Aggregator

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 2 days ago
ஏலவே நட்டத்தில் ஓடும் கம்பெனியை வாங்கி இலாபகரமாக மாற்ற முயன்று இருக்கலாம். அப்போது நல்லெண்ணத்தில்தான் இறங்கி இருக்கலாம். 169 மில்லியனின் 20% ஐ இவர்கள் போட்டார்கள் என்பது சாதாரண வியாபார கடன் போல கருதி சொல்கிறீர்கள், நான் அறிந்தவரை சில பெரும் வியாபார கடன்கள் 110% வங்கி கொடுப்பதும் உண்டு. ஆகவே இதில் இவர்கள் தங்கள் சொந்த பணத்தை முதலிட்டார்கள் என்பது வெறும் ஊகமே. அப்படி எந்த ஆதாரமும் நான் காணவில்லை. அப்படியே ஆகினும் - போட்டகாசில் கொஞ்சத்தையாவது எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் deceit, misrepresentation செய்திருக்கலாம் அல்லவா? 5. நீங்கள் சொல்வதுபடி பார்த்தாலும் கூட பேராசையால் அகல கால் வைத்து, ஆப்பை செருகி கொண்டு, பின் அதில் இருந்து தப்ப, தப்பு மேல் தப்பு செய்துள்ளார்கள் என்றல்லவா ஆகிறது?

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

1 week 2 days ago
என்ன காவடி சுருதி மாறுது 😂. இராமநாதன், செல்வா வுக்கே தீத்தினவனுக சிங்கள இனவாதிகள்… உங்களை இப்படி தனியா புலம்பவிடுவார்கள் என்பது அப்பவே தெரியும். ஆனால் இவ்வளவு கெதியா நடக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 2 days ago
ஆனால் இது கட்டாயம் கிரிமினல் குற்றசாட்டில் முடியும் என நான் கூறவில்லை. சிவில் வழக்கை விட கிரிமினல் வழக்கை நிறுவுவது கஸ்டம். இதை அமெரிக்காவின் ஓஜே சிம்சன் விடயத்திலும் பார்த்தோம். ஆனால் சஞ்சீவ் deceit, misrepresentation பண்ணி உள்ளார் என ஏலவே administrators சிவில் வழக்கு போட்டுள்ளார்கள். Deceit = ஏமாற்றுதல் Misrepresentation = பொய்யான தகவல் வழங்கல் (உதாரணம் 15,000 சம்பளம் எடுத்து கொண்டு, மோர்ட்கேஜ் எடுக்கவென, பொய் pay slip 65,000 ena கொடுத்து வங்கிக்கு பிழையான தகவல் வழங்குவது, 2008 வரை இது நடந்தது, இப்போ கஸ்டம்). Deceit, misrepresentation இரெண்டையிம் எங்கள் ஊர் தமிழில் களவு எண்டுதான் சொல்வார்கள். இங்கே எழுதும் சிலரின் ஊரில் இவையிரண்டுக்கும் பெயர் தர்மகாரியம் ஆக்கும் 😂.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 2 days ago
டெலிகிராப் paywall க்கு பின்னால் இருக்கும் கட்டுரையின் தலைப்பையும் படத்தையும் மட்டும் பார்த்து கருத்து எழுதாமல், முடிந்தால் முழு கட்டுரையையும் இணக்கவும். இந்த கட்டுரையில் சஞ்சீவ் கூறியதாக Winston Soosaipillai, who ran Lindsey oil refinery owner Prax, said he cannot provide details of the company’s £1.5bn debt pile, nor does he know how much money the company still has after its collapse earlier this year. கம்பெனியில் இப்போ இருக்கும் பணம் எவ்வளவு என்பது தனக்கு தெரியாதாம். அதே போல் 1.5 பில்லியன் கடன் பற்றிய தகவல் எதுவும் தெரியாதாம் 😂. கம்பெனியின் CFO வை சாட்டி உள்ளாராம். இவரே சேர்மன், டைரக்டர், மனைவியும் இவரும் ஓனர் ஆனால் இப்படி சொல்கிறார் என எழுதியுள்ளது டெலிகிராப். அத்தோடு இவர் கொடுத்த சத்திய வாக்குமூலத்தை, “so called” statement of truth என விபரித்துள்ள டெலிகிராப் - இவர் மீது அட்மினிஸ்டெர்ஸ் - தவறான தகவல்களை வழங்கியது, ஏமாற்றியது ஆகியவற்றுக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் கூறுகிறது. The administrators of Prax have since issued a lawsuit against Mr Soosaipillai – in which they have accused him of deceit and misrepresentation. இது நான் இதுவரை எழுதியவற்றை மேலும் உறுதி செய்கிறது. இந்த டெலிகிராப் கட்டுரை புதியதும் அல்ல. இதன் நகலை யாஹூ 28/09/25 அன்று வெளியிட்டுள்ளது. நான் இந்த திரியை ஆரம்பித்தது 13/10/25. முன்னர் ஒருமுறை UK vetting பற்றி அரைகுறை புரிதலோடு எழுதியது போலவே இப்போ Serious Fraud Office பற்றியும். Intelligence gathering stage இல் இருக்கும் போது அவர்கள் மூச்சு கூட விடமாட்டார்கள்.

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

1 week 2 days ago
நடந்த ஒன்றை, இல்லையென்று நிறுவ முயற்சித்து தோல்வியை தழுவப்போகிறார்கள். இப்படியான நிலைப்பாட்டில் இவர்கள் இருந்தால்; நாடு முன்னேறவே முடியாது. இவர்களும் நாளை இரண்டாக பிரிய வாய்ப்புள்ளது. படடலந்தை வதை முகாம் பிரச்சனையை ஜெனீவாவுக்கு கொண்டு போகப்போவதாக இவர்களே கூறினார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதை ஜெனிவாவில் முறையிடப்போவதாக மறு பகுதி கூறுகிறார்கள், இதனால் நாட்டின் இறையாண்மை கெடாதா? ஒட்டுமொத்த இனத்தையும் கொத்தாக அழித்து கெத்து காட்டுவதை மட்டும் சர்வதேசத்துக்கு கொண்டுபோகக்கூடாதாம். நாட்டை அழிப்பது என்று அவர்களே முடிவெடுத்து விட்டால், யார் தடுப்பது? நாடு இன்று இந்த நிலைக்கு சீரழிந்ததென்றால் அதற்கு காரணம் சீரற்ற சட்டம், இந அழிப்பு. அழியும் வரை உண்மையை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! - சுமந்திரன்

1 week 2 days ago
நானும் இருக்கிறேன் சேர்! இப்படி ஏதும் சொல்லி தன்னை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது இவருக்கு. அவருக்கு தனது பழைய எஜமானரது நினைவு வருகிறது. பயங்கரவாதிகள் என்று கூறி பட்டப்பகலில் பறவை சுடுவதுபோல் வயது வேறுபாடின்றி தெருக்களில் தமிழரை கொலை செய்து வீசும்போது, வெள்ளை வானில் ஏற்றி சென்று காணாமல் ஆக்கப்பட்டபோது, இந்த நினைவு ஐயாவுக்கு வரவில்லை, கேள்வி கேட்கவில்லை. இப்போதான் பலருக்கு ஞானம் பிறக்குது. முன்பெல்லாம் கதைக்க, விமர்ச்சிக்க பயந்திருந்தவர்கள் இப்போ, விமர்ச்சிக்கிறார்கள். பாதாள போதைக்குழு, தங்களை பாதுகாக்க அதன் பின்னால் இருப்பவர்களை போட்டுத்தள்ளுகிறார்கள். அதன் தலைவன் பிடிபடும்வரை அல்லது கொல்லப்படும் வரை இது தொடரும். இது அவர்களின் தொழில் தர்மமாக்கும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது அதன் விளைவையும் எதிர்பார்த்திருக்க வேண்டும். கைது செய்தாலும் விமர்ச்சிக்கிறார்கள், அவர்களே தங்களுக்குள் மோதிக்கொண்டாலும் அரசை விமர்ச்சிக்கிறார்கள். விமர்ச்சிப்பவர்கள் யார்? இதனால், இவர்களால் பாதிக்கப்பட்டவர்களா?

இனிய தீபாவளி

1 week 3 days ago
உண்மைதான். பகல் குறைந்து இருள் கூடும் காலங்களில் உலகளாவிய ரீதியில் ஏதோ ஒரு மத,இன சம்பவத்தை வைத்து ஒளியேற்றும் நிகழ்வுகளை காண்கின்றோம்.எம்மவருக்கு கார்த்திகை விளக்கு போன்று...... நீங்கள் வெடி போட்டால் சிரிச்சு முடிய இரண்டு நாள் எடுக்கும்....😂 கோதாரி விழ..... கிட்டடியிலை மதம் மாறின எங்கடை உந்த ஜெகோவாகாரன்களும் உத தான் சொல்லிக்கொண்டு திரியுறாங்கள்.🤣 செவ்வாய் வெள்ளி கந்தசஷ்டி சனீஸ்வரன் திருவெம்பாவை எண்டு நோ திங்கிங்.....மட்டன் சிக்கன் டெய்லி அமுக்கிங்..😂

தவெக உட்கட்சி மோதல்

1 week 3 days ago
உங்கள் நீண்ட எழுத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏 தமிழர்களுக்கென்று தனி மரபும் தனி முயற்சிகளும் என்றும் எங்கும் உண்டு. இதை நாங்கள் வரலாறு ஊடாக மட்டுமல்ல இன்றைய நடைமுறை உலகிலும் பார்க்கலாம். இதற்கு தனி விளக்கங்கள் தேவையில்லை என நான் நினைக்கின்றேன். இலங்கையில் தமிழர் பிரதேசம் என்றால் தனி விசேடங்கள் உண்டு. இயற்கை வளங்கள் பெரிதாக இல்லாமலே தன்னிறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.அவர்களது தனி முயற்சி அல்லது கூட்டு முயற்சிகள் ஏராளம்..ஏராளம்.இதை பார்த்து தான் சிங்களம் கொஞ்சம் மிரள்கிறது என நினைக்கின்றேன். இங்கு திராவிடம் தேவைப்படவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வேற்று மண்ணில் கால் பதித்தவர்கள்.இன்று என்ன,எந்த நிலையில் இருக்கின்றார்கள் என நான் சொல்லத்தேவையில்லை. இங்கேயும் திராவிடம் தேவைப்படவில்லை. அதே போல் தமிழ்நாட்டிலும் தனி முயற்சியும்,பொருளாதார வளங்களுமே அதன் முன்னேறத்திற்கு காரணம் என நான் நினைக்கின்றேன். மற்றும் படி திராவிடம் அரசியல் செய்ய மட்டுமே பயன்படுகின்றது.அபிவிருத்தி தமிழர் சார்ந்ததாகவே நான் பார்க்கின்றேன். தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு போட்டியாக இருக்கும் கேரளத்திற்கு திராவிடம் தேவைப்படவில்லை என்பதை நான் உணர்கின்றேன். தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் சாதி வேற்றுமைகளை அழிக்க வேண்டும். அதை அழிக்க தமிழர் என்றொரு கட்டமைப்பு வேண்டும். அதற்கு "மட்டும்" என்ற பதம் தேவைப்படுகின்றது.தமிழர்களுக்கு சாதி,மதம் சார்ந்த உட்பிரிவுகள் தேவையில்லை. தமிழர் என்ற ஒரு குடை மட்டுமே தற்காலத்திற்கு தேவைப்படுகின்றது. திராவிடத்தால் ஒழிக்க முடியாத இன பாகுபாட்டை,சாதி வேற்றுமைகளை தமிழர் என்ற ஒருமைப்பாட்டால் மட்டுமே அழிக்கமுடியும் என நான் நினைக்கின்றேன். ஏனைய நாடுகளை பாருங்கள் எல்லாம் மொழி சார்ந்தே தம் கொள்கைகளையும் சட்டங்களையும் விதிகளையும் வகுத்துள்ளார்கள்.

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

1 week 3 days ago
நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு. Posted on October 23, 2025 by சமர்வீரன் 342 0 யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (23.10.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக தலைநகரில் நடைபெற்றது. அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், அனைத்துலக மக்களவையால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும் வாசிக்கப்பட்டது. நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்றது. https://www.kuriyeedu.com/?p=704009

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

1 week 3 days ago

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

9d0229d1fabcc616d20cd99669b16a9e?s=32&d=Posted on October 23, 2025 by சமர்வீரன்

342 0

K800_IMG_4047-300x225.jpgயேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (23.10.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக தலைநகரில் நடைபெற்றது.

அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், அனைத்துலக மக்களவையால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும் வாசிக்கப்பட்டது.

நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்றது.

K800_IMG_3911.jpg

K800_IMG_3908.jpg

K800_IMG_3912.jpg

K800_IMG_3914.jpg

K800_IMG_3955.jpg

K800_IMG_3956.jpg

K800_IMG_4047.jpg

K800_IMG_3915.jpg

QKMP3513.jpg

FJIR2655.jpg

LNCF4789.jpg

XTAS2169.jpg

XTIF3381.jpg

NDDV5467.jpg

XBHP1592.jpg

CMWE8159.jpg

CMWE8159-1.jpg

QRYI5917.jpg

VNGF0866.jpg

XTSN2311.jpg

EZNG0331.jpg

XHSZ2436.jpg

PFLL8463.jpg

XJYK1850.jpg

XLAX3417.jpg

K800_LNCF4789.jpg

K800_XHDU1293.jpg

GBDH7282.jpg

XPAE6833.jpg

K800_QKMP3513.jpg

K800_IZAP5402.jpg

K800_NTHU2536.jpg

K800_XHDU1293.jpg

K800_FJIR2655.jpg

K800_LNCF4789.jpg

K800_UGRW1986.jpg

K800_XTAS2169.jpg

K800_XTIF3381.jpg

K800_LIWN2571.jpg

K800_NDDV5467.jpg

K800_XBHP1592.jpg

K800_PYPF4416.jpg

K800_RKKQ5293.jpg

K800_CMWE8159.jpg

K800_EJRS3148.jpg

K800_PMVU5554.jpg

K800_QRYI5917.jpg

K800_HFLI5021.jpg

K800_JVGW1872.jpg

K800_VNGF0866.jpg

K800_XTSN2311.jpg

K800_EZNG0331.jpg

K800_XHSZ2436.jpg

K800_HTZG0369.jpg

K800_XAJB6791.jpg

K800_WYGG5820.jpg

K800_XBGR9137.jpg

K800_PAAA0397.jpg

K800_QUQW3632.jpg

K800_VEVT7872.jpg

K800_MWBF5053.jpg

K800_UCRP7334.jpg

K800_NZJX5538.jpg

K800_ADUO8593.jpg

K800_CYAP3445.jpg

K800_KZVI0011.jpg

K800_PUVM3272.jpg

K800_EDIU8195.jpg

K800_BPDH0793.jpg

K800_LUPT0838.jpg

K800_XUHR9433.jpg

K800_EKUZ1046.jpg

K800_GIKZ3824.jpg

K800_HYAF4076.jpg

K800_HTGN2283.jpg

K800_NONQ4884.jpg

K800_RMCI4048.jpg

K800_MBMO9762.jpg

K800_NEXL4153.jpg

K800_OPML6297.jpg

K800_OZII3836.jpg

K800_PDTF4045.jpg

K800_PFLL8463.jpg

K800_RHQY6343.jpg

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.19_5b4

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.18_5ae

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.19_0f7

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.18_667

WhatsApp-Bild-2025-10-23-um-18.03.05_8bd

https://www.kuriyeedu.com/?p=704009

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 3 days ago
நீங்கள் சொல்வது எல்லாம் சரி. ஆனால், இது இப்பொது சட்டத்தின் பிடியில். எனவே, சட்ட ஆலோசனை இல்லாமல் வாயை திறந்து இருக்க மாட்டார் என்றே நினைக்கிறன். (ஆனால், அவரின் சிரித்த படத்துடன் அவர் சொன்னார் என்று பார்க்கும் போது பகிடியாகத்தான் இருக்கிறது.)

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 3 days ago
ஒரு சிறிய உதாரணம் ஒரு துறையில் நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது அதன் லாப நட்டம் கவனிப்பில் இருக்கும் . தொடர்ந்து அந்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மற்றும் அரச நிறுவனங்களின் மத்தியிலும் ஒரு நல்ல பெயருடன் வளரும்போது அதன் வளர்ச்சி அதிகரிக்கும் . அதன் கிளைகள் பரவும் வாய்ப்புக்கள் கிடைக்கும் அந்த நிறுவனம் ஒரு சங்கிலித் தொடராக மாறும் வாய்ப்புக்களும் வரும் ஆனால் இங்கே அதிகமாக அந்த நிறுவனம் கவனிக்க வேண்டியது. இலாபம் என்பதே. இலாபம் இல்லாமல் வெறும் அந்நிய முதலீடுகளினால் பெரிதாக்கப்படும் கிளைகளைக் கொண்ட நிறுவனம் தனது இலாபத்தில் அந்த முதலீட்டாளர்களுடன் பங்கு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. சிலவேளைகளில் அந்த நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்யும் நிலையில் இலாபம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில் அந்நிய முதலீடுகள் தடைபடலாம் இதனால் ஏற்படும் பங்குகளின் சரிவு இன்னும் அதிக தாக்கத்தை அந்த நிறுவனத்தின் இலாபத்தில் ஏற்படுத்தலாம் . கண்காணிப்பு என்பது ஒரு நிறுவனத்திற்கு எல்லாத் திசைகளிலும் இருக்க வேண்டும் அரசு தனது வருமானத்தைக் கூட்டவும் வரிகளை அறவிடவும் சில உத்திகளைக் கையாளும். அதில் நிறுவனங்கள் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஊக்கம் அளித்த அரசே இன்னொரு சமையத்தில் காலை வாரிவிடும். முதலாளிகள் தாங்கள் நட்டமடைந்தாலும் தங்கள் இலாபத்தில் இல்லாவிட்டாலும்... அவர்களுடைய கணக்குகளில் இருந்து தொழிலாளர்களுக்கும் கூட்டாளிகளும் பங்குதாரர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையேல் அவர்கள் தண்டிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 3 days ago
வேறு ஒரு செய்தியில் இருக்கிறது விபரமான குற்றசாட்டு என்று (இந்த செய்து இணைப்பு எங்கோ தவறி விட்டது) misrepresentation breach of the director's duties ஆனால், இவை எப்போதும் மோசடி இல்லை. இவ்வளவு பெரிய தொகையில், இவ்வளவு காலம் சென்று, நேரடியாக மோசடி என்று குற்றம் சாட்ட முடியாமல் இருப்பதன் காரணம் என்ன? sfo விசாரிக்கும் என்றால், sfo அதன் இணைய தளத்தில் விசாரிப்பதாக இருக்கும். (இது ஒன்றும் இரசிய விடயம் அல்ல) GOV.UKFind an SFO caseFind fraud, bribery and corruption cases investigated by the SFO. ஆனால், sfo அதுவாக தலையிடுவதில்லை (எனக்கு நேரடி அனுபவம் இருக்கிறது). ஏதோ ஒரு விதத்தில் அறிவிக்க வேண்டும், அரசாங்கம் அல்லது அரசாங்க அலகு ஏதாவது அறிவிப்பது ஆகவும் இருக்கலாம். இது புதிய செய்தி. அவர் மீண்டும் வெளியே தலையை காட்டி, எவ்வளவு கடன் இருப்பது என்பது தெரியாது என்று சொன்னதாக (உரிமை கோரியதாக). https://www.telegraph.co.uk/business/2025/09/28/runaway-oil-tycoon-re-emerges-deny-knowledge-15bn-debt/ https://www.telegraph.co.uk/business/2025/09/28/runaway-oil-tycoon-re-emerges-deny-knowledge-15bn-debt/

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

1 week 3 days ago
In a 1994 interview with the BBC, the LTTE leader Velupillai Prabhakaranexpressed his regret over the expulsion and stated that the Muslims belonged to Jaffna and would permit their resettlement once normalcy was restored.[20] Later on, in a press conference in Kilinochchi in 2002, the LTTE political strategist Anton Balasingham appeared alongside the LTTE leader and explained that they had already apologized to the Muslims and that the Tamil homeland also belonged to the Muslim people.[21][22]Balasingham also expressed that the expulsion of the Muslims from Jaffna was a political blunder which could not be justified and said that the LTTE leadership would be willing to resettle them in the northern district.[23] 1994 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளியேற்றத்திற்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இயல்புநிலை திரும்பியவுடன் அவர்களின் மீள்குடியேற்றத்தை அனுமதிப்பதாகவும் கூறினார். [20] பின்னர், 2002 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எல்.ரீ.ரீ.ஈ அரசியல் மூலோபாயவாதி அன்டன் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈ தலைவருடன் தோன்றி, அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், தமிழ் தாயகமும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கினார். [21][22] பாலசிங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு அரசியல் தவறு என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும், எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவர்களை வடக்கு மாவட்டத்தில் மீள்குடியேற்றத் தயாராக இருக்கும் என்றும் கூறினார். [23] பிகு ஆதார கட்டுரைகளை விக்கியின் கால்குறிப்பில் காணலாம். போன வருடம் காலமான தியாகுவை மறந்துவிட்டீர்களே?

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

1 week 3 days ago
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள் October 26, 2025 1:00 am *சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க… *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை… *கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை தவிர்க்க வேண்டும்… அ.நிக்ஸன்- புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் பிரதான சபையான தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தின் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். கடந்த ஒரு வருட கால ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் இந்த உரையாடல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன மத மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையின் தேசிய விவகாரமாக எடுத்து கையாள வேண்டும் என்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது உள்ளிட்ட பல விடங்களை தேசிய சபை உறுப்பனர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில்தான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் திட்டம் இருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப்பதற்கான தயார்படுத்தல்களை தேசிய சபை உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர். அதேவேளை, கடந்த செப்ரெம்பர் மாதம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், தமிழ்த்தரப்புடன் போசப்பட்ட விடயங்கள் குறிப்பாக பௌத்த மயமாக்கல் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு கடும் தொனியில் கூறிய கருத்துக்கள் தொடர்பாகவும் ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க பங்குபற்றியிருக்கின்றனர். இக் கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய முறைமைகள் பற்றிக் கூறிய கருத்துக்கள், சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் வெளியிட்ட கருத்துக்கள் பற்றியெல்லாம், நிஹால் அபேசிங்க, ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களுக்கு எடுத்து விளக்கியிருக்கிறார். இது பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கொழும்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஈபிஆர்எல்எஃப், ரெலோ, புளொட் ஆகிய முன்னாள் விடுதலை இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை பற்றியும், புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் சில சரத்துகளை உட்புகுத்தி இனப்பிரச்சினைக்குரிய தீர்வை காண்பது பற்றியும் தேசிய சபை உறுப்பினர்கள் உரையாடியுள்ளனர். இந்த உரையாடலின் போது, மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், புதிய அரசியல் யாப்புக்காக வரைபைத் தயாரித்து அதனை நிறைவேற்றுவது மாத்திரமே அநுர அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவிப்பார் எனவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சில தமிழ் நாளிதழ்களில் மாத்திரம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜேபிவியின் தேசிய சபை முடிவெடுத்துள்ளதாக, அதாவது புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என சில உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதேநேரம், தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளமை, சிங்கள பௌத்த மயமாக்கல்கள் என்று பேசியிருந்ததை ஏற்க முடியாது என கூறிய நிஹால் அபேசிங்க, கஜேந்திரகுமார் அந்த சந்திப்பில் யதார்த்தமாக பேசவில்லை எனக் குற்றம் சுமத்தியிருந்தமை பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர். கடந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் செய்த தவறுகளையும் இழைத்த அநீதிகளையும் தமது அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது எனவும், குறிப்பாக யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் முடிவெடுக்க முடியாது என்றும், நிஹால் அபேசிங்க சுவிஸ்லாந்து சந்திப்பில் கஜேந்திரகுமாருக்கு எடுத்துச் கூறிய விடயங்களைப் பகிரங்கப்படுத்தி, அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜேவிபியின் தேசிய சபை தீர்மானித்துள்ளது. குறிப்பாக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கட்சிகளிடம் இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக புரியவைத்து, ‘இலங்கை இறைமை’ ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ என்ற அடிப்படை நிலைப்பாட்டை ஏற்று அனைத்து இனங்களும் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் வாழும் சூழலை உருவாக்கக்கூடிய புதிய அரசியல் யாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற சிந்தனையை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டும் என ஜேவிபியின் தேசிய சபை வற்புறுத்தியுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர்தரப்பு பேச முடியாது எனவும், அதனை அநுர அரசாங்கம் ஏற்காது என்பதையும் தமிழர்தரப்புக்கு இறுதி முடிவாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் பற்றியும் தேசிய சபை தீர்மானித்திருப்பதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்பினாலும், ஜேவிபியின் தேசிய சபை, அதற்கு உடன்பட மறுப்பதாகவும், குறிப்பாக செயலாளர் ரில்வின் சில்வா முற்றாக மறுப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ரில்வின் சில்வா பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆகவே, மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. அதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள ஜேவிபி அல்லாத உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் இரண்டு நிலைப்பாடு உள்ளமை தெரிகிறது. ஆனாலும், ஜேவிபியின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேவிபியின் தமிழர் நிலைப்பாடு தொடர்பான விடயங்களை ஏற்று செயற்படுத்துக் கூடிய முறையில் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என சர்வதேச பயங்கரவாத தடுப்பு பற்றிய இலங்கைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன வலியுறுத்தி எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் பற்றியும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட 13 பற்றிக் கூறிய விடயங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்வுகளின் பிரகாரம், சோஷலிசம் – சமத்துவம் என்ற ஜேவிபியின் பிரதான கொள்கைகளின் பிரகாரம் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கு ஏற்ப அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற வலுவான செய்தி ஒன்றை ஜேவிபி வெளியிடும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 13 ஐ தவிர்த்து, 2015 இல் உருவாக்கப்பட்ட ‘ஏக்கிய இராஜ்ஜிய’என்ற அரசியல் யாப்பு வரைபில் உள்ள சில பரிந்துரைகளை மாத்திரம் மீள் பரிசீலனைக்கு எடுப்பது என அநுர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன. https://oruvan.com/restrictions-and-conditions-imposed-by-jvp/

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

1 week 3 days ago

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

October 26, 2025 1:00 am

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

*சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க…

*மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை…

*கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை தவிர்க்க வேண்டும்…

அ.நிக்ஸன்-

புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் பிரதான சபையான தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தின் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

கடந்த ஒரு வருட கால ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் இந்த உரையாடல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன மத மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையின் தேசிய விவகாரமாக எடுத்து கையாள வேண்டும் என்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது உள்ளிட்ட பல விடங்களை தேசிய சபை உறுப்பனர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில்தான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் திட்டம் இருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதாவது, 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப்பதற்கான தயார்படுத்தல்களை தேசிய சபை உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை, கடந்த செப்ரெம்பர் மாதம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், தமிழ்த்தரப்புடன் போசப்பட்ட விடயங்கள் குறிப்பாக பௌத்த மயமாக்கல் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு கடும் தொனியில் கூறிய கருத்துக்கள் தொடர்பாகவும் ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க பங்குபற்றியிருக்கின்றனர்.

இக் கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய முறைமைகள் பற்றிக் கூறிய கருத்துக்கள், சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் வெளியிட்ட கருத்துக்கள் பற்றியெல்லாம், நிஹால் அபேசிங்க, ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களுக்கு எடுத்து விளக்கியிருக்கிறார்.

இது பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கொழும்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஈபிஆர்எல்எஃப், ரெலோ, புளொட் ஆகிய முன்னாள் விடுதலை இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை பற்றியும், புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் சில சரத்துகளை உட்புகுத்தி இனப்பிரச்சினைக்குரிய தீர்வை காண்பது பற்றியும் தேசிய சபை உறுப்பினர்கள் உரையாடியுள்ளனர்.

இந்த உரையாடலின் போது, மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், புதிய அரசியல் யாப்புக்காக வரைபைத் தயாரித்து அதனை நிறைவேற்றுவது மாத்திரமே அநுர அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவிப்பார் எனவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சில தமிழ் நாளிதழ்களில் மாத்திரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜேபிவியின் தேசிய சபை முடிவெடுத்துள்ளதாக, அதாவது புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என சில உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

அதேநேரம், தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளமை, சிங்கள பௌத்த மயமாக்கல்கள் என்று பேசியிருந்ததை ஏற்க முடியாது என கூறிய நிஹால் அபேசிங்க, கஜேந்திரகுமார் அந்த சந்திப்பில் யதார்த்தமாக பேசவில்லை எனக் குற்றம் சுமத்தியிருந்தமை பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர்.

கடந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் செய்த தவறுகளையும் இழைத்த அநீதிகளையும் தமது அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது எனவும், குறிப்பாக யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் முடிவெடுக்க முடியாது என்றும், நிஹால் அபேசிங்க சுவிஸ்லாந்து சந்திப்பில் கஜேந்திரகுமாருக்கு எடுத்துச் கூறிய விடயங்களைப் பகிரங்கப்படுத்தி, அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜேவிபியின் தேசிய சபை  தீர்மானித்துள்ளது.

குறிப்பாக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கட்சிகளிடம் இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக புரியவைத்து, ‘இலங்கை இறைமை’ ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ என்ற அடிப்படை நிலைப்பாட்டை ஏற்று அனைத்து இனங்களும் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் வாழும் சூழலை உருவாக்கக்கூடிய புதிய அரசியல் யாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற சிந்தனையை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டும் என ஜேவிபியின் தேசிய சபை வற்புறுத்தியுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர்தரப்பு பேச முடியாது எனவும், அதனை அநுர அரசாங்கம் ஏற்காது என்பதையும் தமிழர்தரப்புக்கு இறுதி முடிவாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் பற்றியும் தேசிய சபை தீர்மானித்திருப்பதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்பினாலும், ஜேவிபியின் தேசிய சபை, அதற்கு உடன்பட மறுப்பதாகவும், குறிப்பாக செயலாளர் ரில்வின் சில்வா முற்றாக மறுப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ரில்வின் சில்வா பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆகவே, மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

அதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள ஜேவிபி அல்லாத உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் இரண்டு நிலைப்பாடு உள்ளமை தெரிகிறது.

ஆனாலும், ஜேவிபியின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேவிபியின் தமிழர் நிலைப்பாடு தொடர்பான விடயங்களை ஏற்று செயற்படுத்துக் கூடிய முறையில் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என சர்வதேச பயங்கரவாத தடுப்பு பற்றிய இலங்கைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன வலியுறுத்தி எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் பற்றியும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட 13 பற்றிக் கூறிய விடயங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த ஆராய்வுகளின் பிரகாரம், சோஷலிசம் – சமத்துவம் என்ற ஜேவிபியின் பிரதான கொள்கைகளின் பிரகாரம் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கு ஏற்ப அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற வலுவான செய்தி ஒன்றை ஜேவிபி வெளியிடும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13 ஐ தவிர்த்து, 2015 இல் உருவாக்கப்பட்ட ‘ஏக்கிய இராஜ்ஜிய’என்ற அரசியல் யாப்பு வரைபில் உள்ள  சில பரிந்துரைகளை மாத்திரம் மீள் பரிசீலனைக்கு எடுப்பது என அநுர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன.

https://oruvan.com/restrictions-and-conditions-imposed-by-jvp/

யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்

1 week 3 days ago
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும் adminOctober 25, 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் கடந்த 15ம் திகதி ஆகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பீடாதிபதிகள் 4 பேர் உட்பட ஆறு பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி, கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன், விஞ்ஞான பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் பு.ரவிராஜன், உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசியர் கு. மிகுந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிறின்ஸ் ஜெயதேவன் ஆகியோர் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்னர் என அறியமுடிகிறது. பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய டிசெம்பர் மாத முற்பகுதியில் நடாத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில் தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார். அதேவேளை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் தொடர்பில் , உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு பேரவைச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அது தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனமொன்று வெளிப்படைத் தன்மையுடன் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்க மறுத்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. https://globaltamilnews.net/2025/221961/

யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்

1 week 3 days ago

யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்

adminOctober 25, 2025

jaff-uni-chancelors.jpg?fit=1170%2C1170&

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அதற்கான இறுதித் தினம் கடந்த 15ம் திகதி ஆகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பீடாதிபதிகள் 4 பேர் உட்பட ஆறு பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி, கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன், விஞ்ஞான பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் பு.ரவிராஜன், உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசியர் கு. மிகுந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிறின்ஸ் ஜெயதேவன் ஆகியோர் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்னர் என அறியமுடிகிறது.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய டிசெம்பர் மாத முற்பகுதியில் நடாத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில் தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார்.

அதேவேளை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் தொடர்பில் , உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு பேரவைச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அது தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனமொன்று வெளிப்படைத் தன்மையுடன் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்க மறுத்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://globaltamilnews.net/2025/221961/