய மிக வளமான விவசாய நிலங்களை அழித்து ஆக்கிரமிக்கும் நிலையைத் தொடரவிட்டு சம நேரத்தில் மறுபுறம் மக்களின் தேவைக்கு அரிசியை இறக்குமதி செய்கின்றார்கள்.

2028 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் 5.5 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் கடன்களை மீள செலுத்த வேண்டிய சீரழிந்த பொருளாதார சூழலுக்கு மத்தியில் இவ்வாறு இனவாதம் தொடர்ந்தால் என்ன செய்யப் போகிறது அநுர அரசு.

ஆனால் பொதுப்பரப்பில் இனவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜேவிபி ஆட்கள் வெறும் வாயில் நிறுவ முயற்சிக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் இனவாதம் இவ்வாறு தலைதூக்குகிறது.

https://www.ilakku.org/kurundurmalai-issue-tamil-farmers-lands-destroyed-and-declared-as-archaeological-site/

கோப்பாய் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு…

3 weeks 4 days ago
கோப்பாய் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு… October 15, 2025 யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இப் காவல்நிலையம், கடந்த 30 வருடங்களாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ள நிலையில் அக் காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் வந்த நிலையில் , அதற்கு பலன் கிட்டியிருக்கவில்லை. இந் நிலையில், 2019ஆம் ஆண்டு, இக் காணிகளுக்கு உரிமையான 9 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். இதன் பிரகாரம் வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார். எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை காவல்துறையினர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்காத நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று, அங்குள்ள காவல்துறையினரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார். அதேவேளை கோப்பாய் காவல் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/order-to-immediately-remove-kopai-police-station/

கோப்பாய் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு…

3 weeks 4 days ago

கோப்பாய் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு…

October 15, 2025

யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இப் காவல்நிலையம், கடந்த 30 வருடங்களாக  காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ள நிலையில் அக் காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் வந்த நிலையில் , அதற்கு பலன் கிட்டியிருக்கவில்லை.

இந் நிலையில், 2019ஆம் ஆண்டு, இக் காணிகளுக்கு உரிமையான 9 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். இதன் பிரகாரம் வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை  காவல்துறையினர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்காத நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய்  காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று, அங்குள்ள  காவல்துறையினரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.

அதேவேளை கோப்பாய் காவல் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/order-to-immediately-remove-kopai-police-station/

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 weeks 4 days ago
இஷாரா செவ்வந்தி எப்படி தப்பினார்: முழு விபரம் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று, இந்தியாவில் சுமார் மூன்று வாரங்கள் தங்கி, சாலை வழியாக நேபாளத்திற்குச் சென்று, தப்பிக்க கிட்டத்தட்ட ரூ.6.5 மில்லியன் செலவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) மற்றும் ஐ.ஜி.பி.யின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் சிறப்பு காவல் குழுவால் செவ்வந்தி, கண்டுபிடிக்கப்பட்டு நேபாளத்தில் காவலில் எடுக்கப்பட்டார். 2025 பிப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சஞ்சீவா குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்லா சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜே.கே. பாய் என்ற கூட்டாளியின் உதவியுடன் செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல சுமார் ரூ.6.5 மில்லியன் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தங்கி, நேபாளத்தை அடைய பல்வேறு வழிகள் வழியாக பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்தார். நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு பல மாடி வீட்டின் மேல் தளத்தில் மறைந்திருந்தபோது, திங்கட்கிழமை செவ்வந்தி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொரு பெண், கெஹல்பத்தர பத்மேவின் மூன்று நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு தமிழ் நபர் உட்பட நான்கு பேர் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் அடுத்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெஹல்பத்தர பத்மேவின் குற்றவியல் வலையமைப்பால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் கொலை தொடர்பாக செவ்வந்தி தேடப்பட்டு வந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்கா, துப்பாக்கிச் சூடு நடந்த அதே நாளில் புத்தளம், பலாவியாவில் சிறப்புப் பணிப் படையினரால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு ஒரு பெண் துப்பாக்கியை சட்டப் புத்தகத்திற்குள் மறைத்து வைத்து உதவியதாக சிசிடிவி காட்சிகள் பின்னர் வெளிப்படுத்தின, பின்னர் அவர் மினுவங்கொடயைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டார். எல்லைகளைத் தாண்டிச் செல்லவும், கைது செய்வதைத் தவிர்க்கவும் செவ்வந்தி மற்றொரு பெண்ணின் பெயரில் போலி கடவுச்சீட்டைத் தயாரித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதற்கிடையில், இலங்கை அதிகாரிகள் இன்டர்போல் மூலம் அவரை கைது செய்ய சிவப்பு அறிவிப்பை வெளியிட்டதாக ஏஎஸ்பி வூட்லர் கூறினார். வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 40 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 18 பேர் இந்த ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 2021 மற்றும் 2024 க்கு இடையில், அரசாங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான ரூ. 3.9 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது என்று அவர் கூறினார். இதற்கிடையில், "பஸ் லலித்" என்று பரவலாக அறியப்படும் லலித் கன்னங்கர, ஒரு குற்றவியல் கும்பலின் உறுப்பினராக, துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவலை, ஹோமாகம மற்றும் கடுவெல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையவர் அவர். ஆகஸ்ட் 12 ஆம் திகதி பாதுக்கவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த முன்னாள் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ மீது துப்பாக்கிச் சூடு நடத்த பஸ் லலித் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. https://www.tamilmirror.lk/செய்திகள்/இஷாரா-செவ்வந்தி-எப்படி-தப்பினார்-முழு-விபரம்/175-366312

யாழ். மத்திய பேருந்து நிலையக் கடைகள் மூலம் இ.போ.ச ரூ.9.45 இலட்சம் வருமானம்!

3 weeks 4 days ago
யாழ். மத்திய பேருந்து நிலையக் கடைகள் மூலம் இ.போ.ச ரூ.9.45 இலட்சம் வருமானம்! யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி நடைபெற்றது. அக் கலந்துரையிடலில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெற்றுக்கொள்கின்றனர் என இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட 63 கடைகளிலிருந்தும் நாளொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரின் அனுமதியுடன் அறவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாம் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வது தொடர்பில் எமது தொழிற்சங்களை அழைத்துக் கலந்துரையாடவேண்டும் என்றார். இதன் பின்னர் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர். புதிய பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வது தொடர்பில் முதலில் கள ஆய்வை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் , சி.சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர், வர்த்தக சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். https://newuthayan.com/article/யாழ்._மத்திய_பேருந்து_நிலையக்_கடைகள்_மூலம்_இ.போ.ச_ரூ.9.45_இலட்சம்_வருமானம்!

யாழ். மத்திய பேருந்து நிலையக் கடைகள் மூலம் இ.போ.ச ரூ.9.45 இலட்சம் வருமானம்!

3 weeks 4 days ago

யாழ். மத்திய பேருந்து நிலையக் கடைகள் மூலம் இ.போ.ச ரூ.9.45 இலட்சம் வருமானம்!

716019339.jpg

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி  நடைபெற்றது.


அக் கலந்துரையிடலில்  யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெற்றுக்கொள்கின்றனர் என இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட 63 கடைகளிலிருந்தும் நாளொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரின் அனுமதியுடன் அறவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாம் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வது தொடர்பில் எமது தொழிற்சங்களை அழைத்துக் கலந்துரையாடவேண்டும் என்றார். இதன் பின்னர் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர். புதிய பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வது தொடர்பில் முதலில் கள ஆய்வை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் , சி.சிறிதரன் மற்றும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர், வர்த்தக சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 

https://newuthayan.com/article/யாழ்._மத்திய_பேருந்து_நிலையக்_கடைகள்_மூலம்_இ.போ.ச_ரூ.9.45_இலட்சம்_வருமானம்!

பாதாள குழு முக்கியஸ்தர்களின் 3902 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமை!

3 weeks 4 days ago
பாதாள குழு முக்கியஸ்தர்களின் 3902 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமை! கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்ட ஏராளமான சொத்துக்களைக் கைப்பற்ற தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2021 மற்றும் 2024 க்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களின் நிதி மதிப்பு 3902 கோடி ரூபா என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், அந்த சொத்துக்களைக் கைப்பற்ற இலங்கை பொலிஸார் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார். முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளின் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களின் நிதி மதிப்பு குறித்த மதிப்பீட்டை முன்வைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் 354 பவுண் தங்கம், 72 வாகனங்கள், 35 வீடுகள்/சொத்துக்கள், 37 ஏக்கர் நிலம் மற்றும் சுமார் அறுபத்தேழு மில்லியன் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை அடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கத்தின் வசம் கொண்டு வருவதற்கு பொலிஸார் தற்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/பாதாள-குழு-முக்கியஸ்தர்க/

பாதாள குழு முக்கியஸ்தர்களின் 3902 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமை!

3 weeks 4 days ago

பாதாள குழு முக்கியஸ்தர்களின் 3902 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமை!

கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்ட ஏராளமான சொத்துக்களைக் கைப்பற்ற தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 மற்றும் 2024 க்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களின் நிதி மதிப்பு 3902 கோடி ரூபா என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்த சொத்துக்களைக் கைப்பற்ற இலங்கை பொலிஸார் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளின் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களின் நிதி மதிப்பு குறித்த மதிப்பீட்டை முன்வைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் 354 பவுண் தங்கம், 72 வாகனங்கள், 35 வீடுகள்/சொத்துக்கள், 37 ஏக்கர் நிலம் மற்றும் சுமார் அறுபத்தேழு மில்லியன் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை அடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கத்தின் வசம் கொண்டு வருவதற்கு பொலிஸார் தற்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/பாதாள-குழு-முக்கியஸ்தர்க/

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம்!

3 weeks 4 days ago
வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம்! adminOctober 15, 2025 வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.10.25) சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய தண்டபாணிக தேசிகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது , வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக எம். கே சிவாஜிலிங்கத்தின் பெயர் காணப்பட்டது தேர்தல் முடிவுகளின் படி, பட்டியல் உறுப்பினராக பெண் உறுப்பினர்களையே தெரிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தமையால் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக சிவாஜிலிங்கம் உறுப்பினராக முடியவில்லை. இந்நிலையில் , வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ததன் ஊடாக அவரது வெற்றிடத்திற்கு , புதிய உறுப்பினராக சிவாஜிலிங்கம் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221521/