| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 446 online users. » 0 Member(s) | 444 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,282
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| ஆடுகளில் உறை நிலை சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை வெற்றி |
|
Posted by: kuruvikal - 09-15-2005, 10:06 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (5)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40799000/jpg/_40799968_humanegg_spl_203_body.jpg' border='0' alt='user posted image'>
ஆடுகளில் மேற்கொள்ளப்பட்ட உறை நிலையில் (frozen) பரிகரிக்கப்பட்ட சூலகங்கள் ((ovary) கொண்டான மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை முதன்முறையாக வெற்றி அளித்திருக்கிறது..! மாற்றீடு செய்யப்பட்ட சூலகங்கள் வழமையான குருதி வழங்களைப் பெறுவதுடன் வளமான முட்டையையும் (egg) உருவாக்கி உள்ளதாக உயிரியல் ஆய்வாளர்கள் அறியத்தருகின்றார்கள்..!
மனிதப் பெண்களில் சூலகப் பாதிப்புக்களால் அல்லது சூலகப்புற்று நோயால் சூலகத்தை இழப்பவர்கள்..அல்லது வளமான முட்டை இன்மையால்.. கருக்கட்டும் தகுதியை இழப்பவர்களுக்கு இந்த மாற்றீட்டு முறை மனிதரில் வெற்றி அளிக்கும் பட்சத்தில்...அவர்களும் வளமான முட்டைகளை உருவாக்கக் கூடிய நிலை தோன்றலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது...!
முன்னர் மனிதரில் சில உடனடி சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் உறை நிலையில் பரிகரிக்கப்பட்ட சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..!
தகவல் - http://news.bbc.co.uk/1/hi/health/4244750.stm[/size]
|
|
|
| யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு |
|
Posted by: mayooran - 09-15-2005, 07:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு சிறிலங்கா பதில் பாதுகாப்பு அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்புத்துறை பயிற்சிக் கல்லூரியின் குழுவினரிடம் இது குறித்து ரத்னசிறி விக்கிரமநாயக்கவுடன் உரையாடினார்.
அலோக் ஜெயின் மற்றும் டி.கே. திவானி தலைமையிலான இந்தியக் குழு சிறிலங்கா வந்துள்ளது.
இக்குழுவிடம் பேசிய ரத்னசிறீ விக்கிரமநாயக்க, யுத்த நிறுத்த ஒப்பந்தம் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளே பலனடைந்துள்ளனர். சிறிலங்காவின் தேசிய நலன்களை கருத்தில் கொள்ளாமல் ஒரு பக்கச்சார்பாகவே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.
ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் இந்த குரல், ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடனான மகிந்த ராஜபக்சவின் ஒப்பந்தத்துக்கு ஆதரவு குரலாக வெளிப்பட்டுள்ளது.
ஐ.நா. சபை உள்ளிட்ட இன்னொரு சர்வதேச அமைப்பு இனப்பிரச்சனையில் தலையிடுவதை தான் விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தை மேசைக்கு விடுதலைப் புலிகள் திரும்புவதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விக்கிரமநாயக்க வலியுறுத்தினார்.
இலங்கையில் தமிழர்களைப் பொறுத்தவரை சுதந்திரமாகத்தான் வாழுகிறார்கள். கொழும்பில் கூட அவர்கள் சுதந்திரமாகவே இருக்கிறார்கள். தேசிய விடுதலைப் போராட்டம் என்பதெல்லாம் இல்லை என்றும் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கமானது வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து அரச செயலகங்கள் மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. விடுதலைப் புலிகள் வரி அறவிடுதல் என்பது அவர்களது நடவடிக்கைக்கானது என்றார் விக்கிரமநாயக்க.
இந்த விவாதங்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறித்தும் தமிழீழத் தேசியத் தலைமை குறித்தும் ரத்னசிறி விக்கிரமநாயக்க மோசமான விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது ஓய்வுபெற்ற சிறிலங்கா பாதுகாப்புத்துறை செயலாளர் அசோக ஜயவர்த்தன, முப்படைத் தளபதி தயா சந்தகிரி மற்றும் முப்படைகளின் தளபதிகள் உடனிருந்தனர்.
இந்தியக் குழுவின் சிறிலங்காவுக்கான திடீர் வருகை ஏன் என்பது குறித்தும் தற்போதைய சிக்கலான சூழலில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் குறித்தும் சர்வதேச நாடுகள் அவதானித்து வருகின்றன.
|
|
|
| அரை லூஸ்.....முழுலூஸ் |
|
Posted by: mayooran - 09-15-2005, 07:32 AM - Forum: நகைச்சுவை
- Replies (23)
|
 |
"தர்க்க ரீதியாகச் சிந்திப்பது எப்படி" என பேராசிரியர் பாடத்தைத் தொடங்கினார்.
மேலும் தொடர்ந்து "நாடகம் 9 மணிக்குத் தொடங்கும். இரவுச் சாப்பாடு 8 மணிக்கு. எனது மனைவிக்கு ஆட்டுக்கறி பிடிக்காது. எனது தங்கை நன்றாக வயலின் வாசிப்பார்." என நிறுத்தி சாலரையும் ஒவ்வொருத்தராக உன்னிப்பாக பார்த்தார்.
மேலும் தொடர்ந்து "அப்படியாயின் இப்போது எனக்கென்ன வயது?" என்று கேட்டு நிறுத்தினார்.
சற்றும் தாமதிக்காது "நாற்பத்தி நான்கு" என்றான் ஒரு மாணவன். ஆச்சரியப்பட்ட பேராசிரியர் 'ஆகா... என்ன யூக சக்தி' எனப் போற்றி "உனது விடைக்கு நீ எப்படி வந்தாய் என்பதை மற்றவருக்கு விளக்கு" என்றார்.
பெருமிதத்துடன் எல்லோரையும் பார்த்த மாணவன் "மிகவும் இலகு. எனது மாமாவுக்கு இப்போது வயது 22. அவர் ஒரு அரை லூஸ். ஆகவே.........
என நிறுத்தினான்.
|
|
|
| தியாகதீபம் லெப்.கேணல். திலீபன். |
|
Posted by: அருவி - 09-15-2005, 05:30 AM - Forum: தமிழீழம்
- Replies (31)
|
 |
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா அவர்கள் எம் மக்களின் விடுதலைக்காய் உணவை ஒறுத்து நீரை நீக்கி தன்னுயிரை நீத்த (Sep.15-Sep.26) உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆரம்பித்தநாள் Sep.15,1987.
|
|
|
| கவிஞர் புகாரியின் இரு வேறு நூல் வெளியீட்டு விழா! |
|
Posted by: Nitharsan - 09-15-2005, 04:32 AM - Forum: நிகழ்வுகள்
- Replies (1)
|
 |
கனடா ரொரன்ரோவில் கவிஞர் புகாரியின் இரு வேறு கவிதை தொகுப்புக்கள் வெளியிடப்படவிருக்கின்றன.
கனடா தமிழ் இலக்கிய தோட்டம் இவ்விரு புத்தகங்களையும் வெளியிடுகின்றது
அ.முத்துலிங்ம் அவர்களின் அணிந்துரையுடன் "பச்சைமிளகாய் இளவரசி" என்ற கவிதை தொகுப்பும் மாலன் அவர்களின் அணிந்துரையுடன் "சரணமென்றேன்" என்ற கவிதை தொகுப்பும் வெளியிடப்படுகின்றன. நூல் வெளியீடு ஆக்டோபர் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடை பெறவிருக்கிறது. ஏற்கனவே "வெளிச்ச அழைப்புகள்", "அன்புடன் இதயம்" ஆகிய கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கவிதைகளை: http://anbudanBuhari.com எனும் இணையத்தில் படிக்கலாம்.
மேலதிக விபரங்களை 416-985-5959 என்ற தொலைபேசியில் அல்லது buhari@gmail.com என்ற மின்னஞ்சலுடனோ தொடர்பு கொள்ளலாம்
<img src='http://vannithendral.net/media/ilakkiyam/invite.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| நாலு வரிக்கவிதை எழுதலாம் |
|
Posted by: malaravan - 09-15-2005, 04:29 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
நிலவு
வானவீதியில் வலம் வரும்
மோனமகள் அவள்
கானம் பலப்பல அவள் மேல்
கவிஞர்கள் பாடிவிட்டார்
ஏனோ தெரியவில்லை யானும்
பாட எத்தனைக்க
நீயும் தொடங்கி விட்டாயா என்று
நிலவு என்னை கேள்வி கேட்டது
சத்தம் என்காதை துளைக்க
சுதாரித்தேன் அடபோயா
அவள் பக்கத்தில் அதுவும்
இரண்டடி வட்டத்துள்
வானிலவு அல்ல அது
என் புூ நிலவு
மலரவன்
www.tamilkural.com[/u]
|
|
|
| நெஞ்சம் பொறுக்குதில்லையே.... |
|
Posted by: kuruvikal - 09-15-2005, 03:55 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (19)
|
 |
<img src='http://img237.imageshack.us/img237/3023/trinco1501056hn.jpg' border='0' alt='user posted image'>
<b>நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....
பார்பர்ணியம் பேசியே
பாதிக் காலத்தை விழுங்குவோரே
பாரும் உம் புறமுதுகை
படை படையாய் தெரியுது
பாழ்பட்ட நெஞ்சு கொள் அழுக்கு..!
பகட்டுக்குப் பேசியே
பழகிவிட்ட நீங்கள்....
அட..பழகும் மனிதருக்குள்
பண்பாடு காண்பதெப்போ
பண்போடு பழகுவதெப்போ..??!
"ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா"
பாடிய பாரதி
பார்பர்ணியன் வாரிசு...
பார்வைக்கு இன்று
புரட்சிக் கவி......
நாளை உங்களுக்கு
அவனே... இகழ்ச்சிப் பொருள்
பாழ்பட்ட நெஞ்சோடு
படிப்பது "சமூக வேதம்"..!
தெய்வந் தொழ
நியதி யார் வைத்தார்..??!
நீயாய் தேடி விட்டு
நீக்க மறந்து விட்டு
நீசர் என்று இகழுரைக்க
நினக்கு என்ன தகுதி...??!
நின்று தொழ....
தெய்வம் வீட்டோடு இருக்க
தெருவோடு துரத்திவிட்டு
தெருவுக்கு வேதமோதும்
சாத்தான்கள் கூடிவிட்ட உலகு....!!!
நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....!</b>
|
|
|
|