Aggregator

குருந்தூர் மலையை மகாவம்சந்துடன் தொடர்புபடுத்தி காட்சிப்படுத்தப்பட்ட போலி வரலாற்றுப் புனைவு; தொல்லியல் திணைக்களத்தை வன்மையாகக் கண்டிக்கும் - ரவிகரன் எம்.பி

3 weeks 4 days ago
Published By: Vishnu 15 Oct, 2025 | 09:08 PM தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை பௌத்தவரலாற்றுடனும், பௌத்தவரலாற்றுநூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் குருந்தூர்மலைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பில் அறிந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குருந்தூர்மலைப்பகுதிக்கு 15.10.2025இன்று நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தூர்மலையில் சில விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் கிடைக்கப்பெற்றது அதற்கமையவே இப்பகுதிக்கு வருகைதந்தேன். ஏற்கனவேயும் தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை பௌத்த இடமென விவரிக்கும் வகையில் காட்சிப்பலகைகள் குருந்தூர்மலை அடிவாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 14.10.2025அன்று புதிதாக "குருண்டி தொல்லியல் தளம்" எனத் தலைப்பிடப்பட்டு போலியான பௌத்த வரலாறுகள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் தொல்லியல் திணைக்களத்தினால் குருந்தூரமலையின் அடிவாரம், குருந்தூர்மலையின் மேற்பகுதி மற்றும் குருந்தூர்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமாக மொத்தம் நான்கு இடங்களிவ் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறான போலியான வரலாற்று புனைவுகளை இங்கு நிறுவுவதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். குறிப்பாக எமது தமிழ் மக்கள் இந்தக் குருந்தூர்மலையை அண்டியுள்ள தண்ணிமுறிப்பு பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்துவந்ததுடன், இந்த குருந்தூர்மலையில் அமைந்திருந்த ஆதிசிவன் ஐயானாரை வழிபட்டுவந்துள்ளனர். இதுவே தண்ணிமுறிப்பினதும் குருந்தூர் மலையினதும் வரலாறாக இருக்கின்றது. இந்நிலையில் இந்த தண்ணிமுறிப்புப் பகுதியில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த எமது தமிழ் மக்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இத்தகையசூழலில் தமிழர்களுடைய பூர்வீக வாழிடமான தண்ணிமுறிப்பையும், குருந்தூர்மலையையும் மகாவம்சத்துடனும், பௌத்த வரலாறுகளுடனும் தொடர்புபடுத்தி தொல்லியல் திணைக்களத்தினால் போலியானதொரு வரலாறு புனையப்பட்டு காட்சிப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக போலியான வரலாறுகளைப் புனைந்து காட்சிப்பலகைகளை காட்சிப்படுத்துவது தொல்லியல் திணைக்களத்தினுடைய பணியில்லை. தொல்லியல் திணைக்களமென்றால் இந்தநாட்டில் சிங்களமக்கள், தமிழ்மக்களென்ற வேறுபாடின்றி வரலாறுகளை ஆராய்ந்து உண்மையான வரலாறுகளை பதிவுசெய்யவேண்டும். ஆனால் இலங்கையிலுள்ள தொல்லியல் திணைக்களம் பௌத்தர்களுக்கு சார்பாக போலியான வரலாற்றுபுனைகதைகளை உருவாக்குவது மற்றும் காட்சிப்படுத்துகின்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கின்றனர். இவ்வாறாக எம்மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய சகல இடங்களும் எமது தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்களாகும். தற்போதும் தொல்லியல் திணைக்களத்தால் அடாவடியாக ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களிலெல்லாம் தமிழ் மக்களே பயிர்ச்செய்கை மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக குருந்தூர்மலையைச்சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 300ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளன. இவ்வாறு தொல்லியல் திணைக்களம் பாரிய அளவில் எமது தமிழ் மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்காணிகளையும் அபகரித்து வைத்திருப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. எனவே அந்தக் காணிகளும் விடுவித்து எமது தமிழ் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். எமது தமிழ் மக்கள் தண்ணிமுறிப்பில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்றே நாம் தொடர்சியாக கோரிவருகின்றோம். எமது பூர்வீக தாயகத்தில் நாம் எமது வரலாறு, பண்பாடு, கலாச்சாரம்,வாழ்வியல் வழிபாட்டு அம்சங்களுடன் நிறைவாக வாழ்வதையே விரும்புகின்றோம். ஆனால் எமது கட்டமைப்புக்களைச் சீர்குலைக்கின்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொல்லியல் திணைக்களம் தொடர்ச்சியாகச் செயற்பட்டுவருகின்றது. தொல்லியல் திணைக்களம் போலியாக வரலாறுகளைப் புனைந்துள்ள மகாவம்சக் காலத்திற்கு முன்பிருந்தே எமது தமிழர்கள் ஆண்ட இடங்களாக இந்த இடங்கள் காணப்படுகின்றன. இந்த நாடு பெரும்பான்மை பௌத்தர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றதென்பதற்காக, பெரும்பான்மை பௌத்தர்களுக்கு ஏற்றவர்களுக்கு போலியான வரலாறுகளைப் புனைந்து தமிழர்களின் பூர்வீக வரலாற்றிடங்களைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்புச் செய்வதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் இந்த குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைகளையும் மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு பொறுப்பாகவுள்ள தேரரரும் இவ்வாறான அபகரிப்பு மற்றும் பௌத்த வரலாற்று புனைவுச் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவுடன் செயற்படுவதாக அறிகின்றோம். இவ்வாறாக பௌத்த துறவியாக இருப்பதற்கு அடிப்படைத் தகுதியே இல்லாத ஒருவரையே இங்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. அவருடைய அத்துமீறல்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இத்தகைய வரலாற்றுப் புனைவுகளூடாக மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிவ் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், இத்தகைய செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் எம்மாலான சகலநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார். https://www.virakesari.lk/article/227838

குருந்தூர் மலையை மகாவம்சந்துடன் தொடர்புபடுத்தி காட்சிப்படுத்தப்பட்ட போலி வரலாற்றுப் புனைவு; தொல்லியல் திணைக்களத்தை வன்மையாகக் கண்டிக்கும் - ரவிகரன் எம்.பி

3 weeks 4 days ago

Published By: Vishnu

15 Oct, 2025 | 09:08 PM

image

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை பௌத்தவரலாற்றுடனும், பௌத்தவரலாற்றுநூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் குருந்தூர்மலைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுதொடர்பில் அறிந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குருந்தூர்மலைப்பகுதிக்கு 15.10.2025இன்று நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலையில் சில விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் கிடைக்கப்பெற்றது அதற்கமையவே இப்பகுதிக்கு வருகைதந்தேன்.

ஏற்கனவேயும் தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை பௌத்த இடமென விவரிக்கும் வகையில் காட்சிப்பலகைகள் குருந்தூர்மலை அடிவாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் 14.10.2025அன்று புதிதாக "குருண்டி தொல்லியல் தளம்" எனத் தலைப்பிடப்பட்டு போலியான பௌத்த வரலாறுகள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் தொல்லியல் திணைக்களத்தினால் குருந்தூரமலையின் அடிவாரம், குருந்தூர்மலையின் மேற்பகுதி மற்றும் குருந்தூர்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமாக மொத்தம் நான்கு இடங்களிவ் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறான போலியான வரலாற்று புனைவுகளை இங்கு நிறுவுவதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

குறிப்பாக எமது தமிழ் மக்கள் இந்தக் குருந்தூர்மலையை அண்டியுள்ள  தண்ணிமுறிப்பு பகுதியில்  பூர்வீகமாக வாழ்ந்துவந்ததுடன், இந்த குருந்தூர்மலையில் அமைந்திருந்த ஆதிசிவன் ஐயானாரை வழிபட்டுவந்துள்ளனர். இதுவே தண்ணிமுறிப்பினதும் குருந்தூர் மலையினதும் வரலாறாக இருக்கின்றது. இந்நிலையில் இந்த தண்ணிமுறிப்புப் பகுதியில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த எமது தமிழ் மக்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

இத்தகையசூழலில் தமிழர்களுடைய பூர்வீக வாழிடமான தண்ணிமுறிப்பையும், குருந்தூர்மலையையும் மகாவம்சத்துடனும், பௌத்த வரலாறுகளுடனும் தொடர்புபடுத்தி தொல்லியல் திணைக்களத்தினால் போலியானதொரு வரலாறு புனையப்பட்டு காட்சிப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறாக போலியான வரலாறுகளைப் புனைந்து காட்சிப்பலகைகளை காட்சிப்படுத்துவது தொல்லியல் திணைக்களத்தினுடைய பணியில்லை. தொல்லியல் திணைக்களமென்றால் இந்தநாட்டில் சிங்களமக்கள், தமிழ்மக்களென்ற வேறுபாடின்றி வரலாறுகளை ஆராய்ந்து உண்மையான வரலாறுகளை பதிவுசெய்யவேண்டும்.

ஆனால் இலங்கையிலுள்ள தொல்லியல் திணைக்களம் பௌத்தர்களுக்கு சார்பாக போலியான வரலாற்றுபுனைகதைகளை உருவாக்குவது மற்றும் காட்சிப்படுத்துகின்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கின்றனர். இவ்வாறாக எம்மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய சகல இடங்களும் எமது தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்களாகும்.

தற்போதும் தொல்லியல் திணைக்களத்தால் அடாவடியாக ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களிலெல்லாம் தமிழ் மக்களே பயிர்ச்செய்கை மேற்கொண்டுவருகின்றனர்.

குறிப்பாக குருந்தூர்மலையைச்சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 300ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளன. இவ்வாறு தொல்லியல் திணைக்களம் பாரிய அளவில் எமது தமிழ் மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்காணிகளையும் அபகரித்து வைத்திருப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. எனவே அந்தக் காணிகளும் விடுவித்து எமது தமிழ் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். எமது தமிழ் மக்கள் தண்ணிமுறிப்பில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்றே நாம் தொடர்சியாக கோரிவருகின்றோம்.

எமது பூர்வீக தாயகத்தில் நாம் எமது வரலாறு, பண்பாடு, கலாச்சாரம்,வாழ்வியல் வழிபாட்டு அம்சங்களுடன் நிறைவாக வாழ்வதையே விரும்புகின்றோம்.  ஆனால் எமது கட்டமைப்புக்களைச் சீர்குலைக்கின்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொல்லியல் திணைக்களம் தொடர்ச்சியாகச் செயற்பட்டுவருகின்றது.

தொல்லியல் திணைக்களம் போலியாக வரலாறுகளைப் புனைந்துள்ள மகாவம்சக் காலத்திற்கு முன்பிருந்தே எமது தமிழர்கள் ஆண்ட இடங்களாக இந்த இடங்கள் காணப்படுகின்றன.

இந்த நாடு பெரும்பான்மை பௌத்தர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றதென்பதற்காக, பெரும்பான்மை பௌத்தர்களுக்கு ஏற்றவர்களுக்கு போலியான வரலாறுகளைப் புனைந்து தமிழர்களின் பூர்வீக வரலாற்றிடங்களைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்புச் செய்வதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மேலும் இந்த குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைகளையும் மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு பொறுப்பாகவுள்ள தேரரரும் இவ்வாறான அபகரிப்பு மற்றும் பௌத்த வரலாற்று புனைவுச்  செயற்பாடுகளுக்கு முழு ஆதரவுடன் செயற்படுவதாக அறிகின்றோம். இவ்வாறாக பௌத்த துறவியாக இருப்பதற்கு அடிப்படைத் தகுதியே இல்லாத ஒருவரையே இங்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. அவருடைய அத்துமீறல்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் இத்தகைய வரலாற்றுப் புனைவுகளூடாக மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிவ் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், இத்தகைய செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் எம்மாலான சகலநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/227838

எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்

3 weeks 4 days ago
மிரண்டு ஓடிய வளர்ப்பு யானை கட்டுப்பாடிழந்து வானில் சுழன்று மரத்தில் மோதிய ஹெலிகொப்டர் https://youtube.com/shorts/-rwV6Hvsvyk?si=XXMy87cLZVLoRoxE

சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி

3 weeks 4 days ago
Adolescence என்று ஒரு தொடர் Netflix ல இருக்கிறது. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர். நன்றாக எடுக்கப்பட்ட தொடர். பல விருதுகளையும் வென்றிருக்கிறது. இந்தக் கதையும் அதே சம்பவத்தைத்தான் கதைக்கிறது. எம்சமூகத்தைச் சேர்த்து இந்தக் கதை பேசுவது சிறப்பு.

இன்னா செய்தாரை ஒறுத்தல்!

3 weeks 4 days ago
இன்னா செய்தாரை ஒருத்தல்! ‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என அனுபவப்பட்டவர்கள் எழுதியதைப்படித்துள்ள வருணுக்கு நிஜமாகவே அது தனக்கு நடந்த போது மனதால் துவண்டு போய் விட்டான். “நானும் நினைவு தெரிஞ்சதுல இருந்து யாருக்கும் மனசறிஞ்சு துரோகம் பண்ணினதில்லை. யாரையும் பார்த்து பொறாமைப்பட்டதில்லை. நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் நெறைய உதவி செஞ்சிருக்கேன். ஆனா எனக்கு போய் இப்படிப்பண்ணிட்டாங்களே….? அவங்க தலைல மண்ணை வாரி போட்டவங்க, என்னோட தலைல கல்லைப்போட்டிட்டாங்க….” சொன்னவன் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஆதி காலத்துல இருந்தே உலகம் இப்படித்தாங்க இருக்கு. நம்ம தாத்தா, பாட்டிக்கும் நம்பிக்கை துரோகம் நடந்திருக்கிறதா கேள்வி பட்டிருக்கறோம். படிச்ச நீங்க இப்படி கவலைப்பட்டா எப்படி?” மனைவி ரம்யா ஆறுதல் சொல்லி அணைத்த போதிலும் மனம் ஏற்காமல் தவித்தான். ‘சிறப்பாக வேலை செய்து பதவி உயர்வு பெற்று தனது முதல் புராஜெக்ட் இப்படி சொதப்பி விட்டதே…. நாளை விடியாமலேயே இருந்து விட்டால் நிம்மதி. தலைமை செயல் அதிகாரி என்ன முடிவு எடுக்கப்போகிறாரோ….?’ கவலையால் உறக்கம் பிடிபடாமல் தவித்தான் வருண். வருண் படிப்பில் கெட்டிக்காரன். எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை முதல் மாணவன் தான். படிப்பிற்காக எதையும் தியாகம் செய்வான். எதற்காகவும் படிப்பை தியாகம் செய்ய மாட்டான். “என்னடா மச்சா ஒரு படத்துக்கு வர மாட்டேங்கிறே….? காலேஜ்ல ஒரே க்ளாஸ்ல படிக்கிற சேது அவனோட அக்கா கல்யாணத்துக்கு கூப்பிட்டு ஒட்டு மொத்தமா எல்லாருமே நாங்க போயிட்டு வந்தோம். நீ மட்டும் தான் மிஸ்ஸிங்… இப்படி படிச்சு, வேலைக்கு பேயி சம்பாதிச்சு என்னடா பண்ணப்போறே….? ரதி மாதிரி இருக்கிற ராதா உன்னையே சுத்தி, சுத்தி வாரா…. நீ கண்டுக்காம போறே… போடா நீயெல்லாம்…. ஒரு….” “முழுசா சொல்லிட வேண்டியது தானே….? ஏண்டா பாதிய முழுங்கறே….? த பாரு ஒன்னா படிக்கிறவங்கெல்லாம் ஒன்னில்லை…. அத மொதல்ல தெரிஞ்சுக்கோ…. அப்பா, அம்மா தங்களோட ஆசைகளை துறந்து கஷ்டப்பட்டு நம்ம எதுக்கு படிக்க வைக்கிறாங்க…? இப்படி பாஸ் மட்டும் பண்ணிணாப்போதும்னு ஊரச்சுத்தறதுக்கா….? சொந்தக்காரங்க கல்யாணத்துக்கே போக முடியல. இதுல கூட படிக்கிறவனோட அக்கா, அக்காவோட பிரண்ட்ஸ் னு போனா…. போயிட்டே இருக்கலாம். நெறையப்பேர் எழவுக்கும், கல்யாணத்துக்கும் போயே பல பேர் வாழ்க்கைய வீணாக்கிட்டிருக்காங்க. பொன்னான காலத்த வீணாக்கலாமா….? ஏதாவது புதுசா யோசிக்கலாமே….?” வருணின் மனநிலை, அறிவுரை புரியாத நண்பன் நரேன் அங்கிருந்து வெளியேறினான். வருண் தனது முயற்ச்சியால், திறமையால் ஒரு ஐடி கம்பெனியில் சேர்ந்து குறுகிய காலத்தில் பல படி உயர்ந்து நின்றான். கல்லூரியில் ஊரைச்சுற்றும் உடன் படிப்போர் இருந்தது போலவே வேலை செய்யும் இடத்திலேயும் நிறைய பேரைப்பார்த்தான். “என்ன வருண் பெரிய உத்தம புத்திரன்னு நினைப்பா….? பார்டின்னு கூப்பிட்டா வரனம். பொண்ணுகளோட கடலை போடனம். எதுவும் பேசாம உம்மனா மூஞ்சி மாதிரி இருந்தீன்னா ஒரு நாளைக்கு உன்னை விட்டு டீம் மொத்தமா விலகிடும். டீம் லீடர்னா சொன்ன வேலைய செய்யறவங்களை வாரம் ஒரு தடவ பார்ட்டிக்கும், மாசம் ஒரு தடவை டூர் டிரிப்பும் கூட்டிட்டு போகனம். செலவு உன்னோட சம்பளத்துல இருந்து கொடுக்க வேண்டியதில்லை. கம்பெனி பாத்துக்கும்….” மது போதையில் தள்ளாடியபடி உடன் வேலை செய்யும் ரஞ்சன் பேசிய போது பிரசர் கூடியது. விடுமுறையின்றி கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்ததால் அசோசியேட் பிரின்சிபலாக பதவி உயர்வு பெற்றது பலருக்கும் புருவத்தை உயர்த்தச்செய்தது. வருடத்துக்கு ஐம்பது லட்சங்களுக்கு மேல் சம்பளம். பலரது பொறாமை கண்கள் வருண் மேல் ஈட்டி போல் பாய்ந்தது. வருணுக்கு முன் வேலையில் சேர்ந்தவர்கள் அந்த இடத்தைப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் தலைமை எடுத்த முடிவால் மகாலட்சுமி இரண்டு கண்களையும் ஒரு சேர திறந்து வருணை பார்த்து விட்டதால் ஏற்பட்ட அதிர்ஷ்டம் என பேசிக்கொண்டனர். உயர்பதவிக்கு வந்தாலும் வருணுக்கு கீழ் வேலை செய்தவர்கள் ஒத்துழைக்காததோடு வருணை கம்பெனியை விட்டே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடச்செய்ய வேண்டும் என அடுத்தது பதவிக்காக காத்திருந்த ரஞ்ஜன் தனது சொந்த சம்பளத்தையே வார இறுதி நாளில் பார்ட்டிகளில் வாரி இறைத்ததின் பலனாக வருணை நம்பி எடுத்திருந்த புராஜெக்ட் சரியான நேரத்தில் வெளிநாட்டுக்கம்பெனிக்கு ஒப்பந்தப்படி கொடுக்க முடியாமல் போனது. காலையில் எழுந்ததும் கோவிலுக்கு சென்று விட்டு பதட்டத்துடன் அலுவலகம் சென்றான். தலைமைச்செயல் அதிகாரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீரையே பதிலாக வெளிப்படுத்தினான். “உங்களுக்கு இந்தக்கம்பெனில் இனி வேலை இல்லை” அதிர்ந்தவன் ” ஸார்….” என்றான். “ஜெர்மன்ல இருக்கிற கம்பெனிக்கு உங்களை அனுப்ப முடிவு பண்ணிட்டேன். அதோட உங்களோட இடத்துக்கு அடுத்து சீனியாரிட்டி பிரகாரம் வர வேண்டியவர் ரஞ்சன் தான். ஆனா ரகுவை போட்டிருக்கேன். ரஞ்சனோட மொத்த டீமையும் வேலைல இருந்து தூக்கிட்டேன். “ஸார்….” “என்ன வருண். உங்கள தூக்கிட்டதா சொன்னதுக்கு அதிர்ச்சியடைஞ்ச நீங்க உங்களுக்கு எதிரா செயல்பட்ட ரஞ்சன் டீமை தூக்கினதுக்கு அதிர்ச்சியடையறீங்க…?” “எனக்கு வேலை போனா நான் மட்டும் தான் பாதிக்கப்படுவேன். ரஞ்சனோட நண்பர்களை தூக்கினா பல குடும்பம் வீதிக்கு வந்திடுமே..‌.?” “வரட்டும். ஏன் வருது? தப்பு பண்ணியிருக்காங்க. அவங்க பொறாமைப்பட்ட உங்களை வீட்டுக்கு அனுப்ப நெனைச்சு சம்பளம் கொடுக்கிற கம்பெனிக்கு கெட்ட பேரு, நஷ்டம், கால விரையத்தக்கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு இந்த தண்டனை தான் சரி…” உறுதியாகவும், இறுதியாகவும் சொன்ன தலைமை செயல் அதிகாரியிடம் எதுவும் பேச இயலாமல் வெளிநாடு செல்ல வேண்டியதற்கான வேலைகளை துவங்கினான். மறுநாள் வருண் வீட்டில் ரஞ்சன் உள்பட அவனது டீம் இருபது பேர் வந்திருந்தனர். காலையில் குளித்து விட்டு வருவதற்குள் அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருந்தாள் மனைவி ரம்யா. “ஸாரி வருண். எங்க நிலைமை இப்படியாகும்னு தெரியலை. உன்னை தூக்க நெனைச்ச நாங்க கம்பெனியால தூக்கப்பட்டிருக்கோம். உன்ன மாதிரி சம்பளத்துல சேமிப்பெல்லாம் கிடையாது. இந்த மாசம் வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ், சாப்பாட்டு செலவு மத்த செலவுன்னு எதுக்குமே வழி இல்லை. இதுல நெறைய பேருக்கு பேரண்ஸோட ஆஸ்பத்திரி, மாத்திரை மருந்து செலவு வேற… எங்களை மொத்தமா மன்னிச்சிடு…” என காலில் விழ, உருகிப்போனான் வருண். “சேரி நானும் எனக்கு கெடைச்சிருக்கிற வெளிநாட்டு வேலைய ரிசைன் பண்ணிடறேன். நாம எல்லாரும் சொந்த ஊருக்கு போயி விவசாயம் பார்க்கலாம். ஓகேவா.‌.?” காதில் கேட்டவர்கள் யாருக்கும் வாயில் பேச்சு வரவில்லை. “இப்படி கம்பெனி வேலைய நம்பி இருக்கிற நீங்க கம்பெனிக்கு நஷ்டம் வர்ற மாதிரி செய்யலாமா? செய்திருக்க கூடாது தானே…? நீங்க எனக்கு எதிரா நடந்திட்டதை கம்பெனி கண்டு பிடிச்சிருக்கு. அதனால எனக்கு வெளி நாட்ல வேலை கெடைச்சிருக்கு. கம்பெனிக்கு உங்களோட கேர்லஸால நஷ்டம் வரக்கிடையாது. திட்டமிட்ட சதியால ஏற்பட்ட நஷ்டத்த ஈடு கட்ட தினமும் ரெண்டு மணி நேரம் ஆறு மாசத்துக்கு கம்பெனிக்கு வேலை பார்க்கனம். ஓகே வா…?” அனைவரும் கோரஸாக ‘ஓகே ஸார்” என கூற, தனது தலைமைச்செயலதிகாரியிடம் பேசி, இங்கே நடந்ததைச்சொல்லி, இழந்த வேலையை அனைவருக்கும் மீட்டுக்கொடுத்ததோடு, தானும் உள் நாட்டிலேயை அலுவலகம் மாறாமல் வேலை செய்து கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஆறு மாதங்களில் மீட்டுக்கொடுத்த வருணுக்கு கம்பெனியின் தலைமைச்செயல் அதிகாரி பதவி கிடைத்தது. ‘சாதாரணமாக நல்லவர்களாக இருக்கிறவர்களை விட தான் செய்த தவறை உணர்ந்து திருந்தியவர்கள் மிகவும் மேலானவர்கள்’ என தனது டைரியில் எழுதி வைத்து விட்டு, பிறரால் தனக்கு கெடுதல் வந்தாலும் தன்னால் பிறருக்கு கெடுதல் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வருண், இன்று தனது மேன்மையான குணத்தால் பல குடும்பம் கெட்டுப்போகாமல் பாது காத்த திருப்தியில் தனது பணியில் மேலும் கூடுதல் கவனம் செலுத்தத்துவங்கினான். https://www.sirukathaigal.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/

இன்னா செய்தாரை ஒறுத்தல்!

3 weeks 4 days ago

இன்னா செய்தாரை ஒருத்தல்!

%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0

‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என அனுபவப்பட்டவர்கள் எழுதியதைப்படித்துள்ள வருணுக்கு நிஜமாகவே அது தனக்கு நடந்த போது மனதால் துவண்டு போய் விட்டான்.

“நானும் நினைவு தெரிஞ்சதுல இருந்து யாருக்கும் மனசறிஞ்சு துரோகம் பண்ணினதில்லை. யாரையும் பார்த்து பொறாமைப்பட்டதில்லை. நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் நெறைய உதவி செஞ்சிருக்கேன். ஆனா எனக்கு போய் இப்படிப்பண்ணிட்டாங்களே….? அவங்க தலைல மண்ணை வாரி போட்டவங்க, என்னோட தலைல கல்லைப்போட்டிட்டாங்க….” சொன்னவன் கண்களில் கண்ணீர் பெருகியது.

“ஆதி காலத்துல இருந்தே உலகம் இப்படித்தாங்க இருக்கு. நம்ம தாத்தா, பாட்டிக்கும் நம்பிக்கை துரோகம் நடந்திருக்கிறதா கேள்வி பட்டிருக்கறோம். படிச்ச நீங்க இப்படி கவலைப்பட்டா எப்படி?” மனைவி ரம்யா ஆறுதல் சொல்லி அணைத்த போதிலும் மனம் ஏற்காமல் தவித்தான்.

‘சிறப்பாக வேலை செய்து பதவி உயர்வு பெற்று தனது முதல் புராஜெக்ட் இப்படி சொதப்பி விட்டதே…. நாளை விடியாமலேயே இருந்து விட்டால் நிம்மதி. தலைமை செயல் அதிகாரி என்ன முடிவு எடுக்கப்போகிறாரோ….?’ கவலையால் உறக்கம் பிடிபடாமல் தவித்தான் வருண்.

வருண் படிப்பில் கெட்டிக்காரன். எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை முதல் மாணவன் தான். படிப்பிற்காக எதையும் தியாகம் செய்வான். எதற்காகவும் படிப்பை தியாகம் செய்ய மாட்டான்.

“என்னடா மச்சா ஒரு படத்துக்கு வர மாட்டேங்கிறே….? காலேஜ்ல ஒரே க்ளாஸ்ல படிக்கிற சேது அவனோட அக்கா கல்யாணத்துக்கு கூப்பிட்டு ஒட்டு மொத்தமா எல்லாருமே நாங்க போயிட்டு வந்தோம். நீ மட்டும் தான் மிஸ்ஸிங்… இப்படி படிச்சு, வேலைக்கு பேயி சம்பாதிச்சு என்னடா பண்ணப்போறே….? ரதி மாதிரி இருக்கிற ராதா உன்னையே சுத்தி, சுத்தி வாரா…. நீ கண்டுக்காம போறே… போடா நீயெல்லாம்…. ஒரு….” 

“முழுசா சொல்லிட வேண்டியது தானே….? ஏண்டா பாதிய முழுங்கறே….? த பாரு ஒன்னா படிக்கிறவங்கெல்லாம் ஒன்னில்லை…. அத மொதல்ல தெரிஞ்சுக்கோ…. அப்பா, அம்மா தங்களோட ஆசைகளை துறந்து கஷ்டப்பட்டு நம்ம எதுக்கு படிக்க வைக்கிறாங்க…? இப்படி பாஸ் மட்டும் பண்ணிணாப்போதும்னு ஊரச்சுத்தறதுக்கா….? சொந்தக்காரங்க கல்யாணத்துக்கே போக முடியல. இதுல கூட படிக்கிறவனோட அக்கா, அக்காவோட பிரண்ட்ஸ் னு போனா…. போயிட்டே இருக்கலாம். நெறையப்பேர் எழவுக்கும், கல்யாணத்துக்கும் போயே பல பேர் வாழ்க்கைய வீணாக்கிட்டிருக்காங்க. பொன்னான காலத்த வீணாக்கலாமா….? ஏதாவது புதுசா யோசிக்கலாமே….?” வருணின் மனநிலை, அறிவுரை புரியாத நண்பன் நரேன் அங்கிருந்து வெளியேறினான்.

வருண் தனது முயற்ச்சியால், திறமையால் ஒரு ஐடி கம்பெனியில் சேர்ந்து குறுகிய காலத்தில் பல படி உயர்ந்து நின்றான். கல்லூரியில் ஊரைச்சுற்றும் உடன் படிப்போர் இருந்தது போலவே வேலை செய்யும் இடத்திலேயும் நிறைய பேரைப்பார்த்தான்.

“என்ன வருண் பெரிய உத்தம புத்திரன்னு நினைப்பா….? பார்டின்னு கூப்பிட்டா வரனம். பொண்ணுகளோட கடலை போடனம். எதுவும் பேசாம உம்மனா மூஞ்சி மாதிரி இருந்தீன்னா ஒரு நாளைக்கு உன்னை விட்டு டீம் மொத்தமா விலகிடும். டீம் லீடர்னா சொன்ன வேலைய செய்யறவங்களை வாரம் ஒரு தடவ பார்ட்டிக்கும், மாசம் ஒரு தடவை டூர் டிரிப்பும் கூட்டிட்டு போகனம். செலவு உன்னோட சம்பளத்துல இருந்து கொடுக்க வேண்டியதில்லை. கம்பெனி பாத்துக்கும்….” மது போதையில் தள்ளாடியபடி உடன் வேலை செய்யும் ரஞ்சன் பேசிய போது பிரசர் கூடியது.

விடுமுறையின்றி கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்ததால் அசோசியேட் பிரின்சிபலாக பதவி உயர்வு பெற்றது பலருக்கும் புருவத்தை உயர்த்தச்செய்தது. வருடத்துக்கு ஐம்பது லட்சங்களுக்கு மேல் சம்பளம். பலரது பொறாமை கண்கள் வருண் மேல் ஈட்டி போல் பாய்ந்தது.

வருணுக்கு முன் வேலையில் சேர்ந்தவர்கள் அந்த இடத்தைப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் தலைமை எடுத்த முடிவால் மகாலட்சுமி இரண்டு கண்களையும் ஒரு சேர திறந்து வருணை பார்த்து விட்டதால் ஏற்பட்ட அதிர்ஷ்டம் என பேசிக்கொண்டனர்.

உயர்பதவிக்கு வந்தாலும் வருணுக்கு கீழ் வேலை செய்தவர்கள் ஒத்துழைக்காததோடு வருணை கம்பெனியை விட்டே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடச்செய்ய வேண்டும் என அடுத்தது பதவிக்காக காத்திருந்த ரஞ்ஜன் தனது சொந்த சம்பளத்தையே வார இறுதி நாளில் பார்ட்டிகளில் வாரி இறைத்ததின் பலனாக வருணை நம்பி எடுத்திருந்த புராஜெக்ட் சரியான நேரத்தில் வெளிநாட்டுக்கம்பெனிக்கு ஒப்பந்தப்படி கொடுக்க முடியாமல் போனது.

காலையில் எழுந்ததும் கோவிலுக்கு சென்று விட்டு பதட்டத்துடன் அலுவலகம் சென்றான். 

தலைமைச்செயல் அதிகாரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீரையே பதிலாக வெளிப்படுத்தினான்.

“உங்களுக்கு இந்தக்கம்பெனில் இனி வேலை இல்லை”

அதிர்ந்தவன் ” ஸார்….” என்றான்.

“ஜெர்மன்ல இருக்கிற கம்பெனிக்கு உங்களை அனுப்ப முடிவு பண்ணிட்டேன். அதோட உங்களோட இடத்துக்கு அடுத்து சீனியாரிட்டி பிரகாரம் வர வேண்டியவர் ரஞ்சன் தான். ஆனா ரகுவை போட்டிருக்கேன். ரஞ்சனோட மொத்த டீமையும் வேலைல இருந்து தூக்கிட்டேன்.

“ஸார்….”

“என்ன வருண். உங்கள தூக்கிட்டதா சொன்னதுக்கு அதிர்ச்சியடைஞ்ச நீங்க உங்களுக்கு எதிரா செயல்பட்ட ரஞ்சன் டீமை தூக்கினதுக்கு அதிர்ச்சியடையறீங்க…?”

“எனக்கு வேலை போனா நான் மட்டும் தான் பாதிக்கப்படுவேன். ரஞ்சனோட நண்பர்களை தூக்கினா பல குடும்பம் வீதிக்கு வந்திடுமே..‌.?”

“வரட்டும். ஏன் வருது? தப்பு பண்ணியிருக்காங்க. அவங்க பொறாமைப்பட்ட உங்களை வீட்டுக்கு அனுப்ப நெனைச்சு சம்பளம் கொடுக்கிற கம்பெனிக்கு கெட்ட பேரு, நஷ்டம், கால விரையத்தக்கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு இந்த தண்டனை தான் சரி…” உறுதியாகவும், இறுதியாகவும் சொன்ன தலைமை செயல் அதிகாரியிடம் எதுவும் பேச இயலாமல் வெளிநாடு செல்ல வேண்டியதற்கான வேலைகளை துவங்கினான்.

மறுநாள் வருண் வீட்டில் ரஞ்சன் உள்பட அவனது டீம் இருபது பேர் வந்திருந்தனர். காலையில் குளித்து விட்டு வருவதற்குள் அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருந்தாள் மனைவி ரம்யா.

“ஸாரி வருண். எங்க நிலைமை இப்படியாகும்னு தெரியலை. உன்னை தூக்க நெனைச்ச நாங்க கம்பெனியால தூக்கப்பட்டிருக்கோம். உன்ன மாதிரி சம்பளத்துல சேமிப்பெல்லாம் கிடையாது. இந்த மாசம் வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ், சாப்பாட்டு செலவு மத்த செலவுன்னு எதுக்குமே வழி இல்லை. இதுல நெறைய பேருக்கு பேரண்ஸோட ஆஸ்பத்திரி, மாத்திரை மருந்து செலவு வேற… எங்களை மொத்தமா மன்னிச்சிடு…” என காலில் விழ, உருகிப்போனான் வருண்.

“சேரி நானும் எனக்கு கெடைச்சிருக்கிற வெளிநாட்டு வேலைய ரிசைன் பண்ணிடறேன். நாம எல்லாரும் சொந்த ஊருக்கு போயி விவசாயம் பார்க்கலாம். ஓகேவா.‌.?” காதில் கேட்டவர்கள் யாருக்கும் வாயில் பேச்சு வரவில்லை.

“இப்படி கம்பெனி வேலைய நம்பி இருக்கிற நீங்க கம்பெனிக்கு நஷ்டம் வர்ற மாதிரி செய்யலாமா? செய்திருக்க கூடாது தானே…? நீங்க எனக்கு எதிரா நடந்திட்டதை கம்பெனி கண்டு பிடிச்சிருக்கு. அதனால எனக்கு வெளி நாட்ல வேலை கெடைச்சிருக்கு. கம்பெனிக்கு உங்களோட கேர்லஸால நஷ்டம் வரக்கிடையாது. திட்டமிட்ட சதியால ஏற்பட்ட நஷ்டத்த ஈடு கட்ட தினமும் ரெண்டு மணி நேரம் ஆறு மாசத்துக்கு கம்பெனிக்கு வேலை பார்க்கனம். ஓகே வா…?”

அனைவரும் கோரஸாக ‘ஓகே ஸார்” என கூற, தனது தலைமைச்செயலதிகாரியிடம் பேசி, இங்கே நடந்ததைச்சொல்லி, இழந்த வேலையை அனைவருக்கும் மீட்டுக்கொடுத்ததோடு, தானும் உள் நாட்டிலேயை அலுவலகம் மாறாமல் வேலை செய்து கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஆறு மாதங்களில் மீட்டுக்கொடுத்த வருணுக்கு கம்பெனியின் தலைமைச்செயல் அதிகாரி பதவி கிடைத்தது.

‘சாதாரணமாக நல்லவர்களாக இருக்கிறவர்களை விட தான் செய்த தவறை உணர்ந்து திருந்தியவர்கள் மிகவும் மேலானவர்கள்’ என தனது டைரியில் எழுதி வைத்து விட்டு, பிறரால் தனக்கு கெடுதல் வந்தாலும் தன்னால் பிறருக்கு கெடுதல் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வருண், இன்று தனது மேன்மையான குணத்தால் பல குடும்பம் கெட்டுப்போகாமல் பாது காத்த திருப்தியில் தனது பணியில் மேலும் கூடுதல் கவனம் செலுத்தத்துவங்கினான்.

https://www.sirukathaigal.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

3 weeks 4 days ago
29 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் 15 Oct, 2025 | 05:04 PM நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் விளக்கமறியல் வைக்க யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு புதன்கிழமை (15) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 28ம் திகதி நெடுந்தீவு கடலில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல் கடந்த 9ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 17 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு இரு வேறு தினங்களில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த வழக்கினை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் எதிர்வரும் 29ம் திகதி வரை 29 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227825

ஸ்பேஸ்எக்ஸின் 11-ஆவது ரொக்கெட் சோதனை வெற்றி : நிலவுப் பயணத்திற்கான மைல்கல்

3 weeks 4 days ago

15 Oct, 2025 | 09:23 AM

image

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் (Starship) ரொக்கெட், 11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் (Starbase) ஏவுதளத்திலிருந்து குறித்த ரொக்கெட் ஏவப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட ரொக்கெட், பூமியை வெற்றிகரமாகச் சுற்றி வந்தது. அதன் பின்னர், முந்தைய சோதனைகளைப் போலவே, போலியான செயற்கைக்கோள்களை (Dummy Satellites) விண்ணில் செலுத்தியது.

இறுதியாக, ரொக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பி, ஏவுதளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

123 மீற்றர் உயரம் கொண்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டாகக் கருதப்படுகிறது. இந்த ரொக்கெட் சோதனையின் வெற்றி, விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இந்த ரொக்கெட் மூலமாகவே, இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227764

ஸ்பேஸ்எக்ஸின் 11-ஆவது ரொக்கெட் சோதனை வெற்றி : நிலவுப் பயணத்திற்கான மைல்கல்

3 weeks 4 days ago
15 Oct, 2025 | 09:23 AM ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் (Starship) ரொக்கெட், 11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் (Starbase) ஏவுதளத்திலிருந்து குறித்த ரொக்கெட் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட ரொக்கெட், பூமியை வெற்றிகரமாகச் சுற்றி வந்தது. அதன் பின்னர், முந்தைய சோதனைகளைப் போலவே, போலியான செயற்கைக்கோள்களை (Dummy Satellites) விண்ணில் செலுத்தியது. இறுதியாக, ரொக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பி, ஏவுதளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. 123 மீற்றர் உயரம் கொண்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டாகக் கருதப்படுகிறது. இந்த ரொக்கெட் சோதனையின் வெற்றி, விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த ரொக்கெட் மூலமாகவே, இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227764

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார முயற்சி

3 weeks 4 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். 

எனினும் அவரிடம் இருந்து அந்த பெண் தப்பிச் சென்று தமது உறவினர்களுக்கு அறியப்படுத்திய நிலையில், பெண்ணின் உறவினர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததுடன் அவரை தேடி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையிலேயே சந்தேகநபர் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 

இதனை அடுத்து சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmgrviros0117o29nfawimp1u

'QR கோடு ஏடிஎம், மாத வருமானம் ரூ1.5 லட்சம்' - கோவையில் புதிய ஏடிஎம் மோசடியா?

3 weeks 4 days ago

ஏடிஎம் உரிமம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி!

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவையில் ஏடிஎம் உரிமம் வழங்குவதாகக் கூறி ஒரு கும்பல் பல கோடி ரூபாயை வசூலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டிலேயே இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கடுமையாகப் போராடி பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

இன்னும் பலருக்கு பணம் கிடைக்காத நிலையில், வரும் டிசம்பருக்குள் பிரச்னையை சரி செய்துவிடுவோம் என காவல் நிலையத்தில் நிறுவன இயக்குநர்கள் எழுதிக்கொடுத்திருப்பதாக காவல்துறை தரப்பில் பதில் தரப்படுகிறது.

கவர்ச்சி விளம்பரம்

உலகத்தின் முதல் யுபிஐ, க்யூ ஆர் கோடு ஏடிஎம் என்று கூறுகிறது அந்த சமூக ஊடக விளம்பரம். சிடிஎம் மற்றும் ஏடிஎம் நிறுவுவதற்கு ரூ.3.54 லட்சம் செலுத்தினால் மாதம் ஒரு லட்ச ரூபாய் மற்றும் பராமரிப்புத் தொகை ரூ.50 ஆயிரம் கிடைக்குமென்றும் கூறுகிறது.

கோவை நவஇந்தியாவில் ஒரு முகவரியில் இயங்கிவந்த IZET E-PAYMENT PVT LTD என்ற நிறுவனம்தான் இந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் சார்பில் நிறுவப்படும் பணம் செலுத்தும் CDM இயந்திரம் மற்றும் பணம் எடுக்கும் இயந்திரத்தை (ztm atm) நிறுவ இடம் கொடுப்பவர்களுக்குதான் இந்த வருமானம் வாய்ப்பு என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.

இன்ஸ்டராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தைப் பார்த்து, பல மாநிலங்களிலிருந்தும் பலரும் பணம் செலுத்தியுள்ளனர்.

ஏடிஎம் உரிமம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி!

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

'முதலீடு ரூ.3.54 லட்சம் மாத வருமானம் ரூ.1.5 லட்சம்'

பணம் செலுத்தியவர்களிடம் ஒன்று அல்லது 2 இயந்திரங்கள், பிரீமியம் ஜோன் எனப்படும் மினி வங்கி போன்றவை அமைத்துத்தருவதாகக் கூறி, ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் பெரும்பாலானவர்களின் இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்படவில்லை. நிறுவிய சில இடங்களிலும் அவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நிறுவப்பட்ட சில இயந்திரங்களும் முறையாக இயங்கவில்லை.

கோவை நவஇந்தியாவில் இயங்கி வந்த அந்த அலுவலகங்கள் மூடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்பு எண் என்று அவர்கள் கொடுத்த எந்த எண்ணிலும் யாரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

இந்நிலையில்தான் பணம் செலுத்தி ஏமாந்த பலரும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார்கள் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் அக்டோபர் 13 ஆம் தேதியன்று பலரும் ஒன்று கூடி வந்து மாநகர காவல் ஆணையரிடம் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

ஏடிஎம் இயந்திரம் நிறுவுவதற்காக பணம் செலுத்தி ஏமாந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சிவகிரி, ''ஃபேஸ்புக் விளம்பரத்தைப் பார்த்து கடந்த 2024 மார்ச் மாதத்தில் அந்த நிறுவனத்தை அணுகினேன். இன்றே பணம் செலுத்தினால் மாதம் ரூ.49 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்குமென்றனர். அதை நம்பி அன்றே ரூ.50 ஆயிரம் செலுத்தி இணைந்தேன். நிறுவன இயக்குநர் ரம்யா நேரில் வந்து இடத்தைப் பார்த்தார். சேலத்தில் ஏடிஎம் இயங்குவதைக் காண்பித்தனர். கடை எடுத்துத் தயார் செய்தபின் பல மாதங்களாக மெஷின் வரவேயில்லை.'' என்றார்.

ஏழெட்டு மாதங்கள் கழித்து இவருடைய இடத்தில் ஏடிஎம் இயந்திரம் வைத்துள்ளனர். அதிலும் பணம் போட்டு எடுக்கும் சோதனை மட்டுமே நடந்துள்ளது. ஆனால் பணம் எடுக்க முடியவில்லை.

அதன்பின் மெஷினை மாற்றுவதாகக் கூறியுள்ளனர். அதை எடுக்க வந்ததை இவர் தடுத்தபோது நிர்வாக இயக்குநர் துரைசாமியே வந்ததாகக் கூறுகிறார் சிவகிரி.

அதன்பின் விசாரித்தபோது அலுவலகம் இயங்காததையும், ஏடிஎம் இயந்திரம் எங்குமே இயங்கவில்லை என்பதையும் கண்டறிந்த பின்பே போலீசில் புகார் அளித்ததாகக் கூறுகிறார்.

இவரைப் போலவே கோவையைச் சேர்ந்த ஜீவானந்தன், இந்த நிறுவனத்தில் ரூ.3 லட்சம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இவருக்கு எந்த இயந்திரமும் பெயரளவுக்குக் கூடத்தரப்படவில்லை.

இவர்கள் பணம் செலுத்தியபோது, 45 நாட்களில் ஏடிஎம் இயந்திரத்தை கொடுப்பதாகவும், அதில் எந்த வங்கி ஏடிஎம் கார்டுகளை வைத்தும் பணம் எடுக்கலாம், செலுத்தலாம் என்றும், UPI மூலமும் பணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு பணமாக எடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

இயந்திரத்தில் பணத்தை தங்கள் நிறுவனமே வந்து லோடு செய்யும் என்றும், மினி வங்கி போன்ற செட்டப் உள்ள பிரீமியம் ஜோன் வைக்க இடம் கொடுப்பவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமென்றும் விளக்கியுள்ளனர்.

இதை நம்பி தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் பல நுாறு பேர் பல கோடி ரூபாய் ஏமாந்திருக்க வாய்ப்புள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய பலரும் தெரிவித்தனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

வங்கியில் லோன் போட்டு ரூ.9 லட்சம் செலுத்திய இளைஞர்!

புகார் அளிக்க வந்தவர்களில் அதிகபட்சமாக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தவர், நெய்வேலியைச் சேர்ந்த பிரேம்குமார்.

இவர் வங்கியில் ரூ.10 லட்சம் பெர்சனல் லோன் பெற்று, அதில் 9 லட்ச ரூபாயை இந்த நிறுவனத்தில் செலுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 13 அன்று சமூக ஊடக விளம்பரத்தைப் பார்த்து, டிசம்பர் 19 அன்று ரூ.3 லட்சம் செலுத்திய இவர், தன் பெயரில் ஏடிஎம் உரிமமும், தன் தாயார் பெயரில் பிரீமியம் ஜோன் அமைக்கவும் இந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

முழுத்தொகையையும் செலுத்திய பின்பே இவை செய்து தரப்படுமென்று கூறியதால் 2025 ஏப்ரலுக்குள் மொத்தம் ரூ.9 லட்சத்தைச் செலுத்தியிருக்கிறார்.

இதை நம்பி 2 கடைகளை வாடகைக்குப் பிடித்து, அவற்றில் சில உள் அலங்கார வேலைகளையும் இவர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு இறுதிவரை இயந்திரமே வரவில்லை.

இவர் உட்பட பலரும் கோவையில் வந்து பணம் செலுத்தி, ஒப்பந்தம்போட்ட போது, 2 அலுவலகங்களில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதைப் பார்த்துள்ளனர்.

இவர்களுக்கு ஆர்எஸ்புரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு ஏடிஎம் இயந்திரமும் நேரடியாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரலில் முழுப்பணம் செலுத்திய பின்னும் பிரேம்குமாருக்கு ஆகஸ்ட் மாதம் வரையிலும் ஏடிஎம் இயந்திரம் வரவில்லை என்பதால் கோவைக்கு நேரில் வந்து பார்த்தபோது, முன்பு பார்த்த அந்த அலுவலகம் மூடிக்கிடந்துள்ளது.

அங்கு விசாரித்தபோது, அலுவலகத்தில் பணியாற்றிய பலருக்கும் பல மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை என்பதும், அந்த அலுவலகக் கட்டடத்துக்கான வாடகையும் பல மாதங்களாக செலுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்ததாக பிரேம்குமார், ஜீவானந்தன், அரவிந்த் உள்ளிட்ட பலரும் பிபிசியிடம் தகவல் பகிர்ந்தனர்.

நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேசிய இவர்களுக்கு, பக்கத்து கட்டடத்தில் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெயரே இல்லாத அலுவலகத்தில் நான்கைந்து பேர் பணியாற்றியுள்ளனர். அவர்களும் சரியான பதில் தராத நிலையில், சில நாட்களில் அந்த அலுவலகமும் மூடப்பட்டுள்ளது.

''பணம் செலுத்தியபின் எந்த பதிலும் இல்லாததால் நான் சண்டை போடும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வந்து கட்டடத்தை அளந்து சென்றனர். கடந்த ஆகஸ்ட்டில் போலீஸ் புகார் கொடுப்பதாகச் சொன்னபோது, கான்ஃபரன்ஸ் காலில் துரைசாமி பேசினார். ஆகஸ்ட் 15க்கு மேல் மெஷின் வரும் என்றார். ஒரு வாரத்தில் கடை வாடகை தருவதாகக் கூறினர். எதுவும் வரவில்லை. அப்போது கோவை வந்தபோதுதான் அலுவலகம் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.'' என்றார் பிரேம்குமார்.

''என்னிடம் கஸ்டமர் கேர், சப்போர்ட் டீம், எச்ஆர் என எல்லா எண்களிலும் பேசியதும் துரைசாமியின் மனைவி ரம்யா என்று தெரிந்துகொண்டேன். இதைப் பற்றிக் கேட்டதும் சுத்தமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இறுதியாக செப்டடெம்பர் 28 அன்று மெஷின் வர இன்னும் 6 மாதமாகும் என்று மெயில் வந்தது. நான் ஆன்லைனில் பணத்தைத் திருப்பிச் செலுத்தச் சொல்லி மெயில் போட்டதற்கு எந்த பதிலும் வரவேயில்லை.'' என்றார்.

கடந்த மாதம் ஆயுதபூஜையன்று, பீளமேடு காவல் நிலையத்தில் இவரும், பாதிக்கப்பட்ட ரகுராம் என்பவரும் இணைந்து புகார் கொடுக்கச் சென்றுள்ளனர். அன்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் துரைசாமி, அவரின் மனைவி ரம்யா இருவரும் வந்துள்ளனர்.

அப்போது அவரிடம் பெர்சனல் லோன் வாங்கிக் கொடுத்துவிட்டு, இப்போது தற்கொலை செய்யும் நிலையில் இருப்பதாக தான் சொன்னபோது, எல்லோருமே லோன் வாங்கிக் கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது என்று துரைசாமி கேட்டதாகத் தெரிவித்தார் பிரேம்குமார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் பலரும் நம்பி பணத்தைச் செலுத்தியுள்ளனர் என்று குற்றம்சாட்டுகிறார் வழக்கறிஞர் சினேகா.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள இவர், இதற்கு முன்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்.

சிலர் அளித்த புகாருக்கு சிஎஸ்ஆர் மட்டும் போட்டுவிட்டு, அதையும் மறுநாளே கேன்சல் செய்து விட்டதாகக் கூறுகிறார் சினேகா.

பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சினேகா, ''பீளமேடு காவல்நிலையத்தில் ஏராளமானவர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. அதனால்தான் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தோம்.நாங்கள் சிவில் வழக்கை முன்னெடுக்கிறோம். ஆனால் கிரிமினல் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தால்தான் வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் போன்றவற்றை முடக்கி பணத்தை மீட்க முடியும்.'' என்றார்.

கட்டிய பணத்தை திரும்பவும் முழுமையாக வாங்கிய கேரள இளைஞர்

கட்டிய பணத்தை திரும்பவும் முழுமையாக வாங்கிய கேரள இளைஞர்

பணம் கொடுத்து பலரும் ஏமாற்றமடைந்த நிலையில், கேரளா மாநிலம் வாளையாரைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர், ரூ.5 லட்சத்து 54 ஆயிரம் செலுத்தி, ஏடிஎம் நிறுவுவதற்கு கட்டட வாடகைக்கும் சேர்த்து மொத்தம் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் வரை செலவழித்து அதைத் திரும்பப் பெற்றுள்ளார்.

இவருக்கும் பணம் செலுத்தியபின் ஏடிஎம் இயந்திரம் தராமல், கப்பலில் மெஷின் வரத்தாமதம் என்று இழுத்தடித்துள்ளனர். இவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பின், ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளனர். அதில் யார் கை வைத்தாலும் திறக்கும் வகையில் பாதுகாப்பின்றியும் இருந்துள்ளது. அதில் நிறுவனம் செலுத்திய ஓரிரு லட்ச ரூபாய் பணத்தை எடுப்பதிலும் பல பிரச்னை இருந்துள்ளது.

முதலில் சமூக ஊடக விளம்பரத்தில் காண்பித்த ஏடிஎம் இயந்திரமும் இதுவும் வேறு வேறாக இருப்பதை வைத்து, வீடியோ எடுத்து தான் நடத்தும் யூடியூப் சேனலில் கார்த்தி வெளியிட்டுள்ளார். அதன்பின் இவரிடம் நிறுவனத்திலிருந்து சமாதானம் பேச அழைத்துள்ளனர்.

அதன்பின் நடந்ததை பிபிசி தமிழிடம் விளக்கிய கார்த்தி, ''நான் கடுமையாக சண்டையிட்டதும், அந்த அலுவலக ஊழியர் ஒருவரை வைத்து என்னிடம் பேசி கோவைக்கு வரவைத்து, என்னை பீளமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, நான்தான் தவறான தகவலைப் பரப்பும் புகாரில் அக்யூஸ்ட் என்று கூறிவிட்டனர். ஆனால் நான் அதற்கு முன்பே, கோவை மாநகர காவல்துறைக்கு ஆன்லைன் புகார் அளித்திருந்தேன்.'' என்றார்.

''அதையும் பிற ஆதாரங்களையும் வைத்து மீண்டும் ஒரு புகார் தருவதாகக் கூறினேன். சிவில் வழக்கு, நுகர்வோர் கோர்ட் வழக்கு தொடர்வேன் என்று கூறினேன். அதன்பின் ரூ.5.54 லட்சம் திரும்பத்தருவதாகப் பேசினர். ஆனால் நான் கூடுதலாகச் செலவழித்த தொகையையும் தராவிடில் யூடியூபில் நடந்த அனைத்தையும் ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று கூறியதால் ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்துக்கு செக் கொடுத்தனர். அதையும் இறுதிநாளில் திரும்பத்தரக்கூறினர். நான் கிரிமினல் வழக்குத் தொடுப்பேன் என்று கூறிய பின், அந்த செக்கிற்கான பணத்தைச் செலுத்தினர். என்னைப் போல சிலரும் பணத்தைத் திரும்ப வாங்கியுள்ளனர்.'' என்றார் கார்த்தி.

இந்த நிறுவன விளம்பரத்தில் விசாரணைக்குரிய எண் என்றும், நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டதாக பழைய அலுவலகத்தின் முன்பு ஒட்டப்பட்ட நோட்டீசிலும் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணையும் தொடர்பு கொண்டபோது அது 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது.

படக்குறிப்பு, நிறுவனத்தின் இயக்குநர்கள் துரைசாமி அங்கமுத்து, தமிழ்மணி ஆகியோரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை.

இந்த நிறுவனத்திடம் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ள பலரும் பீளமேடு காவல் நிலையம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார்கள் அளித்தும் இப்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இதுகுறித்து பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜூனிடம் கேட்டபோது, ''அங்கேயும் இங்கேயும் புகார் கொடுத்துள்ளனர். தங்கள் நிறுவனத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் தவறாக விளம்பரம் செய்ததால் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக கோர்ட்டில் அவர்கள் புகார் அளித்து நீதிமன்ற உத்தரவின்படி, அதை விசாரிக்கிறோம். மற்ற புகார்களையும் விசாரிக்கிறோம். எந்த சிஎஸ்ஆரையும் நாங்கள் கேன்சல் செய்யவில்லை. வரும் டிசம்பருக்குள் பிரச்னையை சரி செய்வோம் என்று எழுதிக் கொடுத்துள்ளனர்.'' என்றார்.

ஏடிஎம் இயந்திரம் தருவதாகக் கூறி, பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படும் நிறுவனத்தின் இயக்குநர்கள் துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி, தமிழ்மணி ஆகியோரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை.

இந்த நிறுவன விளம்பரத்தில் விசாரணைக்குரிய எண் என்றும், நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டதாக பழைய அலுவலகத்தின் முன்பு ஒட்டப்பட்ட நோட்டீசிலும் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணையும் தொடர்பு கொண்டபோது அது 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது.

இந்த நிறுவனத்தின் பதிலை மெயில் மூலமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2emkj31xn0o

'QR கோடு ஏடிஎம், மாத வருமானம் ரூ1.5 லட்சம்' - கோவையில் புதிய ஏடிஎம் மோசடியா?

3 weeks 4 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் ஏடிஎம் உரிமம் வழங்குவதாகக் கூறி ஒரு கும்பல் பல கோடி ரூபாயை வசூலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டிலேயே இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கடுமையாகப் போராடி பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். இன்னும் பலருக்கு பணம் கிடைக்காத நிலையில், வரும் டிசம்பருக்குள் பிரச்னையை சரி செய்துவிடுவோம் என காவல் நிலையத்தில் நிறுவன இயக்குநர்கள் எழுதிக்கொடுத்திருப்பதாக காவல்துறை தரப்பில் பதில் தரப்படுகிறது. கவர்ச்சி விளம்பரம் உலகத்தின் முதல் யுபிஐ, க்யூ ஆர் கோடு ஏடிஎம் என்று கூறுகிறது அந்த சமூக ஊடக விளம்பரம். சிடிஎம் மற்றும் ஏடிஎம் நிறுவுவதற்கு ரூ.3.54 லட்சம் செலுத்தினால் மாதம் ஒரு லட்ச ரூபாய் மற்றும் பராமரிப்புத் தொகை ரூ.50 ஆயிரம் கிடைக்குமென்றும் கூறுகிறது. கோவை நவஇந்தியாவில் ஒரு முகவரியில் இயங்கிவந்த IZET E-PAYMENT PVT LTD என்ற நிறுவனம்தான் இந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தின் சார்பில் நிறுவப்படும் பணம் செலுத்தும் CDM இயந்திரம் மற்றும் பணம் எடுக்கும் இயந்திரத்தை (ztm atm) நிறுவ இடம் கொடுப்பவர்களுக்குதான் இந்த வருமானம் வாய்ப்பு என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. இன்ஸ்டராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தைப் பார்த்து, பல மாநிலங்களிலிருந்தும் பலரும் பணம் செலுத்தியுள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் 'முதலீடு ரூ.3.54 லட்சம் மாத வருமானம் ரூ.1.5 லட்சம்' பணம் செலுத்தியவர்களிடம் ஒன்று அல்லது 2 இயந்திரங்கள், பிரீமியம் ஜோன் எனப்படும் மினி வங்கி போன்றவை அமைத்துத்தருவதாகக் கூறி, ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் பெரும்பாலானவர்களின் இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்படவில்லை. நிறுவிய சில இடங்களிலும் அவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நிறுவப்பட்ட சில இயந்திரங்களும் முறையாக இயங்கவில்லை. கோவை நவஇந்தியாவில் இயங்கி வந்த அந்த அலுவலகங்கள் மூடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்பு எண் என்று அவர்கள் கொடுத்த எந்த எண்ணிலும் யாரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இந்நிலையில்தான் பணம் செலுத்தி ஏமாந்த பலரும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார்கள் கொடுத்துள்ளனர். இந்தநிலையில் அக்டோபர் 13 ஆம் தேதியன்று பலரும் ஒன்று கூடி வந்து மாநகர காவல் ஆணையரிடம் மீண்டும் புகார் அளித்துள்ளனர். ஏடிஎம் இயந்திரம் நிறுவுவதற்காக பணம் செலுத்தி ஏமாந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சிவகிரி, ''ஃபேஸ்புக் விளம்பரத்தைப் பார்த்து கடந்த 2024 மார்ச் மாதத்தில் அந்த நிறுவனத்தை அணுகினேன். இன்றே பணம் செலுத்தினால் மாதம் ரூ.49 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்குமென்றனர். அதை நம்பி அன்றே ரூ.50 ஆயிரம் செலுத்தி இணைந்தேன். நிறுவன இயக்குநர் ரம்யா நேரில் வந்து இடத்தைப் பார்த்தார். சேலத்தில் ஏடிஎம் இயங்குவதைக் காண்பித்தனர். கடை எடுத்துத் தயார் செய்தபின் பல மாதங்களாக மெஷின் வரவேயில்லை.'' என்றார். ஏழெட்டு மாதங்கள் கழித்து இவருடைய இடத்தில் ஏடிஎம் இயந்திரம் வைத்துள்ளனர். அதிலும் பணம் போட்டு எடுக்கும் சோதனை மட்டுமே நடந்துள்ளது. ஆனால் பணம் எடுக்க முடியவில்லை. அதன்பின் மெஷினை மாற்றுவதாகக் கூறியுள்ளனர். அதை எடுக்க வந்ததை இவர் தடுத்தபோது நிர்வாக இயக்குநர் துரைசாமியே வந்ததாகக் கூறுகிறார் சிவகிரி. அதன்பின் விசாரித்தபோது அலுவலகம் இயங்காததையும், ஏடிஎம் இயந்திரம் எங்குமே இயங்கவில்லை என்பதையும் கண்டறிந்த பின்பே போலீசில் புகார் அளித்ததாகக் கூறுகிறார். இவரைப் போலவே கோவையைச் சேர்ந்த ஜீவானந்தன், இந்த நிறுவனத்தில் ரூ.3 லட்சம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளார். இவருக்கு எந்த இயந்திரமும் பெயரளவுக்குக் கூடத்தரப்படவில்லை. இவர்கள் பணம் செலுத்தியபோது, 45 நாட்களில் ஏடிஎம் இயந்திரத்தை கொடுப்பதாகவும், அதில் எந்த வங்கி ஏடிஎம் கார்டுகளை வைத்தும் பணம் எடுக்கலாம், செலுத்தலாம் என்றும், UPI மூலமும் பணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு பணமாக எடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இயந்திரத்தில் பணத்தை தங்கள் நிறுவனமே வந்து லோடு செய்யும் என்றும், மினி வங்கி போன்ற செட்டப் உள்ள பிரீமியம் ஜோன் வைக்க இடம் கொடுப்பவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமென்றும் விளக்கியுள்ளனர். இதை நம்பி தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் பல நுாறு பேர் பல கோடி ரூபாய் ஏமாந்திருக்க வாய்ப்புள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய பலரும் தெரிவித்தனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் வங்கியில் லோன் போட்டு ரூ.9 லட்சம் செலுத்திய இளைஞர்! புகார் அளிக்க வந்தவர்களில் அதிகபட்சமாக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தவர், நெய்வேலியைச் சேர்ந்த பிரேம்குமார். இவர் வங்கியில் ரூ.10 லட்சம் பெர்சனல் லோன் பெற்று, அதில் 9 லட்ச ரூபாயை இந்த நிறுவனத்தில் செலுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் 13 அன்று சமூக ஊடக விளம்பரத்தைப் பார்த்து, டிசம்பர் 19 அன்று ரூ.3 லட்சம் செலுத்திய இவர், தன் பெயரில் ஏடிஎம் உரிமமும், தன் தாயார் பெயரில் பிரீமியம் ஜோன் அமைக்கவும் இந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். முழுத்தொகையையும் செலுத்திய பின்பே இவை செய்து தரப்படுமென்று கூறியதால் 2025 ஏப்ரலுக்குள் மொத்தம் ரூ.9 லட்சத்தைச் செலுத்தியிருக்கிறார். இதை நம்பி 2 கடைகளை வாடகைக்குப் பிடித்து, அவற்றில் சில உள் அலங்கார வேலைகளையும் இவர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு இறுதிவரை இயந்திரமே வரவில்லை. இவர் உட்பட பலரும் கோவையில் வந்து பணம் செலுத்தி, ஒப்பந்தம்போட்ட போது, 2 அலுவலகங்களில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதைப் பார்த்துள்ளனர். இவர்களுக்கு ஆர்எஸ்புரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு ஏடிஎம் இயந்திரமும் நேரடியாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரலில் முழுப்பணம் செலுத்திய பின்னும் பிரேம்குமாருக்கு ஆகஸ்ட் மாதம் வரையிலும் ஏடிஎம் இயந்திரம் வரவில்லை என்பதால் கோவைக்கு நேரில் வந்து பார்த்தபோது, முன்பு பார்த்த அந்த அலுவலகம் மூடிக்கிடந்துள்ளது. அங்கு விசாரித்தபோது, அலுவலகத்தில் பணியாற்றிய பலருக்கும் பல மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை என்பதும், அந்த அலுவலகக் கட்டடத்துக்கான வாடகையும் பல மாதங்களாக செலுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்ததாக பிரேம்குமார், ஜீவானந்தன், அரவிந்த் உள்ளிட்ட பலரும் பிபிசியிடம் தகவல் பகிர்ந்தனர். நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேசிய இவர்களுக்கு, பக்கத்து கட்டடத்தில் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெயரே இல்லாத அலுவலகத்தில் நான்கைந்து பேர் பணியாற்றியுள்ளனர். அவர்களும் சரியான பதில் தராத நிலையில், சில நாட்களில் அந்த அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. ''பணம் செலுத்தியபின் எந்த பதிலும் இல்லாததால் நான் சண்டை போடும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வந்து கட்டடத்தை அளந்து சென்றனர். கடந்த ஆகஸ்ட்டில் போலீஸ் புகார் கொடுப்பதாகச் சொன்னபோது, கான்ஃபரன்ஸ் காலில் துரைசாமி பேசினார். ஆகஸ்ட் 15க்கு மேல் மெஷின் வரும் என்றார். ஒரு வாரத்தில் கடை வாடகை தருவதாகக் கூறினர். எதுவும் வரவில்லை. அப்போது கோவை வந்தபோதுதான் அலுவலகம் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.'' என்றார் பிரேம்குமார். ''என்னிடம் கஸ்டமர் கேர், சப்போர்ட் டீம், எச்ஆர் என எல்லா எண்களிலும் பேசியதும் துரைசாமியின் மனைவி ரம்யா என்று தெரிந்துகொண்டேன். இதைப் பற்றிக் கேட்டதும் சுத்தமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இறுதியாக செப்டடெம்பர் 28 அன்று மெஷின் வர இன்னும் 6 மாதமாகும் என்று மெயில் வந்தது. நான் ஆன்லைனில் பணத்தைத் திருப்பிச் செலுத்தச் சொல்லி மெயில் போட்டதற்கு எந்த பதிலும் வரவேயில்லை.'' என்றார். கடந்த மாதம் ஆயுதபூஜையன்று, பீளமேடு காவல் நிலையத்தில் இவரும், பாதிக்கப்பட்ட ரகுராம் என்பவரும் இணைந்து புகார் கொடுக்கச் சென்றுள்ளனர். அன்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் துரைசாமி, அவரின் மனைவி ரம்யா இருவரும் வந்துள்ளனர். அப்போது அவரிடம் பெர்சனல் லோன் வாங்கிக் கொடுத்துவிட்டு, இப்போது தற்கொலை செய்யும் நிலையில் இருப்பதாக தான் சொன்னபோது, எல்லோருமே லோன் வாங்கிக் கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது என்று துரைசாமி கேட்டதாகத் தெரிவித்தார் பிரேம்குமார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் பலரும் நம்பி பணத்தைச் செலுத்தியுள்ளனர் என்று குற்றம்சாட்டுகிறார் வழக்கறிஞர் சினேகா. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள இவர், இதற்கு முன்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார். சிலர் அளித்த புகாருக்கு சிஎஸ்ஆர் மட்டும் போட்டுவிட்டு, அதையும் மறுநாளே கேன்சல் செய்து விட்டதாகக் கூறுகிறார் சினேகா. பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சினேகா, ''பீளமேடு காவல்நிலையத்தில் ஏராளமானவர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. அதனால்தான் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தோம்.நாங்கள் சிவில் வழக்கை முன்னெடுக்கிறோம். ஆனால் கிரிமினல் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தால்தான் வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் போன்றவற்றை முடக்கி பணத்தை மீட்க முடியும்.'' என்றார். கட்டிய பணத்தை திரும்பவும் முழுமையாக வாங்கிய கேரள இளைஞர் பணம் கொடுத்து பலரும் ஏமாற்றமடைந்த நிலையில், கேரளா மாநிலம் வாளையாரைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர், ரூ.5 லட்சத்து 54 ஆயிரம் செலுத்தி, ஏடிஎம் நிறுவுவதற்கு கட்டட வாடகைக்கும் சேர்த்து மொத்தம் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் வரை செலவழித்து அதைத் திரும்பப் பெற்றுள்ளார். இவருக்கும் பணம் செலுத்தியபின் ஏடிஎம் இயந்திரம் தராமல், கப்பலில் மெஷின் வரத்தாமதம் என்று இழுத்தடித்துள்ளனர். இவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பின், ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளனர். அதில் யார் கை வைத்தாலும் திறக்கும் வகையில் பாதுகாப்பின்றியும் இருந்துள்ளது. அதில் நிறுவனம் செலுத்திய ஓரிரு லட்ச ரூபாய் பணத்தை எடுப்பதிலும் பல பிரச்னை இருந்துள்ளது. முதலில் சமூக ஊடக விளம்பரத்தில் காண்பித்த ஏடிஎம் இயந்திரமும் இதுவும் வேறு வேறாக இருப்பதை வைத்து, வீடியோ எடுத்து தான் நடத்தும் யூடியூப் சேனலில் கார்த்தி வெளியிட்டுள்ளார். அதன்பின் இவரிடம் நிறுவனத்திலிருந்து சமாதானம் பேச அழைத்துள்ளனர். அதன்பின் நடந்ததை பிபிசி தமிழிடம் விளக்கிய கார்த்தி, ''நான் கடுமையாக சண்டையிட்டதும், அந்த அலுவலக ஊழியர் ஒருவரை வைத்து என்னிடம் பேசி கோவைக்கு வரவைத்து, என்னை பீளமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, நான்தான் தவறான தகவலைப் பரப்பும் புகாரில் அக்யூஸ்ட் என்று கூறிவிட்டனர். ஆனால் நான் அதற்கு முன்பே, கோவை மாநகர காவல்துறைக்கு ஆன்லைன் புகார் அளித்திருந்தேன்.'' என்றார். ''அதையும் பிற ஆதாரங்களையும் வைத்து மீண்டும் ஒரு புகார் தருவதாகக் கூறினேன். சிவில் வழக்கு, நுகர்வோர் கோர்ட் வழக்கு தொடர்வேன் என்று கூறினேன். அதன்பின் ரூ.5.54 லட்சம் திரும்பத்தருவதாகப் பேசினர். ஆனால் நான் கூடுதலாகச் செலவழித்த தொகையையும் தராவிடில் யூடியூபில் நடந்த அனைத்தையும் ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று கூறியதால் ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்துக்கு செக் கொடுத்தனர். அதையும் இறுதிநாளில் திரும்பத்தரக்கூறினர். நான் கிரிமினல் வழக்குத் தொடுப்பேன் என்று கூறிய பின், அந்த செக்கிற்கான பணத்தைச் செலுத்தினர். என்னைப் போல சிலரும் பணத்தைத் திரும்ப வாங்கியுள்ளனர்.'' என்றார் கார்த்தி. படக்குறிப்பு, நிறுவனத்தின் இயக்குநர்கள் துரைசாமி அங்கமுத்து, தமிழ்மணி ஆகியோரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை. இந்த நிறுவனத்திடம் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ள பலரும் பீளமேடு காவல் நிலையம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார்கள் அளித்தும் இப்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜூனிடம் கேட்டபோது, ''அங்கேயும் இங்கேயும் புகார் கொடுத்துள்ளனர். தங்கள் நிறுவனத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் தவறாக விளம்பரம் செய்ததால் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக கோர்ட்டில் அவர்கள் புகார் அளித்து நீதிமன்ற உத்தரவின்படி, அதை விசாரிக்கிறோம். மற்ற புகார்களையும் விசாரிக்கிறோம். எந்த சிஎஸ்ஆரையும் நாங்கள் கேன்சல் செய்யவில்லை. வரும் டிசம்பருக்குள் பிரச்னையை சரி செய்வோம் என்று எழுதிக் கொடுத்துள்ளனர்.'' என்றார். ஏடிஎம் இயந்திரம் தருவதாகக் கூறி, பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படும் நிறுவனத்தின் இயக்குநர்கள் துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி, தமிழ்மணி ஆகியோரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை. இந்த நிறுவன விளம்பரத்தில் விசாரணைக்குரிய எண் என்றும், நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டதாக பழைய அலுவலகத்தின் முன்பு ஒட்டப்பட்ட நோட்டீசிலும் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணையும் தொடர்பு கொண்டபோது அது 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் பதிலை மெயில் மூலமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2emkj31xn0o

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தின் முதல் கொடி ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது

3 weeks 4 days ago
15 Oct, 2025 | 04:09 PM சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதல் கொடி, அடையாள ரீதியாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது. இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவி நில்மினி சமரவீர, கொடியை ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவித்தார். பின்னர், வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தார். கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பார்வையற்றோர் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சம்மேளனத்தின் தலைவி தெரிவித்தார். இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலந்துரையாடியதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் சமீர புபுது குமார உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/227815

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தின் முதல் கொடி ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது

3 weeks 4 days ago

15 Oct, 2025 | 04:09 PM

image

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதல் கொடி, அடையாள ரீதியாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது.

இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவி நில்மினி சமரவீர, கொடியை ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவித்தார்.

பின்னர், வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தார்.

கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பார்வையற்றோர் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சம்மேளனத்தின் தலைவி தெரிவித்தார்.

இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதியின் செயலாளர்  கலந்துரையாடியதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் சமீர புபுது குமார உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-10-15_at_16.01.13.jp

WhatsApp_Image_2025-10-15_at_16.01.14.jp

WhatsApp_Image_2025-10-15_at_16.01.13__2

WhatsApp_Image_2025-10-15_at_16.01.13__1

WhatsApp_Image_2025-10-15_at_16.01.12.jp

https://www.virakesari.lk/article/227815

“ஜென் Z” போராட்டங்கள்; அரசாங்கத்தை கலைத்தார் மடகஸ்கார் ஜனாதிபதி

3 weeks 4 days ago
ஜென் 'ஸி' போராட்டத்தால் மேலும் ஒரு நாட்டில் அரசு கவிழ்ப்பா? ராணுவம் புதிய அறிவிப்பு பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது கட்டுரை தகவல் சாம்மி அவாமி பிபிசி ஆப்பிரிக்கா,அன்டானனாரிவோ டானாய் நெஸ்டா குபெம்பா 15 அக்டோபர் 2025, 03:03 GMT இந்தியப் பெருங்கடல் தீவான மடகாஸ்கரில், ஜென் ஸி இளைஞர்கள் முன்னின்று வாரக்கணக்காக நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு, ஒரு சிறப்பு ராணுவப் பிரிவு, அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவிடமிருந்து (Andry Rajoelina) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிபர் மாளிகைக்கு வெளியே நின்றபடி, கேப்சாட் (CAPSAT - பணியாளர் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சேவைகள் பிரிவு) தலைவர் கர்னல் மைக்கேல் ரான்ட்ரியனிரினா (Col Michael Randrianirina), ராணுவம் ஒரு அரசை அமைக்கும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்தல் நடத்தும் என்றும் கூறினார். தேர்தல் ஆணையம் போன்ற முக்கிய ஜனநாயக அமைப்புகளின் செயல்பாட்டையும் அவர் இடைநிறுத்தம் செய்துள்ளார். ஜென் ஸி (Gen Z) போராட்டக்காரர்கள் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்றும், "இயக்கம் தெருக்களில் உருவாக்கப்பட்டது, எனவே அவர்களின் கோரிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார். அதிபர் ராஜோலினா பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, தலைநகர் அன்டானனாரிவோவில் கொடிகளை அசைத்து ராணுவத்தினரும், போராட்டக்காரர்களுமாக ஆயிரக்கணக்கானோர் கொண்டாடி வருகின்றனர். கேப்சாட் என்பது மடகாஸ்கரின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவப் பிரிவாகும். இந்த பிரிவுதான் 2009 இல் ராஜோலினா ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு ஆதரவளித்தது. ஆனால், சனிக்கிழமை அந்த ராணுப் பிரிவு போராட்டக்காரர்களுடன் இணைந்தது. மடகாஸ்கரின் அரசியலமைப்பு நீதிமன்றம், கர்னல் ரான்ட்ரியனிரினாவை நாட்டின் புதிய தலைவராக அறிவித்துள்ளது. இருப்பினும், அதிபர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ராஜோலினா இன்னும் பொறுப்பில் இருப்பதாகவும், இது "ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி" என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம், Real TV Madagascar / YouTube படக்குறிப்பு, இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்தல் நடத்தப்படும் என ராணுவ தலைவர் கர்னல் மைக்கேல் ரான்ட்ரியனிரினா உறுதியளித்துள்ளார் ராஜோலினா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை, ஆனால் "ராணுவப் பணியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால்" தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஒரு கொலை முயற்சிக்குப் பிறகு, தான் ஒரு "பாதுகாப்பான இடத்தில்" தஞ்சம் புகுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்தகைய எந்தவொரு செயலிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று CAPSAT ராணுவப் பிரிவு மறுத்துள்ளது. பிரெஞ்சு ராணுவ விமானம் மூலம் நாட்டிலிருந்து அதிபர் ராஜோலினா பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன. மடகாஸ்கர் "இப்போது குழப்பம் நிலவும் ஒரு நாடு" என்று கர்னல் ரான்ட்ரியனிரினா பிபிசியிடம் கூறினார். "அதிபர் இல்லை - அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என்பதால் குழப்பம் நிலவுகிறது." நாடு முழுவதும் நிலவும் நீண்டகால நீர் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுகளை எதிர்த்து, இளைஞர்கள் தலைமையிலான இயக்கம் போராட்டங்களைத் தொடங்கிய இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தக் குழப்பம் தொடங்கியது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுகளை கண்டித்து ஜென் ஸியின் போராட்டம் தொடங்கியது இந்த ஆர்ப்பாட்டங்கள் விரைவில் தீவிரமடைந்து, அதிக வேலையின்மை, ஊழல் மற்றும் விலைவாசி நெருக்கடி ஆகியவற்றால் ராஜோலினா அரசாங்கத்தின் மீதான பரவலான அதிருப்தியைப் பிரதிபலித்தது. ஐ.நா.வின் கூற்றுப்படி, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தபட்சம் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருப்பினும், மடகாஸ்கர் அரசாங்கம் இந்தத் தகவலை "வதந்திகள் மற்றும் தவறான தகவல்களின்" அடிப்படையில் இருப்பதாகக் கூறி நிராகரித்திருந்தது. தொழில்முனைவோர் மற்றும் முன்னாள் டிஜே (DJ) ஆன அதிபர் ராஜோலினா, ஒரு காலத்தில் மடகாஸ்கருக்கு ஒரு புதிய தொடக்கமாகக் காணப்பட்டார். அவர் தனது 34 வயதில் அதிபரானார். ஆப்பிரிக்காவின் இளைய தலைவர் என்ற பெருமையைப் பெற்ற அவர், நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் 2018 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அதிபர் ராஜோலினா திங்கட்கிழமை ஃபேஸ்புக் மூலம் உரையாற்றினார் ஊழல் மற்றும் அடியாட்களின் ஆதிக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் செல்வாக்கை இழந்தார், அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதிகாரம் அவரிடமிருந்து விலகிச் சென்ற போதிலும், அவர் தொடர்ந்து தனது செல்வாக்கை செலுத்த முயற்சித்து வருகிறார். அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்க எதிர்க்கட்சிகள் வாக்களிப்பதற்கு முன்பு தேசிய சபையைக் கலைக்க ராஜோலினா முயன்றார், ஆனால் அது பலனளிக்கவில்லை. செவ்வாயன்று, தேசிய சபை உறுப்பினர்கள் ராஜோலினாவை 130-க்கு ஒன்று என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பதவி நீக்கம் செய்தனர். அவரது சொந்தக் கட்சியான இர்மாரை (Irmar) சேர்ந்த உறுப்பினர்கள் கூட அவருக்கு எதிராகப் பெருமளவில் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு "செல்லாது" என்று ராஜோலினா நிராகரித்தார். மடகாஸ்கரின் அரசியல் விவகாரங்களில் ராணுவம் "தலையிடுவதற்கு" எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) எச்சரித்துள்ளதுடன், "அரசியலமைப்புக்கு முரணான அரசாங்க மாற்றங்களுக்கான எந்தவொரு முயற்சியையும்" நிராகரித்துள்ளது. பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோங், இந்தச் சூழ்நிலை "மிகவும் கவலையளிக்கிறது" என்று கூறியுள்ளார். இந்தத் தீவு நாடு சமீபத்திய ஆண்டுகளில் பல அரசியல் எழுச்சிகளைக் கடந்து வந்துள்ளது. உலக வங்கியின் கூற்றுப்படி, மடகாஸ்கர் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். அதன் 30 மில்லியன் மக்களில் 75% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0kljejn7wo

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 4 days ago
பொதுவாக நவம்பர் மாதம் சென்னையில் மழைக்காலம். இதனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலங்களில் சென்னையில் மழை பெய்யும் என்பதினால் சர்வதேச போட்டிகள் நடைபெறுவது குறைவு. இக்காலங்களில் கொழும்பிலும் மழை பெய்யும். பாகிஸ்தான் இந்தியாவில் விளையாடாத காரணத்தினால் சில போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. போட்டியை இலங்கையில் வைக்காமல், இந்தியாவுக்கு அருகில் இருக்கும் வங்களாதேசத்தில் போட்டியை நடாத்தி இருக்கலாம்.

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

3 weeks 4 days ago
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் தனது விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmgro6se10113o29nihpjx5ac

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

3 weeks 4 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் தனது விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmgro6se10113o29nihpjx5ac