3 weeks 3 days ago
சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் : மருந்தகமொன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கைது ! 16 Oct, 2025 | 10:24 AM பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு தீ வைத்து எரித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி மாலை 05.00 மணியளவில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொலைசெய்யப்பட்டவர் காரைநகரைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஆவார். குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் 01.30 மணியளவில் வவுனியாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது கணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கொலை சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கடந்த செவ்வாய்க்கிழமை கொள்ளையிட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் 32 வயதுடைய அதே மருந்தகத்தின் உதவியாளரும் ஆவர். இந்த கொலை சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227853
3 weeks 3 days ago
ஆண்டிகள் கட்டிய மடம் போலுள்ளது. 😁 இவர்களுக்கு, கட்டுக்காசும் கிடைக்குமோ தெரியாது. 😂 முன்னாள் ஒட்டுக் குழுக்களும்… தேர்தல் என்றவுடன், “நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு” மோப்பம் பிடித்து வந்து விடுகின்றார்கள். 🤣
3 weeks 3 days ago
நிச்சயமாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் இவர்களின் குழு…. பெருமளவில் போதைப் பொருள் கடத்தல், கொலை என்று…. தங்களுடைய பணத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்குமாக.. நாட்டு மக்களையும், இளைய சமுதாயத்தையும் சீரளித்துக் கொண்டு இருக்கும் கோர சிந்தனை உடையவர்கள். சில வாரங்களுக்கு முன்…. இந்தக் கும்பலின் 850 கிலோ பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப் பட்டிருந்தது. அந்த 850 கிலோவும் அடுத்த பத்து வருடத்துக்கு இலங்கையின் பாவனைக்கு போதுமானது என்று வாசித்தேன். அத்துடன் எல்லாம் முடிந்தது என்று பெரு மூச்சு விடுவதற்கிடையில்…. நேற்று தெற்கு கடல் பகுதியான தங்காலையில் 840 கிலோ ஐஸ் போதைப் பொருட்கள் 51 சாக்குகளில் கடலில் மிதந்த வண்ணம் இருந்ததை கடற்படையினர் கண்டு எடுத்துள்ளார்கள். இவை எல்லாவற்றின் பெறுமதி பல பில்லியன் ரூபாய்களை தானும் என்கிறார்கள். ஆக…. இந்தப் போதைப் பொருள் வலையமைப்பு இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இதன் ஆணி வேரைத் தேடிப் போனால்… நிச்சயம் பெரும் கொழுத்த அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்பது கசப்பான உண்மை. இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களை, கைது செய்யும் நடவடிக்கையை…. அனுரா அரசை தவிர்ந்த வேறு எந்த அரசும் இவ்வளவு மூர்க்கமாக செய்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோரின் கண்ணசைவுடன்தான் இந்தப் போதைப் பொருள் கடத்தலும், வியாபாரமும் நடந்து கொண்டுள்ளதாக பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள். ஆகவே…. வேரோடும், வேரடி மண்ணோடும் இந்த வலையமைப்பை அழித்து ஒழிக்கும் வரை… கைது செய்யப்பட்டவர்களை முட்டிக்கு முட்டி தட்டி… விசாரிக்க வேண்டும்.
3 weeks 3 days ago
யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல் 16 October 2025 எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில், தமிழ் கட்சிகளின் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கருத்துரைத்தார். இதன்போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்தார். https://hirunews.lk/tm/425595/discussion-on-tamil-parties-joining-forces-in-the-jaffna-provincial-council-elections
3 weeks 3 days ago
யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்
16 October 2025

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில், தமிழ் கட்சிகளின் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கருத்துரைத்தார்.
இதன்போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்தார்.
https://hirunews.lk/tm/425595/discussion-on-tamil-parties-joining-forces-in-the-jaffna-provincial-council-elections
3 weeks 3 days ago
செவ்வந்தி சிரிச்சபடி வந்திறங்குவதையும்..மற்றவர்களுடன் சிரித்து கதைப்பதையும் பார்த்தால் ...ஏன் உவ்வளவு செலவழித்து பொலிசு நடவடிக்கை தேவௌயற்றதுபோல் தெரிகிறது ...டிக்கட் காசை அனுப்பினாலே ..அவராகவே வந்து இறங்கியிருப்பார்..
3 weeks 3 days ago
முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை; முறையாக ஒழுங்குபடுத்தவும் திட்டம் வேலணை பிரதேசசபை உடும்புப்பிடி! வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிதி நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்கவும் சபை தீர்மானித்துள்ளது. வேலணைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும், வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தால் முன்மொழிவொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ‘வறிய மக்களை இலக்கு வைத்து, அதிக வட்டி வீதங்களுடன் பல நுண்நிதி நிறு வனங்கள் கடன்களை வழங்குகின்றன. கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்துக்குள் உள்நுழைந்து மக்களை ஏமாற்றி தமது பொறிக்குள் வீழ்த்துகின்றனர். பெண் தலைமைக் குடும்பங்கள் இத்தகைய நுண்நிதி நிறுவனங்களால் பெரும் சுமைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்கின்றனர். சிலர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் நிலையும் காணப்படுகிறது' என்று உறுப்பினர் அனுசியா ஜெயகாந் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த முன்மொழிவின் அவசியம் கருதி, அதை உறுப்பினர் சு.பிரகலாதன் வழி மொழிந்தார். 'தற்போதுவரை நாற்பதுக்கும் அதிகமான நுண்நிதி நிறுவனங்கள் வேலணை பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் பதிவுகள் அற்றவையாகக் காணப்படுகின்றன' என்று அவர் சுட்டிக்காட்டினார். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரேரணைக்குத் தமது ஆதரவை வழங்கினார்கள். இதையடுத்து, வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்நிதி நிறுவனங்கள் செயற்பட வேண்டுமாயின் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்தவும் திட்டம் அத்துடன், வேலணை பிரதேசத்துக்குள் செயற்படும் நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து எதிர்வரும் வாரமளவில் கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1. மீளச்செலுத்தக்கூடிய நிலைமையை அறிந்து கடன் வழங்குதல், 2. அளவுக்கு அதிகமான வட்டி வீதங்களைப் பேணாது இருந்தல், 3. பெண் தலைமைக் குடும்பங்களுக்கான கடனுதவிகளில் கூடுதலான சகிப்புத்தன்மையைப் பேணுதல், 4. கடன்களை வசூலிக்கும் நேரகாலங்களைப் பேணுதல் ஆகிய விடயங்களில் நுணிநிதி நிறுவனங்களை முறையான ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/article/முறையான_அனுமதி_இல்லாமல்_நுண்நிதி_நிறுவனங்கள்_செயற்படுவதற்குத்_தடை;
3 weeks 3 days ago
முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை;

முறையாக ஒழுங்குபடுத்தவும் திட்டம் வேலணை பிரதேசசபை உடும்புப்பிடி!
வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிதி நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்கவும் சபை தீர்மானித்துள்ளது.
வேலணைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும், வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தால் முன்மொழிவொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
‘வறிய மக்களை இலக்கு வைத்து, அதிக வட்டி வீதங்களுடன் பல நுண்நிதி நிறு வனங்கள் கடன்களை வழங்குகின்றன. கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்துக்குள் உள்நுழைந்து மக்களை ஏமாற்றி தமது பொறிக்குள் வீழ்த்துகின்றனர். பெண் தலைமைக் குடும்பங்கள் இத்தகைய நுண்நிதி நிறுவனங்களால் பெரும் சுமைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்கின்றனர். சிலர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் நிலையும் காணப்படுகிறது' என்று உறுப்பினர் அனுசியா ஜெயகாந் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த முன்மொழிவின் அவசியம் கருதி, அதை உறுப்பினர் சு.பிரகலாதன் வழி மொழிந்தார். 'தற்போதுவரை நாற்பதுக்கும் அதிகமான நுண்நிதி நிறுவனங்கள் வேலணை பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் பதிவுகள் அற்றவையாகக் காணப்படுகின்றன' என்று அவர் சுட்டிக்காட்டினார். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரேரணைக்குத் தமது ஆதரவை வழங்கினார்கள். இதையடுத்து, வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்நிதி நிறுவனங்கள் செயற்பட வேண்டுமாயின் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்தவும் திட்டம் அத்துடன், வேலணை பிரதேசத்துக்குள் செயற்படும் நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து எதிர்வரும் வாரமளவில் கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. மீளச்செலுத்தக்கூடிய நிலைமையை அறிந்து கடன் வழங்குதல்,
2. அளவுக்கு அதிகமான வட்டி வீதங்களைப் பேணாது இருந்தல்,
3. பெண் தலைமைக் குடும்பங்களுக்கான கடனுதவிகளில் கூடுதலான சகிப்புத்தன்மையைப் பேணுதல்,
4. கடன்களை வசூலிக்கும் நேரகாலங்களைப் பேணுதல்
ஆகிய விடயங்களில் நுணிநிதி நிறுவனங்களை முறையான ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
https://newuthayan.com/article/முறையான_அனுமதி_இல்லாமல்_நுண்நிதி_நிறுவனங்கள்_செயற்படுவதற்குத்_தடை;
3 weeks 3 days ago
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள ஆசிரியர்கள் adminOctober 15, 2025 வடமாகாண ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ள்ளனர். போராட்டத்தின் போது வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினுள் போராட்டக்காரர்கள் உட்புக முயற்சித்த வேளை காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் போராட்ட காலத்தில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. https://globaltamilnews.net/2025/221572/
3 weeks 3 days ago
வேலன் சுவாமியை சந்தித்த கஜேந்திரகுமார் adminOctober 15, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமிகளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து , சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார். https://globaltamilnews.net/2025/221567/
3 weeks 3 days ago
வேலன் சுவாமியை சந்தித்த கஜேந்திரகுமார்
adminOctober 15, 2025

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமிகளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து , சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.


https://globaltamilnews.net/2025/221567/
3 weeks 3 days ago
விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்டபின், தமிழ்ப்பிரதேசங்களை ஆக்கிரமித்த இராணுவ, போலீஸ் புலனாய்வுப் பிரிவின் நேரடி, மறைமுக தலையீட்டின் வழிநடத்தலில் செயற்பட்ட ஆவா குழுவாக இருக்கலாமென சந்தேகம் எனது. தெற்கில் பாதாள, போதைக் குழு. வடக்கில் ஆவா குழு. ஆவா என்கிற பெயர் வடக்கில் அறிமுகமானது, இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னே. வடக்கில் தமிழர் தலைமை, அதற்கு பெயர் மட்டும் ஏன் "ஆவா." முன்னைய அரசாங்கம் இராணுவ, போலீசாரை பயன்படுத்தி. தமிழரின் கல்வி, கலாச்சாரம், சுதந்திரம் போன்றவற்றை நிரந்தரமாக அழிக்க, சமூக விரோத செயல்களை ஊக்குவிக்க, திட்டமிட்டு புகுத்தப்பட்ட போதை, வாள்வெட்டு. இதில் முன்னைய அரசாங்கங்களுக்கு பாரிய பங்கு உண்டு. சட்டம், நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களை அதை அழிப்பதற்கும், தங்களை செல்வாக்கை செழிப்பாக்குவதற்கும், பதவிகளை தக்க வைப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டார்கள். அனுரா அரசால் இதை செய்ய முடிந்ததென்றால்; ஏன் முன்னைய அரசாங்கங்களால் இதை செய்ய வேண்டாம், நடவடிக்கை ஏதும் செய்யப்படவில்லை? இப்போ நாமல் என்ன கருத்து வெளியிடப்போகிறார்? கோத்தா முந்திக்கொண்டு, சில போதைக்கும்பல் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, தனக்கு அவர்களுடன் தொடர்பில்லை என கருத்து வெளியிட்டிருக்கிறார். அது ஏன்? சிக்குவாரா முன்னாள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர், நாமலின் நண்பர்?
3 weeks 3 days ago
அவர்: இந்தாய்யா…உண்மையை சொல்லு….நீ பிட்பாக்கெட் அடித்தாயா? இல்லையா? இவர்: நான் ஐநா சபையை பார்த்து கேட்கிறேன்… ஓ ஐ நா சபையே உனக்கு வெட்கம் இல்லையா? எத்தனை கொடுமைகளை நீ கவர் எடுத்து மறைக்கிறாய்…. நான் வத்திக்கனை நோக்கி சவால் விடுகிறேன்…. ஓ …வத்திக்கனே….🤣
3 weeks 3 days ago
யாழ்பாணம்…. படகு….. தமிழ் நாடு….. வட இந்தியா… நேபாளம்…. ஐரோப்பா…. 1991 இல் இன்னொரு முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக தேடப்பட்ட இன்னொரு இலங்கையை சேர்ந்த குழுவும்…. இதே பாதையில் தப்பலாம் என நம்பவைத்து ஏமாற்றப்பட்டதாக சொல்வார்கள். இதை வாசிக்க அன்றைய பத்திரிகை செய்திகள் நினைவுக்கு வந்தது.
3 weeks 3 days ago
இஷாரா செவ்வந்தியுடன் சிக்கிய மிருசுவில் தக்சி நந்தகுமார், பளை சுரேஸ் போன்றோரின் பின்னணி என்ன? அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்காவில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார். சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (வயது 26), கிளிநொச்சி- பளையைச் சேர்ந்த ஜீவதாசன் கனகராசா சுரேஸ் (வயது 33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்சி நந்தகுமார் (வயது 23) தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (வயது 49), யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (வயது35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (வயது 43) ஆகியோரே கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். பேலியகொட குற்றப் பிரிவின் இயக்குநனர் ASP ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் IP கிஹான் டி சில்வா ஆகியோரால் மூன்று நாட்களாக நேபாளத்தில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது. நேபாள காவல்துறை மற்றும் இன்டர்போலின் உதவியுடன், காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி அசங்க கரவிட்ட ஆகியோரின் முழு மேற்பார்வையின் கீழ், கடந்த சனிக்கிழமை (11) முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இஷாரா செவ்வந்தியின் மறைவிடத்தின் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், ரொஹான் ஒலுகலவின் தலைமையில் இந்த சோதனை திட்டமிடப்பட்டது. அதன்படி, காத்மாண்டு சென்ற இலங்கை காவல்துறை அதிகாரிகள், நேபாள காவல்துறையினரை சந்தித்து நடவடிக்கை குறித்து விவாதித்தனர், மேலும் இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த சொகுசு வீட்டிற்கு அடுத்த வீட்டில் தங்கிய பின்னர், விசாரணையைத் தொடங்கினர். இந்த நடவடிக்கையைத் தொடங்கிய நேபாள பொலிசார், முதலில் இஷாரா செவ்வந்தியின் உதவியாளரான கென்னடி பஸ்தியான்பிள்ளை அல்லது ‘ஜே.கே. பாய்’ என்பவரைக் கைது செய்தனர். அவர் தாமெலில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் போது இஷாராவின் இருப்பிடத்தை உறுதிசெய்த பிறகு, நேபாள காவல்துறையின் உதவியுடன் வீடு சோதனை செய்யப்பட்டு, செவ்வந்தி கைது செய்யப்பட்டார். தன்னைக் கைது செய்ய வந்த உதவி காவல் கண்காணிப்பாளரைப் பார்த்தவுடன் திகைத்துப் போன சந்தேக நபர், “ஓலுகல சேர் எனக்குத் தெரியும் நீங்கள் என்னைக் கைது செய்வீர்கள் என்று" இவ்வாறு கூறியுள்ளார் செவ்வந்தி, பக்தபூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, வீட்டு உரிமையாளரிடம் தான் ஒரு இந்திய பெண் என்று கூறி வந்ததாக புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். “அவர் இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றும், சுமார் ஒரு மாதமாக பக்தபூரில் தங்கியிருந்ததாகவும், பெரும்பாலும் தனது அறைக்குள் தங்கியிருந்ததாகவும் கூறினார்” என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார். “ஆபத்தை குறைக்க அவர் வெளியே செல்வதைத் தவிர்த்திருக்கலாம்.” ஒலுகல எப்போதாவது வந்து தன்னைக் கைது செய்வார் என்று நினைத்ததாக இஷாரா செவ்வந்தி கூறினார். ஏழு மாதங்களாக நேபாளத்தில் சிக்கியிருப்பதாகவும், இப்படி இருப்பதை விட இலங்கைக்குச் செல்லலாம் என நினைத்ததாகவும், ஆனால் காவல்துறையினரிடம் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தில் தான் நேபாளத்திலேயே இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார். ஜீவதாசன் கனகராசா மற்றும் தக்சி நந்தகுமார் ஆகியோர் மித்ராபார்க், புதிய பேருந்து நிறுத்தம் அருகே கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில் ஜே.கே. பாய், இஷாரா செவ்வந்தியை படகில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அங்கேயே வைத்திருந்தார், பின்னர் ஆறு நாள் ரயில் பயணத்தின் மூலம் நேபாளத்திற்கு அழைத்துச் சென்றார். கடல் வழியாக குற்றவாளிகளை மற்ற நாடுகளுக்கு கடத்துவதை தனது தொழிலாகக் கொண்ட ஜே.கே. பாய், தனது தொடர்புகளைப் பயன்படுத்தி அவளை எல்லை தாண்டி நேபாளத்திற்கு கொண்டு வந்தார், மேலும் காத்மாண்டுவில் ஒரு வாடகை வீட்டையும் அவருக்கு வழங்கினார். கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு பல நாட்களாக கொழும்பைச் சூழவுள்ள பல பகுதிகளில் தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, பின்னர் மதுகம பகுதிக்கும், அங்கிருந்து மித்தேனியாவிற்கும் தப்பிச் சென்றார். ஜே.கே. பாய் மித்தேனியாவில் அவருடன் சேர்ந்தார், மேலும் அங்கு ஒளிந்து கொள்ள சம்பத் மனம்பேரி என்ற குற்றவாளியின் உதவி அவருக்கு கிடைத்ததா என்ற சந்தேகத்தை போலீசார் எழுப்பியுள்ளனர் இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கெஹல்பத்தர பத்மேவின் கும்பலுடன் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் மற்றும் ஒரு பெண் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, காத்மாண்டுவில் வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு, கெஹல்பத்தர பத்மே கும்பலின் தலைவரான ‘கம்பாஹா பாபா’, அவரை காவலில் இருந்து விடுவிக்க ASP ரொஹான் ஒலுகலவுக்கு ரூ. 5 மில்லியன் லஞ்சம் கொடுக்க முயன்றார், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்து மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் சாவகச்சேரியைச் சேர்ந்த தக்சி என அடையாளம் காணப்பட்டார், மேலும் அவர் இஷாரா செவ்வந்தியை மிகவும் ஒத்த தோற்றமுடையவர். இந்த தமிழ்ப் பெண்ணின் தரவு மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இஷாரா செவ்வந்தியின் பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் அவளை ஐரோப்பாவிற்கு அனுப்ப திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில், ஜே.கே. பாய் இந்தத் திட்டத்தை செயற்படுத்தினார். ஆனால், பத்மே மற்றும் அவரது கும்பல் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டபோது அந்தத் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. கெஹல்பத்தர பத்மேவின் உத்தரவின் பேரில் பெப்ரவரி 19 அன்று அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் கொமாண்டோ வீரரும் பத்மேவின் கும்பலின் துப்பாக்கிச்சூட்டாளராகக் கருதப்படும் கொமாண்டோ சாலிந்து, சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு நீதிமன்ற அறைக்குள் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். இந்தக் கொலையின் உள்ளூர் செயற்பாட்டாளராக செவ்வந்தி செயல்பட்டார், மேலும் அவர் ஒரு சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இந்தக் கொலைத் திட்டம் பல வாரங்களாக கொமாண்டோ சாலிந்துவுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு, இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல மன்னாருக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த கொமாண்டோ சாலிந்த, புத்தளம் பாலாவிப் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார், ஆனால் இஷாரா செவ்வந்தியை கைது செய்ய முடியவில்லை. சஞ்சீவ கொலை செய்யப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. கணேமுல்ல சஞ்சீவ அத்தனகல்ல மற்றும் கம்பஹா நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்டபோது, இஷாரா செவ்வந்தி பல முறை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் கைதானவர்கள் தற்போது இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளனர். Andal Hashini
3 weeks 3 days ago
நன்றி. இவ்வாறு யாழ்க்களத்தில் இன்பம் துய்ப்பதை அனுமதிக்கும் தகுதிகாண் அதிகாரியாகியமைக்கு வாழ்த்துக்கள்🤣. நோ…நோ….சீமானை எதிர்ப்பது என்பது மனைவி மாதிரி மாறாது. விஜை பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்த நல்ல பிகர் மாதிரி. பார்க்கலாம்…ரசிக்கலாம்…என்னதான் இப்படி வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடப்பதா என ஆதங்கப்படலாம்… இவ்வளவு ஏன்…. பாஜகவோட பைக்கில் ஏறி சுற்றினால் சீமானை திட்டுவது போலவே ஏசலாம். இரெண்டையிம் ஒப்பிடவே முடியாது…
3 weeks 3 days ago
டூ வன்னா வை விட்டு விட்டு தலைப்பை வாசித்து ஒரு தரம் கலங்கிட்டேன் நானு🤣
3 weeks 3 days ago
1) அகஸ்தியன் - 33 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
3 weeks 3 days ago
33/35 =0.943 = 94.3% சரியாக புள்ளிகள் பெற்று முன்னிலையில் அகஸ்தியன் இருக்குறார்.
3 weeks 3 days ago
Sania Mirza and Colin Fleming US Open 2012 mixed doubles quarterfinal clip........! 👍