Aggregator

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 2 days ago
லெப். கேணல் குட்டிசிறியின் சிலை திறக்கிறார்கள் 16/01/2007 பரந்தன் சந்தி, கரைச்சி வடக்கு, கிளிநொச்சி குத்துவிளக்கேற்றி திறந்துவைப்பவர் செந்தில் (மட்டுவைச் சேர்ந்த கட்டளையாளர் ஒருவர்) ஆவார். பின்னால் வரியில் நிற்பவர் CASR கட்டளையாளர் கேணல் கோபித் ஆவார். 2009 '2008' 2007

சத்துருக்கொண்டான் படுகொலை : புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம்

4 weeks 2 days ago
மட்டக்கிளப்பு ..எங்களுடையது ..எங்களுக்கே இருக்க இடம் காணாது என்று கனடிய தூதுவரிடம் கண்ணீர் விட்டவை அங்கு கிடங்கு கிண்டி ஆராச்சி செய்ய விடுவினமோ....

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 2 days ago
கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பில் அமைந்திருந்த கல்வெட்டு நடுவில் உள்ள வட்டத்தினுள் புலிச்சின்னம் இருந்தது. நடுவில் உள்ள கல்வெட்டின் அண்மைப்பட்ட படிமம்:

"கோட்டாபய ஒரு கொடுமைக்காரன்"? - ரிஷாத் அதிரடி பேச்சு

4 weeks 2 days ago
உங்கடை வீட்டில் அந்த வேலைக்கார சிறுமியை கொலௌசெய்தது..எந்தக் கணக்கில்...சொப்பிங் பையுடன் புத்தளம்போய்...இன்று 5 வது பணக்காரனாக வந்தது ...கோட்டா , மகிந்தவின் தயவில்தானே ...அதனைவிட..கம்பிவேலிக்குள் இருந்த எத்தனையோ தமிழ் பெண்களை சீரழித்ததுடன் ...கொலையும் செய்தனீர் ...இப்ப வெள்ளையாகிவிட்டீரோ

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 2 days ago
முன்னொரு காலத்தில் புலிகளுடனான சமரொன்றின் போது சேதமடைந்த தெயிம்லர் கவச சகடம் விதம் - 2 (Daimler Armoured Car Mk-II) ஆனையிறவுப் படைத்தளத்தின் முன்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனையிறவுத் தளம் புலிகளிடம் வீழ்ந்த போது இதுவும் அவர்களால் கையகப்படுத்தப்பட்டு பின்னாளில் நினைவுச்சின்னமாக வடபோர்முனையிலிருந்து தந்திர வழிவகையாக பின்வாங்கும் வரை பேணிக்காக்கப்பட்டு வந்தது. 'கரையோரக் காவலரணில் நிறுத்தப்பட்டுள்ளது.' படிமப்புரவு (Image court.): அமரர் சுரேஸ் சுரேந்திரன் "மாமனிதர்" தாராக்கி சிவராம் அவர்கள் இதன் முன்னால் நின்று எடுத்த நிழற்படமானது அவர் தொடர்பில் புகழ்பெற்ற வரலாற்றுப் படிமமாகும். ஆனையிறவு விழாவின் போது(2005) புதிய நிறம் பூசி போலி சுடுகுழலும் சில்லும் பொருத்தி வைத்திருக்கும் காட்சி:

தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், எவ்வாறு முதலுதவி செய்யவேண்டும்?

4 weeks 2 days ago
அவசியம் தெரிய வேண்டிய விடயம். உணவு துகள் மூச்சு குழாயில் சிக்கி திணறல் யாருக்கும் ஏற்படலாம். அவசியம் அனைவரும் அறியவேண்டிய முதலுதவி சிகிச்சை இவை. இணைப்பிற்கு நன்றி @ஏராளன்

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 2 days ago
இடிவாருவக காப்பூர்தி | Bulldozer Protective Vehicle சமர்க்களத்தில் செயலிழக்க செய்யப்பட்ட பின்னர்: புலிகளின் காலத்தில் எடுத்த படிமங்கள் (2003): படிமப்புரவு (Image court.): அமரர் சுரேஸ் சுரேந்திரன் இதை மேஜர் கேசரியும் கப்டன் டக்ளஸும் ஆகாய கடல் வெளி நடவடிக்கையின் (1991) போது செலுத்தினர். புலிகள் இதைக் கவசவூர்தி என்று குறிப்பிடவில்லை என்பதை கவனிக்குக: 2009இற்குப் பின்னான் காலத்தில் எடுத்த படிமங்கள்: ஆகாய கடல்வெளிச் சமரில் பாவிக்கப்பட்ட காப்பூர்திகள் தொடர்பான ஆவணம்:

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

4 weeks 2 days ago
இக்கவசவூர்தியில் எழுதப்பட்டுள்ளவை: "மேஜர் தயாளினி மேஜர் ஐயள் கப்டன் ??ய் கப்டன் மணியிழை" இவர்கள் நால்வரும் சோதியா படையணிப் போராளிகள் ஆவர். இந்தப் போராளிகளே இக்கவச ஆளணி காவியினை அழித்தவர்கள் ஆவர்! இத்தாவில் பெட்டிச் சமரில் அழிக்கப்பட்ட இந்த வகை-63 கவச ஆளணி காவியானது வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு காப்பகம் அமைக்கப்பட்டு 26 மார்ச் 2005 அன்று பளையில் பிரிகேடியர் தீபன் அவர்கள் நாடா வெட்டித் திறந்துவைக்க சோ.தங்கன் அவர்களால் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டு மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

4 weeks 2 days ago
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது ஆண் : நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது வண்ணம் நூறானது வானிலே ஆண் : தீர தீர ஆசையாவும் பேசலாம் மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம் பெண் : என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம் ஆண் : என்னாகிறேன் என்று ஏதாகிறேன் பெண் : எதிா் காற்றிலே சாயும் குடையாகிறேன் ஆண் : எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது அது பறந்தோடுது வானிலே பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது ஆண் : மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மழையிலே அது மழையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே பெண் : வைரம் போல பெண்ணின் மனது உலகிலே அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே ஆண் : கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி பெண் : என் பாதையில் இன்று உன் காலடி ஆண் : நேற்று நான் பாா்ப்பதும் இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம் எதிா் பாா்ப்பதும் ஏனடி ......... ! --- யாா் இந்த சாலை ஓரம் ---

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 2 days ago
•யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து வையுங்க உள்ளே😂 மிஸ்டர் கிளீன் அல்லது திருவாளர் பரிசுத்தம் என்று அழைக்கப்படும் ரணில் அவர்கள் இப்போது மாட்டியிருப்பது பட்டலந்தை முகாம் கொலைகளுக்காக அல்ல. மாறாக மக்கள் பணம் 150 லட்சம் ரூபாவை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியமைக்காகவே. இத்தனை நாளும் தன்னை ஒரு கறை படியாத தூய அரசியல்வாதியாக நடித்து வந்தவரின் ஒரு முகம் இன்று தோலுரிக்கப்பட்டுள்ளது. தெரிந்ததே இவ்வளவு என்றால் தெரியாமல் எவ்வளவு சுருட்டியிருப்பார் இந்த யோக்கியன்? இங்கு வேடிக்கை என்னவென்றால் இது ஒரு அரசியல் பழி வாங்கல் என்று நாமல் ராஜபக்சா கண்ணீர் வடிக்கிறார். ஏனெனில் அடுத்து தன்னையும் கைது செய்து இந்திய நடிகைக்கு கொடுத்த பணம் குறித்து விசாரணை செய்வார்களோ என்ற அச்சம் அவருக்கு.😂 அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சுருட்டி வைத்திருக்கும் மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும். தோழர் பாலன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

4 weeks 2 days ago
காலம் - 13 நவம்பர் 1989 இடம் - பட்டலந்தை வதைமுகாம் விஜயவீரா- என்னை சட்டப்படி நீதிமன்றில் நிறுத்துங்கள். நான் என் கருத்தை அங்கு கூறுகின்றேன். ரணில் - சட்டமாவது மயிராவது. உனது தோழர்கள் 60ஆயிரம் பேரை எப்படி கொன்று புதைத்தோமோ அதேபோன்று உன்னையும் கொல்லப் போகின்றோம். விஜயவீரா- இதற்குரிய பதிலை என் தோழர்கள் ஒருநாள் தருவார்கள். காலம் - 22 ஆகஸ்டு 2025 இடம் - கொழும்பு நீதிமன்றம். அரசு பணத்தை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கிறார். மிஸ்டர் கிளீன் அவர்களின் உண்மை முகம் நாட்டு மக்களுக்கு இனங் காட்டப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர்கள் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அவருக்கு நீரிழிவு நோய், மனைவிக்கு புற்றுநோய் எனவே பிணையில் விடுதலை செய்யுங்கள் என மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளுக்கு பதவியில் இருக்கும்போது எந்த நோயும் இருப்பதில்லை. ஊழல் வழக்கில் கைது செய்தவுடன் எல்லா நோயும் வந்துவிடுகின்றன. செய்தி – பிணை மறுக்கப்பட்டு ரணில் சிறை செல்கிறார். விஜயவீராவின் தோழர்கள் உரிய பதிலை ரணிலுக்கு வழங்கியுள்ளனர். பாராட்டுகள். இது மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். தோழர் பாலன்