Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 458 online users.
» 0 Member(s) | 455 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  அசையும் படங்கள் ( GIFs)
Posted by: Vishnu - 07-02-2005, 07:53 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (1105)

இவ்வாறான அசையும் படங்களை இங்கே பதியுங்கள்


<img src='http://img29.imageshack.us/img29/7449/ae200087uy.gif' border='0' alt='user posted image'>

Print this item

  ஈழத்து ஓவியக் கலைஞன் பூபாலசிங்கம் வாசுகனின் &quot;அப்சரா 5&quot;
Posted by: yalie - 07-02-2005, 03:59 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - No Replies

ஈழத்து ஓவியக் கலைஞன் புூபாலசிங்கம் வாசுகனின் 'அப்சரா 5" எனும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி பாரிசில் நடை பெற உள்ளது.


http://www.a2ztamil.com/pub-apsara5.php
[/b]

Print this item

  பீர் இல்லாமல் விருந்தா?
Posted by: SUNDHAL - 07-02-2005, 11:02 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

பெல்ஜியம் நாட்டுக்கு ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்று இருந்தது. அவர்களுடன் பெல்ஜியம் எம்.பி.க்கள் ஒரு விருந்தில் சந்தித்துப் பேசுவதாக இருந்தது.

நாங்கள் முஸ்லிம்கள், மது அருந்தமாட்டோம். எனவே, விருந்தில் கலந்து கொள்ளும் பெல்ஜியம் எம்.பி.க்களும் மது அருந்தக்கூடாது என்று தடை விதித்தனர்.

பீர் குடிப்பதை அதிகம் விரும்பும் பெல்ஜியம் நாட்டினரான எம்.பி.க்கள், "மது பானம் இல்லாமல் விருந்தா? அப்படிப்பட்ட விருந்து எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் விருந்து ரத்தாகி விட்டது.

Print this item

  சமாதானக் கிழவனின் சாவு
Posted by: narathar - 07-02-2005, 09:43 AM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

வேலிச் சண்டை விசாரணை அல்லது சமாதானக் கிழவனின் சாவு

போச்சுவார்த்தை சுமந்து சுமந்து களைத்த
சாமாதானக் கிழவனின் உயிர்போய்
இந்தோ விறைத்துக் கிடக்கிறான்.
இருந்த இறுதிமூச்சையும் வெளியிலெறிந்து
நேற்றுத்தான் விழிபிதுங்கி
மூச்சுத்திணறிச் சரிந்தான்.
எந்த உரிமைக்காரரும் அருகின்றி
எடுத்துப் பால்வார்க்க எவருமின்றி
வேண்டியவர்களுக்கு
வார்த்தையொன்றும் கூறாமல்
பொதுக்கெனப்போனது உயிர்.
உயிர்கொண்டுலவிய நாளில்
ஓடியோடி வந்த பலரைக் காணவில்லை
ஒதுங்கிக்கொண்டனர் எல்லோரும்.
தனித்துக் கிடக்கிறது சடலாம்.
மூக்கில் நீர்வழிய
கண்களில் பீளைசாறி
ஈமொய்க்கக் கிடக்கிறது இளைத்த உடல்.
இழவுசொல்லிகளுக்காகக் காத்திருக்கிறது
உறுதிப்படுத்துவதற்காக உலகம்.
எவ்வண்ணம் இறப்பு நிகழ்ந்தது?
மூச்சுத்திணறியதா?
கொலையா?
தற்கொலையா?
இனிப் பிரேதபரிசோதனை நடத்துபவர்
மத்தியஸ்தமருத்துவர்.
பாவம் சாமாதானக் கிழவன்
எத்தனை நம்பிக்கையுடன் இருந்தான்.
தன் பிள்ளைகளிருவருக்கும் ஒன்றாயமர்ந்து
பேசித் தீர்த்து
தாயுறுதியிலுள்ள எல்லைகளை ஏற்கும்
நாளொன்று சாத்தியமாகுமென
புன்னகைவீசித் திரிந்தான்
பொக்கைவாய்க்கிழவன்.
தன் அந்திமத்துக்கு முன்னம்
மகளும்
மகனும்
பகைமறந்து ஒருவருக்கொருவர் உருகுவரெனும்
எதிர்பாபர்ப்பில் இடிவிழுந்துபோக
நின்றபடி சரிந்தான் நிகழ்ந்தது மரணம்.
ஏனோ தெரியாது
சமாதானக் கிழவனை
பிறந்த நாளிருந்தே மகளுக்குப் பிடிக்காது.
ஊராரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி
இடைக்கிடை வருவாள்
ஏதேனும் பேசுவாள்
சந்தர்ப்பம் பார்த்திருந்து
தகப்பன் துரோகமிழைப்பதாய்ச் சொல்லி
நிமிர்ந்து தம்பிமுகம் பாராது போய்விவாள.
சாதுரியமாய் ஊரை வசப்படுத்துவதில்
மகள் மகாசூரி.
சண்டையை வலிந்திழுத்துவிட்டு
அடியாட்களை ஏவி
எல்லைகளை முன்னகர்த்துவாள்.
தனக்கே
காணிமுழும் சொந்தமெனும் நினைப்பில்
தம்பி வளவுக்கான தண்ணீர்ப்பங்கைக்கூட
தரமறுப்பாள்.

ஒவ்வொரு தடவையும்
ஊர்பழிப்பது தம்பியைத்தான்.
அக்காக்காரியின் ஆட்டமறியாமல்
அவளையே நம்பும் அயல்.
கிழவன் பாவம்.
உள்ளே அழுதபடி உறங்கிப்போவான்.
திரும்பவும் எழுவான்.
பிள்ளைகளை ஒன்றாக்க முயன்று
தோற்றுச் சுருள்வான்.
எத்தனைமுறை தோற்று
எத்தனைமுறை தோற்று
மீண்டும் மீண்டும் எத்தனித்தகிழவன்
இம்முறை செத்தேபோனான்.
சடலஒப்படைப்பு யாரிடம்
எடுத்துப்போகவும் வருமா உலங்கு வானூர்தி?
மரணச்செய்தி விளம்பரத்துக்காக
காத்திருக்கின்றன எல்லா மக்கள் தினசரிகளும்.
பாவம் கிழவன்
இனியாவது உறங்கட்டுமே எரியும் வரை.


- புதுவை இரத்தினதுரை.
http://www.erimalai.info/2005/april/poems/...veli_sandai.htm

Print this item

  என்ன நினைக்கின்றீர்கள்? சரியா? தப்பா?
Posted by: SUNDHAL - 07-02-2005, 04:36 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (38)

டெல்லியைச் சேர்ந்த போலீஸ்காரர் அனு}ப் சிங் திடீரென இறந்து விட்டார். அப்போது அவரது மனைவி மம்தா வயிற்றில் 19 வார கரு உருவாகி இருந்தது. கணவன் மரணத்துக்குப் பிறகு அதை மம்தா கலைத்து விட்டார். என் மகனின் ஒரே வாhpசை என் சம்மதமின்றி மருமகள் கலைத்து விட்டார். தந்தையின் தூண்டுதலி;ன் போpலும், மறுமணம் செய்யும் ஆசையிலும் மம்தா இப்படி செய்ததாக அனு}ப்சிங் தாயார் லட்சுமிதேவி குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார். இப்போது மம்தா, அவரது பெற்n;றhர், சகோதரர், கரு கலைத்த டாக்டர் அனைவருமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளனர்.

கணவன் இறந்த பிறகு அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டியது கஷ்டமாக இருக்குமே என்று மம்தா கலைத்து விட்டாh

Print this item

  இது கரும்புலிகள் தாகம் தீரும் நேரம்..!
Posted by: kuruvikal - 07-02-2005, 12:17 AM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

<img src='http://kuruvikal.yarl.net/archives/blacktigers.jpg' border='0' alt='user posted image'>

<b>கருவினில் அவன் பிறப்பு
கரும்புலியல்ல...
கனி தமிழ்ச் செல்வன்...!
கடும் பகைவர் கொடுமை கண்டு
கடும் சினம் தான் கொண்டு
கரிகாலன் படைதனில்
கரும்புலியாகி
கடல் தனில் கரை தனில்
கடுஞ்சமர் நடுவினில்
கருவிழி துருவி - எதிரி
கதை முடிக்க
கரும்புகையாகி
கலக்கின்றான் காற்றோடு..!

கரும்புகை நடுவினில்
கரும்புலி கண்டு
கலங்கும் சிங்களம்
கடுப்பாகி கத்திட
கண்ட நரிகள்
கண்டம் நடுங்கிட
கதைக்கின்றார் சர்வதேச பயங்கரவாதம்..!
கரும்புலியவன் சாதனை
கடுங்குற்றமல்ல
களந்தனில் கூடிடும்
கடும் பகை முடிக்க
கருவியாகித் தருகிறான் தன்னுயிர்
கடுந்துயர் காணும் தமிழர்
கடுந்தாகமாம் தமிழீழத் தாயகத்திற்காய்...!

கடும் பகை வளர்க்க
கனரக கருவி தரும்
கனவான்களே
கண்டு கொள்ளும் சங்கதி
கரும்புலியவன்
கடும் கொள்கை
கருவினில் தவழும் தமிழ் சிசுவும்
கற்றுக் கொள்ளும்..!
கறுவி நீர் பயனில்லை
கலங்காமல் முடித்து வையும்
கடும் பகை - இது வீணே
கதை பேசும் காலமல்ல
கரிகாலன் காலம்
கணத்தோடு காரியம் முடிக்கும் காலம்
கரும்புலிகள் தாகம் தீரும் நேரம்..!</b>

Print this item

  பூக்கள்
Posted by: samsan - 07-01-2005, 06:55 PM - Forum: பொழுதுபோக்கு - No Replies

அண்மையில்தான் நான் ஜி-மெயில் கணக்கை பெற்றேன். பெற்றதுதான்தாமதம் கூகிள் தரும்வசதிகளைபயன்படுத்திப்பார்போம் என நினைத்து. நானும் தர்சனும் இணைந்து ஒரு கூகிள் குழுமத்தையும் நிறுவிப்பார்த்தோம். அதன் பெயர்தான் <b>பூக்கள்</b>. இவ்வளவு காலமும் திஸ்கிபோன்ற எழுத்துருக்களில் மட்டுமே இயங்கிய குழுமங்கள் தற்போது யுனிட்கோட்டிலும் இயங்கமுடிகிறது சந்தோசத்தை தருகிறது. நீங்களும் ஒருமுறை பார்த்துவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள். - நன்றி -

http://groups-beta.google.com/group/pookkal

Print this item

  யாழில் கணனி கற்கும் மாணவன்
Posted by: happy - 07-01-2005, 02:58 PM - Forum: அறிமுகம் - Replies (24)

யாருக்காவது AT COMMAND பற்றி ஏதாவது தெரியுமா?

Print this item

  என் கேள்விக்கென்ன பதில்?
Posted by: SUNDHAL - 07-01-2005, 02:42 PM - Forum: போட்டிகள் - Replies (1081)

1)இலை உண்டு கிளை இல்லை எவருமில்லை வாழ்த்தாதார் நட்டபின்னால் மடல் விரிப்பேன் நாலிரண்டு மாதத்தில் முகம் காட்டி நான் சிரிப்பேன் பலனோ என்னால் ஒரு முறை தான் நான் யார்?


2)நாலெட்டாய் நானிருப்பேன் அழகை நான் தருகின்றேன் அனைத்தையும் உருக்குலைப்பேன் நான் யார்?

Print this item

  கரும்புலிகள் தினம்..
Posted by: Thala - 07-01-2005, 10:02 AM - Forum: தமிழீழம் - Replies (26)

தம் உயிர்களை ஆகுதியாக்கி உயிரராயுதம் ஏந்திய வீரர்களின் நினைவுநாள் அல்ல,அவர்கள் சுமந்த கனவுகள் இலச்சியம் தாயகவேட்கை என்பதை தம் உயிரினும் மேல் என்று உலகிற்கு உரத்து சொன்ன ஆண்டுகளின் நிறைவுநாள். என்றுமே நினைவில் நிற்கும் இவகள் தான் சிறிலங்கா அரசின் சமாதானக்கதவுகளின் பூட்டை கட்டுநாயகாவில் உடைத்துதெறிந்தவர்கள், நிழலாகிப்போனவர்..."வாய் விட்டு பேர் சொல்லி அழமுடியாது"



கரும்புலிகளின் முதற்படி..
<img src='http://eelam.tamilpower.com/maaveerar_miller.jpg' border='0' alt='user posted image'>
<b>கப்ரன் மில்லர்</b>

[b]கரும்புலி கப்டன் மில்லர் குறித்து அவரது தாயார் பின்வருமாறு கூறுகிறார்"

'என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை." மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள். அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் ப+ட்டி கொண்டிருப்பான்......." அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

";மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. ஆர் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்... முயற்சியும் இரக்;கமும் அவன் பிறக்கும் போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி" மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்வன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கி விட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.

இப்படித்தான் இன்னும் ஒரு நாள்.......
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் "ராங்கிற்குள்" குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.

தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை. காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது. முன்பு போல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்று போனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். 'அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டிசு கொடுத்து கொண்டு நிக்கிறான்."


அம்மாவுக்கு உள்ரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள். அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப்படுவாள். இது வழமையாகிப் போனது.
"இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. 'பயிற்சி முகாமில் நிக்கின்றான்" என நண்பன் ஒருவன் வந்;து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.

தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள். 'அது ஒபறேசன் லிபறேசன் காலம்| அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்...." 'திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது. பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.

அடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்....முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்.... என்ர பிள்ளையும்.....அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி... அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக் குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்...... பிறகு வருவினம்.." ம்.....ம்..... என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்....... 'அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு"

Print this item