Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 452 online users.
» 0 Member(s) | 450 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,282
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  கோழிஎலும்பில்றசம்
Posted by: கீதா - 09-15-2005, 07:22 PM - Forum: சமையல் - Replies (9)

கோழிஎலும்பில்றசம் (உங்கள் தடிமலுக்கு உகந்தது)


தேவையான பொருட்கள்---------------------------------------
தசை அகற்ரப்பட்ட கோழி எலும்பு (ஒருகோழிஎலும்பு கானும்)(நன்றாக நொருக்கிஇருத்தல்)
கொத்தமல்லி தேவையானது (முக்கப்பதம் அரைத்தது)
சின்னசீரகம் சிறிதளவு ( தூளாகஅரைத்தல்)
செத்தல்மிளகாய் சிறிதளவு (முக்காப்பதம் அரைத்தல்)
கருகப்பிளைக் காம்பு (இலைகள்அகற்ரப்பட்டது)
புளி ஓரளவு (கரைக்கவேண்டும்)
உப்பு தேவையானவை
மஞ்சல் 1மேiஐக்கரண்டி
மிளகு சிறிதளவு (தூளாகஅரைத்தல்)
உள்ளி சிறிதளவு (முக்காப்பதம் குத்திவைக்கவும்
கோழிச்சுப்பு 2கட்டி(கடையில் எடுக்களாம்)


செய்முறை .........................
முதலில் ஒருபாத்திரத்தில் கோழிஎலும்பைப் போடவும் ?
பின்( இடித்த மல்லி சின்னச்சீரகம் .கருகப்பிளைக்காம்பு.உள்ளி.மிளகு.இவற்றை எல்லாம் ஒரு உரலின் போட்டு நன்றாக குத்தவும் )பின்பு கோழிஎலும்புடன் சேர்க்கவும் ? நனக்காககுளிர் தண்ணீர் விட்டு அடுப்பில் கோதிக்க விடவும் முக்காப்பதம் வரும் போது மஞ்சல் அரைத்த செத்தல்மிளகாய் உப்பு இவற்ரைப்போட்டு நன்றாக கிளறவும்?
பின்பு --கரைத்த புளியைவிடவும் கடசியாக ?கோழிசுப்புக்கட்டியை போடவும் பின்னர் 5நிமிடம் கிளறி இறக்கி விடுங்கள் (கோழிஎலும்புறசம் றெடி வாங்கோ குடிப்பம்)


உங்கள் தடிமலுக்கும் முக்கடைப்புக்கும் உகந்தது வைத்துகுடித்துப் பாருங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  ஆணும், பெண்ணும் சமமா?
Posted by: SUNDHAL - 09-15-2005, 06:36 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (16)

ஆண்- பெண் எல்லோரும் சமம் என்றhலும் ஆணின் உடல்வாகும், பெண்ணின் உடல்வாகும் வௌ;வேறhனவை.
உதாரணமாக, பெண்ணின் வயிற்றில் சுரக்கும் என்சைமின் அளவு ஆணுக்குச் சுரக்கும் என்சைம் அளவை விட குறைவு. இதனால் பெண் மது அருந்தினால் அது நேரடியாக ரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் ஆணுக்கு அவ்வளவாகப் பரவாது.

அதேபோல ஆணுக்கு ஜPரணம் எளிதில் ஆகும். பெண்ணுக்கு சற்று நேரம் கூடுதலாகப் பிடிக்கும். இதனால் மாத்திரைகள் கூட ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்ணுக்கு வேறு விதமாகவும் செயல்படும்.

ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் வேகமாகத் துடிக்கும்.

ஆணைவிட பெண்ணுக்கு அதிகமாக கொழுப்பு இருக்கும்.

ஆணைவிட பெண் சீக்கிரமாக மயக்க மருந்தின் விளைவிலிருந்து விடுபடுவாள்.

வலி நிவாரணிகளில் சில, பெண்களுக்கு சீக்கிரம் வேலை செய்யும். ஆண்களுக்கு செயல்படவே செய்யாது.

ஆன்டி ஹிஸ்டமின், ஆன்டி பாடிக்ஸ், ஸ்டீராய்டு மற்றும் மன இறுக்கத்தைப் போக்கும் மாத்திரைகள் ஆணைவிட பெண்ணுக்கே அதிக பக்க விளைவை உண்டாக்கும். ஆக, ஆணும் பெண்ணும் உடலளவில் வேறுபாடுள்ளவர்கள் என்கிறhர்கள் ஆய்வாளர்கள்.

ThanksBig Grininakaran..

Print this item

  70 வயது தம்பியை டிவட்ழய 78 வயது அண்ணன
Posted by: SUNDHAL - 09-15-2005, 06:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

அருப்புக்கோட்டையில், தள்ளா டும் வயதிலும் சொத்து தகராறில் தம்பியை வெட்டித் தள்ளிய 78வயது முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் வசிப்பவர் பரமசிவம் (70). இவரது அண்ணன் பிச்சை (78). இவர் வசிக்கும் வீட்டில் தனக்கு பங்கு இருப்பதாக பாக பிரிவினை கேட்டு பரமசிவம் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நடந்துவருகிறது.

இது தொடர்பாக அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று பரமசிவம், அருப்புக்கோட்டை பைபாசில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் அருகே நடந்து சென்ற போது பிச்சை வழிமறித்து சொத்து தொடர்பாக வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பிச்சை அரிவாளால் தம்பி பரமசிவத்தை வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

அருப்புக்கோட்டை டவுண் போலீசார் வழக்கு பதிந்து பிச்சையை தேடி வருகின்றனர்.

ThanksBig Grininakaran...

Print this item

  'தலை'யும் 'மலை'யும்
Posted by: vasisutha - 09-15-2005, 05:59 PM - Forum: சினிமா - Replies (27)

<b>'தலை'யும் 'மலை'யும் ஒற்றுமையா ஆயிட்டாங்கப்பா</b> Confusedhock: :roll:

<img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Events/tirupathi_mola150905/DSCF0529.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Events/tirupathi_mola150905/DSCF0530.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Events/tirupathi_mola150905/DSCF0531.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Events/tirupathi_mola150905/DSCF0532.jpg' border='0' alt='user posted image'>


pic from
http://www.indiaglitz.com

Print this item

  முக்கிய செய்தி.....
Posted by: SUNDHAL - 09-15-2005, 05:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

பிரபல பாப் பாடகி பிரிட்டணி ஸ்பியர்ஸ் இவரது கணவர் பெயர் கெவின் பெடர்லைன் இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் பிரிட்டணி ஸ்பியர்ஸ் கர்ப்பம் அடைந்தார்.

பிரசவ வலியால் துடித்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. தற்போது குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர்.

பிரிட்டணி கணவர் கெவினுக்கு முதல் மனைவி ஷார் ஜாக்சன் மூலம் ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன.

Thansk:Maalaimalar...
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  அட இந்த கூத்த படிங்க..
Posted by: SUNDHAL - 09-15-2005, 05:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

இங்கிலாந்துக்கு ஐரோப்பிய கோர்ட்டு கண்டனம்

திருமணம் தொடர்பான மனித உரிமை ஒப்பந்தத்தை மீறியதாக இங்கிலாந்து மீது ஐரோப்பிய கோர்ட்டு குற்றம்சாட்டி உள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டில் இங்கிலாந்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த ஒருவர் பின்னர் தனது மருமகளுடன் சேர்ந்து வாழ்கிறார். மருமகளும், இந்த நபரின் மகனை விவாகரத்து செய்தவர்தான். மாமனார். அந்த பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.

தனது மகனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்ணை அதாவது மருமகளை ஒருவர் (மாமனார்) திருமணம் செய்து கொள்வதை ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தம் தடை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் இங்கிலாந்து நாட்டுக்காரர் தனது மருமகளை திருமணம் செய்து கொண்ட பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் கோட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு மறுமணம் தொடர்பான ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தை இங்கிலாந்து மீறி விட்டதாக கூறி கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
Thnaks:Thinathanthi...

Print this item

  புதிய சினிமா படங்கள்,வீடியோ பாட்டுக்கள் இன்னும் தரையிரக்கலாம
Posted by: tamil03 - 09-15-2005, 05:28 PM - Forum: சினிமா - Replies (2)

[size=24]
புதிய படங்கள் நீங்கள் தரையிரக்கலாம் *தொட்டி ஜெயா அது ஒரு கனாக்காலம் ....இன்னும்

http://pirasath.skyblog.com/

Print this item

  கைக்கூ கவிதைகள்
Posted by: Jenany - 09-15-2005, 03:53 PM - Forum: கவிதை/பாடல் - Replies (49)

மலர் சூட
மலருக்கு தடை
விதவை

இயற்கையா? செயற்க்கையா?
கூந்தல் மணம் மட்டுமல்ல
பெண்களின் மனமும்தான்

மலரே மலர் சூடியது
கனியே கனி சுவைத்தது
என்னவள்

என்னைவிட என் பேனா
அதிகம் நேசிக்கிறது அவளை
அவளைப்பற்றியே எழுதுகிறது.

விலை மதிப்பற்றது
விற்க்க கூடாதது
காதலி தந்த பரிசு

உதட்டிட்க்கு பூசுங்கள்
உள்ளத்திற்க்கு பூசாதீர்கள்
சாயத்தை...

உன் விழி கண்டு
தாமரைகள் மலர்கின்றன
ஆதவனுக்கு பொறாமை.

thanks: www.kavimalar.com

Print this item

  சமூகச் சீரழிவுகள்: துரோகிகளுக்கு எல்லாளன் படை எச்சரிக்கை!
Posted by: narathar - 09-15-2005, 03:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

யாழ். குடாவில் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சமூகச் சீரழிவுகள்: துரோகிகளுக்கு எல்லாளன் படை எச்சரிக்கை!

[வியாழக்கிழமை, 15 செப்ரெம்பர் 2005, 17:26 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். குடாநாட்டில் எதிரிகளின் திட்டமிடலுடன் சமூகச் சீரழிவுகளை அரங்கேற்றும் துரோகிகளுக்கு எல்லாளன் படை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


எல்லாளன் படை வெளியிட்ட அறிக்கை:

அண்மை நாட்களாக யாழ். குடாநாட்டில் அதிகரித்து வந்துள்ள சமுதாயச் சீரழிவு நடவடிக்கைகள் அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

இதனால் மிகுந்த மனவேதனையும் கொதிப்பும் அடைந்துள்ளோம்.

பல்லாயிரம் உயிர்களை விலையாகச் செலுத்தி எமது தலைமுறை கட்டியெழுப்பி வரும் அற்புதமான அழகிய எமது தேசத்தை அவமானப்படுத்தும் இத்தகைய கீழ்த்தரமான செயற்பாடுகள் தொடர்பில் மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

அதனால் நீதிக்கான வேட்டுக்களை எமது துப்பாக்கி உமிழ்வதற்கு முன்னர் உங்களோடு சில வார்த்தைகள் உரியவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

அன்புக்குரியவர்களே!

நாம் ஏன் இத்தனை அவலங்களையும் சுமந்தோம்? நாம் ஏன் இத்தனை அவமானங்களையும் சுமந்தோம்?

வரலாற்றுக் காலம் முதல் வீரர்களாய் விவேகர்களாய் ஒழுக்க சீலர்களாய் புகழோடு வாந்த எமது இனம் ஏன் வெறுங்கையோடு எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியால் நின்றது?

இவ்வினாக்கள் எல்லாவற்றுக்கும் விடை ஒன்றுதால் ஒன்றுமையோடு வாழ்ந்த எமக்குள் எதிரிகள் திட்டமிட்டுப் பிரிவினைகளைப் புகுத்தினார்கள்.

சாதி என்றும் சமயம் என்றும் பெண் என்றும் ஆண் என்றும் எமக்குள் இன்னுமின்றும் கூறுகள் போடப்பட்டன. உலகில் தலைநிமிர்ந்து நின்ற எம்மினம் தனிச் சாக்கடைக்குள் வீழ்ந்து போனது.
இப்படியாய் வாழ்ந்த எமக்குள் இப்போதுதான் நிமிர்வு வந்தது. இன்றைக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் எமது அவல வாழ்வை முடித்து வைப்பதற்கான வழியை எமது இனம் கண்டு கொண்டது. அன்றிலிருந்து தலைநிமிர்வை அன்றித் தலைகுனிவை எமது இனம் கண்டதில்லை.

ஒரு ஒப்பற்ற தலைவனின் வழியில் விலைமதிப்பற்ற உயிர்களை அர்பணித்து எல்லாம் பொறுப்புகளையும் மறந்து எமது இனம் விடுதலை நோக்கிப் பயணித்து அருகாமையில் வந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு நிலையில் எம்மை மீண்டும் வீழ்த்துவதற்கு வக்கற்ற வழியற்ற உதிரிகள் மீண்டும் எம்மிடையே அதிகாரங்களையும் பிரிவினைகளையும் ஆரோக்கியமற்ற அசிங்கங்களையும் தோற்றுவிக்கும் கீழ்த்தனமான முயற்சியில் நன்கு திட்டமிட்டு இறங்கியுள்ளனர்.

அதன் மூலம் வலுவடைந்து வரும் எமது தேசியத்தை ஒரு புற்றுநோய் போல் உள்ளிருந்தே அரித்து அரித்து அழித்தொழித்து விடலாமென அவர்கள் எண்ணுகிறார்கள்.

யாழ். குடாநாட்டில் மட்டுமல்ல தமிழீழத்தின் அனைத்துப் பாகங்களிலும் இன்று நாம் காணும் அனைத்து அகமுரண்பாட்டுத் தூண்டுதல்களின் பின்னாலும் எதிரிகளின் கைகள் மறைந்திருப்பதை அனைவரும் உணரமுடியும்.

அண்மையில் யாழ். குடாநாட்டில் நடந்த எம்மைச் தலைகுனியச் செய்த சம்பவங்களின் பின்னாலும் எதிரிகளின் கைகளே உள்ளதை அனைவரும் அறிவர்.

எனவே எனது அன்புக்குரிய மக்களே!

சமாதானத்தின் எதிரிகள் ஊருடுவச்செய்ய முனையும் இந்த நாசகாரக் கிருமிகளை முளையிலேயே கிள்ளியெறிவோம்.

அத்தகைய கொடிய நோய்கள் எம்மை அணுகவிடாது விழிப்புடன் இருந்து எம்மையும் எமது இனத்தையும் காப்போம்.

எதிரிகளின் ஏவல் நாய்களாக இருந்து எமது இனத்தின் எதிர்காலத்தில் மீதும் அதற்கான அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களின் மீது ஏறிநின்று விளையாடும் அனைவரையும் தெளிவாக இனங்காண்போம்.

எமது இனத்தின் சார்பாக அவர்களுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு களமிறங்கும் எமக்கு சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் உங்கள் அனைவரிடமும் எதிர்பார்க்கின்றோம்.


http://www.eelampage.com/?cn=20087


மேலுள்ள அறிவிப்பு யாழ் களத்திற்கும் பொருந்தும்....

Print this item

  வயது கூடிய பெண்ணை காதலிக்கலாமா?
Posted by: Jenany - 09-15-2005, 03:01 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (45)

இங்கு Europeய நாடுகளில் நான் நிறைய தமிழ் ஆண்களை பார்த்திருக்கேன். அவர்களை விட வயது கூடிய பெண்களை காதலிக்கின்றார்கள். இப்படிதான் எனது நண்பர் ஒருவர் அவரை விட 3 வயது கூடிய பெண்ணை காதலிக்கிறார். அவர் செய்வது எனக்கு சரியா என்று தெரியவில்லை. அவரை கேட்டால் காதலுக்கு வயது, மதம், யாதி எதுவுமே தேவையில்லை என்று சொல்லுகிறார்.
இதற்க்கு உங்களுடைய கருத்து என்ன?
இது தவறா? இல்லை சரியா?

Print this item