| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 410 online users. » 0 Member(s) | 408 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,210
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,190
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,579
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,276
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,580
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,009
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,400
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,092
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,973
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,234
|
|
|
| new topic |
|
Posted by: Saniyan - 10-20-2003, 09:06 PM - Forum: அறிமுகம்
- Replies (3)
|
 |
அன்பு நிறை நெஞ்சங்களே,
முதற்கண் எனது வணக்கங்கள் உரித்தாகுக.
நான் இந்த இணையத்துக்கு புதுசு.
கணிணிப் பகுதியில் நியூ டொபிக் எண்டு அழுத்தினன். ஏதோ ஸ்பெசல் ஆக்கள் மட்டும்தான் போஸ்ட் பண்ணலாம் எண்டு வருது. நான் எப்படி ஸ்பெசலா வாறது ???
விசயம் என்ன எண்டா? . .
லினிக்ஸ் பற்றி தெரிஞ்ச யாராச்சும் நல்லவன் (ள்) பெரியவன் (ள்) எனது சந்தேகங்களை தீர்ப்பாரா ??
லினிக்ஸ் இணையத்துக்கு போனேன் . .
ஆயிரத்தெட்டு விநியோகங்கள் இருக்கு . .
எதை தரவிறக்கம் செய்வதென்று தெரியவில்லை . . .
எனது வீடடுக் கணிணியில் பாவிப்பதற்கு எது உகந்தது.
பி.கு. எனக்கு லினிக்ஸ் மொழி தெரியாது.
பிறகு என்னத்துக்கு உனக்கு லினிக்ஸ் என்டு நீங்கள் மனசுக்குள்ள நினைக்கிறது எனக்கு விளங்குது.
ஒரு ஆர்வம் தான்.
தமிழில் பிழைகள் இருந்தால் மன்னித்தருள்க.
இஞ்ச வந்து நிறைய தமிழ் படிசிட்டன்.
பிழை இருந்தாலும் அதுக்கு நீங்கள் தான் பொறுப்பு.
நான் சும்மா.
|
|
|
| ஊடகம் அவசியமா / அவசியமற்றதா? |
|
Posted by: sandiya - 10-20-2003, 08:53 PM - Forum: புலம்
- Replies (32)
|
 |
<b>Media is wanted or unwanted
***
[b]திருத்தம்:</b>
ஊடகம் அவசியமா அல்லது அவசியமற்றதா?
-----------------------------------
தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தயவுசெய்து தமிழில் எழுதுக. நன்றி!
வலையில் கலைஞன்
[b]வலைஞன்
***
|
|
|
| தீபாவளி படங்கள் : ஒரு பார்வை |
|
Posted by: arun - 10-20-2003, 08:33 PM - Forum: சினிமா
- Replies (10)
|
 |
மண்டை காயற வெயிலடிச்சாலும் சரி... மப்பும் மந்தாரமாக மழை பேஞ்சாலும் சரி... இந்த முறை தீபாவளி வேட்டுச் சத்தம் செக ரகளையாக இருக்கப் போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை!
இதற்கு முந்தைய தீபாவளி அனுபவங்கள் எப்படி இருந்ததோ தெரியாது. இந்த முறை கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்... ரஜினி, கமல், விஜயகாந்த் தொடங்கி முந்தைய தலைமுறை நடிகர்கள் படம் ஒன்றுகூட தீபாவளிக்கு வரவில்லை. வரப்போகிற அத்தனையும் இளவட்டப் பார்ட்டிகளோட படங்கள்.
<span style='font-size:25pt;line-height:100%'>பிதாமகன்</span>
ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் இந்தப் படத்தை ஆர்வம் பொங்கக் கவனித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஐந்து ஹிட் கொடுத்த விக்ரம், காக்க காக்க மூலம் ரசிகர்களின் ராயல் சல்யூட்டை மொத்தமாக அள்ளிக் கொண்ட சூர்யா இருவரும் இணைந்து நடிக்கிற படம். விக்ரம், சூர்யா இருவரையும் மற்றவர்களுக்கு அடையாளம் காட்டியதைவிட இதுதான் நீ என்று அவர்களுக்கே அடையாளம் காட்டியவர் இயக்குனர் பாலா.
தவிர . . . லைலா, கருணாஸ், சங்கீதா,
மனோபாலா என எக்கச்சக்க அட்ராக்ஷன் பார்ட்டிகள். இது பத்தாதென்று கூடுதல் ரகளைக்காக சிம்ரன், நடிகை சிம்ரனாகவே வந்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் இந்தக் கூட்டணி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம். உணர்வுகளை உள்ளபடியே யதார்த்தமாகச் சொல்கிற கதை. இதற்கு முன்பு இருக்கற இமேஜ் அத்தனையும் மறந்துவிட்டு . . . புதுக் கெட்-அப்பில் ஆளாளுக்கு பின்னியெடுத்திருக்கிறார்கள்.
நட்புக்கும், காதலுக்கும் நடுவே இருக்கிற பொசஸிவ்நெஸ்தான் கதைக்கான இழை. ரத்தமும், சதையுமாக வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை அப்படியே கண்முன் கொண்டு வர கடுமையாக உழைத்திருக்கிறார் பாலா. பின்னணியில் உயிர் கொடுத்திருக்கிற இன்னொரு ஹீரோ இளையராஜா.
எவர்க்ரீன் மூவி இண்டர்நேஷனல் சார்பில் வி.ஏ.துரை இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். ஏற்கனவே பண்ணின ரெண்டு படங்கள் லாப நஷ்டக் கணக்கில்தான் இருந்தது. பிதாமகன் மூலம் மிகப் பெரிய தயாரிப்பாளராக அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறார். மொத்தப் படமும் தேனி, பெரியகுளம், கம்பம் வட்டாரங்களிலேயே படமாக்கப்பட்டிருக்கின்றன. வியாபார ரீதியாக எந்த அளவிற்கு பேசப்படுகிறதோ . . . அதே அளவுக்கு விருதும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப் படத்தின் ரீ-மேக் ரைட்ஸ் வாங்க இந்தியில் போனிகபூர் தொடங்கி ஏகப்பட்ட கபூர்களும்இ தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா என ஒரு பட்டாளமும் வரிசை கட்டி நிற்கிறார்கள் என்றால் படம் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!
<span style='font-size:25pt;line-height:100%'>ஆஞ்சநேயா</span>
வல்லரசு படத்தின் மூலம் காக்கிச் சட்டைக்கு தனி கம்பீரம் கிடைக்கச் செய்த மகாராஜன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம். இதுவும் காக்கிச் சட்டைக் கதைதான்! சாமி, காக்க காக்க என இரண்டும் போலீஸ் அதிகாரியின் வெவ்வேறு முகங்களைக் காட்டிவிட்டுப் போனபிறகு . . . புதிதாகக் காட்ட என்ன இருக்க எனக் கேட்பவர்களுக்கு ஐ.ஜி. பரமகுருவாக வந்து ரகளையாகப் பதில் சொல்லப் போகிறார் அஜீத்.
அஜீத்தின் கேரியரில் மிகப்பெரிய சவாலான கேரக்டர் இது. வில்லன் படத்தில் ராபரி பார்ட்டியாக வந்தவர்இ காக்கிச் சட்டைப் போடப் பிறந்த மாதிரி பின்னியெடுத்திருப்பதாக உச்சி முகர்ந்து சொல்கிறது ஒட்டுமொத்த ஆஞ்சநேயா யூனிட்டும்!
அஜீத்தை துரத்தித் துரத்தி லவ் பண்ணுகிற குச்சி ஐஸ் மீரா ஜாஸ்மீன், ஜொள்ளு பார்ட்டிகளுக்கு செம தீனி போட்டிருக்கிறார். வில்லனில் செட்டானதால் ரமேஷ் கண்ணா இதிலும் அஜீத்தோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
படு கமெர்ஷியலான ஆக்ஷன் படம். ஸ்பீட் பிரேக்கரே இல்லாமல் மொத்தப் படமும் ஜெட் வேக அதிரடி! பீட்டர் ஹெய்ன் உதவியால் ஏகப்பட்ட ஆட்களின் விலா எலும்புகளை ஒடித்து எடுத்திருக்கிறார் அஜீத்.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான் படத்தின் தயாரிப்பாளர். ஒருபக்கம் கார் ரேஸில் பிஸியாக இருந்தாலும் . . . தீபாவளி ரேஸுக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக டபுள் கால்ஷீட் போட்டு ஒர்க் பண்ணிக் கொடுத்திருக்கிறார் அஜீத். இசை மணி ஷர்மா. கார் ரேஸில் ஆறாவது இடத்தைத் தொட்ட அஜீத், தீபாவளி ரேஸில் முதல் ரவுண்டுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் படத்தில் நிறையத் தெரிகிறது.
<span style='font-size:25pt;line-height:100%'>ஜே.ஜே.</span>
பார்க்காத காதல்... பரிதாபப்பட்டுக் காதல் என்று பார்த்துப் பழக்கப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜெ.ஜெ. ஒரு புது அனுபவமாக இருக்கும் என்கிறார் டைரக்டர் சரண். பார்த்ததும் காதல் பற்றிக் கொள்ள அடுத்து என்ன ஆகப் போகிறது என்று அங்கேயே கிளைமாக்ஸ்க்கான ரூட்டில் வேகம் எடுக்கிற படம்.
படத்தின் தலைப்பை பார்த்து சரண் அ.தி.மு.க. ஆதரவாளர் என்று நினைத்துவிட வேண்டாம். மாதவன் பெயர் ஜெகன். ஹீரோயின் பெயர் ஜமுனா. இந்த இரண்டு பேரின் முதல் ஆங்கில எழுத்துதான் டைட்டிலுக்கான காரணம். மாதவனுக்கு ஜோடியா இரண்டு இளமை ராக்கெட். ஒன்று அமோகா, இன்னொன்று பூஜா. மாதவன் கல்லூரியில் படிக்கும் இளைஞன்இ அமோகா பல்கலைக்கழக மாணவிஇ பூஜா ஃபாஷன் டெக்னாலஜி படிக்கிற பெண். இந்தக் காதல் கலாட்டாக்களுக்கு நடுவே காமெடி பண்ண கலாபவன் மணி என கலர்ஃபுல்லான படம்.
ஜெமினியில் ஓ போடவைத்த பரத்வாஜ்தான் இதற்கும் இசை. இது 25வது படம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். அதற்கான பலன் ஆடியோ விற்பனையில் தெரிந்து போனதில் தெம்பாக இருக்கிறது ஜெ.ஜெ. பட யூனிட்.
பாடல் காட்சிகளுக்காக இதுவரை கோடம்பாக்கத்து காமெராக்கள் கால் பதிக்காத இடங்களுக்கெல்லாம் போய் வந்திருக்கிறார்கள்.
ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பேனரில் ரவிச்சந்திரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். தொடர்ந்து ஹிட் படங்களாகக் கொடுத்துக கொண்டிருக்கிற இயக்குனர் சரண்இ "ரன்"னில் ஆக்ஷனுக்கு மாறிய மாதவனும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். புதுக்கூட்டணி... கொள்ளை எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது கோடம்பாக்கம்!
<span style='font-size:25pt;line-height:100%'>ஒற்றன்</span>
அர்ஜுனின் ஃபாவரைட்டான தேசபக்தி கதைதான் இதுவும். ஆனால் வழக்கமான அர்ஜுனாக இல்லாமல் இதில் பலவித கெட்-அப்களில் மிரட்டலாகப் பண்ணியிருக்கிறார். தலைப்புக்கேற்றபடி உளவு பார்த்து . . . தேச ஒற்றுமைக்கு உளை வைக்கிற ஆட்களை அடையாளம் காட்ற கதை. கதையோட்டத்தோடு கெட்-அப் மாற்றம் நடந்திருப்பதால் பேசப்படுகிற ஒற்றனாக இருப்பார் என்கிறார் படத்தின் இயக்குனர் இளங்கண்ணன்.
ஷங்கரிடம் அசோஸியேட்டாக இருந்தவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். முதல் படம் என்பதால் தன்னையும் ஒற்றன் யூனிட்டையும் நிலை நிறுத்த கடுமையாக உழைத்திருக்கிறார். தேசபக்திக் கதை என்பதால் சீரியஸாக பார்டரில் நின்று மல்லுக்கு நிற்கிறமாதிரி கிடையாது. காதல்இ காமெடிஇ சென்டிமெண்ட் என்று சகல விஷயங்களையும் தேர்ந்த காக்டெய்ல் மிக்ஸ் பார்ட்டி மாதிரி கரெக்ட் பண்ணியிருக்கிறாராம் இளங்கண்ணன்.
சிம்ரன் கதாநாயகியாக நடித்து வருகிற ஒரே ஒரு தீபாவளிப் படம் இது. ஃபாஷன் டெக்னாலஜி படிக்கிற பெண். தற்செயலாகக் காதல் தீ பற்றி பட்டையைக் கிளப்பற ஆட்டம் போடுகிற கேரக்டர் சிம்ரனுக்கு. சிம்ரன் போதாதென்று தேஜாசிறீ என்ற கவர்ச்சி பாமையும் களம் இறக்கிவிட்டிருக்கிறார். பொதுவாக அர்ஜுன் படம் என்றால் காமெடிக்கு கவுண்டமணி இருப்பார். இதில் வடிவேலு. கூட்டணி புதுசா சேர்ந்தமாதிரி காமெடியிலும் புதுச் சரக்கைக் கொட்டியிருக்கிறார் வடிவேலு. இசை பிரவீண் மணி.
<span style='font-size:25pt;line-height:100%'>திருமலை</span>
கவிதாலயா தயாரிப்பில்... ஆர்.கே. செல்வமணியின் உதவியாளர் ரமணா இயக்கியிருக்கிற படம். அடுத்தடுத்து தோல்விப் படங்களைக் கொடுத்த விஜய்க்கு ஜெயிச்சே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இந்தப் படத்தில்!
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துக் கதைதான். ஏழைப் பையன் பணக்காரப் பெண்ணைக் காதலிப்பதால் ஏற்படுகிற பிரச்சனை. ஹஓல்ட் வைன் இன் நியூ பாட்டில்' என்ற ஃபார்முலாவில் இந்த ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு கலக்கலான திரைக்கதையில் ஊதிப் பெரிசு படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
விஜய், புதுப்பேட்டையில் இருக்கிற சாதாரண மெக்கானிக். ஃபாஷன் டெக்னாலஜி படிக்கிற ஜோதிகா மீது காதல் வர அதுக்கப்புறம் என்னவாகிறது என்பதை இரண்டரை மணி நேரத்துக்கு சுவாரஸ்யமாகக் கொண்டு போக என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் உண்டு என்று சொல்கிறார் இயக்குனர் ரமணா.
குஷிக்கு அப்புறம் விஜய், ஜோதிகா இதில் கூட்டணி போட்டிருக்கிறார்கள். குணச்சித்திரத்திற்கு ரகுவரன், அசத்தல் அண்ணியாக கௌசல்வா, அடாவடி ஆளாக கேரளப் பார்ட்டி மனோஜ் கே.ஜெயன், கலக்கல் காமெடிக்கு கருணாஸ், டி.பி. கஜேந்திரன், விவேக் என்று சகல கமர்ஷியல் ஐட்டங்களும் உண்டு. இது போதாதென்று ஒரு டான்ஸ்க்கு லாரண்ஸ். இன்னொரு ரகளைக்கு கிரண் என்று கூடுதல் ஃப்ளேவர் சேர்த்திருக்கிறார்கள்!
படத்தின் பாதிக்காட்சி புதுப்பேட்டையில் நடப்பதால் அதற்காக 50 லட்சம் செலவில் செட் போட்டு எடுத்திருக்கிறார்கள்.
பாடல் காட்சிகளுக்காக எகிப்து, நியூ ஸீலாந்து என உலகம் சுற்றுகிற அனுபவத்தையும் கொடுக்கப் போகிறார்கள். திருமலை . . . சென்னை தண்ணியைக் குடிச்சிட்டு வாழற சராசரி இளைஞன். அவனுக்குள் இருக்கிற காதலை, சோகத்தை, சந்தோஷத்தை புதுசா சொல்லியிருக்கிறோம் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறது ரமணா யூனிட்!
<span style='font-size:25pt;line-height:100%'>இயற்கை</span>
உறவுகள் அற்ற ஒரு பூர்வீக தமிழன், யாருமற்ற அனாதை. முதன் முதலாக தமிழக கரைக்கு வரும் கப்பல் மாலுமி. விருப்பு, வெறுப்புகள் எதுவும் இல்லாத மனிதன். இவனுக்கு வெற்றி தோல்விகள் கிடையாது. பந்த பாசமற்றவன். இவனுக்குள் ஒரு காதல்? இதுதான் இயற்கை பட ஷாம்.
திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில் படம் பிடித்ததை விசேஷமாகச் சொல்கிறார் படத்தின் தயாரிப்பாளர் வி.ஆர். குமார்.
"அவ்வளவு லேசில் இங்கு படம் எடுக்க முடியாது. கலாட்டா செய்வார்கள்" என்கிற அறிமுகத்தோடுதான் மணப்பாடு போயிருக்கிறார்கள்.
ஆனால் அங்குள்ளவர்களோ பிரதிபலன் எதுவும் பாராமல் அத்தனை ஒத்துழைப்பு கொடுத்தார்களாம்! கயஸ் என்பவர் தலைமையில் ஊர்க்காரர்கள் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.
"படம் ரிலீசாகும்போது சொல்லுங்க. 50 கார் வேன்ல திரண்டு வந்து பார்க்கிறோம்" என்றிருக்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தில்தான் பெரும்பாலான படப் பிடிப்பும். அங்குள்ள நூலகர் நல்ல பொண்ணு என்பவரும், தயாரிப்பு மேற்பார்வையாளர்களில் ஒருவருமான கமலக் கண்ணன் என்பவரும் தான் அத்தனை வேலைகளையும் தலையில் அள்ளிப்போட்டுக் கொண்டு செய்தார்களாம். நன்றி தெரிவித்தார் வி.ஆர். குமார்.
டைரக்டர் ஜனநாதனின் புது வித ட்ரீட்மெண்டுடன் அந்தமானின் அழகைக் கண்டு இயற்கையில் ரசிகர்கள் மகிழ்வார்களாம்! கதைதான் படத்தின் முக்கிய பலமாம்!
சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே துறைமுகத்திலும் அந்தமானிலும் மரியாதை நிமித்தமாக பல உதவிளைச் செய்தார்களாம். வி.ஆர். குமார் பெருமையுடன் சொன்னார்.
ஷாமுடன், அருண் கப்பல் கேப்டனாக நடிக்கிறார். குட்டி ராதிகா, கருணாஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
வி.ஆர். குமார், குணசேகரன், ஜி. நடராஜன் ஆகியோர் இணைந்து பிரீசம் பிலிம்ஸ் சார்பில் இயற்கை படத்தை தயாரித்து இருக்கிறார்கள்!
தவிர...படத்தில் சீமா பிஸ்வாஸ் ஒரு பிரதான கேரக்டர் பண்ணியிருக்கிறார். மொத்தப் படமுமே எந்தப் பாசாங்குமில்லாமல் இயல்பாகச் சொல்லப்பட்டிருப்பது படத்தின் ஹைலைட்!
நன்றி : வெப் உலகம்
|
|
|
| இன்றைய உதயன் செய்தி |
|
Posted by: Paranee - 10-20-2003, 02:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
இன்றைய உதயன் செய்தி
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்த யுவதி திரு மணத்திற்காக வெளிநாடு செல்ல விருந்த பயணம் அரச அலுவலர் களின் மெத்தனப் போக்கால் தடைப் பட்டதாக கூறப்படுகின்றது.
தெல்லிப்பழையைச் சேர்ந்த இந்த யுவதியின் குடும்பம் 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து கோப்பாயில் தங்கியுள்ளது. இந்த யுவதியின் பிறப்புச்சான்றிதழ் பதிவு செய்யப் பட்ட சமயத்தில் அவரது பெயர் இருக்கவேண்டிய இடத்தில் அவரது தந்தையாரின் பெயர் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.
காலம் தாழ்த்தியே இதனை யுவதியின் பெற்றோர் அறிந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட யுவதி தனது எதிர்கால நலன் கருதி 1999 இல் உரிய ஆவணங்களைக் காட்டி யாழ்.மாவட்டப் பதிவாளர் அலுவல கத்தில் தனது பெயரை உரிய இடத் தில் பதிவுசெய்து கொண்டார். அத் தோடு, பெயர் சரியாக பதியப்பட்ட சான்றிதழ் ஒன்றையும் அங்கு அவர் பெற்றுக்கொண்டார். கொழும்பிலுள்ள பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள பிரதியிலும் இப்பெயர் திருத் தம் பதிவுசெய்யப்படும் என யாழ். மேலதிக மாவட்ட பதிவாளர் அலு வலகத்தால் இவருக்கு அப்போது கூறப்பட்டது.
இதன் பின்னர் நான்கு வருடங் கள் கழிந்த நிலையில் தனது திரு மணத்திற்காக வெளிநாடு செல்லும் நோக்கோடு இந்த யுவதி கொழும்பு சென்றார். அங்கு கடவுச்சீட்டுப் பெறு வதற்கான விண்ணப்பத்தை குடி வரவு குடியகல்வு திணைக்கள அலு வலகத்தில் யாழ்ப்பாணத்தில் பெற்ற பிறப்புச் சான்றிதழுடன் இணைத்துக் கொடுத்தார். அப்பெயர் மாற்றத்தில் சந்தேகம்கொண்ட அதிகாரிகள் கொழும்புப் பதிவாளர் அலுவலகத் தில் பிறப்புச்சான்றிதழ் பிரதியை பெற்றுவருமாறு பணித்தனர்.
அந்த யுவதியும் உடனடியாக கொழும்பில் உள்ள பதிவாளர் அலு வலகத்தில் பிறப்புச்சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொண்டார். ஆனால், அதனைப் பார்த்த யுவதி அதிர்ச்சியடைந்தார்.
ஏனெனில் நான்கு வருடங்கள் கழிந்தும் கொழும்புப் பதிவாளர் அலு வலகத்தில் உள்ள பிரதியில் அவ ரது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்க வில்லை.
இதனைத் தொடர்ந்து அந்த யுவதி யாழ்ப்பாணப் பதிவாளர் அலு வலகத்தில் விண்ணப்பித்து பெற்ற பிறப்பு சான்றிதழ் அங்குள்ள அதி காரிகளுக்கு காட்டினார். ஆனால், அவர்களோ தமக்கு அப்படியான பதிவு எதுவும் இதுவரை கிடைக்க வில்லை என்பதோடு அப்படிப் பெயர் மாற்றம் செய்யவேண்டுமெனில் உட னடியாக யாழ்ப்பாணம் சென்று அங்கு அனுமதிக்கடிதத்தை பெற்றுவருமா றும் கூறினார்கள்.
அந்த யுவதியும் விரைவில் வெளி நாடு செல்லவேண்டும் என்ற நோக் கோடு உடனடியாக யாழ். அலுவல கத்திற்கு வந்து விடயத்தைச் சொன் னார். ஆனால் இங்கோ தாம் உரிய பதிவுகளை 1999ஆம் ஆண்டிலேயே அனுப்பிவிட்டதாகவும் கடிதம் தர முடியாது எனவும் கூறிவிட்டதாக அறியமுடிகிறது.
|
|
|
| இன்ரநெற் காதல்கள் |
|
Posted by: arun - 10-19-2003, 08:13 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (21)
|
 |
இன்டர்நெட் காதல்கள்
ஈ-மெயில், சாட்ரூம்கள், டேட்டிங் சர்வீஸ்களில் ஹசந்தித்து, காதல் வசப்படுபவர்கள் பலர். இந்தக் காதல் கதைகளில் சில இனிமையானவை. இன்னும் சில சோகமானவை. வேறு சில சிரிப்பூட்டுபவை.
[size=18]ஆள் மாறாட்டம்
இந்த சம்பவத்தை நான் பலரிடம் சொல்லிவிட்டேன். அத்தனை பேரும் இதை நம்பியதுதான் ஆச்சரியம். ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இன்டர்நெட் கஃபேகாரர் தொல்லை தாங்காமல் ஒரு டேட்டிங் சைட்டில் என் பெயரையும் ஈ-மெயில் முகவரியையும் கொடுத்துப் பதிவு செய்து கொண்டேன். அப்புறம் அதை மறந்து விட்டேன். ஏனென்றால் எனக்கு டேட்டிங் சைட்களில் நம்பிக்கை இல்லை. சாட்இ ஈ-மெயில்தான் என் ஸ்டைல்.
ரொம்ப நாள் கழித்து ஒரு முறை என் யாஹூ மெயில்பாக்ஸில் அந்த சைட்டிலிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. யாரோ ஒரு ஏஞ்சல்2000'-இடமிருந்து எனக்கு மெசேஜ் வந்திருந்ததைத் தெரிவிக்கத்தான் அந்த மெயில்.
அன்று மாலை ஏஞ்சல்2000 யாஹூ மெசஞ்சரில் வந்தாள். அவளுக்கு வாய் ரொம்ப நீளம். அன்று இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் ரசனையும் அவள் ரசனையும் நேர்மாறாக இருந்தது. ஆனால் இப்படி ஒரு பெண்ணுக்காகத்தான் நான் காத்திருந்தேன். நகைச்சுவை உணர்வு, புத்திசாலித்தனம், நல்ல ரசனை, எல்லாம் அவளிடம் இருந்தன. அவள் மும்பையில் இருப்பதாகவும், ஒரு பன்னாட்டு வங்கியில் வேலை பார்ப்பதாகவும் சொன்னாள். அப்போதைக்கு நம்பினேன். நான் ஒரு வெப் டிசைனர். வயசு 26
மறுநாளும் சந்தித்தோம். ஆனால் நான் அப்போது ஆபீசில் இருந்த இன்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். மணி 9.30. கிளம்புகிறேன் என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. நள்ளிரவு 12.45 வரை சாட்தான். அன்று ஆபீசிலேயே தூங்கினேன். எனக்கும் அவளுக்கும் ஒரு விஷயம் புரிந்தது. நாங்கள் இருவரும் பொருத்தமான ஜோடி. எனக்கு அவளிடம் லவ் எல்லாம் இல்லை. ஆனால் ஒரு soft corner இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நான் என்னைப் பற்றி அவளிடம் நிறைய சொன்னேன். அவள் எப்போதும் உஷாராக கம்மியாகத்தான் சொன்னாள்.
அதற்குப் பிறகுதான் சில விநோதமான சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அவளிடம் பேசும்போது ஒரு விஷயம் எனக்கு உறைக்கத் தொடங்கியது. நான் அவளுக்கு முன்பே தெரிந்த ஒரு இளைஞன் என்று நினைத்துக் கொண்டுதான் என்னுடன் இத்தனை நாளும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள். நான் என்னைப் பற்றி சொன்ன பல விபரங்கள் அப்படியே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களுடன் ஒத்துப் போயிருக்கின்றன. நான் சரியாக மாட்டிக் கொண்டேன். நான் எவ்வளவு முறை சொல்லியும் அவள் நம்பவில்லை. "நான் தெலுங்குக்காரி, ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கிறேன். நீ நரேஷாக இருந்தால் உனக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்கும்" என்றாள். திடீரென்று அவள் என்னுடன் சாட் செய்வதை நிறுத்தினாள். யாஹூ மெசஞ்சரில் வருவதில்லை.
சில நாட்கள் கழித்து நான் அவளுக்கு ஒரு e-card ஐத் தூது அனுப்பினேன். அதற்கு பதிலாக அவள் என்னைத் திட்டி ஒரு e-card அனுப்பினாள். இந்த அட்டையைப் பார்த்து நான் நிஜமாகவே கடுப்பானேன். நாம் பிரிவதுதான் நல்லது. ஆளை விடு என்ற மெசேஜுடன் ஒரு வாழ்த்து அட்டை அனுப்பினேன்.மறுநாள் அவளிடமிருந்து ஈ-மெயில் வந்திருந்தது. நான் அதற்கு பதில் போடவில்லை. யாஹூ மெசஞ்சரைப் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டேன்.
அவள் என்னை விடுவதாக இல்லை. எப்போதோ ஒரு முறை நான் ஒரு வெப்சைட்டைப் பற்றி அவளிடம் சொல்லியிருந்தேன். அந்த சைட்டின் மெசேஜ் போர்டில் அவள் அனுப்பிய கமென்ட் வந்திருக்கிறதாம். அந்த சைட்டை அறிமுகப்படுத்தியதற்காக எனக்கு நன்றி சொல்லி மெயில் போட்டிருந்தாள். எனக்கு மெயில் போட இந்த அல்ப விஷயத்தை ஒரு சாக்காக அவள் பயன்படுத்திக் கொண்டது எனக்குப் புரிந்தது. எங்ளுக்குள் ஒன்றுமே நடக்காதது போல் அவள் உற்சாகமாய் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு இரண்டு ஈ-மெயில்கள் கழித்து மீண்டும் காணாமல் போனாள். என்னை சீண்டிப் பார்ப்பது அவள் நோக்கமாக இருந்திருக்கலாம்.
இந்த முறை நான் விடவில்லை. eCrush.com என்ற வெப்சைட்டிலிருந்து அவளுக்கு ரகசியமாக ஒரு காதல் செய்தி அனுப்பினேன். இந்த சைட் நீங்கள் அனுப்பும் ஆணுக்குஃபெண்ணுக்கு ஹஉங்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் உங்களைக் காதலிக்கிறார்' என்ற செய்தியை ஈ-மெயில் மூலம் தெரிவிக்கும். நீங்கள் அவரை அந்த சைட்டில் சந்தித்து நீங்கள் அவர் ரகசியமாக விரும்பும் ஆளாக இருந்தால் அவர் தன் நிஜ அடையாளத்தை உங்களிடம் தெரிவிப்பார். நான் அவளுக்கு eCrush அனுப்பி இரண்டு நாள் கழித்து எனக்கும் யாரிடமிருந்தோ ஒரு eCrush வந்தது. அது அவளாகத்தான் இருக்கும் என்று ஊகித்தேன்.ஆனால் அவளுடன் சாட் செய்து பல நாட்கள் ஆகிவிட்டிருந்தன. ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டிருந்தது. ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ப்ரெஸ்டீஜை விட்டுக்கொடுக்க முடியவில்லை.
அதில் வந்த ஐடியாதான் eCrush. அவளுக்குள்ளும் என்னைப் போல் கொஞ்சமாவது ஒரு வெறுமை ஏற்பட்டிருக்கும். நாள் ஆக ஆக மெல்ல மெல்ல அந்த வெறுமை மறையத் தொடங்கியது. இருந்தாலும் அவளுடன் மீண்டும் பேசவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் பல மாதங்கள் கழித்தும் நீடித்தது. அவள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று ஒரு நாள் யாஹூ மெசஞ்சரில் ஒரு மெசேஜ் அனுப்பினேன் "Wish you a happy married life"
மூன்று நாள் கழித்து அவளிடமிருந்து மூன்று offline message-கள் வந்திருந்தன. "Thanx", "Thanks உனக்கு எப்படித் தெரிஞ்சுது??," "சும்மா தமாஷுக்குத்தான் சொன்னேன். எனக்குக் கல்யாணம் எல்லாம் ஆகல. நீ ஏன் அப்படி ஒரு மெசேஜை அனுப்பினே?" எனக்கு குஷி பிய்த்துக் கொண்டு போனது. பிறகு அவள் ஆன்லைனில் வந்தாள். "I missed you!" என்றேன். அவள் என் பெயரை தன் யாஹூ மெசஞ்சர் நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும்படி கெஞ்சினாள். அதாவது நாங்கள் பிரிந்தவுடன் அவள் என் பெயரைத் தன் நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டிருந்தாள். என் நண்பர்கள் பட்டியலில் இருந்த உருப்படியான ஒரு பெயர் அவள்தான். அதனால் நான் அதை நீக்காமலே விட்டிருந்தேன்.
இப்போது நாங்கள் இணைந்துவிட்டோம். நான் "அவன்" இல்லை என்று இப்போது அவளுக்குத் தெரியும். அவள் என்னுடன் பேசும் தொனியும் மாறிவிட்டது. பேச்சில் அக்கறை எட்டிப் பார்க்கிறது. என்னைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறாள். எனக்கு சாட் செய்ய நேரம் இருப்பதில்லை என்பதால் ஈ-மெயில்தான் அனுப்புகிறேன். அவள் நீளமான ஈ-மெயில்கள் அனுப்புகிறாள். தன்னைப் பற்றியும் முன்பை விட அதிகம் பேசுகிறாள். நான் மட்டும்தான் அவளை என் காதலி போல் செல்லமாக சீண்டுவேன். இப்போது அவளும் ஆரம்பித்துவிட்டாள். அவள் எங்கே வேலை பார்க்கிறாள் என்பதை மட்டும் சொல்லமாட்டேன் என்கிறாள். ஆகஇ இங்கே முடிகிறது கதை. நாங்கள் லவ் பண்ணவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இது மாறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று நினைக்கிறேன். அப்படி ஒன்று நடக்கும்போது கதையை மேற்கொண்டு சொல்கிறேன்.
நன்றி : வெப்உலகம்
|
|
|
| நாங்கள் தமிழ் மாணவர்கள் |
|
Posted by: sharish - 10-19-2003, 05:12 PM - Forum: புலம்
- No Replies
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>நாங்கள் தமிழ் மாணவர்கள்</b></span>
இவர்கள் உழைக்கமட்டுமே வந்தவர்கள்
வேறு எதுவுமே தெரியாது என்று தலைகுனிய மட்டுமே தமிழன் என்ற
கருத்துக்கள் நடமாடும் புலம்பெயர் சமூகச்சந்தையில்
பலதரப்பட்ட தடைகளை உடைத்து எல்லாமே எம்மால் முடியும் என்று
தலைநிமிர்த்தி புதியதொரு உலகம் செய்ய தைரியமாய் புறப்பட்டு
பிறிதொரு திசையில் கால்தடம் பதிக்கிறது புலம்பெயர் தமிழினத்தின் அடுத்த
தலைமுறை. தமிழ் மக்களினதும் தமிழ் மாணவர்களினதும் தாய் மொழியினதும்
தாய் நிலத்தினதும் எங்கள் இளய தலைமுறையினதும் நலன் விரும்பிகள்.
நாங்கள் தமிழ் மாணவர்கள்...!
இரண்டு வருடங்களுக்கு முன்பு இரண்டொரு மாணவர்களின்
தீராத தேடலினாலும் விடாமுயற்சியினாலும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில்
சிறு அரும்பாக முழைவிட்ட இந்த மாணவர் சங்கம்
இன்று இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்களின் பலத்தோடு யாரும் எதிர்பாற்க
முடியாத அழவுக்கு எவரும் எட்டித்தொட முடியாத உயரத்தை நோக்கி
பெரு விருட்சமாக வளர்ந்துவருகிறது.
எமதிந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முதல் அடையாளம்
பிரான்சின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றானா போர்தோ என்னும் இடத்தில்
கடந்தமாதம் நடைபெற்ற அகில பிரான்சு மாணவர்
சங்க ஒன்றுகூடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரான்சு முழுவதிலும்
இருந்து 564 மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
5 நாட்கள்வரை நடைபெற்ற இந்த ஒன்றுகூடலிகன்போது நல்ல திட்டங்களிலும்
பயனுள்ள செயற்பாடுகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சிகண்ட 34 சங்கங்கள்
தெரிவுசெய்யப்பட்டது. இந்த 34 சங்கங்களில் தமிழ் மாணவர் சங்கம் 6 ஆம்
இடத்தைப் பிடித்துள்ளது. எமதிந்தச் சங்கம் ஆரம்பித்து இரண்டு
ஆண்டுகளுக்குட்பட்ட காலப்பகுதியிலேயே 564 மாணவர் சங்கங்களில் 6ஆம்
இடத்தைப் பிடித்திருப்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விடயம்.
எமது அன்புக்குரியவர்களே...
இந்த மாணவர் அமைப்பு உங்களுடைய அரிய பொக்கிஷம் தமிழ் மாணவர்களின்
தலைசிறந்த சொத்து. இந்த ஆலமரம் உங்களுக்கு மட்டுமே பயன்தரும்
உங்களுக்காகவே கிளைபரப்பி நிழல்தரும். பாற்பவர் பலர் பயன்பெற இன்னும்
பிரமிப்போடு பிரமாண்டமாக வளர்த்தெடுப்பது உங்களுடைய பொறுப்பு.
உலகத்தில் எந்த மூலையில் வாழும் தமிழ்மாணவனுக்கும் இந்த பொறுப்பில்
நிச்சயம் பங்குண்டு.
வேரோடி எங்கும் விழுதெறியும் இந்த ஆலமரத்தில் பலம்மிக்க ஒரு பெரும்
விழுதாய் "அறிவோலை" என்ற பெயரோடு கல்வி சம்மந்தமான தகவல்களும்
அறிவியல் சம்மந்தமான ஆவணங்களும் சமகால அரசியல் ஆய்வுகளும்
உலகச் செய்திகளையும் உள்ளடக்கிய சஞ்சிகை வருடங்களுக்கு இரண்டு
அல்லது மூன்று முறை பிரஞ்சிலும் தமிழிலுமாக இரண்டு மொழிகளில்
வெளியாகிறது. எமது அறிவோலையின் முதலாவது இதழை கடந்த ஆண்டு
பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின்போது தாயகத்தில் இருந்து
வருகைதந்த விடுதலைப்புலிகளின் அரசவைக் கவிஞர்
திரு. புதுவை இரத்தினதுரை அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது
முதலாவது இதழிலேயே பல வாசகர்களினதும் பெரியவர்களினதும்
அறிஞர்களினதும் பாராட்டுக்களையும் ஊக்குவிப்புக்களையும் பெற்றது.
அதைத்தொடர்ந்து இரண்டாவது இதழ் கடந்த மாதம் அகில பிரஞ்சு மாணவர்
சங்கங்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திரு. தோமாஷ் புவாறியர் அவர்களால்
வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த வெளியீட்டு விழாவில் பல வேறுபட்ட
பிரஞ்சு மாணவர்சங்க உறுப்பினர்களும் ஆய்வாழர்களும் தகவல்
சேகரிப்பாளர்களும் தமிழ் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு
சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்வின்போது எமது பெற்றோர்களுக்கும் இதர மாணவர்களுக்கும்
எமது தற்போதய செயற்பாடுகள் பற்றி விளக்கினோம் அந்த செயற்பாடுகளில்
சில பின்வருமாறு....
மாணவர்களுக்கு இலவச வகுப்புகள்
மக்களுக்கு இலவச பொழிபெயற்புச் சேவை
சகமாணவர்களுக்கு உதவிகள் புரிதல்
கல்வி தொடர்பான சுற்றுலாக்கள்
கல்வி தொடர்பான கலந்துரையாடல்கள்
கல்வி தொடர்பான ஆலோசனைகள்
பயனுள்ள தகவல்கள்தேடி மாணவர்களுக்கு அறிவித்தல்
பெற்றோர்களோடு கலந்துரையாடல்
பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் கல்வி பற்றிய அறியாமையை போக்குதல்
தமிழ் வளர்ப்புத்திட்டங்கள்
தமிழ்ப்பாரம்பரியங்களை பாதுகாக்கும் திட்டங்கள்
இப்படியாக எமது செயற்பாடுகள் நீழ்கிறது....
இருப்பினும் இவை தற்காலிக செயற்பாடுகளே தவிர வருங்கால செயற்பாடுகள்
இன்னும் பல.........
ஆகவே... அன்புக்குரிய தமிழ் மாணவர்களே...
வேறுபட்ட கலாச்சாரம் வேறுபட்ட இனங்களுக்கு மத்தியில் எங்கள்
பாரம்பரியங்கள் எங்கள் கலாச்சாரங்கள் எங்கள் சுயஅடையாளங்கள்
எந்தவிதத்திலும் அழிந்திவிடாமல் எந்தவிதத்திலும் காயப்படாமல்
காப்பது எங்கள் கடமை. எந்தத்தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழனுக்குரிய
தன்மைகளுடனும் தமிழனுக்குரிய அடையாளத்துடனும் இருப்பதையே
நாங்கள் விரும்புகிறோம் அதுபோல நீங்களும் அதையே விரும்புவீர்களாயின்
புறப்பட்டு வாருங்கள் உங்களை வரவேற்க உங்கள் சகோதரர்கள்
நாங்கள் தயாராய் இருக்கிறோம். எல்லோரும் ஒன்றுசேர்ந்து இலக்குகளைநோக்கி
பயணத்தைத் தொடர்ந்து சாதனைகள் பல படைத்து பார்பவர்கள் புகள
புதியதொரு வரலாறு எழுதுவோம். புலத்தில் தாய்நிலத்தின் நினைவோடு
நடமாடுவோம். இன்னும் பெரியதொரு பலமாக உருவாகுவோம்.
ஏனெனில்... நாங்கள் தமிழ் மாணவர்கள்...!
நம்பிக்கையுடன்
பிரஞ்சு தமிழ் மாணவர் சங்கம்
19.10.2003 (பாரீஸ்)
|
|
|
| வசியக்காரி.... |
|
Posted by: sharish - 10-19-2003, 05:10 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>வசியக்காரி....</b></span>
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத வசியக்காரி...
ஒரு தடவைதான் சிரித்தாய்
ஓராயிரம் தடவை
மனசுக்குள் எதிரொலி...!
கத்தியை நினைவுபடுத்தும்
அபாயமல்ல நீ
இருப்பினும் அதன்
கூர்மையை நினைவுபடுத்தும்
உன் விழிகள்...!
வேலவன் வேல்விழி வேதனாயகி...
திருப்பு முகம்
மறுப்பு ஏன்..?
விழிதிறந்து விருந்துவை
ஒரு கோடி சூரியனை
ஒரே நேரத்தில் பார்க்கும்
பாக்கியசாலி நான்தான்...!
றோஜா இதழ்களுக்கேன்
நிறச்சாயம்...?
உன் உதடுகளுக்கேன்
உதட்டுச்சாயம்..?
மலர்கள்
அலங்காரம் செய்வதில்லை
மனிதன்தான் அதைக்கொய்து
தன்னை அலங்கரிக்கின்றான்..!
புதுவாசம் கொண்ட மகாதேவி...
நீ மலர்...!
வா... வந்தென்னை அலங்கரி...!
திடீரென்று வீதியில்
மலர்வாசனை வந்தது
அதோ...
தூரத்தில் நீ வருகிறாய்...!
ஏதோ..
சில கவிதைகள் எல்லாம்
எழுதுகிறேன்
கவிஞன் என்கிறார்கள்
""கலங்காத"" காதல்சமுத்திரமே...
நீ கொஞ்சம் காதல் தா...!
என்னையும்...
காதல்க்கவிஞனாக்கு....!
உயிரை அலைபாயவைத்த
அமுதகாவியா...
கவிதை
உனக்குப் பிடக்கும் என்றாய்
இதயம்
உனக்குப் பிடிக்கும் என்றாய்
இரண்டும்
என்னிடம் உண்டு...!
இரண்டுக்கும் பிடித்த
காதல்தான் உன்னிடம் உண்டு...!
உனக்கு உரிமையுண்டு
என் இதயத்தைக் கொள்ளையடிக்க
வா வந்து கொள்ளையடி...!
கோலாகலமாக கொண்டாடு...!
கொலைசெய்யாதே...!!!
கடல்மேல் தவழும்
அலைபோல் எழுந்து
தரைமேல் நடக்கும்
நுரையாலான சிலையே
கழுத்துவரை உன்னை
அற்புதமாய்ப் படைத்த பிரம்மன்
அதன்பின்
திறமையுள்ள சிற்பியைத்தான்
அழைத்திருப்பான்
அழகாக செதுக்கிவிட...!
பார்த்ததும் ©க்கும்
பாரிஜாதமே....
பாதணி அணிந்து நடக்காதே
நல்ல ஓவியத்தை
நாள்தோறும் நான்பார்க்க
விரும்புகிறேன்..!
உன் சிறு சிறு பொருட்களைத்தான்
நான் திருடி திருடி சில்மிஷம் செய்தேன்
""திருடன்"" என்று அழைக்கிறாய்....!
என் உயிரையே திருடிக்கொண்ட
உன்னை நான் எப்படி அழைப்பது...???
""கள்ளி"" உன்னையும்
பள்ளிப் பாடத்தையும்
ஒரே நேரத்தில்
இரகசியமாய்...
வாசித்துக்கொண்டிருந்தேன்
சத்தமில்லாமல் அழைத்து
""கவனி"" என்கிறாய்...!?!??
உனக்கும் எனக்கும் உள்ள
உறவை...
காதல் என்கிறார்கள்...!
எப்படி சாத்தியமானது...?
எண்ணிப்பார்க்க முடியாத
நேசத்தை
பிரித்துவிட முடியாத
பாசத்தை
மொழியின் உறவுச்சொற்களால்
சொல்லமுடியாத உறவை
மூன்றே மூன்று
எழுத்துக்களாலான
வார்த்தையால் சொல்வது....
எப்படி சாத்தியமானது....???
......................................
த.சரீஷ்
19.10.2003 (பாரீஸ்)
(இன்னும் வரும்....)
|
|
|
|