Aggregator

மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

3 weeks ago
காத்தான்குடி முதல் கல்லடி வரை வெள்ளக்காடு Feb 19, 2026 - 11:17 AM கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதுடன், இன்று (19) காலை முதல் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாக 'அத தெரண' செய்தியாளர்கள் தெரிவித்தனர். பலத்த மழை காரணமாக காத்தான்குடி, பூநொச்சிமுனை, நாவலடி, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளாந்த நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாதாரண மக்கள் வாழ்க்கையும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் மீன்பிடி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பாரிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர். தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள பல சிறுவர் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. https://adaderanatamil.lk/news/cmlt0n9v8000q356nldabywht

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்

3 weeks ago
இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம் Published By: Vishnu 19 Feb, 2026 | 04:52 AM (க.சிவலிங்கமூர்த்தி) இலங்கை மின்சார சபையின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 150 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவைப் பார்வையிடுவதற்கான விசேட ஊடக விஜயம் செவ்வாயக்கிழமை (17) நடைபெற்றது. இவ் கள விஜயத்தில் ஊடகவியலாளர் உள்ளடக்கிய குழு புதன்கிழமை (16) ஹம்பாந்தோட்டை கொன்னொருவ பிரதேசத்திற்கு இந்த கள விஜயத்தை மேற்கொண்டது. இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 150 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்ட இந்த பிரம்மாண்டத் திட்டம் 2027 ஆம் ஆண்டளவில் தனது முதலாவது மின்சாரப் பங்களிப்பை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கத் தயாராகி வருவதாக சூரிய பூங்கா கட்டுமான பணிகளின் ஆலோசனை பொறியாளர் திலங்க பண்டார இந்தத் திட்டம் இலங்கையின் மீள்சுழற்சி எரிசக்தி இலக்குகளை அடைவதில் ஒரு பாரிய பாய்ச்சலாக அமையும் எனத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்; சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம் முழுமையாக ஒரு தனியார் துறை முதலீட்டுத் திட்டமாகும். இதற்காக அரசாங்கத்திடமிருந்து எந்தவித நிதிச் செலவுகளும் கோரப்படவில்லை. விக்டோரியா மற்றும் மேல் கொத்மலை நீர்மின் நிலையங்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மீள்சுழற்சி எரிசக்தி திட்டமாக இது அமையவுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் முறையே 70 மெகாவாட் மற்றும் 80 மெகாவாட் என முதலீடுகளைப் பகிர்ந்துள்ளன. இந்த சூரிய சக்தி பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பிற்கு கொண்டு செல்வதற்கான மின் கடத்தல் தொகுதிகளுக்கு சுமார் 16 மில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செலவை இலங்கை மின்சார சபை ஏற்காமல் முதலீட்டாளர்களே அத்தொகுதிகளை நிர்மாணித்து மின்சார சபையிடம் ஒப்படைக்க உள்ளமை ஒரு விசேட அம்சமாகும். தரைவழி சூரிய மின்சக்தித் தொழில்நுட்பத்தில் இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் ஆகச்சிறந்த நவீன முறைகள் இங்கு கையாளப்படுகின்றன. நிலத்தை உச்ச அளவில் பயன்படுத்துவதற்காக, இத்திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய திட்டங்களைப் போலன்றி இங்கு சூரிய மின்தகடுகள் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் மின்தகடுகளுக்குக் கீழே உள்ள இடைவெளியில் காளான்கள் போன்ற குறைந்த சூரிய ஒளி தேவைப்படும் பயிர்களைப் பயிரிடும் விவசாயத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத் துறை நிபுணர்களின் ஆலோசனைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 750 முதல் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்டத்தில் 400 முதல் 500 பேர் வரை நேரடியாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு பராமரிப்புப் பணிகளுக்காக நீண்ட கால அடிப்படையில் மேலும் பலர் உள்வாங்கப்பட உள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் சூழல் நட்பு ரீதியான நில மேலாண்மை முறைகளும் இங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ பகுதியில் அமைந்துள்ள இந்த மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் உருவாகும் இத்திட்டம் வறட்சி காலங்களில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமைவதுடன் நாட்டின் பகல் நேர மின் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/239013

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்

3 weeks ago

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்

Published By: Vishnu

19 Feb, 2026 | 04:52 AM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

இலங்கை மின்சார சபையின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 150 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவைப் பார்வையிடுவதற்கான விசேட ஊடக விஜயம் செவ்வாயக்கிழமை (17) நடைபெற்றது. இவ் கள விஜயத்தில் ஊடகவியலாளர் உள்ளடக்கிய குழு புதன்கிழமை (16) ஹம்பாந்தோட்டை கொன்னொருவ பிரதேசத்திற்கு இந்த கள விஜயத்தை மேற்கொண்டது.

இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 150 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்ட இந்த பிரம்மாண்டத் திட்டம் 2027 ஆம் ஆண்டளவில் தனது முதலாவது மின்சாரப் பங்களிப்பை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கத் தயாராகி வருவதாக சூரிய பூங்கா கட்டுமான பணிகளின் ஆலோசனை பொறியாளர் திலங்க பண்டார இந்தத் திட்டம் இலங்கையின் மீள்சுழற்சி எரிசக்தி இலக்குகளை அடைவதில் ஒரு பாரிய பாய்ச்சலாக அமையும் எனத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;

சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம் முழுமையாக ஒரு தனியார் துறை முதலீட்டுத் திட்டமாகும். இதற்காக அரசாங்கத்திடமிருந்து எந்தவித நிதிச் செலவுகளும் கோரப்படவில்லை. விக்டோரியா மற்றும் மேல் கொத்மலை நீர்மின் நிலையங்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மீள்சுழற்சி எரிசக்தி திட்டமாக இது அமையவுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் முறையே 70 மெகாவாட் மற்றும் 80 மெகாவாட் என முதலீடுகளைப் பகிர்ந்துள்ளன.

இந்த சூரிய சக்தி பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பிற்கு கொண்டு செல்வதற்கான மின் கடத்தல் தொகுதிகளுக்கு சுமார் 16 மில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செலவை இலங்கை மின்சார சபை ஏற்காமல் முதலீட்டாளர்களே அத்தொகுதிகளை நிர்மாணித்து மின்சார சபையிடம் ஒப்படைக்க உள்ளமை ஒரு விசேட அம்சமாகும். தரைவழி சூரிய மின்சக்தித் தொழில்நுட்பத்தில் இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் ஆகச்சிறந்த நவீன முறைகள் இங்கு கையாளப்படுகின்றன.

நிலத்தை உச்ச அளவில் பயன்படுத்துவதற்காக, இத்திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய திட்டங்களைப் போலன்றி இங்கு சூரிய மின்தகடுகள் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் மின்தகடுகளுக்குக் கீழே உள்ள இடைவெளியில் காளான்கள் போன்ற குறைந்த சூரிய ஒளி தேவைப்படும் பயிர்களைப் பயிரிடும் விவசாயத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத் துறை நிபுணர்களின் ஆலோசனைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 750 முதல் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்டத்தில் 400 முதல் 500 பேர் வரை நேரடியாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு பராமரிப்புப் பணிகளுக்காக நீண்ட கால அடிப்படையில் மேலும் பலர் உள்வாங்கப்பட உள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் சூழல் நட்பு ரீதியான நில மேலாண்மை முறைகளும் இங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ பகுதியில் அமைந்துள்ள இந்த மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் உருவாகும் இத்திட்டம் வறட்சி காலங்களில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமைவதுடன் நாட்டின் பகல் நேர மின் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/239013

டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?

3 weeks ago
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் டெல்லி உச்சிமாநாடு! Feb 19, 2026 - 09:07 AM செயற்கை நுண்ணறிவு (AI) இன்று உலகைப் புதிய தொழில்நுட்ப யுகத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு பலமான சக்தியாக மாறி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், மனித குலத்தின் நன்மைக்காக AI-ஐப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 'AI Impact Summit 2026' புதுடெல்லியில் நடைபெறுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். மாநாடு கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. "People, Planet, Progress" – கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் “People, Planet, Progress” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிமாநாடு, AI மூலம் பொருளாதார வளர்ச்சி, சமூக சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. விசேடமாக வளரும் நாடுகளுக்கு AI தொழில்நுட்பத்தின் அணுகலை விரிவுபடுத்துவது குறித்த ஆழமான கலந்துரையாடல்கள் இங்கு இடம்பெறுகின்றன. இம்மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்பத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதுடன், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் மற்றும் ஜென்சன் ஹுவாங் போன்ற தலைவர்கள் பிரதான உரைகளை நிகழ்த்தினர். மேலும் அரசாங்கப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள் எனப் பெருமளவானோரும் இதில் இணைந்துள்ளனர். மாநாட்டுக்கு இணையாக AI Expo, Hackathon போட்டிகள், ஆராய்ச்சி மாநாடு மற்றும் கொள்கை உரையாடல் தொடர்களும் நடைபெற்று வருவதுடன், சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் புதிய AI தீர்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இலங்கையின் பங்கேற்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 'AI Impact Summit 2026' இல் கலந்துகொள்வதற்காக நேற்று (18) புதுடெல்லியைச் சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று (19) மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், இந்த விஜயத்தின் போது பல இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் இணைந்துள்ளனர். உலகளாவிய கொள்கைகள் மற்றும் பொறுப்புகள் AI இன் தாக்கம் எல்லையற்றது என்பதால், அதனைப் பொறுப்புடனும் நியாயமாகவும் பயன்படுத்துவது குறித்த சர்வதேச கவனம் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், G20 AI கொள்கைகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (GPAI) போன்ற செயற்திட்டங்கள், AI இற்கான பொறுப்பான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளாகக் கருதப்படுகின்றன. இந்த அனைத்து முயற்சிகளும் AI என்பது ஒரு நாட்டுக்கு மாத்திரம் சொந்தமான தொழில்நுட்பம் அல்ல, மாறாக முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய விடயம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. AI – ஒரு வாய்ப்பா? ஆபத்தா? AI மூலம் கல்வி, சுகாதாரம், விவசாயம், நிதிச் சேவைகள் மற்றும் அரச நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த முடியும் என்பதுடன், வளரும் நாடுகளுக்கு "விரைவான முன்னேற்றத்தை" அடைவதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது. பன்மொழி மற்றும் பல்லூடக திறன்கள் ஊடாக, இதற்கு முன்னர் அணுகலைப் பெறாத மக்கள் கூட்டங்களுக்குக் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பெருமளவில் விரிவுபடுத்த முடியும். எனினும், அந்த வாய்ப்புகளுடன் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், தரவுச் சார்புநிலை, தனியுரிமைப் பிரச்சினைகள் மற்றும் சக்தி நுகர்வு போன்ற ஆபத்துகளும் உள்ளன. எனவே AI தொடர்பான பதில் நடவடிக்கைகள் கொள்கை ரீதியான அறிவிப்புகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், செயற்பாட்டு ரீதியான மற்றும் அளவிடக்கூடிய கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நோக்கி நகர்வது அத்தியாவசியமானதாகும். 'AI Impact Summit 2026' அந்த உரையாடலை உலகளாவிய மட்டத்திற்குக் கொண்டு சென்று, செயற்கை நுண்ணறிவு ஊடாக எதிர்கால உலகைக் கட்டியெழுப்பும் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான தளமாக முன்னோக்கி வருகிறது. https://adaderanatamil.lk/news/cmlswpp2r000m356n0ga6ovvg

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

3 weeks ago
மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் Published By: Vishnu 19 Feb, 2026 | 04:46 AM மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் புதன்கிழமை (18) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில், இக் கலந்துரையாடலின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் எனவும், இதனூடாக பல்வேறு இணைந்த உட்கட்டமைப்பு வசதிகள் அதனுடன் இணைந்த சேவைகள் போன்றவை தொடர்பாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை கையாளுவதாகவும், இவ் மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும், வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின் வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்து சர்வதேச விளையாட்டு மைதானம் தொடர்பான பல்வேறு கருத்தாடல்களை பகிர்ந்து கொள்ளுமாறும் தெரிவித்துக் கொண்டார். இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் எஸ். அசோக், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான எஸ் கபிலன், விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் டிலும் தயாரத்தின, இலங்கை கிரிக்கெட் சங்கத்தினைச் சேர்ந்த சாலக்கா என். சில்வா மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ பெரேரா, மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் ரி. அகிலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரன்நாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, நில அளவைகள் திணைக்கள சிரேஷ்ட அத்தியட்சகர் எம். தர்மபால, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/239012

புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00

3 weeks ago
இலங்கையில் தமிழர்களின் அழிவிற்கு காரணமானவர்கள்தான்; உக்கிரேனின் இறையாண்மைக்காக உயிரையும் கொடுக்க தயாராக உள்ளார்கள். உக்கிரேனைனும் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிகார சக்திகளின் இருப்பிற்காக இரு தரப்பும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் அழிவிற்கு காரணமாக இருந்தது ஒற்றை துருவ உலக ஒழுங்கு மாற்றம் (அமெரிக்க உலக ஏகாதிபத்தியம்). இதன் மையக்கோட்பாடு நாடுகளுக்கிடையே அமைதியினை முன்னெடுப்பதற்கு ஏதுவானது தாராளமயமாக்கம் (லிபரலிசம்), நாடுகள் பொருளாதார ரீதியாக ஒன்றோடொன்று தங்கியிருக்கும் நிலையில் போர் சாத்தியமற்றது, இந்த தாராள மயமாக்கலின் பண்பாக ஜன்நாயகம், ஊடக சுதந்திரம், அதிகார பரவலான நிலை (சர்வாதிகாரமற்ற) காணப்படல் வேண்டும், அதன் மூலம் போரினை தவிர்க்கலாம். நேட்டோ விரிவாக்கம் கூட அதன் ஒரு பங்காக அவர்கள் கூறுகிறார்கள், நாடுகளுக்கெதிராக நேரடியான போரிற்கு பதிலாக மெதுவான அழுத்தம் (Soft power)என கூறும் பொருளாதார தடையினை அமைதிக்கு குந்தகமான நாடுகளிற்கெதிராக பயன்படுத்தப்பட்டது, அதே நேரம் உள்நாட்டு பிரச்சினைக்கு உலக அமைதியினை கருத்திற்கொண்டு பாதிக்கப்படும் நாடுகளுக்கு தேவையான வன் அழுத்த உதவிகள் வழங்கப்பட்டது (இலங்கை உட்பட). இரஸ்சிய உக்கிரேன் போர் என்பது ஒரு பல்துருவ உலக ஒழுஙில் ஏற்படும் ஒரு பிரச்சினை, ஆரம்பத்தில் உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பத்தில் யாழ் களத்தில் சிலர் இந்த வேறுபாட்டினை கூறியிருந்தார்கள். ஒட்டோ பிஸ்மார்க் (இவர்தான் முதலாவது ஜேர்மன் அதிபர்) சுதந்திர போலந்து தமது இருப்பிற்கு ஆபத்து அதனால் அவர்களை மண்ணோடு மண்ணாக்கவேண்டும் என கூறினார் என கூறப்படுகிறது. அதிகார சக்திகளுக்கிடையே மாட்டிக்கொள்ளும் அப்பாவி நாடுகளதும் மனிதர்களதும் நிலை இதுதான். இந்த பல்துருவ உலக ஒழுங்கு என்பது 18, 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய நிகழ்வுகள் போல காணப்படுகின்றது. பல்துருவ உலக ஒழுங்கு ஒரு அமைதியற்ற பல போர்களுக்கு வழி வகுக்கும், காலமாற்ற புரிதல் இல்லாவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல் போய்விடும். தற்போது நிகழும் இந்த போரில் அமெரிக்கா ஒதுங்கிவிட்டது, ஐரோப்பாவிற்கும் இரஸ்சியாவிற்குமிடையே நிகழும் இந்த போர் சில காலத்திற்கு நீண்டு செல்ல வாய்ப்புள்ளது. இராணுவ அழுத்தத்துடன் பொருளாதார அழுத்தத்தினை தொடர்ந்து இரஸ்சியாவின் மீது பிரயோகித்தால் இரஸ்சியா முறிவடையும் என நம்புகிறார்கள். இரஸ்சியாவுடன் பேச வேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் கூறுவது பிளான் " பி", ஆனால் போர்தான் முதலாவது தெரிவாக உள்ளது. செய்திகளினடிப்படையில் உலக நகர்வுகளை பார்த்தால் அது ஒரு தவறான பக்கத்தினை காட்டிவிடும் என கருதுகிறேன், கதைகள் செய்திகளாக்கப்படும் யுகத்தில் வாழ்கிறோம். லிபரலிசத்தினை யதார்த்தவாதிகள் அமைதிக்கும் போருக்கும் காரணமானவர்கள் என கூறுகிறார்கள், யதார்த்தவாதிகளின் கூற்றுக்கு சரியான உதாரணம் உக்கிரேன் இரஸ்சிய யுத்தம்.

நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்

3 weeks ago
நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் Published By: Vishnu 19 Feb, 2026 | 04:21 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாதது. நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இதனை நாங்கள் எதிர்க்கிறோம். ஜனநாயக ரீதியில் மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது; உணவுப் பொருட்கள் நிர்ணய விலைக்கு அமைய எங்கும் விற்பனை செய்யப்படுவதில்லை. அதிகாரிகள் இந்த விடயத்தில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். இந்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக இந்த அரசாங்கம் கவனம் செலுத்தும் நிலையில் மக்கள் நியாயமான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புகையிரத போக்குவரத்து நிலையில்லாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக இரவு நேர மன்னார் புகையிரத போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அரசாங்கம் மிக மோசமான விடயத்தை செய்ய முயற்சிக்கின்றது. மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல், மாகாண சபை நிழல் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மாகாண சபைகளின் அமைச்சுக்களை உருவாக்கி,ஆளுநர் தலைமையில் அதிகாரிகளை சந்தித்து அரசாங்கம் போன்று நடத்தும் வகையில் அரசியலமைப்பில் இல்லாத விடயத்தை செய்வதற்கு அரசாங்கம் செயற்படுத்த முயற்சிக்கிறது. இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாத முறையே. இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். இதனை நிறுத்தி மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/239007

நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்

3 weeks ago

நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்

Published By: Vishnu

19 Feb, 2026 | 04:21 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாதது. நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இதனை நாங்கள் எதிர்க்கிறோம். ஜனநாயக ரீதியில் மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;

உணவுப் பொருட்கள் நிர்ணய விலைக்கு அமைய எங்கும் விற்பனை செய்யப்படுவதில்லை. அதிகாரிகள் இந்த விடயத்தில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். இந்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக இந்த அரசாங்கம் கவனம் செலுத்தும் நிலையில் மக்கள் நியாயமான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புகையிரத போக்குவரத்து நிலையில்லாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக இரவு நேர மன்னார் புகையிரத போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அரசாங்கம் மிக மோசமான விடயத்தை செய்ய முயற்சிக்கின்றது. மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல், மாகாண சபை நிழல் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மாகாண சபைகளின் அமைச்சுக்களை உருவாக்கி,ஆளுநர் தலைமையில் அதிகாரிகளை சந்தித்து அரசாங்கம் போன்று நடத்தும் வகையில் அரசியலமைப்பில் இல்லாத விடயத்தை செய்வதற்கு அரசாங்கம் செயற்படுத்த முயற்சிக்கிறது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாத முறையே. இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். இதனை நிறுத்தி மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/239007

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

3 weeks ago
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக மீனவர்கள் கைது! Feb 19, 2026 - 09:29 AM இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlsxfzod000n356niddicu6d

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 weeks ago
நமிபியாவை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றில் இணைந்தது பாகிஸ்தான்; 2026 ரி20 உலகக் கிண்ணத்தில் சாஹிப்ஸதா சதம் குவித்த மூன்றாவது வீரரானார் Published By: Vishnu 18 Feb, 2026 | 10:13 PM (நெவில் அன்தனி) கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பி குழு போட்டியில் நமிபியாவை நையப்புடைத்து 102 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், கடைசி அணியாக ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8கள் சுற்றில் விளையாட தகுதிபெற்றது. இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சதம் குவித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்ற பாகிஸ்தான் வீரர் சாஹிப்ஸதா பர்ஹான் தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் உஸ்மான் தாரிக் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் பாகிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. சாஹிப்ஸதா பர்ஹான், சய்ம் அயூப் (14) ஆகிய இருவரும் 31 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து ஒரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து அணித் தலைவர் சல்மான் அலி அகாவுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 67 ஓட்டங்களை சாஹிப்ஸதா பர்ஹான் பகிர்ந்தார். சல்மான் அலி அகா (38), கவாஜா நபே (5) ஆகிய இருவரும் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து சாஹிப்ஸதா பர்ஹான், ஷதாப் கான் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். போட்டியின் கடைசி ஓவரில் சாஹிப்ஸதா பர்ஹான் சதத்தைப் பூர்த்திசெய்தார். அவர் 57 பந்துகளில் சதத்தைப் பூர்த்திசெய்ததுடன் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 100 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ரி20 உலகக் கிண்ணத்தில் இது அவரது முதலாவது சதமாகும். அத்துடன் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சதம் குவித்த இரண்டாவது பாகிஸ்தானியர் சாஹிப்ஸதா பர்ஹான் ஆவார். பாகிஸ்தான் சார்பாக முதலாவது ரி20 உலகக் கிண்ண சதம் குவித்தவர் அஹ்மத் ஷெஹ்ஸாத் ஆவார். அவர் பங்களாதேஷுக்கு எதிராக 2014இல் சதம் குவித்திருந்தார். மேலும் 19 வருட ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இந்த வருடமே ஒரே அத்தியாயத்தில் மூன்று பேர் சதம் குவித்துள்ளனர். பெத்தும் நிஸ்ஸன்க (இலங்கை), யுவ்ராஜ் சர்மா (இத்தாலி), சாஹிப்ஸதா பர்ஹான் (பாகிஸ்தான்) ஆகியோர் இந்த வருட உலகக் கிண்ணத்தில் கடந்த 3 தினங்களில் சதங்கள் குவித்ததுடன் மூவரும் ரி20 உலகக் கிண்ணத்தில் கன்னி சதங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 17.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் லோரென் ஸ்டீன்காம்ப் (23), மத்திய வரிசை வீரர் அலெக்ஸாண்டர் பசிங் வோல்ஸ்சென்க் (20) ஆகிய இருவரே ஒற்றை இலக்க எண்ணிக்கையைக் கடந்தனர். பந்துவீச்சில் உஸ்மான் தாரிக் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3.3 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷதாப் கான் 4 ஒவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சாஹிப்ஸதா பர்ஹான் https://www.virakesari.lk/article/239002

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க

3 weeks ago
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க 18 Feb, 2026 | 07:05 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கல்ல, கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள். இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, புகையிரத தொழிற்சங்கத்தினர் நேற்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த போராட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். தித்வா புயல் தாக்கத்துக்கு முன்னர் புகையிரத சேவை நாடளாவிய ரீதியில் 1700 கிலோமீற்றர் தூரத்தை வரையறுத்ததாக காணப்பட்டது. டித்வா புயல் தாக்கத்துக்கு பின்னர் 400 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக புகையிரத சேவை காணப்பட்டது. ஆனால் தற்போது புகையிரத சேவை 1200 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்பால் சேதமடைந்த புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத பாலங்களை குறுகிய காலத்துக்குள் புனரமைக்க முடிந்தது. புகையிரத திணைக்கள சேவையாளர்கள் மாத்திரம் புகையிரத பாதைகளை புனரமைக்கவில்லை. முப்படையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் புகையிரத பாதைகளை மறுசீரமைக்க குறைந்தது ஒரு வருடமேனும் சென்றிருக்கும். இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கல்ல, இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள்.இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/238998

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க

3 weeks ago

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க

18 Feb, 2026 | 07:05 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கல்ல, கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள். இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

புகையிரத தொழிற்சங்கத்தினர் நேற்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த போராட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். தித்வா புயல் தாக்கத்துக்கு முன்னர் புகையிரத சேவை நாடளாவிய ரீதியில் 1700 கிலோமீற்றர் தூரத்தை வரையறுத்ததாக காணப்பட்டது.

டித்வா புயல் தாக்கத்துக்கு பின்னர் 400 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக புகையிரத சேவை காணப்பட்டது. ஆனால் தற்போது புகையிரத சேவை 1200 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்பால் சேதமடைந்த புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத பாலங்களை குறுகிய காலத்துக்குள் புனரமைக்க முடிந்தது.

புகையிரத திணைக்கள சேவையாளர்கள் மாத்திரம் புகையிரத பாதைகளை புனரமைக்கவில்லை. முப்படையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் புகையிரத பாதைகளை மறுசீரமைக்க குறைந்தது ஒரு வருடமேனும் சென்றிருக்கும்.

இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கல்ல,

இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள்.இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/238998

இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்

3 weeks ago
'மடை திறந்து தாவும் நதியலை நான்' - இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்ட பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை? பட மூலாதாரம்,X/ilaiyaraaja கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 18 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் 'சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசை படைப்புகளை (musical works) பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது' என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 'இளையராஜாவின் இசையில் வெளியான 134 படங்களுக்கு இது பொருந்தும்' எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள படங்கள் என்னென்ன? அதில் பிரபல 15 பாடல்கள் எவை? சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. மனுவில், 'தங்கள் நிறுவனம் 1976 முதல் 2001-ஆம் ஆண்டு வரை படத்தின் தயாரிப்பாளர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது' எனக் கூறியுள்ளது. இந்தப் படங்களின் ஒலிப்பதிவுகள், இசை படைப்புகளின் உரிமை தங்களிடம் உள்ளதாகவும் தங்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சரிகம இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களின் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக மனுவில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. படக்குறிப்பு,டெல்லி உயர் நீதிமன்றம் 'தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், 'கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா வழங்கியுள்ளார்' என்கிறது. '1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி படத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்தவகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்நிறுவனம் கூறியது. பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது. அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல், பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், 'ஆகாய கங்கை' ஆகிய பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja 'ஈடுசெய்ய இயலாத இழப்பு' - நீதிபதி வழக்கின் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, 'பட்டியலிடப்பட்டுள்ள திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருக்கும் ஒலிப்பதிவுகள், இசை ஆகியவற்றை பயன்படுத்துதல் அல்லது உரிமை கோரல்களை மேற்கொள்ளக் கூடாது' எனக் கூறி, இளையராஜா மற்றும் அவர் சார்ந்த நபர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. 'அவ்வாறு தடை விதிக்கப்படாமல் இருந்தால் சரிகம நிறுவனத்துக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பு ஏற்படும்' எனவும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். வழக்கில் இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் நான்கு வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். இதுதொடர்பாக, இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரையிடம் பிபிசி தமிழ் பேசியது. "தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்த பிறகு பேசுகிறேன்" என்று அவர் பதில் அளித்தார். படக்குறிப்பு,சரவணன் அண்ணாதுரை நீதிமன்ற உத்தரவில், இளையராஜாவின் இசையில் 1976-ஆம் ஆண்டு வெளியான 'பத்திரகாளி' படம் முதல் 2001-ஆம் ஆண்டு வெளியான 'உசிரே' என்ற கன்னட படம் வரையில் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. 'பாரதி கண்ணம்மா' படத்தின் கன்னட ரீமேக் ஆக 2001-ஆம் ஆண்டு 'உசிரே' படம் வெளியாகியிருந்தது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இளையராஜா இசையமைத்துள்ள 134 படங்களின் பட்டியலை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2000-ஆம் ஆண்டில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளியான 'பாரதி' படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் அந்நிறுவனம் உரிமை கோரியுள்ளது. நீதிமன்றத்தில் சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் பட்டியலிட்டுள்ள இளையராஜா இசையமைத்த பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை? 'செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே...' பட மூலாதாரம்,Youtube/Pyramid Glitz Music படக்குறிப்பு,'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார் 1977-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் '16 வயதினிலே' படம் வெளியானது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தனிக்கவனம் பெற்றன. கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார். 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததென்ன' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்ற 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா...' பாடலை மலேசியா வாசுதேவன், பி.சுசீலா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். 'என் கண்மணி உன் காதலி...' 1978-ஆம் ஆண்டு தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 'சிட்டுக்குருவி' படம் வெளியானது. சிவக்குமார், சுமித்ரா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா பாடிய 'என் கண்மணி உன் காதலி இளமாங்கனி... உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே' என்ற பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. பேருந்து பயணத்தில் காதலனும் காதலியும் பாடுவதுபோல இந்தப் பாடலின் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதே படத்தில் 'அடடடா மாமரக் கிளியே...உன்னை இன்னும் நான் மறக்கலியே' என்ற பாடலும் 'உன்ன நம்பி நெத்தியிலே... பொட்டு வச்சேன் மத்தியிலே' ஆகிய பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன. 'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...' பட மூலாதாரம்,Youtube/GLV படக்குறிப்பு,கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ பாடலின் காட்சி 1978-ஆம் ஆண்டு 'கிழக்கே போகும் ரயில்' வெளியானது. '16 வயதினிலே' படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்ற 'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...' பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய 'பூவரசம் பூ பூத்தாச்சு...' பாடல், ஜெயச்சந்திரனின் குரலில் இடம்பெற்ற 'மாஞ்சோலை கிளிதானா...மான்தானோ...வேப்பம்தோப்பு குயிலும் நீதானோ' ஆகிய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர். 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...' 1978-ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' படம், எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய நாவலின் கதையை மையமாக வைத்து உருவாகியிருந்தது. படத்தில் கண்ணதாசனின் வரிகளில் உருவான 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...' பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். இது ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறியது. அடுத்து, பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற 'அடி பெண்ணே...பொன்னூஞ்சல் ஆடும் இளமை...வண்ணங்கள் தோன்றும் இயற்கை' என்ற பாடலை ஜென்சி பாடியிருந்தார். இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய இரு பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் எழுதிய 'நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மணக்கும் கத்திரிக்காய்... நேத்து வச்சு மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா' என்ற பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார். அடுத்து, 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எல்.ஆர்.அஞ்சலியும் இணைந்து பாடியிருந்தனர். பட மூலாதாரம்,x படக்குறிப்பு,இளையராஜா இசையமைத்த பல பாடல்களுக்கு கங்கை அமரன் வரிகளை எழுதியுள்ளார். 'ஆகாய கங்கை... பொன்தேன் மலர் சோலை' 1979-ஆம் ஆண்டு ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'தர்மயுத்தம்' படம் வெளியானது. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்திருந்த இந்தப் படத்தில் 'ஆகாய கங்கை பொன்தேன் மலர் சோலை...' என்ற பாடல் வரவேற்பைப் பெற்றது. எம்.ஜி.வல்லபனின் வரிகளில் இடம்பெற்ற இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்ற 'ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு' பாடலும் ரசிகர்களை ஈர்த்தது. கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். 'ஆயிரம் மலர்களே... அமுத கீதம் பாடுங்கள்' பட மூலாதாரம்,Youtube/pyramid music படக்குறிப்பு,ஆயிரம் மலர்களே பாடலின் காட்சி 1979-ஆம் ஆண்டு வெளிவந்த 'நிறம் மாறாத பூக்கள்' படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா, விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் 'ஆயிரம் மலர்களே... மலருங்கள்... அமுதகீதம் பாடுங்கள்' என்ற பாடலை ஜென்சி, எஸ்.பி.சைலஜா, மலேசியா வாசுதேவன் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். 'மலர்களில் ஆடும் இளமை புதுமையே' கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் 1979-ஆம் ஆண்டு 'கல்யாணராமன்' படம் வெளியானது. ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றன. மலேசியா வாசுதேவன் பாடிய 'ஆஹா வந்துருச்சு....காதல் வந்துருச்சு... ஆசையில் ஓடிவந்தேன்' பாடல், 'காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்...' பாடலும் எஸ்.பி.சைலஜா பாடிய 'மலர்களில் ஆடும் இளமை புதுமையே.. மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே...' ஆகியவை கவனம் பெற்றன. 'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி..' 1979-ஆம் ஆண்டு வெளியான 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் சிவகுமார், தீபா உன்னிமேரி உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடிய 'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி...' பாடலும் 'மாமன் ஒருநாள் மல்லிகைப் பூ கொடுத்தான்...' என்ற பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன. 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்...' 1980-ஆம் ஆண்டு வெளியான 'கல்லுக்குள் ஈரம்' படத்தை எஸ்.பி.நிவாஸ் இயக்கியிருந்தார். படத்தில் பாரதிராஜா, சுதாகர், அருணா ஆகியோர் நடித்திருந்தனர். கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்... இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்..' பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். 'பொதுவாக என் மனசு தங்கம்...' பட மூலாதாரம்,Youtube/AP international படக்குறிப்பு,பொதுவாக என் மனசு தங்கம் பாடலின் காட்சி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு 'முரட்டுக்காளை' படம் வெளியானது. ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்...' பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். 'எந்தப் பூவிலும் வாசம் உண்டு... எந்தப் பாட்டிலும் ராகம் உண்டு...' என்ற பாடலையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். இந்தப் பாடலுக்கு எஸ்.ஜானகியின் குரல் தனி அழகைக் கொடுத்தது. 'மடை திறந்து தாவும் நதியலை நான்...' பாரதிராஜா இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு 'நிழல்கள்' படம் வெளியானது. இந்தப் படத்தில் சந்திரசேகர், ரோகிணி, ராஜசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் வாலியின் வரிகளில் இடம்பெற்ற 'மடை திறந்து தாவும் நதியலை நான்... மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்...' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்...' பாடலும் வைரமுத்து எழுதிய 'இது ஒரு பொன்மாலைப் பொழுது... வான மகள் நாணுகிறாள்..' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்...' 1981-ஆம் ஆண்டு ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் 'மீண்டும் கோகிலா ' படம் வெளியானது. கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி...' என்ற பாடலை கே.ஜே.யேசுதாசும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்ற 'ராதா.. ராதா.. நீ எங்கே.. கண்ணன் எங்கே... நான் அங்கே' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். 'ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்...' பட மூலாதாரம்,Youtube/ Bayshore Records படக்குறிப்பு,ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம் பாடலின் காட்சி 1981-ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 'நெற்றிக்கண்' படம் வெளியானது. இந்தப் படத்தில் தந்தை - மகன் என இரு வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். படத்தில் கே.ஜே.யேசுதாஸ், ஜானகி ஆகியோர் இணைந்து பாடிய 'ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்... ராமாயணம்...பாராயணம்... காதல் மங்கலம்' பாடலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய 'தீராத விளையாட்டு பிள்ளை... இவன் சிங்கார மன்மதன் தான் சந்தேகம் இல்லை..' பாடலும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் இடம்பெற்ற 'மாப்பிள்ளைக்கு மாமன் மனசு...' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் பி.சுசீலாவும் இணைந்து பாடியிருந்தனர். 'அந்தி மழைபொழிகிறது...' 1981-ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 'ராஜ பார்வை' படம் வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், மாதவி ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற 'அந்தி மழைபொழிகிறது... ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது' பாடல் அதிக கவனம் பெற்றது. இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி..' பாக்கியராஜ் இயக்கத்தில் 1982-ஆம் ஆண்டு 'தூறல் நின்னு போச்சு' படம் வெளியானது. இந்தப் படத்தில் பாக்கியராஜ், சுலோசனா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய 'ஏரிக்கரை பூங்காற்றே... நீ போற வழி தென்கிழக்கோ' பாடலை சிதம்பரநாதன் எழுதியிருந்தார். இதே படத்தில் வைரமுத்துவின் வரிகளில் 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ...' பாடலும் முத்துலிங்கம் வரிகளில் 'பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்' பாடலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2xe7e812po

இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்

3 weeks ago

'மடை திறந்து தாவும் நதியலை நான்' - இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்ட பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை?

இளையராஜா

பட மூலாதாரம்,X/ilaiyaraaja

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 18 பிப்ரவரி 2026

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

'சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசை படைப்புகளை (musical works) பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது' என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

'இளையராஜாவின் இசையில் வெளியான 134 படங்களுக்கு இது பொருந்தும்' எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள படங்கள் என்னென்ன? அதில் பிரபல 15 பாடல்கள் எவை?

சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

மனுவில், 'தங்கள் நிறுவனம் 1976 முதல் 2001-ஆம் ஆண்டு வரை படத்தின் தயாரிப்பாளர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது' எனக் கூறியுள்ளது.

இந்தப் படங்களின் ஒலிப்பதிவுகள், இசை படைப்புகளின் உரிமை தங்களிடம் உள்ளதாகவும் தங்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சரிகம இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களின் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக மனுவில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்

படக்குறிப்பு,டெல்லி உயர் நீதிமன்றம்

'தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்'

தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், 'கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா வழங்கியுள்ளார்' என்கிறது.

'1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி படத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அந்தவகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்நிறுவனம் கூறியது.

பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது.

அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல், பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், 'ஆகாய கங்கை' ஆகிய பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இளையராஜா

பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja

'ஈடுசெய்ய இயலாத இழப்பு' - நீதிபதி

வழக்கின் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, 'பட்டியலிடப்பட்டுள்ள திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருக்கும் ஒலிப்பதிவுகள், இசை ஆகியவற்றை பயன்படுத்துதல் அல்லது உரிமை கோரல்களை மேற்கொள்ளக் கூடாது' எனக் கூறி, இளையராஜா மற்றும் அவர் சார்ந்த நபர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

'அவ்வாறு தடை விதிக்கப்படாமல் இருந்தால் சரிகம நிறுவனத்துக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பு ஏற்படும்' எனவும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வழக்கில் இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் நான்கு வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரையிடம் பிபிசி தமிழ் பேசியது.

"தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்த பிறகு பேசுகிறேன்" என்று அவர் பதில் அளித்தார்.

சரவணன் அண்ணாதுரை

படக்குறிப்பு,சரவணன் அண்ணாதுரை

நீதிமன்ற உத்தரவில், இளையராஜாவின் இசையில் 1976-ஆம் ஆண்டு வெளியான 'பத்திரகாளி' படம் முதல் 2001-ஆம் ஆண்டு வெளியான 'உசிரே' என்ற கன்னட படம் வரையில் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

'பாரதி கண்ணம்மா' படத்தின் கன்னட ரீமேக் ஆக 2001-ஆம் ஆண்டு 'உசிரே' படம் வெளியாகியிருந்தது.

தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இளையராஜா இசையமைத்துள்ள 134 படங்களின் பட்டியலை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2000-ஆம் ஆண்டில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளியான 'பாரதி' படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் அந்நிறுவனம் உரிமை கோரியுள்ளது.

நீதிமன்றத்தில் சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் பட்டியலிட்டுள்ள இளையராஜா இசையமைத்த பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை?

'செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே...'

'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார்

பட மூலாதாரம்,Youtube/Pyramid Glitz Music

படக்குறிப்பு,'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார்

1977-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் '16 வயதினிலே' படம் வெளியானது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தனிக்கவனம் பெற்றன. கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார். 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததென்ன' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

இதே படத்தில் இடம்பெற்ற 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா...' பாடலை மலேசியா வாசுதேவன், பி.சுசீலா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

'என் கண்மணி உன் காதலி...'

1978-ஆம் ஆண்டு தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 'சிட்டுக்குருவி' படம் வெளியானது. சிவக்குமார், சுமித்ரா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா பாடிய 'என் கண்மணி உன் காதலி இளமாங்கனி... உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே' என்ற பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

பேருந்து பயணத்தில் காதலனும் காதலியும் பாடுவதுபோல இந்தப் பாடலின் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதே படத்தில் 'அடடடா மாமரக் கிளியே...உன்னை இன்னும் நான் மறக்கலியே' என்ற பாடலும் 'உன்ன நம்பி நெத்தியிலே... பொட்டு வச்சேன் மத்தியிலே' ஆகிய பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.

'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...'

கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ பாடலின் காட்சி

பட மூலாதாரம்,Youtube/GLV

படக்குறிப்பு,கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ பாடலின் காட்சி

1978-ஆம் ஆண்டு 'கிழக்கே போகும் ரயில்' வெளியானது. '16 வயதினிலே' படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்ற 'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...' பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய 'பூவரசம் பூ பூத்தாச்சு...' பாடல், ஜெயச்சந்திரனின் குரலில் இடம்பெற்ற 'மாஞ்சோலை கிளிதானா...மான்தானோ...வேப்பம்தோப்பு குயிலும் நீதானோ' ஆகிய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர்.

'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...'

1978-ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' படம், எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய நாவலின் கதையை மையமாக வைத்து உருவாகியிருந்தது.

படத்தில் கண்ணதாசனின் வரிகளில் உருவான 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...' பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். இது ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறியது.

அடுத்து, பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற 'அடி பெண்ணே...பொன்னூஞ்சல் ஆடும் இளமை...வண்ணங்கள் தோன்றும் இயற்கை' என்ற பாடலை ஜென்சி பாடியிருந்தார்.

இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய இரு பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் எழுதிய 'நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மணக்கும் கத்திரிக்காய்... நேத்து வச்சு மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா' என்ற பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார்.

அடுத்து, 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எல்.ஆர்.அஞ்சலியும் இணைந்து பாடியிருந்தனர்.

கங்கை அமரன்

பட மூலாதாரம்,x

படக்குறிப்பு,இளையராஜா இசையமைத்த பல பாடல்களுக்கு கங்கை அமரன் வரிகளை எழுதியுள்ளார்.

'ஆகாய கங்கை... பொன்தேன் மலர் சோலை'

1979-ஆம் ஆண்டு ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'தர்மயுத்தம்' படம் வெளியானது. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்திருந்த இந்தப் படத்தில் 'ஆகாய கங்கை பொன்தேன் மலர் சோலை...' என்ற பாடல் வரவேற்பைப் பெற்றது.

எம்.ஜி.வல்லபனின் வரிகளில் இடம்பெற்ற இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்ற 'ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு' பாடலும் ரசிகர்களை ஈர்த்தது.

கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார்.

'ஆயிரம் மலர்களே... அமுத கீதம் பாடுங்கள்'

'ஆயிரம் மலர்களே பாடலின் காட்சி

பட மூலாதாரம்,Youtube/pyramid music

படக்குறிப்பு,ஆயிரம் மலர்களே பாடலின் காட்சி

1979-ஆம் ஆண்டு வெளிவந்த 'நிறம் மாறாத பூக்கள்' படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா, விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் 'ஆயிரம் மலர்களே... மலருங்கள்... அமுதகீதம் பாடுங்கள்' என்ற பாடலை ஜென்சி, எஸ்.பி.சைலஜா, மலேசியா வாசுதேவன் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார்.

'மலர்களில் ஆடும் இளமை புதுமையே'

கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் 1979-ஆம் ஆண்டு 'கல்யாணராமன்' படம் வெளியானது. ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றன.

மலேசியா வாசுதேவன் பாடிய 'ஆஹா வந்துருச்சு....காதல் வந்துருச்சு... ஆசையில் ஓடிவந்தேன்' பாடல், 'காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்...' பாடலும் எஸ்.பி.சைலஜா பாடிய 'மலர்களில் ஆடும் இளமை புதுமையே.. மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே...' ஆகியவை கவனம் பெற்றன.

'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி..'

1979-ஆம் ஆண்டு வெளியான 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் சிவகுமார், தீபா உன்னிமேரி உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடிய 'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி...' பாடலும் 'மாமன் ஒருநாள் மல்லிகைப் பூ கொடுத்தான்...' என்ற பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.

'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்...'

1980-ஆம் ஆண்டு வெளியான 'கல்லுக்குள் ஈரம்' படத்தை எஸ்.பி.நிவாஸ் இயக்கியிருந்தார். படத்தில் பாரதிராஜா, சுதாகர், அருணா ஆகியோர் நடித்திருந்தனர்.

கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்... இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்..' பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

'பொதுவாக என் மனசு தங்கம்...'

பொதுவாக என் மனசு தங்கம் பாடலின் காட்சி

பட மூலாதாரம்,Youtube/AP international

படக்குறிப்பு,பொதுவாக என் மனசு தங்கம் பாடலின் காட்சி

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு 'முரட்டுக்காளை' படம் வெளியானது. ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்...' பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார்.

'எந்தப் பூவிலும் வாசம் உண்டு... எந்தப் பாட்டிலும் ராகம் உண்டு...' என்ற பாடலையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். இந்தப் பாடலுக்கு எஸ்.ஜானகியின் குரல் தனி அழகைக் கொடுத்தது.

'மடை திறந்து தாவும் நதியலை நான்...'

பாரதிராஜா இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு 'நிழல்கள்' படம் வெளியானது. இந்தப் படத்தில் சந்திரசேகர், ரோகிணி, ராஜசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் வாலியின் வரிகளில் இடம்பெற்ற 'மடை திறந்து தாவும் நதியலை நான்... மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்...' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.

கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்...' பாடலும் வைரமுத்து எழுதிய 'இது ஒரு பொன்மாலைப் பொழுது... வான மகள் நாணுகிறாள்..' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்...'

1981-ஆம் ஆண்டு ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் 'மீண்டும் கோகிலா ' படம் வெளியானது. கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி...' என்ற பாடலை கே.ஜே.யேசுதாசும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடியிருந்தனர்.

இதே படத்தில் இடம்பெற்ற 'ராதா.. ராதா.. நீ எங்கே.. கண்ணன் எங்கே... நான் அங்கே' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

'ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்...'

ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்

பட மூலாதாரம்,Youtube/ Bayshore Records

படக்குறிப்பு,ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம் பாடலின் காட்சி

1981-ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 'நெற்றிக்கண்' படம் வெளியானது. இந்தப் படத்தில் தந்தை - மகன் என இரு வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

படத்தில் கே.ஜே.யேசுதாஸ், ஜானகி ஆகியோர் இணைந்து பாடிய 'ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்... ராமாயணம்...பாராயணம்... காதல் மங்கலம்' பாடலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய 'தீராத விளையாட்டு பிள்ளை... இவன் சிங்கார மன்மதன் தான் சந்தேகம் இல்லை..' பாடலும் வரவேற்பைப் பெற்றன.

இப்படத்தில் இடம்பெற்ற 'மாப்பிள்ளைக்கு மாமன் மனசு...' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் பி.சுசீலாவும் இணைந்து பாடியிருந்தனர்.

'அந்தி மழைபொழிகிறது...'

1981-ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 'ராஜ பார்வை' படம் வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், மாதவி ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற 'அந்தி மழைபொழிகிறது... ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது' பாடல் அதிக கவனம் பெற்றது. இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி..'

பாக்கியராஜ் இயக்கத்தில் 1982-ஆம் ஆண்டு 'தூறல் நின்னு போச்சு' படம் வெளியானது. இந்தப் படத்தில் பாக்கியராஜ், சுலோசனா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய 'ஏரிக்கரை பூங்காற்றே... நீ போற வழி தென்கிழக்கோ' பாடலை சிதம்பரநாதன் எழுதியிருந்தார்.

இதே படத்தில் வைரமுத்துவின் வரிகளில் 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ...' பாடலும் முத்துலிங்கம் வரிகளில் 'பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்' பாடலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm2xe7e812po

டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!

3 weeks ago
டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து! Feb 19, 2026 - 07:24 AM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (18) இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. "AI Impact Summit 2026" உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வழங்கப்பட்ட விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. "AI Impact Summit 2026" உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (19) அந்த மாநாட்டில் உரையாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 17 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். செயற்கை நுண்ணறிவை (AI) மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்கில், அரச தலைவர்கள் மற்றும் உலகின் தொழில்நுட்பத் துறையின் பிரதானிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlst1she000i356n40tfllzd

டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!

3 weeks ago

டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!

Feb 19, 2026 - 07:24 AM

டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (18) இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"AI Impact Summit 2026" உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வழங்கப்பட்ட விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

"AI Impact Summit 2026" உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (19) அந்த மாநாட்டில் உரையாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 17 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

செயற்கை நுண்ணறிவை (AI) மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்கில், அரச தலைவர்கள் மற்றும் உலகின் தொழில்நுட்பத் துறையின் பிரதானிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlst1she000i356n40tfllzd

80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா

3 weeks ago
50 வருடத்தின் பின்பு அரபு நாட்டுக்கும் சிங்கள நாட்டுக்கும் இடையே பெரிய போர் நடக்கும்