Aggregator

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

1 week 3 days ago
அண்ணை, எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் செய்தபோது லைற்றா தூங்கிவிட்டேன்!(அதனுடைய ரீங்காரத்தையும் தாண்டி) இடுப்பையும் கால்களையும் ஸ்கான் செய்தார்கள்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
வினா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடத்தை அவுஸ்திரேலியா அணி பிடிக்கும் என 9 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 59 புள்ளிகள் 2) ஏராளன் - 54 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 54 புள்ளிகள் 4) ரசோதரன் - 54 புள்ளிகள் 5) புலவர் - 52 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 52 புள்ளிகள் 7) சுவி - 50 புள்ளிகள் 8) கிருபன் - 50 புள்ளிகள் 9) வீரப்பையன் - 49 புள்ளிகள் 10) கறுப்பி - 48 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 46 புள்ளிகள் 12) வாதவூரான் - 46 புள்ளிகள் 13) வசி - 44 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 15) வாத்தியார் - 42 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 27, 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 63).

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
27 ஆம் கேள்விக்கு கறுப்பி அவர்கள் அவுஸ்திரேலியாவைத்தான் தெரிவு செய்து இருக்கிறார் வினா 27) அவுஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக தெரிவு செய்து இருந்தார்கள். 1) அகஸ்தியன் - 57 புள்ளிகள் 2) ஏராளன் - 52 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 52 புள்ளிகள் 4) ரசோதரன் - 52 புள்ளிகள் 5) சுவி - 50 புள்ளிகள் 6) கிருபன் - 50 புள்ளிகள் 7) புலவர் - 50 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 50 புள்ளிகள் 9) வீரப்பையன் - 49 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 46 புள்ளிகள் 11) வாதவூரான் - 46 புள்ளிகள் 12) கறுப்பி - 46 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 14) வசி - 42 புள்ளிகள் 15) வாத்தியார் - 40 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 27, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 61).

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா

1 week 3 days ago
பொத்தாம் பொதுவாக கரீபியன் என்று கூறினாலும் வெனிசூலா தான் கண். அங்கு ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! - சுமந்திரன்

1 week 3 days ago
அப்ப இந்தக் கொலை அரசாங்கமே செய்ததாக ஐயா முடிவு எடுத்துவிட்டாரோ?

குட்டிக் கதைகள்.

1 week 3 days ago
போட்டிக்கு நாமும் தொடங்கணுமில்ல. இது தான் பொருளாதார படிப்பு. படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 3 days ago
அப்படி என்றால் கடைசி இலக்கம் எனக்காக காத்திருக்கிறதா டோன் வொறி கறுப்ஸ். நானும் தென்னாபிரிகாவையே தெரிவு செய்துள்ளேன். பையன் கவனிக்கவில்லை என்று எண்ணுகிறேன். எப்படியும் தலைவர் கந்தப்பு பிடித்துவிடுவார்.

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

1 week 3 days ago
அண்மையில் மறதி காரணமாக தலையை ஸ்கான் செய்தார்கள். எல்லா விளக்கங்களும் சொல்லி கையில் ஒரு கருவியும் தந்து ஏதாவது அவசரம் என்றால் அழுத்தச் சொன்னார்கள். சரி என்று உள்ளே தள்ளிவிட்டதும் ஒரு நிமிடத்தால் எனக்கு ஏதோ மூச்சுவிட முடியாத மாதிரி அந்தரமாக இருந்தது. மொத்தமாக 15 நிமிடம் ஆகும் என்று முன்னரே சொல்லியிருந்படியால் இது வேலைக்கு ஆகாது என்று தந்த கருவியை அழுத்தினேன். உடனேயே வெளியே இழுத்து என்னாச்சு என்று 2-3 பேர் ஓடிவந்தார்கள். மூச்சு விடமுடியாமல் அந்தரமாக உள்ளது என்றேன். சரி உனக்கு முடியாவிட்டால் இன்னும் ஒருநாளுக்கு வா என்றார்கள். இது முன்னரே செய்த அனுபவம் இருந்தபடியால் எங்கே தவறு செய்துவிட்டேன் என்பதை உடனேயே புரிந்து கொண்டேன். வேண்டாம் திரும்ப அனுப்பு நான் தயார் என்றேன். சந்தேகத்தில் உண்மையாவா என்று திரும்ப திரும்ப கேட்டார்கள். இந்த தடவை வாசலில் போகும்போதே கண்களை இறுக மூடிவிட்டேன்.முடியும்வரை கண்ணைத் திறக்கவே இல்லை. எதுவித பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததும் ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள்.

குட்டிக் கதைகள்.

1 week 3 days ago
Puthiyamaadhavi Sankaran · மூதாட்டி கற்றுக் கொடுத்த வியாபார தர்மம். மகாராஷ்டிரா நாக்பூர் அருகே அந்த மூதாட்டி விற்கும் காரி -டோஸ்ட் ரொம்ப நல்லாயிருக்கும் என்று தோழர் காம்ப்ளே எங்களை மாலை நேரத்தில் அழைத்துச் சென்றார். டோஸ்ட் வாங்கியாச்சு. இப்போ அதை முக்கி சாப்பிட சூடான சாய் வேணும். நான் என் பொருளாதரப் புத்தியை அவளிடம் காட்டினேன். " மெளசி, ஆஃப் சாயா பி தேனேக்கா" நீங்க எங்களுக்கு தேநீரும் கொடுக்கணும். டீயும் சேர்த்து விற்பனை செய்தால் நல்லா விற்பனை ஆகுமே" இது நம்ம படிச்ச பொருளாதர தொழில் அபிவிருத்தி. அந்த மூதாட்டி கண்கள் புன்னகைக்க சொன்னாள்.... " பேட்டி.. பக்கத்தில ஒருத்தர் சாய் விக்கிறார் பாரு. அவரு குடும்பமும் பிழைக்கணும்" நான் திரும்பிப் பார்த்தேன். எதிரே அந்த மனிதர் சாய் விற்றுக் கொண்டிருந்தார். அவரு யாரு என்று கேட்டேன். தெரியாது, என்னமாதிரி ஒருத்தர் அவ்வளவுதான்" என்று சொல்லி விட்டு தன் அடுத்த கஸ்டமருக்கு பொட்டலம் போட ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சாய் விற்கமுடியும். ஆனால் அதை அவள் செய்யவில்லை. வியாபார அபிவிருத்தி திட்டங்களை பக்கம் பக்கமாக எக்னாமிக்ஸ் பத்திரிகைகளில் வாசித்திருந்த எனக்கு அந்த ஆதித்தாயின் பொருளாதர வியாபாரக் கொள்கை பிடித்திருந்தது. வியாபாரம், முன்னேற்றம் என்பதெல்லாம் " தான் மட்டும் வாழ்வதல்ல" மற்றவர்களையும் வாழ வைப்பதுதான்." வாழு. வாழ விடு. என் குடியிருப்புக்கு கீழே இருந்த கடையில் ( provision store) எல்லாம் கிடைக்கும். காய்கறி தவிர. காய்கறி வாங்கி விற்க முடியாது என்பதல்ல. ஆனால் அந்தக் கடைக்காரர் அதைச் செய்யவில்லை. காரணம் அக்கடைக்கு வெளியே தள்ளுவண்டியில் காலையிலும் மாலையிலும் காய்கறி வியாபாரம் உண்டு. கடைக்காரருக்கு எவ்வளவு பெரிய மனசு. வாழு வாழ விடு. Voir la traduction

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

1 week 3 days ago

571315221_122197693334293440_65666361895

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம்.

எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுருப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை எக்ஸ் ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும். இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை இந்த கருவி ஏற்படுத்துமாறு வடிவமைக்கப்படுள்ளது. இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்பகளின் உயர்த்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.

இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார். எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டங்களில் மின்சார சமிஞ்க்கைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது. இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்கலையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள்.

இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும். இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும்.

கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருகிணைத்து அதனை முப்பரிமாண படங்களை தயாரித்து திரையில் காண்பிக்கும்.

எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும்.

இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார் 15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது. காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று. சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையெல்லாம் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும்.

எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும். இதனால் காயம் ஏற்படும் சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்மெட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும்.

சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் 

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

1 week 3 days ago
இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க. கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம். எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுருப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை எக்ஸ் ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும். இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை இந்த கருவி ஏற்படுத்துமாறு வடிவமைக்கப்படுள்ளது. இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்பகளின் உயர்த்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார். எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டங்களில் மின்சார சமிஞ்க்கைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது. இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்கலையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள். இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும். இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும். கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருகிணைத்து அதனை முப்பரிமாண படங்களை தயாரித்து திரையில் காண்பிக்கும். எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும். இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார் 15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது. காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று. சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையெல்லாம் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும். எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும். இதனால் காயம் ஏற்படும் சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்மெட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும். சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்