Aggregator

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

1 week 2 days ago
வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது! வெலிகம பிரதேச சபையின் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை அடையாளம் காண இரண்டு பொலிஸ் குழுக்கள் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆராய்ந்து வந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்புப் பிரிவில் இருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து மாத்தறை வரை ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்ததாகவும், மாத்தறையில் வைத்து வேறொரு நபர் அவருக்கு மற்றொரு மோட்டார் சைக்கிளை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து இனந்தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451124

தாதியர்களின் சிருடையை அவரவர் மத கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றினால் ஊழியர் சங்கம் ஊடாக நடவடிக்கை எடுப்போம் ; முத்தேட்டுவ ஆனந்த தேரர்

1 week 2 days ago
(அஷ்ரப் ஏ சமத்) இந்த நாட்டில் சர்வதேச தரத்தில் தாதியர்களுக்கு என்ற ஓர் சீருடை இருந்து வந்தது. அதை யாரும் அவரவர் மதம் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாற்ற நினைப்பார்கள் ஆனால் அதற்கு எதிராக எங்களது பொது அரச தாதியர்கள் ஊழியர் சங்கம் தடுத்து நிறுத்தும்.. அதற்கு எதிராக நாங்கள் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையில் இறங்கும் என பொதுச் சேவை தாதியர்கள் சங்கத்தின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தோரோ இன்று 26 ஆம் திகதி அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் நாட்டில் வழமையாக இருந்து வரும் தாதியர்கள் சீருடையை அவரவர் மதம் கலாச்சாரத்திற்கேற்ப அணியலாம் என ஊடகங்களில் வெளிவந்த செய்தியை கவனித்தேன்…. ஆனால் தற்பொழுது சுகாதார அமைச்சர் திறம்பட எடுத்துச் செல்லும் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ச இதற்கு உடன்படமாட்டார் என நினைக்கின்றேன் முன்னாள் அமைச்சர் கலாம் சென்ற எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கூட பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் கலாச்சார ஆடை அணிவதற்கு ஏற்ப தாதியர்களின் சீறுடையை மாற்றும் படி அப்போது இருந்த சுகாதார அமைச்சர் ரேணுகா கேரத்திடம் கோரிக்கை விடுத்தார் அப்போது சுகாதார அமைச்சர் இவ்வாறு செய்ய முடியாது…என்று சொல்லியிருந்தார். ஆகவே தான் சுகாதார அமைச்சர் இந்த தாதியர்கள் அணியும் சீருடையை ஒர் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க மாட்டார் என நம்புகின்றோம் இவ்வாறு அவர் நடவடிக்கை எடுப்பின் எங்கள் ஊழியர்கள் சங்கம் இதற்கு எதிராக வேலை நிறுத்தம் ஈடுபடுவோம்.. அவ்வாறு முஸ்லிம் தாதியர்கள் நமது கலாச்சாரத்திற்கும் ஏற்ப உடை அணிய வேண்டும் என்றால் அவர்கள் அத்தொழிலில் இருந்து விலகிச் செல்ல முடியும் எனவும் முத்துட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார் மேற்படி விடயம் கடந்த 24ஆம் திகதி மாதாந்தம் முஸ்லிம்களது பிரச்சினைகள்,மதம், கல்வி கலாச்சார விஷயம் கலந்துரையாடுவதற்கு ஒவ்வொரு மாதமும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் வெளிநாட்டு அமைச்சர் தலைமையில் வெளிநாட்டு அமைச்சின் கூடி கலந்துரையாடுவார்கள். அவ்வப்போது முஸ்லிம்கள் சம்பந்தமான அவ்வப்போது எழும் பிரச்சினைகள் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் அமைச்சல் விஜித் ஹேரத்திடம் முன் வைத்தனர் இதில் மூதூர் வைத்தியசாலை ,தாதியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் , மற்றும் திறந்த பல்கலைக்கழக தாதிய பயிற்சி நெறிகள் பயிலும் முஸ்லிம் பெண்கள் சீருடையில் அணிவதில் எதிர்கொள்ளும் பிரச்சினை அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டது. அச் சமயம் அமைச்சர் முஸ்லிம் பெண்கள் தத்தமது கலாச்சாரத்தில் கேற்ப உடை அணிந்து கொள்ள முடியும். அதில் தாதியர்கள் சீருடையில் அவர்களது கலாச்சாரத்திறகு அணிய எவ்வித தடையும் விதிக்கவில்லை எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. https://madawalaenews.com/30701.html

தாதியர்களின் சிருடையை அவரவர் மத கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றினால் ஊழியர் சங்கம் ஊடாக நடவடிக்கை எடுப்போம் ; முத்தேட்டுவ ஆனந்த தேரர்

1 week 2 days ago

Picsart_25-10-26_14-38-52-694-780x957.jpg

(அஷ்ரப் ஏ சமத்)
இந்த நாட்டில் சர்வதேச தரத்தில் தாதியர்களுக்கு என்ற ஓர் சீருடை இருந்து வந்தது. அதை யாரும் அவரவர் மதம் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாற்ற நினைப்பார்கள் ஆனால் அதற்கு எதிராக எங்களது பொது அரச தாதியர்கள் ஊழியர் சங்கம் தடுத்து நிறுத்தும்..

அதற்கு எதிராக நாங்கள் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையில் இறங்கும் என பொதுச் சேவை தாதியர்கள் சங்கத்தின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தோரோ இன்று 26 ஆம் திகதி அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

நாட்டில் வழமையாக இருந்து வரும் தாதியர்கள் சீருடையை அவரவர் மதம் கலாச்சாரத்திற்கேற்ப அணியலாம் என ஊடகங்களில் வெளிவந்த செய்தியை கவனித்தேன்….

ஆனால் தற்பொழுது சுகாதார அமைச்சர் திறம்பட எடுத்துச் செல்லும் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ச இதற்கு உடன்படமாட்டார் என நினைக்கின்றேன்

முன்னாள் அமைச்சர் கலாம் சென்ற எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கூட பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் கலாச்சார ஆடை அணிவதற்கு ஏற்ப தாதியர்களின் சீறுடையை மாற்றும் படி அப்போது இருந்த சுகாதார அமைச்சர் ரேணுகா கேரத்திடம் கோரிக்கை விடுத்தார் அப்போது சுகாதார அமைச்சர் இவ்வாறு செய்ய முடியாது…என்று சொல்லியிருந்தார்.

ஆகவே தான் சுகாதார அமைச்சர் இந்த தாதியர்கள் அணியும் சீருடையை ஒர் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க மாட்டார் என நம்புகின்றோம் இவ்வாறு அவர் நடவடிக்கை எடுப்பின் எங்கள் ஊழியர்கள் சங்கம் இதற்கு எதிராக வேலை நிறுத்தம் ஈடுபடுவோம்..


அவ்வாறு முஸ்லிம் தாதியர்கள் நமது கலாச்சாரத்திற்கும் ஏற்ப உடை அணிய வேண்டும் என்றால் அவர்கள் அத்தொழிலில் இருந்து விலகிச் செல்ல முடியும் எனவும் முத்துட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்

மேற்படி விடயம் கடந்த 24ஆம் திகதி மாதாந்தம் முஸ்லிம்களது பிரச்சினைகள்,மதம், கல்வி கலாச்சார விஷயம் கலந்துரையாடுவதற்கு ஒவ்வொரு மாதமும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் வெளிநாட்டு அமைச்சர் தலைமையில் வெளிநாட்டு அமைச்சின் கூடி கலந்துரையாடுவார்கள்.

அவ்வப்போது முஸ்லிம்கள் சம்பந்தமான அவ்வப்போது எழும் பிரச்சினைகள் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் அமைச்சல் விஜித் ஹேரத்திடம் முன் வைத்தனர் இதில் மூதூர் வைத்தியசாலை ,தாதியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் , மற்றும் திறந்த பல்கலைக்கழக தாதிய பயிற்சி நெறிகள் பயிலும் முஸ்லிம் பெண்கள் சீருடையில் அணிவதில் எதிர்கொள்ளும் பிரச்சினை அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டது.

அச் சமயம் அமைச்சர் முஸ்லிம் பெண்கள் தத்தமது கலாச்சாரத்தில் கேற்ப உடை அணிந்து கொள்ள முடியும். அதில் தாதியர்கள் சீருடையில் அவர்களது கலாச்சாரத்திறகு அணிய எவ்வித தடையும் விதிக்கவில்லை எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://madawalaenews.com/30701.html

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 week 2 days ago
வணக்கம் வாத்தியார் ..........! தமிழ் பாடகா்கள் : ஹாிஹரன், தேவன் ஏகாம்பரம்,வி.வி. பிரசன்னா இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க மூக்கின் நுனி மா்மம் சோ்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ போகன்வில்லா ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பாா் என்னை பிடிக்கும் இவள் யாரோ யாரோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே ஆண் : இது பொய்யோ மெய்யோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே.. ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய் பெண் : தூக்கிச் சென்றாய் ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய் உன்னை தாண்டி போகும் போது பெண் : போகும் போது ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்காதது காதல் இல்லை ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே.........! --- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ---

கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!

1 week 2 days ago
கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்! உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்த எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது எனவும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். கொலம்பிய நாட்டு வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து பெரிய அளவிலான உதவிகள் மற்றும் மானியங்கள் கிடைத்தும், பெட்ரோ அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்று கூறி, அந்நாட்டிற்கான உதவிகளையும் குறைத்ததுடன் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் 30 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக கொலம்பியாவையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைத்துள்ளார். இந்த பின்னணியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எனக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ, அவரது மனைவி, மகன் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு பேர் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அவர்கள் உலகளவில் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451140

கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!

1 week 2 days ago

Column-Will-Donald-Trump-Go-to-Prison-fo

கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!

உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்த எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது எனவும்
கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

கொலம்பிய நாட்டு வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து பெரிய அளவிலான உதவிகள் மற்றும் மானியங்கள் கிடைத்தும், பெட்ரோ அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்று கூறி, அந்நாட்டிற்கான உதவிகளையும் குறைத்ததுடன்
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் 30 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக கொலம்பியாவையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைத்துள்ளார்.

இந்த பின்னணியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எனக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ, அவரது மனைவி, மகன் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு பேர் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அவர்கள் உலகளவில் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451140

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 2 days ago
வாத்தியார் அண்ணா ம‌ற்றும் செம்பாட்ட‌ன் அண்ண‌ அகஸ்தியன் அண்ண ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டியில் க‌ட‌சியாக‌ வ‌ரும் அணிய‌ பிழையாக‌ க‌ணித்து விட்டின‌ம் வாத்தியார் அண்ணா தென் ஆபிரிக்கா க‌ட‌சியாக‌ வ‌ரும் என‌ தெரிவு செய்த‌தை நினைக்க‌ மேல் ஓட்ட‌மாய் சிரிப்பு வ‌ருது😁😁😁😁😁😁😁😁...................

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

1 week 2 days ago
நீங்கள், ஏன் என்னை காவடி என்று சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. காவடி தூக்குவதென்றால்; ஒருவர் என்ன செய்தாலும் பாராட்டிக்கொண்டே இருப்பது. ஆனால், அனுரா தவறு செய்தாலும் விமர்சிப்பேன், அதே மஹிந்த நல்லது செய்தாலும் வரவேற்பேன். அவர்தான் எதுவும் தமிழருக்கு செய்யவுமில்லை, செய்பவரை விடுவதுமில்லை, தீயதாவது செய்யாமல் இருக்கலாம். இது நடுவு நிலைமை. இன்று மட்டுமல்ல பல தடவை இவர்களின் செயற்பாட்டை நான் விமரிசித்துள்ளேன், நீங்கள் அதை கவனிக்கவில்லைப்போலும். இன்னும் பலதடவை சொல்லுங்கள், அதனால் எனக்கேதும் குறையப்போவதில்லை.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 2 days ago
அரை இறுதி போட்டிகள் நடக்கும் போது மழை வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அரை இறுதி, இறுதி போட்டிகள் மழை காரணமாக நடைபெறாவிட்டால் மறுநாளும் ( Reserve Day)விளையாடுவதற்கு ஏற்ப வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

1 week 2 days ago
20ம் நூற்றாண்டின் தொடக்கம் தோணி - நவீன கால தொழிநுட்பமும் பழங்கால தொழிநுட்பமும் சேர்ந்து கட்டப்பட்ட தோணி. யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளை எடுக்கப்பட்ட நிழற்படம்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 2 days ago
காவ‌ல்துறை என்ன‌ தூங்கிட்டு இருந்திச்சா க‌ந்த‌ப்பு அண்ணா ச‌ர்வ‌தேச‌ விகையாட்டு ம‌க‌ளிர்க‌ள் வ‌ரும் போது கொட்ட‌லில் இருந்து மைதான‌ம் போகும் வ‌ரை காவ‌ல்துறையின் பாதுகாப்பு முக்கிய‌ம்................ கொட்ட‌லில் த‌ங்கும் இட‌த்தில் கூட‌ கிரிக்கேட் வாரிய‌ம் அவ‌ர்க‌ளின் பாதுகாப்பை உறுதி செய்ய‌னும்...............................

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 2 days ago
இன்னொரு மிக முக்கியமான விடயம். தற்போது மேலே சொன்ன வழக்குக்கு மேலதிகமாக, இவர்கள் இருவரின் நடத்தையையும் Insolvency Service உம் விசாரிக்கிறது. இதில் குற்றம் காணப்பட்டால் disqualification from directorship போன்ற பல தண்டனைகள் இருவருக்கும் கிடைக்கலாம்.

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

1 week 2 days ago
நான் அன்று ஸ்கான் செய்ய மறுத்திருந்தால் அடுத்த தடவை சாடையான நித்திரை வரப் பண்ணி உள்ளே அனுப்பியிருப்பார்கள். உங்களுக்கும் அதே தான் நடந்திருக்கும். அது டொம் டொம் டொம் என்று பெரிய சத்தமாக கேட்கும். இந்த சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக கேட்காமல் காதை மூடியிருப்பார்கள். அதையும் மீறி தூங்க முடியாது.