ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது
உக்கிரேனின் முக்கிய எண்ணெய் வழ்ங்குனர்களான கிரீஸ் மற்றும் துருக்கியினையும் விட ஸ்லோவாக்கியாவின் உக்கிரேனிற்கான எண்ணெய் வழங்கல் அதிகம், அண்மையில் ட்ருஸ்பா குழாயினை உக்கிரேன் தாக்கி அழித்தது அது கங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு இரஸ்சியாவில் இருந்து எண்ணெயினை எடுத்து செல்கிறது. இந்த தாக்குதல் மூலம் உக்கிரேனும் பாதிப்புள்ளாகின்றது எனும் நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளதானது எனும் எனது சந்தேகம் வலுக்கிறது என கருதுகிறேன். இந்தியாவும் இன்னபிற நாடுகளும் தமது இரஸ்சிய எண்ணெயினை உக்கிரேன் வாங்குவதனை கூறுவதில்லை, ஆனால் தமக்கு எதிராக களம் திரும்பும் போது உண்மைகளை வெளியே கூறுகிறார்கள், ஒவ்வொரு விடயங்களிலும் ஒன்று அல்ல பல பக்கங்கள் உள்ளது, ஆனால் எழுத்து சுதந்திரம் உள்ளதாக கூறப்படும் இக்கால கட்டத்திலேயே பல உண்மைகள் தெரிவதில்லை, கட்டமைக்கப்படும் பொய்களே வரலாறாகின்றன, அல்லது வரலாற்றின் பக்கத்திலிருந்து சில பக்கங்கள் இல்லாமலாக்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜேர்மன் ஜப்பான் தமது சொந்த இராணுவத்தினை கட்டியமைப்பது தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கூறிய நாடுகளே தற்போது உக்கிரேனை இராணுவ ரீதியாக பெரிய இராணுவமாக கட்டமைப்பதற்கு இரஸ்சியாவிடம் அனுமதி ஏன் எதிர்பார்க்கவேண்டும் என கூறுகிறார்கள். உலகின் ஒரு பெரிய போரினை ஆரம்பிப்பதற்காக அது நிகழ்த்தப்படுகின்றது, இது ஒரு முட்டாள்த்தனம்.