Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 396 online users.
» 0 Member(s) | 394 Guest(s)
Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,189
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,182
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,577
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,575
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,003
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,397
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,081
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,970
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232

 
  இன்னுமொரு மகுடம்.
Posted by: P.S.Seelan - 10-16-2003, 12:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

இந்தியாவின் 34ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஓர் உத்தரவு பாராட்டைப் பெற்றது. இலங்கை திரைப்படத் தயாரிப்பாளரான பிரசன்ன வித்தானகேயே இப்பாராட்டைத் தெரிவித்தார்.
இத்திரைப்பட விழாவில் பங்குபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வித்தானகே, தென் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் ஆபாசத் திரைப் படங்களால் இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து இலங்கை அரசு எதனையும் செய்யவில்லை. ஆயினும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஆபாச திரைப்படங்கள் மீது தடைவிதித்திருக்கிறார் என்று கூறினார்.

நன்றி உதயன்.

எதிரிகள் எல்லாம் போற்றும் தேசியத் தலைவரை எம் இனத்தின் சில வக்கிர புத்தி கொண்டவர்கள் புரிந்து கொள்ளாமலிருப்பது ஏன்? நாளையதொரு நல்ல நிர்வாகம் நிச்சயம் தமிழீழபகுதிகளில் ஏற்படும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது.

அன்புடன்
சீலன்

Print this item

  ஏன் இந்த இடைவெளி!
Posted by: mohamed - 10-16-2003, 11:52 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (12)

ஏன் இந்த இடைவெளி!

Sri Lanka still hungry for peace


Frances Harrison
BBC correspondent in northern Sri Lanka

It's assembly time at the Kiranchchi school and 200 children are praying to the Hindu goddess of wealth.
The irony doesn't strike them - so accustomed are they to poverty in these rebel held jungles of northern Sri Lanka.

Some children walk up to an hour to reach school without breakfast.

The stragglers keep coming in after the bell has rung - barefoot and wearing grubby uniforms.

New research has revealed alarming degrees of malnutrition among children like these affected by Sri Lanka's civil war.

A World Food Programme (WFP) survey just released found at least a quarter of children entering school in the north-east of the island suffered from acute malnutrition.

Although there has been nearly two years of fragile peace there is still severe food deprivation, especially in rebel Tamil Tiger controlled areas.

Parents' dilemma

The malnutrition is not immediately obvious until you ask the children's ages.

"If you compare these children with the children in other parts of Sri Lanka, they are much smaller," says WFP programme officer Hakan Tongal.


The 13-year-olds here... resemble eight or nine-year-olds in other parts of Sri Lanka."

WFP has started providing mid-morning meals to tens of thousands of children across the north-east in an attempt to fight the menace of malnutrition.

Parents cook a vast cauldron of rice and dal over a wood fire.

Thirteen-year-old Rajitha says: "If it doesn't rain then my father can't farm and we don't have food so we starve."


Vivekanth is one 12-year-olds who looks more like eight. His mother, Ratnapoopathy, at 45 already has grey hair and two grandchildren.

Someone has told her she should feed her five children eggs but patiently explains her dilemma - if she buys eggs, she can't buy rice.

"It's sad," she says, "that I am unable to do anything for my children."

According to WFP's research, a child in the conflict areas of the north-east is twice as likely to be malnourished as one in the south.

Sri Lanka may be a small island but even though the fighting has stopped the distances can still be measured by how much food is in children's stomachs.

Print this item

  வேண்டாம் தொலையட்டும்
Posted by: shanthy - 10-16-2003, 08:43 AM - Forum: கவிதை/பாடல் - Replies (81)

<b>வேண்டாம் தொலையட்டும்.</b>


நரகல்களை மடியில்
அள்ளி வைத்து - அது
நாகரீமெனப் பெயர் சூட்டி
கறுப்பாயிருந்த தலை சிவப்பாகி
பச்சையாகி....
நாய் சூப்பிய பனங்கொட்டை
நல்ல வடிவு.

காக்கா அன்னநடை நடந்த கதை
காதுகளை , மூக்குகளை
முகங்களையெல்லாம் நாறவைத்து
பேயோ எனப்பயந்து பேதலிக்க.....

வணக்கம் சொல்ல வாய் நோவில்
கலோ சொல்லும் உதடுகளின்
இடைக்குக் கீழாயும் தொடைக்கு மேலாயும்
கம்பிகள்....கம்பிகள்.....
தம்பிகளின் , தங்கைகளின்
காற்சட்டைகளில் ஓட்டைகள்
கடகமளவில் கால் அகலம் றோட்டுக்கூட்ட
கலர் கலராய் நடைநடக்கும்
காளையரே , கன்னியரே
வாந்தி வருகிறது உந்த வடிவுகளைப் பார்க்க....

வடிவாய்க் கிடந்த தலைமயிரை
வழித்து மொட்டையாக்கி வானரமாய் உருமாறி
டிஸ்கோவுக்குச் சினேகிதியோடு மகன் அலைய
'என்ர பிள்ளை நாகரீகம் தெரிஞ்ச பிள்ளை"
அம்மாக்கள் சிலபேரின் அறியாமை
சும்மாயிருந்த பொன்னம்மாக்களுக்கும் ,
பொன்னையாக்களுக்கும் யுவாலேத்த
சத்தமின்றியிருக்கும் பிள்ளைக்கும்
சனிக்குணங்களைச் சொல்லிக்குடுக்கும்.

இங்கு அப்பாக்கள் பலருக்கு
அமோகக்கொண்டாட்டம்
துணையாய் பியரடிக்க ஒருதுணையாய்
மகனின் நண்பனின்....

இன்னொருவீட்டுப் பிள்ளையை
இரவுக்குடிகாரனாக்கித் தன்பிள்ளையை
அரிச்சந்திரனாகக் கதையளந்து
எவளோ ஒரு தாயின் மகன்
தறுதலையாவதில் துளியும்
கவலையில்லை இவர்க்கெல்லாம்.

தன்பிள்ளை முகம் ஒருநாள்
கிளிந்து விட மாற்றான் தாய் பிள்ளை
கெடுத்ததாய் குறைசொல்லும்
குடிகாரத் தகப்பன்கள் துணையான அம்மாக்கள்
துலையாரோ இப்புவிவிட்டு.....?

பெண்ணின் உடைகுறைத்து - அவள்
அங்கங்களை அங்குமிங்கும் அசைத்துக்காட்டி
தானுறிஞ்சிப் பால்குடித்த முலைகளையே
விலையாக்கிப் பிழைக்கும் வித்தகர்கள்
காந்தம் இருப்பதாய்ப் பெண்ணில்
காமக்கனிரசம் சுரப்பதாய்க் கதையளந்து
காலம் பயன்பெறவேண்டிய
கண்ணுணரும் சாதனத்தை விபச்சாரமாக்கி....

இலக்கியம் படைப்பதாய் ஏமாற்றும்
வித்தைகளை 'இதுவெல்லோ நல்லபடம்"
அறியாததையா காட்டுகிறார் - உமக்கு
அதில் ஆர்வமில்லையா....?
அறிவார்ந்து சினிமாக்கலைபடித்த
சீமான்களும் சேர்ந்து வக்காளத்து.

குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த
கொடிபிடிக்கும் கொள்ளையர்கள்
கல்லெறிபட்டுச் சாகவேணும்
கடவுளே கண்திறவாய்....!
அது தமிழ் வளர்க்கும் ஒளித்தலமாயினும்
தொலைந்தொழியட்டும் வேண்டாம்.
16.10.03.

Print this item

  குகநாதன் தொலைக்காட்சி
Posted by: Sangili - 10-16-2003, 07:25 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (2)

குகநாதன் தொலைக்காட்சிகள் என்ன ஒருமுறை வருகிறது.பின்னர் மறைகின்றன.பின்னர் வருகிறது...யாருக்காவது தகவல் தெரியுமா?

Print this item

  கனடிய பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் எங்கே?
Posted by: Sangili - 10-16-2003, 07:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கனேடிய வெளிவிவகார அமைச்சர்
புலிகளைச் சந்திக்காதது கவலை
யாழ்.மாவட்ட பொது அமைப்புகள் கடிதம்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள் ளும் கனேடிய வெளிவிவகார அமைச் சர் பில் கிரஹம் விடுதலைப் புலி களைச் சந்தித்துக் கலந்துரையாட ஏற்பாடு செய்யாதது கவலை அளிக் கின்றது என்று யாழ். மாவட்டத்தில் இயங்கும் பொது அமைப்புக்கள் தெரி வித்துள்ளன.
கொழும்பில் உள்ள கனேடியத் து}தரகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத் திலேயே மேற்கண்டவாறு அந்த அமைப்புக்கள் கவலை தெரிவித் துள்ளன.
யாழ். மாவட்ட அதிபர் சங்கம், தமிழராசிரியர் சங்கம் உட்பட பல அமைப்புக்கள் இக்கடிதத்தை அனுப்பி யுள்ளன.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:-
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமாயின், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலி களுடன் பேசவேண்டும். இலங்கைக்கு வரும் கனேடிய வெளிவிவகார அமைச் சர் விடுதலைப் புலிகளைச் சந்திப்ப தாக முன்னர் செய்திகள் வெளிவந்தன.
இப்போது விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை அவர் சந்திக்கமாட் டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு எமக்கு கவலை அளிப்பதுடன் ஏமாற்றத்தையும் ஏற் படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதி களைச் சந்தித்து பேச்சு நடத்தி தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் - என்றுள்ளது.


நன்றி உதயன் செய்தி



கனடிய பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் எங்கே? இதுபற்றி ஒன்றும் கூறவில்லையே ஏன்? அல்லது பாபா படம் வரும்போதுமட்டும்தானா அதை எதிர்த்து அவர்கள் பேசுவார்கள்?

Print this item

  ஆசிய நாடொன்றின் அரிய சாதனை....!
Posted by: kuruvikal - 10-15-2003, 10:48 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

<img src='http://thatstamil.com/images14/china1-250.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://thatstamil.com/images14/china4-200.jpg' border='0' alt='user posted image'>
வீரரை விண்ணுக்கு செலுத்திய 'லாங் மார்ச்' ராக்கெட்

<img src='http://thatstamil.com/images14/china5-250.jpg' border='0' alt='user posted image'>
வீரர் யாங் லெவியுடன் விண்ணை சுற்றி வரும் 'சென்ஸோவ் 5' விண்கலம்

<img src='http://thatstamil.com/images14/china6250.jpg' border='0' alt='user posted image'>
'சென்ஸோவ் 5' விண்கலத்தின் மாதிரி

விண்ணை அடைந்தார் சீன வீரர்: பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறார்

பெய்ஜிங்:

லாங் மார்ச் ராக்கெட்டில் பொறுத்தப்பட்ட சென்ஸோவ் விண்கலத்தில் அமரும் சீன வீரர் யாங் லெவி.

விண்வெளி வீரருடன் தனது முதல் விண் கலத்தை சீனா இன்று விண்ணில் செலுத்தி பெரும் சாதனை படைத்தது.

விண்வெளிக்கு தனது ராக்கெட் மூலம் வீரரைச் செலுத்தியுள்ள உலகின் மூன்றாவது நாடு சீனா தான். ஆசியாவில் முதல் நாடும் சீனா தான்.

யாங் லிவே (வயது 38) என்ற விண்வெளி வீரருடன் 'சென்ஸோவ் 5' (புனிதக் கலன் 5) என்ற இந்த விண்கலத்தை சீனாவின் 'லாங் மார்ச்' ரக ராக்கெட் இன்று விணணில் செலுத்தியது. கோபி பாலைவனப் பகுதியில் உள்ள ஜிகுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் இருந்து இந்த ராக்கெட் இன்று ஏவப்பட்டது.

இதை சீன அதிபர் ஹூ ஜின்டாவ் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் பார்வையிட்டனர்.


இதை சீனத் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

1999ம் ஆண்டு முதல் விண்வெளிக்கு வீரரை அனுப்புவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 4 முறை ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்து அதை பத்திரமாக தரையிறங்கச் செய்தது சீனா.

இதைத் தொடர்ந்து இன்று வீரருடன் விண்கலத்தை அனுப்பியுள்ளது.

சீனாவின் சென்ஸோவ் விண் கலம் ரஷ்யாவின் சோயூஸ் கேப்சூல் விண்கலத்தைப் போலவே உள்ளது. 8.86 மீட்டர் நீளமும் 7,790 கிலோ எடையும் கொண்ட இந்த விண்கலம், சிறிய ராக்கெட்டுகள் மற்றும் பாராசூட்களைக் கொண்டது. இவற்றைக் கொண்டு இந்தக் கலன் விண்ணிலிருந்து பத்திரமாகத் தரையிறங்கும்.

இந்தக் கலம் மிகச் சிறப்பாக விண்ணில் இயங்கி வருவதாகவும், விண்ணில் செலுத்தப்பட்ட வீரர் யாங் லிவே பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், விண்வெளிக்கு ஆள் அனுப்பும் தங்களின் முயற்சி பெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது.

ஏவப்பட்ட 10 நிமிடங்களிலேயே ராக்கெட்டில் இருந்து பிரிந்த அந்தக் கலன் விண்வெளியில் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பாதையை அடைந்தது. இப்போது அந்தக் கலம் சீராக இயங்கி வருவதாகவும் சீனாவின் ஜின்ஹூவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த சில நிமிடங்களில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்ட யாங் லிவே, தனது உடல் வெப்பம், ரத்த அழுத்தம் ஆகியவை மிக நார்மலாக இருப்பதாகத் தெரிவித்தார். அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

விண்ணில் செலுத்தப்பட்டுள்ள வீரர் யாங் லிவே, சீன ராணுவத்தின் விமானப் படைப் பிரிவில் லெப்டினண்ட் கலோனல் பதவியில் உள்ளார். 1998ம் ஆண்டு முதல் விண்ணில் பறக்க பயிற்சியில் ஈடுபட்டுத்தப்பட்டார். தன 18 வயதில் சீன ராணுவத்தில் சேர்ந்தவர். 1,350 மணி நேரம் பல்வேறு ரக போர் விமானங்களை ஓட்டிய அனுபவம் கொண்டவர்.

சென்ஸோவ் விண் கலம் 90 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை முழு சுற்று சுற்றி வந்து கொண்டுள்ளது.

மொத்தம் 21 மணி நேரம் 14 முறை பூமியைச் சுற்றிய பின் வீரர் யாங் லெவி இந்தக் கலத்தின் மூலம் தரையிறங்கும்.

கலததை விண்ணில் ஏவுவது எளிது. பத்திரமாக தரையிறக்குவது தான் மிகவும் கடினமானது. இதனால் சீன வீரரின் இந்த விண்வெளிப் பயணத்தை உலகமே உற்று கவனித்து வருகிறது.

1961ம் ஆண்டில் ரஷ்யா தான் முதன்முதலில் தனது வீரரை விண்ணுக்கு அனுப்பியது. 1962ல் அமெரிக்க வீரர் விண்வெளிக்குச் சென்றார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் சீன வீரர் விண்ணை அடைந்துள்ளார்.


விண்கலத்தை வடிவமைப்பதிலும், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் சீனாவுக்கு ரஷ்யா பெருமளவில் உதவியதாக அமெரிக்கா கூறுகிறது.

Our thanks to thatstamil.com and suratha's pongu tamil converter.!

Print this item

  நோபல் அறிஞர்களை சந்தியுங்கள்
Posted by: சாமி - 10-15-2003, 08:03 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

உலகிலேயே அறிவில் சிறந்தவர்கள் பட்டியலை தேர்வு செய்தால் அதில் கட்டாயம் நோபல் அறிஞர்களும் இடம்பெறுவார்கள்.உலகில் உள்ள நோபல் அறிஞர்கள் அனைவரையும் ஒரே வெப்சைட்டில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் அது நோபல் பரிசின் அதிகாரப் பூர்வ வெப்சைட்தான்:

http://www.nobel.se

பரிசு அறிவிக்கப்படும்போதே இந்த தளத்திலும் அது குறித்த செய்தி உடனடியாக இடம்பெறுவதால் உலகெங்கிலும் உள்ள மக்கள் உடனடியாக யாருக்குப் பரிசு என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும். இத்தளத்தில் இயற்பியல், வேதியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் இதுவரை யார் யாரெல்லாம் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.


இத்தளத்தில் நோபல் அறிஞர்களின் பேட்டிகளும் அவர்கள் ஆய்வு குறித்த குறிப்புகளும் கிடைக்கின்றன. அதேபோல் நோபல் அறிஞரின் பெயரைக் கொடுத்து அவரது வாழ்க்கைக் குறிப்பு மற்றும் பணிகள் குறித்த தகவல்கள் பெறவும் வழி உள்ளது.

அனைவரும் குறிப்பாக மாணவர்களும் ஆசிரியர்களும் சென்று படிக்க வேண்டிய தகவல் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. ராயல் ஸ்வீடிஸ் அகாடமி வழங்கும் நோபல் பரிசுகள் குறித்து வேறு எங்கும் இவ்வளவு தகவல்கள் பெறமுடியாது.

மாணவர்கள் சிக்கலான அறிவியலைப் புரிந்து கொள்வதற்காக விளையாட்டுப் போக்கில் அறிவியல் தகவல்களை இடம்பெறச் செய்துள்ள மாணவ சமுதாயத்துக்கு பயனுள்ளதாக உள்ளது. 2003 அறிஞர்களின் தகவல்கள் நீங்கள் இங்கு பெறுவது அறிஞர்களை நேரில் சந்தித்த உணர்வை ஏற்படுத்துகிறது.

நார்வேயின் நோபல் பரிசு கமிட்டியின் அதிகாரப்பூர்வ தளம்:

http://www.nobel.no

இத்தளத்திலும் நோபல் பரிசு பெற்ற அறிஞர்களின் உரைகள் இடம்பெற்றுள்ளன. ஆல்பிரட் நோபல் பற்றியும் இங்கு தகவல்கள் உள்ளன.

நன்றி: தினமலர்

Print this item

  கத்தி வேண்டாம்.. குழாய் போதும்!
Posted by: AJeevan - 10-15-2003, 05:34 PM - Forum: மருத்துவம் - No Replies

<span style='font-size:25pt;line-height:100%'>கத்தி வேண்டாம்.. குழாய் போதும்!</span>
<img src='http://www.vikatan.com/av/2003/oct/12102003/p109.jpg' border='0' alt='user posted image'>
ஜீரண மண்டல உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோபிக் ஆபரேஷன் முறையில் சிகிச்சையளிப்பது
குறித்து, மேலும் விளக்கமாக விவரிக்கிறார்,
'கேஸ்ட்ரோ என்ட்ராலஜி' நிபுணர் டாக்டர் சி. பழனிவேலு.

''பொதுவாக அல்சர் முதல் கான்சர் வரையிலான நோய்களுக்கு வயிற்றுப் பகுதியைக் கிழித்துத்தான் ஆபரேஷன் செய்வார்கள். லேப்ராஸ்கோபியில் இது தேவையில்லை.

உடலின் எந்த இடத்தில் பிரச்னை என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடத்தில் அதிகபட்சம் ஐந்து மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்ட ஒரு குழாயை (rod) செருகி, அதன் மூலமாக ஒளியைப் பாய்ச்சி, உள்ளிருக்கும் பிரச்னைக்குரிய பகுதியை அதே அளவுள்ள இன்னொரு குழாய் வழியாக அகற்றுவதுதான் லேப்ராஸ்கோபிக் முறை.

முதன்முதலில் 1983-ல், பிரான்ஸ் நாட்டில் இந்த முறையில் அப்பன்டிக்ஸ் ஆபரேஷன் செய்யப்பட்டது. 1987-ல் இந்தக் குழாயின் நுனியில் ஒரு காமிரா பொருத்தப்பட்டு, இன்னும் துல்லியமாகப் பிரச்னையை ஆராய்ந்து அறுவைசிகிச்சை நடந்தது. 'விடியோ கைடட் சர்ஜரி' என்றும் இதைச் சொன்னார்கள். இந்த வகை சிகிச்சை முறை தென்னிந்தியாவில் அறிமுகமானது 1991-ல்!

இன்று பெரும்பாலான அரசு மருத்துவமனைகளும்கூட லேப்ராஸ்கோபிக் ஆபரேஷன் பிரபலமாகிவிட்டது. 'உயர்தர சிகிச்சை... ஏற்றுக்கொள்ளக்கூடிய செலவில்' என்றும் இதைச் சொல்லலாம்'' என்கிறார் பழனிவேலு.

லேப்ராஸ்கோபிக் சிகிச்சை, ஊசித்துளை அளவிலான கருவியைக் கொண்டு செய்வதால் தையல் இல்லை, வலி இல்லை, சீழ் கட்டும் வாய்ப்பில்லை. ஒருசில மணி நேரங்களிலேயே எப்போதும்போல் சாப்பிடலாம். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவதோடு, அன்றாட வேலைகளைச் செய்யலாம்!

லேப்ராஸ்கோபியில் என்னென்ன வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக் கலாம்?

ஹெர்னியா (குடல் இறக்கம்):

நமது உடலில் பலவீனமான சதைப் பகுதி உள்ள இடங்களில் குடல் பிதுங்கிக்கொண்டு கட்டி மாதிரி தோற்றமளிக்கும். அதைத்தான் 'ஹெர்னியா' என்று சொல்கிறோம்.

இந்தக் குறைபாடு ஏற்பட வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

கடினமாக உழைப்பவர்களுக்கு வயிற்றில் அழுத்தம் ஏற்படும்போது ஹெர்னியா வர வாய்ப்பு உண்டு. குடல் பிதுங்கிய இடத்தில் கைவைத்து அழுத்தினால் உள்ளே போய்விடும். ஆனால், அது நிரந்தரத் தீர்வல்ல... ஒரு கட்டத்தில் குடல் முறுக்கிக்கொள்ள வும் வாய்ப்பு உண்டு.

அப்படி நடந்தால் ரத்த ஓட்டம் தடைபட்டு, அந்தக் குடல் பகுதி அழுகி, அதை முழுமையாக எடுக்கவேண்டிய நிலை ஏற்படும். அப்படியே இல்லா விட்டாலும்கூட, தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால் மலம் கழிக்கும் போது, தும்மும்போது குடல் மீண்டும் வெளியே துருத்திக்கொண்டு நிற்கும்.

அதேபோல, வேறு ஏதோ காரணத் துக்காக அறுவைசிகிச்சை செய்தவர் களுக்குத் தொப்புளுக்குக் கீழே தையல் போட்ட இடத்தில் ஹெர்னியா வர வாய்ப்பு உள்ளது. இதை 'இன்சிஷனல் ஹெர்னியா' (Incisional Hernia) என்போம்.

ஹெர்னியாவுக்கு ஆபரேஷன் செய்வதைத் தவிர வேறுவழி இல்லை. அதற்காக 'ஓப்பன் சர்ஜரி' மாதிரி வயிற்றைக் கிழிக்கவேண்டிய அவசியமும் இல்லை. லேப்ராஸ் கோபிக் முறையில் ஹெர்னியா ஆபரேஷன் செய்யும்போது, பல அடுக்குகளாக உள்ள சதைப் பகுதியில் எந்த லேயரில் பலவீனமாக உள்ளதோ, அந்த இடத்தில் மட்டும் ஒரு 'செயற்கை வலைத் துணி' (Mesh) வைத்து தைத்துவிடுவோம். அதன்பிறகு குடல் அந்த இடம் மூலமாக வெளிவராது. மீண்டும் ஹெர்னியா உண்டாகும் வாய்ப்பு முழுமையாக தவிர்க்கப்படுகிறது.

ஹெர்னியாவுக்கு வயிற்றைக் கிழித்து ஆபரேஷன் செய்யும்போது, சதையின் எல்லா லேயர்களும் கிழிபடும். பின்பு தையல் போட்ட இடத்திலும் பிரச்னைகள் எழலாம்.

நெஞ்சு எரிச்சல் (Heart Burn):

உணவுமுறையில் ஏற்படும் மாற்றங்கள், அடிக்கடி டென்ஷன் ஏற்படுவது போன்ற வற்றால் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் உண்டாகும். இதற்குக் காரணம் - உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே உள்ள ஒரு வால்வு லூஸாகிவிடுவதுதான்!

புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர் கள், கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்கள் போன்றவர் களுக்கும்கூட இந்த வால்வு லூஸாகி, ஹைட்ரோ குளோரிக் அமிலச் சுரப்பு அதிகமாகிக் குடல்புண் ஏற்பட்டு எரிச்சல் உண்டாகும். சிலருக்கு இதை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

ஆனால், வால்வை மீண்டும் டைட் பண்ணாவிட்டால் கான்சருக்கு முந்தைய நிலையை (Pre-malignancy Condition) அடையவேண்டிவரும். எனவே, லேப்ராஸ்கோபிக் முறையில் வயிற்றை உணவுக்குழாய்க்குமேல் சுற்றி வைத்துத் தைத்து, வால்வை மீண்டும் டைட்டாக்கிவிடுவோம்.

இதை 'ஃபண்டோப்ளைகேஷன்' (Fundoplication) என்று சொல்வார்கள். இதைச் செய்வதன் மூலம் கான்சரைத் தவிர்க்க முடியும்.

அல்சர் (குடல்புண்):




உணவில் அதிக காரம் சேர்ப்பது, நார்ச்சத்துள்ள உணவைத் தவிர்ப்பது போன்றவற்றால் வயிற்றில் அமிலம் அதிகம் சுரந்து, குடல்பகுதியில் செல் அரிப்பு ஏற்படும். இதனால்தான் குடல்புண் உண்டாகிறது. குறித்த நேரத் தில் சாப்பிடாவிட்டாலும் இந்தப் பிரச்னை ஏற்படும்.

இதில் குடல்புண் மட்டும் ஏற்பட்டுப் பாதிக்கப்படுபவர்கள் ஒரு வகை. இதன் அடுத்தகட்டமாகக் குடல் அடைப்பு ஏற்படுவது அடுத்த வகை. குடல்புண் உள்ளவர்களுக்கு ஆசிட் அளவைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் தந்தே பெரும்பாலும் குணப்படுத்திவிட முடியும். ஆனால், குடல் அடைப்புக்கு ஆபரேஷன் அவசியம்.

இந்த ஆபரேஷனை லேப்ராஸ் கோபிக் முறையில் எளிதாகச் செய்யலாம். இந்த முறையில், ஆசிட் சுரக்க மூலகாரணமாக உள்ள நரம்பை (Vagus Nerve) துண்டித்துவிடுவோம்.

குடல் அடைப்பைச் சரிசெய்ய, முதலில் குடல்புண்ணை ஆற்றிவிட்டு, வயிற்றையும் சிறுகுடல் பகுதியையும் ஒன்றாக இணைத்து விடுவோம். லேப்ராஸ் கோபிக் முறையில் இதைச் செய்தால், ஒரு நாள்தான் ஆஸ்பத்திரியில் தங்க வேண்டியிருக்கும். அடுத்த நாள் வீடு திரும்பலாம்.

அதேபோல, 'குடல் ஓட்டை'யையும் (Ulcer Perforation) சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த இடத்தை அடையாளம் கண்டு, விரைவாகச் சரிசெய்ய வேண்டும். அதுவும் லேப்ராஸ்கோபியில் சுலபம்.



பித்தப்பை கற்கள் (Gall Bladder Stones):

ஜீரணத்துக்கு அவசியமான பித்தம், கல்லீரலில் உண்டாகிச் சிறுகுடலுக்குப் போகும். இடையில் பித்தத்தைச் சேகரிக்கும் பணியைச் செய்யும் பை தான் பித்தப்பை.



இந்தப் பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மை குறையும்போதும் பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படும் போதும் பித்தத்திலுள்ள கொழுப்பு மற்றும் 'பிலிருபின்' (Bilirubin) என்ற திடப்பொருள் போன்றவை பித்தப் பையிலேயே படிந்து, கற்களாக உருமாறிவிடும்.

பச்சை, நீலம், பிரௌன் போன்ற கலர்களில் தனித்தனியாக உருவாகும் இந்தக் கற்கள், சில நேரம் பார்ப்பதற்கு கிறிஸ்டல் மாதிரியே இருக்கும். சமீபத்தில் ஒருவரின் பித்தப்பையைச் சோதித்ததில், அதில் 1,240 கற்கள் இருந் தன!'' என்றார் டாக்டர் சி. பழனிவேலு.



பித்தப் பையில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன..?

தொடரும்...............

நன்றி:விகடன்

Print this item

  Will the Canadian FM meet Prabhakaran?
Posted by: Mathivathanan - 10-14-2003, 07:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

<span style='font-size:25pt;line-height:100%'>Canadian FM refuses to meet Prabhakaran </span>
Monday, October 13, 2003, 10:11 am SL Time, ColomboPage News Desk, Sri Lanka.
"The meeting would badly affect the Canadian international politics as well as Canada's reputation," High Commission said in a statement.
Oct 13, Colombo: Canadian Foreign Affairs Minister Bill Graham has refused to meet the LTTE leader Velupillai Prabhakaran during his official visit to the island this week. A much-waited decision was conveyed to the LTTE by Canadian High Commission in Colombo yesterday.

"The meeting would badly affect the Canadian international politics as well as Canada's reputation," High Commission said in a statement.

The Canadian Foreign Minister will arrive in Colombo on October 14 and he is scheduled to travel to war-ravaged Jaffna.

The LTTE's Political Secretariat had earlier faxed a letter to the Canadian High Commission in Colombo extending an invitation on behalf of the Tamil people and the LTTE Leader requesting the Canadian Foreign Minister to undertake a trip to Kilinochchi for a meeting with Prabhakaran.

"We are regretting to inform you that the Canadian Foreign Minister is not in a position to meet your leader during his official visit to Sri Lanka," a statement issued by the High Commission said. Mr. Bill Graham will meet with a number of political leaders including President Chandrika Kumaratunga, Prime Minister Ranil Wickremesinghe and Opposition Leader Mahinda Rajapakse.

http://www.colombopage.com/archive/October...13101153RA.html

Print this item

  சாப்ட்வேரை மேம்படுத்த எந்த தளங்களில் நுழையலாம்?
Posted by: சாமி - 10-14-2003, 06:37 PM - Forum: கணினி - No Replies

ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளைத்தான் நாம் முதலில் அடைக்க வேண்டும். நம்மில் பெரும்பாலோர் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தைத்தான் பயன்படுத்துகிறோம். எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வெப் தளத்தில் நுழைவதுதான் முறை.

http://windowsupdate.Microsoft.com என்ற தளத்தில் நுழைந்தால் விண்டோஸை புதுப்பிக்கலாம். அந்த தளத்தில் உள்ள Product updates என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆபரேடிங் சிஸ்டத்தை முற்றிலும் ஆராய்ந்து எவற்றை மேம்படுத்த வேண்டும் என மைக்ரோசாப்ட் தளம் அறிவிக்கும். Recommended updates என அது கூறுகிற எல்லாவற்றையும் மேம்படுத்துவது நல்லது.

விண்டோசிற்குப் பிறகு பெரும்பாலோர் பயன்படுத்துவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பு சாப்ட்வேரைத்தான். அதிலுள்ள பிழைகளை நாம் களைய வேண்டும் அல்லவா? எனவே http://office.microsoft.com என்ற வெப்தளத்தில் நுழையுங்கள். product updates என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆபீஸ் சாப்ட்வேரை அலசி, நிறுவ வேண்டிய அப்டேட் சாப்ட்வேர்களை மைக்ரோசாப்ட் வெளிப்படுத்தும். அதன்படி செயல்படுங்கள். அடுத்ததாக நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் எக்ஸ்புளோர் பிரவுசரில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை அடைக்க வேண்டும். எனவே http://www.microsoft.com/windows/ie/default.asp என்ற முகவரியை பிரவுசரில் கொடுத்து நுழையுங்கள். Downloads என்பதிலுள்ள Critical updates என்ற லிங்கை கிளிக் செய்து ஒட்டு சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிற ஆன்டிவைரஸ் சாப்ட்வேருக்கான தளத்தில் நுழையுங்கள். அப்டேட்டை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். எ.கா:அஙஎ என்ற ஆன்டிவைரஸைப் பயன்படுத்துகிறவர்கள் http://www.grisoft.com என்ற தளத்தில் நுழையலாம்.

நன்றி: தினமலர்

Print this item