Aggregator

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

4 days 15 hours ago
வட்ஸப்பில் இருந்து.. 🚨 Van துப்பாக்கிச்சூடு சம்பவம் – போலீஸ் விளக்கம் வெளியீடு யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வேன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். ஆரம்பத்தில் 17 வயது ஓட்டுநர் சம்பந்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அது தவறான தகவல் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர் 19 வயதுடைய பயணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தெரிவித்ததாவது: அல்லைப்பிட்டி சந்திப்பிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு சைகை செய்யப்பட்டது. ஆனால் வாகனம் நிற்காமல் சென்றதால் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் காயமடைந்த 19 வயது இளைஞர் பின்னர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

4 days 16 hours ago
முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் 2022 மே 9 அன்று நிட்டம்புவ பகுதியில் நடந்தது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருவரும் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்து, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு ஜனவரி 14 ஆம் திகதி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், வழக்கை மீளாய்வு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை இன்று வரை ஒத்திவைக்க முடிவு செய்தது. https://athavannews.com/2026/1464258

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

4 days 16 hours ago

New-Project-6-5.jpg?resize=750%2C375&ssl

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் 2022 மே 9 அன்று நிட்டம்புவ பகுதியில் நடந்தது.

அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருவரும் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையைத் தொடர்ந்து, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு ஜனவரி 14 ஆம் திகதி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. 

இருப்பினும், வழக்கை மீளாய்வு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை இன்று வரை ஒத்திவைக்க முடிவு செய்தது.

https://athavannews.com/2026/1464258

மணிப்பூரில் தொடரும் கலவரம். 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

4 days 16 hours ago
மணிப்பூரில் தொடரும் கலவரம். 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு! மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கிடையில் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து பா.ஜ.க அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நிலவிய நிலையில் கடந்த 04ஆம் திகதி கெம்சந்த் சிங் தலைமையில் புது பா.ஜ.க அரசு பதவியேற்றது. இந்நிலையில் மீண்டும் மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்துக்குள் புகுந்த கும்பலொன்று தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரொருவரை தாக்கி, வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதுடன் குறித்த கிராமத்தில் இன்று (10) அதிகாலை துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தபோதிலம் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. தொடர்ந்து உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464098

அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் – விளக்கம் கோரியுள்ள ஐ. நா. சபை.

4 days 16 hours ago
அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் – விளக்கம் கோரியுள்ள ஐ. நா. சபை. தாமதமாகி வரும் நிலுவைத் தொகைக்கு, அமெரிக்கா எப்போதுஇ எவ்வளவு தொகையை வழங்கும் என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விளக்கம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. சீர்திருத்தங்களை வலியுறுத்தி அமெரிக்கா தனது நிலுவைத் தொகையை வழங்க தாமதித்து வருவதால், வரும் ஜூலை மாதத்திற்குள் ஐநா-வின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மொத்த நிலுவைத் தொகையில் சுமார் 95 சதவீதத்தை அமெரிக்காவே வழங்க வேண்டியுள்ளது. சாதாரண பட்ஜெட் 2.19 பில்லியன் டொலர், அமைதி காப்புப் பணிகள் 2.4 பில்லியன் டொலர், ஐநா தீர்ப்பாயங்கள் 43.6 மில்லியன் டொலர்இ சுமார் 4.6 பில்லியன் டொலர் ஆகும். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், கடந்த 2025-ஆம் ஆண்டில் ஐநா-வின் சாதாரண வரவு செலவு திட்டத்துக்கு எவ்வித நிதியையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐநா சபை தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும், தேவையற்ற பிரிவுகளை நீக்கிவிட்டு அடிப்படைப் பணிகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம்அளிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் ஐநா தூதர் மைக் வால்ட்ஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், நாங்கள் மிகப்பெரிய தொகையை முன்பணமாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால்இ ஐநா சபை மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் இன்னும் வேகமெடுக்க வேண்டும். இது ஒருவகையான கட்டுப்பாடான அன்பு போன்றது எனக் குறிப்பிட்டுள்ளார். குறைந்தது 55 நாடுகள் ஏற்கனவே தங்களது 2026-ஆம் ஆண்டுக்கான பங்களிப்பை முழுமையாகச் செலுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் தாமதம் ஐக்கிய நாடுகள் சபையை பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. நிதிப் பற்றாக்குறையால் சுமார் 2,681 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. ஊழியர்களின் ஊதியம் மற்றும் அத்தியாவசிய நிர்வாகச் செலவுகளுக்குக் கூட நிதி இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக ஐநா ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையெழுத்திட்ட சட்டமூலம் மூலம் ஒன்றில் ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு வழங்க 3.1 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் எவ்வளவு தொகை ஐநா-விற்கு எப்போது கொடுக்கப்படும் என்பதில் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை https://athavannews.com/2026/1464140

அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் – விளக்கம் கோரியுள்ள ஐ. நா. சபை.

4 days 16 hours ago

Flag_of_the_United_States_DoS_ECA_Color_

அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் – விளக்கம் கோரியுள்ள ஐ. நா. சபை.

தாமதமாகி வரும் நிலுவைத் தொகைக்கு, அமெரிக்கா எப்போதுஇ எவ்வளவு தொகையை வழங்கும் என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விளக்கம் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. சீர்திருத்தங்களை வலியுறுத்தி அமெரிக்கா தனது நிலுவைத் தொகையை வழங்க தாமதித்து வருவதால், வரும் ஜூலை மாதத்திற்குள் ஐநா-வின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மொத்த நிலுவைத் தொகையில் சுமார் 95 சதவீதத்தை அமெரிக்காவே வழங்க வேண்டியுள்ளது.

சாதாரண பட்ஜெட் 2.19 பில்லியன் டொலர், அமைதி காப்புப் பணிகள் 2.4 பில்லியன் டொலர், ஐநா தீர்ப்பாயங்கள் 43.6 மில்லியன் டொலர்இ சுமார் 4.6 பில்லியன் டொலர் ஆகும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், கடந்த 2025-ஆம் ஆண்டில் ஐநா-வின் சாதாரண வரவு செலவு திட்டத்துக்கு எவ்வித நிதியையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா சபை தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும், தேவையற்ற பிரிவுகளை நீக்கிவிட்டு அடிப்படைப் பணிகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம்அளிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.

அமெரிக்காவின் ஐநா தூதர் மைக் வால்ட்ஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், நாங்கள் மிகப்பெரிய தொகையை முன்பணமாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால்இ ஐநா சபை மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் இன்னும் வேகமெடுக்க வேண்டும். இது ஒருவகையான கட்டுப்பாடான அன்பு போன்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தது 55 நாடுகள் ஏற்கனவே தங்களது 2026-ஆம் ஆண்டுக்கான பங்களிப்பை முழுமையாகச் செலுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் தாமதம் ஐக்கிய நாடுகள் சபையை பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

நிதிப் பற்றாக்குறையால் சுமார் 2,681 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன.

ஊழியர்களின் ஊதியம் மற்றும் அத்தியாவசிய நிர்வாகச் செலவுகளுக்குக் கூட நிதி இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக ஐநா ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையெழுத்திட்ட சட்டமூலம் மூலம் ஒன்றில் ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு வழங்க 3.1 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் எவ்வளவு தொகை ஐநா-விற்கு எப்போது கொடுக்கப்படும் என்பதில் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை

https://athavannews.com/2026/1464140

நோய் வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு

4 days 16 hours ago
நோய் வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட தனது பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த பெண்ணொருவர் மீது, விலங்கு வதை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இப்பெண் வளர்த்து வந்த பூனைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பூனையை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். பூனையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குத் தற்காலிக சிகிச்சையளித்ததுடன், பூனையால் சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பூனையின் உயிரைக் காப்பாற்ற அவசர அறுவை சிகிச்சை ஒன்று அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளார். சிகிச்சையின்றி வீடு திரும்பிய அந்தப் பூனை அடுத்த நாளே உயிரிழந்துள்ளது. பூனையின் உயிரிழப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு எதிராக விலங்குவதை மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த அறுவை சிகிச்சைக்காக 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் (Swiss Francs) செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் இலங்கை பெறுமதி சுமார் 402, 082 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464143

கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!

4 days 16 hours ago
கனடாவில் பயங்கரம் : துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு! கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை நடத்திய சந்தேக நபரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தைப் பாதுகாப்பிற்குள் கொண்டுவந்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. https://athavannews.com/2026/1464244

கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!

4 days 16 hours ago
கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்! 11 Feb, 2026 | 11:35 AM கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் பிரிவினரின் தகவல்படி, உயிரிழப்புகள் மூன்று வெவ்வேறு இடங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. டம்பிளர் ரிட்ஜில் உள்ள உயர்தர பாடசாலை ஒன்றிற்குள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வீடு ஒன்றிலிருந்து மேலும் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலை நடத்திய சந்தேகநபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் தாக்குதலில் காயமடைந்த சுமார் 25 பேர் உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். துப்பாக்கிதாரி கொல்லப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு இடையிலான தொடர்பு மற்றும் தாக்குதலின் பின்னணி குறித்து கனேடிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/238366

கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!

4 days 16 hours ago

கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!

11 Feb, 2026 | 11:35 AM

image

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரிவினரின் தகவல்படி, உயிரிழப்புகள் மூன்று வெவ்வேறு இடங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

டம்பிளர் ரிட்ஜில் உள்ள உயர்தர பாடசாலை ஒன்றிற்குள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வீடு ஒன்றிலிருந்து மேலும் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் தாக்குதலில் காயமடைந்த சுமார் 25 பேர் உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிதாரி கொல்லப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாடசாலை மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு இடையிலான தொடர்பு மற்றும் தாக்குதலின் பின்னணி குறித்து கனேடிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/238366

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

4 days 16 hours ago
கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம் 10 Feb, 2026 | 04:56 PM (எம்.மனோசித்ரா) கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்காகவும் குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கானதுமான அத்தியாவசிய வேலைத்திட்டமாகவே இந்த கிவுல் ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இது எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் அல்ல. 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய அமைச்சரவை குறித்த கிவுல் ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தது. இதற்காக அக்காலப்பகுதியில் 4170 மில்லியன் ரூபா செலவு மதிப்பிடப்பட்டிருந்தது. இது மகாவலி எல் வலயத்துக்குள்ளேயே காணப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அந்த திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. கொவிட் தொற்று மற்றும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணிகளால் இந்த திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியமானது என இனங்காணப்பட்ட வேலைத்திட்டத்தை, தற்போது நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கமைய தேசிய நிதியத்தின் ஊடாக 2026 - 2031ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தை முன்னெடுத்து அதனை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறிருப்பினும் அன்று 4170 மில்லியன் ரூபா செலவில் இதனை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது அது 23 456 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட போது மதிப்பிடப்பட்ட தொகையை விட 6 மடங்கு செலவு அதிகரித்துள்ளது. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இனத்தை அடிப்படையாகக் கொண்டு எவருக்கும் நீர் வழங்கப்படுவதில்லை. எனவே இதனை அரசியல் மயமாக்கி வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காகப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது என்றார். https://www.virakesari.lk/article/238334

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

4 days 16 hours ago

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

10 Feb, 2026 | 04:56 PM

image

(எம்.மனோசித்ரா)

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்காகவும் குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கானதுமான அத்தியாவசிய வேலைத்திட்டமாகவே இந்த கிவுல் ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இது எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் அல்ல.

2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய அமைச்சரவை குறித்த கிவுல் ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தது.

இதற்காக அக்காலப்பகுதியில் 4170 மில்லியன் ரூபா செலவு மதிப்பிடப்பட்டிருந்தது. இது மகாவலி எல் வலயத்துக்குள்ளேயே காணப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அந்த திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. கொவிட் தொற்று மற்றும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணிகளால் இந்த திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியமானது என இனங்காணப்பட்ட வேலைத்திட்டத்தை, தற்போது நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கமைய தேசிய நிதியத்தின் ஊடாக 2026 - 2031ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தை முன்னெடுத்து அதனை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறிருப்பினும் அன்று 4170 மில்லியன் ரூபா செலவில் இதனை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது அது 23 456 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட போது மதிப்பிடப்பட்ட தொகையை விட 6 மடங்கு செலவு அதிகரித்துள்ளது.

இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இனத்தை அடிப்படையாகக் கொண்டு எவருக்கும் நீர் வழங்கப்படுவதில்லை. எனவே இதனை அரசியல் மயமாக்கி வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காகப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/238334

இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம்

4 days 16 hours ago
இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம் பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இந்திய பேட்டர்கள் பயன்படுத்தும் பேட் பற்றி இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஒரு நேர்காணலின் போது அவர் விளக்கம் அளித்துள்ளார். "இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட் மற்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டைகளை விட சிறந்த தரம் வாய்ந்தது, அவற்றின் மீது ரப்பர் அடுக்கு இருப்பது போல் தெரிகிறது" என்று பானுகா ராஜபக்ச கூறியதாக நியூஸ்வயர் ஊடகம் கூறியிருந்தது. "எனது சமீபத்திய நேர்காணல் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பிழை காரணமாக திரிக்கப்பட்டிருக்கலாம். இந்திய பேட்டர்களைப் பாராட்டுவதே எனது நோக்கமாக இருந்தது. இந்திய கிரிக்கெட் மிகவும் முன்னேறியுள்ளது. அவர்களின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் உபகரணங்கள் அனைத்தும் உயர்தரமானவை. அவர்களின் பேட் உற்பத்தியாளர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது எனக்கு மரியாதை மட்டுமே உள்ளது." என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். ராஜபக்சவின் தெளிவுபடுத்தல் குறித்து நியூஸ்வயர் ஊடகம் விரிவாக எழுதியுள்ளது. இலங்கை பேட்டர் பானுக ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டை 'மிகவும் முன்னேறிய' அணி என்று வர்ணித்து, அதன் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களின் தரத்தைப் பற்றி குறிப்பிட்டதாக நியூஸ்வயர் குறிப்பிட்டுள்ளது. இந்திய பேட்டர்களின் பவர்-ஹிட்டிங் திறன் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் மட்டைகளைப் பற்றி அவர் பேசிய முந்தைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு அவரிடம் இருந்து இந்த விளக்கம் வந்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images ராஜபக்ச கூறியது என்ன? ஹரி டிவி பத்திரிகையாளர் லஹிரு முதலிகேவிடம் பேசிய ராஜபக்சே, "இந்திய பேட்டர்கள் அதிக சக்தியை உருவாக்கும் பேட்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. பேட் மீது கூடுதல் ரப்பர் அடுக்கு இருப்பது போல் அவர்கள் உணர்கிறார்கள்" என்று கூறியிருந்தார். தனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், "இவை சில சிறப்பு வகை வில்லோ மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறினார். "இந்திய வீரர்களின் மட்டை நம்மிடம் உள்ள சிறந்த மட்டைகளை விட மிகச் சிறந்தவை. இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. மற்றவர்களால் இந்த மட்டைகளை வாங்கக்கூட முடியாது. அனைத்து வீரர்களுக்கும் இது தெரியும்" என்று அவர் கூறியிருந்தார். "இது முட்டாள்தனமாகத் தோன்றலாம், ஆனால் நேர்மையாகச் சொன்னால், நான் அப்படித்தான் உணர்கிறேன்" என்று அவர் கூறினார். அதே நேர்காணலில் பேசிய ஐபிஎல் முன்னாள் வீரர் ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டின் வலுவான பேட்டிங் கலாசாரத்தையும், உலகின் சிறந்த டி20 லீக் என்று அவர் வர்ணித்த இந்தியன் பிரீமியர் லீக்கையும் பாராட்டினார். இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் தொடர்ந்து உருவாகி வருவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images பானுகா ராஜபக்ச யார்? பானுகா ராஜபக்ச ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் 17.80 சராசரியுடன் 89 ரன் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 45 டி20 போட்டிகளில் 744 ரன் எடுத்துள்ளார். அவரது சராசரி 22.54 ரன்னாகவும் ஸ்ட்ரைக் ரேட் 130.52 ஆகவும் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/cqlgvwedgd5o

இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம்

4 days 16 hours ago

இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம்

பானுகா ராஜபக்ச, இந்திய வீரர்கள் பேட் பற்றிய கருத்தால் சர்ச்சை, இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

பட மூலாதாரம்,Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்திய பேட்டர்கள் பயன்படுத்தும் பேட் பற்றி இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஒரு நேர்காணலின் போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட் மற்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டைகளை விட சிறந்த தரம் வாய்ந்தது, அவற்றின் மீது ரப்பர் அடுக்கு இருப்பது போல் தெரிகிறது" என்று பானுகா ராஜபக்ச கூறியதாக நியூஸ்வயர் ஊடகம் கூறியிருந்தது.

"எனது சமீபத்திய நேர்காணல் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பிழை காரணமாக திரிக்கப்பட்டிருக்கலாம். இந்திய பேட்டர்களைப் பாராட்டுவதே எனது நோக்கமாக இருந்தது. இந்திய கிரிக்கெட் மிகவும் முன்னேறியுள்ளது. அவர்களின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் உபகரணங்கள் அனைத்தும் உயர்தரமானவை. அவர்களின் பேட் உற்பத்தியாளர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது எனக்கு மரியாதை மட்டுமே உள்ளது." என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜபக்சவின் தெளிவுபடுத்தல் குறித்து நியூஸ்வயர் ஊடகம் விரிவாக எழுதியுள்ளது.

இலங்கை பேட்டர் பானுக ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டை 'மிகவும் முன்னேறிய' அணி என்று வர்ணித்து, அதன் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களின் தரத்தைப் பற்றி குறிப்பிட்டதாக நியூஸ்வயர் குறிப்பிட்டுள்ளது.

இந்திய பேட்டர்களின் பவர்-ஹிட்டிங் திறன் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் மட்டைகளைப் பற்றி அவர் பேசிய முந்தைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு அவரிடம் இருந்து இந்த விளக்கம் வந்துள்ளது.

பானுகா ராஜபக்ச, இந்திய வீரர்கள் பேட் பற்றிய கருத்தால் சர்ச்சை, இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

பட மூலாதாரம்,Getty Images

ராஜபக்ச கூறியது என்ன?

ஹரி டிவி பத்திரிகையாளர் லஹிரு முதலிகேவிடம் பேசிய ராஜபக்சே, "இந்திய பேட்டர்கள் அதிக சக்தியை உருவாக்கும் பேட்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. பேட் மீது கூடுதல் ரப்பர் அடுக்கு இருப்பது போல் அவர்கள் உணர்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

தனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், "இவை சில சிறப்பு வகை வில்லோ மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறினார்.

"இந்திய வீரர்களின் மட்டை நம்மிடம் உள்ள சிறந்த மட்டைகளை விட மிகச் சிறந்தவை. இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. மற்றவர்களால் இந்த மட்டைகளை வாங்கக்கூட முடியாது. அனைத்து வீரர்களுக்கும் இது தெரியும்" என்று அவர் கூறியிருந்தார்.

"இது முட்டாள்தனமாகத் தோன்றலாம், ஆனால் நேர்மையாகச் சொன்னால், நான் அப்படித்தான் உணர்கிறேன்" என்று அவர் கூறினார்.

அதே நேர்காணலில் பேசிய ஐபிஎல் முன்னாள் வீரர் ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டின் வலுவான பேட்டிங் கலாசாரத்தையும், உலகின் சிறந்த டி20 லீக் என்று அவர் வர்ணித்த இந்தியன் பிரீமியர் லீக்கையும் பாராட்டினார். இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் தொடர்ந்து உருவாகி வருவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார்.

பானுகா ராஜபக்ச, இந்திய வீரர்கள் பேட் பற்றிய கருத்தால் சர்ச்சை, இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

பட மூலாதாரம்,Getty Images

பானுகா ராஜபக்ச யார்?

  • பானுகா ராஜபக்ச ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

  • 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

  • சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் 17.80 சராசரியுடன் 89 ரன் எடுத்துள்ளார்.

  • சர்வதேச கிரிக்கெட்டில் 45 டி20 போட்டிகளில் 744 ரன் எடுத்துள்ளார். அவரது சராசரி 22.54 ரன்னாகவும் ஸ்ட்ரைக் ரேட் 130.52 ஆகவும் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cqlgvwedgd5o

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

4 days 16 hours ago
SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச போட்டியில் அமெரிக்காவை வென்றது பாகிஸ்தான் Published By: Vishnu 10 Feb, 2026 | 10:55 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் எஸ்எஸ்சி மைதானத்தில் முழு மின் ஒளிவெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழுப் போட்டியில் பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அமெரிக்காவிடம் அடைந்த தோல்வியை பாகிஸ்தான் நிவர்த்தி செய்துகொண்டது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பையும் பாகிஸ்தான் அதிகரித்துக்கொண்டது. கொழும்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்களவர் விளையாட்டுக் கழக (SSC) மைதானத்தில் மின் ஒளிவெள்ளத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல் தடவையாக நடைபெறுவது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். ஸிம்பாப்வே - ஓமான் அணிகள் மோதிய ரி20 உலகக் கிண்ணப் போட்டி இதே மைதானத்தில் பகல் இரவு போட்டியாக 9ஆம் திகதி நடைபெற்ற போதிலும் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டியே முழுமையாக மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியாகும். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது. சய்ப் அயூப் (19), சாஹிப்ஸதா பர்ஹான் ஆகிய இருவரும் 31 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். பவர்ப்ளே நிறைவில் பாகிஸ்தான் 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந் நிலையில் சாஹிப்ஸதா பர்ஹான், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். இந் நிலையில் சாஹிப்ஸதா பர்ஹான், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஆனால், அவர்கள் இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (143 - 4 விக்) அவர்களில் முதலில் ஆட்டம் இழந்த பாபர் அஸாம் 46 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து சாஹிப்ஸதா பர்ஹான் 41 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் ஷதாப் கான் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஷட்லி வன் ஷோக்வைக் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அமெரிக்கா சார்பாக நால்வர் மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். ஆரம்ப வீரர்களான ஷயான் ஜஹாங்கிர் 49 ஓட்டங்களையும் அந்த்ரீஸ் கௌஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் மிலிந்த் குமார் 29 ஓட்டங்களையும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்ஹாம் ரஞ்சேன் 29 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் உஸ்மான் தாரிக் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷதாப் கான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சாஹிப்ஸதா பர்ஹான். https://www.virakesari.lk/article/238356